On Sun, Jul 11, 2021 at 8:34 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் இரண்டு வகைகள்:
(1) வாடூன் = கபாப், https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல் சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல் மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட
அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர்
‘கபாப்’ செய்வதற்கு வருணனை கொடுத்துள்ளார்.கபாப் (வாடூன்) செய்முறை விளக்கம் கொடுத்துள்ளது பெரும்பாணாற்றுப்படை.கபாப் (வாடூன்) தீயினால் வாட்டப்பெறுவது. கபாபைப் பெரும்பாண் போலவே,பொருநர் ஆற்றுப்படையில் சமைத்து உண்டமை வருகிறது. பலருக்கும் தெரியாதபாடல் அகநானூற்றுப் பாடல்.அகநானூறு:169. பாலை
[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]
புலி யானையைக் கொன்று, தனக்கு விருப்பான பாகங்களைச் சிதைத்துத் தொலைத்து உண்டது. மிச்சமாகக் கிடக்கும் தடித் துண்டங்களைக்
மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட
1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப்
புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததைகோல்களில் கோத்து ஆறலை கள்வர் எடுத்துச் சென்றனர். (பின்னர், காழில் கோத்த இறைச்சியைத் தீயில் வாட்டி வாடூன் ஆக்கினர் என்றும்கொள்ளலாம். குழம்பு வைத்தனரா? இல்லை, வாடூன் (கபாப்) செய்தனரா? என இப் பாலைச் செய்யுளில் சொல்லப்படவில்லை. ஆனால்,காழில் கோத்து எடுப்பதால், வாடூன் என்று கருத இடமுண்டு.)பொருநர் ஆற்றுப்படையில் ‘கபாப்’ எனும் வாடூன்:
பாட்டு:
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை 105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ, (பொரு. )
103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று பலகாலலைத்து,;
அதாவது, புழுக்கலுடன் சேர்த்து வெந்த செம்மறிக்கறி ‘வேவை’ எனப்படுகிறது. குழம்பு எனலாம். “பருகு” என்பதனால் இன்றைய Soup என்பதற்கு மிகப் பொருந்தும் என்கிறார் புலவர் செங்கை பொதுவனார்.
105 - 6. [ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை, யூழி னூழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சுட்ட கொழு குறை வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,;
இது, பெரும்பாணில் வரும் வாடூன். தீயில் வாட்டினதால் பெயர். இன்றைய ‘கபாப்’. முரியடுப்பில் (நீர் (அ) நெய்) வாராது அடுகிற உணவு.முரியடுப்பு = skewer-oven. https://en.wikipedia.org/wiki/Skewer (1) கோட்டடுப்பு, (2) கொடியடுப்பு (3) அனலடுப்பு (baking oven) (4) கையடுப்பு (portable oven) ... போல அடுப்பு வகைகளுள் ஒன்று: (5) முரியடுப்பு (skewer ocen). இது வாடூன் (கபாப்) செய்யப் பயன்படுவது. காழ் = மர வயிரம் (அ) இருப்புக் கம்பி. காழில் கோத்த ஊனை வாட்டும் அடுப்பு முரியடுப்பு. பொருநர் ஆற்றுப்படையிலே, அரண்மனை மடைப்பள்ளியிலே நல்ல முரியடுப்பு இருந்திருக்கும். உ-ம்: குழி ஒன்றில் தீ விறகுகள் எரிய, முரவுவாய் கொண்ட அடுப்பில் காழில் கோத்த இறைச்சி வாட்டலாம்.107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே,;
107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பலவடிவினையுடைய 1பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,;
உபாயங்களாற் பண்ணுதலின், விரகென்றார்; ஆகுபெயர்.;பால் சோறு, கபாப் போல அல்லாமல், நெய் மிக வார்த்துச் செய்வது.ஆண்டாள் சொல்கிறாள்:பாடகமே , என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் ;
ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடியிருந்து குளிர்ந்து – ஏலோர் எம்பாவாய்.
இந்த உணவு சிந்துவெளியிலும் பிரபலம். வட இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானி, ஈரான்
என எல்லா மாமிச உணவு விரும்பி அனைவரும் உண்ணும் நாடுகளில் உள்ள வகை.
இறைச்சி வகைகளை விரும்பி உண்ட சங்கத் தமிழர் உணவிலும் வாடூன் (= Kabab)
இருந்துள்ளது எனக் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை.
வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:
https://mahatmarice.com/recipes/garlic-lemon-chicken-kebabs-and-green-rice/
https://honestandtasty.com/stovetop-beef-kabob-and-persian-rice-chelow-kabob-deegi/
https://www.shanazrafiq.com/2017/08/kabab-koobeideh-with-saffron-rice-persian-seekh-kebab.htmlபுழுக்கல் - ஆவியில் அவித்துச் செய்த சோறு. “Steamed rice"
சங்கச் சொல்வளம்
6. உணவு வகைகள் - 3 பேரா. ப. பாண்டியராஜா
"6.6.4 புழுக்கல்
புழுங்கலாக வேகவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு தாவர உணவாகவோ இருக்கலாம்.
வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
வயல் ஆமை புழுக்கு உண்டும் - பட் 64
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 159/10
- போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று - பெரும் 195
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - அகம் 393/16
- ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்.”
------------------------------------------
வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் சில வகைகள் இருக்கலாம்.(2) இரண்டாவது வகையான வாடூன் பற்றி வரும் பாடல்.'வாடூன் கொழும் குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு' - புறம் 328/9-11
இங்கே, புறப்பாட்டில், வாடூன் = கொடிக்கறி/உப்புக்கண்டம் (jerky) எனலாம்.வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்).இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றன.
நா. கணேசன்