திருச்செந்தூர் கடற்கரையோரம் உள்ள பாறைகள் தெற்குத் திசை நோக்கிப் பெயர்ந்து இருப்பதற்கான காரணம் என்ன? திருவிளையாடற் புராணத்தில் பிரளயம் (சுனாமி) பற்றிய குறிப்புகள் உள்ளன.
“கொதித்து எழுந்து, தருக்கள் அறக் கொத்தி எடுத்து, எத்திசையும் அதிர்த்து எறிந்து, வரைகள் எல்லாம் அகழ்ந்து, திசைப் புறம் செல்லப் பிதிர்த்து எறிந்து, மாடநிரை பெயர்த்து எறிந்து, பிரளயத்தில் உதித்து எழுந்து வருவது என ஓங்கு திரைக் கடல் வருமால் (சுனாமி) “ என்கிறது திருவிளையாடற் புராணம்.
மதுரைக்குத் தெற்கே திருச்செந்தூரில் உள்ள கடற்கரை ஓரம், “வரைகள் அகழ்ந்து மாடநிரை பெயர்த்து“ உள்ள பாறைகளைக் காணமுடிகிறது. வங்கக் கடலில் பிரளயம் தோன்றி கடல்வெள்ளம் மதுரையை மையப்படுத்திப் பண்டைய தமிழகத்தை அழித்துள்ளது. அப்போது ஏற்பட்ட கடல்வெள்ளம் (சுனாமி) இலங்கையைத் தாக்கித் திசைதிரும்பியுள்ளது. அதனால் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று, சுனாமியானது திருச்செந்தூரைத் தெற்குத் திசையிலிருந்து தாக்கி அழித்துள்ளது. எனவே திருச்செந்தூரில் கடற்கரையோரம் உள்ள மணற்பாறைகள் தெற்குதிசை நோக்கிப் பேர்த்து எழுந்துள்ளதைக் காண முடிகிறது.
திருச்செந்தூரில் உள்ள இந்தப் பாறை தெற்குதிசை நோக்கிப் பேர்ந்து உள்ளதற்குக் காரணமாகக் கட்டுரையாளர் கூறும் கருத்துகள் அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட வேண்டியுள்ளன.
அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்,