--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 2.நான் நிப்போன் (ஜப்பானியர் தம் நாட்டை அப்படித்தான் அழைத்துக் கொள்கின்றனர்) போன பின் தான் தெரிந்தது, நிப்போன் ஆசியாவின் திட்டிவாசல் என்று (Japan: The gate way of Asia). இந்தியர்களாகிய நாம் ஆங்கில மேலாண்மையில் நமது கிழக்கு நோக்கிய பார்வையை சுத்தமாக மறந்துவிட்டோம். நமது கல்வி ஆங்கில வழியில். நமது சர்வ ஞானமும் ஆங்கிலம் வழியில்! பக்கத்து வீட்டு மலையாள இலக்கியம் என்றால் கூட ஆங்கில வழியிலேயே நமக்குப் புரிகிறது. ஆங்கிலேயர் தந்திரமாக தமிழ், சமிஸ்கிருதக் கல்வியை நம்மிடமிருந்து பிடுங்கி விட்டனர். இழப்பு, நமது வேர்கள் பற்றிய பரிட்சயமே இல்லாமல் போய்விட்டது. அதை இட்டு நிரப்ப உயர்வு நவிற்சியாக தமிழைக் கொண்டாடி சமிஸ்கிருதத்தை பழிக்கத் தொடங்கிவிட்டோம். இழப்பு இரண்டு மொழிப் பாண்டித்தியமும்தான். ஆனால் நிகோங்கோ (ஜப்பான் மொழி) வைப் பேச, புரிந்து கொள்ள நமக்கு ஆங்கிலம் தேவை இல்லை! நான் நிப்போனில் இறங்கியவுடன் என்னை வரவேற்று கவனித்துக் கொண்ட முனைவர்.சுப்ரமணியன் அட்டகாசமாக நிஹோங்கோ பேசினார். எப்படி? இப்படி? என்று கேட்டேன்! பேசுவதற்கே ஆளில்லாத சூழலில் இவர்களோடு பேசிப்பேசி அதுவாக வந்துவிட்டது என்றார். நானும் மெல்ல, மெல்ல பேசத்தொடங்கினேன். உண்மையில் தமிழர்கள் நிஹோங்கோ பேசுவது எளிது. சிக்கலான உச்சரிப்பு அல்ல. ஆனால், நிஹோங்கோ எழுதுவது, படிப்பது என்பது வேறு விஷயம்! ஏனெனில், இம்மொழியின் வரிவடிவம் பண்டையச் சீனவரிவடிவத்தைக் கொண்டுள்ளதே. உண்மையில் கிழக்காசியா முழுவதுமே சீன வரிவடிவமே ஒரு காலத்தில் கோலோட்சியது. அது சீன அரசியல் மேலாண்மையின் விளைவு. பிற்பாடுதான் ஹங்குல் (கொரியா), வியட் (வியட்நாம்), ஹிரகானா/கதகானா (நிப்போன்) போன்ற வரிவடிவங்கள் தோன்றத் தொடங்கின. இவை ஏன் தோன்றின எனப் பார்த்தால் ஓர் பேருண்மை புரியும். நிப்பொனியர், கொரியர், வியட்நாம் மக்கள் சீனர்கள் போல்தோற்றமளித்தாலும் அவர்கள் உண்மையில் பல்லினக் கூட்டு. எனவே அவர்களது மொழியும் அவர்களது வேர்களைப் பிரதிபலிப்பதாக அமைந்தன. அவ்வகையில்தான் நிஹோங்கோவிற்கும் தமிழுக்குமான உறவு வருகிறது.அங்கு எப்படித் தமிழ் போனது? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான துப்பு கொரியாவில் உள்ளது. இதை பேராசிரியர் காம்பே (Tstuomu Kambe) எனக்கு சென்னையில் விளக்கினார். டாக்டர் ஜான் சாமுவேல் அவரது ஆசியக் கல்வி மையத்தில் ஓர் கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். Silver Jubilee Celebrations of the Institute of Asian Studies International Seminar on the CONTRIBUTIONS OF TAMILS To THE COMPOSITE CULTURE OF ASIA (16th – 18th January 2011) அதற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். நான் அப்போது கொரியாவிலிருந்தேன். அங்குதான் பேரா. காம்பே அவர்களைக் கண்டேன். அவருக்கு நான் சொன்ன கொரியத் தமிழ் உறவு மிகவும் பிடித்திருந்தது. அது உண்மை என்றார். எப்படி எனக் கேட்டேன். நிப்போன் சரித்திரவாளர்களின் புரிதல் படி தெற்கு நிப்போன் பகுதியில் யாயோயி எனும் இனக்குழு தென் கொரியாவிலிருந்து அரசியல் நெருக்கடியால் இடம் பெயர்ந்து நிப்போனுக்கு குடி பெயர்ந்தனர் என்றார். இந்த இனக்குழு யாரென நாங்கள் தோண்டிப் பார்த்த போது அது தென்கொரியாவில் காயா அரசை உருவாக்கிய ஒரு தென்னகக் குடி என்று புரிந்தது. இவர்கள் மூலமாகவே தமிழ் நிப்போனுக்குள் செல்கிறது. பேரா. ஓனோவின் ஆய்வுகளை வைத்துப் பார்க்கும் போது இவ்விடப்பெயர்வு கிருஸ்து சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் சங்கச் சொற்கள் நிரம்ப நிஹோங்கோவில் உள்ளன. இதை வலுப்பெறச் செய்யும் தகவுகளை பேராசிரியர்கள் மனோன்மணி சண்முக சுந்தரம், சண்முக சுந்தரம் அளிக்கின்றனர். இவர்களை நான் நண்பர் முனைவர் நெடுங்செழியன் ஏற்பாடு செய்திருந்த "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இயக்கங்களின் பங்களிப்பு" எனும் கருத்தரங்கில் (மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில், மார்ச்சு திங்கள் 6,7,8, 2008) சந்திக்கிறேன். அங்கும் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். நிஹோங்கோவில் சங்கக் கவிதையை ஒட்டிய ஓர் வடிவு இருப்பதாக இவர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். ஆக, சங்க காலத்தில் தொன்நிப்போன் மொழியும், தமிழும் கலந்துரையாடி இருக்கின்றன. அதே காலக்கட்டத்தில் தமிழும் இந்தோ ஆரிய மொழிக் குடும்பதைச் சேர்ந்த சங்கதத்துடன் (சமிஸ்கிருதம்) உறவாடி உயர் இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தது!மரபணு பரிசோதனை செய்தால் நிச்சயம் இவ்வுறவை நிரூபிக்க முடியும். ஏனெனில் தென்நிப்போனியர் கோடை காலத்தில் நிறம் கருக்கும் போது இந்தியர்கள் போலவே காணப்படுகின்றனர்.கொரியா பற்றி அப்போது எனக்கொன்றும் தெரியாது. தொலைக்காட்சியில் வரும் கொரிய சித்திரம் உணர்ச்சி வசப்படக்கூடிய மக்கள் என்பதையே காட்டியது. கொரியாவிலிருந்து நிப்பொனுக்கு படிக்கவரும் மாணவர்கள் அடக்க ஒடுக்கமாக இருந்த இடம் தெரியாமல் இருப்பர். நாங்களெல்லாம் ஆங்கில மொழியில் ஆய்வு செய்யும் போது கொரிய மாணவர்கள் மட்டும் நிஹோங்கோவில் தீஸீஸ் எழுத வேண்டும். கொரியாவை நிப்போன் ஆக்கிரமித்து வன்கொடுமை செய்த வரலாறு எனக்கு அப்போது தெரியாது. கொரிய மாணவர்கள் எதுவும் பேசாமல் காரியமே கண்ணாயினர் என்று இருப்பர். கொரியப் பெண்கள்நிப்போனியரை விட அழகு. எனது சகா திருவிக்கிரமன் எப்படியோ கிம் எனும் பெண்ணை கணக்குப் பண்ணிவிட்டான். அந்தப் பெண்ணோடு பேசும் போதெல்லாம் ஏதோ கற்பின் கனலியோடு பேசுவது போல் உணர்வேன். ஏனென்று பின்னால்தான் புரிந்தது. அவர்களுக்கு நிஹோங்கோ ஒரு பெரிய சவால் இல்லை என்று போகப்போகத் தெரிந்து கொண்டேன். கேட்டபோது இருமொழிக்கும் ஆழமான உறவு இருக்கிறது என்றனர். கொரியா பற்றிய என் வியப்பு கூடியது!நாரா எனும் நகரில் ஒரு மிகப்பெரிய புத்தர் கோயில் உள்ளது. தோடாய்ஜி என்று பெயர் (இங்கு ஜீ என்பது கோயிலைக் குறிக்கும்). அக்கோயிலை நிர்மாணித்தவர்கள் கொரியர்கள் என்றனர். அத்தனை கலை நுணுக்கத்துடன் கூடிய ஒரு பிரம்மாண்டத்தைக் கட்ட வேண்டுமெனில் இவர்கள் எத்தகைய விற்பன்னர்களாக இருப்பர் என்று யோசித்தேன். கோயிலில் இருக்கும் புத்தர் சிலையின் மூக்குத்துளை வழியாக ஒரு மனிதன் உட்புக முடியும் எனில் சிலை எவ்வளவு பெரிசு என யோசித்துக் கொள்ளலாம்!கொரிய உணவான கிம்சிச்சோறு எனக்கு முதலில் கிடைத்தது ஓசாகா நகரில். எனது நண்பர் யோஷி எனக்காக பிரத்தியேகமாக சமைத்துக் கொடுத்தார். இந்த உணவு பின்னால் என் பிரியமான உணவாக மாறும் என்று நான் அப்போது கனவில் கூட எண்ணவில்லை!(தொடரும்)
Kannan - forwarding a note from Para aunty..---------- Forwarded message ----------
From: Para Sundha <paras...@gmail.com>
Date: 2017-10-04 8:24 GMT+02:00
Subject: [MinTamil] செந்தமிழ் செல்வி செம்பவளம் எனும் ஹே ஹுவான் ஓக் (Korea - Tamil Linksஒரு சிறு திருத்தும்
To: Suba <ksuba...@gmail.com>மனோன்மணி சண்முக சுந்தரம், சண்முக சுந்தரம்இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர்கள் திரு சண்முகதாஸ் திருமதி மனோன்மணி சண்முகதாஸ்என வரவேண்டும்
//அதை இட்டு நிரப்ப உயர்வு நவிற்சியாக தமிழைக் கொண்டாடி சமிஸ்கிருதத்தை பழிக்கத் தொடங்கிவிட்டோம். // சமஸ்கிருதத்தை மிக உயர்த்திப் பிடிக்கும்பாங்கும் தமிழைப் படிப்படியாக ஒழித்துக் கொண்டு அங்கே சமஸ்கிருததை நிலையாட்டிய நிகழ்வுகளின் எதிரொலியால் எழுந்த ஒரு எதிர்ப்பு உணர்வு தான் இது. ஆக இத்தகைய விசயங்களைத் தொடும் போது கவனமாக மூலகாரணத்தையும் உணர்ந்து உணர்த்தும் வகையில் நாம் சொல்ல வேண்டிய கடமையும் உண்டு எனக் கருதுகிறேன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 3கொரியத் தமிழ் தொடர்பை நாம் புரிந்து கொள்ள, முன்னமே ஆய்வுகள் செய்யப்பட்டு தரவுகள் கிடைக்கும் நிப்போன் தமிழ் உறவைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அதனால்தான் சொன்னேன் நிப்போன் ஆசியாவின் திட்டிவாசல் என்று. மேற்குலகம் இவ்வாசல் வழியாகவே இந்தியாவைக் காண்கிறது. நிப்போன் வந்து ஜென் பற்றி அறிய முற்படும் போதுதான், அது இந்தியாவிலிருந்து புறப்பட்ட நெறி என அறிகின்றனர். இன்னும் ஆழமாக அறியும் பொதுதான் இந்த நிப்போனிய “தாருமா”, கொரியாவில் “தல்மா” என்று அழைக்கப்படுகிறார், சீனாவில் “தாமோ” என்று அழைக்கப்படுகிறார், ஆனால் அவரது இயற்பெயர் போதிதருமர் அவரொரு தென்னிந்தியர் (தமிழர்) என அறிகின்றனர். இப்புரிதல் மேற்கத்தியருக்கு மட்டுமன்று. ஆங்கிலமயமாக்கப்பட்ட இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் இத்திட்டி வாசலே இந்திய தரிசனத்தை வழங்குகிறது. ஆசியாவில், அது நிப்போன், கொரியா, வியட்நாம், தைவான், தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் எங்கிருந்தாலும் ஆண்களும் மென்மையானவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் அழுவதற்குத் தயங்குவதில்லை. பெரியவர்களுக்கு பேருந்துகளிலெழுந்து இடமளிக்கின்றனர். பணத்தை இடது கையால் வாங்குவதில்லை. மெதுவாகப் பேசுகிறார்கள், பண்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் மலேசியாவிலிருந்து மேற்கே போகப் போக (ஆங்கிலக் காலனிகள்) இந்த ஆசிய குணம் குறைகிறது. நாம் வெள்ளைக்காரர்கள் போல் ஆகிவிட்டோம் நடை, உடை, பாவனைகளில்! எதற்குச் சொல்கிறேன் எனில் ஆசிய குணமறிய, ஆசியப் பண்பாடு அறிய நாம் மீண்டும் கிழக்கு நோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது எனும் உண்மையைச் சொல்ல!சங்க காலத்தில் தமிழன் நிப்போன்வரை போயிருக்க சாத்தியமுண்டா? எனக் கேட்டுப்பார்க்களாம். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களே அதற்குச் சான்றாக அமைகின்றன. வேறு எந்த மொழியில் ஐந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு அவை அனைத்தும் வணிகர்கள் பற்றியே பேசுகிறது? எந்த மொழியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உலக நோக்கு உள்ளது? அஞ்சுவண்ணத்தார், திசை ஆயிரத்து ஐநூற்றுவர், நூற்றுவர் கண்ணர், மணிகிராமத்தார், நானாதேசிகள் எனும் வணிகக் குழுக்கள் கிருஸ்து சகாப்தத்திற்கு முன்பே கிழக்கும் மேற்கும் போய் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். இவர்கள் செல்லும் போது பௌத்த மத பிட்சுக்களும், பிக்குணிகளும் (இதே வார்த்தை கொரியாவில் பெண் புத்தநெறியாளர்களைக் குறிக்க இன்றளவும் பயன்படுகிறது) கூடவே பயணப்பட்டு புத்த நெறியை தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரப்பினர். இதற்குச் சான்றாக நாம் 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை காவியத்தைச் சொல்லலாம். இதே காலக்கட்டத்தில் நானாதேசிகள் பர்மாவில் ஸ்தாபிதம் செய்த “நானாதேசிகள் விண்ணகரம்” பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கில் தமிழ் வணிகர்கள் வந்து போனதற்கான சான்றுகள் பல்லவ கிரந்தத்தில் கிடைக்கின்றன. திசை ஆயிரத்து ஐநூறு அறிந்து வைத்திருக்கின்றனர் எனில் இவர்கள் உலக வியாபாரிகளாக சுற்றியிருக்க வேண்டும். இந்தப் போக்குவரத்துதான் தமிழ் வணிகர்களை, இளம் அரசர்களை, அரச குமாரிகளை தூரக்கிழக்குவரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நம் கொரிய அரசி பற்றிப் பேசும் போது இதை விரிவாகக் காண்போம்.
இப்படிப் பயணப்படுவோர் தம்மோடு தம் இனம் சார்ந்த சமயம், இலக்கியம், பிற பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் செல்லுதல் இயல்பு. அப்படித்தான் விஷ்ணு வழிபாடு தென்கிழக்கு ஆசியாவில் பரவி இருக்க வேண்டும். தாய்லாந்தின் பூர்வீகப் பெயர் “சியாம்”. ஷியாமள வண்ணன் என்பது கண்ணனுக்கான பெயர். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் அங்கோர்வாட் எனும் கம்போடிய நகரில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாஷிங்டன் டி.சியில் அமைந்திருக்கும் இந்தோனீய தூதரக வாசலில் மிக அழகான “சரஸ்வதி” சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதை உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனீசியா செய்திருக்கிறது. இதே இந்தோனீசியாவில்தான் பாலி எனும் இந்துக்கள் அதிகம் வாழும் ஓர் தீவு உள்ளது. முளைப்பாரி வைத்து, குலவை கொட்டி இவர்கள் நடத்தும் சடங்குகள் தமிழகத்துச் சடங்குகளிலிருந்து வேறுபட்டது அல்ல. பிலிபைன்ஸ் தீவுகளில் ஒன்றின் பெயர் “பல்லவா” என்பது. ஸ்ரீவிஜயப் பேரரசின் தமிழி (பிராமி) செப்பேடு பிலிபைன்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சங்க காலத் தொடர்பால் விளைந்தவை.நிகோங்கோ (ஜப்பானிய மொழி)விற்கும் தமிழுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பேராசிரியர் சுசுமு ஓனோ 350 வார்த்தைகளை ஒப்பு நோக்கி 1985 ல் மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசினார். அதற்கு முன்னர் கால்டுவெல் இம்மொழிகளுக்கான தொடர்பு பற்றி யூகித்தார். பின்னால் இதை ஆதர்சமாக வைத்து இலங்கையைச் சேர்ந்த முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தோக்கியோ பல்கலைக் கழகத்தில் செய்த ஆய்வுகள் வெறும் வார்த்தைகளைத் தாண்டி நிப்போனிய இலக்கியமே சங்கத் தமிழ் இலக்கியத்தின் சாயல் கொண்டு இருப்பதாக நிரூபித்தார். நிஹோங்கோ இலக்கியத்தில் மிகத்தொன்மையானது என அறியப்படும் ”மன்யோஷூ” கவிதைகள் சங்க இலக்கியச் சாயல் கொண்டவை என்றும், அதை விளங்கிக்கொள்ள தொல்காப்பிய சூத்திரங்கள் உதவுகின்றன என்றும் நிரூபித்தார். இக்கவிதைகளின் முதல் தொகுப்பை அவர் கிபி 2000 ஆண்டில் வெளியிட்டார். அதன் இரண்டாம் தொகுதியை விரைவில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். கிபி 759 சேர்ந்தவை என நம்பப்படும், “பத்தாயிரம் இலைகள்” எனும் மன்யோஷூ (மான் என்றால் 10,000 என்று பொருள்) கவிதைகள் பேசும் இச்செறிப்பு என்பது ஓர் தமிழ் வழக்கமாகும். களவியல் படி இல் தாண்டி வெளியே சென்ற தன் பெண்ணின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் தாய் அவளை வீட்டில் சிறை வைப்பது இல் + செறிப்பு (இச்செறிப்பு) ஆகும். இது மன்யோஷூ கவிதையில் உள்ளது. ஆயின் இதன் பொருளை துலங்க வைப்பது சங்க மரபுச் செறிவு ஆகும். அது தெறியாவிடில் இக்கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் முனைவர் மனோன்மணி. தமிழின் மிகப்பெரிய வரம், சங்க காலத்தில் இருந்த மொழி, அதன் இலக்கியங்கள் இன்றளவும் சீர்கெடாமல் இருப்பதுதான். இதைத்தான் சுந்தரம் பிள்ளை, “உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே” என்று வாழ்த்துகிறார். எப்படி வாழும் கிழக்காசியப் பண்பாடு மறந்து போன தமிழர் விழுமியங்களை மீட்டெடுக்க உதவுகின்றனவோ அது போல பொருள் புரிந்து கொள்ள முடியாத தூரக்கிழக்கு இலக்கியத்தை தொன்தமிழ் மரபு கொண்டு புரிந்து கொள்ள உதவுகிறது.எனவேதான் தமிழின் செம்மை புரிய கிழக்கே நோக்க வேண்டியது அவசியமாகிறது!முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் நிப்போன் - தமிழ் உறவு பற்றிய நேர்காணல்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பகுதி 4இத்தொடர் எழுதுவதற்கோர் முக்கிய காரணமிருக்கிறது. நான் கொரியாவில் காலடி வைத்த ஜூன் 2003 லிருந்து கொரியத் தமிழ் உறவு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அது மெல்ல, மெல்ல எப்படி வடிவம் கொள்கிறது என்பதைக் காலக்கிரமத்தில் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன், கொரிய இளவரசி ஓர் தமிழச்சியாக இருக்க வாய்ப்புண்டு என்று சொன்னவுடன் தமிழக ஊடகங்கள் உற்சாகத்தில் குதிக்கின்றன. ஏதோ கொரியாவே தமிழர்களின் வாரிசு என்பது போல். அதை அப்படிப் பார்க்கக்கூடாது. இந்த ஆய்வு சுட்டுவதெல்லாம் பன்னெடும் காலமாகத் தமிழன் கடலோடி பல்வேறு தேசங்களுக்குப் போயிருக்கிறான். அச்சமயங்களில் இவனது மொழியும், பண்பாடும், சமய நம்பிக்கைகளும் சென்ற இடங்களில் பரவி இருக்கின்றன என்பது மட்டுமே.சங்க காலத்தில் மனிதன் கிழக்கே நிப்போன் (ஜப்பான்) வரை போயிருக்க முடியுமா? என்பதுதான் நாம் சந்தேகமாகக் கேட்கும் கேள்வி. ஆனால் அதற்கும் முன், அதாவது கற்காலத்தில், குறிப்பாக பெருங்கற்காலத்திலேயே மனிதன் உலகம் சுற்றியிருக்கிறான் என்பதை நிரூபிக்க முடியும். உதாரணமாக பெருங்கற்கால மக்கள் இறந்தோருக்கு கல்திட்டு (டோல்மன்) அமைத்து மரியாதை செய்வது வழக்கம். இந்தக் கல்திட்டுகள் இங்கிலாந்து தொடங்கி நிப்போன்வரை ஒன்று போல் உள்ளன. அது எப்படி? சுவாரசியமாக இந்தியாவிலேயே அதிக அளவு கல்திட்டுகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஒன்று தமிழர்கள் அக்காலத்திலேயே கிழக்கும் மேற்கும் சென்றிருக்க வேண்டும், அல்லது ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதன் கடற்கரைத் தாவல் எனும் முறையில் சிறு, சிறு படகுகள் மூலம் மெல்ல, மெல்லக் கரைவிட்டுக் கரை தாவி பரவியிருக்க வேண்டும். மனிதப் பரிணாமத்தில் பல்வேறு சமயங்களில் கடல் குறைந்தும், சில நேரங்களில் உறைந்தும் இடப்பெயர்விற்கு வழி விட்டு இருக்க வேண்டும். இல்லையெனில், மேற்கிலிருந்து கிழக்கு வரை கல்திட்டுகள் எப்படி ஒன்றேபோல் அமையும்?தமிழர்களையே எடுத்துக் கொள்வோம். இவர்களுக்கு முக்கிய அடையாளமாக தோலின் நிறம் கருப்பு என்றாலும் இக்கருப்பு ஆப்பிரிக்கக் கருப்பிலிருந்து வேறு படுகிறது. அட்டைக் கரியிலிருந்து மாநிறம் சிவப்பு என்று பல்வேறு வர்ண பேதங்கள் உள்ளன. அதே போல் தமிழர்களின் முகச்சாயலிலும் ஆப்பிரிக்க முகமும், மலைவாழ் மக்கள் முகமும் (இது ஆஸ்திரேலிய பழங்குடி முகம் என மானுடவியல் பிரிக்கிறது), தெற்காசிய சீன முகச்சாயலும், ஐரோப்பிய மங்கோலிய முகச்சாயலும், அரேபிய மக்களின் முகச்சாயலும் தெரிகின்றன. இது எப்படி சாத்தியம்? ஒன்று திரை மீண்டு வந்த தமிழன் பல்வேறு மரபணுக்களை தென்னனகத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லை, பல்வேறு இனக்குழுக்கள் தமிழ் மண்ணைப் பண்டு தொட்டு தொட்ட வண்ணமிருக்க வேண்டும்! சங்ககாலக் காப்பியங்கள் எல்லாம் கிரேக்க, ரோமானிய இலக்கியத்தின் தாக்கமாக எழுந்தவை என்பார் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி. அப்படி யெனில் பண்பாடுகள் தோன்றும் முன்பும், தமிழ்ப் பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையிலும் தமிழர்கள் பிறநாட்டுத்தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்றுதான் பொருள். சில கிரேக்கப் பெயர்கள் சங்க இலக்கியத்திலுள்ளன என்பார் இ.பா. மேலும் முத்து வியாபார நிமித்தம் பாண்டிய மன்னர்களின் மெய்காப்பாளர்களாக கிரேக்க ரோமானியர்கள் (யவனர்கள்) இருந்தனர் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது.இந்தியாவிலேயே மற்ற இனங்களுக்கு இல்லாத பெருமை தமிழர்களுக்கு உண்டு. இவர்களது கடல் வழி வணிகம் மிகப்பிரபலமாக இருந்ததால்தான் இந்தியாவின் தொன்மை மிகு காவியங்களான இராமாயணமும், மகாபாரத்தமும் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பேசுகின்றன. பண்டு என்றால் பழமை. பண்டு என்பதிலிருந்து பாண்டியன் என்ற பெயர் வருவது போல், பாண்டவர் என்ற பெயரும் வந்திருக்க வாய்ப்புண்டு. இதே ஏரணம் (லாஜிக்) கொண்டு சிந்தித்தால் கடலோடித் தமிழன் கிழக்கே கொரியா, நிப்போன் சென்றிருக்க வாய்ப்புண்டு. சென்ற இடத்தில் இனக்கலப்பு செய்யவும், மொழி, கலாச்சார பரிவர்த்தனை செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படித் தமிழ் மண்ணில் இனக்கலப்பு இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிறோமோ அதுபோல் கொரியர்களும், நிப்போனியரும் இனக்கலப்பு இருந்தாலும் அவரவர் இன அடையாளத்தோடு வாழ்கின்றனர்.நாம் நோக்க முற்படுவதெல்லாம் தமிழனின் கிழக்கு நோக்கிய பயணத்தின் தொன்மையை. அதன் சுவடுகளை! அதன் மூலம் நமது பண்டைய பெருமையை மீட்டுடெத்தல்! அதன் வழியாக சமகாலத் தமிழனுக்கு நம்பிக்கை ஊட்டல். அவனை உலகக் குடிமகனாக மாற்றுதல். பிற கலாச்சாரங்களோடு நல்லுறவு கொள்ளச் செய்தல், முன்பு போல் வணிகப் பொருளாதாரத்தில் மேம்படச் செய்தல். இது இக்காலக்கட்டத்தில் அவசியமாகப் படுகிறது. ஏனெனில், பன்னாட்டு வியாபாரம் என்பது சந்தையை அடிப்படையாகக் கொண்டு பிற நாட்டு வளங்களைச் சுரண்டுவதாக உள்ளது. இதனால் தமிழன் கொஞ்சம் மிரண்டு போயுள்ளான். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் நிலைக்கு அவன் ஆளாகி விடக்கூடாது. எல்லா இயக்கங்களின் பின்புலத்தையும் கவனமாகப் பார்த்து இவன் வலுப்பெற வேண்டும். உதாரணமாக, சீனர்களைக் கண்டு தமிழர்கள் மிரண்டு போயுள்ளார்கள். இளைஞர்களிடையே ஓர் எதிருப்புணர்வைக் காண்கிறேன். ஆனால் சீனர்களும், தமிழர்களும் மிக நல்ல வாணிப நட்புறவில் இருந்திருப்பதை நம் சரிதம் சொல்லும். நமக்கும் சீனர்களுக்கும் எப்பகையுமில்லை. ஆயினும், சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட சீன இந்திய மோதல் நமக்குள் ஓர் சீன பீதியை உண்டாக்கியுள்ளது. அது அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு இத்தகைய ஆய்வுகள் தேவை.சீனர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுகிறார்கள் என்றொரு புரளி. ஆனால், சங்ககாலத்தில் தமிழன் ரோமானியப் பேரரசின் பொருளாதாரத்தையே வணிகப் பெருக்கால் ஆட்டம் காண வைத்திருக்கிறான் என்றால் நம்மால் நம்பவா முடிகிறது? நாணயவியல் நிபுணர் தினமலர் கிருஷ்ணமூர்த்தி எழுதுகிறார், “ஒரு காலத்தில் மிளகு, ஏலக்காய், முத்து, பட்டு வியாபாரம் மூலம் ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த தங்க நாணயங்களையெல்லாம் தமிழன் கொண்டு வந்து விட்டான். அதனால் பீதியடைந்த ரோமப்பேரரசு தமிழ் நாட்டோடு கூடிய வணிகத்தைத் தடை செய்தது!” என்று. அதாவது சமகாலத்தில் பேசப்படும் டிரேட் எம்பார்கோ என்பது சங்க காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. வியாபார நிமித்தமாகவே இராஜேந்திர சோழன் கடாரம் மீது போர் தொடுக்கிறான். தமிழரின் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ஸ்ரீவிஜய மன்னர்களின் கொட்டத்தை அடக்க தமிழகத்திலிருந்து பல நூறு மைல் கடல் பயணத்தை மேற்கொள்கிறான் சோழன். மேலும், மேற்கிலிருந்து வந்த தங்கம் தடைபட்டபோது புதிய தங்க மார்க்கம் தேடி மலேசிய மண்ணைத் தொட்டு இருக்கிறான். மலேசியாவிற்குப் பண்டையப் பெயர் “ஸ்வர்ண பூமி” என்பது. அதாவது தங்கம் விளையும் நாடென்பது பொருள்.வணிகம் என்பதே தமிழ்ப் பண்பாட்டை உயர்த்தியிருகிறது. அதுவே மொழி மேன்மைக்கும், பண்பாட்டுச் செழுமைக்கும் வித்திட்டிருக்கிறது. மறந்து போன கடல் மேலாண்மையை தமிழன் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திறவுகோல்தான் இத்தகைய ஆய்வுகள்.(தொடரும்)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 6நிப்போனுக்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பு பங்காளிகள் தொடர்பு. கட்டிக் கொள்வார்கள், பின் சண்டை போடுவார்கள். ஆரம்ப காலத்தில் காயா அரசை நிர்மாணித்த இந்தோ கொரிய மக்கள் வடக்கிருந்து வந்த பகைமை காரணமாக தெற்கே போய் நிப்போனில் நுழைந்து அம்மக்களோடு கலந்து விடுகின்றனர். இக்கலப்பினால்தான் நிகோங்கோவிற்கும் தமிழுக்கும் சாயல் இருக்கிறது. அது சங்ககாலக் கலப்பு. கொரியப் பெண்கள் நிப்போனியரை விட அழகாக இருப்பதால் பெரும்பாலான நிப்போன் அரசர்கள் கொரியாவிலிருந்து பெண் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நிப்போன் என்பதோர் தீவு. தீவான்களுக்கே உரிய உயர்வு நவிற்சியின் காரணமாக கொரியாவைக் கைக்கொள்ள நிப்போனிய அரசுகள் தொடர்ந்து போரிட்டு இருக்கின்றன. ஆனால் வெல்ல முடியவில்லை. மெய்ஜி அரசர் காலக் கட்டத்தில் ஓர் முக்கிய நிகழ்வு இப்பிரதேச சரித்திரத்தையே மாற்றி விடுகிறது.கொரியா, நிப்போன் இரண்டும் புத்த நேறியில் அமைக்கப்பட்ட அரசுகள் என்றாலும் 16ம் நூற்றாண்டில் (கி.பி 1543) நிப்போன் கரையைத் தொட்ட போர்த்துக்கீசிய பாதிரிகளை நிப்போன் ஏற்றுக் கொண்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கி சுடும் பழக்கதைக் கற்றுக் கொள்கிறது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின் (கிபி 11653) டச்சுக்காரர்கள் கொரியத் தீவான ஜேஜு தீவில் கப்பல் தரை தட்டி இறங்குகின்றனர். நிப்போனியர் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த வரவேற்பை கொரியர்கள் தரவில்லை. மாறாக அவர்களைச் சிறை வைத்தும் பல நேரங்களில் சித்திரவதை செய்து கொன்றும் இருக்கின்றனர். மெய்ஜி அரசு நிப்போனில் கொண்டு வந்த ஐரோப்பிய சீர் திருத்தம் நிப்போனை தொழில் நுட்ப, பண்பாட்டு வளர்ச்சியில் முன் தள்ளியது. இதன் பயனாய் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 35 வருடங்கள் கொரியா நிப்போன் கைவசம் இருந்தது. 1945 -ல் நிப்போனியப் படைகள் அமெரிக்க நெருக்குதலால் விலகும் போது கொரியா முன்னேற முடியாத வண்ணம் அழிவுகளைச் செய்துவிட்டுச் சென்றது. இது கொரிய-நிப்போனிய உறவில் மிகவும் கறை படிந்த பக்கங்கள். இதனால் இன்றளவும் இவ்விரு நாடுகளுக்கிடையே பாகிஸ்தான் - இந்தியா உறவு போன்ற ஒரு நெருடலான உறவே சித்தித்து இருக்கிறது. எனவே நான் 1989 ல் நிப்போனை விட்டுக் கிளம்பும் வரை கொரியாவைப் பற்றிய நல்ல எண்ணங்களை நிப்போன் எனக்கு உருவாக்கித் தரவில்லை. பின்னால் நான் டாய்ச்சுலாந்து (ஜெர்மனி) போன போது அந்த நாட்டிற்கும் போலந்து நாட்டிற்கும் இத்தகைய உறவு இருப்பதை அவதானித்தேன். எப்படி நிப்போனியர் தன்னை உயர்வாகக் கருதுகின்றனரோ, அதே போல் டாய்ச்சுலாந்தர் தன்னை உயர்வாகவே எண்ணுவதைக் கண்ணுற்றேன்.நான் நிப்போனில் இருந்த காலத்தில் கடற்சூழல் வேதியியலில் ஆய்வுகள் செய்தேன். எப்படி நமது விவசாய, தொழில்முறை வேதிமங்கள் (உம். பூச்சி கொல்லிகள்) பல்லாயிரம் மைல்கள் தாண்டிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன என்பது என் ஆய்வு. மேலும் அரிசி எண்ணை எடுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஓர் வேதிமக் கசிவு 2000 பேரை நச்சேற்றிய நிகழ்வு குறித்த என் ஆய்வு உலக கவனத்தைப் பெற்றது. அதுவே என்னை டாய்ச்சுலாந்திற்கு இட்டுச் சென்றது. 1989 லிருந்து 2003 வரை நான் கொரியா பற்றி அதிகம் சிந்திக்கவே இல்லை. எனது நிப்போன் நண்பர்கள் என்னைக் காண டாய்ச்சுலாந்து வருவதும், நான் கருத்தரங்கில் கலந்து கொள்ள நிப்போன் செல்வதுமாக இருந்தது. ஆனால் எனது ஆய்வு நகர்வுகளை ஒரு கொரிய ஆய்வாளர் கண்காணித்து வருகிறார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவர்தான் ஓ ஜே ரியோங். இவருக்கு என்னைக் கொரியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்ற ஆசை. அதைச் சொல்ல கீல் நகருக்கு ஒருமுறை விஜயம் செய்தார். அப்போது கீல் நகரில் ஒரு கொரிய உணவகம் இருந்தது. அதனால் அவரை நல்லமுறையில் கவனித்துக் கொள்ள முடிந்தது. அதன் பின் அவர் தொடர்ந்து என்னை கொரியா வருமாறு அழைக்க 2003 ஜூன் மாதம் நான் கொரியாவிற்கு அறிஞர் குழு (Brain Pool) எனும் அமைப்பின் கீழ் அழைக்கப்பட்டேன். அதன் பிரகாரம் கொரியாவின் தலை சிறந்த கடலியல் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் (KIOST - Korean Institute of Ocean Science and Technology), ஆசிய ஐக்கிய நாடுகள் சபையின் (APEC -Asia Pacific Economic Cooperation) ஆதரவில் நடத்தி வந்த கடற்சூழலியியல் பயிற்சி மையத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றேன். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சென்ற நான் அங்கு எட்டு ஆண்டுகள் தங்குவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கும் தென்னாட்டிற்கும் ஒர் ராசி உண்டு போலும்! நிப்போனின் தென்தீவான ஷிகோகுவின் தலை நகரான மட்சுயாமாவில் படித்து எனது இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றேன். கொரியாவின் தென்கரையான கோஜே எனும் நகரில் அமைந்த தென்கரை கடலாய்வு மையத்தில் வேலை பார்த்தேன்!தென்கொரியா வந்த சில நாட்களில் தெருவில் நடந்த போது ஒரு பெண்ணின் குரல் “அப்பா” என அழைத்தது. குடும்பத்தை விட்டு வந்திருந்த எனக்கு அது என் பெண் அழைப்பது போலிருக்க சட்டெனத் திரும்பினேன்! வேறொரு சிறுமி வேறொரு தந்தையை அழைத்துக் கொண்டு இருந்தாள்! ம்ம்ம்..ஆனால் நான் அப்பா என்றுதானே கேட்டேன் என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு! கொஞ்ச தூரம் போனால் இன்னொரு சிறுவன் தன் அன்னையை “அம்மா” என்று அழைத்தான். அடடா! இது தற்செயல் அல்ல, இவர்கள் தாய் தந்தையரை தமிழர்கள் போல் அப்பா - அம்மா என்றே அழைக்கின்றனர் எனப் புரிந்து கொண்டேன். தன் சுட்டு, பிறர் சுட்டு எனத் தமிழில் வரும் ‘நான்’ ‘நீ’ என்பது அதே பயன்பாட்டில் இருப்பதையும் கண்டேன். மேலும் சில பயன்பாட்டு ஒலிகள் அப்படியே தமிழ் போல் ஒலிப்பதைக் கண்டேன். உதாரணமாக ஒரு குழந்தையைப் பார்த்து இங்கே வா! என அழைப்பது போலவே அவர்களும் ‘இது வா’ என்ற போது ஆச்சர்யப்படுப் போனேன். நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) - கொரிய உச்சரிப்புகள் ஒன்று போல் பட்டாலும் அங்கு இவ்விதப் பயன்பாட்டை நான் காணவில்லை. இதில் ஏதோ அதிசயம் இருப்பதை உணர்ந்தேன். முன்பே வீட்டில் இத்தொடர்பு பற்றி என் மனைவியின் குடும்ப உறவுகள் பேசிக்கொண்டது நினைவிற்கு வந்தது. அப்போது, முனைவர் வைஜெயந்தி ராகவன் இத்துறையில் தேறி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆகிவிட்டார் என்று தெரியாது. அதைவிட ஆச்சர்யம் எங்களுக்கெல்லாம் தமிழ் கொரியத் தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர் கொரிய மொழியில் புலமை பெற்ற பின்பும் இவ்விரு மொழித்தொடர்பு பற்றி சிந்திக்க வில்லை. சமீபத்தில் ஒரு கருத்தரங்கு விஷயமாகப் பேசிக்கொண்ட போதுதான் அவர் ஆச்சர்யப்பட்டு என் ஆய்வை சிலாகித்துப் பேசினார்.நான் கொரியர்களிடம் இது பற்றி விசாரித்த போது அவர்கள் தாங்கள் மங்கோலிய வம்சாவழியினர் என்றும், இந்தியாவிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றனர். ஏதோ முரண்பாடு இருப்பதை உணர்ந்தேன். இதே காலக்கட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த ஜுங் நாம் கிம் என்பவர் என்னோடு மின்னஞ்சல் தொடர்பில் வந்து இவ்விரு மொழிகளுக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசத்தொடங்கினார். கொரிய - தமிழ் விளிச்சொற்கள் ஏறக்குறைய அப்படியே இருப்பதைக் காட்டினார். மேலும் எப்படித் தமிழ் வரலாற்றை நாம் மூவேந்தர் வரலாறு (சேர, சோழ, பாண்டியர்) என்கின்றோமோ அது போல் கொரிய சரிதமும் மூவேந்தர் வரலாறு என்றே செப்புகிறது (சம்யூஉசா) என்றார். ஒரு படி மேலே போய் கொரியாவிலுள்ள ‘சொல்லா’ எனும் வட்டாரம் சோழர்களைக் குறிக்கிறது. எப்படிக் கடாரம் கொண்ட சோழன் இருந்தானோ அது போல் சோழர்களின் ஆகக்கிழக்கு பாசறையாக கொரியா இருந்தது என்றார். ஜுங் நாம் கிம் செம்மொழி மாநாட்டில் இச்சேதிகளை வெளியிட்டவுடன் அவர் மிகவும் போற்றப்பட்டு ‘பேராசிரியர்’ எனும் பட்டத்தையும் ஊடகங்கள் வாயிலாகப் பெற்றார். ஆனால், கிம் அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர். கனடாவில் வசிக்கிறார். ஒரு நாள் பேருந்துப் பயணத்தில் ஈழத்துத் தமிழர்கள் பேசிக்கொண்டு போனது கொரிய மொழி போல் காதில் பட்டதால், இது என்ன மொழி? என அறிந்து கொள்ள விழைந்த போது இந்தத் தொடர்பை உணர்ந்து இருக்கிறார்!அவர் என்னைத் தொடர்பு கொண்டு இப்படியெல்லாம் எழுதிய போது என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் கியோங்ஜூ அருங்காட்சியகம் சென்றது என்னுள் ஒரு கல்லைப் புரட்டிப் போட்டது!தொடரும்...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 7ஆய்வகத்தில் அமர்ந்து அறிவியல் ஆய்வு செய்வதற்கும், மக்களோடு பழகி மானுடவியல் ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அறிவியல் செய்யும் போது முழுவதும் objective வாக இருக்க முடியும். குறிப்பாக வேதியலில் ஒரு வேதிமத்தோடு அன்பு செய்ய முடியாது. பழக முடியாது. ஆனால் மானுடவியல் ஆய்வு என்பது அப்படி இல்லை. நான் இரண்டு வருடங்கள் ஞானக்குழு அமைப்பின் கீழ் கொரியா சென்று ஜெர்மனி மீள்வதாகத்தான் எண்ணம். மேலும் என் நிப்போனிய வாழ்வு இம்மக்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் தரவில்லை! ஆனால் கொரியா சென்று அவர்களோடு ஒண்ணுமண்ணாய் வாழ்ந்த போதுதான் இவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரிந்தது. ஒருவகையில் கொரியர்கள் இந்தியர்கள் போல்தான். நம் சரிதத்தைப் புரட்டினால் நாம் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போனதில்லை, ஆனால் வருவோர் போவோரெல்லாம் நம்மைத் தாக்கிவிட்டு, ஆக்கிரமித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். கொரியாவும் எந்த வம்பிற்கும் போனதில்லை. ஆனால் சீனாவும், நிப்போனும் இவர்களைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் பண்பான நாடு என்றால் அது கொரியா என்று தீர்மானமாகச் சொல்லலாம். பௌத்தம் சொன்ன நன்னெறிகளை இன்றளவும் கடைப் பிடிக்கும் சமூகமாக கொரிய சமூகம் விளங்குகிறது! கொரியாவில் பெண்கள் இரவு, நடுநிசி எப்போதும் தெருவில் நடக்க முடியும். நான் பலமுறை இதைக் கண்டுள்ளேன். கொரியக் குழந்தைகள் மாம்பழம் போல். கடித்து சாப்பிட்டுவிடலாம் ;-) எனவே இனிமேல் இந்த ஆய்வு கொஞ்சம் subjective ஆகப் போகும். அதில் தவறில்லை! இந்திய சரிதம் எனும் புத்தகம் எழுதிய ஹெர்மான் குல்க (கீல் பல்கலைக் கழகம், டாய்ச்சுலாந்து) எங்கள் குடும்ப நண்பர். தேநீர் அருந்தும் போது சொல்வார், ‘இந்தியர்கள் குல்க என்பதைக் கல்கி என்று எழுதுகின்றனர். அதுவும் பாந்தமாகவே இருக்கிறது’ என்று. இந்தப் பிடிப்பு, பாசம் இல்லையெனில் மற்றொரு கலாச்சாரத்திற்குப் போய் ஆய்வு செய்ய இயலாது!இப்படித்தான் ஞானக்குழு சுற்றுலா (Brain Pool Scholars Tour) ஒன்று ஏற்பாடாகியிருந்தது. கொரியாவை வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்து கொள்ள சில முக்கிய இடங்களுக்கு கூட்டிச் சென்றார்கள். அதில் குவான்ஞ்சு எனுமோர் இடம். ஷில்லா அரசின் தலைநகரமாக இருந்த இடம். பௌத்த கலையின் நளினமான வெளிப்பாடுகளைக் கொண்ட ஆட்சி இருந்த வட்டமது! அந்த அருங்காட்சியகம் போன போது எனக்குக் கொரியாவில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ புத்த கயா, சாஞ்சி என்று இந்திய நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் என்பது போன்ற உணர்வு. தடுக்கி விழுந்தால் இந்தியத் தொன்மம். பிரம்மித்துப் போய் வெளியே வரும் போது ஓர் நடுத்தர வயது மாது என்னிடம், “தாங்கள் இந்தியாவா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். நம் இரு நாடுகளுக்கும் ஒற்றுமை இருப்பது தெரிகிறதா? என்றார். ‘நிச்சயமாக’ என்றேன். ஏனெனில் வந்த அடுத்த வாரத்திலேயே கோஜே தீவிற்கு அருகிலுள்ள தொங்க்யோங் நகரில் இருக்கும் 800 வருடப் பழமையான புத்தர் கோயிலுக்கு போய் வந்திருக்கிறேன். ஆயினும் இந்த அம்மையார் வேறு ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது. அவர்களைப் பேச விட்டேன். ‘நாங்கள் ஏன் எங்கள் தந்தையை இந்தியர்கள் போல் அப்பா என்றும் அன்னையை அம்மா என்றும் அழைக்கிறோம் எனத்தெரியுமா?” என்றார். இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்! ‘சொல்லுங்கள்!’ என்றேன். அப்போதுதான் நான் முதன் முதலாக கிம் சுரோ அரசனின் கதை கேட்கிறேன்.அந்தக் கொரிய மாது எனக்கொரு கதை சொன்னார். அது சரிதமா? ஐதீகமா? என்பதில் தெளிவில்லை. ஆனால், கிம் வம்சா வழியினருக்கு அது சரிதம்! அதன் படி கொரிய மன்னனான கிம் சுரோ இளைஞனாக அரசேற்று இருக்கும் போது அவனுக்கொரு கனவு வந்தது. அதில் தனக்கு மனைவியாகப் போகின்றவள் மேற்கிலிருந்து வருவாள் என்று வந்தது. புத்த நெறியில் உள்ள கொரிய/நிப்போனியர்களுக்கு மேற்கு திசை என்பது சொர்க்கத்தின் திசை. ஏனெனில் கௌதம சித்தார்த்தன் என்ற சாக்கிய முனி தோன்றிய திசை அது. எனவே சுரோ கொரியப் பெண்களை மணந்து கொள்ளாமல் மேற்கிலிருந்து வரும் ஒரு நங்கைக்காகக் காத்திருந்தான். அதே சமயத்தில் இந்தியாவில் ஓர் அழகிய இளவரசியின் தந்தைக்கும் ஓர் கனவு வந்தது. அதன் படி தன் பெண்ணிற்கு கணவன் தூரக்கிழக்கில் இருக்கிறான் என்பது. எனவே அவ்வரசன் தன் பெண்ணை பரிவாரங்களோடு கடற்பயணம் மேற்கொள்ள அனுப்பிவிட்டான். அந்தப் பெண் கொரியக் கரை வந்து சுரோ மன்னனை மணந்து பல பிள்ளைகள் பெற்று இன்று கொரியாவின் செல்வாக்குள்ள குடிகளான கிம், ஹே இனக்குழுக்களைத் தோற்றுவித்தாள். அவள் இறக்கும் போது தன் கணவனிடம் ஒரு வரம் கேட்டாள். அதன் படி அவள் பிள்ளைகள் தம் பெற்றோரை எப்படி அம்மா/அப்பா என்று அழைத்தனரோ அது போலவே எல்லாக் கொரிய மக்களும் தத்தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்க வேண்டும் என்பதே அவள் கேட்ட வரம். அதன் படியே இன்றளவும் நடந்து வருவதாக அந்த மாது சொன்னாள்.தொன்மம் என்பது ஓர் கதைசொல்லி மரபு. நடந்த ஓர் உண்மை சம்பவம் காலப்போக்கில் கதை, கதையாய் வாய் மொழியாக வரும் போது மாற்றம் பெற்று, ஒரு புதினப்பூச்சு கொண்டு ஐதீகமாக மாறிவிடுகிறது. இராமானுஜர் எனும் காவியத்தலைவனின் கதைகளில் இந்தப் புதினப் பூச்சு இருப்பதால்தான் தொல்லியல் நிபுணர் நாகசாமி அப்படியொரு நபர் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றே இல்லை என்று புத்தகம் எழுத முடிகிறது. ஆனால் அது முறையல்ல. இராமானுச முனி ஏற்படுத்திய சம்பிரதாயம் வாழ்கிறது. அவர்கள் வம்சாவழியினர் இன்றும் வாழ்கின்றனர். கொஞ்சம் புதினம் இருந்தாலும் அடிப்படைக் கரு என்பது உண்மை. தொன்மங்களின் வாசிப்பு என்பதோர் கலை!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 8கிழக்கே நோக்கு எனும் தாரக மந்திரத்தை முதலில் சொன்னவர் கேரள வம்சாவளியினரான மலேசிய மேனாள் பிரதமர் மகதீர் முகம்மது குட்டி.
அவரது இலக்கு நிப்போன். அதுதான் மலேசியாவை எவ்வளவு உயர்த்திவிட்டது! ஏன் மேற்கே நோக்காமல் கிழக்கே நோக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. இந்தியா என்ற உந்நதமான தேசத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொள்ளை அடித்தவர்கள் மேற்கு தேசத்தைச் சேர்ந்த ஆஃப்கான், பாரசீகம், அரேபியா, துருக்கி, பின்னால் ஐரோப்பியர் போன்ற நாட்டினர். ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்து ஆக்கிரமித்து நம் சரிதத்தையே மாற்றிய அவர்கள் தங்கள் இருப்பிற்குச் சொன்ன காரணம், “நாங்கள் முன்னாள் (ஆரியர்) வந்தோம், எனவே இப்போது இருக்கத் தகுதி உண்டு” என்பதுதான் என்ன மமதை பாருங்கள்! ஆனால் கிழக்கு தேசங்களான பர்மா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளுக்கு இந்த அகம்பாவம் இல்லை. அவை இந்தியாவை மதிக்கின்றன. புத்தன் என்ற வள்ளலைத் தந்த நாடெனப் போற்றுகின்றன. நம்மை மதிப்பவனை நாம் கண்டு கொள்ளாமல் நம்மை ஏறி மிதிப்பவனை ஆராதித்துக் கொண்டு இருந்து விட்டோம். இனியாவது அது மாற வேண்டும். தமிழனுக்கும் சீனனுக்கும் எப்பகையுமில்லை. நெருக்கமான உறவே இருந்துள்ளது. தமிழனுக்கும் மலேசியனுக்கும், இந்தோனீசியனுக்கும், இந்தோசீனனுக்கும் (கம்போடியா) எப்பகையுமில்லை. மாறாக அவர்கள் நம் பண்பாட்டு உறவைக் கொண்டாடுகிறார்கள். கொரியாவும், நிப்போனும் இந்தியாவில் முதலீடு செய்து பொருளாதார மேம்பாட்டை விரும்புகின்றன. எனவேதான் கிழக்கே நோக்கு எனும் மந்திரம் தமிழ் வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்கிறேன்.உண்மையில் நாம் இந்த ஆய்வை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பௌத்த சமண காலங்களுக்குப் பிறகு இந்து மீட்சி நடந்த போது சமணர்கள் கழுவேற்ற பட்டனர், பௌத்தம் முற்றாக அழிந்தது.
பலன்? மிகவும் முக்கியமான பௌத்த தடயங்கள் நம் கைவிட்டுப் போயின! தென்னகத்தில் பௌத்தம் இருந்து மேன்மை கொண்டதை எந்த சரித்திர ஆசிரியரும் பேசுவதில்லை. பௌத்தம் என்றாலே நேபாளம், புத்த கயா, சாஞ்சி என்று கங்கைக் கரைக்கு போய்விடுகிறது எண்ணம்? பாலாற்றின் அருகிலுள்ள காஞ்சீபுரம் நினைவிற்கு வருவதில்லை! நகரேஷு காஞ்சி என்று கொண்டாடப் பட்ட அந்த நகரில் புத்த நெறி ஆய்வுகள் சீறும் சிறப்புமாக நடந்திருக்கின்றன. அந்த நகரில் தெலுங்கர், தமிழர் இணைந்து புத்த நெறியின் மிக நுட்பமான கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். நாளந்தா பல்கலைக் கழகம் போல் அங்கொரு பல்கலைக் கழகம் இருந்திருக்கிறது. சோழர்களின் கல்வெட்டு இம்மாதிரிப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் ஊதியத் தொகை எவ்வளவு, ஆசிரியருக்கு என்ன சம்பளம் என்றெல்லாம் சொல்கிறது! ஆனால், பௌத்த சுவடுகள் முற்றும் அழிக்கப்பட்ட நிலையில் கொரிய, நிப்போனிய ஆய்வாளர்கள் வட இந்தியாவையே நம்பி உள்ளனர். அப்போது இழந்தது மட்டுமல்ல, இப்போதும் இழந்துவிட்டோம். கொரிய கிம் இனக்குழு தம் குலதெய்வமான ஹே ஹுவாங் ஓக் அயோத்தியாவில் பிறந்தாள் என்று அங்கு போய் கோடிக் கணக்கில் கொட்டி நினைவாலயம் எழுப்புகின்றனர். நாம் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறோம். சட்டியில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்?இதற்கும் சேர்த்து நாம் கிழக்கே நோக்க வேண்டியுள்ளது. அங்கிருந்துதான் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் நாம் நம் கருத்தியலை உருவாக்க வேண்டியுள்ளது! நாம் செய்ய வேண்டியதை, மாறாக ஒரு நிப்போனியர் செய்து கொண்டு இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் காம்பே. அவர் பிடிவாதமாக போதி தருமனுக்கு காஞ்சியில் நினைவாலயம் எழுப்ப வேண்டும் என்கிறார். தன் சரிதமறியாத் தமிழன் பாராமுகமாக உள்ளான். என்ன அவலம்!
சரி, நாம் மீண்டும் கொரியாவிற்குச் செல்வோம். திரு. பார்த்தசாரதி இந்தியத்தூதராக சோல் நகரில் பொறுப்பேற்றவுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரு சோதிடரைப்பார்த்து இருக்கிறார். நம்மிடம் இருப்பது போல் அருள் வாக்கு சொல்லும் வல்லமை கொரியாவிலும் இருக்கிறது.
வந்த அருள் வாக்கு தூதரை கிம்ஹே நகருக்குச் செல்லுமாறு சொல்லியிருக்கிறது. இவர் முதலில் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது துணைவியார் நம்பிக்கையோடு அந்த வாக்கில் ஏதோ பொருள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, பார்த்தசாரதி கிம்ஹே போகிறார். அங்கு கிம் சுரோ, ஹே ஹுவாங் ஓக் நினைவாலயம் உள்ளது. அது குறித்த பல சரித்திரக் குறிப்புகளை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பிட்சு இல்யோன் விவரமாகச் சொல்கிறார். அதன் படி அந்த நினைவாலயம் பல இடர்களை, கொள்ளையர்களின் தாக்குதல்களை முறியடித்து இன்றுள்ள நிலையில் இருப்பதாக உள்ளது. அங்கொரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக இல்யோன் சொல்லிச் செல்கிறார். அந்த சக்தியை நம் தூதர் உணர்ந்த கதையை என்னிடம் சோல் நகரில் சந்தித்த போது சொன்னார்.அதன் படி அவர் கிம்ஹே நகரில் தங்கியிருக்கிறார். நினைவாலயப் பார்வை நேரமெல்லாம் மூடிய இரவில் இவரை யாரோ வந்து அழைத்தது போல் தோன்றி இருக்கிறது. அவரும் உடனே இரவில் நினைவாலயம் நோக்கி நகர்கிறார். அதிசயமாக வாசற்கதவு பூட்டப் படவில்லை. இவர் மெல்ல நுழைந்து உள்ளே செல்லச் செல்ல ஹே ஹுவாங் ஓக் தன் கதையை இவருக்குச் சொல்கிறாள். காட்சி மேல் காட்சியாக இவருக்குக் கிடைக்கிறது. அது நிஜமா? இல்லை கனவா? என்று புரியாத ஓர் நிலை. இரவு அறைக்கு வந்து சேர்ந்த பின் தீர்மானமாக இவளது கதையை உலகிற்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானம் கொள்கிறார். அதன் பயனாய் விளைந்ததுதான் இவரது பட்டும் அரசியும் எனும் நாவல் ( ‘Bi Dan Hwang Hoo’ (Silk Empress). அதில் இவர் தெளிவாக அந்த ராணி தமிழக மல்லைக்ரையிலிருந்து கொரியா செல்வதாகக் கூறியிருக்கிறார்.நான் அவரை மீண்டும் சென்னையில் சந்தித்த போதும் அந்த நிகழ்வு குறித்து நெகிழ்ந்து பேசினார். இது எனக்கு லா.ச.ராமாமிர்தம் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஓர் நினைவோட்டத்தை ஞாபகப்படுத்தியது. அதை அவர் கனவு போன்ற ஓர் நிஜம் என வருணிக்கிறார். பாரதியின் குயில்பாட்டுக் கூட இத்தகைய தன்மை கொண்டதே! நெட்டை நெடும் கனவு என்பது போன்ற நினைவு! இதுவொரு மாந்திரீக நிஜம் (magical realism). இல்யொன் சொல்லும் கதைகளும் இத்தகைய தன்மை உடையனவே. தமிழ் இலக்கிய ஈடுபாடுடைய எனக்கு இதுவோர் ஆர்வத்தை ஊட்டியது. நானும் கிம்ஹே சென்று இந்த நினைவாலயத்தைப் பார்வையிட வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அது எனது கொரிய நாட்களின் பின்னால்தான் நடந்தேறியது. அதற்கு முன் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் என்னை இவ்வாய்விற்கு இட்டுச் சென்றன. அதில் முக்கியமானது கிவாஞ்சு தொழிற்கல்வி நிறுவனம் சென்ற போது நடந்தது. தமிழ் மாணவர் ஒருவர் எனக்கு எப்படி கொரிய மொழியை வாசிப்பது என்று பேருந்திற்குக் காத்திருக்கும் ஒரு மணி நேரத்தில் சொல்லிக் கொடுத்தார். சேஜோன் அரசன் 15ம் நூற்றாண்டில் கொரிய மொழிக்கு தனித்துவமான வரிவடிவம் தருகிறார். அந்த வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை நான் கண்டறிந்த போது என் ஆச்சர்யத்திற்கு அளவில்லை! அந்த என் கண்டுபிடிப்புதான் கொரிய-தமிழ் ஆய்விற்குள் என்னைத் தள்ளியது.அது என்னவென்று பின்பு பார்ப்போம்!தொடரும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 9குணசேகரன் பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் எனக்கு ஹங்குல்லை (கொரிய வரிவடிவம்) எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுத்துவிட்டார்! இதில் என்ன அதிசயம்? என்று கேட்கலாம். இருக்கிறது!நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) கற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகும். ஏனெனில் பத்திரிக்கை வாசிக்கும் அளவு படிப்பறிவு வேண்டுமெனில் 5000 காஞ்சி (சீனக் கோட்டோவிய எழுத்து) தெரிந்திருக்க வேண்டும். இது ‘படம் பார்த்து கதை சொல்’ என்பது போன்ற கற்றல் முறை. 5000 கற்றுக்கொள்ள தாவு கழண்டுவிடும். இது ஒருவகையான pattern matching அடிக்கடி எழுதிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருக்க வேண்டும். இடைவெளி விட்டால் போச்சு, மறந்துவிடும். எஹிமே பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர்கள் கூட புதிதாக உருவாகும் காஞ்சியைக் கற்ற வண்ணம் இருப்பர். இது எவ்வளவு சிக்கலானது என யோசித்துப் பாருங்கள். முதுகலை வகுப்பில் உட்கார்ந்து அரிச்சுவடி கற்றால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? ஆனால் வேறு வழி இல்லை, அந்த வரிவடிவ முறை அப்படி. போதாக்குறைக்கு, நிப்போன் மொழி இன்னும் இரண்டு வரிவடிவங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. உதாரணமாக பௌத்தம் செழித்திருந்த காலங்களில் சமிஸ்கிருத நூல்களில் வரும் சொற்களுக்கு ஏற்ற காஞ்சி இருப்பதில்லை. இக்குறையை நீக்க ஹிரகானா எனும் முறையை உருவாக்கினர். அதன் பிறகு ஐரோப்பியர் வந்தனர். ஏகப்பட்ட சொற்கள் அம்மொழிக்குள் புகுந்தன. அதை சமாளிக்க கதகானா எனும் முறையை உருவாக்கினர். ஆக, ஒரு நிப்போன் நாளிதழ் வாசிக்க காஞ்சி, ஹிரகானா, கதகானா தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாம் தற்குறிதான்! என்ன அவலம்!ஆனால் ஹங்குல் எழுத்து அப்படி அல்ல ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியமாகிறது எனில் அம்மொழி வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை ஒத்திருக்கிறது. தமிழ் நெடுங்கணக்கு என்பது உயிர் எழுத்தையும் (vowval) மெய் எழுத்தையும் (consonant) இணைத்து உயிர்மெய் வரிவடிவத்தை உருவாக்குகிறது. இதை தொல்காப்பியம்,எழுத்தெனப் படுப)வகரமுத னகர விறுவாய்)முப்பஃ தென்ப)சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என்கிறது.அதாவதுஎழுத்து எனப்படுபஅகர முதல் னகர இறுவாய்முப்பது என்பஉதாரணம்அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ,ஒ, ஓ, ஒள- உயிர்க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்- மெய்இப்படி 12 உயிரும், 18 மெய்யும் சேர்ந்து 30 எழுத்து தெரிந்தால் பின் இவைகளை வைத்து பிற எழுத்துக்களைக் கூட்டி உருவாக்கிவிடமுடியும். அப்படி உருவாக்கும் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும். (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88).ஹங்குல் எழுத்துமுறை ”ஈ அடிச்சான் காப்பியாக” இதே முறை. அங்கு உயிர் எழுத்து 10, மெய்யெழுத்து 14. இவை இணைந்து உருவாக்குபவை மொத்தம் 140 எழுத்துக்கள். அவ்வளவுதான். (https://modernseoul.files.wordpress.com/2012/04/korean-alphabet-chart-modern-seoul.pdf).நண்பர் குணசேகரனை விட்டு அகன்ற பின் இது பற்றி ஆராய்ந்தேன். பல ஆச்சர்யங்கள் கிடைத்தன. கொரிய, நிப்போனியர் எப்போதும் தாம் ஓரினம் என்று எண்ணுவர். நாமே ‘பன்மையில் ஒற்றுமை’ என்று பேசிக்கொண்டிருப்போம். இப்போதுதான் அவர்களுக்கும் இது மெல்ல மெல்லப் புரிகிறது. உலகில் எந்த இனமும் 100% பச்சை ரத்தம் இல்லை. எல்லாமே கலப்புத்தான். தமிழர்களின் முகத்தைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம். ஆதி காலத்தில் கொரிய, நிப்போன் தேசங்கள் சீனாவின் பண்பாட்டு நிழலில் வளர்ந்த தேசங்கள். எனவே சீன மொழியிலேயே அவர்கள் கல்வி அமைந்தது. அவர்கள் சீன மொழி கற்று எழுதினாலும் கொரிய மொழியமோ, நிப்போன் மொழியோ சீனக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. அவர்கள் பேச்சு வழக்கு சீன ஒலி வடிவம் (tonal language) அல்ல. இந்தக் சிக்கல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இதை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தவர் 4 வது சோசென் பேரரசர். அவர் பெயர் சேசொங். இவர் ஹங்குல் வரிவடிவத்தை 1446 ஆண்டு அறிமுகப்படுத்துகிறார். கிமு 108ல் தொடங்கிய சீன எழுத்துமுறை பல நூற்றாண்டுகளுக்குப் பின்தான் முடிவிற்கு வருகிறது. இது 15ம் நூற்றாண்டில் அறிமுகமானாலும் 1948 ல் தான் அது வடகொரியாவில் அரசு மொழியாக பரிந்துரைக்கப் படுகிறது. ஆயினும் மிகுந்ததயக்கத்திற்குப் பின்னே, குடியரசான பின் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அறிஞர்கள் பலர் அதைக் கொச்சை மொழி என்றனர். காரணம் சீனத்தில் எழுதுவது உயர்வாகக் கருதப்பட்டது.நல்ல மொழி அறிஞன் என அறியப்படும் சேசொங் அரசன் பல வருடங்கள் ஆராச்சி செய்து இந்த வரிவடிவத்தை உருவாக்குகிறான். அவன் வாழ்ந்த காலத்தில் பௌத்த கொரியத் தொடர்பு ஓர் வளர்ந்த நிலையில் இருந்திருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ் புத்த பிட்சுக்கள் கொரியா போய் வந்த வண்ணம் இருக்க வேண்டும். சில பிட்சுக்களின் பெயர்களைச் சுட்டுகிறார் முனைவர் ராஜ பொன்துரை. எனவே தமிழ், சமிஸ்கிருத நெடுங்கணக்கு முறை கொரிய அரசருக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும். ஆயினும், புத்தம் புதிதாய் அவ்வெழுத்து முறை கொரியாவில் அறிமுகப்படுத்த முடியாது என்பதால் அவர் சீன ஓவிய முறையிலிருந்து எழுத்துக்களை அடுக்கி வைக்கும் பாணியைக் கையாள்கிறார். இம்முறை மிக எளிதானது. உதாரணமாக க் + அ என்பது ‘க’ வடிவம் கொள்கிறது. இங்கு ‘க’ என்பது புதிய வடிவம். இதற்குப் பதில் ‘க்அ’ என்று ஏன் எழுதக்கூடாது? ‘க்’ எழுத்தை மேலேயும், அ எழுத்தை கீழேயும் அடுக்கிவிட்டால் அது ‘க’ என்றாகிவிடும். இல்லையா? இம்முறையால் உயிர்மெய் எனும் எழுத்துக்களே தேவை இல்லாமல் போய்விடுகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்து எழுத்தில் வரும். எப்படி என்று மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள்.இவ்வளவு எளிதான எழுத்து வடிவத்தை சேசொங் பொது மக்களுக்கு கல்வி அறிவு பெருக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்குகிறான். இதன் சீர்மை கண்டு இம்முறையை எழுத்து வடிவம் இல்லாத பல நாடுகள் சமீபத்தில் ஏற்றுக் கொண்டிருப்பது ஹங்குலின் சிறப்பு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பகுதி 10நான் 2003 ஆண்டுதான் கொரியாவில் கால் வைக்கிறேன். ஆனால் 2001 ம் ஆண்டே கொரிய இளவரசி அயோத்தியைச் சேர்ந்தவள் என்று அவளுக்கு நினைவாலயம் எழுப்பிவிட்டனர். இது எனக்குத்தெரியாது. அயோத்தி மன்னர் வம்சம் பிராமண வம்சம். பிராமணர்கள் கடல் தாண்டுவதில்லை. எனவே 1997 ல் முதன் முதலாக பேராசிரியர் கிம் பியோங்மோ அயோத்தி மிஸ்ரா அரச வம்சத்தினரைப் பேர்த்து எமக்கும், உமக்கும் தொடர்பிருக்கிறது என்ற போது அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போயினர். ஏனெனில் இந்த வம்சமே ஒரு 10 தலைமுறைக்குள்தான் அங்கு வந்து அரசாள்கின்றனர். எனவே கிபி 49-ல் அயோத்தியிலிருந்து தம் வம்சத்தைச் சேர்ந்த பெண் கொரியாவரை போயிருக்கிறாள் என்பதை அவர்களாலேயே ஒப்புக் கொள்ள முடியவில்லை. இதை அவர்கள் பி.பி.சி நேர்காணலில் சொல்கின்றனர். அன்போடு வந்து சொன்னதால் ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லி அயோத்திய சுற்றுலாவிற்கு இதுவொரு கூடுதல் ஈர்ப்பு என்று முடித்து விட்டனர். இந்த அரசியல் எனக்குப் பின்னால்தான் தெரிய வருகிறது.
பேராசிரியர் கிம் பியோங்மோ இந்த ஆய்விற்குள் காலடி வைத்ததே ஒரு விசித்திரமான உணர்வால் வந்தது. ஏறக்குறைய மூன்று மில்லியன் கொரிய மக்கள் தங்கள் தாய் வழி மூதாதையர் இந்தியாலிருந்து வந்ததாக நம்புகின்றனர். அந்த கிம் இனக்குழுவைச் சேர்ந்த நம் பேராசிரியருக்கு ஒரு நாள் சந்தேகம் வருகிறது. நாம் ஏன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கருப்பாக இருக்கிறோமென்று. தனது இன வரலாறை ஆராய்ந்த போது இல்யோன் எனும் புத்த பிட்சு கி.பி. 1285 வருடம் எழுதிய சம்குக் உசா எனும் நூலில் இது பற்றி விவரித்திருப்பதை அறிகிறார். அதன் பிரகாரம் கிம் சுரோ எனும் அரசன் இந்தியாவிலிருந்து வந்த ஹே ஹுவாங் ஓக் எனும் பெண்ணைத் திருமணம் செய்ததால் தம் மக்கள் உருவாயினர் என அறிந்தார். அந்த தொன்மத்தில் வந்து சேர்ந்த அரசி தான் “அயுத்த” எனும் நாட்டிலிருந்து வருவதாகச் சொல்கிறாள் என்று இல்யொன் எழுதுகிறார். இப்பெயருக்குப் பொருத்தமான ஓர் ஊரை இந்திய உபகண்டத்தில் தேடிய போது அயோத்தியா எனும் நகரம் பிடிபட்டு இருக்கிறது. அயோத்தியா எனும் நகரம் பழம் நகரம், பிரபலமானது, இராமகாதையுடன் தொடர்புடையது, எனவே அவருக்கு ஏற்புடையதாகப் பட்டது. ஆனால், அயோத்தியா கடற்கரை நகரமல்ல! ஆனால் இல்யொன் கதைப் படி அவள் காவி (சிவப்பு) பாய்மரத்தில் வந்து இறங்கியதாக செய்தி உள்ளது. இதை இரண்டையும் முடிச்சுப் போட அவரொரு கருதுகோளை முன்வைத்தார். அதன் படி, ஹே ஹுவாங் ஓக்கின் மூதாதையர் நில வழியாக, பர்மா கணவாய் வழி சீனா அடைந்து அங்குள்ள தென்சீன மஞ்சள் ஆறு படுகையில் குடி பெயர்ந்தவர்கள் என்றும். அங்கிருந்து அப்பெண் மஞ்சள் கடலைக் கடந்து தென்கொரியா வந்து விட்டாள் என்பதாகும்.கொரியர்களைப் பொருத்தவரை இல்யோன் எழுதிய சம்குக் உசா எனும் நூல் விவிலியம் போல் பார்க்கப்படுகிறது. அதுவும் கொரியாவிலேயே மிகவும் பிரபலமான கிம் இனக்குழு தம் மூதாதையர் இந்தியர்கள் என்று நம்பும் போது இக்கருதுகோள் வலுப்பெறுகிறது. எனவே அவர் தலைமையிலேயே ஒரு குழு 1997 ல் அயோத்தியா செல்கிறது. இதில் பெரிய துரதிர்ஷ்டம் என்னவெனில் பேராசிரியர் கிம் கடல்வழி பட்டுப் பாதை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காததுதான். இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருவது. ஏனெனில், நான் கொரியாவின் தலைநகரான ‘சோல்’ (Seoul - சியோல் அல்ல சோல் என்று உச்சரிக்க வேண்டும்) நகரின் மாபெரும் அருங்காட்சியகம் சென்றிருந்த போது கடல்வழிப் பட்டுப்பாதையின் வழி கொரியா, இந்தியாவோடு தொடர்புடன் இருந்ததைத் தெளிவாக விளக்கியிருந்தனர். அடுத்து அவருக்குத் தமிழர்கள் கடலோடிகள் என்ற சரிதம் தெரியாது. இது இந்தியாவிலேயே சரித்திரப் பாடத்தில் இருப்பதில்லை. வெளிநாட்டினர் எழுதும் நூல்களிலும் இது பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. எனவே பேராசிரியர் கிம் பியோங்மோ இது பற்றி அறிந்திருக்க நியாயமில்லை.மேலும் அவருக்குக் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் மொழியியல் ரீதியான தொடர்பு இருப்பதும் தெரியாது. தமிழக நாட்டார் வழக்கும், கொரிய வழக்குகளும் ஒத்திருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. நான்தான் முதன்முதலாக இருமொழிகளும் நெடுங்கணக்கு முறையில் அமைந்திருப்பதையும் அதன் ஒற்றுமைக் கூறுகளையும் பற்றிப் பேசுகிறேன். இது குறித்த எனது பதிவுகள் மின்தமிழ் ஆரம்பிக்கப்பட்ட 2006 வருடமே வெளிவருகிறது.மூன்று வருடம் கழித்து மீண்டும் இது பற்றி எழுதுகிறேன்02.08.09இக்குறிப்பை திராவிட மொழி ஒப்பாய்வு செய்த Hulbert, Homer B. (1863-1949) அவர்களும் சொல்லவில்லை. இப்போது யோசித்தால், கிம்ஹேயில் கிடைத்த பானையெழுத்திலிருந்து, ஹங்குல்வரை இதுவரை யாரும் ஒப்பு நோக்கியதில்லை. அதை மின்தமிழில் செய்துள்ளேன். அகழ்வாய்வு, தொன்சரிதம், பண்பாட்டு நோக்கில், மரபணு ஆய்வுகள் எனப் பன்முக நோக்கில் இந்த ஆய்வை முன்னெடுத்துச் சென்றிருக்கிறேன். அதை விரிவாக விளக்குகிறேன். அதற்கு முன் நம் கைமுன் கை நழுவிய வாய்ப்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. அயோத்தியாவில் நினைவாலயம் எழுந்த பின் அந்த இந்தியப் பெண் வட இந்தியர் என்றே எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். நான் இதுவரை பார்த்த அத்தனை கொரிய வலைத்தளங்களும் அயோத்தி பற்றியே பேசுகின்றன. இந்திய அரசு ஊடகங்களும் அது பற்றி மேலாய்வு செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டன. அயோத்தி அரசர்களே இல்லை என்பதைக் கூட அவர்கள் சட்டை செய்யவில்லை. பின்னால் இது குறித்து புதினம் எழுதிய திரு. பார்த்தசாரதியும் அவளுக்கு சூரிரத்னா என்றே வடமொழிப் பெயரிட்டு வட இந்தியராக்கிவிட்டார். அடிப்படையான இரண்டு கேள்விகளை பேராசிரியர் கிம் கேட்கவில்லை. அவரது உடல் நிறத்தில் கருமை எங்கிருந்து வந்தது எனத்தேட வேண்டுமெனில் ஆரிய கலப்பு அதிகமுள்ள வட தேசத்திற்கு ஏன் போக வேண்டும்? தென் தமிழகம் அல்லவா வந்திருக்க வேண்டும்? அடுத்து, கொரிய மக்கள் அம்மா, அப்பா எனப் பெற்றோரை அழைக்கும் போது அது தென் தமிழ்நாட்டு வழக்கம், வட இந்திய வழக்கமில்லை என்றாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? இது ஏதும் செய்யாமல் இந்திய இளவரசியை வடநாட்டிற்கு கொண்டு போய் மேலாய்வுகளும் செய்யத் தொடங்கிவிட்டனர்! 2015 -ல் இந்திய பன்னாட்டு மையம் கீழ்க்காணும் விவரப்படி ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் செய்வித்து அயோத்திய இளவரசியின் தொன்மத்தை சரிதமாக்கும் முயற்சியில் இறங்கியது!:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புடை கணேசர் ஐயாகொங்குநாடு இயற்கையில் விளைந்த வைடூரியங்களையும் மற்றும்பல கற்களையும் வாங்கி அவர்களின் ஊதுலைகளில் இரும்பிக்கம்பிமூலம் துளையிட்டு மாலை மற்றும் காதணிகளாகச் சீனாவுக்கு ஏறுமதி செய்தது.
மஞ்சள் நிறமுள்ள யெல்லோ ஜேட் சீனாவில் அதிகம் விற்பனையானது. கொங்குநாடு அடங்கிய பாண்டியநாட்டு இளவரசி செம்பவளம் என்ற கல்மணியைத் தானும் அணிந்து மன்னருக்குப் பரிசாகவும் அளித்துத் தான் பிறந்த இடம் செம்பவளம் ஏற்றுமதி செய்யும் நாடு என்று குறிப்பிடுவதாகத்தான் பொருள் சொல்ல முடியும்பச்சைத்தமிழன்
--
பட்டுப்பாதையில் சேரநாட்டு கொற்கை முக்கியத் துறைமுகமாக இருந்திருக்கிறது
ஐயா வணக்கம் .
ஒரு ஐயம் .கொற்கை என்னும் துறைமுகம் பாண்டிய நாட்டில் இருந்தது.சேர
நாட்டில் இருந்ததா?