பொய்யா மொழி
(குறட்பா)
ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.
நாவிதர் கலகம்
(குறட்பா)
தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.
The book "Gödel, Escher, Bach: An Eternal Golden Braid" by Douglas
Hofstadter inspired both the kurals.
பொய்யா மொழி is a variant of the liar paradox[1]: "The following
sentence is false. The preceding sentence is true."
நாவிதர் கலகம் is the barber paradox[2]: "The barber shaves only those
men in town who do not shave themselves. Who shaves the barber?"
இந்த மாதம் படமொழிக் கவியரங்க மாதம். 'பொய்யா மொழி' குறளுக்கு உரிய
படமாய், M. C. Escher-ன் "Drawing Hands"[3] படத்தைக் கொள்ளலாம்.
[1] http://en.wikipedia.org/wiki/Liar_paradox
[2] http://en.wikipedia.org/wiki/Barber_paradox
[3] http://en.wikipedia.org/wiki/Drawing_Hands
கடந்த சில மாதங்களாகத்தான் யாப்பிலக்கணம் கற்று வருகிறேன். பாடல்களில்
குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், நன்றியுடன் திருத்திக்
கொள்கிறேன்.
நன்றி.
அர்விந்த்
http://mstamil.com
குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.
சென்ற மாதம் இட்ட பாடல்கள் சரியாக வந்து சேர்ந்தனவா என்று தெரியாததால்
அவற்றை மீண்டும் இடுகிறேன்.
பொய்யா மொழி
(குறட்பா)
ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.
நாவிதர் கலகம்
(குறட்பா)
தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.
குறிப்புகள்:
பொய்யா மொழி is a variant of the liar paradox[1]: "The following
sentence is false. The preceding sentence is true." பாடலுக்கான படமாக
M. C. Escher-ன் "Drawing Hands"[2] படத்தைக் கொள்ளலாம்.
நாவிதர் கலகம் is the barber paradox[3]: "The barber shaves only those
men in town who do not shave themselves. Who shaves the barber?"
The book "Gödel, Escher, Bach: An Eternal Golden Braid" by Douglas
Hofstadter inspired both பொய்யா மொழி and நாவிதர் கலகம்.
[1] http://en.wikipedia.org/wiki/Liar_paradox
[2] http://en.wikipedia.org/wiki/Drawing_Hands
[3] http://en.wikipedia.org/wiki/Barber_paradox
பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
எலிக்கேணி வள்ளல்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.
சென்ற மாதம் இட்ட பாடல்கள் சரியாக வந்து சேர்ந்தனவா என்று தெரியாததால்
அவற்றை மீண்டும் இடுகிறேன்.
..............
தங்கள் நேரத்திற்கு நன்றி.
> /குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று /
> 'குளியல் அறையிலன்று ....' என்பதுபோல் இருந்தால் வகையுளியைத் தவிர்க்கலாம்.
> விளாங்காய்ச்சீரையும் தவிர்க்கலாம்.
பின்இயைபும் அமைகிறது, "*ஓர்* நாள்" என்ற பிரயோகமும் தவிர்க்கப்
படுகிறது. அருமை! தங்கள் ஆலோசனைப் படியே "அறையிலன்று" என்று மாற்றிக்
கொள்கிறேன். மிக்க நன்றி.
>
> பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' வாசித்திராவிடில், வாசியுங்கள்.
>
சமீபத்தில்—இந்தப் பாடல் எழுதிய பின்—வாங்கிப் படித்து வருகிறேன்.
"எழுதிய பின்" என்பது ஒரு சாக்கு கிடையாது. இனி விளாங்காய்ச் சீர்களைக்
கவனத்தில் கொள்கிறேன்.
பாடலில் பின்வரும் விளாங்காய்ச் சீர்களையும் மாற்றி அமைத்துக் கொள்கிறேன்.
எம்பினாலும் => எம்பியும்
அலற"ஆஆ...!" => அலற"ஆ...!"
> /அதுசமயம் உள்ளே அடியேனும் போக, /
>
> இப்பாடலில் 'அடியேன்' என்றதன் காரணம் என்ன?
பாடல் முழுவதும் தன்மை இடத்தில் அமைந்திருக்க, "my humble self" என்ற
அர்த்தத்தில்—ஈற்றடியின் தொனியுடன் முரண்படும் வகையிலேயே—பயன்படுத்தி
உள்ளேன்.
>
> /கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற/
> ?
>
மௌனக் கருப்பாய் அலற: எலியின் கரிய கண்கள் பயத்தில் நடுநடுங்கி அலைந்ததை
விவரிக்கும் முயற்சி.
ஓ: மன உருக்கத்தைக் குறிக்கும் சொல்.
தங்கள் கவனத்திற்கு மீண்டும் என் நன்றிகள்.
அன்புடன்,
அர்விந்த்
>
>
>
> 2012/4/8 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> எலிக்கேணி வள்ளல்
>> (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
>>
>> குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
>> குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
>> அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
>> கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
>> எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
>> எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
>> கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
>> சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
>> சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
>> சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
>> எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
>> கலியுக வள்ளல்யாம் காண்.
>>
கி.வா.ஜ. அவர்களின் "கவி பாடலாம்" நூலில், வெண்பாவின் இலக்கணத்தைப்
பேசும் பகுதிகளில் விளாங்காய்ச்சீர் பற்றிய குறிப்புகள் கண்டிலேன்.
ஆனால், அதே நூலில், "கேள்வி பதில்" பகுதியில் சமீபத்தில் கண்டது:
கேள்வி 15. வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்
கால்பற்றிற் காண்போம் கதி.
இந்தக் குறள் வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?
பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை
நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது
தவறு.
*தவறு* என்றே சொல்லி விடுகிறார்!
அர்விந்த்
என்ற காளமேகப் புலவர் பாடலின் பாதிப்பில் எழுதியது:
வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)
கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சில்லெனக லைந்தர் சிறார்.
(நண்பனின் துணைவி பெயர் "திரு"; ஆனால் நானறிந்து கருவில் அல்ல
கல்லூரியில் தான் கைத்தலம் பற்றினர்.)
உடன் நண்பனுக்குச் சமாதானமாய் எழுதிய ஒரு குறட்பா:
சிகரம் ரசிப்பேன்; "சிறப்புரை" தொட்டு
விகடம்யார் மேற்சூட்டு வேன்.
பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
அன்புடன்,
வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)
கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சில்லெனக லைந்தர் சிறார்.
(நண்பனின் துணைவி பெயர் "திரு"; ஆனால் நானறிந்து கருவில் அல்ல
கல்லூரியில் தான் கைத்தலம் பற்றினர்.)
உடன் நண்பனுக்குச் சமாதானமாய் எழுதிய ஒரு குறட்பா:
சிகரம் ரசிப்பேன்; "சிறப்புரை" தொட்டு
விகடம்யார் மேற்சூட்டு வேன்.
அன்புடன்,
பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
--
On Apr 8, 2:21 am, "Ms. Tamil" <msta...@mstamil.com> wrote:
> எலிக்கேணி வள்ளல்
> (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
>
> குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
> குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
> அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
> கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
> எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
> எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
> கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
> சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
> சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது.
மிக்க நன்றி ஐயா.
என என்னும் வினையெச்சத்தின் பின் வரும் வலி மிகும் என்று அறிந்து
கொண்டேன். (தளை தட்டுவதைத் தவிர்க்க வகையுளி பிரயோகிக்க
வேண்டியிருந்தது: சில்லெனக்க லைந்தார் சிறார்.)
> துள்ளிக் கலைந்தார் சிறார் என்னலாம்.
"துள்ளிக் கலைந்தார் சிறார்" எனும் பொழுது எதுகையும் சிறப்பாக அமைகிறது,
வகையுளியும் தவிர்க்கப்படுகிறது. எனினும் மோனை கருதி, "சிள்ளென்(று)
அகன்றார் சிறார்" என்பதுபோல் மாற்றலாமோ?
சிள்ளெனல் — expression of rapidity, swiftness, விரைவுக் குறிப்பு; of
being noisy, boisterous, ஆரவாரக் குறிப்பு
(http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.4:1:7155.tamillex).
கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சிள்ளென்(று) அகன்றார் சிறார்.
பிழைகளைச் சுட்டி, திருத்தங்கள் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள் ஐயா.
மிக்க நன்றி ஐயா. திருத்திக் கொள்கிறேன்:
குளியல் அறையிலன்று குட்டிஎலி ஒன்று
குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
எப்படி எம்பியும் ஏழடிச் சன்னல(து)
எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆ...!"
சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.
நன்றி.
அர்விந்த்
குருவிக் குடும்பமதன் குஞ்சுடன் தூண்மேல்
பரண்மேல் தலையணைப் பஞ்சுள் அணில்கள்
இரவுவா சிப்பில் இருக்கைக் கடியில்
சிரசற்ற முண்டம், சிரசு
ஈற்றடி "கரம்நீட்டும் முண்டக் கறுப்பு" என்றும் பாடம்.
வேறொரு இழையில் "அறுதலை" பேசப்பட, சிறுவயதில் படித்த "திகில்" மாதநாவலின்
தாக்கத்தில் எழுதியது. பிழைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
ஏழுகடல் தாண்டிப்பின் ஏழுமலை தாண்டிப்பின்
பாழுங் குகைக்குள்ளே பச்சைக் கிளிக்குள்ளே
ஆருயிர் காத்த அசுரன் குடிபெயர்த்தான்
பாரியாள் வாங்கியகைப் பைக்கு.
பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
(வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு —ஞானக்கூத்தன்)
2013/1/2 Vis Gop <vis...@gmail.com>:
நரமா மிசம்தின்னும் நால்வர்ஊர் சுற்றப்
பரதேசம் வந்தனர் பாத நடையாக.
வந்த உடனே வயிற்றுப் பசிகிள்ள
எந்தக் கடைதரும் இட்லிச் சுவையதிகம்
என்று வினவியறிந்(து) ஏராள மானவர்கள்
நின்ற கடைநோக்கி நேராகச் சென்றனர்.
கல்யாண வீடாய்க் கடையில் அமளியன்று.
கல்லாவில் வீற்ற கறார்ப்பார்ட்டி பேரெழுதிக்
கூவி வரிசையாய்க் கூப்பிடக் காத்திருந்தே
ஆவியா யிற்றெம் அசுரப் பசியென்று
நாவடக்கி மெல்ல நகர்ந்தனர் நம்கதையின்
மூவரும் பார்த்தபடி மூஞ்சு.
Inspired by the xkcd comic http://xkcd.com/30.
பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
விடுப்புக் கழிந்தெங்கள் வீடடையக் கண்டோம்
செடியிலொற்றை ரோஜா சிகப்பாய் — உடனே
குதித்தோடித் தம்பி குதூகலமாய்த் தாவிப்
பிடித்துத்தின் றானிதழ் பிய்த்து.
பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
ஆப்பை அசைத்த அசுரன் வடித்திட்டான்
யாப்பில் வருத்தத்தை யாத்து! :-)
(வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு —ஞானக்கூத்தன்)
2013/1/2 Vis Gop <vis...@gmail.com>:
> கடைபல ஏறிக் கரன்சியை வீசி
> அடைத்தாள் திணித்தே அதனை - எடைகூடத்
> திக்குமுக் காடித் திணறி அசுரனுயிர்
> சிக்கியது பையடியில் செத்து! :-)
>
> 2013/1/2 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> குழப்புங்குடி
>> (இன்னிசை வெண்பா)
>>
>> ஏழுகடல் தாண்டிப்பின் ஏழுமலை தாண்டிப்பின்
>> பாழுங் குகைக்குள்ளே பச்சைக் கிளிக்குள்ளே
>> ஆருயிர் காத்த அசுரன் குடிபெயர்த்தான்
>> பாரியாள் வாங்கியகைப் பைக்கு.
2013/1/8 Vis Gop <vis...@gmail.com>:
உயர்ந்திருந்த உற்சாகம் ஓய்ந்திட இட்லி
வயிறுக்கு மட்டுமல்ல வந்த ஒருவர்
உயிருக்கும் வைத்த(து) உலை! :-)
அப்படியே ஒன்பதாம் அடியில் ஒரு காற்புள்ளி இட்டுக் கொள்கிறேன்:
காத்திருந்த நேரம்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
நரமா மிசம்தின்னும் நால்வர்ஊர் சுற்றப்
பரதேசம் வந்தனர் பாத நடையாக.
வந்த உடனே வயிற்றுப் பசிகிள்ள
எந்தக் கடைதரும் இட்லிச் சுவையதிகம்
என்று வினவியறிந்(து) ஏராள மானவர்கள்
நின்ற கடைநோக்கி நேராகச் சென்றனர்.
கல்யாண வீடாய்க் கடையில் அமளியன்று.
கல்லாவில் வீற்ற கறார்ப்பார்ட்டி பேரெழுதிக்
கூவி வரிசையாய்க் கூப்பிட, காத்திருந்தே
ஆவியா யிற்றெம் அசுரப் பசியென்று
நாவடக்கி மெல்ல நகர்ந்தனர் நம்கதையின்
மூவரும் பார்த்தபடி மூஞ்சு.
அன்புடன்,
அர்விந்த்
2013/1/8 Vis Gop <vis...@gmail.com>:
கட்டவண்டி: http://groups.google.com/group/santhavasantham/msg/35ba33319efca4ff
அன்புடன்,
அர்விந்த்
2013/1/10 Vis Gop <vis...@gmail.com>:
"ஏப்பமெல்லாம் எண்ணமல்ல" என்றாலும் கூவிடுவேன்
யாப்பில் அமைந்தால் எழுத்(து;)ஏதும் — பாப்படிக்காக்
காரணம் தீர்ந்துவரும் கைச்சரக்குத் தான்ஐயா. :-)
(ஈரிடுகை இன்னும் இருக்கு.)
சில்லெனச் சன்னல்சீட் சிக்க வெளிப்புறம்
அல்மோஸ்ட் நகரம் அழகு.
"விபத்து பகுதி:" விடுபடும்"ப்" எண்ண
விபத்தே நிகழ்ந்து விடும்!
பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
அன்புடன்,
அர்விந்த்
"ஊக்குவிக்கும்" என்றிட்(டு) உறக்கம் தொலைத்ததுண்டு!
வாக்கில் தடுமாற்றம் வந்தஇச் சாக்கில்
சுடாமல்(!) பொறுமையாய்ச் சுட்டுதற்கு நன்றி. :-)
இடுகைசரி செய்வேன் இனி.
மீண்டும் நன்றி.
அர்விந்த்
உளங்கசிந்த நேரம் உளறினாய் நீச்சற்
குளத்துள் சிறுநீர் குசும்பாய்க் கழித்ததை.
"யாரிடமுஞ் சொல்லாதே" என்றாய். இதைப்போய்நான்
யாரிடஞ் சொல்லுவேன்? யாப்பிலொரு பாட்டினை
யாத்து வெளியிட லாம்.
சிறுவயது விஷமத்தைச் சிறுபிள்ளைத்தனமாய்ப் புனைந்தது! பாடலில் பிழைகள்
கண்டால் சுட்ட வேண்டுகிறேன்.
நன்றி.
அர்விந்த்
[1] ஸ்ரீரங்கத்துக் கதை "அரசு பகுத்தறிவுப் பாசறை"யின் கடைசி வரி.
நன்றி.
அர்விந்த்
2013/1/19 Vis Gop <vis...@gmail.com>:
அன்புடன்,
அர்விந்த்
2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
இடாதுசரி செய்வேன் இனி.
(ஈற்றடியில் இரண்டாந்தர எதுகை சரிசெய்தேன், திரு. அ.ரா. அவர்கள்
ஈற்றடியில் குறிப்பிட்ட பாடல் இதுவே என்ற புரிதலில்.)
நன்றி.
அர்விந்த்
2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி
பழக விரும்பியநப் பாசை எழுதிடத்ஈண்ட குறையோ எனது.
தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
நன்றி.
அர்விந்த்
> தூண்டற்குக் கொண்ட தெதுகையிலை முன்பாட்டில்
> வேண்டும் இடுகைக்கும் வேறு.
>
> அ.ரா
> Visit arajagopalan.blogspot.com
>
> 2013/1/19 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி[1]
>> பழக விரும்பியநப் பாசை எழுதிடத்
>> தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
>> கொண்ட(து) எனது குறை.
>>
>> [1] ஸ்ரீரங்கத்துக் கதை "அரசு பகுத்தறிவுப் பாசறை"யின் கடைசி வரி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
This message is eligible for Automatic Cleanup! (girijavar...@gmail.com) Add cleanup rule | More info
பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
என்பதைபூஞ்சை யிதயம் பொலியணுமா? மேடையில்நீ
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
என்று மாற்றினால் இன்னும் சிறக்குமோ?
வரதரசன்.அ.கி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
Thanks and Regards
Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP: 91852063
Email: girijavar...@gmail.com
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2013/3/5 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பொன்மகளின்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா முன்குனிந்து
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பூவிற்போள்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா வாடுமுன்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா போடும்முன்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> வணக்கம் புலவர் இராமமூர்த்தி
குறட்பாச் சாரல் குற்றாலச் சாரலாய்க் குளிர்விக்கிறது, நன்றி ஐயா. :-)
சந்தவசந்தச் சந்திப்பின்போது தங்கள் கைகளால் "எழுத்தும் பேச்சும்"
புத்தகம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. குறிப்பாய்த் "தன்னந்தனி ஆள்"
கட்டுரை படித்தபின் *தனிமகன்* என்ற சொல், எழுத்தாளர் க.நா.சு.
சொன்னதுபோல், ஆலயமணியின் கடைசி ஒலிபோல அகக்காதில் இன்னும்
ரீங்காரமிடுகிறது!
நன்றி!
அர்விந்த்
The Irula are more hands-on in their approach. When they find a rat burrow in a rice field, they plug all the exits, save one. They take an earthen pot with a hole, the size of a one rupee coin, punched through the bottom, fill it with green leaves, and set the leaves on fire. They place the mouth of the pot flush against the burrow entry, and blow through the pot’s hole. After smoke has filled every underground chamber, they excavate the burrow, and pull out all the asphyxiated rats. In the case of field rats, there might be a stockpile of grain inside the burrow as a bonus.
At sunset, the Irula pile up dry thorns in a fallow field and barbeque the rats. The fur is singed and removed along with the guts, and the rest roasted. Children vie for the crunchy tails and feet. Some of you may recoil in disgust, but these are clean, field rats grown fat on rice grain. The Irula will not eat filthy bandicoots or smelly house rats. Those are killed and discarded.
அளப்பரிய தொண்டை ஆற்றியோனும் வாழ்க, போற்றினோனும் வாழ்க!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
கனலோ தவமோ கனியோநன் யாப்பில்
நயமடி பாரதி நாவுமுதல் அடி:வல்லினம் - 5மெல்லினம் - 5இடையினம் - 5இரண்டாமடி: ஒவ்வொன்றிலும் 3.
ஒருகை பார்ப்போம்னா இதுதானா? நன்று பார்ட்ஸ்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/pimlFptMm4g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.