வணக்கம்.
கீழே உள்ள படங்களில் மியான்மார் நாட்டில் தட்டோன் என்ற ஊரில் தொல்லியல்துறையினாரால் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் கீழடியில் உள்ளது போன்றே மண்படிமங்களைக் காண முடிகிறது.
படங்களை இணைத்துள்ளேன்.
இதனால் கீழடி அழிந்த பிரளய காலத்தில் ஏற்பட்ட சுனாமியினால்தான் தட்டோனும் அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.
புவியியல் அறிஞர்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
அன்பன
கி. காளைராசன்
வணக்கம்.
Tsunami deposits south of Valdivia
http://quakehunters.blogspot.in/2013/01/fieldwork-so-far-in-pictures.htmlமேலே உள்ள படத்தில் தென்னமெரிக்காக்காவில் உள்ள வால்திவ்ய (Valdivia) வில் உள்ள மண்படிமங்கள் சுனாமியினால் உண்டானது என்று காணமுடிகிறது.கீழே உள்ள படங்களில் மதுரைக்கு அருகே கீழடியில் இந்தியத் தொல்லியல்துறையினாரால் தோண்டப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மண்படிமங்களைக் காண முடிகிறது.
திருவிளையாடற்புராணம் 11ஆவது படலத்தில் சுந்தர பாண்டியனின் (சோமசுந்தரேசுவரரின்) மகன் உக்கிர குமாரனின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்த ஆழிப்பேரலை(“சுனாமி”) வந்தது என்றும், அதை வேல் எறிந்து உக்கிரபாண்டியன் தடுத்து நிறுத்தினான் என்று ஒரு குறிப்பு உள்ளது.மேலும, 17ஆவது படலத்தில் அதுலகீர்த்தி பாண்டியனின் பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் பேரூழி ஏற்பட்டு கடல் பொங்கி(“சுனாமி”) மதுரையை முற்றிலும் அழித்துள்ளது என்ற ஒரு குறிப்பு உள்ளது.வால்திவ்ய( Valdivia) வில் காணப்படும் மண் அமைப்பு சுனாமியினால் உண்டானது என்று கூறப்படுவதாலும், அதே போன்ற மண் அமைப்பு கீழடியிலும் காணப்படுகின்ற காரணத்தினாலும், திருவிளையாடற்புராணத்தில் மதுரையைச் சுனாமி அழித்ததாகக் குறிப்புகள் இருக்கின்ற காரணத்தினாலும் கீழடியானது சுனாமியினால்தான் அழிந்துள்ளது என்று கருதுகிறேன்.புவியியல் அறிஞர்கள் அன்புள்ளம் கொண்டு விளக்கி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.அன்பன்கி.காளைராசன்--
தட்டோண், யென்னின் முதலான சில ஊர்களில் bedding அமைப்பிலான மண் படிவங்களைக் காண முடிந்தது.
படங்களை இணைத்துள்ளேன்.
இதனால் பிரளய காலத்தில் மணவூர் அழிந்தது போன்றே மியான்மார் தேசமும் அழிந்து இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
அன்பன்
கி. காளைராசன்
பார்வை :
http://www.chiemgau-impact.com/wp-content/uploads/2015/11/71.png