--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf7KYVhvBBFW1e7w1C1HKdLgJwj_Prm87Qki%3DfqrcX_2g%40mail.gmail.com.
நன்றி, புதுச் செய்திகள் பல.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct-sJ_Oee4aSxd9Uw%2Bo%2BF3T18aZrDw8-S8qLgzb860prQ%40mail.gmail.com.
(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)
ஞாயில் ñāyil n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள்,
முரவுவாய் குழிசி என்பது கற்களை விளிம்பில்
On Sun, 6 Nov, 2022, 05:02 N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)
ஞாயில் ñāyil n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள்,
முரவுவாய் குழிசி என்பது கற்களை விளிம்பில்வாய்க்கு பண்பாக முரவு ஆள பட்டுள்ளது.வய் பிளவு கருத்து வேர். வயிறு, வாய், வயல், வாய்க்கால் பள்ளமாக இருப்பதை நோக்குக. வய் > பய் - பிளந்த வாயுள்ள துணிப்பை. வாய் எப்படி இருக்கும் என்றால் வளைந்து வட்டமாக இருக்கும் குழிவாய் இருக்கும் என்பதே பொருள்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPR8pKunrWyawsfPTddxbbvsOzvsXBzVJ7LL0Rsa4dHm2g%40mail.gmail.com.
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு (புறம்)உப்புக்கண்டம்: https://www.youtube.com/watch?v=ihT3Ol0RcZE
வய் பிளவு கருத்து வேர். வயிறு, வாய், வயல், வாய்க்கால் பள்ளமாக இருப்பதை நோக்குக. வய் > பய் - பிளந்த வாயுள்ள துணிப்பை. வாய் எப்படி இருக்கும் என்றால் வளைந்து வட்டமாக இருக்கும் குழிவாய் இருக்கும் என்பதே பொருள்.
மிக அரிய, சுவையான சொற்கள்! நன்றி ஐயா!!
Sorry Dr.Ganesan; I disagree.I don't wish to argue with you in this string. Let me explain after my project is over.Sk
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf7KYVhvBBFW1e7w1C1HKdLgJwj_Prm87Qki%3DfqrcX_2g%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcBsCPuVkmhMu1m4A2PnrZemk%2Bh7h76CYT8fewEcAEDdw%40mail.gmail.com.
கலித்தொகை "வேனீர் உண்ட குடை" எனப் பேசுகிறது.நீங்கள் 'கோட்டை' என்கிறீர்கள்.
'Smokeless Chullah" - புகையில்லா அடுப்பு . விறகு அடுப்பிலிருந்து வெளிவரும் புகை நச்சுக்காற்று பற்றிய பாதிப்பு ஆராயப்பட்டது. வெப்பச் சக்தி வீணாகமல் தடுக்க அறிவியல் அறிஞர் ஆய்ந்து புதிய அடுப்பின் வடிவமைப்பை உருவாக்கினர். இதனால் விறகும், அடுப்படியில் வேலை செய்வோரின் நலம் பாதுகாக்கப்பட்டது. இதனால் பெருமளவு மரங்கள் வெட்டப்படாமல் தப்பின. ..
இலைக் குடை எனப்படும். தாழை ஓலையில் இதுபோல் செய்வது ஓலைக் குடை. ...
கள்ளைக் குடிக்கும் டம்ளருக்குப் பழந்தமிழில் குடை எனப் பெயர்.
பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி - நற் 253/7
தாகம் தணிக்கும் வேள் நீர் அருந்துவதும் இந்தக் குடை என்னும் drinking cup (tumbler).
Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdtvM9rAopFzeYM6RxQGY%2B6stseJ6v0ZaZEM38emJ17hg%40mail.gmail.com.
///அதியர் என்னும் வேளிர்களில் இருந்து உருவான சேரர்கள் பனம்பூ மாலை அணிவர்./// Dr.Ganesan wrote...அதியன் பனம்பூ மாலை அணிந்து இருந்தான். அவன் வேளாளன் இல்லை; வேந்தன்.
///வஞ்சி மாநகர் சேரப் பேரரசர்கள் வேளிரில் இருந்து உருவானோர்/// Dr.Ganesan wrote...ஆதாரம்???சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/f8727958-e895-47e1-abf8-671fd28df926n%40googlegroups.com.
ஆய்மரபினர் சுரபுன்னை மாலை அணிந்ததற்கு ஆதாரம்?தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.முன்பு இருங்கோவேள் அடையாள மாலை அணிந்ததாகச் சொன்னீர்கள்.
On Tue, Nov 8, 2022 at 7:40 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:ஆய்மரபினர் சுரபுன்னை மாலை அணிந்ததற்கு ஆதாரம்?தெரிந்து கொள்ளக் கேட்கிறேன்.முன்பு இருங்கோவேள் அடையாள மாலை அணிந்ததாகச் சொன்னீர்கள்.
முரியடுப்பு (skewer-oven) பற்றிய பெரும்பாணாற்றுப்படை வருணனை:
பெரும்பாண் ஆற்றுப்படையில் வாடூன் சமைக்கும் அடுப்பாகிய முரியடுப்பை அருமையாக விளக்கியுள்ளார் கடியலூர் ருத்திரன் கண்ணனார். அவ் வரிகளை இங்கே சற்று ஆராய்வோம். பாரத உபகண்டத்தின் மிகப் பழைய சமையல் முறைகளில் வாடூன் அடுதல் ஒன்றாகும்.
முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன், புழுக்கல் – பெரும் 99,100முர்- என்னும் தாதுவேர் தரும் சொல் முரவு. மேடும் பள்ளமுமாக, (அ) மேலும் கீழுமாக உள்ள விளிம்பு உள்ள குழிசி உள்ள முரியடுப்பில் மான் தசை சமையல் ஆகிறது.
(1) “முது மரத்து உறையும் முரவுவாய் முது புள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள்” (அகம் 260)
வயது முதிர்ந்த மரத்தில் இருக்கும், கரடுமுரடாக முழங்கும் வாயினையுடைய பேராந்தை
வேகமாகக் குழறியவாறு ஒலியெழுப்பும் பேய்கள் நடமாடும் நள்ளிரவில்.
இங்கே முதுபுள் - பேராந்தை. Indian horned rock-owl. அதன் முரவுவாய் எழுப்பும் ஒலியானது முரடாக நெடுந்தொலைவு கேட்கும்.
(2) “ மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி” (அகம் 72).
மின்மினிப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருக்கும் முனைமுறிந்த வாயையுடைய புற்றினை,
காய்ச்சிய இரும்பை அடிக்கும்போது சிதறும் தீப்பொறிகளைப் போல, அப் பூச்சிகள் ஒளிவிடத் தோண்டி.
Look at the outline of the edge of anthills. muravuvaay-p-puRRu will be clear.
https://www.agefotostock.com/age/en/details-photo/ant-hill-in-gir-forest-at-gujarat-india/DPA-IAN-185838இதே விவரிப்பு கோட்டை மதில்களுக்கும் வரும்.முரவுவாய்ப் புற்று:
(3) "அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல" (அகம் 373)
ஞாயில் ñāyil n. [M. ñāyal.] Breast-work in fortification, bastion; கோட்டையின் ஏவறை. ஞாயிலுஞ் சிறந்து (சிலப். 15, 217).
எயில்கோட்டைகளின் முரவு வாய்ப் பள்ளங்களில் பல்வேறு ஏவுகணைகள், முசலம், ... போன்றன வீசி எறிவர்.
https://www.shutterstock.com/image-photo/lahori-gate-bastion-turret-red-fort-1576918528
https://www.dreamstime.com/royalty-free-stock-images-naldurg-fort-nine-port-bastion-bastions-historical-osmanabad-india-image36196279
https://www.alamy.com/stock-photo-bastion-gate-of-golconda-fort-golkonda-fort-hyderabad-andhra-pradesh-43164863.html
புற்றின் ஸ்கைலைன் போலவும், முரியடுப்பின் (skewer-oven) முரிகளை (skewer) வைத்து, அவற்றின் மேல் வாடூன் ’kabab' சுடும் கற்களின் விளிம்பு போலவும்
முரவுவாய் ஞாயில் கோட்டைகளில் அமைந்துள்ளன.
(4) முரியடுப்பு. மிக எளிய முறையில், சிறுகுழி தோண்டி, அதன் வாய்விளிம்பில் கற்களைப் பதுக்கி அமைக்கும் skewer-oven,
முரிகளைப் பயன்படுத்தி வாடூன் தசைசுட்டுச் சமைக்க உதவுவது. உலக முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாய், வேடுவர் உணவு சமைக்கப் பயன்படுத்திய பழைய முறை இது.
முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி
முரி is a technical word for skewer, wooden stick:
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
முரவுவாய் என்பது கற்களை விளிம்பில் அடுக்குவதால் ஏற்படுவது. விறகு கீழே எரிய, முரிகளில் (skewers) ஊன்துண்டங்களைக் கோர்த்து வாட்டிச்
சமைப்பது வாடூன். இதற்கு எந்த நீர்ப்பதமும் தேவையில்லை. எனவேதான், “வாராது அட்ட வாடூன்” என்கிறார் சங்கச் சான்றோர் ஆகிய புலவர்.முரியடுப்பு அமைக்கும் எளிய முறை:குழிசி: இது குழிஇ (= குழித்து) என்னும் வினைச்சொல்லில் இருந்து தோன்றும். அளைஇ, சொரீஇ, குழீஇ (குழுமி), இரீஇ, கடைஇ, சினைஇ, கடைஇ, குலைஇ, குவைஇ, கொளீஇ, செரீஇ, தடைஇ, தரீஇ, தலைஇ, தழீஇ, துழைஇ, தொலைஇ, நிலைஇ, நிறீஇ, நினைஇ .... போல, குழிஇ என்னும் பள்ளம் குழித்தல் என்னும் வினை குழிசி என்றாகியுள்ளது. குழிசில்/குழிசி என்பன பெயர்ச் சொற்கள்: வண்டில்/வண்டி, அழிஞ்சில்/அழிஞ்சி, நெருஞ்சில்/நெருஞ்சி, புட்டில்/புட்டி ..., போல. மாகறல் கார்த்திகேயனார், மொழிநூல்). குழிஇ ஒப்பிட தைஇ/தைஇய “=தைத்து/தய்ச்சு” என்ற வினைச்சொல்லுடன் ஒப்பிடலாம். இது தச்சு என்ற பெயர் ஆகிறது. தச்சன் என்று பல இடங்களில் சங்க இலக்கியம் கூறும். தய்க்க (தைக்க) > தக்ஷ என சிந்து சமவெளியில் திராவிடச் சொல் உருமாறிற்று.) அதுபோல், குழிஇ- என்னும் வினை தருவது குழிசி.வண்டியின் ஆரக் கால்களை இணைக்கும் கும்பம் அச்சில் இருக்கிறது. இதனையும் குழிசி என்பர், ஆரக்காலைக் குழித்த குழியில் பொருத்துவர்.“ பிரம்மன், "வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது. அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக் கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக் குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது”முரியடுப்பில் முரிகளைக் குழிசி விளிம்பில் பொருத்துமாப்போல.மேலும் கீழுமாக விளிம்புள்ள கற்பதுக்கைகள் குழிசியில் வைத்துச் செய்யும் முரியடுப்பு என்பதை “முரவுவாய்க் குழிசி முரியடுப்பு” என்கிறது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. இதில் எந்த நீர்மமும் வாராது அடுகிற வாடூன் தயார் செய்கின்றனர் எயிற்றியர். கூடவே, புல்லரிசியைப் புழுக்கிய புழுக்கலுடன் விருந்து படைத்தனர். ஔவை தனிப்பாடற்போல, மோரும் இருந்திருக்கும்.நா. கணேசன்