1000 ஆண்டுகள் வரலாறு பேசும் பொந்தன் புளி மரங்கள்!

209 views
Skip to first unread message

Suba

unread,
Apr 21, 2017, 3:25:41 AM4/21/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


pondhan_tamarin-tree-years-1

‘ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை சுமந்தபடி, இராமநாதபுரம் மாவட்டத்தில் வாழும், பொந்தன் புளி மரங்களை பாதுகாக்க வேண்டும்’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, திருப்புல்லாணி தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:
இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை நீளமானது. அதனால், தொண்டி, அழகன்குளம், பெரியபட்டினம், கீழக்கரை, தீர்த்தாண்டதானம் உள்ளிட்ட பல, இயற்கை துறைமுகங்கள், சங்க காலத்திலேயே இருந்தன.
தப்பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், வாணியர் உள்ளிட்ட, பல வணிக குழுவினர் தங்கி இருந்ததை, தீர்த்தாண்டதான கோவில் கல்வெட்டு கூறுகிறது. அழகன்குளம், தொண்டி, பெரியபட்டினம் துறைமுகங்களுக்கு, ரோம், சீனா, அரேபிய நாட்டு வணிகர்கள் வந்ததை, அங்கு கிடைத்த அகழாய்வு பொருட்கள் நிரூபிக்கின்றன.
ஆப்ரிக்கா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, அரேபியா நாட்டு வணிகர்களும் இங்கு வந்துள்ளனர்; அங்கிருந்து, உயர்ரக குதிரைகளையும் இறக்குமதி செய்துள்ளனர். அந்நாடுகளில் வளரும் பொந்தன்புளி விதைகளை கொண்டு வந்து, இங்கு நட்டு வளர்த்து, அவற்றின் இலை, காய், கனிகளை குதிரைகளுக்கு, தீவனமாக கொடுத்துள்ளனர்.

பாண்டிய நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பெரியார் நகர், தேவிபட்டினம் உலகம்மன் கோவில், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், சேந்தனேந்தல், அழகன்குளம் கடற்கரை, ஏர்வாடி தர்கா, மும்முடிச்சாத்தான் ஆகிய இடங்களில், பொந்தன்புளி மரங்கள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில், வேதியரேந்தல், மதுரையில், அமெரிக்கன் கல்லுாரியிலும், இம்மரங்கள் காணப்படுகின்றன.
ஆயிரத்தின் அடையாளம் :
ஆயிரம் ஆண்டுகள் கடந்த, பொந்தன்புளி மரங்களின் அடிப்பாகத்தில், 60 பேர் அமரும் அளவில், பெரிய பொந்து உண்டாகும். முதிர்ந்த தண்டுகளில் ஏற்படும் துளைகளில், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கலாம். ஆப்ரிக்கர்கள், இம்மரத்தில் துளையிட்டு, நீரை அருந்துவர். இலையின் புளிப்பு, மர பொந்துக்காக, இதை பொந்தன்புளி என்கின்றனர்..
1000-pondhan_tamarin-tree-years-1
பாதுகாக்க வேண்டும்:
ராமநாதபுரம், பெரியார் நகரில் உள்ள பொந்தன்புளி மரத்தில், பெரிய பொந்துகள் உள்ளதால், அதன் வயது, 1,000 ஆண்டுகளாக இருக்கலாம். பல இடங்களில், இம்மர பொந்துகளைக் கண்டு பயந்து, அவற்றை வெட்டி, எரித்துவிட்டனர். பொந்தன்புளி, கீழக்கரை, புல்லங்குடி பகுதிகளில் இருந்த மரங்களும் அழிக்கப்பட்டு விட்டன.
பாண்டிய நாட்டில், வெளிநாட்டினர் தங்கி இருந்ததற்கான அடையாளமாகவே, பொந்தன்புளி மரங்கள் உள்ளன. இவை, 1,000 ஆண்டு, தமிழக வணிக தொடர்பின் வரலாற்றுக்குச் சான்றுகள். ராமநாதபுரம் தவிர, பிற இடங்களில், மிக அரிதாக இம்மரங்கள் காணப்படுவதால், அவற்றை வேலியிட்டு பராமரிக்க வேண்டும். புதிதாக நடவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தீர்க்கும் மருந்து! :
பொந்தன்புளி மரங்கள், 1,500 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. இவை, 14 மீட்டர் சுற்றளவு, 25 மீட்டர் உயரத்தில் வளரும். உருளை வடிவில், நேராக வளர்ந்து, உச்சியில் கிளை பரப்பும். ஆண்டில், ஏழு மாதங்கள் இலை உதிர்க்கும். கிளையின் நுனியில், வெள்ளை பூ பூக்கும். நீண்ட காம்புடன், பழுப்பு நிற காய் காய்க்கும், பழங்கள் நீண்ட காலம், மரத்திலேயே தொங்கும். இதன் பழச்சாறு, அம்மைக்கும்; அவித்த இலை காய்ச்சலுக்கும்; மரப்பட்டை காயங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. கனியிலிருந்து, ‘சர்பத்’ தயாரிக்கின்றனர்.

N. Ganesan

unread,
Apr 21, 2017, 8:03:57 AM4/21/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com, vallamai, housto...@googlegroups.com


On Friday, April 21, 2017 at 12:25:41 AM UTC-7, Dr.K.Subashini wrote:

நல்ல பதிவு. முன்பு விரிவாக பொந்தம்புளி மரம் பற்றிப்பேசியுள்ளோம்.

‘போண்டா’ என்கிற தின்பண்டம் இந்த “போந்தை” என்னும் தமிழ்ச்சொல் ஆகும்.
போந்தைப்புளி (அ) பொந்தம்புளி.

On Sunday, November 30, 2014 9:41:30 AM UTC-6, naras...@gmail.com wrote:
While researching for Andhra Mahila Sabha,I saw one such tree there and another one is available at Museum complex. AanaiPuliyamaram!!!
Narasiah


The names for baobab trees in Tamil Lexicon:
ஆனைப்புளி, பப்பரப்புளி, பாப்பாரப்புளி, பூதவிருட்சம், பூரி, பூரிமரம், பெருக்கு, பெருக்கமரம், சீமைப்புளியன்.
- hide quoted text -

 
On Sun, Nov 30, 2014 at 7:15 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe  This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.comAdd cleanup rule | More info 

இராகுல திராவிடரை  டிராவிட் என்று டிவி, பத்திரிகைகள் எழுதுவதைப் பார்க்கிறோம்.
காமாந்தகீயம் காமாண்டகீயம் என எழுதுதல் பிழை என விளக்கினார் தேவ்.

அடிமரம் பருத்து இருந்தால் போந்தை. அதுபோல்,
நாட்டுக்கோழி போலல்லாது, அயல்நாட்டுக் கோழி குண்டாக இருப்பதால்
பொந்தைக் கோழி (அ) போந்தைக் கோழி எனப்படுகிறது. பொந்தை/போந்தை
எல்லா தென்னிந்திய மொழிகளிலும் இருப்பதால் அது bonda என எழுதப்படுகிறது.
சங்க இலக்கியச் சொல் போந்தை ஆங்கிலத்தில் bonda (பல்லியை balli என்பர் தெலுங்கர்),
என எழுதப்படுவது "போண்டா” என்று வாசிக்கிறோம். இது பிரதமர் மோதியின் பெயரை
modi என எழுதுவதால் மோடி என்று தமிழ் டிவிகள், பத்திரிக்கைகள் பிழைபட ஆக்குவதை ஒத்தது.

போந்தை - bonda. இப்போது போந்தை, ஆங்கிலத்தால் போண்டா ஆகிவிட்டது :-) 


--------------------

போந்தைப் புளி ஆப்பிரிக்காவில் இருந்து வருவதால் அதன் இன்னொரு பெயர் = பப்பரப் புளி.

பப்பரர் < barbara, barbaric என்னும் சொற்களோடு தொடர்புகொண்டது.
பக். 38

கம்பன் ஆப்பிரிக்கக் கருப்பர்களை “பப்பரர்” என்று அழைக்கிறான்,

‘பப்பரர் யவனர் சீனர்
   சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும்
   கபிலைமாட்டு உதித்து. வேந்தன்
துப்புடைச் சேனை யாவும்
   தொலைவுறத் துணித்தலோடும்.
வெப்புடைக் கொடிய மன்னன்
   தனயர்கள் வெகுண்டு மிக்கார்.


அரத்த நோக்கினர். அல் திரள் மேனியர்.
பரித்த காவினர். பப்பரர் ஏகினார் -
திருத்து கூடத்தைத் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே.


நா. கணேசன்

பப்பரப் புளி -  baobab மரம். ராமேச்சுரத்தில் பப்பரப்புளி காட்டிய காளைராஜனுக்கு நன்றி.

Baobab tree's description on pg. 66 says:
"Adasonia digitata, Linn. 119 and 120.
Habitat: An African plant cultivated in various parts of India"
The same page mentions "baobab fruit".

Rameswaram tree is the baobab tree of Africa.




On Sunday, November 30, 2014 8:26:50 AM UTC-8, தேமொழி wrote:
அப்படியானால் "போண்டா" என்ற சிற்றுண்டிக்கு அதன் உருவம் காரணமாக (போந்தை) என்ற பெயர் வந்திருக்குமோ?

பப்பரர் (பப்பர நாட்டவர்) பற்றி வேறு யாரேனும் குறிப்பிடுள்ளர்களா?  [Latin barbaricus, from Greek barbarikos, from barbaros, foreign.] 

ஆனால் இந்த சொல் காட்டுமிராண்டி, நாகரீகம் அடையாதார் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது.

[ கத்தி (குயம்) போய் போண்டா வந்தது டும்..டும்..டும்...] 

..... தேமொழி


This is what I wrote in CTamil (CNRS, Paris) list now,
Bonda "போந்தை”

There are some Baobab trees in all states of India. There are some in Madras parks, Narasiah told that
there is one in Andhra Mahila Sabha compound. Because of the astringent fruits of baobab-s, most
of the Tamil names of it end with -puLi (normally, tamarind tree). The names for baobab trees in Tamil Lexicon:
ஆனைப்புளி, பப்பரப்புளி, பாப்பாரப்புளி, பூதவிருட்சம், பூரி, பூரிமரம், பெருக்கு, பெருக்கமரம், சீமைப்புளியன்.
பொந்தைப்புளி or போந்தைப்புளி is also commonly used for baobab.

papparar is from Arabic term, Barbara, barbarian etc., referring to Africa and Africans,
See pg. 38,

I have given two example poems from Kamban, using "papparar":
No wonder, baobab is called "pappara-p-puLi" in Tamil.

The interesting term, pOntai used for Palmyrah palm trees with the stout base in Sangam literature
is used in pOntaippuLi.  "pontaikkOzi" is the fat chicken. Like vada, dosa, meduvada, ... becoming signature 
recipes from South India all over the world, "bonda" (போண்டா made of, say, potatoes) is also very common.

In a journal, we see Kaamaandakiiyam getting rendered as kaamaaNDakiiyam in Tamil script, All magazines write
PM Modi as MODi. Rahul Dravid becomes ட்ராவிட்/டிராவிட் (note the retroflex D for drAviD). It seems
pOntai is the source word for போண்டா (bonda), when a Tamil/Dravidian word gets into English
and then comes back into Tamil. bonda < போந்தை.

N. Ganesan
Reply all
Reply to author
Forward
0 new messages