விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி

85 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 4, 2009, 12:14:34 PM10/4/09
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, மின்தமிழ், panb...@googlegroups.com, Santhavasantham

On Oct 3, 12:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:

> உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி
> வந்துள்ளது

> எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
> மின்மடல்: rgopal...@gmail.com

> உரல் :
> யாரிது: http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> மறுமொழி

> Dear sir,

> Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said
>  lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit
> or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> should be the first language in school exams instead of English as in the
> Andhra and Karnataka states where their regional language is the First
> Language.

> With Regards.
> R.Gopalakrishnan
> Neyveli, Tamilnadu

> இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:

அன்பின் ஜெயபாரதன் அவர்களுக்கு,

உங்கள் வலைப்பதிவை சென்றவாரம் தேடிப் படித்தேன்:
http://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

வணக்கம்.  உங்கள் நண்பர் (அன்னூர்) மரு. வேலுசாமி
உங்களைப் பற்றிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
யாரென்று தெரிகிறதா? குளிர்காலத்தில் ஃப்லாரிடா
வீட்டில் வசிப்பவர். சண்முகம் (சிகாகோ), சாமிநாதன்
(சான் ஆண்டானியோ) அவருடைய சகோதரர்கள் -
தெரியும்தானே. அது இருக்கட்டும்.

-----------------

'அன்புடன்’ புகாரியின் வலைப்பதிவில்
உங்கள் மறுமொழியைச் சென்ற வாரம் பார்த்தேன்.

http://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_2822.html
நீங்கள் எழுதிய மறுமொழி:
“நண்பர்களே

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு
வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு
உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ,
விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத்
தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய
முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக
மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால்,
தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு
மொழியாகி விடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப்
போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha
( ?)
போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும்
உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும்
முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர்
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத
தூய தமிழில் மருத்துவ, விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக்
கடினமானது.

தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப்
பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக
வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!”

கிரந்த எழுத்தை யாரும் நீக்கிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.
குமுதம், துக்ளக், விகடன், தினமலர், தினமணி ... ஸன் டிவி குழும
பத்திரிகைகள், ஸன் தொ.கா. ... போன்றவை கிரந்த எழுத்துக்களை
நீக்கவிடாது. முனைவர் மு. இளங்கோ விழைவதுபோன்ற
ஒரு காலம் - தனித்தமிழ் காலம் ஏற்பட வாய்ப்பில்லை
என்றே தோன்றுகிறது:
http://groups.google.az/group/mintamil/msg/4faac2d73f8cc32a
அவ்விழையில் மு. இளங்கோவிற்கு வன்பாக்கம்
விஜயராகவன் மறுமொழியும் பார்க்கவும்.

ஆனால், அதே சமயத்தில் நம் தமிழ்மரபு - எல்லாச் செய்யுள் நூல்களும்
எல்லாக் காலத்திலும் பேணிவந்த கிரந்த எழுத்தை விலக்கி
தமிழ் எழுத்தாக எழுதிவருகிறது என்பதையும் மறுக்கமுடியாது.
நாக. இளங்கோவன், மு. இளங்கோவன், ... போன்ற சிலர் தனித்தமிழில்
திருத்தமாக, அழகாக எழுதுகிறார்கள். அவர்கள் தொகை
பெருகுவதாக. இலக்கியங்களை, நம் தமிழர் ஈழத்தில் படும் அவதிகளை
உறைக்கும்படி எழுத இளங்கோக்களை விட்டால் வேறுயார் உளர்?

தமிழ் மொழியில் திசைச்சொற்கள் இறக்குமதி ஆவதை
ஒரு வென் (Venn diagram) போலப் பார்க்கிறேன். முதலில்
கிரந்த எழுத்துடன், பின்னர் தமிழ் எழுத்தில் (அதனால்
ஒலி, பொருள் மாறுபாடுகள், குறைகள் உண்டா? என்றும்
ஒவ்வொரு சொல்லுக்கும் பார்க்க வேண்டியுள்ளது
- ஆங்கிலச் சொல்லுக்கு இது தமிழ்ச் சட்டை போர்த்தல்
பார்லிமெண்டை பாராளுமன்றம் என்பதுபோல்), அப்புறம்
யாராவது ஒருவர் தரும் கலைச்சொல் சிறப்பாகப் பொருந்தலாம்.

----------

ஜெயபாரதனைச் செயபாரதன் என்றோ,
ஹரிகிருஷ்ணனை அரிக்கிருட்டிணன்
விஜயகுமாரை விசயகுமார் என்று எழுதினால்
ஒரு மனிதரின் பெயரை அவர் பெற்றோர்
வைத்து, அவரால் எழுதுவதுபோல்
எழுதவேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படை ஒலிப்பே மாறிவிடுகிறது,
அதை அவர்கள் ஏற்பதில்லை. காட்டாக,
நண்பரின் இல்லத்தரசி பெயர் ஆஷா,
ஆசா என்றால் ஒலிப்பே போய்விடுகிறதே.
தமிழ் எழுத்தாகவும் இருக்கணும், ஒலிப்புப்
பிசகும் ஆகாது என்றால் ஆங்கில எழுத்தில்
மேற்கொள்ளும் யுக்தி ஒன்று பயன்படும்.

விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதும்போதும்,
கிறித்துவ, இசுலாமிய, சமற்கிருத மக்கட்பெயர்களுக்கும்
இன்று கிரந்த எழுத்து தேவையிருக்கிறது.
இந்த மெல்லோசைகளை எவ்வாறு தமிழ் எழுத்தில்
குறிப்பது? (தமிழ் எழுத்து 30 - தொல்காப்பிய முதல் சூத்திரம்).

விஜயனை விசயன் ஆக்கினால் அடிப்படை ஒலிப்பே
மாறுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
Vijay Visay ஆகிவிடுகிறது. அறிவியல் வளர்ச்சி பற்றி எழுதுவோருக்கும்
பல ஆங்கில ஒலிகள் தமிழில் எழுதவேண்டிய
கட்டாயம் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் தீர்வென்ன? என்று நானும் ஒரு 20-30
ஆண்டுகளாய்ச் சிந்தித்தே வருகிறேன். அதனை
உங்களுக்கும், புகாரி, செல்வா, ... போன்ற
இவ்வரங்க நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன்.

நேற்றுதான் யூனிக்கோட் 5.2 பதிப்பு வெளியாகியுள்ளது.
உலக மொழி அனைத்துக்குமான எழுத்துக்கள்:
http://www.unicode.org/charts/
மனித குலத்தின் இறந்துபட்ட மற்றும் வாழ்கிற அனைத்து
எழுத்துக்களுக்கும் உள்ள ஐஎஸ்ஓ தரப்பாடு (ISO Standard 10646)
அது. நாம் எல்லோரும் மடலாடுவதும் இத் தரப்பாட்டிலேதான்.

ஆங்கிலம் எவ்வாறு உலகின் அனைத்து மொழி எழுத்துக்களுக்கும்
தன் அடிப்படை எழுத்தின் மேலேயே உபகுறிகளைச் சேர்த்துக்
கையாள்கிறது? என்றுக் காண்போம். அரபி எழுத்தில் உள்ள
ஒரு சிறப்பு “அ” ஒலியை, ‘ என்று ஆங்கிலம் காட்டுகிறது.
உ-ம்: Mu'allam என்னும் சொல்லின் அரபொலியை
நமக்கு கவி புகாரி விளக்கினார். செ. ரா. செல்வா ஓர்
அரிய கட்டுரையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 24, 1999)
தந்தார். அதை, யூனிகோட் குறியேற்பில் வைத்தேன்.
http://nganesan.blogspot.com/2008/01/1999.html
இதைப் படித்துள்ளீர்களா?

இந்த மீக்குறிகள் (diacritical marks) சிந்தனையை அறிவியல்
கண்ணோக்கில் யூனிகோட் மூலம் விரிவுபடுத்தினால்
இந்தச் சிக்கலுக்கு எளிய தீர்வு கிட்டும்.

சரி. விரிவான ஓர் உதாரணம் தருகிறேன்.
தொழில்நுட்பம் கணினி வலைப்பக்கங்களில் வேகமாக
முன்னேறிவருகிறது. இந்தியர் ஒருவர் தன் “தாய்எழுத்தில்”
(Mother script) கணிவலையில் எந்த மொழியையும் படிக்க
முடிகிறது. எ.கா: நான் தெலுங்கு (அ) மலையாள வலைப்பக்கத்தை
தமிழ் எழுத்தில் வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.
அம்மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோரிடம்
ஐயந்தெளியலாம். தமிழ்மொழி மறந்துவிட்ட நல்ல
திராவிடச் சொற்களை மீண்டும் நாம் புழங்கலாம்.
மலையாளத்தைத் தமிழில் எங்ஙனம் வாசிப்பது?
இதற்கு விடை பக்கம் 21-ல் வினோத் ராஜன் கொடுக்கிறார்:
http://tamilcc.org/thoorihai/Manual.pdf

விரிந்த வியாபகமுடைய இந்தக் கோட்பாட்டை
மொழியியல் வல்லுநர்களும், அரசும் வளர்த்தெடுக்க
வேண்டும். தமிழில் நாம் எல்லோரும், அரசும்
ஒன்றுகூடி பணியாற்றி ஒரு நல்ல எழுத்துப்பெயர்ப்புத்
தரப்பட்ட்டை (Tamil Transliteration Standard for Indic
scripts) உருவாக்கவேண்டும். இண்பிட் (http://infitt.org)
போன்ற கூட்டமைப்புகள் அரசாங்கம், தமிழ் இணையப்
பல்கலை, ... கூடிச் செய்யவேண்டிய பணியிது.

உதாரணத்திற்கு வருவோம்:
இந்திய மொழிகளின் எழுத்துகளில்
ஒன்றுக்கொன்று நேரான
பெயர்ப்புத் தரப்பாடடு:
http://tamilcc.org/thoorihai/Character%20Matrix.pdf

இந்தத் தரப்பாட்டை இன்னும் மொழி, கல்வி,
அரசு நிபுணர்கள் ஆய்ந்து மேம்படுத்தி அரசாணையாக
அறிவிக்கலாம். அதன் ஒரு துணையங்கமாக
சம்ஸ்க்ருத/ஆங்கில எழுத்துக்களுக்கும்
இவை பெயர்ப்புத் தரப்பாடு என்று தரலாம்.
அதனை, வேண்டுவோர் பயன்படுத்தலாம்
என்பது என் பரிந்துரை.

g, j, D, dh, b, - these "voiced" letters can
be shown on unvoiced (pure) Tamil க், ச், ட், த், ப்
using a diacritic called "caron".
U+032C, combining caron below ( ̬ ).
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

விஜய் ஒலிப்பு மாறாமல் விசய் - சகரத்தின் கீழ் ̬ (caron) வைத்துவிடலாம்
இதுபோல், எல்லா எழுத்துக்களுக்கும் துணைக்குறிகள்
என்ன என்று விரிவாகப் பேசி நிர்ணயிப்போம்.

நான் சொல்லும் கருத்து கிரந்தம் - தனித்தமிழ்
இரண்டுக்கும் ஒரு நடுநிலைக் கோட்பாடு (மாத்யமிக வழி, Middle way)
ஆகும். கிரந்தம் பெய்து எழுதப் பலர் உள்ளனர்,
தனித் தமிழுக்கும் ஒரு குழுமம் உள்ளது.
விசயகுமார், விஜயகுமார் இரண்டுக்கும் ஒலியனில்
வேறுபாடுண்டு. தமிழ் மெய்யெழுத்துக்கள் 18-க்கும்
முதன்மை அளித்து சில துணைக்குறிகளைச்
சேர்த்தால் ஒலிப்பை ஜ போல் செய்துவிடலாம்.
இந்த ட்ரேன்ச்லிட்டரேசன் தரப்பாடு (Standard) உருவாகும்போது
மற்ற எல்லா இந்திய, இலங்கை மொழி எழுத்துக்களையும்
தமிழ் எழுத்துக்களிலேயே காட்டிவிடலாம்.

http://unicode.org/charts
பார்த்தால் இது விளங்கும். முக்கியமாய், இலத்தீன்
எழுத்து பிளாக்குகளைப் பார்க்கவேண்டும்.
அதுபோல் தமிழின் எழுத்துக்களுக்கு முதன்மை
இடம் தந்து சிறு மீக்குறிகளைச் சேர்த்தால் ஒலிப்பு
மாறாது. ஆங்கில 26 எழுத்தில் சிறு டையாகிரிட்டிக்சு
வைத்து உலகத்தின் எல்லா மொழி எழுத்து ஒலிப்பையும்
குறித்துவிடுகிறார்கள். அதுபோல், தமிழ் எழுத்தின் முதன்மையை
தமிழ் இலக்கணத்தின் படி பறைசாற்றி அறிவித்து
மீக்குறிகளைச் சேர்த்தலாம்.

அவ்வாறு தமிழெழுத்துக்களுக்கு அறிஞர்குழு பரிந்துரையாக,
அரசாணையாக ஒரு “எழுத்துப்பெயர்ப்புத் தரப்பாடு”
(Tamil Transliteration Standard for Indic scripts) ஏற்படுத்த
உழைப்போம்.

அன்புடன்,
நா. கணேசன்

http://nganesan.blogspot.com/2008/01/1999.html
I think we can take Selva's suggestion of using
simple signs to denote Grantha and other foreign
letters' representation on Tani-Tamil letters further.

Look at English, basically on 26 letters they
keep adding diacritical marks to represent all
of the World's letters.

An expert committee can com with a Transliteration
standard on Tamil letters (vowels and consonants),
and a recommended set of diacritical marks on Tamil
consonants - from TN Govt., Tamil Virtual University, etc.,

That diacritics will provide an alternative way to
mark all the foreign letters. Look at how
English in Latin script solves this issue.
Pl. look at all the blocks how English letters get
diacritic marks (see Latin script blocks).
Same thing can easily provide an alternative to
foreign letters.

A group of experts can come up with a reco translit standard.
This is needed to handle other Indian languages and Sinhala
script into Tamil. A TaniTamil way handling Grantha letters
using diacritics can be formed over time.

Regards
N. Ganesan

வினோத் ராஜனின் தூரிகை போன்ற நல்ல எழுத்துப்பெயர்ப்பு
பக்கங்களுக்கு இந்திய, சிங்கள மொழி எழுத்துக்களுக்கு
நேராக துணைக்குறிகள் என்ன? என்பதை அரச நிபுணர் குழுக்கள்
நிர்ணயம் செய்யவேண்டும். அதன் உபதுறையாக, IPA முறையில்
எடுத்த துணைக்குறிகளை வைத்து தமிழ் எழுத்துக்களின் மீது
செய்தால் மிக எளிதாக ஆங்கில, சிங்கள, கிரந்த எழுத்துக்களைக்
காட்டிவிடலாம். அம்முறையும் உள்ளடங்கின நல்ல
Transliteration standard காலப்போக்கில் தமிழ் எழுத்துக்களுக்கு உருவாக
வேண்டும். பின்னர் தமிழ்நாட்டரசு வேண்டினால்
யூனிகோட் அப்பரிந்துரையை ஏற்று, *அம்முறையிலும்*
எழுத தன் வரைபொறியை (Rendering engine called Uspdll10.dll)
அனுமதிக்கும்.

பார்க்க:
http://jeyamohan.in/?p=4249

விக்கி பற்றிய அவதூறுகள்
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/1b7f1...

என் கருத்து:
http://groups.google.com/group/tamilmanram/msg/05184211a1bf7eb6

Vinodh Rajan

unread,
Oct 7, 2009, 5:02:20 AM10/7/09
to மின்தமிழ்
//விஜய் ஒலிப்பு மாறாமல் விசய் - சகரத்தின் கீழ் ̬ (caron)

வைத்துவிடலாம்
இதுபோல், எல்லா எழுத்துக்களுக்கும் துணைக்குறிகள்
என்ன என்று விரிவாகப் பேசி நிர்ணயிப்போம். //

துணைக்குறிகள் புது எழுத்துக்கள் தாம். ஏற்கன்வே சென்ற மடலில் விரிவாக
எழுதியுள்ளேன்.

ஜ’வுக்கு பதிலாக துணைக்குறி அனாவசியம், நம் மரபில் அதைகுறிக்க எழுத்து
ஏற்கன்வே உள்ளது. அதே சமயத்தை gaவுக்கு தேவை.

ஜ,ஷ,ஸ,ஹ,ஸ்ரீ அல்லாதவைக்கு துணைக்குறிகள் தேவை என்று ரீதியில், அவையும்
புது எழுத்துக்களே. ga,gha ஆகியவற்றுக்கும் புது எழுத்தில் வடிவங்கள்
கொடுத்தால், லேர்னிங்க் கர்வ்(கல்விக்கோடு :-P ? ) ரொம்ப ஸ்டீப்பாக
இருக்குமே என்று அந்த சுமையை குறிக்கத்த்தான் diacritics based letters.
எப்படியும் அவையும் புது எழுத்துக்கள் தாம். அது பொது பயன்பாட்டுக்கு
எந்த காலத்திலும் வராது.

சாமானியனுக்கு பெரும்பாலும் அது தேவையில்லை. நம் மரபாக உள்ள ஜ,ஸ. இத்யாதி
இத்யாதி ஆகியவை பெரும்பாலான நேரங்களுக்கு போதும். அதையும் மீறி பிற
ஒலிகளை குறிப்பது ஸ்பெஷலிஸ்ட் யூசேஜ் என்ற பிரிவில் தான் வரும்.
(மந்திரங்கள் பாராயானம் செய்வது போன்றவை)

ஜ’வும் ச’வும் வடிவத்தில் ஒத்ததாக இல்லை, அத்னால் புது ஜ’வை சவுக்கு
நெருங்கியதா உருவாக்கப்போகிறேன், என்பது போன்ற முயற்சிகள் அர்த்த மற்றவை.

V

On 4 Oct, 21:14, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 3, 12:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
>
>
>
>
>
> > உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி
> > வந்துள்ளது
> > எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
> > மின்மடல்: rgopal...@gmail.com
> > உரல் :
> > யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> > மறுமொழி
> > Dear sir,
> > Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said
> >  lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> > writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit
> > or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> > should be the first language in school exams instead of English as in the
> > Andhra and Karnataka states where their regional language is the First
> > Language.
> > With Regards.
> > R.Gopalakrishnan
> > Neyveli, Tamilnadu
> > இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:
>
> அன்பின் ஜெயபாரதன் அவர்களுக்கு,
>

> உங்கள் வலைப்பதிவை சென்றவாரம் தேடிப் படித்தேன்:http://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B...

> தந்தார். அதை, யூனிகோட் குறியேற்பில் வைத்தேன்.http://nganesan.blogspot.com/2008/01/1999.html

> U+032C, combining caron below (  ̬ ).http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

Hari Krishnan

unread,
Oct 7, 2009, 6:38:05 AM10/7/09
to mint...@googlegroups.com


2009/10/7 Vinodh Rajan <vinodh...@gmail.com>



சாமானியனுக்கு பெரும்பாலும் அது தேவையில்லை. நம் மரபாக உள்ள ஜ,ஸ. இத்யாதி
இத்யாதி ஆகியவை பெரும்பாலான நேரங்களுக்கு போதும். அதையும் மீறி பிற
ஒலிகளை குறிப்பது ஸ்பெஷலிஸ்ட் யூசேஜ் என்ற பிரிவில் தான் வரும்.
(மந்திரங்கள் பாராயானம் செய்வது போன்றவை)

ஜ’வும் ச’வும் வடிவத்தில் ஒத்ததாக இல்லை, அத்னால் புது ஜ’வை சவுக்கு
நெருங்கியதா உருவாக்கப்போகிறேன், என்பது போன்ற முயற்சிகள் அர்த்த மற்றவை.

V


அப்படியே வழிமொழிகிறேன்.  என்னைப் போன்ற தமிழ்-ஆங்கிலம் மூலமாக வடமொழி நூல்களை அணுகுபவர்கள் படும் அவதியையும், கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதும்போது எது சரியான உச்சரிப்பு என்று புரியாமல் திண்டாட நேர்வதையும் பற்றியும் சொல்ல வேண்டும்.  உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்.  மஹாபாரதத்தில் பின்வருமாறு உள்ளதைப் போன்ற ஒரு சொற்றொடர் அடிக்கடி வருகிறது:

Like Vishnu's victory over Vali.....

V...A...L..I என்றால் வாலி என்றுதான் படிக்கத் தெரியும் எனக்கு.  அப்படி மட்டும்தான் படித்துப் பழக்கம்.  வாலியை விஷ்ணு எப்போது வென்றார் (அல்லது விக்டரி என்பது கொன்றதால் பெற்ற வெற்றியாக இருந்தால், கொன்றார்) என்று விளங்கவில்லை.  தொடர்ந்து பல நூறு இடங்கிளில் இந்த V a l i யும் விஷ்ணுவின் வெற்றியும் பேசப்பட்டுக்கொண்டே வருகிறது.  இந்த இடத்தில் மனத்துக்குள் ஒருபுள்ளி வைத்துக் குறித்தவாறு படித்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் திடீரென்று ஒரு பொறி தட்டியது.  தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் பெரியவர் கிட்டத்தட்ட இந்த மாதிரி சொல்லியிருக்கிறார்.  ‘வங்களத்தில் வ-கரம் எல்லாம் ப-கரம் ஆகிற காரணத்தால், பிற்காலத்தில் பழைய நூல்களை மொழிபெயர்த்த வங்காளிகள், இந்த வ-வுக்கும் ப-வுக்கும் வித்தியாசம் தெரியாமல், மூலத்திலேயே ப-கரம் இருக்கும் சொற்களையும் பெயர்களையும்கூட வ-கரம் கொண்டதாக மாற்றி எழுதியிருக்கிறார்கள்‘‘.  இங்கே கிடைத்தது எனக்கான சாவி.  

கிஸாரி மோஹன் கங்கூலி ஒரு வங்காளி.  எனவே, இந்த வாலி, நிச்சயமாக நம்ம ராமாயண வாலி இல்லை.  இரு்ந்திருந்தால் ஒரேஓரிடத்திலாவது வாலியை வென்ற ராமனைப்போல் என்று சொல்லியிருப்பார்கள்.  வாலியை வென்ற விஷ்ணுவைப்போல் என்று மட்டுமே தொடர்ந்து சொல்லப்பட்டிருப்பதால் நாம்தான் உச்சரிப்பைச் சற்று மாற்றி முயன்று பார்க்க வேண்டும் என முடிவுக்கு வந்து, Valiயை வலி என்று படித்து, அதை பலி என்று மாற்றிப் பொருள் கொண்டேன்.  விடை கிட்டிவிட்டது.  மஹாபலியை வென்ற விஷ்ணுவைப் போல் என்பது இந்த சொற்றொடரின் மூலப் பொருள்.  பிறகு சம இடங்களைத் தேடிப் பிடித்து, ஒரு நான்கைந்து இடங்களில் ‘நம் ஊகம் சரியானதுதானா’ என்று உறுதிப்படுத்திக் கொண்டேன்.  இப்படியாக மஹாபலி ஆங்கிலத்தில் வாலியாக மாறினார்.  

இதேபோல, ஆங்கிலத்தில் எழுதும்போது ஒவ்வொரு பெயருக்கும் சரியான ஸ்பெல்லிங் போட முட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது.  எங்கே t.  எங்கே th, எங்கே d, எங்கே dh என்பது ஓயாத மண்டைக் குடைச்சல்.  இந்தக் கட்டத்தை ஓரளவுக்கு வெற்றிகரமாகத் தாண்டிவிட்டேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ப்ருஹத்ரதனை ப்ரிஹட்ரடா என்றும் சேகிதானனை சேதிக்கனன் என்றும் இந்திரா பார்த்தசாரதியே எழுதியிருக்கிறார் (கிருஷ்ணா கிருஷ்ணா).  இப்படிப் பெரியவர்களையே இந்த உச்சரிப்புப் பிழைகள் தடுமாற வைத்திருக்கின்றன.  (இந்தப் புத்தகத்துக்கு ப்ரூஃப் பார்ததவன் என்ற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.) 

இப்படிப்பட்ட தவறான உச்சரிப்புகளை ஓரளவு தவிர்க்க முயலலாம் அல்லவா?  அதற்காக, ப்ளெஷர் லெஷர் போன்ற z கவநடா ஷகரத்தையும், மெகானிசம் போன்ற சொற்களில் வரும் z கலந்த சகரத்தையும் கூட விட்டுவிடலாம்.  புதிதாக இவற்றுக்கு டயாக்ரிடிகல் எழுத்துகள் உருவாக்குவதை வரவேற்கிறேன்.  ஆனால், ஏற்கெனவே புழக்கத்தி்ல் இருக்கும் ஜ ஸ ஷ க்ஷ போன்றவற்றையும் புதிய எழுத்தாக மாற்றினால்தான் தமிழ் பரிசுத்தமாகும் என்ற போக்குதான் எனக்குப் புரியவில்லை.  


--
அன்புடன்,
ஹரிகி.

Vinodh Rajan

unread,
Oct 7, 2009, 7:08:53 AM10/7/09
to மின்தமிழ்
இதனால் தான் பெரும்பாலும் ஆங்கில மன்றங்களில் சமஸ்கிருத சொற்களை எழுதும்
போது ஹார்வார்டு-க்யோட்டோவிலோ அல்லது ஐ.ஏ.எஸ்.டி’யிலோ எழுதிவிடுவது.


V

On 7 Oct, 15:38, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/7 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>

> இப்படிப்பட்ட தவறான உச்சரிப்புகளை *ஓரளவு *தவிர்க்க முயலலாம் அல்லவா?  அதற்காக,

N. Ganesan

unread,
Oct 7, 2009, 7:20:39 AM10/7/09
to மின்தமிழ்

On Oct 7, 6:08 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> இதனால் தான் பெரும்பாலும் ஆங்கில மன்றங்களில் சமஸ்கிருத சொற்களை எழுதும்
> போது ஹார்வார்டு-க்யோட்டோவிலோ அல்லது ஐ.ஏ.எஸ்.டி’யிலோ எழுதிவிடுவது.
>
> V
>

ஆம். தமிழுக்குக் கொலோன் எழுத்துப்பேர்ப்பு முறை, வடமொழிக்கு
ஹார்வர்ட்-க்யாட்டோ. அது எல்லாம் dumb VT100 terminal காலத்திற்குப்
போதுமானதாய் இருந்தது. இனித் தேவையில்லை.

சரியான டையாகிரிட்டிகல்ஸ் ஆங்கில எழுத்தில் இட்டு யூனிக்கோடில்
எழுதிவிடலாம். நல்ல எடிட்டர்கள் வேண்டும். தூரிகையில் உள்ளதா?
சுரேஷ் வலைப்பக்கத்தில் உண்டு.

அதுபோல்தான், நல்ல பொருத்தமான டையாகிரிட்டிகல்ஸை
தமிழ் எழுத்தில் சேர்ப்பது. 2,3,4 பொருந்தவில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 7, 2009, 7:37:07 AM10/7/09
to மின்தமிழ்

On Oct 7, 5:38 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/7 Vinodh Rajan <vinodh.vin...@gmail.com>
>
>
>

> இப்படிப்பட்ட தவறான உச்சரிப்புகளை *ஓரளவு *தவிர்க்க முயலலாம் அல்லவா?  அதற்காக,


> ப்ளெஷர் லெஷர் போன்ற z கவநடா ஷகரத்தையும், மெகானிசம் போன்ற சொற்களில் வரும் z
> கலந்த சகரத்தையும் கூட விட்டுவிடலாம்.  புதிதாக இவற்றுக்கு டயாக்ரிடிகல்
> எழுத்துகள் உருவாக்குவதை வரவேற்கிறேன்.  ஆனால், ஏற்கெனவே புழக்கத்தி்ல்
> இருக்கும் ஜ ஸ ஷ க்ஷ போன்றவற்றையும் புதிய எழுத்தாக மாற்றினால்தான் தமிழ்
> பரிசுத்தமாகும் என்ற போக்குதான் எனக்குப் புரியவில்லை.
>

நிச்சயமாக, ஜ, ஹ, ஷ, ஸ இருக்கும். பலர் (உ-ம்: சென்னை பத்திரிகைகள்)
விட்டுவிடுமா?

சி. ஜெயபாரதன் அறிவியல் அறிஞர் - தமிழில் அறிவியலைச் சொல்வதில் வித்தகர்.
அவரது பதிவு:
http://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

சி. ஜெயபாரதனின் மறுமொழி பார்க்கவும்:
http://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_2822.html

------

சிறப்பு உபயோகங்களுக்காக, ஆங்கில எழுத்தில் டையாகிரிட்டிகல்ஸை வைத்து
உலக எழுத்து எல்லாவற்றையும் காட்டிவிடுகிறார்கள்.

கிரந்த எழுத்தை யாரும் நீக்கிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.
குமுதம், துக்ளக், விகடன், தினமலர், தினமணி ... ஸன் டிவி குழும
பத்திரிகைகள், ஸன் தொ.கா. ... போன்றவை கிரந்த எழுத்துக்களை
நீக்கவிடாது. முனைவர் மு. இளங்கோ விழைவதுபோன்ற
ஒரு காலம் - தனித்தமிழ் காலம் ஏற்பட வாய்ப்பில்லை
என்றே தோன்றுகிறது:
http://groups.google.az/group/mintamil/msg/4faac2d73f8cc32a

ஆனால், அதே சமயத்தில் நம் தமிழ்மரபு - எல்லாச் செய்யுள் நூல்களும்

----------

Regards
N. Ganesan

அனுமதிக்கும்.

N. Kannan

unread,
Oct 7, 2009, 8:01:29 PM10/7/09
to mint...@googlegroups.com
2009/10/7 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
>
> On Oct 7, 6:08 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>> இதனால் தான் பெரும்பாலும் ஆங்கில மன்றங்களில் சமஸ்கிருத சொற்களை எழுதும்
>> போது ஹார்வார்டு-க்யோட்டோவிலோ அல்லது ஐ.ஏ.எஸ்.டி’யிலோ எழுதிவிடுவது.
>>

ஜப்பானிய ஒலிப்பு:

Kyoto = கியோத்தோ
Tokyo = தோக்கியோ
Toyota = தொயோத்தா

ஜப்பானிய மொழியில் வல்லினம் ஒலிப்பதில்லை. அது மெல்லின மொழி ;-)

கண்ணன்

srirangammohanarangan v

unread,
Oct 7, 2009, 8:07:44 PM10/7/09
to mint...@googlegroups.com
கோவில்களில்  கோஷ்டியிலும்    திவ்ய பிரபந்தங்களை    ஸேவிக்கும்  போது   வல்லினம்  ஒலிக்காமல்   மெல்லினமாக   ஒலிக்கின்றனரே  --  சென்று  நின்ற  பைந்துழாயான்  அடிக்கே  -என்பதை --  சென்னு  நின்ன   --என்று    ஸேவிக்கின்றனர்.

N. Kannan

unread,
Oct 7, 2009, 8:25:42 PM10/7/09
to mint...@googlegroups.com
அரங்கனைவிட ஒரு மெல்லினம் உலகிலுண்டோ? ;-) அதனால்தானே அங்கு கடமுடா
சத்தங்கள் கிடையாது.

க.>

2009/10/8 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


> கோவில்களில்  கோஷ்டியிலும்    திவ்ய பிரபந்தங்களை    ஸேவிக்கும்  போது
> வல்லினம்  ஒலிக்காமல்   மெல்லினமாக   ஒலிக்கின்றனரே  --  சென்று  நின்ற
> பைந்துழாயான்  அடிக்கே  -என்பதை --  சென்னு  நின்ன   --என்று
> ஸேவிக்கின்றனர்.

நம்மவர் ஆங்கிலவழியில் ஆசிய மொழிகளைக் கொலை செய்வதைப்போன்ற கூத்து வேறு எங்குண்டு:

க்யோட்டோ (கியோத்தோ) , ஹுண்டாய் (ஹுயுந்தே)!!

Sri Sritharan

unread,
Oct 11, 2009, 8:06:43 AM10/11/09
to mint...@googlegroups.com
தினமலர் முதற்பக்கத்தில் "இன்று.." என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே எடுக்கப்பட்டுள்ளன. "விகி தாலிபான்கள்" எனக் குற்றம் சொல்வோரின் (வன்பாக்கத்தார், மற்றும் வினோத்ராஜனைச் சொல்கிறேன்) கவனத்துக்கு: சோவியத் ஒன்றியம், விடுதலைக் குடியரசு போன்ற சொற்களை இப்போது ஊடகங்களும் எழுத ஆரம்பித்து விட்டன. பார்த்தீர்களா?

அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org


விஜயராகவன்

unread,
Oct 11, 2009, 9:20:25 AM10/11/09
to மின்தமிழ்

விஷயம் தினமணி அப்படி ‘எழுத ஆரம்பித்து விட்டதா’ என்பதல்ல. எந்த பரவலாக
பின்பற்றும் முறையும் சரிதான். தினமணியே எவ்வளவோ இடத்தில் சோவியத்
யூனியன் என எழுதுகிரது.

ஏன் தினமணி, மத்திய மொழி ஆராய்ச்சி மையத்தின் ‘தமிழ் நடை கையேடு’ சோவியத்
யூனியன் என எழுதுகிரது.

தலிபான் குழுவின் செயல்கள் விக்கி கொள்கைகளுக்கு எதிரானவை, அதுதான்
விஷயம்.

விஜயராகவன்

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 12, 2009, 8:32:59 AM10/12/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, Santhavasantham

On Oct 11, 9:49 pm, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:

> விசயராகவன்

> ர, ற வேறுபாட்டை (இப்போதும்) சரியான முறையில் ஒலிப்பவர்கள் ஈழத்தமிழர்களே.

Yes. Nowadays, linguists specializing in Tamil phonology are sure that
Eelam way of pronunciation is the most ancient one. For example,
experts (Zvelebil, Asher, .... ) concur that intervocalical -k- is a h-
type sound
(a voiceless fricative)  observed clearly in Ceylon, and Madurai &
south & west TN. Listen to songs by TMS, PBS, Variyar, Madurai Somu,
P. Susheela etc. etc.,
(links in minTamil ggroup) & you can do a phonetic spectral analysis,

One reference, see V. S. Rajam's book on Sangam poems grammar. She
will note that ancient sound of R is alveolar stop, while modern Tamil
Nadu
way is trilled R. This switch in Tamil Nadu happened later.

Malayalam, thanks to Kilimanur A. R. Rajarajavarma Thamburan who gave
Kerala Paniniyam grammar for Malayalam after studying Panini and
Tamil
talks of a letter for alveolar t sound, see more on this in my
posting:
http://dakshinatya.blogspot.com/2009/09/malayalam-ttta-nnna.html

Tamil has 3 n's: dental, alveolar, and retroflex (sounds as well as
letters) and Tamil has 3 t's: dental, alveolar and retroflex
(we have problems in writing the alveolar t, as it confuses people
with trill R).

Like Malayalam, Tamil can write alveolar t of English/European words
with the vertical line of ட slanted to the right by 45 degrees or so,
This is done in Malayalam unicode, and this simple alveolar t solution
formed by Kilimanur R. Thampiraan for Malayalam will work for our
Tamil script too.
http://dakshinatya.blogspot.com/2009/09/malayalam-ttta-nnna.html
It is easy to slant the vertical line of ட to denote the alveolar t.

Currently busy with the Cologne Tamil Internet 2009 conference work,
& so can't write more.

More later,
N. Ganesan

> இங்கு பாருங்கள். உங்களைப் போலவே ஒருவர் தமிழ்க்கொலை புரிகிறார்:)

>http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%...

> (இப் பக்கம் விரைவில் அங்கு நீக்கப்படவிருக்கிறது).

> | ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
> | ற வுக்கு R தொனி என்கிறனர்.
> |
> | r க்கும்  R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
> | தான்.

> அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கேட்டுப் பார்க்கவில்லை போலும்.

> அன்புடன்
> சிறீதரன்http://ta.wikipedia.orghttp://ta.wikinews.org

> ----- Original Message -----
> From: "விஜயராகவன்" <viji...@gmail.com>
> To: "தமிழ் மன்றம்" <tamil...@googlegroups.com>
> Sent: Monday, October 12, 2009 9:35 AM
> Subject: [தமிழ் மன்றம்] Re: விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி

> | On 11 Oct, 23:14, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> | > வாருங்கள். நல்வரவாகுக!
> | >
> | > உங்கள் கருத்துகளைப் பண்புடன் எடுத்துக் கூற
> | > வேண்டுகிறேன்.
> |
> | நான் எழுதியதில் பண்பு இல்லை என்ற அவதூறை அழுத்தமாக மறுக்கிறேன்.
> |
> |
> |
> | > ஆனால் ஒரு காலத்தில் ஒருசிலராலோ பலராலோ
> | > சரிவர எழுதவோ பேசவோ இல்லையென்றால்
> | > ஒரு மொழியில் இருந்து அதனை நீக்க வேண்டும்
> | > என்பது உங்கள் வாதம்.
> |
> |
> | ஒரு சிலரலோ, பலராலோ மற்றும் அல்ல, என்னிடம் தமிழ் இணைய பல்கலைக்
> | கழகத்தின் தமிழ் எழுத்து பயிற்சியின் புத்தகம் உள்ளது. ஒவ்வொரு தமிழ்
> | எழுத்தும் ஆங்கில எழுத்து மூலமாக எப்படி தொனிக்கின்றது என காடுகின்றனர்.
> | ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
> | ற வுக்கு R தொனி என்கிறனர்.
> |
> | r க்கும்  R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
> | தான்.
> |
> | தமிழ் இணைய பல்கலைகழகத்திற்க்கே ஒரு வித்தியாசம் தெரியவில்லை.
> |
> | >கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது தமிழர்கள் ஏற்காதது
> |
> | நீங்கள் தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேன் இல்லை, யாரும் அப்படி இல்லை.  அதனால்
> | தமிழர்கள் பற்றி ஜெனரலைஸ் செய்ய வேண்டாம்.
> |

N. Ganesan

unread,
Oct 13, 2009, 7:21:38 AM10/13/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

அன்பின் செல்வா,

திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பயனர்களுக்கு
அரசு, யூனிகோட் அங்கீகரிக்கப்பட்ட வழியில் தரவேண்டும்.

ஜ, ஷ, ஸ, ஹ - நான்கும் கிரந்த எழுத்துக்கள். தமிழ் அல்ல.
ஆங்கிலத்தில் ஆங்கிலமல்லாத உலக மொழிகள்
அனைத்தையும் டையாக்கிரிட்டிகல் துணைக்குறிகள் வைத்தே
எழுதுகின்றனர். ஐபிஏ தரப்பாட்டுக் குறிகள் அவை.
அதுபோல் தமிழிலும் எழுத்துப்பெயர்ப்புக்கு
(உ-ம்: இந்தி அல்லது சிங்களம் வலைப்பக்கத்தை
தமிழ் *எழுத்தில்* (குறிப்பு: தமிழ் *மொழியில்* அல்ல) காட்ட
டையாக்ரிட்டிக்ஸ் அவசியம். அதன் உள்ளடங்கின
சமாச்சாரமே கிரந்த எழுத்துக்களாகிய ஜ, ஷ, ஸ, ஹ.
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ
(இத் துணைக்குறிகள் உலகம் முழுக்க இருக்கும்
ஜ, ஷ, ஸ, ஹ எழுத்தொலிகளுக்கு பயன்படுத்துவது.
எல்லாரும் ஒப்புக்கொள்வது. செம்மொழி படிக்கும்
யாருக்கும் உடனே புரிவது.)

டையாகிரிட்டிக்ஸ் பற்றி நீங்களும், ஹார்ட்டும் பேசினபோது
1997-ல் சொல்லியிருக்கிறார். எனவே இவை ஒன்றும் புதிதல்ல.
டையாக்கிரிட்டிக்ஸ் பற்றிச்
சில குறிப்புகளை தினமணியில் 2008-ல் கோயம்புத்தூர்
ஜோதிர்லதா நாயுடு எழுதியுமுள்ளார். (அம்மைக்கு
டையாகிரிட்டிக்ஸ் பற்றி ஓரளவே அறிமுகம்).
ஹார்ட் பேசும்போது இதற்கெல்லாம் கணிநுட்பம் இல்லை.
உலகத் தரப்பாடு இல்லை. இம்மாதிரி எழுதவும்
யூனிகோட் வரைபொறி (ரெண்டரிங் எஞ்சின்) மாற்றப்பட வேண்டும்.
நாம் எல்லோரும் முயன்றால் நடக்கும்.

அப்பொழுது, ஒரு ப்லக்-இன் வைத்தால் கிரந்த எழுத்தை
தமிழ் எழுத்து தக்க துணைக்குறியுடன் காட்டிவிடும்.

ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.

ஆக, கிரந்த எழுத்துக்கு ஒரு மாற்று துணைக்குறிகள்:
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

அதனையும் அதிகாரபூர்வமாக்க உழைப்போம்.
கிரந்தம் எழுதுவோர் வலைப்பக்கங்களை - உம்: விகடன், குமுதம்,
தமிழ் எழுத்தில் விரும்புவோர் படிக்க துணைக்குறிகள் பெருந்துணை
புரியும்.

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: செல்வா <c.r.selvaku...@gmail.com>
Date: Oct 12, 9:47 pm
Subject: விக்கி பற்றிய கருத்துகளுà ்கு என் மறுமொழி
To: தமிழ் மன்றம்


செ'யபாரதன்,

நீங்கள் மீண்டும் மீண்டும் செல்லாத வாதத்தையே
முன் வைக்கின்றீர்கள் என்பதை வருத்ததுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதி  "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்! "
என்று அங்கு கூறியது
*கருத்துகளை, *அறிவியல், *பல்கலைக்
கருத்துகளை, *அறிவுச் செல்வங்களை!
நீங்கள் கூறுவது போல பிறமொழி எழுத்துகளை
அல்ல. helium என்று ஆங்கிலத்தில் சொல்வதை,
இத்தாலியர் Elio என்கின்றனர். நாம் ஈலியம் என்று
கூறினால் தவறல்ல. ஈலியம் பற்றிய அறிவுக்
கருத்துகள் ஆயிரமாயிரமாய் உள்ளன,
அவற்றை எழுத வேண்டும் என்கிறார் பாரதியார்.
அவற்றை விளக்கிச் சொல்ல
எளிமையான ஈலியம் போதும்.
அதை விடுத்து, அதனை மூச்சு இறைக்க
கிரந்தம் கலந்துதான் எழுத வேண்டும்
அப்பொழுதுதான் அறிவியல் விளங்கும்
என்பது ஒரு சிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
நீங்கள் எப்பொழுதுதான் உணர்வீர்களோ??!!

அறிவியல் கருத்துகளைத் தமிழில்
தமிழர்கள் புரிந்துகொள்ளுமாறு எழுதவேண்டும்
அதற்காக உலகில் உள்ள மொழிகளில்
உள்ள எழுத்துகள் எல்லாம் கொண்டு வர வேண்டாம்.
Fermi என்பதை வெர்மி என்றோ, வெ'ர்மி என்றோ
ஃபெர்மி என்றோ, ஃவெர்மி என்றோ எழுதலாம்.
தமிழில் பெருமி என்றுகூட எழுதலாம்.
இப்படி வழங்குமொழியில் அவர்களுக்கு
ஏற்றார்போல எழுதி வழங்கும் பெயருக்கு
exonym என்று பெயர் (தமிழில் புறப்பெயர் - அதாவது
புறமொழிப் பெயரைத் தமிழில் வழங்கும் பெயர்).
நம் மொழியில் எதனை, யாரைக்
குறிக்கிறோம் என்று நாம் அறிந்தால் போதுமானது.
(வேந்தன் அவர்கள் கூறியபடி "தமிழில்
காப்பிதான்", தமிழில் தானே பேசுகிறோம்
என்றாராம் தன் உறவினரிடம்)

ஆங்கில விக்கியில் எக்ஃசோனிம் (exonym)
என்னும் கட்டுரையில் இருந்து:
(http://en.wikipedia.org/wiki/Exonym)

For example, London is known as Londres in French, Spanish and
Portuguese, Londino (Λονδίνο) in Greek, Londen in Dutch, Londra in
Italian, Romanian and Turkish, Londýn in Czech and Slovak, Londyn in
Polish, Lundúnir in Icelandic, and Lontoo in Finnish.

உரோம/இலத்தீன் எழுத்துகளில் எழுதும்,
அதுவும் ஆங்கிலத்துக்கு நெருக்கமான இனமான மொழிகளிலேயே
எப்படி இலண்டன் என்னும் நகரத்தின் பெயரை அவர்கள் மொழிக்கு
ஏற்றார்போல மாற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள். ஏன் எல்லோரும்
London என எழுதவில்லை? வழங்கும் மொழியின்
இயல்பை மதிக்க வேண்டும்.
இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
புரிந்துக்கொள்வீர்களா? மதிப்பீர்களா?

ஏன் Jesus என்னும் பெயரைக் கூட Hessoos என்று ஒலிக்கிறார்கள்
எசுப்பானியர்? ஏன் அவர்கள் "ஜ"கரத்தை ஏற்றுக்கொள்ள வில்லை?
பிரான்சிய மொழியில், இத்தாலிய மொழியில் H ஒலி இல்லை,
இடாய்ட்சுமொழியில்
(செருமானிய மொழியில்) "ஜ" ஒலி இல்லையே ... இப்படியே
சொல்லிக்கொண்டே போலலாம்.
இத்தனைக்கும் இம்மொழிகள் எல்லாம்
ஆங்கில மொழிக்கு மிக நெருக்கமான மொழிகள்தாம்.
அவர்கள் எல்லாம் அறிவியல் பயிலவில்லையா?

ஒரு "அறிவியலாளர்" எட்டுக்கால் பூச்சிக்கு
காது எங்கே இருக்கின்றது என்று அறிய முற்பட்டாராம்.
முதலில் Jump என்று சொல்லி குதிக்கப் பழக்கினாராம்.
பின்னர் ஒவ்வொரு காலாக பிய்த்து
Jump என்று கூறியபின்னும் குதிப்பதைப் பார்த்தாராம்,
பின் கடைசி காலைப் பிய்த்த பின்னர் குதிக்காததால்,
கடைசி காலில்தான் எட்டுக்கால் பூச்சிக்குக்
காது இருக்குதுன்னு கண்டுபிடித்தாராம்.
அது போல உள்ளது உங்கள் வாதம்.

நீங்கள்:


<<தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு
வாகனம்.
மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ்
மாற

வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! >>

இது ஒருசிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
ஏன் ஐயா நீங்கள் உணரவில்லை?!!
கருத்துகளைக் கூற புதிய சொல்லாக்கங்கள் தேவைப் படலாம்,
நுணுக்கமாக எடுத்துச்சொல்ல
தெளிவான நடை தேவைப்படலாம், ஆனால் ஏன் ஐயா
மொழி மாறவேண்டும் (அதாவது அதன்
எழுத்துகள் மாறவேண்டும்)?
ஈலியம் என்று எழுதினால் அறிவியல் கருத்து மாறிவிடுமா?
என்ன செல்லாத்தனம் இது!!
ஹீலியம் என்று எழுதினால்தான்
அறிவியல் கருத்து மாறாமல் இருக்குமா??!!

ஈலியம் என்பது தூய தமிழ் அல்ல.
தமிழ் எழுத்தில் தமிழ் இயல்புக்கு ஏற்ப
வேற்று மொழிச்சொல்லை எடுத்து ஆள்தல்.

தூய தமிழ் தூய தமிழ் என்று நீங்களும்,
தனித் தமிழ் தாலிபான்கள் என்று இன்னும் சிலரும் சாடுவது
ஒருசிறிதும் நியாயம் அற்றது.

ஆனாலும் உங்கள் தமிழ் எதிர்ப்புப் பரப்புரைகளை நீங்கள்
நீறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
உங்கள் தவறான பரப்புரையைப் பார்த்து நேர்மையாகவும், தனக்காகவும்
சிந்திக்கத் தெரியாத சிலர் மயங்ககூடும்.

பாரதிதாசனின்,
"தேனால் செய்த என் செந்தமிழ்தான் ...
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்! "

என்னும் வரிகளை எப்படித் திரித்துக் கூறுகின்றீர்கள்!
கிரந்தத் திணிப்பிற்கு இது எடுத்துக்காட்டா?!!

நீங்கள்:


<<ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத
தூய

தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது.>>

ஒருசிறிதும் கடினம் இல்லை. ஈலியம் என்றோ, காசுமீரம் என்றோ,
எசுட்ரான்சியம் (English Strontium, Spanish Estroncio) என்றோ எழுதலாம்.
ஒரு மொழி பேசுவோர் தமிழ் மொழியில் இடரின்றி சொல்லி எழுத
உதவியாய் இருப்பதே நல்லது. கருத்து வேறு சொல் வடிவம் வேறு.
பெயர்ச்சொற்களில் ஒலிப்புத்துல்லியம் பிறமொழியுடன் ஒத்து இருப்பது
தேவை அற்றது. புறப்பெயர் (எக்ஃசோனிம்) என்னும்
கருத்தை ஓர்ந்து பாருங்கள்.

நீங்கள்:
<<தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய
தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை
எழுத்துக்களான ஹ,
ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச்
செய்துவிடும். >>

தூய தமிழ் என்பது வேறு கிரந்தம் இல்லாமல் எழுதுவது என்பது வேறு.
சிரீதரன், கமலம், ஈலியம், நியாயம் என்பன தமிழ் எழுத்துகளில் எழுதும்
பிறமொழிச்
சொற்கள் (தூய தமிழ்ச் சொற்கள் அல்ல). இதனை என் போன்றவர்கள்
எதிர்க்கவில்லை. தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும்
என்பது
நேர்மையான எதிர்பார்ப்பு. தமிழில் "காப்பி குடிக்கிறீங்களா?" என்றால்
போதும்.
காவ்'வ்வி' குடிக்கிறீங்களா என்றோ காFFஇ குடிக்கிறீங்களா என்றோ
எழுதத் தேவை இல்லை. தமிழில் கிரந்த எழுத்துகள் இல்லாமல்
அனுமன் முதலான பெயர்களை எழுதுவதில்லையா?
எத்தனை முறை இதனை எடுத்துக்காட்டியுள்ளோம்?!!
எழுதும் மொழியின் முறைமைகளை
மதிக்க வேண்டும். நான் உங்கள் வீட்டில் வந்து தங்கி
இருந்தால், உங்கள் குளியல் அறையில்
நீங்கள் காட்டிய இடத்தில் தான் குளிக்க வேண்டும்.
வரவேற்பு அறையில் குளித்தால்
சும்மா இருப்பீர்களா? சாலை விதிகள் போல மொழியில்
விதிகளைப் பின்பற்றுதல் அடிப்படைத் தேவை.

நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள சொற்களுக்கு எத்தனையோ
முறை தமிழில் எழுதுவது எப்படி என்று காட்டியுள்ளேன். விடாமல்
நீங்களும் அதே பட்டியலை இன்னும் இரண்டொன்றைச்
சேர்த்து கேட்கின்றீர்கள்.
காசுமீரம் என்றால் என்ன ஐயா குறைந்துவிடும்?

இதோ உங்கள் பட்டியல்:
<<காஷ்மீர், ஆஸ்திரேலியா,
ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி,
கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான்,
ஆஃப்கானிஸ்தான்,
ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம்,
பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின்,
ஸ்டிரான்சியம்,
ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர்


முதலில் எல்லாம் பெயர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அறிவியல் வளராமல் தடுக்கும் கருத்துகள் அல்ல.
மீண்டும் தமிழ் எழுத்துகளில் என் பட்டியல்:

காசுமீர்
ஆத்திரேலியா (ஆசுத்திரேலியா)
ஆத்திரியா (ஆசுத்திரியா)
எசுப்பானியா (இதுவே அவர்கள் மொழிக்கு நெருக்கமான ஒலிப்பும் கூட)
இடாய்ட்சுலாந்து (செருமனி. Deutrschland என்பது அவர்கள் நாட்டின் பெயர்.)
உருசியா (உருசுக்கி என்றும் எழுதலாம்)
யுகோசுலாவியா
அங்கேரி (இத்தாலியர் Ungheria என்கின்றனர் (http://it.wikipedia.org/
wiki/
Ungheria); நாம் மாகியார் என்றும் சொல்லலாம். அங்கேரியர் தங்கள் மொழியில்
Magyar என்கின்றனர்)
கிரேக்கம் (கிரீசு, அவர்கள் தங்கள் மொழியில் எல்லாதா அல்லது எலாதா
(Ελλάδα, transliterated: Elláda [e̞ˈlaða] என்கின்றனர்)
ஆங்க்காங்
மிசிசிப்பி
மிசௌரி
பாக்கித்தான் (பாக்கிசுத்தான்)
ஆப்கனித்தான் (ஆவ்கனித்தான், ஆவ்கனிசுத்தான்)
ராச்சசுத்தான், ராயத்தான், ராய்ச்சசுத்தான்
இந்துக்குழ்சு
பலுச்சிசுத்தான், பலுச்சித்தான்
இசுக்காட்லாந்து
நிப்பான் (சப்பான்)
இசுலாம்
பாசுக்கரன்
புசுப்பா (புட்பா, புழ்சுப்பா)
குட்சுபு (குழ்சுபு)
சைலச்சா (சைலசா)
கத்தூரி
சரசுவதி
இசுட்டாலின்
எசுட்ரான்சியம் (எ.கா: எசுப்பானிய மொழியில் Estroncio)
இசுபுட்னிக்
எசுட்டீவன் (இசுட்டீவன்)
ஆக்கிங் (ஃகாக்கிங், இஃகாக்கிங்)
பாசுவரசு (பாசுபரசு)
சியார்ச் புழ்சு
சேக்சுபியர்

ஆங்கிலேயர் ஞானசம்பந்தன், வள்ளி, அழகப்பன், மலர்விழி என்னும் பெயர்களை
எப்படி திரித்து எழுதுவார்களோ, தூத்துக்குடி, திருவனந்தபுரம் என்னும்
சொற்களை
எப்படி சுருக்கி எழுதுவார்களோ அப்படித்தான் தமிழிலும் சில திரிபுகளுடன்,
விரிவுகளுடனும் எழுத வேண்டிவரும்.
(மேலும் கிரந்தம் கலந்து எழுதுவதிலும் ஒலிப்புத் துல்லியம்
இல்லை.

தமிழைக் கெடுக்கும் உங்கள் போக்கை நீங்கள் கைவிடப்போவதில்லை
என்று அறிந்தும் இதனை எழுதுகிறேன். மற்றவர்களாவது படித்துப்
பயன்பெறட்டும்.

உங்கள் கருத்துகள் ஒருசிறிதும்
செல்லாக் கருத்துகள் என்பதனை நேர்மையுடன்
கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
செல்வா

On Oct 3, 1:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி
> வந்துள்ளது

> எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
> மின்மடல்: rgopal...@gmail.com

> உரல் :
> யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> மறுமொழி

> Dear sir,

> Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said
> lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit
> or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> should be the first language in school exams instead of English as in the
> Andhra and Karnataka states where their regional language is the First
> Language.

> With Regards.
> R.Gopalakrishnan
> Neyveli, Tamilnadu

> இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:

> -------Original Message-------

> From: செல்வா
> Date: 03/10/2009 12:54:52 PM
> To: தமிழ் மன்றம்
> Subject: [தமிழ் மன்றம்] Re: விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி

> அன்புள்ள முகமது அனீவு', இளங்கோவன்,

> உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

> அன்புடன்
> செல்வா

amachu

unread,
Oct 13, 2009, 9:09:40 AM10/13/09
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
செல்வாகட்டும் நீங்களாட்டும்,

கிரந்த எழுத்துக்கள் உச்சரிக்க உதவும் ஒலிகளை தமிழர்கள் அறிந்து
கொண்டுவிட்டனர் அல்லது அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதை ஏற்றுக்
கொள்வதை அறிய முடிகிறது.

அதனை கிரந்தம் கொண்டு எழுதாது வேற்று முறை கொண்டு எழுத முனைவது
கிரந்தத்தின் மீது வளர்த்துக்கொண்டுள்ள ஒருவித ஒவ்வாமை நோயால் என்பது
விளங்குகிறது.

amachu

unread,
Oct 13, 2009, 9:22:33 AM10/13/09
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
On Tue, 2009-10-13 at 04:21 -0700, N. Ganesan wrote:

> ஜ, ஷ, ஸ, ஹ - நான்கும் கிரந்த எழுத்துக்கள். தமிழ் அல்ல.
....
....
....

> ஆக, கிரந்த எழுத்துக்கு ஒரு மாற்று துணைக்குறிகள்:
> ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
> ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
> க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
> ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

ஆஹா! இவை எல்லாம் தமிழ்க் குறிகள் அல்லவோ.. வள்ளுவர் கூட
பயன்டுத்தியிருக்கிறார்! பலே!

நடைமுறையில் பாதித் தமிழன் வியாபாரம் செய்வதும் உறவாடுவதும்
தெலுங்கர்களோடும் மலையாளிகளோடும் கன்னடர்களோடும் ஹிந்திக்காரர்களோடும்
சிங்களவர்களோடும்.

சொற்பம் பேர் வெளிநாட்டில் போய் உடகார்ந்து கொண்டால் பார்க்கும்
டையாகிரிடிக்ஸ் பிரபலமாகத் தெரியும். இங்கே வந்து வாழ்ந்து பார்த்தால்
கிரந்தததின் பயன்பாடும் புரியும்.

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 13, 2009, 9:21:14 AM10/13/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com

On Oct 13, 8:09 am, amachu <ramada...@amachu.net> wrote:
> செல்வாகட்டும் நீங்களாட்டும்,
>
> கிரந்த எழுத்துக்கள் உச்சரிக்க உதவும் ஒலிகளை தமிழர்கள் அறிந்து
> கொண்டுவிட்டனர் அல்லது அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதை ஏற்றுக்
> கொள்வதை அறிய முடிகிறது.
>
> அதனை கிரந்தம் கொண்டு எழுதாது வேற்று முறை கொண்டு எழுத முனைவது
> கிரந்தத்தின் மீது வளர்த்துக்கொண்டுள்ள ஒருவித ஒவ்வாமை நோயால் என்பது
> விளங்குகிறது.
>

டாக்டர் ஐயா,

தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,

எனக்கு கிரந்தம் பற்றித் தெரியும். தமிழர்கள் பலரைப் போலவே.
அதனை எழுத பாடுபட்டும் வருகிறேன் என்பது உலகறியும்.

தமிழ் அல்லாத எழுத்துக்களுக்கு தமிழ் எழுத்தில்
எழுத ஒரு வழிமுறையும் ஏற்படுத்த வேண்டியது கடமை.
அதைச் செய்கிறோம். அவ்வளவுதான்.

நீங்கள் கிரந்தத்தில் எழுதுங்கள். பிரச்சினை இல்லை.
அதனை தமிழ் எழுத்தில் படிக்க விஞ்ஞான பூர்வமான
முறையைக் கொண்டுவர வேண்டும்.
தமிழ் எழுத்து என்பவை யாவை? சமணர் தொல்காப்பியர்
தந்த முதற் சூத்திரம் காண்க.

காலப் போக்கில், தமிழ் வளர,
(அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று, தமிழ்99 போன்றவை
வேரூன்றல் வேண்டும். சிங்கப்பூர், தமிழ்நாடு அரசு
ஏற்றுக்கொண்ட தமிழ்நெட்99.

(ஆ) உகர, ஊகார உயிர்மெய்கள் உடைதல் வேண்டும்:
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html

(இ) தமிழ்மொழியில் அயல்மொழி எழுத்துக்களை
எழுத முறையான டையாக்கிரிட்டிகளை நிர்ணயம்
செய்து யூனிகோடில் எழுதும்வகை செய்தல் வேண்டும்.

தமிழ் எழுத்துக்கள் மாற்றங்களை ஊன்றிப் படித்தால்
இவற்றின் அத்தியாவசியம் புலப்படும்

காலப்போக்கில் செய்யலாம்.

நா. கணேசன்

> ...
>
> read more »

amachu

unread,
Oct 13, 2009, 9:35:47 AM10/13/09
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
On Tue, 2009-10-13 at 06:21 -0700, N. Ganesan wrote:
>
> On Oct 13, 8:09 am, amachu <ramada...@amachu.net> wrote:
> > செல்வாகட்டும் நீங்களாட்டும்,
> >
> > கிரந்த எழுத்துக்கள் உச்சரிக்க உதவும் ஒலிகளை தமிழர்கள் அறிந்து
> > கொண்டுவிட்டனர் அல்லது அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதை ஏற்றுக்
> > கொள்வதை அறிய முடிகிறது.
> >
> > அதனை கிரந்தம் கொண்டு எழுதாது வேற்று முறை கொண்டு எழுத முனைவது
> > கிரந்தத்தின் மீது வளர்த்துக்கொண்டுள்ள ஒருவித ஒவ்வாமை நோயால் என்பது
> > விளங்குகிறது.
> >
>
> டாக்டர் ஐயா,
>
> தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,
>
> எனக்கு கிரந்தம் பற்றித் தெரியும். தமிழர்கள் பலரைப் போலவே.
> அதனை எழுத பாடுபட்டும் வருகிறேன் என்பது உலகறியும்.
>
> தமிழ் அல்லாத எழுத்துக்களுக்கு தமிழ் எழுத்தில்
> எழுத ஒரு வழிமுறையும் ஏற்படுத்த வேண்டியது கடமை.
> அதைச் செய்கிறோம். அவ்வளவுதான்.
>
> நீங்கள் கிரந்தத்தில் எழுதுங்கள். பிரச்சினை இல்லை.
> அதனை தமிழ் எழுத்தில் படிக்க விஞ்ஞான பூர்வமான
> முறையைக் கொண்டுவர வேண்டும்.
> தமிழ் எழுத்து என்பவை யாவை? சமணர் தொல்காப்பியர்
> தந்த முதற் சூத்திரம் காண்க.


அவர்கள் டாக்டர் இல்லையே ஐயா!

;-)

--

ஆமாச்சு

Hari Krishnan

unread,
Oct 13, 2009, 10:32:56 AM10/13/09
to mint...@googlegroups.com


2009/10/13 amachu <rama...@amachu.net>




அவர்கள் டாக்டர் இல்லையே ஐயா!

;-)

--

ஆமாச்சு


ஜாக்கிரதை.  அடுத்ததாக இடாக்குடர் ஆகிவிடுவீர்கள்.  :-)))  (இடாக்குடர் என்றால் பசிக்காதோ?) 

விஜயராகவன்

unread,
Oct 13, 2009, 1:00:26 PM10/13/09
to மின்தமிழ்
On 13 Oct, 14:21, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>

> (அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று,


திரு கணேசன்

டைப்ரைட்டர் என்று தானே தமிழ்நாட்டில் எழுத்து வழக்கம், ஏன் டைப்ரைற்றர்
என ஆக்கிவிட்டீர்கள்? இதுவும் தமிழ் சீர்திருத்த செயலா? இப்படி
எழுதினால், தமிழ்நாட்டில் யாருக்கும் புரியாது.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:17:39 PM10/13/09
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, George Hart
யூனிகோடில் டையாகிரிட்டிக்ஸ் சரியாக வைப்பதன் மூலம்
எல்லா கிரந்த எழுத்துக்களுக்கும் (சுமார் 50+ இருக்கும்)
தமிழ் எழுத்தில் சரிசமானமாக எளிதில் காட்டிவிடலாம்.

இந்தக் கருப்பொருளைக் கொண்ட ஜார்ஜ் ஹார்ட்டின் 1997 ஆண்டு மடல்
தருகிறேன். இதனை விஞ்ஞான பூர்வமாக யூனிக்கோட்
டையாகிரிட்டிக்ஸ் கொண்டு நடைபெறச் செய்யமுடியும்.
அம்முறையும் தமிழரிடையே பரவட்டும்.

நா. கணேசன்

http://www.infitt.org/tscii/archives/msg00203.html

# From: George Hart <gh...@socrates.berkeley.edu>
# Date: Tue, 23 Sep 1997 08:17:47 -0800
# Content-Length: 1783
# Content-Type: text/plain; charset="us-ascii"
# Reply-To: George Hart <gh...@socrates.berkeley.edu>,
webma...@tamil.net
# Sender: owner-we...@tamil.net

[Begin Quote]
I should like to applaud Selvaa's efforts -- I think it would be quite
nice
if the Tamil writing system were modified to make it more flexible and
allow it to represent all the sounds that Tamilians actually use.
Admittedly, some of Selvaa's suggestions look ungainly -- I'm sure
they
will not all be adopted exactly as he has suggested. But Selvaa has
initiated a very important process, and we should all give it a great
deal
of thought. The fact is, making the Tamil alphabet more versatile can
only
benefit the language. Whether this is done by keeping the grantha
characters or replacing them, I don't care -- as I've said, I find the
grantha characters quite adequate and personally do not feel they need
to
be replaced. But I am willing to support any system that allows the
sounds
of grantha (s, h, j, sh) to be represented in some reasonable
fashion. I
cannot support a system that simply removes them and does not allow
one to
represent those sounds -- that would be a serious step backwards.

And I totally approve of Selvaa's idea with regard to voiced initial
stops
(g, d, b). I hope this will lead to serious discussion. George Hart
[End Quote]

> ...
>
> read more »

Raja sankar

unread,
Oct 15, 2009, 12:23:02 AM10/15/09
to tamizh...@googlegroups.com, minT...@googlegroups.com
செல்வா,

முன் சொன்ன வாதங்களையே திரும்பவும் வேறு சொற்களை கொண்டு வைக்கிறீர்கள். எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள் வேலை வெட்டி இல்லாமல் வெட்டி வேலை செய்வது என. அதற்கு இந்த கிரந்த ஒழிப்பு மிகச்சிறந்த உதாரணம். இன்னமும் கிரந்த ஒழிப்பு என்பதற்க்கான காரணம் சொல்லப்படவேயில்லை.

நீங்கள் கோப்பு மென்பொருள்கள், நிரலிகள் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லவா? அதில் தேடி-மாற்றுக என்று ஒரு வசதி இருக்கும். அதை பயன்படுத்தியுள்ளீர்களா? விக்கியில் இருக்கும் கிரந்த எழுத்துக்களை மாற்றுவதற்கு இதன் மூலம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? நண்பர் வினோத் ராஜன் (மின் தமிழ் குழுமம்) அவர்களிடம் சொன்னால் ஒரு நாளில் செய்து தந்துவிடுவார்.

அப்படி செய்யக்கூடிய ஒரு நாள் வேலைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா என்பது தான் இன்னமும் எனக்கு புரியவில்லை. தமிழில் அறிவியல் வளரட்டும். தமிழறிஞர்கள்,பொது மக்கள் கிரந்த எழுத்துக்கள் தேவையா இல்லையா என்று ஒரு கருத்து வளரட்டும், அதன் பின் அதை செய்வது எளிது. அதை விடுத்து இப்படி இருந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை.  நண்பர் கணேசன் (மின் தமிழ் குழுமம்) கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக செய்யலாம் என்பதை நீங்கள் ஒரு பொருட்டாக கருதவேயில்லை.

நீங்கள் பாக்கிஸ்தானை  பாக்கித்தான் என்று எழுதவேண்டும் என்றெல்லாம் எவ்வாறு முடிவுக்கு என்பது விளங்கவேயில்லை. அதற்கு ஏதேனும் இலக்கண விதிகள் உள்ளனவா? அல்லது விக்கியில் ஜிம்மி வேல்ஸ்  போல் நீங்கள் தமிழின் நலம் விரும்பும் சர்வாதிகாரியா? நீங்களே முடிவு எடுத்து செயல்படுத்துவீர்களா?

இன்றைக்கு கூகுள் 40 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் சேவையளிக்கிறது. உலக மொழிகளிலே நிரலிகளை தருவது மென்பொருள் துறையில் மிக எளிதாக மாறிக்கொண்டுள்ளது. கொஞ்ச நாளிலே மொழியாக்கம் என்பதே ஒரு பொத்தானை தட்டினால் நிகழும். இந்த கால கட்டத்தில் இதை மாற்றினால் தான் தமிழ் வளரும் என்பது எப்படியிருக்கிறது என உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

ராஜசங்கர்



2009/10/15 செல்வா <c.r.sel...@gmail.com>


On Oct 14, 10:25 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> ஜெயபாரதன் அவர்களே
>
> உங்கள் கட்டுரைகளை படித்துள்ளேன். தமிழில் அறிவியல் பற்றி எழுத ஒருவரேனும்
> இருக்கிறாரே என்று மகிழ்ச்சியடைந்துள்ளேன்.  இக்குழுமத்தில் நானும் ஒரு மடல்
> ஆரம்பித்தேன். வேலைப்பளுவால் அது சும்மா கிடக்கிறது :-).  தமிழமுதத்தில்
> நீங்கள் இணைந்த போது மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் பணி தொடர்க.

செ'யபாரதனை அவர் எழுத்துக்காக எத்தனையோ முறை பாராட்டியுள்ளேன்.
அவர் எழுதுவது அருமையான கருத்தாக்கம்.  ஆனால் அவர் அறிவியல்
தமிழ் எழுதுவோர்களில் ஒருவர். அறிவியல் சார்ந்த தலைப்புகளில் எத்தனையோ
பேர் எத்தனையோ நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். கலைக்கதிர்,
புதியகல்வி போன்ற இதழ்களும் வந்துகொண்டிருக்கின்றன. தமிழ்

விக்கிப்பீடியாவில்
சிறிதும் பெரிதுமாக ஏறத்தாழ 20,000 கட்டுரைகள் உள்ளன. தமிழ் விக்கியில்
12,000 பேர் பதிவு செய்து இருக்கின்றார்கள்.
ஒரு மாதத்தில் 1,500,000  (ஒன்றரை மில்லியன் முறை)
பார்க்கப்படுகின்றது. ஒரு கிழமையில் (வாரத்தில்)
350,000  முறை பார்க்கப்படுகின்றது. நாங்கு மில்லியன் சொற்களுக்கும்
கூடுதலாக உள்ள களஞ்சியம்.

சிறிதும் பெரிதுமாக 3,000 கட்டுரைகள் எழுதியுள்ளார் மயூரநாதன்
என்னும்  தமிழர். தற்பெருமைக்காகவோ, தன்னலத்துக்காகவோ இல்லாமல்
தமிழ் மக்களுக்காகவும் தமிழ் நலத்துக்காகவும்
தங்கள் பொன்னான நேரத்தையும் பேருழைப்பையும்,
பேரன்புடன் நல்லுணர்வோடு செலவழிக்கின்றார்கள் விக்கியில்
பங்களிப்பவகள்.

>
> காப்பி, டீ என்றெல்லாம் சொல்லக்கூடாது குளம்பி, தேநீர் என்றுதான் சொல்லவேண்டும்
> என ஒரு கும்பல் கொஞ்ச வருடங்களுக்கு முன்னால் கிளம்பிற்று. பெரிய பட்டியல்
> எல்லாம் போட்டார்கள், ஊரேல்லாம் கூட்டம் போட்டார்கள். அவர்கள் இன்று எங்கே
> போனார்கள் என்று பேராசிரியர் செல்வா வை கேட்கவேண்டும் :-)
>

ஏன் ஐயா என்னைக் கேட்கவேண்டும்??!
காப்பி பற்றி நான் தமிழ் விக்கியில் ஒரு கட்டுரை எழுதினேன்.
அதனைக் காண : http://tinyurl.com/coffee-ta

தேனீர் பற்றிய கட்டுரை ஒன்றும் உள்ளது (http://tinyurl.com/tea-ta )
ஏன் ஐயா தேநீர் என்று கூறலாகாதா? தேயிலை என்பதை டீ இலை
என்றுதான் சொல்லவேண்டுமா அல்லது டீ லீFஸ் என்று சொல்ல வேண்டுமா?
அப்பொழுதுதான் அது தமிழாகுமா?
அந்த தமிழ் டீ மேலண்ண டகரமாயிற்றே ஒலிப்புத்துல்லியத்தோடு
நுனிநா டகரமாகக் குறிக்க ஒரு புது எழுத்து உருவாக்கிப் புழங்க
செ'யபாரதன் ஐயாவைக் கேட்போமா? மானம் போகின்றது என்று
அவர் துடிக்கின்றார், நீங்களும் அவருக்குப் பரிவாக இருக்கின்றீர்கள்.

> இதுவரைக்கும் அறிவியல் கருத்துக்களை தமிழில் கொண்டுவருவதற்க்காக ஒரு துரும்பு
> கூட கிள்ளப்படவில்லை. இந்த அழகில் கிரந்தம் ஒழிக்கப்படவேண்டுமாம். ஊர்ப்பக்கம்
> இதற்கு அழகாக ஒரு பழமொழி சொல்வார்கள். :-) இன்னும் சோடியம், பெர்க்கிலியம்
> போன்ற தனிமங்களையும் தமிழ் படுத்துவேண்டும் என்று கிளம்பவில்லை என
> நினைக்கிறேன். அரைத்த மாவையே அரைத்த கதையாக அவைகளும் திரும்பவும் வரும் என்று
> நினைக்கிறேன்.

நீங்கள் அறியவில்லை என்றால் ஏதும் இருக்கின்றதா என்று கேளுங்கள் ஐயா?
<<இதுவரைக்கும் அறிவியல் கருத்துக்களை தமிழில் கொண்டுவருவதற்க்காக ஒரு
துரும்பு
> கூட கிள்ளப்படவில்லை>> என்று கூறும் நீங்கள், ஏன் ஏதும் செய்யலாம்தானே?
உங்களுக்குப் பாவம் நேரம் இல்லை என்கின்றீர்கள்?

தமிழில் இன்னும் செய்ய வேண்டியன
எத்தனையோ உள்ளன, ஆனால் "ஒரு துரும்பு  கூட கிள்ளப்படவில்லை"
என்பதல்லாம் காட்டா மிக்க மிகையான சாடல். பல தொகுதிகள் அடங்கிய அச்சுக்
கலைக்களஞ்சியங்கள் தமிழில் உள்ளன (அது போல இருக்கும் தொகுதிகளின்
போதாமையை உணர்பவர்களுள் நானும் ஒருவன். பரவலாகக் கிடைக்க வேண்டும்
என்றும் நினைப்பவன்).

>
> ஒரு புதிதாக விசயமோ அல்லது ஆய்வுக்கட்டுரையோ எழுதவேண்டும் என்றால் கடின
> உழைப்பு, அர்பணிப்பு என நிறைய வேண்டும். ஆனால் இப்படி கிரந்த ஒழிப்பு, புள்ளி
> ஒழிப்பு என்று கிளம்புவது, அதற்கு ஒப்புக்கொள்ளாதவர்கள் மீது வசைபாடுவது
> என்பதெல்லாம் மிக எளிது. அரசியல்வாதிகள் போல் உணர்ச்சிகளை தூண்டி விட்டு
> கூட்டம் சேர்ப்பது என்பது அதிலும் எளிது. :-)))
>

கடைசி வரி உங்களுக்கும் பொருந்துமா என நினைத்தேன். முடிவை உங்களுக்கே
விட்டுவிடுகின்றேன்.


> தமிழில் அறிவியல் கருத்துக்களை கொணர்வது, பழம் நூல்களில் இருக்கும் வார்த்தைகளை
> அகராதியில் கொணர்வது என செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்க இது
> சிரிப்பாகவும் அதே நேரத்தில் உணர்ச்சிகளை விடுத்து யோசிக்கும் திறனை முழுவதுமாக
> இழந்து வருகிறோமோ எனவும் தோன்றுகிறது.
>
> நண்பர் பேராசியர் செல்வா இதற்கு பதிலளிப்பார்கள் என உங்களுடன் சேர்ந்து நானும்
> எதிர்பார்க்கிறேன்.

சிந்திப்பு, மானம், அறிவு, பண்பாடு, தமிழ் போன்ற எல்லாவற்றையும்
மிக நன்றாக அறிந்த உங்களைப் போன்றோருக்கு
என்னைப்போன்றவர்கள் என்ன கூற இயலும்?

செல்வா


>
> ராஜசங்கர்
>
> 2009/10/14 Singaravel Jayabarathan <jayabarath...@gmail.com>
>
>
>
> > நல்ல அறிவுரை ராஜசங்கர் அவர்களே.
>
> > பாராட்டுக்கள்
>
> > தமிழ் நாட்டில் சாதாரணத் தமிழில் எழுதுவோர் பலர் !
> > பிழையற்ற தமிழில் எழுதுவோர் சிலர் !!
> > இலக்கணப் பழுதற்று எழுதுவோர் மிக மிகச் சிலர் !!!
>
> > ஆங்கில மொழியில் பிழையுடன் எழுதக் கூசும் தமிழர்  வலைப் பக்கத்தில்
> > எத்தகைய கோரத் தமிழ் நடையில் எழுதி வருகிறார்
> > என்று படித்துச் சொல்லுங்கள்.
>
> > ஆங்கில வலைகள் இப்படியா சிதைந்த ஆங்கிலத்தில் எழுதி வருகின்றன ?   தமிழர்
> > அதைப் பார்த்து வெட்கட்பட வேண்டும்.  கிரந்த எழுத்துக்களைப் பார்த்தல்ல !!!
>
> > நமது பிரச்சனை ஐந்து கிரந்த எழுத்துக்கள் அல்ல !
> > நாட்டுத் தமிழில் நடைத் தமிழில் பிழையற்ற தமிழில் விஞ்ஞானச் சமூக
> > இலக்கியங்களைப் படைப்பது.
>
> > தூய தமிழ் ஆராய்ச்சியாளரைத் தனியாக விட்டுவிடுவோம். அவர்களை யாரும்
> > தடுக்கவில்லை.
>
> > நான் கடந்த 50 ஆண்டுகளாக கிரந்த எழுத்துக்களுடன்  விஞ்ஞானக் கட்டுரைகள்
> > 500 மேல் எழுதிவிட்டேன்.   தமிழ்  மொழி கெடவில்லை.  தமிழ் அழிய வில்லை.  பலர்
> > படித்துப் பயன் அடைந்துள்ளார்.
>
> > அத்தனையும் திண்ணையிலும் (www.thinnai.com) என் வலையிலும் (
> >http://jayabarathan.wordpress.com/) உள்ளன.
>
> > ++++++++++++++++++++++++
>
> > தூய தமிழ்ப் பித்தர் ஒருவர் கீழே எழுதிய புலம்பல் பெயர்களைப்  பார்த்து  அவரை
> > மெச்சி மலர்மாலை சூடுங்கள்.
>
> > நாளைக்கு நமது தமிழ் மாணவர் அகில நாட்டு மேடை அரங்குகளில் இப்படி
> > உலகப் பெயர்களைக் கொலை செய்து உச்சரித்தால் தமிழ் எத்தகைய பிற்போக்கு மொழி
> > என்பதைப்  பார்த்துக் கேலி செய்வார்கள்.
>
> > இந்த விகாரப் பெயர்களை விக்கிபீடியாவில்  வேறு போட  வேண்டும்
> > என்று தர்க்கம் செய்து தமிழரது  மானத்தையும்
> > அவமானப் படுத்தி வருகிறார் பேராசிரியர் செல்வா அவர்கள் !!!!
>
> > சி. ஜெயபாரதன், கனடா
>
> > ++++++++++++++++++
>
> > ///நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள சொற்களுக்கு எத்தனையோ

>
> > முறை தமிழில் எழுதுவது எப்படி என்று காட்டியுள்ளேன். விடாமல்
> > நீங்களும் அதே பட்டியலை இன்னும் இரண்டொன்றைச்
> > சேர்த்து கேட்கின்றீர்கள்.
> > காசுமீரம் என்றால் என்ன ஐயா குறைந்துவிடும்?
>
> > இதோ உங்கள் பட்டியல்:

> > <<காஷ்மீர், ஆஸ்திரேலியா,
> > ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி,
> > கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான்,
> > ஆஃப்கானிஸ்தான்,
> > ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம்,
> > பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின்,
> > ஸ்டிரான்சியம்,
> > ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ்,
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -


Sarves K

unread,
Oct 15, 2009, 1:07:58 AM10/15/09
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
ஆஹா! இவை எல்லாம் தமிழ்க் குறிகள் அல்லவோ.. வள்ளுவர் கூட
பயன்டுத்தியிருக்கிறார்! பலே!

நடைமுறையில் பாதித் தமிழன் வியாபாரம் செய்வதும் உறவாடுவதும்
தெலுங்கர்களோடும் மலையாளிகளோடும் கன்னடர்களோடும் ஹிந்திக்காரர்களோடும்
சிங்களவர்களோடும்.

இங்கே வந்து வாழ்ந்து பார்த்தால் கிரந்தததின் பயன்பாடும் புரியும்.

மிகச் சரி!

சர்வேஸ்

N. Ganesan

unread,
Oct 17, 2009, 9:15:34 AM10/17/09
to தமிழமுதம், Santhavasantham, மின்தமிழ்

(To Santhavasantham & MT members: I just found that there's a ggroup
thamizamutham.
My first mail there. ~ NG)

---------

இக்குழு இருப்பதும், அதில் என் மடல்களை சாந்தி
தமிழ்மன்றத்தில் இருந்து இங்கே அனுப்புவதும் இப்போதுதான்
தெரியும்.

விரிவாக, நண். செல்வாவின் தமிழ்மன்றம் குழுவில் என்கருத்தைச்
சொல்லியுள்ளேன். விரும்பினோர் பார்க்கலாம்.

---------

we can discuss these later in November or
December. And, come up with a list of *actionable* items.

(a) Please Selva's 1999 essay on representing non-Tamil letters:
http://nganesan.blogspot.com/2008/01/1999.html

(b) Pl. see Vinodh's Thoorihai converter document on
the use of diacritics in transliteration.
http://tamilcc.org/thoorihai/Manual.pdf

(c) In my thinking on these issues for about 30 years,
my summary views can be expressed as:

(i) Tamil typewriter keyboard needs to be deprecated in Tamil Nadu
Of course, people who know it can use it.
But a keyboard from Phoetic class such as InScript, Thunaivan,
TamilNet99
should be taught in schools. That is already achieved
TamilNet99 is the standard in TN, Singapore, etc.,
Sri Lanka Tamil 2007 keyboard also is phonetic only.
These phonetic keyboards get rid of the bias towards the the ligated
u/uu uyirmey saarbezhuththu. And, teaches that u/uu uyirmey letters
also can come from just one key just like aa, i, ii, e, ee, o, oo & au
keys.

Once Phonetic keyboards are the Standard among Tamil typists in India
and abroad, Step (ii) will be easier to make for teaching of Tamil
to the masses.

(ii) As importance for ligated u/uu uyirmey letters go away when
Phonetic class of keyboards are taught for generations of
students, the u/uu ligation splitting will be easier to achieve.
Please read the u/uu non-ligation way: we can simply use the
grantha u & uu uyirmey glyphs. To save on the line length,
grantha u-glyph can be rotated 90 degreesL

http://nganesan.blogspot.com/2009/08/ezhuttu-korppu.html
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274&hl=en#

(iii) To make Tamil script be written also with diacritics
to transliterate & transcribe non-Tamil words correctly.
SO that other language web pages can be read in Tamil script, ...

We can achieve the diacritics if combining diacritics
are allowed upon Tamil letters:
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

Hope this helps,
N. Ganesan

தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,

எனக்கு கிரந்தம் பற்றித் தெரியும். தமிழர்கள் பலரைப் போலவே.
அதனை எழுத பாடுபட்டும் வருகிறேன் என்பது உலகறியும்.

தமிழ் அல்லாத எழுத்துக்களுக்கு தமிழ் எழுத்தில்


எழுத ஒரு வழிமுறையும் ஏற்படுத்த வேண்டியது கடமை.

அதைச் செய்கிறோம். அவ்வளவுதான்.

நீங்கள் கிரந்தத்தில் எழுதுங்கள். பிரச்சினை இல்லை.
அதனை தமிழ் எழுத்தில் படிக்க விஞ்ஞான பூர்வமான

முறையைக் கொண்டுவர வேண்டும்.


தமிழ் எழுத்து என்பவை யாவை? சமணர் தொல்காப்பியர்

தந்த முதற் சூத்திரம் காண்க.

காலப் போக்கில், தமிழ் வளர,
(அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று, தமிழ்99 போன்றவை
வேரூன்றல் வேண்டும். சிங்கப்பூர், தமிழ்நாடு அரசு
ஏற்றுக்கொண்ட தமிழ்நெட்99.

(ஆ) உகர, ஊகார உயிர்மெய்கள் உடைதல் வேண்டும்:
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html

(இ) தமிழ்மொழியில் அயல்மொழி எழுத்துக்களை
எழுத முறையான டையாக்கிரிட்டிகளை நிர்ணயம்
செய்து யூனிகோடில் எழுதும்வகை செய்தல் வேண்டும்.

தமிழ் எழுத்துக்கள் மாற்றங்களை ஊன்றிப் படித்தால்
இவற்றின் அத்தியாவசியம் புலப்படும்

காலப்போக்கில் செய்யலாம்.

தீபாவளி வாழ்த்துக்களுடன்,
நா. கணேசன்

உசாத்துணை:

http://groups.google.com/group/tamilmanram/msg/694052ead5c81578

http://groups.google.com/group/tamilmanram/msg/bfa813813ccf2cab

http://groups.google.com/group/tamilmanram/msg/9d9e4adc5048b773

http://www.infitt.org/tscii/archives/msg00203.html

# From: George Hart <gh...@socrates.berkeley.edu>
# Date: Tue, 23 Sep 1997 08:17:47 -0800
# Content-Length: 1783
# Content-Type: text/plain; charset="us-ascii"
# Reply-To: George Hart <gh...@socrates.berkeley.edu>,

webmast...@tamil.net
# Sender: owner-webmast...@tamil.net

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 9:36:55 AM10/17/09
to மின்தமிழ்
On Oct 13, 2:21 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,
>

ஐயா கணேசர்

பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.

http://www.tamilvu.org/coresite/html/cwtxtbok.htm இங்கே சென்று A B C
Of TAMIL , Cetificate Course Basic lessons Model book போன்ற
புஸ்தகங்களை இறக்குமதி செய்து பாருங்கள். தமிழ் இலக்கணம் என்ன என்று
`அதிகாரபூர்வமாக` தெரியும்.

உங்கள் மனப்பான்மை கத்தோலிக்கர்களை நினைவூட்டுகிறது. கத்தோலிக்கர்கள் ஒரு
புறம் ஒருகுழந்தை (அதாவது ஏசு) பெண் கர்பத்தினால் ஏற்படவில்லை என
நம்பவேண்டும் அதே சமயம் அவரக்ள் விஞ்ஞானியோ, மருத்துவரோ கூட இருக்கலாம்.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 17, 2009, 9:50:50 AM10/17/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

I saw your reference & happen to know its author, T. B.
Siddhalingaiah, a Kannada Virasaivaite
& Tamil scholar. He clearly says Tamil letters as 30 (defined in
Nannuul for example).

There is a section for Grantha letters & TBS clearly says they are for
Sanskrit & foreign words.

Tamil letters are just 30 in number per Tamil grammars. And, there can
be a scientific way to represent
all non-Tamil letters using diacritics. English letters do use
diacritics, so also Tamil letters can.

N. Ganesan

amachu

unread,
Oct 17, 2009, 10:01:00 AM10/17/09
to mint...@googlegroups.com
On Sat, 2009-10-17 at 06:15 -0700, N. Ganesan wrote:
> நீங்கள் கிரந்தத்தில் எழுதுங்கள். பிரச்சினை இல்லை.
> அதனை தமிழ் எழுத்தில் படிக்க விஞ்ஞான பூர்வமான
> முறையைக் கொண்டுவர வேண்டும்.

ஆங்கில பூர்வமான முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது பொருத்தமாக இருக்கும்.


--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Oct 17, 2009, 10:02:06 AM10/17/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, anb...@googlegroups.com, thami...@googlegroups.com

On Oct 17, 8:36 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> On Oct 13, 2:21 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,
>
> ஐயா கணேசர்
>
> பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
> எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.
>

தொல்காப்பியரும், நன்னூல் தந்த பவணந்தி முனியுமா அப்பட்ட பொய்
சொல்கிறார்கள்?

காப்பியனும், கொங்கின் பவணந்தியும் “இதுதான் தமிழ் எழுத்துகள்”
என்பது அப்பட்டப் பொய்யானால், யான் பறைவதும் மெய் அல்ல.

-----------------------

இன்னொன்று: எல்லைக் காந்தி பற்றி எழுதுகிறீர்:
”பல வருடம் பாகிஸ்தானிய சிரையில் வாசம் செய்தார்”

தமிழ் எழுத்துக்கள் 30 என்றார்களே - காப்பியரும், நன்னூலாரும்.
அவர்கள் வரையறுத்த தமிழ்:
சிரை-:சிறை-, குரை-:குறை-, இரை-:இறை-, மரை-:மறை-, ....
இவற்றில் எல்லாம் தமிழில் வேறுபாடு காட்டுகிறது.

என்றைக்கு காப்பியனின், பவணந்தியின் அதிகாரம்
தமிழ் எழுத்தில் போனது என்று விளங்கவில்லை.
தொழில்நுட்பம் அவர்கள் தரும் தமிழ் எழுத்து 30-க்கு
முதன்மை அளித்து பிறமொழி எழுத்தையும்
எழுத வழிவகை தருகிறது. அதைக் குறிக்கவே என் மடல்.

நா. கணேசன்

> http://www.tamilvu.org/coresite/html/cwtxtbok.htm இங்கே சென்று A B C

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 10:07:10 AM10/17/09
to மின்தமிழ்
அதுதான் சொல்கிறேன், நன்னூல் 700-800 ஆண்டு முன்னால் எழுதப்பட்டது அதை
இலக்கண சரித்திர நோக்கில் பார்க்காமல், அதுதான் இலக்கணம் என பார்ப்பது
தமிழர்களிடையே சிந்தனை அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிரது.

நன்னூலை ஓரம் கட்டி தமிழர்கள் செயல்முறையில் எப்படி தங்கள் மொழியை
பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என அளவிட்டால், தற்கால இலக்கணம்
புலனாகும்.

விஜயராகவன்

> N. Ganesan- Hide quoted text -

N. Ganesan

unread,
Oct 17, 2009, 10:08:24 AM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 9:07 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> அதுதான் சொல்கிறேன், நன்னூல் 700-800 ஆண்டு முன்னால் எழுதப்பட்டது அதை
> இலக்கண சரித்திர நோக்கில்  பார்க்காமல், அதுதான் இலக்கணம் என பார்ப்பது
> தமிழர்களிடையே சிந்தனை அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிரது.
>
> நன்னூலை ஓரம் கட்டி தமிழர்கள் செயல்முறையில் எப்படி தங்கள் மொழியை
> பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் என  அளவிட்டால், தற்கால இலக்கணம்
> புலனாகும்.
>

தற்காலம் எழுதும் எல்லா எழுத்தையும் தமிழ் 30 எழுத்தால் மீக்குறியிட்டு
எழுதலாம்.

amachu

unread,
Oct 17, 2009, 10:13:55 AM10/17/09
to mint...@googlegroups.com
On Sat, 2009-10-17 at 06:15 -0700, N. Ganesan wrote:
> காலப் போக்கில், தமிழ் வளர,
> (அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று, தமிழ்99 போன்றவை
> வேரூன்றல் வேண்டும். சிங்கப்பூர், தமிழ்நாடு அரசு
> ஏற்றுக்கொண்ட தமிழ்நெட்99.

amma - அம்மா என்ற முறை சங்கடம் தான். நாளை amma அப்படியே இருந்து விட்டு
போகட்டும் என்று தோன்றும் நிலை ஏற்படலாம்.

நேரு இந்திய மொழிகளெல்லாம் ரோமன் எழுத்துருவில் இருக்க வேண்டும் என்று
எப்போதோ தெரிவித்தாராம். உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன்.

தமிழ்99 - இலக்கண முறைப்படியானது. உயிரும் மெய்யும் உயிர் மெய் என்ற
விதிப்பற்றியது.

சிறுவர்களுக்கு தமிழ் எழுதக் கற்பிக்கும் போது உயிர் எது மெய் எதுவென்று
கற்பிக்கப்படுவது கிடையாது. க போட்டு கால் போட்டால் கா, கொம்பு போட்டால் கி
என்று பழக்கப்படுத்துவதுதான் வழக்கம்.

சின்னக் குழந்தை வீட்டில் கணினியை அணுகும் போது தமிழ்99 எவ்வளவு தூரம்
எடுபடும் என்பதில் சற்று ஐயம் இருக்கிறது.

ஆனால் தமிழ் தட்டச்சு முறை (யளனகப) எடுபடும். ஆரம்பத்தில் கடினமாக
இருந்தது. இப்போது எந்த கணினியைக் கண்டாலும் எழுத்துக்கள் பொறிக்கப்படாமலே
அம்முறையிலேயே தட்டெழுதுகிறேன்.

குனு லினக்ஸ் பயன்படுத்திவோருக்கு பழக்கப்படுத்த இன்டிக் ஆன்ஸ்கிரின்
கீபோர்டு போன்ற பயன்பாடுகளும் உள்ளன. விரைவில மாணவர்களுக்கு பழக்குவிக்கும்
புதிய மென்பொருள்கள் உருவாக்குவோம்.

இரண்டும் இருப்பதே ஏற்பு. தமிழ்99 க்கு பரீட்சார்த்தமான விடை காணவேண்டும்.
பள்ளிகளுக்கும் வீட்டில் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் எவ்வளவு விரைவில் பிடித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்த பின்னரே
முடிவு கொள்ள வேண்டும்.

--

ஆமாச்சு

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 10:14:50 AM10/17/09
to மின்தமிழ்
On Oct 17, 3:02 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 17, 8:36 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
> > எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.
>
> தொல்காப்பியரும், நன்னூல் தந்த பவணந்தி முனியுமா அப்பட்ட பொய்
> சொல்கிறார்கள்?
>
> காப்பியனும், கொங்கின் பவணந்தியும் “இதுதான் தமிழ் எழுத்துகள்”
> என்பது அப்பட்டப் பொய்யானால், யான் பறைவதும் மெய் அல்ல.


காப்பியனும், பவணந்தியும் இறந்து பல பல நூற்றாண்டுகள் ஆயின. அவர்கள்
இலக்கணமும் இறந்து பல நூறாண்டுகள் ஆகிறது. பவணந்தியை நம்பி தற்கால தமிழை
அணுகுவது, மண் குதிரையை நம்பி ஆற்றை கடப்பதாகும்.

`யான்` `பறைவது` என்பது ரொம்ப archaic Tamil. தற்கால தமிழிலேயெ `நான்
சொல்வது` என எழுதுங்கள்.

யாராவது ஆங்கிலத்தில் சாசர் காலத்து ஆங்கிலத்தை எடுகோள்
காண்பிக்கின்றனரா? ஆங்கிலத்தில் Thou , doest போன்ற சொல்லாடல்கல் மைறந்து
300-400 ஆண்டுகள் ஆகின்றன. அதை இக்காலத்தில் பயன்படுத்தினால்
சிரிப்புதான் வரும்

விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 17, 2009, 10:26:06 AM10/17/09
to மின்தமிழ்

ஆம். சிங்கப்பூர் கலைமணி ரத்தினசாமி (தமிழ் ஆசிரியர், கணி நுட்பியலார்)
அறிவித்ததுபோல தமிழ்99 உயிர்மெய்க் குறிகளை தனியாய்க் காட்டாதது
ஒரு பெரிய குறைபாடு. ஸ்ரீ லங்கா தமிழ் 2007 விசைப்பலகை பார்த்தீர்களா?
அது உயிர்மெய்க் குறிகளை தனியே கொடுத்துள்ளது. இல்லாவிட்டால்
குழந்தைகளுக்குப் பயிற்றச் சிரமம்.

கொலோன் கருத்தரங்கில் இண்பிட் குழுவினருடன்,
மோகன் தம்பேயின் இன்ஸ்க்ரிப்ட், ரவி பாலின் துணைவன், தமிழ்99, கணியன்,
... இன்ன பிற ஒலிப்பியல் (போனெடிக்) விசைப்பலகைகளின்
சாதக, பாதகங்களை ஆராய்ந்து ஓர் ஆய்வேடு தயாரிக்க வேண்டலாம்.

தமிழ்99 என்னென்ன ஏற்றவேண்டும் அக்குழுவில் பேசுவோமே.

-------


Sankar wrote:
[Begin Quote]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் கணினியைப் பற்றிய பாடம்
ஆரம்பப் பள்ளியிலேயே நடக்கிறது என்று அறிகிறேன். ஊராட்சி/நகராட்சி/அரசுப்
பள்ளிகளைப் பற்றித் தெரியவில்லை, போதிய வசதியின்மையால் கணினிப் பாடம்
இல்லாமல் இருக்கலாம்.

கணினிப் பாடத்தில் தமிழில் தட்டச்சுச் செய்வதை கண்டிப்பாகச் சேர்க்கச்
சொல்ல வேண்டும். அமெரிக்காவில் வார இறுதியில் இரண்டு மணிநேரம் மட்டுமே
நடத்தப் படும் தமிழ்ப் பள்ளிகளில் தமிழை சரளமாக/பேசத் தெரியாத
தமிழர்களின் பிள்ளைகள் தமிழில் தட்டச்சுச் செய்வதை மிக எளிதாகக் கற்றுக்
கொள்கிறார்கள். வீட்டுப் பாடங்களை மின்னஞ்சலில் அனுப்புகிறார்கள். IM,
Facebook போன்றவற்றில் தமிழைப் பயன்படுத்தச் ஊக்குவிக்கிறோம். எனவே
தமிழகத்தில் இது மிக எளிது. ஆங்கிலப் பயிற்று மொழியைக் கொண்டிருக்கும்
மாணவர்கள் கூட தமிழைத் தட்டச்சுச் செய்ய ஊக்குவிக்கப் பட்டால், தமிழைப்
படிக்க அதிக ஆர்வம் காட்டக்கூடும்.
[End Quote]

It is very important that Tamil inputting gets introduced in Tamil
Nadu schools.
While roman-letter typing ties Tamil to English, and the Typewriter
keyboard
is not scientific for uyirmey letters as they typewriter keyboard does
not make it explicit that u/uu uyirmeys are dependent letters called
as Caarbezuththu in Nannuul grammar, some type of
Phonetic keyboard, for example the official Tamil99 keyboard, should
be
introduced in schools and colleges.

For schools in the Western countries, we can introduce a keyboard
looking at all the features of the existing Phonetic keyboards
such as InScript, Thunaivan, Tamil99, SL Tamil 2007, Kaniyan, ...
Even yesterday, there was a Tamil phonetic keyboard:
http://www.thehindu.com/2009/10/15/stories/2009101555010800.htm
(Mahesh, M.D., sent me the keyboard layout & it is also a Phonetic
one.)
See Mahesh explaining his for Hindi, ...
http://vodpod.com/watch/2179686-freedom-to-communicate-mahesh-jayachandra

Here is Mohan Tambe who introduced Phonetic keyboards
in India back in early 1980s. Dr. Mohan lives in Bangalore:
http://www.iitkalumni.org/daa/DAAProfile2.asp?id=36

http://www.livemint.com/2009/08/14212538/Freedom-to-communicate--Mahes.html?pg=2
"India thought it had the problem licked when Mohan Tambe came up with
the Inscript keyboard in the 1980s. Tambe came up with the idea for
the keyboard at the Indian Institute of Technology (IIT), Kanpur, and
perfected it at India’s then freshly minted Centre for Development of
Advanced Computing, or C-DAC. Inscript, a phonetic keyboard, forms the
basis of most local language keyboards currently in use in the
country.

Such keyboards, though, require users to perform multiple operations
before they can type a particular character. Given the level of
complexity involved, it could take anyone between six and nine months
to be trained in using an Inscript keyboard. That may not seem like
much, and, indeed, one reason why there hasn’t been much progress in
developing alternatives to the Inscript keyboard could simply be that
many scientists and the government thought they had this particular
problem sorted. "

Now we have some good Phonetic keyboards, each meeting some design
criteria.

We can have an American Phonetic Tamil keyboard that can be used in
Tamil schools
in US, Canada, Europe, ...
The key question facing a Tamil Phonetic designer is: which is more
important,
an easy to memorize layout,
or one that is organized by character frequency? Shouldn’t the most
used keys be in the easiest-to-access locations, whereas the uncommon
ones are tucked away more?

Obviously our choice for American schools teaching Tamil
is the one which students (and adults) can memorize and remember
easily.
We will produce a Phonetic keyboard design, after consultation with
all IT and Tamil experts here. We can start with Thunaivan keyboard
(Prof. Sp. Thinnappan said that Ravindran Paul designed it in his
student days)
& use vallinam, mellinam, iDaiyinam rows. I would like to include
separate keys for Vowel signs (with Shift key on corresponding vowels)
as the importance of the young students having a separate vowel sign
key
graphically helps (a point stressed by Mr. Kalaimani), the auto-doting
and ka + a = kaa logic can be carried over from T99 keyboard etc.,
It means that, in this keyboard, whether one types vowel sign by Shift
key
or just press the vowel key we will have the corr. uyirmey letter.
If the vowel sign is needed as a stand alone character for pedagogical
purposes, the VS keys can be employed. Nowadays, vowel signs
can be shown without dotted circles in Unicode.

We can discuss on the easy-to-memorize Tamil Phonetic keyboard
later and offlline.

Thanks,
N. Ganesan

வினோத் ராஜன்

unread,
Oct 17, 2009, 4:03:47 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 7:14 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Oct 17, 3:02 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Oct 17, 8:36 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
> > > எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.
>
> > தொல்காப்பியரும், நன்னூல் தந்த பவணந்தி முனியுமா அப்பட்ட பொய்
> > சொல்கிறார்கள்?
>
> > காப்பியனும், கொங்கின் பவணந்தியும் “இதுதான் தமிழ் எழுத்துகள்”
> > என்பது அப்பட்டப் பொய்யானால், யான் பறைவதும் மெய் அல்ல.
>
> காப்பியனும், பவணந்தியும் இறந்து பல பல நூற்றாண்டுகள் ஆயின. அவர்கள்
> இலக்கணமும் இறந்து பல நூறாண்டுகள் ஆகிறது.
>

வினோத் ராஜன்

unread,
Oct 17, 2009, 4:05:12 PM10/17/09
to மின்தமிழ்
தமிழ்99, இன்ஸ்கிரிப்ட் இத்யாதி இத்யாதி ஆகிய்வற்றின் மீது எந்த
காலத்திலும் உருப்படியாக ஈடுபாடு இருந்ததில்லை, அவை பரவலாகுமா என்றும்
தெரியவில்லை (முன்னர் தமிழ் தட்டச்சு கற்று, கணினியில் தான் எளிதாக
ஃபோனட்டிக் விசைப்பலகை உள்ளதே, ஏன் இந்த வீன் வேலை என்று அதை பாதியிலேயே
டீலில் விட்டு விட்டேன் என்பது வேறு விஷயம் :-/ )

99.99% எல்லா விசைப்பலகைகளும் ஆங்கிலத்தோடு தான் வருகின்றன, அதற்கு தமிழ்
லே அவுட் ஸ்கின் வாங்கிப்போடும் அளவுக்கு நம் மக்களுக்கு (ஏன், எனக்கே)
பொறுமை இருப்பதில்லை.

முக்கால்வாசி பேர், ஒற்றை விரல் நாட்டியம் செய்பவர்கள் (நன்றி
சீதாலக்ஷ்மி :-) ) தான். கீ போர்டை பார்த்து பார்த்து தான்
அடிக்கிறார்கள், அவர்களுக்கு ஃபோனட்டிக் கீ போர்டு தான் வசதிப்பட்டு
வரும். அது தான் யதார்த்தம். (என் கீபோர்டில் எழுத்துக்கள் எல்லாமே
அழிந்து விட்டதால், என்னுடைய கணினியின் ஏகபோக உரிமையை நான் தான் கைவசம்
வைத்திருக்கிறேன். அம்மாவிடம் தினமும் இதற்காக திட்டுவாங்குகிறேன் என்பது
கூடுதல் செய்தி ;-) )

மிக அதிகமாக பயன்படக்கூடிய ஆங்கில தட்டச்சையே கற்காதவர்களை, இப்படி
தமிழ்99 தட்டச்சு கற்றுக்கொள் என்று வதைப்பது மகாபாவம் !!.

V

> See Mahesh explaining his for Hindi, ...http://vodpod.com/watch/2179686-freedom-to-communicate-mahesh-jayacha...


>
> Here is Mohan Tambe who introduced Phonetic keyboards
> in India back in early 1980s. Dr. Mohan lives in Bangalore:http://www.iitkalumni.org/daa/DAAProfile2.asp?id=36
>

> http://www.livemint.com/2009/08/14212538/Freedom-to-communicate--Mahe...


> "India thought it had the problem licked when Mohan Tambe came up with
> the Inscript keyboard in the 1980s. Tambe came up with the idea for
> the keyboard at the Indian Institute of Technology (IIT), Kanpur, and
> perfected it at India’s then freshly minted Centre for Development of
> Advanced Computing, or C-DAC. Inscript, a phonetic keyboard, forms the
> basis of most local language keyboards currently in use in the
> country.
>
> Such keyboards, though, require users to perform multiple operations
> before they can type a particular character. Given the level of
> complexity involved, it could take anyone between six and nine months
> to be trained in using an Inscript keyboard. That may not seem like
> much, and, indeed, one reason why there hasn’t been much progress in
> developing alternatives to the Inscript keyboard could simply be that
> many scientists and the government thought they had this particular
> problem sorted. "
>
> Now we have some good Phonetic keyboards, each meeting some design
> criteria.
>
> We can have an American Phonetic Tamil keyboard that can be used in
> Tamil schools
> in US, Canada, Europe, ...
> The key question facing a Tamil Phonetic designer is: which is more
> important,

> an ...
>
> read more »

வினோத் ராஜன்

unread,
Oct 17, 2009, 4:06:25 PM10/17/09
to மின்தமிழ்
> பவணந்தியை நம்பி தற்கால தமிழை
> அணுகுவது, மண் குதிரையை நம்பி ஆற்றை கடப்பதாகும்.

உண்மை தான்.

லட்டு, லுங்கி என்று எல்லாம் எழுதுவது தற்காலத்தமிழ் என்று +2 தமிழ்
பாடப்புத்தகமே சொல்கிறது !

ஆனால் பழமைவாதிகள் இன்னும் இலட்டு, உலுங்கி, உருபாய், இடாக்குடர்,
இசுடாலின் என்றெல்லாம் விசித்திரமாக எழுதுவார்கள். கேட்டால் தமிழை
காப்பாற்றுகிறேன் என்று நீண்ட உளரல்கள் வரும்.

நீங்களும் நானும் தான் வேலை வெட்டி இல்லாமல் இதை அவ்வப்போது ரீ-
டெலிகாஸ்ட் செய்துகொண்டிருக்க வேண்டும்.

தமிழை காப்பாற்ற பிறந்த(தாக நினைத்துக்கொண்டிருக்கும்) அவதார
புருஷர்களுக்கு இது புரியவே புரியாது. அவர்கள் தவறில்லை, பாவம், ஆயிரம்
வருடங்களுக்கு முன்னார் பிறக்க வேண்டியவர்கள், ஏதோ Time Warpஇல் சிக்கி
நிகழ்காலத்துக்கு வந்துவிட்டார்கள்.

----

BTW NG,

Diacritic Tamil = Pseudo Grantha.

Diacritics if at all use should complement the present Grantha system,
not replace them.

A lot have been said about this earlier under various threads.

IMHO Your Ad Infinitum postings about Diacritics Tamil replacing
Grantha, won't do much good.

As Amachu (and me too, in an earlier thread) pointed out, it all boils
down to Sectarianism and Hatred.

I always Imagine, how would the (present) people have reacted if Short-
e, Short-o (as defined with pulli, in classical grammar texts) were
reformed done by a Brahmin Sanskrit Scholar ? May be something like,
Aryan Slavery,Brahminist Intrusion, Sanskritization, Destruction of
Tamil, blah blah blah. Anyway, by the grace of Yahweh, instead we had
a Christian preacher doing that :-| .

May be it got to do something with, the Dravidianists pleading for
British Slavery, as opposed to Independence [for Madras Presidence
a.k.a The Hypothetical Dravida Nadu]. Don't ask me !, I leave the rest
to Yahweh and TNT'ians :-)

V

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 17, 2009, 4:10:47 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 3:06 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > பவணந்தியை நம்பி தற்கால தமிழை
> > அணுகுவது, மண் குதிரையை நம்பி ஆற்றை கடப்பதாகும்.
>
> உண்மை தான்.
>
> லட்டு, லுங்கி என்று எல்லாம் எழுதுவது தற்காலத்தமிழ் என்று +2 தமிழ்
> பாடப்புத்தகமே சொல்கிறது !
>
> ஆனால் பழமைவாதிகள் இன்னும் இலட்டு, உலுங்கி, உருபாய், இடாக்குடர்,
> இசுடாலின் என்றெல்லாம் விசித்திரமாக எழுதுவார்கள். கேட்டால் தமிழை
> காப்பாற்றுகிறேன் என்று நீண்ட உளரல்கள் வரும்.
>
> நீங்களும் நானும் தான் வேலை வெட்டி இல்லாமல் இதை அவ்வப்போது ரீ-
> டெலிகாஸ்ட் செய்துகொண்டிருக்க வேண்டும்.
>
> தமிழை காப்பாற்ற பிறந்த(தாக நினைத்துக்கொண்டிருக்கும்) அவதார
> புருஷர்களுக்கு இது புரியவே புரியாது. அவர்கள் தவறில்லை, பாவம், ஆயிரம்
> வருடங்களுக்கு முன்னார் பிறக்க வேண்டியவர்கள், ஏதோ Time Warpஇல் சிக்கி
> நிகழ்காலத்துக்கு வந்துவிட்டார்கள்.
>

ஆமாம். கிரந்தத்தை விட்டால் எப்படி தமிழ் எழுத்து இருக்க முடியும்?

நா. கணேசன்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 17, 2009, 5:43:39 PM10/17/09
to மின்தமிழ்
> BTW NG,

> Diacritic Tamil = Pseudo Grantha.

Vinodh,

BTW, I just saw your thoughts on T99 keyboard, enjoyed them :)

----

yes, pseudo or generalized is a term we use daily in Engineering,
Unicode etc.,

They do have uses - see pseudoinverse used in FFT analysis of digital
signal processing
all the time (Cooley-Tuley algrithm which ushered in fast digital
analysis, foundation of our age).
http://en.wikipedia.org/wiki/Block_matrix_pseudoinverse
Later, it was realized Gauss himself has found it.

In structural dynamics, the modal shapes "eigen vectors" are
"generalized" (or "pseudo") Fourier
coefficients, isn't it?

In the world of Unicode, what we have is "genaralized" or "extended"
Indic or Latin scripts
capable of representing many languages. I agree that "extended" Tamil
script with diacritics
is one way to handle non-Tamil scripts incl. Grantha. I don't see
anything wrong in it,
in fact your own Thoorihai code, has pseudo-Grantha stuff a lot. 2,3,4
could be one way
& another with underlines.

If we put aaytham in front of p, k, c letters they become respective
fricatives f, h, & s.
Instread, we can put an short underline for ப, க, ச to write f, h &
s. ...

N. Ganesan

PS: I will apply Tolkappiyam grammar rule to produce short e & o in
Grantha as you know.

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 5:57:37 PM10/17/09
to மின்தமிழ்
On Oct 17, 9:06 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> தமிழை காப்பாற்ற பிறந்த(தாக நினைத்துக்கொண்டிருக்கும்) அவதார
> புருஷர்களுக்கு இது புரியவே புரியாது. அவர்கள் தவறில்லை, பாவம், ஆயிரம்
> வருடங்களுக்கு முன்னார் பிறக்க வேண்டியவர்கள், ஏதோ Time Warpஇல் சிக்கி
> நிகழ்காலத்துக்கு வந்துவிட்டார்கள்.

தமிழர்கள் இயல்பாகவே ரொம்ப கன்சர்வேடிவ். `முன்னோர்கள் சொன்னார்கள் அது
நாகரீகம்` என்பது அடிப்படை நம்பிக்கை; நம் கண்முன்னாடி காண்பதெல்லாம் எதோ
மாயம் என்ற பிரமை. உலகம் எப்படியோ கால வண்டியில் பின்னோக்கி
`முன்னோர்கள் காலத்தி்ற்கு` பின் செல்லும் என்ற உள்ளூர விசுவாசம்.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 6:42:34 PM10/17/09
to மின்தமிழ்
On Oct 17, 10:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> yes, pseudo or generalized is a term we use daily in Engineering,
> Unicode etc.,
>
> They do have uses - see pseudoinverse used in FFT analysis of digital
> signal processing
> all the time (Cooley-Tuley algrithm which ushered in fast digital
> analysis, foundation of our age).http://en.wikipedia.org/wiki/Block_matrix_pseudoinverse

> Later, it was realized Gauss himself has found it.

கணேசனாரே

pseudo என்பதின் அர்த்தத்தை தலைகீழாக்கி எதோ நல்லது போல எழுது
விட்டீர்கள். pseudo என்பதற்கு அகராதி இந்த பொருள் கொடுக்கின்ரது

pseudo-
Use pseudo- in a Sentence
See web results for pseudo-
See images of pseudo-
a combining form meaning “false,” “pretended,” “unreal,” used in the
formation of compound words (pseudoclassic; pseudointellectual): in
scientific use, denoting close or deceptive resemblance to the
following element (pseudobulb; pseudocarp), and used sometimes in
chemical names of isomers (pseudoephedrine).

Origin:
< Gk, comb. form of pseuds false, pseûdos falsehood

False; deceptive; sham: pseudoscience.

இந்த பொருளில்தான் Diacritic Tamil = Pseudo Grantha. என்பதை ஏற்றுக்


கொள்ள வேண்டும்.

தினசரி தமிழில் சொன்னால், மூக்கை நேராக தொடாமால், ஏன் தலையை சு்ற்றி
வளைத்து தொட வேண்டும்


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 17, 2009, 7:44:15 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 5:42 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> தினசரி தமிழில் சொன்னால், மூக்கை நேராக தொடாமால், ஏன் தலையை சு்ற்றி
> வளைத்து தொட வேண்டும்
>

In computer science, extended or generalized script is what is
Diacritic Tamil.

I understand that you may not like diacritic Tamil as it gives primacy
to Tamil letters.

NG

> விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 17, 2009, 7:59:27 PM10/17/09
to மின்தமிழ்

What is the definition of aTamil letter and 'primacy' to 'Tamil'
letter? Anything used by Tamils at large in written medium to
transcribe Tamil speech is a Tamil letter.

Take any ordimary Tamilbook, newspaper or dictionary and tell me which
are not 'Tamil' letters

Kindly give a rational definiton instead of hanging from the coat
tails of 'Tholkappiyam'.


Vijayaraghavan

N. Ganesan

unread,
Oct 17, 2009, 8:24:33 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 6:59 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Oct 18, 12:44 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > On Oct 17, 5:42 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > தினசரி தமிழில் சொன்னால், மூக்கை நேராக தொடாமால், ஏன் தலையை சு்ற்றி
> > > வளைத்து தொட வேண்டும்
>
> > In computer science, extended or generalized script  is what is
> > Diacritic Tamil.
>
> > I understand that you may not like diacritic Tamil as it gives primacy
> > to Tamil letters.
>
> What is the definition  of aTamil letter and 'primacy' to 'Tamil'
> letter? Anything used by Tamils at large in written medium to
> transcribe Tamil speech is a Tamil letter.
>

Tamil letters are 30, as per its grammar. The rest are English,
Grantha letters & so on.

There is an easy way to represent any non-Tamil letter using
diacritics.

Grantha & English letters are not Tamil letters, by definition.

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 17, 2009, 8:38:28 PM10/17/09
to மின்தமிழ்

On Oct 17, 6:59 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:

> Kindly give a rational definiton instead of hanging from the coat
> tails of 'Tholkappiyam'.
>
> Vijayaraghavan

கிரந்தம் இன்றேல் தமிழுக்கு உய்தி இல்லை என்று நிரூபிக்க நீங்கள்
பிரயத்தனப்படுவது வெள்ளிடைமலை.

"Tamil Arignars can go to hell. " - உங்கள் அருள்வாக்கு.

இன்னும் தமிழ் இலக்கணம் தெரிந்தவர்கள், எது தமிழ் எழுத்து
என்று அறிந்தோர் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Oct 17, 2009, 8:43:48 PM10/17/09
to மின்தமிழ்

ஓ!! அப்படியா!

> விஜயராகவன்

Geetha Sambasivam

unread,
Oct 17, 2009, 9:31:52 PM10/17/09
to mint...@googlegroups.com
//அவர்கள் தவறில்லை, பாவம், ஆயிரம்

வருடங்களுக்கு முன்னார் பிறக்க வேண்டியவர்கள், ஏதோ Time Warpஇல் சிக்கி
நிகழ்காலத்துக்கு வந்துவிட்டார்கள்.//



2009/10/18 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 17, 2009, 9:49:37 PM10/17/09
to மின்தமிழ்


> //அவர்கள் தவறில்லை, பாவம், ஆயிரம்
> வருடங்களுக்கு முன்னார் பிறக்க வேண்டியவர்கள், ஏதோ Time Warpஇல் சிக்கி
> நிகழ்காலத்துக்கு வந்துவிட்டார்கள்.//
>

> [?][?][?][?][?]
>

வினோத் சொல்வார்: எழுத்து வடிவம் ‘கல்ச்சுரல் ரெலிக்’ அப்படியே
இருக்கணும் என்று.
1960களி எழுதிய றா,ணா,னா,ளை, ... மீண்டுமா கொண்டுவரமுடியும்?

இந்தியாவிலேயே தமிழுக்குத் தான், பாணினிக்கு அப்புறம்,
இலக்கணம் எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள எழுத்துமுறை ஐந்திரம் தொடர்பானது.
”மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி” என்று வரையறுத்த
’பண்பாட்டுச் சின்னம்’ ஏன் கைவிடப் பட வேண்டும்?

அதற்கும் எளிமையாய் ஒரு தொழில்நுட்ப விடை கணியுலகில்
கிடைக்கிறபோது என்பதே என் கேள்வி.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 12:28:51 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
தமிழ்99, இன்ஸ்கிரிப்ட்  இத்யாதி இத்யாதி ஆகிய்வற்றின் மீது எந்த

காலத்திலும் உருப்படியாக ஈடுபாடு இருந்ததில்லை, அவை பரவலாகுமா என்றும்
தெரியவில்லை (முன்னர்  தமிழ் தட்டச்சு கற்று, கணினியில் தான் எளிதாக
ஃபோனட்டிக் விசைப்பலகை உள்ளதே, ஏன் இந்த வீன் வேலை என்று அதை பாதியிலேயே
டீலில் விட்டு விட்டேன் என்பது வேறு விஷயம் :-/ )

99.99% எல்லா விசைப்பலகைகளும் ஆங்கிலத்தோடு தான் வருகின்றன, அதற்கு தமிழ்
லே அவுட் ஸ்கின் வாங்கிப்போடும் அளவுக்கு நம் மக்களுக்கு (ஏன், எனக்கே)
பொறுமை இருப்பதில்லை.

முக்கால்வாசி பேர், ஒற்றை விரல் நாட்டியம் செய்பவர்கள் (நன்றி
சீதாலக்ஷ்மி :-) ) தான். கீ போர்டை பார்த்து பார்த்து தான்
அடிக்கிறார்கள், அவர்களுக்கு ஃபோனட்டிக் கீ போர்டு தான் வசதிப்பட்டு
வரும். அது தான் யதார்த்தம். (என் கீபோர்டில் எழுத்துக்கள் எல்லாமே
அழிந்து விட்டதால், என்னுடைய கணினியின் ஏகபோக உரிமையை நான் தான் கைவசம்
வைத்திருக்கிறேன். அம்மாவிடம் தினமும் இதற்காக திட்டுவாங்குகிறேன் என்பது
கூடுதல் செய்தி ;-) )

மிக அதிகமாக பயன்படக்கூடிய ஆங்கில தட்டச்சையே கற்காதவர்களை, இப்படி
தமிழ்99 தட்டச்சு கற்றுக்கொள் என்று வதைப்பது மகாபாவம் !!.


என்ன காரணத்தாலோ தமிழ்த் தட்டச்சு முறை பலருக்குப் பகையாக இருக்கிறது.  கொஞ்சம் பொறுமையாக ஒரே ஒரு மாதகாலம் (தினம் ஒருமணிநேரம்) செலவு செய்தால், தமிழ்த் தட்டச்சு முறையின் ஸ்பீட் புரியும்.  நிமிஷத்துக்கு 50-60 வார்த்தை தட்டும் என்னுடைய சொந்த அனுபவத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.  தக்கை ராமாயணத்தை நான்தான் மின்பதிப்பாக்கிக் கொடுத்தேன்.  முதல் 1500 பாடல்களைத் தட்ட எடுத்துக் கொண்டது சரியாக நான்கு இரவுகள்.  (வேலைக்குப் போய்க்கொண்டு இருந்த காலம் அது.  ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு, 11 மணிக்கு உக்காந்து, தோராயமாக 2-3 மணி நேரம் செலவழித்து, ஆக மொத்தம் 10-12 மணி நேரத்தில் 1500 பாடல்கள்; முன்னுரையில் உள்ள உரைப்பகுதி எல்லாம் தட்டி முடித்தேன்.  

ஒருவிரல் கிருஷ்ணா ராவாக தட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் தட்டச்சுமுறை ஒன்பதுவிரல் ஹரிகிருஷ்ண ராவ் விடும் சவால்: தமிழ்நெட் 99 ஆகட்டும் அல்லது வேறெந்த முறையாகட்டும்.  எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.  இந்த வேகத்தில் பாதி அளவாவது உங்களால் அடிக்க முடியுமா?  

இதைப் புரிந்துகொண்டால், தமிழ்த் தட்டச்சு முறையின்மேல் உள்ள வேண்டாத வெறுப்பு தானாகப் போய்த் தொலையும்.   (It is a very natural repulsion/aversion for Computer wizards to  accept the very notion of Typewriter or 'Typists'.  As a person who have had to close down a family business of three generations old because of the onslaught of computers, I personally know this aversion.)  அது போயிட்டுப் போவுது.  இப்போதாவது, இதைப் புரிந்துகொண்டால் தமிழ்த் தட்டச்சு என்பதன் முக்கியத்துவம் புரியத் தலைப்படுமானால், இதனுடைய சௌகரியம் பிடிபடும்.  

ஊதற சங்க ஊதிடறேன்.  விடிகிற சமயத்தில் விடியட்டும்.  

--
அன்புடன்,
ஹரிகி.

amachu

unread,
Oct 18, 2009, 12:37:14 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sun, 2009-10-18 at 09:58 +0530, Hari Krishnan wrote:
> இதைப் புரிந்துகொண்டால், தமிழ்த் தட்டச்சு முறையின்மேல் உள்ள வேண்டாத
> வெறுப்பு தானாகப் போய்த் தொலையும்.

யளனகப தானே சொல்லறீங்க..

நான் எழுதும் எல்லா மடல்களும் அதே முறையொத்தது தான்..

--

ஆமாச்சு

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 12:41:19 AM10/18/09
to mint...@googlegroups.com


2009/10/18 amachu <rama...@amachu.net>
ஆமா ஆமாச்சு.  யளனபக டமதாத.  கம்ப்யூட்டர்காரங்க asdfgf என்றுகூட சொல்லமாட்டார்கள்.  அவர்களுக்கெல்லாம் qwerty keyboard என்றால்தான் புரியும்.  (அதாவது டைப்பிஸ்ட்கள் பயன்படுத்தும் எதையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.  தீட்டு. பாவம்.) அவர்கள் சொல்வதைப்போல் qwerty கீபோர்ட் என்பதற்கு இணையான தமிழ்ப் பிரயோகம் ணுறநசவ விசைப்பலகை.   

ஆமாச்சுவைப் போன்ற கம்ப்யூட்டர் விஸ்கிட்கள்கூட தட்டச்சு முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் தட்டச்சுமுறை செய்த பூர்வஜன்ம புண்ணியம்தான். :-)))

Tirumurti Vasudevan

unread,
Oct 18, 2009, 12:44:10 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>
>
> 2009/10/18 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
>>
>> தமிழ்99, இன்ஸ்கிரிப்ட்  இத்யாதி இத்யாதி ஆகிய்வற்றின் மீது எந்த
>> காலத்திலும் உருப்படியாக ஈடுபாடு இருந்ததில்லை, அவை பரவலாகுமா என்றும்
>> தெரியவில்லை (முன்னர்  தமிழ் தட்டச்சு கற்று, கணினியில் தான் எளிதாக
>> ஃபோனட்டிக் விசைப்பலகை உள்ளதே, ஏன் இந்த வீன் வேலை என்று அதை பாதியிலேயே
>> டீலில் விட்டு விட்டேன் என்பது வேறு விஷயம் :-/ )

வேகம் சாமி வேகம். ஆரம்பத்திலே கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் பழகிய பிறகு
இந்த வேக வித்தியாசம் தெரியவரும்.

>> 99.99% எல்லா விசைப்பலகைகளும் ஆங்கிலத்தோடு தான் வருகின்றன, அதற்கு தமிழ்
>> லே அவுட் ஸ்கின் வாங்கிப்போடும் அளவுக்கு நம் மக்களுக்கு (ஏன், எனக்கே)
>> பொறுமை இருப்பதில்லை.

ஸ்கின் நானும் பயன்படுத்தி இருக்கேன். ஓரம் கட்டிட்டேன். அது கொஞ்சம்
பழக உதவுமே தவிர வேகமாக தட்டச்ச அது தடைதான்.

>> முக்கால்வாசி பேர், ஒற்றை விரல் நாட்டியம் செய்பவர்கள் (நன்றி
>> சீதாலக்ஷ்மி :-) ) தான். கீ போர்டை பார்த்து பார்த்து தான்
>> அடிக்கிறார்கள், அவர்களுக்கு ஃபோனட்டிக் கீ போர்டு தான் வசதிப்பட்டு
>> வரும். அது தான் யதார்த்தம்.

ஏற்கெனெவே ஆங்கில தட்டச்சு பழகி இப்போ அதிகமா தட்டச்சாதவங்களுக்குதான்
அது தோது பட்டு வரும். அதிகமா தட்டச்சறவங்க தமிழ் முறைகளிலே ஏதும்
பழகிக்கொள்ளுவது நல்லது.

(என் கீபோர்டில் எழுத்துக்கள் எல்லாமே
>> அழிந்து விட்டதால், என்னுடைய கணினியின் ஏகபோக உரிமையை நான் தான் கைவசம்
>> வைத்திருக்கிறேன். அம்மாவிடம் தினமும் இதற்காக திட்டுவாங்குகிறேன் என்பது
>> கூடுதல் செய்தி ;-) )

நல்ல ஐடியாவா இருக்கே!
:-))


>>
>> மிக அதிகமாக பயன்படக்கூடிய ஆங்கில தட்டச்சையே கற்காதவர்களை, இப்படி
>> தமிழ்99 தட்டச்சு கற்றுக்கொள் என்று வதைப்பது மகாபாவம் !!.

இல்லீங்க. புதுசா தட்டச்சு பழகப்போறோம்ன்னா பொனடிக் வாணாம். இதான் என் கருத்து.


> என்ன காரணத்தாலோ தமிழ்த் தட்டச்சு முறை பலருக்குப் பகையாக இருக்கிறது.  கொஞ்சம்
> பொறுமையாக ஒரே ஒரு மாதகாலம் (தினம் ஒருமணிநேரம்) செலவு செய்தால், தமிழ்த்
> தட்டச்சு முறையின் ஸ்பீட் புரியும்.

ஓய் ஒன்பதுவிரல் ஹரிகிருஷ்ண ராவ், எதை சொல்லறீங்க? ரெமிங்டன் ஆ?

 திவாஜி


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tirumurti Vasudevan

unread,
Oct 18, 2009, 12:48:20 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> 2009/10/18 amachu <rama...@amachu.net>

>> யளனகப தானே சொல்லறீங்க..
>>
>> நான் எழுதும் எல்லா மடல்களும் அதே முறையொத்தது தான்..
>>
>
> ஆமா ஆமாச்சு.  யளனபக டமதாத.  கம்ப்யூட்டர்காரங்க asdfgf என்றுகூட
> சொல்லமாட்டார்கள்.  அவர்களுக்கெல்லாம் qwerty keyboard என்றால்தான் புரியும்.
>  (அதாவது டைப்பிஸ்ட்கள் பயன்படுத்தும் எதையும் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
>  தீட்டு. பாவம்.) அவர்கள் சொல்வதைப்போல் qwerty கீபோர்ட் என்பதற்கு இணையான
> தமிழ்ப் பிரயோகம் ணுறநசவ விசைப்பலகை.

ஓஹோ! ஆனா எங்களுது ஞறநசவல ஆச்சே!

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 12:52:52 AM10/18/09
to mint...@googlegroups.com



> என்ன காரணத்தாலோ தமிழ்த் தட்டச்சு முறை பலருக்குப் பகையாக இருக்கிறது.  கொஞ்சம்
> பொறுமையாக ஒரே ஒரு மாதகாலம் (தினம் ஒருமணிநேரம்) செலவு செய்தால், தமிழ்த்
> தட்டச்சு முறையின் ஸ்பீட் புரியும்.

ஓய் ஒன்பதுவிரல் ஹரிகிருஷ்ண ராவ், எதை சொல்லறீங்க? ரெமிங்டன் ஆ?

 திவாஜி


திவாஜி என் வாயைப் பிடுங்காம ஓயப் போறதில்லை என்று சபதம் போட்டிருக்கிறார்.  பின்ன எதுக்கு ரெமிங்டனா ஹால்டாவா எல்லாம் இப்ப கேட்டாகிறதாம்? :-)))

ஒரு காலத்தில் (1950களில்) தமிழ்த் தட்டச்சு முறை என்பது மெஷினுக்கு மெஷின் வித்தியாசப்பட்டது.  அந்தக் காலத்தில் (அதாவது எங்க தாத்தா தட்டச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தில்) ரெமிங்டன் மெஷினில் தட்டச்சு பழகினால் அந்த அப்பிராணிக்கு ஜென்மம் முழுக்க ரெமிங்டன்தான் வேணும்.  வேலைக்குப் போன இடத்தில் ஹால்டா இருந்தால் (அதுக்கு சிலகாலம் கழித்து கோத்ரெஜ் இருந்தால்) மறுபடியும் புதுசா பழகணும்.  அப்படி ஒரு சிரமம் இருந்தது.  அதற்குப் பிறகு முத்தையா வந்தார்.  தமிழ்த் தட்டச்சு முறை யளனகபக டமதாத என்று சீர்படுத்தப்பட்டது.  முத்தையா முறை நடைமுறைக்கு வந்தது 1953 என்று நினைவு.  (நான் பிறந்த வருஷமுங்கோவ்....)  

அட விடுங்க... டைப்பிஸ்ட் பேச்செல்லாம் அம்பலம் ஏறாது...  :P

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 12:55:41 AM10/18/09
to mint...@googlegroups.com


2009/10/18 Tirumurti Vasudevan <agni...@gmail.com>



ஓஹோ! ஆனா எங்களுது ஞறநசவல  ஆச்சே!

திவாஜி
-

ஆமா. நீங்க சொல்றது (Qவுக்கு மட்டும்) அப்பர் கேஸ்.  நான் சொல்றது சம்-அண்டர் கேஸ்.   ;-))

(இதுக்கு மேல வாயப் பிடுங்காதீங்க சாமி...மத்தவங்களுக்கு எரிச்சல் வந்துரும்..)

Tirumurti Vasudevan

unread,
Oct 18, 2009, 1:04:33 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> திவாஜி என் வாயைப் பிடுங்காம ஓயப் போறதில்லை என்று சபதம் போட்டிருக்கிறார்.
>  பின்ன எதுக்கு ரெமிங்டனா ஹால்டாவா எல்லாம் இப்ப கேட்டாகிறதாம்? :-)))

ச்சே! ஹல்வா ன்னு நினைச்சு ஜொள்ளு விட்டுட்டேன்!

> அட விடுங்க... டைப்பிஸ்ட் பேச்செல்லாம் அம்பலம் ஏறாது...  :P

ஏஞ்சாமி! அ'ரி'ஞர் பேச்சு ஏறுமே?
:-))
அன்புடன்,

Tirumurti Vasudevan

unread,
Oct 18, 2009, 1:06:00 AM10/18/09
to mint...@googlegroups.com
2009/10/18 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> ஆமா. நீங்க சொல்றது (Qவுக்கு மட்டும்) அப்பர் கேஸ்.  நான் சொல்றது சம்-அண்டர்
> கேஸ்.   ;-))
> (இதுக்கு மேல வாயப் பிடுங்காதீங்க சாமி...மத்தவங்களுக்கு எரிச்சல் வந்துரும்..)

யாருக்கு? thatha வுக்கா? சரி சரி வாயை மூடிக்கீறேன்!

amachu

unread,
Oct 18, 2009, 1:19:23 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sun, 2009-10-18 at 10:11 +0530, Hari Krishnan wrote:
> ஆமாச்சுவைப் போன்ற கம்ப்யூட்டர் விஸ்கிட்கள்கூட தட்டச்சு முறையைப்
> பயன்படுத்துகிறார்கள் என்றால் தட்டச்சுமுறை செய்த பூர்வஜன்ம
> புண்ணியம்தான். :-)))

மொதல்ல போனடிகக்கை வழக்கத்திலிருந்து போக்கணும்னு முடிவு செஞ்சேன். தமிழ்99
பிரச்சாரக்காற்று பலமா இருந்தது..

தீண்டத் தொடங்கினேன்.. பெயரிலிருந்து (ஆமாச்சு) பெரும்பாலும்
எல்லாவற்றிலும் பால்ய பார்வை அகலாததுனால [;-)] கால், கொம்பு,
கொக்கியெல்லாம் தேடினேன் தமிழ்99 இல் இல்லை.

தமிழ் தட்டச்சு பழக முதல் ஒன்றிரண்டு மாதங்கள் பெர்மனென்ட் மார்க்கர்
கொண்டு விசைப்பலகையில் எழுதிப் பயிற்சி செய்தேன்.

இப்போ எந்த சிக்கலும் இல்லை. என்னோட ஏசர் நெட்புக்கிலிருந்து தமிழ்
எழுத்துக்கள் எழுதாமலே எழுதறேன்.

--

ஆமாச்சு

amachu

unread,
Oct 18, 2009, 1:23:26 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sat, 2009-10-17 at 07:26 -0700, N. Ganesan wrote:
>
> ஆம். சிங்கப்பூர் கலைமணி ரத்தினசாமி (தமிழ் ஆசிரியர், கணி நுட்பியலார்)
> அறிவித்ததுபோல தமிழ்99 உயிர்மெய்க் குறிகளை தனியாய்க் காட்டாதது
> ஒரு பெரிய குறைபாடு. ஸ்ரீ லங்கா தமிழ் 2007 விசைப்பலகை பார்த்தீர்களா?
> அது உயிர்மெய்க் குறிகளை தனியே கொடுத்துள்ளது.

அதற்கு வேறு பெயர் வழக்கத்தில் உண்டா?

> கொலோன் கருத்தரங்கில் இண்பிட் குழுவினருடன்,
> மோகன் தம்பேயின் இன்ஸ்க்ரிப்ட், ரவி பாலின் துணைவன், தமிழ்99, கணியன்,
> ... இன்ன பிற ஒலிப்பியல் (போனெடிக்) விசைப்பலகைகளின்
> சாதக, பாதகங்களை ஆராய்ந்து ஓர் ஆய்வேடு தயாரிக்க வேண்டலாம்.
>
> தமிழ்99 என்னென்ன ஏற்றவேண்டும் அக்குழுவில் பேசுவோமே.
>

செய்யலாம்.

--

ஆமாச்சு

Thiruvengada Mani T K

unread,
Oct 18, 2009, 2:04:56 AM10/18/09
to mint...@googlegroups.com

அடடா….

“ யளனகபக டமதாத

ணுறநசவக டிரைலத “

 

SSLC லீவில்  (May - 1970) அப்பா எடுத்தவுடன் தமிழ் தட்டச்சு வகுப்பில் சேர்த்து விட்டதை ஞாபகப்படுத்தி விட்டீர்கள். அங்கே எல்லோரும் ஏற்கனவே ஆங்கிலத் தட்டச்சு அறிந்தவர்கள்.  Asdfgf   ;lkjhj --- இது கூட எனக்குத் தெரியாது! எடுத்தவுடன் “யளனகபக டமதாத” தான். காலை ஆறு முதல் ஏழு வரை வகுப்பு. தூக்கக் கலக்கத்துடன் நான் தட்டியது நினைவுக்கு வருகிறது.

இரண்டு மாதங்களில் விவேகாநந்தா கல்லூரியில் புகுமுக வகுப்பு (PUC - NPC) இடம் கிடைத்துவிட்டது. இருந்தாலும் அப்பா விடவில்லை – தட்டச்சு வகுப்பையும் தொடர்ந்து தேறினால்தான் ஆயிற்று என்று சொல்லிவிட்டார். எப்படியோ முடித்துத் தேறியும் விட்டேன். தமிழுக்குப் பிறகு ஆங்கிலத்தட்டச்சுப் பயின்றவன் அநேகமாக நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

 

            என் தந்தைக்குத்தான் எத்தனைத் தொ(ல்)லைநோக்குப் பார்வை என்று இன்று நினைக்கிறேன். மின்தமிழுக்கு எழுதவும் – சில நூல்களைத் ஒருங்குறியில் தட்டச்சு செய்யவும் அப்பயிற்சி எவ்வளவு துணை புரிகிறது என்று எனக்குத் தெரியும்! கணினி தொடர்புகள் வந்தபின்னால் முதலில் ‘கலகம்’ பின் ‘பாமினி” அப்புறம் ‘இகலப்பை’ இப்போது ‘unicode Ms’  என்று எத்தனை வந்தாலும் அன்று நான் ‘கடமையே” என்று கற்ற தட்டச்சு வித்தை எத்தனைப் பயனாயிருக்கிறது என்று வியக்கிறேன்.

 

மின்தமிழ் இப்போதெல்லாம் அடிக்கடி பழைய நினைவுகளைக் கிளறுகின்றது.

நன்றி

திருவேங்கடமணி.




From: Hari Krishnan <hari.har...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sun, 18 October, 2009 10:25:41 AM
Subject: [MinTamil] Re: விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி

Yahoo! India has a new look. Take a sneak peek.

Innamburan Innamburan

unread,
Oct 18, 2009, 3:31:26 AM10/18/09
to mint...@googlegroups.com
தட்டச்சு கத்துக்றோமோ இல்லையோ, வேளை பார்த்து இன்ஸ்டிட்யூட்டுக்கு போறது குஷி இல்லையோ, தேனியாரே.
இன்னம்பூரான்

2009/10/18 Thiruvengada Mani T K <thiruv...@yahoo.com>

விஜயராகவன்

unread,
Oct 18, 2009, 3:54:02 AM10/18/09
to மின்தமிழ்
On Oct 18, 1:38 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 17, 6:59 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > Kindly give a rational definiton instead of hanging from the coat
> > tails of 'Tholkappiyam'.
>
> > Vijayaraghavan
>
> கிரந்தம் இன்றேல் தமிழுக்கு உய்தி இல்லை என்று நிரூபிக்க நீங்கள்
> பிரயத்தனப்படுவது வெள்ளிடைமலை.

நாம் எழுதுவது/பேசுவது பற்றி நல்ல புரிதல் வேண்டும் என்றுதான்
கேட்கிறேன். திராவிடம் என்ன என்று கேட்டேன், பதில் இல்லை. தமிழ், தமிழ்
எழுத்து என்னவென்று பகுத்தறிவு புரிதலில் கேட்டேன், அதற்கும் பதில்
இல்லை. என்ன என்று கேட்டால், பதில் சொல்லாமல் என் அஜெண்டா பத்தி
பேசுகின்றீர்கள்.

கிரந்தம் தமிழ் எழுத்தாகி பல நூற்றாண்டுகள் ஆகி விட்டன. கால சக்கரத்தை
பின் தள்ள முயற்சிப்பது பலன் அளிக்காது.

விஜயராகவன்

வினோத் ராஜன்

unread,
Oct 18, 2009, 6:54:43 AM10/18/09
to மின்தமிழ்
// கொஞ்சம்

பொறுமையாக ஒரே ஒரு மாதகாலம் (தினம் ஒருமணிநேரம்) செலவு செய்தால்,
தமிழ்த்
தட்டச்சு முறையின் ஸ்பீட் புரியும்//

பலருக்கு பொறுமையும் இருப்பதில்லை, அதற்கான நேரமும் இருப்பதில்லை.
இதற்காக பிரத்யேகமாக மெனக்கெட வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. இது தான்
பிரச்சினை

(ஆங்கில தட்ட்ச்சு கற்காதவர்கள்) தமிழ்99/தமிழ் தட்டச்சு கற்பதற்கு
பதில், அந்நேரத்தில் ஆங்கில தட்டச்சை கற்றாலாவது பிரயோஜனப்படும்.
ஆங்கிலத்துக்கு ஆங்கிலமும் என்றாச்சு, தமிழை ஃபோனட்டிக் முறையில் வேகமாக
தட்டச்சிடலாம்.

உங்களிடத்தில் அபரிதமான நேரமும் பொறுமையும் தேவையும் இருந்தால்,
நிச்சயம் தமிழ் தட்டச்சு கற்றுக்கொள்ளுங்கள்.

//இதைப் புரிந்துகொண்டால், தமிழ்த் தட்டச்சு முறையின்மேல் உள்ள வேண்டாத
வெறுப்பு
தானாகப் போய்த் தொலையும்//

வெறுப்பெல்லாம் ஒன்னும் இல்லை. வகுப்புக்கு நேரம் தவறாமல் சென்று யளனகபக
ஙட்மதாத கற்றவன் என்ற ரீதியில், தமிழ்99 விட இயற்கையான பலகை தமிழ்
தட்டச்சு விசைப்பலகைதான். அது தான் கற்பதற்கு எளிது.

த் + எ = தெ என்று தமிழ் இலக்கணத்தில் நீண்ட லக்சர் எடுக்கவேண்டிய
நிர்பந்தம் இல்லாமல், கொம்பு + த என்று இயற்கையாக சொல்லித்தரலாம்.

டைப்ரடிட்டிங் மெஷினில், இகர, ஈகார, உகர, ஊகார, புள்ளி ரிவர்ஸாக
தட்டச்சிட வேண்டும். ஏதோ நான் மூவிங் கீ என்று சொல்வார்கள். அதாவது, ப்
என்று எழுத வேண்டுமென்றால் புள்ளி தட்டச்சு செய்த பிறகு தான் ப அடிக்க
வேண்டும். கணினிக்கான, தட்டச்சு விசைப்பலைகையில் எல்லாவற்றுக்கும்
நேச்சுரல் சீக்குவென்ஸ்'ஐ கொண்டு வந்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
அப்படி கொண்டு வந்தால் சுபம்.

தமிழ்99-ஆ தமிழ் தட்டச்சா என்றால் நிச்சயம் தமிழ் தட்டச்சு என்று தான்
சொல்லுவேன். The Lesser of two Evils :-P

// இல்லீங்க. புதுசா தட்டச்சு பழகப்போறோம்ன்னா பொனடிக் வாணாம். இதான்
என் கருத்து. //

அதீத ஆர்வமும் ஈடுபாடும் அதற்கான தேவையும் உள்ளவர்கள் நிச்சயம்
கற்றுக்கொள்ளலாம். ஆவரேஜ் ஜோவுக்கு (தமிழில் ? ) அது தேவையில்லை என்பது
எனது எண்ணம்.

//தட்டச்சு கத்துக்றோமோ இல்லையோ, வேளை பார்த்து இன்ஸ்டிட்யூட்டுக்கு
போறது குஷி
இல்லையோ, //

டார்ச்சர் சுவாமி.. காலையில் எழுந்து, ஆங்கில தட்டச்சு வகுப்பு சென்று,
பிறகு தமிழ் வகுப்புக்கு சென்று, அப்புறம் ஸ்கூலுக்கு கிளம்பிப்போனால்
(என்னோட) கஷ்டம் புரியும்.

பி.கு: எப்போதும் அரைகுறை தூக்கத்திலேயே எப்போதும் வகுப்புக்கு சென்ற
காரத்திணாலோ என்னவோ குறிப்பிடும்படியாக இண்ஸ்டியூட்டில் ஏதும்
நினைவில்லை :-)

V

On Oct 18, 9:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/18 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

amachu

unread,
Oct 18, 2009, 7:57:15 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sun, 2009-10-18 at 03:54 -0700, வினோத் ராஜன் wrote:
> பலருக்கு பொறுமையும் இருப்பதில்லை, அதற்கான நேரமும் இருப்பதில்லை.
> இதற்காக பிரத்யேகமாக மெனக்கெட வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. இது தான்
> பிரச்சினை

வினோத்

நாம் எதிர்காலத்தை இங்கே கருத்தில் கொள்கிறோம். பள்ளிகளை எடுத்துக்
கொள்கிறோம். அங்கே பாடமாக வைக்கிறபோது எடுபடும். மெனக்கெட என்பது அங்கே
இரண்டாம் பட்சம்.

--

ஆமாச்சு


N. Ganesan

unread,
Oct 18, 2009, 7:56:51 AM10/18/09
to மின்தமிழ்

அருமை.

கணேசன்

Hari Krishnan

unread,
Oct 18, 2009, 8:54:10 AM10/18/09
to mint...@googlegroups.com


2009/10/18 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
/


டைப்ரடிட்டிங் மெஷினில், இகர, ஈகார, உகர, ஊகார, புள்ளி ரிவர்ஸாக
தட்டச்சிட வேண்டும். ஏதோ நான் மூவிங் கீ என்று சொல்வார்கள். அதாவது, ப்
என்று எழுத வேண்டுமென்றால் புள்ளி தட்டச்சு செய்த பிறகு தான் ப அடிக்க
வேண்டும்.

டைப்ரைட்டரில் அதற்கு dead-key என்று பெயர்.  புள்ளி, கொம்பு, பகரத்துக்கு ஒரு பாதம் இழுத்து பு ஆக்குகிறோம் இல்லையா, அது என்று மூன்று கீ (ஆறு எழுத்துருக்கள்) அடிக்கும்போது கேரேஜ் நகராது.  (உருளைத்தாங்கி நகராது என்று தமிழில் சொன்னால் எத்தனைப் பேருக்குப் புரியுமோ தெரியாது.)  புள்ளியை அடிக்கும்போது கேரேஜ் நகராமல் நின்று முதலில் காகிதத்தில் புள்ளியைப் பதித்துக் கொள்ளும். அப்புறம் எழுத்து விழுந்த பிறகு கேரேஜ் நகரும்.  எல்லாம் டைப்ரைட்டர் போன திசையில் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.  

 
கணினிக்கான, தட்டச்சு விசைப்பலைகையில் எல்லாவற்றுக்கும்
நேச்சுரல் சீக்குவென்ஸ்'ஐ கொண்டு வந்துவிட்டார்களா என்று தெரியவில்லை.
அப்படி கொண்டு வந்தால் சுபம்.


நீங்கள் கணினிக்கான டைப்ரைட்டர் கீபோர்ட் வகைகளைப் பார்த்தால் ஓல்ட் டைப்ரைட்டர், நியூ டைப்ரைட்டர் என்று இரண்டு வகை இருப்பதைக் கவனித்திருக்கலாம். ஓல்ட் டைப்ரைட்டர் என்பது, முதலில் புள்ளி, கொம்பு அடித்துவிட்டுப் பிறகு எழுத்தை அடிக்கும் முறைக்கானது.  ‘நான் மாறவே மாட்டேன்’ என்ற முரட்டு சுபாவம் உள்ளவர்களுக்கானது.  

கணினிதானே!  எந்திரத்துக்கான விதிகள் இதற்கு வேண்டாமே என்று தளர்த்திக் கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு நியூ டைப்ரைட்டர் வகை கீபோர்ட்.  இதில் முதலில் எழுத்து, பிறகு புள்ளி என்று இயற்கையான வழிமுறைதான்.  நான் உஜாலாவுக்கு மாறி ரொம்ப காலம் ஆயிற்று.  நானும் ஆதமி, பதமி, காதம்பரி என்று வகைவகையாக மாறி (ஒவ்வொரு டைப்ரைட்டர் கீபோர்டிலும் ஒவ்வொரு லேஅவுட்.  எழுத்து இடம் மாறி மாறிக் கிடக்கும்) அதற்குப் பழகி, பிறகு அடுத்த வகையைப் பயன்படுத்தத் தொடங்கி, அதற்குப் பிறகு முரசு அறிமுகமானதும் முரசு, சுவடி என்ற எல்லா வகையையும் பயன்படுத்தியாயிற்று.  கலப்பையில் செட்டில் ஆனேன்.  திஸ்கி விடைபெற்றக்கொண்டது.  இப்பல்லாம் என்எச்எம் மட்டும்தான்.  இதில் ஓல்ட் டைப்ரைட்டர் கீபோர்ட் மட்டும்தான் இருப்பதால், டெவலப்பர்ஸ் கிட் உபயோகித்து, நியூ கீபோர்ட்டை நானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.  எனக்குத் தேவைப்படுவது போலெல்லாம் எழுத்தை இடம் மாற்றி வைத்துக்கொள்ள முடிகிறது.  வேண்டியது அவ்வளவுதுதான்.

எதிர்காலமாக இருந்தாலும், நிகழ்காலமாக இருந்தாலும் ஏதோ ஒரு முறையில் பயிற்சி செய்துதான் தீரவேண்டும்.  தட்டச்சு முறை என்றால் வேகம் அதிகமாக இருக்கும்.  இதோ இவ்வளவு நீளமாக அடித்துத் தள்ளிக்கொண்டே போக முடிகிறது என்றால், கை ஓடுகிறது.  இல்லாவிட்டால் முடியுமா? :-)

மற்றபடி, எதைப் பயன்படுத்துவது என்பது அவரவர் விருப்பம்; தேர்வு்; சௌகரியம்.  ‘இது நல்லா இருக்கு’ என்று அனுபவத்தால் சொல்லத்தான் முடியும்.  வேற என்ன பண்ணமுடியும்!  

N. Ganesan

unread,
Oct 18, 2009, 9:00:05 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 18, 7:54 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/10/18 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>


>
> > /
>
> > டைப்ரடிட்டிங் மெஷினில், இகர, ஈகார, உகர, ஊகார, புள்ளி ரிவர்ஸாக
> > தட்டச்சிட வேண்டும். ஏதோ நான் மூவிங் கீ என்று சொல்வார்கள். அதாவது, ப்
> > என்று எழுத வேண்டுமென்றால் புள்ளி தட்டச்சு செய்த பிறகு தான் ப அடிக்க
> > வேண்டும்.
>
> டைப்ரைட்டரில் அதற்கு dead-key என்று பெயர்.  

இதனைக் கண்டுபிடித்தவர் யாழ்ப்பாணம் ஆர். முத்தையா - மலாயாவில்.

விக்கியிலும், சந்திரவதனாவும் எழுதியுள்ளனர்.

இத்துறை பற்றி விரிவாகப் பேச வேண்டும் உங்களிடம் - நவம்பரில்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 18, 2009, 10:17:54 AM10/18/09
to மின்தமிழ்

On Oct 17, 9:13 am, amachu <ramada...@amachu.net> wrote:
> On Sat, 2009-10-17 at 06:15 -0700, N. Ganesan wrote:
> > காலப் போக்கில், தமிழ் வளர,
> > (அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று, தமிழ்99 போன்றவை
> > வேரூன்றல் வேண்டும். சிங்கப்பூர், தமிழ்நாடு அரசு
> > ஏற்றுக்கொண்ட தமிழ்நெட்99.
>
> amma - அம்மா என்ற முறை சங்கடம் தான். நாளை amma அப்படியே இருந்து விட்டு
> போகட்டும் என்று தோன்றும் நிலை ஏற்படலாம்.
>

> நேருஇந்திய மொழிகளெல்லாம் ரோமன் எழுத்துருவில் இருக்க வேண்டும் என்று


> எப்போதோ தெரிவித்தாராம். உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன்.
>


நேரு மாத்திரம் அல்லர். தமிழ் மறவர்கள் மிகவும் வீரத்துடன் சேர்ந்து
உழைத்த
நேத்தாஜியும் ரோமன் எழுத்து இந்தியாவுக்கு என்றனர். நேத்தாஜி
தென்கிழக்கு ஆசியாவில் செட்டிநாட்டார் வணிகமும், அவர்களின்
தமிழ்க் கடிதங்கள் பர்மா, மலாயா, வியட்னாம் எல்லாம் தமிழ்நாடு
போவதும் வருவதும் நேரில் கண்டவர். அப்போது லெட்டர்களில்
பாரதமாதா (கையில் காங்கிரஸ் ராட்டை ஒரு ஆயுதமாய்!), நேத்தாஜி,
காந்திஜி, ...
இருப்பதைப் பார்க்கலாம்.

தென்னிந்தியர் - 4 மொழி பேசுவோரும் - ரோமன் எழுத்து என்றனர்.
ஒரு ஓட் வித்தியாசத்தில் தான் தேவநாகரி வென்ரது, ரோமன் எழுத்து தோற்றது.
ஒருமுறை நா. மகாலிங்கம் என்னிடம் சொன்னார்: அப்போதெல்லாம்
சிஎஸ், தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் எல்லாம் நேரு என்றால் ஒரே
பயபக்தி.
உண்மை என்று தெரிந்தாலும் நேரு சொன்னால் மாற்றிப் பேசார் என்று.

இன்று கணியுகத்தில் இன்ன எழுத்து தான் பிரதான்யம் பெற்றது
என்றெல்லாம் இல்லை. வேண்டுவோர் வேண்டுவது ஈவது கணினி,
எந்த இந்திய எழுத்தையும் எதிலும் மாற்றிப் படிக்கலாம் (இந்தி, கிரந்தம்,
தமிழ், ...)
எல்லாத்துக்கும் பொருந்தும்.

காந்தி தேவநாகரி ஆனால் மொழி இந்துஸ்தானி என்றார் - ஒரு காம்ப்ரமைஸ்.
உர்து எழுத்து பாக்கிஸ்தானுக்குப் போனது. தேவநாகரி இந்தியா ஆனது.

தெற்கு மாநிலங்கள், அதன் முதல்வர்கள் முயன்றால் எல்லா மொழி
எழுத்துக்கும்,
கிரந்தம் உட்பட, இந்திய யாப்புச் சட்டகத்தில் (கான்ஸ்டிட்ட்யூசன்) சம
அந்தஸ்து
பெறலாம். பெற வேண்டும் - இந்தியா அதன் மொழிகள் தழைக்க.

செயமோகன் இந்தியும், காந்தியும் என்று நல்ல கட்டுரை எழுதியுள்ளார்.
இன்று ஆங்கிலத்தை ஆதரிப்பார் என்றும் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.

மேலும் பேசுவோம்,
நா. கணேசன்

> தமிழ்99 - இலக்கண முறைப்படியானது. உயிரும் மெய்யும் உயிர் மெய் என்ற


> விதிப்பற்றியது.
>
> சிறுவர்களுக்கு தமிழ் எழுதக் கற்பிக்கும் போது உயிர் எது மெய் எதுவென்று
> கற்பிக்கப்படுவது கிடையாது. க போட்டு கால் போட்டால் கா, கொம்பு போட்டால் கி
> என்று பழக்கப்படுத்துவதுதான் வழக்கம்.
>
> சின்னக் குழந்தை வீட்டில் கணினியை அணுகும் போது தமிழ்99 எவ்வளவு தூரம்
> எடுபடும் என்பதில் சற்று ஐயம் இருக்கிறது.
>
> ஆனால் தமிழ் தட்டச்சு முறை (யளனகப) எடுபடும். ஆரம்பத்தில் கடினமாக
> இருந்தது. இப்போது எந்த கணினியைக் கண்டாலும் எழுத்துக்கள் பொறிக்கப்படாமலே
> அம்முறையிலேயே தட்டெழுதுகிறேன்.
>
> குனு லினக்ஸ் பயன்படுத்திவோருக்கு பழக்கப்படுத்த இன்டிக் ஆன்ஸ்கிரின்
> கீபோர்டு போன்ற பயன்பாடுகளும் உள்ளன. விரைவில மாணவர்களுக்கு பழக்குவிக்கும்
> புதிய மென்பொருள்கள் உருவாக்குவோம்.
>
> இரண்டும் இருப்பதே ஏற்பு. தமிழ்99 க்கு பரீட்சார்த்தமான விடை காணவேண்டும்.
> பள்ளிகளுக்கும் வீட்டில் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பார்க்க வேண்டும்.
> அவர்கள் எவ்வளவு விரைவில் பிடித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்த பின்னரே

> முடிவு கொள்ள வேண்டும்.
>
> --
>
> ஆமாச்சு

amachu

unread,
Oct 18, 2009, 10:41:35 AM10/18/09
to mint...@googlegroups.com
On Sun, 2009-10-18 at 07:17 -0700, N. Ganesan wrote:
> நேரு மாத்திரம் அல்லர். தமிழ் மறவர்கள் மிகவும் வீரத்துடன் சேர்ந்து
> உழைத்த
> நேத்தாஜியும் ரோமன் எழுத்து இந்தியாவுக்கு என்றனர். நேத்தாஜி
> தென்கிழக்கு ஆசியாவில் செட்டிநாட்டார் வணிகமும், அவர்களின்
> தமிழ்க் கடிதங்கள் பர்மா, மலாயா, வியட்னாம் எல்லாம் தமிழ்நாடு
> போவதும் வருவதும் நேரில் கண்டவர். அப்போது லெட்டர்களில்
> பாரதமாதா (கையில் காங்கிரஸ் ராட்டை ஒரு ஆயுதமாய்!), நேத்தாஜி,
> காந்திஜி, ...
> இருப்பதைப் பார்க்கலாம்.
>
> தென்னிந்தியர் - 4 மொழி பேசுவோரும் - ரோமன் எழுத்து என்றனர்.
> ஒரு ஓட் வித்தியாசத்தில் தான் தேவநாகரி வென்ரது, ரோமன் எழுத்து தோற்றது.
> ஒருமுறை நா. மகாலிங்கம் என்னிடம் சொன்னார்: அப்போதெல்லாம்
> சிஎஸ், தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் எல்லாம் நேரு என்றால் ஒரே
> பயபக்தி.
> உண்மை என்று தெரிந்தாலும் நேரு சொன்னால் மாற்றிப் பேசார் என்று.


When we forget the fact, "together we make India" and get into a mindset
that "We all come under India" such things happen.

--

ஆமாச்சு


N. Ganesan

unread,
Oct 18, 2009, 8:54:17 PM10/18/09
to மின்தமிழ்

will come back to all these.

Thanks,
N. Ganesan

Vinodh Rajan

unread,
Oct 19, 2009, 11:53:46 PM10/19/09
to தமிழமுதம், mintamil
//> I don't think it's correct to deny some users of Tamil language
> to write with the 30 Tamil letters - 12 uyir + 18 mey. If they want
> it, let them write.//

யாரும் இங்கு மறுக்கவில்லை. மொழியை அவர் அவர்கள் இஷ்டப்படி யாரு எழுதலாம்
(தனிப்பட்ட வலைத்தளங்கலில், மடல்களில்).

இங்கு பிரச்சினை "Evangelism" (கொள்கை பிரச்சாரம்). நீ ஒரு மகாபாவி,
எங்களிடம் வந்தால் தான் கதி மோட்சம் அடைவாய் என்ற ரீதியில் பிரச்சாரம்
செய்வது (கிரந்தம் = மகாபாவம் ; மீக்குறி = பாவ மண்ணிப்பு)

குழுவில் இருந்து குழு தாவி ஒவ்வொரு குழுவிலும், பிராச்சாரம் செய்வது
ஏனோ ?

//> Like Vendhan Arasu, a native Telugu speaker originally like you,
> in his mails//

வேந்தன்'காரு, மீரு மனவாரா :-))

// Ravisankar showed many Grantha letter pages
> in Tamil Wiki in his blog.//

He didn't show the Ethnic cleansing of words. Check the Page Moving
Log in Tamil Wikipedia. Liars.

//For example, since ழ is not in English, we (nor English) persons
use "aழkappan", etc., English just uses diacritics like, for example,
a //

U, W என்பது பிற்காலத்தில் தான் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டது. U, W
ஆங்கிலம் இல்லை என்றா ஆங்கில இலக்கிய குழுமங்களில் வரிந்து கட்டி
பிரச்சாரம் செய்கிறார்கள்.

அது போல, ஷ, ஜ, ஹ ,ஸ, ஸ்ரீ எல்லாம் தமிழ் தான். அதை பிரித்து தமிழல்ல என
பேசுவது இனப்பிரிவினை வாதமே அன்றி வேறொன்றும் இல்லை.

மின் தமிழில் நிறுத்தியது போல.. இங்கேயும் (இனி அங்கேயும்) இத்தோடு
நிறுத்திக்கொள்கிறேன்.

உங்கள் பிரச்சாரத்தை தொடரலாம்..

V

On Oct 20, 7:39 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 19, 11:11 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > கணேசனாரே,
>
> > இங்கேயுமா :-)))))
>
> > BTW
>
> > மின் தமிழில் எழுதிய பல மறுப்புகளை சிலவற்றை மட்டும் இங்கு  மீண்டும்
> > இடுகிறேன்.
>

> I am aware of authors who do not use Grantham at all:
> see Dr. Iraamaki Aiya's Valavu bloghttp://valavu.blogspot.com
>
, Tamil wealth of vocabulary and ability to coin
> new words will be lost if Tamil does not give importance and primacy
> to its 30 letters total.
>
> One way is to develop like German and French diacritics upon
> basic 26 Roman/English letters upon Tamil's 30 letters.
> Any system for Tamil script, e.g., your own Thoorihai converter,
> depends on diacritics to operate.
>
> So, while one way is Grantha script letters to write Indo-European
> words,
> the other equivalent and valid way is to use diacritics.
> Both are equivalent ways of representing foreign words in Tamil
> script.
> No loss of sound either way.
>
> ----------
>
> To an extent, Grantha is OK - for example we use s, j, h, sh - only
> *four*
> Grantha consonants.
>
> But Tamil cannot borrow Grantha or Nagari letters wholesale.
> For example, since ழ is not in English, we (nor English) persons
> use "aழkappan", etc., English just uses diacritics like, for example,
> a
> Tamil poem:http://groups.google.com/group/tamilmanram/msg/2a2e26c816fe9fa1
>
> Same thing, while occasional use of Grantha consonants (4) is
> admissible, for wholesale transliteration of Malayalam, Hindi webpages
> in Tamil
> script, we need good & scientific diacritics upon Tamil 30 letters.
>
> Regards,
> N. Ganesan

N. Kannan

unread,
Oct 20, 2009, 4:45:02 AM10/20/09
to mint...@googlegroups.com, தமிழமுதம்
2009/10/20 Vinodh Rajan <vinodh...@gmail.com>:

> அது போல, ஷ, ஜ, ஹ ,ஸ, ஸ்ரீ எல்லாம் தமிழ் தான். அதை பிரித்து தமிழல்ல என
> பேசுவது இனப்பிரிவினை வாதமே அன்றி வேறொன்றும் இல்லை.
>

ஆகா! அப்படிப்போடு அருவாளை :-)

க.>

N. Ganesan

unread,
Oct 20, 2009, 5:54:39 AM10/20/09
to மின்தமிழ்


On Oct 19, 10:53 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
> //>  I don't think it's correct to deny some users of  Tamil language
>
> > to write with the 30 Tamil letters - 12 uyir + 18 mey. If they want
> > it, let them write.//
>

Sri. Vinodh,

Please quote my whole mail, esp. if you are talking about my mail
in a different group.

I don't see your claim that Grantha letters = Tamil letters is true.
I have not seen so in Tamil books, they clearly mark them as
Grantha letters.

As we know, Grantha letters are great, however I differ from you
in that they are Tamil letters. Tamil grammar defines that way.

Here is my full posting, for anyone interested in this subject.

Best wishes,
N. Ganesan

-------------

On Oct 19, 11:11 am, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:

> கணேசனாரே,

> இங்கேயுமா :-)))))

> BTW

> மின் தமிழில் எழுதிய பல மறுப்புகளை சிலவற்றை மட்டும் இங்கு மீண்டும்
> இடுகிறேன்.

I don't think it's correct to deny some users of Tamil language
to write with the 30 Tamil letters - 12 uyir + 18 mey. If they want
it, let them write.
I am aware of authors who do not use Grantham at all:
see Dr. Iraamaki Aiya's Valavu bloghttp://valavu.blogspot.com

Like Vendhan Arasu, a native Telugu speaker originally like you,
in his mails, Tamil wealth of vocabulary and ability to coin
new words will be lost if Tamil does not give importance and primacy
to its 30 letters total.

One way is to develop like German and French diacritics upon
basic 26 Roman/English letters upon Tamil's 30 letters.
Any system for Tamil script, e.g., your own Thoorihai converter,
depends on diacritics to operate.

So, while one way is Grantha script letters to write Indo-European
words, the other equivalent and valid way is to use diacritics.
Both are equivalent ways of representing foreign words in Tamil
script. No loss of sound either way.

----------

To an extent, Grantha is OK - for example we use s, j, h, sh - only
*four* Grantha consonants. Ravisankar showed many Grantha letter
pages in Tamil Wiki in his blog.

N. Ganesan

unread,
Oct 20, 2009, 6:09:55 AM10/20/09
to மின்தமிழ்

விநோத்,

வணக்கம். ரவிசங்கர் விக்கிபீடியாவில் பணியாற்றுபவர்.

அவர் ஒரு மடலில் இந்தப் பதிவைத் தந்தார்.
http://blog.ravidreams.net/2009/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

கிரந்த எழுத்துக்கள் பல பக்கங்களில் இருக்கின்றனவே.

-----------

ஆஸ்திகம் ‘கடவுள் நம்பிக்கை’, லைக் பண்ணினார் ‘விரும்பினார்’
என்று மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள்.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 20, 2009, 6:23:23 AM10/20/09
to மின்தமிழ்

On Oct 19, 10:53 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:

> செய்வது (கிரந்தம் = மகாபாவம் ; மீக்குறி = பாவ மண்ணிப்பு)
>

மன்னிப்பு.

> குழுவில் இருந்து குழு தாவி ஒவ்வொரு குழுவிலும், பிராச்சாரம் செய்வது
> ஏனோ ?
>

டையாகிரிடிக்கிக்ஸ் முறை பலருக்கும் தெரியாது என்பதால்.

> //> Like Vendhan Arasu, a native Telugu speaker originally like you,
>
> > in his mails//
>
> வேந்தன்'காரு, மீரு மனவாரா :-))
>

கோவையில் மனவாடு என்போம். மனவார் என்பதுதான் நல்ல தெலுங்கா?

>
> அது போல, ஷ, ஜ, ஹ ,ஸ, ஸ்ரீ எல்லாம் தமிழ் தான். அதை பிரித்து தமிழல்ல என
> பேசுவது இனப்பிரிவினை வாதமே அன்றி வேறொன்றும் இல்லை.
>
> மின் தமிழில் நிறுத்தியது போல.. இங்கேயும் (இனி அங்கேயும்) இத்தோடு
> நிறுத்திக்கொள்கிறேன்.
>

நீங்கள் உங்கள் பிரச்சாரத்தைத் தொடரலாம், கிரந்தம் = தமிழ்.

ஆனால் தமிழ் இலக்கணத்தைப் பார்த்தால் அவ்வாறில்லை.
எனவே, கிரந்த எழுத்தை அதன் பெயரில் அழைப்பது நல்லது
என்ற என் நம்பிக்கை மாறாது.

ஒருவர் கிரந்தம் பயன்படுத்துகிறாரா, டையாக்ரிட்டிக்சா, தற்பவமாக்கித்
தமிழ் எழுத்தாக்கிவிடுகிறாரா - இதெல்லாம் பயனர் உகப்புக்கு (சாய்ஸ்)
விட்டுவிடுவோம்.

என் 3 உகப்புகள்:

(அ) தமிழ் தட்டச்சு முறை காலாவதி ஆகணும். [அதைப்
பழகினோர் பயன்படுத்த வேண்டும். அதில் ஒரு சந்தேகமும்
இல்லை. ஹரிகி, தி.வா., ... இன்னும் பலப்பலர்].
ஆனால், பள்ளிகளில் போனடிக் முறை கற்பிக்கப்படல் வேண்டும்.
அப்பொழுது, தமிழ் நெடுங்கணக்கு மேட்ரிக்ஸ் குழந்தைகளுக்கு
விளங்கும்.

(ஆ) உ/ஊ உயிர்மெய் பிரித்து எழுதல்.

(இ) இந்தி, சிங்களம், மலையாளம், ... இன்ன மொழி எழுத்துக்களுக்கு
அறிவியல் பூர்வமான உபகுறிகளை தமிழ் எழுத்து 30-ல் காட்டுவது.
இப்பொழுதுள்ள 2,3,4 ஐ விடச் சிறப்பாக டையாகிரிட்டிக்ஸ் தேர்ந்தெடுக்க
இயலும்.

தமிழர் தமிழ் எழுத்து 30-ல் தங்கள் மொழியை எழுதலாம் தானே.


நா. கணேசன்

> உங்கள் பிரச்சாரத்தை தொடரலாம்..
>
> V
>

N. Ganesan

unread,
Oct 20, 2009, 6:42:52 AM10/20/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

Vinodh wrote:
> மண்ணிப்பு

ஒரு குறிப்பு:

மண்ணுதல் என்றால் அபிடேகம்.
பட்டாபிசேகம் ஆன நாள் = மண்ணுமங்கலம்.

மலையாளத்தில் பல பழைய நல்ல சொற்கள் உள்ளன
என்றேன். கமலம் சேச்சியும் உண்மை என்றார்.

மண்ணான் தான் பழைய சொல். கேரளாவில் உள்ளது.
வண்ணான் என்று தமிழில் ஆன சொல். மண்ணு- என்ற வினை அணைபெயர்
(verbal noun, வினையால் அணையும் பெயர்).

மணி என்ற சொல் இந்தியா முழுக்க இருக்கிறது.
சிந்தில் வழங்கி அதனால் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியால்
சென்ற சொல். Carnelian beads நிறம் கருப்பு.
மணிவண்ணன் = கருவர்ணன்.

மணி, மண்ணு- இரண்டும் தொடர்புடைய திராவிடச் சொற்கள்
என்று எண்ணுகிறேன்.

நா. கணேசன்

ன,ண, ; ல,ள, ; ர;ற - வேறுபாடில்லை என்ற பேச்சும் கூடவே வருவதால்
இம் மடல்.

வினோத் ராஜன்

unread,
Oct 20, 2009, 7:07:36 AM10/20/09
to மின்தமிழ், tamizh...@googlegroups.com
மேதகு ரவிசங்கரிடம், இதற்கான விடையை நீங்கள் தான் கேட்க வேண்டும்.

http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log&offset=20090402050436&type=move&user=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE&month=&year=

http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log&offset=20090502180255&limit=100&type=move&user=Natkeeran&month=&year=

http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log&offset=20090405000323&limit=100&type=move&user=Natkeeran&month=&year=

http://ta.wikibooks.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D&action=history

இது Ethnic Cleansingக்கு ஒத்த செயல் தான்.

எல்லாம் உள்குத்து தான்: நீ கிரந்த கலந்து எழுதுற மாதிரி எழுது, நான்
பின்வாசல் வழியே அவற்றை மாற்றி விடுகிறேன் என்ற வஞ்சகம் தான். இது Batch
Process. அவ்வப்போது ஒரேடியா மாற்றுவார்கள்.

திடீரென்று நல்லவர்கள் போல நடிப்பது ஏன் என்று தெரியவில்லை.

விக்கிப்பீடியாவில் இருக்கும் அபத்தங்கள் பல. அவற்றை கூறினால் ஒரு தனி
புத்தகம் தான் போட வேண்டும்.

//ஆஸ்திகம் ‘கடவுள் நம்பிக்கை’, லைக் பண்ணினார் ‘விரும்பினார்’


என்று மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள்.

//

விஜயராகவன் சொல்லுவதெல்லாம் சரிதான், அவர் தரும் உதாரணங்கள் தான்
சரியில்லை. சரியான உதாரணங்கள் தந்திருக்க வேண்டும் :-)

V

On Oct 20, 3:09 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> விநோத்,
>
> வணக்கம். ரவிசங்கர் விக்கிபீடியாவில் பணியாற்றுபவர்.
>

> அவர் ஒரு மடலில் இந்தப் பதிவைத் தந்தார்.http://blog.ravidreams.net/2009/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%...

வினோத் ராஜன்

unread,
Oct 20, 2009, 7:11:06 AM10/20/09
to மின்தமிழ்
> Please quote my whole mail, esp. if you are talking about my mail
> in a different group.

My Bad ! I apologize.

V

On Oct 20, 2:54 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 19, 10:53 pm, Vinodh Rajan <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > //>  I don't think it's correct to deny some users of  Tamil language
>
> > > to write with the 30 Tamil letters - 12 uyir + 18 mey. If they want
> > > it, let them write.//
>
> Sri. Vinodh,
>

>

N. Ganesan

unread,
Oct 20, 2009, 7:17:35 AM10/20/09
to தமிழமுதம், tamil...@googlegroups.com, மின்தமிழ்

On Oct 19, 11:23 pm, புலவர். அசோக் <ashokk...@gmail.com> wrote:
> >>>> கிரந்தத்துக்கும் எந்த இனத்துக்கும் தொடர்பு கிடையாது.
>
> அதானே. இது என்ன புது தலைவலி. புதுசா இனம், இனத்தூய்மை என்று இழை தொடங்கி
> பாருங்க. அதில் இன வெறியர்களை எதிர்த்து சண்டை போட வாரோம்.
>
> 2009/10/20 செல்வன் <holy...@gmail.com>
>
> > வினோத்,
>
> > இன துவேஷம் எனும் வாதம் சரியல்ல.இங்கே இனத்தை பற்றி யாரும்
> > விவாதிக்கவில்லை.கிரந்தத்துக்கும் எந்த இனத்துக்கும் தொடர்பு கிடையாது.நாம்
> > தொடர்ந்து மொழியை பற்றி மட்டும் பேசுவோம்.
>
> > --
> > செல்வன்
>
> >www.holyox.tk
>


தமிழில் எழுத்துக்கள் 30 என்னும் இலக்கண விதிக்கும்
இனவாதத்திற்கும் தொடர்பில்லை. தொல்காப்பியர்,
நன்னூலார் இனவாதத்தாலா உயிர் 12, மெய் 18 தான்
தமிழ் எழுத்து என்று வரையறை செய்தார்கள்?

தெலுங்கு நாட்டில் எல்லிசு தெலுங்கு தமிழோடு தொடர்புகொண்ட
திராவிட மொழி என்று 1800களில் தேற்றம் தந்தார்.
உடனே பெரிய ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு இருந்தது,
ஆனால் தெலுங்கு திராவிட மொழி அல்ல என்றாகிவிடுமா? என்ன?
தமிழ் எழுத்து 30 என்று தமிழ் வரையறுக்காது இருந்திருந்தால்
திராவிட மொழிக்குடும்பம் இன்னின்ன மொழிகள்
என்று அடையாளம் காணவே படுசிரமம் ஆகியிருக்கும்.
அடையாளமே இல்லாமல் இன்று இருந்திருக்கலாம்.
எல்லாரும் இந்தியில் எழுதிட்டிருப்போம் :)

வினோத் அவ்ர்கள் கிரந்தம் = தமிழ் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்.
துடிப்புள்ள இளைஞர். என்றால் கூட, தமிழ் எழுத்து இன்னதுதான்
அவை மொத்தம் 30 என்ற வரையறை இருக்கிறதே. என்ன செய்ய?

தமிழ்நாட்டின் ஒரு பெரிய, அரிய நூலகம்:
ரோசா முத்தையா நூலகம் (இப்போது சென்னையில், சிக்காகோ
சென்னைக்கு அளித்த கொடை.)

http://www.lib.uchicago.edu/e/su/southasia/transliteration-tamil.html
தெளிவாக, தமிழ் உயிர் எழுத்து,
http://www.lib.uchicago.edu/e/su/southasia/transliteration-tamil.html#vowels
தமிழ் மெய்யெழுத்து:
http://www.lib.uchicago.edu/e/su/southasia/transliteration-tamil.html#consonants

கிரந்த எழுத்து:
http://www.lib.uchicago.edu/e/su/southasia/transliteration-tamil.html#grantha

என்ற வரையறையை எந்தப் புத்தகத்திலும் பார்க்கலாம்.

கிரந்தத்தை தமிழ் எழுத்தில் மீக்குறி கொண்டும் எழுதவியலும்:
விரிவாக, இதில் சொல்லியுள்ளேன்:
http://groups.google.com/group/mintamil/msg/9a834fed27e01103

நா. கணேசன்


நானும் சென்னையில் இந்த ஒரு பெரிய நூலகம் அமைய
உதவியிருக்கிறேன். இதற்கு ஆதாரம்: கோட்டையூர்
ரோஜா முத்தையா செட்டியார் நூலகம் சிக்காகோ பல்கலை
வாங்கியபோது தமிழ்நாடு அறக்கட்டளை- ஃபெட்னா
விழாவில் நண். ஜேம்ஸ் நை அவர்களைப் பாராட்ட
என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். சிக்காகோ பல்கலை,
ஜிம் நை தமிழ்ப்பணியை பலருக்கும் அறிமுகம் செய்ய
வாய்ப்பாக தமிழ்நாடு பவுண்டேசன் விழா எனக்கு உதவிற்று

வினோத் ராஜன்

unread,
Oct 20, 2009, 8:40:29 AM10/20/09
to மின்தமிழ், tamizh...@googlegroups.com
அப்புறம் ஒரே விஷயம், (நிச்சயமா கணேசனுக்கு ரிப்ளை இல்லை :-) )

கொஞ்சமா யோசிச்சு பார்த்ததுல இதெல்லாம் தோணுச்சு (நிறைய யோசிச்சிருந்தா
என்ன ஆகி இருக்கும்னா எல்லாம் கேட்கப்படாது :-) )

கிரந்தம்'னு அதுக்கு பேரு இருக்குன்னே ஆன்லைன் வந்தப்புறம் தான்
தெரிஞ்சுகிட்டேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் (எனக்கு தெரிஞ்சவங்ககளுக்கு
தெரிஞ்ச வரைக்கும் கூட) அது தமிழ் ஜ, தமிழ் ஸ, தமிழ் ஷ, தமிழ் ஸ்ரீ,
தமிழ் ஹ அவ்வளவு தான். இப்பவும் அப்படித்தான். 9.99/10 பேரு
இப்படித்தான்.

அதுக்கு இப்படி சண்டை நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.

கிரந்தத்துக்கு பின்னாடி இவ்வளவு பாலிடிக்ஸ் பன்னுவாங்கன்னும் ஆன்லைன்
வந்தப்புறம் தெரிஞ்சது. பாலிடிக்ஸ் பண்ண காரணமா வேணுங்கிறது வேற
விஷயம் ;-) .

"நான் பார்த்த வரைக்கும்" 2007ல இருந்து சண்டை நடக்குது (இப்ப 2009 -
2010) ஆகப்போகுது. (நா.கண்ணன் சரியான கணக்கு சொல்லுவாரு :-) ).

எல்லா விவாதத்திலும் உருப்படியா ஏதாவது நடந்துதானா இல்லன்னு தான்
சொல்லனும்.

பின்ன ஏன் விவாதம் பன்றோம். .ஹ்ம்ம்.. கண்ணன் எப்பவோ சொன்ன மாதிரி இது
கிட்ட ஒரு "Obsession" ஆயிடுச்சோன்னு கூட ஒரு சந்தேகம்.

யாரும் கண்டுக்காம விட்டிருந்தா, இது மாதிரி திருப்பி திருப்பி ஒரே
சப்ஜெக்டை திருப்பி திருப்பி ரீசைக்கிள் பண்ணி போஸ்ட் பண்னுவாங்களான்னு
தெரியாது.

நிஜ வாழ்க்கைல யாரும் கிரந்தம் வேணாம்னு இது வரைக்கு சொன்னதில்லை.
சொல்லப்போறதும் இல்லை. BTW என்னோட வோட்டர் ஐ.டி கார்டு வினோத் ரா"ஜ"ன்னு
தான் சொல்லுதுங்கறது வேற விஷயம்.

இதெல்லாம் நிஜ வாழ்க்கைல ஏதாவது இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுமா ? கிட்டத்தட்ட
அதுவும் இல்லை தான். இது கிட்டத்தட்ட வர்ச்சுவல் ரியாலிட்டு MMPORG கேம்
மாதிரி ஆயிடுச்சு :-)

Internet Psychology ஏதோ கொஞ்சம் கொஞ்சமா புரியுது.

ஆக, எல்லா விவாதங்களோட பிரதிபலனும் பூஜ்யம் (பூச்சியம்னு தான்
சொல்லனும்னு சொல்வறங்க அப்படி சொல்ல்லிக்கலாம், அதுவும் கூடாது
சுழியம்'நு தான் சொல்லனுங்கறவங்களும் சொல்லிக்கலாம் ). எந்த காலத்துலயும்
யாரும் கட்சி மாறப்போறதில்லை.

இப்ப விவாதம் பன்றவங்க தான் இன்னும் பத்து வருஷம் கழிச்சியும் விவாதம்
பன்னுவாங்கன்னு தோணுது. சப்ஜெக்ட் அப்ப்டியே தான் இருக்கும்.

சோ.....

ஆஹா.. எனக்கும் ஞானம் வந்திடுச்சு..

யே தர்மா ஹேதுப்ரபவா
ஹேதுன் தேஷாம் ததாகதோ ஹ்யவதத்
தேஷாம் ச யோ நிரோத
ஏவம் வாதி மஹாஷ்ரமண:

எந்த நிகழ்வுகள் காரணங்களினால் எழுகின்றனவோ
அவற்றுக்கான காரணங்களை புத்தர் கூறியுள்ளார்
அவற்றின் முடிவையும் கூட
இவ்வாறே உரைக்கிறார் மஹாசிரமணர்.

:-)

V

N. Ganesan

unread,
Oct 20, 2009, 8:43:23 AM10/20/09
to மின்தமிழ்

On Oct 20, 7:40 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:

> "நான் பார்த்த வரைக்கும்" 2007ல இருந்து சண்டை நடக்குது (இப்ப 2009 -
> 2010) ஆகப்போகுது. (நா.கண்ணன் சரியான கணக்கு சொல்லுவாரு :-) ).
>

தொல்காப்பியர் காலத்தில் இருந்து :)

amachu

unread,
Oct 20, 2009, 11:04:24 AM10/20/09
to mint...@googlegroups.com
அகத்தியர் திருமூலர் காலத்திலிருந்து நல்லிணக்கம் நிலவுது. ;-)

--

ஆமாச்சு

Geetha Sambasivam

unread,
Oct 20, 2009, 11:07:29 AM10/20/09
to tamizh...@googlegroups.com, மின்தமிழ்
//ஆஹா.. எனக்கும் ஞானம் வந்திடுச்சு..//

ஆஹா, எனக்கும்!!!!!!

2009/10/20 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Oct 20, 2009, 11:43:33 AM10/20/09
to மின்தமிழ்
> //ஆஹா.. எனக்கும் ஞானம் வந்திடுச்சு..//
> ஆஹா, எனக்கும்!!!!!!

Join the club !

:-)

நமக்கும் இனி ஆயிரம் கை, பதினொரு தலை வர வேண்டியது தான் பாக்கி :-))

http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/0882.jpg

V

On Oct 20, 8:07 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> //ஆஹா.. எனக்கும் ஞானம் வந்திடுச்சு..//
>
> ஆஹா, எனக்கும்!!!!!!
>

> 2009/10/20 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

devoo

unread,
Oct 20, 2009, 1:48:01 PM10/20/09
to மின்தமிழ்
Oct 20, 8:43 pm,வினோத் ராஜன்

> Join the club !<

வினோதின் தலைமையில் அணி திரண்டு விடலாம்.
அது பௌத்த ஸங்கமானாலும், தமிழ்ச் சங்கமானாலும்.

தேவ்

விஜயராகவன்

unread,
Oct 20, 2009, 6:25:10 PM10/20/09
to மின்தமிழ்
On 20 Oct, 11:09, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> விநோத்,
>
> வணக்கம். ரவிசங்கர் விக்கிபீடியாவில் பணியாற்றுபவர்.


திரு கணேசன்

”பணி” புரிபவர் என்றால், ஏதோ யாரோ அவரை ச்ம்பளம் கொடுத்து, அவரிடம் வேலை
வாங்குகிறார்போல் எழுதுகிறீர். சில தனித்தமிழ் தலிபான்கள் திட்டமிட்டு,
தமிழ்விகி நிர்வாகத்தில் தங்களை தாங்களே நியமித்து, அந்த பொதுத் தளத்தில்
மற்றவர்களை வரவிடாமல் செய்து, தங்கள் பிற்போக்கு வாதத்தை அமல்
செய்கின்ரனர். அது “பணி” இல்லை. அதுதான் “பணி” என்றால், சந்தனக் கடத்தல்
வீரப்பனும் பல நாள் காடுகளில் ”பணி” செய்துவந்தான். பிக்பாக்கெட்டுகளும்
பொது இடத்தில் “பணி” செய்கின்றனர்.

>
> அவர் ஒரு மடலில் இந்தப் பதிவைத் தந்தார்.http://blog.ravidreams.net/2009/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%...


>
> கிரந்த எழுத்துக்கள் பல பக்கங்களில் இருக்கின்றனவே.


பிரச்சினையே, ஏன் மற்றொருவர் சில எழுத்துகளை ‘முடிந்தளவு’ எழுதமுடியாதபடி
திணிக்க வேண்டும். ஒருவன் தங்கள் ஒரு பாக்கெட்டுகிலிருந்து பர்ஸை உருவி
விட்டான். ஆனால் அவன் கொள்ளைக்காரன் இல்லையாம், ஏனெனில் உங்கள் மற்ற
பாக்கெடை உருவவில்லையே, உங்கள் கைக்கடிகாரத்தை உருவவில்லையே, அதைப்
போலத்தான் உள்ளது, இந்த வாதம். பல கிரந்தம் உள்ள வார்த்தைகள் இருப்பது,
தலிபான்கள் அடிப்படைவாதம் செய்யவில்லை என்பதை நிரூபிக்காது.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 20, 2009, 6:36:50 PM10/20/09
to மின்தமிழ்
On 20 Oct, 13:40, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> இதெல்லாம் நிஜ வாழ்க்கைல ஏதாவது இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுமா ? கிட்டத்தட்ட
> அதுவும் இல்லை தான். இது கிட்டத்தட்ட வர்ச்சுவல் ரியாலிட்டு MMPORG கேம்
> மாதிரி ஆயிடுச்சு :-)

இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் இருந்து பல ஒளி ஆண்டுகள் தூரம்.

தமிழ் தொல்காப்பியர் அச்சிலிருந்து வரவேண்டும், ஆங்கிலக் கலப்பு ஒழிக என
மார்தட்டுபவர்கள், பலர் ஆங்கிலத்தில் படித்து, ஆங்கிலத்தில் பிழைப்பு
செய்து, தங்கள் குழந்தைகளையும் ஆங்கில கல்வியில் முன்னேற்றம்
செய்கின்றனர். யாரும் தமிழில் ரசாயன பொறியியலோ, ராகெட் விஞ்ஞானமோ,
மனோதத்துவமோ தமிழில் படித்ததில்லை, யாரும் படிக்கப் போவது இல்லை. “தமிழ்”
என்றவுடன் ஒரு மத ரீதியான, சடங்கு ரீதியான பேச்சுகள் பேசவேண்டுமே, அதன்
விளைவுதான் தனித்தமிழ் விபரீதங்கள். நாஜி ஜெர்மனியில், ஹிட்லர் என்றவுடன்
Sieg Heil என கத்துவார்கள். அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் தமிழ்
என்றவுடன் காமென் சென்ஸ், நிஜத்துவ உணர்வு (Sense of Reality) மூட்டை
கட்டுகின்றனர். தமிழ் என்பதை ஒரு மதமாக்கி விட்டார்கள்.


விஜயராகவன்

N. Kannan

unread,
Oct 20, 2009, 10:30:11 PM10/20/09
to mint...@googlegroups.com
அடடா!

வினோத், விஜயராகவன் மடல்களில்தான் எத்தனை உண்மைகள் உள்ளுறை உவமமாய்!

தூய்மைவாதிகள் எங்கு பதுங்கினாலும், எப்படிப் பேசினாலும் racist தான்.
இதை உணர ஒரு பக்குவம் வேண்டும்.

தமிழ் மனத்தின் அழுக்காறு காட்டும் கணினிதளம் வாழ்க!

க.>

2009/10/21 விஜயராகவன் <vij...@gmail.com>:

விஜயராகவன்

unread,
Oct 21, 2009, 12:17:47 PM10/21/09
to மின்தமிழ்
திரு.கண்ணன்

தனித்தமிழ் விபரீதங்களை நான் ஒரு racist ஆக பார்க்கவில்லை.

தனித்தமிழ் தலிபான்கள் மேல் என் விமரிசங்கள்

1. தன் காதில் விழும், கண் முன்னே இருக்கும் தமிழை வெறுப்பது
2. மக்கள் பொதுவாக பயன்படுத்தும் மொழியை வெறுப்பது.
3. தூய பிம்பப் படுத்தப்பட்ட “தூய மொழியை| தூக்கி, அதைதான் எல்லோரும்
பின்பற்ற வேண்டும் என்பது
4, மொழியை சரித்திர பரிமாணத்திற்கு அப்பால் வைப்பது
5. பல நூற்றாண்டுகள் காலாவதியான இலக்கணங்களையும், இலக்கிய நடைகளையும்
இன்று திணிப்பது.
6. நாம் பேசும் மொழியின் மீது ஒரு காமன் சென்ஸ் பார்வை இல்லமல், அதை ஒரு
மதமாக தூக்கி, துதி மேடையில் வைப்பது.

இவை எல்லாம் ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இருந்தால் அதை - தனி
அபிப்பிராயம்- மன்னித்துவிடலாம். ஆனால் பொதுத்தளங்களில் அதை மற்றவர்கள்
மேல் திணிப்பது மன்னிக்க முடியாதது.

விக்கியில் அவர்கள் செய்யும் பணி
1.படிப்பவர்களை குழப்புவது
2. எழுதுவர்களை அவமதிப்பது
3. அறிவு வளர்ச்சியை முட்டுகட்டை போட்டு தடுப்பது
4. ஒவ்வொரு விக்கி கொள்கைகளையும் புறக்கணிப்பது.

100 ஆண்டுகள் தனித்தமிழ் இயக்கம் பிறகு, எல்லோரும் தமிழை விட்டு
ஆங்கிலத்திற்கு ஓடுகின்றனர் - தனிததமிழ் தலிபான்கள் சேர்த்து. அதில்
தனித்தமிழ் இயக்கம் மற்றும் அதற்கு அறிவு ஜீவிகள் கொடுக்கும் இடம்
முக்கிய பங்கை வைக்கின்றது.


இந்த துதி மனப்பான்மை வளர, வளர உலக விஷயங்களில் தமிழர்கள் மேலும், மேலும்
தோல்வியை அடைகின்றனர். திராவிட நாடு, மாநில சுயாட்சி, தமிழ் முன்னேற்றம்,
தமிழில் உயர்படிப்பு, ஜாதி காழ்ப்பற்ற சமுதாயம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு
ஒவ்வொன்றிலும் தமிழ்நாடு மண்ணை கவ்வியுள்ளது. இன்னும் கவ்வுவதற்கு பல
விஷயங்கள் உள்ளன.

விஜயராகவன்

On 21 Oct, 03:30, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அடடா!
>

> வினோத்,விஜயராகவன்மடல்களில்தான் எத்தனை உண்மைகள் உள்ளுறை உவமமாய்!


>
> தூய்மைவாதிகள் எங்கு பதுங்கினாலும், எப்படிப் பேசினாலும் racist தான்.
> இதை உணர ஒரு பக்குவம் வேண்டும்.
>
> தமிழ் மனத்தின் அழுக்காறு காட்டும் கணினிதளம் வாழ்க!
>
> க.>
>

> 2009/10/21விஜயராகவன்<viji...@gmail.com>:


>
> நாஜி ஜெர்மனியில், ஹிட்லர் என்றவுடன்
>
>
>
> > Sieg Heil என கத்துவார்கள். அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் தமிழ்
> > என்றவுடன் காமென் சென்ஸ், நிஜத்துவ உணர்வு (Sense of Reality) மூட்டை

> > கட்டுகின்றனர். தமிழ் என்பதை ஒரு மதமாக்கி விட்டார்கள்.- Hide quoted text -
>
> - Show quoted text -

வினோத் ராஜன்

unread,
Oct 21, 2009, 1:23:20 PM10/21/09
to மின்தமிழ்
> தனித்தமிழ் விபரீதங்களை நான் ஒரு racist ஆக பார்க்கவில்லை.

இந்த மனோபாவம் வெளிப்படையாக தெரியாது. இந்த எதிர்ப்புக்கெல்லாம் அடிப்படை
இனவாத மனோபாவம் தான். மனித மனோதத்துவம் ஓரு புதிர். பல தளங்களில் பலவாறு
வெளிப்படும். சிலது வெளிப்படையாக தெரியும், சிலது உள்ளார்ந்த நிலையில்
செயல்படும்.

இப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இருந்து இன்னொரு நாட்டினர் குடி
புகுகின்றனர். பல நூறு ஆண்டுகளாக பேதமே இல்லாமல் ஒரே குடியாக ஒன்றினைந்து
வாழ்கின்றனர். திடீரென்று ஓர் அரசன் வருகிறான், நீங்கள் வேறு இனம்,
நாங்கள் வேறு இனம், உங்களால் எங்கள் நாட்டின் தூய்மை, அடையாளம்,
ஒழுக்கம் கெடுகிறது. வெளியேறுங்கள் என்கிறான். எல்லாரையும்
வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான். பிறர் அவர்களை வெளியேறினால் வெகுமதி
தருவதாக அறிவிக்கிறான்.

இது வெளிப்படையான இனவாத போக்கு.

இப்போது இங்கே வாங்கள்.

தமிழ் மொழி உள்ளது. கிரந்த எழுத்துக்கள் தமிழில் குடி புகுந்து, பல நூறு
ஆண்டுகளாக தமிழோடு ஒண்டிக்குடித்தனம் நடத்துகிறது. தமிழோடு பின்னி
பிணைந்து இருக்கிறது. திடீரென்று வருகிறார்கள் கிரந்தம் தமிழில்லை, தமிழை
கெடுக்கிறது, தமிழ் இலக்கணத்தை சிதைக்கிறது. வலுக்கட்டாயமாக
நீக்குகிறார்கள், பிறர் நீக்கவும் வற்புறுத்துகிறார்கள்.

இது என்ன போக்கு ?

இதற்கும் இனவாத போக்கே காரணம். ஆயினும் இங்கு அது வெளிப்படையாக
தெரியவில்லை, ஆயினும் Subtleஆக தனது இனவாதமே வந்து நிற்கிறது.

V

On Oct 21, 9:17 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> திரு.கண்ணன்
>

>

விஜயராகவன்

unread,
Oct 21, 2009, 1:41:33 PM10/21/09
to மின்தமிழ்
வினேத்

நீங்கள் சொல்வது புரிவது. இனவாதத்திற்கே இயக்கங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
கருத்து அளவில் நாம் பார்க்கும் தூய மொழி அடிப்படை வாதம் இனவாதத்திற்கு
வழித்துணையாக சென்றுள்ளது. பிரச்சார அளவில், இயக்கம் அளவில், கருத்து
அளவில், பிரச்சாரகர்கள் அளவில் இரண்டும் பிணைந்து, நிறைய overlap
உள்ளது.

ஆனாலும் கருத்து அளவில் நான் இரண்டையும் பிரித்து பார்க்கிறேன். அதனால்
சில நன்மைகள் உண்டு என நினைக்கின்றேன்.

விஜயராகவன்

> > > - Show quoted text -- Hide quoted text -

வினோத் ராஜன்

unread,
Oct 21, 2009, 2:03:21 PM10/21/09
to மின்தமிழ்
உண்மை தான்.

கிரந்தம் எதிர்ப்பு என்பதை இனவாதம் Lite™ என்று வைத்துக்கொள்ளலாம் :-)

V

On Oct 21, 10:41 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> வினேத்
>
> நீங்கள் சொல்வது புரிவது. இனவாதத்திற்கே இயக்கங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
> கருத்து அளவில் நாம் பார்க்கும் தூய மொழி அடிப்படை வாதம் இனவாதத்திற்கு
> வழித்துணையாக சென்றுள்ளது.  பிரச்சார அளவில், இயக்கம் அளவில், கருத்து
> அளவில், பிரச்சாரகர்கள் அளவில் இரண்டும் பிணைந்து, நிறைய overlap
> உள்ளது.
>

>

N. Kannan

unread,
Oct 22, 2009, 10:32:32 AM10/22/09
to mint...@googlegroups.com
Probably Tamilnadu has not open up on such subtle issues yet. In
essence the root cause of puritanism of any sort is racism. You call
it on a language, on ethnicity or on religion. They are the same in
different shades. That's all.

Kannan

OAGAI NATARAJAN

unread,
Oct 28, 2009, 3:28:00 PM10/28/09
to mint...@googlegroups.com


2009/10/20 N. Ganesan <naa.g...@gmail.com>
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூரல்
உண்ணீரும் ஆகி விடும்.
 
(மண்ணீர் = துவைப்பதற்கு ஆகும் நீர்.)
 
ஓகை நடராஜன்.
 
 
 
-~--~---------~--~----~------------~-------~--~----~
 "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~----------~----~----~----~------~----~------~--~---


Reply all
Reply to author
Forward
0 new messages