துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050
பாவாணர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை-நுகர்ச்சிப் பொருள்களில்லாதார் உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று-பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த பழங்கஞ்சியையும் உண்டொழித்தற்கேயாம்.
நுகர்ச்சிப் பொருள் ஒன்றுமில்லாதவர் மானமுள்ளவராயின் செய்யத் தக்கது. உலகப்பற்றை முற்றத் துறத்தலே. ஏற்கெனவே உலகப் பொருளும் உறவினரும் இல்லாமையால், அவர் துறத்தற்கு எஞ்சி நிற்பது உடம்பொன்றே. ஆதலால், புறப்பற்றுத் தானாக நீங்கிய அவருக்கு அகப்பற்றை நீக்கும் துறவுநெறிச் செலவு எளிதாக இயலும். அதனால், இம்மையில் மானத்தைக் காத்தலொடு மறுமையிற் பெறற்கரிய வீடுபேறும் உண்டாம். அங்ஙனமிருந்தும், அதைச் செய்யாது பிறர் வீடுதொறும் சென்றிரந்து, வாயிற்கு வெளியே அவரிடம் பழங் கஞ்சியை நாய்போலருந்தித் திரிவது, எத்துணை மடமையும் மானக்கேடுமான செயலாம் என்று ஆசிரியர் இரங்கிக் கூறியவாறு. கூற்றுவன் உயிர்கவர்தலை உயிருண்ணல் (குறள்,326) என்னும் வழக்குண்மையின், பழங் கஞ்சியுண்ணும் இரப்போரை அதற்குக் கூற்று என்றார். முற்றத் துறவாமையாவது துப்பிரவில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தாராயினார் பின்னவற்றை மனத்தாற் றுறவாமை. என்றுரைப்பது பொருந்தாது, துறவென்பது மனத்தால் துறத்தலேயாதலின்.
Rev போப். Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die.
கலைஞர் உரை: ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்
மு.வ: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
இரண்டு விஷயங்கள்:
முதலில் :
வறுமையுற்றார் உயிர் வாழ்தல் கூடாது. உடம்பைத் துறந்து விடுதல் அது தானே! இது இக்குறளின் பொருளா?
இரண்டாவது :
பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் தனது ஒரு நூலின் முன்னுரையில் "காடிக்கும் உப்புக்கும் கூற்று" என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு பிறருக்குப் பயன் இல்லாது வாழ்வது 'உப்புக்கும் காடிக்கும் கூற்று' என்பதால் இயன்றதைச் செய்து வருவதாகத் தன் எண்பதாவது அகவையில் குறிப்பிட்டிருந்தார். பணி நிறைவுக்குப் பின் சில நேரங்களில் பணி ஒன்றும் இல்லாமையால், அமைத்துக் கொள்ளப் பல்வேறு காரணங்களால் இயலாமையால் வெறுமை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நண்பர்கள் குறள் காட்டும் பொருளையும் பணி நிறைவுக்குப் பின்னர் பயன்படுமாறு வாழ்வதற்கான வழி முறைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
On Jun 2, 7:08 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> *துப்புர வில்லார் துவரத் துறவாமை
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று. *1050
> பரிமேலழகர் உரை:
> துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற்
> செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும்
> கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம்
> அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே
> விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல்.
> அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக்
> கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால்
> துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர்.
> இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
>
> **
>
> பாவாணர் உரை: துப்புரவு இல்லார் துவரத் துறவாமை-நுகர்ச்சிப் பொருள்களில்லாதார்
> உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்;
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று-பிறர் மனைகளிலுள்ள உப்பையும் புளித்த
> பழங்கஞ்சியையும் உண்டொழித்தற்கேயாம்.
>
> நுகர்ச்சிப் பொருள் ஒன்றுமில்லாதவர் மானமுள்ளவராயின் செய்யத் தக்கது.
> உலகப்பற்றை முற்றத் துறத்தலே. ஏற்கெனவே உலகப் பொருளும் உறவினரும் இல்லாமையால்,
> அவர் துறத்தற்கு எஞ்சி நிற்பது உடம்பொன்றே. ஆதலால், புறப்பற்றுத் தானாக நீங்கிய
> அவருக்கு அகப்பற்றை நீக்கும் துறவுநெறிச் செலவு எளிதாக இயலும். அதனால்,
> இம்மையில் மானத்தைக் காத்தலொடு மறுமையிற் பெறற்கரிய வீடுபேறும் உண்டாம்.
> அங்ஙனமிருந்தும், அதைச் செய்யாது பிறர் வீடுதொறும் சென்றிரந்து, வாயிற்கு
> வெளியே அவரிடம் பழங் கஞ்சியை நாய்போலருந்தித் திரிவது, எத்துணை மடமையும்
> மானக்கேடுமான செயலாம் என்று ஆசிரியர் இரங்கிக் கூறியவாறு. கூற்றுவன்
> உயிர்கவர்தலை உயிருண்ணல் (குறள்,326) என்னும் வழக்குண்மையின், பழங்
> கஞ்சியுண்ணும் இரப்போரை அதற்குக் கூற்று என்றார். முற்றத் துறவாமையாவது
> துப்பிரவில்லாமையின் ஒருவாற்றாற் றுறந்தாராயினார் பின்னவற்றை மனத்தாற் றுறவாமை.
> என்றுரைப்பது பொருந்தாது, துறவென்பது மனத்தால் துறத்தலேயாதலின்.
>
> *Rev போப். **Unless the destitute will utterly themselves deny,*
>
> * They cause their neighbour's salt and vinegar to die.
> *
>
> மு.வ: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும்
> துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும். கலைஞர்
> உரை: ஒழுங்குமுறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத்
> துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.
>
> இரண்டு விஷயங்கள்:
>
> முதலில் :
>
> வறுமையுற்றார் உயிர் வாழ்தல் கூடாது. உடம்பைத் துறந்து விடுதல் அது தானே! இது
> இக்குறளின் பொருளா?
>
> இரண்டாவது :
>
> பேராசிரியர் ந.சுப்புரெட்டியார் தனது ஒரு நூலின் முன்னுரையில் "காடிக்கும்
> உப்புக்கும் கூற்று" என்பதை மட்டும் எடுத்துக்கொண்டு பிறருக்குப் பயன் இல்லாது
> வாழ்வது 'உப்புக்கும் காடிக்கும் கூற்று' என்பதால் இயன்றதைச் செய்து வருவதாகத்
> தன் எண்பதாவது அகவையில் குறிப்பிட்டிருந்தார். பணி நிறைவுக்குப் பின் சில
> நேரங்களில் பணி ஒன்றும் இல்லாமையால், அமைத்துக் கொள்ளப் பல்வேறு காரணங்களால்
> இயலாமையால் வெறுமை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
>
> நண்பர்கள் குறள் காட்டும் பொருளையும் பணி நிறைவுக்குப் பின்னர் பயன்படுமாறு
> வாழ்வதற்கான வழி முறைகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
> அன்புடன்
>
> சொ.வினைதீர்த்தான்.
சமண முனிபுங்கவர் ஆன வள்ளுவர் பெருமான்
பௌத்தத்தின் சங்கங்கள் உருவாக்கும் போலித் துறவியரைச்
சாடும் குறளிது என்று கருதுகிறேன்.
இவற்றிலும் (புத்த) பிக்ஷுகளைக் குறைப்படுகிறார்:
http://groups.google.com/group/mintamil/msg/23086e78e0fbf58c
ஜைன உரை பார்த்தால் விளங்கலாம். பானுகுமாரிடம்
அல்லது மற்ற அன்பர்களிடமோ கா. ம. வேங்கடராமையா
(தஞ்சை சரசுவதி மகால்) உரை
உள்ளதா. அ. சக்கிரவர்த்தி நயினார், ஜீவபந்து ஸ்ரீபால், ...
உரைகள் என்ன? என்று தெரியப்படுத்தவும்.
Organized Religion-கு எதிரானவர் செந்நாப் போதார்.
அடங்காப் பிடாரியாக உள்ள பையனைச் சேர்த்தல்
சிங்களப் பெற்றோரின் பழமரபு. சோறு சமூகம் போடும்,
தண்டச்சோறு - உப்புக்கும் காடிக்கும் கூற்றாக - தின்றுகொன்று
பௌத்த சங்கங்களில் லீடர்கள் உசுப்பிவிட்டதால் பேரினவாதம்
கட்டி எழுப்பி, பல லட்சம் தமிழர்கள் தங்கள்
தாய்நாடான ஈழத்தில் கொலையுண்டதும், அபலைகளாய்
துரத்திவிடப்படுவதும் கண்முன் நிகழ்வன -
உலகத்தின் ஒப்புதலுடன்.
அருமையான குறள். என்னுரை பின்னர்.
நா. கணேசன்
’துவரத் துறவாமை’
பௌத்த பிக்ஷுக்களின் துறவு போலியானது
என்கிறார். உப்புடன் காடிக்காக ஏற்ற சங்க
வாழ்க்கை. ’ரைஸ் க்றிச்டியன்ஸ்’ கிறித்துவ
மதமாற்ற ஸ்டடீஸ்-ல முக்கியமான மகாவாக்கியம்:
http://en.wikipedia.org/wiki/Rice_christians
http://en.wikipedia.org/wiki/Religion_of_the_Yellow_Stick
சூடா நறவு, வாடா வள்ளி, வாடா வஞ்சி, ....
போன்ற தொடர் “துவரத் துறவாமை” என்று கொள்கிறேன்:
http://groups.google.com/group/mintamil/msg/4d9b441e504ca55c
துவரத் துறவாமை. ஈண்டு, துவர்தல் = துவராடை கட்டுதல்.
மருதப் பூவைக் காய்ச்சித் தோய்த்த
பௌத்தரின் சீவர ஆடை. வள்ளுவருக்கு
ஆந்திராவிலும், சிங்களத்திலும் நடக்கும்
பௌத்த குளறுபடிகள் நன்கு தெரியும்.
திருக்குறள் அதிகாரங்களை
ஏற்பது இகழ்ச்சி (இக்குறள்), ஐயமிட்டுண்
ஔவை அறிவுரைகளால் ஒருவாறு அறியலாகும்.
கணேசன்
> தாய்நாடான ஈழத்தில் கொலையுண்டதும், ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
வினைதீர்த்தான் ஐயா
’துவரத் துறவாமை’
பௌத்த பிக்ஷுக்களின் துறவு போலியானது
என்கிறார். உப்புடன் காடிக்காக ஏற்ற சங்க
வாழ்க்கை.
திருக்குறள் அதிகாரங்களை
ஏற்பது இகழ்ச்சி (இக்குறள்), ஐயமிட்டுண்
ஔவை அறிவுரைகளால் ஒருவாறு அறியலாகும்.
கணேசன்
நன்றி திரு கணேசன். குறள் பற்றிய மேலும் தங்கள் விளக்கத்தையும் பணிநிறைவுக்குப் பின்னதான சமுதாயப் பயன்பாடு பற்றிய தங்கள் கருத்துக்களையும் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பிற நண்பர்கள் எண்ணங்களையும் வேண்டுகிறேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jun 5, 4:03 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா,
>
> வாழ்க்கையில் ஏதும் இல்லாத நிலையிலும் (வாழ்க்கையில் எல்லாக் கடமைகளும்)
> துறப்பதற்கு
> மனமில்லாமல் உப்பிற்கும் காடிக்கும் கேடாய் இருப்பதென்ன? (தண்டச் சோறு ???)
> என்று கேள்விக்
> கேட்கிறார் தேவர் பெருமான்!
>
> என்று பொது மக்களுக்கு (இல்லறத்தார்) உரையாகவும்,
>
> முழுதும் துறவாமல், வெறுமனே, இரந்து உண்டு வாழ்வதால் என்ன பயன் என்று
> துறவறத்தில் நிற்கும் ஒரு சாராரை நோக்கி கேள்வி என்றும் உரைக் கொள்ளலாம்!
>
நன்றி, பானு. அவ்வாற்ரே உரை கொள்ளலாம்.
இதற்கு முக்கிய உதாரணம்: பௌத்த சங்கத்தில் பலர்.
நா. கணேசன்
> இரா.பா,
> சென்னை
>
> 2011/6/3 karuannam annam <karuan...@gmail.com>
>
>
>
>
>
> >> 2011/6/2 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> >>> வினைதீர்த்தான் ஐயா
>
> >>> ’துவரத் துறவாமை’
> >>> பௌத்த பிக்ஷுக்களின் துறவு போலியானது
> >>> என்கிறார். உப்புடன் காடிக்காக ஏற்ற சங்க
> >>> வாழ்க்கை.
>
> >>> திருக்குறள் அதிகாரங்களை
> >>> ஏற்பது இகழ்ச்சி (இக்குறள்), ஐயமிட்டுண்
> >>> ஔவை அறிவுரைகளால் ஒருவாறு அறியலாகும்.
> >>> கணேசன்
>
> >>> நன்றி திரு கணேசன். குறள் பற்றிய மேலும் தங்கள் விளக்கத்தையும்
> >> பணிநிறைவுக்குப் பின்னதான சமுதாயப் பயன்பாடு பற்றிய தங்கள் கருத்துக்களையும்
> >> எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
>
> >> *பிற நண்பர்கள் எண்ணங்களையும் வேண்டுகிறேன்*
>
> > நன்றியுடன்
> > சொ.வினைதீர்த்தான்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
வாழ்க்கையில் ஏதும் இல்லாத நிலையிலும் (வாழ்க்கையில் எல்லாக் கடமைகளும்) துறப்பதற்குமனமில்லாமல் உப்பிற்கும் காடிக்கும் கேடாய் இருப்பதென்ன? (தண்டச் சோறு ???) என்று கேள்விக்கேட்கிறார் தேவர் பெருமான்
|
கடவுள் பற்று என்பதிலெல்லாம் பல்வேறு காரணங்களால் அரைகுறை. அதனை உருவகித்துப் பற்றுதல் என்பது கடினம்.
முழுதும் துறவாமல், வெறுமனே, இரந்து உண்டு வாழ்வதால் என்ன பயன் என்று
துறவறத்தில் நிற்கும் ஒரு சாராரை நோக்கி கேள்வி என்றும் உரைக் கொள்ளலாம்!
|
| |||
|
| ||
என்பது இல்லறத்தில் கடைசி நிலையில் உள்ளோர்க்கு கூறியது!
இரா.பானுகுமார்,
சென்னை
--
அன்புடன்,
ஹரிகி.
மற்றபடிக் கண்டுக்காதீங்க தலைவரே!
:))
இன்னும் அதே பார்மில் இருக்கிறீர்கள்!!
;-)
On Jun 6, 12:14 pm, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
> துப்புர வில்லார் துவரத் துறவாமை
> உப்பிற்கும் காடிக்கும் கூற்று. - 1050
>
> ஒழுக்கம் இல்லாத மனிதர்கள் செவ்வாடை (துவரம்) அணிவதும், அணியாமல் இருப்பதும்
> உப்பின் தன்மைக்கும், சிவந்த மிளகாயின் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்துக்கு
> ஒப்பானது.
>
சிவந்த மிளகாய் முன்பு இருந்ததா?
புகையிலை, நிலக்கடலை, உருளைக்கிழங்கு போல,
போர்த்துக்கீசியர், ஸ்பானிஷ்காரர்கள் காலத்தில்
அறிமுகம் செய்த மத்திய அமெரிக்கா பயிர்ப்பொருள்.
நா. கணேசன்
> சிறந்த ஒழுக்கங்கள் இல்லாதவர்கள் துறவு பெற்றால் (கடல் நீரில் இருந்து தனியாக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jun 6, 12:53 pm, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
> புகையிலை, நிலக்கடலை, உருளைக்கிழங்கு போல,
> போர்த்துக்கீசியர், ஸ்பானிஷ்காரர்கள் காலத்தில்
> அறிமுகம் செய்த மத்திய அமெரிக்கா பயிர்ப்பொருள்.
> போர்த்துகீசியர், ஸ்பானிஷ்காரர்களுக்கு முன்பே திரை கடலோடி திரவியம்
> சேர்த்தவர்கள் தமிழர்கள் என்பது என் நம்பிக்கை. சான்றுகளும் உண்டு. தவிர
> புகையிலை ( இப்போதுள்ள சிகரட், சுருட்டு, பீடி, ஹூக்கா அல்ல ) போடும் வழக்கம்
> கிமு காலத்திலேயே இருந்து இருக்கவேண்டும். வெற்றிலைக்கு முன்பே இந்த ஊர்
> பெரியவர்கள் பொகளை இடித்து போட்டு இருக்கிறார்கள்.
>
பொகளை, மிளகாய், ... எல்லாம் வள்ளுவர் காலத்தில்
இருந்தது என்கிறீர்கள். சரியா?
> 2011/6/6 N. Ganesan <naa.gane...@gmail.com>
> prakash sugumaran- Hide quoted text -
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jun 6, 1:17 pm, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
> நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
>
இருக்கும் ...
பயோ-அர்க்கியாலஜி, இலக்கியம் -
புகையிலை, மணிலாக் கொட்டை (Manila, Phillipines)
மிளகாய், .... பார்க்கவும்.
/க/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Jun 10, 6:37 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> ௨.காடி என்பதற்கு மிளகாய் என்று பொருள் உள்ளதா?
> அறிய ஆவல்.
காடி¹ kāṭi , n. < கடு¹-. [T. kāḍi, M. kāṭi.] 1. Fermented gruel or
rice-water; புளித்த கஞ்சி. (பதார்த்த. 49.) 2. Vinegar; புளித்த கள். 3.
Gruel; கஞ்சி. காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல். 134). 4. Acetous
fermentation of sweet fruits; புளித்த பழரசம். 5. Pickles; ஊறுகாய்.
காடிவைத்த கலன் (பெரும்பாண். 57).
-----------------
காடிக்கு மிளகாய் என்னும் பொருள் புதியதாக
தெரிகிறது.
> 3. கூற்று என்ற சொல் தங்கள் விளக்கத்தில் எவ்வாறு பொருந்துகிறது.
உடலையும், உயிரையும் கூறாக்குவது கூற்று
என்பது பழந்தமிழ்.
நா. கணேசன்
> அன்புடன்
On Jun 10, 12:38 pm, prakash sugumaran <prakash...@gmail.com> wrote:
> கூற்று - கூத்து - ஒன்றை போல மற்றொன்று நடித்து ( அதை விளக்க இது, அது போல
> நடந்து ) காட்டுவது. ( உதாரணமாக )
>
இக் குறளில் உள்ள கூற்று யமன் என்னும் பொருள் தருகிறது (கூறு: கூற்று).
--------------
கூத்து, கூற்று வேறான இரு சொற்கள் எனக் கருதத் தோன்றுகிறது,
ஒப்பியல் மொழிநூலில் ”குதித்தாடுவது கூத்து”
என்று எழுதுகிறார் பாவாணர்:
“நாடகத்தமிழ் (Dramatic Literature)
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல். அகத். 56)
கூத்தர் விறலியர். . . . . வாயில்கள் என்ப
(தொல். கற்பு. 52)
என்பவற்றால், தொல்காப்பியர் காலத்து நாடகமுண்மை யறியப்படும்.
நாடகம் என்பது நடி என்னும் பகுதியடியாய்ப் பிறந்த தொழிற்பெயர். நடி +
அகம் = நாடகம். (முதனிலை திரிந்து ஈறுபெற்ற தொழிற்பெயர்). நடி + அம் =
நடம் - நட்டம். நட்டம்-நிருத்தம் (வ). ஒ.நோ : வட்டம் - விருத்தம் (வ.).
(வள் + தம் = வட்டம்). நாடகம் கதை தழுவிவரும் கூத்து. நடம் நட்டம் என்பன
தனிக்கூத்தும் பாட்டிற்கேற்ற அபிநயமுள்ளதும். நட்டம் பயிற்று பவன்
நட்டுவன். நடம் பயில்பவள் கணிகை. நாடகமாடுபவள் நாடகக் கணிகை. தாளத்தைக்
கணித்தாடுவதால் கணிகை யென்று பெயர். கணிகையை இக்காலத்தில் தாசியென்பர்.
தாசி = அடியாள், தேவடியாள். தனிக்கூத்திற்குத் தாண்டவம் என்னும் பெயர்.
தாண்டியாடுவது தாண்டவம். தாண்டுதல் - குதித்தல்.
நடி என்பது நட என்னும் சொல்லின் திரிபு. முதன்முதல் நடித்தது
ஒருவனைப்போல் நடந்து காட்டியதே. நட என்னும் சொல்லே அம் ஈறுபெற்று நடம்
என்றானது எனினும் பொருந்தும். நடக்கிற இடம் என்பதை நடமாடுகிற இடம் என்று
சொல்லும் வழக்கை நோக்குக.
நடத்தல் என்பது, காலால் நடத்தலை மட்டுமன்றி ஒழுகும் வகையையுங்
குறிக்கும். நடக்கை, நன்னடக்கை முதலிய வழக்குகளை நோக்குக.
நாடகத்தைத் தனிக்கூத்து, பாட்டொடு கூடியது, கதை தழுவியது என மூன்றாய்
வகுக்கலாம்.
நாடகத்திற்குக் கூத்து என்றும் பெயர். கூத்து என்பது முதலாவது ஆட்டத்தை
மட்டும் உணர்த்தி, பின்பு கதை தழுவிய நாடகத்தையும் உணர்த்துகின்றது.
குதித்தாடுவது கூத்து. கூத்தாடுகிறான், ஆனந்த (உவகை)க் கூத்தாடினான்
என்னும் வழக்குகளை நோக்குக. “
-----------------------
குதித்தாடுவது தாண்டவம். அதிலிருந்து சம்ஸ்க்ருத இலக்கியம் உருவாக்கியது
“தண்டு” என்ற பெயர் கொண்ட முனிவர்.
மாமல்லபுரம் பல்லவ சிற்பங்களிலும், பரத முனியின்
பரத சாஸ்திரத்திலும் “தண்டு” என்னும் நாட்டியக்கலை
சிவபிரானால் போதிக்கப்பெற்ற முனிவனைக் காணமுடியும்.
தண்டு < தாண்டவம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து
கட்டமைக்கப்பெற்ற கதாபாத்திரம் (நாட்யசாத்திரத்தில்).
இதுபோல் இன்னும் இரண்டு உதாரணங்கள் முன்னர்
காட்டி உள்ளேன். (1) யா மரம் நிறைந்தது யாவகம்
(இன்றைய ஜாவா தீவு, இந்தோனேசியா). இதனை “யவம்”
(பார்லி என்னும் தானியம்) தீவு என்றும், யவம் என்றால் நெல்
என்றும் கொள்கிறது சமற்கிருதம். இந்த யவம் < யாவகம்
பேரமைத்தல் “நெல்” என்பதற்காக அமைந்தது - சங்க
இலக்கியத்திலேயே வந்துவிடுகிறது. (2) யாடு மேய்க்கும்
இடையர்கள் யாடவர் > யாதவர் (Cf. கடம்பு:கதம்ப மலர்... ),
யாதவர் என்ற பெயரிலிருந்து “யது” என்ற குலப்பெயர்
சிருஷ்டிக்கப்படுகிறது என்பர். (3) தண்டு < தாண்டவம் பற்றி
மேலே விளக்கம் தரப்பட்டுள்ளது.
வெறும் குதித்தாடல் மாத்திரம் கூத்து அல்லவே.
கூறு:கூற்று, கூடு:கூண்டு, ஏறு:ஏற்றை (நாலடியார் தரும்
ஆண்பனைப் பெயர், ஏற்றம் என்பார் சேக்கிழார்), பாடு:பாட்டு, ...
எனபன போல் கூது:கூத்து தொடர்புடைய சொற்கள்.
கன்னடத்தில் கூது என்றே கூத்து அழைக்கப்படுகிறது.
“அசைதல்” என்னும் அடிப்படைப் பொருள் கூது-/கூத்து-
கொண்டது. கூதல், கூதிர் - குளிர் காற்று. கூதை = காற்று.
கூது:கூந்து (கூந்தல்) காற்றில் அசையும் தன்மையுடையது.
உள்ளத்தை அசைவு அபிநயங்களால் ஆடுவது கூத்து.
கூதல் போல் உள்ளத்தைக் குளிர்விப்பது கூத்தியரின்
கூத்துக்கள்.
நா. கணேசன்
'உப்பு'என்பது சோற்றைக் குறிக்கும் சொல். (உப்பிட்டவரை உள்ள அளவும் நினை). "இன்பால் உண்பான்பால் புளித்த காடியைக் கொடுத்து அருந்திடென்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை" என்று குசேலர் தான் கொண்டுசென்ற அவலுக்காக வெட்கப்பட்டதாகக் கூறும் வில்லிபாரத வரியிலிருந்து, 'காடி' என்பது, அருந்தக்கூடிய ஒரு திரவப் பொருள் என்பதும் புளிப்புத்தன்மை கொண்டதென்பதும், வறுமையில் வாடுபவர்களுடைய எளிய உணவு என்பதும் அறியக்கிடைக்கிறது.
அ.ரா
On Jun 28, 9:31 am, RAJAGOPALAN APPAN <appan.rajagopa...@gmail.com>
wrote:
> 'உப்பு'என்பது சோற்றைக் குறிக்கும் சொல். (உப்பிட்டவரை உள்ள அளவும் நினை).
> "இன்பால் உண்பான்பால் புளித்த காடியைக் கொடுத்து அருந்திடென்று உரைத்தல் போல்
> இவ் அவல் கொடை" என்று குசேலர் தான் கொண்டுசென்ற அவலுக்காக வெட்கப்பட்டதாகக்
> கூறும் வில்லிபாரத வரியிலிருந்து, 'காடி' என்பது, அருந்தக்கூடிய ஒரு திரவப்
> பொருள் என்பதும் புளிப்புத்தன்மை கொண்டதென்பதும், வறுமையில் வாடுபவர்களுடைய
> எளிய உணவு என்பதும் அறியக்கிடைக்கிறது.
>
> அ.ரா
>
கழிநீருக்குக் காடி என்ற பெயர் உண்டு.
சென்னை அகராதி:
காடிச்சால்¹ kāṭi-c-cāl
, n. < காடி¹ +. Broad-mouthed pot for keeping sour rice-water; காடி
வைக்குஞ் சால். (சினேந். 172.)
காடிச்சால்மூலை kāṭi-c-cāl-mūlai
, n. < காடி¹ +. North-eastern corner where waste water is emptied in a
pot at sacrifice; யாகசாலையிற் காடி வைக்கப்படும் வடகிழக்குத்திசை.
காடிச்சால்மூலையில் தேவதையை ஆயித்தாராகில் (திவ். கண்ணிநுண். வ்யா. அவ.
பக். 5).
நா. கணேசன்
மு.வ: உரை: நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக
இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே
ஆகும்.
சாலமன் பாப்பையா உரை: உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத்
துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித்
தண்ணீருக்கும் எமனாம்.
------------
இல்லறத்தைச் சொல்லவில்லை. கானகத்து துறவுக்கும்,
இல்லற வாழ்க்கைக்கும் இடையில் உள்ள பௌத்த சங்கத் துறவு
பற்றிப் பேசுகிறார் என்று கருதலாம்.
இக்குறளில் பௌத்த சங்கங்களில் துவராடை அணிந்து - துவரத் துறவாமை -
பொதுமக்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்தல்
துப்புரவு இல்லையாயின் பயனற்றது. அவர்களுக்கு இடும் உணவு
வீண் - உப்புக்கும், காடிக்கும் தான் கூற்று.
தவரத் துறவாமை - துவராடை அணியினும் உள்ளத்தில் துறவு இல்லாமை.
சோற்றுக்காக பிக்ஷுகள் சங்கம் சார்தல். மடங்களில்
உணவுக்காக சேர்தல் உண்டு,
துவர்தல் - துவராடை போர்த்தல். பௌத்தர்கள் துவராடை சங்கத்தில்
அணிவர். இது மருத மரத்தின் இலை, பூ, கனிகளைக் காய்ச்சிச்
செய்வது.
பௌத்த பிக்குகளுக்கு உள்ள சீவர ஆடை துவர் ஊட்டப்பெறுவது. இதற்கு மருத
மரங்கள் தருவனவற்றைப் பாவித்தல் பண்டை வழக்கம். தேவார வரிகள் சில
பார்ப்போம்: (அ) ”செருமரு தண் துவர்த் தேரர்” - நெருங்கிய மருதமர இலையின்
குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த பௌத்தர்களும் (ஆ) ”மருதமர் வன்மலர்
துவருடையவர்களும்” - மருதப் பூவைக் காய்ச்சி அட்டித்துத் துவர் ஊட்டிய
ஆடை அணிந்த புத்த பிக்ஷுகளும் (இ) ”பட்டை நற்றுவர் ஆடையினாரொடும்” -நல்ல
மருதந் துவர்ப் பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும் (ஈ)
”இலை மருதே அழகாக நாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத் தின்னும் நிலையமண்
தேரரை நீங்கிநின்று” (உ) ”இலை மலிதர மிகு துவர்உடையவர்களும்” - மருத
இலையை அட்டி, துவர் தோய்த்த ஆடை போர்த்த புத்தர்கள்.
fromhttp://nganesan.blogspot.com/2011/06/pennai-female-palmyrah-tree.html
இது பௌத்தர் துறவு பற்றி வள்ளுவர் குறிக்கும் குறள்.
துவரத் துறவு - துவாரடை போர்த்தினாலும் போலித் துறவு -
பௌத்த சங்கத்தில்.
பௌத்த பிக்ஷுக்கள் யாராவது கொன்றால் ஊனைத் தின்னலாம்
என்பதையும் கண்டிக்கும் சமணர் திருவள்ளுவ தேவர்.
பௌத்தர்கள் - இலங்கை, தாய்லாந்து, பர்மா - எங்கும் கொல்லாமை
அறம் மேல்கொள்வதில்லை.
அவி, வேள்வி பற்றியும் சொல்லி அதற்கும் மேலானதைச்
சொல்லும் குறள்கள் இரண்டு உள்ளன. கேள்வி சிவலோகத்தில்
கேட்டு பூலோகத்தில் இருப்பார் என்னும் புராணம், இங்கே கொடுக்கும் உணவை
அங்கே (மேல் லோகத்தில்) தேவர் உண்கிறார் என்னும் கதை போல என்கிறார்.
கேள்வி என்பது எல்லோருக்கும் பொது, கற்றிலனாயினும் கேட்க
என்னும் அதிகாரத்தில் வரும்.
நா. கணேசன்
On Jun 30, 10:47 am, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> நன்றி திரு சரவணன். குறளின் சொற்களைத் திருத்தாமல் கவி்யுள்ளம் காண முயன்றால்
> உவப்பாக இருக்கும்....
> >
> சாடி என்ற சொல்லாட்சி குறளில் வருகிறதா? அல்லது பிற இலக்கியங்களில் வருகிறதா?
>
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>
Also, VaLLuvar or no commentator has said what Saravanan attributes to
commentators.
NG
http://thiruththam.blogspot.com/2011/06/blog-post.html
[Begin Quote]
மேற்கண்ட உரைகள் அனைத்துமே கீழ்க்காணும் கருத்தை வலியுறுத்தி நிற்பதைக்
காணலாம்.
' நுகரத்தக்க பொருள் ஏதும் இல்லாத வறியவர்கள் செய்யவேண்டிய ஒரே செயல்
இல்வாழ்வைத் துறந்துவிட வேண்டும் அல்லது இறந்துவிட வேண்டும். ' என்பதே
அக் கருத்தாகும். . முதலில் இக் கருத்து ஏற்புடையதா என்று காணலாம்.
பொருள் இல்லாமல் வறுமை நிலையில் இருக்கும் மக்களே! ஒன்று நீங்கள் இனி
உங்கள் இல்வாழ்வினைத் துறந்து துறவறம் பூணுங்கள் அல்லது இறந்துபோய்
விடுங்கள்' என்று வள்ளுவர் கூறுவதாக இவ் உரையாசிரியர்கள் இக் குறளுக்குப்
பொருள் கூறுவது பேரதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால், ஒரு மனிதன்
எவ்வளவு துயரம் வந்தாலும் அதைக் கண்டு நகைத்து அத் துன்பத்தையே பயந்தோடச்
செய்ய வேண்டும் (இடுக்கண் வருங்கால் நகுக) என்று துயரமான சூழ்நிலையிலும்
தன்னம்பிக்கை ஊட்டிய ஒரு மாமேதையின் மேல் எவ்வளவு பெரிய பழியினை
சுமத்தியுள்ளனர் இவ் உரையாசிரியர்கள். அப்பப்பா!
[End Quote]
நாப்பது பக்கத்திலே எழுதறதை ஹரிகி நாலு வார்த்தைகளில் கனபொருத்தமா சொல்லிடுவார். I totally agree with him. பாயலாம். பாஞ்சு பிடுங்கக்கூடாது.
இன்னம்பூரான்
01 07 2011
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இளமுனைவரிடம் நான் இதை பலகாலமாக சொல்லி வருகிறேன். ஹரிகி, வினைதீர்த்தான், இன்னம்பூரான் மாதிரி அறிஞர்கள் சொன்னால் அவர் கேட்பார் என நம்பிக்கை இருக்கு.
இ ஐயாவுக்கு வணக்கம்.ஐயா, அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடு என்பது காலம் காலமாய் இருந்து வருவது தானே. மற்றபடி உங்கள் மேல் எனக்கு அலாதி பிரியமும் மதிப்பும் எப்போதும் உண்டு.ஹரிகி அண்ணன் சொன்னார். பரிமேலகரை அவரும் சில இடங்களில் மறுப்பதுண்டாம். அதைப் போலத்தான் இதுவும். அவர் மறுக்கின்ற இடங்கள் ஒருவேளை எனக்கு ஒத்துப்போகும். நான் மறுக்கின்ற இடங்கள் அவருக்கு ஒத்துப் போவதில்லை. அவ்வளவே.அன்புடன்,
--
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்.....................................................................................தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................
--
நாம் இன்று காண்கின்ற குறளைத்தான் வள்ளுவர் எழுதினாரா?. ஏதோ நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக அதைத்தான் உண்மை என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பலாமா? மாற்று கருத்துக்களுக்கும் இடமளித்தால் தானே உண்மை வெளிவரும்.
On Jul 2, 12:54 pm, karuannam annam <karuan...@gmail.com> wrote:
> 'சாடி' - இலக்கியச் சொல்லாட்சி தந்தமைக்கு நன்றி திரு சரவணன். சாடியில்
> அந்நாளில் கள் வைத்திருந்து முதிர்ந்துள்ளது எடுத்துக்காட்டில் தெரிகிறது.
> உப்பு வைத்திருந்தார்களா?
> காடிக் கஞ்சியை மூடிக் குடி என்ற சொலவடை கூட இருக்கிறது. கஞ்சியும் உப்பும்
> பொருந்தி வருகின்றன.
> நீங்கள் முயன்று பொருள் காணுகிறிர்கள். அது மூலச் சொற்களைத் திருத்தாமல்
> அமைந்தால் சிறப்புறும்.
> நான் இந்தக் குறளில் ஈடுபாடு கொண்டது தனது எண்பதாவது அகவையில் திரு ந.சுப்பு
> ரெட்டியார் எழுதிய ஒரு முன்னுரையில் காடிக்கும் உப்புக்கும் கூற்றாக இல்லாமல்
> தான் எதாவது செய்ய வேண்டும் என்று நூல் எழுதுவதில் ஈடுபட்டதாக எழுதியுள்ளதைப்
> படித்த பிறகுதான். முழுக் குறளையும் பார்த்தபோது வறியவர் துறவும், முழுத்
> துறவும் ஐயம் எழுந்தன. திரு கணேசன் பௌத்தர் துறவையும் திரு பானுகுமார்
> சமணத்தின் துறவு நிலைகளையும் குறிப்பிட்டிருந்தனர். மற்ற நண்பர்களும்
> அருமையாகப் பின்னூட்டம் இட்டிருந்தனர்.
> காடிக்கும் உப்புக்கும் கேடாக வாழாது பயனுள்ள முறையில் வாழும் பேறு
> அனைவருக்கும் அமைய வேண்டும்.
> அன்புடன்
> சோ.வினைதீர்த்தான்..
>
ஏழ்மையே என்றாலும் பௌத்த சங்கத்தில் அளிக்கும்
உணவுக்காக துவராடை போர்த்து போலித்துறவு ஆகாது
என்கிறார் வள்ளுவர். துவர்தல் - நிறைதல், நெருங்குதல்.
துவர்ப்பை மருதமரப்பொருட்களால் நெருக்கி, நீரால்
வேவித்துச் செய்யும் துவராடை மாத்திரம் போதாது.
உளத்தால் நிறையும் துறவே உணவைத் துறவு என்கிறார்.
தேரர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் மாமிசம்
தவிர்க்கவில்லை. பௌத்த சங்கத்துக்கு அதை ஆதரிக்கும்
வீடுகளிலிருந்து ஊன் உணவு சென்றால் விரும்பி உண்பது
வழக்கம், இதுபோன்றாரைத் துறவு என வள்ளுவர் ஒத்துக்
கொள்ளவேயில்லை. சிங்கள வீடுகளில் 4, 5 பையன்கள்
இருந்தால் அதில் அடங்கா முரடனாக இருப்பவனை
பௌத்த பிக்ஷு ஆக்கும் நெறிமுறை இன்றும் உண்டு.
இவர்கள் துறவியராகி வளர்த்தெடுத்ததே இலங்கைப்
பேரினவாதப் போர். தமிழருக்கு அதனால் பெருங்கேடு
விளைந்தது என்பதை அண்மையில் கண்டோம் - இதில் துவராடைப் போலியரின் பங்கு
நிரம்ப உண்டு,
பௌத்த துறவியர் ஊன் உண்ணுதலைக் கண்டிக்கும்
இரண்டு திருக்குறள்கள்:
http://groups.google.com/group/mintamil/msg/73fdb01fabe3a9cd
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்.
எங்ஙனம் ஆளும் அருள்?
தினற் பொருட்டால் கொல்லாது உலகெனில் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்.
{கு-ரை: கொல்லாமையை உலகு முழுதும் ஏற்றால்,
கிருகஸ்தர்கள் கடைகளில் இறைச்சி வாங்கமுடியாது,
பிக்ஷுக்களுக்கும் தானமாக ஊனும் இல்லை.]
அன்புடன்,
நா. கணேசன்
வள்ளுவர் பௌத்தத்தின் போலிக் குறளைச் சாடும்
இன்னொரு முக்கியமான குறள்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
ஒழித்தது பழித்து விடின் - 280 (அதிகாரம்: கூடாவொழுக்கம்)
மழித்தல் - பௌத்த பிக்குக்கள் கத்தியால் தலையை
முழுக்க மொட்டை அடித்தல். மழித்தல் சமணரிடம்
இல்லை என்பதை அவதானிக்கவும், எனவே வள்ளுவர்
அதைச் சுட்டவில்லை.
[ஹிந்துக்கள் தலையை முழுக்க மழிப்பது பழைய வழக்கன்று.
பழனிமுருகனுக்கு சிகை சிறிதாய் உள்ளதை வாரியார்
எப்பொழுதும் சொல்லுவார். பழனி, திருப்பதி முழுமொட்டை
பௌத்த சமய தாக்கம்.]
--------
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
ஒழித்தது பழித்து விடின் - 280 (அதிகாரம்: கூடாவொழுக்கம்)
காளிங்கர்: நெஞ்சினால் துறவறம் பேணக் கருதுவார் வெறுந்
தலை முண்டித்தலும், சடைவளர்த்தலும் மற்று உம்மையால்
தண்டு தரித்தலும் *துவராடையுடுத்தலும்* பிறவுமாகிய
புறக்கோலம் புனைய வேண்டுவது இல்லை; உலகத்து உயர்ந்தோராகிய
தமது உணர்வினாலும் தாம் கற்றுணர்ந்த நூலினாலும்
இவையிவை தகா என்று ஒரீயவற்றைத் தாமும் அவ்வாறு
ஒழித்து விடின்.
வீடு வேண்டிவி ழுச்சடை நீட்டல்மெய்ம்
மூடு கூறையின் மூடுதல் வெண்டலை
ஓடு கோடலும் உடுத்தலென் றின்னவை
பீடி லாப்பிற விக்குவித் தென்பவே. சீவக சிந்தாமணி 1427
நச்சினார்க்கினியர்: “வீடுபெற விரும்பிச் சடையை நீட்டுதல்,
சீவரம் போர்த்தல், கபாலமேந்துதல், ...”
சீவரம் போர்த்தல் - உடம்பைப் போர்த்துதற்குரிய
துவரூட்டின ஆடையால் போர்த்துக் கொள்ளுதல்.
துவரூட்டின சீவர ஆடை பௌத்தத் துறவிகளுக்குத்
தருவது மருதமரம். ஏராளமான வட, தென் மொழி
இலக்கியங்கள் சொல்வது இது (ஆனால், பலரும்
இன்று அறியாதது). தேவாரச் சான்றுகள் சில காட்டியது
நினைவிருக்கலாம்.
*துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. *1050
மழித்தலும், நீட்டலும் - 280 போலவே
சமணர் பௌத்தததை ஏற்க்காமையை
சமண மதத்தாராகிய ஸ்ரீவல்லப நயினார் (திருவள்ளுவ தேவர்)
குறிப்பால் சுட்டியதென்க.
அன்புடன்,
நா. கணேசன்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
ஒழித்தது பழித்து விடின் - 280 (அதிகாரம்: கூடாவொழுக்கம்)
மழித்தல் - பௌத்த பிக்குக்கள் கத்தியால் தலையை
முழுக்க மொட்டை அடித்தல். மழித்தல் சமணரிடம்
இல்லை என்பதை அவதானிக்கவும், எனவே வள்ளுவர்
அதைச் சுட்டவில்லை.
தமிழ்நாட்டில் இருப்பதில் பெரிய தமிழறிஞர்களில்
ஒருவர் மூதறிஞர் இளங்குமரனார் அவர்கள் ஆவார்.
லெமூரியா, குமரிக்கண்டம், தனித்தமிழுக்கு
இன்று மறைமலை அடிகளுக்கு அப்புறம்
இளங்குமரன் விளங்கி வருகிறார். அவரது
பெற்றோர் வைத்தபெயர்: பாலசுப்ரமணியன்.
திருக்குறள் வழி திருமணம் செய்துவைக்கும் பெருந்தகை,
மூதறிஞர் இளங்குமரன் கருத்து:
http://www.tamilauthors.com/01/93.html
“மழித்தலும்நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
தவம்செய்பவர்க்குத் தலைமையிரை மழித்தலும், வளர்த்தலுமாகிய
வெளி வேடங்கள் வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர். திருவள்ளுவர்
காலத்தில் வேதியர்கள் குடுமி வளர்த்தனர். சமணர்கள் முடி
மழித்தனர், இதனைக் கண்டிக்கம் விதமாக இக்குறள் பாடினார். தவம்
என்பது தவ் என்றால் சுருக்கு என்று பொருள்.தேவையை சுருக்கி
சேவையை பெருக்குவது தான் தவம். அவரவர் கடமையை
ஒழுங்காகச் செய்தாலே போதும், அது தான் தவம். வெளித்தோற்றத்தில்
எதுவுமில்லை என்கிறார் திருவள்ளுவர். ”
தபஸ் என்னும் வடசொல் தவம் எனத் தமிழில் ஆகிறது.
தவம் இளங்குமரனார் உரைக்கும் சுருக்கு என்னும் தனித்தமிழ் இல்லை.
மேலும் இந்தியவியல் நிபுணர்கள் குடுமி என்பது
தமிழ்/திராவிட ஜனங்களின் தொன்மையான பழக்கம்.
வடமொழியில் குடுமி பற்றிச் சொல்லும் வார்த்தைகள்
திராவிடச்சொற்கள் என்கிறார்கள். குடுமியை இன்னும்
வைத்திருப்பது தமிழ் அந்தணர்களே, மற்ரவர்கள் 50-100
வருஷமாய் ஐரோப்பிய, இஸ்லாமிய தாக்கத்தால்
விட்டுவிட்டனர்.
அன்புடன்,
நா. கணேசன்
பி. கு.:
மழித்தலும் பௌத்த பிக்ஷுகளுக்கு என முன்பு குறிப்பிட்ட மடல்
(2003) . ஒரு எடுத்துக்காட்டுதான், அதற்கும் 15 ஆண்டு முன்னும்
எழுதியிருப்பேன்.
http://www.treasurehouseofagathiyar.net/22500/22570.htm
தமிழ் ஜைன கேச லோசன சடங்கு
http://www.youtube.com/user/ajithadoss#play/uploads/5/zR21K-vcp5U
(வீடியோவுக்கு இடையில் வரும்)
V
க. நா. சு. (1987) புத்தகத்தில் - லோசம் செய்த சமணமுனியாய்
வள்ளுவர்:
http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm
(சினிமா ஆர்ட்டிஸ்ட் கே. ஆர். வேணுகோபால சர்மா,
பாரதிதாசன் போன்றோர் தூண்டுதலால் எழுதிய படம்
முகலாய சக்கிரவர்த்தி (ஜஹாங்கீர்) சித்திரத்தால் ஆகும்.
அதைப் பற்றி இன்னொரு முறை சொல்கிறேன்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட
சடாமுடி சித்தரான வள்ளுவர் சித்திரம் இன்று
கருண்ணாநிதி ஆதரவால் நாடெங்கும் தாடியுடன்
வள்ளுவர்.
ஆனால் அவரே, மழித்தலும் நீட்டலும் வேண்டா
என்ரது மறக்கப்பட்டு, ஜஹாங்கீர் தாடி ஒட்டிக்கொண்டது :(
திருமூலருக்கு இருந்த உருத்திராட்சம், திருநீற்றுப் பட்டை
போனது.
நா. கணேசன்
அவருக்கு 1817-ல் சென்னை அரசாங்கம் வெளியிட்ட
வள்ள்
> நன்றி திரு சரவணன். குறளின் சொற்களைத் திருத்தாமல் கவி்யுள்ளம் காண முயன்றால்
> உவப்பாக இருக்கும்....
> சாடி என்ற சொல்லாட்சி குறளில் வருகிறதா? அல்லது பிற இலக்கியங்களில் வருகிறதா?
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
நல்ல கருத்து, ஐயா. குறளின் மூல பாடத்துடன்
பல பிரதிகள் எல்லா நூற்றாண்டுகளிலும் தமிழ்நாடெங்கணும்
வழங்கி வந்திருக்கின்றன. மூலபாடம் ஒரு காட்டாறு
என்று வைத்துக் கொண்டால் அதற்குக் கரை
அமைப்பவை பல நூற்றாண்டுகளாய்த் தோன்றிவரும்
குறள் உரைகளே. எனவே, குறளைத் திருத்தாமல்,
சரவணன் போன்றோர் உரை செய்ய வேண்டுகோள்.
கவிஞர் ஹரிகி பலமுறை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
தமிழில் மூன்று நூல்களுக்கு உரைகள் மிகுதி.
காலத்தால் முற்பட்ட சமணர்கள் செய்த
(அ) தொல்காப்பியம் (ஆ) திருக்குறள்,
வைதிக மார்க்கத்தில் (இ) ஆழ்வார்களின்
அருளிச் செயல்களுக்கும்
உரைவளம் வியக்கவைப்பது. வியாக்கியானச்
சக்கிரவர்த்திகள் பலர் நாலாயிரத்தை நமக்கெல்லாம்
விளக்கியுள்ளனர். எனவே (அ), (ஆ), (இ) -
நூல்களில் பாட்டுகளைத் திருத்தம் செய்தல் கூடாது,
உலகம் ஏற்காது.
"The work exists or is extant as a whole, unaltered by schismatics and
unimpaired or untampered with
by copyists in the procession of ages"
(M.S.P. Pillai, 1999).
[குறிப்பு: முந்நீர்ப்பள்ளம் பூரணலிங்கம் பிள்ளை
எழுதி 100 வருஷம் இருக்கலாம். அஷ்ராஃபுக்கு
1999 மறுஅச்சு கிடைத்திருக்குது போல.]
"Complete in itself, the sole work of its author has come down the
esteem of ages absolutely uninjured,
hardly a single various reading of any importance being found"
(G.U. Pope, 1886)
"The Kural cannot be improved nor its plan made more perfect. It is a
perfect mosaic in itself.
A slight change in the size, shape and colour of a single stone would
mar the beauty of the whole"
(Rev. J. Lazarus, 1949)
நா. கணேசன்
http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm
3.6. A well preserved book
There is an old saying in Tamil:
படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
The one who recited, spoiled the poem.
The one who wrote, spoiled the text.
The Vedas, Bible, Tipitaka and the Qur'an did not exist as Books
from the beginning. They were preserved in circulation by oral
recitations and written fragments before they were compiled as Books
by a redactor at a later date. The Vedas were edited and compiled to
the present form by Veda Vyasa; the Pentateuch (the five books of
Moses) by an unknown Redactor who combined all the texts into a smooth
narrative; the canon of the New Testament Bible was finalized in 367
AD by Athanasius, the bishop of Alexandria under Constantine the
Great; the Buddhist sayings were in oral circulation until they were
written down during the Fourth Great Council during 89-88 B.C,
centuries after the death of Buddha.[21] The story is the same with
the Qur'an, the scripture of Muslims. Though it says "This is the
Book, in it is guidance sure, without doubt" (2:2), it was not
compiled as a Book for 20 years until Zaid and his associates under
the regime of Caliphate Uthman carried out the task![17] But the
Kural, like the Dao De Jing of Lao Tzu, should have existed in written
form right from the day of its composition for it was not a mantra,
sloka or vacana to have remained in oral circulation for them to be
compiled by a redactor at later date. Kural is not like the verses of
Vemana, the couplets of Kabir or the triplets of Sarvajna, the
compilations of which differ greatly from one publication to another
as they were not compact works. The Kural seem to have not been
subjected to any later additions to the text.[34] Unlike these popular
verses of Telugu, Kannada and Hindi heartlands, the Kural is an
elaborate work of one master[32] as supported by the identity in the
language, structure and content evident throughout the work.[34] These
are the reasons why Valluvar is invariably depicted as having the palm
leaves in one hand and the writing 'pen' on the other. (Click here to
view Kural written on palm leaves).
The Kural we now have in circulation follows the chapter and
couplet arrangements seen in the work of the great Kural commentator
Parimelazhagar who lived during the 13th century A.D. According to an
ancient Tamil verse (Perunthogai, line 1538), there were ten
commentators of the Kural.[2] Five of these nine commentaries, by
Manakkudavar, Pariperumaal, Parithiar, Parimelazhagar and Kalingar,
have survived in full to the present. The text of the Kural used by
these commentators were apparently very similar. Says P.S. Sundaram in
his introduction:
"The text of the Kural with the five commentaries by the above
mentioned commentators shows surprising similarity. The numbers and
the arrangement of the chapters is the same, and the chapter headings
are also identical"
"Except for three stanzas in Book III (Love), which in Kalingar's
version are distributed differently, among the chapters in the same
book as compared with the other commentaries, the stanzas are all the
same in the various commentaries. However, within each chapter, there
is a variation in the arrangement of the ten couplets making up the
contents of that chapter".
The textual variations of the Kural have been studied in detail by
Pillai,[18] according to whom there are only about 305 variations in
the whole book. These variations are minor and do not change the
meaning of the couplets in any way. Some instances of these minor
variations are:
1. ஒரு நாளை in 156 as ஒரு நாளே
2. வன்பாற்கண் in 78 as வன்பார்க்கண்
3. இவை மூன்றன் in 360 as இவை மூன்றில்
4. நின்றான் in 176 as நின்றார்
5. தரலான் in 131 as தரலால்
While many of the ancient Tamil works like Valaiyapati,
Perunkatai, and Kuntalakeci have been either lost entirely or
available to us only in fragments, the Kural has survived to this day
fully intact. Thanks to the tradition of commentators, Valluvar's work
has retained its originality unlike the works of many other ancient
authors. Kalidasa's works, for instance, have undoubtedly come down to
us not in their original form, but in several recessions current in
different regions of the country.26
"The work exists or is extant as a whole, unaltered by schismatics and
unimpaired or untampered with
by copyists in the procession of ages"
(M.S.P. Pillai, 1999).
"Complete in itself, the sole work of its author has come down the
esteem of ages absolutely uninjured,
hardly a single various reading of any importance being found"
(G.U. Pope, 1886)
"The Kural cannot be improved nor its plan made more perfect. It is a
perfect mosaic in itself.
A slight change in the size, shape and colour of a single stone would
mar the beauty of the whole"
(Rev. J. Lazarus, 1949)
Barring the minor variations in the arrangements of the Chapters,
Couplets and Words, the Kural has remained the same since the period
of these five great commentators. One cannot be sure whether the
arrangement of chapters and couplets found in Parimeelazhahar's
commentary, which is now followed throughout the world, was that of
Valluvar himself. Or for that matter, whether the script used by
Valluvar was like the ones we see now. Tamil alphabet has no doubt
gradually evolved to the present form during the 7th Century A.D.[19]
(Click here to see how Tirukkural script would have been during the
first, seven and tenth centuries A.D.)