வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் உவேசாவின் தலைமை மாணவர். கலைமகளின் ஆசிரியர். 1952-ல் “பெரும்பெயர் முருகன்” என்ற நூலை வெளியிட்டார். திருமுருகன் அவதாரத்தை விரிவாக உரைக்கும் சங்க இலக்கியப்பாடலுக்கு விளக்கம் தந்துள்ளார். முழுதும் படிக்கவேண்டிய நூல் இது. பரிபாடலில் கடுவன் இள எயினனார் ஸ்கந்தனின் திரு அவதாரத்தை முழுதுமாக விவரித்துள்ளார். ”பாய் இரும் பனிக் கடல்” எனத் தொடங்கும் பரிபாடலின் ஐந்தாம் பாடல் இது. இதன் விளக்கம் முழுதுமாக, திருஅவதாரக் கதை என்ற கட்டுரையாக “பெரும்பெயர் முருகன்” நூலிலே இருக்கிறது. வாரியார் சுவாமிகள் நடத்திய பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகன் அவதாரம்
http://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250203-124635இப்பாடலின் பழைய பொருளை அறிய, சிந்து சமவெளிக் கால இந்திய வானியல், சப்தரிஷி மண்டிலம், அங்கே உள்ள அருந்ததி எனும் செம்மீன் (எனவே, சாலினி எனவும் பேர் உண்டு), சிஞ்சுமார மண்டலம் எனும் துருவ நட்சத்திர மண்டலம் பற்றி அறிதல் வேண்டும். மழுவாள் நெடியோன் (மதுரைக் காஞ்சி) என்பது என்ன என இந்திய, தமிழகத் தொல்லியல் வழியாக விரிவாகக் காட்டியுள்ளேன். அந்த “மழுவாள்” ஆயுதம் ஸ்கந்த ஸ்வாமியின் அவதாரத்தில் எவ்வாறு பயன்பட்டது எனக் காட்டும் சங்கப் பாடல் வரிகளை இங்கே ஆராய்வோம்.
பெரும்பெயர் முருகன், கிவாஜ
10. திரு அவதாரக் கதை
கடுவன் இளவெயினனார் பாட்டு.
முருகு என்னும் அணங்கு, வானியலில் பொருந்தி சுப்பிரமணிய சுவாமியாக உருவெடுக்கிறது.
“ ‘பூசாரியின் தோத்திரத்தை உண்மையாக்கி முருகன் வருகிறானே!’ என்று ஆச்சரியப்பட்டுப் போன புலவர் முருகனை இப்படிப் பாடுகிறார்.”
“ சங்க காலத்து நூலாகிய பரிபாடலில் வரும் இந்தப் பாட்டில் கடுவன் இளஎயினனார் கூறும் திருவவதாரக் கதை, கந்தபுராணக் கதைக்குப் பலவகையில் வேறுபட்டது. சங்க காலத்தில் முருகன் திருவவதாரத்தைப் பற்றிய இந்த வரலாறே வழங்கிவந்தது என்று நாம் கொள்ள வேண்டும்.”
”சிவபெருமான் உமாதேவியோடு காமத்தை நுகர்கின்ற திருமணம் புரிந்துகொண்டான், அத்தேவியோடு அளவளாவி நெடுங் காலம் இருந்த பிறகு, அமைதி உற்ற சமயத்தில் இமையாநாட்டத்தை உடைய அப்பெருமானிடத்திலே இந்திரன் வந்தான். “அப்பனே, ஒரு வரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். “கேள்; தருகிறோம்” என்றான் இறைவன். “உமாதேவியோடு அளவளாவியது போதும்; அதன் விளைவாக உண்டாகிய கருவைச் சேதித்தருள வேண்டும்” என்றான். சத்தியமே உருவாகிய எம்பெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தை மாற்றாமல், அதனைத் தன்னுடைய மழுவாய்தத்தைக் கொண்டு பல கண்டமாகச் சேதித்தான்.”
இதை அயின்றனர் சப்த ரிஷி மண்டலத்தில் அருந்ததி/செம்மீன் போக மற்ற அறு தாய்மார். மழு வாள்/ஆயுதம் தமிழகத்தின் எல்லா சிவ மூர்த்தங்களில் இருப்பது இதனால் தான். “மழுவாள் நெடியோன்” (மதுரைக் காஞ்சி). தொல்லியலில் மழுவாள் நெடியோன் எனும் என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். இன்னொரு கரத்தில் கருமான் இருக்கும்.
காம வதுவை - சிவன் இச்சையாற் செய்த திருமணம்.
“இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இரங்கினான் இறைவன். அப்போது வெளியான கரு, உலக மெல்லாம் தாங்கற்கரிய உக்கிரம் கொண்டு நின்றது. இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி அக்கருவைத் தன் மழுவாயுதத்தால் சேதித்தான். அதுகண்டு இவ் வுலகேழும் வியந்தது. “மாற்றாத வாய்மையை உடையவன்” என்று பாராட்டியது.
விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது
அரிதென மாற்றான், வாய்மையன் ஆதலின்;
எரிகனன்று ஆனாக் குடாரிகொண் டதன் உருவு
திரித்திட் டோன்இவ் வுலகுஏழும் மருள.
[விரிந்த கதிரை உடைய மணிகளாகிய பூணை அணிந்த அந்த இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் நிறைவேற்றற்கு அரிதென்று சொல்லி வாக்கு மாறுதல் இல்லாத சத்தியத்தை உடையவன் ஆதலால், இறைவன் நெருப்புக்கனன்று அமையாத மழுவாயுதத்தைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தை இவ்வுலகமெல்லாம் வியக்கும்படி சேதித்தான். குடாரி - மழு. திரித்தல் - சிதைத்தல் ]
இறைவனது அமிசமாகிய அக் கருவானது சிதைக்கப் பெற்றாலும், அதன் வன்மை மாறாதென்ற எண்ணத்தோடு இந்திரன் அதைக் கைக்கொண்டு சென்றான். அவன் செல்லும்பொழுது ஆங்கிருந்த ஏழு முனிவர்களும் கண்டார்கள். சமாதியினால் அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அது சேயாகவேண்டிய கரு வென்பதை அறிந்துகொண்டார்கள். அதனை இந்திரனிடமிருந்து அம் முனிவர்கள் வாங்கிக்கொண்டனர்.
கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு முனிவர் நனிஉணர்ந்து
[எழுவராகிய முனிவர் தம்முடைய சமாதி யோகத்தினால், சேயாக வேண்டிய யாக்கை கழிந்த உருவம் அது என்று நன்றாக உணர்ந்து அந்தக் கருவைப் பெற்றுக் கொண்டார்கள். நொசிப்பு - யோகம்.] “
அழல் வேட்டு: அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45 அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:
- பரிபாடல், செவ்வேள் பாட்டு, கடுவன் இள எயினனார்.
இங்கே, “வட வயின்” இருக்கும் ஆல் என்பது வட திசையைக் குறிப்பது. வட மீன் = அருந்ததி (அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், கலியாணச் சீர்).
ஆல் “Cosmic Banyan/வட விருட்சம்" = துருவ நக்ஷத்ரம் = வருணன்/மகரவிடங்கர். தொல்காப்பியர் கூறும் ’கந்தழி’ இந்த ஆல். இந்த துருவ நக்ஷத்ரம் வடதிசையில் உள்ள பகுதி சிஞ்சுமாரம் (= மகரம்/முதலை) என்பது இந்திய வானியல் சாத்திரங்கள்.
மிகப் பழைய வானியல் பற்றி அறியாமையால், உரையாசிரியர் பெருமழை பொ.வே. சோமசுந்தரனார் போன்றோர் பரிபாடல் 5-க்கு எழுதியதில் பிழை நேர்ந்துவிட்டது. இங்குள்ள ஆல் ஆரல் என்பதன் இடைக்குறை அன்று. பரங்குன்ற நெடியோன் “ஆல்” எனப்படும் பண்டைய பாரத வானியல், தொல்காப்பியரின் கந்தழி இந்த வானத்து வட வயின் உள்ள ஆல மரம். மேலும் அறிய,
https://youtu.be/WyB3h08w0Ycதுருவ நக்ஷத்திரம் தனி மீன். பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழ்நருக்கு நிலையாக அசைவின்றி இருக்கும். எனவே துருவ நட்சத்திரம் எனப்பெயர். வட-தென் துருவ அச்சில் இருப்பது துருவ நட்சத்திரம். இது வரையறை. வட ஹெமிஸ்பியர் மக்களுக்கு துருவ நட்சத்திரத்தைச் சுற்றியே வானம் சுழல்வதாகத் தெரியும்.
சிந்து சமவெளிக் காலத்தில் ’தூபன்’(Thuban) துருவமீனாக இருந்தது. ~4000 - 1800 BCE. அப்புறம் துருவ நட்சத்திரம் இல்லாது போய்விட்டது. இதன் காரணமாகவே, கார்த்திகையை ஸ்கந்த மாதாக்கள் என்ற கதை பின்னர் ஏற்படுகிறது. ஆனால், ஸப்த ருஷிகளின் மனைவியரில், அருந்ததி தவிர, அறுவர் முதலில் ஸ்கந்தமாதாக்கள் ஆவர். இப்பொழுது, போலாரிஸ் எனும் மீன், கி.பி. 500 - கி.பி. 3000 வரை போலாரிஸ் தான் துருவ மீன். கி.பி. 23000-ல் மீண்டும் தூபன் சிந்துவெளிக் காலத்தில் இருந்தது போல் துருவமீன் ஆகிவிடும். இதற்குக் காரணம்: பூமியின் அச்சின் ப்ரெசெஷன் (
https://en.wikipedia.org/wiki/Precession ) . பம்பரமாக சுழலும் கைராஸ்கோப்பின் அச்சைப் பார்க்கவும்.
வேளாண்மையில் தானியம் நேம்புதல் பார்த்திருப்பீர்கள். அதில் இருந்து நேமி = felly of the Wheel உருவாகிறது.
https://groups.google.com/g/houstontamil/c/3xHr-YeZnKI/m/v401oc8GAQAJhttps://mymintamil.blogspot.com/2017/10/Etymology-of-the-word-NEMI-by-N-Ganesan.htmlபிரபஞ்சத்தில், விண்மீன்கள் சுழலும் அச்சாக இருப்பதால், துருவ நட்சத்திரம் நட்சத்திர நேமி எனப்படுகிறது.
துருவசக்கரம் turuva-cakkaram , n. < id. +. 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions; இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக் கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப். 161). 2. Ursa major; சப்த ரிஷிமண்டலம்
சிம்சுமாரசக்கரம் cimcumāra-cakkaram , n. < Šiṃšumāra +. The Pole-star. See துருவ சக்கரம்.
சிம்சுமார ப்ரஜாபதி cimcumāra-p-prajāpati , n. < šiṃšumāra +. The region of the Pole Star beyond the nakṣatra-pada; நக்ஷத்திர பதத்துக்கு மேலெல்லையான துருவமண்டலம். ’நக்ஷத்ர பதத்து மேலெல்லை சிம்சுமார ப்ரஜாபதியிறே’ (திவ். திருநெடுந். 5, வ்யா. பக். 45).
ப்ரஜாபதி - தந்தை போன்றவன். எனவே, இந்த மகர விடங்கருக்கு ஆன சிந்துவெளி எழுத்து உள்ளது. அரிய கண்டுபிடிப்பால் தெரிந்தது. இவ்வெழுத்தை ஆய்வுக் கட்டுரைகளில் காணலாம். 4000+ ஆண்டு சிந்து எழுத்தில் உறுதியாக என்ன என்று தெரிவது இது. இதனைப் பிழையாக, ஐராவதம் மகாதேவன் முருகன் என்றார்.
சிந்துவெளியில் மீன் சின்னம் வானோரைக் காட்டும். மகரச் சின்னம் துருவநட்சத்திரம். அதன் மண்டிலம் மகர மண்டிலம். இவனை “மழு வாள் நெடியோன்” (மதுரைக் காஞ்சி), பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு மழுவாள் நெடியோன் என்பதன் விளக்கமாக எழுதப்பட்டது.
https://4.bp.blogspot.com/-XZWV4zOiQlA/WgjiSUojzeI/AAAAAAAAIbo/pETIEvNVrlIFVJyyRYVPBF0UGI0O8yLswCLcBGAs/s1600/indus-makara.pnghttp://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.htmlநெடியோன் என்று பரங்குன்றப் பாடல்களில் வரும் நெடியோன் = மழுவாள் நெடியோன். பின்னர் முருகனுக்கு பரங்குன்றம் மாறியுள்ளது. முருகு எனும் அணங்கு வேத இலக்கிய ஸ்கந்தஸ்வாமி ஆன காலத்தில். இதற்குச் சாட்சி, மலை உச்சியில், எளிதில் வயதானோர் சென்று பார்க்க இயலாத தமிழ் ப்ராமிக் கல்வெட்டு இது.
வானியலில் வடமீன் (அருந்ததி), அவள் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் அருகே உள்ள துருவமீன் தந்தையாக. தன் + தை = தந்தை. எனவே தான், தை மாதம் = மகர மாசம். தை = மகரம் (ஸ்கந்த பிதா). 12 ராசி மண்டிலம் பாபிலோனில் இருந்து வந்தாலும், மகரம்/தை மாத்திரம் தமிழ் மரபு இந்தியா முழுவதும் பஞ்சாங்கங்களில் மாறவே இல்லை. தை/மகரம் போக, மற்ற மாதங்களின் பெயர்கள் இம்போர்ட்ஸ் இந்தியாவுக்கு.
Thuban துருவ நட்சத்திர பதவியை இழந்தபின்னர், கார்த்திகை மீனை முருகனின் தாயர் என ஆக்கின ஹிந்து சமயப் புராணங்கள். கார்த்திகை மீன் கூட்டம் போல ஒளிவீசி மலர்ந்த முசுட்டை (மலைபடுகடாம் - 100). ஆரல் என்பதன் இடைக்குறை. இந்த ஆறல்மீன் முருகனின் ஆறு தாயர் என்று வருவது பிற்காலம். சங்கத் தமிழில் ஆஅல் வேறு, ஆல் வேறு. ஆஅல் < ஆறல் என்பதன் இடைக்குறை. விரிவாக விளக்கினேன்.
https://groups.google.com/g/vallamai/c/ZJcgK5lzXnwஆனால், மலைபடுகடாம் 100. ஆஅல். இது இடைக்குறை. தேஎம்/தேஅம் < தேசம் போல். ஆஅல் < ஆறல் = கார்த்திகை மீன். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் உரைகள் எழுதப்பட்டுள்ளன. Precession என்பதும், அதன் விளைவும் பற்றி அறியாமையினால் நேர்ந்த விளைவுகள் இவை. ஸ்கந்தனின் அவதாரம் முதலில் வேத காலத்தில் எப்படிச் சொல்லப்பட்டது. பின்னர் கார்த்திகை நாள்மீனுக்கு எப்படி மாறிற்று எனத் தெரியாததால் இவ்வாறு உரைகள் எழுதியுள்ளனர். ஆனால், பரிபாடல் தெளிவாக இருக்கிறது.
கார்த்திகை ஆறு தாய்மார் ஸ்கந்தனுக்கு என ஆவது பிற்காலம். கார்த்திகை மீன்தொகையில் அருந்ததி இல்லை. அதைக் காட்டத்தான் பரிபாடல் பாட்டை - அதில் உள்ள ஆல் என்பது வட விருட்சம், அங்கே அறுவர் சப்த ரிஷிகளின் மனைவியர். + அருந்ததி அங்கே இருக்கிறாள் என்ற செய்தி எல்லாம் பரிபாடலில் இருப்பது வேத வழக்கு. வேத வழிவரும் இலக்கியங்களிலும், பரிபாட்டிலும் கந்தழி ஆகிய வடவிருட்சம் (மகரவிடங்கர்) மகனாக, சப்த ரிஷி மண்டலத்தின் ஆறு தாய்மார் (அருந்ததி தவிர) சொல்லப்படுகிறது.
அருந்ததி துருவ மீன் அருகே இருக்கும் தாரா. சப்தரிஷி தாராகணத்தைச் சேர்ந்தவள். உலகெங்கும் கடலோடிகள் துருவ மீனைக் கருவியாகக் கொண்டே நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டினர். துருவமீன் மறைந்த காலத்தே, செம்மீனை வைத்துத் திசையைக் கடலோடிகள் கணித்தலைக் குறிப்பிடுகிறார் மருத்துவன் தாமோதரனார் (புறம் 60). (1) பதிற்றுப்பத்து உரையில் வஞ்சி மாநகர் ambiguity. பின்னர் வஞ்சி மாநகர் எது என தொல்லியல் காட்டிற்று (2) தான்றி மரம், தான்றிக்குடி வேறு, தோன்றி வேறு என்று விளக்காமை, ... போல (3) திசையறியக் கடல் ஆடுவோர் பயன்படுத்தும், செம்மீன் = வடமீன்/அருந்ததி/சாலினி/ ஸ்டாரை, செவ்வாய் கோள் என்கிறார் ஔவை சு. துரைசாமி. பாடல் முழுக்கப் படித்தால், செம்மீன் ஆதிரை அன்று, செவ்வாயும் அன்று என உணரலாகும்.
நா. கணேசன்
Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.
https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up