இந்திய புத்தமத வரலாறு குறித்த தவறான செய்திகள்

268 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 1, 2016, 1:05:42 AM11/1/16
to மின்தமிழ்
வேளாங்கண்ணி மாதா கோயில் - ஒரு கிரித்தவ மோசடி
இந்து மதத்தினரும்  பௌத்த மத அழிவில் பங்கேற்றனர் என்பதை வரலாற்றில் காணலாம் என்பதைக் குறிக்க  
கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

///உலக அளவிலோ, இந்திய அளவிலோ  எந்த ஒரு சமயமும் இதில் குற்றம் இழைக்காமல் இல்லை. 
இன்றும் சிவன் கோவில்களுக்கு அருகில் புத்தர்  சிலைகளைத் தோண்டி எடுத்த வண்ணம் இருக்கும் செய்திகளைப் படிக்கிறோம்.///

இது குறித்த  சான்று கேட்ட பொழுது 
மேலதிகத் தகவலாக;
தஞ்சையில் அம்மாப்பேட்டை, அருந்தபுரம் கிராமத்துச் சிவன் கோவிலைச் சுத்தம் செய்யும்பொழுது கிடைத்த சிதைந்த புத்தர் சிலை பற்றிய செய்தியையும், 

குடவாசல் தாலுகா, கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுத்த சோழர் காலத்தைச் சேர்ந்த புத்தர் சிலை குறித்து, ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சைத் தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் கூறிய  "இது, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தச் சிலை, இந்தக் கிராமத்திலிருந்த பவுத்த பள்ளியில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படும், 66வது சிற்பம் இது."
என்று கூறிய  செய்தியையும்

இணைத்திருந்தேன்.  இவை மறுக்க இயலாதவாறு, நாளிதழ்களில் வெளியான செய்தி.

இந்த நோக்கில் மற்றொரு கட்டுரையை கீழே பகிர்கிறேன்.

தனியே இடப்படும் பதிவு அந்த இழையின் திசை திரும்பி விடாதிருக்கும் நோக்கில் இங்கு கொடுக்கப்படுகிறது...நன்றி ....


______________________________________________________________

Wrong depiction of Buddhist history in India

http://www.buddhistchannel.tv/index.php?id=22,10395,0,0,1,0#.WBgOaOMrLIV


Wrong depiction of Buddhist history in India

by Kishore Walanju, Mumbai, India, The Buddhist Channel, Aug 17, 2011


I am surprised that ‘Buddhist Channel’ has published such a misleading article written by 

Mr. Sandeep Sharma” Hindu Survival and Buddhist Disappearance During Medieval India”.


Mr. Sharma has changed history of Buddhist India by writing this article without any evidence or supporting data. Mr. Sharma (being ‘Brahmin’) is trying to protect his Brahmin ancestor who destroyed Buddhism in India.

The Prince Brahdrad ( the grand-son of King Ashoka) was killed by Brahmin Leader Pushyamitra Shung in a conspiracy and these Brahmins destroyed the monasteries and massacred Buddhist monks. (Reference, see “Saha Soneri Pane” – book written by Brahmin scholar Shri. V D Sawarkar). 

The Brahmins claims that they are ‘Aryans”, people with origins from the North Pole in Europe. They migrated to india and ruled by creating a caste system to maintain their supremacy (Reference, see ‘Artic home of theVedas’ book by Brahmin scholar Lokmanya Tilak. (available on Wikipedia) .

Let Mr. Sharma give proof of ancient texts where the word “Hindu” appears. Nowhere in Brahmins religious text book i.e. Vedas, Upanishdas, Manusmruti, etc does the word "Hindu" is written.

The people residing at the banks of the Indus river were called “Sindhu “ but were pronounced as Hindu by Turkish rulers because they could not pronounce ‘S’ (accent ‘H’ instead of ‘S’).

In the 16th century when the British came and ruled India they officially recognized these people (OBC, SC & ST) as Hindus. The ‘Vedic’ is a religion of the Brahmins, which basically is a veil of the Hindus. This is what is called Hindu religion.

Brahmins are always priest of the their gods and non-Brahmins (OBC, SC, ST) were made to worship Brahmins and their gods. Non-brahmins are not allowed to be priest nor given religious privileges.

It is true that Arab, Turk, Afgani, etc came and ruled India but they did not destroy Buddhist temples/monasteries. The Mahabodhi temple is still there in Bihar and Ajantha & Yellora, Sarnath, Sanchi and stupas and chaityas are still existing in India. 

It is a fact that Brahmins themselves destroyed ancient Buddhist Universities such as Nalanda ,Takshashila, Vikramshila . Surviving Buddhist monks ran off to Myanmar with a few texts, thus preserving whatever that was left.

Brahmins converted famous Buddhist temple such as Vithoba (Pandharpur), Balaji, Mahabalipuram , Somnath, Jagganath Puri into so called Hindu temples (reference; see ”History of Buddhism” by Brahmin scholar Mr.Apte)


Before the British came, India was ruled by Muslim rulers such as Aurangzeb and Tipu Sultan. Mr. Sharma has written false article stating that Hindu king resisted Muslim ruler and Hinduism could not be wiped out. 

There are evidence that Hindus (OBC, SC, ST) converted to Islam because they were being discriminated in the caste system introduced by Brahmins through their religious text ‘manusmruti’ (Reference, see “Gulamgiri” by scholar and social reformer Shri Jyotirao Phule).

May I request that the editorial team from Buddhist Channel to refrain from publishing such misleadings articles with regards to the true history of Buddhist India.

-------------
Note: OBC (other backward classes) , SC (scheduled caste) ST (scheduled tribes). These so called Hindus have now begun to follow Buddhism after knowing their past history . Recently 1.5 million from the "Maratha" community in Maharashtra State, India converted to a new movement called "Shivdharma". The founder Dr. A H Salunke of this new religion and who has written book "The great son of soil - Lord Buddha" said that once their people come out from the mindset of Hinduism under the new religion, then they will further convert them into Buddhism.


Seshadri Sridharan

unread,
Nov 2, 2016, 1:28:36 PM11/2/16
to mintamil, iraamaki, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, வேந்தன் அரசு

Shankaracaraya’s and Buddha’s teachings are a mixed bag

Similarly, with regards to Bhagavan Shankaracarya, Baba (P R Sarksr) has appreciated Shankaracaraya’s guideline - bhakti is the best - because this will help readers understand that in the new and revolutionary teaching of Ananda Marga, bhakti is treated as the top most. Likewise, Baba has highlighted Bhagavan Buddha’s teaching of - 'Cakuna Samvaro Sadhu...' - so everyone will understand that Ananda Marga philosophy places great importance on controlling one’s motor and sensory organs.

Side by side there are teachings from both Bhagavan Shankaracarya and Bhagavan Buddha which Baba has wholly rejected such as Shankaracarya’s theory of mayavada and Buddha’s nihilistic approach.

Baba says, “Máyáváda is full of contradictions from beginning to end. This sort of error is called pramáda in Sanskrit: error in the beginning, error in the middle and error in the end.” (1)

Ananda Marga philosophy states, "[Buddha's teachings] lack charm and do not expound a good reason for living. This explains perhaps why Buddha never considered the idea of forming a society." (2)

What to do?

Keeping this in mind, no Ananda Margii should think that we fully embrace all the doctrines of Bhagavan Shankaracarya and Bhagavan Buddha etc.

Bhagavan Shankaracarya and Bhagavan Buddha etc- could not deliver a truly dharmic set of teachings for all round progress of humanity. As Ananda Margiis, only Baba is our Polestar, and only Baba’s guidelines are 100% dogma-free and perfect for leading one on the path of salvation and building a great human society




How to Concentrate

November 1966, Ernakulam


Today a spiritual aspirant asked me regarding the process of mental concentration. His question was, how to concentrate on that Supreme Tangential Point? The reply should be known to all intuitional aspirants.


According to the standard of intellect, microcosms come within three broad categories. They are brute mind, human mind, and divine mind. Intuitional practice is a practice of transmutation of brute mind into human mind and human mind into divine mind.


In our human society we find microcosms of all these three varieties; that is, in our society there are brute microcosms in human structure – animals in human structure, animals in human framework; there is man in human framework; and there is God in human framework. And in our social life, all the problems are created by brutes in human structure; and those problems are experienced by men in human structure; and those problems are solved by gods in human structure. So a spiritual aspirant is to solve the problems of the society, he is not to create fresh problems.


Now, sádhaná is for all, intuitional practice is for all. You know, there are brutes in human structure, and there are brutes in animal structure; but the fundamental difference between these two brutes is that a brute in animal structure does not know that it is a brute in animal structure, but a brute in human structure does know that he or she is a brute in human structure. He or she should do something noble.


And the process of concentration is in the first phase physico-psychic, and in the second phase psycho-spiritual. A person has a physical body, a mind, and a spirit; so in the first phase the intuitional practice should be physico-psychic, starting from the arena of physicality and culminating in the common point of physicality and mentality. That is, the approach is physico-psychic. And in the next phase the approach will be psycho-spiritual, starting from the psychic realm and ending in the realm of spirituality.


The human mind is moving towards so many propensities; there are so many propensities in the human mind; and according to the complexity in the mind, the physical body also becomes more and more complex. The physical structure of an animal is less complex than that of a human being, because the human mind is also more complex than that of the animal. The number of glands in a human body is more than that in an animal structure, in an animal body. Now the first phase of the process is physico-psychic – that is, withdrawing the mind from different physical objects and bringing it to a particular point, and directing that point towards the realm of mind. And next is a phase of withdrawing the mind from different mental objects, from different mental pabula, and directing it towards the Supreme Subjectivity. Now this process of movement is the process of concentration.


Concentration is a major sádhaná, is a major intuitional sádhaná. But there are certain helping sádhanás. Ásana and práńáyáma, for example, are helping items. They are not sádhaná, they are called sádhanáuṋga. Now if, during this process of movement, this phase of movement, the mind becomes heavy, it will not be able to move forward. Suppose you are crossing a river. If the boat becomes heavy due to water percolation, what will happen? You will not be able to cross the river. You will have to arrange to pump the water out.


So what is this process of pumping out the water in the case of the human mind? It means freeing the mind from mundane impurities. And how to free the mind from mundane impurities? By rendering selfless service to society without any restriction of caste, creed, nationality, or sex. Similarly on the mental level, the pure mental level, we have to free the mind from propensive ideas. That is, in the first phase there should be physico-psychic karma, and in the second phase there should be psycho-spiritual karma. One will have to render social service if one wants salvation.


Now, to establish oneself in this realm of karma, what are the essential factors for success? Lord Shiva, when asked by Párvatii, said, “You know, Devii, there are seven essential factors for success in physico-psychic karma or in psycho-spiritual karma, whatever it may be. But there are seven essential factors, you must remember those seven factors.” What are those factors?


Phaliśyatiiti vishvásah siddherprathama lakśańam;

Dvitiiyaḿ shraddhayá yuktaḿ trtiiyaḿ gurupújanam. Caturtho

samatábhávo paiṋcamendriyanigrahah; Śaśt́haiṋca

pramitáháro saptamaḿ naeva vidyate.



–Shiva Saḿhitá


The first essential factor is, “I must be successful in my mission.” This firm determination is the first essential factor.


Secondly, dvitiiyaḿ shraddhayá yuktaḿ – “the sádhaka, the spiritual aspirant, the intuitional aspirant, must develop shraddhá for his goal.” And what is shraddhá? You know, there is no corresponding word for shraddhá in English or Latin. Shraddhá means Shrat Satyaḿ tasmin dhiiyate iti shraddhá – “My objective – ” What is the objective? The Supreme Subjectivity here becomes the objective.


The Supreme Self, the Transcendental Entity, is the subjectivity of all subjectivities, hence it is the Supreme Subjectivity; but here, in the case of psycho-spiritual practice, that Supreme Subjectivity becomes the object. So one should develop shraddhá for this Supreme Subjectivity, that is, for one object. And what is shraddhá? Shrat Satyaḿ – accepting that goal as Absolute Truth. (Shrat means Satyaḿ.) Tasmin dhiiyate – that is, “Withdrawing the mind from all other objects, and guiding that mind unto that object which has been accepted as the Absolute Truth, is shraddhá.” It has no corresponding term in English or Latin, or in any other language. The Sanskrit is the term. Dvitiiyaḿ shraddhayá yuktaḿ – “one must develop shraddhá for the object.”


Thirdly, trtiiyaḿ gurupújanam – “one must develop shraddhá for one's preceptor, one's teacher.”



Next, Caturtho samatábhávo – “One should develop mental equipoise.” “He is a Brahman – he should be respected. He is an Ezhava – he is inferior to me.” This idea is dangerous. If one encourages this idea, one will not be able to attain that supreme beatitude. So, caturtho samatábhávo – “one must develop psychic equipoise.”


And fifth, paiṋcamendriyanigrahah – “one must have restraint over one's sensory and motor organs.” “I must not see that object, that may pollute my mind. I must not hear that sound, that may pollute my mind.” These are all restraints over sensory and motor organs. Lord Buddha said, Cakkhuná saḿvaro sádhu – “O sádhu, O spiritual aspirant, you should have proper restraint over your eyes.”


Cakkhuná saḿvaro sádhu, sádhu sotena saḿvaro;

Ghánena saḿvaro sádhu, sádhu jihbáya saḿvaro;

Káyena saḿvaro sádhu, sádhu vácáya saḿvaro;

Manasá saḿvaro sádhu, sádhu sabbattha saḿvaro.



[Control your eyes, O sádhu; sádhu, control your ears; control the sense of smell, O sádhu; sádhu, control the sense of taste; control your body, O sádhu; sádhu, control your speech; control your mind, O sádhu; sádhu, have overall control.]


(It is in the Pali language.) “There must be all-round restraint over your motor and sensory organs.” Paiṋcamendriyanigrahah.


Sixth, śaśt́haiṋca pramitáháro – “You should have proper restraint over your food.” That is, your food should be nutritious, but you must not be voracious. “Voracious” means “eating too much”. Śaśt́haiṋca pramitáháro.


Seventh, saptamaḿ naeva vidyate – that is, “O Devii, I said there are seven factors, but now I say the seventh factor is nil. That is, there are six fundamental factors helping a sádhaka to establish himself or herself in the realm of karma in order to attain the Cosmic beatitude.”


I think you have followed this, and you should remember it.


by Shrii Shrii Ananda murtii on November 1966, Ernakulam, Published in: Ánanda Vacanámrtam Part 23, Chapter: How to Concentrate


On Wed, Nov 2, 2016 at 6:39 PM, Malarvizhi Mangay <malarm...@gmail.com> wrote:

பெளத்தம் சொன்ன தத்துவம் இங்கு எடுபடவில்லை.பௌத்தம் கடவுளைப் பற்றிப்பேசவேயில்லை.மக்கள் நல்வாழ்வுவாழ
வழிகண்டுரைத்தார்.இந்த மண்ணின் மானுடம்
எல்லாம் அவன் செயல் என்ற தொன்மச்சிந்தனையால் கட்டமைக்கப்பட்டது.
பின்னாளில் புத்தரையே கடவுளாக்கினர்.
புத்தர் மீண்டுவந்து இக்காட்சியைக்     கண்டால் நாண்டுக்கிடுவார்.தானே வழக்கொழிந்ததும்
ஒரு காரணம்.அழிச்சிட்டாங்க அழிச்சிட்டாங்கன்னு அழுகினி ஆட்டமே ஆடாதீங்க.இந்தியத் தத்துவவரலாறு /கீழை
மேலைத் தத்துவவியலைப் படிங்கன்னு
அக்கறையோட கேட்டுக்கறேன்.

போவார்.

On 02-Nov-2016 5:33 pm, "Seshadri Sridharan" <ssesh...@gmail.com> wrote:
On Tue, Nov 1, 2016 at 10:35 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
இந்து மதத்தினரும்  பௌத்த மத அழிவில் பங்கேற்றனர் என்பதை வரலாற்றில் காணலாம் என்பதைக் குறிக்க  கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்.

ஆம்.  ஆதி சங்கரர் முன்னெடுத்த முயற்சி தான்.  
______________________________________________________________

Wrong depiction of Buddhist history in India

http://www.buddhistchannel.tv/index.php?id=22,10395,0,0,1,0#.WBgOaOMrLIV


Wrong depiction of Buddhist history in India

by Kishore Walanju, Mumbai, India, The Buddhist Channel, Aug 17, 2011


I am surprised that ‘Buddhist Channel’ has published such a misleading article written by 

Mr. Sandeep Sharma” Hindu Survival and Buddhist Disappearance During Medieval India”.


Mr. Sharma has changed history of Buddhist India by writing this article without any evidence or supporting data. Mr. Sharma (being ‘Brahmin’) is trying to protect his Brahmin ancestor who destroyed Buddhism in India

But others too indulged in destroying it. 
 
 

The Prince Brahdrad ( the grand-son of King Ashoka) was killed by Brahmin Leader Pushyamitra Shung in a conspiracy and these Brahmins destroyed the monasteries and massacred Buddhist monks. (Reference, see “Saha Soneri Pane” – book written by Brahmin scholar Shri. V D Sawarkar). 

this is purely a politics because in those days there was no hinduism. 

The Brahmins claims that they are ‘Aryans”, people with origins from the North Pole in Europe. They migrated to india and ruled by creating a caste system to maintain their supremacy (Reference, see ‘Artic home of theVedas’ book by Brahmin scholar Lokmanya Tilak. (available on Wikipedia) .

other white skinned people too belong to aryan race. caste system is not a creation of aryans instead it is a creation of indegenous people on the basis of their occupation. 


Brahmins are always priest of the their gods and non-Brahmins (OBC, SC, ST) were made to worship Brahmins and their gods. Non-brahmins are not allowed to be priest nor given religious privileges.

It is true that Arab, Turk, Afgani, etc came and ruled India but they did not destroy Buddhist temples/monasteries. The Mahabodhi temple is still there in Bihar and Ajantha & Yellora, Sarnath, Sanchi and stupas and chaityas are still existing in India. 

afghans are responsible for destroying buddhism in afghanistan and surrounding places. since these buddhist places were not remained as place of worship the invading muslims spared these places. But destroyed Nalanda university started by buddhists.

It is a fact that Brahmins themselves destroyed ancient Buddhist Universities such as Nalanda ,Takshashila, Vikramshila . Surviving Buddhist monks ran off to Myanmar with a few texts, thus preserving whatever that was left.

 

Brahmins converted famous Buddhist temple such as Vithoba (Pandharpur), Balaji, Mahabalipuram , Somnath, Jagganath Puri into so called Hindu temples (reference; see ”History of Buddhism” by Brahmin scholar Mr.Apte)

mahabalipuram was not a buddhist shrine.


Before the British came, India was ruled by Muslim rulers such as Aurangzeb and Tipu Sultan. Mr. Sharma has written false article stating that Hindu king resisted Muslim ruler and Hinduism could not be wiped out. 

prithviraj chauhan.

There are evidence that Hindus (OBC, SC, ST) converted to Islam because they were being discriminated in the caste system introduced by Brahmins through their religious text ‘manusmruti’ (Reference, see “Gulamgiri” by scholar and social reformer Shri Jyotirao Phule).

May I request that the editorial team from Buddhist Channel to refrain from publishing such misleadings articles with regards to the true history of Buddhist India.

available buddhist history itself misleading

தேமொழி

unread,
Nov 2, 2016, 2:18:16 PM11/2/16
to மின்தமிழ்


On Wednesday, November 2, 2016 at 10:28:36 AM UTC-7, அணங்கன் wrote:

Shankaracaraya’s and Buddha’s teachings are a mixed bag

Similarly, with regards to Bhagavan Shankaracarya, Baba (P R Sarksr) has appreciated Shankaracaraya’s guideline - bhakti is the best - because this will help readers understand that in the new and revolutionary teaching of Ananda Marga, bhakti is treated as the top most. Likewise, Baba has highlighted Bhagavan Buddha’s teaching of - 'Cakuna Samvaro Sadhu...' - so everyone will understand that Ananda Marga philosophy places great importance on controlling one’s motor and sensory organs.

Side by side there are teachings from both Bhagavan Shankaracarya and Bhagavan Buddha which Baba has wholly rejected such as Shankaracarya’s theory of mayavada and Buddha’s nihilistic approach.

Baba says, “Máyáváda is full of contradictions from beginning to end. This sort of error is called pramáda in Sanskrit: error in the beginning, error in the middle and error in the end.” (1)

Ananda Marga philosophy states, "[Buddha's teachings] lack charm and do not expound a good reason for living. This explains perhaps why Buddha never considered the idea of forming a society." (2)

What to do?

Keeping this in mind, no Ananda Margii should think that we fully embrace all the doctrines of Bhagavan Shankaracarya and Bhagavan Buddha etc.

Bhagavan Shankaracarya and Bhagavan Buddha etc- could not deliver a truly dharmic set of teachings for all round progress of humanity. As Ananda Margiis, only Baba is our Polestar, and only Baba’s guidelines are 100% dogma-free and perfect for leading one on the path of salvation and building a great human society




How to Concentrate

November 1966, Ernakulam


Today a spiritual aspirant asked me regarding the process of mental concentration. His question was, how to concentrate on that Supreme Tangential Point? The reply should be known to all intuitional aspirants.


According to the standard of intellect, microcosms come within three broad categories. They are brute mind, human mind, and divine mind. Intuitional practice is a practice of transmutation of brute mind into human mind and human mind into divine mind.


In our human society we find microcosms of all these three varieties; that is, in our society there are brute microcosms in human structure – animals in human structure, animals in human framework; there is man in human framework; and there is God in human framework. And in our social life, all the problems are created by brutes in human structure; and those problems are experienced by men in human structure; and those problems are solved by gods in human structure. So a spiritual aspirant is to solve the problems of the society, he is not to create fresh problems.


Now, sádhaná is for all, intuitional practice is for all. You know, there are brutes in human structure, and there are brutes in animal structure; but the fundamental difference between these two brutes is that a brute in animal structure does not know that it is a brute in animal structure, but a brute in human structure does know that he or she is a brute in human structure. He or she should do something noble.



பகுத்தறிவிற்கான வரையறை. 

தேமொழி

unread,
Nov 4, 2016, 2:08:34 PM11/4/16
to மின்தமிழ்
On Friday, October 28, 2016 at 7:19:02 PM UTC-7, தேமொழி wrote:

காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 

 
சுவீகரிக்கப்பட்ட புத்தர்
February 27, 2014

http://tamil.thehindu.com/society/spirituality/சுவீகரிக்கப்பட்ட-புத்தர்/article5730466.ece



தமிழகத்தின் பல பகுதிகளில் ஐயனார் கோயில்களைப் பார்க்கிறோம். மேலும் சாஸ்தா, ஹரிஹரன் போன்ற தெய்வங்களைப் பற்றி பரவலாகப் பேசுகிறோம். ஆனால், இவை அனைத்தும் யாரைக் குறிக்கின்றன தெரியுமா? புத்தரை.

சாத்தன் அல்லது சாத்தனார் என்ற பெயர் சாஸ்தா என்ற வடமொழிப் பெயரின் திரிபுதான். உண்மையில் சாஸ்தா என்பது புத்தரின் பெயர்களுள் ஒன்று. சாத்தன், சாஸ்தா என்பதற்குச் சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர் என்று அர்த்தம்.

பண்டைத் தமிழகத்தில் சாத்தன் என்ற பெயர் புத்தரையே குறித்தது. அக்காலத் தமிழ்ப் பௌத்தர்கள் தங்கள் பையன்களுக்கு இப்பெயரைச் சூட்டினர். சாத்தன் என்ற பெயர் சங்க நூல்களிலும் பதிவாகியுள்ளது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சீத்தலைச் சாத்தனார்.

கன்னடத் துளு பகுதியில் உள்ள சாஸ்தாவு குடி, சாஸ்தா வேஸுவரம், சாஸ்தாவுகள என்ற பெயரில் அமைந்த கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன என்கின்றன ஆராய்ச்சிகள். கேரளத்தில் இப்போதும் சாஸ்தா கோயில்கள் உள்ளன. இவற்றுக்குச் சாத்தன் காவுகள் என்று பெயர். காவு அல்லது கா என்பதற்குத் தோட்டம், பூஞ்சோலை என்று அர்த்தம். பண்டைத் தமிழகத்தில் பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளுக்கு நடுவே அமைந்திருந்தன. எனவே, இந்தச் சாத்தன் காவுகளும் பௌத்தக் கோயில்களாக இருந்தவையே.

சாத்தனார் என்ற பெயருக்கு மலையாளத்தில் ஐயப்பன் என்ற அர்த்தமும் உண்டு என்கிறார் பௌத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

ஆனால் பௌத்த மதத்தை இந்து மதம் சுவீகரித்துக்கொண்டபோது, பல புராணக் கதைகள் உருவாகின. வைணவர்கள் புத்தரைத் திருமாலின் அவதாரம் என்கின்றனர். சைவ சமயத்தினரோ, புத்தரைத் திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்த குழந்தை என்றே கூறிவிட்டனர். தேவாரத்தில் அப்பர் அப்படிச் சொல்லியுள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் முன்பு இருந்த புத்தர் உருவச் சிலைக்கு சாஸ்தா என்றே பெயர். ஐந்து அடி உயரத்தில் புத்தர் நின்றவாறு உபதேசம் செய்வது போலிருந்த அந்தச் சிலை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

சாஸ்தா, சாத்தன் என்ற சொற்களுக்கான தமிழ்ச் சொல் ஐயன் அல்லது ஐயனார். இதற்குக் குரு, ஆசான், உயர்ந்தவர் என்று அர்த்தம். பிற்காலத்தில் சாத்தனார், ஐயனார், அரிஹரபுத்திரர் என்றழைக்கப்பட்ட இந்தத் தெய்வம் கிராமத் தெய்வமாக மாற்றப்பட்டுவிட்டது.

வேறு சில இடங்களிலோ புத்தர் சிலை முனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறது. புத்தருக்கு சாக்கிய முனி என்றொரு பெயர் உண்டு. அதிலிருந்தே முனீஸ்வரன் என்ற பெயர் வந்திருக்க வேண்டும். அந்தச் சிலைகளைக் கூர்ந்து பார்த்தாலே, அவை புத்தர் சிலை என்பதையும், பௌத்த வழி வந்த அடையாளங்களையும் உணர முடியும்.

தற்போது பல இடங்களில் இருக்கும் தர்மராஜா கோயில்களும் பண்டைய பௌத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும். தர்மன் அல்லது தர்மராஜன் என்பது புத்தரின் பெயர்களில் ஒன்று. பிங்கல நிகண்டிலும் திவாகரத்திலும் புத்தரின் பெயர் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பௌத்தக் கோயில்கள் மதிப்பிழந்த காலத்தில், பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான தர்மனின் கோயில்களாக அவை மாற்றப்பட்டுவிட்டன. புகழ்பெற்ற மாமல்லபுரம் சிற்பத் தொகுதிகளில் ஒன்றான பஞ்ச பாண்டவர் ரதம் வளாகத்தில் உள்ள ஒரு கோவிலின் பெயர் தர்மராஜா கோயில். இந்தச் செய்திகள் அனைத்தும் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமியின் நூல்களில் காணக் கிடைக்கின்றன.

பொதுவாகத் தர்மராஜா கோயில்களில் புத்தர் ஞானோதயம் பெற்ற, பௌத்தர்கள் போற்றக்கூடிய போதி எனப்படும் அரச மரங்கள் இருப்பதைப் பார்க்கலாம். தமிழகத்தில் அரச மரத்துக்கு இன்றைக்கும் பெரும் மதிப்பு கொடுக்கப்படுவதற்கான காரணத்தை, இந்த அம்சத்திலிருந்து தேடிக் கண்டடையலாம்.


தேமொழி

unread,
Nov 4, 2016, 2:14:41 PM11/4/16
to மின்தமிழ்
On Friday, October 28, 2016 at 7:19:02 PM UTC-7, தேமொழி wrote:

காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 


பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி, பதிப்பாளர் - கா.ஏ. வள்ளிநாதன்,  
மயிலாப்பூர், சென்னை 
1940 

http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=5


பக்கம் எண் :5

நான்காம் அதிகாரம்

பௌத்த திருப்பதிகள்

 

தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம்.


காவிரிப்பூம்பட்டினம்

சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் 'கவீரபட்டினம்' என்று கூறப்பட்டுள்ளது. மிகப்பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ்) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி, அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால், அவரது தவத்துக்கு இடையூறாயிருந்ததுபற்றி அவர் அவ்விடத்தை விட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத்தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர்.

கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், அல்லது மகேந்திரர் என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திர விகாரை என்பவை இவர் கட்டியவைகளே யென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, 'உவவனம்' என்னும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கிவந்தார்கள். அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் 'சுடுகாட்டுக் கோட்டம்' என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், 'சக்கரவாளக் கோட்டம்' என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக்கோட்டத்தினுள் 'சம்பாபதி' என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்தென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், 'சக்கரவாளம்' என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்ததென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் 'குச்சரக் குடிகை' என்றும், 'முதியாள் கோட்டம்' என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவுபூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக்கொள்ளும் படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டிடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துகொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம்.

'இரசவாகினி' என்னும் பாளிமொழியில் உள்ள பௌத்த நூலில், சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

கி. பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுதவிக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளியில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.


பூதமங்கலம்

இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டிதாசர் என்றும், வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் 'வினய வினிச்சயம்' என்னும் பாளி மொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.


போதிமங்கை

இதுவும் சோழநாட்டில் இருந்தது. 'சாக்கியர்தம் போதிமங்கை' என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர்=பௌத்தர்.) இப்பெயரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை நன்கறியலாம். இவ்வூரில் புத்தநந்தி, சாரிபுத்தர் முதலான பௌத்த தேரர்கள் இருந்தனர் என்றும், இவர்களுடன் திருஞான சம்பந்தர் (கி. பி. ஏழாம் நூற்றாண்டு) வாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. இப் போதிமங்கையும் மேற்கூறிய பூதமங்கலமும் ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், அவர்கள் அதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை.


பொன்பற்றி

இதுவும் சோழ நாட்டில் உள்ளது. இது மாலைக் கூற்றத்தைச் சேர்ந்தது. தஞ்சை ஜில்லாப் புதுக் கோட்டைத் தாலூக்காவில் உள்ளது இந்த ஊர் என்றும், தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் உள்ள 'பொன் பேத்தி' என்னும் ஊரே பொன்பற்றி என்பது என்றும் கூறுவர். இவ்வூரில் வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் வாழ்ந்திருந்தார்.

நாகைப்பட்டினம்

இது சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.
 

 ' உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன
தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,
நற்றவர்க் கிடமாகின்றது நாகையே '
 

என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

கி. பி. 720 -ஆம் ஆண்டில், நரசிம்ம போத்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயிலைச் 'சீனா கோயில்' என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோ-போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் 'சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

கி. பி. எட்டாம், அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில், முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டுபோய், அப்பொன்னைக்கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது வைணவ நூல்களினால் தெரியவருகின்றது.

கி. பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராச இராச சோழன் காலத்தில் நாகையில் 'ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை' என்னும் பௌத்தப்பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீவிஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின்படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயோத்துங்கனது தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாகலின், இதற்குச் 'சூடாமணி விகாரை' என்று பெயராயிற்று. யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட., அவனுக்குப்பின் அரசாண்ட இராசேந்திர சோழன் செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித்தந்தான். இவன் எழுதிக் கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சி சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச்சாசனங்களுக்கு 'லீடன் சாசனம்' (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. (Arch. Sur. Of South India, Vol. IV, Epigraphica Indica, Vol. XXII.) இவை வெளியிடப்பட்டுள்ளன.

பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டை (Pegu) பதினைந்தாம் நூற்றாண்டில் அரசாண்ட ராமாபதி ராஜன் என்பவன் அனுப்பிய பதினொரு பௌத்த பிக்ஷக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில் கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக, நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த 'படரிகாராமம்' என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப்பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் புத்ததேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச்சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி. பி. 1477 -ஆம் ஆண்டில்.

கி. பி. 1725 -ஆம் ஆண்டில், 'சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலென்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கின்றார்.

நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், 'புது வெளிக் கோபுரம்' என்றும், 'சீனா கோயில்' என்றும், 'கறுப்புக் கோயில்' என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

படம் 1.

நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.

1846-இல் இந்த நிலையில் இருந்தது.


இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.

இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். (படம் 2 காண்க).

படம் 2.

நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.

அதன் பீடத்தில், அம்புக்குறி காட்டப்பட்ட இடத்தில்

எழுத்துக்கள் காணப்படுகின்றன. (படம் 3 -இல் காண்க)


இந்த விக்கிரகத்தின் பீடத்தில், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்தில், 'ஸ்வஸ்திஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்' என்று எழுதப்பட்டிருக்கின்றது. (படம் 3 காண்க).

படம் 3.

இத்தமிழ் எழுத்துக்கள் 2 -ஆவது படத்தில் உள்ள புத்தச் சிலையின் பீடத்தில் எழுதப்பட்டுள்ளன. 'ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்' என்பது இதன் வாசகம்.


இன்னொரு விக்கிரகம் புத்தர் போதியின்கீழ் அமர்ந்து தியானத்தில் இருக்கும் பாவனையாக அமைந்துள்ளது. (படம் 4 காண்க).

படம் 4.

நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.


இன்னொன்று புத்தர் இரு கைகளையும் உயர்த்தி அபயம் அளிப்பதுபோல் அமைக்கப்பட்ட உருவம். (படம் 5 காண்க).

படம் 5.

நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.


இன்னொன்று சீன முறைப்படி செய்யப்பட்ட புத்தர் விக்கிரகம்.

நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் 'புத்தன் கோட்டம்' என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக்காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக் கோயில் இருந்திருக்கவேண்டுமென்றும், பௌத்தக் கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்.

நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சி சாலையில் உள்ளன.


புத்தகுடி

இதுவும் சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஒரு ஊர். இவ்வூர் 'செயங்கொண்ட சோழவளநாட்டுக் குறும்பூர்' நாட்டில் இருந்ததாகக் குலோத்துங்க சோழனது செப்புப் பட்டயம் (Leiden Grant) கூறுகின்றது. இவ்வூரின் பெயரே இது பௌத்தர் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.


உறையூர்

இது சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் 'உரகபுரம்' என்பர். பேர் பெற்ற பௌத்த ஆசாரியரும் பௌத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்த தத்ததேரர் (கி. பி. நாலாம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பௌத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.

இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.


காஞ்சீபுரம்

இந்த ஊர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனயாத்திரிகர் எழுதியிருக்கின்றார். ஆனால், அசோகர் கட்டிய தூபியைப்பற்றி மணிமேகலையில் கூறப்படவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில், 'பைம்பூம்போதிப் பகவற்கு' ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இந்தச் சேதியத்தைத்தான் பிற்காலத்தவராகிய யுவாங் சுவாங் என்னும் சீனர் அசோகர் கட்டியதாகக் கூறினார் போலும். இளங்கிள்ளி அரசாண்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், 'தருமத வனம்' என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சீபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும், அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉவென்றும், அறவண அடிகள் தங்கியிருந்த தெரு (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர் வித்துவான் ராவ்பகதூர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அன்றியும், 'புத்தேரித் தெரு' என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சீபுரத்தில் இருக்கின்றதென்றும், அது 'புத்தர் தெரு' என்பதன் மரூஉவென்றும் மேற்படி அய்யங்கார் அவர்களே கூறுவர். மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சீபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. இப்பொழுதும் காஞ்சீபுரத்துக்கருகில் 'மணிமேகலை அம்மன்' என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பௌத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருக்குமோ என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது.

காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சீபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டார் என்றும் தெரிகின்றது. ஏழாம் நூற்றாண்டில், அதாவது 640-இல், காஞ்சீபுரத்துக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனர் காஞ்சீபுரத்தில் நூறு பௌத்தப் பள்ளிகளும் ஆயிரம் பௌத்த பிக்ஷக்களும் இருந்ததாகவும், பௌத்தப் பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கவில்லையென்பதாகவும் எழுதியிருக்கின்றார்.

காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும், பௌத்த மதம் அழிந்த பிறகு அக்கோயில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் அரசாங்க சிலா சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமாட்சியம்மன் கோயிலில் ஐந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்குங் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும், புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது. இந்தப் புத்த உருவத்திற்கு இப்போது 'சாத்தன்' என்று பெயர் சொல்லப்படுகின்றது. 'காமாட்சி லீலாப் பிரபாவம்' என்னும் நூலில், சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்கால்த்தில் பௌத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன. (படங்கள், 6, 7 காண்க.)

படம் 6.

காஞ்சீபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில்

இருந்த புத்தர் உருவச்சிலை, உருவம் 7 அடி உயரம் உள்ளது.

மூக்கும் கைகளும் உடைக்கப்பட்டுள்ளன.

படம் 7.

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலைச் சேர்ந்த

தோட்டத்தில் உள்ள புத்தர் உருவச்சிலை.


காஞ்சீபுரத்திலே உள்ள இன்னொரு அம்மன் கோயிலில் புத்தர் உருவச் சிலைகள் இரண்டு காணப்படுகின்றன. (படம் 8 காண்க.)

படம் 8.

காஞ்சீபுரம், கருக்கில் அமராண்ட அம்மன் கோயிலில்

உள்ள இரண்டு புத்த விக்கிரகங்களில் ஒன்று.


அறவண அடிகள், மணிமேகலை, திக்நாகர், போதி தருமர், தருமபாலர், ஆனந்ததேரர், அநுருத்தர், புத்தாதித்தியர் முதலிய பேர்பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவராவர்.


திருப்பாதிரிப்புலியூர்

இப்பொழுது கூடலூர்க்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பண்டைக்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை.


சங்கமங்கை

இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. பௌத்தராயிருந்து, பின்னர்க் காஞ்சீபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர்ச் சைவ சமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே இது பௌத்தரது ஊர் என்பதைத் தெரிவிக்கும். சங்கம் என்பது, புத்த, தர்ம சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்தப் பிக்ஷ¨களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்க

மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானதென்பதைத் தெரிவிக்கின்றது.


கூவம்

இதுவும் தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூரிலும் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்த விக்கிரகம் ஒன்றைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

மதுரை

இந்த நகரத்தில் பௌத்தப்பள்ளிகள் இருந்தனவென்பதை மதுரைக் காஞ்சியில்,
 

 'திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும் '
 

என வரும் அடிகளுக்கு, 'திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடைவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையும் கூட்டிக்கொண்டு தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளியும்' என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதுகொண்டு அறியலாம்.

அசோக சக்கரவர்த்தி, மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்தப் பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். ஆனால், இந்த விகாரை பள்ளிகளைப்பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவை பிற்காலத்தில் கட்டப்பட்டு, நாளடைவில் கட்டியவர் பெயர் மறைந்து, அசோகரும் மகேந்திரமும் கட்டியதாகத் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். யார் கட்டியதாக இருந்தாலும், மதுரையிலும் பௌத்தர்களும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்ததுமட்டும் இதனால் உறுதிப்படுகின்றது. மதுரையில், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், 'சிந்தாதேவி' என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.


அரிட்டாபட்டி

மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஒரு ஊர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷ, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்தமதத்தைப் பரவச் செய்தாரென்றும், அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சி வல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக்கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்து, பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கின்றது.


பொதிகை

பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து 'மலைய நாடு' என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகியவச்சிரபோதி (கி. பி. 661 - 730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் இவரே.


தஞ்சை

பாண்டி நாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்தவூரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாளி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்ததாகத் தெரிகின்றது.


திருமாலிருஞ் சோலை

'அழகர்மலை' என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர் திரு. V. R. இராமச்சந்திர தீக்ஷ¤தர் அவர்கள்.

இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்.


வஞ்சிமாநகர்

இப்போது மலையாளதேசமாக மாறிவிட்ட கேரளதேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருள்ளவன், இந்த நகரத்தில் சிறந்ததோர் புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரத் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுவதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவான் என்பவனும், மணிமேகலையும், அறவண அடிகள் என்னும் பிக்ஷ¨வும் இந்த நகரத்திற் சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமேகலை கூறுகின்றது.

இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும், 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பது 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, 'சாத்தன்காவு' என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைக் காலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தகோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் 'ஆராமம்' என்பர். 'ஆராமம்' என்றால், தோட்டம் அல்லது கா என்பதே பொருள். (தொடர்புரை 3 காண்க.)

இவையன்றியும், மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்க யாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஓர் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை.

தேமொழி

unread,
Nov 5, 2016, 4:57:26 AM11/5/16
to மின்தமிழ்
On Friday, October 28, 2016 at 7:19:02 PM UTC-7, தேமொழி wrote:

காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 


பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி, பதிப்பாளர் - கா.ஏ. வள்ளிநாதன்,  
மயிலாப்பூர், சென்னை 
1940 

http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=218&pno=13

பக்கம் எண் :13

தொடர்புரை 3.


சாத்தனார் - ஐயனார்.

சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரியபெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டுவந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. பௌத்த நூலாகிய 'மணிமேகலை'யை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் 'சாத்தனார்' என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது. கோவலன் என்னும் 'சிலப்பதிகார'க் கதைத் தலைவனுடைய தந்தை 'மாசாத்துவன்' என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷ¨வாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், 'பெருந்தலைச் சாத்தனார்', 'மோசி சாத்தனார்', 'வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்', 'ஒக்கூர்மா சாத்தனார்', 'கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்' முதலான சங்ககாலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த 'சாத்தன்' என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.

கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோவில்களுக்குச் 'சாஸ்தாவு குடி' என்றும், 'சாஸ்தா வேஸ்வரம்' என்றும், 'சாஸ்தாவு கள' என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவை யாவும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் 'சாத்தன் காவுகள்' என்று பெயர். (காவு = கா = தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்) பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு 'ஆராமம்' (பூங்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக்கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு 'ஐயப்பன்' என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கிவருகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. 'சாஸ்தா', அல்லது 'சாத்தன்' என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் 'ஐயன்', அல்லது 'ஐயனார்' என்பது. 'ஐயன்' என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக்கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.

         ' பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
          சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
          கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
          தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே '

என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.

பிற்காலத்தில், 'சாத்தனார்,' 'ஐயனார்', 'அரிஹரபுத்திர்' என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.

    'சாத்தன்,' அல்லது 'சாஸ்தா' என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப் பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், 'பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு' எனவரும் அடியில், 'பாசண்டச் சாத்தன்' என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு : "பாசண்டம் தொண்ணூற்றாறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாதலின், மகாசாத்திர'னென்பது அவனுக்குப் பெயராயிற்று." இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, 'சூடாமணி நிகண்டும்,'

         ' அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி
          நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் '

என்று கூறுகின்றது. 'அருங்கலை நாயகன்' என்று திவாகரம் கூறுகின்றது. நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், 'ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்' என்று எழுதியிருப்பது (படம் 3) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் 'சாஸ்தா', அல்லது 'மகா சாஸ்தா' என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். 'லலிதாவிஸ்தார' என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பலகலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண் கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் 'சாஸ்தா' என்னும் பெயர் உள்ளதுதான். (படம் 6 காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் 'காமாட்சிலீலாப் பிரபாவம்' என்னும் காமாக்ஷ¤ விலாசத்தில், 'காமக்கோட்டப் பிரபாவத்தில்', 'தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம்' காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது. * 'சாஸ்தா' என்பவரும் 'புத்தர்' என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.

    'சாஸ்தா' என்னும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்' என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர். தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் 'தருமராஜா கோயில்கள்' என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகின்றது. 'தருமன்,' அல்லது 'தருமராசன்' என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் 'தருமன்' என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் 'தர்மராஜன்' என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும். இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமாராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் 'போதி' என்னும் அரச மரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் 'தருமராஜா', அல்லது 'தருமதாகூர்' என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்கால்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.

    இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்த தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப் பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. 'தருமராஜா' என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவி' என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப்பட்டதுபோலும்.

    சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் 'வரதராசர் கோயில்', 'திருவரங்கர் கோயில்', 'வேங்கடேசர் கோயில்' முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் 'கபாலீஸ்வரர் கோயில்', 'தியாகராசர் கோயில்', 'சொக்கலிங்கர் கோயில்' முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் 'தருமராசா கோயில்', 'சாத்தனார் கோயில்', 'முனீஸ்வரர் கோயில்' என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமத்த் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.

______________________________________________________________
   

* காஞ்சிக் காமாட்சி அம்மன் கோயில் உட் பிராகாரத்தில் இருந்த இந்த 'சாஸ்தா' என்னும் புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் இருக்கின்றது.


Message has been deleted

Oru Arizonan

unread,
Nov 6, 2016, 11:59:52 AM11/6/16
to mintamil
இருள்படிந்த உள்ளங்களுக்கு ஒளியைக் காட்டியிருக்கிறீர்கள், தேவ் ராஜ் அவர்களே!
"இருள்நீங்கி ஒளி"  -- தமஸோ மா ஜ்யோதிர்கமயா"
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Nov 6, 2016, 5:27:30 PM11/6/16
to மின்தமிழ்
திரு. தேவ் அவர்களின் கவனத்திற்கு,

On Friday, October 28, 2016 at 7:19:02 PM UTC-7, தேமொழி wrote:
காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 


என்று நான் குறிப்பிடும்பொழுது இந்து மதத்தால் புத்தமதமும்   முற்காலத்தில்  கோவில்களை இழந்துள்ளது/பாதிக்கப்பட்டுள்ளது, என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதற்கு நீங்கள் சான்றுகள் எதிர்பார்த்தீர்கள்.  

அதற்காக உங்கள் இழையின் மைய விவாத நோக்கம் திசை மாறாமலிருக்க இந்த இழையில் இந்தக் கட்டுரையைச் சான்றாகக் கொடுத்தேன்.

எப்பொழுதும், கிடைத்த இடத்தின் சுட்டியைக் கொடுத்து;   
'முடிந்தவரை' கட்டுரைகளை எடிட் செய்யாமல் அப்படியே கொடுத்து; 
தேவையான வரிகளைப் படிக்கச்சுலபமாக   அக்கருத்தை ஹைலைட் செய்து காண்பிப்பது எனது வழக்கம்

இதனால்  முக்கியமாக  கட்டுரையின் கான்டெஸ்ட்  படிப்பவருக்கும் புரியும், 
நான்  எடுத்துக் கொடுக்கும்சான்றில் தேவையானவற்றை மறைத்து  தில்லுமுல்லு செய்கிறேன் என்று குற்றச்சாட்டில் இருந்தும் விளகிவிடமுடியும்.

நிற்க.  
கட்டுரை இங்கு கொடுக்கப்படும் "காரணம்"... "புத்தமதக் கோவில்கள் மாற்றப்பட்டன" என்பதற்கான சான்று  இது  என்ற தேவையான முன்னுரை கொடுத்தே இழை துவங்கப்பட்டுள்ளது.
அத்துடன் படிக்கத் தேவையான கருத்தையும்  ஹைலைட் செய்து காண்பித்துள்ளேன்.  


It is true that Arab, Turk, Afgani, etc came and ruled India but they did not destroy Buddhist temples/monasteries. The Mahabodhi temple is still there in Bihar and Ajantha & Yellora, Sarnath, Sanchi and stupas and chaityas are still existing in India. 

It is a fact that Brahmins themselves destroyed ancient Buddhist Universities such as Nalanda ,Takshashila, Vikramshila . Surviving Buddhist monks ran off to Myanmar with a few texts, thus preserving whatever that was left.

Brahmins converted famous Buddhist temple such as Vithoba (Pandharpur), Balaji, Mahabalipuram , Somnath, Jagganath Puri into so called Hindu temples (reference; see ”History of Buddhism” by Brahmin scholar Mr.Apte)



கேட்டதற்கு கொடுத்த சான்றைப் புறந்தள்ளிவிட்டு,  
இழையின் இந்த  மையக் கருத்தை முற்றிலும்  ஒதுக்கி புறக்கணித்துவிட்டு, பதிலுக்கு   

///Nowhere in Brahmins religious text book i.e. Vedas, Upanishdas, Manusmruti, etc does the word "Hindu" is written. ///

என்ற ஒரு  வரியைப் பிடித்துக் கொண்டு 

"Hindu, drAviDa - Both the words have broader sense and wide usage."
(???)
இது போன்ற ஹிந்து திராவிட போன்ற விளக்கங்கள் இந்த இழையில்   தேவையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


(ஆனாலும் பரவாயில்லை, ஏதோ  பக்க விளைவாக  இருள் படிந்த தங்கள் உள்ளத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது என்று ஒருசிலர் உங்களுக்கு  நன்றி பாராட்டும்பொழுது  மகிழத்தான் முடிகிறது)

இயன்றால் மதங்களின் கோவில் பரிவர்த்தனை என்ற மையக்கருத்துக்கு திசைதிரும்பிவிடுங்கள். 

..... தேமொழி 




On Sunday, November 6, 2016 at 3:45:48 AM UTC-8, Dev Raj wrote:
///Nowhere in Brahmins religious text book i.e. Vedas, Upanishdas, Manusmruti, etc does the word "Hindu" is written. 

ஆம்,  உண்மை.‘ஹிந்து’ பின்னால் உருப்பெற்ற சொல்; பண்டைய நூல்களில் இல்லாதது,
‘திராவிடம்’போல். சங்க இலக்கியத்தில், சிலம்பில், வள்ளுவத்தில் இல்லாத சொல்
‘திராவிடம்’; ஆனால் இன்று அது பரவலான புழக்கத்தில் உள்ளது, பல தளங்களிலும்.  

‘த்ராவிடம்’ முன்பு பிராந்தியச் சுட்டாகவே  பயனாகி வந்தது -

வடநூலார் பொதுவாக பாரத நிலப்பரப்பை ‘த்ராவிடம்’, ’கௌடம்’ எனும் இரு பிரிவாக்கித் தென்னகத்தை
‘த்ராவிடம்’ என்றும், வடபுலத்தை ‘கௌடம்’ என்றும் சொல்வர் . ஆனால் ‘த்ராவிடம்’ தமிழகத்தைக்
குறிக்கப் பயனாவதும் உண்டு; அதுபோல ‘கௌடம்’ வங்க மொழி பேசப்படும் பிராந்தியத்தைச் சுட்டவும்
பயனாகும். சங்கத மொழிக்கான நடைகளில் சிறந்த இருவிதங்களில் ஒன்று ‘வைதர்ப’ நடை;
மற்றது ‘கௌட’ நடை.

‘த்ராவிட’ -
தென்னகப் பிராந்திய மொழிகளைச் சொல்லும்போது குமாரிலர் எனும் பார்ப்பனர் 
’தந்த்ர வார்த்திகம் ‘ எனும் நூலில் இதைக் கையாண்டார்.  பார்ப்பனரை
ஏசுவதையே பிழைப்பாகக் கொண்ட திராவிட இயக்கத்தினருக்கு இச்சொல்மீது ஏனோ
தீராத வியாமோகம்; விடாமல் அதைப் பிடித்துக்கொண்டுள்ளனர்.

அகண்ட பாரதம் போற்றிய ரவீந்திரநாத டாகோர் ஜீ  ‘த்ராவிட, உத்கல, வங்கா’ 
எனுமிடத்தில் தென்னகத்தைக் குறிப்பதற்காக இச்சொல்லைக் கையாண்டார்.

‘தெக்கணமும், அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்’ மனோன்மணீயம் சுந்தரனார்
தென்னகத்தைத் ‘தெக்கணம்’ என்றும், குறிப்பாகத் தமிழகத்தை ‘திராவிடம்’ எனவும்
ஒரு பிராந்தியச் சுட்டாகவே சொல்கிறார்.

மேற்கிலிருந்து கிரித்தவர் வருமுன் / வந்த பின்னரும்கூட இந்திய மொழிகளில் ஒருவரும் 
இனச்சுட்டாக இச்சொல்லைக் கையாண்டதற்கு எந்த ஆதாரமுமில்லை. 
பண்டைய மொழிகளை ஆராய்கையில் இரு வேறு இனங்களாகப் பிரித்துப் பிற்காலச் சொல்லான
த்ராவிடத்தை  மிகத் தொன்மையான மொழிகளின் தொகுப்புக்கான பெயராக்கினர். 
இதற்கான காரணத்தையும் நாம் ஆராய்ந்து விசாரிப்பதில்லை.  அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டோம்.

ஆனால் ‘ஹிந்து’ மட்டும் அக்னி பரீக்ஷைக்குள்ளாகிறது !

திராவிடத்தை மொழியைச் சுட்டுவதற்காக முதலில் தமிழில் / தமிழகத்தில் புகுத்தியது சமயவாதியரே எனலாம்.
நாலாயிரப் பனுவல்கள் ‘த்ராவிட வேத ஸாகரம்’ எனப்போற்றப்பட்டன. ‘திராவிட மாபாடியம்’சைவ சமயம் சார்ந்த நூல்.
‘திராவிடப் பிரகாசிகை’ மொழியியல் சார்ந்த நூல். 

ஆனால் சைவ - வைணவ சமயங்களைப் பழித்துவரும் குழாத்தினரின்  அரசியல் பிழைப்புக்காக  இச்சொல் தற்போது
பயனாகி வருகிறது. இச்சொல்லை அரசியல் நோக்கில் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததில் தமிழர் உள்ளனரா, தெரியாது.
பிற மொழி பேசுவோரே மிகுதியாகப் புகழ் பெற்றுப் பொருள் குவித்தனர்.

இது போன்றே ‘ஹிந்து’ என்பதும் பிற்காலச் சொல்லானாலும் பரவலான பயன்பாட்டுக்குட்பட்ட சொல்லாகி விட்டது;
இந்திய நாடு சார்ந்த எல்லாம் ‘இந்து’ என்பதில் அடக்கமே. மேற்கத்தியர் உருவாக்கம் எனலாம்.


//// The people residing at the banks of the Indus river were called “Sindhu “ but were pronounced as Hindu by 
Turkish rulers because they could not pronounce ‘S’ (accent ‘H’ instead of ‘S’).////

இஸ்லாமிய நிறுவனங்கள் கூட ‘ஹிந்த்’ எனும் பெயரோடுதான் இருக்கின்றன-

ஜமாஅத் உலெமா - ஏ- ஹிந்த்
ஷேர் - ஏ -ஹிந்த்
தஹாகக் - ஏ - ஹிந்த்
கைஸர் - ஏ - ஹிந்த்
கஸ்வா - ஏ - ஹிந்த்
விகர் - ஏ - ஹிந்த்
அவுலியா - ஏ - ஹிந்த்
அவாம் - ஏ - ஹிந்த்
ஜைகா - ஏ - ஹிந்த்
தஜ்ரிகா உலெமா - ஏ - ஹிந்த்
ஷாம் - ஏ - ஹிந்த்
ரஸ்தம் - ஏ- ஹிந்த்
சரக் - ஏ - ஹிந்த்
மஜ்லிஸ் - ஏ - உலெமா - ஏ - ஹிந்த்
ஆவாஜ் - ஏ - ஹிந்த்
துதே - ஏ - ஹிந்த்
தஸ்தான் -ஏ - ஹிந்த்
தரானா - ஏ - ஹிந்த்
ஷிராஸ் - ஏ - ஹிந்த்
அமன் - ஏ - ஹிந்த்
ஜாம் - ஏ - ஹிந்த்
நாஜ் - ஏ - ஹிந்த்

’பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’என்று கவிமணியார் பாராட்டிய மஹாகவி
பாரதியும் “சேதமில்லா ஹிந்துஸ்தானம் – இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என
அகண்ட பாரதத்தைப் பாடிப்போந்தார்.

இந்தியா எனும் பெயரை ஒப்புக்கொள்வேன்; ஆனால் ‘இந்து’ என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது 
உள்ளீடற்ற வாதம்.

ஹிந்து, த்ராவிடம் - இரண்டுமே ஆதியில் இல்லாமல் பாதியில் வந்த சொற்களே.

யாரும் பிறக்கும்போதே முழுமையான பல் வரிசைகளுடன் பிறப்பதில்லை; பற்கள்
பின்னால் முளைக்கின்றன. பூமியில் பிறந்த எந்த புத்திசிகாமணியும் ஆதியில் இல்லாமல்
பாதியில் வந்தன என்ற காரணம் காட்டி ஆரோக்யமான பற்களை உடைத்து எறிவதில்லை.

Hindu, drAviDa - Both the words have broader sense and wide usage.


தேவ்

தேமொழி

unread,
Nov 6, 2016, 6:11:44 PM11/6/16
to மின்தமிழ்
முன்குறிப்பு:  
இக்கட்டுரை தமிழகத்தில் புத்த மதம் மறைந்த காரணங்களை... 
அச்சமயம் அடுத்தவர் தாக்குதலுக்கு உட்பட்டும், தாங்களே தவறான முடிவுகளில் திசை திரும்பியும் மறைந்து போனதை  "அன்றைய தமிழக சூழலில்" காட்டி நிற்கும்.

அத்துடன் தமிழர்கள் தங்கள் தொன்மையான சமய வரலாறு எது, உட்புகுந்த மதங்கள் எவை, அவற்றினால் தமிழகத்தின் சமயக்கொள்கைகள் எவ்வாறு உருமாறத் தொடங்கின எனவும் அறியலாம்.

குறிப்பாக, சாமி இல்லை,சமயம் இல்லை, சாதி இல்லை...என்று சமயங்களில் தன்னை இணைத்துக் கொள்ளாமல், தள்ளி நின்று, பற்றற்ற வகையில் நோக்குபவர்களுக்கு  இது தமிழக சமயங்களின்  வரலாற்றுத் தொகுப்பாக மட்டும்  தெரியும். 
அத்துடன் அவை  மக்களின் கவனத்தைக் கவர எடுக்கும் முயற்சிகள், இக்கால அரசியல் கட்சிகளின் முயற்சிகளுக்கும் அவற்றின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறைவுக்கும் உள்ள பரிணாம வளர்ச்சியுடன் ஒத்திருப்பதும்  புரியும். 

மேற்குறித்த பிரிவில்  சேராத மற்றவர்கள்.... 
தன்னைப் போன்று தமிழ் பேசும் மற்றொரு தமிழருடன், அவர் வேறொரு  சமயத்தார் என்ற  ஒரு காரணத்திற்காக  கொதிப்படையத் தேவையா எனவும் சிந்திக்கலாம்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்த வடநாட்டு மதங்களுடன் ஒப்பிடும்பொழுது  சிலநூற்றாண்டுகளுக்கு முன்னர் வந்த மேலை நாட்டு மதங்களை எதிரிகள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டுமா என்றும் சிந்திக்கலாம்.

இனி கட்டுரை .....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
On Friday, October 28, 2016 at 7:19:02 PM UTC-7, தேமொழி wrote:

காலப்போக்கில் இந்தியக் கோயில்கள் ஒரு சமயத்தில் இருந்து மற்றொரு சமயத்திற்குக் கைமாறிப் போனதும், போவதும் நாம் அறிந்ததே. 


பௌத்தமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி, பதிப்பாளர் - கா.ஏ. வள்ளிநாதன்,  
மயிலாப்பூர், சென்னை 
1940 


பக்கம் எண் :4

மூன்றாம் அதிகாரம்.

பௌத்தமதம் மறைந்த வரலாறு.

பௌத்தமதம் தமிழ் நாட்டில் வந்த வரலாற்றினையும், அது பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும், மேலே இரண்டு அதிகாரங்களில் ஆராய்ந்தோம். செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம் பிற்காலத்தில் எவ்வாறு மறைந்துவிட்டது என்பதை இங்கு ஆராய்வோம்.

பௌத்தம் தமிழ்நாடு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிப்பட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப்பற்றி இரண்டாம் தொடர்புரையில் காண்க.) இந்த மதங்கள் வட நாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மற்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர்வாழ்ந்திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிற்கு வந்தன. பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் தமிழ் நாட்டில் பரவச்செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைனமதம், அசோக சக்கரவர்த்தியின் பாட்டனான சந்திரகுப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உள்ளன. சற்றேறத்தாழ இதே காலத்தில்தான் வைதீக பிராமண மதமும், ஆசீவக மதமும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கவேண்டும். அக்காலத்தில், வடநாட்டு மதங்களினின்று வேறுபட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர் மதம்.

வட நாட்டினின்று தென்னாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை; ஒன்றோடென்று பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங்கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத்தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழித்துப்பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ் நாட்டில் இந்த வடநாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக் கிளப்பிவிட்டன. தமிழ் நாட்டுப் பெருங்குடிமக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும் செல்வந்தர்களையும் வசப்படுத்திச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக் கொண்டு இந்த வட நாட்டு மதங்கள் தத்தம் கொள்கைகளைத் தமிழ்மக்களுக்குப் போதித்துவந்ததாகத் தெரிகின்றது. இவ்விதச் சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிடவேண்டியதும் ஆயிற்று.,
 

 ' ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் ;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
சற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் '
 

என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவித்தான் என்பதை மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின்றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை.

தமிழ் நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதல்முதல் வெற்றிபெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்தமதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை இரண்டாம் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற்றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்துவந்தது. பௌத்த மதம் முதன்முதல் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன் செல்வாக்கைக் கண்டு ஜைனமதமும் வைதீக சமயமும் பின்னடந்துவிடவில்லை; இவை வாளா இராமல், பௌத்தத்தை எதிர்த்துத் தாக்கிய வண்ணமாய், அதன் வீழ்ச்சிக்கு வழி கோலிக்கொண்டேயிருந்தன. தனது நிலையைக் காத்துக் கொள்ளப் பௌத்தம் இந்த இரண்டு பிறவிப்பகையுடன் போராட வேண்டியிருந்தது. கடைசியாக, நாளடைவில், பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு வழியும் ஏற்பட்டுவிட்டது. ஜைனம், வைதீகம் என்னும் புறப்பகை ஒருபுறமிருக்க, அகப்பகையும் தோன்றிவிட்டது. பௌத்தத்திற்குள்ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈனயானம், மகாயானம் என்னும் இரண்டு பிரிவுகள் தோன்றி அவற்றினின்றும் சில பிரிவுகள் கிளைத்து வளர்ந்தன. சிராவகயானம், மகாயானம், மந்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறிகின்றோம். 'ஐயுறுமமணரும், அறுவகைத்தேரரும்' என்று ஆறுவகைப்பிரிவினரான தேரர்கள் (தேரர்=பௌத்தர்) இருந்ததாகத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகின்றார். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக்குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக்கொண்டனர். இந்த உட்பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றிவிட்டது. உடம்பில் தோன்றிய நோய் நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு முதற்காரணமாயிருந்தன. அன்றியும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வந்தர்களாலும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், தமது பள்ளிகளில் பௌத்த பிக்ஷ¨க்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்த மதிப்புக் குன்றவும், பௌத்தம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவைபோன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவுகளும் ஏற்படாமலிருந்தால், பௌத்த மதம் தனது புறப்பகை மதங்களுடன் போரிட்டுக்கொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறை பாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டபடியால், அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்துவிட்டது.

கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டிற்குப் பின்னர், பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும் வைதீக மதம் உயர்நிலை அடைய முடியாமலே இருந்தது, பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌத்தத்தை முன்னைவிடக் கடுமையாகத் தாக்கி, அதை நிலைகுலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக்கோயில்களாக மாற்றப்பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பௌத்தத்தை வீழ்ச்சியடையச்செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டியபோதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமை யிழந்த நிலையில் அந்த மதம் தமிழ் நாட்டில் ஒரளவில் ஊடாடிக்கொண்டிருந்தது.

இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு, இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத்தொடங்கி, ஜைனமதத்தை வீழ்த்தி, உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்த மதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர்மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம், கி. பி. நான்காம், அல்லது ஐந்தாம் நூற்றாண்டு வரையில், பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது. கி. பி. நாலாவது, அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படையான கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்க்கொலை செய்வதை நிறுத்திக்கொண்டதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட தெய்வங்களைத் தன் மதக்கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்று விட்டது. இந்த மாறுதலுடன், 'பக்தி' இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப்பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது. சம்பந்தர், மணிவாசகர், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலைநாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், இந்தப் புதிய வைதீக இந்து மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றி பெற்றது. இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாம். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்தபோதிலும், வைணவமதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில் இந்துமதம் பிரிக்கப்படவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம் சைவம் என்றும், வடகலை தென்கலை என்றும், வீரசைவம் சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே, ஒற்றுமையுடன் போரிட்ட படியால், ஜைன பௌத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்துவிட்டது; தமிழ் நாட்டில் ஜைன மதம் என்றும் தலைதூக்க முடியாதபடியும், ஏற்கனவே ஜைன மதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும் படியும் இதனால் நேர்ந்தது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்து பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி. பி. 1266 -இல் சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷக்களை இலங்கைக்கு வர வழைத்துப் பௌத்த மதத்தை வலியுறச்செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப்படுகின்றதாகலின், கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ் நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம். கி. பி. பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டின் சிற்சில இடங்களில் பௌத்தரும் பௌத்தப்பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர், நாளடைவில், பௌத்தம் தமிழ் நாட்டில் மறைந்துவிட்டது; மறக்கவும்பட்டது. ஆனால், அதன் பெரிய கொள்கைகள் மட்டும் பல இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன.

Dev Raj

unread,
Nov 6, 2016, 10:22:54 PM11/6/16
to மின்தமிழ்
On Monday, 7 November 2016 04:41:44 UTC+5:30, தேமொழி wrote:

வட நாட்டினின்று தென்னாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட  கொள்கையுடையவை; ஒன்றோடென்று பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங்கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத்தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழித்துப்பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ் நாட்டில் இந்த வடநாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக் கிளப்பிவிட்டன. தமிழ் நாட்டுப் பெருங்குடிமக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும் செல்வந்தர்களையும் வசப்படுத்திச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக் கொண்டு இந்த வட நாட்டு மதங்கள் தத்தம் கொள்கைகளைத் தமிழ்மக்களுக்குப் போதித்துவந்ததாகத் தெரிகின்றது. இவ்விதச் சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிடவேண்டியதும் ஆயிற்று.,
 

 ' ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் ;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
சற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் '
 

என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவித்தான் என்பதை மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின்றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை.

 

சமயக் கோட்பாடு சார்ந்த விவாதங்கள் என்றும்  எக்காலத்தும் எல்லாத் தேயங்களிலும் 
நடைபெற்று வருவனதாம்.  இன்றும் பல தளங்களில் ஆபிரஹாமிய மதத்தினரிடையே
விவாதங்கள் நின்றபாடில்லை. தோரா, பழைய ஏற்பாடு ஒன்றுதான் என்றும் கூறுவதாகத்
தெரிகிறது. மோஸே, மோஸஸ், மூஸா ஒருவரே இச்சமயங்களின்  மூல புருடர் எனவும்
சொல்லிக்கொள்கின்றனர். யூ ட்யூபுக்குள் போனால் முடிவற்ற விவாதங்கள்.

மேற்குலகில் நடந்த சிலுவை - பிறைப்போர்கள் போல பாரதத்தில் சமயத்தின் 
பெயரால் பெரும்போர்கள் நிகழ்ந்திருந்தால்  தெரிவிக்கலாம்; இன்றும் சமய
அடிப்படையில் போர்கள் , கொலைகள், குண்டுவெடிப்புகள்
ஆபிரஹாமிய சமயத்தினரிடையே நின்றபாடில்லை. 

தாங்கள் தந்துள்ள ஆதாரம் பழைய சமயப் பூசல்களை அரசன் தலையிட்டு அடக்கியதைச்
சொல்கிறது. இன்றைய ஆபிரஹாமியப் பெரும் போர்களை யார் தலையிட்டு அடக்குவது ?


தேவ்




தேமொழி

unread,
Nov 6, 2016, 10:40:05 PM11/6/16
to மின்தமிழ்
நான்  சொல்ல வந்த கருத்து,  நமது கைமீறி முடிந்து  போனவற்றைப் பற்றி கவலைப்படுவது பயன் தராது என்பது.
இது  ghar wapsi or homecoming போன்ற கண்ணோட்டம் அமைதியைக் குலைக்கும் முயற்சி.  

மதச் சார்பற்ற நாடு என்று அமைக்கப்பட்ட   சுதந்திர இந்தியாவில் இது எத்தனை முறை நடந்திருக்கிறது என்ற புள்ளிவிவரம் தர முடியுமா?
முன்னர் ஒருசமயத்திற்கு உரியதாக இருந்து,  பிறகு சுதந்திரம் பெற்ற பிறகு   இடிக்கப்பட்ட கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் பட்டியல் இருக்கின்றதா?
இது போன்ற வன்முறை  நிகழ்வுகள் அதிகரிக்கும் காலகட்டம் எது?  யாரால் துவக்கப்படுகிறது?
யார் முதலில் துவக்குவது ?  இவையாவுமே நோக்கத் தேவை.


(அதாவது, பேஸ்புக்கில் இகழ்ந்து  எழுதி உசுப்பிவிட்டு - பிறகு ஆத்திரமடைந்தவர்களால்  தாக்கப்பட்டவுடன்   கதறுவதற்குப் பதில் அடுத்தவரைச் சீண்டாமலே இருக்கலாம் அல்லவா?)

சமயத்தில் அக்கறை உள்ளவர்கள், அடுத்தவர்களிடம் இது எங்கள் சமயத்திற்கு உரியது  என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், சீந்துவாரற்று பாழடைந்து கொண்டிருக்கும் வழிப்பாட்டுத் தலங்களை  சீர்ப்படுத்தலாம். அது ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். 

கவனிக்கவும் மேலுள்ள வாக்கியங்கள்  எந்த மதத்திற்கும் பொருந்தும்படி எழுதப்பட்டுள்ளது. 

..... தேமொழி

 


தேவ்




Dev Raj

unread,
Nov 6, 2016, 10:52:39 PM11/6/16
to மின்தமிழ்
On Monday, 7 November 2016 03:57:30 UTC+5:30, தேமொழி wrote:///Nowhere in Brahmins religious text book i.e. Vedas, Upanishdas, Manusmruti, etc does the word "Hindu" is written. ///
என்ற ஒரு  வரியைப் பிடித்துக் கொண்டு 
"Hindu, drAviDa - Both the words have broader sense and wide usage."
(???)
இது போன்ற ஹிந்து திராவிட போன்ற விளக்கங்கள் இந்த இழையில்   தேவையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.


இது ஒரு பெரிய பிரச்னை இல்லை. அகற்றி விடுகிறேன். தனி இழையாக்கி விடலாம்.

‘முதல் மூவர் ’ இழையில் சோழர் கால நிகழ்வுகளையொட்டி நான் எழுதி வருகையில் அதில்
சமூகப் பார்வையை உட்செலுத்திப் பெண்ணிய உரிமை சார்ந்ததாகத் திசை
திருப்பப் பட்டது. நான் விளக்கப்புகுந்தால் அது ஒரு பூசலாகும். அது இப்போது
வேண்டா.   

உமது இழைகளில் எது எது விவாதப்பொருளாக வேண்டும் என்பதை உமது வழக்கம்போல்
கொட்டை எழுத்துகளில் காட்டிவிட்டால் அதன் மேல் விவாதத்தைத் தொடரலாம்


தேவ்


Dev Raj

unread,
Nov 6, 2016, 11:01:10 PM11/6/16
to மின்தமிழ்
நன்றி ஐயா,

இப்பதிவு தேமொழி அவர்களின் கருத்தோட்டத்துக்கு இடையூறாக அமைவதாகத்
தெரிகிறது. தனி இழையாகத் தொடர்வோம்


தேவ் 

Dev Raj

unread,
Nov 6, 2016, 11:06:30 PM11/6/16
to மின்தமிழ்
On Monday, 7 November 2016 09:10:05 UTC+5:30, தேமொழி wrote:
(அதாவது, பேஸ்புக்கில் இகழ்ந்து  எழுதி உசுப்பிவிட்டு - பிறகு ஆத்திரமடைந்தவர்களால்  தாக்கப்பட்டவுடன்   கதறுவதற்குப் பதில் அடுத்தவரைச் சீண்டாமலே இருக்கலாம் அல்லவா?)

புரியவில்லை அம்மணி; விவரம் தெரிவித்தால் நல்லது

 

சமயத்தில் அக்கறை உள்ளவர்கள், அடுத்தவர்களிடம் இது எங்கள் சமயத்திற்கு உரியது  என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், சீந்துவாரற்று பாழடைந்து கொண்டிருக்கும் வழிப்பாட்டுத் தலங்களை  சீர்ப்படுத்தலாம். அது ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும். 


ஆம்;  சரியான கருத்து. ஆலய வருமானம் பாழ்பட்ட ஆலயச் சீரமைப்புக்கு உதவாமல் விரயமாவதை பலமுறை அரசின் கவனத்துக்கொணர்கிறார்கள்.
தனிப்பட்ட முறையிலும் முயன்று வருகிறோம். தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை.  மரபார்வலரும் இணைந்து கொள்ளலாம்


தேவ்

Oru Arizonan

unread,
Nov 6, 2016, 11:18:15 PM11/6/16
to mintamil
2016-11-06 21:01 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
On Sunday, 6 November 2016 22:29:52 UTC+5:30, oruarizonan wrote:
இருள்படிந்த உள்ளங்களுக்கு ஒளியைக் காட்டியிருக்கிறீர்கள், தேவ் ராஜ் அவர்களே!
"இருள்நீங்கி ஒளி"  -- தமஸோ மா ஜ்யோதிர்கமயா"
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

//நன்றி ஐயா,
இப்பதிவு தேமொழி அவர்களின் கருத்தோட்டத்துக்கு இடையூறாக அமைவதாகத்
தெரிகிறது. தனி இழையாகத் தொடர்வோம்
தேவ் //

மாயமானைத் துரத்தவேண்டாம், தேவ் அவர்களே!  திசைதிருப்பும் முயற்சியில் சிக்கி உங்கள் 'சீதை'யை இழந்து விடாதீர்கள். விடாதீர்கள்.
உங்கள் "கோணத்தை" இவ்விழையிலேயே எழுதுங்கள்.
தனது "மாற்றுக்கோணத்தை" எழுத உயர்திரு தேமொழி அவர்கள் தயங்குவதில்லையே!
அவரது பிரச்சாரத்திற்கு எதிர்க்கருத்து வைக்க வேறு இழைக்குப்போகவேண்டுமா என்ன?
இவ்விழையில் எழுதியதையே நான் வைத்த ஒரு பரிதாபச் செய்திக்கு [இந்து வழிபாட்டுத்தலங்கள் வங்கதேசத்தில் சூறையாடப்பட்டதற்கு] //இது  ghar wapsi or homecoming போன்ற கண்ணோட்டம் அமைதியைக் குலைக்கும் முயற்சி. //மாற்றுக்கருத்தாக அவர் வைத்திருக்கிறார்.
இது  அவரது உட்கொணத்தை [இந்துசமய எதிர்ப்பை] காட்டுகிறது அல்லவா!

நான் பதிந்த செய்தியைத் தீவிரவாதம் என்று மறைமுகமாகச் சொல்லுகிறார்.
அப்படியான இவர் எழுதியிருப்பது கர் வாப்சி அல்லது வீடுதிரும்புவது போன்ற கண்ணோட்டம் இல்லையா?

தேமொழி

unread,
Nov 6, 2016, 11:20:47 PM11/6/16
to மின்தமிழ்
&


On Sunday, November 6, 2016 at 8:01:10 PM UTC-8, Dev Raj wrote:

இப்பதிவு தேமொழி அவர்களின் கருத்தோட்டத்துக்கு இடையூறாக அமைவதாகத்
தெரிகிறது. தனி இழையாகத் தொடர்வோம்

 
திரு. தேவ்.


இதனை விவாதத்திற்கான இழையாக நான் கருதவில்லை. 

எப்பொழுதும் என் இழை "திசை திரும்புகிறது"  "திசை திரும்புகிறது" என்று சொல்லிக் கொண்டிருப்பவர் நீங்கள்.

எனவே,  உங்கள் இழை கிறித்துவ மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறாமல் இருக்க ...
தடம் மாறுவதைத் தவிர்க்க இந்தப் புத்தர் கோவில் விவகாரத்தை ஏற்கனவே தனியாக பிரித்ததும் நீங்கள் எப்பொழுதும் 'திசை  மாறுகிறது, ' என்று சொல்வதால்தான்.

நீங்கள் குறிப்பிட்ட கீதை இழையிலேயே சென்று பாருங்கள், கீதையைத் தவிர எந்தத் திசைகளில் யார் மூலம் இழை திரும்பியிருக்கின்றது தெரியும்.

சுபா "வேளாங்கண்ணி மாதா கோயில் - வரலாற்றுப் பார்வையில்" >>>  https://groups.google.com/d/msg/mintamil/wkCnOoe0br8/M4Cq4OyNAgAJ <<< என்று உங்கள் வரலாற்று ஆய்வுக்குத் துவக்கிவைத்த இழையில் நீங்களே இழையின் தடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.

வேளாங்கண்ணியை விட்டுவிட்டு புத்தரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஆர்வத்துடன் பங்கேற்ற திரு. கணேசன் அவர்கள் கூட இனி என்ன செய்வது  என்ற  குழப்பத்தில் விட்டுவிட்டார் என நினைக்கிறேன்.

இதை நான்  சுட்டிக் காட்டலாமா என்று கூட நினைத்தேன், பிறகு அதுவும் திசை திருப்பல் என்ற குற்றச்சாட்டு வரும் நமக்கென போயிற்று என நினைத்துக் கொண்டு தவிர்த்துவிட்டேன்.

எனவே இது  இந்தியாவின் புத்த மத  சான்றுகளுக்காக, கோவில்கள் கைமாறிப் போனதற்கு சான்று  கேட்டதற்கு, சான்று  காட்ட துவக்கப்பட்ட இழை. 

இதில் மேற்கொண்டு தகவல் கிடைத்தால் நான்  பகிர்ந்து கொள்கிறேன். 

நன்றி 

..... தேமொழி


 


தேவ்


தேமொழி

unread,
Nov 16, 2016, 3:17:41 AM11/16/16
to மின்தமிழ்


பார்க்கஅடிக்குறிப்பு:  http://www.bahaistudies.net/asma/pali.pdf#page=7



12 ஆம் நூற்றாண்டில் இந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டவர்கள் சோழர்களோ?


பௌத்த திருமறைகளைப் பாளி மொழியில் இருந்தவற்றையும் சிங்கள மொழியில் இருந்தவற்றையும் குறிவைத்து அழித்திருப்பதாகத் தெரிகிறது.


பர்மாவில் இருந்து  பாளி மொழி பௌத்த திருமறைகளை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.


சிங்களமொழிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.


இதில் ...

https://groups.google.com/d/msg/mintamil/2FvjO-5V4uU/YZ_l0MIZBgAJ   இந்த இழையில் குறிப்பிட்டபடி 

தமிழில் தாமரை சூத்திரத்தை தேடினால் கிடைக்குமா எனத் தெரியவில்லை.



..... தேமொழி




தேமொழி

unread,
Jun 20, 2017, 7:05:15 PM6/20/17
to மின்தமிழ்

கிடந்த நிலையிலான புத்தரைப் பற்றிய பதிவுகளை சோழ நாட்டில் காணமுடியவில்லை. வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி தன் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறியிருந்த புத்தர் சிலை (கீழேயுள்ள புகைப்படம்) தற்போது சுவடு இன்றி மறைந்துவிட்டது. 

பரிநிர்வாண புத்தர் சிலை

Dr. B. JAMBULINGAM

Reply all
Reply to author
Forward
0 new messages