எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான [விலக்கப்பட்ட] நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால் ஆர்டிஃபீஷியலாக [செயற்கை முறைகளில்] குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.
இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்கார்ந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதட்சிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. யக்ஞம் மட்டுமில்லாமல், ‘பூர்த்த தர்மம்’ என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஓரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.
இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதட்சிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா? இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள் அதிகம் பிறந்து, முடிவில் வரதட்சிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேறு ஸப்ஜெக்ட்.
இந்திரிய ஸுகத்திலும் வியவஸ்தை வேண்டும் என்பதில் ஆரம்பித்தேன்.
----
பார்க்க: https://dheivathinkural.wordpress.com/2014/07/25/குடும்பக்-கட்டுப்பாடும்/குடும்பக் கட்டுப்பாடும் பெண் தொகைப் பெருக்கமும்
POSTED ON JULY 25, 2014
எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான [விலக்கப்பட்ட] நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால் ஆர்டிஃபீஷியலாக [செயற்கை முறைகளில்] குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.
இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்கார்ந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதட்சிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. யக்ஞம் மட்டுமில்லாமல், ‘பூர்த்த தர்மம்’ என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஓரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.
இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதட்சிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா? இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள் அதிகம் பிறந்து, முடிவில் வரதட்சிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேறு ஸப்ஜெக்ட்.
2016-03-30 20:28 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:பார்க்க: https://dheivathinkural.wordpress.com/2014/07/25/குடும்பக்-கட்டுப்பாடும்/குடும்பக் கட்டுப்பாடும் பெண் தொகைப் பெருக்கமும்
POSTED ON JULY 25, 2014எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது குடும்பக் கட்டுப்பாடு என்று அஸங்கியமாகப் பல காரியங்களை தண்டோரா போட்டுக் கொண்டு பண்ணுகிறார்களே, இதற்கு அவசியமே இல்லாமல், தன்னால் இயற்கையாகவே குழந்தைகள் பிறப்பது ரொம்பவும் மட்டுப்படும். முடிந்த மட்டில் சமைத்த ஆஹாரங்களுக்குப் பதில் பழங்களைச் சாப்பிடுவது, சாஸ்திரப்படி நிஷேதனமான [விலக்கப்பட்ட] நாட்களில் பிரம்மச்சரியத்தோடு இருப்பது என்பதாக தம்பதிகள் இருக்க ஆரம்பித்து விட்டால் ஆர்டிஃபீஷியலாக [செயற்கை முறைகளில்] குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது.
இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பொருளாதார சாஸ்திரப்படி, குறைச்சலாக உள்ள சரக்குக்குத்தான் கிராக்கி ஜாஸ்தி. இதன்படி, பாபுலேஷனில் புருஷப் பிரஜைகள் குறைவாகி, பெண்கள் அதிகமாக ஆரம்பித்தபோதுதான், பெண்களுக்கு ஸம எண்ணிக்கையில் பிள்ளைகள் இல்லாததால் பெண்ணைப் பெற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வரதக்ஷிணை கொடுக்கிற பழக்கம் ஏற்பட்டது. இது ஸமீபகால வழக்கந்தான். இது ஏற்பட்ட சந்தர்பத்தை நான் ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், வெள்ளைக்கார ஆட்சி ஏற்பட்டு பிராம்மணர்கள் குமாஸ்தாக்களாக நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வெறும் பேனாவால் உழுகிற sedantry வேலைகளை ஆரம்பித்த பின்தான் இந்த நிலை உண்டானதாகத் தெரிந்தது. அதாவது உடல் வருந்த இவன் யக்ஞ கர்மாநுஷ்டானம் பண்ணின காலம் போய் உட்கார்ந்து உத்தியோகம் பண்ண ஆரம்பித்த பின்தான் இவனுக்குப் புருஷ பிரஜைகளைவிட அதிகமாகப் பெண் குழந்தைகள் பிறக்க ஆரம்பித்தன. கடைசியில் அதன் விளைவாகப் பிள்ளைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு வரதட்சிணை என்கிற பெரிய களங்கம் உண்டாகி விட்டது. யக்ஞம் மட்டுமில்லாமல், ‘பூர்த்த தர்மம்’ என்ற பெயரில் முன் காலங்களில் பிராம்மணன் ஸோஷல் ஸர்வீஸ் செய்த போது வெட்டுவது, கொத்துவது, உழுவது முதலான காரியங்களிலும் மற்றவர்களோடு ஓரளவு பங்கு எடுத்துக் கொண்டு சரீர சிரமம் நிறையப்பட்ட வரையில் அவனுக்கு ஆண் பிரஜையே அதிகமாகப் பிறந்தது.
மிக நல்ல அலசல். னான் புஇர்ந்து ஒண்டது இதுதான்.
வரதட்சணையைக் குறைக்க அல்லது தடுக்க ஆண்மகவுகளை அதிகமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.அதிகமாக ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆபீஸ் வேலைகளை விட்டு விட்டு விவசாயத்திற்கு திரும்பினால் நன்று.சரி குழப்புகின்றதே. நான்கு வர்ண தர்மப்படி பிராமண குலத்தோர் கல்வி கற்றுக் கொடுத்தல் மட்டுமே அல்லவா செய்யவேண்டும். அதுவும் உழுதல் தொழில் அல்லவே. உட்கார்த்து சுவடியால் கீறும், வாசிக்கும் வேலைதானே. அப்போது ஆண்குழந்தை பிறக்காமல் பெண்கள் பிராமண குலத்தில் அதிகமாகிப் போனார்களோ? ஏனைய சத்ரிய, வைசிய, சூத்திர அதாவது உடல் உழைப்பு வர்ணங்களில் அதிகம் ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்தனரோ...நான் குழம்பிவிட்டேன்..இப்படி நான் சொல்வதற்கு பலன் தருவதாக இன்னொன்றும் சொல்கிறேன். முன்பு பிராம்மணர்களிடம் மட்டுமிருந்த வரதட்சிணை வழக்கம் மெதுவாக இப்போது மற்ற சில ஜாதியார்களிடமும் ஏற்பட்டு வருகிறதல்லவா? இவர்கள் யார் என்று பார்த்தால், அநேகமாக இவர்களும் சரீர உழைப்பை விட்டுவிட்டு, உட்கார்ந்து வேலை பார்க்கிற முறைக்குத் திரும்பினவர்களாகவே இருக்கிறார்கள்.
ஆனபடியால் இப்போது ஆபீஸ்களில் வேலை செய்கிறவர்களும், லீவ் நாட்களிலாவது குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோவிலுக்கு மதில் கட்டுவது முதலான ஸோஷல் சர்வீஸ்களை உடல் வருந்தப் பண்ணினால் ஆண் பிரஜைகள் அதிகம் பிறந்து, முடிவில் வரதட்சிணைப் பழக்கம் தொலையும் என்று நினைக்கிறேன். ஆனால் அது வேறு ஸப்ஜெக்ட்.
உடல் உழைப்பு சோஷியல் சர்வீஸ் செய்து ஆண்குழந்தையைப் பெற்று, அதனால் வரதட்சனை குறையுமோ இல்லையோ உடம்புக்கு நல்லது.அதற்காகவேனும் அனைவரும் சமூக சேவையை செய்வோம்.சுபா
http://www.periyar.org/downloads/pen.pdf
ஒன்பதாம் அத்தியாயம்
கர்ப்பத் தடை
கர்ப்பத் தடை என்பதுபற்றிச் சில வருஷங்களுக்கு முன் நாம் கூறியது அநேகருக்குத் திடுக்கிடும்படியான செய்தியாயிருந்தது. ஆனால், இப்போது சிறிது காலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சாதாரணச் செய்தியாய்விட்டது. வரவர அது செல்வாக்குப்பெற்றும் வருகின்றது. பெரிய உத்தியோகத்தில் இருந்த சர்.சி.பி. சிவசாமி அய்யரும், பெரிய உத்தியோகத்தில் இப்போது இருக்கும் ஜஸ்டிஸ் ராமேசம் அவர்களும் ஆகிய பார்ப்பனர்களும் மற்றும் பலரும் இது விஷயமாக அடிக்கடி பேசி வருகின்றதையும், எழுதி வருகின்றதையும் பத்திரிகையில் பார்த்து வருகின்றோம். சென்னைச் சட்டசபையிலும் கர்ப்பத்தடை விஷயமாய்ப் பிரச்சாரம் செய்யவேண்டுமென்று பிரஸ்தாபிக்கப்பட்டதையும் நேயர்கள் கவனித்து இருக்கலாம்.
ஆனால், கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டில் பலர்கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால், நமது கருத்தோ இவைகளைப் பிரதானமாய்க்கருதியதன்று. மற்றெதைக் கருதியதென்றால், முன்சொன்னதுபோல, பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும். சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய்ப்பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். அதுமாத்திால்லாமல், பல பிள்ளைகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களும்கூடச் சுயேச்சையுடனும், வீரத்துடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதன் உண்மை, சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தங்கள் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.
ஒரு மனிதன், தன் கஷ்ட நிலையில் பேசும்போது, "நான் தனியாயிருந்தால் ஒரு கை பார்த்துவிடுவேன். 4, 5 குழந்தையும், குட்டியும் ஏற்பட்டுவிட்டதால், இவைகளைக் காப்பாற்றவேண்டுமே என்கின்ற கவலையால் பிறர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாயிருக்க நேர்ந்திருக்கின்றது" என்றே சொல்லுகின்றான். அதுபோலவே, ஒரு ஸ்திரி, புருஷனாலோ அல்லது வேறு எதனாலோ சங்கடம் ஏற்படும்போது, "நான் தனியாய் இருந்தால் எங்காகிலும் தலையின்மேல் துணியைப் போட்டுக்கொண்டு போய்விடுவேன்; அல்லது ஒரு ஆற்றிலாவது, குளத்திலாவது இறங்கிவிடுவேன்; இந்தக் கஷ்டத்தைச் சகித்துக்கொண்டு அரை நிமிஷம் இருக்கமாட்டேன். ஆனால், இந்தக் குழந்தைகளையும், குஞ்சுகளையும் நான் எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்" என்றேசொல்லுகின்றாள். ஆகவே, இந்த இருவருக்கும் அவர்களது சுயேச்சையையும், விடுதலையையும் கெடுப்பது இந்தக் குழந்தைகள், குஞ்சுகள் என்பவைகளேயாகும்.
உலகத்தில் மக்கள் தங்கள் உடலாலும் அறிவாலும் கஷ்டப்பட்டுத் தத்தம் ஜீவனத்திற்குப் பொருள் தேடுவதற்கே சுதந்திரத்தை விற்றுச் சுயமரியாதையைப் பலி கொடுத்து அடிமைகளாக வேண்டிய நிலையில் இருக்கும்போது, பிள்ளைகளையும், குட்டிகளையும் காப்பாற்றவேண்டிய அவசியம் தலைமேல் இருக்குமானால், இந்த இடத்தில் எப்படிச் சுயேச்சை இருக்க முடியும்? ஆகையால், இன்றைய நம் உலகில் ஆண், பெண் இருவரினுடைய சுயேச்சைக்கே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்குக் கர்ப்பம் என்பது கொடிய விரோதமாய் இருக்கின்றது. பெண்களுக்குச் சொத்தும், வருவாயும், தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்தே தீரவேண்டியிருக்கின்றது. அதனால்தான் நாம் கண்டிப்பாய்ப் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆகவேண்டும் என்கின்றோம். அன்றியும், பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும், ஆண்களில் பிரம்மச்சாரிகளும், சன்யாசிகளும், சங்கராச்சாரியார்களும், தம்பிரான்களும், பண்டாரச் சன்னதிகளும் எற்பட்டிருப்பதுபோல், பெண்களில் பிரம்மச்சாரிகளும், சங்கராச்சாரி முதலியவர்களும் ஏற்படுவதற்கும், சுதந்திரத்தோடு வாழவும், பல கோடி ரூபாய்க்கு அதிபதியாகவும், பல ஆண்களும், பெண்களும்போற்றிப்புகழ்ந்து வணங்குபடியான ஸ்தானத்தைக் கைப்பற்றவும் இந்தக் கர்ப்பமே தடையாயிருந்து வருகின்றது. இந்நிலையில்தான் பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்தவேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். இந்தப்படி நம்மில் ஒவ்வொருவரும் கர்ப்பத்தடை விஷயமாய்க் கருதும் காரணம் எப்படி இருந்தபோதிலும், நமக்கும் மற்றைய கர்ப்பத்தடைக் காரருக்கும் கர்ப்பத்தடை அவசியம் என்பதில் அபிப்பிராய பேதமில்லாதிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்.
ஆனால், இந்த முக்கியக் காரணங்களில் கொஞ்ச காலத்திற்கு முன் சட்டசபையில் அரசாங்கத்தினர் சார்பாய்ச் சுகாதார மந்திரி கர்ப்பத்தடைப் பிரச்சாரத்தை எதிர்த்ததும், பெண்கள் சார்பாய்ச் சட்டசபைக்குள் சென்ற டாக்டர் முத்துலட்சுமி அம்மாளும், அவருக்கு அனுசரணையாய் இருந்ததும் நமக்கு மிக்க ஏமாற்றத்தையே கொடுத்துவிட்டன. இந்தத் தேசத்தில் பிறக்கும் குழந்தைகளையெல்லாம் இந்த அரசாங்கமே வளர்த்து அவைகளுக்குக் கல்வி கொடுத்து மேஜர் ஆக்கிவிடவேண்டும் என்கின்ற ஒரு நிபந்தனை இருந்திருக்குமேயானால், சுகாதார மந்திரி அரசாங்கத்தின் சார்பாய்க் கர்ப்பத்தடையை எதிர்த்திருக்கமாட்டார். அப்படிக்கில்லாமல், யாரோ பெற்று யாரோ சுயமரியாதை இழந்து, யாரோ அடிமையாய் இருந்து வளர்த்து மக்களைப் பெருக்கி வருவதானால், சர்க்கார் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முன்வருவார்கள்? உண்மையான சுகாதாரத்தில் பிள்ளைப்பேற்றைத் தடுப்பது முக்கியமான சுகாதாரம் என்று சுகாதார மந்திரிக்கும், பெண்மணியாய் இருந்தும் டாக்டர் பட்டம் பெற்ற முத்துலட்சுமி அம்மாளுக்கும் தெரியாமல் போனது வருந்தத்தக்க காரியமேயாகும். இந்த விஷயத்தில் அரசாங்கத்தார் விபரீதமான அபிப்பிராயப்பட்டாலுங்கூட பொது ஜனங்கள் அதை லட்சியம் செய்யாமல் ஒவ்வொருவரும் இதைக் கவனித்து, அவரவர்களே தக்கது செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமான காரியமாகும். மதுவிலக்குப் பிரச்சாரத்தைவிட, தொத்து வியாதிகளை ஒழிக்கும் பிரச்சாரத்தைவிட, இந்தக் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் மிக முக்கியமானதென்பதே நமது அபிப்பிராயம்.
ஆதலால், இந்தக் கர்ப்பத்தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்தி, அதன்மூலம் துண்டுப் பிரசுரங்களும், பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளியிடுவதுடன், கர்ப்பத்தடை சம்பந்தமாக ஆங்கிலத்திலும், பிறபாஷைகளிலுமுள்ள அரிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துவெளியிடுவதுடன், கர்ப்பத்தடையால் - நாடும், நம் பெண்களும், நலத்தையும், சுதந்திரத்தையும் பெறுவதான நாடகம், சினிமா முதலியவைகள் மூலமாய்ப் பிரச்சாரம் செய்யப் பொதுஜனங்களில் சிலராவது இது சமயம் முன்வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்கின்றோம்.
-----
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அவர்கள் பல கோணங்களை சொல்லவில்லையே? தம் கோணத்தை தானே சொன்னார்கள்.
பலகோணத்தை மக்களுக்கு அறிமுகபடுத்தும் நீங்கள் உங்கள் கோணத்தை சேர்த்தே சொல்லவேன்டியது அவசியம் ஆகிறது
2016-03-30 15:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, March 30, 2016 at 1:41:57 PM UTC-7, செல்வன் wrote:ஒருவருக்கு சும்மா கோணங்களை மட்டும் கொடுப்பது பொறுப்பற்ர செயல்.பல கோணங்களை அறிமுகபப்டுத்தி "அதில் எது நல்லது, எது பொறுப்பற்றது, எது அறிவுடமை, எது முடாள்தனம்" என நம் கருத்தையும் சேர்த்து சொல்லியே கொடுக்கவேண்டும்.அதுவே முடிவெடுக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.எழுத்தாளனின் சமூக கடமையும் அதனால் நிறைவுறும்அதைத்தான் அந்த எழுத்தாளர்கள் விளக்குகிறார்கள்.... அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பது உங்கள் கருத்தா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Wednesday, March 30, 2016 at 1:55:17 PM UTC-7, செல்வன் wrote:அவர்கள் பல கோணங்களை சொல்லவில்லையே? தம் கோணத்தை தானே சொன்னார்கள்.இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.-----ஆனால், கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டில் பலர்கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால், நமது கருத்தோ இவைகளைப் பிரதானமாய்க்கருதியதன்று. மற்றெதைக் கருதியதென்றால், முன்சொன்னதுபோல, பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும். சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய்ப்பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். அதுமாத்திால்லாமல், பல பிள்ளைகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களும்கூடச் சுயேச்சையுடனும், வீரத்துடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதன் உண்மை, சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தங்கள் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.இந்த பத்திகளை ஒமிட்ல தட்டிடீங்களோ
பலகோணத்தை மக்களுக்கு அறிமுகபடுத்தும் நீங்கள் உங்கள் கோணத்தை சேர்த்தே சொல்லவேன்டியது அவசியம் ஆகிறது
2016-03-30 15:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, March 30, 2016 at 1:41:57 PM UTC-7, செல்வன் wrote:ஒருவருக்கு சும்மா கோணங்களை மட்டும் கொடுப்பது பொறுப்பற்ர செயல்.பல கோணங்களை அறிமுகபப்டுத்தி "அதில் எது நல்லது, எது பொறுப்பற்றது, எது அறிவுடமை, எது முடாள்தனம்" என நம் கருத்தையும் சேர்த்து சொல்லியே கொடுக்கவேண்டும்.அதுவே முடிவெடுக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.எழுத்தாளனின் சமூக கடமையும் அதனால் நிறைவுறும்அதைத்தான் அந்த எழுத்தாளர்கள் விளக்குகிறார்கள்.... அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பது உங்கள் கருத்தா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இரண்டையும் அடிகோடு இட்டால் உங்கள் கருத்து இதில் எது என்பதை எப்படி புரிந்துகொள்வது?
அதனால் உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள்...கேட்டுகொள்கிறேன். சஙராச்சார்யார், பெரியார் இருவர் கருத்தும் எனக்கு முன்பே படித்ததுதான். புதிதாக தெரிந்துகொள்லவேண்டியது உங்கள் கருத்துதான்
தான் வாழும் வாழ்கை சூழ்நிலைக்கேற்ப ....ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், தனது இலக்கு எது என்பதை எல்லாம் ஒரு பெண்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.குறிப்பாக இதிலிருந்து நிறுவன அமைப்பு முறைகள் (அரசும், மதமும்) பெண்களை மூளைச் சலவை செய்வதையோ, அல்லது மாறுபட்ட முடிவு எடுப்பதை இழித்துரைப்பதையோ செய்யாமல் விலகி நிற்க வேண்டும்.சட்டத்திற்குட்பட்டு பெண்கள் எடுக்கும் அவர்களது முடிவை செயல்படுத்த உதவி செய்வதை மட்டுமே செய்ய வேண்டும்..... தேமொழி
2016-03-30 16:06 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, March 30, 2016 at 1:55:17 PM UTC-7, செல்வன் wrote:அவர்கள் பல கோணங்களை சொல்லவில்லையே? தம் கோணத்தை தானே சொன்னார்கள்.இங்கே இன்னொரு விஷயம் சொல்கிறேன். பொதுவாக பாபுலேஷனை குறைக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்தோடு இது ஸம்பந்தமில்லை என்று தோன்றினாலும் உண்மையில் ஸம்பந்தம் உள்ளதுதான். வரதட்சிணைப் பிரச்சனைக்கு ‘ஸொல்யூஷன்’ [தீர்வு] தான் நான் சொல்ல வந்த விஷயம். வரதட்சிணைக்கும் பாபுலேஷனுக்கும் என்ன ஸம்பந்தம்? பாபுலேஷனில் பெண் பிரஜைகளின் விகிதாசாரம் ஜாஸ்தியானதால்தான் வரதட்சிணைப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.-----ஆனால், கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல்நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள். இதை மேல் நாட்டில் பலர்கூட ஆதரிக்கின்றார்கள். ஆனால், நமது கருத்தோ இவைகளைப் பிரதானமாய்க்கருதியதன்று. மற்றெதைக் கருதியதென்றால், முன்சொன்னதுபோல, பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும். சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால், சாதாரணமாய்ப்பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்கிறோம். அதுமாத்திால்லாமல், பல பிள்ளைகளைப் பெறுகின்ற காரணத்தால் ஆண்களும்கூடச் சுயேச்சையுடனும், வீரத்துடனும், விடுதலையுடனும் இருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். இதன் உண்மை, சாதாரணமாய் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் தங்கள் தங்கள் சுதந்திரங்களுக்குக் கஷ்டம் வருகின்ற காலத்தில் பேசிக் கொள்வதைப் பார்த்தாலே தெரியும்.இந்த பத்திகளை ஒமிட்ல தட்டிடீங்களோ
பலகோணத்தை மக்களுக்கு அறிமுகபடுத்தும் நீங்கள் உங்கள் கோணத்தை சேர்த்தே சொல்லவேன்டியது அவசியம் ஆகிறது
2016-03-30 15:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
On Wednesday, March 30, 2016 at 1:41:57 PM UTC-7, செல்வன் wrote:ஒருவருக்கு சும்மா கோணங்களை மட்டும் கொடுப்பது பொறுப்பற்ர செயல்.பல கோணங்களை அறிமுகபப்டுத்தி "அதில் எது நல்லது, எது பொறுப்பற்றது, எது அறிவுடமை, எது முடாள்தனம்" என நம் கருத்தையும் சேர்த்து சொல்லியே கொடுக்கவேண்டும்.அதுவே முடிவெடுக்க அவர்களுக்கு உதவியாக இருக்கும்.எழுத்தாளனின் சமூக கடமையும் அதனால் நிறைவுறும்அதைத்தான் அந்த எழுத்தாளர்கள் விளக்குகிறார்கள்.... அவர்கள் சரிவரச் செய்யவில்லை என்பது உங்கள் கருத்தா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.