திருவள்ளுவரின் தீய குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்கிறார் ஆண்டாள்: சங்கராச்சாரியார்.

997 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 25, 2017, 2:54:52 AM2/25/17
to மின்தமிழ்

திருப்பாவை – பாடல் 2 விரதமுறை

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம் ; நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் ; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம் ; தீக்குறளை சென்றோதோம் ;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்!

பாடல் விளக்கம்:
ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.



இப்பாடலுக்கு விளக்கமளிப்பதன் மூலம், 
திருக்குறளின் மீது தனக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்திய சங்கராச்சாரியார் பற்றிய ஒரு பதிவு  தொடர்கிறது ...

தெய்வத்தின் குரலா? அபஸ்வரமா?



        ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை இரண்டாம் பாசுரத்தில் “வையத்து வாழ்வீர்காள்!” பாடலின் ஆறாம் அடியில்தீக்குறளை சென்றோதோம்“ என்று வருகிறது. 1963ல் காஞ்சி பெரியவாள் என அழைக்கப்படும் சங்கராச்சாரியார் அவர்கள் ஜூன் மாதம் மதுரையில் திருக்குறள் பற்றி பேசுகையில் திருப்பாவையில் தீய திருக்குறளை படிக்கமாட்டோம்” என ஸ்ரீஆண்டாள் குறிப்பிடுவதாக தெரிவித்த கருத்து தமிழ் அறிவு ஜீவிகளிடையேயும் சாமான்ய மனிதர்களிடையேயும் குழப்பத்தினையும், சர்ச்சையையும் உண்டாக்கியது. அதாவது  ச்  சேர்த்து திருப்பாவை வரியை பெரியவாள் குறிப்பிட்டது திருக்குறளுக்கு எதிராக திருப்பாவை உள்ளது போல் எண்ண வைத்தது. பெரியவாள் செய்தது இதுதான்தீக்குறளைச் சென்றோதோம் என திருப்பாவை வரியை மாற்றியது. தீக்குறளை சென்றோதோம் என்றே திருப்பாவை 2வது பாசுரத்தின் ஆறாவது அடியில் உள்ளது.  தீக்குறள் என்பதற்கு பொருள் கோள்  சொல்லமாட்டோம்” அதாவது பிறருக்கு தீங்கு உண்டாக்கும் வகையிலான பொய் சொல்லமாட்டோம்”  என்பதே பொருள்.

        இதுகுறித்து  ஸ்ரீவைஷ்ணவ ஸூதர்சனம் மாத இதழ்,  (சோதி 16 ஒளி-12)ல் தலையங்கம் தீட்டி தன் கண்டனத்தினை பதிவு செய்திருந்தது. குமுதம் இதழ் 21-11-1963 தலையங்கத்தில் பெரியவாளின் கருத்துக்கு மறுப்பையும் தன் வருத்தத்தினையும் தெரிவித்திருந்தது. வேடிக்கை என்னவெனில் பிரபல பத்திரிகை குமுதம்” கூட  ச்  சேர்த்ததை உணராமல் தீக்குறளைச் சென்றோதோம் என பீடாதிபதி சொல்லி திருக்குறளுக்கு எதிராக திருப்பாவையைப் பற்றி பேசும் படி வைத்தது தவறு என மட்டும் பதிவு செய்திருந்தது.

        குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய பீடாதியின் விளக்கம் 5/12/63 குமுதத்தில்...  பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன்அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட் பெருமையை உணர்த்துவதற்குத்தான். என்று பெரியவாள் தன் நிலையை விளக்கியிருந்தார்.

        திருக்குறளை தாழ்வுபடுத்தவில்லை என்பதை விவரித்த பெரியவாள், திருப்பாவைக்கு தான் உணர்த்திய  பொருள் தவறு என, தன் விளக்கத்தில் ஒப்புக் கொள்ளவில்லை வருத்தமும்  தெரிவிக்கவில்லை. மேலும், 5/12/63 குமுதம் இதழில் பெரியவாள்தீக்குறள் என்னும் பதத்திற்கு இனிமையான குறள் என்று பொருள் கூறுகிறார், அதுவும் பிழை. அப்படி பொருள் கொள்ளவேண்டுமெனில் தீந்தமிழ்”,  “தீஞ்சுவை” என்பது போல தீங்குறள்  என்றே இருக்கவேண்டும். ஆனால் திருப்பாவையில்தீக்குறளை சென்றோதோம்  என்றே உள்ளது.  நடமாடும் தேய்வமாகவும் ஜகத்குருவாகவும் மதிக்கப்பட்டவரின் தெய்வத்தின் குரலில் / வாக்கில், திருப்பாவை குறித்து இப்படியா தெய்வத்தின் குரலில் அபஸ்வரம் வராது. அபஸ்வரம் வந்தால் அது தெய்வத்தின் குரலாக இருக்காது. நீர்க்குமிழிகளும் பொய்மைகளும் நெடுநாள்கள் நிலைப்பதில்லையே...    


மேலும் சில சங்கராச்சாரியார் கருத்துகள்: 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 25, 2017, 4:17:03 AM2/25/17
to mintamil

2017-02-25 13:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தீக்குறளை சென்றோதோம் ;

அக்கா,

இதில் வரும் குறள் என்பது திருக்குறளைக் குறிக்காது என்பதற்கு அடுத்த சொல்லே சாட்சி.

ஒவ்வொருவரிடமாகச் சென்று பிறரைப் பற்றி ஓதப்படுவது தான் குறளை. இது தீமையே புரிவதால் இதனை தீக்குறளை என்றார்.

திருக்குறள் என்ன ஒவ்வொருவரிடமாகச் சென்று ஓதப்படுவதா?.

என்னத்த சொல்ல ? :(((
--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

சொ. வினைதீர்த்தான்

unread,
Feb 25, 2017, 4:38:08 AM2/25/17
to mintamil
2017-02-25 13:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


        குமுதத்தின் தலையங்கத்தினை சுட்டிக்காட்டி பேசிய பீடாதியின் விளக்கம் 5/12/63 குமுதத்தில்...  பாவையர் நோன்பு காலத்தில் இனிமையான (திருக்)குறளைக்கூட ஓதமாட்டோம் இறைவன் நினைவில் ஆழ்ந்துவிடுவோம் என பாவையர் கூறுவதாக பொருள் கொள்ளலாம் என்று சொன்னேன்அப்படி நான் புதிதாக விளக்கப்புகுந்தது (திருக்)குறளின் பெருமையை வலியுறுத்துவதற்காகத்தானே தவிர அதை குறைவு படுத்துவதற்காக அல்ல!.... உரை சொன்னது பொருந்தியதா பொருந்தவில்லையா என்பது வேறு; உரை சொன்னதன் உள்நோக்கம் குறட் பெருமையை உணர்த்துவதற்குத்தான். என்று பெரியவாள் தன் நிலையை விளக்கியிருந்தார்.

        
சிறந்த சமாளிப்பு. சமயோசித வாதம். இருந்தாலும் நிற்கவில்லை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

தேமொழி

unread,
Feb 25, 2017, 4:42:46 AM2/25/17
to மின்தமிழ்
மாற்றி யோசிக்கும் முயற்சி ஒரு சிலரைப்போல  எல்லோருக்கும் வெற்றிகரமாகக் கைவருவதில்லையே என்ன செய்வது !!!

;-))

..... தேமொழி 

Suba

unread,
Feb 25, 2017, 6:55:13 AM2/25/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
கூடுதல் தகவல் தேமொழி.

இதே செய்தியை தேவநேயப்பாவானரும் தமது தமிழர் மதம் என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார். இதில் கூடுதலாக வரும் மேலும் ஒரு செய்தி மனதை உறுத்துகிறது.

தமிழை நீச மொழி எனச் சொல்ல வேண்டுமா என்ன?



4. காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ் வெறுப்பு

    சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்" என்னும் அடியிலுள்ள தீக்குறளை சென்றோ தோம்" என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

    ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார்  நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!" என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, "சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை" என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி?' என்னும் பகுதியிற் காண்க.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 25, 2017, 7:05:08 AM2/25/17
to mintamil

வணக்கம்.
திருக்குறளும் தீக்குறளும் ஒன்றா?

அன்பன்
கி. காளைராசன்
என்னதான் இருந்தாலும் இப்படியெல்லாம் மாற்றி யோசிக்கப்படாது.
:)

--

N D Logasundaram

unread,
Feb 25, 2017, 7:35:12 AM2/25/17
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Sivakumar M A, Banukumar Rajendran, Raji M, Seshadri Sridharan, muthum...@gmail.com
இங்கு தீக் குறளை எனும் சொல் 
வாமன அவதாரத்தை குறிக்கும் என்பது பலரது நியாயப்படுத்தும் பொருள்கோள் நிலை 
குறள் ( குறளை ) என்பது குறைந்த உயரம் உடைய  ஓருவன் / ஒருத்தி ஆகும் 

அடுத்த வரிகளை நோக்குங்கள் ஐயமும் பிச்சையும் பற்றித்தான் பேசப்படுகின்றது  என்பதும் அக்கருத்தனுக்கு சான்றாகும் 

வாமனன் என்பவன்தான் தன  இன  மரபின்டி   ஓர் கேவலமான ( = சாதாராண) பிச்சையேற்று உண்ணும் 
தொழிலை உடையவன் எப்படி பெரிய ஓர் இட த் த்தலைவனிடம்  கள்ளத்தனம்  காட்டினான் என்பதால் அப்படிப்பட்ட புராணக்கதைகளை நா ங்கள்பா எங்கள் ஆடல் பாடல் கூத்துகளில் பா ராட்டமாட்டோம் போற்றமாட்டோம் எனபதுதான் பொருள் என பலரது நியாயப்படுத்தும் நிலையில் உள்ளோரின்
 பொருள்கோள் நிலை 

அதாவது 
அந்த வாமன அவதாரத்தில் மூன்றடி மண்மட்டும்  எனக்கே ட்டு அகில உலகமும் வானமும் சேர்ந்தும் போதாது என முற்றிலும்  ஏமாற்றிய நிலை காணப்படுதலா ல் அக்கதை கடவுளே இப்படியெல்லாம் ஏமாற்றுவார் என்றால் நல்லவைக்கு முரண்பட்டவையே ஆகும் என்பதால் அவ்விதப்  புராண க்கதை களை அக்காலத்து அந்த நாச்சியார் (ஆ டல் பாடல் மக்கள்) போன்றவர்கஊக்கு மனம் ஓப்பவில்லை போலும் 

பொதுவாக 
புராணக்கதை களில் இவ்வழி மனித நேயமற்ற போக்கிரித்தனமான வடமொழி தர்காசாத்தி ரங்கள் அர்த்தசாத்திரம் போன்ற வடநாட்டு மக்களால் பொறப்படுவதில் சால உண்டு மனு நீதியிலும் தமிழக மக்க 
ஏற்றுக்கொள்ளத்தகாத அநாகரீக செய்திகள் பலப்பல உண்டு அவைகளை எல்லாம் தொகுத்தல் இன்றுள்ள மடலாடலில் உள்ளோர் உடன் .- - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - -

இராமன் மறைந்திருந்து வா லியைத்தாக்கியதை நியப்படுத்துவது கண்ணன் குளிக்கும் பொது மகளிராக இருந்தால் கூட அவர்களின் சேலைகளை எடுத்து ஒளி த்து வைப்பது பொது மன்றத்தில் மாற்றா  ன் மனைவியில் சேலையை அவிழ்ப்பது போன்ற கதை காளை தோற்றுவித்து போற்றப்பட நினைக்கும் வடநாட்டு  நாகரீகம் இருந்த நிலைக் காட்டுகின்றது 
யாதார்த்தமானதாகு ம் என்பது உண்மையே  என்றாலும் அதனைப்போற்றும் / விளம்பரம் ம  னப்பான்மைத்தைப்பாருங்கள் 


நூ த லோ சு 
மயிலை 

2017-02-25 13:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 25, 2017, 8:54:49 AM2/25/17
to mintamil

வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.

நன்றி ஐயா.

nkantan r

unread,
Feb 25, 2017, 9:40:36 AM2/25/17
to மின்தமிழ்
பெரியார் ஆகட்டும்,  பெரியவர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஆகட்டும்,  நம்போன்ற சாதாரண மனிதர் போலவே நல்லதும் கெட்டதும்-- நம் மனதிற்கு ஏற்புடையதும் அல்லாததும்--உரைத்துள்ளனர்.  காலம், உரைத்த இடம், கேட்டவர் நிலை - இவற்றை கொண்டேஉரையை அலச முடியும். இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! இருவரும் உரைத்த இந்தக் காலத்திற்கு ஏற்றவையை ஏற்போமே !

இவ்விழையில் எத்தனை ஒற்றுப்பிழைகள்; சொற்குற்றங்கள், எழுவாய்-வினை முரண்கள்;  யோசியுங்கள்!

regards
rnkantan


தேமொழி

unread,
Feb 25, 2017, 4:27:38 PM2/25/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
மேலதிகத் தகவலுக்கு நன்றி சுபா.


மற்றொரு நூலில் , இதனால் கடுப்பான பாவலரேறு பெருஞ்சித்திரனார் (பாவாணர்தம் தலைமாணாக்கர்)  மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில்  பேச தடைவிதிததாகவும் குறிபிடப்பட்டுள்ளது பார்க்க -   http://www.tamilvu.org/library/lA46S/html/lA46Spt5.htm  


உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர்.

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்

. . . . . . . . . . . . . . . . . . 


தீக்குறளை சென்றோதோம்"

என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர்.
தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர்.


..... தேமொழி

தேமொழி

unread,
Feb 25, 2017, 5:00:41 PM2/25/17
to மின்தமிழ்


On Saturday, February 25, 2017 at 6:40:36 AM UTC-8, nkantan r wrote:
பெரியார் ஆகட்டும்,  பெரியவர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஆகட்டும்,  நம்போன்ற சாதாரண மனிதர் போலவே நல்லதும் கெட்டதும்-- நம் மனதிற்கு ஏற்புடையதும் அல்லாததும்--உரைத்துள்ளனர்.  காலம், உரைத்த இடம், கேட்டவர் நிலை - இவற்றை கொண்டேஉரையை அலச முடியும். இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! இருவரும் உரைத்த இந்தக் காலத்திற்கு ஏற்றவையை ஏற்போமே !

பெரியாரைப் பற்றிய கவலை இல்லை, அவருக்குமே அதில்  கவலை இல்லை, அவரை விரும்புபவர்களுக்கும் கவலை இல்லை ... ஏனென்றால் 


என்று சொல்லியதுதான் அனைவருக்கும் நினைவு வரும். 


"தெய்வத்தின் குரல்" (யார் தொடங்கினார்கள்  இந்தப் புகழுரையை என்பது வியப்பானது)   என்று கருதப்படுபவர் சொல்லும்பொழுது, அந்தத்  தெய்வத்தின் குரல் கூறினால், அதிலும் தெய்வத்தின் குரல்  குறள் குறித்து கூறினால் அதை நம்புவதற்கு ஒரு கூட்டமே இருக்கும் பொழுது விமர்சனம் தேவை.


பெரியாரோ, பெரியவரோ யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.   பெரியாரை எதிர்ப்பவர்கள் அவரது   பிறந்த நாள்  என்ற இழையிலேயோ, அல்லது  'குடியரசில் பெரியார்' என்ற அவரது  நூல் குறித்த இழையிலேயோ அல்லது 'பெரியார் சில புரிதல்கள்' போன்ற அவரது கருத்துகள் குறித்த இழையிலேயோ கடுமையாக  விமர்சிப்பதை பார்த்துப் பழகியவர்களுக்கு   உங்கள்   "இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! "  கருத்து வியப்பாகவும் இருக்கும். 



..... தேமொழி



  

N. Ganesan

unread,
Feb 25, 2017, 6:39:21 PM2/25/17
to மின்தமிழ்


On Saturday, February 25, 2017 at 5:54:49 AM UTC-8, kalai wrote:

வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.

நன்றி ஐயா.


வாமன உருவம் கருவறையில் கொண்டு வழிபடும் கோவில்கள் பல.
முக்கியமாக மகாபலி சக்கிரவர்த்தி ஆண்டுதோறும் ஓணத்தன்று விஜயம் செய்யும் கேரளாவில்.
நானே பல கோவில்களுக்குச் சென்றுள்ளேன். கேரளா-தமிழ்நாடு செக்போஸ்ட் என் தோட்டத்தில் உள்ளது.
எனவே மிக அருகு எங்களுக்கு.
கஜுராஹோ கோவிலில் வாமனர் திருக்கோயில் - பார்க்க கருவறையில் கைகள் மூளியான திருப்பேரம்.
-------------------

2009-ல் தீக்குறளை என்பது பற்றிப் பேசினோம்:
பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்ய ஸ்வாமிகளின் மறுப்பு மடல் பிடிஎப் ஆகவேண்டும்.
அவரது முன்னோர் திருமலை வேங்கடவனுக்கு சுப்பிரபாதம் செய்தவர். எம் எஸ் பாடி பிரபலம்.

ஆண்டாள் ஒரு கற்பனைப் பாத்திரம் என்பது சில தமிழறிஞர்கள் கருத்து. இதனை ஆங்கிலத்தில்
கட்டுரை எழுதினார் ராஜாஜி. அதுவும் இங்கே பேசப்பட்டதுதான். பெரியாழ்வார் பெண்ணாகப்
பாடியது ஆண்டாள் பாடல்கள் என்பர்.

நா. கணேசன்
 

தேமொழி

unread,
Feb 25, 2017, 10:57:36 PM2/25/17
to மின்தமிழ்
சமீபத்தில் வாட்சப் குழுமம் ஒன்றில் கீழ்க்காணும் படங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.



இது திருமால் கோவில்களின் எல்லைகளைக் குறிக்கும் எல்லைக்கல்லாக வைக்கப்பட்டிருக்கும்.

படத்தில் உள்ள உருவம் வாமன அவதாரத்தைக் குறிக்கும் என்று தொல்லியியல் முனைவர் பத்மாவதி அவர்கள் விளக்கம் தந்தார்.


எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்

உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்

நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக்

குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்


என்று தமிழிலக்கியம்  "முக்கோற்பகவர்" என்பவர்களை விவரிக்கும் உருவத்தை அடிப்படையாகக் கொண்டு 

வாமன அவதார உருவமும் அமைக்கப்பட்டிருக்கலாம் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது.


..... தேமொழி

Rajagopalan

unread,
Feb 26, 2017, 12:32:58 AM2/26/17
to மின்தமிழ், tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com, podh...@gmail.com, tami...@gmail.com, vas_...@hotmail.com, ara...@gmail.com, abans...@gmail.com, banuk...@gmail.com, mylai...@gmail.com, ssesh...@gmail.com, muthum...@gmail.com
//வாமன அவதாரத்தை குறிக்கும் என்பது பலரது நியாயப்படுத்தும் பொருள்கோள் நிலை 
குறள் ( குறளை ) என்பது குறைந்த உயரம் உடைய  ஓருவன் / ஒருத்தி ஆகும் 

அடுத்த வரிகளை நோக்குங்கள் ஐயமும் பிச்சையும் பற்றித்தான் பேசப்படுகின்றது  என்பதும் அக்கருத்தனுக்கு சான்றாகும் 

வாமனன் என்பவன்தான் தன  இன  மரபின்டி   ஓர் கேவலமான ( = சாதாராண) பிச்சையேற்று உண்ணும் 
தொழிலை உடையவன் எப்படி பெரிய ஓர் இட த் த்தலைவனிடம்  கள்ளத்தனம்  காட்டினான் என்பதால் அப்படிப்பட்ட புராணக்கதைகளை நா ங்கள்பா எங்கள் ஆடல் பாடல் கூத்துகளில் பா ராட்டமாட்டோம் போற்றமாட்டோம் எனபதுதான் பொருள் என பலரது நியாயப்படுத்தும் நிலையில் உள்ளோரின்
 பொருள்கோள் நிலை //.

'குறளன்' என்பதே, குட்டையாக இருக்கிற ஆண் மகனைக் குறித்த சொல். குறளை என்பது ஆண்பாலுக்குச் சேராது. எப்படி வாமனனைக் குறித்ததாகும்?

 தீக்குறளை சென்றோதலுக்கும், தீக்குறளைச் சென்றோதலுக்கும் வேறுபாடு தெரியாதா? ஒற்று மிகுமிடங்கள், மிகா இடங்கள் பற்றிய ஆரம்ப அறிவு கூடத் தேவையில்லை என்று கருதுவதால் தான் இந்தநிலை.  

அ.ரா
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

சேது

unread,
Feb 27, 2017, 12:11:51 AM2/27/17
to மின்தமிழ்
தீமை குறளைசென்று குறளை- குறளை=கோள். தீமை தரும் கோளை அங்கும்இங்கும் சென்று சொல்லமாட்டோம் என்றுபொருள்.குறளைச்சென்று என்றால்தான்திருக்குறளைக்குறிக்கும்

Dev Raj

unread,
Feb 27, 2017, 5:15:12 AM2/27/17
to மின்தமிழ்
On Saturday, 25 February 2017 19:24:49 UTC+5:30, kalai wrote:

வணக்கம் ஐயா.
பாடலுக்கு நல்லதொரு பொருளை அறிந்து கொண்டேன்.
வாமன உருவம் வழிபாட்டில் இல்லை, ஓங்கி உலகளந்த உருவ வழிபாடு உண்டு.

நன்றி ஐயா.




ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ ! 


மலைநாட்டின் திருவாறன்விளையில் பெருமாளுக்குத்  திருக்குறளப்பன் [வாமனன்] 
என்றே பெயர்.  

மலைநாட்டின் வாமனர் ஆலயங்கள் -

வெள்ளூர் வாமன மூர்த்தி ஆலயம்
த்ரிக்கக்கர வாமன மூர்த்தி ஆலயம்
மேலத்ரிகோவில் வாமன மூர்த்தி ஆலயம்
உண்ணிமுற வாமன மூர்த்தி ஆலயம்
‘மூவடியப்பன்’ அம்பலத்தையும் வாமன மூர்த்தி ஆலயம்
எனச் சுட்டுவது வழக்கம்


தேவ் 

Dev Raj

unread,
Feb 27, 2017, 5:18:55 AM2/27/17
to மின்தமிழ்



திருவரங்கத்தின் திருக்குறளப்பன் சந்நிதி


தேவ்

Oru Arizonan

unread,
Feb 27, 2017, 1:04:26 PM2/27/17
to mintamil


2017-02-25 7:40 GMT-07:00 nkantan r <rnka...@gmail.com>:
//பெரியார் ஆகட்டும்,  பெரியவர் என அழைக்கப்பட்ட சங்கராச்சாரியார் ஆகட்டும்,  நம்போன்ற சாதாரண மனிதர் போலவே நல்லதும் கெட்டதும்-- நம் மனதிற்கு ஏற்புடையதும் அல்லாததும்--உரைத்துள்ளனர்.  காலம், உரைத்த இடம், கேட்டவர் நிலை - இவற்றை கொண்டேஉரையை அலச முடியும். இறந்து போன இருவரையும் இங்கு ஏசியோ ஏற்றியோ பேச வேண்டாம்! இருவரும் உரைத்த இந்தக் காலத்திற்கு ஏற்றவையை ஏற்போமே !


இவ்விழையில் எத்தனை ஒற்றுப்பிழைகள்; சொற்குற்றங்கள், எழுவாய்-வினை முரண்கள்;  யோசியுங்கள்!

regards
rnkantan//
 
எனது கருத்தும்  அதுவே, rnkantan அவர்களே! நன்றி, வணக்கம்!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba

unread,
Mar 2, 2017, 3:17:40 AM3/2/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-02-25 22:27 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
மேலதிகத் தகவலுக்கு நன்றி சுபா.


மற்றொரு நூலில் , இதனால் கடுப்பான பாவலரேறு பெருஞ்சித்திரனார் (பாவாணர்தம் தலைமாணாக்கர்)  மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில்  பேச தடைவிதிததாகவும் குறிபிடப்பட்டுள்ளது பார்க்க -   http://www.tamilvu.org/library/lA46S/html/lA46Spt5.htm  


உலககுரு என்று பார்ப்பனர்களால் உச்சிமீது தூக்கிவைத்துப் போற்றப்படும் சங்கராச்சாரியார், காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி தமிழை நீசமொழி என்று கூறி ஆட்சிமொழி காவலர் கீ.இராம லிங்கனாரிடம் பேச மறுத்தவர்.

"நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
. . . . . . . . . . . . . . . . . . 
தீக்குறளை சென்றோதோம்"

என்னும் ஆண்டாள் பாசுரத்திற்குத் தீய குறளைப் படிக்கமாட்டோம் என்று பொருள் கொண்டு தமிழ்மறையை இகழ்ந்தவர்.
தனித்தமிழ் வளர்த்த மொழிஞாயிறு பாவாணர்தம் தலைமாணாக்கர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரைத் திருநெல்வேலி மதுரைத் திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் பேசக்கூடாது என்று தடைபோட்டனர்.

​இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கின்றது!. அந்தச் சூழலிலும்  போராடி தமிழ் வளர்த்த சான்றோரை மீண்டும் நினைத்துப் பார்ப்பது தேவைதன. கால ஓட்டத்தில் பல தவறுகள் மறைக்கப்படுவதும் அரசியல்தான்!

சுபா




..... தேமொழி



தேமொழி

unread,
Mar 2, 2017, 3:56:47 AM3/2/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
பாவலரேறு பெருஞ்சித்திரனார், காஞ்சி பீடம் ஒரு சமுதாயக் குற்றவாளி மடம் என்று 1983இல் 35 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியவர்

.... தேமொழி 
Reply all
Reply to author
Forward
0 new messages