இமயமலையின் தோற்றம்

180 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 27, 2017, 11:49:02 PM9/27/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

இமயமலையின் தோற்றம்  (கங்கா புராணக் கோட்பாடு) :

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.

இதனால்,
கங்கை என்ற விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்குவதற்கு முன்பே இமயமலை இருந்துள்ளது என்றும்,
கங்கை என்ற விண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கான மிகப் பெரிய மலைத்தொடர்களும் பள்ளத்தாக்குகளும்  இருந்துள்ளன என்றும் கருத வேண்டியுள்ளது.

மிகப் பெரிய, சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது.  நாம் இதைக் "கங்கன்" என்ற பெயரால் அழைப்போம்.

கங்கன் விழுந்ததனால் இதைச் சுற்றிலும்  உயரமான வட்ட வடிவமான மலைத் தொடர்கள் உருவாகி யுள்ளன.  இப் பெரிய உயர நீண்ட மலைத் தொடரின் தென்பகுதியே தற்போதிருக்கும் இமயமலைத் தொடர் ஆகும்.

கங்கன் பூமியில் விழுந்து பலகாலம் கழித்து, இதே இடத்தில் கங்கை என்ற நீர்க்கோள் இறங்கியுள்ளது. 
இதில் இருந்த நீரால் இமயமலையின் கிழக்கு மேற்கு வடக்குப் பகுதிகள்
அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இமயமலைக் கோட்பாடு :
1) கண்டப் பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.
2) சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் என்ற விண்கோள் விழுந்ததால் இமயமலை உருவாகியுள்ளது.
3) கங்கன் விழுந்த காரணத்தால் ஒன்றாக ஒட்டி இருந்த பூமியின் மேற்பகுதியானது கண்டங்களாகப் பிரிந்து சென்றன.
4) கங்கன் விழுந்த இடத்தின் மறுபக்கத்தில், அதாவது பூமியின் மறு புறத்தில் ஆழமான அட்லாண்டிக் பகுதி உருவானது
5) கங்கன் விழுந்த காரணத்தினால்,
பூமிக்குள் எரிந்து கொண்டிருந்த லாவா குழம்புகள் அட்லாண்டிக் கடலைச் சுற்றிலுமுள்ள  பகுதிகளில் எரிமலைத் தொடர்களாய் உருவாகி உள்ளன.
படங்களை இணைத்துள்ளேன்.  படங்களில் பூமி இப்போது வடிவம் உள்ளது. கங்கன் பூமியில் விழுந்த போது,  படங்களில் இருப்பது போல் இருந்திருக்க வில்லை என்பதையும், கண்டங்கள் எல்லாம் ஒன்றாய் ஒட்டி இருந்தன என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன்
கி. காளைராசன்
(குறிப்பு :-
மேற்கண்டன எனது யூகமான கருத்துகள் ஆகும்.)

sketch-1506560489619.png
sketch-1506560399524.png
sketch-1506560313441.png
sketch-1506523100334.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2017, 3:42:38 AM9/29/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-09-28 20:24 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் காளைராசன்,


எவரும் இதுவரை ஏற்றுக்கொள்ளாத,
இப்போதுதான் மின்தமிழிலிலும் எனது G+  மற்றும் முகநூலில் எழுதியுள்ளேன். ஐயா.
எனவே இனிமேல்தான் எல்லோருக்கும் தெரியவரும்.  அனைவரும் ஏற்றுக்கொள்ளச் சிலகாலம் ஆகும்.

இந்த முரணான யூகிப்புப் புராணக் கருத்துக்களை, யாருக்காக மீண்டும், மீண்டும் எழுதி வருகிறீர்கள் ? 
புதிய கருத்துக்களைப் புராணம் மற்றும் கூகுள்பூவிப்படங்களின் அடிப்படையில் தெரிவிக்கிறேன்.
பிறர் படித்துள்ள கருத்துக்கள் வேறு.  எனது கருத்துகள் புதியன அதனால் முராணகத் தெரிகின்றன.




உங்கள் இமாலாயத் தவறான இந்த ஊகிப்புகள் பாடல் நூல்களில் பகிரத் தகுதி பெறாதவை !
அறிஞர்கள் மத்தியில் கங்காபுராணக் கோட்பாட்டை இனிமேல்தான் சொல்ல வேண்டும்.  ஏற்பதும் ஏற்காததும் அவர்களைச் சார்ந்தது.

புவியியல் அறிஞர்கள் கூறும்  கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் உள்ள குறைகள்.
1) கண்டங்களை நகர்த்தும் விசை எது?  என்பது   குறிப்பிடப்படவில்லை.

2) இந்தியத் துணைக்கண்டம் ஆசியப்பெருங்கண்டத்துடன் மோதி இமயமலை அளவிற்கு நிலத்தை உயர்த்தத் தேவையான உந்துவிசை எது?  என்பதும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் இதற்கு எனது யூகத்தில் விடை கூறப்பட்டுள்ளது.
1) கங்கன் என்ற விண்கோள் (தற்போது இமயமலை இருக்கும் பகுதியில்) விழுந்ததன் காரணமாகத்தான் கண்டங்கள் இடம் பெயர்கின்றன.
2) கங்கள் விழுந்தகாரணத்தினால், அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் உருவான மேடான பகுதியே இமயமலை ஆகும்.
இந்தியா  ஆசியா கண்டத்துடன் எப்போதும் இணைந்தே உள்ளது.
மற்றபிற கண்டங்கள்தான் நகர்கின்றன.


இப்படித்தான் தவறாயினும் நான் புராணப் புனைவாக எழுதுவேன், எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன் என்பது உங்கள் "வலைக்கடல்" திருவிளையாடலா ?


சி. ஜெயபாரதன்


புவியறிஞர்களின் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் இல்லாத விளக்கங்களுக்குப் புராணக் கோட்பாட்டில் விளக்கங்கள் உள்ளன.
எனவே நான் எழுதும் புராணக் கோட்பாட்டில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அல்லது சுட்டிக்காட்டப்பட வில்லை.  
பிழைகள் சுட்டிக்காட்டப்படும் வரை புராணக் கோட்பாட்டை எழுதுவேன், எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2017, 4:03:46 AM9/29/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம் ஐயா.
பெரிதும் முயன்று எனக்குத் தேவையான கருத்தைக் காணொலிக் காட்சியாக வழங்கவல்ல இணைய இணைப்பை  http://www.purdue.edu/impactearth/  அளித்துள்ளீர்கள்.  மிக்க நன்றி ஐயா.  



ஆனால்  This plug-in is not supported என்று வருகிறது.
வேறு ஒரு கணினியில் முயன்று பார்க்கிறேன்.
பார்த்துவிட்டுப் பதில் எழுதுகிறேன்.

அதுவரை எனது கருத்து :

பூமியின் கனஅளவு முன்காலத்தில் குறைவாக இருந்தது, பின்னர் கனஅளவு கூடியுள்ளது என்கின்றனர் அறிவியலாளர்கள்.
கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் விழுந்த காரணத்தினால்தான்  பூமியின் கனஅளவு கூடியிருக்க வேண்டும் எனவும் கருதலாம்.

மோதும் பொருட்களின் கடினத்தன்மையைப் பொறுத்து மோதல்விளைவுகள் மாறுபடும்.  எனவே கங்கன் பூமியில் விழும்போது பூமியின் கடினத்தன்மையையும், கங்கனின் கடினத் தன்மையும் துள்ளிதமாக அளவிட்டால் மட்டுமே முடிவுகளைச் சரியாகக் கணிக்க முடியும் என எண்ணுகிறேன் ஐயா.

இமயமலையானது  ஒரு மடிப்புமலைத் தொடர்.  எனவே மடியும் அளவிற்குக் கங்கன் என்ற கோள் இலகுவாக (திடமற்ற நிலையில்) இருந்துள்ளது என்பது எனது கருத்து.

அன்பன்

கி.காளைராசன்

On 28-Sep-2017 9:05 PM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
For those "scientifically" inclined, see the impact effects in this article:

https://www.motherboard.vice.com/amp/en_us/article/ezvqdm/heres-what-would-happen-if-an-earth-sized-asteroid-hit-earth

​This morning, an enormous space rock missed Earth by a narrow margin of 745,000 miles, or about three times the distance from the Earth to the Moon. With a diameter of 550 meters and a velocity of about 35,000 miles per hour, the asteroid, known as 2004 BL86, will be so bright in the evening sky that it will be visible through binoculars. Scientists don't expect another object of this size to pass so closely to Earth until August 7, 2027.

This time around, we got lucky. But speculatively speaking, what if asteroid 2004 BL86 wasn't a passing curiosity? What if it hurtled towards us just a little earlier, and instead of flying freely through the wake of Earth's orbit, it collided with us head on? How bad would the damage be?

Fortunately, there is an online tool ( http://www.purdue.edu/impactearth/)   for calculating the apocalyptic potential of various impact scenarios. Run by Purdue University, Impact Earth allows users to input details about asteroids, comets, and other cosmic death traps, then crunches the numbers on the fallout.

I gave the calculator the known details about asteroid 2004 BL86, including its diameter and velocity. I entered a hypothetical mid-range angle of 45 degrees, and specified that the asteroid hit sedimentary land, not water. Then, I asked it to tell me what the damage would be like one kilometer away from the impact site. After a dramatic animation of an asteroid hitting New England, Impact Earth gave me a rundown of the designer catastrophe.

Naturally, it wasn't pretty. "The projectile begins to breakup at an altitude of 49,800 meters (16,3000 ft)," Impact Earth predicted. It would be fractured by the time it hit the ground, striking the surface at a velocity of about 7.95 miles per second.

The energy released would be about 5,120 megatons, which is 100 times more powerful than the strongest nuclear bomb ever detonated. It would leave behind a crater with a diameter of 3.64 miles and a depth of 1.26 miles—similar dimensions to Alabama's Wetumpka crater. But as the calculator noted under the "Global Damage" category, the impact would not be enough to disrupt the Earth on a global level by altering its orbit or its axial tilt.

I input the numbers again, this time getting the tool to project what would happen if I was standing 500 kilometers (310 miles) away from the impact. This time it gave me a lot more information about the far-reaching effects of the disaster (from what I gathered, standing one kilometer away pretty much amounted to instant vaporization).

The most immediate effect would be a massive earthquake, which would arrive about 1.67 minutes after the impact and would register 7.1 on the Richter scale. Then, a storm of ejected dust particles would rain down on my new position about six minutes after the impact. Finally, a loud, 67 decibel airblast would blow past my location about 25 minutes after the impact.

In short, the collision would be a terrifying natural disaster that would wreak havoc on communities for thousands of miles around the impact site. While that's not exactly surprising, it is interesting to curate the details of the catastrophe on such a sophisticated online tool.

It's also kind of addictive. After modeling the potential 2004 BL86 collision, I immediately wanted to design even crazier impact events. After modelling the dinosaur-destroying Chicxulub impact and throwing an object the size of Australia into shallow coastal waters, I decided to go all out and throw another Earth at Earth.

So in case you're wondering what would happen if a planetary twin were to impact at the speed of our own orbit, here is what the calculator had to say about it: "The Earth is completely disrupted by the impact and its debris forms a new asteroid belt orbiting the Sun between Venus and Mars."

"100 percent of the Earth is melted," the rundown continued. "Depending on the direction and location the collision, the impact may make a noticeable change in the tilt of Earth's axis (< 5 degrees). Depending on the direction and location of impact, the collision may cause a change in the length of the day of up to 1,500 hours. The impact does not shift the Earth's orbit noticeably."

There you have it: the fallout of a planet fight. Earth may be entirely melted and rotationally alien, but goddamn if it's going to budge out of its orbit over a cosmic turf war
--------

May be kalairajan can try the tool
http://www.purdue.edu/impactearth/

to see the impact of 2000 km dia planet

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2017, 8:07:19 AM9/29/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-09-28 21:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

கங்கை தோன்றுமுன்பே இமயமலை தோன்றியிருக்கவேண்டும்.
 
அதன்பின் அதிலுள்ள பனிப்பொழிவின் மூலம் கங்கை உருவானது.

இரண்டு கங்கைகளைப் புராணம் குறிப்பிடுகிறது.  ஒன்று கங்கை என்ற விண்ணீர்க்கோள்,  மற்றொன்று கங்கை என்ற ஆறு.
தாங்கள் கங்கை என்ற ஆற்றைக் குறிப்பிடுகின்றீர்கள்.  நான் இங்கே எழுதுவது கங்கை என்ற விண்ணீர்க்கோள் பற்றியது.

இரண்டு விண்கோள்கள் இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளன.
1) சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கோள் விழுந்துள்ளது.  இது விழுந்த இடத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய மேரு உருவாகியுள்ளது.  அதன் ஒரு பகுதியே இமயமலையாக உள்ளது.  இது விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பகுதி பிளவுபட்டு கண்டங்களாப் பிரிந்து சென்றுள்ளன.  (எனது வசதிக்காக இந்தக் கோளுக்குக் கங்கன் எனப் பெயரிட்டு அழைக்கிறேன்) .  இது விழுந்த இடத்தை மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தால் படத்தில் காட்டியுள்ளேன்.



பலகாலம் கழித்து,
2) சுமார் 400 கி.மீ. விட்டம் கொண்ட, கங்கை என்று முனிவர்களால் அழைக்கப்பட்ட நீர்க்கோள் ஒன்றும் இதே இடத்தில் விழுந்துள்ளது.  இந்த நீர்க்கோள் இறங்கிய இடம்தான் தக்களமேகன் பாலைவனமாக மாறியுள்ளது.   கீழே உள்ள படத்தில் நீல நிறத்தில் காட்டியுள்ளேன்.  இது விழுந்த காரணத்தினால், இமயமலையின் வடக்கு கிழக்கு மேற்குப் பகுதிகளால் இதன் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.  இவ்வாறு அடித்துச் செல்லப்பட்ட சவடுமண்ணால் ( alluvium colluvium )இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.    அதன் நீர் வழிந்தோடிய தடங்களையும் காட்டியுள்ளேன்.

சவடுமண்ணால் ( alluvium colluvium ) உருவான இந்தோனேசியா சப்பான் துருக்கி நிலப்பகுதிகள் பிரண்டு விழும்போது நிலநடுக்கமும் பூகம்பமும் உருவாகி வருகின்றன. 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2017, 12:02:25 PM9/29/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-09-29 19:24 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
////புவியியல் அறிஞர்கள் கூறும்  கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் உள்ள குறைகள்.
1) கண்டங்களை நகர்த்தும் விசை எது?  என்பது   குறிப்பிடப்பட வில்லை.////

கண்டங்களை நகர்த்தும் உந்துசக்தி கண்டக் கருவில் உள்ள அணுக்கனல் சக்தி உலையில் உள்ளது. விட்டு விட்டு இயங்கும் அந்த அணுசக்தி உலைகளே  எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள் உண்டாக்குகின்றன. ஒவ்வோர் பூகம்ப அதிர்ச்சியும் கண்டப் பெயர்ச்சியை உண்டாக்கும்.


சி. ஜெயபாரதன் 

1) 

2016-08-23 5:02 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
கடலின் நடுவே உள்ள எரிமலைகளால்  கண்டங்கள் நகரவில்லை அல்லவா?

//இல்லை .....மாறாக , புவித்தட்டுகள் நகரும்போது  அதில் உள்ள  எரி மலைகள் நகர்கின்றன //

2)
எரிமலைகளால் கண்டங்கள் நகர்வதில்லை. 
கடல் பகுதியில் பிளவு ஏற்படும்போது உருவாகும் எரிமலைக் குழம்புகள் உடனடியாக கடல் நீரால் குளிர்விக்கப்பட்டு பாறைகளாக மாறுகின்றன. அவை உடைக்கப்பட்டு புதிய குழம்புகள் வெளிவரும். ஒவ்வொரு உந்துதலின் போதும் பிளவு விரிந்து ஏற்கனவே உருவான பாறையை பக்கவாட்டில் தள்ளுகிறது. 
சிலவேளைகளில் வெளியில் கொட்டப்படும் குழம்பும் அதன் வேகமும் பெருமளவில் இருந்தால் அவை கடலுக்கு வெளியில் கூட வரும். 

மேற்கண்ட இரண்டு கருத்துகளின் வழியாகவும் எரிமலைக்கும் தொடர்பில்லை என்று அறிந்து கொண்டேன்.

மேலும், பூமியில் அதிகமான எண்ணிக்கையில் நடைபெறும் பூகம்பங்கள் நிலநடுக்கங்கள் எல்லாம் இமயமலையிலிருந்து அரித்துச் செல்லப்பட்ட சவடுமண்ணால் (alluvium colluvium) உருவான பாறைகள் (இந்தோனேசியா, சப்பான், துருகி நாடுகளின் நிலத்திட்டுகள்) பிரண்டுவிழுவதால்தான் என்பது எனது கருத்து ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 29, 2017, 12:12:44 PM9/29/17
to mintamil, S. Jayabarathan, tamilmantram, vallamai, Oru Arizonan, vannan vannan, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-09-29 19:39 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
///ஆனால் இதற்கு எனது யூகத்தில் விடை கூறப்பட்டுள்ளது.
1) கங்கன் என்ற விண்கோள் (தற்போது இமயமலை இருக்கும் பகுதியில்) விழுந்ததன் காரணமாகத்தான் கண்டங்கள் இடம் பெயர்கின்றன.
2) கங்கள் விழுந்தகாரணத்தினால், அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் உருவான மேடான பகுதியே இமயமலை ஆகும்.
இந்தியா  ஆசியா கண்டத்துடன் எப்போதும் இணைந்தே உள்ளது.
மற்றபிற கண்டங்கள்தான் நகர்கின்றன.  ////

விண்கோள் புவித்தளத்தில் விழுந்தால் குழி உண்டாகும்.  மலை எப்படி உண்டாகும் ???
விண்கோள் புவித்தளத்தில் விழுந்தால் குழி உண்டாகிறது.  குழியைச் சுற்றிலும் மலைத்தொடர் உண்டாகிறது.


மேற்கண்ட படத்திலிருந்து விண்கோள் பூமியில் விழுந்தால் அது விழுந்த இடத்தைச் சுற்றிலும் ஒரு மாபெரும் மலைத் தொடர்  உண்டாகும் என விளங்கிக் கொண்டேன்.
​ 
 அது  பிறகு எப்படி வளரும் ???  இமயம் உயர்ந்து கொண்டே போகுது.  விண்கோள் ஒருமுறை விழுந்தால் தொடர்ந்து புலப்பெயர்ச்சி எப்படி நிகழும் ???
முதன்முதலாக விழுந்த சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோளால் மோதலால் இமயமலைத் தொடரின் அடிப்பகுதிகள் உருவாகியுள்ளன.
இரண்டாவதாக விழுந்த சுமார்400 கி.மீ. விட்டம் கொண்ட கங்கை என்ற விண்ணீர்க் கோளால் இமயமலையின் மேல்பகுதிகளில் சவடுமண் படிந்து இமயமலையின் உயரம் கூடியுள்ளது.


எப்போதுமே ஆசியாவுடன் இணைந்த இமயம் ஏன் ஒரு திசை நோக்கி உந்துவிசையின்றி உயருது ???

சி. ஜெ.
விண்ணீர்க்கோள் விழுந்த காரணத்தினால் ஒருதிசை நோக்கி உந்துவிசையின்றி இமயமலையின் மேல் அடுக்குமலைத்தொடர் தோன்றியுள்ளது.  அதனால் இமயத்தின் உயரம் கூடியுள்ளது என்று கருதுகிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2017, 8:15:09 AM9/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம் ஐயா.

2017-09-30 9:59 GMT+05:30 nkantan r <rnka...@gmail.com>:

இதனால்தான் Purdue model-ஐப் பயன்படுத்த சொன்னேன்.
rnk
எனக்கு இதைப்பார்க்கும் வசதி இல்லை.  விரைவில் வேறொரு கணினியில் பார்க்க முயற்சிக்கிறேன்.

எப்படியிருப்பினும் மோதிக் கொள்ளும் கோள்களின் ‘திசைவேகம்‘ மற்றும் ‘நெகிழும் தன்மை அல்லது viscosity‘ யைப் பொருத்து மோதலின் விளைவு மாறுபடும்.
எனவே மோதிக்கொள்ளும் கோள்களின் திசைவேகத்தையும் viscosity யையும் மாற்றியமைக்கும் வசதி இருந்தால் மட்டுமே Purdue model- பயன்படும் என எண்ணுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2017, 8:33:06 AM9/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam
வணக்கம்.

2017-09-30 9:47 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
//1) சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கோள் விழுந்துள்ளது.  இது விழுந்த இடத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய மேரு உருவாகியுள்ளது.  அதன் ஒரு பகுதியே இமயமலையாக உள்ளது.  இது விழுந்த காரணத்தினால் பூமியின் மேற்பகுதி பிளவுபட்டு கண்டங்களாப் பிரிந்து சென்றுள்ளன.  (எனது வசதிக்காக இந்தக் கோளுக்குக் கங்கன் எனப் பெயரிட்டு அழைக்கிறேன்) .  இது விழுந்த இடத்தை மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தால் படத்தில் காட்டியுள்ளேன்.//

காளைராசன் ஐயா

சில கருதுகோள்களைக் கூறுமிடத்து, பொருத்தமற்றவைகளும் அறிவுக்குப் புறம்பானவைகளும் இல்லாதவாறுப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். சான்றாக,

கன்யாகுமரியில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர்  வரையிலான மொத்த தொலைவே 2800 கி.மீ. தான். இந்நிலையில், 2000 கி.மி.. விட்டம் கொண்ட கோள் ஒன்று சரியாக இப்போதைய இமயமலையின் நடுவில் விழுந்திருந்தால், அதன் பாதிப்பு இந்தியாவிலும் சைனாவிலும் எத்தனை தொலைவு சென்றிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.


இமயமலை இருக்கும் இடத்தில், இமயமலை உருவாவதற்கு முன் ஒரு விண்கோள் விழுந்துள்ளது.    
இமயமலையின் விட்டம் 2000கி.மீ. இருப்பதால், விழுந்துள்ள விண்கோளின் விட்டமும் சுமார் 2000 கி.மீ. இருக்கும் என்பது கருதுகோள்.

கன்யாகுமரியில் இருந்து காஷ்மீரின் ஸ்ரீநகர்  வரையிலான மொத்த தொலைவே 2800 கி.மீ. தான். இந்நிலையில், 2000 கி.மி.. விட்டம் கொண்ட கோள் ஒன்று விழுந்திருக்க வாய்ப்பில்லை என்பது அறிவுக்குப் புறம்பானது.

இமயமலையே உருவாகாத காலத்தில், இந்தியாவையும் சைனாவும்  எண்ணிப் பாருங்கள்.
 
சில கருதுக்களைக் கூறுமிடத்து, பொருத்தமற்றவைகளும் அறிவுக்குப் புறம்பானவைகளும் இல்லாதவாறுப் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். :)))

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2017, 11:39:27 AM9/30/17
to mintamil, S. Jayabarathan, tamilmantram, vallamai, Kalai Email, thiruppuvanam, vannan vannan, Oru Arizonan
வணக்கம் ஐயா.

2017-09-30 19:50 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
///இமயமலை இருக்கும் இடத்தில், இமயமலை உருவாவதற்கு முன் ஒரு விண்கோள் விழுந்துள்ளது.    
இமயமலையின் விட்டம் 2000கி.மீ. இருப்பதால், விழுந்துள்ள விண்கோளின் விட்டமும் சுமார் 2000 கி.மீ. இருக்கும் என்பது கருதுகோள்.  ////

இமயமலையின் விட்டம் என்றால் என்ன பரிமாணம் அது ? விண்கோள் விழுந்த இமலயப் பகுதி இடத்தில் முதலில் உண்டான பேரளவு ஆழ்குழி [Crater] எங்கே ?   

சி. ஜெயபாரதன்

தவறாக இமயமலையின் விட்டம் என்று எழுதியுள்ளேன் ஐயா.  தவறுக்கு வருந்துகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 30, 2017, 1:00:26 PM9/30/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

On 28 September 2017 at 20:57, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
நண்பர் காளைராசர் அவர்களே,

இமயமலை என்பது மடிப்பு மலை. அதாவது இரு கண்டதிட்டுகள் மோதும்போது உருவான மலை.

கண்டத் திட்டுகள் மோதும் போது மடிப்பு மலை உருவாகிறது என்றால்,
வடஅமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் உள்ள மடிப்பு மலைகள் கண்டத்திட்டுகள் மோதுவதால் உருவாகின்றன எனக் காட்ட வேண்டியிருக்கும்.  இந்த மலைத்தொடர்கள் இமயமலை போன்று கண்டக்களுக்கு நடுவில் இருக்க வேண்டும்.  ஆனால் மேற்கு ஓரமாக உள்ளன.  எனவே அமெரிக்க கண்டத்தில் உள்ள மடிப்பு மலைகள் கண்டப் பெயர்ச்சியால் உருவாகவில்லை எனக் கருத வேண்டியுள்ளது.  மடிப்புமலைகள் கண்டப் பெயர்ச்சியால் உருவானவை அல்ல எனக் கருத வேண்டியுள்ளது.

முதன்முதலாக (கங்கன் என்ற) சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோளால் விழுந்துள்ளது.
இதன் காரணமாக, அது விழுந்த இடத்திற்கு நேர் எதிரே புவியின் மறுபுறத்தில் பூமிக்குள் இருந்த வெப்பமான லாவாக்கள்  வெளியேறி உள்ளன.  ring of fire plate boundaries உருவாகியுள்ளது.  பூமியின் மிகவும் பழைமையான மலைத் தொடர்கள் உருவாகியுள்ளன.


இரண்டாவதாக கங்கை என்ற விண்ணீர்க்கோள்  அதே இடத்தில் விழுந்துள்ளது.  இதில் இருந்த தண்ணீர் ஏற்கனவே உருவாகியிருந்த மேடுகளை அரித்துச் சென்று பழைமையான மலைத்தொடர்களின் மீது படிந்துள்ளது.  புதிய இளவயது மலைகளை உருவாக்கியுள்ளது.    இந்த நீரோட்டத்தின் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட சவடுமண் படிந்து இந்தோனேசியா சப்பான் துருக்கி முதலான நாடுகளின் இளவயது நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.  

முதலாவதாகத் தோன்றிய மலைகளின் மீது, இரண்டாவதாகத் தோன்றிய சவடுமண் திட்டுக்கள் படிந்து, மடிப்புமலைத் தொடர்களாக உருவாகி உள்ளன.

இந்த மடிப்புமலைகளின் கீழ்ப்பகுதி பலம் குறைந்து மேல்பகுதி பிரண்டு விழுகின்ற காரணத்தினால்தான் பூகம்பம் நிலநடுக்கம் உண்டாகின்றன. 




விண்ணீர்க்கோள் விழுந்த காரணத்தினால் உண்டான நீரோட்டத்தில்  அடித்துச் செல்லப்பட்ட சவடுமண் படிந்து இந்தோனேசியா சப்பான் துருக்கி முதலான நாடுகளின் இளவயது நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.  

கண்டப் பெயர்ச்சியால் மடிப்புமலைகள் உருவாகவில்லை.
கண்டப் பெயர்ச்சியால்  80 சதவீதத்திற்கும் அதிகமான நிலநடுக்கம் பூகம்பங்கள் உருவாக வில்லை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 1, 2017, 2:24:20 AM10/1/17
to S. Jayabarathan, Oru Arizonan, tamilm...@gmail.com, vallamai, vannan vannan, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.




2017-10-01 9:44 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:


2017-09-29 9:28 GMT-07:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
Inline image 1

ஒரு காலத்தில் விண்பாறை விழுந்து இப்போதுள்ள அரிசோனா குழி இது.  சுற்றிலும் உள்ளவை விளிம்பு மதில்.  மலைத் தொடரா இவை ???

இவை இமயம்போல் உயர்வதுமில்லை !!!

அரிசோனா நண்பர் மகாதேவன் குழி அருகில்தான் உள்ளார். இவை மலைத் தொடரா என்று கேளுங்கள்.

சி. ஜெ. 

நான் இருக்குமிடத்திலிருந்து 200 மைல்கள் தொலைவிலுள்ள இவ்வடிவமைப்பை மீட்டியார் கிரேட்டர் [Meteor Crator] என்று அழைக்கிறார்கள்.

இதற்கு நான் சென்றிருக்கிறேன்.  இக்குழியின் விட்டம் கிட்டத்தட்ட ஒருமைலுக்கும் அதிகம்.  இதன் ஆழம் ஐநூறு அடிகளுக்கும் சற்று அதிகம்.  இதன் விளிம்பு மலைத்தொடரல்ல.  இக்குழி இருக்கும் சமவெளியிலிருந்து 140 அடிகள் மட்டுமே உயர்ந்துள்ளது.

மேலதிகத் தகவல் பெற கீழ்க்கண்ட சுட்டியைக்காணலாம்:


அன்புடன்,
ஒரு அரிசோனன்  

திரு. அரிசோனன் அவர்களுக்கு எனது நன்றி.

Meteor Crater lies at an elevation of about 1,740 m (5,710 ft) above sea level. It is about 1,200 m (3,900 ft) in diameter, some 170 m (560 ft) deep, and is surrounded by a rim that rises 45 m (148 ft) above the surrounding plains. The center of the crater is filled with 210–240 m (690–790 ft) of rubble lying above crater bedrock.[1] One of the interesting features of the crater is its squared-off outline, believed to be caused by existing regional jointing (cracks) in the strata at the impact site.[8]  


அரிசோன குழியின் (1 கி.மீ.) விட்டத்தையும், அதைச் சுற்றிலும் உண்டாகியுள்ள விளிம்பின் (45மீ) உயரத்தையும் கணக்கில் கொண்டு, இமயமலைக் குழியின் (2000 கி.மீ.) விட்டத்தைக் கொண்டு, இதைச் சுற்றிலும் உண்டாகியிருக்க வேண்டிய விளிம்பின் உயரத்தைக் கணக்கீடு செய்தால் ---

1)
1 கி.மீ. விட்டம் கொண்ட  விண்கல் விழுந்தால், விழுந்த இடத்தைச் சுற்றிலும் 45 மீட்டர் உயரத்திற்கு  விளிம்பு ( rim ) உண்டாகியுள்ளது. 
எனவே, 
2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் விழுந்ததனால்,  விழுந்த இடத்தைச் சுற்றிலும் தோராயமாக ( 45 x 2000 = ) 90,000 மீட்டர் 
விளிம்பு (rim ) உயர்ந்திருக்க வேண்டும்.

ஆனால்,
2)
இமயமலையின் சராசரி உயரம் 6100 மீட்டர்.
எவரஸ்ட் சிகரத்தின் உயரம்  8848 மீட்டர்.
என்ற அளவுகளுடன் ஒப்பிட்டால்,

90000/6100 = 14.754 = 15 மடங்கு குறைவான விளிம்பு உண்டாகியுள்ளது.
அல்லது
90000/8848 = 10.172 = 10 மடங்கு குறைவான விளிம்பு உண்டாகியுள்ளது.

இதற்குக் காரணம்,
1) விண்கல் விழுந்த அரிசோன குழியானது வயது முதிர்ந்த பூமியில் நிகழ்ந்துள்ளது.
2) விழுந்துள்ள விண்கல்லின் கடினத் தன்மை கூடுதலானது.

ஆனால் கங்கன் ஒரு கடினமான பாறையாக இல்லாமல், நெகிழும் தன்மை உடையதாக இருந்திருக்க வேண்டும்.
மேலும் கங்கன் விழும்போது பூமியின் வயது குறைவு.  அதன் மேற்பகுதி இப்போதிப்பதை விடக் குறைவான கடினத் தன்மையுடன் இருந்திருக்கும். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 2, 2017, 8:27:01 AM10/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.


On 2 October 2017 at 10:13, nkantan r <rnka...@gmail.com> wrote:
Impact is based on the mass and speed.

Further volume is 3d aspect. For eg,
2 km dia will have 2x2x2 (=8) times volume than a 1 km object

Thus a 2000 km கங்கன் will have 2000x2000x2000 (8 billion) volume than the  1 km asteroid.

And i think there is a huge confusion about size of the asteroid in Arizona impact. The crater is 1.2 km wide and not the asteroid which is estimated app 65 m on entry and 50 m on impact and got almost totally vaporised leaving less than 1m residues( note plural)

Further the ridge is formed by the material thrown out of crater! which is about 170m deep. So we need a deep crater in the circle marked by kalairajan. And pray tell me what is the depth?

1) கங்கன் விழுந்த காரணத்தினால் உண்டான ஆழம் எவ்வளவு? 
கங்கன் விழுந்த இடத்தில் கங்கை விழுந்துள்ள காரணத்தினால் ஆழம் மூடப்பட்டுவிட்டது.  
அதனால் இதன் ஆழத்தைக் கணக்கிட வழியில்லை.
ஆனால் கங்கன் விழுந்த இடத்திற்கு எதிர்முனையில்  பூமியில் எந்தவிதமான நிலப்பரப்புகளும் இல்லை.
பூமியின் மறுமுனை நிலப்பரப்பே இல்லாத அளவிற்கு நிலங்கள் இடம் பெயர்ந்துவிட்டன, அல்லது இல்லாமல் போய்விட்டன.




2) கங்கை விழுந்த காரணத்தினால் உண்டான (Taklamakan desert) ஆழம் எவ்வளவு? 
“கங்கை முனிவரின் வாய்வழியாகச் சென்று காதுவழியாக வெளியே வந்தாள்“ என்று கங்கா புராணம் கூறிப்பிடுகிறது.  அதாவது கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த தண்ணீர், தக்களமேகன்  (Taklamakan desert) பாலைவனம் இருக்கும் இடத்தின் வழியாக உள்ளே சென்ற கங்கை mariana trench-deepest point in ocean வழியாக வெளியே வந்துள்ளது.  அதாவது,
கங்கா புராணத்தின் படி, தக்களமேகன் பாலைவனமும் மரினா ஆழ்கடல்குழியும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.




Regarding Arizona meteor impact, the asteroid crater is estimated as 1.2 km wide while actual asteroid was variously estimated as 70m - 90 m and when impacted was estimated to be about 40- 60 m wide (residual). The speed of impact is also estimated as 12 to 20 km/s.

A back-of-envelope calculation shows that only a 16 km wide astroid would create a 2000km impact crater( if it does not integrate on entry.)
கங்கனின் இயற்பியில் தன்மையை அறிந்த பின்னர் செய்யப்படும் கணக்கீடுகளே சரியான விடையைக் கொடுக்கும் என நம்புகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்
 

The crater excavated was thrown over and formed the deposited in the surroundings including the rim and ridge in reverse order. Thus the youngest formation was naturally excavated first and deposited first. Means the surrondings have older formations on top and later ones on the bottom.

The Arizona meteor residue shows it to be of iron ore. Pray what was கங்கன் made off.

rnk

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 3, 2017, 12:42:01 AM10/3/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

2017-10-02 17:56 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.


On 2 October 2017 at 10:13, nkantan r <rnka...@gmail.com> wrote:
Impact is based on the mass and speed.

Further volume is 3d aspect. For eg,
2 km dia will have 2x2x2 (=8) times volume than a 1 km object

Thus a 2000 km கங்கன் will have 2000x2000x2000 (8 billion) volume than the  1 km asteroid.

And i think there is a huge confusion about size of the asteroid in Arizona impact. The crater is 1.2 km wide and not the asteroid which is estimated app 65 m on entry and 50 m on impact and got almost totally vaporised leaving less than 1m residues( note plural)

Further the ridge is formed by the material thrown out of crater! which is about 170m deep. So we need a deep crater in the circle marked by kalairajan. And pray tell me what is the depth?

1) கங்கன் விழுந்த காரணத்தினால் உண்டான ஆழம் எவ்வளவு? 
கங்கன் விழுந்த இடத்தில் கங்கை விழுந்துள்ள காரணத்தினால் ஆழம் மூடப்பட்டுவிட்டது.  
அதனால் இதன் ஆழத்தைக் கணக்கிட வழியில்லை.
ஆனால் கங்கன் விழுந்த இடத்திற்கு எதிர்முனையில்  பூமியில் எந்தவிதமான நிலப்பரப்புகளும் இல்லை.
பூமியின் மறுமுனை நிலப்பரப்பே இல்லாத அளவிற்கு நிலங்கள் இடம் பெயர்ந்துவிட்டன, அல்லது இல்லாமல் போய்விட்டன.




2) கங்கை விழுந்த காரணத்தினால் உண்டான (Taklamakan desert) ஆழம் எவ்வளவு? 
“கங்கை முனிவரின் வாய்வழியாகச் சென்று காதுவழியாக வெளியே வந்தாள்“ என்று கங்கா புராணம் கூறிப்பிடுகிறது.  அதாவது கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த தண்ணீர், தக்களமேகன்  (Taklamakan desert) பாலைவனம் இருக்கும் இடத்தின் வழியாக உள்ளே சென்ற கங்கை mariana trench-deepest point in ocean வழியாக வெளியே வந்துள்ளது.  அதாவது,
கங்கா புராணத்தின் படி, தக்களமேகன் பாலைவனமும் மரினா ஆழ்கடல்குழியும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.


கங்கை என்ற விண்ணீர்க்கோளின் கனஅளவை உத்தேசமாகக் கணக்கிட்டு இணைத்துள்ளேன் ஐயா.

https://docs.google.com/document/d/1oINNvSA5hAdtRD5T0-oM8_vBcpc3D-RAC2AJDTm7624/edit

கங்கையின் உத்தேசமான கனஅளவு : மேற்கண்ட உத்தேசமான கணக்கீட்டின் அடிப்படையில் கங்கையானது பூமியில் இறங்கிய காரணத்தினால் குறைந்தது 90,660,751 க.ச.கி.மீ. அளவோ அல்லது அதிகபட்சமாக 176,144,220 க.ச.கி.மீ. அளவிலான நீரும் சேறும் சகதியும் பூமியில் கூடுதலாகச் சேர்ந்து இருக்க வேண்டும். (This is a calculation of a layman; scientists can derive the exact dia and height and calculate the volume very accurately)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 4, 2017, 5:30:36 PM10/4/17
to mintamil, vallamai, housto...@googlegroups.com, மு இளங்கோவன், Karanthai Jayakumar, rathina pugazhendi, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.


2017-10-04 20:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

நடக்க சாத்தியக்கூறே இல்லை.

அரிசோனாவின் விண்கல் தாக்கம் ஏற்படுத்தியது. அக்குழியின் விட்டம் 0.7 மைல் அளவுதான். வானியல்
நோக்கில் ஒரு துகள்.

மெக்சிகோவில் நீங்கள் சொல்லும் விண்கற்குழியும் சிறிதே.
அதன் விட்டம் 7 (அ) 8 மைல் கொண்ட அளவை ஆகலாம்.


அரிசோனாவின் விண்கல் விழுந்தது, மெக்சிகோவில் விண்கற்குழி  இரண்டு நிகழ்ச்சிகளைத் தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.
இவை மிகவும் சமீபத்திய காலத்தில் நிகழ்ந்தனை.  இவை இரண்டும் விழும் போது பூமியின் மேற்பரப்பின் கடினத் தன்மை வேறு,

நான் குறிப்பிடும் இரண்டு நிகழ்வுகள் நடைபெற்று பில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன.  அப்போது பூமியின் நிலப்பரப்பின் கடினத் தன்மை குறைவு.

இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறேன்.
1) கங்கன் என்ற சுமார் 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் விழுந்தது.
பலகாலம் கழித்து,
2) கங்கை என்ற சுமார் 320-400 கி.மீ. விட்டம் கொண்ட விண்ணீர்க்கோள் விழுந்தது.


https://www.youtube.com/watch?v=TlV3Z3dE18s  please  must watch 10:02 to 11:10

for ganga, please watch  https://www.youtube.com/watch?v=1uUFI0w5Tj0இப்போது இருக்கும் கடினத் தன்மையில் இருந்திருக்காது.

தாங்கள் குறிப்பிடுவன மிகவும் சிறயன.  நான் குறிப்பிடுவன மிகமிகமிகமிகப் பெரியன.

தாங்கள் குறிப்பிடுவன பூமியைத் துளைத்துக் கொண்டு சென்றவை அல்ல,  நான் குறிப்பிடும் இரண்டு நிகழ்வுகளும் பூமியைத் துளைத்துக் கொண்டு சென்ற நிகழ்ச்சிகள்.

எனவே, 
1) காலம், 2) பூமியின் கடினத்தன்மை, 3) அளவு, 4) பூமியைத் துளையிட்டுச் சென்றுள்ள நிகழ்ச்சி   என்ற நான்கு காணிகளால் கங்கன் கங்கை விழுந்த நிகழ்ச்சிகளைத் தாங்கள் குறிப்பிடும் அரிசோனா மெக்சிக்கோ நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட முடியாது.


நான் குறிப்பிடும் இரண்டு நிகழ்வுகளை கீழ்க்காணும் படங்களின் வழியாக ஒப்புமை செய்யலாம்.
கங்கன் என்ற விண்கோள் பூமியைத் துளைத்துச் சென்றுள்ளது.
எனவே அது துளைத்துச்சென்ற இடத்தில் சற்றொப்ப அதனுடைய  விட்டத்தின் அளவிற்கு ஏற்ற துளையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பூமியின் மறுபக்கம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
1) பூமியின் உட்புறம் இருந்த எரிமலைக் குழம்புகளை வெளிக் கொணர்ந்து Ring of Fire ஐ உருவாக்கி உள்ளது.
2) பூமியின் மறுபுறம் நிலத்திட்டுகளே இல்லாமல் செய்துள்ளது. 
3) பூமியின் மேற்பரப்பைப் பிளவு படுத்தி கண்டங்களை உருவாக்கி அவற்றை நகரச் செய்துள்ளது.


இது எப்படி எனில், ஒரு மரத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டால், சுட்ட பகுதியில் குண்டு பாய்ந்து சென்ற இடத்தில் குண்டின் விட்டத்தின் அளவை ஒத்த விட்டம் கொண்ட துளையே இருக்கம்.  ஆனால், துப்பாக்கிக் குண்டு துளைத்துச் சென்ற மரத்தின் பின்பகுதியில், துப்பாக்கிக் குண்டின் விட்டத்தை விடப் பன்மடங்கு அதிகம் விட்டம் கொண்ட மரத்தைபகுதிகளைப் பெயர்த்தெடுத்து இருக்கும்.   
https://www.youtube.com/watch?v=TlV3Z3dE18s  please  must watch 10:02 to 11:10

கங்கன் பூமியை சற்றொப்ப அதன்விட்டத்தின் அளவிற்கே துளைத்துள்ளது என்பதை விளக்கும் படம்.




கங்கன் பூமியைத் துளைத்துச் சென்ற இடத்தின் மறுபக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை விளக்கும் படம்.








எனவே, மேற்கண்ட துப்பாக்கி சுடும் நிகழ்ச்சியில் நடைபெற்றது போன்று, கங்கன் விழுந்த இடத்தில், கங்கனின் விட்டத்திற்குச் சமமான விட்டம் கொண்ட துளை பூமியில் ஏற்பட்டுள்ளது என்றும், ஆனால் கங்கன் விழுந்த இடத்திற்கு நேர் எதிரே பூமியின் மறு பக்கம் பூமியின் விட்டத்தின் அளவிற்கு நிலப்பரப்பே இல்லாமல் போய் விட்டது என்றும் கூறுகிறேன்.


கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்து அதிலிருந்த தண்ணீர் எல்லாம் சிலகாலம் சென்றபிறகே பூமியில் வழிந்தோடி உள்ளது.
அதாவது கங்கையின் தண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கு மிகப் பெரிய பள்ளத்தாக்கு இருந்துள்ளது.


 
ஆனால், காளை சொல்வது 1600 மைல் விட்டம் கொண்ட விண்கல்லாம்.
8 மைல் விட்டம் கொண்டதாலே எல்லாம் அழிந்துவிட்டன என்னும்போது,
1600 மைல் விட்டம் கொண்ட கல் வானில் இருந்து வரும் வேகத்தில்
மோதினால் யார் இருப்பார்? எந்தப் புலவர் இதனைக் கண்டு புராணம் பாடமுடியும்?
சிந்திக்க வேண்டாமா?
கங்கனும், கங்கையும் விண்கல் அல்ல.   
இமயமலையில் மடிப்புமடிப்பாகப் படியும் அளவிற்கு கங்கனின் இயற்பியல்கூறு இருந்துள்ளது.
கங்கை என்பது விண்ணீர்க்கோள்.  

அரிசோனா, மெக்சிக்கோ நிகழ்ச்சிகளைப் எந்த விஞ்ஞானி நேரில் பார்த்தார்?
இந்நிகழ்ச்சிகளை விஞ்ஞானிகள் விவரிப்பது போன்று,
கங்கை விழுந்த நிகழ்ச்சியை முனிவர்கள் புராணத்தில் கூறியுள்ளனர்.

தாங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் பல்லிஅளவு மிகச்சிறியன.
நான் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் டயனோசர் அளவு மிகப் பெரியன.

அன்பன்
கி.காளைராசன்
 
எவ்வளவு பெரிய ஷாக் வேவ் உண்டாகும்,
சானிக் பூம் - உயிரிகளின் காதுகள் என்னாகும்? 
பூமி சூரியனைச்
சுற்றிவரும் வட்டத்தில் இருந்து விலகி, வாயேஜர் போல,
அண்ட பிரபஞ்சத்தில் சஞ்சரிக்கத்தொடங்காதா? அட்மாஸ்பியர்
இருக்குமா? நீர் எல்லாம் கடலில் ஆவியாகி வறண்டு போகுமே.
பூமி சூரியனைச் சுழலுமா? பல துண்டுகள் ஆகாதா?

பூமியின் சரிபாதி மேற்பரப்பு நிலப்பகுதிகள் காணமல் போய்விட்டன.  
மீதமுள்ள பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டு கண்டங்களாக மாறி, இடப் பெயர்ச்சி அடைந்துள்ளன.
பூமியின் அளவும் எடையும் கூடிவிட்டன.

 

விமானம் தரையிலோ, கப்பலிலோ அவசரகதியில் இறங்கும்போது என்ன நேரும் என்பதற்கு,
அதைக்கணிக்கவும் சில டைனமிக்ஸ் கோட்பாடுகளை இளம் எஞ்சினீயர்களுக்கு
கற்பிப்பவன், அம்முறைக்காகப் பரிசு பெற்றவன் என்ற முறையில் இம்மடல்.
Ditching loads பற்றித் தெரிந்துகொள்ள - எங்கள் விஞ்ஞானிகள்
செய்த ஆரம்பகால பரிசோதனை (இரண்டாம் உலகப் போரில்): 
(இதில் செய்த கணக்குகள் அடிப்படை. இப்பொழுது என் உள்ளீடுகளும் உண்டு.)
முதல் உலகப் போரில்:
வான்கடத்தலில் விமானம்:

விரிவாக எழுத நேரமில்லை. நேரம் எடுத்து எழுதும் விஞ்ஞானி ஜெயபாரதன், 
முனைவர் சிங்கநெஞ்சன் போன்றோர் மடல்களில் காளைராசன் அவற்றினுள்ளே
தொக்கி நிற்கும் விஞ்ஞானச் செய்தி என்ன என்று ஓர்ந்துபார்த்து எழுதணும்.
அவ்வாறு செய்தல் தமிழுக்கு நன்று. எதிர்காலத்தில் தமிழை விஞ்ஞானம் பேசும்
மொழியாக்க உதவும். புராணங்கள் 2000 ஆண்டுகள் பேசிவிட்டோம், அதனால் என்ன
பயன்? பஜனை, சினிமா, தனிமனித-ஸ்துதி என்றுதான் தமிழும் பிற மொழிகளும் புராணங்களால்
பேதலித்து நிற்கின்றன. கூத்தாடிகளிடம் அரசியல் தலைமை போவதும்
விஞ்ஞானப் பார்வை இன்மையால் தான். 

அண்மையில், ‘வல்லமையாளர்’ திரு. பானுகுமார் தமிழ் நிகண்டுப்
பதிப்புகளில் சைவர்கள் புதிதாகச் செய்த இடைச்செருகல்கள் பற்றிச்
சொன்னார். ஜைநசமயத்தின் கொடையை மறுதலிக்கச் செய்தவை அவை.
இதே போல, அளவைகளிலும் சில இடைச்செருகல்கள் உண்டு.
சாணக்கியர் முதற்கொண்டு யோஜனை தூரம் 9.1 மைல்கள் என
2500 ஆண்டுகளாகக் கணக்கு இந்தியா முழுதும் உண்டு. இது அங்குலம்
என்பது 11/16 இன்ச் என்ற சிந்து காலத்தில் இருந்து 15-ஆம் நூற்றாண்டு
வரை இந்திய அளவையியலில் கொண்ட அங்குலத்தை அடிப்படையாகக்
கொண்ட அளவை. சைவர்கள் இரண்டு மடங்காகச் சொல்வதும் உண்டு.
உ-ம்: கச்சியப்பர், மாதவ சிவஞான யோகிகள். சமணர்கள் யோஜனை
தூரம் என்பதை ~40 மைல் என்று கொண்டுள்ளனர் என்பதனை
அக்கௌஸ்ட்டிக் ஸயன்ஸ் மூலம் கணிக்கலாம். சமணர்களின்
நாலடியார் வெண்பா சான்று. இத காலத்தால் மறந்துவிட,
சைவர்கள் 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் இடைச்செருகலாக
சில வெண்பாக்கள் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர். இவை
நிகண்டுப் பாடல்களின் இடைச்சேர்க்கை போல எனக் கொள்ளவேண்டும்.
நாலடியாரும் ஒலியியல் விஞ்ஞானமும் (Yojana distance of Jains as determined from the Science of Acoustics)

முக்கியமான இடங்களில், சங்க இலக்கியத்திலும் இதுபோல்
மிஷனரிகள் போன்றோரால் மாற்றப்பட்டிருக்கவேண்டும். உ-ம்: நற்றிணை 310
பற்றி எழுதினேன். மகாகவி பரணர் மருதத்திணைப் பாடல்.
இப்போது எல்லாச் சுவடிகளையும் ஆராய்ந்து செம்பதிப்புகள்
இரண்டு வந்துவிட்டன. இரண்டிலும், பின்னத்தூராரிலும்,
உவேசாவும் கொண்ட பாடம்தான் சரி என்றாகிவிட்டது.
இந்திய வேளாண்மை, கால்நடையியலுக்கு ஆவணம் அச் சங்கப் பாடல்.

நா. கணேசன்

 

When the asteroid believed to have killed off the dinosaurs smashed into Earth some 66 million years ago, its sheer force made the planet's surface momentarily act like a liquid.

The asteroid ripped open a 60-mile-wide hole. From miles deep in that abyss, rock hurtled upward to a height twice that of Mount Everest and then collapsed outward to form a ring of mountains.

And it all happened within 5 minutes — 10 tops, as Sean Gulick, a geophysicist at the University of Texas, Austin, tells The Two-Way.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 5, 2017, 12:12:40 PM10/5/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-10-05 3:36 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


The "Ring of Fire", also called the Circum-Pacific belt, is the zone of earthquakes surrounding the Pacific Ocean- about 90% of the world's earthquakes occur there.<<< https://earthquake.usgs.gov/learn/glossary/?term=Ring%20of%20Fire
..... தேமொழி

கங்கன் விழுந்த இடத்திலேயே கங்கை விழுந்துள்ளது.  கங்கன் விழுந்த காரணத்தினால் உண்டான மாபெரும் பள்ளத்தாக்கையும், அது துளைத்துச் சென்ற துளையையும் கங்கை மூடிவிட்டது.  இதனால் கங்கனின் அடையாளங்களை முழுமையாக அறிஞர்களால்  கண்டறிய முடியவில்லை.  

கங்கனால் பூமியின் மறுபகுதியில் இருந்த நிலங்கள் எல்லாம் மறைந்து போய்விட்டன.  ring of fire உருவாகியுள்ளது.

கங்கன் விழுந்ததனால் உண்டான விளிம்பின் பெரும்பகுதியை (rim, மலைத்தொடரை) கங்கை அடி(ரி)த்துச் சென்ற காரணத்தால் உண்டான சவடுமண் (colluvium & alluvium) படிந்து Circum-Pacific belt உருவாகியுள்ளது.  



மயன்மாரின் (பர்மாவின்) நிலப்பரப்பும் இவ்வாறு உருவானதே.  ஒரு வித்தியாசம், சற்று கடினமான சவடுமண் படிமங்கள் பர்மாவில் படிந்துள்ள, இளகுவான சவடுமண் படிமங்கள் கூடுதலானதொலைவு அடித்துச் செல்லப்பட்டு இந்தோனேசியா சப்பான் நிலப்பகுதிகளை உருவாக்கியுள்ளன.

பர்மாவில்  சாலையோரம் உள்ள ஒரு மலையை வெட்டி எடுத்துள்ளனர்.  அதில் பாறைகளுக்கு இடையே மண் படிந்துள்ளது. படத்தை இணைத்துள்ளேன்.  
மஞ்சள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதியில் மிகவும் இளகுவான மண் உள்ளது.  எனவே, இந்தப் படத்தில் சிவப்பு மையினால் கோடிட்டுக் காட்டப்பட்ட பகுதிகள் அகற்றப்படும் போது, நிச்சயமாக,  இந்த மலையின் மேல்பகுதி அப்படியே பெயர்ந்து கீழே விழுந்துவிடும்.  அல்லது ஒரு சிறு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த மலையின் மேல்பகுதி (நீல நிறக் கோட்டிற்கு மேல்பகுதி) அப்படியே பெயர்ந்து கீழே விழுந்துவிடும்.


பர்மாவில் இருப்பதைப் போன்ற நிலஅமைப்பிலேயே இந்தோனேசியா சப்பான் நிலத்திட்டுகளாக உள்ளன.  இந்த மிகவும்     இளகுவான, திடம் குறைந்த பாறைகள் பெயர்ந்து விழுவதே நிலநடுக்கத்திற்கும் பூகம்பத்திற்கும் காரணம் என்பது எனது கருத்து.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 6, 2017, 10:10:09 AM10/6/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-10-05 23:11 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Thursday, October 5, 2017 at 9:12:46 AM UTC-7, கி. காளைராசன் wrote:

பர்மாவில் இருப்பதைப் போன்ற நிலஅமைப்பிலேயே இந்தோனேசியா சப்பான் நிலத்திட்டுகளாக உள்ளன.  இந்த மிகவும்     இளகுவான, திடம் குறைந்த பாறைகள் பெயர்ந்து விழுவதே நிலநடுக்கத்திற்கும் பூகம்பத்திற்கும் காரணம் என்பது எனது கருத்து.

 பாறைகள் பெயர்ந்து விழுவதே நிலநடுக்கத்திற்கும் பூகம்பத்திற்கும் காரணம் !!!

சொல்லும் விதம் இப்படி கீழே கொடுக்கப்பட்டது போல இருக்கவேண்டுமோ!!!

1) 

Why Do Earthquakes Happen?

இது புராணத்தின் அடிப்படையில் தவறானது.

மேலே உள்ள சுட்டியில் காட்டப்பட்டுள்ளபடி, அருகருகே உள்ள நிலத்திட்டுகள்  எதிரெதிர் திசையில் நகர்ந்திட வாய்ப்புகள் இல்லை என்பதே எனது புராணவாசிப்பின் அடிப்படையிலான நிலைப்பாடு.
எனவே என்னைப் பொறுத்தமட்டில் மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில் பூகம்பங்கள் நிலநடுக்கங்கள் ஏற்படவில்லை என்பதே எனது கருத்து.
மேற்கண்ட சுட்டியில் உள்ள கருத்தை எந்த dataக்களின் அடிப்படையில் கூறுகின்றனர் எனத் தெரிந்தால், அதே dataக்களின் அடிப்படையில் “பாறைகள் பெயர்ந்து விழுவதே நிலநடுக்கத்திற்கும் பூகம்பத்திற்கும் காரணம் !!! “ என்ற கோப்பாட்டை எளிதாக நிறுவ முடியும் என நம்புகிறேன்.

2)

Earthquakes are usually caused when rock underground suddenly breaks along a fault. This sudden release of energy causes the seismic waves that make the ground shake. 

..... தேமொழி
இது புராணத்தின் அடிப்படையில் மிகவும் சரியான கருத்து.
இந்தக் கருத்தைத் திருவிளையாடற் புராணம் “ பிரளயம்“   “அயம் (நிலத்திட்டு) பிரள் கிறது“ என்று குறிப்பிடுகிறது.

 பேச்சு வழக்கில் “ புரண்டு படுத்தல் “ என்கிறோம்.  


பள்ளிகொண்ட பெருமாள் பாம்பின்மீது படுத்திருப்பார்.  அந்தப் பாப்பின் உடல் போன்று அடுக்கடுக்கான சவடுமண் திட்டுகளால் ஆனது இந்தோனேசியா சப்பான் நிலத்திட்டுகள்.

இந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள fault  (மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தால் கோடு போட்டுக் காட்டியுள்ளேன்) அருகே விரிசல் உண்டாகும் போது நிலத்திட்டுகள் பெயர்ந்து நிலநடுக்கம் பூகம்பம் ஏற்படகின்றன.  

சுருக்கமாகச் சொன்னால்,
நிலங்கள் பிளவு பட்டு எதிரெதிரே நகர்கின்றன என்பது தவறு,
ஒன்றன் மேல் ஒன்றாக  (அனந்தசயனப் பெருமாளின் பாம்பு போன்ற வடிவத்தில்) படிந்துள்ள நிலங்களின் பகுதிகள் fault  இருக்கும் இடங்களில் பெயர்ந்து பிரண்டு விழுகின்றன என்பது சரி.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 7:02:16 PM10/7/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
2017-10-06 19:39 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம். 
நிலநடுக்கங்கள் பூகம்பங்கள் ஏற்படுபதைப் பிரளயம் என்கிறது திருவிளையாடற் புராணம்.  “ பிரளயம்“   “அயம் (நிலத்திட்டு) பிரள் கிறது“ என்று குறிப்பிடுகிறது.

 பேச்சு வழக்கில் “ புரண்டு படுத்தல் “ என்கிறோம்.  


பள்ளிகொண்ட பெருமாள் பாம்பின்மீது படுத்திருப்பார்.  அந்தப் பாப்பின் உடல் போன்று அடுக்கடுக்கான சவடுமண் திட்டுகளால் ஆனது இந்தோனேசியா சப்பான் நிலத்திட்டுகள்.

Earthquakes are usually caused when rock underground suddenly breaks along a fault. This sudden release of energy causes the seismic waves that make the ground shake. 

இந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள fault  (மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தால் கோடு போட்டுக் காட்டியுள்ளேன்) அருகே விரிசல் உண்டாகும் போது நிலத்திட்டுகள் பெயர்ந்து நிலநடுக்கம் பூகம்பம் ஏற்படகின்றன.  
​ 
An earthquake is the vibration, sometimes violent, of the Earth's surface that follows a release of energy in the Earth's crust. This energy can be generated by a sudden dislocation of segments of the crusts, when they are pull down by Gravity.
 

சுருக்கமாகச் சொன்னால்,
ஒன்றன் மேல் ஒன்றாக  (அனந்தசயனப் பெருமாளின் பாம்பு போன்ற வடிவத்தில்) படிந்துள்ள நிலங்களின் பகுதிகள் fault  இருக்கும் இடங்களில் நிலத்திட்டுகள் பெயர்ந்து பிரண்டு விழுகின்றன என்பது சரி.  இதனால் நிலநடுக்கம் பூகம்பம் உண்டாகின்றன என்பதே சரி.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 7:34:33 PM10/7/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
volcanoes are created when megma from a melted subdued plate rises. ''Ring of Fire'' is formed when megma was pushed out by the Gangan. ( Gangan was a selestial object of 2000 km radious, fell down in the opposite side of the ring of fire).


அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 7:47:11 PM10/7/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
the alluvium & colluvium formed by Ganga Water are deposited on the same place.  which made fault in between the layers formed by mega and alluvium. 
Further fault is made between the layers of alluvium and colluvium also.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 7:49:30 PM10/7/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 7:59:00 PM10/7/17
to mintamil, S. Jayabarathan, tamilmantram, vallamai, Oru Arizonan, Kalai Email, thiruppuvanam, naga rethinam, vannan vannan
do earthquakes and volcanoes occur at the same time?

Some, but not all, earthquakes are related to volcanoes. For example, mostearthquakes are along the edges of tectonic p
lates. This is where most volcanoesare too. However, most earthquakes are caused by the interaction of the plates not the movement of magma .



Volcanoes are formed by Gangan.
Fault-rock-layers are formed by Ganga's water.
They are different, but both are in the same place. And hence earthquakes and volcanoes are not occur at the same time.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 7, 2017, 8:07:45 PM10/7/17
to mintamil, S. Jayabarathan, vallamai, Oru Arizonan, Kalai Email, thiruppuvanam, naga rethinam, vannan vannan

கண்டத் திட்டுகள் மோதுவதால் ஏற்படும் லாவா

கண்டத் திட்டுகள் மோதுவதால் உண்டாகும் விரிசல் வழியாகத்தான் எளிதாக வெளிவரும்.

மலைப் பொத்துக் கொண்டு வருவது கடினம்.


மேலும், படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, கண்டத் திட்டுகள் மோதுவதால் உண்டான எரிமலைகள் ஏதும் இமயமலையில் இல்லை.  

இமயமலையின் அடிவராத்தில் கண்டத்தில் திட்டுகள் மோதுவதால் உண்டாகும் விரிசல் வழியாக லாவா வெளிவரவில்லை 

அல்லது இமயமலை அடிவாரத்தில் எரிமலைகள் இல்லை.

எனவே இமயமலைத் தொடர் கண்டத் திட்டுகள் மோதுவதால் ஏற்பட்டது அல்ல.


ஐயா, எனது கருத்துகளுக்கு ஏற்ப படத்தில் சிறு மாற்றம் செய்து இணைத்துள்ளேன் ஐயா.

​அன்பன்

கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 9, 2017, 6:35:54 PM10/9/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.



கங்கனின்  விட்டம்  சுமார் 2000 கி.மீ.   எனவே, இதேயளவு விட்டம் கொண்ட கோள் ஒன்று பூமியில் மோதினால் உண்டாகும் விளைவுகளைக் காண்பதே சற்றொப்பச் சரியாக இருக்கும்.  2000 கி.மீ. அளவிற்கு என்று சரியாக இல்லாமல் சற்று கூடுதலாக 2374 கி.மீ. விட்டமும், 1.88 g/cm³ அடர்த்தியும்,   0.62 m/s²  ஈர்ப்பு விசையும் கொண்ட புளுட்டோ பூமியின் மீது மோதினால் என்ன ஆகும் ?

What if Pluto ( 2374 k.m. dia )Crashed into the Earth?

கங்கன் விழுந்த காரணத்தினால், 
1) பூமியின் கனஅளவு கூடியுள்ளது என்றும்,
2) பூமியின் விட்டத்தின் அளவிற்கு (அதாவது பூமியில் சரிபாதி அளவிற்கான) 12,742 km இடத்தில் எந்த விதமான நிலப்பரப்பும் இல்லாமல் போய் விட்டது என்றும்,

3) பூமியின் உள்ளிருந்த தீக்குழம்பு வெளியே தள்ளப்பட்டு சுமார் 450 எரிமலைகளைக் கொண்ட, சுமார் 40,000 கி.மீ. நீளம் கொண்ட  "ring of fire"  உண்டாகியுள்ளது என்றும்  கருதுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன் 



நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 10, 2017, 11:57:44 AM10/10/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.

On 28 September 2017 at 20:57, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
நண்பர் காளைராசர் அவர்களே,

இமயமலை என்பது மடிப்பு மலை.

 



கங்கன் விழுந்த காரணத்தினால் இமயமலையில் அடிப்பகுதி உருவாகியுள்ளது என்றும்,
கங்கை விழுந்த காரணத்தினால் இமயமலையின் மேற்பகுதி layer by layer ஆக உருவாகியுள்ளது என்றும்,
இந்தக் காரணங்களினால்தான் இமயமலை ஒரு மடிப்பு மலையாக உருவாகி உள்ளது என்றும் கருதலாமா?

​ 
அதாவது இரு கண்டதிட்டுகள் மோதும்போது உருவான மலை. ஒரு காலத்தில் அது கடலாக இருந்தது

இமயமலையில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளிலோ, அல்லது வேறுபகுதிகளிலோ ஆழ்கடல்வாழ் உயிர்களின்  seadiatoms  எச்சங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா?
 
தங்களது கருத்தை அன்புடன் வேண்டுகிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 12, 2017, 12:07:47 AM10/12/17
to S. Jayabarathan, mintamil, tamilmantram, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம் ஐயா.

https://goo.gl/images/dMu2rE

///கங்கன் விழுந்த காரணத்தினால் இமயமலையில் அடிப்பகுதி உருவாகியுள்ளது என்றும்,
கங்கை விழுந்த காரணத்தினால் இமயமலையின் மேற்பகுதி layer by layer ஆக உருவாகியுள்ளது என்றும்,
இந்தக் காரணங்களினால்தான் இமயமலை ஒரு மடிப்பு மலையாக உருவாகி உள்ளது என்றும் கருதலாமா?
​////​

நண்பர் காளைராசன்,

உங்கள் இமயமலை அடுக்குப் புராணக் கோட்பாடு​களுக்கு அடித்தளமே புதையும் மணல் மேடு !!!!

முதலில் கங்கன் விழுந்தது, பிறகு கங்கை விழுந்தது ஆகிய புராண யூகிப்புகளே முழுக்க முழுக்க யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத புனைவுகள். 

உங்கள் புராணக் கனவுகள், கதைகள் மெய்யல்ல.  உங்கள் பொன்னான பொழுதைப் பயனுள்ள படைப்புகளில் பயன்படுத்தலாம். 

சி. ஜெயபாரதன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Screenshot_2017-10-11-21-14-24_com.android.chrome.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 12, 2017, 12:20:04 AM10/12/17
to mintamil, S. Jayabarathan, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.



Great rivers  (the Ganges, Brahmaputra, and Indus) transport large volumes of sediments from great mountains (the Himalayas, the Hindu Kush and the Karakoram) into the ocean. The Bengal Fan extends 2,500 kilometers south into the Bay of Bengal and is 22 kilometers thick. The Indus Fan is 10 kilometers thick and extends 1,000 to 1,500 kilometers into the Arabian Sea.

"The mountains rise, are lashed by wind and weather, and erode. The rivers carry mud and debris from the mountains into the ocean, where they settle onto the relatively tranquil seafloor and are preserved. The sediments bear evidence about where they came from, what happened to them, and when. By analyzing, measuring, and dating these seafloor sediments, scientists can piece together clues to reconstruct when and how fast their mountain sources rose to great heights millions of years ago, and how the climate and other environmental conditions may have changed in response."



படத்தில் காட்டப்பட்டுள்ள Indus Fan, Bengal Fan இரண்டும் ஒரே நேரத்தில் உருவானவை.  கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்து அதிலிருந்த தண்ணீர் வழிந்தோடி இவை இரண்டும் உருவானவை என்று கருதுகிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 17, 2017, 9:29:35 AM10/17/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Oru Arizonan

நான் புராணம் படித்த அளவிற்குப் புவியியல் படித்தவனல்ல.
எனது வாசிப்பில்,
இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் கோணல் கருத்துகளாக எனக்குத் தோன்றுவனவற்றைப் பட்டியலிட்டு வருகிறேன்.

கோணச்சுள்ளி 1,

2000 கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,

கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.

ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
இது எப்படிச் சாத்தியமாகும் ?
......... ....... .......

கோணச்சுள்ளி 2,
வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
(படங்களை இணைத்துள்ளேன்).

ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
(கோணல் 2)
இது எப்படிச் சாத்தியமாகும் ?
அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.

np_Everestgeolmap01.jpg
12_f04.gif

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 18, 2017, 1:44:04 AM10/18/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.
தீபாவளி நல்வாழ்த்துகள்.

On 18-Oct-2017 4:43 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:


>
>
>
> On Tuesday, October 17, 2017 at 6:29:37 AM UTC-7, கி. காளைராசன் wrote:
>>
>> நான் புராணம் படித்த அளவிற்குப் புவியியல் படித்தவனல்ல.
>> எனது வாசிப்பில்,
>> இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் கோணல் கருத்துகளாக எனக்குத் தோன்றுவனவற்றைப் பட்டியலிட்டு வருகிறேன்.
>>
>> கோணச்சுள்ளி 1,
>>
>> 2000 கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,
>>
>> கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.
>>
>> ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
>> இது எப்படிச் சாத்தியமாகும் ?
>> ......... ....... .......
>
>

> இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?
>
இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.

மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.


>  
>
>
>
>
>  
>>
>> கோணச்சுள்ளி 2,
>> வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
>> (படங்களை இணைத்துள்ளேன்).
>>
>> ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
>> (கோணல் 2)
>> இது எப்படிச் சாத்தியமாகும் ?
>> அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.
>
>
>

> ஒரு புவியதிர்ச்சி எந்தவகை மாறுதலையும் கொண்டு வரலாம்.
>
பூகம்பத்தால் மலைமுகடுகளில் விரிசல் ஏற்பட்டு உயரம் குறையுமே தவிர, கூடாது. பூகம்பத்தால் மலையின் உயரம் கூடியுள்ளது என்பதற்குச் சான்றே இருக்காது.

அன்பன்


கி. காளைராசன்

> JAN 27, 2017 - Forbes
> Scientists Suspect 2015 Earthquake Caused Mount Everest To Shrink
>  
> [...]
>
> The change in height is largely a result of the April 2015 Nepal earthquake of magnitude 7.8. The earthquake killed approximately 9,000 people and injured another 22,000 in and around Barpak, Gorkha. The major earthquake was triggered from the Indian Plate thrusting underneath the Eurasian Plate, the process that has uplifted the Himalayan Mountains.
>
> Andrew Waugh's survey of the Himalayas using triangulation in 1862. ( Credit: Proceedings of the Royal Geographical Society)
>
> The earthquake triggered significant ground movement, with some sections of the fault rising vertically by up to 30 feet. In addition, 10 feet of lateral movement was seen at the capital city of Kathmandu. To some degree, this displacement logically transferred throughout the Himalayan Mountains.
>
> Scientists estimate the peak may have dropped by approximately 1 meter after the Nepal earthquake. To know the exact height, scientists will need to employ a combination of ground survey, GPS, and triangulation to determine the exact height of a mountain. This can provide accuracy within a few centimeters, giving an approximate error of 0.0003%. 
> [...]
>
> ..... தேமொழி


>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2017, 9:27:27 AM10/19/17
to mintamil, Kalai Email, Oru Arizonan, naga rethinam, thiruppuvanam

வணக்கம்.

"Many rocks around the base of Everest are unique granites containing unusual minerals such as tourmaline, garnet and mica."
http://news.bbc.co.uk/2/hi/science/nature/3047313.stm

அசாதாரணமான (unusual) தனிமங்கள் இமயமலையில் எவ்வாறு தோன்றின ?

இமயமலை இரண்டு நிகழ்ச்சிகளால் உருவாகி உள்ளது.

இமயமலைத் தொடரின் அடிப்பகுதி கங்கன் என்ற விண்கோள் விழுந்ததால் உண்டானது.  இதன் காரணமாக இமயமலையின் அடிப்பகுதிகளில்  அசாதாரணமான தனிமங்கள் படிந்துள்ளன.

இமயமலைத் தொடரின் மேற்பகுதி கங்கை என்ற விண்ணீர்கோள் விழுந்ததால் உண்டானது.  இதன் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்ட களிமண் அல்லது சவடுமண் படிந்து இறுகி மடிப்புமலைத் தொடர் உருவாகி உள்ளது.

np_Everestgeolmap01.jpg

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2017, 11:01:03 AM10/19/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம் ஐயா.
On 19-Oct-2017 7:00 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> கண்டத்திட்டு நகர்வதால் உருவானதே மடிப்பு மலை. நன்றாக ஆராய்ச்சி கட்டுரைகள் படிங்க காளைராசன்.
>
பத்துப்பதினைந்து கட்டுரைகளுக்கு மேல் படித்து விட்டேன் ஐயா.
இந்தக் கட்டுரைகளில்,
"மடிப்புமலைத் தொடர்" உருவானதற்குக் காரணம் கண்டப் பெயர்ச்சியில் இந்தியத் துணைக் கண்டம் ஆசியக் கண்டத்துடன் மோதுகிறது என்ற காரணம்  கற்பிக்கப் படுகிறது.
மேலும், இந்தக் கட்டுரைகளில் விடைகான முடியாத ஐயப்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் தொகுத்து இதே இழையில் எழுதி வருகிறேன்.

"கண்டத் திட்டுகள் மோதுவதால் இமயமலையானது மடிப்புமலைத் தொடராக உருவாகவில்லை" என்பதும்,
"கங்கை என்ற விண்ணீர்கோள் விழுந்ததால் உண்டான தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்ட களிமண் அல்லது சவடுமண் படிந்து இறுகிப் பாறையாகமாறி மடிப்புமலைத் தொடர் உருவாகி உள்ளது" என்பதும், கங்காபுராணத்தின் அடிப்படையிலான கோட்பாடு. 
எனது இந்தக் கோட்பாட்டை நிறுவுவதற்கான காரணகாரியங்களையும்  தொகுத்து எழுதி வருகிறேன் ஐயா.

அன்பன்
கி. காளைராசன்

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
>
>

> --
> regards,
> jaisankar jaganathan

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2017, 11:54:08 AM10/19/17
to mintamil, Kalai Email, Oru Arizonan, naga rethinam, thiruppuvanam


On 19-Oct-2017 8:30 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் ஐயா.
>
> On 19-Oct-2017 7:00 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
> >
> > கண்டத்திட்டு நகர்வதால் உருவானதே மடிப்பு மலை. நன்றாக ஆராய்ச்சி கட்டுரைகள் படிங்க காளைராசன்.
> >
> பத்துப்பதினைந்து கட்டுரைகளுக்கு மேல் படித்து விட்டேன் ஐயா.
> இந்தக் கட்டுரைகளில்,
> "மடிப்புமலைத் தொடர்" உருவானதற்குக் காரணம் கண்டப் பெயர்ச்சியில் இந்தியத் துணைக் கண்டம் ஆசியக் கண்டத்துடன் மோதுகிறது என்ற காரணம்  கற்பிக்கப் படுகிறது.

> மேலும், இந்தக் கட்டுரைகளில் விடைகாண முடியாத ஐயப்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் தொகுத்து இதே இழையில் எழுதி வருகிறேன்.


>
> "கண்டத் திட்டுகள் மோதுவதால் இமயமலையானது மடிப்புமலைத் தொடராக உருவாகவில்லை" என்பதும்,
> "கங்கை என்ற விண்ணீர்கோள் விழுந்ததால் உண்டான தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்ட களிமண் அல்லது சவடுமண் படிந்து இறுகிப் பாறையாகமாறி மடிப்புமலைத் தொடர் உருவாகி உள்ளது" என்பதும், கங்காபுராணத்தின் அடிப்படையிலான கோட்பாடு. 
> எனது இந்தக் கோட்பாட்டை நிறுவுவதற்கான காரணகாரியங்களையும்  தொகுத்து எழுதி வருகிறேன் ஐயா.
>
> அன்பன்
> கி. காளைராசன்
>
> > 2017-10-19 18:57 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> வணக்கம்.
> >>
> >> "Many rocks around the base of Everest are unique granites containing unusual minerals such as tourmaline, garnet and mica."
> >> http://news.bbc.co.uk/2/hi/science/nature/3047313.stm
> >>

> >> அசாதாரணமான (unusual) கனிமங்கள் இமயமலையில் எவ்வாறு தோன்றின ?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 8:22:43 AM10/20/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.
தீபத் பீடபூமி  உயரமான இடத்தில் உள்ளது என்பது உண்மை.  அந்த இடம் எவ்வாறு உயர்ந்தது? என்பதே கேள்வி.


The ground deformation pattern estimated during May 2005 has been re-constrained on the basis of additional data collected in January 2006. A maximum uplift of 1.5 m to the west of the neutral line is recorded at the west coast of North Andaman near Temple Sound while the westernmost landmass of Middle Andaman exhibits uplift of 1.42 m and 1.3 m at Interview Island and South Reef Island respectively. Areas of subsidence east of the neutral line register 0.70 m and 1.20 m in Chidiatapu and Chatham areas of South Andaman respectively.
Tectonic deformation due to 26 December 2004 earthquake - Revisited in Andaman (PDF Download Available). Available from: https://www.researchgate.net/publication/261426896_Tectonic_deformation_due_to_26_December_2004_earthquake_-_Revisited_in_Andaman [accessed Oct 20 2017].

இதுபோன்று இமயமலை சிறிதுசிறிதாக உயர்ந்திருப்பதாக எந்த ஒரு ஆய்வு முடிவும் கூற வில்லை. 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 8:25:09 AM10/20/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம். 

> On Tuesday, October 17, 2017 at 6:29:37 AM UTC-7, கி. காளைராசன் wrote:
>>
>> நான் புராணம் படித்த அளவிற்குப் புவியியல் படித்தவனல்ல.
>> எனது வாசிப்பில்,
>> இமயமலையின் தோற்றம் பற்றிய கருத்துகளில் கோணல் கருத்துகளாக எனக்குத் தோன்றுவனவற்றைப் பட்டியலிட்டு வருகிறேன்.
>>
>> கோணச்சுள்ளி 1,
>>
>> 2000 கி.மீ. நீளத்திற்கும் அதிகமான நீளம் கொண்ட கண்டங்கள் மோதிக் கொண்டதாம்,
>>
>> கடலில் இருந்த படிமங்கள் எல்லாம் காணக் கிடைக்கிறதாம்.
>>
>> ஆனால் 2000 கி.மீ. தூரத்தில் எங்கும் கடற்கரைமணல் மட்டும் காணக் கிடைக்கவில்லையாம்.(கோணல் 1)
>> இது எப்படிச் சாத்தியமாகும் ?
>> ......... ....... .......
>
>
> இந்தக் கடற்கரைகளில் மணல் இருக்கிறதா?
>
இந்தக் கடற்கரைகள் எந்த இடத்தில் உள்ளன?
2000கி.மீ. நீளத்தில் ஒருஇடத்தில்கூட கடற்கரைமணல் இல்லாமல் இருக்க முடியாது என்பது எனது கருத்து.

மிகப் பெரிய கடல்வாழ் உயிரினத்தின் படிமம் இமயமலையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய உயிரினம் கடலில் எவ்வளவு ஆழத்தில் இருந்திருக்கும். அவ்வளவு ஆழத்தில் கடல்மணல் கிடையாதா?
அதுமட்டும் இமயமலையின் மேற்பகுதிக்கு வந்துவிட்டது ! கடற்மணல் வரவில்லையா ? என்பதே எனது ஐயம்.
>  
>
>
>
>
>  
>>
>> கோணச்சுள்ளி 2,
>> வருடந்தோரும் இந்தியத்துணைக் கண்டம் அங்குலம் அங்குலமாக நகர்ந்து ஆசியாக் கண்டத்துடன் மோதுகிறதாம்.  அதனால் இமயமலை உருவாகி உயர்ந்துகொண்டே வருகிறதாம்.
>> (படங்களை இணைத்துள்ளேன்).
>>
>> ஆனால் இமயமலையின் CHD, AHT, MCT, MBT முதலான அடுக்குகள் அங்குலம் அங்குலமாக உயராமல் அப்படியே layer by layer ஆக bedding அமைப்பில் அமைந்துள்ளதாம்.
>> (கோணல் 2)
>> இது எப்படிச் சாத்தியமாகும் ?
>> அறிந்தோர் அன்புடன் விளக்கி உதவிட வேண்டுகிறேன்.

கோணச் சுள்ளி 3
இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர் தீவும் ஒன்றாக ஒட்டியிருந்தன.  கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும்போது, 587,041 km² பரப்பளவு கொண்ட மடகாசுக்கர் தீவு சுமார் 2000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்,  ஆனால் 4,400,000 km2
பரப்பளவு கொண்ட இந்தியத் துணைக்கண்டம் சுமார் 6000 கி.மீ. நகர்ந்துள்ளதாம்.

அதாவது சற்றொப்ப 7.5 மடங்கு பெரியதான இந்தியத் துணைக்கண்டம் 3 மடங்கு கூடுதலான வேகத்துடன் நகர்ந்துள்ளதாம். 



மற்ற கண்டங்கள் நகர்ந்ததைக் காட்டிலும், சுமார் 22 மடங்கு வேகத்துடன் இந்தியத் துணைக்கண்டம் மட்டும் நகர்ந்து சென்றுள்ளது என்பது எப்படிச் சாத்தியமாகும்?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 12:23:57 PM10/20/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

ஐயா, நான் தோராயமாக இந்தியத் துணைக்கண்டமும் மடகாசுக்கர்தீவு நகர்ந்த தொலைவையும், அவற்றின் பரப்பளவையும் தோராயாமாகக் கணக்கில் கொண்டு எழுதினேன்.
கீழே கொடுக்கப்பட்ட பதிவில், இந்தியத் துணைக்கண்டம் நகர்ந்து சென்றது பற்றிய தகவல்கள் அருமையாக உள்ளன.
இதுபோன்று, மடகாசுக்கர்தீவு நகர்ந்துசென்றது பற்றிய தகவல்களும் முழுமையாகக் கிடைத்தால்,  இரண்டையும் ஒப்புமை செய்து பார்க்க வேண்டும்.   
கண்டப் பெயர்ச்சியில் இந்தியத் துணைக் கண்டம் மட்டும், மற்றகண்டங்களைவிட அதிகமான தொலைவு நகர்ந்து சென்றுள்ளது எவ்வாறு?  என்பதே கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் எனக்கு உள்ள ஐயம் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்



On 20 October 2017 at 19:17, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
////மற்ற கண்டங்கள் நகர்ந்ததைக் காட்டிலும், சுமார் 22 மடங்கு வேகத்துடன் இந்தியத் துணைக்கண்டம் மட்டும் நகர்ந்து சென்றுள்ளது என்பது எப்படிச் சாத்தியமாகும்?

அன்பன்
கி.காளைராசன்////


Indian Plate

From Wikipedia, the free encyclopedia
Indian Plate
The Indian Plate
TypeMajor
Approximate area11,900,000 km2[1]
Movement1north-east
Speed126-36mm/year
FeaturesIndian OceanHimalayas
1Relative to the African Plate

The Indian Plate or India Plate is a major tectonic plate straddling the equator in the eastern hemisphere. Originally a part of the ancient continent of Gondwana, India broke away from the other fragments of Gondwana 100 million years ago and began moving north.[2] Once fused with the adjacent Australia to form a single Indo-Australian Plate, recent studies suggest that India and Australia have been separate plates for at least 3 million years and likely longer.[3] The Indian plate includes most of South Asia—i.e. the Indian subcontinent—and a portion of the basin under the Indian Ocean, including parts of South China and western Indonesia,[4][5][6] and extending up to but not iPlate movements[edit]

Due to plate tectonics, the India Plate split from Madagascar and collided (c. 55 Ma) with the Eurasian Plate, resulting in the formation of the Himalayas.

Until roughly 140 million years ago, the Indian Plate formed part of the supercontinent Gondwana together with modern Africa, Australia, Antarctica, and South America. Gondwana broke up as these continents drifted apart at different velocities,[10] a process which led to the opening of the Indian Ocean.[11]

In the late Cretaceous, approximately 100 million years ago and subsequent to the splitting off from Gondwana of conjoined Madagascar and India, the Indian Plate split from Madagascar. It began moving north, at about 20 centimetres (7.9 in) per year,[10] and is believed to have begun colliding with Asia as early as 55 million years ago,[12] in the Eocene epoch of the Cenozoic. However, some authors suggest that the collision between India and Eurasia occurred much later, around 35 million years ago.[13] If the collision occurred between 55 and 50 Mya, the Indian Plate would have covered a distance of 3,000 to 2,000 kilometres (1,900 to 1,200 mi), moving faster than any other known plate. In 2012, paleomagnetic data from the Greater Himalaya was used to propose two collisions to reconcile the discrepancy between the amount of crustal shortening in the Himalaya (~1300 km) and the amount of convergence between India and Asia (~3600 km).[14] These authors propose a continental fragment of northern Gondwana rifted from India, traveled northward, and initiated the "soft collision" between the Greater Himalaya and Asia at ~50 Ma. This was followed by the "hard collision" between India and Asia occurred at ~25 Ma. Subduction of the resulting ocean basin that formed between the Greater Himalayan fragment and India explains the apparent discrepancy between the crustal shortening estimates in the Himalaya and paleomagnetic data from India and Asia.

In 2007, German geologists[10] suggested that the reason the Indian Plate moved so quickly is that it is only half as thick (100 kilometres or 62 miles) as the other plates[15] which formerly constituted Gondwana. The mantle plume that once broke up Gondwana might also have melted the lower part of the Indian subcontinent, which allowed it to move both faster and further than the other parts.[10] The remains of this plume today form the Marion Hotspot (Prince Edward Islands), the Kerguelen hotspot, and the Réunion hotspots.[11][16] As India moved north, it is possible that the thickness of the Indian plate degenerated further as it passed over the hotspots and magmatic extrusions associated with the Deccan and Rajmahal Traps.[11] The massive amounts of volcanic gases released during the passage of the Indian Plate over the hotspots have been theorised to have played a role in the Cretaceous–Paleogene extinction event, generally held to be due to a large asteroid impact.[17]

The collision with the Eurasian Plate along the boundary between India and Nepal formed the orogenic belt that created the Tibetan Plateauand the Himalaya Mountains, as sediment bunched up like earth before a plow.

The Indian Plate is currently moving north-east at 5 centimetres (2.0 in) per year, while the Eurasian Plate is moving north at only 2 centimetres (0.79 in) per year. This is causing the Eurasian Plate to deform, and the Indian Plate to compress at a rate of 4 millimetres (0.16 in) per year.[citation needed]

Geography[edit]

The westerly side of the Indian Plate is a transform boundary with the Arabian Plate called the Owen Fracture Zone, and a divergent boundarywith the African Plate called the Central Indian Ridge (CIR). The northerly side of the Plate is a convergent boundary with the Eurasian Plateforming the Himalaya and Hindu Kush mountains.



++++++++++++++++++++++

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2017, 12:27:39 PM10/20/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

தாங்கள் கொடுத்துள்ள கீழ்கண்ட பதிவைப் படித்து வருகிறேன்.  இதில் ஐயம் ஏதும் இருந்தால் கேட்டுத் தெளிவு பெறுவேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

On 20 October 2017 at 19:32, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:


Major tectonic subdivisions of the Himalaya[edit]

One of the most striking aspects of the Himalayan orogen is the lateral continuity of its major tectonic elements. The Himalaya is classically divided into four tectonic units that can be followed for more than 2400 km along the belt (Fig. 5 and Fig. 7).[14]


  1. The sub-Himalaya (Churia Hills or Siwaliks) : It forms the foothills of the Himalayan Range and is essentially composed of Miocene to Pleistocene molassic sediments derived from the erosion of the Himalaya. These molasse deposits, known as the Muree and Siwaliks Formations, are internally folded and imbricated. The Subhimalaya is thrust along the Main Frontal Thrust over the Quaternary alluvium deposited by the rivers coming from the Himalaya (GangesIndusBrahmaputra and others), which demonstrates that the Himalaya is still a very active orogen

  1. The Lesser Himalaya (LH) is mainly formed by Upper Proterozoic to lower Cambrian detrital sediments from the passive Indian margin intercalated with some granites and acid volcanics (1840 ±70 Ma[15]). These sediments are thrust over the Subhimalaya along the Main Boundary Thrust (MBT). The Lesser Himalaya often appears in tectonic windows (Kishtwar or Larji-Kulu-Rampur windows) within the High Himalaya Crystalline Sequence.

  1. The Central Himalayan Domain, (CHD) or High Himalaya, forms the backbone of the Himalayan orogen and encompasses the areas with the highest topographic relief. It is commonly separated into four zones.

    1. The High Himalayan Crystalline Sequence, HHCS (approximately 30 different names exist in the literature to describe this unit; the most frequently found equivalents are Greater Himalayan Sequence, Tibetan Slab and High Himalayan Crystalline) is a 30-km-thick, medium- to high-grade metamorphic sequence of metasedimentary rocks which are intruded in many places by granites of Ordovician (c. 500 Ma) and early Miocene (c. 22 Ma) age. Although most of the metasediments forming the HHCS are of late Proterozoic to early Cambrian age, much younger metasediments can also be found in several areas (Mesozoic in the Tandi syncline and Warwan region, Permian in the Tschuldo slice, Ordovician to Carboniferous in the Sarchu Area). It is now generally accepted that the metasediments of the HHCS represent the metamorphic equivalents of the sedimentary series forming the base of the overlying Tethys Himalaya. The HHCS forms a major nappe which is thrust over the Lesser Himalaya along the Main Central Thrust (MCT).
    2. The Tethys Himalaya (TH) is an approximately 100-km-wide synclinorium formed by strongly folded and imbricated, weakly metamorphosed sedimentary series. Several nappes, termed North Himalayan Nappes[16] have also been described within this unit. An almost complete stratigraphic record ranging from the Upper Proterozoic to the Eocene is preserved within the sediments of the TH. Stratigraphic analysis of these sediments yields important indications on the geological history of the northern continental margin of the Indian sub-continent from its Gondwanian evolution to its continental collision with Eurasia. The transition between the generally low-grade sediments of the Tethys Himalaya and the underlying low- to high-grade rocks of the High Himalayan Crystalline Sequence is usually progressive. But in many places along the Himalayan belt, this transition zone is marked by a major structure, the Central Himalayan Detachment System (also known as South Tibetan Detachment System or North Himalayan Normal Fault) which has indicators of both extension and compression (see 'ongoing geologic studies section below).
    3. The Nyimaling-Tso Morari Metamorphic Dome, NTMD: In the Ladakh region, the Tethys Himalaya synclinorium passes gradually to the north in a large dome of greenschist to eclogitic metamorphic rocks. As with the HHCS, these metamorphic rocks represent the metamorphic equivalent of the sediments forming the base of the Tethys Himalaya. The Precambrian Phe Formation is also here intruded by several Ordovician (c. 480 Ma[17]) granites.
    4. The Lamayuru and Markha Units (LMU) are formed by flyschs and olistholithsdeposited in a turbiditic environment, on the northern part of the Indian continental slope and in the adjoining Neotethys basin. The age of these sediments ranges from Late Permian to Eocene.

++++++++++++

2017-10-20 9:47 GMT-04:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
////மற்ற கண்டங்கள் நகர்ந்ததைக் காட்டிலும், சுமார் 22 மடங்கு வேகத்துடன் இந்தியத் துணைக்கண்டம் மட்டும் நகர்ந்து சென்றுள்ளது என்பது எப்படிச் சாத்தியமாகும்?

அன்பன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 21, 2017, 12:15:02 PM10/21/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

மனிதனின் தோல் பல அடுக்குகளைக் கொண்டு உடலைப் பாதுகாப்பது போன்று, புராணம் for its survivability பல்வேறு நிகழ்வுகளை ஒன்றாகக் கொண்டிருக்கிறது என்பது எனது கருத்து.

இமயமலையானது சிலம்பு வடிவில் உள்ளது என்கிறது திருவிளையாடற் புராணத்தின் ஒரு பாடல்.

கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு.

(கையையுடைய யானைகளும்,  மிகுந்த சினத்தையுடைய புலிகளும்,  நஞ்சினையுடைய வாயையும் படத்தையுமுடைய, பாம்புகளும்,  தங்கள் சுற்றம் வழிபட்ட மூன்று கண்களையுடைய இறைவனாகக் கருதி,  மெய்யாகிய அரிய தவமுடையார்களை அடைந்து,  அன்போடு பணி செய்யா நிற்க, விண்ணுலகத்தாராலும் மண்ணுலகத்தாராலும் புகழப் பெறுவது அத்திருக்கைலாயமலை).


இமயமலையானது ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் உயர்கிறது என்கிறது திருவிளையாடற் புராணத்தின் மற்றொரு பாடல்.

புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.
(இந்திரன் முதலிய இமையவர் உலகும், தாமரை மலரில் உறையும் அயனுடைய,  அகன்ற உயர்ந்த சத்தியலோகமும், திகிரிப்படையினையுடைய திருமாலின், மேன்மை கெடாது வாழ்கின்ற பரம பதமும்,  ஆகிய எல்லாமும், அழிய 
வருகின்ற ஊழிக்காலந்தோறும், அத்திருக்கைலாய மலையானது,  வலிமை கெடாது  நிலைபெற்று வளரும்)

இவ்வாறான புராணக்கருத்துகளைக் கற்பனை என்று என்னால் புறந்தள்ள முடியவில்லை பேராசிரியர் அவர்களே.

அன்பன்
கி.காளைராசன்


2017-10-21 16:27 GMT+05:30 Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com>:

Now where is Ganga?. How come water still flowing in Ganges?.
Purana is different. When earth was formed there was no water. After several million years water came through a giant meteroit which may be associated with Gangan collission. Water came to earth through the giant collision or through the reactions developed associated with this collision and took thousands of years to reach the surface and make ocean. Continents were formed after several thousands of years. Continental drift is a larger phenomenon and associated plate tectonics have revealed enormous data. Our lemuria is after the beginning of life in the planet. Purana is after thosands of years after letters and languages   emerged. Hence its a good imagination and we can appreciate puranam.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 26, 2017, 6:34:45 PM10/26/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

... வணக்கம்.

,,,

கங்கனின்  விட்டம்  சுமார் 2000 கி.மீ.   எனவே, இதேயளவு விட்டம் கொண்ட கோள் ஒன்று பூமியில் மோதினால் உண்டாகும் விளைவுகளைக் காண்பதே சற்றொப்பச் சரியாக இருக்கும்.  2000 கி.மீ. அளவிற்கு என்று சரியாக இல்லாமல் சற்று கூடுதலாக 2374 கி.மீ. விட்டமும், 1.88 g/cm³ அடர்த்தியும்,   0.62 m/s²  ஈர்ப்பு விசையும் கொண்ட புளுட்டோ பூமியின் மீது மோதினால் என்ன ஆகும் ?

What if Pluto ( 2374 k.m. dia )Crashed into the Earth?


கங்கன் விழுந்த காரணத்தினால்,
அது விழுந்த இடத்திற்கு எதிரே, பூமிக்குள் இருந்த லாவாகுழம்புகள் வெளியே வந்து தொடர்ச்சியான எரிமலைத் தொடரை (ring of fire) உருவாக்கியுள்ளது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 27, 2017, 12:15:28 PM10/27/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan

வணக்கம்.

"இந்தியத் துணைக் கண்டம் ஆசியக் கண்டத்துடன் முட்டி மோதியுள்ளது, அதனால் இமயமலைத் தொடர் உருவாகிறது" என்கின்றனர்.
அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதி முன்பு கடற்கரையாக இருந்ததாகவும், இப்போது அந்தக் கடற்பகுதி இமயமலைக்கு அடியில் (இணைப்பில் உள்ள படத்தில் உள்ளபடி) சென்றுவிட்டது   என்றும் கூறுகின்றனர்.

இதை மெய்ப்பிக்கும் வகையில்,  இமயமலைத் தொடரின் அடியில் (in ancient Oceanic Crust) கடல்மணல் அல்லது கடல்சார்ந்தன ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா ? இல்லையா ?

"கண்டத்திட்டு மோதலினால்தான் இமயமலை உருவாகியது' என்ற கருத்து ஏட்டுச் சுரைக்காயா?
அல்லது கறிப்பூசணியா ?

அன்பன்


கி. காளைராசன்

On 28-Sep-2017 8:57 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
நண்பர் காளைராசர் அவர்களே,

இமயமலை என்பது மடிப்பு மலை. அதாவது இரு கண்டதிட்டுகள் மோதும்போது உருவான மலை. ஒரு காலத்தில் அது கடலாக இருந்தது
sketch-1509119379243.png

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 16, 2017, 8:15:38 AM11/16/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, orravichandran, Oru Arizonan

வணக்கம்
On 27-Oct-2017 10:09 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் அவர்களே
>
> இமயமலையில் கடல் வாழ்விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன
>

தாங்கள் குறிப்பிடும் விலங்குகள் கங்கை என்ற விண்ணீர்கோளில் இருந்து இறங்கிய உயிரினமாகும்.  இது பற்றிய குறிப்பு புராணத்தில் உள்ளது.  எனவே இதை விடுத்து,  இமயமலைத் தொடர்களில் sea diatoms படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவா? எனக் கூறினால் ஏற்புடையதாக இருக்கும் ஐயா.

( கண்டப் பெயர்ச்சிக் கோட்பாட்டில் காணப்படும் கோணச்சுள்ளி 4)

இமயமலைத் தொடரில் எங்கேனும் ஒரு இடத்திலாவது sea diatoms கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் அதற்குமுன் கடல் இருந்தது என்பதை எவ்வாறு அறிவியில் அடிப்படையில் ஒத்துக் கொள்ள முடியும்.  sea diatoms  இல்லாத இடத்தில் கடல் இருந்தது என்பதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 24, 2017, 10:23:41 AM11/24/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
அண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

நான் தங்களிடம் நேரில் கூறியதற்கு இணங்க படங்களை இணைத்துள்ளேன்.

கண்டத் திட்டுகள் மோதிய காரணத்தினால், இமயமலை மடிப்பு மலையாக உருவாகி உள்ளது என்றால்,
வடஅமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் உள்ள மடிப்பு மலைகள் கண்டத்திட்டுகள் மோதுவதால் உருவாகின்றன எனக் காட்ட வேண்டியிருக்கும்.  மேலும்  
மடகாசுக்கர் ஆப்பிரிக்காவுடன் மோதும் இடத்திலும் மடிப்புமலைகள் உருவாகி இருக்க வேண்டும்.   மேலும் அமெரிக்காவில் உள்ள மலைத்தொடர்கள் இமயமலை போன்று இரண்டு கண்டக்களுக்கு நடுவில் இருக்க வேண்டும்.  ஆனால் இவை அமெரிக்காவின் மேற்கு ஓரமாக உள்ளன.  எனவே அமெரிக்க கண்டத்தில் உள்ள மடிப்பு மலைகள் கண்டப் பெயர்ச்சியால் உருவாகவில்லை எனக் கருத வேண்டியுள்ளது.  
 
மாறாக, 






கங்கன் என்ற சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் விழுந்துள்ளது என்றும்,  இது விழுந்த இடத்தில், 2000 கி. மீ. விட்டம் கொண்ட இமயமலைத் தொடர் உருவாகியுள்ளது என்றும்,  கங்கன் விழுந்த இடத்திற்கு நேர் எதிரே புவியின் மறுபுறத்தில் பூமிக்குள் இருந்த வெப்பமான லாவாக்கள்  வெளியேறி,    ring of fire plate boundaries உருவாகி, பூமியின் மிகவும் பழைமையான மலைத் தொடர்கள் உருவாகியுள்ளன என்றும்,

பின்னாளில் கங்கை விழுந்த காரணத்தினால், கங்கையிலிருந்த நீர் ஓடிச் செல்லும் போது, அடித்துச் செல்லப்பட்ட சேறும் சகதியும் சவடுமண்ணாக மாறி, இமயமலைத்தொடர், வடஅமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் உள்ள மலைத் தொடர்களின் மீது படிந்துள்ள காரணத்தினால் அவை மடிப்பு மலைகளாக மாறியுள்ளன என்பதும் எனது கருத்து.

அதாவது,
இமயமலைத்தொடர், வடஅமெரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் உள்ள மலைத் தொடர்,  இவற்றின் அடிப்பகுதி கங்கன் விழுந்த காரணத்தினால் உருவானவை, மிகவும் பழைமையானவை, வயது முதிர்ந்தவை.
ஆனால், இந்த மலைத்தொடர்களின் மேற்பகுதி கங்கை என்ற நீர்கோள் விழுந்த காரணத்தினால் உருவானவை, மடிப்புகள் உடையன, வயதில் இளையன.


அன்புடன்
தம்பி
காளை


​ 


இரண்டாவதாக கங்கை என்ற விண்ணீர்க்கோள்  அதே இடத்தில் விழுந்துள்ளது.  இதில் இருந்த தண்ணீர் ஏற்கனவே உருவாகியிருந்த மேடுகளை அரித்துச் சென்று பழைமையான மலைத்தொடர்களின் மீது படிந்துள்ளது.  புதிய இளவயது மலைகளை உருவாக்கியுள்ளது.    இந்த நீரோட்டத்தின் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட சவடுமண் படிந்து இந்தோனேசியா சப்பான் துருக்கி முதலான நாடுகளின் இளவயது நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.  

முதலாவதாகத் தோன்றிய மலைகளின் மீது, இரண்டாவதாகத் தோன்றிய சவடுமண் திட்டுக்கள் படிந்து, மடிப்புமலைத் தொடர்களாக உருவாகி உள்ளன.

இந்த மடிப்புமலைகளின் கீழ்ப்பகுதி பலம் குறைந்து மேல்பகுதி பிரண்டு விழுகின்ற காரணத்தினால்தான் பூகம்பம் நிலநடுக்கம் உண்டாகின்றன. 




விண்ணீர்க்கோள் விழுந்த காரணத்தினால் உண்டான நீரோட்டத்தில்  அடித்துச் செல்லப்பட்ட சவடுமண் படிந்து இந்தோனேசியா சப்பான் துருக்கி முதலான நாடுகளின் இளவயது நிலப்பகுதிகள் உருவாகியுள்ளன.  

கண்டப் பெயர்ச்சியால் மடிப்புமலைகள் உருவாகவில்லை.
கண்டப் பெயர்ச்சியால்  80 சதவீதத்திற்கும் அதிகமான நிலநடுக்கம் பூகம்பங்கள் உருவாக வில்லை.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 9, 2017, 12:20:51 PM12/9/17
to mintamil, Kalai Email, Oru Arizonan, naga rethinam, thiruppuvanam

“10 கி.மீ. ஆழமும் மணல்களையும் உடைய தக்களமாகன் பாலைவனத்தைக் கொண்ட திபெத்திய நிலத்திட்டுடன், மிகவும் கடினமான நிலத்திட்டை உடைய இந்திய நிலப்பரப்பு மோதுகிறதாம்!  அதனால் 2000 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட 8000மீ. உயரம் கொண்ட சிகரங்களை உடைய இமயமலை மலைத்தொடர்களை உருவாகி உள்ளதாம்!“  

இந்த மோதலினால் இமயமலைத் தொடரில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றனவாம்!



1) கங்கன் என்ற விண்கோள் விழுந்ததால் உண்டான rim இமயமலையின் அடிப்பகுதி ஆகும்.  இந்த வட்டவடிவ மலைத்தொடரின் அடிப்பகுதி மிகவும் கடினமான பாறைகளால் ஆனது.

2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலையின் மேற்பகுதியில் sedimentary rocks  படிந்துள்ளன.

இந்த sedimentary rocks திட்டுகளுக்கு இடையே உள்ள fault  பகுதிகள் பெயர்ந்து பிரண்டு விழுவதால் இமயமலை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகிறது.
இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது.  அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான எனது புரிதல். 

இமயமலையில் இதுவரையில் உண்டாகியுள்ள ஏதாவது ஒரு நிலநடுக்கமாவது, 10-15 கி.மீ. ஆழத்திற்குக் கீழே நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் உண்டா? 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 10, 2017, 10:46:12 AM12/10/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam
வணக்கம் ஐயா.

தாங்கள் அனுப்பி வைத்துள்ள மூன்று படங்களையும் விரைவில் பார்த்து விடுகிறேன்.
நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

2017-12-09 23:45 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

[How the Universe / World did evolve]

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 10, 2017, 11:30:43 AM12/10/17
to mintamil, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.




1) கங்கன் என்ற விண்கோள் விழுந்ததால் உண்டான rim இமயமலையின் அடிப்பகுதி ஆகும்.  இந்த வட்டவடிவ மலைத்தொடரின் அடிப்பகுதி மிகவும் கடினமான பாறைகளால் ஆனது.




2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் விழுந்த காரணத்தினால் இமயமலையின் மேற்பகுதியில் sedimentary rocks  படிந்துள்ளன.

இந்த sedimentary rocks திட்டுகளுக்கு இடையே உள்ள fault  பகுதிகள் பெயர்ந்து பிரண்டு விழுவதால் இமயமலை பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகிறது.
இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது.  அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான எனது புரிதல். 

இமயமலையின் Rim பகுதிகளில் (not in the inner side of the Rim) இதுவரையில் உண்டாகியுள்ள ஏதாவது ஒரு நிலநடுக்கமாவது, 10-15 கி.மீ. ஆழத்திற்குக் கீழே நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் உண்டா? 


அன்பன்

கி.காளைராசன்




On 10 December 2017 at 07:32, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


2017-12-09 9:20 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:


இமயமலையில் இதுவரையில் உண்டாகியுள்ள ஏதாவது ஒரு நிலநடுக்கமாவது, 10-15 கி.மீ. ஆழத்திற்குக் கீழே நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் உண்டா? 


Engineers specializing in Seismology measure Earthquake Depths. They can go 700 KM deep.

Determining the Depth of an Earthquake

Earthquakes can occur anywhere between the Earth's surface and about 700 kilometers below the surface. For scientific purposes, this earthquake depth range of 0 - 700 km is divided into three zones: shallow, intermediate, and deep.

Shallow earthquakes are between 0 and 70 km deep; intermediate earthquakes, 70 - 300 km deep; and deep earthquakes, 300 - 700 km deep. In general, the term "deep-focus earthquakes" is applied to earthquakes deeper than 70 km. All earthquakes deeper than 70 km are localized within great slabs of lithosphere that are sinking into the Earth's mantle.

The evidence for deep-focus earthquakes was discovered in 1922 by H.H. Turner of Oxford, England. Previously, all earthquakes were considered to have shallow focal depths. The existence of deep-focus earthquakes was confirmed in 1931 from studies of the seismograms of several earthquakes, which in turn led to the construction of travel-time curves for intermediate and deep earthquakes.

The most obvious indication on a seismogram that a large earthquake has a deep focus is the small amplitude, or height, of the recorded surface waves and the uncomplicated character of the P and S waves. Although the surface-wave pattern does generally indicate that an earthquake is either shallow or may have some depth, the most accurate method of determining the focal depth of an earthquake is to read a depth phase recorded on the seismogram. The depth phase is the characteristic phase pP-a P wave reflected from the surface of the Earth at a point relatively near the hypocenter. At distant seismograph stations, the pP follows the P wave by a time interval that changes slowly with distance but rapidly with depth. This time interval, pP-P (pP minus P), is used to compute depth-of-focus tables. Using the time difference of pP-P as read from the seismogram and the distance between the epicenter and the seismograph station, the depth of the earthquake can be determined from published travel-time curves or depth tables.

Another seismic wave used to determine focal depth is the sP phase - an S wave reflected as a P wave from the Earth's surface at a point near the epicenter. This wave is recorded after the pP by about one-half of the pP-P time interval. The depth of an earthquake can be determined from the sP phase in the same manner as the pP phase by using the appropriate travel-time curves or depth tables for sP.

If the pP and sP waves can be identified on the seismogram, an accurate focal depth can be determined.

by William Spence, Stuart A. Sipkin, and George L. Choy
Earthquakes and Volcanoes
Volume 21, Number 1, 1989

சுனாமி மதுரை வந்தது என்பதும், அந்தமான் 170,00,000 ச.கி.மீ. சுனாமியால் முழுகியது என்பதும் எஞ்சினீரிங்குக்கு எதிராக உள்ளவை.
மணலூரை மணவூர் என எழுதுவது போல.

NG

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 10, 2017, 7:40:30 PM12/10/17
to mintamil, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

On 10 December 2017 at 22:13, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
Inline image 1


நண்பர் காளைராசன்,

ஒரு விண்கோள் விழுந்தால் பூமி முழுவதிலும் பிரளயம் ஏற்படும்.
ஆமாம்.

கங்கன் என்ற விண்கோள் விழுந்த காரணத்தினால்
2000 கி.மீ. விட்டம் கொண்ட இமயமலைத்தொடர் உருவாகியுள்ளது.
கண்டங்கள் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளன.
பூமியின் மேற்பரப்பில் சுமார் 30 சதம் நிலப்பரப்பே மட்டுமே தங்கியுள்ளது.
கங்கன் விழுந்த இடத்திற்கு நேர்எதிரே ring of fires  உருவாகியுள்ளது.





  
நீங்கள் நினைப்பதுபோல் ஒருபோதும் சீரமைப்புகள் எவையும் நிகழா.
நீங்கள் மீண்டும் ஆரம்பப் பள்ளிக்குப் போய் படிக்க வேண்டும், அடிப்படை விஞ்ஞானம் கற்க.

இது என் ஆலோசனை.
 
நன்றி ஐயா.
நானும் இந்த எண்ணத்தில்தான் உள்ளேன்.
பல்கலைக்கழகத்தில் சிறப்பு அனுமதி கேட்டுள்ளேன்.
அனுமதி கிடைத்தால் புவியியல் பாடத்தை முறைப்படி படிக்க உள்ளேன் ஐயா.
தங்களது அன்பிற்கு நன்றி.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 10, 2017, 8:03:53 PM12/10/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம்.

2017-12-11 2:04 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
திரு. கணேசன் 

இவ்வாறு நம்  குழும நண்பரை நையாண்டி செய்யும் வகையில் எழுதுவது முறையல்ல.

அவர் கருத்து சரியல்ல, பிழைகள் கொண்டது  என்று சொல்வது மட்டுமே ஏற்கத்தக்கது.

அதன் பிறகு நேர்முகமாகவோ  அல்லது மறைமுகமாகவோ   தனிமனித தாக்குதல் முறையில் செல்வது முறையல்ல.

மட்டுறுத்தர் சார்பில்
..... தேமொழி

ஐயா கணேசன் அவர்கள் கூறுவது உண்மைதான்.  எனது ஆங்கிலச் சொற்களில் பிழைகள் உள்ளன.
எனது ஆங்கிலத்தை பர்மிய மொழியிலும், இந்திமொழியிலும் என்னுடைய நண்பர்கள் சிலர் கூகுள் மொழிபெயர்ப்பானில் மொழிபெயர்த்துப் படிக்கின்றனர்.  எனவே  கூகுள் மொழிபெயர்ப்பானின் மொழிபெயர்ப்புக்கு ஏற்றவாறு சிறுசிறு சொற்களாக மாற்றியமைத்து எழுதுகிறேன்.  உதாரணமாக warm reception, warm welcome என்ற சொற்களை கூகுள் வேறுமாதிரியாக மொழிபெயர்ப்பு செய்கிறது.  எனவே கூகுள் மொழிபெயர்ப்புக்கு ஏற்றால் போல் எழுதுகிறேன்.

மற்றபடி,
சாப்பாட்டைச் சரியாக வேகவைக்காமல் பந்தியில் பரிமாறினால் சாப்பிடுவோர் குறைகூறத்தான் செய்வர்.
நான் எனது புராணக்கோட்பாட்டுப் புவியியல் கருத்துக்களை முழுமையான கட்டுரையாக மாற்றி வெளியிட வேண்டும்.  ஆனால்  lab tests  அதிககாலம் எடுத்துக் கொள்வதால், முழுமையான அறிவியல் கட்டுரையாக வெளியாக இன்னும் சில ஆண்டுகாலம் ஆகும்.

எனது எழுத்தில் பிழை என்று மொட்டையாகக் கூறாமல், இன்னபிழை யென்று சுட்டிக்காட்டினால் எனக்கு அது உதவியாக இருக்கும்.
பிழையைக் கண்டும் அதைத் திருத்தாதோரும் பிழை யுடையோரே.

அன்பன்
கி. காளைராசன்


 




On Sunday, December 10, 2017 at 11:36:59 AM UTC-8, N. Ganesan wrote:


On Thursday, October 26, 2017 at 5:59:27 PM UTC-7, jayabarathans wrote:
நண்பர் காளைராசன்,

Gangan, a 2000 km dia planet was hited on Earth என்றால் என்ன அர்த்தம் ???

சி. ஜெ.

I think we can recommend Tiru. Kalai for the new Tamil Chair that will be started at Harvard University.
Tamil Nadu govt. is the major donor for this prestigious research position, one of the premier
Universities that we have here in the United States. 

It is also important to note that no Purana in Tamil speaks of "2000 KM dia plant was hited on Earth" .

N. Ganesan
Senior Scientist, Structural Dynamics

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2017, 8:12:31 PM12/12/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Oru Arizonan
வணக்கம்.

On 11 December 2017 at 09:57, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது.  அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான எனது புரிதல். 

Not really. 

கங்கை அபரிமிதமான வேகத்துடன் பூமியில் இறங்கியுள்ளது. 
அவ்வளவு வேகத்துடன் இறங்கிய கங்கை என்ற விண்ணீராலும் இமயமலையை அடித்துச் செல்லமுடியவில்லை. எனவே, இமயமலையின் அடிப்பகுதி rim மிகவும் கடினமான பாறையால் ஆனது.  அதில் இம்மியளவு கூடப் பெயர்ச்சி இருக்காது என்பதே “கங்கா புராணக் கோட்பாட்டின் “ அடிப்படையிலான எனது புரிதல்  என்று கூறியுள்ளேன். 


ஆழமான பகுதியில் இருந்து நிலநடுக்கம் இப்பொழுதும் இந்தியா பிளேட் திபெத்துடன் மோதுதலால் நிகழ்கிறது.

இமயமலைத் தொடரில் (rim) உண்டாகும் எந்தவொரு நிலநடுக்கமும் ஆழமாக பகுதியில் இருந்து ஏற்படவில்லை.  
இமயமலையின் அடிப்பகுதி கங்கன் விழுந்ததால் உண்டானது.  இது கங்கை என்ற விண்ணீர் வேகமாக விழுந்தபோதும் நடுங்காமல் நின்றது.
இமயமலையின் மேற்பகுதி கங்கை என்ற விண்ணீர்க்கோளில் இருந்த களிமண் மற்றும் சவடுமண்ணால் ஆனது.  இது இமயமலையின் மீது போர்வைபோல் முடியுள்ளது.  இந்தப் பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுகின்றன.  இதனால் நிலநடுக்கம் உண்டாகிறது.
 இந்தியா பிளேட் திபெத்துடன் மோதுதலால் நிகழவில்லை.
 

கங்காபுராணம் என்று தமிழில் புராணம் உண்டா? எப்பொழுது எழுதப்பட்டது? அதன் ஆசிரியர் யார்?

 

Gangan, a 2000 km dia planet was hited on Earth” No purana in Tamil says this.

“மிகப் பெரிய, சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது.  நாம் இதைக் "கங்கன்" என்ற பெயரால் அழைப்போம்“ என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.  புராணம் கூறுவதாக நான் எங்கும் குறிப்பிட வில்லை.


 

Two basically flawed assumptions from Kalairasan
(1) Denying Plate tectonics, "2000 km dia planet was hited on Earth".
(2) 1,70,000 square kilometers of land submerged in Andaman.

"2000 km dia planet was hited on Earth".
“1,70,000 square kilometers of land submerged in Andaman.“
இவை இரண்டிற்கும்
கூகுளின் புவிப்படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளேன்.
 

Both are wrong and have no scientific basis.
இக்கருத்துகள் இப்போதுதான் எழுதப்பட்டே வருகின்றன.
கூகுள் புவிப்படத்தின் உதவியுடன் நான் சுட்டிக்காட்டியுள்ள இந்த இரண்டு theory  கோட்பாடுகளையும் இனிமேல்தான் அறிவியல் அடிப்டையில் ஆராயப்பட வேண்டும்.
ஆராய்ச்சியே நடக்காதபோது, Both are wrong and have no scientific basis என்று எவ்வாறு சொல்லலாம்.

 
Once these false assumptions are removed, then
scientific approach of the formation of the Himalayas will be understood.
கங்கன் கோட்பாடும், கங்கா புராணக் கோட்பாடும் முதலில் விளங்க வேண்டும்.  அதன்பின்னரே, இந்தக் கோட்பாடுகளின் படி இமயமலைத்தொடர் அமைந்துள்ளதா? எனப் புவியியல் அடிப்படையில் கண்டறிய முடியும்.

Without proper training in English, Engineering and Geology,
these are hard to communicate.
ஆமாம். சரியான கருத்து.
எனது கங்கன் கோட்பாட்டையும், கங்கா புராணக் கோட்பாட்டையும் ஆங்கிலத்தில் எழுத முயற்சி மேற்கொள்கிறேன்.
 
This cannot be done in " othaivari ".

N. Ganesan
தங்களது  othaivari ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளும்  அறிவிலேன்,  அதனால்   தமிழிலில் சொன்னால் புரிந்து கொள்ள முயற்சிப்பேன் ஐயா.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 1:54:32 AM12/13/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Oru Arizonan
வணக்கம்.

On 13 December 2017 at 09:17, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



On Tuesday, December 12, 2017 at 5:12:34 PM UTC-8, கி. காளைராசன் wrote:

Two basically flawed assumptions from Kalairasan
(1) Denying Plate tectonics, "2000 km dia planet was hited on Earth".
(2) 1,70,000 square kilometers of land submerged in Andaman.

"2000 km dia planet was hited on Earth".
“1,70,000 square kilometers of land submerged in Andaman.“
இவை இரண்டிற்கும்
கூகுளின் புவிப்படங்களை ஆதாரமாகக் காட்டியுள்ளேன்.

கங்கன், கங்கை, கடல்வெள்ளம் என மூன்று புவியியல் கோட்பாடுகளைக் கூறி வருகிறேன்.

1)  கங்கன் என்ற 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் பூமியில் (இப்போது இமயமலை இருக்கும் இடத்தில்) விழுந்தது.
இதற்கு ஆதாரமாகக் கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்குவதற்கு முன்பே, கங்கையின் நீர் முழுவதையும் சிலஆண்டுகள் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருந்துள்ளது என்ற கங்கா புராணக் கருத்தையும், கூகுள்புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன். https://groups.google.com/d/msg/mintamil/bdyuxmpmkFM/DlKOgkkEBgAJ

2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது.  
கங்கை என்ற இந்த விண்ணீர்க்கோளின் குறைந்தபட்ச கனஅளவு சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்,  அதிகபட்ச கனஅளவு சுமார் 176,144,220 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளேன். https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMTgyOTM2NzcxNjgzOTUyNDc1NzcBMF94N3BmTDBBZ0FKATAuMQEBdjI&authuser=0
 
இதற்கு ஆதாரமாகக் கங்காபுராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன்.  https://groups.google.com/d/msg/mintamil/nRC_brdTWts/0_x7pfL0AgAJ

3) “கடல்வெள்ளம் மதுரையை அழித்தது“  என்ற கருத்தைத் திருவிளையாடல் புராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டு, மின்தமிழிலில் கீழ்க்கண்ட இழைகளில் எழுதியுள்ளேன்.

1) “மதுரைக்கு வந்த (சுனாமி) ஆழிப்பேரலை“ https://groups.google.com/d/msg/mintamil/u1RChqX1PdA/oUGnZ9OH-pgJ

2) மியான்மார் தட்டோன் அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/abU2jJI8miE/VYFSv1W7BgAJ

3) கீழடி அழிந்தது பிரளயத்தினாலா? https://groups.google.com/d/msg/mintamil/kneZ2BYbvh0/9rD_EEGyIQAJ

4) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி-2) https://groups.google.com/d/msg/mintamil/4UEpYeETYZw/CFnYEVmrCQAJ

5) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி -3) பிரளயம் பேர்த்த திருச்செந்தூர் பாறை https://groups.google.com/d/msg/mintamil/-gSTGWJbWO0/gs4eDPHeAgAJ

6) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) : மதுரையை வங்கக் கடல் வௌவியது https://groups.google.com/d/msg/mintamil/9OaxHrTzbnE/XqfQJsDECwAJ

7) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி – 4) மதுரையை அழித்தியால் ... https://groups.google.com/d/msg/mintamil/VAwI47M4G-M/X56lbdHCBwAJ

8) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) "மண் கடல் வௌவலின்" https://groups.google.com/d/msg/mintamil/jKAJQnE2pVQ/VhL_Tu12CAAJ

9) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 5) மலி திரை ஊர்ந்து (தட்டோன்) https://groups.google.com/d/msg/mintamil/5rsSLsaD-e8/OIWOn4srDAAJ

10) மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 7) மதுரையை அழித்த பிரளயத்தில் தோன்றிய பன்றிமலை  https://groups.google.com/d/msg/mintamil/6qz0GJVvbLc/vWdmaza6AQAJ

11) “மதுரைக்கு வந்த சுனாமி (பகுதி - 8“ https://groups.google.com/d/msg/mintamil/8PvU-QKrnss/y241b6PCCgAJ

12) “பிரளயப் பிளவுப் பாறைகள்“ https://groups.google.com/d/msg/mintamil/_di5oP8Qjjg/xd4vP8H4CQAJ

 

Google pictures are the basis for Geological history for the formation of the Himalayas?
ஆமாம்.
கூகுள் படத்தை முதன்மைச் சான்றாதாரமாகக் கொண்டுள்ளேன்.  
 

All the best for your English articles in Geology journals telling scientists on how
the Himalayas were formed.

N. Ganesan

தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.
“ஆனைமுகத்தான் திருவருளால்“ கங்கா புராணக் கோட்பாட்டின் அடைப்படையிலான எனது இந்த மூன்று ஆய்வுகளும் வரும் சில வருடங்களில் அறிவியல் அடிப்படையில் நிறுவப்படும் என நம்புகிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2017, 11:05:29 AM12/13/17
to mintamil, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam, Pirama Dr Palanichamy FFE, Oru Arizonan, vannan vannan
வணக்கம் ஐயா.

2017-12-13 20:35 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
நண்பர் காளைராசன்,


////கங்கன், கங்கை, கடல்வெள்ளம் என மூன்று புவியியல் கோட்பாடுகளைக் கூறி வருகிறேன்.

1)  கங்கன் என்ற 2000கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் பூமியில் (இப்போது இமயமலை இருக்கும் இடத்தில்) விழுந்தது.
இதற்கு ஆதாரமாகக் கங்கை என்ற விண்ணீர்க்கோள் பூமியில் இறங்குவதற்கு முன்பே, கங்கையின் நீர் முழுவதையும் சிலஆண்டுகள் தேக்கி வைத்துக் கொள்ளக்கூடிய மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருந்துள்ளது என்ற கங்கா புராணக் கருத்தையும், கூகுள்புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன். https://groups.google.com/d/msg/mintamil/bdyuxmpmkFM/DlKOgkkEBgAJ

2) கங்கை என்ற விண்ணீர்க்கோள் இமயமலைத்தொடரின் (Rim) உள்ளே இப்போது தக்களமேகன் பாலைவனம் இருக்கும் இடத்தில் இறங்கியுள்ளது.  
கங்கை என்ற இந்த விண்ணீர்க்கோளின் குறைந்தபட்ச கனஅளவு சுமார் 90,660,751 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும்,  அதிகபட்ச கனஅளவு சுமார் 176,144,220 க.ச.கி.மீ. ஆக இருக்க வேண்டும் எனக் கணக்கிட்டுக் கூறியுள்ளேன். https://docs.google.com/viewer?a=v&pid=forums&srcid=MDQ3MTE4NTA5MTY2NjkwMTk0NTQBMTgyOTM2NzcxNjgzOTUyNDc1NzcBMF94N3BmTDBBZ0FKATAuMQEBdjI&authuser=0
 
இதற்கு ஆதாரமாகக் கங்காபுராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டுள்ளேன்.  https://groups.google.com/d/msg/mintamil/nRC_brdTWts/0_x7pfL0AgAJ

3) “கடல்வெள்ளம் மதுரையை அழித்தது“  என்ற கருத்தைத் திருவிளையாடல் புராணத்தையும், கூகுள் புவிப்படத்தையும் முதன்மைச் சான்றாகக் கொண்டு, மின்தமிழிலில் கீழ்க்கண்ட இழைகளில் எழுதியுள்ளேன்./////


மேலே உள்ள கற்பனைக் கருத்துக்கள் அனைத்தும், வரலாறு அல்லது விஞ்ஞானக் கோட்பாடுகளின் ஆதாரமற்றவை.  இந்தியப் புராணக் கூற்றுகளின் கருத்துக்களும் அல்ல.  அவை அனைத்தும் திரு கி. காளைராசனின் ஆதாரமற்ற, தவறான, பிழையான, எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளாத, அண்டப் புளுகு ஆராய்ச்சிகள்.

சி. ஜெயபாரதன்

நன்றி ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 18, 2018, 7:26:14 AM2/18/18
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Oru Arizonan

On 28-Sep-2017 9:18 AM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:

இமயமலையின் தோற்றம்  (கங்கா புராணக் கோட்பாடு) :

மஹாதேவன் பார்வதியுடன் பகீரதனுக்குப் பிரஸன்னமாய், “ராஜச்ரேஷ்ட, உன் தபஸால் திருப்தியடைந்தேன். உன்னிஷ்டப்படி பர்வதராஜ புத்திரியான கங்கையைத் தலையில் தரிக்கிறேன்“ என்றார்.  அப்பொழுது ஸகல லோகங்களிலும் கொண்டாடப்பட்ட கங்கை,  பெரிய ரூபத்துடனுடம் தாங்க முடியாத வேகத்துடனும் ஆகாசத்திலிருந்து பரமசிவனுடைய சிரஸில் விழுந்தாள்.  விழுந்தவுடன்ஜடாமண்டலமென்ற பெரும் வலையில் சிக்கிக்கொண்டு வெளியில் போக வழி தெரியாமல் பல வருஷங்கள் வரையில் அலைந்து திரிந்தாள். பின்னர் மஹாதேவன், பிரம்மாவால் சிருஷடிக்கப்பட்டதான பிந்துஸரஸில் அவளை விட்டார். "... ... ... என்கிறது கங்கா புராணம்.

இதனால்,
கங்கை என்ற விண்ணீ்ர்வியனுலகு பூமியில் இறங்குவதற்கு முன்பே இமயமலை இருந்துள்ளது என்றும்,
கங்கை என்ற விண்ணீர் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கான மிகப் பெரிய மலைத்தொடர்களும் பள்ளத்தாக்குகளும்  இருந்துள்ளன என்றும் கருத வேண்டியுள்ளது.

மிகப் பெரிய, சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட விண்கோள் ஒன்று இப்போது இமயமலை இருக்கும் இடத்தில் விழுந்துள்ளது.  நாம் இதைக் "கங்கன்" என்ற பெயரால் அழைப்போம்.

கங்கன் விழுந்ததனால் இதைச் சுற்றிலும்  உயரமான வட்ட வடிவமான மலைத் தொடர்கள் உருவாகி யுள்ளன.  இப் பெரிய உயர நீண்ட மலைத் தொடரின் தென்பகுதியே தற்போதிருக்கும் இமயமலைத் தொடர் ஆகும்.

கங்கன் பூமியில் விழுந்து பலகாலம் கழித்து, இதே இடத்தில் கங்கை என்ற நீர்க்கோள் இறங்கியுள்ளது. 
இதில் இருந்த நீரால் இமயமலையின் கிழக்கு மேற்கு வடக்குப் பகுதிகள்
அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இமயமலைக் கோட்பாடு :
1) கண்டப் பெயர்ச்சியால் இமயமலை உருவாகவில்லை.
2) சுமார் 2000 கி.மீ. விட்டம் கொண்ட கங்கன் என்ற விண்கோள் விழுந்ததால் இமயமலை உருவாகியுள்ளது.
3) கங்கன் விழுந்த காரணத்தால் ஒன்றாக ஒட்டி இருந்த பூமியின் மேற்பகுதியானது கண்டங்களாகப் பிரிந்து சென்றன.
4) கங்கன் விழுந்த இடத்தின் மறுபக்கத்தில், அதாவது பூமியின் மறு புறத்தில் ஆழமான அட்லாண்டிக் பகுதி உருவானது
5) கங்கன் விழுந்த காரணத்தினால்,
பூமிக்குள் எரிந்து கொண்டிருந்த லாவா குழம்புகள் அட்லாண்டிக் கடலைச் சுற்றிலுமுள்ள  பகுதிகளில் எரிமலைத் தொடர்களாய் உருவாகி உள்ளன.
படங்களை இணைத்துள்ளேன்.  படங்களில் பூமி இப்போது வடிவம் உள்ளது. கங்கன் பூமியில் விழுந்த போது,  படங்களில் இருப்பது போல் இருந்திருக்க வில்லை என்பதையும், கண்டங்கள் எல்லாம் ஒன்றாய் ஒட்டி இருந்தன என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டுகிறேன்.

அன்பன்
கி. காளைராசன்
(குறிப்பு :-
மேற்கண்டன எனது யூகமான கருத்துகள் ஆகும்.)

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 2, 2018, 10:42:13 AM3/2/18
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Oru Arizonan


"தென்குமரி
வடபெருங்கல் 

குணகுட கடலா எல்லை 

குன்றுமலை காடு நாடு 

ஒன்றுபட்டு வழிமொழிய 

கொடிது கடிந்து கோல் திருத்தி 

படுவ துண்டு பகலாற்றி 

இனிது ருண்ட சுடர் நேமி 

முழுதாண்டோர் வழி காவல்" (புறம்-17)

விளக்கம் : தென்குமரி என்று தென்எல்லை குறிப்பிடப் பெறுகிறது. அப்பொழுது குமரியாற்றெல்லையில் கடல் வரவில்லை. வடபெருங்கல் என்பது இமயம். கிழக்கும் மேற்கும் கடல் எல்லை. இப்பரந்த கண்டத்தில் இடையிலுள்ள குன்றுகளும் மலைகளும் காடுகளும் நாடுகளும் அவற்றிடையே வாழ்ந்த மக்களும் ஒருங்கிணைந்து அரசை ஏற்றுக் கொண்டனர்.


"வடாஅது பனிபடு
நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"
விளக்கம்: பனி படர்ந்த, நெடிய இமயத்தை வட எல்லையாகவும், குமரிக் கரையைத் தெற்கு எல்லையாகவும், கீழ்க் கடலை கிழக்கு எல்லையாகவும், மேற்குக் கடலை மேற்கு எல்லையாகவும் கொண்ட பெருநாட்டின் பேரரசன் நீ! நிலம் வான் சுவர்க்கமும் என மூன்றும் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட மூவுலகத்திலும் நிலத்தின் கீழே இருக்கின்ற பாதாளத்திலும் மேலே இருக்கின்ற சொர்க்கலோகத்திலும் பரவிக் கிடக்கும் நின் புகழ் பெரிது! பொருள்களை ஆராயும் துலாக்கோலைப் போல் சரிசமமாய் விளங்கும் உன் முடிவுகள்! நினது படை குடிகளும் சிறக்குமாக! என்று புறநானூற்றில் காரி கியாழர் பாண்டிய மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பற்றி பாடுகிறார்


‘‘கடவுள் நிலைஇய
கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்,
தென்னம் குமரியொடு ஆயிடை, அரசர்
முரசுடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!" - எட்டுத்தொகை
விளக்கம்: சிவபெருமான் வாழ்கின்ற பெரிய இமயமலையை வடக்குத் திசையின் எல்லையாகக் கொண்டனை; தெற்கே குமரி முனையை எல்லையாகக் கொண்டனை. இவைகளுக்கு இடையிலே உள்ள அரசர்களுடைய பல நாடுகளையும், அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவன்’’.என்று பரணர் செங்குட்டுவன் என்கிற முன்னணி பாட்டரி பாடுகிறான்



நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 5, 2018, 1:54:11 AM3/5/18
to mintamil, vallamai, N. Ganesan, Kalai Email, thiruppuvanam

வணக்கம்.


2018-03-03 20:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-03-02 7:41 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> விளக்கம்: சிவபெருமான் வாழ்கின்ற பெரிய இமயமலையை வடக்குத் திசையின் எல்லையாகக் கொண்டனை; தெற்கே குமரி முனையை எல்லையாகக் கொண்டனை. 
> இவைகளுக்கு இடையிலே உள்ள அரசர்களுடைய பல நாடுகளையும், அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய 
> பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவன்’’.என்று பரணர் செங்குட்டுவன் என்கிற முன்னணி பாட்டரி பாடுகிறான்

அன்பின் காளைராசன்,

செங்குட்டுவன் என்ற பெயர் சங்க இலக்கியத்தில் இல்லை.

ஆமாம்.  தாங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் நான் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் இதைக் கண்டேன்.  அதனால் அதை மாற்றாமல் அப்படியே பதிவு செய்தேன்.

TVU

கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற பெயர் குறப்பிடத்தக்கது. ... இவன் கடற் போரிலே வல்லவன்; பெரிய கடற்படை இவனிடம் இருந்தது. ... அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவன்''.



 
கபில பரணர் போன்ற தமிழின் மகாகவிகள் பாடவுமில்லை.
சங்க இலக்கியத்தில் கபிலரும் பரணரும் மிகச் சிறந்த புலவோர். பரணரை “பாடுகிறான்” என்று எழுதவேண்டா.

சங்ககாலம் முடிந்தபின்னர் சமண இலக்கியங்கள் தோன்றுகின்றன. உ-ம்: திருக்குறள், சிலம்பு, பெருங்கதை, ....
சிலப்பதிகாரத்திலே கற்பனையாக ஒரு பாத்திரத்தை இளங்கோ அடிகள் உருவாக்கி (தம் முன்னோன்!)
அவனுக்குச் செங்குட்டுவன் என்று பெயர் சூட்டுகிறார் அடிகள். அவரது வஞ்சி மாநகரருகிலே (சங்க காலத்திலே
இரண்டு வஞ்சி நகரங்கள் இருந்ததாய் எந்தப் புலவரும் பாடவில்லை.) அண்மையில் சுகுமாரன்/துரை சுந்தரத்தால்
பெண்கல்வியை முதலில் போதிக்கும் ஆதிநாதர் பற்றிய சிற்பம் கண்டோம். களப்பிரர் காலக் கலைப்பணி ஆக
இருக்கலாம்:

-------------------------

சிச்சிலிச் சோழியர் ஆண்டான் கவிராயரும், வானரவீரப்புராணத்திலும் கானை (கானப்பேர், அங்கே உள்ள கோவில் காளையார் கோவில்.
கானக் காளை வழிபட்ட தலம். கானக்காளை ஆமா/ஆமான் இனத்தின் காளை. இன்று கானக்காளைகள் அங்கில்லை.)
என்ற பெயர் கண்டேன். நூறாண்டு+ முற்பட்ட கும்பாபிடேகக் கவியிலும்.    கானை, கானைநகர் என காளையார்கோவில் பெயரை
முன்னிலைப் படுத்துங்கள். நன்றி. பாடல்கள் தனி இழையில் தருகிறேன். பழைய திருவிளையாடல், பூவணப்புராணம், பழைய
புலவர் வெண்பா (பெருந்தொகை, உவேசா முன்னுரை), ... இவற்றுடன் சேர்த்தவும்.
மேற்கண்டன எனக்குப் பயனுள்ள தகவல்கள்.  இருப்பினும், இந்த இழையின் தலைப்புடன் தொடர்பு இல்லாத காரணத்தினால் பதில் எழுதாமல் விடுக்கிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைரசான்



"தென்குமரி
வடபெருங்கல் 

குணகுட கடலா எல்லை 

குன்றுமலை காடு நாடு 

ஒன்றுபட்டு வழிமொழிய 

கொடிது கடிந்து கோல் திருத்தி 

படுவ துண்டு பகலாற்றி 

இனிது ருண்ட சுடர் நேமி 

முழுதாண்டோர் வழி காவல்" (புறம்-17)

விளக்கம் : தென்குமரி என்று தென்எல்லை குறிப்பிடப் பெறுகிறது. அப்பொழுது குமரியாற்றெல்லையில் கடல் வரவில்லை. வடபெருங்கல் என்பது இமயம். கிழக்கும் மேற்கும் கடல் எல்லை. இப்பரந்த கண்டத்தில் இடையிலுள்ள குன்றுகளும் மலைகளும் காடுகளும் நாடுகளும் அவற்றிடையே வாழ்ந்த மக்களும் ஒருங்கிணைந்து அரசை ஏற்றுக் கொண்டனர்.


"வடாஅது பனிபடு
நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்"
விளக்கம்: பனி படர்ந்த, நெடிய இமயத்தை வட எல்லையாகவும், குமரிக் கரையைத் தெற்கு எல்லையாகவும், கீழ்க் கடலை கிழக்கு எல்லையாகவும், மேற்குக் கடலை மேற்கு எல்லையாகவும் கொண்ட பெருநாட்டின் பேரரசன் நீ! நிலம் வான் சுவர்க்கமும் என மூன்றும் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட மூவுலகத்திலும் நிலத்தின் கீழே இருக்கின்ற பாதாளத்திலும் மேலே இருக்கின்ற சொர்க்கலோகத்திலும் பரவிக் கிடக்கும் நின் புகழ் பெரிது! பொருள்களை ஆராயும் துலாக்கோலைப் போல் சரிசமமாய் விளங்கும் உன் முடிவுகள்! நினது படை குடிகளும் சிறக்குமாக! என்று புறநானூற்றில் காரி கியாழர் பாண்டிய மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பற்றி பாடுகிறார்


‘‘கடவுள் நிலைஇய
கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமய மாகத்,
தென்னம் குமரியொடு ஆயிடை, அரசர்
முரசுடைப் பெரும்சமம் ததைய ஆர்ப்பெழச்
சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த
போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ!" - எட்டுத்தொகை
விளக்கம்: சிவபெருமான் வாழ்கின்ற பெரிய இமயமலையை வடக்குத் திசையின் எல்லையாகக் கொண்டனை; தெற்கே குமரி முனையை எல்லையாகக் கொண்டனை. இவைகளுக்கு இடையிலே உள்ள அரசர்களுடைய பல நாடுகளையும், அவைகளின் பழமையான அழகு சிதையும்படி அமர் புரிந்து அழித்தாய்; போரிலே வெற்றி பெறக்கூடிய பெரிய சேனைகளையுடைய செங்குட்டுவன்’’.என்று பரணர் செங்குட்டுவன் என்கிற முன்னணி பாட்டரி பாடுகிறான்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Apr 10, 2018, 12:21:26 PM4/10/18
to mintamil, S. Jayabarathan, vannan vannan, Oru Arizonan, vallamai, Kalai Email, thiruppuvanam, naga rethinam
வணக்கம் ஐயா.

தங்களது கட்டுரை தமிழிலில் அருமையாக எளிதில் படித்து அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது ஐயா.  எனது நன்றிகள்.

தங்களது கட்டுரையில் எனக்கு எழுந்த இரண்டு ஐயங்களுக்குத் தாங்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கம் அளித்து என்னைத் தெளிவு படுத்துமாறு வேண்டுகிறேன் 


2017-09-28 21:38 GMT+05:30 S. Jayabarathan <jayaba...@gmail.com>:

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முன்பு இந்தியா ஆசியாவுடன் மோதி இணைந்தது



ஐயம் 1
மேலே உள்ள படத்தில் “இந்தியாவிற்குத் தெற்கே Ocean ridge”  இந்தியத் துணைக்கண்டத்தைத் தள்ளுவது போன்று காட்டப்பட்டுள்ளது.  இதனால்தான் இந்தியத் துணைக்கண்டம் யூரேசியாகண்டத்துடன் மோதி இமயமலை உருவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், கீழே உள்ள Digital Tectonic Activity Map of the Earth படத்தில்  “இந்தியாவிற்குத் தெற்கே Ocean ridge ” ஏதும் காட்டப்பட வில்லை.

எது சரியானது?



​ 

(Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

++++++++++++++++


கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட

கடற் தளத்தின் மேல்

கோல மிட்டுக்

காலக் குயவன் எல்லை வரைந்த

ஓவியப் பீடங்கள்

நடம் புரியும் கடலில் மிதந்து !

நண்டு போல் நகர்ந்து,

கண்டத் தட்டுகள் இங்குமங்கும்

துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும்

கடல் சூழ்ந்திட !

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு

முந்தி இந்தியா

உந்தி நகர்ந்து ஆசியாவுடன்

முட்டிப் படிப் படியாய்

எட்டாச் சிகரமாய் வளர்ந்துள்ளது

இமய மலை !

+++++++++++++

Fig 1A Ages of Plates

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JmC-vjQGSNM

[Plate Tectonics]

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=L8CT3UHp0IE

[The Formation of Himalayas]

+++++++++++++

“இந்திய உபகண்டம் 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்தி வெகு வேகமாக ஆசியக் கண்டத்தை நோக்கி வந்து மோதியது. ஆனால் அப்படி இந்தியா மோதியது ஒரு தடவை மட்டுமில்லை. [பலமுறையாக இருக்கலாம்]. இந்த முடிவு இமயமலை எவ்விதம் ‘நகர்கிறது என்னும் யூகிப்பைப்’ பெருமளவில் மாற்றப் போகிறது. புகழ் பெற்ற அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonic Movement] பற்றிய கால யுகம் இந்த முடிவால் மாற்றம் அடையும். இந்திய உப கண்டம் ஆண்டுக்கு 10 செ.மீ. [4 அங்குலம்] நகர்கிறது. 10 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு 1000 கி.மீடர் [600 மைல்] நகர்ந்திருக்கும். புவி & அண்டக் கோள் விஞ்ஞான இதழில் [Earth and Planetary Science Letter] இந்த அரிய, புதிய விளைவுகள் வெளியிடப் படும். ”

ஆலிவர் ஜொகட்ஸ்  [Oliver Jagotz]  [Boston MIT Assistant Professor of Geology]

‘450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாராப் பாலையின் மீது துருவப் பனிக்கூண்டு [Polar Ice Dome] படிந்து கிடந்தது. அதை மெய்ப்பிக்க அல்ஜீரியா பாலைவனத்தில் பனிப்பாறை செதுக்கிய கற்பாறைகள் இப்போதும் பிழைத்திருப்பதை காணலாம். பூர்வக் காந்தத்தைச் [Paleo-magnetism] சோதிக்கும் போது அல்ஜீரியா பகுதி ஒருகாலத்தில் தென்துருவத்தில் பனிமூடிக் கிடந்திருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. அல்ஜீரியா பகுதி இப்போது பூகோளத்தின் வளைவில் பெயர்ச்சியாகி 8000 மைல் தூரம் வடக்கே நகர்ந்துள்ளது.

250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆஃபிரிக்காவின் ஸகாரா பாலைவனம் தென்துருவத்தில் இருந்து பனிப்பாறையால் மூடியிருந்த காலத்தில், பூமத்திய ரேகை வட அமெரிக்காவின் மத்தியப் பகுதி வழியாகச் சென்றிருக்க வேண்டும். குளிர்ப் பிரதேசங்களான ‘அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்கள் அந்த யுகத்தில்தான் தோன்றி யிருக்க வேண்டும்’.

டாக்டர் ரோட்ஸ் ஃபேர்பிரிட்ஜ்கொலம்பியா பல்கலைக் கழகம்.

 Fig Continents Drifts

முன்னுரை: பிரபஞ்சத்தின் அண்டங்கள், பஞ்ச பூதத்தின் அங்கங்கள், உலகத்தில் வாழும் உயிரினங்கள் எல்லாம் சக்தி மயத்தால் முறையே ஓர் ஒழுக்க நியதியைப் பின்பற்றி இயங்கினாலும், அவற்றின் இயக்கத்திலும் வடிவத்திலும் தொடர்ந்து மாறுபாடுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளை நோக்கும் போது, பிரபஞ்ச நியதிகள் முற்றிலும் சீரானவை என்றோ அல்லது முழுவதும் சீரற்றவை என்றோ அழுத்தமாகச் சொல்லமுடியாது. ஆனால் நமக்குத் தெரிந்த பிரபஞ்சக் கோட்பாடு களைச் [Laws of the Universe] ‘சீரற்ற ஒழுங்கு நியதிகள் ‘ [Disorderly Order Hypothesis] என்று இரண்டு முரண்பாடுகளையும் இணைத்து நாம் ‘விளக்கம்’ சொல்லலாம்!

விளக்கத்தை அறிவியல் நிரூபணமாகக் கொள்ளமுடியுமா? 

அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வட முனையில் பிளக்கப் போகிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம் அடித் தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன! ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

Fig 2 Major Plates

நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்திய உபகண்டம் வடதிசை நோக்கி நகர்ச்சி

பாஸ்டன் மாஸ்ஸெசுஸெட்ஸ் தொழில் நுணுக்கக் கூடத்தின் விஞ்ஞான வல்லுநர்கள், இந்தியா ஆசியா வுடன் முட்டி மோதிய  அடித்தட்டு நகர்ச்சி 40 மில்லியன் ஆண்டுகட்கு முந்திதான் நிகழ ஆரம்பித்தது என்று   இப்போது கண்டு பிடித்துள்ளார்கள்.   இதுவரை 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு என்று கணிக்கப் பட்டிருந்தது.   சமீபத்தில் இமய மலைச் சரிவுகளில் தேடி அறிந்த மூலக / மூலக்கூறு உலோகச் சான்று களை வைத்து அந்த நிகழ்ச்சி 10 மில்லியன் ஆண்டுகட்குப் பிந்தி [50-10=40] நேர்ந்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்கள்.   விஞ்ஞானிகள் ‘இமயமலைத் தொடர்களில் தற்போது  இரண்டு வெவ்வேறு அரங்குகளில்’ எடுத்த மாதிரிப் பாறைகளை  ஆராய்ந்ததின் விளைவுகள்தான் இந்த முடிவை வெளியிட ஆதாரமாக இருந்துள்ளன.

இப்போது நாம் காணும் இந்தியா 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு சிறிய பரப்புள்ள  உபகண்டமாய் இருந்திருக்கும். இந்தியாவின் எத்தனை வடபுறப் பரப்பளவு யுரேசியக் கண்டத்தின் அடியிலே நகர்ந்துள்ளது என்று அறிந்து கொள்வது கடினம். ஆனால் இந்திய அடித்தட்டு எந்த வேகத்தில் நகர்கிறது என்று நுட்பமாய்த் தெரிவதிலும், எப்போது ஆசியத் தட்டுடன் மோதியது என்று தெரிவதின் மூலமும் ‘விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்’. இமயத்தின் பல்வேறு சிகரங்கள் அவற்றின் கீழியங்கும் பூதப் பெரும் அடித்தட்டு நகர்ச்சி விசைகளால் எழுப்பப் பட்ட கோபுரங்களே.

Fig 1 North America's Shaping

முந்தைய கணிப்புகளின்படி இந்திய-யுரேசிய மோதல் விரைவான வேகத் தாக்குதல் ஏற்பட்டது சுமார் 50 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு நேர்ந்ததாகக் கருதப் பட்டது. இடையில் தூளாக்கப்பட பாறைகளே பிறகு இமயமலைச் சிகரமாக உயர்ந்தன ‘என்பது மாதிரி ஆதாரங்களை வைத்து ஊகிக்கப்படுகிறது’. இந்தப் பேரளவு மோதலே அடித்தட்டு நகர்ச்சி தாக்கங்களில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ச்சியாக கருதப் படுகிறது. அந்த அசுர மோதலில் பெரும்பான்மையான ‘இந்தியப் பகுதி யுரேசியத் தட்டின் கீழ் புகுந்துவிட்டது என்று ஊகிக்கப் படுகிறது’. 

(கருத்து 1) 

இந்திய-யுரேசிய மோதலை உறுதியாகத் தெரிந்து கொள்ள அதுபோல் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கடந்த 2 மில்லியன் ஆண்டுகளாக ஆஸ்திரேலியக் கண்டத்தின் அடித்தட்டு அருகில் உள்ள “சுந்தா வளைவு” [Sunda Arc] என்னும் பற்பல தீவு மந்தைகளைத் மோதி வருகின்றன. அந்த மோதல்களை ஆராய்ந்து, முந்தைய இந்திய மோதல்கள் எப்படி நேர்ந்தன என்று கண்டறிந்தனர்.

Fig Zigzaw Puzzle

Half Globe

வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடீரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

‘கடற்தளங்கள் நீட்சியைக் கண்டுபிடித்து விளக்குவது நம் கையில்தான் இருக்கிறது. மைய அட்லாண்டிக் பிறழ்ச்சிப் பீடத்தின் இருபுறமும் உள்ள கடற்தளம் ஆண்டுக்கு சுமார் ஓரங்குல நீளம் நகர்ந்து கொண்டு வருகிறது. கடற்துளையில் எடுத்த மாதிரிகள் வடிகால் புழுதி.க்கும், அடிக்கடற் பாறைக்கும் இடையில் உள்ள எல்லையைக் காட்டின. அத்துடன் அவை எத்துணை இளைய பருவத்தை உடையவை என்று வயதைக் காட்டி, அடிக்கடல் பூர்வப்படிவங்கள் [Undersea Basement Fossils] வெஜினரின் [Alfred Wegener (1880-1930] மகத்தான கண்டங்களின் புலப்பெயர்ச்சி நியதியை மெய்ப்பித்தது ‘.

டாக்டர் ஆர்தர் மாக்ஸ்வெல் [Co-Leader, Wood Hole Oceanographic Institution]

‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம்,.. நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக உப்புக் கலவைப் பொருள் மிகையாகக் கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலை ஜிப்ரால்டர் பெரு மலைத்தொடர் மறைத்து, ஒருசில நதிகள் மட்டும் சேரும் மத்திய தரைக் கடல் வெள்ளம் அனைத்தும் ஆவியாகப் போனது. கப்பலின் துளைக்கருவி வெகு ஆழத்தில் தோண்டிப் பார்த்ததில், பல பகுதிகளில் பாலைவன வெப்பத்தில் காய்ந்துபோன ஆயிரக் கணக்கான அடி உயர உப்புக் குளங்களும், ஏரிகளும் காணப்பட்டன ‘.

டாக்டர் வில்லியம் ரயான், [Glomar Challenger Deep Sea Exploration (1970)]

அட்லாண்டிக் பெருங்கடல் மெதுவாக அகன்று வருகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது! ஆனால் பசிபிக் பெருகடல் மெதுவாகக் குறுகிக்கொண்டு வருகிறது! ஈரோப்பில் இருக்கும் ஆல்ஃப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆஃப்பிரிக்கா செங்கடல் வடமுனையில் பிளக்கப் போகிறது!

இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டம்  அடித்தட்டுக்கு மேல் புகுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகை யாக்கிய வண்ணமா யிருக்கின்றன!...

(கருத்து 2) 

ஐயம் 2
கருத்து 1 ஊகிக்கப்படுகிறது என்றும்,
கருத்து 2 இருக்கின்றன என்று ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதில் எது சரி?

ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!

வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் மெல்ல மெல்ல நகர்ந்து இடைவெளியை அகலமாக்கி வருகின்றன! அமெரிக்காவில் காலிஃபோர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது! மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பீடம் [Mid-Atlandic Tectonic Plate Ridge] குறுக்கே வெட்டிச் செல்லும் ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் திடாரென எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது!

தென்துருவத்தில் இருக்கும் அண்டார்க்டிகாவில் முதலில் 1967 ஆண்டிலும், அடுத்து 1969 ஆண்டிலும் நெடுத்தொடர் மலைகளின் [Transantarctic Mountains] பனிபாறைகளில் டைனோசார்ஸ் காலத்திய நிலத்துறை விலங்குகளின் பூர்வப்படிவத் துணுக்குகளைக் [Fossil Fragments of Land Creatures] கண்டுபிடித்து, அமெரிக்க தேசீய விஞ்ஞான அறக்கூடம் [National Science Foundation] உளவு செய்தது. அந்த மாதிரிகளில் ஒன்று செம்மறி ஆடு போல் ஊர்ந்திடும் விலங்கான லிஸ்டிரோசாரஸ் [Lystrosaurus]. அண்டார்க்டிகாவில் முதன்முதல் கண்டுபிடிக்கப் பட்ட முதுகெலும்புள்ள பூர்வ மூலப்படிவம் [Index Fossil] அந்த விலங்கு. அந்த விலங்குகள் ஆஃபிரிக்கா, இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் 180-225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக அறியப்படுகின்றன.

குலோமர் சாலஞ்சர் கப்பலின் கடற்தள உளவுப் பயணம்:

1968 ஆம் ஆண்டில் ‘ஆழக்கடல் துளை தோண்டுத் திட்டம் ‘ [Deep Sea Drilling Project] என்று பெயர் பெற்ற மாபெரும் கடற்தட்டு உளவுப்பணி ஆரம்பிக்கப் பட்டது. குலோமர் சாலஞ்சர் கப்பல் காலிஃபோர்னியா கடற்தள ஆயில் துளைக் கம்பெனி [California Offshore Oil Drilling Co. Global Marine Inc] தயாரித்தது. கடற்தளப் பாறைகளில் 20,000 அடி ஆழத்தில் துளையிட்டு மாதிரிகளைக் கொண்டுவந்து சோதிப்பதே அதன் முக்கியப் பணி. தேசீய விஞ்ஞான அறக் கட்டளை [National Science Foundation] வழியாக அமெரிக்க மைய அரசு உளவுக்கு நிதிக்கொடை அளித்தது. அப்பணிகளைச் செய்தவை அமெரிக்காவின் பூதள ஆய்வுக் கூட்டு நிறுவகங்கள் [JOIDES Gruop (Joint Oceanographic Institutions for Deep Earth Sampling)].

குலோமர் சாலஞ்சர் கடற்துளைக் கருவி 1968 ஆம் ஆண்டு போட்ட முதல் துளையில் மெக்ஸிகோ வளைகுடாவில் 12,000 அடி ஆழத்தில் நுழைந்து பெட்ரோலியம் கச்சா ஆயில் இருப்பதைக் கண்டுபிடித்தது! இதுவரைக் கடலில் இத்தனை ஆழத்தில் ஆயில் ஒளிந்துள்ள தென்று யாரும் ஊகித்தது கூட இல்லை! மூன்றாவது துளையை அட்லாண்டிக் கடற்தளத்தில் தோண்டி, அட்லாண்டிக் கடல் மெய்யாக அகன்று வருகிறது என்று கண்டு பிடித்தது. 1968 ஆண்டு இறுதியில் ஆஃபிரிக்காவின் மேற்திசையில் சென்று, மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடத்தின் தென்புற மிருந்து துவங்கி இருபுறமும் தொடர்ந்து துளைக்கு மேல் துளையிட்டு மாதிரிகளைச் சோதித்து மகத்தான கடற்தட்டு மெய்ப்பாடுகளைக் கண்டு பிடித்தது.

குலோமர் கப்பல் நான்கு வருடங்களாகப் பணி செய்து சுமார் 400 துளைகளைக் கடற் பாறைகளில் தோண்டி பல அரிய புதிய பூகோளச் செய்திகளைக் கூறி யிருக்கிறது. உலகக் கண்டங்களை விட, கடற்தளங்கள் இளைய காலத்தவை என்று கண்டுபிடித்துள்ளது’ பூர்வ வடிகால் புழுதிகள் [Oldest Sediments] 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் உண்டாகி யிருக்கின்றன என்று கண்டுள்ளது.

அதற்கு முரணாகச் சமீபத்தில் உளவிய கிரீன்லாந்தின் பாறைகள் சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று காட்டி யுள்ளது. பூகோள விஞ்ஞானிகள் தற்போது பூமியின் முழு வயதை 4.5 பில்லியன் ஆண்டாகக் கணிக்கிறார்கள். ஆனால் பூகோளக் கடற்தளத்தின் வயதை சுமார் 180 மில்லியன் ஆண்டாகத்தான் மதிப்பிடுகிறார்கள்.

1970 இல் குலோமர் கப்பல் ஆய்வாளர்கள் ஆஃபிரிக்கா கண்டம் வடதிசை நோக்கி மெதுவாக நகர்ந்து, மத்தியதரைக் கடல் அகலத்தைக் குறுக்கி வருகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். அந்த நகர்ச்சியால் கடற்தட்டுகள் பிறழ்ந்து, எப்போதாவது ஸிசிலியில் உள்ள எட்னா சிகரத்தில் [Mount Edna, Sicily] எரிமலைக் குமுறலையும், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கத்தையும் உண்டாக்குகின்றன! படிப்படியாக அழுத்தி மத்தியதரைக் கடற்தட்டு மடங்கி ஆல்ஃப்ஸ் மலைத் தொடரை உயர்த்திக் கொண்டே போகிறது என்றும் கூறி யிருக்கிறார்கள்!

சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி:

இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்திருக்கும் சுமாத்திர நிலநடுக்கப் பழுது [Sumatran Fault] சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பனிரெண்டு நாட்டுக்குக் கடற்கரை நகரங்களைத் தகர்த்து விட்டது.

நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச்செய்த கடற்தள முறிவின் நீளம்: சுமார் 700-800 மைல், அகலம்: 60 மைல்! அதாவது 48,000 சதுர மைல் [800×60] பரப்பும், பல ஆயிரம் அடி ஆழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறைக் குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன! அபார ஆற்றல் கொண்ட அந்த அசுர நிலநடுக்கத்தைத் தூண்டிய கடற்தட்டுப் பிறழ்ச்சிப் பழுது [Plate Tectonic Fault] சுமாத்திரா பழுது! பல்லாண்டு களாக இக்கடற்தட்டுப் பழுது எண்ணற்ற நிலநடுக்கங்களை உண்டாக்கியுள்ள பூகம்பத் திடலாக இருந்து வருகிறது. 1833 ஆம் ஆண்டில் அதே பழுதுத் தொடரில் மிகப்பெரும் பூகம்பம், Mw:9 [Mercalli Scale] அளவு நிர்ணயத்தில் எழுந்து பேரழிவு செய்துள்ளது..

சுமாத்திரா தீவு 1100 மைல் நீளமும், 250 மைல் அகலமும் கொண்டது. தீவுக்கு மேற்கே 180 மைல் தூரத்தில் அதன் முழு நீளத்திற்கும் இணையாக, ஒரு பயங்கர நில அதிர்வுப் படுகுழி காணப் படுகிறது. சுமாத்திரா பூகம்ப பழுதுக்குழி [Sumatran Fault Trench] குமுறிக் கொண்டிருக்கும் உலகக் கடற்தளப் பிறழ்ச்சிக் குழிகளிலே மிகப் பெரியது. அன்னத்தின் கழுத்துபோல் வளைந்த அந்தப் பூகம்ப பழுது 1100 மைல் நீண்ட தாக தீவுக்கு இணையாகக் கடற்தளத்தில் தோன்றி யிருக்கிறது. கடற்தட்டுத் திணிப்பால் [Ocean Plate Subduction Process] வளர்ந்திருக்கும் சுமாத்திராவின் மலைத்தொடரும், பழுதுக் குழிக்கு இணையாக மலைப் பாம்புபோல் படுத்துக் கிடக்கிறது!

Fig Drift Maps

மெஸோசாயிக் யுகத்தின் [Mesozoic Era] ஆரம்ப காலத்தில், அதாவது 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குமுறிக் கொண்டிருந்த கடற்தட்டுத் திணிப்பு அரங்கத்தில் [Subduction Zone], சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. அந்த நாட்டிய அரங்கம் சுமாத்திரா தீவு போல் இணை யாகச் சாய்ந்த கோணத்தில் நீண்டு வளைந்துள்ளது. பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாகக் கடற்தட்டுத் திணிப்பால் உண்டான கருங்கல் குன்றுகளில் மாதிரிகளை எடுத்து ஆராய்ந்ததில் கீழிருக்கும் கடற்தட்டின் உயர அளவுகளையும், பண்புகளையும் கண்டிருக் கிறார்கள்.

அவை யாவும் திணிப்பைச் சார்ந்த கருங்கல் வகையான, நிலநடுக்கத் தன்மை கொண்ட கால்க்-ஆல்கலைன் ரகத்தைச் [Subduction Related I-type, Volcanic Arc, Calc-Alkaline type] சேர்ந்தவை. கருங்கல் மாதிரியில் உள்ள ஸ்டிராஞ்சியம் ஏகமூலத்தின் ஆதி விகிதத்தை [Strontium Isotope Initial Ratio] உளவு செய்தால், திணிப்புத் திடல் கலந்துள்ள பூதளக் குழம்பின் மேற்தட்டு பகுதியைச் [Magmas from Upper Mantle with Subduction Contamination] சேர்ந்ததாக அறியப் படுகிறது.

ஆர்கான் ஏகமூலங்கள் [Ar40-Ar39 Dating], ருபீடியம், ஸ்டிராஞ்சியம் கதிரியக்கத் தேய்வு காலத்தை [Rubidium-Strontium (Rb-Sr) Dating] ஆராய்ந்து, சுமாத்திரா குன்றுகளின் கருங்கல் மாதிரிகளின் வயதைக் காண முடிந்தது. கருங்கற்கள் 5.5 முதல் 192 மில்லியன் ஆண்டு வயதுகளைக் கொண்டிருந்தன. [Sulit Granite: 192 Ma], [Lassi Pluton: 52 Ma], [Lolo Pluton: 12 Ma], [Sungaipenuh Granite: 5.5 Ma] [Ma (Million Years Ago)]. சுமாத்திரா பாறைகளில் காந்தசக்தி ஜுராஸிக் யுகத்தின் [Jurassic Era] ஆரம்பத்தில் சுமார் [193-15 Ma] மில்லியன் ஆண்டுகளுக்கு இடையிடையே ஏற்பட்டுள்ளது என்பதும் அறியப்பட்டது.

Fig Satellite Monitoring1

கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்:

உலகிலே உண்டாகி யிருக்கும் தீவுகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. கண்டத் தீவுகள். 2. கடற் தீவுகள். கண்டத் தீவுகள் [Continental Islands] என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்ட மான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் [Fauna & Flora, Species] பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் [Endemic Species] அங்கு இருப்பது அபூர்வந்தான்.

கடற் தீவுகள் [Ocean Islands] என்றால் என்ன ? பூமியின் உட்கருவிலிருந்து கடற்தளத்தில் துளையிட்டு எரிமலைகள் சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகிய வற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். கண்டங்களை ஒட்டாமல், கண்டங்களுக்கு அப்பால் உண்டானவை இத்தீவுகள். மைய அட்லாண்டிக் பிறழ்ச்சித் தட்டுக் கடற்பீடம் குறுக்கே செல்லும் ஐஸ்லாந்தில் உள்ள சூர்ட்ஸி [Surtsey, Iceland] என்னும் தீவு 1963 நவம்பர் 14 இல் வட அட்லாண்டிக் கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத் தோன்றியது! அத்தீவுகள் எப்போதும் ஒரு பெருங் கண்டத்துடன் பிணைக்கப் படுவதில்லை. செடி, கொடிகள், விலங்கினங்கள் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட வேண்டும். கடல்மீது வந்த தாவர இனங்கள், விலங்கினங்கள் மட்டுமே அத்தீவுகளில் பிழைத்திருக்க முடியும். நிலப் புதுநீரில் வளரும் மீனினம் போன்ற பலதரப்பட்ட உயிர் ஜந்துகள் அந்த தீவுகளில் கிடையா. கண்டத்திற்கு அப்பாலிருக்கும் கடற்தீவுகளில் புத்தின ஜந்துகள் வளர்ச்சிக்கு மையமாக [Centres of Speciation]

இருக்கின்றன. குறிப்பிட்ட இடவிருத்தி ஜந்துகள் [Endemic Species] வளர இத்தீவுப் பகுதிகளின் சூழ்நிலைகள் உதவுகின்றன.

கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம்

1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து, இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில், தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக் கிறார்கள். முதலாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். அத்திட்டம் ஏனோ 1960 ஆண்டுக்குப் பிறகு தொடரப்பட வில்லை! 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அரபிக் கடலுக்குத் தெற்கில், லட்சத் தீவுகள் நீட்சியில் மால்டிவ் தீவின் வடக்குப் பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த [கி.மு.8000] பனி யுகத்தின் போது [During the Ice Age] இந்து மாக்கடலில் கடல்நீர் மட்டம் குன்றிக் குமரிக் கண்டம் முழுவதும் புறத்தே தெரியும்படி மேலாக உயர்ந்திருந்தது.

பனி யுகத்தில் எங்கோ பனி திரண்டு நீர் சுண்டிப்போய் உலகெங்கும் கடல் மட்டநீர் தணிவாக இருந்தது. அப்போது உலகத்தில் கண்டங்கள், தீவுகள் பல பகுதிகளில் பிணைந்திருந்தன! ஐரோப்பாவுடன் இங்கிலாந்து, பிளாரிடாவுடன் கியூபா தீவு, ஆஸ்திரேலியாவுடன் பப்பா நியூகினி தீவு, தமிழகத்துடன் இலங்கைத் தீவு, சுமாத்திரா ஜாவா போர்னியோ தீவுகள் தென் கிழக்காசியாவின் பெருந்தளத்துடன் இணைந் திருந்தன என்று கருதப்படுகிறது! இலங்கை தமிழகத்துடன் இணைந்திருந் ததற்கு, இப்போதும் தெரியும் தணிவாக உள்ள கடல்மட்ட நீர் நிலையே சான்றாக இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்து வால்மீகி முனிவர் எழுதிய இராம கதையில், அனுமார் படையினர் பாறாங் கற்களைக் கொண்டு வந்து, ஈழத்தின் தணிந்த கடற்தள மீது கற்பாலம் கட்டிக் கடந்திருப்பது அறியப்படுகிறது. பனியுகம் மாறி வெப்பம் மிகையான காலத்தில் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டம் மெதுவாக படிப்படியாக உயர்ந்து குமரிக் கண்டம் மூழ்கிப் போயிருக்கலாம் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது. அதன் விளைவில் குமரிக் கண்டம் சிதறி ஆஃபிரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை உள்ள மடகாஸ்கர், லட்சத் தீவுகள், அந்தமான் தீவுகள், இந்தோனியாவின் தீவுகள் போன்றவை பிரிவு பட்டன என்று ஒரு சாரார் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘லெமூரியா கண்டம் ‘ [Lemuria Continent] இந்து மாக்கடல் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் 19 ஆம் நூற்றாண்டு பூதளவாதி பிலிப் ஸ்கிலேட்டர் [Geologist, Philip Sclater]. விக்டோரியன் டார்வின் நியதியைப் பின்பற்றுவோர் மடகாஸ்கர் தீவில் மட்டும் தனித்து வாழும் லெமூர் குரங்குகளை [Lemurs] எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். அவற்றின் பூர்வப்படிவப் பிரதிகள் [Fossils of Lemurs] ஆஃபிரிக்காவிலும், தென் கிழக்காசியாவிலும் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஜெர்மன் டார்வின்வாதியான ஏர்னெஸ்ட் ஹேக்கல் [Ernst Haeckel] ஆதி லெமூரியாவின் உயிர் மூலவிகள் [Genes] யாவும் இந்து மாக்கடலில் மூழ்கி மடிந்ததால் காணாமல் போயின என்று கூறியதை எடுத்துக் கொண்டு பிலிப் ஸ்கிலேட்டர் லெமூரியா கண்டம் (குமரிக் கண்டம்) ஒன்று ஆங்கே இருந்திருக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

++++++++++++++++++++++++++

From:  http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamilnadu, in 1991 … [produced] the following timeline …:

ca. 200,000 to 50,000 BC: evolution of “the Tamilian or Homo Dravida”, ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language 50,000 BC: Kumari Kandam civilisation 20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation 16,000 BC: Lemuria submerged 6087 BC: Second Tamil Sangam established by a Pandya king 3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Tamilnadu. 1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king 7th century BC: Tolkappiyam (the earliest extant Tamil grammar)… [Link]

+++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

தகவல்

1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10  Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25. http://www.sepiamutiny.com/sepia/archives/004456.html  (May 22, 2007)

26. http://www.crystallotus.com/Lemuria/04.htm

27.  http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent) [July 3, 2011]

28.  http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam [July 7, 2011]

29.  India Joined with Asia 10 million years later than previouly thought By:  Jennifer Chu, MIT News Office, Boston, MA [February 14, 2013]

30. http://en.wikipedia.org/wiki/Continental_drift  [February 15, 2013]

31. http://education.nationalgeographic.com/education/encyclopedia/continental-drift/?ar_a=1

32.  https://mail.google.com/mail/?ui=2&shva=1#all/13d12f58198ec527  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

33.  http://www.huffingtonpost.com/2013/02/25/lost-continent-mauritia-found-indian-ocean_n_2759797.html  [Long-Lost Continent Found ? Fragments Of ‘Mauritia’ May Be Buried Beneath Indian Ocean]

 

**********************

jaya...@tnt21.com [S. Jayabarathan (February 16, 2013) [R-2]

https://jayabarathan.wordpress.com/

Reply all
Reply to author
Forward
0 new messages