திரு மரைக்காடு - where Mustangs roam

754 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 8, 2017, 12:57:46 AM8/8/17
to மின்தமிழ், vallamai
திரு மரைக்காடு - where Mustangs roam
-------------------------------

மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).

மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,
கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.
சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்
தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர். 

ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,
அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.
புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டு
வளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்
நல்ல சான்றாகும்.

மரையூர் - என்ற அழகான ஊரில் மரைகள் இருப்பதைக் கற்கால ஓவியங்களில்
இருந்து இன்றுவரை காணலாம். மரைக்காட்டிலும் அவ்வாறே.
மரை ‘antelope' தமிழில் மறை என்றும் எழுதப்படும்.
சென்னைப் பேரகராதி:
மறை&sup6; maṟai, n. [T. mara.] 1. See மரை¹, 5, 6. 2. Spiral of conch; சங்கின் முறுக்கு. (யாழ். அக.)

-------------

அமெரிக்காவின் ‘Wild West' என்னும் மேற்கு மாகாணங்களில் திரியும் காட்டுக்குதிரைகள் (ferals) மஸ்டாங்ஸ் எனப்படுகிறது. அதி வேகமானவை. மஸ்டாங்ஸ் பற்றி அறிய:



இந்தியாவில் மஸ்டாங்ஸ் வாழும் காடுகளில் முக்கியமானது திரு மரைக்காடு. மரை இனம் தவிர (antelopes), காட்டுக்குதிரைகளும் (mustangs) மரைக்காட்டில் இருக்கின்றன. இவை எக் காலத்தவை எனச் சொல்லமுடிவதில்லை. சோழர் படைகளில் இருந்து தப்பி வாழ்பனவாகவும் இருக்கலாம்.

நா. கணேசன்
* நான் பிஎச்டி படித்த காலத்தில், 32 ஆண்டுகள் முன்னர், ஃபோர்ட் மஸ்டாங் கார் ஒன்று என் மைத்துனர் சில ஆண்டுகள் வைத்திருந்தார். எனக்குக் கொடுத்துவிட்டு ஊர் திரும்பிவிட்டார். .

N D Logasundaram

unread,
Aug 8, 2017, 12:49:56 PM8/8/17
to mintamil, தமிழ் மன்றம், thamizayam, vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Banukumar Rajendran
1350 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெரும் புலவர்கள் மறைக்காடு எனும் தமிழ்ச்
சொல்லால் அப்போதைய மக்கள் வழங்குவதை தம் நூலகளில்  பயன்கொண்ட
தனைப்போய் 2017 ல் தென்கொங்கு  பொழில் வாய்ச்சியில் பிறந்த நாககணேசன் எனும் ஒருவர் அது தவறு என தன  பிதற்றல்களால் இணையத்தில் உள்ள குப்பைகளிக்
கொட்டி  மறுப்பதை,  விளம்பரப்படும் இழையிலிருந்து பிரித்து தன தனிப்பட்ட ஆவணக்களஞ்சியமாக தேவையற்றதை மட்டும் வெட்டி ஒட்டி தயார்செய்து வரும் ஒன்றி னுக்கு  தான்  தமிழில் வல்ல மேதாவி எனக்காட்டநினைப்பதை மறுப்புகள் நீங்கிய நிலையில் வந்ததை தன ஆவணக்காளஞ்சியத்தி சேர்த்துக்கொள்ள (மீண்டும் ஓர் தனி இஅழையாக) தொடங்கியுள்ளார் எனலாம் 

ஒரு நபரின் பெயர் நாக முத்து எனும்போது அதன் விளக்கம் இது என 
(1) பாம்புகளுக்கு தன வாயில் விளையும் பொருளாலேயே வீட்டில் விளக்கேற்றியவர் 
(2) நாகப்பாம்பினையே குலதெய்வமாக கொண்டவரின் பக்கத்து வீட்டுக்காரர் 
(3) நா கம் எனறால் மலை அதனால மலைவாழ் இனத்தில் பிறந்வருக்கு பெண் கொடுத்தவர்  
(4) கணேசன் என்றால் கண = கணினி அறிவினால் மிக்க திறன் பெற்ற ஒருவரின் - சன் (மகன்) எபபொருளாகும் என 'அது இது எது ' என வரும் தொலைக்காட்சி நகைச்சுவைப்போல்  B4U எனஎழுதும் கிறுக்கர்கள்போல் பொருகூற முயலுதல்  
எவ்வாறு  உரிமையில்லாதஇடத்து தன் கருத்தை நுழைக்க முடியாதோ அவ்வடியே தான் சம்பந்தப்பெருமான் பாடிய அப்பரடிகள் பாடிய சுந்தரர் பாடிய தமிழ் நூல்களின்  பாடல்வரிகளை பிழைப்பட்டது என அறிவில் குறையுடையவர் சொலும் பொருளும் 
 திருத்தம் செய்ய மனம் செல்வது  ஒரு கறைபடாது ஆடைகள் சூழ வாழும் கயவர்கள் செயல்  எனலாம் 
கய எனும் கிளவி வேருக்கு பெருமை மேனமை என்னவெல்லாம் கூட பொருள்களும்
  உண்டு  என்கின்றது என் குறுநூலகத்தில் உள்ள 18 நிகண்டுகளில் ஒன்றகும் 
திவாகர நிகண்டு நூற்பா எண் 2159 (பக்கம் எண் திவா-149)

அது சரி 

திருமரைக்காடு (மரவக்காடு= அல்லது mustang காடு) எனறாலும் வடமொழிப்பெயர்
களாக மாற்றம் செய்யும் அரைகுறை வேக்காடு வடமொழி பாவாணர்களின்  போக்கு மாறவில்லை எனும் கருத்தினுக்கு எதிர் கொள்ள வாதத் தகுதி  இல்லாத போது திசை
திருப்பும் விதமாக செய்து வரும் செயல்களில் ஒன்றாகும் இச்செய்கை எனபதையும் அறிந்த பின்னும் திருமரைக்காடு எனறாலும் வேதாரணியம் = ஓர் வடமொழி பிழைப்பட்டசொல்/மொழி மாற்றம் எனு ம் கருத்தினுக்கு எந்த வித மாற்றமும் ஏற்படுத்தாதையம்  அறியவில்லை என்பதனையும் இதனால் அறியப்படுத்தப்படு கின்றது 




நூ த லோ சு
மயிலை


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 8, 2017, 3:51:34 PM8/8/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, podh...@gmail.com, tami...@gmail.com, vas_...@hotmail.com, ara...@gmail.com, banuk...@gmail.com
அன்புள்ள நூதலோசு,

தமிழின் பெரும்புலவர்கள் சங்க தமிழ் இலக்கியங்களின் மரை என்ற சொல்லால் மரைக்காடு என வேதாரண்யத்துக்கு பெயர் அமைந்ததை விளக்கியுள்ளார்கள்.
அப் பெயரை அவ்வூர் மக்களும், அறிஞர்களும் பயன்படுத்துகின்றனர்.
இதில் என்ன தவறு?

கல் என்றால் சிவப்பு, வடுகப்பிள்ளை என்றால் மாணிக்கவாசகர், ... இன்ன பிற
உங்கள் மடல்களுக்கு விடை கூறியிருக்கிறேன். இப்போது தமிழின் பெரும்புலவர்கள்
ஆராய்ச்சியை (1940களில் தொடங்கி) - மரைக்காடு என்பதே வேதாரண்யத்தின் உண்மைப்பெயர் என விளக்கியமையும், அவ்வூரார் ஏற்றிருப்பதும் மறுக்கிறீர்கள். ஆனால், அதற்கான காரணம் ஒன்றும் கொடுக்கவில்லை. என் பெயருக்கும் இதற்கும் தொடர்பில்லை. பெரும்புலவர்கள் 1940-களிலே காட்டிவிட்டனர். அப் பெரும்புலவர்களுக்கு நன்றி கூறி, மறைக்காடு என்பது தமிழின் ஊர்ப்பெயர் என்பதல்ல எனக் குறிப்பிட விரும்புகிறேன். வேதாரண்யம் என்பது ஊரின் பழமையை, அதன் மரை இனங்களைப் புரிந்து கொள்ளாமல் செய்த புராணக் கதைகள் ஆகும்.

திரு மரைக்காடு என்னும் ஆய்வை மாற்ற சான்று ஒன்றுங் காணோம்.
அதுவரை, புலவோரும், வேதாரணியம் மக்களும் திருமரைக்காடு என
எழுதுதல் சரிதான்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Aug 8, 2017, 10:44:45 PM8/8/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

திரு மரைக்காடு - where Mustangs roam
-------------------------------

மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).

மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,
கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.
சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்
தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர். 

ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,
அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.
புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டு
வளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்
நல்ல சான்றாகும்.



மரைகளில் நான்கு இனங்கள் தமிழகத்தில் அண்மைக்காலம் வரை வாழ்ந்துள்ளன. இப்பொழுது இரண்டுதான் தமிழ்நாட்டில். ஒன்று, நாலுகொம்பு மரை (Four Horns) சையமலைக் காடுகளில் (உ-ம்: ஊட்டி அருகே) இருக்கிறது. வேதாரண்யம் காடுகளில் இருப்பது கலைமான்கள் (blackbuck). 1925 வரை சையமலைக் காடுகளில், கல்லாறு அருகே (மேட்டுப்பாளையம்), மோயாறு இருந்த மரையா (Nilgai) இன்று அழிந்துவிட்டது. மரையா மாடு போன்றிருக்கும். எனவே தான் மரையான் பெண்பால் ஆ என்று பெயர். ஆணுக்கு ஏறு என்றும், கன்றுக்கு நாகு என்றும் பசுக்களுக்கும், எருமைகளுக்கும் வழங்குவது போலவே தமிழர் வழங்கினர்.

”பன்றி, புல்வாய், உழையே, கவரி,
என்று இவை நான்கும் 'ஏறு' எனற்கு உரிய.
எருமையும் மரையும் பெற்றமும் அன்ன “

”பெற்றமும் எருமையும் மரையும் ஆவே”

”எருமையும் மரையும் பெற்றமும் நாகே” - தொல்காப்பியம்

வேதாரணியத்தின் பழைய தமிழ்ப் பெயர் “மரைக்காடு” என்று ஆராய்ந்து வெளிப்படுத்திய தமிழ் அறிஞர்கள் சிலரையும், வேதாரண்யம் என்னும் திருமரைக்காட்டு மக்கள் அப்பெயரை வழங்குதலும் காண்போம். 

திருமரைக்காடு என தமிழ்ப் பேராசிரியர்கள் வழியில் எழுதுவோம். உ-ம்: பேரா. தி. நெடுஞ்செழியன், 2008 மடல் காட்டினேன்.

துடிசைக்கிழார் அ. சிதம்பரனார்:
”ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது.
  சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது.
  சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி என்பது அம்+சொல்+நாயகி என்று அழகிய சொற்களை உடையவள் என்று குறிக்கின்றது. மாற்று மொழியினர் ‘அஞ்சல்’ என்பதை ‘அபயம்’ என்று கருதி ‘அபயாம்பிகை’ என்று பெயரிட்டார்கள்.
– துடிசைக் கிழார் அ. சிதம்பரனார், கழகத்தமிழ் வினாவிடை ப.17, 1943.

பேரா. சி. இலக்குவனார்:
“இலக்குவனார், தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் உள்ள (இப்போதைய நாகப்பட்டின மாவட்டம் வேதாரண்யம்  என்னும் திருமரைக்காடு வட்டம்) வாய்மேடு என்னும் சிற்றூரில் சௌமிய ஆண்டு கார்த்திகைத் திங்கள் முதல்நாள் (17.11.1910) பிறந்தார். தந்தையார் பெயர் சிங்கார வேலுத் தேவர். தாயார்பெயர் இரத்தினம் அம்மாள். பெற்றோர் இட்ட பெயர் இலட்சுமணன். தமிழ் இலக்கண மரபுப்படி இலக்குவன் என்று முதலில் அழைத்தவர் சாமி. சிதம்பரனார். இலக்குவனார் அரசர் மடத்தில் (இராசா மடம்) இரண்டாம் படிவம் படித்த பொழுது தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் என்னை இலக்குவன் என அழைத்தார்கள்.1 என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ”

தமிழ்நாட்டு அரசின் கடமை:
”மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது. ”
- பாவாணர், மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை, பக். 127.

தமிழர் வரலாறு 2, பக். 134
”ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பல ஊர்ப் பெயர்கள் வட சொல்லாகமாற்றப்பட்டுள்ளன.

எ-டு

தென்சொல் - வடசொல்
குடமூக்கு, குடந்தை - கும்பகோணம்
குரங்காடுதுறை - கபித்தலம்
சிலம்பாறு - நூபுரகங்கை
சிற்றம்பலம் - சிதம்பரம்
பழமலை, முதுகுன்றம் - விருத்தாசலம்
புள்ளிருக்கு வேளூர், வினைதீர்த்தான்கோவில் - வைத்தீசுவரன் கோயில்
பொருநை - தாம்பிரபரணி
மயிலாடுதுறை - மாயூரம்
மரைக்காடு, மறைக்காடு - வேதாரணியம்”

”மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி. மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்த தனால் அவ்விடம் அப் பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக்காடு எனத் திரித்து, [...] “ தமிழர் மதம், பக். 73

------------------------------


பொன்முடி வடிவேல் (ஆயக்காரன்புலம் திருமரைக்காடு) is on Facebook.

”வடமொழியில் மாற்றபெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். வேதாரண்யம், நாகையிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது சிவன் மணவாளசுவாமியாக அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பது ஐதீகம்.”

திருமரைக்காடு கிளிக்கர்ஸ்

திருமரைக்காட்டில் 2015 திருமணம்
”24.5.2015  ஞாயிற்றுக்கிழமை
> திருமரைக்காடு:  இல்லற இணைநல ஏற்பு விழா
காலை 10 மணி,
இடம்: சண்முகம் மீனாட்சி திருமண திருக்கூடம், திருமரைக்காடு,
மணமக்கள்: மருத்துவர் சு.த.சு.தமிழ்த்தென்றல் - மருத்துவர் த.அரவிந்த்
வரவேற்புரை: புயல் சு.குமார்
மண விழா தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் 
முன்னிலை: ஆசிரிய ஜோதி வா.அண்ணாமலை,
அழைப்பு: ரெ.சுப்பிரமணியன் (நகர்மன்ற மேனாள் துணைத் தலைவர், திருமரைக்காடு)
நன்றியுரை: கோ.தமிழொளி 25.5.2015 திங்கட்கிழமை”

திரு மரைக்காடு தான் பழைய ஊர்ப்பெயர் என்று அவ்வூர்க்காரர்கள் புரிந்துகொண்டு எழுதியும் வருவது
தமிழ் ஆராய்ச்சிகளை மக்களும் ஏற்பதற்கு நல்லதோர் அடையாளம். மாயவரம், மாயூரம் என்ற பெயர்
மயிலாடுதுறை என்று மாறப் பெருமுயற்சிகளை அவ்வூர் மக்கள் செய்து வெற்றிகண்டனர்.
அதே போல, திருமரைக்காடு பகுதியில் வாழும் மக்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கை வைத்தால்
அதிகாரப்பூர்வமாக மரைக்காடு இடம்பெறும். வருங்காலங்களில் முந்தைய தலைமுறை
தமிழறிஞர்கள் ஆராய்ச்சிகளை மேலும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல உதவும் செயலாக
இலங்கும்.

சங்க இலக்கியச் சொல் மரை, மரையா/ன், ... பற்றி ஆராய்வோம். மரைக்காட்டிற்கு பெயர் ஈன்ற சங்கச்சொல் அல்லவா?
குமரிமைந்தன் ‘marshdeer' என்று எழுதிவிட்டார். மார்ஷ்டீர் அமெரிக்காவில் தான். தண்செய் மாவட்ட மரைக்காட்டில் அது இல்லை.
காட்டுக்குதிரை என்றார் கவிஞர்கோ கோவை இளஞ்சேரனார். காட்டுக்குதிரை அல்ல மரை. 

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 8, 2017, 11:08:45 PM8/8/17
to மின்தமிழ், vallamai, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, vas_...@hotmail.com, ara...@gmail.com, Banukumar Rajendran


2017-08-08 19:51 GMT-07:00 MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>:
'மறை வனம்' என்ற வடசொல் கலந்த தலத்தின் பெயரை ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழ்படுத்தி 'மறைக்காடு' என்று அத்தலத்திற்கு தமிழ் பெயர் சூட்டியவர் திருஞானசம்பந்தர் என்பதை நூல் ஆதாரத்துடன் வேற்றொரு இழையில் எடுத்துக் கூறினோம்.   

மரைக்காடு என்ற பெயர் ஞானசம்பந்தர் சூட்டியதல்ல. பழைய தமிழில் அப்பெயர் இருந்துள்ளது. மறைக்காடு = வேதாரண்யம் என்று சூட்டியவர் ஞானசம்பந்தர்.
 

அதனை ஏற்க மாட்டாது எவ்வித நூல் ஆதாரமும் இன்றி அவர் சொன்னர் இவர் சொன்னார் என்று ஆருடங்களை  எடுத்துக் கட்டிக் கொண்டு பேசுவது எதனால்?

அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பது யாரோ ரோட்டில் போகிறவர்கள் அல்லர். தமிழாய்ந்த தமிழ் அறிஞர்கள். தமிழ் அறிஞர்கள் கூறுவது ஆரூடம் அல்ல.
அவ்வூர் இயற்கையையும், மரைகள் நிரைந்த காட்டையும் முன்வைத்து ஆகும். 

பொழில்கள் நிறைந்தது, மறைக்கிற காடு என்றீர்கள். அவ்வாறு வர்ணனை உள்ள ஊர்கள் தேவாரத்தில் பல. அவை எவற்றுக்கும் மறைக்காடு என்று இல்லையாதலால்,
இவ்வூருக்கும் மறைக்காடு (=வேதவனம்) என்பது ஒரிஜினல் பெயர் அல்ல. இடையில் வந்தது. பழைய பெயர் மரைக்காடு எனக் காட்டினேன். மரைகள் அங்கே வாழ்கின்றன.
 

தான் கொண்ட கருத்தே மின் தமிழில் நிலைக்க வேண்டும் என்றொரு மனோபாவம் இருந்தால் அதனைப் படிப்போர் புரிந்து கொள்வார். அப்புறம் தங்கள் கருத்துக்கு மின் தமிழ் குழுமம் எந்த அளவில் செவி சாய்க்கும் என்பதை தாங்களே புரிந்து கொள்வீர்.

அன்றே 'மறை வனம்' என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தி 'மறைக்காடு' என்று பாடிய தமிழ் விரகர் அது 'மரைக்காடு' என்று இருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டாரா?


சங்கத் தமிழின் பல சொற்கள் சம்பந்தர் காலத்தில் மறைந்துவிட்டன. மரை, மரையா போன்றன தொல்காப்பியம் சங்க இலக்கிய ஆராய்ச்சியால் தெரிகின்றன.
மரையை மறை என எழுதுதல் உண்டு. அதற்குச் சான்று தந்துள்ளேன். சங்க காலத்தில் மரைக்காடு. பின்னர் மறைக்காடு. 

'மறைக்காடு' என்ற சொல்லில் வரும் 'மறை' என்னும் சொல்  வேதத்தைக் குறிக்காது காரணம் சிவபெருமானை திருமேனி வழிபாட்டில் வழிபட வேதத்தில் மந்திரங்கள் ஏதும் இல்லை என்று சொல்லியும் அதனை ஏற்கமாட்டாது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விதண்டாவாதம் செய்வது ஏன்?

அவ்வாறு நீங்கள் சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் எந்த சைவரும் மறைக்காட்டில் உள்ள மறை வேதம் இல்லை என்று சொல்வதில்லை.
சம்பந்தர் பாடலிலே சான்று உள்ளது கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம் போல, மறை என்றால் வேதம் இல்லை என தேவாரம் இடம்கொடுப்பதில்லை.

சம்பந்தர் மரைக்காட்டுக்குப் புராணம் தருகிறார்: அப் பாடலைக் கேட்டுத் துதிக்கலாம்,

சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

இது மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,
கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட கதை ஆகும்.
சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்
தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர். 

பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால்வழி பாடுசெய்ய மாமறைக் காடா
வுலகேழுடை யாய்கடை தோறுமுன் னென்கொல
தலைகேர்பலி கொண்டதி லுண்டது தானே. - சம்பந்தர்



அயலார் 'மறைக்காடு' என்பதை 'வேத ஆரணியம்' என்று அவர் வசதிக்கு ஏற்றவாறு தப்பாகக் கூறினால் கேட்பாருக்கு மதியில்லையா?  மின் தமிழில் வேற்றொரு இழையில் முன்வைத்த எமது கருத்தை  அயலாருக்கும் தமிழருக்கும் அறிவுருத்தி அவர்களைச் திருந்தச் செய்வது அல்லவா தமிழரின் அறிவுடைமையாகும்.

இதனைச் செய்ய மாட்டாது நாங்கள் தமிழ் பெயரை வைக்கின்றோம் என்று கூறி இருப்பதையும் கெடுப்பது அறிஞர் பெருமக்களுக்கு அழகல்ல.  


நான் நற்றமிழ் அறிஞர்கள் சொல்வதை ஆராய்ந்து ஏற்பவன். மரை, மரையா, ... சொற்கள் வழி மரைக்காடு என்பது பழம்பெயர்.
வேதாரண்யம் என்று பொருள்தரும் மறைக்காடு இடைக்காலத்தில் ஏற்பட்ட திரிபு என்பதை அவ்வூர்க்காரர்கள் ஏற்பது போல
எழுதுவதால் தமிழ் அறிவும், ஆராய்ச்சிகளும் பெருகும்.

நா. கணேசன்
 
இத்தகைய ஒருதலைப் பட்சமான செயல்பாட்டை 'திருக்குறள்' சமண நூல் என்று மீண்டும் மீண்டும் மின் தமிழில் எழுதி வருவதிலிருந்தும் காண்கிறோம். இரண்டு சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து இவ்விடம் பதிவு செய்து சமணர் வாதம் பொய்யுடையது என்பதை நிருவினோம்.

சமண மதம் சாதிய கொள்கை அற்றது என்று ஒரு சிலர் மின் தமிழில் கூறி வந்ததையும் நூல் ஆதாரத்துடன் பொய் என்று நிருவினோம். சமண மத கோட்பாடுகளை மறுக்கும் பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியிருந்தும் உண்மையை அறிய மாட்டார் எப்படி தமிழ் அறிஞர் ஆனார் என்பது எமக்குப் புரியவில்லை. 

மு. கமலநாதன் 

N. Ganesan

unread,
Aug 8, 2017, 11:21:51 PM8/8/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, podh...@gmail.com, tami...@gmail.com, vas_...@hotmail.com, ara...@gmail.com, banuk...@gmail.com


On Tuesday, August 8, 2017 at 7:51:17 PM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:
'
இத்தகைய ஒருதலைப் பட்சமான செயல்பாட்டை 'திருக்குறள்' சமண நூல் என்று மீண்டும் மீண்டும் மின் தமிழில் எழுதி வருவதிலிருந்தும் காண்கிறோம். இரண்டு சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து இவ்விடம் பதிவு செய்து சமணர் வாதம் பொய்யுடையது என்பதை நிருவினோம்.

சமண மதம் சாதிய கொள்கை அற்றது என்று ஒரு சிலர் மின் தமிழில் கூறி வந்ததையும் நூல் ஆதாரத்துடன் பொய் என்று நிருவினோம். சமண மத கோட்பாடுகளை மறுக்கும் பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியிருந்தும் உண்மையை அறிய மாட்டார் எப்படி தமிழ் அறிஞர் ஆனார் என்பது எமக்குப் புரியவில்லை. 


திருக்குறள் ஆசிரியர் சமணர் என்று எழுதியவர்கள் எல்லோரும் சமணர்கள் அல்லர். பல நாடுகளில் வாழ்ந்த தமிழறிஞர்கள். யாரோ அவர் சொன்னார், இவர் சொன்னார் என்ற நிலையில் இருப்பவர்கள் அல்லர்.

சமண மதக் கோட்பாடுகள் எதனை திருவள்ளுவர் மறுத்தார் என தனி இழையில் எழுதுங்கள் அங்கே பங்கு பெறுகிறேன். திருக்குறள் சமணர் ஒருவரால் செய்தது என்னும் தமிழறிஞர் முடிபை நீங்கள் மாற்றவில்லை.

மறை = வேதம். மறைக்காடு = வேதாரண்யம். நீங்கள் தான் இல்லை என்கிறீர்கள். வேறு யாரும் அப்படிச்சொல்லி கேட்டதில்லை. மேலும் உங்கள் விளக்கப்படி ‘மறைக்காடு பெயர் அமைந்திருந்தால் ஏராளமான ஊர்கள் அப்பெயரில் தமிழகத்தில் இருக்கும். அவ்வாறு இல்லை ஆதலாலும், மரைகள் வாழும் காடு அஃது என்பதாலும், சங்க இலக்கிய வழி மரை, மரையான், ... என்னும் தொல்காப்பிய வழியில் தமிழறிஞர்கள் கூறும் மரைக்காடு சரி எனக் கொள்கிறேன். அதனை மலேசியா, சிங்கப்பூர் வாழ் மக்களிடம் எடுத்துச் செல்வோம். திருமரைக்காடு என்று அவ்வூர் மக்கள் எழுதுவதன் ஆழமான பொருள் உண்டு. அப்பொருளைச் சங்க இலக்கியத்தில் இருந்து தெளியலாகும்.

நா. கணேசன்
 
மு. கமலநாதன் 

  

  








On Wednesday, August 9, 2017 at 3:51:33 AM UTC+8, N. Ganesan wrote:

N. Ganesan

unread,
Aug 9, 2017, 9:09:16 AM8/9/17
to மின்தமிழ், vallamai
On Wednesday, August 9, 2017 at 6:02:51 AM UTC-7, இராம.கி wrote:
2000 ஆண்டுகளுக்கு முன்னால் மரைக்காடு என்ற பெயர் அந்த ஊருக்கு இருந்ததா? எந்த இலக்கியத்தில் வருகிறது?
 

உங்கள் மடல்கள் பலவற்றில் மரைக்காடு தான் வேதாரண்யத்துக்கு பழைய, சரியான பெயர் என்று எழுதியிருக்கிறீர்கள்.

உ-ம்: 2005 மடலில் எழுத்து:
”இது மாதிரி பல்வேறு தமிழ் ஊர்களின் பெயர்களைக் குட்டிச் சுவர் ஆக்கியிருக்கிறோம். மான்கள் நிறைந்த காடு மரைக்காடு. அதை மறைக்காடு என்று தவறாகப் பலுக்கி பின் வேதாரண்யம் என்று வடமொழியாக்கி, என்ன கந்தர கோளம் பாருங்கள். மொத்தத்தில் நம்மூரை நம்மூராகப் பாவிப்போம்.) ”

தமிழறிஞர்களும், திரு மரைக்காடு ஊரினரும் அவர்கள் ஊரின் பெயரைச் சரியாக பழந்தமிழ்ப் பெயராகவே பாவிக்கின்றனர்.

நா. கணேசன்
 
அன்புடன்,
இராம.கி.

 

N. Ganesan

unread,
Aug 10, 2017, 1:32:06 AM8/10/17
to மின்தமிழ், vallamai
2017-08-09 22:18 GMT-07:00 Raju Saravanan <ras...@gmail.com>:
//திரு மரைக்காடு ஊர்க்காரர்கள் பயன்படுத்துகின்றனர்//

ஐயா கணேசன் அவர்களின் வாதப்படி மரைக் காடு என்பது மறைக் காடு ஆனது என்றும் . மரை (மான் வகை) மிகுதியாக வாழ்வதால் மரைக்காடு என்பதே சரியானது என்றும் சொல்கிறார். அதாவது திருமரைக்காடு  என்ற பெயர் திருமறைக்காடு என்றாகிவிட்டது என்கிறார்.

மான் என்ற விலங்கினத்தை மரியாதையாக திரு என்று அழைக்கும் விதம் அருமையாக உள்ளது ஐயா. 

திருமரைக்காடு என்று வேதாரணியக்காரர்கள் பயன்படுத்துகின்றனர்.

திருமரைக்காடு, திருப்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருவாலங்காடு, திருமயிலாடுதுறை, .... எண்ணற்ற ஊர்களுக்கு
அவ்வூர்க் கோயில்களால் திரு என்ற அடை வரும். திருப்புலியூர் பல இலக்கியங்களில் இருப்பது.

திருமரைக்காட்டினர் அவ்வாறு பயன்படுத்துவது பழைய தமிழ் மரபு ஆகும்.

நா. கணேசன்


 

மிகப்புதுமையாக உள்ளது. 

நன்றி.

N. Ganesan

unread,
Aug 10, 2017, 2:27:03 AM8/10/17
to மின்தமிழ், vallamai
மரையூர் - உடுமலை அருகே. மறையூர் என்றும் எழுதுதல் உண்டு.
மரை:மறை என்றாவதை பேரகராதி.

மரையூரில் பெருங்கற்கால (மெகாலித்திக்) மரைகள்:


N. Ganesan

unread,
Aug 10, 2017, 2:52:29 AM8/10/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, August 9, 2017 at 11:34:28 PM UTC-7, செல்வன் wrote:


2017-08-10 1:23 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, August 9, 2017 at 11:15:06 PM UTC-7, செல்வன் wrote:
திருமறைக்காட்டில் மட்டுமா மரைகள் இருந்தன?

பல பகுதிகளில் இருந்த மரைகள் அங்கேயும் இருப்பது எப்படி ஆதாரம் ஆகும்? 



திருமரைக்காட்டில் தான் மரைகள் மிக அதிகம். தென்னிந்தியாவிலேயே.


ஆதாரத்துடன் சொன்னால் நன்று



பேரா. தேவநேயப் பாவாணர்:

தமிழ்நாட்டு அரசின் கடமை:
”மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது. ”
- பாவாணர், மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை, பக். 127.

தமிழர் வரலாறு 2, பக். 134
”ஊர்ப்பெயர் மாற்றம்

தமிழ்நாட்டை ஆரியப்படுத்தற்குப் பல ஊர்ப் பெயர்கள் வட சொல்லாகமாற்றப்பட்டுள்ளன.

எ-டு

தென்சொல் - வடசொல்
குடமூக்கு, குடந்தை - கும்பகோணம்
குரங்காடுதுறை - கபித்தலம்
சிலம்பாறு - நூபுரகங்கை
சிற்றம்பலம் - சிதம்பரம்
பழமலை, முதுகுன்றம் - விருத்தாசலம்
புள்ளிருக்கு வேளூர், வினைதீர்த்தான்கோவில் - வைத்தீசுவரன் கோயில்
பொருநை - தாம்பிரபரணி
மயிலாடுதுறை - மாயூரம்
மரைக்காடு, மறைக்காடு - வேதாரணியம்”

”மரைக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அடவிப் பகுதி. மரை என்பது ஒரு மானினம். அது மிக்கிருந்த தனால் அவ்விடம் அப் பெயர் பெற்றது. ஆரியர் அப் பெயரை மறைக்காடு எனத் திரித்து, [...] “ தமிழர் மதம், பக். 73

நா. கணேசன்

 
 

N. Ganesan

unread,
Aug 10, 2017, 9:13:12 AM8/10/17
to மின்தமிழ், vallamai


On Thursday, August 10, 2017 at 4:18:37 AM UTC-7, நரசுஸ் காப்பி wrote:
​தமிழ்நாட்டில் ஆய்வாளர்கள் மறைக் காடுகளையும் இறை நம்பிக்கைக்குரிய விலங்கினங்களையும் பட்டியலிட்டுள்ளனர்

மான்களில் புள்ளிமான் சிவனுக்கும் புத்தருக்கும் சமண தீர்த்தங்கரருக்கும் இணைத்துக் கூறுவதாகக் குறிப்பிடும் தரவுகள அடிப்படையிலான தகவல்.

சிவன் கையில் உள்ளது கருமான் எனப்படும் மரை. திருமரைக்காட்டில் (வேதாரண்யம்) வாழ்கின்ற மரைகள். தென்னிந்தியாவிலே அதிகமாக சிவபிரான் கையில் இருக்கிற மரை
வாழும் காடுகள் உள்ள இடம் திருமரைக்காடு (வேதாரண்யம்) தான்.

நா. கணேசன்

 


அதுபோன்றே தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மறைக்காடுகள் பற்றிய பட்டியல் கீழே

சரடுநாதன்

N. Ganesan

unread,
Aug 10, 2017, 9:28:29 AM8/10/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, Theodore Baskaran, housto...@googlegroups.com
சிவன் கையில் உள்ளது கருமான் (இரலை < சிரலை. Cf. இரும்பு < சிரும்பு) எனப்படும் மரை. திருமரைக்காட்டில் (வேதாரண்யம்) வாழ்கின்ற மரைகள். தென்னிந்தியாவிலே அதிகமாக சிவபிரான் கையில் இருக்கிற மரை வாழும் காடுகள் உள்ள இடம் திருமரைக்காடு (வேதாரண்யம்) தான். கறுப்பாக இருக்கும் மரையேறு இது. எனவே, ஆங்கிலத்தில் Black buck என்றும், வடமொழியில் க்ருஷ்ணமிருகம் என்றும் வழங்குவது. இதில் பெண்மான்கள் சிவந்த நிறம் அவை செம்மான் எனப்படும். ’செம்மான் மகளைத் திருடும் திருடன்’ - அருணகிரிநாதர். பெரும்புலவர் மறைக்காட்டில்/மரைக்காட்டில் வாழும் இந்த மான்களையும், ஈசனையும் பாடியுள்ளார்.

சிறந்த புத்தகம்:

Field DaysA Naturalist's Journey Through South and Southeast Asia

Front Cover
Universities Press, 2006 - Forest animals - 339 pages

pg. 38:
"Great Vedaranyam Swamp in the north and west. Calimere boasts the last 'large' patch of tropical dry evergreen forest in our country. In addition to nearly 2000 blackbuck - the largest population in south India - chital, wild pigs, hares, bonnet macaques, jackals, jungle cats, civets and grey mongoose make this forest their home.

Calimere is well known among ornithologists, ..."

1967-ல் திருமரைக்காட்டில் சிறப்பாக வாழும் மரைகளைக் காப்பாற்ற வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மரைகள் வாழும் காடுகள் மிகுந்த இடம் திருமரைக்காடு என்னும் வேதாரண்யம் தான். மரை என்ற பெயர் திராவிட மொழிகளில் எப்படி ஏற்பட்டது என்றும் நான் தொடங்கிய இவ்விழையில் சொல்கிறேன். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 10, 2017, 9:34:01 AM8/10/17
to மின்தமிழ், vallamai


On Thursday, August 10, 2017 at 6:26:10 AM UTC-7, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Post-Scriptum

Interestingly, there is a place called

அறியா மறைக் காடு

Ariyamaraikadu, Tamil Nadu 614616, India

at location:
https://www.google.de/maps/@10.1492914,79.1061254,15.25z

See screen shot.

Thanks for the -kaadu list. There is a place called நாலுவேதபதி north of Tirumaraikkadu (Vedaranyam).
Obviously people liked their places being linked with the Four Vedas

And, slowly the Sangam era name, marai and its meaning gets forgotten. Ref. A. Chekov's famous short story

NG
 

-- jlc

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


########################
Dear Sir,

greetings from Hamburg (Germany).

As a small contribution to this debate,
here is a list of villages in TN which have "kadu" in their names

I have just extracted it from a list of
"List of the 16300 Revenue Villages for Tamil Nadu in december 2000"
which I had compiled long ago while working on the "Digital Tevaram" CD
based on some T.Nadu information data bases
of the {National Informatics Center (NIC), Tamil Nadu State Unit}
(online at that time).

I don't have a personal opinion on the debate concerning மரை / மறை

-- Jean-Luc Chevillard

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


########################

---------- REVENUVI.HTM
...........................
<li>Aravankadu [[Villupuram_DISTRICT: Sankarapuram_TALUK]]
<li>Ariyamaraikadu [[Pudukkottai_DISTRICT: Aranthangi_TALUK]]
<li>Asaveerankudikkadu [[Ariyalur_DISTRICT: Sendurai_TALUK]]
............................

N. Ganesan

unread,
Aug 10, 2017, 10:07:15 AM8/10/17
to மின்தமிழ், vallamai


2017-08-10 7:00 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
பிளாக் பக் பற்றிய குறிப்பு இங்கே


சரடுநாதன்

சங்க இலக்கியத்தில் மரை, மரையா, மரைவாழ் காடுகள் பற்றி எழுதுவேன்.
நான்கு மரை இனங்கள் தமிழ்நாட்டில் 1930 வரை இருந்துள்ளன. இன்று
இரண்டு மரை இனங்கள் தாம். சிங்காரா (குறுமரை), மரையா அழிந்துவிட்டன.

ஜான்சிங் போன்றோர் எப்படி திரும்பவும் கொங்குநாட்டு மலைகளில்
அழிந்துபட்ட மரைகளை மீளறிமுகம் செய்வது என திட்டங்களை அரசிடம்
கொடுத்துள்ளனர். நூல்களில் எழுதிவருகின்றனர்.

நா. கணேசன்
 

2017-08-10 19:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


திருமரைக்காடு என்று புலவர்கள், பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Aug 10, 2017, 11:41:58 AM8/10/17
to மின்தமிழ், vallamai

Thanks for reference to antelopes (= marai) in Tevaram.

In the coastal area forests of South India, antelopes have lived for millions of years.
See the papers on Maraiyaa (Nilgai) fossils in Attirampakkam, the site found
by R. B. Foote where stone tools of pre-humans are also found.

Thare are poems about antelopes, deer in Tirumaraikkadu.
I think the reason is clear why Tevaram does not mention marai.
It will confuse with the Puraana being created by them - playing
on the word maRai - one as Veda and other for closing & opening of gates.

NG


2017-08-10 7:32 GMT-07:00 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:
What about Tēvāram 7:79_(1)

மானும், மரைஇனமும், மயில்இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனைநீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில்ஊடே சென்று, புக்கு,
தேமாம்பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பதமலையே.


V.M. Subrahmanya Ayyar glosses:


மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து
the deer, herd of indian elk and flocks of peacocks miring together everywhere they themselves having eaten their food sumptuously according to their desire.
தடஞ்சுனை நீர்களைப் பருகி
drinking the water in several big mountain springs.
பூ மாமரம் உரிஞ்சி
rubbing their bodies against the big blossomed trees.
பொழிலூடே சென்று
going through the denseness of those trees.
புக்கு
entering.
தேமாம் பொழில் நீழல் துயில் சீபர்ப்பதமலையே
the mountain called Cīparppatam is the mountain of Civaṉ, where in the shade of the sweet mango-groves, they sleep.


-- Jean-Luc Chevillard (in Hamburg)


https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


On 10/08/2017 16:23, திருத்தம் பொன்.சரவணன் wrote

மறைக்காட்டினைப் பற்றிப் பாடிய சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் ஒருவர் கூட மரைகளை அதாவது மான்களைப் பற்றிப் பாடவேயில்லை.


Nagarajan Vadivel

unread,
Aug 10, 2017, 12:26:56 PM8/10/17
to vallamai
சைவ மறுமலர்ச்சிக்குமுன் களப்பிரர் காலத்துக்குமுன் தமிழகத்தில் இருந்த கோவில்கள் பற்றி தரவுகள் அடிப்படையில் அமைந்த தகவல் ஏதும் கிட்டவில்லை.  இயற்கையை வணங்கிய தமிழ்ப் பழங்குடி சங்க காலத்துக்குப்பின்னரே சைவ சித்தாந்தம் தமிழகத்துக்கு அறிமுகமான பின்னர் ஆகம் அடிப்படையிலான கோவில்கள் தோன்ற ஆரம்[இத்தன என்று கருதலாம்
தமிழகத்தில் ஆகமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லாமல் முரண்பட்டே இருந்தன

சரடுநாதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 10, 2017, 8:35:47 PM8/10/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
மரை : மறை என்றாகி புதிய புராணங்கள் தேவார காலத்தில் ஏற்படலாயின. திருமரைக்காடு என்பது மரை இனங்களின் காடு. புலியூர் புலிகள் வாழ்ந்த காட்டில் உள்ள ஊர். சிதம்பரம் கோவிலால் திருப்புலியூர். அதேபோல, மரைக்காடு திருமரைக்காடு அங்குள்ள சிவன் கோயிலால். சிவன் கையில் ஏந்தியிருப்பது மரை. அதற்கான காரணங்கள் பல நூல்களாக வேத இலக்கியங்களில் இருந்து வாசிக்கலாம்.

In the coastal area forests of South India, antelopes have lived for millions of years.
See the papers on Maraiyaa (Nilgai) fossils in Attirampakkam, the site found
by R. B. Foote where stone tools of pre-humans are also found.

Thare are poems about antelopes, deer in Tirumaraikkadu.
I think the reason is clear why Tevaram does not mention marai.
It will confuse with the Puraana being created by them - playing
on the word maRai - one as Veda and other for closing & opening of gates.

மரை என்றால் என்ன? மரை = மான் விசேடம் என்று திருவாய்மொழி ஈட்டின் மொழிபெயர்ப்பிலே பேரா. பு. ரா. புருஷோத்தமநாயுடு எழுதிச் செல்கிறார். தமிழ்நாட்டின் நான்கு மரைகளைப் பற்றி விரிவாகவும், மரையாவின் முக்கியத்துவம் 4500 ஆண்டாக இந்தியாவில் என்ன என்பது பற்றியும் எழுதவேண்டும்.  பல புலவர்களுக்கும் மரை என்றால் மயக்கம் இருந்திருக்கிறது. திருமரைக்காட்டுப் பகுதியில் இருந்த பேரா. கோவை இளஞ்சேரனார் வேதாரண்யத்தின் காட்டுக் குதிரை என்கிறார். மரை என்ற சொல்லே மருப்பு (கொம்பு) என்பதுடன் தொடர்புடையது. Deer have antlers that are shed each year, but Antelopes have permanent horns in their head, hence their name marai.

Mustangs of Vedaranyam:

It will be nice if DNA studies are done on the Vedaranyam mustangs, and to know how much percentage if any comes from Chozha era, then Vijayanagara, then British period.




















































































Dr. N. Ganesan

N. Ganesan

unread,
Aug 10, 2017, 8:40:29 PM8/10/17
to மின்தமிழ், vallamai


On Thursday, August 10, 2017 at 2:49:26 PM UTC-7, செல்வன் wrote:
அந்த சார்பற்ற தன்மை இருக்கும் யாரும் 1300 ஆண்டுகளாக இருக்கும் பெயரை மாற்ற சொல்லி இங்கே எழுதிகொண்டிருக்கமாட்டார்கள். அப்படி மாற்றூவது தவறு என கண்டித்திருப்பார்கள். 

2017-08-10 16:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆய்வாளராக  இருக்கும் பொழுது எனது  சமயம், எனது நாடு, எனது மொழி  என்ற உணர்வுகள் வருவது  தவறு... Their bias starts to creep in, impartial analysis is required.

சங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்று
எழுதினர். அவ்வழியில் திருமரைக்காட்டு மக்கள் செல்கின்றனர். அதனைக் கண்டு ஆவணப்படுத்தவே இவ்விழை தொடங்கப்பெற்றது,

நா. கணேசன் 

செல்வன்

unread,
Aug 10, 2017, 9:13:12 PM8/10/17
to mint...@googlegroups.com, vallamai
On Thu, Aug 10, 2017 at 7:40 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

சங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்று
எழுதினர். அவ்வழியில் திருமரைக்காட்டு மக்கள் செல்கின்றனர். அதனைக் கண்டு ஆவணப்படுத்தவே இவ்விழை தொடங்கப்பெற்றது,

நா. கணேசன் 


திருமறைக்காட்டை மரைக்காடு என எழுத ஆதாரம் அவசியம். ஆதாரமே இல்லாத நிலையில் அப்படி எழுத சார்பு நிலை மட்டுமே போதுமானது. 

உங்கள் பிரச்சனை சார்பு நிலை மட்டுமே அல்ல. ஆதாரம் இல்லாமல் அடித்துவிட்டுகொண்டிருப்பதும் கூகிளில் தேடி ஏதோ மான் படத்தை போட்டு, நாலைந்து பேராசியரின் பெயரை சொல்லி "அவரே சொல்லிவிட்டார், இவரே சொல்லிவிட்டார்" என்பதுவுமே. இப்படியே வருடக்கணக்காக சம்பந்தம் இல்லாத இழைகளில் எல்லாம் புகுந்து மான், மரை, சம்பந்தர் என எழுதுவீர்கள். அதுதான் திகில் ஊட்டுகிறது
--

செல்வன்

seshadri sridharan

unread,
Aug 10, 2017, 10:05:33 PM8/10/17
to vall...@googlegroups.com
2017-08-10 21:56 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சைவ மறுமலர்ச்சிக்குமுன் களப்பிரர் காலத்துக்குமுன் தமிழகத்தில் இருந்த கோவில்கள் பற்றி தரவுகள் அடிப்படையில் அமைந்த தகவல் ஏதும் கிட்டவில்லை.  இயற்கையை வணங்கிய தமிழ்ப் பழங்குடி சங்க காலத்துக்குப்பின்னரே சைவ சித்தாந்தம் தமிழகத்துக்கு அறிமுகமான பின்னர் ஆகம் அடிப்படையிலான கோவில்கள் தோன்ற ஆரம்[இத்தன என்று கருதலாம்
தமிழகத்தில் ஆகமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லாமல் முரண்பட்டே இருந்தன - சரடுநாதன்


 களப்பிரர் காலத்திற்கு பின்னீடு தோன்றிய சைவம் தந்திர அடிப்படையில் காசுமீரத்தில் தோன்றியதாக அறியப்படுகிறது, நாத மரபு ஓகியரால் நாடுமுழுக்க பரப்பட்டது. ஓகம், அடிப்படையில் வேத மரபை எதிர்ப்பது. அப்படியான சைவத்தை ஓக மரபில் இருந்து பிரித்து பத்தி நெறியில் தனி மதமாக உருவாக்கி அதில் வேத முதல்வனாக சிவனை ஆக்கினர். எனினும், இந்த சைவ, வேத வேறுபாடு, மாறுபாடு ஒரு சிறு கூட்டத்தால் மிக பிற்காலம் வரை கொண்டுவரப்பட்டது. வெள்ளையர்கள் ஓக நெறியை தவிர்த்து மதத்தை மட்டுமே பார்த்தால் அந்த வேற்றுமை பதிவில் இடம் பெறாமல் அழிந்துவிட்டது.

குமணன் 
    

N. Ganesan

unread,
Aug 10, 2017, 11:20:50 PM8/10/17
to மின்தமிழ், vallamai


On Thursday, August 10, 2017 at 1:47:50 PM UTC-7, தேமொழி wrote:
சமயம் மறுமலர்ச்சியில் தங்கள் சமயத்தைப் பரவலாக்க பலவகை தொன்மக் கதைகளைக் கட்டிவிட்டு ஒவ்வொரு ஊரையும் தங்கள் சமயத்தின் கீழ் கொண்டு வரும் சூழ்ச்சியாகத்  தோன்றுகிறது.

இப்பாடல்கள் யாவும் சமயமறுமலர்சிக் காலாத்திய உருவாக்கங்கள் என்பதுவே எனது கணிப்பு. 

மக்கள் தங்கள் மனம் போல ஊரின் முன்னாள் பெயரை உள்வாங்கி, தொன்மக்  கதைகள் உருவாக்கி,  அதை எழுத்திலும் பரப்பும் (ஏடுகளில்) பரப்பி விட்டார்கள்.


Tiru. Selvan and others thinking that மறைக்காடு (= Veda forest) is the original name is popular, but does not have anything to do with Nature in Maraikkadu, and the Sangam linguistic evidence.
This is like religious scholars determining the Earth's age as only 6000 years, but scientists like R. B. Foote's findings contradicting  the religionists' point of view.

"In 1859, Charles Darwin published the theory of natural selection in his book, “Origin of Species by Means of Natural Selection”, suggesting that, among other things, humans evolved from apes, flying in the face of conventional thinking at the time. 

The age of the earth had earlier been pegged at 6,000 years by European religious scholars, based on readings of the Bible, with estimates ranging to 100,000 years (based on other religions) at the high end. Darwin’s theory implied it was much, much older, transforming not only the field of biology, but geology too, along with archaeology and anthropology.

The theory, of course, faced widespread resistance. Evolution from apes? Did god not create humans in his own image? Wasn’t it blasphemy to suggest otherwise? “No,” said one bold geologist from British India whose discoveries supported Darwin’s theory. His name was Robert Bruce Foote. " ...

 N. Ganesan


"மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே" --- என்பதை  அக்காலத்திலும் கூட ஒருவகையில்  உணர்ந்திருப்பார்கள் போலிருக்கிறது. 

மரைக்காடு > மறைக்காடு > திருமறைக்காடு என மாற எவ்வளவு காலம் பிடிக்கும்.  முன்னர் அந்த ஊர் ஒரு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஊராகவே இருந்திருக்கலாம், பின்னர் ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக மாற்றிவிடப் பட்டிருக்கலாம். 

கத்தோலிக்க சமயத்தினர் கப்பலேறி நாடு நாடாகச் சென்று, கடலில் புயலில் சிக்கியதாகவும், மேரியைக் காப்பாற்றும்படி வேண்டிக் கரையிறங்கினால் அங்கு ஒரு தேவாலயம் கட்டுவதாகக் கூறியதாக அப்பகுதி மக்களிடம் நிலம் வாங்கி, ஆலயம் கட்டி, சமயம் பரப்பிய செயல்களில் இருந்து என்னால் வேறுபடுத்திக் காண இயலவில்லை.  

பிற சமயங்களைச்  சார்ந்திருக்கும்  மக்களை தங்கள் சமயத்தில் உள்வாங்கி சமயம் பரப்பும் இயக்கங்களின் தொடர் முயற்சிகளில் ஆரம்பக் கட்டம் என்றே என்னால் கொள்ள முடிகிறது. 

செல்வனின் திருப்புலியூர் என்பதையொட்டிய எனது கருத்து, >>>  https://groups.google.com/d/msg/mintamil/n2MGsQINvsA/upAiFxzPAgAJ
சங்ககால பீடார் உறந்தையின் கோழியூர் என்ற பெயரில் ஏற்றப்பட்ட கதைகளும் உண்டு என்று காட்டும் நோக்கில், திரு. கணேசனின் இழையைத்  திசை திருப்பாமல் அது தனியே வருகிறது 

தமிழக மன்னர்கள் தங்களது  வெற்றிக்கு அறிகுறியாக அவற்றைப் பறை சாற்ற அதனடிப்படையில் ஊர்களின்  பெயர் மாற்றம் செய்ததையும், 

சுதந்திர இந்தியாவின் காந்தி, நேரு, இந்திரா, சுபாஷ் சந்திர போஸ்  சாலைகள் உருவானதையும்

கழகக் கட்சிகள் அண்ணா, பெரியார் என்று பெயரிடத் தொடங்கிய நம் முன்னோர்களின் மனநிலையையும்  

அக்கால மக்களின் மனநிலையில் இணைத்துப் பார்ப்பது கடினமல்ல.  

..... தேமொழி 

On Thursday, August 10, 2017 at 9:42:43 AM UTC-7, செல்வன் wrote:


2017-08-10 2:51 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:



என் கருத்து அல்ல ஐயா. திருமரைக்காடு என்று எழுதுபவர்கள் அந்த ஊர்க்காரர்கள், தமிழ் அறிஞர்கள்.

திருப்புலியூர் (சிதம்பரம்) எதனால் திரு என்று தொடங்குகிறதோ, அதே காரஅம் தான்
திருமரைக்காடு (வேதாரண்யம்). இரண்டு ஊர்களிலும் பெரிய கோவில்கள்.


ஸப்தரிஷிகள் மகாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் இந்திரனை அனுப்பினார். இந்திரன் புலியாக மாறி, அந்த தேவதையைக் கொன்றான். அதனால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருப்புலியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஸப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், மாயப்பிரானாகத் தோன்றி காட்சி அளித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.


ஆக இந்திரன் புலியாக மாறீயதால் அது திருப்புலி, திருப்புலியூர் ஆனது

உங்க லாஜிக்படி திருப்ப்லியூரில் புலிகள் மிகுதி என சொல்வீர்கலா?

மரைக்காட்டுக்கு திரு என அடைமொழி சேர்க்கும் அவசியம் உங்கள் லாஜிக்படி இல்லை. மறைகளை தான் திருமறை என விளிக்கும் வழக்கம் உண்டு

செல்வன்

unread,
Aug 10, 2017, 11:33:41 PM8/10/17
to vallamai, மின்தமிழ்
இப்ப நீங்க சார்லஸ் டார்வின் ஆகிவிட்டீர்கள். ரைட்டு.. ஆனால் அதை விட நீங்கள் செய்வதுக்கு பொருத்தமான உதாரணம் உள்ளது

தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பாமியானில் உள்ள புத்தர்சிலைகளை இடித்து தள்ளினார்கள். காரணம் வரலாற்று தூய்மைவாதம்.

கிட்டத்தட்ட பாமியான் புத்தர் கால தொன்மையுள்ள திருமறைக்காடு எனும் பெயரையும் வரலாற்று தூய்மைவாத காரணம் காட்டி நீங்கள் மாற்ற முனைவதுக்கு தலிபானின் உதாரணமே பொருந்தும். புத்தர்சிலையை இடிக்ககூடாது என்பவர்களை பவுத்தமதவாதிகள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.


N. Ganesan

unread,
Aug 10, 2017, 11:46:25 PM8/10/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, August 10, 2017 at 8:33:43 PM UTC-7, செல்வன் wrote:
இப்ப நீங்க சார்லஸ் டார்வின் ஆகிவிட்டீர்கள். ரைட்டு.. ஆனால் அதை விட நீங்கள் செய்வதுக்கு பொருத்தமான உதாரணம் உள்ளது


நான் சார்லஸ் டார்வின் ஆகவில்லை ஐயா. தமிழறிஞர்கள் சங்க இலக்கியத்தால் பழம்பெயரைத் தந்துள்ளனர்.

நா. கணேசன்
 
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பாமியானில் உள்ள புத்தர்சிலைகளை இடித்து தள்ளினார்கள். காரணம் வரலாற்று தூய்மைவாதம்.

கிட்டத்தட்ட பாமியான் புத்தர் கால தொன்மையுள்ள திருமறைக்காடு எனும் பெயரையும் வரலாற்று தூய்மைவாத காரணம் காட்டி நீங்கள் மாற்ற முனைவதுக்கு தலிபானின் உதாரணமே பொருந்தும். புத்தர்சிலையை இடிக்ககூடாது என்பவர்களை பவுத்தமதவாதிகள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

மதறாஸ் என்பதை அதைவிடப் பழைய பெயர் சென்னை எனப் பயன்படுத்துவோர் வரலாற்று தூய்மை வாதம் என்றா சொல்வது? சென்னை, மயிலாடுதுறை, ... வந்துவிட்டது.

தமிழ் இளைஞர்களுக்கு அறிவியல் முறையில் தமிழ் ஊர்ப்பெயர்கள் ஆராய தமிழறிஞர்கள் கொடுத்துள்ள திருமரைக்காடு அமைந்தால் சிறக்கும்.
பேரா. தி. நெடுஞ்செழியன் 2008-ல் சொல்வதை ஆராய்ந்தால் தெரியும்.

நா. கணேசன் 

செல்வன்

unread,
Aug 11, 2017, 12:22:57 AM8/11/17
to vallamai, மின்தமிழ்

2017-08-10 22:46 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


மதறாஸ் என்பதை அதைவிடப் பழைய பெயர் சென்னை எனப் பயன்படுத்துவோர் வரலாற்று தூய்மை வாதம் என்றா சொல்வது? சென்னை, மயிலாடுதுறை, ... வந்துவிட்டது.

தமிழ் இளைஞர்களுக்கு அறிவியல் முறையில் தமிழ் ஊர்ப்பெயர்கள் ஆராய தமிழறிஞர்கள் கொடுத்துள்ள திருமரைக்காடு அமைந்தால் சிறக்கும்.
பேரா. தி. நெடுஞ்செழியன் 2008-ல் சொல்வதை ஆராய்ந்தால் தெரியும்.

நா. கணேசன் 



மதறாஸுக்கு முன்பே அதன் பெயர் சென்னைதான் ஐயா. மதாரஸ் பெயரை கேட்டாலே அது ஆங்கிலேயர் சூட்டியது என தெரியவில்லையா?

மயிலாடுதுறை என்பதும் மாயவரம் என்பதைவிட தொன்மையான பெயரே. அவை எல்லாம் நியாயமான மாற்றங்கள் தான்.





--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 11, 2017, 12:29:38 AM8/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
மரைக்காடும் நியாயமான மாற்றமே. பீக்கிங்குக்கு பெய்ஜிங் என்ற பழஞ்சீனப் பெயர் போல. மரைக்காடு வேதாரண்யத்தின் பழந்தமிழ்ப் பெயர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலில் உள்ளபடி.

நா. கணேசன்
 



--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 11, 2017, 12:32:23 AM8/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, August 10, 2017 at 8:59:05 PM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:

இது வேறு. உங்களுக்கு உதவக்கூடும்.

பேரா. அ. கி. மூர்த்தி, சைவ சித்தாந்த அகராதி:

நா. கணேசன்

செல்வன்

unread,
Aug 11, 2017, 12:34:09 AM8/11/17
to vallamai, மின்தமிழ்
2017-08-10 23:29 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


மரைக்காடும் நியாயமான மாற்றமே. பீக்கிங்குக்கு பெய்ஜிங் என்ற பழஞ்சீனப் பெயர் போல. மரைக்காடு வேதாரண்யத்தின் பழந்தமிழ்ப் பெயர்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலில் உள்ளபடி.



முதலில் மரைக்காடு என உள்ள ஒரு இலக்கியகுறிப்பையாவது, கல்வெட்டையாவது காட்டவேண்டும்.

ஆதாரமே இல்லாமல் வெறும் கையில் முழம் போடுவதில் அர்த்தம் கிடையாது

 
--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 11, 2017, 12:38:49 AM8/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
இலக்கியக் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. மொழியியலில் ப்ரொட்டோ-திராவிட மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழி எல்லாம் அறிஞர்கள் எழுதிய
இலக்கியங்களில் இருக்கிறது. மரைக்காடு என்று உள்ள இலக்கியங்கள் கொடுத்துள்ளேன். மரைக்காட்டுக்கும் (வேதாரண்யம்), மரைக்கும் உள்ள
தொடர்பு அதிகம். 

செல்வன்

unread,
Aug 11, 2017, 12:41:25 AM8/11/17
to vallamai, மின்தமிழ்
2017-08-10 23:38 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

 

இலக்கியக் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. மொழியியலில் ப்ரொட்டோ-திராவிட மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழி எல்லாம் அறிஞர்கள் எழுதிய
இலக்கியங்களில் இருக்கிறது. மரைக்காடு என்று உள்ள இலக்கியங்கள் கொடுத்துள்ளேன். மரைக்காட்டுக்கும் (வேதாரண்யம்), மரைக்கும் உள்ள
தொடர்பு அதிகம். 





திருமறைக்காட்டை மரைக்காடு என அழைக்கும் எந்த இலக்கியத்தையும் நீங்கள் கொடுக்கவில்லை. கொடுப்பதெல்லாம் 70 ஆண்டு ஆதாரமே. திருமறைக்காட்டின் வரலாறு 1300 ஆண்டுகள். அதற்கும் முந்தைய கல்வெட்டு, இலக்கியங்களில் திருமறைக்காட்டை மரைக்காடு என குறிக்கும் உதாரணம் எதுவும் கிடையாது. 


--

செல்வன்

N D Logasundaram

unread,
Aug 11, 2017, 3:50:58 AM8/11/17
to mintamil, தமிழ் மன்றம், vallamai, thamizayam, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, ara...@gmail.com, Banukumar Rajendran, muthum...@gmail.com, Seshadri Sridharan, SivaKumar, Raji M, ma...@mediatree.com.sg, thirumurai
நூ த லோ சு
மயிலை
அன்புநிறை திரு முனிசாமி MK நாதன் மற்றும் மடலாடர்களுக்கு 

மரை என ஓர் சொல் தமிழில் இருந்துள்ளமை அறிந்துதான் தமிழ் புலவர் பெருமக்கள் தான் பாடவந்த கருத்திற்கு ஏற்பஅப்போது மக்கள் வாய்வழி  நின்ற ஊராகும் மறைக்காட்டில் விளங்கும் இறை வனைப்பாடினர் [ மறை
 எனும் (வல்லின றகரம்) கிளவியினை பயன்படுத்தினர்] எனபதற்குச் சான்றாகத்தான் 4 பாடல்களைக் காட்டினேன் இவைதனில்மறை (வல்லின றகரம்) எனும் சொல் எதுகை நிலையில் நின்றுள்ளன மீண்டும் காண்க 

இங்கு நான் காட்டிய எதுகை நிலை எனறால் என்ன என  தமிழின் இயல்பொருள் விளங்கவில்லை போலும் 

குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
றைக்காட் டியெடுத் தான்றலை ஈரைந்தும்
றைக்காட் டானிறை ஊன்றலும் வாய்விட்டான்
றைக்காட் டாயெம் பிரானுனை ஏத்தவே                  5.9.10

றைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்
    வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்
றைக்காட்டுங் கண்டனார் காபா லியார்
    கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்
றைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப்
     பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்
மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்
     வீழி மிழலையே மேவி னாரே                               6.51.7

நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
றைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
றைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3

றையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
றையாகம் இன்றருளாய் என்னும்-இறையாய்
றைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
றைக்காட்டாய் என்னும்இம் மாது 40                        11.611

வாய் (ஒலி) செவி (கேள்வி) கை (எழுத்து) என ஏ ட்டுச்சுவடிகளின்  படிகள் மாறும்போது நேரும் பிழையாகலாம்  என்றலும் ஏலாது என்றபோதுதான் 

மக்கள் மாற்றி பயன் கொண்டு வருகின்றனர் அதற்கும் சில அறிஞர்களின் கருத்துதான் காரணம் என வைத்துள்ளது வெறும் பொய்யுரைகளே 
ஏனெனில் இதுவரை யார் எங்கே எப்படி விளக்கம் வைத்தார் எனும் ஆவணச் சான்று காட்டவில்லை 
இங்கு பாருங்கள் இந்நாளையர்  காட்டும் தலப்பெயரு ம் கூட  திருமறைக்காடு எனத்தான் உள்ளது 
அவ்வூரினைப்பற்றி பொதுமக்கள் அறிந்துள்ள நிலைதானே இது 

Inline image 2

வேறு இரு இந்நாளைய அந்த ஊர்மக்கள் திருமறைக்காடு எனத்தான் பயன்கொண்டு வருகின்றமையம் இணைப்பில் காண்க 

ஒன்று அவ்வூரில் உள்ள ஓர் கடையின் பெயர்ப்பலகை யே தான் அய்யன்மீர்  !!!

எனவே அந்த ஊர்மக்கள் திருமரைக்காடு  பயன்கொள் க்கின்றனர்  என எழுத்து மூலமாக பொய்புகட்டுவது மிகத்தவறான தண்டிக்கத்தக்க செயலே ஆகும் 













2017-08-11 9:29 GMT+05:30 MUNISAMY MK NATHAN <mknp...@gmail.com>:
#ங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்று எழுதினர்.#

தாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கும், பாவாணருக்கும் சார்பு தன்மை இல்லை என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்?

அவர் எக்காலத்தவர்? எந்த மனோ நிலையில் தமிழை மீட்டெடுக்க வாழ்ந்தவர்? அப்படி மீட்டெடுக்க வேண்டுமானால் 'வேதாரண்யம்' என்பது தப்பாகச் செய்யப் பட்ட மொழிபெயர்ப்பு என்பதற்கு மாற்று கருத்து ஒன்றை முன் வைக்க வேண்டுமானால் அதற்குரிய ஆதாரங்களைத் தேடும்பொழுது எப்படி சார்பற்ற நிலையில் நிற்க முடியும்?

இருவருமே 'மறை' என்பது வேதத்தைக் குறித்தது அல்ல என்று கூற வந்தவர். அவர் காலத்தில் 1940-ம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வேதத்தை மறுத்த எவருக்காது முதல் மரியாதை கொடுக்கப் பட்டதா? பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கு மக்களிடையே தனக்கிருந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை இருந்தது. அதனால் 'மறை' என்பது 'வேதம்' அல்ல என்று எவ்வகையில் சொன்னாலும் எதிர்ப்பு எழும் என்பது அவருக்குத் தெரியும். அதனை நேரிடையாக மறுக்காது மறைமுகமாக மறுக்க 'மரை' என்றொரு காரணம் அவருக்குத் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்தம் கருத்தை முன் வைத்தார்.

பாவாணரோ, தாம் பிறந்த பொழுது கொண்டு வந்தது யாதொன்றுமில்லை, இனி போகும் பொழுதும் கொண்டு செல்ல யாதொன்றுமில்லை என்று தன் சுயநலத்தையும், ஆசையையும், அச்சத்தையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்ந்து காட்டியவர். அதனால்தான் ஆரியத்தையும், வடமொழியை ஆதிக்கத்தையும் மறுத்து எழுதி வாழ்க்கையில் வறுமையின் உச்ச வரம்புக்கு உட்படுத்தப் பட்டார்.

இவ்விருவரும் கொண்ட நோக்கத்தில் தவறில்லை. அதனைச் சாதிக்கும் முறை வலுவிழந்து போனால் அப்பிழையைச் சரி செய்வது இக்காலத்தவர் கடமை. அதனால்தான் 'மறை' என்ற சொல் 'மறைத்தல்' என்ற பொருளில் வந்தது என்றும் அது அக்காட்டுக்கு காரணப் பெயராகியது என்பதை நிருவ முனைந்தேன். அதற்கு தேவாரத்தில் உள்ள தரவுகளை ஆதாரமாகக் கொண்டேன்.

அக்காலத்திலேயே அது 'மரைக்காடு' என்று காரணப்பெயர் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு ஆதாரத்தை விட்டு வைத்துச் சென்றிருக்க மாட்டார்களா?

அருளாளர் அத்தலைத்தை நேரிடையாகக் கண்டு கதைத்தவர். நாமோ காணததைக் கொண்டு கதைக்கின்றோம்.  அவர் கூற்று ஏற்குமா அல்லது நமது கூற்று ஏற்குமா? சிந்தியுங்கள். 

-

maraikkadu2.jpg
maraikkadu3.jpg

N. Ganesan

unread,
Aug 11, 2017, 9:34:56 AM8/11/17
to மின்தமிழ், vallamai

Hyena is called "kazuthaip puli" in Tamil. For anything infereior "kazuthai" is attached as a prefix.
It is like use of 'bastard sal trees' in English, where inferior varieties of sal trees are described.
The best saal tree is shorea robusta. These are all some of the 500+ species of shorea in USA, they call them Meranti wood while importing)
of India and South East Asia. Yaavakam (Java island, the first capital before Khmers take over as leaders of the area) derives
its name from Yaa (Aaccaa) trees.

kazuthaippuli > kazukaapulikadu, I believe. Often people who do not know Tamil well record place names. May be that is the reason.
kazutaippuli - "low" puli. Another example can be created: Turkey (vAnkOzi = periya kOzi) is "kazutaimayil" :)

"kaDuvAy" seems to be the older name for hyenas (MTL).

----------

Like Tirumaraikkadu, where antelopes worship 'Siva, let me give another famous -kaadu. This is where ISRO launches its rockets.
புலிக்காடு - திருமரைக்காடு போல.
"ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சார்ந்த புலிக்காடு நகரம் இத்தீவிலுள்ளது. அருகிலுள்ள நகரான சூலூர் பேட்டை 20 கிமீ தொலைவிலுள்ளது. இங்கு தொடர் வண்டி நிலையம் உள்ளது. சூலூர் பேட்டை சென்னையுடன் தேசிய நெடுஞ்சாலை 5 ஆல் இணைக்கப்பட்டுள்ளது."

Just like Maraikkadu 'antelope forest' town, Pulikkadu is the seashore town near Madras. Maraikkadu is Tirumaraikkadu due to antelopes worshiping Siva there, and the only tempels (all Tevaram sites) where antelopes worship god Shiva are in and around திருமரைக்காடு. There is a nice poem in Tevaram where these antelopes are told to be in the hands of Siva, just like later poems. The two stalapuranas on Vedaranya will yield more poems of antelopes worshipping Siva.

NG

On Fri, Aug 11, 2017 at 5:33 AM, Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:

I find mention of எருமைக்காடு

in Dinamalar

இங்கு, 10 கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதியுள்ளது. தோல்தூக்கி, கலசப்பாடி, தேத்தப்பட்டி, கருத்தம்பட்டி, குண்டல்மடுவு, சாலம்பள்ளி, எருமைக்காடு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மண் சாலைகளும், மலைப்பாதை கரடு, முரடான பாதைகளையும் கொண்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1284369

-- Jean-Luc (in Hamburg)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



+++++++++++++++++++++++++++

I also find a
கழுகாபுலிக்காடு
10.411899, 79.282347

https://www.google.de/maps/@10.411899,79.282347,15z

I wonder whether that splits as
கழுகு + ஆ + புலி

#######################

Dear இராம.கி.


what about
Ettupulikkadu?
Tamil Nadu, India
10.480239, 79.321542

https://www.google.de/maps/@10.480239,79.321542,15.5z

(taken from the list of villages with names containing "kadu"
which I sent yesterday)

அன்புடன்

-- Jean-Luc (in Hamburg)


https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


On 11/08/2017 13:09, Lakshmanan Krishnan wrote:
மரைக்காடு என்று கொண்டாலும் அது வேற்றுமைத்தொகை ஆகிறது. மரைகளின் காடு எனில் வேறு விலங்குகளின் காடு தமிழகத்தில் உள்ளதா? விலங்குக்காடு என?
இராம. கி
Sent from my iPhone
Dear Suba,

there cannot be any  conclusion
;-)

On the one hand,
there is the invisible (but immense) power of desires
such as the ones voiced in this page:

http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis059.htm

On the other hand,
there is the (written) linguistic reality of today,
such as evidenced by the images contained in this post

https://groups.google.com/d/msg/tamilmanram/nu4rKP7dAig/bRS988v5AwAJ

I have partly read those posts because they are an interesting example
of the passion surrounding "Shibboleth-s" (שִׁבֹּלֶת‎),
https://en.wikipedia.org/wiki/Shibboleth#Origin
although this one is partly a purely orthographic Shibboleth
especially when in many dialects
the distinction between வல்லின "ற"
and இடையின "ர"
is lost ...

அன்புடன்

-- ழான் (Jean-Luc)

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956



On 11/08/2017 09:35, Suba wrote:
இந்த ஆய்வில் நாம் இப்போது எங்கே இருக்கின்றோம்?🤔 
திருமறைக்காடா ? திருமரைக்காடா..?

N. Ganesan

unread,
Aug 11, 2017, 9:46:13 AM8/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

>I also find a 
>கழுகாபுலிக்காடு
10.411899, 79.282347

https://www.google.de/maps/@10.411899,79.282347,15z

>I wonder whether that splits as
>கழுகு + ஆ + புலி

#######################

I don't think so. It could be a spelling mistake for kazutApulikkadi.
புளியாமரைக்காடு, ஆலாமரத்தூர், காளியாபுரம், .....
கழுதாப்புலிக்காடு. 

N. Ganesan

unread,
Aug 11, 2017, 10:06:19 AM8/11/17
to மின்தமிழ், vallamai


On Friday, August 11, 2017 at 5:33:12 AM UTC-7, Jean-Luc Chevillard (ழான்) wrote:

I find mention of எருமைக்காடு

in Dinamalar

இங்கு, 10 கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதியுள்ளது. தோல்தூக்கி, கலசப்பாடி, தேத்தப்பட்டி, கருத்தம்பட்டி, குண்டல்மடுவு, சாலம்பள்ளி, எருமைக்காடு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மண் சாலைகளும், மலைப்பாதை கரடு, முரடான பாதைகளையும் கொண்டது.


For all kinds of fauna and flora, one can find place names ending in uur, kaaDu, patti, kuDi, paRRu(=paththu) etc., etc., All over Panchd Dravida lands starting from Sindh-Gujarat and southwards.

இக்கும்பாபிசேகத்தை பிரம்ம ஸ்ரீ புதுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார், பிரம்ம ஸ்ரீ புதுப்பட்டி ஹரிகர சிவாச்சாரியார், ஆக்காடு ஸ்ரீ பெரி.ராஜேந்திர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் நடத் வைக்கப்பட்டது. [...]  பாலக்குறிச்சி, கைக்குறிச்சி, செனையக்குடி, குளத்துப்பட்டி, நெடுவயல், ஆக்காடு, கருங்காலக்குடி, மற்றும் சஸ்த்தான் கோவில் மெய்ய வேளார் பங்காளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என ஏராளமான பக்தகோடி பெருமக்களும் கலந்துகொண்டு மதியம் அன்னதானத்திலும் கலந்துகொண்டு வழிபட்டனர்.”

In inscriptions,
ஆக்காட்டரையன், ஆக்காட்டியன்.
அழிசிசோழன், ஆக்காடு என்னும் நகரத்தை உருவாக்கி இராசதானியாகக் கொண்டவன்.இவன் பெயர் ஆக்காட்டுராயன், ஆக்காட்டரையன், ஆக்காடுகொண்டான், ஆக்காடாண்டான், ஆக்காடுடையான், ஆக்காட்டுப்பிரியன், ஆக்காடாளி என்வும் வழங்கலாயிற்று. சிறந்த வீரமும் கொடையுமுடையவன். நக்கண்ணையார் முதலிய புலவர்களால் புகழ்ந்து பாடப்பெற்றவன். இப்பாடல்கள் நற்றிணையில் 87,169ம் பாடல்களாக உள்ளன. ஆக்கூர் என்னும் தேவார சிவ தலத்தையும்,ஆக்குடி என்னும் ஊரையும் உருவாக்கி அரசாண்டான்.இவன் மரபோர் ஆக்காட்டரையன், ஆக்காட்டியன். என்னும் பட்டங்களை பெற்றனர்.

ஆக்காடு (= Forest of Cows)  just like மரைக்காடு  (Forest of Antelopes).

NG

Oru Arizonan

unread,
Aug 11, 2017, 12:38:43 PM8/11/17
to vallamai, மின்தமிழ்
இந்த இழை statemateஆகி நிற்கிறது.

எவ்வளவுதான் திருமறைக்காடு என்று எழுதினாலும், மதிப்புக்குரிய கணேசனார் அசரப்போவதில்லை.  கூகிளில் அவர் "மரைக்காடு" என்று எழுதிய பதிவுகள் நிறைய வந்தால், அதுவே ஒரு குறிக்கோளை எட்டியதாகக் கருதுவார்.

இன்னொருவர் எரியும் அந்த நெருப்பில் குளிர்காய முற்படுகிறார்.

மற்றொருவர், அந்நெருப்பு அணையமுற்படும்போது, அவ்வப்பொழுது எரிபொருளை அள்ளிவீசுகிறார்.

வேறொருவர், சந்தடிசாக்கில் தனது கருத்தேசரி என வ்ற்புறுத்த முற்படுகிறார்.

நீங்கள் அனைவரும் அந்த மாயவலையில் சிக்கி, எழுப்பப்பட்ட சிறிய பொறியைப் பெருநெருப்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.  அந்த அபாயகரமான நெருப்பை அணைக்கவேண்டுமெனில் அத்ற்கு எரிபொருள் கொடுக்காமலிருப்பதே!

அதற்குமேல் திரும்பத்திரும்ப எழுதி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

இது என் தனிப்பட்ட கருத்தே!  உங்கள் நேரத்தின் மதிப்பு எவ்வளவு உயர்த்தது, அதை எப்படிச் செலவிடவேண்டும் என்று நான் அறிவுரை கூறத் தேவையில்லை.

ஓரு அரிசோனன்

Virus-free. www.avast.com

N. Ganesan

unread,
Aug 11, 2017, 3:12:08 PM8/11/17
to மின்தமிழ், vallamai
On 11/08/2017 16:34, nkantan r wrote:
விலங்கு (Anaikkadu
There is also Aanaikkadu in Salem district, referring to elephants,

Also, umpalkADu of patiRRuppattu where the town is called Anaimalai.
More on Analaimalai (umpalkadu of Sangam era):
https://en.wikipedia.org/wiki/Anaimalai_Hills

NG

On Friday, August 11, 2017 at 7:40:57 AM UTC-7, Jean-Luc Chevillard (ழான்) wrote:
Anaikkadu is in fact
அணைக்காடு

It is not a விலங்கு ...

See
https://ta.wikipedia.org/s/4x1x

(அணைக்காடு ஊராட்சி)

-- Jean-Luc (ழான்)


https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


On 11/08/2017 16:34, nkantan r wrote:
விலங்கு (Anaikkadu


N. Ganesan

unread,
Aug 11, 2017, 3:17:33 PM8/11/17
to மின்தமிழ், vallamai


On Friday, August 11, 2017 at 11:10:37 AM UTC-7, செல்வன் wrote:


2017-08-11 11:55 GMT-05:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
////உலகில் எந்த நாட்டிலும் ஊர்களுக்கு 7ம் நூற்றாண்டில் வைத்த பெயரை மாற்றும் வழக்கம் இல்லை. ////
//மயிலாடுதுறை மாயவரம் ஆனது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. மொழியும் அங்கே மாறியது.//

நன்றி. வணக்கம்!!  __/\__
இரண்டாவது கூற்றுதான் இன்றைய நிலை!! பாராட்டுகள்!!


நல்ல வேடிக்கை

மயிலாடுதுறையின் பெயர் எப்போதுமே மயிலாடுதுறைதான்.

மாயவரம் என்பது அதன் சமஸ்கிருத பெயர். ஜெர்மனியை பிரெஞ்சு மொழியில் Allemagne  என அழைப்பதுபோல.

ஜெர்மானிய அரசு அபிசியலாக "எங்கள் குடியரசின் பெயர் ஜெர்மனி" என அறிவிப்பதுபோல் தான் மயிலாடுதுறையை மயிலாடுதுறை என அறிவித்ததும். அது பெயர் மாற்றமே கிடையாது. இன்றைக்கும் பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியை Allemagne எனத்தான் அழைத்துவருகிரார்கள். அவர்கள் மொழியில் அப்படி கலோக்கியலாக அழைப்பது அவரள் விருப்பம். ஆனால் அபிசியலாக ஜெர்மனியின் பெயர் ஜெர்மனிதான். அதுபோல் மயிலாடுதுறை என்றும் மயிலாடுதுறைதான். திருமறைக்காடு என்றும் திருமறைக்காடுதான்


பழைய தமிழ்ப் பெயராகிய திருமரைக்காடு என்று எழுத்வோரும் உள்ளனர். மரை:மறை ர்/ற் வேறுபாடு உள்ள சொல். மரைக்காடு என்பது தூய செந்தமிழ். எனவே, அப்பெயர் பயன்படுகிறது.

இறாமசாமி என்று எழுதுவது உண்டு. ஆனால் இராமசாமி என்பது சரியான பெயர். அதுபோல் திருமரைக்காடு செந்தமிழ்ப் பெயர்.

நா. கணேசன்

 

 

செல்வன்

unread,
Aug 11, 2017, 3:32:27 PM8/11/17
to vallamai, மின்தமிழ்
2017-08-11 14:17 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

பழைய தமிழ்ப் பெயராகிய திருமரைக்காடு என்று எழுத்வோரும் உள்ளனர். மரை:மறை ர்/ற் வேறுபாடு உள்ள சொல். மரைக்காடு என்பது தூய செந்தமிழ். எனவே, அப்பெயர் பயன்படுகிறது.

இறாமசாமி என்று எழுதுவது உண்டு. ஆனால் இராமசாமி என்பது சரியான பெயர். அதுபோல் திருமரைக்காடு செந்தமிழ்ப் பெயர்.

நா. கணேசன்




தற்போது திருமரைக்காடு என எழுதுவோர் உள்ளனர், மரைக்காடு என்பது தமிழ் பெயர் எல்லாம் சரிதான். ஆனால் இது எப்படி திருமறைக்காட்டின் பழைய பெயர் திருமரைக்காடு என்பதற்கான ஆதாரம் ஆகும்?

1300 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊர் அப்படி அழைக்கபட்டதற்கான கல்வெட்டு, இலக்கிய ஆதாரம் எங்கே?


N. Ganesan

unread,
Aug 11, 2017, 8:23:20 PM8/11/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
இலக்கிய ஆதாரம் சங்க இலக்கியம். திருமரைக்காடு தல வரலாறுகள்.
 

N. Ganesan

unread,
Aug 12, 2017, 12:10:11 AM8/12/17
to மின்தமிழ், vallamai


On Friday, August 11, 2017 at 7:34:50 AM UTC-7, nkantan r wrote:
ஆய்வா?  அப்படி என்றால் சரி!

1) ழான் அனுப்பிய "காடு" பட்டியலில் காடு தாவரம் (Nanalkadu, Vellarikkadu, Mullakadu), மரம் (Veppankkadu), விலங்கு (Anaikkadu, இடச்சிறப்பு (Teppakkadu), ஆள் (Kattayankadu), இப்படி அமைகிறது...

Yes. There are many Aanaikkadu in South India. refering to elephants. My own taluk has "umpalkaaDu" referred to in PatiRRuppattu, one of the two PuRam genre books of Sangam.
umpar = high, umpal = elephant.
 
2) ஒரு இடம் மட்டும் மறை தொடர்புள்ளது (Ariyamaraikadu) இது தமிழில் அறியாமறையா, அறியாமரையா, அரியாமரையா  நாம் அறியோம்.

அரியமரை = rare antelope. Must be a place of Chinkara-s or Four Horn-s, both were rare. Now completely wiped out of south India. Both are gone.
 
3) காடு வேதம் தொடர்பானது என்பது சிறிது (அறிவிற்கு) நெருடலானதே.

சம்பந்தர் சொல்லும் புராணம் அஃது. நான்கு (சதுர -  Indo-Aryan) வேதங்களே மரைக்காட்டுக்கு வந்து வணங்கினவாம் ஈசனை.
சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும் .... சம். தேவாரம்.

It is far easier to explain the name of the area by r/R alternation. Both மரை/மறை refer to antelopes in Tamil. I gave the entry from Tamil Lexicon.
 
4) மறைக்காடு எனும் சொல்லில் மறை என்பது (வடவர்) வேதம் எனச் சாதிப்பவர் காட்டும் ஆதாரம் சைவ பக்தி பாடல்கள்;  (மானுக்கு திரு ஏன், எதுகை மறைக்கு பொருந்துகிறது என்பதல்லாம் கூடுதலான விவரம்!, தேவையற்றது,  குழுமத்திற்கு ஏற்புடைய எழுத்தும் அல்ல).

Not just in திருமரைக்காடு, temples around this 'antelope-forest' temple have மரை antelopes worshipping god, Shiva. Tevaram itself has a nice poem that speaks of the antelope - Shiva connection.
The kRSNa-mRga intimately connected with Vedas is mentioned as "sundaramaan" (beautiful antelope() which these marai-s are.

Tevaram authors used the right moment when Sangam literature gets forgotten, and the Sangam words lose their significance. If you read Tevaram poems, the distinction between antelope vs. deer (with antlers) gets lost.
Sambandhar & Appar use their times as the right moment and seize the opportunity to generate fictional mythology that 4 Vedas came to Tirumaraikkadu. They play on the double meanings of maRai = (1) Veda (2) door closing
to write myths on the toponym. 


5) மரைக்காடு எனச்சொல்பவர் நா, கணேசன்; ஒரு சிலர் (எமை போன்றவர் ) அப்படியும் இருக்கலாம் என எண்ணம் கொண்டவர்.  இதை இப்படித்தான் என நிறுவ வேண்டிய தரவு ஏதும் இல்லை.(தரவில்லாத ஒரு கருத்தாக இதை முதலில் சொன்னவர் தேவ நேயப் பாவாணர் எனது தெரிகிறது;) ஆரிய எதிர்ப்பு எனும் உணர்ச்சிப்பாங்கில் பலர் இதுவே சரி எனக்கொண்டுள்ளனர்.

தேவநேயப் பாவாணர் அல்லர் திருமரைக்காடு என்று முதலில் சொன்னவர். துடிசைக்கிழார் பழுத்த சைவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சைவ பக்தியிற் சிறந்தது.
சைவ சிந்தாந்த நூற். கழகம் வெளியிட்ட நூலில் உள்ள செய்தி. சைவர்களே பயன்படுத்த ஆரம்பித்ததை பாவாணர் எழுதியுள்ளார்.
 
6) சொல்லப்போனால் மறைக்காடு 7-ம் நூற்றாண்டில் தான் பாடப்பட்டதாகத்  தெரிகிறது. அதுவும் பக்தி இலக்கியங்களில். அதற்கு முன்னர் இப்பெயர் வந்ததாக தெரியவில்லை 

மரை காடு - இவை அடிப்படையான தமிழ்ச் சொற்கள். இரண்டையும் தேவாரத்திற்குப் பல நூற்றாண்டு முன்னரே காணலாகும். அந்த இலக்கியத் தரவுகள் தாம்
இறாமசாமி தவறி, இராமசாமி சரி என விளக்குவதுபோல், மறைக்காடு தவறு, மரைக்காடு சரி என தமிழறிஞர்கள் காட்ட உதவுகின்றன.
 
7) தமிழில் பயண இலக்கியங்களோ, இட வரைபடங்களோ,  விலங்கு பற்றிய தொன்மை நூல்கள் இல்லாததாலும் இது இப்படித்தான் என அறுதியிட்டு கூற முடியாது.


There are lots of info about flora and fauna in ancient texts of India in both classical languages. Tamil Sangam literature is the source to clearly tell that திருமரைக்காடு is the original name,
and r/R alternation was used to create myths.
 
rnk
( a different take; may be it was called vedaaranyam originally by people who settled around there from north? and sambandhar in a spirit of "tamilizing" vedaaranyam has called it as maraikkadu?  just another thought!)


Tamil place names do not have Sanskrit in them originally. These coastal, dry forests have antelopes for millions of years. So, Tamils named using Tamil their forest as மரைக்காடு.
In Post-Sangam period of 7th century, மரைக்காடு gets translated as Vedaranya.

Pl. see the situation in paleolithic times in a similar site near Madras:
"Paleo-environmental and paleo-botanical studies have also shed light on the climate during this period. At Attirampakkam, at the depth of 3.6 m below the surface, archaeologists found large boulders and tools made of flakes, as well as animal foot prints. Along with these, three specimens of fossilized animal teeth were discovered at the site. Archaeologists identified them as the fossils of the water buffalo, the wild ass/horse (Equus) and the Nilgai, all of which suggest that this area was an open wetland during the time of the settlers who lived here 1.5 million years ago in the Acheulian period (the early old stone age or Palaeolithic period )."

Fossils from antelopes (Maraiyaa of Sangam) are found.

N. Ganesan

 

On Friday, August 11, 2017 at 1:05:33 PM UTC+5:30, Dr.K.Subashini wrote:
இந்த ஆய்வில் நாம் இப்போது எங்கே இருக்கின்றோம்?🤔 
திருமறைக்காடா ? திருமரைக்காடா..?

N. Ganesan

unread,
Aug 12, 2017, 12:15:19 AM8/12/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

திருமந்திரமணி என்பது துடிசைக்கிழார் அவர்களின் புகழ்பெற்ற பட்டம்.



On Friday, August 11, 2017 at 7:34:50 AM UTC-7, nkantan r wrote:
ஆய்வா?  அப்படி என்றால் சரி!

1) ழான் அனுப்பிய "காடு" பட்டியலில் காடு தாவரம் (Nanalkadu, Vellarikkadu, Mullakadu), மரம் (Veppankkadu), விலங்கு (Anaikkadu, இடச்சிறப்பு (Teppakkadu), ஆள் (Kattayankadu), இப்படி அமைகிறது...

Yes. There are many Aanaikkadu in South India. refering to elephants. My own taluk has "umpalkaaDu" referred to in PatiRRuppattu, one of the two PuRam genre books of Sangam.
umpar = high, umpal = elephant.
 
2) ஒரு இடம் மட்டும் மறை தொடர்புள்ளது (Ariyamaraikadu) இது தமிழில் அறியாமறையா, அறியாமரையா, அரியாமரையா  நாம் அறியோம்.

அரியமரை = rare antelope. Must be a place of Chinkara-s or Four Horn-s, both were rare. Now completely wiped out of south India. Both are gone.
 
3) காடு வேதம் தொடர்பானது என்பது சிறிது (அறிவிற்கு) நெருடலானதே.

சம்பந்தர் சொல்லும் புராணம் அஃது. நான்கு (சதுர -  Indo-Aryan) வேதங்களே மரைக்காட்டுக்கு வந்து வணங்கினவாம் ஈசனை.
சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும் .... சம். தேவாரம்.

It is far easier to explain the name of the area by r/R alternation. Both மரை/மறை refer to antelopes in Tamil. I gave the entry from Tamil Lexicon.
 
4) மறைக்காடு எனும் சொல்லில் மறை என்பது (வடவர்) வேதம் எனச் சாதிப்பவர் காட்டும் ஆதாரம் சைவ பக்தி பாடல்கள்;  (மானுக்கு திரு ஏன், எதுகை மறைக்கு பொருந்துகிறது என்பதல்லாம் கூடுதலான விவரம்!, தேவையற்றது,  குழுமத்திற்கு ஏற்புடைய எழுத்தும் அல்ல).

Not just in திருமரைக்காடு, temples around this 'antelope-forest' temple have மரை antelopes worshipping god, Shiva. Tevaram itself has a nice poem that speaks of the antelope - Shiva connection.
The kRSNa-mRga intimately connected with Vedas is mentioned as "sundaramaan" (beautiful antelope() which these marai-s are.

Tevaram authors used the right moment when Sangam literature gets forgotten, and the Sangam words lose their significance. If you read Tevaram poems, the distinction between antelope vs. deer (with antlers) gets lost.
Sambandhar & Appar use their times as the right moment and seize the opportunity to generate fictional mythology that 4 Vedas came to Tirumaraikkadu. They play on the double meanings of maRai = (1) Veda (2) door closing
to write myths on the toponym. 


5) மரைக்காடு எனச்சொல்பவர் நா, கணேசன்; ஒரு சிலர் (எமை போன்றவர் ) அப்படியும் இருக்கலாம் என எண்ணம் கொண்டவர்.  இதை இப்படித்தான் என நிறுவ வேண்டிய தரவு ஏதும் இல்லை.(தரவில்லாத ஒரு கருத்தாக இதை முதலில் சொன்னவர் தேவ நேயப் பாவாணர் எனது தெரிகிறது;) ஆரிய எதிர்ப்பு எனும் உணர்ச்சிப்பாங்கில் பலர் இதுவே சரி எனக்கொண்டுள்ளனர்.

தேவநேயப் பாவாணர் அல்லர் திருமரைக்காடு என்று முதலில் சொன்னவர். துடிசைக்கிழார் பழுத்த சைவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சைவ பக்தியிற் சிறந்தது.
சைவ சிந்தாந்த நூற். கழகம் வெளியிட்ட நூலில் உள்ள செய்தி. சைவர்களே பயன்படுத்த ஆரம்பித்ததை பாவாணர் எழுதியுள்ளார்.

திருமந்திரமணி என்பது துடிசைக்கிழார் அவர்களின் புகழ்பெற்ற பட்டம்.

N. Ganesan

unread,
Aug 12, 2017, 1:33:15 PM8/12/17
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Saturday, August 12, 2017 at 8:55:45 AM UTC-7, MUNISAMY MK NATHAN wrote:


தூய தமிழ் சொல்லைப் புதுமைப் படுத்துகின்றோம் என்று தமிழர் பெருவாரியாகப் பின்பற்றி வரும் சமயத்தை நீக்கி விட்டு திருமறைக்காடு என்ற தலத்திற்கு புதுமைக்  காண முற்பட்டால் அது அறியாமையின் இலக்கணமாகி விடும். சிவசிவ.



மரை:மறை என்று ர்/ற் மாறுபாடு தமிழில்  உள்ளது .இராமசாமி:இறாமசாமி என்பது போல.  மரைகள் துதிக்கும் ஈசன் மரைக்காட்டில் இருப்பவன் என்பது தலவரலாறு. தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாமல் மரைக்காட்டு தலங்களுக்கே உள்ள சிறப்பு அது.

வேதங்கள் துதிக்கும் வேதாரண்யம் என்னும் புராணம். வேதங்களை சமய ரீதியாக இல்லாமல், மொழியியல், வரலாறு, தொல்லியல் ரீதியாகப் பார்க்கும் முறை பல்கலைக்கழகங்களின் முறை.
அவ்வழியில் ஆராய்ந்து தான் மறைக்காடு என்பதன் பழந்தமிழ்ப் பெயர் மரைக்காடு என அறிஞர்கள் நிறுவினர். சமயத்தை நீக்க யாரும் சொல்லவில்லை.

பழைய ஊரின் பழைய பெயர் என்ன என்று பார்த்தால் மறைக்காடு என்பது மரைக்காடு. வேதங்கள் ஹிந்து சமயத்திற்கு அடிப்படை. அதை எல்லாரும் அறிவோம். அதனை ஆராய்ச்சி செய்துதான் இந்தோ-ஈரானிய குடும்பம் அமைந்தது. அதேபோல எல்லீஸ், கால்ட்வெல் திராவிடக்குடும்பம் அமைத்தனர். சங்க இலக்கிய வழி ஆரய்ந்துதான் மரைக்காடு என்ற பெயர் தெரிந்துள்ளது.

நா. கணேசன்

செல்வன்

unread,
Aug 12, 2017, 2:33:32 PM8/12/17
to vall...@googlegroups.com, மின்தமிழ்


ஏம்பா தம்பி, அந்த பொண்னு கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

பொண்ணு கைய பிடிச்சு இழுத்தியா பா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா பா?

ஏன் தம்பி.. பொண்ணு  கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

ஏற்கனவே  வள்ளுவர் சமணர்னு சொல்லி அவனுங்க கலாய்ச்சுபுட்டானுங்க.

என்ன கலாய்ச்சுபுட்டானுங்க?

ஏன்யா.. நான் சரியா பேசுறனா?

சரியாத்தான் இருக்கு.

இப்ப நீ கைய பிடிச்சு இழுத்ததுனால புதுசா யோசிச்சு கலாய்ப்பானுங்க.

என்ன கலாய்ப்பானுங்க?

ஏன்யா நான் சரியா பேசுறனா?

ரொம்ப கரெக்ட்!

டூர விட்டுறு..

என்ன டூர விட்டுறு?

 கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

என்னயா நினைச்சுட்டு இருக்காரு இவர்?

அவரு பயங்கராமான சுத்தவிடுவாரு. வேறெங்கேயும் பறக்குறதுக்கு முன்னாடி கேப் விடாம பேசுங்க.

என்ன கேப் இல்லாம பேசுங்க?

நான் பேசுறது உனக்கு புரியுதாயா? புரியுதாயா.. உனக்கு புரியுதாயா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

இரு டா தண்ணி…

என்ன இரு டா…..

கைய பிடிச்சு இழுத்தியா டா?

டேய் உன்னால நான் அடி வாங்குறேன் டா..

எதையாவது புடிச்சு இழுத்தியா டா… ஏன்யா உயிர வாங்குற..

கைய பிடிச்சு இழுத்தியா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா?

கைய பிடிச்சு இழுத்தியா டா?

என்ன கைய பிடிச்சு இழுத்தியா டா?

ஐயா உக்காந்து பேசலாம் யா..

இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண கூப்பிடாதீங்க.. ..

என்ன மாதிரி ஆளு?

ஐயா… கோவப்படாதீங்க!

என்ன கோவப்படாதீங்க?

பொறுமையா இருங்க!

என்ன பொறுமையா இருங்க?

வீட்டுக்குப் போங்க!

என்ன வீட்டுக்குப் போங்க?

ஐயா நீங்களே இப்படி..

என்ன நீங்களே?

ஐயா!!

என்ன ஐயா?

ஐயா!!!

என்ன ஐய்யயா??

ஐயோ.. தலையே குழம்பிட்டாரே!!

ஏம்பா.. நோக்கு சந்தோஷம் தானே.. நல்லாயிருந்த மனுஷன இப்படி பண்ணிட்டியே?

என்ன இப்படி பண்ணிட்டியே?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப பேசுற நீ?

திரும்ப திரும்ப பேசுற நீ!

என்ன திரும்ப திரும்ப..

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

திரும்ப திரும்ப பேசுற நீ!

ஏம்பா.. தலைவர் தப்பிச்சுட்டாரு… ஐயர் போயே போய்ட்டாரே!!

என்ன போயே போய்ட்டாரே?

ஐயோ ஆள விடு!!





--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 12, 2017, 2:46:33 PM8/12/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, Karanthai Jayakumar, மு இளங்கோவன்
கவிஞர்கோ கோவை இளஞ்சேரனார் பற்றிய வாழ்க்கைக்குறிப்பு இணையத்தில் அதிகமாக இல்லை. கரந்தை ஜெயக்குமாரும், பேரா. மு. இளங்கோவனும் கோவை இளஞ்சேரன் வரலாற்றினை அறிந்து சில பக்கங்களாவது எழுத வேண்டுகிறேன். மு. இளங்கோ அவர்களுக்கு நான் நன்கு அறிந்த பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் தமிழிசைப் பணியை, ஆய்வை அறிமுகம் செய்தவர்களில் பேரா. இளஞ்சேரனார் முக்கியமானவர்: https://muelangovan.wordpress.com/2014/05/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0/
“நாகைத் தமிழ்ச்சங்கத்தில் சுந்தரேசனார் சிலப்பதிகார உரை நிகழ்த்தியபொழுது அவரிடம் பாடம் கேட்ட ஆ. பிழைபொறுத்தான் வழியாகச் சுந்தரேசனாரின் இசைப்புலமை எனக்கு அறிமுகமாகத் தொடங்கியது. அந்த நாகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கவிஞர்கோ கோவை இளஞ்சேரன் ஐயா அவர்களை அவர்களின் தஞ்சை இல்லத்தில் சென்று கண்டேன்(1992). குடந்தை சுந்தரேசனாரின் ஒலிவட்டுகள் இருக்கும் என்று நினைத்துச் சென்றேன். ஏமாற்றமே கிடைத்தது. ஆனால் கோவை இளஞ்சேரனார் சிலம்பின்மேல் மேலும் ஆர்வம் உண்டாகும்படி உரையாடினார்.” (இடைக்கட்டு முனைவர் மு. இளங்கோவன். பின்வந்த ஆண்டுகளில் பண்ணாராய்ச்சி வித்தகர், சுவாமி விபுலானந்தர் பற்றிய செய்திகளை ஆழமாக ஆராய்ந்து குறும்படங்கள் எடுத்து அவ்வறிஞர்களின் நினைவை மேலோங்கச் செய்பவர்.)

கோவை இளஞ்சேரன் (பதிப்பாசிரியர்), சூடாமணி நிகண்டு, தஞ்சை சரசுவதிமகால் நூல்நிலைய வெளியீடு,

திருமரைக்காடு என்று வேதாரண்யத்தின் பழந்தமிழ்ப் பெயரை தம் நூல்களில் பயன்படுத்தும் தமிழறிஞர்களில் ஒருவர் இளஞ்சேரனார். அவரைப் பற்றி விரிவாக இணையத்தில் செய்திகள் வேண்டும். தமிழ்ப்பல்கலையில் இருந்தார். துணைவேந்தர் வ. ஐ. சு. காலங்களில். பின்னர் பாரதிதாசன் பல்கலை. ஆத்திசூடி அகல உரைகாரர் கோ. வைத்தியலிங்கனார் - மீனாட்சி கோவை இளஞ்சேரனாரின் பெற்றோர். கவிஞர்கோ பிறந்த நாள்: 4-1-1923. ‘இலந்தை முதல் இன்றுவரை’ என்ற நூலை எழுதியுள்ளார். அது தன்வரலாறாகவும், தன்னூர் இலந்தை பற்றியும் பேசும். வை. கணபதி ஸ்தபதி சிலம்புக் காட்சிகளைப் பூம்புகாரில் வடிவமைத்த போது இலக்கியநெறி காட்டி. நாகையில் மறைமலை அடிகளுக்கு முழு வெண்கலச் சிலை நிறுவ உழைத்தவர். நாகப்பட்டினத்தில் இளஞ்சேரன் நகர் இன்றும் உள்ளது. கோ. வை. இளஞ்சேரனார் – நாகை CSI உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். நல்லாசிரியர் விருது பெற்றார். https://sathyanandhan.com/2013/03/04/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2013-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/ (திருவாரூர் சண்முகவேலு கவிஞர் பற்றி எழுதிய கட்டுரை பிடிக்கவேண்டும்). கவிஞர்கோ இளஞ்சேரனார் நூல்கள்:
இதில் “இலந்தை முதல் இன்றுவரை” என்னும் வாழ்க்கைவரலாற்று நூலைக் காணோம். இணைக்கச் சொல்லி இணையப் பல்கலை அதிகாரிகளுக்கு எழுதணும். புகழ்மிக்க சைவக்குடும்பம். அண்ணன் கோ. வை. குஞ்சிதபாதம். கோ.வை. இளஞ்சேரனின் பெற்றோர் வைத்த பெயர் மெய்கண்டசிவம். இளஞ்சேரன் என்ற பெயர் வைத்தவர், தலைவர் ஜீவா அவர்கள். கல்லல் என்ற ஊரில் பிறந்தவர் கோ. வை. இளஞ்சேரன். திருவையாறு அரசர் கல்லூரியில் வித்துவான் பட்டம். புதுக்கோட்டை, நாகைப் பள்ளிகளில் முதலில் பணி.

திருமரைக்காடு என விளக்கிய தமிழறிஞருக்கு நன்றிமிகுந்த வணக்கங்கள் பல.

வ. சுப. மாணிக்கனார் முன்னுரையுடன் வெளிவந்த நூல் ‘இலக்கியம் ஒரு பூக்காடு”. அதில் தன் தந்தைக்குச் சமர்ப்பித்துள்ளார்:
கஸ்தூரிபா காந்தி குருகுலம் வேதாரண்யத்தில் புகழ்பெற்ற நிறுவனம். குருகுல அச்சகம், திருமரைக்காடு என்று கோவை இளஞ்சேரனார் அச்சிட்டுள்ளார்கள்.

வளர்க தமிழ் ஆராய்ச்சிகள்! வாழ்க!

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 12, 2017, 2:48:10 PM8/12/17
to வல்லமை, mint...@googlegroups.com
மரைக்காடு என்பதும் தொன்மையான பெயர்தான்.

நா. கணேசன் 


--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 12, 2017, 4:06:48 PM8/12/17
to மின்தமிழ், vallamai


2017-08-12 12:40 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:


2017-08-12 14:13 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
செல்வன் இது திரு. கணேசனின் இழை, அவர் இழையில் அவர் கருத்தை எழுத அவருக்கு உரிமையில்லையா?

கருத்திருந்தால் பகிருங்கள், இடையூறு எதற்கு?



திரு. செல்வன் போன்றோர் தமிழ் ஆராய்ச்சிகளை வளர்த்தெடுக்கும் தமிழறிஞர்கள் ஆழ்ந்து அறிந்து
தெளிவிக்கும் முடிபுகளைப் பகிர்ந்து கொள்ள விடுவரோ என்பது கேள்வி.

மரை:மறை ர்/ற் மாற்றத்தால் மரைக்காடு என மறைக்காடு என ஆகி,
புராணக் கற்பிதங்கள் Mythology 7-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டுவிட்டன.
அதற்காக, மில்லியம் ஆண்டுகளாய் மரைகள் வாழ் காட்டின் பெயரின் பழம்பெயரை
விட்டுவிட வேண்டுமா தமிழர்களும், தமிழறிஞர்களும்?

நா. கணேசன்
 
உரிமையில்லை, எழுதகூடாது என எல்லாம் எங்கே எப்போ சொன்னேன் தேமொழி? :-)

செல்வன்

unread,
Aug 12, 2017, 4:18:55 PM8/12/17
to vallamai, மின்தமிழ்
அதாவது எந்த தமிழ் இலக்கியம் அல்லது கல்வெட்டில் மரைக்காடு என உள்ளது என்ற கேள்வி இழையில் 100 முறை கேட்கபட்டும் பதிலே சொல்லபடாமல்

சங்க இலக்கியத்தில் உள்ளது, தொல்காப்பியத்தில் உள்ளது, அறிஞர்கள் சொன்னார்கள், புலவர்கள் சொன்னார்க்ள் என்றே மொட்டையாக பதில் சொல்லிவருகிறீர்களே? உங்கள் இழையில் கேள்விகளை கேட்டு எல்லாரும் ஓய்ந்தே போயிருக்கிறோம். தட்டச்சி தட்டச்சி கைகள் தேய்ந்தன. பதில் எப்ப சொல்வீர்கள்? :-)



--

செல்வன்

செல்வன்

unread,
Aug 12, 2017, 4:25:09 PM8/12/17
to vallamai
மரைக்காடு என்பது மறைக்காடு என ஆனது என்பது யூகமா, ஆதாரத்தின் அடிப்படியில் ஆன தகவலா?

ஆதாரத்தின் அடிப்படியில் ஆனது என்றால் ஆதாரம் எங்கே?

யூகம் என்றால் யூகத்தை வைத்து எப்படி முடிவெடுக்க முடியும்?

N. Ganesan

unread,
Aug 12, 2017, 4:30:33 PM8/12/17
to வல்லமை, மின்தமிழ்


On Saturday, August 12, 2017 at 1:25:09 PM UTC-7, K Selvan wrote:
மரைக்காடு என்பது மறைக்காடு என ஆனது என்பது யூகமா, ஆதாரத்தின் அடிப்படியில் ஆன தகவலா?

மரை என்பது மறை என்றாகும் ஆதாரம் கொடுத்துள்ளேன். படிக்கவில்லையா?

செல்வன்

unread,
Aug 12, 2017, 4:38:42 PM8/12/17
to vallamai, மின்தமிழ்
2017-08-12 15:30 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, August 12, 2017 at 1:25:09 PM UTC-7, K Selvan wrote:
மரைக்காடு என்பது மறைக்காடு என ஆனது என்பது யூகமா, ஆதாரத்தின் அடிப்படியில் ஆன தகவலா?

மரை என்பது மறை என்றாகும் ஆதாரம் கொடுத்துள்ளேன். படிக்கவில்லையா?



ஒரு விசயம் நடக்கும் வாய்ப்பு உள்ளது என்பது அது நடந்தது என்பதற்கு ஆதாரம் ஆகாதே?

மரை என்பது மறை என திரியும். அதே சமயம் மறை என இருப்பது எல்லாமே மரையில் இருந்து திரிந்தது என சொல்ல்முடியாது.

மரை இங்கே மறை ஆக திரிந்தது என்பதற்கு ஆதாரம் எங்கே?

N. Ganesan

unread,
Aug 12, 2017, 6:43:32 PM8/12/17
to வல்லமை
தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் சிவன் கோவில்கள். மரைக்காட்டில் உள்ள கோவிலில் தான் மரைகள்
சிவனைத் தொழுகின்றன என்பது தலவரலாறு.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
Aug 12, 2017, 7:26:20 PM8/12/17
to vallamai
2017-08-12 17:43 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் சிவன் கோவில்கள். மரைக்காட்டில் உள்ள கோவிலில் தான் மரைகள்
சிவனைத் தொழுகின்றன என்பது தலவரலாறு.



அப்படியானால் மரைக்காடு என குறிக்கும் ஒரு சங்க இலக்கியபாடலோ, கல்வெட்டோ இதுவரை இல்லையே? ஏன்? 

--

செல்வன்

N. Ganesan

unread,
Aug 13, 2017, 10:56:18 AM8/13/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com
On Sunday, August 13, 2017 at 6:23:19 AM UTC-7, nkantan r wrote:

(இந்த விவாதத்திற்கு அடிப்படையான என் கேள்வியே மறை என்பது வேதம் என்றால் வேதத்திற்கும் காட்டுக்கு என்ன தொடர்பு, என்பதே!)

1) எப்படி மரைக்காடு என்பதற்கு நிரூபிக்கக்கூடிய நேரடி தரவு இல்லையென்றாலும்,  தமிழ் ஆர்வத்தாலும்,  சமஸ்க்ரித (ஆர்ய) எதிர்ப்புணர்வாலும் மரை + காடு என்ற விளக்கம் உள்ளதோ,

Your statement above is not correct. 

திருமரைக்காடு (= வேதாரண்யம்) என்பதற்கான தரவுகள் தேவாரத்தில் உள்ளன. தலவரலாறுகளிலும் உள்ளன. அவைபற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
மரை, மரையா, மரைக்காடு என்ற இழையில் விரிவாகச் சொல்லலாம்.

சைவ சித்தாந்திகள் தமிழறிஞர்கள் சமஸ்கிருத எதிர்ப்புக்காக எழுதினார்கள் என்று சொல்லமுடியாது. நீங்களே சமஸ்கிருதம் ஒரு இறந்துபட்ட மொழி என எழுதியுள்ளீர்கள்.
இறந்த மொழியை எதிர்த்து என்ன பயன் அவர்களுக்கு? திராவிட மொழிக்குடும்பம், ஆரிய மொழிக்குடும்பம் என்ற கோட்பாடுகளை எழுதிய மொழியியல் அறிஞர்கள்
சம்ஸ்கிருத எதிர்ப்புக்காக எழுதினர் என்பது அறிவியல் வாயிலாக இந்திய மொழிகளின், அம்மொழி மக்களின் வரலாற்றை அறியும் ஆய்வுகளைத்
திசைதிருப்புவதாகும்.

The Mammals found in Vedaranyam area are Black buck, Spotted Deer, Wild boar, Semi wild ponies, Jackal, Black napped hare, Bonnet Macaque, Civet Cat, Jungle cat, Mongoose etc.
 
Yes. The most important mammal here is மரை = the blackbuck. I gave Johnsingh's book and wiki entry on the nature of the forests here. In 1967,  திருமரைக்காடு became a wildlife refuge
to save the exquisite black bucks here. Refered to as Sundaramaan in Tevaram. 

சிவன் கையில் உள்ளது கருமான் (இரலை < சிரலை. Cf. இரும்பு < சிரும்பு) எனப்படும் மரை. திருமரைக்காட்டில் (வேதாரண்யம்) வாழ்கின்ற மரைகள். தென்னிந்தியாவிலே அதிகமாக சிவபிரான் கையில் இருக்கிற மரை வாழும் காடுகள் உள்ள இடம் திருமரைக்காடு (வேதாரண்யம்) தான். கறுப்பாக இருக்கும் மரையேறு இது. எனவே, ஆங்கிலத்தில் Black buck என்றும், வடமொழியில் க்ருஷ்ணமிருகம் என்றும் வழங்குவது. இதில் பெண்மான்கள் சிவந்த நிறம் அவை செம்மான் எனப்படும். ’செம்மான் மகளைத் திருடும் திருடன்’ - அருணகிரிநாதர். பெரும்புலவர் மறைக்காட்டில்/மரைக்காட்டில் வாழும் இந்த மான்களையும், ஈசனையும் பாடியுள்ளார்.

சிறந்த புத்தகம்:

Field DaysA Naturalist's Journey Through South and Southeast Asia


>rnk
>PS: i had never been to vedaranyam; but the description above is not of a dense forest or even mangroves; the keyword used is wetland and swamp

திருமரைக்காட்டின் காடுகளுக்கு அவ்வூர் மக்கள் கொடுத்துள்ள பெயர் “வெளி” என்பதாகும்.
இப் புல் வெளியில் மேயும் மரைகள் (சங்க காலப் பெயர்) வெளிமான்கள் எனப்படுகின்றன.
வெளிமான் சரணாலயம் இப்போது. அதன் சங்க காலப் பெயர் மரைக்காடு.
தேவாரத்தில் இம் மரைகள் வழிபடுவதைப் பாடுகின்றனர். பெருங்கோவிலும் எழுந்தது.
எனவே, மரைக்காடு > திருமரைக்காடு. மரை:மறை - பேச்சுமொழியை வைத்து
வேதங்கள் வழிபட்டன, கதவு மறைத்தது, திறந்தது எனப் புராணக் கதைகள் 7-ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்டுள்ளன.

புஷ்பவனம் குப்புசாமி, தன் வகுப்புத் தோழி ரேகா (வட இந்தியப் பெண். குழந்தையில் இருந்தே கோவையில் வளர்ந்தார்) - சங்கீத தம்பதியர்.
வேதாரண்யத்துக்கு சற்று வடக்கே உள்ளது புஷ்பவனம். அதற்கும் வடக்கே நாலுவேதபதி. இடைக்காலத்தில் மரைக்காடு வேதவனம்
என புராண (மைத்தாலஜி) மடைமாற்றம் செய்தபின் மக்கள் விரும்பியிருக்க வேண்டும். It is far easier to believe in myths than to see the reality.
மரைக்காடு > மறைக்காடு ஆன  ஒரு நல்ல உதாஹரணம் ஆண்டன் செக்காவின் Peasants (often called World's best short story) கதை ஆகும்.

Those interested can read the section on black bucks, and see Tevaram verses where the antelopes are referred to as worshipping 'Siva at Vedaranyam:

Front Cover
Universities Press, 2006 - Forest animals - 339 pages

pg. 38:
"Great Vedaranyam Swamp in the north and west. Calimere boasts the last 'large' patch of tropical dry evergreen forest in our country. In addition to nearly 2000 blackbuck - the largest population in south India - chital, wild pigs, hares, bonnet macaques, jackals, jungle cats, civets and grey mongoose make this forest their home.

Calimere is well known among ornithologists, ..."

1967-ல் திருமரைக்காட்டில் சிறப்பாக வாழும் மரைகளைக் காப்பாற்ற வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மரைகள் வாழும் காடுகள் மிகுந்த இடம் திருமரைக்காடு என்னும் வேதாரண்யம் தான். மரை என்ற பெயர் திராவிட மொழிகளில் எப்படி ஏற்பட்டது என்றும்  சொல்கிறேன். 

நா. கணேசன்

2) அப்படியே சமய பாடலை  ஆதாரமாகவும், அதற்கு  பக்தியைப் பின்புலமாக்கி, (அறிவை ஒரு கண்ணோட்டத்தில் செலுத்தும்) கற்பனை சார்ந்தே மறை+ காடு எனும் விளக்கமும் உள்ளது.

3) திருத்தம் பொன். சரவணன் அவர்கள் தந்துள்ள மறைக்காடு என்பதற்கான விளக்கம் அவ்வகைத்தே :

===> வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.  
===> வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின

(இதை ஏற்பது முழுவதும் பக்தியைச்சார்ந்ததே அல்லவா?)

திருமரைக்காடு என்பதற்கான நேரடித் தரவுகள் தேவாரத்திலும், வேதாரண்ய தலவரலாறுகளிலும் உள்ளன.
அவற்றில் ஒரு விசேஷம் உண்டு. அது பற்றி எழுதியுள்ளேன். 

தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் சிவன் கோவில்கள். மரைக்காட்டில் உள்ள கோவிலில் தான் மரைகள்
சிவனைத் தொழுகின்றன என்பது தலவரலாறு.

நா. கணேசன்

 

 எம்மைப்போன்ற பக்தியற்ற மூடர்கள் வேதம் என்பது பலகாலம் எழுதப்படாத வெறுமே ஓதப்பட்ட (எழுதாக்கிளவி) பாடல்கள்; அவை எப்படி மலர் தூவும் என்று M R  ராதா போல கேட்கலாம் என்று, அதற்கு ஒரு "அறிவியல்" விளக்கம் இப்பொழுது தரப்பட்டுள்ளது! 

quote begins
வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர். 
quote ends



எப்படிப்பட்ட அற்புதமான காட்டை நாம் இழந்து நிற்கிறோம்.

rnk

N. Ganesan

unread,
Aug 14, 2017, 10:01:32 AM8/14/17
to மின்தமிழ், vallamai
NG> 40 ஆண்டுகளாய் இப் புராணம் படித்து வருகிறேன்.
 

திருமரைக்காடு என்ற பெயரை அறிவியல்பூர்வமாக 1940-களிலே இருந்து தமிழ்ப்புலவர்கள் விளக்கினர். துடிசைக்கிழார் அவர்கள் 1943-ல் எழுதிய நூலில் இருந்து மேற்கோள் கொடுத்தேன். இப்பொழுது வேதாரண்யம் பகுதி மக்கள் பலரும் திருமரைக்காடு என எழுதுகின்றனர்.


அதன் காரணம், அப்பகுதியில் தமிழின் மீது தணியாத, உண்மையான ஆர்வம் கொண்டவர்களும், திராவிட கழகக் கொள்கையைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் பலர்.
சமயப் பற்று கொண்டிருந்தாலும்,   கண்மறைக்கும் அளவிற்கு சமயக்கொள்கைப் பிடிப்பு கொண்டிருந்தவர்கள் குறைவு. 
அப்பகுதியின் ஊர்கள்  பல கழகக் கட்சியின் கோட்டை எனவும் பறைசாற்றிக் கொள்ள விரும்பியிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டதுண்டு. 
இக்காலத் தலைமுறையின் பெற்றோர்கள்/முன்னோர்கள் அவர்கள்.
இக்கால நிலையை அறியேன். இவையாவும் செவிவழிச் செய்தியால் அறிந்தது.  

.... தேமொழி


இது போன்று பழைய தமிழ்ப்பெயர்களை மக்களிடையே வழங்கச் செய்தவர்களில் தமிழறிஞர் கோவை. இளஞ்சேரன் ஒருவர். ஆராய்ச்சிக்கட்டுரைகள் நூலில் திருமரைக்காடு என்னும் பெயரை விளக்கியுள்ளார் கோவை. இளஞ்சேரன்.

கோவை. இளஞ்சேரன் பற்றி எழுதினேன். நல்லாசிரியர். தமிழியக்கமாகவே வாழ்ந்தவர். தொழிலாளர் தலைவர் ப. ஜீவா அவர்களால் இளஞ்சேரன் என அழைக்கப்பட்டு அதுவே பெயரானது. இயற்பெயர்: மெய்கண்டசிவன். முதலில் வித்வான் பட்டம் பெற்றார் (திருவையாறு அரசர் கல்லூரி). கஸ்தூரிபா காந்தி குருகுல அச்சகத்தில் அச்சிட்டபோது திருமரைக்காடு எனப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
கஸ்தூரிபா காந்தி குருகுலம் - புகழ்மிக்க நிறுவனம். 1930களில் இருந்து. கோவை இளஞ்சேரன் அவர்களின் நூலை வெளியிடும்போது திருமரைக்காடு என அச்சிட்டதைக் காணலாம்.

மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர், இணையத்திலும் பார்க்கலாம். ஆராய்ச்சி இல்லாமல் இருப்போர் புராணக்கதைகளில் மூழ்கி இருக்கட்டும். 

திருமரைக்காடு திருமணம் என்று பார்த்தால் கூகுள் காட்டும். https://www.facebook.com/photo.php?fbid=939861482822212&set=gm.1364685140279447&type=3&theater “திருமரைக்காடு கிளிக்கர்ஸ்”. 

மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).

கோவை இளஞ்சேரன் அங்கே வாழ்ந்த பெரும்புலவர். நாகையில் மறைமலை அடிகளுக்குச் சிலை நிறுவியவர் அவர். அவர் நூல்கள் இணையப்பல்கலையில் கிடைக்கின்றன. அந்நூல்களை கஸ்தூரிபாய் காந்தி குருகுலம், திருமரைக்காட்டில் அச்சாகி உள்ளன. அவற்றில் குருகுலம், திருமரைக்காடு என்றே அச்சிடப்பட்டுள்ளது காணலாம். காங்கிரஸ் குடும்பம் சர்தார் வேதரத்தினத்தின் குடும்பம். அவரது மகன்கள், பேரன்கள் ராமகிருஷ்ண வித்தியாலயம் கோவையில் படித்தனர். மாமன்களுடன் படித்ததால், எங்கள் ஊர்களுக்கு வருவர். வேதாரண்ய குருகுல அச்சுக்கூடத்திலும் திருமரைக்காடு என பயப்படுத்துவது சிறப்பு. எனவே, கட்சி வேறுபாட்டுக்கு இடம்தராமல், தமிழுக்கு முதன்மைதந்து திருமரைக்காடு என்ற பழந்தமிழ் அவ்வூரில் பயன்படுத்துகின்றனர். மரைக்காட்டீசரின் திருப்பாத கமலங்களை மரைகள் தொழுகின்றன என தேவாரம், தலபுராணங்கள், .... குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியத்தில் மரை, மரையா, பக்திகாலத்தில் மரைகள் தொழுகின்ற திருமரைக்காடு, ஆங்குள்ள கோவில் விரிவாகப் பார்க்கலாம்.

NG

Nagarajan Vadivel

unread,
Aug 14, 2017, 10:14:05 AM8/14/17
to vallamai
மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர்,
மரை என்பதை மறை என்று எழுதலாம் மறை என்பதை மரை என்று எழுதலாமா?
ஐயோ மறை கழண்றுபோச்சே என்று சொல்லும் மறை எந்த வகை?

தமிழ்நாட்டு என்று பெயர் சூட்ட எவ்வளவு நாட்கள் ஆனது என்பது தங்களுக்குத் தெரியாதா
வேதாரண்யத்தை மாற்ற திராவிடக் கண்மணிகளின் உதவ்யை நாடவும் நடக்கும்

நரசுஸ் காப்பி

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 14, 2017, 10:30:57 AM8/14/17
to வல்லமை, மின்தமிழ்


On Monday, August 14, 2017 at 7:14:05 AM UTC-7, இணையதாதா wrote:
மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர்,
மரை என்பதை மறை என்று எழுதலாம் மறை என்பதை மரை என்று எழுதலாமா?
ஐயோ மறை கழண்றுபோச்சே என்று சொல்லும் மறை எந்த வகை?

மரை பெயர்க்காரணம், மரை/மறை பேச்சுவழக்கில் மாறுபாடு - இவற்றைப் பார்ப்போம்,
 

தமிழ்நாட்டு என்று பெயர் சூட்ட எவ்வளவு நாட்கள் ஆனது என்பது தங்களுக்குத் தெரியாதா
வேதாரண்யத்தை மாற்ற திராவிடக் கண்மணிகளின் உதவ்யை நாடவும் நடக்கும்


மரைக்காடு என்று பெயர் சூட்ட மடலைப் பேரா. தி. நெடுஞ்செழியன் 2008-ல் எழுதியுள்ளார்.
ஊர்க்காரர்கள் முயன்றால் நடக்கும்.

இளைஞர்களுக்கு தமிழறிஞர்கள் ஆராய்ந்து காட்டிய திருமரைக்காடு என்பதுவும்,
வழக்கத்தில் இருப்பதுவும் - திராவிட இயக்கம், அந்த இயக்கத்துக்கு தொடர்பற்றவர்கள்
(துடிசைக்கிழார், கஸ்தூரிபா காந்தி குருகுலம்), பொதுமக்கள் பயன்படுத்துவதும் பார்த்தோம்.

சங்க இலக்கியத்தில் மரை, மரையா, பக்திகாலத்தில் மரைகள் தொழுகின்ற திருமரைக்காடு, ஆங்குள்ள கோவில் விரிவாகப் பார்க்கலாம்.

நா. கணேசன்


 
நரசுஸ் காப்பி
2017-08-14 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
NG> 40 ஆண்டுகளாய் இப் புராணம் படித்து வருகிறேன்.
 

திருமரைக்காடு என்ற பெயரை அறிவியல்பூர்வமாக 1940-களிலே இருந்து தமிழ்ப்புலவர்கள் விளக்கினர். துடிசைக்கிழார் அவர்கள் 1943-ல் எழுதிய நூலில் இருந்து மேற்கோள் கொடுத்தேன். இப்பொழுது வேதாரண்யம் பகுதி மக்கள் பலரும் திருமரைக்காடு என எழுதுகின்றனர்.


அதன் காரணம், அப்பகுதியில் தமிழின் மீது தணியாத, உண்மையான ஆர்வம் கொண்டவர்களும், திராவிட கழகக் கொள்கையைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் பலர்.
சமயப் பற்று கொண்டிருந்தாலும்,   கண்மறைக்கும் அளவிற்கு சமயக்கொள்கைப் பிடிப்பு கொண்டிருந்தவர்கள் குறைவு. 
அப்பகுதியின் ஊர்கள்  பல கழகக் கட்சியின் கோட்டை எனவும் பறைசாற்றிக் கொள்ள விரும்பியிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டதுண்டு. 
இக்காலத் தலைமுறையின் பெற்றோர்கள்/முன்னோர்கள் அவர்கள்.
இக்கால நிலையை அறியேன். இவையாவும் செவிவழிச் செய்தியால் அறிந்தது.  

.... தேமொழி


இது போன்று பழைய தமிழ்ப்பெயர்களை மக்களிடையே வழங்கச் செய்தவர்களில் தமிழறிஞர் கோவை. இளஞ்சேரன் ஒருவர். ஆராய்ச்சிக்கட்டுரைகள் நூலில் திருமரைக்காடு என்னும் பெயரை விளக்கியுள்ளார் கோவை. இளஞ்சேரன்.

கோவை. இளஞ்சேரன் பற்றி எழுதினேன். நல்லாசிரியர். தமிழியக்கமாகவே வாழ்ந்தவர். தொழிலாளர் தலைவர் ப. ஜீவா அவர்களால் இளஞ்சேரன் என அழைக்கப்பட்டு அதுவே பெயரானது. இயற்பெயர்: மெய்கண்டசிவன். முதலில் வித்வான் பட்டம் பெற்றார் (திருவையாறு அரசர் கல்லூரி). கஸ்தூரிபா காந்தி குருகுல அச்சகத்தில் அச்சிட்டபோது திருமரைக்காடு எனப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.
கஸ்தூரிபா காந்தி குருகுலம் - புகழ்மிக்க நிறுவனம். 1930களில் இருந்து. கோவை இளஞ்சேரன் அவர்களின் நூலை வெளியிடும்போது திருமரைக்காடு என அச்சிட்டதைக் காணலாம்.

மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர், இணையத்திலும் பார்க்கலாம். ஆராய்ச்சி இல்லாமல் இருப்போர் புராணக்கதைகளில் மூழ்கி இருக்கட்டும். 

திருமரைக்காடு திருமணம் என்று பார்த்தால் கூகுள் காட்டும். https://www.facebook.com/photo.php?fbid=939861482822212&set=gm.1364685140279447&type=3&theater “திருமரைக்காடு கிளிக்கர்ஸ்”. 

மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).

கோவை இளஞ்சேரன் அங்கே வாழ்ந்த பெரும்புலவர். நாகையில் மறைமலை அடிகளுக்குச் சிலை நிறுவியவர் அவர். அவர் நூல்கள் இணையப்பல்கலையில் கிடைக்கின்றன. அந்நூல்களை கஸ்தூரிபாய் காந்தி குருகுலம், திருமரைக்காட்டில் அச்சாகி உள்ளன. அவற்றில் குருகுலம், திருமரைக்காடு என்றே அச்சிடப்பட்டுள்ளது காணலாம். காங்கிரஸ் குடும்பம் சர்தார் வேதரத்தினத்தின் குடும்பம். அவரது மகன்கள், பேரன்கள் ராமகிருஷ்ண வித்தியாலயம் கோவையில் படித்தனர். மாமன்களுடன் படித்ததால், எங்கள் ஊர்களுக்கு வருவர். வேதாரண்ய குருகுல அச்சுக்கூடத்திலும் திருமரைக்காடு என பயப்படுத்துவது சிறப்பு. எனவே, கட்சி வேறுபாட்டுக்கு இடம்தராமல், தமிழுக்கு முதன்மைதந்து திருமரைக்காடு என்ற பழந்தமிழ் அவ்வூரில் பயன்படுத்துகின்றனர். மரைக்காட்டீசரின் திருப்பாத கமலங்களை மரைகள் தொழுகின்றன என தேவாரம், தலபுராணங்கள், .... குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியத்தில் மரை, மரையா, பக்திகாலத்தில் மரைகள் தொழுகின்ற திருமரைக்காடு, ஆங்குள்ள கோவில் விரிவாகப் பார்க்கலாம்.

NG

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 14, 2017, 11:55:07 PM8/14/17
to மின்தமிழ், vallamai, Theodore Baskaran
2008/6/12 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>:
>மரை என்பது மான்களைக் குறிக்கும்,
> குறிப்பாக கடல் சார்ந்து வாழும் மான்களையும் அதிலும் ஒற்றைக் கொம்புடைய மான்களை
> குறிக்கும். ஸ்குரு ஆணியை கவிழ்த்து வைத்தார்போல மானின் நெறியில் அந்த ஒற்றைக்
> கொம்பைக் கொண்ட மான்கள் இன்றைக்கும் வேதாரண்யம் கடல் சார்ந்த சதுப்புநில
> காடுகளில் அதிகம் என்பதை உணரவேண்டும். இந்த வகை மான்கள் வேறு எந்த பகுதியிலும்
> இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


2008/6/13 Narayanan Kannan <nka...@gmail.com>: 
சுவாரசியமாக இருக்கிறதே! ஒற்றைக் கொம்பு கொண்ட மான்? இம்மானின் படம்
அனுப்ப முடியுமா? இம்மானின் அறிவியல் பெயரென்ன?

------------- 

இம்மடலில் (2008) ‘ஒற்றைக் கொம்பைக் கொண்ட மான்கள்’ என்பவை
இரலை (அ) கலை என்று ஆண்மான்களும், பிணை, செம்மான் என்று பெண் மான்களும்
கொண்ட Black Buck (antelopes =  மரை). ஒற்றைக்கொம்பு என்பது கவை,கவையாக
பிரியும் கொம்புகள் (ஆண்டுதோறும் உதிர்ந்து முளைக்கும் antlers of the deer, for example 
in chital(புள்ளிமான்) or sambur(கடமான்) ) போல் இல்லாமல்,
திருகுஆணியில் உள்ள மரை போன்றது. எனவே, ஆண்ட்டிலோப்ஸ் பெறும் காரணப்பெயர்
மரை என்பதாகும்.

மரைக்காட்டில் உள்ள மரைகளில் சிறப்பானது: https://en.wikipedia.org/wiki/Blackbuck
The blackbuck (/ˈblækˌbʌk/Antilope cervicapra), also known as the Indian antelope
இதற்காகத் தான் 1967-ல் வேதாரண்யத்தில் வனவிலங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டது.
பின்னர், வங்காள விரிகுடாக் கடலின் கரையோரங்களில் சில இந்திய அரசால் சில
காப்பகங்கள் தோன்றியுள்ளன. இருந்தாலும், அரிய இம் மரைமான்களை அழிப்பதும்
தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

வேதாரண்யத்தில் முக்கிய விலங்கு - மரை:
"Black buck is the most important animal of the sanctuary", so says the announcement board at Vedaranyam sanctuary.






















வல்லநாடு:

N. Ganesan

unread,
Aug 15, 2017, 9:31:35 PM8/15/17
to மின்தமிழ், vallamai


On Tuesday, August 15, 2017 at 4:06:01 AM UTC-7, nkantan r wrote:
இங்கு "ஒற்றைக் கொம்பு" என்று சொன்னது "unicorn " என்ற அடிப்படையில் அல்ல! கிளைகள் இல்லாமல் ஒற்றை கம்பாய் இருப்பது! (இரண்டு கொம்புகள், கிளைகள் இல்லாமல்!)


following is from http://ivansatheesh.blogspot.in/2011/05/

மிளா (Sambar Deer)

தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். சுமார் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.


மிளா என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு. மற்ற ஊர்களில், கடமான் எனப்படுவது சம்பர் (Sambur or Indian elk).
மிளா- பருத்துத் திரண்ட மான் எனப் பொருள்படும். மேளம் = மத்தளம். மேளா/மேலா - திருவிழா.
மேடு, மிண்டு, மிளை - இவை -ள்-/-ண்-/-ட்- இரண்டாம் எழுத்தாகக் கொண்ட சொற்றொகுதி.
விள்-/விண்ணு/விட்டு/விண்டு என்பது போல. மிள்- மிளை, மிளா, மிளகு : மிண்டு: மேடு, மேள- என மிள்- என்னும் தாதுவேர்
தொடர்புடைய சொற்களை விரிந்து வியாபகம் ஆகிறது.

மிளகில் முள் எங்கும் இல்லை. எனவே, முளகு என்ற சொல்லை சங்க இலக்கியத்தில் காணோம்.
பிடி- என்பது புடி- என்றாதற்போல, மிளகு > முளகு (பேச்சுவழக்கு).  மிளை மேட்டுநிலம்.
சைய மலையில் (ஸஹ்யாத்ரி) மழைவாங்கு பிரதேசம் ஆகிய கேரளத்து மிளைகளில் விளைவது
மிளைகம் : மிளகு/மிளகம். (பழைமை : பழமை, ... போல)

சிவபிரானுடன் 3 இடங்களில் முக்கியமாக மான் உண்டு: (1) கிராதனாக மானை வேட்டையாடல்,
கையில் கருமான் (இரலை, க்ருஷ்ணம்ருகம், BlackbucK), (2) அரையிலே புள்ளிமான் தோலர்
(3) விடங்கராய் ஆடையின்றி தாருகாவன ரிஷிபத்னிகளைக் கவர்ந்த பிக்ஷாடநர் கோலத்தில்
புள்ளிமானுக்கு அருகறுத்துவது. வேதாரண்ய தேவாரத்தில் மூன்றையும் குறிப்பிடுகிறார்கள்.
மரைக்காடு/மறைக்காடு வேதவனம், மறைவனம் என மொழிபெயர்க்கப்படுகிறது. 

தேவாரம் தொடங்கி தலவரலாறுகளில் மரைகள் வழிபாடு செய்யும் கோவிலாக
வேதாரண்யம் சிவன் கோவில் குறிப்பிடப்படுகிறது. இதுபோல், பக்தி இலக்கியத்தில்
குறிப்பிடப்படும் ஊர் திருமரைக்காடு (வேதாரண்யம்) என்பது முக்கியமான செய்தி.

நா. கணேசன்
 



ஆண் மான்களுக்கு பெரிய கொம்புகளும், பெண் மான்கள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும். தமிழ் நாட்டில் மேற்கு பகுதியை ஒட்டிய வனங்களில் இவை வாழ்கின்றன.
===============================================

வெளி மான் (Black Buck)

இன்றைய இந்தியாவில் வாழும் விலங்குகளில் மிகவும் வேகமாக ஓடும் திறன் மிக்கது வெளி மான் (Black Buck). ஆண் மான்கள் கரும்பழுப்பு நிறமாகவும், பெண் மான்கள் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படும். ஆண் மான்களுக்கு திருகு அமைப்பிலான கொம்புகள் உண்டு.



அடர்ந்த காடுகளை விடவும், ஓரளவு சமவெளிப் பகுதிகளில் தான் இவை தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருந்தன. இன்று இவற்றின் வாழ்நிலை தீவுகளை போலாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் இவை தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன.

தமிழ் நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம் மற்றும் வல்ல நாடு ஆகிய வனவிலங்கு சரணலாயங்களில் வாழ்கின்றன. வல்ல நாடு வன விலங்கு சரணாலயம் இந்த மான்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. "வல்ல நாடு வெளி மான்கள் சரணாலயம்" தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது.



சென்ற ஆண்டு, இங்கு நான் ( that is mr satheesh of http://ivansatheesh.blogspot.in/2011/05/)  நேரடியாக சென்ற போது, அங்கிருந்த வனத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். தற்சமயம் வெறும் 20 மான்கள் மட்டுமே அங்கு உள்ளதாக சொன்னார். மான்கள் சரணாலயத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மான்கள் இருப்பது மிகவும் வேதனை. இந்த மான்கள் ஒரு சிறிய வனப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.

கோடியக்கரைக்கும் வல்ல நாட்டுக்கும் மான்களால் இடம்பெயர முடியாது. இது போன்ற சமயங்களில், குறைந்தபட்சம் அருகில் உள்ள வேறு சில வனப் பகுதிகளுக்கு செல்லும்வகையில் பாதை (Corridor ) அமைக்கப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.
=================
rnk

if changing the name to மரைக்காடு  would help to conserve and increase the population, we all should welcome that move

----------------------------------------------------------

N. Ganesan

unread,
Aug 17, 2017, 9:00:16 PM8/17/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

மறி என்பது ஆங்கிலத்தின் Ram (Bighorn sheep) என்பதற்கு நேரான சொல். தலையிடல் - தலையீட்டுப் போர் ஆங்கிலத்தில் Locking or engaging horns. மறித்து முட்டிப் போரிடும் கலைமான் ஏறுகள். இக் கலைகள் இந்தியாவில் (உலகத்திலேயும்) உள்ள கருமரைகள். கருமரை கிருஷ்ணம்ருகம் என்று வடமொழியிலே மொழிபெயர்க்கப்படுகிறது. க்ருஷ்ணம்ருகமும் மறி என வழங்கப்படும்  என்பதைத் தேவாரத்தில் பல இடங்களில் காணலாம்.

இரலை (< சிரலை) - கருமான் ஏறு மறித்துச் செய்யும் தலையீடு: (Locking horns by sparring, fighting Black bucks):

கருமரைக் காடுகள் - இதனை வேதாரண்யம் என்று ஆக்கிப் புராணங்கள் செய்தனர். மரை:மறை வேறுபாடு உண்டு. அதனைப் பயன்கொண்டுள்ளனர். தேவாரம், பின்னர் எழுந்த புராணங்களில் வேதாரண்ய  ஈசனைத் தொழுவது கரு மரைகள் (black Indian antelopes) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே தான், தமிழறிஞர்கள் மரைக்காடு மறைக்காடு ஆகியது என்று விளக்கியுள்ளனர்.

கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே 
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் 
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் 
மிடை கருமரை கரடிகளோடு விழுவன வன மேதி - பெரியபுராணம் (கண்ணப்ப நாயனார் வரலாறு).

சங்க காலத்திலே இம் மரைகளின் குடும்பம் பற்றிய அழகான வரிகளை
புறநானூற்றுப்பாடல் காட்டுகிறது.

அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை” - புறநானூறு 23:18-19

கலைகள் தலையிட்டு மறித்துப் போர்செய்தன. அவற்றில் ஒன்றின் மருப்பு (கொம்பு) முறிந்துவிட்டது.
இதனை அறுமருப்பு என்கிறார் சங்கப் புலவர். அக் கருமரை களைத்திருந்த வேளையில்
புலி அடித்து அடித்து அந்த எழிற் கலை இறந்துபட்டது. அக் காட்சியைக் கண்டு வெருவிய கலையின்
மடப் பிணைகள் குட்டிகளை (சிறு மறி) சேர்த்து விரைந்து தெறித்து ஓடின.

ஆர்க்காடு:ஆற்காடு, இடர்ப்படு:இடற்படு, மரைக்காடு:மறைக்காடு, முரிதல்:முறிதல், .... போல ர்/ற் தமிழில் அனந்தம். தமிழறிஞர்கள் பலரும் வரலாற்றுமொழியியல் வழி மரைக்காடு மறைக்காடு ஆனதை விரிவாக விளக்கினார். மரை:மறை வேறுபாடு உள்ளதை உணராதார் வேதாரண்ய (< மறைக்காடு) புராணங்களின்  தோற்றத்தை உணரமுடியாமல் குன்று முட்டிய குரீஇப் போல இடர்ப்படுவர் [1].

நா. கணேசன்

[1] குன்று முட்டிய குரீஇ - தமிழறிஞர்கள் விளக்கம் 7 நூற்றாண்டுகளாக.
இங்கே, கவனிக்கவேண்டியது ஒற்றைக் குருவி மாணாக்கனுக்கு உவமை ஆவதை. குருவி இனத்தை இந்த உவமை பேசவில்லை.
மாணக்கன் தனியொருவனாக நூலுள் புகுந்து கற்க ஆரம்பிக்கிறான். பாயிரம் இன்றேல் ஒரு குருவி குன்றை முட்டி மோதுதற்குச்
சமானம் என்கிறார் நச்சினார்க்கினியர். இதனை ஏராளமான தமிழறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். சில சான்றுகள் பார்க்க:

N. Ganesan

unread,
Aug 22, 2017, 8:27:55 AM8/22/17
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Sunday, August 20, 2017 at 6:54:17 PM UTC-7, தேனீ wrote:
மறைக்காடு என்பதைப் தப்பாக புரிந்து கொண்டு வேத ஆரண்யம் என்று மொழி பெயர்த்தார் என்றால் எதற்காக தப்பான மொழிபெயர்ப்பைக் கொண்டு நாம் வாழ வேண்டும்?  நாம் மறைக்காடு என்றே தூய தமிழில் சொல்லி விட்டுப் போகலாமே. அயலாரின் தப்பான புரிதலை மறுப்பதற்காக நாம் ஏன் 'மரைக்காடு' என மேலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினால் அது அறிவுடைமையா?


அன்பின் திரு. கமலநாதன்,

மறைக்காடு = வேதாரண்யம் என்று ஆகிய காலம் சமகாலம் (7-ஆம் நூற்றாண்டு). வேதவனம் = மறைக்காடு. மறை = வேதம் என்று கொண்டார்கள். ஆனால், மறை என்பதற்கு மரை ‘antelope' என்ற பொருளை மறைத்துவிட்டார்கள். ஆனால், திருமரைக்காட்டுத் தேவாரத்திலே கருமரைகள் வேதாரண்ய ஈசனை வந்து தொழுகின்ற பாடல் உண்டு. பின்னர் எழுந்த இலக்கியங்களிலும் அவ்வூர்ச் சிறப்பை - அதாவது, மரைகள் வந்து தொழும் வேதாரண்ய ஈசன் - பாடியுள்ளனர். வேதாரண்யம் ஆங்கிலம், ஹிந்தி, வடமொழிகளில் இருப்பது இருக்கும். பழைய தமிழில் - 2000 ஆண்டு முன்னர் - என்பது ஆராய்ச்சி. அதைத் தமிழ்ச் சான்றோர்கள் கண்டு அறிவித்துள்ளனர். உ-ம்: சைவ சித்தாந்தம் கரைகண்ட துடிசைக்கிழார் போன்ற புலவர்கள்.

தூயதமிழ்ப் பெயர் என்ன என்று கண்டு சங்கத் தமிழில் மரைக்காடு என்று தெளிவுபடுத்தியுள்ளனர் தமிழறிஞர்கள். சங்கத்தமிழ் தூய செந்தமிழ். தூய செந்தமிழ்ப் பெயராம் மரைக்காடு அவ்வூர் மக்களால் (உ-ம்: கஸ்தூரிபா காந்தி குருகுலம், ...) பயன்படுதப்படுகிறது. இன்னும் பல சான்றுகள் கொடுத்துள்ளேன். தமிழ்ப் புலவர் சொ. ஞானசம்பந்தன் எழுதியுள்ளார்.

நா. கணேசன்

 



2017-08-21 2:30 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Saturday, August 19, 2017 at 12:40:02 PM UTC-7, மணிவண்ணன் wrote:
எப்படிச் சொல்லுகிறீர்கள்? இது உங்கள் யூகமே அன்றி அறுதியிட்டுச் சொல்லமுடியாதே! ஆய்வென்று வந்தால் ஒரு நேர்மை வேண்டுமன்றோ. 

என் யூகமே அல்ல. 1930, 1940களில் இருந்து தமிழ்ப்புலமை நடாத்திய அறிஞர்கள் சங்க இலக்கியத்தையும், தேவாரத்தையும் ஆராய்ந்து அறிவித்த
முடிபு மரைக்காடு காலப்போக்கில் மறைக்காடு ஆயிற்று என்பது. சங்க இலக்கியத்தில் மரை தான். பின்னர் மறை என்றாகியுள்ளது.
இந்த மரைமான்கள் திருமரைக்காட்டு ஈசனை வழிபடலை தேவாரம் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்ப் புலவர் சொ. ஞானசம்பந்தன் தமிழறிஞர்களின் நெடிய மரபின் வழிவந்தவர். அவர் எழுதுகிறார்:
2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்;மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான பெயர். தாமரை என்னும் சொல்லைதா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான்  என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.
தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர்அதை மறைக்காடு (மறை = வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டுவேதாரண்யம் என்று மாற்றினர்;  

வேதம் + ஆரண்யம் = வேதக் காடு! 

வேதம் என்ன புலியா சிங்கமா,  அதற்கு ஒரு காடு ஒதுக்ககொஞ்சங்கூடப் பகுத்தறிவு இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன தொடர்புஅடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்;  சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும் திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.

இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும் உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது;  பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று அழைத்தார்கள்;  காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர்பார்பர்ஸ் ப்ரிட்ஜ் என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன்பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது.
 

நா. கணேசன்


On Thursday, August 17, 2017 at 12:06:30 PM UTC-4, N. Ganesan wrote:


On Thursday, August 17, 2017 at 7:47:35 AM UTC-7, மணிவண்ணன் wrote:
'ற' கர உச்சரிப்பு தமிழகத்தில் மாறியது 300 -400 ஆண்டுகளுக்கு முன் இருக்க முடியாது. அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவாரத்தின் காலம் ஏழாம் ஏன் எட்டாம் நூற்றாண்டு எனக்கொண்டாலும்  'ற'கரத்தை 'ர'கரமாக உச்சரித்திருக்க மாட்டார் தமிழர். தேவாரத்தில் மரைக்காடு என இல்லையே - 


ரகரத்தை றகரமாக உச்சரித்துள்ளனர்.
 
-மணிவண்ணன்

On Thursday, August 17, 2017 at 12:26:26 AM UTC-4, N. Ganesan wrote:


On Tuesday, August 15, 2017 at 12:01:25 PM UTC-7, மணிவண்ணன் wrote:
மறை - speckled beast என்ற பொருளும் உண்டல்லவா? ஒருவேளை புள்ளிமானோ? 

-மணிவண்ணன்.

மறு = spots, speckles   மால் மணிவண்ணன் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் தமிழில் ”திரு மறு” .
எங்கள் ஊர்களில் செம்மறை = செவலை மாட்டில் வெள்ளை மறை (Cf. மறு) கொண்டது.
கருமறை =  காரி மாட்டில் வெள்ளைமறை கொண்டது. இங்கே பார்க்கலாம்:
மறைமான் புள்ளிமானுக்குப் (axis deer, chital) பொருத்தமான பெயர்தான். ஆனால்,
பழைய இலக்கியங்களில் இப்பெயர் காணவில்லை. 

ஆனால், தேவாரம், பின்னர் எழுந்த புராணங்களில் வேதாரண்ய ஈசனைத் தொழுவது
மரைகள் (antelopes) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே தான், தமிழறிஞர்கள்
மரைக்காடு மறைக்காடு ஆகியது என்று விளக்கியுள்ளனர். புள்ளிமான் என்பதைக்
காட்டிலும் மரைமான் (அக்காடுகளின் சிறப்பு) காடுகள். Black bucks are the most important
species in Vedaranyam.

கருமரைக் காடுகள் - இதனை வேதாரண்யம் என்று ஆக்கிப் புராணங்கள் செய்தனர்.
மரை:மறை வேறுபாடு உண்டு. அதனைப் பயன்கொண்டுள்ளனர்.

கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே 
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல் 
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால் 
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதி

நா. கணேசன்

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--- 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ycRU-e5Au2g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 22, 2017, 11:23:04 AM8/22/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Tuesday, August 22, 2017 at 6:43:24 AM UTC-7, தேனீ wrote:
தாங்கள் முதலில் கொண்ட நிலையிலிருந்து கொஞ்சமும் மாறவில்லை திரு. நா கணேசனாரே.

அந்த தலத்தில் ஈசனை மரைகள் வணங்கின என்று எந்த தேவார பாடலிலும் இல்லை. அவ்வாறு இல்லாததை இருக்கு என்றே சாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதனால் எந்த பயனும் இல்லை.


10 நாள் முன்பு எழுதிய மடலிலேயே கரு மரைகள் வணங்கும் தலமாக வேதாரண்யம் தேவாரத்தில் பாடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளேன். அத் தேவார வழியே பின்னர் புலவர்கள் நூற்றாண்டு, நூற்றாண்டாக பாடுவது தமிழ்ச் சைவ மரபு. சைவத்திலேயே, மரைகள் வணங்கும் தலமாக இலக்கியங்களில் குறிக்கப்படுவது வேதாரணியமே. வேதாரண்யத்துக்கு 100 பாடலுக்கும் குறைவாகவே தேவாரம் என்பதை அறிவீர்கள். படித்துப் பாருங்களேன். நான் குறிப்பிடும் பாடல் தெரியும். யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். பழைய மடல் இவ்விழையில்:

----------------
திருமரைக்காட்டின் காடுகளுக்கு அவ்வூர் மக்கள் கொடுத்துள்ள பெயர் “வெளி” என்பதாகும்.
இப் புல் வெளியில் மேயும் மரைகள் (சங்க காலப் பெயர்) வெளிமான்கள் எனப்படுகின்றன.
வெளிமான் சரணாலயம் இப்போது. அதன் சங்க காலப் பெயர் மரைக்காடு.
தேவாரத்தில் இம் மரைகள் வழிபடுவதைப் பாடுகின்றனர். பெருங்கோவிலும் எழுந்தது.
எனவே, மரைக்காடு > திருமரைக்காடு. மரை:மறை - பேச்சுமொழியை வைத்து
வேதங்கள் வழிபட்டன, கதவு மறைத்தது, திறந்தது எனப் புராணக் கதைகள் 7-ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்டுள்ளன.

புஷ்பவனம் குப்புசாமி, தன் வகுப்புத் தோழி அனிதா (வட இந்தியப் பெண். குழந்தையில் இருந்தே கோவையில் வளர்ந்தார். இப்போது அதிமுக.) - சங்கீத தம்பதியர்.
வேதாரண்யத்துக்கு சற்று வடக்கே உள்ளது புஷ்பவனம். அதற்கும் வடக்கே நாலுவேதபதி. இடைக்காலத்தில் மரைக்காடு வேதவனம்
என புராண (மைத்தாலஜி) மடைமாற்றம் செய்தபின் மக்கள் விரும்பியிருக்க வேண்டும். It is far easier to believe in myths than to see the reality.
மரைக்காடு > மறைக்காடு ஆன  ஒரு நல்ல உதாஹரணம் ஆண்டன் செக்காவின் Peasants (often called World's best short story) கதை ஆகும்.

Those interested can read the section on black bucks, and see Tevaram verses where the antelopes are referred to as worshipping 'Siva at Vedaranyam:
-----------

இரண்டு கட்டுரைகள் வேண்டும் என போன்கள் வந்துகொண்டுள்ளன. அவை எழுதிய பின்னர் - ஓரிரு வாரம் கழித்து - தேவாரம், அதன் வழிப்
பாடல்கள் பற்றி தரவுகளை எழுதுவேன். அதற்கு முன் நான் குறிப்பிடும் கருமரைகள் வணங்கும் வேதவன தேவாரம் என்று நீங்களோ
பிறரோ தரில் மகிழ்ச்சி. இவையெல்லாம்  கண்டே சைவ அறிஞர்களும், தமிழ்ப் புலவோரும் திருமரைக்காடு பழைய ஒரிஜினல் ஊர்ப்பெயர்
என எழுதியுள்ளனர்.

பிற பின்!
நா. கணேசன்

 

ஒரு கருத்தை தீர்க்கமானாதாக ஏற்க வேண்டுமானால் அக்கருத்து பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். தங்களின் கருத்துக்குப் பதில் கருத்தை முன் வைத்த பெரும்பாலோர் உடன் பட்டு வரவில்லை.

ஆதலால் இதனை விட்டுட்டு வேற்று நல்ல வேலையைப் பார்ப்போம்.

இது நாள் வரை பல அரிய சான்றுகளை முன் வைத்ததர்க்கு நன்றி.   

அன்புடன் கமலநாதன்.




N. Ganesan

unread,
Aug 27, 2017, 9:34:57 AM8/27/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com

https://groups.google.com/forum/#!msg/vallamai/Vj_XeK4uGs0/iHc7C10iCgAJ
On Wednesday, July 26, 2017 at 8:19:23 AM UTC-7, rnk wrote:
> தேமொழி அம்மையார் எழுதியதைப் படித்திருப்பீர்கள் என நம்புகிரேன். அது மறைக்காடு அல்ல. மரைக்காடு. அதைச் சுட்டிக்காட்டவே நான் எழுதினேன்: "மறைக்காடு எனும் ஊரின் "மறை" எதைக்காட்tuகிறது? வேதங்களையா? "
>
> பார்க்க்ப்போனால், இங்கு எழுதும் பலரின் தமிழைவிட, நான் எழுதுவது, சொற்குறையும், பொருட்குறையும் குறைவாகக் கொண்டதே. அப்படிக் குறை இருந்தாலும்... i am not too disturbed!
>
> நான் சொல்ல வந்தது வேறு; வேதாரண்யம், மறைக்காடு எனும் பெயரிலிருந்து வந்தது; ஆனால் மறைக்காடு எனும் பெயர் "க்" எனும் ஒற்று கொண்டதால், மறை + காடு (இருபெயரொட்டுப் பண்புத் தொகை) எனக்கொண்டு, மறை என்பது வேதம் எனக் கொள்கின்றனர்.
>
> மாறுபட்டு யோசித்தால், மறைகாடு எனக்கொண்டால்? (மறைந்த காடு, மறையும் காடு, ....)
> மேலும் யோசிக்கையில், அது மரைக்காடு எனத்தோன்றியது! அதைத்தான் தேமொழி அம்மையார் உறுதி செய்துள்ளார்.
>
>
The -k- in maRaikkaaTu is crucial. If the name is referring to some building, it will be maRaikATu (Note the -k- valloRRu missing & as you correctly said, it will be a vinaittokai.)

புலி (அ) சிங்கம் இருப்பது (புலி) உறைகாடு எனப்படும்.
ஏதாவது கட்டடம் மறைந்திருந்தால், அது (கட்டடம்) மறைகாடு எனப்படும். கட்டடம் மறைக்காடு என்றாகாது.

சங்கப் புலவர் பிசிர் ஆந்தையார் பாட்டுக்கு கவிஞர் சிவசக்தி எழுதிய புதுப்பாட்டு. (அரசியல் பேய்கள்) உறைகாடு என்கிறார்.
உறைக்காடு என வாராது.
http://www.tamilauthors.com/01/454.html

திரு நிறைசெல்வி, புலி உறை காடு, கட்டடம் மறைகாடு ... என வரும். புலிஉறைக்காடு, கட்டடம் மறைக்காடு, ... என இல்லை.

எனவேதான், தமிழறிஞர்கள் ஆக்காடு, புலிக்காடு, எருமைக்காடு, பன்றிக்காடு, அரியமரைக்காடு, .... போல சோழ அரசர்களின் கோடியக்கரை காடுகளில் மரைக்காடு என்பது மறைக்காடு ஆகிவிட்டது என்று எழுதியுள்ளனர். மரை மறை என்றாகும். அவ்வாறு தேவார காலத்தில் ஆனது புராணக்கதைகள் உருவாகக் காரணம். எந்தக் கட்டடமாவது மறைந்திருந்தால் மறைகாடு என எழுதியிருப்பர். தேவாரமும், பின் வந்தோரும் கரு மரைகள் வந்து சிவனை வணங்கும் தலம் என்று பாடியுள்ளனர்.

மரைக்காடு(> மறைக்காடு) - சோழர்களுக்கு உரியது.

பாண்டியர்களுக்கு உரியது ராமேசுவரம் (தனுஷ்கோடி). பாண்டியரின் தொன்முதுகோடி பற்றிய சங்கப்பாடல் :
https://groups.google.com/forum/#!msg/mintamil/4EJMw8I_uzw/n5VeR-0sCgAJ

நா. கணேசன்

> as regard the second issue,. when i write something, there are people here who pounce upon me hinting that i have a hidden agenda in my writing! and they are fair enough to question my tamil origin and my caste! so what is wrong in my mentioning my caste? i have strong views on god, religion, the fancy ideas of astrology and other meta-"sciences", our (i mean indian) constitution, laws, reservations and the regular cinging "whine of suppression for last 2000 years being reversed and redeemed" etc
>
> regards
> rnk
>

N. Ganesan

unread,
Aug 28, 2017, 9:54:33 AM8/28/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Sunday, August 27, 2017 at 10:09:36 PM UTC-7, dr.ponmudi wrote:
> மறைக்காடென்பது வினைத்தொகையன்று.
> 'மறைகாடு' என்பதேவினைத்தொகை.
>
> மறைக்காடென்பது இருபெயரொட்டுமன்று. இருபெயரொட்டென்றால் மறையாகியகாடென்றாகும். காடு மறையாவதேது?
>
> அது வேற்றுமைப்பொருளிலேயேவரும். மறையையுடையகாடென்றோ மறைக்கானகாடென்றோகொள்ளலாம்.

நாலுவேதபதி என்ற ஊரில் (கள்ளிமேட்டின் தெற்கே) நாலு வேதங்கள் மனித உருவில் வாழ்ந்தன. மறைக்காட்டுக்கு வந்து
பூசை செய்து பின் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடும். சம்பந்தர், அப்பர் வந்து மறைத்த கதவை திறந்தனர் என்பது
ஸ்தல புராணம். இதெல்லாம் கதை.

மறை, காடு இரண்டுமே பெயர்ச்சொற்கள். எனவே, வினைத்தொகை அல்ல. வினைத்தொகைகளில் வல்லெழுத்து மிகுவதில்லை. இங்கே, மறை = மரை. மறையை வேதம் எனக் கொண்டு புராணங்கள் எழுந்தன. மரை என்பது மறை என வரும் என்பதை விட்டுவிட்டார்கள். அகத்தியான்பள்ளி : அகத்தியன்பள்ளி (அகஸ்தியம்பள்ளி) என்பதன் பேச்சுவழக்கு. ஆலமரத்தூர் : ஆலாமரத்தூர் என்போம். அதுபோல. அகத்தியான்பள்ளி, மறைக்காடு - இரண்டு பேச்சுவழக்கும் தேவாரத்தில் உண்டு.

மரைக்காடு பேச்சுவழக்கில் மறைக்காடு ஆனது அல்லவா? அதேபோலத் தான் தேவாரத்தில் அகத்தியன்பள்ளி அகத்தியான்பள்ளி என்ற பேச்சுவழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஊர்ப்பெயர் மரவக்காடு. கோயில்பெயர்: அகத்தியன்பள்ளி (> அகத்தியான்பள்ளி), மரைக்காடு > மறைக்காடு போல.
http://www.shivatemples.com/sofct/sct126.php
வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!

எங்கள் ஊர்ப்பக்கம் மரையூர் உள்ளது. மூணாறுக்கும், உடுமலைக்கும் நடுவே உள்ள ஒரே ஊர் மரையூர் தான். மறையூர் என்றும் எழுதுவார்கள். கி.மு. 500 வாக்கிலேயே உள்ள காவிக்கல்லால் ஆன மான்கள், மரைகள் ஓவியங்கள் இங்கே உள்ளன. வருடாவருடம் ஜீப்பில் மூணாறு போகும் போது இவ்வூரைக் கடந்து செல்வோம். கல்வெட்டு இருக்கிறது. அதில் “ர” தான், தமிழ் வணிகர்கள் மரவூர் என எழுதியுள்ளனர். இந்தக் கல்வெட்டை தென்கொங்கு சதாசிவம், துரை சுந்தரம் வெளிப்படுத்தியுள்ளனர். மரை, மரவி, மராவு என மலைவாழ் மக்கள் மொழிகளில் சொல்லப்படுகிறது. மரவு/மரவி மரைகளுக்கு பழைய பெயர். கன்னடத்திலும், கோண்ட் மக்களும் பயன்படுத்தும் பெயர். மரவு/மரவி (மரை) + ஊர் = மரவூர் எனக் கல்வெட்டில் உள்ளது. ஆனால், மலையாளத்திலும், தமிழிலும் மரையூர் என்றும், மறையூர் என்றும் வழங்குகிறது. கோண்டு இன திராவிட மக்கள் மராவி என்று பெயர் வைப்பர். அவர்களது ஒரு குலப்பெயர் மராவி. (மராவு = Nilgai).

மரைக்காடு (> மறைக்காடு), மரையூர் (> மறையூர்) இரண்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இரண்டுமே, வறண்ட, மழை மிகக் குறைவான நிலங்கள். அடர்ந்த காடுகள் அல்ல.
Marayoor has the best-quality sandalwood in the world and is the only place in Kerala where it grows naturally. Smuggling of this costly wood is rampant, where a single tree can fetch more than a lakh of rupees.

https://books.google.com/books?isbn=8173197768
S. Ignacimuthu, ‎S. Jayaraj, 2006.
Interestingly, Marayoor, another high land site selected for the study, recorded the lowest overall values of diversity indices and richness. Marayoor is a rain shadow area and receives very low rainfall compared to the other sampling sites.

மரை, மரவு (எனவே, மரவு+ஊர் = மரவூர். பெருவாரியான வழக்கு மரையூர்/மறையூர்), மரைக்காடு (> மறைக்காடு) - dry forests with low rainfall & their hosting of antelopes and deer. பல ஆயிரம் ஆண்டுகளான தமிழ்ப்பெயர்கள் இவை. சங்க இலக்கியத்தால் பெயர்க்காரணம் நன்கு விளங்குகிறது.

Antelopes - Nilgai's horn is the source of Unicorns in Indus Valley art. Ultimately Rishyashringar story. Unicorn myth of India spread to Egypt, Greece and then Christianity. Also, eastward to the Orient, this has been written recently.

But, the names of these antelopes, marai, maraiyaa(n) (= Nilgai), maraavu, maravi in Kannada & Gond dravidian tribal folks having a Kulam named after maravi and maraavi are not well known to India specilists. Both Maraiyuur (Idukki district) and Maraikkaadu (Vedaranyam forest) are low rainfall forests & ancient Tamils aptly named the tiny villages inside the forest after the antelopes and deer that inhabit there.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 28, 2017, 10:09:27 AM8/28/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, dorai sundaram, dr.pon...@gmail.com
On Sunday, August 27, 2017 at 10:25:06 PM UTC-7, dr.ponmudi wrote:
> ஐயா,
>
> அது அகத்தியான்பள்ளியன்று, அகத்தியன்பள்ளி!
>
> ய யாவான தகவல் தங்களுக்கு தவறிவந்திருக்ககூடும்.
>
> நான் திருமரைக்காட்டைச்சேர்ந்தவனென்பதால் அது அகத்தியன்பள்ளியென்பதை அறிவேன் பேச்சுவழக்கிலேகூட 'அகத்தியம்பள்ளி' எனத்தான்சொல்வோம். 'அகத்தியாம்பள்ளி' என எவருஞ்சொன்னதில்லை!

மரைக்காடு என்பது மறைக்காடு என்ற பேச்சுவழக்காகி தேவாரத்தில் கதைகளுடன் எழுதப்பட்டது தாங்கள் அறிவீர்கள்.

அதேபோல, அகத்தியன்பள்ளி (அகஸ்தியம்பள்ளி கோயில்) அகத்தியான்பள்ளி என்று மக்கள் பேச்சுவழக்கில் அழைப்பதை சம்பந்தரும் அப்பர் அடிகளும் பதிவுசெய்துள்ளனர். சம்பந்தர் பதிகம் முன்மடலில் கொடுத்தேன். இப்பொழுது அப்பர் குறிப்பது அகத்தியான் பள்ளியை. இது மரவக்காட்டில் உள்ள கோவில். மரவம் = கடம்ப மரங்கள், நெய்தல் திணைக்கு விசேடம். கடம்பர்கள் என்னும் கடற்கரைப் பிரதேச மன்னர்களின் குலச்சின்னம் இந்தக் கடம்பு மரங்கள். ஆதாரம்: பதிற்றுப்பத்து.
https://shaivam.org/tamil/thirumurai/thiru06_023.htm
ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.

மரைக்காடு, மரையூர் (தென்கொங்கின் சையமலையில் உள்ள ஊர்) இரண்டுமே வறண்ட காடுகள். மரை மான்கள் வசிக்கும் பிரதேசம். மரையூரில் 2500 வருட காவிக்கல்லில் வரைந்த பாறை ஓவியங்கள் மிகுதி. எ-டு:
https://commons.wikimedia.org/wiki/File:Marayoor_Rock_paintings_01.JPG

NG

N. Ganesan

unread,
Sep 1, 2017, 10:25:59 PM9/1/17
to மின்தமிழ், vallamai


2017-08-12 21:24 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2017-08-11 12:58 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//பட்டிமன்றம் என்பது தொன்று தொட்டு வழங்கி வருவது.  

மக்கள் ஆர்வத்துடன் (பேச்சாளராகவும், பார்வையாளராகவும்) பங்கேற்பது. 

பொன்னான நேரம் வீணாகிறது என்று கவலைப்படுவோர் எவரும்  இது போன்ற விவாத இழைகளைத் தவிர்த்துவிடுவதே நல்லது. //

எனக்கும் பட்டிமன்றம்பற்றித் தெரியும்.

இது பட்டிமன்றம் அல்ல.

இங்கு நடப்பது விதண்டாவாதம்.

அதனால்தான் நான் எப்பக்கமும் கருத்துப்பதியவில்லை.


தமிழறிஞர்கள் மரைக்காடு என்பது மறைக்காடு ஆன முறையை நிறுவியுள்ளனர். அவர்கள் யாருடனும் விதண்டாவாதம் செய்ய எழுதவில்லை.

இராமாயண வரலாற்றில் குரங்குகள் எனப்படுவது யார் என்றும் அறிய முடிகிறது.

நா. கணேசன்
 

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 6, 2017, 1:46:09 AM9/6/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, மு இளங்கோவன்
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக நூல்களில் சைவ அறிஞர்கள் - துடிசைக்கிழார் போன்றோர் - மறைக்காட்டின் பழைய செந்தமிழ்ப்பெயர் மரைக்காடு என ஆராய்ந்து எழுதியுள்ளனர். அவ்வூர்க்காரர்கள் பலரும் மரைக்காடு எனப் பயன்படுத்தலையும் சான்றுகளுடன் தந்தேன். உ-ம்: கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம். பேரா. கோவை இளஞ்சேரனார் (இவர் சைவம், தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாருக்கு அவரது நாகப்பட்டினத்தில் முழு வெண்கலச் சிலை நிறுவியவர். சிலம்புக் காவியம் பூம்புகாரில் புடைச்சிற்பங்களாக வை. கணபதி ஸ்தபதியுடன் உழைத்தவர்.) ...

முக்கியமாக, ஒரு தமிழ்ப் பேராசிரியர் - மொழியியலில் பெரும்தேர்ச்சி பெற்றவர் - 
டேவிட் அபர்க்ரோம்பி அவர்களிடம் ஒலியனியல் பயின்ற பெரியார். அண்ணாமலைப் பல்கலை மொழியியற்றுறை வல்லுநர்
மரைக்காடு என்பதுதான் மறைக்காடு என மருவியது என விளக்கிய தமிழறிஞர்களில் முக்கியமானவர்.
CTamil list - those who are genuinely interested can read on Punal Ka. Murugaiyan's statement.
From Tevaram days, Tamil poems sing about marai-s (deer type called back buck antelopes) worshipping the feet of god Shiva at MaraikkaaDu.
will give Punal Ka. Murikaiyan's statement.

சைவ பாரம்பரியத்தில் வந்த பேரா. புனல் க. முருகையன் ஆய்ந்து தெரிவிக்கும் முடிபு முன்னரே சைவர்கள் நமக்கு தெரிவித்ததுதான்.
12 திருமுறைகளில் உள்ள தமிழ் ஒலிப்புகள் பற்றிய நூல் அவரது ஆய்வு முடிபுகளை நமக்குப் போதிக்கிறது. வெளியீடு: காந்தளகம், சென்னை.
இந்த அரிய நூலையும், அதனுள் மரைக்காடு தான் தமிழ் ஊர்ப்பெயர் என்று பேரா. க. முருகையன் எழுதியதும் நமக்கு
மறவன்புலவார் முயற்சியால் கிட்டியது. 

புனல் முருகையனின் ஆசான்:

Punal K. Murukaiyan's book is what is needed to get the answers for RNK's query about
Tamil "hard" consonants. See Tamil prof. from Singapore, A. Sivakumaran paper
on this subject (One of the ref.s is, of course, Punal K. Murukaiyan's panniru tirumuRai olipeyarppu.

நா. கணேசன்


"From what I have implemented here: http://www.virtualvinodh.com/tamil-ipa
 
Both ர & ற are transcribed to a Tap /ɾ/
 
மரம் மறம்
 
mʌɾʌm mʌɾʌm
 
~~~~
 
Also something that I wrote in CTamil a long time ago in the thread: Ancient Pronunciat​ion of Vallina R -
 
-------------
 
As noted in the earlier thread, Punal Murugaiyan commented that the distinction between two R's was lost already several centuries ago.

He famously quoted the word "திருமறைக்காடு tirumaṟaikkāṭu” for confusions that arose to the loss of distinction between the two phonemes.

According to him, it was originally "மரைக்காடு maraikkāṭu". [Deer-Forest] which later transformed into மறைக்காடு tirumaṟaikkāṭu. It again went a transformation into Sanskrit as Vedaranyam, and the lord who resided there became Vedapurisvarar. Imagine, All this happened just due to the confusion between the two letters !
 
[...]
 
This begs another question, what was the original pronunciation of ற ṟ ?

Given that ற ṟ is classified as a Vallinam. I presume it was probably realized as a Alveolar Ta in ancient times. Which is why ṟ is grouped along with with alveolar na ன as the corresponding nasal.

In Malayalam, geminate ṟ is clearly realized as Alveolar ta, I suppose it also the case with the nasalized ṟ in Malayalam.

In Tamil too, the first consonant for the geminate ṟ cluster & nasalized ṟ partially retains this sound வெற்றி veṟṟi [IPA: ʋɛ̝t̺t̺ʳɪ· ], கன்று kaṉṟu [IPA: kʌn̺d̺ʳɨ ]

This may also explain why ற ṟ has a quite independent shape in Tamil Brahmi. The shapes of  ன ṉ & ள ḷ are clearly derived from corresponding ல l & ந n, which sound alike. But  ற ṟ doesn't seem to be derived from the corresponding character for ர r.
 
~~~~~~~~~~~~
 
 
So, its simple. Probably, the original sound was a Alveoolar Plosive ṯ in Old Tamil. Tolkappiyam, classifies ற along with the plosives.
Probably, it got degraded to a Trill at some point in the Medieval Era, then it got merged with the Tap in Tamil Nadu.
 As far as Tamil Nadu is concerned, I don't think the distinction is made any more naturally. Whatever attempts to distinguish the letter in the "Learned Pronunciation" is just some modern reconstruction.
 
From Harold Schiffman's paper:
 
 
~~~~~~~~~
 

Further evidence for the lack of distinction is the ‘folk’ method of distinguishing them, i.e. /r/ (ர is referred to as cinna ra ‘small r’, while /r/ (is referred to as periya ra ‘big r’. If there were a real phonetic distinction between the two, there would not be a need for a folk name based on their size. Further evidence for the lack of a phonetic distinction is the fact that many people make mistakes in orthography, using ற when ர is called for, and vice versa.

[..]
 

Many speakers of Tamil claim to make a distinction based on this terminology, but if pressed will admit that they trill /r/ when speaking ‘correctly’ (i.e. when speaking Literary Tamil), but do not do so when speaking spoken Tamil. Other than with speakers of Kanyakumari dialect, therefore, it is very difficult to find non-literate speakers of Tamil who make a phonetic distinction between these two r’s. The distinction therefore seems to be an artifact of literacy. Furthermore, the existence of a “folk” system for referring to them (“small vs. big” r) shows that the failure to distinguish them is a widespread issue; if there were a true phonetic distinction between them, there would be no need for a labeling system based on the size of the graphemes.

~~~~~~~~~~~~~~~~~
 
There were more discussion in the CTamil list. Genuinely interested  people may look at the archives of CTamil list. "

புனல் க. முருகையன், பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு, காந்தளகம்.
https://muelangovan.wordpress.com/2010/06/15/பன்னிரு-திருமுறை-ஒலிபெயர/

சென்னை : ""கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்,'' என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
சென்னை தமிழ்க் கணினி மொழியியல் கழகம் மற்றும் "காந்தளகம்' வெளியீட்டகம் சார்பில், ஒலியியல் அறிஞர் புனல் க.முருகையன் எழுதிய "பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியிட்டு விழா சென்னைப் பல்கலையில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட, திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு. கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.


ஞானக் கருவூலமான பன்னிரு திருமுறையை, வேற்று மொழியாளர் அவர் மொழி வடிவிலேயே பயிலும் வகையில் ஒலி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இது தமிழுக்கு ஒரு புதிய வகை இலக்கிய படைப்பு. தற்காலிக கணினி ஆளுமையில், இந்நூல் தமிழுக்கு புதிய பரிமாணத்தைத் தரும்.


இவ்வாறு பெரியகருப்பன் பேசினார்.காந்தளகம் பதிப்பக உரிமையாளர் சத்திதானந்தம் பேசும்போது,""திருமுறைகளை அனைத்து மொழிகளிலும் எடுத்துச் சென்றுள்ளோம். ஏழு மாத உழைப்பில் வந்துள்ள பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல், புது அத்தியாயத்தை ஏற்படுத்தும். தமிழில் 97 ஒலிகள் உள்ளது கண்டறிந்தது வரலாற்றுப் பணி'' என்றார்.


திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,""பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை.திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்'' என்றார்.முடிவில் நூலாசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான், சென்னைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் தெய்வசுந்தரம், சிங்கப்பூர் சிம் பல்கலை தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிட்னி பல்கலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


-----------
















































N. Ganesan

unread,
Sep 9, 2017, 10:52:18 AM9/9/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, Theodore Baskaran
தேவாரம் முதலாக, மான் இனங்கள் சிறப்பாக வாழும் மறைக்காடு (மரைக்காடு) பற்றித் தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர். மரை மான்களுக்குத் தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பெற்ற வனவிலங்கு சரணாலயம் (Wildlife Sanctuary) திருமரைக்காடு தான். தென்னிந்தியாவில் கருமரை (black buck) என்னும் கலைமான்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதும் மரைக்காட்டிலே தான். 

ர்/ற் மாறுபாடு தமிழ்மொழி இழந்த காலகட்டம் என்று தேவார ஆசிரியர் காலத்தை தமிழ் மொழியியல் பேராசிரியர்கள் குறிப்பர். அதனால், மரை மறை என்றாகி புராணங்கள் தோன்றியுள்ளன. கதவு மறைப்பதும், அக் கதவுகளைத் திறக்கச் சொல்லித் தேவாரப் பாடல்கள் உருவாக, அதனால் கதவுகள் திறந்தன. மரை/மறை = antelope என்பது விட்டுவிட்டு, வேதாரண்யம் என்பது வடமொழிப் பெயரானது.

திருமரைக்காட்டில் வாழும் மான்கள் பற்றிக் குறிப்பிடும் ஓர் பழைய தனிப்பாடல் பார்ப்போம். இது பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய வெண்பா. தமிழ்நாட்டில் சங்க காலத்தில்  மான்கள் பரவலாக இருந்தன. மரையா (Nilgai), புள்ளிமான் (chital or axis deer), நாலுகொம்புமான் (Four Horns), குள்ளமான் (chinkara gazelle), கேழையாடு (barking deer). மரையா தவிர, இன்றும் சையமலையில் (Western Ghats) மற்றவை சிறிய அளவில் உண்டு. மரைக்காட்டில் புள்ளிமானும், கருமானும் எப்பொழுதும் மிகச் சிறப்பானவை. கருமான் வடமொழியில் க்ருஷ்ணம்ருகம் என்றானது. அதுபற்றி, http://nganesan.blogspot.com/2011/10/akananuru-241.html

பாணியிலே புள்ளிமான் பாகத்தே பச்சைமான்
வேணி தனிலேயோர் வெள்ளைமான் - காணுமலர்ச்
செம்மான் உலாவும் திருமறைக்காட் டீசரே!
எம்மானுக் கெங்கே இடம்? - பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

மான், மான் என்று பல பொருளில் இரட்டுற மொழிந்து, அங்கதச் சுவை நிரம்பிய அழகிய பாடல். வெள்ளைமான் = வெள்ளமான் (கங்காதேவி சடையிலே சிவனுக்கு). கலைமான்களில் பெண்மான் சிவப்பாக இருக்கும். இத்தனை பெண்மான்கள் உலாவும் மரைக்காடு(மறைக்காட்டிலே) என்மானுக்கு (என் பெண்ணுக்கு) உன்னிடத்தில் இடமுண்டா என்று நயமுடன் சிவனைக் கேட்கும் அகத்துறைப்பாடல். இந்த அரிய பாடலை இயற்றிய பலபட்டடைச் சொக்கநாதரைப் பற்றி ஒன்று சொல்லணும். ‘மொழிகாத்தான்சாமி’ உவேசா அரிதின் முயன்று பதிப்பித்த தமிழ் விடுதூது தமிழ்மொழிப் பெருமைகளைப் பேசும் ப்ரபந்தம். அதன் ஆசிரியர் பெயர் ஏட்டில் இல்லை. அது பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்ததாக இருக்கலாம் என்று படித்திருக்கிறேன்.

நல்ல காளைப்பருவத்தில் தான் கலைமான் (=கருமரை) என ஆண்கள் சிவப்பிலிருந்து கறுப்பு வண்ணமாகின்றன.
During the juvenile stage, even the males are red-brown: https://www.youtube.com/watch?v=G3G-DhvW_3Y
செம்மான் என்பது கருமரைகளில் பெண்மான்களை. அருணகிரிநாதர் இந்தச் செம்மானை வள்ளிநாயகியின் தாய் என்கிறார்.

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே
               - அருணகிரிநாதர்.

திரு மரைக்காட்டில் கருமான் மறிகள் சிவபெருமானை வணங்குகின்றன என்பது தேவாரம். அந்தத் தேவாரமும் காண்போம்.

நா. கணேசன்
மறி - வகைகளும், சொல்லாய்வும்:


N. Ganesan

unread,
Sep 9, 2017, 6:29:38 PM9/9/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Maravanpulavu K. Sachithananthan, Theodore Baskaran
யாழைப் பழித்தன்ன மொழி மங்கை ஒருபங்கன்
பேழைச்சடை முடிமேற் பிறை வைத்தான்இடம் பேணில்
தாழைப் பொழிலூடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே
                           - சுந்தரர் தேவாரம்

ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு பல நூறு ஆண்டுகளாக வியாக்கியானங்கள்
ஏற்பட்டது போல, தேவாரம் போன்ற சைவத் திருமுறைகளுக்கு உரை
எழுதும் வழக்கம் அண்மைக்காலம் வரை இல்லை. (விதிவிலக்கு: திருக்கோவையாருக்குப்
பேராசிரியர் உரை). சுந்தரர் ’யாழைப் பழித்தன்ன மொழியாள்’ வேதாரண்யத்தில் அம்பாளுக்கு
’வீணாவாத விதூஷணி’ என்ற பெயர்.

கூழைக்குரங்கு. கூழை என்றதும் குட்டையான குரங்கு என எழுதுகின்றனர்.
குட்டையான குரங்குகள் எதுவும் தென்னிந்தியாவில் இல்லை.

கூழைக்குரங்கு. கூழை என்றால் என்ன பொருள்? இதில் கூழை என்பது வாலைக் குறிக்கும். வால் நீண்ட குரங்குகள்
(நாங்கூழை - நாங்கூலம் - Hanuman langurs போல). நகர/லகர மாற்று:
நாஞ்சில்:லாங்கல் ‘கலப்பை’, 
நகுளீசன்:லகுளீசன் (நகுட:லகுட = தடி) - முதல் சைவ ஆச்சார்யர்
நாங்கூழை (=கூழைக்குரங்கு). ஹிந்தியில் லாங்கூலம்/லாங்கூரம்..
....

கூழைக்குரங்கு = Hanuman langurs (also know as Gray langur)
An important group of monkeys of India, langurs,
have a Tamil base in their name in Indian languages.
This is shown in Cuntarar Tevaram as well.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 5, 2019, 8:20:41 PM11/5/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரைக்காட்டுப் பகுதியில் (வேதாரண்யம்) ஏற்பட்ட பெரும்புயல் மழையில்
இயற்கை உயிரிகள் மிகச் சேதமடைந்தன. பல கருமரைகள் என்னும் கலைமான்கள் இறந்துபட்டன.
இப்போது சில மீண்டும் பெருகி பல ஆயிரம் ஆண்டுகள், மில்லியன் கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தது
தொடர பிரார்த்தனைகள்.

ர/ற, ந/ன போன்ற மாற்றங்களால், மரைக்காடு > மறைக்காடு ஆகிப் புராணக் கதைகள் கட்டப்பட்டுள்ளன.

நா. கணேசன்

On Thu, Aug 10, 2017 at 6:28 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சிவன் கையில் உள்ளது கருமான் (இரலை < சிரலை. Cf. இரும்பு < சிரும்பு) எனப்படும் மரை. திருமரைக்காட்டில் (வேதாரண்யம்) வாழ்கின்ற மரைகள். தென்னிந்தியாவிலே அதிகமாக சிவபிரான் கையில் இருக்கிற மரை வாழும் காடுகள் உள்ள இடம் திருமரைக்காடு (வேதாரண்யம்) தான். கறுப்பாக இருக்கும் மரையேறு இது. எனவே, ஆங்கிலத்தில் Black buck என்றும், வடமொழியில் க்ருஷ்ணமிருகம் என்றும் வழங்குவது. இதில் பெண்மான்கள் சிவந்த நிறம் அவை செம்மான் எனப்படும். ’செம்மான் மகளைத் திருடும் திருடன்’ - அருணகிரிநாதர். பெரும்புலவர் மறைக்காட்டில்/மரைக்காட்டில் வாழும் இந்த மான்களையும், ஈசனையும் பாடியுள்ளார்.

சிறந்த புத்தகம்:

Field DaysA Naturalist's Journey Through South and Southeast Asia

Front Cover
Universities Press, 2006 - Forest animals - 339 pages

pg. 38:
"Great Vedaranyam Swamp in the north and west. Calimere boasts the last 'large' patch of tropical dry evergreen forest in our country. In addition to nearly 2000 blackbuck - the largest population in south India - chital, wild pigs, hares, bonnet macaques, jackals, jungle cats, civets and grey mongoose make this forest their home.

Calimere is well known among ornithologists, ..."

1967-ல் திருமரைக்காட்டில் சிறப்பாக வாழும் மரைகளைக் காப்பாற்ற வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மரைகள் வாழும் காடுகள் மிகுந்த இடம் திருமரைக்காடு என்னும் வேதாரண்யம் தான். மரை என்ற பெயர் திராவிட மொழிகளில் எப்படி ஏற்பட்டது என்றும் நான் தொடங்கிய இவ்விழையில் சொல்கிறேன். 

நா. கணேசன்

திரு மரைக்காடு - where Mustangs roam
-------------------------------

மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).

மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,
கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.
சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்
தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர். 

ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,
அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.
புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டு
வளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்
நல்ல சான்றாகும்.

மரையூர் - என்ற அழகான ஊரில் மரைகள் இருப்பதைக் கற்கால ஓவியங்களில்
இருந்து இன்றுவரை காணலாம். மரைக்காட்டிலும் அவ்வாறே.
மரை ‘antelope' தமிழில் மறை என்றும் எழுதப்படும்.
சென்னைப் பேரகராதி:
மறை&sup6; maṟai, n. [T. mara.] 1. See மரை¹, 5, 6. 2. Spiral of conch; சங்கின் முறுக்கு. (யாழ். அக.)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 5, 2019, 8:48:12 PM11/5/19
to மின்தமிழ், vallamai

மரைக்காடு >> மறைக்காடு பற்றிப் பழைய மடலாடல் ஒன்று: 

On Friday, August 4, 2017 at 9:42:35 AM UTC-7, தேனீ wrote:

சிந்தாமணி நிகண்டில், நெய்தல் தலைவன் செப்பும் மரவமே ஞாழல் என்று கூறப்படுகின்றது. மரவம் என்பதற்கு குங்கும மரம் என்று பொருளும் கூறப்பட்டுள்ளது.




On Friday, August 4, 2017 at 5:35:02 PM UTC-7, N. Ganesan wrote:
 

சிந்தாமணி நிகண்டு சென்ற நூற்றாண்டு நூல். மரப்பெயர்கள் மறந்த காலம்.
ஞாழலும் மரவமும் ஒன்றல்ல என்பதனைப் பழம் நூல்கள் காட்டுகின்றன.

விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,
மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே. - சம்பந்தர்

கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில்:
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்

etc., இது போல பல பாடல்களில் ஞாழல் (பலுனி, பிரியங்கு), மரவம் (கடம்பு வகைகள் - Indian oak tree species)
வேறுபடுத்திப் பாடியுள்ளனர்.

மரவத்தின் பெயர் வைக்க மரவக்காடு என்றே சொல்லியிருப்பர். ஏன் மரைக்காடு/மறைக்காடு?
மரைக்காடு அருகேயே மரவக்காடு (அகத்தியான்பள்ளி) திருத்தலமும் உள்ளதே. மரவம் = கடம்பு வகைகள்.
(கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, மஞ்சட்கடம்பு, நீர்க்கடம்பு, வெள்ளைக்கடம்பு, ... Indian oak trees).


 


முனைவர் திரு. நா. கண்ணன் அவர்கள் பதிவேற்றிய கருத்துக்கு இப்பதிலே  போதுமானதாகும். ஆனாலும் அவர் பேரா. ரா.பி. சேதுபிள்ளை அவர்களை மேற்கோள் காட்டி மரைக்காடு என்பதே சரியான பொருளாகும் என்று கூறியதால் அதற்கும் ஒரு விளக்கத்தை முன் வைக்க வேண்டியுள்ளது.


பேரா. ரா.பி. சேதுபிள்ளையை மேற்கோள் காட்டி பாவாணரும் அது அக்காலத்தில் மான்கள் வாழ்ந்த காடு என்பதால், மரைக்காடு என்பது ஆரியர் வருகைக்குப் பின் மறைக்காடு என்று திரிந்ததாக அவர்தம் நூலில் கூறியுள்ளார்.


இவ்விரு தமிழ் அறிஞர் வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. தமிழ் மொழி அயலார் மொழியின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கத் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் ஆரம்பித்தக் காலத்தவர். இவ்விருவரும் அவ்வியக்கத்தின் முன் அணியில் நின்றவர். இதற்கு காரணம் அவர்தம் புண்பட்ட மனமே. இவ்விருவரில் பாவாணர் பிந்நாளில் திராவிட பாசறையில் வளர்ந்தார்.  


அக்காலத்தில் மறை என்றாலே அச்சொல் சைவ தென்புல வைணவத் திருமுறைகளில் வேதத்தைக் குறிக்கும் என்ற கருத்து அயலார் மொழி சார்புடையோரிடையே இருக்கமாகப்  பற்றிருந்து வந்துள்ளது. வைணவ பிரபந்தத்தில் மறை என்னும் சொல் வேதத்தைக் குறித்தது என்றால் அதனை நான் மறுக்கமாட்டேன். ஆனால் அதே நிலை தென்னாடுடைய சைவத்தின்  மேல் ஏற்றுவது பொருந்தாது காரணம் தென்னாடுடைய சைவத்திற்கு வேதமும் ஆகமும் இறைவன் அருளிய சுருதி நூலாகும். ஆகையால் மறை என்ற சொல் வேதம் ஆகமம் ஆகிய இரண்டையுமே குறிக்கும். இவ்விரண்டு நூலுமே அயலார் மொழியில் இருந்ததால் அதுவே அக்கால தமிழறிஞரின் வெறுப்புக்கு ஆளாகியது. மேலும் இவை வர்ணாசிரமத்தை ஏற்பன. ஆகையால், மறை என்பது வேதமானாலும் சரி ஆகமமானாலும் சரி இரண்டையும் ஏற்பதில்லை என்று  முழு மூச்சில் அவற்றை விலக்குவாரானார் அக்கால தமிழ் பற்றுடைய தமிழ் அறிஞரில் ஒரு பகுதியினர்.


அதன்காரணமாகவே பேரா. சேதுபிள்ளையும் சரி பாவாணரும் சரி மரைக்காடு என்பதை அவர்தம் ஆரூடமாகவே கூறினாரே ஒழிய அதற்கான உண்மைச் சான்றுகளை முன் வைக்க இயலவில்லை.


திருஞானசம்பந்தர் வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே என்று பாடியதில் மாமறைக் காடு என்பதனைப் பெரிய காடு அல்லது சிறந்த காடு என்று பொருள் கொள்வோமா அல்லது பெரிய மான் அல்லது சிறந்த மான் என்று பொருள் கொள்வோமா? கல்விமான்களைச் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.


ஒட்டு மொத்த கருத்தாக மறைக்காடு என்பதே நூல் ஆதாரத்தின் வழி பொருந்தும் மாறாக மரைக்காடு என்பதற்கு நூல் ஆதாரமில்லை என்பதால் அதை விடுத்து வேதாரண்யம் திருமறைக்காடு என்று தன் இயற்பெயரில் விளங்குவதே சிறப்பாகும். சிவசிவ.



சிவபிரான் வேதம் = மறை ஓதுபவன் என்று ஆயிரக் கணக்கான பாடல்கள்
தமிழ் இலக்கியத்திலே உள்ளன. அதனால்தான் பழந்தமிழர் 7-ஆம் நூற்றாண்டில் இருந்து
மறைக்காடு = வேதாரண்யம் என்கின்றனர். ஆனால், நாம் பார்ப்பது சங்க காலப்
பெயர் எதுவென.

ர/ற மாற்றம் பல இடங்களில் நிகழ்வது. கொங்குநாட்டில் உடுமலை - மூணாறு நடுவழியில் மரையூர் உள்ளது.
பலரும் மறையூர் என எழுதுகிறார்கள். நாகை அருகேயும் மரையூர் உண்டு.
மரை (antelope) என்றாலே பொருள் மறந்த நிலையில் இவ்வாறு ரகர றகர திரிபு இயற்கை.
இறாமசாமி, றாமசாமி, றங்கணன், சீறங்கம், ... என்றெல்லாம் ஓலைச்சுவடிகளில்,
கல்வெட்டுகளில் காணலாம்.

ஆர்க்காடு = ஆத்தி மரக் காடு. ஆற்காடு ஆகி, ஆறு (6) என எடுத்து ஷடாரண்யம் என


இதுபோல தெளிவாக தவறு என்று தெரிந்து, தவற்றின் மேல் புராணக் கதைகள் எழுதப்பட்டிருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்வதை நிறுத்த வேண்டும்.

தவறான பின்னணியில் கட்டப்பட்ட கதைகள் தொகுக்கப்பெற்று அவற்றை blacklist  செய்து அவற்றைப்  புறக்கணிக்க வேண்டும். 

தீர ஆய்வு செய்து ஊர்களின் பழந்தமிழ்ப் பெயர்களை மீட்க வேண்டும் (கடவுளர் பெயர்களையும் கூட   மீட்கலாம்.) 

ஒவ்வொரு ஊருக்கும் என முயலாமல் ஒரு பொது அரசானை வெளியிட்டு, பெயர்களை  ஆய்வுக் குழுவிடம் சமர்பித்து,  குழு உண்மையறிந்து கூறிய பரிந்துரையில் மீட்குமாறு செய்யலாம்.  

ஒவ்வொரு புத்தாண்டு தொடங்கும் பொழுது இன்றிலிருந்து இந்த அஞ்சல் குறியீடுகளின் பெயர் இனி இது என்று அறிவிக்கலாம். முன்னர்  அரசு ஆதரவில் மாற்றப்பெற்றவற்றை இந்நாளில்  அரசு உதவியுடன் அரசாணையின் வழியில் மாற்ற வேண்டும்.

Cape Comorin, Cape Calimere,  Porto Novo போன்று அழைபதையும் தவிர்த்துவிட வேண்டும். 



.... தேமொழி 


 
மொழிபெயர்த்தனர். இதனைக் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். ஏர்க்காடு - ஏற்காடு
எனப் பிழைபட எழுதுகின்றனர். 

வேதாரண்யம் பகுதி மரைகளுக்குச் சிறப்பான பகுதி - தமிழ்நாட்டிலேயே.
ர/ற மாற்றத்தை உணராமல் மறைக்காடு என்று கொண்டு வேதாரண்யம் என ஆயிற்று.
பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் - தேவாரம். இதன் பழைய பெயர்
பெண்ணைநல்லூர் என்பது தெளிவு. எழுத்துச் சான்று வெண்ணெய்நல்லூர்,
எனவே, வெண்ணெய் புராணங்களை அப்படியே எடுத்துக்கொள்வதா??
பெண்ணைநல்லூர் (> வெண்ணைநல்லூர்) பழம்பெயர் என்பதுபோல, மரைக்காடு (> மறைக்காடு) பழம்பெயர். 

வேதாரண்ய புராணம் மறைக்காடு என்ற பெயரை வைத்து உருவானது.
கதவு மறைத்திருந்ததாம். பாடல் பாடத் திறந்தது என்கிறது பெரியபுராணம்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும்  வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப்பட்டிருந்த தென்றும்,  
         கண்ணினால் உமைக்காணக் கதவினைத் 
         திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே” 
என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும்மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும். 

நா. கணேசன்
 

 


2017-08-04 11:25 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயு மறைக்காட்
> டிரவு மெல்லியும் பகலும் ஏத்துதல் குணமென லாமே” (2:91:5)

பொழிப்புரை: குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும் அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும்

> குங்கும மரங்கள் அடர்த்தியானவை. இது நான் மலேசியாவில் கண்ட அளவுக்குச்  சொல்கிறேன். இத்தகைய மரங்கள் நீண்டு உயர்ந்து வளர்ந்த சோலையில் கதிரவனின் ஒளிக்கதிர் தரையில் படா வண்ணம் மறைத்து நிற்கும். அத்தகைய சோலையில் கதிரவன் ஒளிகற்றை மறைக்கும் தன்மையால் காரணப்பெயராகி மறைக்காடு என்று பெயர் பெற்றது என்றால் அது பிழையாகுமா?

புதிய சிந்தனை.  நீங்கள் மலேசியாவில் காண்பது குங்கிலிய மரக் காடுகள் என நினைக்கிறேன். அவை Shorea இன மரங்கள். கேரளாவில் அதிகம் உண்டு.

மரவம் என்பது குங்கும மரம். குங்கும மரம் =  Saffron tree. இது காஷ்மீரத்தில் உள்ள மரம். தமிழ்நாட்டுக் கடற்கரையில் இல்லாதது. தேவாரத்தில் உள்ள மரவ மரம் = கடம்பு மரம். வெண்கடம்பு. இது ஊர்ப்பெயர் என்றால் மரவக்காடு என்று இருக்கும். கடப்பங்காடு, கடம்பவனம் என்றும் வரும். அப்பெயர்கள் மறைக்காட்டுக்கு இல்லை. தமிழ்நாட்டிலேயே ஒருவகை மரைகள் (antelopes) மறைக்காட்டில் தான் மிக அதிகம். எனவே தான்,

மரைக்காடு மறைக்காடு ஆனது என பேரா. ரா. பி. சேதுப்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். கடம்பவனம்/கடப்பங்காடு = மதுரைக்கு ஒரு பெயர்.

நா. கணேசன்


பேரா. தி. நெடுஞ்செழியன், 2008-ல் தினமணிக்கு எழுதிய கடிதம்:

https://groups.google.com/forum/#!msg/mintamil/vAB9A-DmoNY/u8TTLGpoaaMJ

திருமறைகாடு வேண்டாம் -  மரைக்காடு வேண்டும்


பெறுநர்

ஆசிரியர் அவர்கள்

N. Ganesan

unread,
Nov 5, 2019, 9:27:09 PM11/5/19
to மின்தமிழ், vallamai
வேதாரண்யம் பெயர் மாற்றம் திரும"றை'க்காடு என்பதில் இருவேறு கருத்துகளால் குழப்பம்
https://www.dinamani.com/all-editions/edition-trichy/2009/jun/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-27362.html  

Published on : 20th September 2012 12:46 PM  | 
வேதாரண்யம், ஜூன் 17: வேதாரண்யம் என்று அழைக்கப்படும் ஊர்ப் பெயரை திருமறைக்காடு என மாற்றம் செய்வது தொடர்பாக வியாழக்கிழமை அரசு கருத்துரு பெற உள்ளது.

இந்நிலையில், வேதாரண்யம் என்ற பெயரை திரும"றை'க்காடு என அழைப்பதில் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளதால், தமிழ் ஆர்வலர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்ற பகுதியாகும். இது திருமறைக்காடு என தமிழில் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வேத ஆரணியம் என மாற்றம் பெற்று, தொடர்ந்து வேதாரண்(ணி)யம் என்று மறுவியது.

வேதம்- மறை, ஆரண்யம்-காடு எனப் பொருள். இங்குள்ள கோயிலில் இறைவன் மறைக்காட்டு உறையும் மணாளன் என அழைக்கப்பட்டுள்ளார். அதுவே, வடமொழியில் வேதாரண்யேஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டது.

நான்மறைகளும் இறைவனை வணங்கி வழிபட்டதாகவும், பின்னர், அவை மரம், செடி, கொடிகளாக இன்றும் நின்று வருவதால், மறைக்காடு எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தங்கியிருந்த இடமே இங்குள்ள நாலுவேதபதி என்றும், அவை பூக்கள் பறித்த பகுதியே புஷ்பவனம் எனவும் இங்குள்ள கிராமங்களுக்கான பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

கோயிலில் சோழ மன்னர்கள் காலம் தொடங்கி, விஜய நகர மன்னர்கள் துளஜாஜி மகராஜா காலத்து கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் திருமறைக்காடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் ஏழு திருமுறைகளிலும் உள்ள தேவாரப் பதிகங்களில் திருமறைக்காடு எனக் குறிப்பிடப்படுகிறது. வேதங்கள் கோயிலின் கதவுகளை மூடிச் சென்றதாகவும், அவற்றைத் திறக்க, பின் அடைக்க தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரது பாடல்களிலும், சுந்தர் பாடிய பத்துப் பதிகங்களிலும் இவ்வூரின் பெயர் வேதவனம், மறைவனம், மறைக்காடு எனக் குறிப்பிடப்பட்ட சான்றுகள் உள்ளன.

மரைக்காடு: மரை என்றால் மான் எனப் பொருள். இங்கு இன்றும் அரிய மான் இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இதன் காரணமாகவே மான்கள் வளரும் காடு எனப் பொருள்பட அமைந்த திருமரைக்காடு, பிற்காலத்தில் திருமறைக்காடு என மாறி உள்ளது எனவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

சமயத்தைப் பரப்பும் நோக்கம் கொண்டே மரை என்பது மறை (வேதம்) என மாற்றி அமைக்கப்பட்டதாக ஒரு தரப்பினரும், மறை என்பதற்கு வேதம் என்பது மட்டும் பொருள் அல்ல, மறை என்றால் சிறந்த இலக்கியத்தைக் குறிக்கும் என்றும், அதற்கு உதாரணமாகத் திருக்குறளை உலகப் பொதுமறை என அழைப்பதை மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெயர் மாற்றம்: வேதாரண்யத்தை திருமறைக்காடு என்று தமிழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனக் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை வைத்தன.

இந்நிலையில், திருமறைக்காடு எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாகக் கருத்தறிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் ஆர்வலர்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றம் செய்ய அரசு கருத்துரு பெறும் நிலையில், திருமறைக்காடா அல்லது திருமரைக்காடா என்பதில் தமிழ் ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ள இருவேறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 18) மாலை 4 மணிக்கு ஆர்வலர்களிடம் அரசு கருத்துரு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

N. Ganesan

unread,
Nov 5, 2019, 9:34:41 PM11/5/19
to மின்தமிழ், vallamai
By Linguistic Archaeology, Tamil scholars have shown the original name in Pre-Sangam and Sangam days
was maraikkaaDu, with marai = antelopes. maraikkaaDu as the forest where blackbucks (antelopes) roam.
The PuraaNa stories about Vedas worshiping Shiva in this forest is due to conflation between r and R
in Tamil script. This happened during the  7th century when largely the pronunciation differences
start to vanish for r vs. R among Tamils. Same thing as n vs n2 is largely gone.  

People not used to scholarly research cite Tevaram, but Tevaram itself says the blackbucks
worshiping Shiva. ...
~NG

N. Ganesan

unread,
Nov 6, 2019, 7:26:30 PM11/6/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Jean-Luc Chevillard, Eva Wilden

On Thu, Aug 10, 2017 at 6:26 AM Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com> wrote:
Post-Scriptum

Interestingly, there is a place called

அறியா மறைக் காடு

Ariyamaraikadu, Tamil Nadu 614616, India

Dear JLC,

I think I mentioned this before. There is no "அறியாமறைக்காடு” in Tamil Nadu.
ஆலமரம் > ஆலமரம் என்றும், புளியமரம் > புளியாமரம் என்றும் பேச்சில் வரும்.
அதுபோல், அரியமரைக்காடு அரியாமரைக்காடு என்றும் வழங்கும்.

”அறந்தாங்கி வட்டம் கடவாக்கோட்டை, கீழச்சேரி, அரியமரைக்காடு, கந்தர்வக்கோட்டை வட்டம் ஆத்தங்கரைவிடுதி  ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளும்,   ” 
 
பின்னர் புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு இயக்க ஆலோசகர் திருப்பதி மற்றும் அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குநர் எம்.சக்திவேல் ஆகியோர் அரியமரைக்காடு கிராமத்தில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது  

071பிடாரிக்காடு
072மேல்மங்களம்
073அரியாமரைக்காடு
074சீனமங்களம்
075களக்குடி
 (I think  சீனமங்களம்  is originally cinamangkalam (< jinamangalam, a land grant village of Tamil Jainas). Compare Ciinaapuram of Kongunadu,
connected with PavaNanti Munivar, Nan2n2uul aaciriyar.)

பொள்ளாச்சி, உடுமலை அருகே மூணாறு மலைகளில் மரையூர் உள்ளது பற்றிப் பல ஆண்டுகளாய் குறிப்பிட்டுள்ளேன்.
அரியமரைக்காடு, மரையூர், ... போன்றதே மரைக்காடு. இதுவே, மறைக்காடு எனப் பின்னர் திரிந்துள்ளது.

N. Ganesan


at location:
https://www.google.de/maps/@10.1492914,79.1061254,15.25z

See screen shot.

-- jlc

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


########################
Dear Sir,

greetings from Hamburg (Germany).

As a small contribution to this debate,
here is a list of villages in TN which have "kadu" in their names

I have just extracted it from a list of
"List of the 16300 Revenue Villages for Tamil Nadu in december 2000"
which I had compiled long ago while working on the "Digital Tevaram" CD
based on some T.Nadu information data bases
of the {National Informatics Center (NIC), Tamil Nadu State Unit}
(online at that time).

I don't have a personal opinion on the debate concerning மரை / மறை

-- Jean-Luc Chevillard

https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard

https://twitter.com/JLC1956


########################

---------- REVENUVI.HTM
...........................
<li>Aravankadu [[Villupuram_DISTRICT: Sankarapuram_TALUK]]
<li>Ariyamaraikadu [[Pudukkottai_DISTRICT: Aranthangi_TALUK]]
<li>Asaveerankudikkadu [[Ariyalur_DISTRICT: Sendurai_TALUK]]
............................
Reply all
Reply to author
Forward
0 new messages