ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்உங்கள் படிப்பைத் தேடிவருகிற கவிதை இது.*
வாருமய்யா எழுத்தாளரே!வரகரிசிச் சோற்றிற்குவெங்காந்த காலம் போய்வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன்திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா!செண்டு போட்டுப் புடைக்காமல்நண்டு பிடிப்பவர் போல்ஏதோ நோட்டம் விடுகின்றீர்!வாரும். என்ன தயக்கம்?சேருகின்ற துட்டைக்காப்பாக வைக்கும்வழிபற்றிக் கவலைதானோ?கவியரசு, புவியரசுக்கால் போட்டுப் பேசுகின்றஎக்காளப் பாவரசுஎன்ற பீடுக்கும்பீடை பிடித்ததுவோ?எதுவானால் என்ன?கொட்டியழும்.கொள்கை புதைத்துவைத்தசமாதி தான் திறந்துசம்மதியா ஆவியாகிவிரட்டிவந்த வேர்ப்பைத்துடைத்துவிட்ட முகம்போலேஉம்மென்றிருக்கும்உள் புயலை அவிழ்த்துவிடும்.ஊடகத்தே சதிராடிஉலகப்பொதுச் சொத்தாடிஉன்மத்தமாகி நின்றீர்!உருட்டிவிட்டே ஊடகக் கண்முன்னாடி நிற்பதற்குமுளைத்தனரோ இளவரசு?அன்றி என்றோ மறந்து போனதாய்த்தமிழின் சேலைகளாய்செல்லு பிடித்தயரும்சீரிளமை இலக்கியங்கள்வாரி முகர்ந்துவாஞ்சையுடன் பார்த்திடவேஇன்னும் கருகாதஇலக்கிய மொட்டும் உம்முள்பூத்திடுமோ?பணத்திற்கே விற்றுத்தொலைத்திட்ட பண்பாடும்,பாவலனின் கர்வங்களும்மண்ணோடு மண்ணாகிப்பின்னருமே ஒருகால்புறப்பட்டுத் தாம் வருமோஎன்ற பயத்தினிலேஎனைக்காண வந்தீரோ?இல்லை,புறமெரித்துப் புறமெரித்துநெற்றிக்கண் வற்றியதால்ஊற்றுக்கண் பொங்கும் வரைஉறக்கம் புரிகின்ற உருத்திரனார்ஒரு வேளை எழுந்தாரோஎன்ற குலை நடுக்கம்பிடரி தள்ளப் பேயறைந்துவந்தீரோ சொல்லுமய்யா!ஒற்றிவைத்த ஊர் சொத்தில்ஒப்பனையாய் உப்பரிகைஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும்ஒருநாள் வெடித்துத்தான் போகும்.சாகாத வரம் வேண்டிசந்து பொந்து கோயில்களில்சிந்தும் ஊர்ப்பணங்கள்பந்தக்கால் பக்குவங்கள்ப்ரோநோட்டு ஜாலங்கள்எல்லாம் ஒருநாளில்நாறித்தான் போகும்.கல்லாத பேர்களேநல்லவர்கள் நல்லவர்கள்என்றுரைத்த பெருமகனைவென்றுவிட்ட வரிசைகளாய்ப்பூசிய திருநீறும்போம்வழிக்கு வாராது.புதைகுழியில் போய்ப்படுத்துப்பயின்றாலும் பாவிஎமன்துயின்றுமுடித்தபின்னர்தான் தான்வருவான்.நெருநல் உளனொருவன்இன்றுமட்டும் ஆடுகின்றஆட்டத்தின் பாதி முடித்துவிட்டீர்!மீதியையும் முடித்துவிடும்.நாதியத்துப் போகுமுன்னேநாட்டாமை பார்த்துவிடும்.சேதிவரும்.அதற்குள்ளேசோதிடங்கள் ஏனய்யா?நீதி துயின்றாலும்நியாயங்கள் அயர்ந்தாலும்நீறுபூத்த நெருப்பாகிநீலகண்டர் பயின்றாலும்சோற்றுப் பருக்கைக்கும்சோகாக்கும் காலம் வரும்.அதுவரையில் சத்தியமாய்கவிதையென்றோஇலக்கிய ரசனையென்றோதத்துவாதீதமென்றோஅத்துவா மார்க்கமென்றோமானிட மகத்துவமென்றோபொய்க்கால் குதிரைகள் நீர்ஆடவேண்டாம் !அதையெல்லாம்பிழைக்கத் தெரியாமல்போக்கற்று கதியற்றுதிக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம்யாங்கள் பார்த்துக் கொள்வோம்.போங்கால் கதவடைத்துப்போம்.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்***--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Dec 18, 9:13 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை.
> எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு
> இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம்.
> ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம்
> சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும்
> வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து
> படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப்
> பற்றி எழுதியும் இருக்கிறேன்
> <http://thiruvarangan.blogspot.com/2009/12/1_13.html>http://thiruvarangan.blogspot.com/2009/12/1_13.html
நல்ல கவிதை.
’புரமெரித்து’? புறமெரித்து?
நா. கணேசன்
ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்
2010/12/19 Dr Subramanian <vav...@gmail.com>
சேதிவரும்.அதற்குள்ளேசோதிடங்கள் ஏனய்யா?பலே பலே. நல்ல வரிகள் .எதிர்பார்ப்பில் இழக்கப்படுவது நிகழ்காலம்தானே!.
வவேசு
நன்றி வ வே சு சார்
ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும்தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம்.புழுதி கிளம்பி, நுரை தள்ளிஆறுக்கு ஆறுபள்ளம் தோண்டியதுதான் மிச்சம்.கழுதைப் பொதியாய்க் கருத்துகளும்கழுத்துப் பொதியாய் பேச்சுகளும்கிடைத்த காதுகளிலும்கிட்டிய கண்களிலும்கலப்பை இல்லாமல்உழுததுதான் மிச்சம்.விளைச்சல் பேய்த்தேர்களில்மூட்டை மூட்டையாய்ஏற்றுமதியாகிறதுஎங்கென்று தெரியாமல்எப்படி என்று புரியாமல்ஏதோ கொள்முதல்;இவ்வுலகை விண்ணாக்கமுடிகிறதோ இல்லையோவிண்ணை மண்ணாக்கிவிளைநிலமும் ஆக்கிவிட்டோம்.வானில் விளைந்துகடிதில் இழிந்துதரையில் கிளைபரப்பிக்கனிகுலுங்கப் பூத்துவிட்டால்அப்புறம் அஸ்வத்தம்;எங்கோ சாவித் துளை இருக்கிறது;முதலில் சாவியைத்தான் தேட வேண்டும்.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2010/12/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
நல்ல உணர்ச்சி மிக்க கவிதை. கருத்தாழம் உடைத்து.இவன் கொணர்ந்து இட்டதற்கு நன்றி. ரசித்..தேன்யோகியார்2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2010/12/19 Dr Subramanian <vav...@gmail.com>
சேதிவரும்.அதற்குள்ளேசோதிடங்கள் ஏனய்யா?பலே பலே. நல்ல வரிகள் .எதிர்பார்ப்பில் இழக்கப்படுவது நிகழ்காலம்தானே!.
வவேசுநன்றி வ வே சு சார்
2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்உங்கள் படிப்பைத் தேடிவருகிற கவிதை இது.*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2010/12/20 selva kumaran <selvakumaran.ma@gmail.com>நிச்சயமாக இது ஒதுக்கப்படக் கூடிய (ignore) நிலையில் இருக்கும் கவிதையில்லை. ஆனால் இந்த கவிதையில் எதிர்மறையான விமர்சனம் ஒன்றிரண்டு விஷயங்களில் ஏற்படுகிறது.
அதை சொல்லுமுன், நான் கவிதையை புரிந்துக் கொண்ட விதம் சரியா என்றொரு குழப்பம்.
திரு. மோகனரங்கன் கவிதையை சற்று விளக்கினால், என் விமர்சனத்தை சற்று தைரியமாகச் சொல்ல முடியும்.
திரு செல்வகுமரன்,ஒரு கவிதை எழுதி வெளியிட்டாயிற்று என்றால் அப்புறம் அதில் ஆசிரியனும் ஒரு வாசகனாகவும் ஆகிவிடுகிறான். எனவே ’தைரியமாக’ என்றெல்லாம் தயக்கம் காட்டாதீர்கள்.இதில் கவிதை, இலக்கியம் என்று தன் வாழ்வின் உயிர்நாடியைச் சார்ந்த முக்கியமாகக் கொண்டுள்ளவன், அவனை எதற்கோ நாடி வருகின்ற மற்ற ஒருவன். இருவரும் சந்திக்கும் அல்லது சந்திக்காமல் பிரியும் கணத்தின் கனத்தையும் அவஸ்தையையும் தன் பாவமாகக் கொண்டுள்ளது இந்தக் கவிதை.அந்த மற்றவன் தன் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. கவிஞனின் எதிரியங்கும் குரலில் நிழலாட்டமாகத்தான் அவன் யாரென்று கூறப்படுகிறது.அந்த மற்றவன், கவிதை, இலக்கியம், ஆன்மிகம், மனிதாபிமானம் என அனைத்தையும் சமய சந்தர்ப வாதத்திற்கும், ராஜ சௌகர்யங்கள், விருதுகள் என்ற படாடோப ஆடம்பர வாழ்விற்கு அடமானம் வைக்க அஞ்சாதவன், அதிலேயே ஊறியவன் -- எதற்கோ அவன் வாழ்வின் ஒரு கணத்தில் தயங்கி, பிழைக்கத் தெரியாத இந்த இலட்சியக் கிறுக்கை வந்து சந்திக்க முனைகிறான்.இரு வேறு வகைப்பட்ட வாழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில் கால ஓட்டத்தில் சந்திக்கும், இல்லை சந்திக்க முடியாது என்ற நிச்சயமற்ற அதிர்வைக் கொண்டது இந்தக் கவிதை. -- இது என் வாசிப்பு.
இதில் சரியா தவறா என்பதைவிட பலவேறு விதங்களில் கவிதைக்கான வாசிப்பு சாத்தியம் ஆகிறது என்பதுதான் ரசிக்கப்பட வேண்டியது.மிக நன்றி திரு செல்வக்குமரன்.
நன்றி திரு செல்வக்குமரன். உங்கள் அலசலை மிகவும் ரசித்தேன்.நீங்கள் மட்டுமன்று. படிக்கும் ஒவ்வொருவருக்குமே வேறுபட்ட ஒவ்வொரு வாசிப்பு இருக்கும்தானே! அதுதானே கவிதையின் சிறப்பு.அதற்கு அடிப்படைக் காரணம் கவிதை நம்மிடம் வந்து சேரும் சந்தர்ப்பம்; கவிதையிடம் நாம் நம் வாழ்வில் எந்தச் சந்தர்ப்பத்தில் போய்ச் சேருகிறோம் என்பதும்.ஒருவருக்கே ஒரு சமயம் ஒரு விதமாகப் பேசுகின்ற கவிதை மற்றொரு சமயம் வேறு ஒரு விதமாகப் பேசக்கூடும்.எனவே உங்கள் அலசல் ரசனைக்குரியதாய் இருக்கிறது.உருத்திரன் எரித்தது முப்புரம். ஆனால் இங்கு ‘புறம்’ என்று வெளிப்புற திருட்டியைக் குறிப்பிடுகிறேன். சற்றே வேதாந்தமான கருத்து. அதாவது த்ருக் த்ருச்ய விவேகம் என்ற பொருளது. த்ருச்யம் -- புறம் என்றபடி. ஒலிக்குறிப்பில் முப்புரம் எரித்தலை நினைவில் கொண்டு வரக் கூடியது.இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு வாசிப்பு செய்தமைக்கு நன்றிகள்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கவியாற்றுப்படை(என்றோ பாடிப் பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டியது இது. 2001 ஆ சரியாக நினைவில்லை)கவிதைக்கு வழிசொல்லிஆற்றுப் படுத்துகின்றகவியாற்றுப் படையீதாம். ஆற்றுப்படையென்னும்இலக்கணத்திற் கொத்ததுதான்..என்றாலும்...அள்ளித்தரும் கைநிறைவோஉள்ளிப் பெரும் பொருள்நிறைவோகள்ளம் அவிழக் காலம் கனிவதற்கேமெள்ளக் குமுறும் மனக்குறையோவிள்ளற் கரிதாம் விடம்பனமோதள்ளற்கரிதாம் என உரைப்பேன்தளர்விலராய்க் கேட்டல் கடன்.*---- ஐயா! கவிராயா! சந்தையொன்று நடக்கிறதாம்எங்கென்று அறிவீரா?எனக்கும்வழி சொல்வீரா?----ஆஹா அதற்கென்ன! ஊருக்கு நடுவேஒதுங்கும் அக மையத்தில்உள்ளத்துள் சென்றக்கால்ஒரு சந்தை நடக்கிறது.அதுவா நீர் கேட்கின்றீர்?----அதுதான் நினைக்கின்றேன்.கவிகூடும் சந்தையென்றார்---- ஆமாமாம் அங்குதான் நடக்கிறது.விற்பதற்கோ வாங்குதற்கோஎற்றுக்கு நீர் செல்வீர்?கற்றவித்தை காட்டிக்கரகாட்டம் ஆடுதற்கும்கூட்டத்தின் நடுவேகோணமேடை தானுமுண்டு.---- சரக்கெடுக்கச் செல்கின்றேன்அட்டிகையாய்ப் பணப்பட்டைஅணாக்கயிறு சுற்றிவந்தேன்படிந்ததென்றால் பேரம்தான்என்ன சொல்வீர்?---- பணமெதற்கு?பா தொடுத்த பொருள் எல்லாம்பண்ட மாற்று முறைதானேபுழக்கத்தில் ஆதிமுதல்கவிதையுள்ளம் கையிருப்புகவிதை உங்கள் சரக்கெடுப்புகையிருப்பு இல்லையெனில்சரக்கெதுவும் பேராது.கடன் சொல்லி வாங்கிவரகண்டு கொள்வார் யாருமில்லை.கவியுள்ளம் இருந்ததென்றால்சந்தைக்குப் போயிடுவீர்இல்லையெனில் வந்தவழிஇங்கிருந்தே திரும்பிடுவீர்பண்டம் கவியுள்ளம்மாற்றிக்கொள் வியாபாரம்அக்கா அத்திம்பேர்அப்பன் மகன் சம்சாரம்ஆத்தாள் அத்தை தங்கைஅருமைமகள் அடுத்தாத்துப்பழக்கம்தான் என்றகதைபம்மாத்து செல்லாதுசந்தைக் கெடுபிடியில்சரக்கிருந்தால் சரக்குசரக்கோ கவியுள்ளம்சரக்கின்றிச் சென்றீரேல்கவிதையிலே சிந்துகிறசக்கை சருகு குப்பைசுற்றிவந்த காகிதம்பொக்கைப் புழுதிப்பொதிந்து வைத்த மரத்தூளாய்சமுதாயச் சீர்திருத்தம்சன்மார்க்க உபதேசம்சமாதிநிலை சாகஸங்கள்சித்தாந்த சிலம்பங்கள்காமாதி உலாமடல்கண்டதுண்டமாக வெட்டிகூறுகெட்ட வேகத்தில்கொள்ளைவண்டி ஓட்டுநர்க்காய்நெடுஞ்சாலை ஓரத்தில்நாயொதுங்கும் வாசத்தில்கொத்துபரோட்டாகுமட்டெண்ணை துணுக்குவரிஏப்பம்போல் அப்போதைக்குஇரைச்சலிடும் சொல்ஜிகினாதாழ்ப்பாள் விவகாரம்தப்படிக்கு அச்சாரம்குத்தாலக் குழியெண்ணைபிடித்துவிடும் பேச்சாரம்ஹேர்கட்டிங் சலூன்சரக்காய்அள்ளாது குவிந்திட்டஅற்புத முடிச்சரக்குசெல்லும் வழியெல்லாம்சிந்திக்கிடக்குமங்கேசெலவின்றி அவற்றினிலேஏதேனும் அள்ளிவரலாம்அள்ளிவந்தேஊரெங்கும் சுற்றிஉள்ளத்தில் ஒதுக்குப் புறமாகக்கழிமனக் குளமேட்டில்கழிப்பறை அகம் எதிராய்க்குந்தி விரித்திட்டுக் கடைபரப்பிக்கோணியிலே கட்டிவந்தகுப்பையெலாம் விற்றிடலாம்கோணல் பெருமக்கள்உளக் கூனல் புன்மதியார்ஓட்டை மனத்தோடும்உளுத்தச் சொல்லோடும்கேட்டுவந்த பேரத்தில்கிடைத்தவரை கொள்ளைதான்ஆகமொத்தம் கவிராயா!சரக்கிருந்தால் சந்தைக்குச் சென்றிடுகசரக்கோ கவியுள்ளம்பண்டமாற்று வியாபாரம்.***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வேதம் சார்!இதனுடைய மையக் கருத்தே கவிதையைக் கவியுள்ளத்துடன் அணுகுவதுதான் ஒரே வழி. அதை விடுத்து நுண் அரசியல்கள், மனக்கோணல்கள் இவற்றையெல்லாம் கவிதைக்குள் போட்டுப் பார்ப்பது சருகு குப்பை பொறுக்குவது போன்றது. மேலும் கவிதை ரசிகர்கள் கவியின் ஆழத்தில் கருத்தாய் இருக்க வேண்டுமே அல்லாது அந்தஸ்து, செல்வாக்கு, பணபேரம் இவற்றில் முக்கிய நாட்டம் வைத்து வெளிப்பூச்சுக்குக் கவிதையைப் பயன்படுத்தல் மிக விரசமானது -- இந்தக் கருத்தை வலியுறுத்த அப்பொழுது எழுதினேன். உண்மையான கவிஞர்கள் உவப்பார்களே எனினும் பொதுவாக யாரையோ சாடுகின்ற தொனி இதில் அமைந்து விட்டது போல் தெரிகின்றது. அதனால்தான் 2002ல் என் கவிதைகளின் தொகுப்பில் இதைச் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வைத்தேன்.இவ்வளவு நாள் ஆகியும் காரம் இன்னும் குறையவில்லைபோலும்.தங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.
வேதம் சார்!இதனுடைய மையக் கருத்தே கவிதையைக் கவியுள்ளத்துடன் அணுகுவதுதான் ஒரே வழி. அதை விடுத்து நுண் அரசியல்கள், மனக்கோணல்கள் இவற்றையெல்லாம் கவிதைக்குள் போட்டுப் பார்ப்பது சருகு குப்பை பொறுக்குவது போன்றது. மேலும் கவிதை ரசிகர்கள் கவியின் ஆழத்தில் கருத்தாய் இருக்க வேண்டுமே அல்லாது அந்தஸ்து, செல்வாக்கு, பணபேரம் இவற்றில் முக்கிய நாட்டம் வைத்து வெளிப்பூச்சுக்குக் கவிதையைப் பயன்படுத்தல் மிக விரசமானது -- இந்தக் கருத்தை வலியுறுத்த அப்பொழுது எழுதினேன். உண்மையான கவிஞர்கள் உவப்பார்களே எனினும் பொதுவாக யாரையோ சாடுகின்ற தொனி இதில் அமைந்து விட்டது போல் தெரிகின்றது. அதனால்தான் 2002ல் என் கவிதைகளின் தொகுப்பில் இதைச் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வைத்தேன்.இவ்வளவு நாள் ஆகியும் காரம் இன்னும் குறையவில்லைபோலும்.தங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.
2011/6/21 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>Yes. even tho' idea is good, many poets would be wounded after reading yur poem which criticises all poems in kaviyarangam..
நன்றி செல்வக்குமரன்.கவிதைக்கான உலகம் இன்றில்லை. எனவேதான் கோனார் நோட்ஸ் தேவைப் படுகிறது.ஒரு சின்ன டெஸ்ட். கோபிக்காதீர்கள் விளையாட்டுக்குத்தான்.இதில் பேசிக்கொள்ளும் இந்த இருவர் யார்?ஒரு க்ளூ -- புற உலகில் யாரையும் குறிக்கவில்லை. இருவரும் அக உலகைச் சேர்ந்தவர்கள்தாம்.***
>>>>>>>>>சரி உங்களோட கவிப்புத்தகத்தை எனக்கு அனுப்பலாகாதா?
அனுபவித்துப்படிக்கும் ரசிகனாச்சே யான்..
யோகியார்<<<<<<<<<<
உமக்கு இல்லாததா?ஆனால் 2002ல் போட்டது. தமிழினிதான் போட்டது. இன்னும் காப்பி இருக்குமா தெரியவில்லையே.எக்ஸ்ட்ரா காப்பிகளை வாங்கி வைத்துக்கொள்ளும் பொறுப்பில்லாதவன்.கேட்டுப்பார்க்கிறேன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பரிதியின் பரிவுஆழ நெடுங்கடல் பழகிய மீன்அலை எத்தியடித்திட கரைமீதுவாழத் துடித்திட்ட காட்சியினைவேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான்
மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன்வெள்ளி துடித்திட்ட மீனொளியில்மாலை அடைந்தனன் மனமயங்கிஅயர்ந்து விழுந்தனன் மைவரையில்காலை தொடங்கி தான் செய்தசெயல்கடமைதான் என்றுதான் கொண்டாலும்ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர்வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய்வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய்வான்வயல் கான்கடல் வரப்பெங்கும்படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில்பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே.
பரிதியின் பரிவு
ஆழ நெடுங்கடல் பழகிய மீன்அலை எத்தியடித்திட கரைமீது
வாழத் துடித்திட்ட காட்சியினைவேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான்
மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன்வெள்ளி துடித்திட்ட மீனொளியில்மாலை அடைந்தனன் மனமயங்கிஅயர்ந்து விழுந்தனன் மைவரையில்காலை தொடங்கி தான் செய்தசெயல்கடமைதான் என்றுதான் கொண்டாலும்ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர்வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய்வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய்வான்வயல் கான்கடல் வரப்பெங்கும்படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில்
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
எங்கே போகிறாய்?ஊர்ந்துசெலும் சிற்றெரும்பே!எங்கே போகிறாய்?ஊருகின்ற காலறியும்கால்விரையும் மண்ணறியும்மண்ணில்வரும் மணமறியும்நானறிவேனா?நரனே!நானறிவேனா?ஆழ்கடலில் திமிங்கிலமே!அவசரத்தில் அங்காத்திட்டவாய்மூடாமல் விரைவதென்ன?எங்கே போகிறாய்?ஆரய்யா கேட்கிறது?பக்கவாட்டில் திரும்புதற்குபக்குவமில்லை இப்போதுபரவாயில்லை வாருமிங்கே.வானமழை தான்பொழிந்துவிரிஉலகம் தான் நனைந்துவிரிந்து மண்ணில்புகுந்த தண்ணீர்எங்கே போகுது?மீதியெலாம் எங்களுக்குக்குடமுழுக்கு ஆனபின்னர்கூடியெல்லாம் ஒன்றாகிஎங்கே போகுது?கதிரவனின் ஓரக்கண்ணில்காதலாகுது.புதிர் அவனின் பகலினிலேஆவியானதும்கதிர்க்கரத்தைப் பற்றியெல்லாம்எங்கே போகுது?பறந்துசெலும் பறவையரே!எங்கே போகிறீர்?பருந்து போகும்பச்சைக்கிளி தான் போகும்பக்குவமாய்ப் புறா போகும்பரக்காவட்டி காக்கா போகும்பரபரத்த குருவி போகும்பார்மீதெங்கள் நிழல் போகும்உணவுக்கான நேரம் போகும்ஒரு நிமிஷம் தேடிவிட்டுதிரும்பிவந்தால் பொழுதுபோகும்.ஒற்றையடி ஓரத்தில்ஓரால நிழலமர்ந்துஒரு நால்வர் நடுவமர்ந்துஒன்றும் பேசாதீர்ஒரு நொடியில் திரும்பிடுவோம்உம்ம கேள்வி எங்க போகும்?என்றந்தப் புள்ளும்எதிர்வான் முட்டில் எங்கோஇரை தேடிச் சென்றதுவால்.ஆல நிழலமர்ந்துஆலின் இலை கிடந்துதுயிலும் சுக மாலாகித்துஞ்சாத கண்ணிமையில்பயிலும் பகற்கனவில்பள்ளி கொண்டேன்பல்லூழிப் பாழின்பள்ளியறைக் கட்டிலிலே.
பள்ளியறைக் கட்டிலிலே.
தமிழாக்கம்அரவிந்தரின் “சாவித்திரி”- சிறு பகுதி ---ஆன்ற பெரும் இனமொன்றைச் சார்ந்தவளென்றுஅவளிடம் உள்ள ஒவொன்றும் உணர்த்தியது.
புவியின் விரிவிற்குப் போட்டி,பொன்றா விண்ணுக்கு அணுக்கம்,இளம்பெரு புலநலம் திகழும் அவள் ஆன்மாவிசித்திர செல்வ உலகும்வடிவுடை அமைதி வதியும் உலகும்கடந்து, கருத்தின் வழி தாண்டிக் கிளர்ந்துகருக்கொளா பொருட்குவைபால் சென்று மருவும்.தடைப்படா தன்னுரம் மிக்கஅவளது இச்சை ஆர்வம் கெழுமியது.ஒள்ளிய சிரத்தையின் உருகெழு வேலைஅவள் மனம், உணர்ச்சிப் போக்கென ஓடிப்பாயினும்ஒருசில் அலையும் காணக்கொடாது.
யோகு புரி நிலையில் கறங்காடும் புனிதவதிசமைந்துநின்ற இடையீடற்ற சமாதிநிலைகள்உண்மையின் உள்ளறை விகாசத்தினின்றும் இயக்குறுவனவே.கடவுளரின் பள்ளமடையாய், செறிந்த படைப்பின்சீர்கெழு துடிப்புகள் திகழும்மகிழ்ச்சியின் கைத்தலம் முகிழ்த்த மௌன இதயமாய்விடியலின் விளக்கக் காதையன்ன உடல்
வடிவு கரந்திட்ட தெய்வத்தின்வெளிப்படு நிழலாய்த் தோற்ற,புலன் கடந்த பொருள் காணப்பொற்கோயிற் கதவமாய்த்திகழும் எவனோ தத்துவக் கிழவன் ஒருவன் பெயர்தர,காலம் தாளமேந்து அவன் நடையில்அமர சொற்கட்டு ஆடிவர,அவள் கடைக்கண் நோக்கம்,மண்பூசி நின்றதுவும் விண்ணேசித் தெழச்செய்யும்அவள்தன் நோக்க முறுவல் ஊக்கிய களிப்புதேக்கிடும் திறனார் கவினே மாந்தர் வாழ்வினில்.விரித்துத் தன்னைத் தருதலேவாகாய் அவட்கமைந்த செயல்கடலும் மற்று விண்ணைப் போன்றுஅமைந்த வண்மையில்பிறங்கிய பேருலகொன்றின் கந்தம் தருவள்;அவளின் அன்பான அக்கறை இனிய மித வெய்யில்;அவள்பால் திமிர்ந்த வேட்கை நீலவானின் நிதாநம்.புயலாடும் புவிதப்பி வேட்டையஞ்சி விதிர்த்திட்டுகளைத்த புன்சிறை கனக்கத்திரிதரு புள்ளென ஆன்மா,நினைவில் நிழலாடும் முலைத்தடமன்னஓர் அமைதி கேந்திரம், சேமக் காப்பகம்,சொகுசாய் அதிசயித்த சாயணை ஒன்று கிட்ட,ஓடிவரும் மதுரவாறு தழல் கொளமட்டிலா உயிர் திகழப் பருகலும் கூடும்கைதவறிப் போனதோர்உள்ளக் களிப்பெனும் பழக்கம்மீட்டும் கைக்கொளக் கூடவும் கூடும்.ஒளிர்ந்திட்ட அவள் உள் இயல்பின்பீடுற்ற பெருநலம் உணர்ந்து உய்த்தலும் கூடும்அவள் கதகதப்பில் வண்ணக் கோலோச்சில்ஆனந்தம் தேக்கித் திறம் காணவும் கூடும்;கடலனைய கனிந்தவிரக்கம்கீசுகீசென்னும் புள்ளொடுங்கும் வனாலயம்,உட்கிடையில் அன்னாள் புரிஉதவி உயர்விண்ணின்கதவடைத்த தாள் ஒன்றைத் திறந்தது;
அண்டம் கடந்து அப்பாலாய்விரிந்த அவளின் அன்போ,அகில உலகும் அவள் ஒரு தனி இதயத்தில்புகல் காணவும் கூடும்.
திருப்தியறியாப் பெரும் தெய்வம்இங்கே பொருந்தி வதியலும் கூடும்;குறளுருவாய்க் கூனிச் சிறைப்பட்ட ஆன்மாகாற்றின்றி அவனது உள்ளத்தெழுந்தஉயர்வில் புரிந்த உயிர்மூச்சுஅவள் உள்ளக் கிடையில்,தொட்டதனைத்தும் தெய்வமாய்ப்புரிகின்ற ஆன்மிகத்தில்துறைகண்டு மண்டவும் கூடும்;ஏனெனில் ஏந்திழையாள்பால் மருவியபேழ்வாய் அனைத்தும் பிறங்கு ஒளியின்போக்கறக் கரந்திட்ட ரகசியங்கள்;மௌனமே அவள், அதே பொழுதுவாக்கும் அவளே;தானாய்ப் பர்ந்து நிரவும்சாந்தம் தேக்கிய கண்டம்;கமபனமற்ற கன்னித் தீயே கொழுத்த கடல்;கடவுளர்பால் கைவந்த மௌனம் அவளின் வன்மை;தன்னொத்த விரிவினைஅவன் அவள்பால் கண்டுகொண்டான்;மீக்கிளர்ந்து கதகதத்ததன் சூக்கும ப்ராணாகாசத்தைஅவன் மீட்டும் அவளிடத்தில் காணப்பெற்றான்;அவள்பால் அண்ணல் தன் அகத்துள்உலவுதல் போல் போத்தந்தான்;தன் சுயத்தின் நித்திய நிலைப்பேற்றையேஅவன் அவளூடே சந்திக்கலுற்றான்.-----------------------------------------------
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
(இளங்கன்று பயமறியாது என்பதுபோல் ஒரு காலத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும் செருக்கு....என்ன பண்ணுவது..)
பதினாலு பாட்டுகள் ஒரு மாலை போல் அமைந்தது.ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து ஏழு என்பதில் ஆரம்பிப்பதில் மடிந்து மீண்டும் ஆறு அஞ்சு நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இறங்கு வரிசையாக அமைந்தது. எழுக்கூற்றிருக்கை என்று சொல்ல முடியாது. ஆயினும்..வரிசையாக அமைத்துப் பார்த்தால் ---5)அஞ்சுதரும் இப்பவநோய் அண்டாமல் காத்தருளேவிஞ்சுதரும் கன்மம் விளையாமல் கார்வண்ணம்கொஞ்சும் குழலழகர் கெஞ்சுபுகழ் ஆய்ச்சியவள்தஞ்சமெனத் தானடையும் நெஞ்சு.
இனிய பாடல்கள்.
/ விஞ்சுதரும் கன்மம் /
இதன் பொருள் புரியவில்லை.
மிகுகின்ற கர்மங்கள்
துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர் கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில் இவர்தரும் ஒதிமம் எண்ணி லாதஓர் அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென
--இவர்தரும் (கந்தபுராணம்)
தந்த பொருட்களை கொண்டே - ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார்
--அஞ்சுதரு (பாரதி)
சாலவு மஞ்சுதரும் - கெட்ட
சதிக்குணத் தார்பல மாயம்வல் லோர்
கோலநற் சபைதனிலே - வந்து
கொக்கரித் தார்ப்பரித்(து) அமர்ந்திருந்தன ரால்.
மேலவர் தமைவணங்கி - அந்த
வெந்திறற் பாண்டவ ரிளைஞர்த மை
ஆலமுற் றிடத் தழுவி - செம்பொன்
னாதனத் தமர்ந்தவப் பொழுதினி லே
--அஞ்சுதரு (பாரதி, பாஞ்சாலி சபதம்)
இந்தத் தருக்களும் தங்கள் தருவும் தரும் பொருள் ஒன்றேதானா? :)
தந்த பொருட்களை கொண்டே - ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார்பதினாலு பாட்டுகள் ஒரு மாலை போல் அமைந்தது.ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து ஏழு என்பதில் ஆரம்பிப்பதில் மடிந்து மீண்டும் ஆறு அஞ்சு நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இறங்கு வரிசையாக அமைந்தது. எழுக்கூற்றிருக்கை என்று சொல்ல முடியாது. ஆயினும்..
வரிசையாக அமைத்துப் பார்த்தால் ---1)ஒன்றும் உதவா எனைவைத்தென் நாடகமோமன்றில்நீ ஆடி அலுத்ததுவோ - என்றைக்கும்சிந்தைக்கே எட்டா சிவனார்தம் சில்மிஷத்தால்நொந்தவுயிர் பந்தெனவே ஆடு.2)இரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால்புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோயென்னரங்கா கூவுவனே ஏற்றெடுக்கும் கைநீட்டிஉன்னடிக்கீழ் வைத்திடுவாய் காப்பு3)முக்காலும் என்னுள்ளே நீயிருக்க நான்மறந்தேஇக்காலம் என்கதறி என்னபயன்? -- மொக்குள்எனமறையும் தோற்றரவுக் கேயென்னை விற்றால்அனவரதம் உன்னுறவென் னாம்.4)நான்மறையும் காலம் நனிநல்ல காலமெனில்நான்மறையும் காணா நயத்தக்கோய் -- ஊன்மறையஉன்னி உணர்வெழுமோர் காலமதே உத்தமமாம்மன்னும் அருளால் உவந்து.5)
அஞ்சுதரும் இப்பவநோய் அண்டாமல் காத்தருளேவிஞ்சுதரும் கன்மம் விளையாமல் கார்வண்ணம்
கொஞ்சும் குழலழகர் கெஞ்சுபுகழ் ஆய்ச்சியவள்தஞ்சமெனத் தானடையும் நெஞ்சு.6)ஆறே எனக்கு நினபாதம் ஆயர்கோன்வேறெதுவும் நானறியேன் வித்தகமாய் -- கூறியசொல்காப்பெனவே காலமெலாம் கண்ணுறங்கா கைகாட்டில்கோப்புண்டுக் கண்வளரும் யான்7)எழுந்த திருக்கோலம் எங்கினியான் காண்பன்விழுந்த அவக்கோலம் காண்பாய் -- அழுந்தஉனபாதம் என்தலைமேல் ஊன்றுவையேல் தோன்றும்மனத்தகத் துள்ளுன் முகம்.*****************8)எழுந்தமுக மெண்ணித் திளைப்பன் அழுவன்தழுவத் துடித்தே அயர்வன் -- வழுவிலாஆர்வத்து வந்தகுறை என்னெனவே ஆகாமல்மார்வத்துள் முட்டுவன் யான்.9)ஆறியிரும் பிள்ளாய் எனநீயும் ஆற்றுவையேல்தேறாதென் னாவி தெளிந்திடுக -- மாறாதஅன்புனபால் வேண்டும் அரங்கா அருளாயேல்என்வழியில் பொன்றவிடு நீ.10)அஞ்சுபொருள் தானறிந்தார் ஆறறிந்தார் ஏழ்பாரும்துஞ்சாமல் காக்கின்ற தன்மையினார் -- விஞ்சுபுகழ்நான்மறையின் முப்பொருளை ஈரரசு தான்குலையஆன்றகுணத் தொன்று மவர்.11)நாற்றிசையும் போற்றும் திருமா லவன்நாமம் கூற்றைக் கடிந்தோச்சும் குன்றாமல் காத்துநிற்கும்சேற்றில் கயல்பாயும் ஆற்றின் இடைக்குறையில்தோற்றும் பிறவியே காப்பு.12)முந்நீர் உலகும் மகிழப் புலரியெழநன்னீர்மை கொண்டவுயிர் தாம்பொலிய -- எந்நீரவானாலும் எப்பொருளும் என்றும் திருமாற்கேதானாகும் சேடமாய்த் தாம்.13)இருநிலத்தே வந்துதித்து இன்புதுன்பு கற்பீர்கருவில் திருவற்றீர் காலக்கூ ழானீர்திருவில் லெனத்தோன்றித் தான்மறையும் தன்மைவெருவித் தொழீர்திரு மால்.14)ஒன்ற நினைத்தக்கால் உள்மனத்தே வந்துதித்துகன்றுக் குகந்தவென் காளாய் எனும்குரலேமன்றில் நடமாடி மாலாக்கும் மாலவர்க்கேஒன்றடிமை ஓர்திறமாய் ஓர்.அரங்கன் உகந்திடவே மகிழ்ந்து.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
(கனி விளம் விளம் மா விளம்விளம் மா விளம் )பூமாதினி துறைமலர் மார்பொளிர் உயிரே உவந்தளித்திடுதிரு மாலே என்பனோஆமாறினி அறிவதென் பாலென விடுத்தா யெனிலுயிரழித்திட லாமே யென்பனோநாமாரினி நமக்கென யாதுள தெனவே எனபரம்உனதெனத் தீர்ந்தே னென்னிடில்சாமாறினி எதுபயம் யாதுள திடுக்கண் நினதிருஅடியிணை சார்ந்தே னெம்மனே.***இது நானாக வைத்துக்கொண்ட வாய்ப்பாடு. இவ்வாறு நாமாக மனோதர்மத்தின் படி செய்ய யாப்பு இடம் கொடுக்குமா?*-- இடம் கொடுக்கும். இதைப்பற்றி எனது விருத்தம் எழுத வருத்தம் எதற்குத் தொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன்.ஆனால் ஒன்று. அளவொத்து இருக்கவேண்டும். அதே சமயம் ஓசை ஒழுங்கிற்கும் தாளகதிக்கும் ஒத்துப்போகவேண்டும். அப்படி இல்லையென்றால் இலக்கணப்படி சரியாக அமைந்தாலும் சிறக்காது. எனவே தான் சில இலக்கணப்புலவர்கள் அப்படி ஒத்துப் போகும் சிலவகைகளை மட்டும் கொடுத்து அதற்குள் நிறுத்திக்கொள்க என்கிறார்கள்.
இலந்தை நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
எனது ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை இங்கு வலையேற்றியிருக்கிறேன். விரும்புவோர் படிக்க இந்தச் சுட்டி ---***
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஊரெங்கும் ஊதுகுழல்யமுனையின் கரையில்தெய்வ வெள்ளத்தில்திவ்ய ஆற்றினில்சிறிதும் இறங்கி நனையாதஓர் கிழவன் நான்;இழந்தவன் ஆனேன்.மயிற்பீலி கொண்டுஒரு சிறு பிள்ளைமாடுகள் ஓட்டி வருவதும் உண்டு;குறும்பன் அவன் என்றுஎச்சரிக்கையாக நான்இருந்ததும் உண்டு;இழந்தேன் ஏ பாவம்!கிருஷ்ணன் என்றே சொல்லுவார்கள்;வண்ணம் வைத்து அழைப்பார் போலும்என்றே இருந்தனன்,என்னே என் மடமை!‘ஊருக்கே நீ தெய்வமாடா?உன்னைப் பலர் சொல்லுவதேன்?’என்றொரு நாள் கேட்கையிலே‘கன்று மேய்ப்பவன் என்னிடம் நீர்கிண்டல் செய்வதோ சொல்லும் ஐயா?’என்று நகைத்தவன் சென்று விட்டான்.இன்றும் நகைக்கும் என் பேதைமையே.தன் முன் இருந்தவன்தெய்வமென்றே பின்னால்தானுணரும் கொடுமைதனிப்பட்டதோர் அவலம்.அவன் பேசிய பேச்சினுக்கேஇன்று புதுப் பொருள் தெரிந்திடுதே.அன்று உணர்ந்தேனோகன்று உணர்ந்ததைக் கூட நான்?சென்று மணலினில் குன்று குகையினில்கன்று காலிகளின் கால்கள் இடுக்கினில்நின்ற மரக்கிளை நிவந்த கவட்டினில்முந்தும் அலைகளின் ஆற்றின் நடுவினில்எந்தப் பக்கமும் தேடித் தேடி நான்வந்து வந்து நோக்கினும் பயனிலையே!மந்த புத்தி என்னை நொந்தும் பயனில்லையே!மாட்டிடையன் என்று அவன்தோற்றம் அளித்தான்;மாட்டின் குலம் என்று இன்றுதோற்றம் அளிப்பேன்.அன்றவனைக் கண்ட போதுஒன்றும் கண்டிலேன்;இன்று காணும் நேரத்திலேஅவனைக் கண்டிலேன்;நன்று நன்று போகட்டும் நான்இழந்தவை கோடி;சென்று வந்து போன கதைஎத்தனை கோடி!என்றும் அவன் எனை வெறுக்கக்காரணம் உண்டு;என்று அவன் அடியிணைக்கேசேர்வதும் உண்டு?கோடிக் கோடி உயிரினமும்கொள்ளைபெரும் கோடி.ஓர் உயிர் நான்; என்னை அவன்காண்பதுண்டோ நாடி?பக்தர்களும் முனிவர்களும்பன்னெடுங்கால் யோகிகளும்என்னெடுங்கால் இயற்றுதவம்இன்றுமுற்றும் தொடருமெனில்என்னிலைதான் என்னெனவேதன்னைப்போலத் தெரியாதோ?ஆனாலும் ஒரு வருத்தம்போனாலும் வந்தாலும்போக்குவரவொழிந்தாலும்நீக்கறியா கேள்வியொன்றுநிலைகுத்தி நிற்கிறது.ஆகாத எல்லாம் ஆக்கும் பெருங்கடவுள்போகாத எல்லாம் போக்கும் பரங்கடவுள்சோகாக்க வைக்குமெந்தன்சொந்த அறியாமைதனைஎந்த வழியாலும் நீக்கத்தான் அறியாதோ?மந்த புத்திக் காரனுங்க!மன்னிச்சிட வேணுமிங்க.உலகமெல்லாம் படைக்கின்ற உத்தமனார்கலகம் செய்யுமெந்தன்கள்ள இருள் அஞ்ஞானம்விள்ள அறியாமல்விடைபெற்றுப் போனாரோ?தள்ளிவிட்டுப் போனாலும்தலைமைக்குப் பணிந்திடுவேன்;எள்ளிவிட்டுப் போனாலும்என் ஆண்டை என்று மகிழ்ந்திடுவேன்.அள்ளிக்கொண்டு போவதற்கேகொடுத்துத்தான் வைக்கவில்லை;உள்ளத்தில் தனை உணர்த்தஉத்தமர்க்கு ஏன் முடியவில்லை?உறைந்த பனியாகிஓங்குகின்ற மாயையெனில்மறைந்து நின்ற மாதவனார்சோதிக்கே சூடு பத்தாதோ?அறைந்து வைத்த கர்மம் என்றால்அதுதான் வலிது போலும்அச்சுதரைக் காட்டிலுமே!ஏதோ என்பங்காய்எனைவிட்டுப் பிரியாதபிரித்தாலும் பேராதபெருத்த மாயைக்கேதோழமையும் பூண்டு விட்டேன்;எக்காளம் ஊதிஎதிர்சங்கம் தானூதிமிக்கபுகழ் அச்சுதனார்மாஞாலம் புரக்கட்டும்;ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாதகார்மேக வண்ணனார்ஊதிநிரப்பட்டும்ஊரெங்கும் ஊதுகுழல்.
போதிமரம் சிரிக்கிறதுபூங்காற்று வீசியெழில் பூந்தாது வீசியெங்கும்ஏங்குகின்ற உள்ளமென ஏற்றும் இயற்கையெலாம்தாங்குளிரத் தாபம் அகற்றித் தவமுனிவன்ஓமொளிர உள்ளடங்கி உட்கார்ந்த பெற்றியெனஓங்கிப் படர்ந்தே உருவான மௌனத்தில்தாங்கிக் கிளைபரப்பித் தான்நின்ற போதிமரம்ஏனோ சிரிக்கிறது ஏதேதோ சொல்கிறதுவானும் கவிந்து வெறிச்சோடிப் பார்க்கிறதுகானத்துப் புள்ளெல்லாம் கேளா ஒலிக்குறிப்பில்போதிமரப் புன்சிரிப்பின் பூடகத்தில் கூடடங்கிச்சோதித் திருவாய் மலரச் சுகங்காக்கும்சுந்தரப்பொன் வட்டில் சுவர்பொங்கிச் சோதியெழஅந்தரத்தில் ஆதவனார் ஆகாசப் பாய்விரித்தார்நள்ளிரவில் நீர்மையினால் மண்குளிர்ந்த வாடையெங்கும்வள்ளல் விரிகதிர்க்கு வேளாண்மை செய்துவக்கும்பள்ள மடையாகிப் பாய்கின்ற நீர்சுமக்கும்தெள்ளு கயமாகித் தீங்கதிரைத் தான்சுமக்கும்எள்ளி நகையாடி ஏய்க்கும் உலகுதனின்கள்ளம் வெளியான காரணமும் புன்சிரிக்கும்தானென்ற ஒன்று தனியாக இல்லையெனநானற்ற நல்கணத்தில் நிர்வாணம் ஆகிநிற்கும்போதி மகத்துவத்தின் பொல்லாங்கு புன்னகைக்கும்போதி மரத்திற்கே போந்த பொருளதனைவாதித்துப் பெற்றிடவே வாக்கதுவும் நாணிநிற்கும்சேதி உரைத்திட்டுச் சையோகச் சைதன்யம்மீதி உரைப்பதற்குள் மௌனக் கருவாய்க்கும்ஆதியொடு அந்தம் அகத்தினிலே கண்டுவந்தபோதிப் பெருமகனார் போந்தபொருள் கண்டதனால்ஓதும் பெருமரத்தின் ஓங்கு தருநீழல்விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்தஅட்டஹாசத் தொன்றாமிப் பா.
விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்தஅட்டஹாசத் தொன்றாமிப் பா.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஸ்ரீஅரவிந்தரின் The Infinitesimal Infinite என்ற கவிதையின் தமிழாக்கம்.மீச்சிறு கோணில் அநந்தம்மாறாத மகத்தினின்றும் இவண் வந்தோம்கோடானுகோடி அண்டங்கள் அதற்கேபுல்லிய ஆட்டத்தின் ஒளி நுரையாம்அநந்தத்தின் புன்சுடரவிரப் போந்ததுவாம்விரிந்துகிடந்த அதனூடு தன்னுயிரைக் காணாதாகிவடிவு சுருக்கிச் சிறுபுள்ளியதுவாய் ஆகிஎல்லையற்றுப் பொடியாகி அலட்சியமாய் வீசிவிடமண்ணின்பால் சேற்றில் மக்கிப்போய்ப் புறம்வீழ்ந்த போதத்தின் வினோதம் --எதேச்சையாம் கோளமொன்றின் மீதார்ந்த திசுப்பிஞ்சாய்க்குட்டைக்கதிரொன்றின் குறுகிய மண்டலத்தேகுற்றுயிராய்க் கொண்ட உடையே சதையுடலாய்ச்சிறுமனத்தின் சிறகடித்துச் சுற்றிவர விரிவானாய் !வாழ்ந்தது அறிந்தது கண்டதுதன் ஆத்ம கம்பீரம் தன்னையேஇறப்பின்றி அளந்தப்பால் விண்கடந்தேகாலமும் தான்கடக்கத் தானாய் நின்றே!
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
மூலம் இங்கே --
*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2011/9/14 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
ம்ம்ம்... அட்டகாசம்... சுவை இருக்கின்றது. ஆயினும் இன்னும் சற்று எளிமையாக எழுதப்பட்டிருக்கலாமோ(எல்லோர்க்கும் போய்ச்சேரும் விதமாய்!)-என்னும் என் ஆதங்கத்தையும் கூறத் தயக்கம்..யோகியார்
நன்றி ஐயா! ஆனால் கருத்துகளைக் கூற ஏனய்யா தயக்கம்? :-)
வேதாந்தியின் விண்ணப்பம்
பேருயிரே !உள்ளத்தின் ஆழத்தில்உலவும் நிலைச் சுடரே !நீ மட்டுமே உண்டுஅந்தோ ! இந்த இருளால்நானும் மறைபட்டுக் கிடப்பதென்ன?என் கதிர்பட்ட பகுதியுமேமேகங்களால் மங்கிவிட?ஆசையெனைஅலங்கோலமாக்கிடவும்வழிதப்பி, அலைப்புண்டுவிதிர்த்து எழும் உணர்ச்சித் தீவாட்டிடவும்உன்னமைதி விட்டெறியஇருள்பொறியின் சுழல்தன்னில்சிக்குவதேன்?துயரத்திற்கெனைக் காட்டித்தொய்வே தலைதூக்கக்காமத்தால் பேதுறவே?குருதியுறை விவஸ்தையிலாஎன் கடந்த வாழ்நாள்உன் ராஜரீகத் தயவை ஏன்எதிர்க்க வேண்டும்?தாமத்திக்கத் தான் அது ஏன்வைக்க வேண்டும்?தன்னந்தனி உண்மையே!பன்னம்பல தெய்வங்கள்உன்னை அபிநயிப்பார்அவர் எந்தன் இளமைதனைஇனும் ஏய்க்க விடுதியோ நீஆர்ப்பரிப்பு இவை அடங்குகநித்தியத்தின் குரல் கேட்பேன்நிலைத்ததுவின் விழைவறிவேன்.நித்யத்தின் தலைவாசல்மொய்த்துப் பளபளக்கச்சுடரும் இக்காட்சிகளைவிலக்கிவிடு -- வரந்தருவாய்மயர்விலா மதிக்கண்ணையௌவனமும், துல்லியமும்வளர்த்தெடுக்கட்டும் என் இதயத்தை
காதுகள் செவிடுபடகூக்குரலிடும் ஆவல்களைக்கடிந்திடுவாய், என் பிரபுவே!கறைபடிந்த என் நூற்றாண்டுகளைதுலக்கிவிடு என்தூய்மைதனை மீட்டுக்கொடுஞானத்தின் மறைக் கதவே !தாள திறவாய்.பலமே ! நின்னைப் பூர்த்தி செய்வாய்அன்பே ! அடங்காது புறம் பொழிவாய்***ஸ்ரீஅரவிந்தர் எழுதிய Vedantin's Prayer என்ற கவிதையை மொழிபெயர்த்தேன். அதன் மூலம் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஓங்காரப் பெருவாழ்வு
ஆஷாடபூதியாகிக் கழிந்தது வாழ்வு.ஆரூடமும் பொய்த்தது.நிர்மூடமாகப் பல்லிளித்துநிற்கும்படியானது காலக் கூண்டில்.வானத்தில் ஜாகை அமைக்க எண்ணிப்பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது ஜீவன்.என் மூக்கறுத்த எக்காளத்தில்தெய்வங்கள் கள்ளுண்டு கிறங்கும்.உன்மத்தமாகிப் போனாலும்ஓரிழவும் புரியாமல் போய்ச் சேரலாம்.உயிர்க்கொலையாய்ப் பரிதவிக்கப்பாதி சொல்லிப் போனவளின்சேதி தெரியாமல் சுடுகின்ற நனவுசுருட்டி அடித்துப் போய் ஒண்டும் கனவுகள்தீய்ந்து பொட்டல் காடாய்ஆகிய நினைவுகளுக்குஆஹுதியாய் அவ்வப்பொழுது என் உள்ளம்;வானைத் திரித்து வண்ண மயிலாட்டம்ஆடுகின்ற என்னொத்தார்ஆங்காரத்தில் பலியாகிப்போங்காலம் பொங்கல் வைத்துஉண்ணும் இவ்வுலகின் நாயகிக்குக்கண்ணும் உண்டு; காதும் உண்டு.எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம்.சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்;சித்தில் சிலம்பாடிச்சீவனுக்குள் சிதாகாசப்பந்தக்கால் நட்டுவைத்தபரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்?முந்தி எழுந்த மூலப் பொருளில்முக்கால வட்டாடிப்பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும்விற்றுவந்த பற்றுக்குள்வைத்துப் போனவளைஎற்றுக்கு நாம் கூவுவது?இற்றைப் பொழுது நிஜம்;மற்றவற்றைக் கழுவிவிடமதுவுண்டு;மாமோகலாகிரியாய்மறதியுண்டு;சுற்றிவரும் கணக்கினிலும்ஒரு சொகுசு உண்டு;சாமாறு வரும் வரையில்சங்கடங்கள் பழகிப்போய்நாமார்க்கும் குடியல்லோம்;நமனை அஞ்சிநயப்பதெலாம் நைந்துவிழநாம் வீழும் நாள்வரையில்நாம் எதையும் அஞ்சகிலோம்;ஓங்காரப் பெருவாழ்வுஎன்றே ஒரு புருடாசோமரஸமாகிச் சொக்கத்தான்ஆடிடுங்காண்!.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஓங்காரப் பெருவாழ்வு
பாதி சொல்லிப் போனவளின்சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு
விற்றுவந்த பற்றுக்குள்
வைத்துப் போனவளை
எற்றுக்கு நாம் கூவுவது?இற்றைப் பொழுது நிஜம்;மற்றவற்றைக் கழுவிவிட
ஐயா! அந்த மதுதான் என்ன என்று கடைசி வரிகள் சுட்டுகின்றனவே
>>>>ஓங்காரப் பெருவாழ்வு
என்றே ஒரு புருடாசோமரஸமாகிச் சொக்கத்தான்ஆடிடுங்காண் >>>
ஓங்காரப் பெருவாழ்வு
ஆஷாடபூதியாகிக் கழிந்தது வாழ்வு.ஆரூடமும் பொய்த்தது.நிர்மூடமாகப் பல்லிளித்துநிற்கும்படியானது காலக் கூண்டில்.வானத்தில் ஜாகை அமைக்க எண்ணிப்பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது ஜீவன்.என் மூக்கறுத்த எக்காளத்தில்தெய்வங்கள் கள்ளுண்டு கிறங்கும்.உன்மத்தமாகிப் போனாலும்ஓரிழவும் புரியாமல் போய்ச் சேரலாம்.உயிர்க்கொலையாய்ப் பரிதவிக்கப்
பாதி சொல்லிப் போனவளின்சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு
சுருட்டி அடித்துப் போய் ஒண்டும் கனவுகள்தீய்ந்து பொட்டல் காடாய்ஆகிய நினைவுகளுக்குஆஹுதியாய் அவ்வப்பொழுது என் உள்ளம்;வானைத் திரித்து வண்ண மயிலாட்டம்ஆடுகின்ற என்னொத்தார்ஆங்காரத்தில் பலியாகிப்போங்காலம் பொங்கல் வைத்துஉண்ணும் இவ்வுலகின் நாயகிக்குக்கண்ணும் உண்டு; காதும் உண்டு.எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம்.சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்;சித்தில் சிலம்பாடிச்சீவனுக்குள் சிதாகாசப்பந்தக்கால் நட்டுவைத்தபரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்?முந்தி எழுந்த மூலப் பொருளில்முக்கால வட்டாடிப்பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும்
விற்றுவந்த பற்றுக்குள்வைத்துப் போனவளைஎற்றுக்கு நாம் கூவுவது?இற்றைப் பொழுது நிஜம்;மற்றவற்றைக் கழுவிவிட
மதுவுண்டு;மாமோகலாகிரியாய்மறதியுண்டு;சுற்றிவரும் கணக்கினிலும்ஒரு சொகுசு உண்டு;சாமாறு வரும் வரையில்சங்கடங்கள் பழகிப்போய்நாமார்க்கும் குடியல்லோம்;நமனை அஞ்சிநயப்பதெலாம் நைந்துவிழநாம் வீழும் நாள்வரையில்நாம் எதையும் அஞ்சகிலோம்;
ஓங்காரப் பெருவாழ்வுஎன்றே ஒரு புருடாசோமரஸமாகிச் சொக்கத்தான்
ஆடிடுங்காண்!.
ஐயா! நாத்திகத்தனம், விட்டேத்தி மனப்பான்மை, அனைத்தையும் ஐயுற்று மறுக்கும் போக்கு என்பதெல்லாம் ஆன்ம சாதகனுக்கு அவன் வழிப்பயணத்தில் நேரக் கூடிய அவஸ்தைகள். இது போன்ற வறட்சிகளைத் தாண்டித்தான் மெய்ஞ்ஞான நிலைக்கு ஒருவன் போய்ச் சேருவதாக ஞானிகள் உரைக்கின்றனர். அப்படி ஒரு வறட்சி நிலையில் விழுந்த ஆன்ம சாதகர் ஒருவரின் மனப்பான்மையை மையமிட்டுத்தான் கவிதை நகர்கிறது என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.***
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஐயா! நாத்திகத்தனம், விட்டேத்தி மனப்பான்மை, அனைத்தையும் ஐயுற்று மறுக்கும் போக்கு என்பதெல்லாம் ஆன்ம சாதகனுக்கு அவன் வழிப்பயணத்தில் நேரக் கூடிய அவஸ்தைகள். இது போன்ற வறட்சிகளைத் தாண்டித்தான் மெய்ஞ்ஞான நிலைக்கு ஒருவன் போய்ச் சேருவதாக ஞானிகள் உரைக்கின்றனர். அப்படி ஒரு வறட்சி நிலையில் விழுந்த ஆன்ம சாதகர் ஒருவரின் மனப்பான்மையை மையமிட்டுத்தான் கவிதை நகர்கிறது என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும்.***
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஜீவன்இந்த ஜீவனைஎன்னவோ என்று நினைத்தேன்.கடைசியில் பார்த்தால்கெமிகல் எதிரியக்கங்களையும்குட்டிக் குட்டி ப்ரோக்ராம்களையும்தின்று கொண்டிருக்கிறது.புளியமரத்துப் பிள்ளை!சரியாகத்தான் சொன்னீர்.‘செத்ததன் வயிற்றில்சிறியது பிறந்தால்அது அத்தைத் தின்றுஅங்கே கிடக்கும்’
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தீபாவளி 26 ஐ முன்னிட்டு 26 வரிகளில்தீப ஆவளிஆதி உலகிடை ஆர்ந்தெழுந்த தீஆதவர்க்கிடைக் காயந்தழன்ற தீகூதிர்கம்பனம் போக்கவந்த தீகோதிலாவகை ஆக்க வந்த தீநாதியுற்றிட முன்னடந்த தீநியதியுற்றிடப் பின்சுடர்ந்த தீவேதியல்விதி விரிவடைந்த தீஓதுவாய்மையின் உள்ளமர்ந்த தீதீதிலாவகைத் திறலெழுந்த தீதாதுலாவகைத் தடையழித்த தீகாதுலாக்கயல் விழியுமிழ்ந்த தீபோதுலாக்கதிர் புலர்ந்துவந்த தீமீதுலாம்அலை குழைந்துவந்த தீவாதுலாம்நெறி விளங்கவந்த தீமாதுலாம்சடை ஆடவந்த தீமோதுமைம்புலன் சாம்பரான தீமீதுறாவகை மனமடங்கு தீபேதுறாவகைப் புலன்விளங்கு தீசேதமைத்துசெல் சரம்துரந்த தீசூதமைத்தபுன் கூட்டழித்த தீஊதுகின்றதோர் குழல்படர்ந்த தீஓதுகின்றதோர் மெய்யடர்ந்த தீமாதமர்ந்ததோர் மலர்பழித்த தீஊதைக்காற்றினில் உள்குமைந்த தீபேதைக்கோவியர் பிரிவடர்ந்த தீதீதிலாநெறித் தீப ஆவளித் தீ தீ தீ***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அரனைந்தாதிதில்லைத் திகழ்கூத்தா தாண்டவத்தி லாடுசடைதொல்லை வினைபாற்றத் தூக்கியகால் நல்லரணோபொல்லா இருளடக்கிப் போதப் புகலளித்துக்கல்லா எனைக்காவாக் கால்பவங்கடக்கும் உத்திப் பரிவாள் வலமாய்ச்கால்நொந்தக் கால்வருங் காலன் பயம்தீரசேல்நொந்த கண்ணாள் சிவையருள--பாலாய்ச்சிவனார் அருட்கண்ணால் சிந்தனையில் நின்றேபவனானால் என்னாம் பவம்.சிவன்கிடக்கும் என்றே நினைவாய் -- அவமகற்றிஆன்றதன் கண்ணால் அனைத்தும் தனையொப்பப்பூன்றமாய்க் காட்டுமே தான்.
தானாகி நின்றுலவும் சங்கமமாய்த் தாவரமாய்க்கோனாகி நின்றும் குருவாகி வந்தானும்மானா பிமானம் கடந்தான் மகேசன்தாள்தேனாய்த் துளிர்க்கும் தவம்.*தவம்செய்துத் தம்முலகம் பெற்றாரே யன்றிச்சிவம்பெற்றார் யாவரே எண்ணில் -அவச்சுட்டேதாமொழித்துக் காட்டுவான் காண்பான் அவனென்றநேமத்தா ரிப்பவத் தில்லை.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஆட்டமெனக் காண்பதுவும் ஆள்ஒருவன் பொந்தில்நமைப்
பூட்டிவைத்தான் என்பதுவும் பொய்,அதனைப் பொடியாக்கி
வீட்டுவிக்கும் பொத்தான்நம் விரல்நுனியில் அதையழுத்தின்
மீட்டுமுள்ளே வீணையொலி மீளாது ஜீவவலி.
அனந்த்
2011/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சோதனை எலி
> சோதனைச் சதுரத்தில்
> சுற்றிச் சுற்றிச் சுகம் நாடிப்
> பொத்தானே கதியாகிப்
> போய் நிற்கும் எலிக்கு
> எவ்விதத்தில் வேறானோம்
> சோராமல் சுற்றிவந்து
> சுகவில்லைக்குத் துடுப்பழுத்தும்
> அகவிலைதான் வாழ்வென்றால்
> புகவிட்டதுதான் யாரோ?
> சகமாயை என்ற சாத்திரமும்
> யார் கூற்றோ?
> அகலாத ஆட்டமென
> வளையவரும் சம்சாரச்
> சக்கரத்தின் நாபியிலே
> உட்கார்ந்தால் ஒருவேளை
> தப்பிக்க வழியுண்டோ?
> மெய்ப்பிக்க வழியின்றி
> எல்லார்கைச் சீட்டையும்
> போட்டாடிப் புலனழிக்கும்
> பொல்லாங்கோ மனமழிக்க
> வில்லாங்கே விட்ட சரம்
> விலாவில் வந்து தைப்பதுபோல்
> உய்வதற்கு முனைந்ததெல்லாம்
> உள்குத்தாய் ஆகிவிட்டால்
> எள்கத்தான் இவ்வுயிரோ?
> விள்ளமுடியாத வேதனைக்கே
> வாடிக்கையாய்ப்
> பழகிவிட்ட பதவிசுக்கே
> அழகிதென்று ஆக்கிவிட்டுச்
> சோதனை ஆட்டத்தை
> நிறுத்தும் பொத்தான் மறந்துவிட்ட
> நிர்மலனார் யாரேயோ?
> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> *
அனந்த்
2011/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> ஜீவவலி கொண்டு ஜனனத்தால் ஜங்கமமாய்
> ஏவலுக்கே ஏற்றிவிட்ட யந்திரமாய் நாவலோ
> நாவலென நட்டாற்றில் விட்டவரார் அக்கரைக்கே
> காவலென நின்றதும்யார் கூறு.
> ***
>
> 2011/11/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
சோதனை எலிசோதனைச் சதுரத்தில்சுற்றிச் சுற்றிச் சுகம் நாடிப்பொத்தானே கதியாகிப்
போய் நிற்கும் எலிக்குஎவ்விதத்தில் வேறானோம்சோராமல் சுற்றிவந்துசுகவில்லைக்குத் துடுப்பழுத்தும்
அகவிலைதான் வாழ்வென்றால்
புகவிட்டதுதான் யாரோ?சகமாயை என்ற சாத்திரமும்யார் கூற்றோ?அகலாத ஆட்டமெனவளையவரும் சம்சாரச்
சக்கரத்தின் நாபியிலே
உட்கார்ந்தால் ஒருவேளைதப்பிக்க வழியுண்டோ?
மெய்ப்பிக்க வழியின்றி
எல்லார்கைச் சீட்டையும்
போட்டாடிப் புலனழிக்கும்
பொல்லாங்கோ மனமழிக்கவில்லாங்கே விட்ட சரம்விலாவில் வந்து தைப்பதுபோல்உய்வதற்கு முனைந்ததெல்லாம்உள்குத்தாய் ஆகிவிட்டால்எள்கத்தான் இவ்வுயிரோ?விள்ளமுடியாத வேதனைக்கேவாடிக்கையாய்ப்பழகிவிட்ட பதவிசுக்கேஅழகிதென்று ஆக்கிவிட்டுச்சோதனை ஆட்டத்தைநிறுத்தும் பொத்தான் மறந்துவிட்டநிர்மலனார் யாரேயோ?
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கூறாமல் கூறும் திறம்கூறாமல் கூறும் திறமறிவார் கூற்றுவர்க்கேமாறா விடையளித்தார் மன்னுசிவ னென்றிடுவார்யாரானும் கற்கயிவண் யோசித்தா லிவ்விடத்தில்பேராமல் நின்றதுதான் பீடிக்கும் சாவொன்றேபோதாக் குறையினுக்கே பொல்லாங்கும் புன்மைக்குவாதாடி நிற்கின்ற வஞ்சனையும் வாய்மைகரந்திட்ட வன்குணமும் காரிருளாய் நெஞ்சும்புரக்கின்ற பொன்னங் கழலறியா நாட்டில்அரைக்கசைத்த கோமகனார் ஆடுபல்லக் காடிப்புரைமலிந்த வாழ்க்கையினில் பொன்றாப் பவிசினிலேஉத்தமர்தாம் உள்ளம் கருகிடவே ஊர்கோடிப்பித்தர்தம் முன்னே பிரதோஷ வேளையிலேஎத்தர்கள் நிற்கின்ற ஏற்றத்தைக் கண்டுகந்தேஎத்திக்கும் எக்காளம் ஊதிப் புறப்பட்டார்முத்திக்கு மூல முழுமுதலாய் முன்வந்தார்பத்திக்கும் என்னோ பொருள்.
ஜீவப் புதிர் !ப்ரபஞ்சத்தின் பொட்டல் வெளியில் ஒரு ஜீவன்.என் வாழ்க்கைஎன் உயிர்என் எண்ணம்என் மனம்என் உணர்ச்சிகள்என் சந்தோஷம்என் துக்கம்என் இன்பம்என் துன்பம்என் மதிப்புஎன் வேதனைஎன் சொந்தம்என் குடும்பம்என் வீடுஎன் குழந்தைகள்என் மனைவிஎன் கணவன்என் அப்பாஎன் அம்மாஎன் சகோதரிஎன் சகோதரன்என் செல்வம்என் வண்டிஎன் ஆடு மாடுஎன் கோழிஎன் வயல்என் தோட்டம்என் காமம்என் என் என்நான் நான் நான்என் என் என்நான் நான்என்...பொட்டல் வெளியில் ஒரு புதிர்ஜீவனை எதிர்கொள்ள ----***கடவுள் !!! ****என் வாழ்க்கைஎன் குடும்பம்என் சந்தோஷம்என்,,,?***கடவுள் !!! ***என் வாழ்க்.....என் கடவுள்என் கடவுள்உன் கடவுள்என் கடவுள்உன் கடவுள்....-->கடவுள் !!!என் வாழ்க்...என் குடும்பம்ம்ம்ம்ம்,,,,?என் கடவுள்என் கடவுள்......கடவுள் !!!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,???????ஜீவன் --கடவுள்....?தெரியவில்லை.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
காலடித் தடங்கள்ஓரிரவுஒரு கனவுஒன்றோ இரண்டோகாலடித் தடங்களின் நினைவுசில சமயம்ஒன்று மட்டும் பதிந்து வரும்சில சமயம்மற்றொன்றும் கூட வரும்பதிந்து வந்த காலடிகள்தனிமைதனை பதிந்து வைக்கும்கூட வந்த காலடியின்பிரிவுதனை கனக்க வைக்கும்மகிழ்கின்ற போதுகளில்கூட வந்த துணைவன் அவன்துன்பத்தில் துவண்ட கணம்ஏன் பிரிந்தான் என்பதற்கேஅவன் அளித்த பதிலதனில்நாணி உள்ளம் வெள்கி நிற்கும்காணவும் திறனற்றுத் தலையோகவிழ்ந்து நிற்கும்“துன்பத்தில் நீ துவண்ட கணம்தனித்து நீ தாங்காய் என்றேஉனைச் சுமந்து நான் செல்லஉள் பதிந்தது ஒற்றைத் தடம் “ஓரிரவுஒரு கனவுஒன்றோ இரண்டோகாலடித் தடங்களின் நினைவு.(ஓர் ஆங்கிலக் கவிதையின் ஊக்கம் இது. மூலம் எது என்று கண்டுபிடியுங்கள். )
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
***
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 175ஆவது ஜயந்தியை முன்னிட்டுச் சில கவிதைகள் எழுதியிருந்தேன். அவற்றை இவண் பகிர்ந்து கொள்கிறேன்.*மனமே!இன்று உனக்கு விடுமுறை.தக்ஷிணேஸ்வரம், பஞ்சவடி,குருதேவர் அறை,அம்மா பவதாரிணியின் திருமுன்னர்,ராதாகாந்தன் கோயில்,பன்னிரு சிவனார்ச் சந்நிதி,என்று சுற்றித் திரி;சாண்ட்னித் துறையில் அமர்ந்து கொள்;நள்ளிரவில் கங்கா நதியில்அநாகத த்வனி கேட்கிறதா என்று பார்!இருட்டில் எங்கு பார்த்தாலும்பூசியிருக்கும் அந்தத்தெய்விக முறுவல்;பரநிலைப் பூவிதழ்கசிந்த தேன் சொல்;அஞ்சாதே!பரவச நிலைகள் வரும் போகும்வந்து கொண்டுமிருக்கும்;கடல் பொங்கும்;கரையாக இரு;அன்றேல் கடலாக இரு.கரை கிடந்த கிளிஞ்சல் பொறுக்கும்அகங்காரத்தின் வாலில் கட்டியதகரமாய் அவதிப்படாதே!பொறு! பொறு!பொறுத்தார் பூமி ஆழ்வார்;சப்த பூமிகளிலும்.வானுக்கும், பூமிக்குமாகஇன்று போக்கும் வரத்தும் இருக்கும்;கமார் குளத்தின் கரையில்குழந்தை ஒன்று சிரிக்கும்.***(பூமி ஆழ்வார் - Vedic Mysticism சொல்லும் கருத்திற்கேற்ப இங்கு வேண்டுமென்றே ஆழ்தல் என்ற ப்ரயோகமாக மாற்றியிருக்கிறேன். பூமி ஆள்வார் என்பது தவறுதலாக விழுந்துவிட்டதாக நினைக்க வேண்டாம் )*
ஒரு மஹா சிவராத்திரிஒரு மஹா சிவராத்திரி.பல்லாண்டுகள் முன்பு.கமார் குளத்தின் கரையில்கிராம நாட்டியக் குழுக்கள்கண்விழிப்பைத் தெய்விமாக ஆக்கஎண்ணமிட்டபடிச் சுறுசுறுப்பில்;சிவனாராய் வேடம் கட்டும் ஆள்உடல் அசுகத்தில் படுத்துவிட்டார்.கூத்து நடக்க வழியில்லை என்றுமக்கள் கவலுங்கால்கதாயின் நினைவு வரச்சிறுவனைக் கெஞ்சிக் கேட்டுச்சம்மதிக்க வைத்தனர்.மஹாபாவமும், ரஸராஜனும்கைவந்த சிறுவனுக்குக் கேட்கவா வேண்டும்?புலித்தோலை அரைக்கசைத்து,மின்னார் செஞ்சடை மேல்மிளிர் கொன்றை வைத்து,இளமதியும், முதுநதியும்தலையலங்காரமாக,உடல் முழுதும் பூசிய திருவெண்ணீறுகடலெனப் பொங்கும் பரவசத்தின்கசிவாய்த் திகழ்ந்திருக்க,கைகளில் எங்கும் அரவம் அணிசெய்ய,ராம என்னும் தாரகம்பூவிதழ் விரியும் சுரும்பார்க்க,பொன்னார் மேனியனின்மூன்றாம் விழி கண்வளர,பொங்கும் அலைக்கேசம்நம்முள்ளத்துள் ஊதியெழ,நட்ட திருவடியும்,நடமாடும் பேரடியும்துட்டம் ஒழித்துத் தூய்மைதனை நாட்டிவர,உள்ளப் பெருங்கோயில்ஊர்ப்பொதுவின் மேடையென,கள்ளப் புலனைந்தும்காளாமணி விளக்காகித்தெள்ளத் தெளிந்தாரின்சீவன் எனும் சிவலிங்கம்சிற்றம்பல புளகத்தில்,சிந்தையடங்கிச்சைதன்யப் பெருவெளியில்,அதிரும் பதம் வாங்கிஆடிவரும் ஐயன்,மூவிலை வேல் தாங்கி,முக்காலத்தின் மேலோங்கிக்கூட்டத்தின் முன் நின்றவன் தான்,வேட்ட மனிதகுலத்தேட்டத்தின் விடையேறும் வல்லவனோவிரியாப் புலர் முறுவல்,விரிந்த கடைக்கண்ணில் புனலிழிய,தெரிந்த கதாய்தெரியாப் பெருநிலைக்கேஅறிந்த புலன் தாண்டிஆன்மிகத்தில் தான் நிலைத்தான்நடிக்கவந்த நாதன்நடிக்காத நடிப்பினிலேநடிக்கும் எந்தன் உள்ளம்தான்நடிக்கவே மறந்ததுவால் !***ஒன்று சொல்வாய்ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்வாடிவரும் என்மனத்தின் மருந்தாகித்தேடிவரும் என் உயிர்க்கு விருந்தாகிநாடிவரும் நற்கணத்தின் உருவாகிப்பாடிவரும் பரமஹம்ஸத் திருவாகிப்பையநடை இட்டுச்செல்லும் பாவனத்தின்உய்வகையின் வார்த்தைகளில்ஒன்று சொல்வாய்மெய்விதந்த பரவசச் சோபனத்தில்தைவந்தத் தெய்விகத்தண் சொல்லமுதில்ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்ஓங்கிநிற்கும் உயர்தருவே ஒன்றுசொல்வாய்ஓங்காரப் பொருளாகி உலவிநின்றரீங்கார வண்டாகிக் குலவுகின்றநீங்காத நன்மைதிகழ் நல்வாக்கருளிஏங்கும் எமதுள்ளப் பாலைமாறதாங்குகின்ற அமுதமொழி ஒன்றைச்சொல்வாய்ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய்ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய்
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
ஸோலோன் ஸோலோன் !யவன உலகத்தின் முனிவரர் எழுவரில்புவனமெங்கும் பொற்புகழ் கொண்டோன்அவனி வேந்தர் அன்புடன் ஏத்தும்நீதியாத்த நல் முனிவரன் ஸோலோன்லிதிய மன்னனாம் குரோஸனைக் கண்டான்.மன்னவன் முனிவன் தம்மிடை மகிழ்ந்துஅன்னவன் விடைகொண்டு ஏகிடும் போழ்தில்மன்னவன் கேட்பான்,‘ஐயனே! உலகில்என்னிலும் மகிழ்வோன் எவனேலும் உளனோ?என் நாடு எங்கணும் சுற்றி வந்துள்ளீர்.நன்மை தீமை அறிந்தவர் நீரே.’‘மன்னனே! சற்றுப் பொறுப்பது நன்று.மகிதலம் மீதுஇறுதிநாள் வந்து உற்றிடும் வரையில்எவரும் எதுவும் சொல்வதற்கில்லை.’‘என்ன முனிவரே! எக்குறை கண்டீர்?தன்னிகரில்லாத் தனிப்பெரும் செல்வமும்முன்னிகர் நில்லா மகத்தான வீரமும்,கன்னியர் போகமும், கருதுபல் சுகங்களும்,....’‘இருப்பினும் பொறுப்பது இயல்புடைத்தாகும்.தருக்குறும் கணம் அதும் கடைநாளாகும்.’‘முனிவரே! முனிவரே !நீதியின் நடையென்றும் தயக்குறும் தானோ ?’புன்முறுவலித்து அகன்றனன் புனிதன்.இன்பத்தின் மடியில் புரண்டனன் வேந்தன்.காலம் கடந்தது.கங்குல் கவிந்தது.கோலம் மாறிப் பகைஎங்கும் சூழ்ந்தது.பாரசிக சாம்ராட்சைரஸ் வென்றதும்நாராசமாகக் கைதும் வந்தது.நயக்கும் இன்பத் தொட்டிலில் கிடந்தவன்நடுவெய்யில் தழலெரிநடுவண் கட்டுண்டு நின்றான்.குரோஸ மன்னன் யோசனை யாழ்ந்தான்.திடுமென ஸோலோன் நினைவுக்கு வரவேகடும்நிலை மறந்து குலுங்கிச் சிரித்தான்.’ஸோலோன் ஸோலோன் ஸோலோன்ஸோலோன் ஸோலோன்’என்றவன் நகையொலிசைர சாம்ராட் காதினை அறுத்தது.‘பகை மன்னன் நகைக்கக் காரணம் என்ன?புகலும் பெயரது என்ன அது என்ன?’கோபத்தில் துடித்தான் புதுவெற்றியாளன்.தாபத்தில் சிரித்தான் பழம்நன்றியாளன்.ஆபத்து என்று அமைச்சுகள் ஓடிச்சோபன முனிவரன் பெயரது என்றார்.ஸோலோனை அறிந்த சைரஸ் வியந்தான்.ஓலத்திற்குப் பதிலாய் உரைத்தவன் நினைவுகாலனின் பிடியில் நிற்கும் கணத்தில்மேலோங்கக் காரணம் அறியத் துடித்தான்.‘யாரங்கே! அவிழ்த்துவிடு.அழைத்துவா அந்தப் புதிர்வேந்தை.’‘குரோஸ மன்னா! கூறு என்ன சிரித்தாய்?நீதி முனிவன் பெயரினை விளித்தாய்?காரணம் கூறு. கடுஞ்சினம் விடுத்தேன்.மாரண விதியினை நீக்கினேன் கூறு.’‘பார்வேந்தனே! பண்டொரு காலையார் என்னிலும் மிக்கார் மகிழ்வினில் என்றேன்.பொறுத்திரு இறுதி நாள் வரையில்.பெருமிதம் பின்னர் நீ அடையலாம்.என்று புகன்று அகன்றனன் ஸோலோன்.மறந்திருந்தேன் இதுநாள் வரையில்.வெய்யிலும் கனலும் வாட்டும் கணத்தில்உய்வகை அறியா ஊழ்நகை போழ்தில்தெய்வக் கருணை தெளிந்தேன் மதியில்.விதி விளையாட்டு விளங்கிடச் சிரிப்பாய்க்கதியினுக்கு அச்சம் கழன்றிட நின்றேன்.நின் ஆணை எனை இங்கு மீட்டது என்றார்.’‘இன்று நீ நாளை நான்என் கண்ணைத் திறந்தாய் குரோஸா !என்றும் உன் நண்பன நான்நன்று எனக்குப் புரிந்தாய் குரோஸா !அன்று உனக்குச் சொல்லிய முனிவன்எனக்கும் சேர்த்தே உரைத்தனன் போலும்.நன்று நன்று நாமினி ஆள்வோம்சரிநிகர் சமனாய்க் குவலயம் இதனை.’‘இல்லை மன்னா ! இல்லை.ஆட்சியும் மமதையும்இன்பத்துப் போதையும்இவ்வாழ்வின் வாதையும்அனைத்தும் என்னைஇனிக் கவிய ஒண்ணாது.செல்வேன் தனியனாய்.காடோ மேடோ கிடைத்தது ஊணாய்ஏடோ உரியோ உடுத்தது உடையாய்.உடைந்த ஊழ் இனி ஒட்டுவதில்லை.உண்மை உரைத்தான்.ஒருகோடி நன்றி.ஸோலோன் ஸோலோன்ஸோலோன் ஸோலோன்...’
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
வார்த்தாமாலை -- என்று ஒரு நூல், ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில். பின்பழகிய பெருமாள் ஜீயர் தொகுத்த ஆசாரியர்களின் அருள்மொழிகள் அடங்கியது. சுமார் 450 வார்த்தைகள் அடங்கிய மாலை.இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணத்துடன் ஆரம்பித்தேன். அறிமுகமும், முதல் வார்த்தையும் ஆகியிருக்கிறது. அறிஞர்கள் இதைப் பார்த்து, மொழி நடை, பொருள்படு திறன் ஆகியன குறித்தும், பொதுவாகவும் தங்கள் விமரிசனங்களைத் தந்தால் மிகவும் நன்றி.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நெடுநாளாகப் பாரதி ஆய்வாளர்கள் தேடி வருகின்ற ஒரு விஷயம் என்னவெனில்,பாரதியார் ‘நாட்டுக் கல்வி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த தாகூரின் ஆங்கிலப் பாடல் என்ன?
‘விளக்கிலே திரி நன்கு சமைந்ததுமேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே !’என்று ஆரம்பிக்கும் பாடல் http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem217.htmஇதன் ஆங்கில மூலம் கிடைக்காமல் இருந்தது.இந்த ஆங்கில மூலப் பாடலைக் கேட்டு 15-4-2012 அன்று கீழ்க்கண்டவாறு சில குழுமங்களில் நான் இந்தக் கேள்வியை இட்டிருந்தேன்
இணையத்தில் எவ்வளவோ முறை கேட்டாயிற்று என்ற சலிப்புடன் தொடங்கிய இழை விவாதம் பின் பேரா திரு நாகராஜன் அவர்கள் ஓர் ஊக்கத்துடன் தேடும் பணியில் இறங்க, முதலில் நான்கு வரிகள் கிடைத்த தாகூரின் பாடல் இன்று முழுமையாக பேரா திரு நாகராஜனால் நூலகங்கள், இணையம் என்று பலபடத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.இது பேரா திரு நாகராஜன் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமன்று, குழுமங்கள் இவ்வாறு நல்ல ஆர்வங்களின் வெற்றிக்கும் தளம் அமைக்க முடியும் என்பது குழுமம் என்ற இணைய கூட்டுறவுக்குக் கிடைத்த வெற்றியும் அல்லவா!இணையத்தைத் திறம்படக் கையாள்வது இப்பொழுது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததுவாய் ஆகிறது.அனைத்து பாரதி ரசிகர்களும் மகிழக் கூடிய சேதியாக இருப்பதால் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.(திரு சீனி விசுவநாதனிடம் கூறிய பொழுது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை.)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்கோடையின் வெப்பம் தாங்கவில்லை.சரி. ஆனது ஆகட்டும் என்று துணிந்து தெருவில் நடந்தால் ஓர நிழலில் ஒண்டும் நாய் ஒன்று பரிதாபமாகப் பார்க்கிறது. இந்த வெப்பத்தில் தர்ம புத்திரனின் கூட நடந்த நாய் கூட ‘நம்மால் ஆகாது’ என்று திரும்பிவிடும் போல் இருக்கிறது.அப்பொமரணவம் இல்லை என்று வெறுமையிலும் பல பிறவி. தெய்வமே இல்லை என்று நாத்திகத்திலும் சில பிறவி.கோடையில் தாகத்தில் வருந்தும் மான், ஒரு கானல் நீர் விட்டு இன்னொரு கானல் நீர் என்று குதித்துக் குதித்து ஓடிக் களைத்துத் தன்னை இழுத்துக்கொண்டு நடந்தேனும் அடுத்த கானல் நீர் நோக்கி நடக்குமாப்போல் பிறவி தோறும் பெரும் வெப்பில் புழுங்கி இந்தப் புன்னுயிர் சுமந்து அலைந்ததும், உலைந்ததும்ஐயோ....! என்ன என்று கேட்க ஒரு நாதி இல்லையோ...ஏன் என்று கேட்க ஒரு தெய்வம் இல்லையோ......“கேட்டேன். ஆனால் நீ கவனிக்க மறுத்தாய்.”யார் நீ? யார் நீ? என் முன்னால் வர மறுத்து என்னூடு குரலாய்ச் சூழ்ந்து மறையும் நீ யார்...? நீ யாராய் இருந்தால் என்ன? முதலில் நான் யார் என்றே அறியாது அயர்க்கும் பேதை நான்....அயர்ந்து பிறவிதோறும் அலையாநின்ற என்னை உணராது போயின எத்தனைப் பல்லூழி.....!வேதங்கள் காட்டும் பரம்பொருள் என்று ஒரு நினைவு உந்த வேதங்களில் தேடினால் அங்கும் அலைச்சலே மிச்சமாய்ப் போனது.வேதங்கள் காட்டும் விமலம் விண்ணாடு தர முந்தும் நாரணன் நற்கழல் என்பது துணிந்த போதுதான் எத்தனை எத்தனை மனப்பேதுறல்கள்!அதெப்படி? என்று மனத்தின் ஒரு பகுதியும், அப்படியும் உண்டு இப்படியும் உண்டு என்று மனத்தின் ஒரு பகுதியும் அலைக்கழித்த காலம்தான் எவ்வளவு!தன் மனசாட்சிக்கு உண்மை என்று உணர்ந்தும் கற்ற அறிவு விற்ற சந்தைப் பொருளாய் ஆகி ஆத்மா பட்ட துயர் அநந்தம்.ஐயோ ! ஆத்மாவிற்கு உறுதிப்பொருள் இதுதான். பிடி என்று ஒரு கரம் நீட்டாதா? இந்தப் புன்னுயிர் படுதுயர்க்குப் பாவம் என்று இரங்கும் ப்ரபஞ்ச தத்துவம் எதுவுமே கிடையாதா?வேதம் கண் என்றார். ஆனால் கண் பஞ்சடைந்து போய்க் காணும் குருடு தட்டிப் போய், வெள்ளெழுத்தும், விகாரப் பார்வையும் விடம்பனம் ஆக்கி அன்றோ நகையாடச் செய்து நிற்பன.வேதம் கடல் என்றால் அருந்த, தாகம் தணிக்க அருகதையற்றுப் போய் நின்றால் என்ன செய்வது?வேதம் அவனுறையும் பாற்கடல் என்றால் அங்கு எப்படிப் போவது? இங்கெழுந்த தாகத்திற்கு நீர் அங்கிருக்கிறது. செத்துப்போய்க் குடித்துவிட்டு வா -- என்பதுபோல் அன்றோ இருக்கிறது!ஆம். குரல் சொன்னது உண்மை. உள்ளே எத்தகைய ஓர் வெப்பத்தைச் சுமந்தபடித் தொல்லை வினைப்பிறவி கழிக்கின்றேன் யான்! அதை நினைத்தால் இந்தப் புற வெப்பம் வெறுமொத்தடம் அன்றோ !அப்படி என்றால் உண்மையான நிழல் எது? தாகத்தைத் தீர்க்கும் உண்மையான அமுதம் எது? பிறவி தோறும் அல்லல் உறும் பவ வெப்பத்தால் விளைந்த தாகத்தை இறவாமை என்னும் விளைபயன் ஊட்டித் தீர்க்கும் அந்த அற்புத அமுதம் எது?தேவர்கள் கடைந்த அமுதம் வெறுமனே நீள் வாணாளாக முடிந்துவிடும். என்றும் பவம் என்னும் வெப்பம் வருத்தாத மரணமற்ற பெருந்தன்மையாகிய அந்த நித்யத்வம் எந்த அமுதத்தால் கிட்டும்? அந்த அமுதம் எந்தக் கடலைக் கடைவதால் கிட்டும்? அதைக் கடையும் வழி என்ன? யார் கடைவது?“அத்தனையும் நடந்து முடிந்து அந்த அற்புத அமுதும் சித்தமாக உள்ளது.”எங்கே? எங்கே? ஏன் நீ இப்படி காணாக்கொடுமையில் என்னை வாட்டுகிறாய்? பேசு பேசு.திக்குத் திசை தெரியாத மனம் என்னும் வனாந்தரத்தில் ஓர் இனிய இசை மெல்ல எழுகிறது.மறைப் பாற்கடலை.....ஆஹா ! அழகு. மறை என்னும் வேதாந்தமாகிய பாற்கடலை. ஏன் பாற்கடல்? ஆமாம் வேதாந்தத்தில் உறைபவன் யார்? திருமால் அல்லவோ? திருமால் உறையும் இடம் திருப்பாற்கடல்தானே?திருநாவின் மந்தரத்தால் கடைந்து.....அற்புதம்! திருநா..ஆம்..மறையாகிய பாற்கடலைக் கடையும் நாவு திருநாவுதானே? திருநாவு என்பது மந்தர மலை.....மறையாகிய பாற்கடலைக் கடைய....துறைப்பாற்படுத்தி....என்ன கருணை! வெறுமனே கடைந்து அள்ளிவிட்டுப் போகாமல், என்றென்றைக்கும், எந்நாட்டவர்க்கும், பின் வருவோர்க்கும் பயன்படும் வண்ணம் அதன் பொருள், உள்கருத்து, உள்மறை என்று அனைத்தும் நன்கு பயன் கொள்ளும் வண்ணம் தமிழ் யாப்பின் துறைகளில் யாத்து....ஆனால் எங்கே இந்த திவ்ய அமுதம் சேமிக்கப்பட்டு இருக்கிறது? இந்திர லோகத்து அமுதம் கொணர்வதற்கே கருடனே அவ்வளவு போர் செய்ய வேண்டியிருந்தது. இந்த அமுதமோ அதைப் போன்று வெறும் அமுதம் அன்று. திவ்ய அமுதம் ! என்ன கஷ்டமோ பெறுவதற்கு? எங்கு உள்ளது இந்த அமுதம்?தமிழ் ஆயிரத்து.....என்ன? தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். தமிழ் ஆயிரத்து என்றால் முடிவற்ற இனிமையின் உள்ளே....இனிய தமிழ்ப் பாடல் ஆயிரத்தின் உள்ளே....அதாவது....ஆமாம்....திருவாய்மொழி என்னும் ஆயிரம் இன் தமிழ்ப்பாவின் உள்ளே சேமித்துவைக்கப் பட்டிருப்பது--இன்சுவை அமிர்தம் --நிச்சயம் கிடைக்காது. வேறு வேலை பார்ப்போம். இவ்வளவு சிறந்த அமிர்தத்தைத் தமிழாயிரத்தில் தேக்கி வைத்துப் போய் எடுத்துக்கொள் என்றால்.....யார் போய் எடுப்பது? போய்ப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்ததுபோல் தேமா புளிமா என்று சுற்றிச் சுற்றி வந்துவிட்டு, அங்கு ஒன்றுமே இல்லையே.....போய்ப் பார்த்தேனே....வெறுமனே அசை, சீர், தளை, பாவினம் இவ்வளவுதான் உள்ளன. அங்கு போய் அமுதத்தை எங்கு ஒளித்து வைக்க முடியும்? என்று வந்துவிடுவோம்.“இல்லை. அங்குதான் இருக்கிறது. அந்த அமுதத்தை அருந்த ரசிகர்களாகிய புவிபாவுகர்கள், திருநாரணன் தன் தொல்லடியார் கூடுவார்கள். யாரால் என்ன வருகிறதோ என்று காரணமே இல்லாமல் தன் பிரேமையின் காரணமாக வெறுமனே சீறிக்கொண்டிருக்கும் பணாமுடி ஆயிரமும், தன் திருவுடலெங்கும் அழகிய புள்ளிகள் திருஷ்டிப் பொட்டுகளாய் விளங்க அந்தத் திருவநந்தன் திருவணையில் பள்ளிகொள்ளும் பிரான் களிக்க, அந்த அடியார் ஈட்டம் களித்து அருந்தும் படியாக ஒருவர் யாருடைய கோப்பையும் குறைவுபடாமல் இருக்கும்படியாக அந்தத் திவ்ய இன்சுவை அமிர்தத்தை ஊற்றி நிறைத்தவண்ணம் நிற்பார். அவரவர் தமதமது அறிவறி வகைவகை பொருள் சுரக்கும் அமுத்தீஞ்சொல் பாசுரங்களாய் அவர் ஊற்றும் அந்த திவய இன்சுவை அமிர்தமே நீ தவித்த விடாயாற்றி.”நிழல்? நிழல்? குரலே....நிழல்?“ஹ ஹ...இன்னுமா தெரியவில்லை? அப்படி நிறைப்பவர் யார் என்று பார். அந்த நம்மாழ்வாரின் கழல் அன்றி வேறு நிழலே இல்லை.”நீ யார்? நீ...நீ...யார் என்று சொல்.....குரல் மறைந்தது.ஆனால் சத்தியம் மலர்ந்தது.உண்மையின் ஒளிநிழல்,உயர்வற உயர்நலத்து ஒண்ணிறை மதிநலம்யாதெனப் புரிந்தது.தாகத்தின் தவிப்பு,தான் இனி நித்தியமாக மறையப் போகிறோம்என உணர்ந்து இறுதி வேகத்தில் துடித்தது.அந்தக் குரல்...அந்தக் குரல்...யார் எனத் தெரியவில்லை ஆயினும் ...அந்தக் குரல்தான் என்ன தண்மை ! என்ன குளிர்ச்சி !என்ன தயை ! என்ன ஓர் இரக்கம் !இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது ---மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்துதுறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்தநிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே.( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் )
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்கோடையின் வெப்பம் தாங்கவில்லை.
என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது.வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை.
”சன்ம விடாய்தீரச் சாரங்கன் நாமத்தை
உன்நா விடாதுரைத்து உய்”
என்னும் அறிவுரையை ஈர்க்கும் நடையில் அருமையாய் வடித்திருக்கிறீரக்ள்.
... அனந்த்
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்கோடையின் வெப்பம் தாங்கவில்லை.என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது.வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை.
இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது ---மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்துதுறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்தநிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே.( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் )
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்கோடையின் வெப்பம் தாங்கவில்லை.என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது.வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை.
குளுமை இல்லை. மாறாக வஞ்சம் வைத்துக் கழுத்தறுப்பார் நுனிநா பேச்சு போன்று பேருக்கு நிழல் காட்டி உள் வெப்பமாய் வெதுப்புகிறது.தண்ணீர் தண்ணீர் என்று உள்ளத்தின் நாவு வெட்கத்தைவிட்டுப் புலம்புகிறது. குளிர் நீர் வாங்கி அருந்தலாம் என்று கடையில் கேட்டால், எடுத்துக் கொடுக்கும் நீர்ப்புட்டியில் வெது வெது என்னும் குளிர்ச்சி ஏளனம் போல் தொனிக்கிறது. ஏன் குளிர் இல்லை என்றால் நெடுநேரம் மின்சாரம் இல்லை, அப்பொழுதுதான் வந்தது என்று கையை விரிக்கிறார் ஆரா வேர்வைப் புனல் பாய் தேகத்தர்.காற்றில் தண்மை இல்லை. கருத்தில் தண்மை இல்லை. காதில் விழும் சொல்லிலும் தண்மை இல்லை. கண்காணும் காட்சிகளில் தண்மை இல்லை. ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்னும் அன்னையின் வார்த்தையில் பொய்யில்லை.சரி. ஆனது ஆகட்டும் என்று துணிந்து தெருவில் நடந்தால் ஓர நிழலில் ஒண்டும் நாய் ஒன்று பரிதாபமாகப் பார்க்கிறது. இந்த வெப்பத்தில் தர்ம புத்திரனின் கூட நடந்த நாய் கூட ‘நம்மால் ஆகாது’ என்று திரும்பிவிடும் போல் இருக்கிறது.அப்பொழுது உள்ளுக்குள் இருந்து ஒரு குரல்.குரல்தானா? அன்றேல் வெப்பில் வெந்த உள்ளத்தின் வெற்றுப் பிரமையா? எதுவாயினும் ஆகுக.என்ன இழக்கப் போகிறோம் இனிமேல், இனி இழவாததை?“ இந்த வெப்பத்திற்கே இப்படி வாழ்க்கையை வெறுத்துவிட்டாயே. இதைவிடக் கொடுமையான வெப்பத்தை உன் உள்ளே அனுபவித்துக்கொண்டிருக்கிறாயே, அது தேவையா உனக்கு? ”யார் நீ? குரல் நின்றுவிட்டது.சற்றே மயக்கம் வரும்போல் இருக்கிறது. ஆயினும் ஒரு வர்மம். இறப்பதாயினும் துணிந்து மேற்கொண்டு வெப்பத்தின் கொடுவாயிலேயே இறப்போம். நாம் இறந்தால் வருந்த எவரும் இல்லை. நம்மை நயந்து பின் தொடரும் ஒரே சொந்தம் மரணம். ‘நின் பிரிவினும் சுடுமோ இந்த வெக்காடு?’ என்று மரணத்தைப் பார்த்தே கேட்டால் போகிறது. என்ன குடிமுழுகிப் போய்விட்டது?“பல பிறவிகளில் பிறந்து இளைத்தாய். மாறி மாறி இறந்து மரணத்திற்கே அலுப்பு உண்டாக்கினாய். ஆனாலும் கொடிய வெப்பம் ஒன்றை உள்ளே சுமந்து திரியும் உனக்கு ஏன் இந்தக் கொடுமை, உன் மீதிலேயே?”யார் நீ? குரல் நின்றது.ஏன் என்ன வெப்பத்தை உள்ளே சுமந்து திரிகின்றேன் காலம் காலமாய்? அசரீரி ஏன் சொல்கிறது? அசரீரி என்றாலே ஏதாவது சொல்லும்.அப்படி இல்லை. அது சொல்வது உண்மை என்று எனக்குள் ஏதோ உறைக்கிறதே. உள்ளே சென்றுதான் பார்ப்போம். ஐயோ ! இந்த வெப்பத்தில் அந்த உள் வெப்பத்திலுமா? என்ன குடிமுழுகிப் போச்சு? போனால் போகிறது விடு. பார்ப்போம்.எவ்வளவோ பிறவி போயிற்று, என்னவாய், ஏதாய் என்று தெரியாமல்.தெரிந்தபொழுது உணவே, புலன் நுகர்வே என்று பல போயின.போய் அலுத்தபோது பட்ட வேதனைகளில் கொஞ்சம் சிந்தை திறந்தது. தெய்வம் உண்டோ என்ற ஐயம் எழுந்தது.ஆனால் எது தெய்வம் எனத் தெரியாமல் பல பிறவி. இது தெய்வம் என்று நினைத்து எதன் எதன் பின்னரோ பல பிறவி. எதுவும் தெய்வம் இல்லை என்று வெறுமையிலும் பல பிறவி. தெய்வமே இல்லை என்று நாத்திகத்திலும் சில பிறவி.
இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது ---மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்துதுறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம்கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்தநிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே.( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் )
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> உயப்போம் உணர்வினார்க்குக் காட்டினான்ஸ்ரீ ரங்கம்
> தயக்கமில் தொண்டரடி நீழல் - நயக்குமோர்
> நன்னெஞ்சும் நாரணனார் பொன்னருளும் நாளும்நம்
> புன்மைக்குப் பொன்றா மருந்து.
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
உயப்போம் உணர்வினார்க்குக் காட்டினான்சீ ரங்கம்
தயக்கமில் தொண்டரடி நீழல் - நயக்குமோர்
நன்னெஞ்சும் நாரணனார் பொன்னருளும் நாளும்நம்
புன்மைக்குப் பொன்றா மருந்து.
இப்படி அலகிடலாமா?
நா. கணேசன்
> ***
> On Jun 3, 12:36 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> > ”சன்ம விடாய்தீரச் சாரங்கன் நாமத்தை
> > உன்நா விடாதுரைத்து உய்”
> > என்னும் அறிவுரையை ஈர்க்கும் நடையில் அருமையாய் வடித்திருக்கிறீரக்ள்.
> > ... அனந்த்
> > 2012/6/2 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
> > > *நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்*
> > > *
> > > கோ*டையின் வெப்பம் தாங்கவில்லை.
> > > என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது.
> > > படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு
> > > காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது.
> > > வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது.
> > > தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால்
> > > நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை.
> > > இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது ---
> > > *மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து *
> > > *துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் *
> > > *கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த *
> > > *நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. *
அருமை! சுட்டியமைக்கு நன்றிகள்.
அர்விந்த்
கூடற்புராணத்தில் நாதமுனிகளைப் போற்றிப் பாடப்பட்ட,
அண்டகோளத்தாரென்னும் ஆரியத்தமிழாலன்று
தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர் தாமேசிற்பங்
கண்டதோர் வடிவாற் பேசத் திரைப்புறத்திருந்திக்காலத்
துண்டெனப் பதின்மர் பாடல் உத்தரித்தவர் தாள் போற்றி.
என்ற பாடலும், நம்மாழ்வார் காலத்தில் தமிழ்ச்சங்கமொன்றிருந்ததையும், சங்கப் புலவர்களை அவர் வாதிட்டு வென்றதையும் பற்றிக் குறிப்பிடுகிறது.
இந்தக்குழுமத்தில் முன்பு பேசப்பட்ட, 'அண்டகோளத்தாரணுவாகி' என்று தொடங்குகிற பாடல், சங்கத்தாரை எதிர்த்து நம்மாழ்வார் பாடியதாக கருதப்படுகிறது.
அ.ரா
Visit www.arajagopalan.blogspot.com
சுவாமி நம்மாழ்வாரைப் பற்றிய செய்திகள் பழங்காலம் தொட்டே தமிழ் நாட்டிலும், பண்டைய தனிப்பாடல் ஏடுகளிலும், பிற பண்டைய ஏட்டுப் பிரதிகளிலும் விரவியிருக்கின்றன என்று கூறுகிறார் ஸ்ரீ ராகவையங்கார், தமது அருமையான ‘பெருந்தொகை’ என்னும் பெருந்தொகுதி நூலில்.அத்தகைய செய்திகளைத் தொகுக்கும் முயற்சியை ஓரொரு சமயம் புலவர்களும், பண்டிதர்களும் செய்தனரேனும் மிக விரிந்த செய்திக் களஞ்சியமாகத் திருகுருகூர்த் தெய்வத் தண்ணொளியைப் பற்றி ஒரு முழுமையான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துப் பெரியோர்களும் அவரவர் காலத்தில் ஒவ்வொரு விதத்தில் சிறு பல தொகுப்புகள் கண்டனர் ஆயினும் பெருமுயற்சிக்கான காலம் கனியவில்லை போலும்.சடகோபர் ஆகிய நம்மாழ்வாரைப் பற்றிய முழுமையான செய்தித் தொகுப்புகள் அடங்க நூல் வருங்காலத்து அதன் மூலம் நாம் தமிழகம் பற்றிய நுணுக்கமான பார்வைகளைப் பெறுதல் இயலும்.உதாரணத்திற்குச் சங்கத்தார் வாக்கு என்பனவாகச் சில செய்யுட்கள் ஏட்டுப்பிரதியில் கண்டனவாகப் பெருந்தொகையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராகவய்யங்கார். இவர் மட்டுமேயன்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் பதிப்பித்த புறத்திரட்டு என்னும் நூலில் பல பண்டைய தனிப் பாடல்களைக் காட்டுகிறார். பெருந்தொகையில் காட்டப்படும் சங்கத்தார் வாக்கு என்னும் செய்யுட்களில் சில ----சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோநாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோஉளவோ பெருமா னுனக்கு.ஈயா டுவதோ கருடற் கெதிரேஇரவிக் கெதிர்மின் மினியா டுவதோநாயா டுவதோ வுறுமிப் புலிமுன்நரிகே சரிமுன் னடையா டுவதோபேயா டுவதோ வெழிலூர் வசிமுன்பெருமா னடிசேர் வகுளா பரணன்ஓரா யிரமா மறையின் றமிழினொருசொற் பொருமோ வுலகிற் கவியே.நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கையாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத்தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்றசேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளேசங்கத்தார் வாக்கு.(பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936)இந்தச் செய்யுட்களின் பொருளும் மிக அருமையான பொருட்சாயைகளைத் தம்முள் கொண்டனவாய் அமைந்துள்ளன.சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோநாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம்துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோஉளவோ பெருமா னுனக்கு.இந்தப் பாடலில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தைக் கண்டு அவருக்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் மயங்கச் செய்வதுபோல் அமைந்தது நம்மாழ்வாரின் பெருமை என்பது காட்டப்படுகிறது.நிலையம், வசிக்கும் இடம் எது? குருகையா? செய்ய திருப்பாற்கடலா?பெயர் என்ன? பராங்குசனா? நாராயணனா?அணிந்திருக்கும் மாலை என்ன? திருத்துழாய் ஆகிய துளவ மாலையா? அல்லது வகுள மாலையா?திருத்தோள்கள் எவ்வளவு? இரண்டா அல்லது நான்கா?பெருமானே ! இந்த மயக்கத்தை நீர்தாம் உள்ளபடித் தீர்க்க வேண்டும்.இவ்வாறு பாடுகின்ற புலவர் நெஞ்சில் எத்தனை விஷயங்கள் கிடக்கின்றன.! ஸ்ரீமந் நாராயணன் என்னும் உயர்வற உயர்நலத்துத் தெய்வம் பற்றிய தெளிந்த கருத்து இருந்தால் அன்றி, அந்தத் தெய்வத்துக்கும், தம் முன்னர் காணுகின்ற பெருங்கீர்த்திச் சிறுகுழவிக்கும் மயக்கம் ஏற்படாது. இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும்.அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு சொல்லுக்கு எதிர் பொறாது உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம் காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்திவிடுவது ஒரு சன்னல் திறந்தது போல் இருக்கிறது. கருடனைப் பற்றிய புராணக் கதைகளும், இந்திர லோகத்து ஊர்வசி போன்ற அப்சரஸ் மாதர்களைப் பற்றிய செய்திகளும் மக்கள் மத்தியில் எவ்வளவு புழங்கியிருந்தன என்பதும் தெரிகிறது.இந்தப் பாடலில்,நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கையாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத்தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்றசேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளேமிக அற்புதமான கவிநயத்தையும், புலவரது ஈடுபாட்டையும் நாம் காண்கிறோம்.திருவாய்மொழியின் செழும்பொருள் எத்தகையது என்பதை யார் அறிய முடியும்? நம்மாழ்வாரே! நீரே அறிய முடியும். அல்லது உமது இதயத்தில் நித்ய வாசம் செய்யும் சக்கரக்கையரும், திருமகளும் ஆக நிற்கும் ஆயன் அவன் தான் அறியமுடியும். கீதை உரைத்தது திருவாய்மொழியின் பொருளைக் கற்கத்தானோ? நீயோ அடியோங்களுக்குத் தாய். திருக்குருகூர்த் தமிழ்க் காரி பெற்ற சேய். தாயும் சேயுமாக நீ அருளினால் அல்லது திருவாய்மொழியின் பொருள் எம்போலியர்க்கு எப்படிப் புலப்படும்?தாய் சேய் என்ற இந்த நயம் பின்னர்ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்என்னும் தனியனிலும் விதந்து வருவதைக் காண்கிறோம்.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
ஜீவனின் ஆன்மிகப் பயணத்தை ஒரு பெரும் காவியமாகவும், நாடகமாகவும், கதையாகவும் எழுதிப் பார்த்த மகனீயர்கள் உலகம் எங்கணும் உண்டு. நம் நாட்டில் இந்த வகை ஆன்மிக கற்பனைகள் நன்கு செழித்த வளர்ச்சி உடையன என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இந்த வகை காவியங்கள், நாடகங்களில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் சங்கல்ப சூர்யோதயம் என்பது மிகச் சிறந்த ஒன்று. காவியக் கட்டுக்கோப்பு, கற்பனையின் லாகவம், சொல் அலங்கார, அர்த்த அலங்கார நயங்கள், பல படிகளில் அர்த்தம் தரும் சொற்களின் அர்த்த சாமர்த்தியம் ஆகியவற்றில் தேசிகரின் கவித்துவம் அழகாக விளையாடியிருக்கிறது. வேதாந்த தாத்பர்யம் அல்லது உள்ளுறை பொருள் என்பது அள்ளக் குறையாமல் கிடைக்கும்படி அமைத்திருக்கின்றா
ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.......அதில் ஒரு கட்டத்தை என் சொந்த மனோதர்மப்படிக் கையாண்டுள்ளேன். அதாவது தேசிகரின் உள்கருத்துக்கு விரோதம் இல்லாமல். காமாதி வ்யூஹ பேதம் என்னும் அங்கத்தினின்றும் ஒரு பகுதியை நான் adapt செய்துள்ளேன். -- விவேக உதயம் என்னும் தலைப்பில். நாடகத்தைப் படிக்க இந்தச் சுட்டியில் --ஜீவனின் ஆன்மிக க்ஷேமம் என்பதைவிட நித்தியமான காவிய இலட்சியம் என்ன இருக்கிறது?
தொல் என்பது பழையதைக்குறிப்பிட்டது போல, தொள் என்பது
தொண்டின் சிறப்பு
தொண்டு என்பது தெய்வப் பணிவிடை, அடிமை என்னும் பொருள் சாதாரணமாக நாம் அறிந்தது. தொண்டுக்கே அடிமை பூண்ட குலம் தொண்டக்குலம்.
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலத்தில் சேருமாறு அழைக்கிறார் பெரியாழ்வார்.
ஆனால் தொல்காப்பியர் காலத்தை ஒட்டியும், அவருக்கு முன்னும் ‘தொண்டு’ என்னும் சொல்லுக்கு 9 என்னும் எண்ணும் பொருளாக இருந்திருக்கிறது.
மலைபடு கடாம் 21ஆம் வரி கூறுகிறது -- தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் -- ஒன்பது வார்க்கட்டு என்பதை தொண்டு படு திவவு என்னும் சொல் குறிப்பதாக டாக்டர் உ வே சா அவர்கள் குறிப்பு காட்டுகிறார்.
தொல்காப்பியரும் 9 என்னும் எண் கடைசியில் வந்து முடிந்த ஒரு பேரெண்ணைக் குறிக்கும் போது
‘தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃது’ என்று கூறுகிறார்.
(செய்யுளியல் 406 )
http://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=1352&book_id=1&head_id=3
தலையிட்ட -- கூட்டிய
மூன்று தலையிட்ட முப்பது = 30+3
இரண்டு தலையிட்ட இருபஃது = 20+2
வடமொழியிலும்
த்வா விம்சதி = 22, சதுர் விமசதி என்று கூட்டும் கடையெண்ணை முதலில் சொல்லி முழு எண்ணைப் பின்பு கூறுதல் ஒப்பு நோக்கத்தக்கது.
ஆக, தொண்டு என்பது 9 என்ற எண்ணைக் குறித்த பழைய பயன்பாடு என்பது உரைக்காரர்களும், மூல நூல் ஆசிரியனாகிய தொல்காப்பியரும், மலைபடுகடாத்து பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரும் காட்டும் பயன்பாடுகளில் தெரியவருகிறது.
இப்பொழுது 9, 90, 900, 9000 என்ற டெசிமல் பெருக்கத்துக்கு வருவோம்.
இதற்குப் பெயர்கள் முறையே ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதினாயிரம் என்பன.
8, 80, 800, 8000 என்னும் எட்டின் டெசிமல் பெருக்கம் எட்டு, எட்டு பஃது = எண்பது, எட்டு நூறு = எண்ணூறு, எட்ட் ஆயிரம் எண்ணாயிரம் என்று வருகின்றன. அதைப் போலவே மற்ற எண்களுக்கும்.
ஆனால் ஒன்பதுக்கு மட்டும் பத்தாம் இடத்தைக் குறிக்கும் சொல்லான ஒன்பது ஒன்றாம் இடத்தில் நிற்கும் ஒற்றை எண்ணான 9 க்கு ஆகிவருகிறது. தொண்ணூறு என்று நூறாம் இடத்தின் பெயர் பத்தாம் இடத்தில் நிற்கும் 90 என்பதுக்கு ஆகிவருகிறது. தொள்ளாயிரம் என்று ஆயிரத்து இடப்பெயர் நூறாம் இடத்து 900 என்பதற்கு ஆகிவருகிறது.
ஏன் இந்த இடப்பெயர்வு?
அதாவது முதலாம் இடத்தில் முற்காலத்தில் இருந்த 9க்கு நேர் பெயரான தொண்டு என்பது வழக்கு ஒழிய அதன் மேல் அடுக்கிய பத்தாம் இடப்பெயர், நூறாம் இடப்பெயர், ஆயிரத்தாம் இடப்பெயர் ஆகியன எல்லாம் முதலாம் இடத்தை நோக்கி நகர்ந்து விட்டன போன்ற காட்சி தென்படுகிறது.
எப்படி இது நேர்ந்திருக்கலாம், அப்படி ஒரு வேளை இப்படி நேர்ந்திருக்குமானால்?
ஒரு யூகம் செய்வோம். யூகம் தான். சான்றாண்மை மிக்க முடிபு என்று கொள்ள முடியாது.
தொல்காப்பியரின் காலத்துக்கு முன் தொண்டு என்னும் 9ன் பெயரின் அடிப்படையிலேயே பத்தின் பெருக்கம் இருந்தது என்று கொள்வோம்.
அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று.
இப்பொழுது 9க்கு தொண்டு என்னும் அரிய பயன்பாடு வழக்கு ஒழிந்ததும் தொண்பது என்று 90ஐக் குறித்த பெயர் முதலிடத்தை நோக்கி நகர்ந்து 9ஐக் குறிக்க புழக்கத்தில் அமைந்துவிட்டது. தொண்பது என்பது ஒன்பது என்று சொல்வழக்கில் வந்துவிட்டது.
அதேபோல் தொண்ணூறு என்று 900 என்பதைக் குறித்த பெயர் பத்தாம் இடத்தை நோக்கி நகர்ந்து 90ஐக் குறிக்க புழக்கத்தில் வந்துவிட்டது.
9000 என்பதைக் குறித்த தொள்ளாயிரம் என்பது 900 என்பதைக் குறிக்க நகர்ந்தது.
9000 என்பது எப்படிக் குறிக்கப்படும். அமைந்துவிட்ட வழக்கத்தின்படி?
ஒன்பது ஆயிரம் என்று குறிக்கப்படல் வேண்டும். நூற்பாவின்படி இன் ஒன்று சேர்ந்து ஒன்பதின் ஆயிரம் = ஒன்பதினாயிரம் என்று ஆனது.
இது பதிப்பாசிரியரான திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டுகின்ற யூகம். ஆனால் சிந்தனைக்குரிய யூகம்.
ஏன் சிந்தனைக்குரியது என்பது ஒன்பது என்னும் சொல்லுக்கான நூற்பாவையும், அதன் உரையையும் காணும் போது புலப்படும்.
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.
(எழுத்து 445)
இந்த நூற்பா எண்ணுப் பெயரொடு பத்து சேருங்கால் எப்படி வரும் என்று விவரிக்கும் இடத்தில் ஒன்பதோடு பத்து சேரும் போது என்ன ஆகும் என்று நூற்பா விவரிக்கிறது.
ஒன்பது என்னும் சொல்லில் உள்ள ஒகரத்தின் முன் தகர ஒற்று தோன்றி நிற்கும். ஏற்கனவே இருக்கும் ன் என்னும் ஒற்று ணகாரமாய் இரட்டிக்கும். இப்பொழுது ஒன் என்பது தொண் என்று ஆயிற்றா? வருமொழியாகிய பஃது என்பதில் உள்ள பகரமும் ஆய்தமும் கெட்டுப் போக ஊகாரக் கிளவி நிற்றலை ஆசிரியன் விரும்பும். அப்பொழுது தொண்+ஊ ஆயிற்று.
பஃது என்பதில் ப, ஃ இரண்டும் போய்விட்டது. மிச்சம் து என்பதுதான். இந்த து என்பதில் த்+உ இதில் உள்ள உகரம் கெடாது நிற்கும். தகரம் றகரமாக ஆகிவிடும். தொண்+ஊ+ற்+உ = தொண்ணூறு என்ற சொல் கிடைக்கும்.
உள்ளபடியே பார்த்தால் தம் காலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்ட தொண்ணூறு என்னும் சொல்லை நூற்பா விவரிக்க முயற்சி செய்கிறதேவொழிய சொல்லுக்கான நியாயமோ, விளக்கமோ, அமைதியோ இருப்பதாகத் தோன்றுகிறதா?
http://www.tamilvu.org/slet/l0100/l0100noo.jsp?song_no=445&head_id=1
இந்த நூற்பாவிற்கு அடிக்குறிப்பில் திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டியிருக்கும் யூகக் கருத்தைத்தான் முதலில் விவரித்தேன். இந்த யூகத்திற்குத் தொண்டு என்பது 9ஐக் குறிக்கும் என்று தொல்காப்பியரும், மலைபடுகடாத்துப் புலவரும் காட்டும் சான்று பக்க பலம். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற வழக்குகள் கெடாமல் வந்துள்ளமை ஒரு பலம். ஆனால் ஒரு கேள்வி இந்த யூகத்திலும் எழாமல் இல்லை. என்ன? யூகம் கூறும் பண்டைய முறையில் 90 என்பதைக் குறித்த தொண்பது வழக்கில் மாறி தொண்டு என்னும் சொல் பொருள் வழக்கு வீழ, ஒன்பது என்று ஆகிவிட்டது என்றால், ஏன் தொண்ணூறு என்பதும், தொள்ளாயிரம் என்பதும் தகரம் மறைந்துபடாமல் அப்படியே வந்தது என்னும் கேள்வியும் எழும். ஆனால் இந்த யூகம் கண்மூடித்தனமான யூகம் இல்லை என்பதும், சிந்தனைக்குரியது என்பதும் சரிதானே?
ஒன்பது என்பது பத்தில் ஒன்று குறைந்தது என்பதைச் சுட்டும் சொல் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. எனில் தொண்ணூறு என்பது நூறில் எவ்வளவு குறைந்தது என்பதைக் காட்டுகிறது? தொள்ளாயிரம்?
ஆக மொத்தம் 9க்கு உரிய பழம் பெயரான தொண்டு என்பதன் சிறப்பு அரிய/அறிய சிறப்பன்றோ!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
ஊன்றியெழு உயிரிழையில் ஒன்று
கூனிரியக் குற்றுயிராய் நின்று
மேனிக்குள் மூட்டுகின்ற தீ என்று
பனிக்குள் ஒரு சூட்டைக்
கண்டு பதைக்கிறது
உள்ளம்.
வைர வரிகள்! இருட்டிலிருந்தும் ஒளியை இழுக்கின்றீர்கள்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அழகு!
என்ன அது?
கண்ணினிப்பா?
காதில் மதுவா?
முகர் மயலா?
நாவீன் தேனா?
தொட்டெறியும்
இன்பச் சூறையா?
மிருதுவா?
வளைவா?
நெளிவா?
சுழிப்பா?
செழிப்பா?
குழிப்பா?
விழிப்பா வையம்
பிரதியா?
ரதிப்பார் வைக்குள்
குனியும் வில்லா?
விரையும் சரமா?
சரக்
அழகு!
என்ன அது?
கண்ணினிப்பா?
காதில் மதுவா?
முகர் மயலா?
நாவீன் தேனா?
தொட்டெறியும்
இன்பச் சூறையா?
மிருதுவா?
வளைவா?
நெளிவா?
சுழிப்பா?
செழிப்பா?
குழிப்பா?
விழிப்பா வையம்
பிரதியா?
ரதிப்பார் வைக்குள்
குனியும் வில்லா?
விரையும் சரமா?
சரக்கூடாகிச்
சுடரும் கதிரா?
கதிரும் குளிரும்
பனிவெப் பியலா?
இயலாய் அயலார்
மயலுண் பதுவா?
கயலாய்க் கடைவிழித்
தூண்டுஇல் புதுமையா?
மையாய் இட்டுளம்
நையும் கொடுமையா?
புலரும் கதிரும்
படியும் நிலவும்
அலரும் பூவின்
தலைநுண் முகையும்
விம்மிடும் மலையும்
விழுந்திடு சரிவும்
விரைந்திடு பள்ளத்
தாக்குறு புதரும்
தேக்குறு மேடும்
தழைத்திடு தடநீர்
பாய்வழித் தடமும்
இயற்கையின் கொசுவம்
அவிழ்ந்திடு கடலும்
அலைக்கரம் தழுவப்
படிந்திடு கரையும்
சிறகுசிலிர்க்கச்
சிவணிய விண்ணும்
சுயத்தில் கரைந்த
பயனாய்ச் சுகமும்
இயற்கை எங்கும்
பொங்கும் வளமும்
இயலும் உன்பால்
எனவே நினைத்தால்
நினைவாய் நிலைத்த
ஈரம்புலராக் கணத்தில்
இயற்கையின்
ரசாயன உயிர்ச்
சமன்பாட்டில்
கூட்டியும் கழித்தும்
பெருக்கியும் வகுத்தும்
மிச்சமும், ஈவும்
சொச்சமுமாக்கிச்
சொகுசாய் இயற்கை
சொக்குப் புன்னகை
பூக்கும் மணமா?
அழகு!
அழகா?
அளவா?
மயலில் கருத்து
துயிலக் களவா?
அணுக்கள் முயங்க
அவைமேல் படிந்த
உள்ளப் பாசி
உமிழும் குமிழோ?
அமிழும் உயிரின்
முடநம் பிக்கையோ?
எதுவானால் என்?
மெதுவாகவே வா!
இறப்பே!
நீயே அழகின்
தூய வடிவோ?
அழகென்ற ஒன்று
இலையென்ற மர்மம்
கலையவிழ வா!
அலையெறிய நாடி
அநவரதம் கூடி
தலைநாளில்
அருளோடு வா!
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மிக மிக அருமையாகத் துவக்கியிருக்கிரீர்! அழகிய எளிய நடை! வாழ்க!
ஒரு சின்னஞ்சிறு குறிப்பு: ’பகவந்நாம’எனவேண்டியதை - ’நாமா’ என்பது
தமிழ்ப்பேச்சு வழக்கில் வரும் மரூ
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நண்பர்கள் படிக்க விருப்பப்பட்டால்இங்கே -- http://sribhagavannama.blogspot.in/***
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
நூல் - திருக்குருகூர்வரிபாடியவர் - கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல்நாணல் என்று முன்னம் நான் குறிப்பிட்ட பேராசிரியர் திரு ஏ சீநிவாசராகவன், இவர் எல்லாம் நண்பர்கள் என்று நினைக்கிறேன். சென்னையில் வாழும் ஆங்கிலப் பேராசிரியர் திரு அரங்கநாதன் அவர்கள் திரு பக்ஷிராஜனைப் பற்றிக் குறிப்பிடும் போது சொன்ன நினைவு - சம்பிரதாயத்தில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்று.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி விம்சதி என்னும் கணக்கில் இருபது வெண்பாக்கள் எழுதினேன். அதற்கு ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பொருள் பொழிந்து நான்கு பகுதிகளாக வலையேற்றியுள்ளேன்.***
1) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-1.html
2) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-2.html
3) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-3-11-to-15.html
4) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-4.html
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி விம்சதி என்னும் கணக்கில் இருபது வெண்பாக்கள் எழுதினேன். அதற்கு ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பொருள் பொழிந்து நான்கு பகுதிகளாக வலையேற்றியுள்ளேன்.***
1) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-1.html
2) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-2.html
3) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-3-11-to-15.html
4) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-4.html
பாரதியைப் பற்றியும், அவரது பாடல்களில் புதைந்திருக்கும் அரிய பெரிய கருத்துகளையும், தமிழ் நாட்டிற்கே அன்றைக்கும், என்றைக்குமாக ஒரே ஆசானாக அமைந்திருக்கும் அவரது பார்வையின் செழுமை, செறிவு ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன். அத்தகைய எழுத்துகள் தனி ப்ளாக்கில், ‘பாரதி என்னும் கல்வி’ என்னும் தலைப்பில் சேமிக்கப் படும். ப்ளாக்கிற்கான சுட்டி
பாரதி என்னும் கல்வி - http://seerrangan.blogspot.in/
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/DJcnXfLpKFs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பாரதியாரின் பாப்பா பாட்டு பதிப்புகள் பற்றிய என் விமரிசனம் இங்கு. நண்பர்கள் காணில் மகிழ்ச்சி -