1வர்ண தர்மம் குறித்து முன் மூன்று பகுதிகளிலும் உரைகளும் உரைப்பகுதிகளும் உள்ளன. குறிப்பாக முதற்பகுதியில் ‘வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?‘ என்ற உரை பார்க்கவும்.
2 இரண்டாம் பகுதியில் “நாற்பது ஸம்ஸ்காரங்கள்” என்ற உரை பார்க்க.
நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...மாணவன் மாணாக்கன்POSTED ON DECEMBER 23, 2014சிஷ்யன் என்றும் வித்யார்த்தி என்றும் ஸம்ஸ்க்ருதத்தில் சொல்வதை நாம் மாணவன், மாணாக்கன் என்கிறோம். செய்யுளில் இதுவே ‘மாணி’ என்று வரும், வாமனாவதாரத்தைப் பற்றி திவ்ய ப்ரபந்தத்தில் ‘மாணி’, ‘மாணி’ என்று வரும். ‘மானவ’ என்று இரட்டைச் சுழி ‘ன’ போட்டுச் சொன்னால் மநுஷ்யன் என்றுதான் அர்த்தம். மநுவிலிருந்து ஜீவகுலம் தோன்றியது. அதனாலேயே ‘மநுஜன்’, ‘மநுஷ்யன்’, ‘மானவன்’, தமிழில் ‘மனிதன்’, ‘மானுடன்’ முதலான பெயர்கள். Man என்பதும் மநு ஸம்பந்தமானதே. மனஸ் என்ற சிந்தனா சக்தி படைத்தவன் மநு. Man என்றால் thinking animal என்று இதே அபிப்ராயத்தைத்தான் அவர்களும் சொல்கிறார்கள். மானவன் என்றால் மனிதம். ‘மாணவ’ என்று மூன்று சுழி போட்டுச் சொன்னால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். சின்ன வயஸிலேயே கல்வி கற்கத் தொடங்குவதால் வித்யார்த்தியை மாணவன், மாணாக்கன் என்று சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. தமிழ் ‘மாணி’யும் இதிலிருந்தே வந்திருந்தாலும், மாணி என்பது, ‘மாணவன்’ என்பதுபோல் எந்த ஜாதியையும் சேர்ந்த ஸ்டூடண்டைக் குறிக்காது; மாணி என்பது உபநயனமான ப்ரம்மசாரியைத்தான் குறிக்கும். ஆதியில் ப்ராமண ப்ரம்மசாரியே பெரும்பாலும் ஸ்டூடண்டாக இருந்ததால்தான் இப்படிப் பிற்காலத்திலும் சொல்வதாக வந்திருக்கிறது.இம்மாதிரி அக்காலத்தில் ப்ராமணப் பசங்களுக்கு மட்டும் வித்யாப்யாஸம் விசேஷமாக இருந்தது இதரர்களுக்கு வித்யாஸமாகத் தோன்றவில்லை. தங்கள் தொழிலுக்கும் வாழ்முறைக்கும் குருகுலவாஸம் தேவையில்லை; அவசியப்படும்போது தங்கள் தொழிலில் டெக்னிகலான, சிக்கலான ஸமாசாரங்களை மட்டும் ‘அய்ய’ரிடம் போய்த் தெரிந்து கொண்டால் போதும் என்று நல்லறிவு அவர்களுக்கு இருந்தது.
‘அவர் மட்டும் ஏதோ சிலது படிக்கிறாரே; அவர் மட்டும் அந்த அநுஷ்டானம் பண்ணுகிறாரே!’ என்று நினைக்காமல் அவரும் ஸரி, தாங்களும் ஸரி அவரவருக்கும் குலதர்மப்படி வந்ததைப் பண்ணிகொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம், எல்லாருக்கும் நிறைவு என்ற நல்லெண்ணத்தோடு இருந்து வந்தார்கள்.
‘அய்யர் சொல்கிற வேதமும், அவர் செய்கிற யாகமும் நம் க்ஷேமத்தையும் உத்தேசித்தது; அவருக்குப் போட்டிருக்கிற கடும் ஒழுக்க விதிகள் நமக்கும் லக்ஷ்யத்தைக் காட்டிக் கொடுக்கிறது*. ஆனபடியால் அவர் கார்யத்தை, அவருக்கான வாழ்க்கை முறையை அநுஸரித்துக்கொண்டு அப்படியே இருக்கட்டும்; அவரைப் போய் நாம் தொந்தரவு பண்ண வேண்டாம், அவரோடு போட்டிபோட வேண்டாம்’ என்று இதரர்கள் நினைத்தவரை (இப்படித்தான் யுகாந்தரமாக நடந்து வந்திருக்கிறது) எல்லாம் ஸரியாயிருந்தது. ஸமூஹ வாழ்வு க்ரமமாக, ஐக்ய மனப்பான்மையுடன் போய்க் கொண்டிருக்கிறது.
---அந்தணரை மையப்படுத்தி குருகுலங்கள் வளர்ச்சிPOSTED ON DECEMBER 23, 2014இதற்கு முன்னிருந்த நிலைமையைத்தான் முன்னேயே சொன்னேன்; ரொம்பவும் specialised ஸமாசாரம் கற்றுக்கொள்வதற்கு மட்டுமே வைச்ய – சூத்ர ஜாதியினர் ப்ராமண ஆசார்யனிடம் போகவேண்டியிருந்தது என்றும், மற்றபடி அவனுடைய குருகுலம் ப்ரம்ம – க்ஷத்ர சிஷ்யர்களுக்கானதாகவே இருந்தது என்றும் சொன்னேன். இதிலும் குறிப்பாக ப்ராமணப் பசங்களுக்கு உரியனவாகத்தான் அவை இருந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் குருகுலம், வித்யாப்யாஸம் முதலிய விஷயங்களே முக்யமாக ப்ராமணனைக் குறித்தவை மாதிரிதான் இருந்திருக்கின்றன. க்ஷத்ரியர்களிலும் ராஜகுமாரர்கள், ராஜ குடும்ப முக்யஸ்தர்களின் பசங்கள், ப்ரதான அதிகாரிகளின் பிள்ளைகள் ஆகியோர் குருகுலவாஸம் செய்தனர். அந்த ஜாதியில் மற்ற எல்லாச் சிறுவர்களும் – அதாவது ஸாதாரண ஸேனாவீரர்கள், சிப்பந்திகள் ஆகியவர்களது பிள்ளைகள் – வீட்டிலேயே தகப்பனிடமும், அல்லது ஆயுதப் பயிற்சி சாலைகளிலும்தான் அப்யாஸம் செய்திருப்பார்களென்று தோன்றுகிறது. குருகுலவாஸம் செய்த பசங்களுங்கூட, தங்களுக்குரிய முழுக்கோர்ஸும் ப்ராமணப் பசங்களோடேயே சேர்ந்து கற்றுக் கொண்டிருப்பதற்கில்லை. முன்னேயே சொன்னதை மீண்டும் சுருக்கிச் சொல்கிறேன்.வேதாதி சதுர்தச வித்யைகளைப் ப்ராமணப்பிள்ளைகளைப்போல அவ்வளவு ஆழ்ந்து, அலசிப் படிக்க வேண்டிய அவச்யம் க்ஷத்ரியர்களுக்கு இல்லை. இதேபோல, ப்ராமணப் பிள்ளைகளில் பிற்காலத்தில் தாங்கள் தநுர்வேத – அர்த்தசாஸ்திர ஆசார்யர்களாகிக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உத்தேசமுள்ள மாணவர்கள் மாத்திரம் இவற்றை ஆப்ஷனலாக எடுத்துக்கொண்டு படித்திருக்கலாமே தவிர மற்றவர்கள் ஜீவனத்துக்கு அவசியமில்லாத இந்த ஆயுத சாஸ்திரத்தையும், ராஜாங்க நிர்வாஹ சாஸ்திரத்தையும் deep-ஆகக் கற்றுக்கொண்டிருக்கமாட்டார்கள். ஆகையால் ப்ரம்ம – க்ஷத்ர ஜாதி வித்யார்த்திகளுக்கு பாடங்களும், பாட முறையும் வித்யாஸமாக இருந்திருக்கவேண்டும். சதுர்தச வித்யைகளுக்கு மட்டும் அவ்வப்போது ப்ராமணப் பசங்களும், க்ஷத்ரியப் பசங்களும் சேர்ந்த ஒரே குருகுலத்தில் அப்யாஸம் செய்திருக்கிறார்களென்பது நிச்சயம்.வைச்யர்களுக்கும் வேதத்தில் அதிகாரமுண்டாதலால் அவர்களும் இப்படி ப்ராமண குருகுலங்களில் கொஞ்சம் சேர்ந்து படித்திருக்கலாம். ஆனால், நாளுக்கு நாள் ஜன ஸங்கியைப் பெருகி, புதுப் புதுச் சரக்குகளை உற்பத்தி செய்து விற்பது, அந்நியத் தொடர்புகள் அதிகமாகிக் கடல் கடந்துகூட வர்த்தகப் பரிவர்த்தனை விஸ்தரிப்பது என்றெல்லாம் ஏற்பட்டபோது, வேதாப்யாஸத்தைப் பின்னுக்குத் தள்ளி அவர்களுக்கென்றே ப்ரத்யேகமாக ஏற்பட்ட வாணிஜ்யம் (வாணிபம்), கோ ஸம்ரக்ஷணை இரண்டை மாத்திரமே பால்யத்திலிருந்து ஆயுஸ்காலக் கல்வியாகவும் தொழிலாகவும் அவர்கள் மேற்கொள்ளவேண்டி வந்திருக்கிறது. அதோடு அன்றன்றும் உள்ள நிலவரங்களைப் பொறுத்துக் கணக்குப் பண்ணித் திட்டம் போடுவதும், அன்றன்றும் கிடைக்கிற வாடிக்கைக்கு ஏற்ப ஸமயோசிதமாக நேரே மநுஷ்யர்களோடு பழகி ஸமாளிக்க வேண்டியதுமான வைச்யர்களின் கார்யதைத் திறம்படச் செய்வதற்கு அவர்கள் புஸ்தகத்தைப் பார்த்து முடியாது. இதற்கு அந்நாளில் புஸ்தகமும் இல்லை. ஆகையால் அந்தப் பசங்கள் பெரிசாக வித்யாப்யாஸம் என்று பண்ணப் போகாமல், கொஞ்சம் வேதம், ஸமயாசாரம், தங்கள் தொழிலுக்கான சின்ன சாஸ்திரங்கள் இவற்றை மற்றும் படித்துவிட்டு, சின்ன வயஸிலிருந்தே அப்பனோடு, பாட்டனோடு நேரே தொழிலில் பிரவேசித்து அதன் knack-களை (ரஹஸ்யங்களை, ஸாமர்த்யங்களை, நுட்பங்களை)க் கற்றுக்கொள்வதாக ஏற்பட்டது.மொத்தத்தில், ஆதி நாளில் வித்யாப்யாஸம் பிராமணனோடுதான் விசேஷமாகப் பொருத்தப்பட்டது. இதனால்தான் எத்தனையோ காலத்துக்குப் பிற்பாடும் வேதத்துக்கே உரிய “பாடம்” வைத்தே கல்விக்கூடத்துக்குப் “பாடசாலை” என்று பெயர் நீடித்து வந்திருக்கிறது. காயத்ரி உபதேசத்தில் ஆரம்பித்து ஸம்பூர்த்தியாகக் கற்பிக்கிறவருக்கு ஏற்பட்ட “ஆசார்ய” என்ற பெயர்தான் இன்று நாஸ்திகம், கம்யூனிஸம் சொல்லிக்கொடுப்பவரிடமும் “ஆசிரியர்” என்பதாக ஒட்டிக்கொண்டிருக்கிறது. காயத்ரி உபதேசம் செய்யாமல், ஜீவனோபாயத்தை உத்தேசித்து வேத சாஸ்திரம் கற்பிப்பவருக்குரிய “உபாத்யாயர்” என்பதுதான் இன்றும் “வாத்தியார்” என்று நம் பேச்சில் அடிபடுகிறது.
தொடர்ச்சி ....நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...புது மதங்களில் பெரிய வித்யாசாலைகள்POSTED ON DECEMBER 23, 2014இப்படி புத்தரும் ஜினரும் புது மதங்கள் உண்டாக்கியபோது ப்ராமணன் சொல்லிவந்த வேத ப்ராமாண்யம், வைதிக அநுஷ்டானம், வர்ணவிபாகம் இவை அந்த மதங்களில் இல்லை. வேதத்தை இன்னார்தான் அப்யஸிக்கலாம், இன்னார் கூடாது என்று விதி இருப்பதுபோல் இல்லாமல், அந்த மதங்களில் எல்லாரும் அவர்களுடைய ஆதார க்ரந்தங்களைப் படிக்கலாம் என்று வைத்தார்கள். இதனால் அவர்கள் ஸர்வ ஜனங்களுக்குமாக (பழைய வைதிக குருகுலங்கள் போலச் சின்னதாக இல்லாமல்) பெரிய பெரிய வித்யாசாலைகள் வைக்கவேண்டியதாயிற்று.
ஸர்வ ஜனங்களும் சேருவதற்கு ஸாதகமாக இன்னொன்றும் சேர்ந்து கொண்டது. குருகுலங்களில் வ்யாகரணத்தினால் நன்கு சுத்தி செய்யப்பட்ட ஸம்ஸ்க்ருத சாஸ்திரங்களே போதிக்கப்பட்டன. ஸாமான்ய ஜனங்களுக்கு ஸம்ஸ்க்ருதம் வராது. அவர்கள் அதன் கொச்சையான ப்ராக்ருத பாஷைகளைத்தான் அறிவார்கள். புத்தமதத்தின் ஆதார நூல்களாகிய த்ரிபிடகம் என்ற மூன்று தொகுப்புக்களும் பாலி என்ற ப்ராக்ருத பாஷையிலேயே எழுதப்பட்டன. ஜைனர்களின் ஆதார நூலான ‘அங்க’ங்கள் என்பவையும் ப்ராக்ருத பாஷைகளில் இன்னொன்றான ‘அர்த்தமாகதி’ என்பதில்தான் எழுதப்பட்டவை.
பொதுமக்களுக்கு எழுத்தறிவு இல்லாத நிலையில் ஒரு தேசத்தில் பலவந்த முறையில் போகாமல் மதமாற்றம் செய்யும்போது அதற்குப் பள்ளிக்கூடம் வைத்து அவர்களுக்குக் கல்வியறிவு தந்து தங்கள் ஸமய நூல்களைச் சொல்லிக் கொடுப்பது ஒரு முக்யமான அங்கமாகிவிடுகிறது. கிறிஸ்துவ மிஷனரிகள் விஷயம் நமக்குத் தெரிந்ததுதானே? ஐந்நூறு வருஷத்துக்கு முந்தி நானக் இதேபோலப் பஞ்சாபில் தம்முடைய ஸிக்கிய மதத்தைப் பரப்ப நினைத்தபோது அந்த பாஷைக்கு முறையாக லிபியே இல்லை. அதனால் லிபியும் மதகுருவே கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. (நானக்கை அடுத்து குருவாக வந்து, அவர் உபதேசங்களை எல்லாம் திரட்டி ப்ரசாரம் செய்த அங்கத் என்ற) குருவினால், குருமுகமாக உண்டானதாலேயே அந்த லிபிக்கு “குர்முகி” என்று பெயர். அடித்துப் பிடித்துத் தங்கள் மதத்துக்கு மாற்றாமல் ஸாத்விகமாக, அல்லது ஸாமர்த்யமாக மாற்ற நினைக்கிற மதஸ்தர்கள் பொதுமக்களுக்கு வித்யா சாலைகள் வைப்பதன் மூலமும் அதை ஸாதித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் பாயிண்ட். அறிஞர்களுக்கே தெரிந்த ஸம்ஸ்க்ருதத்தை விட்டு பொதுஜன பாஷையான ப்ராக்ருதத்துக்கு ஏற்றம் தந்து பௌத்த – ஜைனர்கள் இந்த உபாயத்தைக் கையாண்டார்கள்.
ஆனால், போகப் போக தத்வ வாதங்கள் கிளைவிட்டுக் கொண்டே போய் நுட்பமான விஷயங்களைச் சொல்ல வேண்டி வந்ததில் பிற்கால பௌத்த – ஜைனர்களும் ஸம்ஸ்க்ருதம்தான் இதற்கு ஏற்ற பாஷை என்று கண்டுகொண்டார்கள். அதிலேயே புஸ்தகங்கள் எழுத ஆரம்பித்தார்கள். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனன் காலத்தில் சைனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த ஹ்வான்-த்ஸாங், பௌத்தர்கள் ஸம்ஸ்க்ருதத்திலேயே தங்களுடைய ஆலோசனைகளையும் வாதங்களையும் நடத்தினார்களென்று சொல்லியிருக்கிறார். அது எப்படியானாலும் ஆரம்பத்தில் ஸர்வஜனங்களுக்கும் ஸர்வஜன பாஷையிலேயே கல்வி என்று அவர்கள் ஆரம்பித்ததில்தான் விஸ்தாரமான வித்யாசாலைகள் முன்னைவிட அதிமாக ஏற்படலாயின.
..
---அறிவு ரீதியிலேயே எதிர்ப்புPOSTED ON DECEMBER 23, 2014ஆனால், இதை அதோடு முடித்துவிடுவதற்கில்லை. நிஜமாகவே அறிவுச் செருக்கும், ஜாதிக்கொழுப்பும் படைத்தவர்களாக ப்ராமணர்கள் இருந்தால் எத்தனை பண்புள்ள இதர ஜாதியாரும் அவர்களுக்கு உயர்ந்த ஸ்தானம் கொடுத்து வைக்க முடியுமா? ந்யாயமாகவே பார்த்தாலும் இப்படித் திமிரும் அஹந்தையும் பிடித்தவர்களாக ஒரு ஜாதி இருந்தால் அதை அடக்கி, ஒடுக்கித்தானே வைக்க வேண்டும்? தேஹபலம் போதாத ஒரு ஜாதியை ஸுலபமாகவே இப்படி அடக்கியும் போட்டுவிடலாமே! இப்படியெல்லாமிருந்தும் அம்மாதிரி அடக்கவில்லையென்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? ப்ராமணர்களும் நிஜமாகவே மரியாதைக்குகந்த நல்ல குணசீலங்களையும், சிறந்த புத்தி வன்மையையும் பெற்றவர்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.இப்படிப்பட்ட புத்தியை அவர்களுக்கு அளித்தது வித்யை; புத்தி மட்டுமில்லாமல் அதோடு குணசீலங்களைத் தந்தது அக்கால வித்யாப்யாஸ முறை – குறிப்பாக குருகுல முறை.அபூர்வமாக ப்ராமண எதிர்ப்பு வலுவாக ஏற்பட்ட போதும் அது பௌதிக பலத்தைக் காட்டிச் செய்த எதிர்ப்பாக இல்லாமல் வேத மதத்துக்கு விரோதமாகவோ வித்யாஸமாகவோ இன்னொரு மதத்தைக் காட்டி ஸித்தாந்த ரீதியில் செய்த எதிர்ப்பாகவே இருந்ததும் ப்ராமணர்களின் வித்யாபலத்துக்குச் சான்றேயாகும். பௌத்த, சமண, ஸிக்கிய மதங்கள் தோன்றியதைத்தான் சொல்கிறேன்.ஸிக்கிய மதத்தை பௌத்தத்தையும் சமணத்தையும் போல் அவ்வளவு வேத விரோதமானது என்று சொல்லக்கூடாதுதான். வேத மதத்துக்கு முதுகெலும்பாயுள்ள வர்ண, தர்மம், சடங்குகள் ஆகியவற்றை அந்த மதம் விலக்கிவிட்டாலுங்கூட, தன்னை தாய்மதத்துக்கு விரோதமானதாக ப்ரகடனம் பண்ணிக்கொண்டதில்லை. துருஷ்கரின் கொடுங்கோன்மைக்கு ஆளான ப்ராமண பண்டிதர்களுக்குத் தஞ்சம் கொடுத்து, அவர்களுக்காகத் துருஷ்கர்களோடு யுத்தமே செய்த ஸிக்கிய குருமார்கள் உண்டு.
க்ஷத்ரியர்களான புத்தர், ஜினர், நானக் முதலானவர்கள் ப்ராமணர்கள் எந்தத் துறையில் சிறப்புப் பெற்றிருந்தார்களோ, அந்த ஸமயத் தத்வத்திலேயே புதிய அபிப்ராயங்களையும் வழிகளையும் ஸாத்விகமான ரீதியில் காட்டித்தான் அவர்களோடு மோதினார்கள்.அக்காலங்களில் ப்ராமணர்கள் ஆத்ம பலத்தில் கொஞ்சம் பின்னே போயிருந்தாலும் அவர்களிடம் பாரம்பர்யமாக வந்திருந்த சாஸ்திரத்தின் பலம்தான் அவர்களுடைய உண்மையான பலம் என்று புரிந்துகொண்டே அந்த சாஸ்திரங்களைத் தாக்கி ஜயிப்பதுதான் அவர்களை ஜயிப்பதாகுமே தவிர அவர்களையே ஸ்தூலமாகத் தாக்குவது அல்ல என்று அவர்களிடம் மனோபேதம் கொண்ட க்ஷத்ரியர்களுக்கு ஓர் உணர்ச்சி இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ரேஸ் கான்ஷஸ்னஸ்’, ‘கிளாஸ் கான்ஷஸ்னஸ்’ என்றெல்லாம், (தனி மநுஷ்யனுக்கு இருக்கிறாற்போலவே) ஒவ்வொரு கூட்டதுக்கும்கூட இருந்து அதற்குச் சக்திவாய்ந்த ப்ரதிநிதிகளாகவே அந்தக் கூட்டத்தில் அவ்வப்போது தலைமை தாங்கும் மநுஷ்யர்கள் தோன்றுவதாக இப்போது மனோதத்வ சாஸ்திரத்தில் சொல்கிறார்கள். இம்மாதிரி, எல்லா க்ஷத்ரியர்களுக்கும் இல்லாவிட்டாலும் அதிலே ஒரு பகுதிக்கு ப்ராமணர்களிடமிருந்த மனோபேதத்தில் அவர்களைத் தத்வ ரீதியில் ஜயிக்கவேண்டும் என்றிருந்த எண்ணத்துக்கு ப்ரதிநிதிகளாகவே புத்தர், ஜினர் போன்றவர்கள் தோன்றினார்கள். இது இரண்டு தரப்புக்குமே பெருமை தரும் விஷயம்.என்ன சொல்கிறேனென்றால், ‘அறிவு, தத்வம் என்பனவற்றுக்கு ப்ராமணன்தான் ‘ரெபாஸிடரி’ (குடியிருப்பு)-ஆக இருக்க வேண்டுமென்பதில்லை; அவன் காட்டும் சாஸ்திர ரீதிக்கு அடங்கியே, அவனை மந்த்ரியாக வைத்துக்கொண்டு ஆலோசனை கலந்தே செயலாற்றுகிற எங்களுக்கு வெறும் புஜபலம் மட்டுமில்லாமல் இந்த புத்தி பலமும் உண்டு’ என்று ஒரு கூட்டு consciousness க்ஷத்ரியர்களில் ஒரு பிரிவுக்கு உள்ளூற இருந்து அதுவே இப்படி அவர்களைப் புது மதங்களை ஸ்தாபிக்கும்படித் தூண்டியிருக்கலாம்.
இந்த சைகாலஜி ஸூக்ஷ்மம் இன்னொரு அம்சத்திலுங்கூடத் தோன்றுகிறது. ப்ராமணர்களைத்தானே ரொம்பவும் ஸாத்விகர்களாக சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது? பொது வழக்கிலும் அவன்தானே மற்றவர்களைவிட ஸாதுவாக இருந்திருக்கிறான்?
2016-03-10 5:20 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:அடித்துப் பிடித்துத் தங்கள் மதத்துக்கு மாற்றாமல் ஸாத்விகமாக, அல்லது ஸாமர்த்யமாக மாற்ற நினைக்கிற மதஸ்தர்கள் பொதுமக்களுக்கு வித்யா சாலைகள் வைப்பதன் மூலமும் அதை ஸாதித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் பாயிண்ட். அறிஞர்களுக்கே தெரிந்த ஸம்ஸ்க்ருதத்தை விட்டு பொதுஜன பாஷையான ப்ராக்ருதத்துக்கு ஏற்றம் தந்து பௌத்த – ஜைனர்கள் இந்த உபாயத்தைக் கையாண்டார்கள்.நினைத்துப் பார்க்கின்றேன். மதத்தைப் பரப்பும் சுயநலமாகவே கூட இருந்தாலும்...இந்த பௌத்த சமண கிறித்துவ போதகர்களின் செயல்பாடுகள் மட்டும் இருந்திராவிட்டால் இன்றைய தமிழகம் கல்வி அறிவு என்பதையே நுகராத மிகப்பெருவாரியான ஒரு சமூகமாகத்தான் இருந்திருக்கும் என்பது அச்சமூட்டக்கூடிய ஒரு விஷயமாகவே புலப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தெய்வத்தின குரல் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்திருக்கின்றேன். அப்போது என் புரிதல் வேறு . இப்போது என் புரிதல் வேறு. ஒவ்வொரு பதிவிலும் பல கேள்விகள் எழுகின்றன. சிலவற்றை பதிகின்றேன்.2016-03-10 5:01 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:இம்மாதிரி அக்காலத்தில் ப்ராமணப் பசங்களுக்கு மட்டும் வித்யாப்யாஸம் விசேஷமாக இருந்தது இதரர்களுக்கு வித்யாஸமாகத் தோன்றவில்லை. தங்கள் தொழிலுக்கும் வாழ்முறைக்கும் குருகுலவாஸம் தேவையில்லை; அவசியப்படும்போது தங்கள் தொழிலில் டெக்னிகலான, சிக்கலான ஸமாசாரங்களை மட்டும் ‘அய்ய’ரிடம் போய்த் தெரிந்து கொண்டால் போதும் என்று நல்லறிவு அவர்களுக்கு இருந்தது.
கல்வி என்பதை ஒரு குலத்துக்கு என ஒதுக்கி அதனைக் கடைபிடிப்போர் தாம் நல்லறிவுடன் இருப்போர் எனும் கொள்கை கொண்ட காலகட்டம் இப்போது இல்லாமல் போனதை நினைத்து மனம் மகிழ்கின்றேன்.
‘அவர் மட்டும் ஏதோ சிலது படிக்கிறாரே; அவர் மட்டும் அந்த அநுஷ்டானம் பண்ணுகிறாரே!’ என்று நினைக்காமல் அவரும் ஸரி, தாங்களும் ஸரி அவரவருக்கும் குலதர்மப்படி வந்ததைப் பண்ணிகொண்டிருந்தாலே எல்லாருக்கும் க்ஷேமம், எல்லாருக்கும் நிறைவு என்ற நல்லெண்ணத்தோடு இருந்து வந்தார்கள்.
ஒருவர் குலத்தொழில் எனும் போது மரவேலை செய்வதும் ஒரு குலத்தொழில். பாடம் படித்தலும் கற்றுக் கொடுத்தலும் ஒரு குலத்தொழில் வண்ணான் வேலை செய்வதும் ஒரு குலத்தொழில். மலம் அள்ளுவதும் ஒரு குலத்தொழில். ஒருவனின் மகன் தன் தந்தை செய்த வேலையையே செய்து வந்தால் அதுவே அனைவருக்கும் ஷேமம் என்பது எவ்வளவு பெரிய நல்லெண்ணம்? இந்த நல்லெண்ணத்துடன் நான் இன்னமும் கூட இந்தியாவில் பல இடங்களில் குலத்தொழில் தொடர்கின்றதோ என்று நினைக்கத்தோன்றுகின்றது.‘அய்யர் சொல்கிற வேதமும், அவர் செய்கிற யாகமும் நம் க்ஷேமத்தையும் உத்தேசித்தது; அவருக்குப் போட்டிருக்கிற கடும் ஒழுக்க விதிகள் நமக்கும் லக்ஷ்யத்தைக் காட்டிக் கொடுக்கிறது*. ஆனபடியால் அவர் கார்யத்தை, அவருக்கான வாழ்க்கை முறையை அநுஸரித்துக்கொண்டு அப்படியே இருக்கட்டும்; அவரைப் போய் நாம் தொந்தரவு பண்ண வேண்டாம், அவரோடு போட்டிபோட வேண்டாம்’ என்று இதரர்கள் நினைத்தவரை (இப்படித்தான் யுகாந்தரமாக நடந்து வந்திருக்கிறது) எல்லாம் ஸரியாயிருந்தது. ஸமூஹ வாழ்வு க்ரமமாக, ஐக்ய மனப்பான்மையுடன் போய்க் கொண்டிருக்கிறது.எல்லோருக்கும் கல்வி வேண்டும் என வேறு குலத்தொழிலை செய்பவர் நினத்தால் அது போட்டி எனக் கருதுவதாக எண்ணம் கொண்டிருப்பது, என்பதன் பின்னனியில் ஒரு சுயனலம் சார்ந்த குரல் ஒலிக்கின்றது.
--
--
திரு தேமொழி அவர்களுக்குஇந்த தெய்வத்தின் குரல் எனும் தொடர் சங்கரமடம் வெளியிட்ட தா ?
ஆம் எனின் இந்த கருத்துக்களை எழுதிவர் யார் அதாவது அந்த வெளியீட்டில் காணப்படுவது
இது ஒர் அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம், அறிஞர் பேரறிஞனாகலாம். மனிதன் தெய்வமாகலாம், இந்த தெய்வத்தின் குரலை, பல டேப் களிலிருந்தும் கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்தும் எடுத்தும் எழுதியவர் காஞ்சிப் பெரியவர்ளிள் அன்பையும் ஆசியையும் பெரிதும் பெற்ற ஆசிரியர் திரு.ரா. கணபதி அவர்கள்.
ஒன்றுநீங்கள் கா ட்டும் இவை மறு வெளியீடா அல்லது முதல் முத்ல் வரும் கன்னி வெளியீடா? (காலத்துடன் )முதலில் வெளியிட்ட ஊடகம் எது
முடிந்தால் வைக்கலாம்அன்புடன்
நூ த லோ சுமயிலை
2016-03-12 11:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்த இழையின் பதிவுகள் மறுவாசிப்பாக பலருக்கு உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது.கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...... தேமொழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இவர்கள் எந்தப் பதிப்பை தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற குறிப்பைக் கொடுக்கவில்லை ஐயா.நூல் வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் மேலதிகத் தகவல் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
2016-03-12 14:24 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:இவர்கள் எந்தப் பதிப்பை தளத்தில் வெளியிட்டுள்ளார்கள் என்ற குறிப்பைக் கொடுக்கவில்லை ஐயா.நூல் வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் மேலதிகத் தகவல் தருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
கல்கியில் ரா கணபதி தொடராக எழுதி, வானதி பதிப்பகம் ஏழு தொகுதிகளாக வெளியிட்டது.
தொடர்ச்சி ....நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...---
பாடதிட்டத்தில் வேறுபாடுகள்POSTED ON DECEMBER 23, 2014
..
---“ப்ரத்யேகச் சூழ்நிலை”POSTED ON DECEMBER 23, 2014“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,ப்ராமணன்தான் எல்லா ஜாதியாருக்கும் அவரவருக்கான தொழிலைக் கற்பிக்க வேண்டியவன் என்பது நம் பூர்விகர்களுடைய ஏற்பாடு. தொழில் மாத்திரமின்றி தர்மம், ஆத்ம க்ஷேமத்துக்கான விஷயம் முதலியவற்றையும் ப்ராமணர்கள் பிறருக்கு போதிப்பார்கள். ஆனாலும் இப்படி போதிக்கும்போது நாலாம் வர்ணத்தாராகிய ஜன ஸமூஹத்துக்கு வேதத்தை மட்டும் நேராக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்.
ஜனங்களிடையே பலவேறு தொழில்களையும் பாரம்பர்யமாகப் பங்கீடு செய்து வைத்த நம்முடைய வர்ண தர்மத்தின்படி வேதக் கல்வியும் அதன்படியான அநுஷ்டானங்களும் ப்ராமணன் ஒருத்தனுக்குத்தான் ஆயுள் காலத் தொழில் என்று பங்கீடு பண்ணி வைத்து விட்டதால் இவற்றை ஓரோர் அளவுக்கு மாத்திரம் க்ஷத்ரியர்களுக்கும் வைச்யர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது, நாலாம் வர்ணத்துக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தார்கள்1.
நேராக வேதத்தைச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அதன் அபிப்ராயங்களையும், தத்வார்த்தங்களையும் புராண இதிஹாஸங்களாகவும் நீதி நூல்களாகவும் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்தார்கள்.
இதரர்கள் (நாலாம் வர்ணத்தார்) அவர்களுடைய ஜாதித் தொழில்களை வெகு நன்றாகச் செய்து கொண்டிருக்கும்போது அதை விட்டுவிட்டுத் தொழில் கற்றுக்கொள்வதற்காக எங்கோ ஒதுக்குப்புறத்திலிருந்த குருகுலத்துக்கு அவர்களுடைய குழந்தைகள் போகவேண்டிய அவச்யமிருக்கவில்லை. வீடே அவர்களுக்குப் பள்ளிக்கூடமாகவும் இருந்தது.
தொடர்ச்சி ....நேரமில்லாதவர்கள் தனித்து சிறப்பித்துக் காட்டப்பட்ட பகுதிகளை மட்டும் படித்து கடந்து செல்க...
..
---“ப்ரத்யேகச் சூழ்நிலை”POSTED ON DECEMBER 23, 2014“அதென்ன ப்ரத்யேகச் சூழ்நிலை?” என்றால்,
..
வேத வித்யையில் அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பழங்கால வித்யாசாலைகளில் சேரத் தகுதியிருந்தாலும் உபநயன ஸம்ஸ்காரத்தை இந்த வர்ணத்தினர்களுக்கு வேறு வேறு வயஸில் வைத்திருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும்.
இப்படிப் பண்ணுவதில் ப்ராமணப் பிள்ளையானால் எட்டு வயஸுக்கே பூணூல் போட்டு குருவிடம் அனுப்புவது என்றும், க்ஷத்ரியப் பிள்ளைக்குப் பதினோரு வயஸிலும் வைச்யப் பிள்ளைக்குப் பன்னிரண்டு வயஸிலும் இப்படிச் செய்வதெனறும் இருந்திருக்கிறது.ப்ராமணப் பிள்ளையைப் பதினாறு வயஸுக்கு மேல் பூணூல் போடாமல் வைக்கப்படாது. இதேமாதிரி க்ஷத்ரியனுக்கு ‘அப்பர் லிமிட்’ இருபத்திரண்டு வயஸு. வைச்யனுக்கு இருபத்திநாலு.ரொம்ப சூட்டிகையாயிருந்தால் ப்ராமணப் பிள்ளைக்கு ஐந்து வயஸிலும், க்ஷத்ரியப் பிள்ளைக்கு ஆறு வயஸிலும், வைச்யப் பிள்ளைக்கு எட்டு வயஸிலும் பூணூல் போட்டு வித்யாப்யாஸம் ஆரம்பிக்கலாம்.ஏன் இப்படி ப்ராமணனைவிட மற்ற ஜாதியாருக்கு வித்யாப்யாஸத்தை வித்யாஸப்படுத்தியிருக்கிறது, தள்ளிப் போட்டிருக்கிறது என்றால்…எந்தக் குழந்தையானாலும் அதற்கு அதனுடைய இயற்கையான வீட்டுச் சூழ்நிலையில், அதற்கான வாழ்க்கைத் தொழிலில் இயல்பான ருசி ஏற்படும் என்பதுதான் காரணம். இமிடேட் பண்ணுவது குழந்தையின் குணம். ப்ராமணனைத் தவிர மற்றவர்கள் உடம்பாலே நிறையத் தொழில் செய்பவர்கள். ஒருத்தன் கத்தி சுழற்றுவான். இன்னொருத்தன் உழுவான். இன்னொருத்தன் நெசவு செய்வான், இப்படிப் பல. அந்த ஜாதித் தொழில்களை ஸ்வதர்மமாகக் கொண்ட குழந்தைகள் குருகுலத்திலே அந்தத் தொழில்களில் எதுவுமே நடப்பதைப் பார்க்கமுடியாது. தொழில் செய்கிற இடமில்லை குருகுலம். தொழில்முறையை அறிகிற, அறிவைப் பரப்புகிற இடம்தான் அது.
அறிவை வளர்ப்பதையே ஆயுஸ்காலத் தொழிலாகக் கொண்ட ப்ராமண ஜாதியில் பிறந்த குழந்தைகளைத் தவிர மற்ற ஜாதிக் குழந்தைகளை ரொம்பவும் சின்ன வயஸில் குருகுலத்தில் அடைக்க வேண்டாம்;
அந்தக் குழந்தைகள் அகத்திலேயே அப்பன் பாட்டனோடு ஸந்தோஷமாக வஸித்துக்கொண்டும், அவர்களோடேயே ஆயுதசாலைக்கோ கடைக்கோ நிலத்துக்கோ பட்டறைக்கோ போயும் அவர்கள் செய்யும் தொழிலைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, ‘இமிடேஷன்’ செய்கிற ‘இன்ஸ்டிங்க்டி’ல் அதே மாதிரி செய்துகொள்ளட்டும் என்று விட்டார்கள். இப்படி வேலையில் குழந்தை ஒத்தாசை செய்வது அந்த ஜாதியாருக்கு வேலையையும் குறைத்து வருமான லாபத்தையும் உண்டாக்கிற்று.
இன்னொரு அம்சத்தையும் கவனிக்கவேண்டும். மந்த்ர சக்தியை உண்டாக்கிக்கொள்ள வேண்டியதை முன்னிட்டு ஆஹாரம் முதலானவற்றில் ப்ராமணக் குழந்தைக்கு இருக்கிற கட்டுப்பாடு மற்ற ஜாதிக் குழந்தைகளுக்கு இல்லை. ப்ராமமணன் நடத்தும் குருகுலத்தில் அந்த மற்றக் குழந்தைகளுக்குப் பழக்கமான, அவர்களுக்குத் தேவையான ஆஹாராதிகளை எப்படிச் சேர்க்கமுடியும்?
பௌத்த – ஜைனர் கல்விச் சிறப்புPOSTED ON DECEMBER 29, 2014ஸமய ஸித்தாந்தம், தத்வவாதம், மதமாற்று யுக்திகள் ‘அஹிம்ஸை’ என்று வானளாவச் சொல்லிக்கொண்டே மாற்று மதக்காரரை உப்பரிகையிலிருந்து உருட்டித்தள்ளுவது1. அவர்களுடைய மடாலயத்துக்கு நெருப்பு வைப்பது2 ஆகியவையெல்லாம் எப்படியோ போகட்டும். கல்வி, அறிவாற்றல், தத்வ சோதனம் என்று எடுத்துக் கொண்டால் பௌத்தர்களும் ஜைனர்களும் இவற்றில் நல்ல சிறப்புப் பெற்றிருந்ததை ஆக்ஷேபிப்பதற்கில்லை. இலக்கியத்திலும் இவர்கள் தொண்டு அல்ப ஸ்வல்பமானதல்ல. இவர்களில் வடக்கே பௌத்தர் செல்வாக்கு அதிகம். தெற்கே சமணர் செல்வாக்கு அதிகம்.“பள்ளி” என்று தமிழில் ஸ்கூல்களுக்குப் பேர் வந்ததற்குக் காரணமே முதலில் சமணப் பள்ளிகள் எனப்படும் ஜைனர்களின் துறவிச்சாலைகளிலேயே ஸகல ஜாதி ஜனங்களுக்குமான புதுமுறை போதனை தொடங்கியதுதான் என்கிறார்கள். ‘பள்ளி என்று பல ஊர் பேர்கள் முடிவதும் அங்கேயெல்லாம் சமணப் பள்ளிகள் இருந்ததால்தான்; சிரா என்ற சமண முனிவரின் பள்ளி இருந்த இடம்தான் (திருச்)சிராப்பள்ளி’ என்றெல்லாம் அபிப்ராயமுண்டு.(பள்ளி என்கிறபோது வேடிக்கையாக ஒன்று: பள்ளி கொள்வது, பள்ளியறை என்கிறபோது பள்ளி என்பது படுத்துக்கொள்வதைத்தானே குறிக்கிறது? மழைக் குகைகளில் வஸித்த அநேக சமணத் துறவிகள் திறந்தவெளியில் கல்லையே மழமழ என்று நைஸ் பண்ணித் தங்களுக்கு உண்டாக்கிக் கொண்டிருந்த படுக்கைகள் இப்போதும் பாண்டி நாட்டிலும் திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களிலும் உள்ளன.கேசத்தை ஒவ்வொன்றாய் பிடுங்கிக்கொண்டே தலையை மொட்டையாக்கிக் கொள்ளவேண்டும் என்பது போல, தேஹ ச்ரமத்தையே முக்யமாகக் கொண்டு, அதனால் ‘ச்ரமணர்’ (சமணர்) என்றே பெயர்பெற்றவர்களானாலும், அவர்களிலும் தாரதம்யம் அதிகம் பார்க்காமல் நிறையத் துறவிகளை உண்டாக்கினபோது, கல்லைக்கூடப் பஞ்சாகப் பண்ணிக்கொள்ளும் ஸொகஸுக்கு இடம் கொடுக்க வேண்டியிருகிறது! நான் எந்த மதத்தையும் தாக்கவில்லை; கேலி பண்ணவும் இதைச் சொல்லவில்லை. பொது மனுஷ இயற்கை எப்படியிருக்கிறது? அதைக் கவனிக்காமல் லக்ஷ்ய நிலையைப் பரவலாக அமல் பண்ணப் பார்த்தால் எப்படி லக்ஷ்யமே நீர்த்துப் போகிறது என்றுதான் காட்ட வந்ததேன்.பள்ளி–படுக்கை ஸம்பந்தத்துக்காகச் சொன்னேன்.
சமணப் பள்ளி, பௌத்த பள்ளி என்பதை வைத்தே பிற்பாடு துருஷ்க மதம் பரவினபோதும் மசூதிக்குப் பள்ளி வாசல் என்று பெயர் வந்திருக்கிறது. இதிலே பாமர ஜனங்களுக்கு உண்டான குழறுபடியால் பரமதஸ்தரில் எவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் மலையாள தேசத்தில் இப்போதும் துருஷ்கர்களை ‘பௌத்தன்மார்’ என்று சொல்வதைக் கேட்கிறோம்!)சமண–பௌத்தர்கள் கல்விக்கும் இலக்கியத்துக்கும் செய்த சேவை பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன்?ஐம்பெரும் காப்பியம் என்பவையே அவர்களுடையவைதான்.தமிழிலக்கியத்தில் மிகவும் உயர்ந்ததாகச் சொல்லும் “சிலப்பதிகார”த்தை எழுதிய இளங்கோ சமணத் துறவிதான். “மணிமேகலை” எழுதியவர் பௌத்தரான சீத்தலை சாத்தனார். “குண்டலகேசி”யும் பௌத்த காவியம்தான். “சீவகசிந்தாமணி” திருத்தக்கதேவர் என்ற சமணர் செய்தது. “கலிங்கத்துப்பரணி” எழுதிய ஜயங்கொண்டாரும் சமணர்தான். ‘நன்னூல்’ என்ற இலக்கண நூல், ‘யாப்பருங்கலக்காரிகை’ என்ற செய்யுளிலக்கண நூல், ‘அறநெறிச்சாரம்’ என்று வைராக்யத்தைச் சொல்லும் நூல், ‘நாலடியார்’ என்ற நீதிநூல் முதலானவையும் சமணர் எழுதியவைதான். ‘வீர சோழியம்’ என்ற இலக்கண நூல் பௌத்தர் எழுதியது.வடக்கே பௌத்தர்களின் ஸர்வகலாசாலைகள் அந்நிய தேசங்களில் பெயரெடுக்கும்படியாக அவ்வளவு பெரிய அளவில், அநேக faculty-களுடன் (பாடத்துறைகளுடன்) பாட திட்டமும் ரொம்ப க்ரமமாக வகுத்து நடந்திருக்கின்றன. சீன யாத்ரிகர்கள் பலர் நம் நாட்டுக்கு வந்ததற்கு முக்யமான காரணமே இவற்றில் சேர்ந்து புத்தமத தத்வங்களைப் படிப்பதற்குத்தான், இவர்களில் ஹுவான்-த்ஸாங் என்பவர் இங்கே படித்தது மட்டுமில்லாமல் நாலந்தா ஸர்வகலாசாலையில், தற்போது Dean என்று சொல்கிற ஸ்தானத்தில், ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்று ஸமீபத்தில் படித்தேன்.
அர்த்த சாஸ்திரம்
கூறும் வருண தருமங்களாவன:-
அந்தணர்க்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனும் இவ்வாறுமாம்.
அரசர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிறல், உயிர்களைக் காத்தல் என்னும் இவ்வைந்துமாம்.
வணிகர்க்கு ஓதல், வேட்டல், ஈதல், உழவு, பசுக்காவல், வாணிகம் இவ்வாறுமாம்.
சூத்திரர்க்கு இருபிறப்பாளர் மூவர்க்கும் பணிபுரிதல், உழவு, பசுக்காவல், வாணிகம், காருகன்மம் (நெசவுத் தொழில்), குசீலவகன்மம் (குயிலுவம் என்பது தமிழ் வழக்கு - ஆடல் பாடல் முதலியன: குசீலவர்கள் - கூத்தாடுவோர்) என்னும் இவையாம். (முதல் அதிகரணம், முதற் பிரகரணம், மூன்றாம் அத்தியாயம்)
(not able to get exact reference)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.