ஒரு சந்தேகம்
இன்றிலிருந்து பேராசிரியர் நாகராஜன் வடிவேல் அவர்கள், 'தேடிக் கண்டடைந்த
திருமேனி' என்று அழைக்கப்படுவாராக.
ஐயா! உங்கள் தேடலால் கிடைத்த வரிகளைக்கொண்டு தேடினால் அந்தப் பாடல் ஆங்கிலத்தில் ஸ்ரீமான் ரவீந்த்ரநாத் தாகூர் எந்தச் சூழ்நிலையில் எழுதினார் என்ற கூடுதலும் தகவலும் இப்பொழுது கிடைக்கிறது பாருங்கள்.
வணக்கம் நாகராஜன் ஐயா,இந்தச் சுட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றால், அது மொத்தம் 500 கவிதைகளை நம் முன் கொட்டுகிறது. அலசுவோம், முயன்றால் முடியாததும் உண்டோ. எளிதாகக் கிடைத்து விட்டால் பொக்கிஷத்துக்கு மதிப்பேதுஅன்புடன்,அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)
எனினும் சொன்ன கதையும் பெற்ற அனுபவமும் அருமை. ஆராய்ச்சிக்காக எவ்வளவு
அலைய வேண்டியிருக்கிறது, பாருங்கள். இதற்காக ரங்கன்ஜி, ஐஸ்கிரீம் கொடுக்க
ஆரம்பித்தால், ஒரு கடையையே கொடுத்தாலும் போதுமா?
உலகின் அனைத்து நூல்களையும் மின்னணு வடிவில் சேமித்து, அனைத்து
நூலகங்களையும் மின் நூலகங்களாக மாற்றிவிட்டால், இந்த அலைச்சல் வெகுவாகக்
குறைந்துவிடும். இது தொடர்பாக என்னிடம் ஒரு செயல் திட்டம் உள்ளது.
அரசுகளும் தனியார் நூலகத்தினரும் பதிப்பாளர்களும் பிறரும் ஒருங்கிணைந்து
ஒத்துழைத்தால், இந்தச் சிக்கல்களை எல்லாம் மூட்டை கட்டிப் பரணில்
ஏற்றிவிடலாம்.
நாகராஜா!யாமும் அன்றொரு நாள் அடையாரில் மூழ்கி எழுந்தவன் தான். அங்கு சராசரி வயது 103.இன்னம்பூரான்
கொஞ்சம் என்ன? ரொம்பவும் ஓவர், அடையார் நூலகத்தில். சாமி! நான் அக்காலம் அடையார் வாசி. உமது பற்படி நிலை ஹை கியர் சைக்கிளை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில், உம்முடன் பிரும்மஞான சபை சம்பந்தம். ஆய்வில் ஆர்வம் அதனால் உ.வே.சா.நினைவு. திரிலோக சஞ்சாரி. வயசும் ஆச்சு, மூட்டை, முட்டையா! உம்ம மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! உண்மை பற்றாளன்.அதனால் தான், எவெரெஸ்ட் உச்சியில் டென்சிங்குடன் அளவளாவியதைச் சொல்ல வில்லை. ஆக்ச்சுவலி, அவருடன் அளவளாவினேன், செளத் ப்ளாக்கில்.நாகராஜா! எஸ்.ஓ.எஸ்.!இன்னம்பூரான்
’இ’சார்
அதென்னவோ அது
கன்னிமாடம் போலவும்
வாயிருக்கற பிள்ளை புழச்சுக்கும்.இ
இன்றைய செயலறிக்கை.