"தண்புலர் விடியல்
கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.
மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:
இங்கு பழைய சோற்றுக்குச் சொட்டானமாக வரால் மீன் குழம்பு அமைகிறது.
(தொடரும்)
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxdigfdpq2O6XqhhTSob9e58Tv4EpyiQgqQLWdz8Mg8w%40mail.gmail.com.
என் ஐயம் வேறு.'பொம்மல்' பழைய சோற்றைக் குறிப்பது போல; 'நிமிரல்' பழைய சோற்றைக் குறிக்கிறதோ என....சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctxMFryx4HxWQE%2B%2BOMYad%3DxgKrM%3DQdnYHEcoDYM%3D-ttiA%40mail.gmail.com.
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.
கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------
சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/
இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdOSVKVB46ygTXK4rdvncDDDBzbku7qKBJ3eLRBzRUM7w%40mail.gmail.com.
'கோட்புலிச் சுழல் கண் அன்ன' ... எனச் சொல்லப்படும் கூட்டு/ கடிச்சிக்கிட / வெஞ்சனம் எது? any idea?
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct_-43ub7xN%3DK%2BdKqAom99fanO1ebNTw9_%3DvjHPwfVUZA%40mail.gmail.com.
'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்"பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர்.அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர்"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvaCStpS5sZ3CMOPrv2er4ZteJ%3Di7%3D92UuxqYm6kJEdxg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdRptHMD70xjGkHoQZ7719J9p7i7Uepeza1%3D%2B1eK798%3DA%40mail.gmail.com.
நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.
On Tue, 17 Oct 2023 at 17:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.நிமிர் ஒலிக் கருத்து இல்லை. நிமிர் என்றால் பொங்குதல் கருத்தில் உயர்வை குறித்து வந்திருக்க வேண்டும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4ea2c137-47b4-4529-a48e-a8c1995c6861n%40googlegroups.com.
பல் பூ கானல் பகற்குறி மரீஇ செல்வல் கொண்க செறித்தனள் யாயே கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார் பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த 5 கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும் மருங்கூர் பட்டினத்து அன்ன இவள் 10 நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4ea2c137-47b4-4529-a48e-a8c1995c6861n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsv2KXTMWF-mJd-sAdgMNTENN57t3D0_c5cXJtSVP8tFQ%40mail.gmail.com.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4ea2c137-47b4-4529-a48e-a8c1995c6861n%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsv2KXTMWF-mJd-sAdgMNTENN57t3D0_c5cXJtSVP8tFQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdDwFDVYzayqYJCeJwMNxByjqZ%2BCkV51E_CGp8U9N1VjQ%40mail.gmail.com.
அவர்கள் காக்கைக்குப் பலிச்சோறு கொடுப்பதாகப் பாடல் சொல்லவில்லேயே. அவர்கள் முதல்நாள் விருந்தயர்கின்றனர். மறுநாள் எஞ்சிய சோற்றைக் புறக்கடையில்... வீட்டிற்கு வெளியே கொட்டுகிறார்கள்.பலிச்சோறு கொடுப்பதற்கும் கொட்டுவதற்கும் வேறுபாடு இருக்கிறது.சக
மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.
”பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
காக்கைக்குப் பலிச்சோறு படைப்பதானால் குறுந்தொகை 210 சொல்வது போலக் கலத்திலோ அல்லது இலையிலோ வைப்பர். புறக்கடையில் உகுக்க மாட்டார்கள்.
சக
On Wednesday, October 18, 2023 at 1:49:16 PM UTC-5 kanmani...@gmail.com wrote:காக்கைக்குப் பலிச்சோறு படைப்பதானால் குறுந்தொகை 210 சொல்வது போலக் கலத்திலோ அல்லது இலையிலோ வைப்பர். புறக்கடையில் உகுக்க மாட்டார்கள்.நெல் உகுத்துப் பரவும் கடவுள். அதுபோல, விருந்தினர் வருகை கூறும் காக்கைக்கு, நிமிரல் உகுத்துப் பரவினர்.புறங்கடை = வீட்டுக்கு வெளியே உள்ள முற்றம்.
காக்கைக்கு இடும் பலிச்சோறு வீட்டு முற்றத்தில் (புறங்கடை) நிகழுகிறது.
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/822bc550-2639-4b79-9418-b50f36fb29cfn%40googlegroups.com.
மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.
”பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctXpPXKtXgMRgS_GsOvsxHAoMdQJjC4ztEQY5cEvai1hw%40mail.gmail.com.
மென்_புலத்து வயல் உழவர் வன்_புலத்து பகடு விட்டு குறு முயலின் குழை சூட்டொடு நெடு வாளை பல் உவியல் பழம் சோற்று புக வருந்தி 5 புதல் தளவின் பூ சூடி அரி_பறையால் புள் ஓப்பி அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து மனை கோழி பைம் பயிரின்னே கான கோழி கவர் குரலொடு 10 நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து வேய் அன்ன மென் தோளால் மயில் அன்ன மென் சாயலார் கிளி கடியின்னே அகல் அள்ளல் புள் இரீஇயுந்து 15 ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் சீர் சான்ற விழு சிறப்பின் சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் செல்லா நல் இசை உறந்தை குணாது நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் 20 அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி கதிர் நனி சென்ற கனை இருள் மாலை தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின் தீம் குரல் .....அரி குரல் தடாரியொடு 25
ஆங்கு நின்ற என் கண்டு சிறிதும் நில்லான் பெரிதும் கூறான் அரும் கலம் வரவே அருளினன் வேண்டி ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை பொன் போல் மடந்தையை காட்டி இவனை 30 என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே அகன் ஞாலம் பெரிது வெம்பினும் மிக வானுள் எரி தோன்றினும் குள_மீனோடும் தாள் புகையினும் 35 பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என உள்ளதும் இல்லதும் அறியாது ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே 40
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc%2B6xOgymaXq6TcSjGPMzFt0sKgKRTbORc0RcfzLQST7Q%40mail.gmail.com.
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை நிழல் காண் தேறல் நிறைய வாக்கி யான் உண அருளல் அன்றியும் தான் உண் மண்டைய கண்ட மான் வறை கருனை கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர 25 வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே பறை இசை அருவி பாயல் கோவே
புறம். 398
நான் 'கொக்குகிர் நிமிரல்' பற்றித் தொடர்கிறேன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdg5Btp5_DX49KaF2QamCqJEJQe2mh%3DHbH-KbpSwUr2fA%40mail.gmail.com.
தொகை இலக்கியத்தில் 'கொக்குகிர் நிமிரல்' இடம் பெறுவது போல் சீவக சிந்தாமணியிலும் இடம் பெறுவதை எடுத்துக் காட்டிய முனைவர் கணேசனுக்கு நன்றி."கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொள் தேமாங் கனி சுவைத் தயிரோடு ஏந்தி..."இப்பாடலில் இடம்பெறும் 'கோட்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை' என்ற தொடர் சேனைக்கிழங்கின் பூவைக் குறிப்பதாக விளக்கிப் படத்தோடு உதவிய முனைவர் கணேசனுக்கு மீண்டும் நன்றி.பொருள்:'முல்லை மோட்டு இளமுகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல்' = முல்லைக் கொடியில் பூத்த இளம் மொட்டுக்களை ஒத்த கொக்கின் உகிர் போன்ற (பழஞ்)சோறுபழஞ்சோற்றுக்கு இரண்டு உவமைகள்1. பார்ப்பதற்கு முல்லை மொட்டுப் போல் தோன்றும் பருக்கைகள் (நிறம், அளவு அடிப்படையில் அமையும் ஒப்புமை)- கட்புல உருக்காட்சி.2. தொடுபுல உருக்காட்சியாக அமையும் கொக்கின் நகம் போன்ற பருக்கைகள்'வெண்சோறு ஊட்டுறு கறிகொள் தேமாங்கனி' = வெண்ணிறப் பழைய சோற்றுக்குக் கூட்டாகும் (கறியாக/ கடிப்பானாக/ வெஞ்சனமாக) தகுதி பெற்ற இனிய மாம்பழம்'சுவைத் தயிரோடு ஏந்தி' = சுவை மிகுந்த தயிரோடு கொணர்ந்து...ஆக; இந்தப் பாடலும் 'கொக்குகிர் நிமிரல்' = பழைய சோறு தான் என்று சொல்லத்தக்க வகையில் மிதவை எனப்படும் குழம்பு எதையும் காட்டாமல் கட்டித் தயிர் ஊற்றி மாம்பழமும் சேனைப்பூக் கூட்டும் வைத்து உண்ணற்குரியதாகக் காட்டுகிறது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu-OSgaP39PiS7eOEHH5TOncvwand_-WeALFZ5AydzQ3w%40mail.gmail.com.
நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்
***************************************************
தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.
இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம்.
”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி).
"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’ என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.
அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.
சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).
> 'கருனை' பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளத் தனி இழை தொடங்கி இருக்கிறேன். அங்கே பேசலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfYBYc66jns0WPEedc%2B%3D5FAyN-FhuCb8%3DSxqnx5LOxDsw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsqdR1Seep_ZqYghN0SyZii8rVqOd_shgGnpqU%2BwyrCGQ%40mail.gmail.com.
இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசி; தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை போல 'சேரன் வஞ்சன் கொடுத்த 'கொக்குகிர் நிமிரல்' = சுடுசோறு என நிறுவ வேண்டிய தேவை எனக்கு இல்லை.நெல்லரிசிச் சோறு சமைத்து உண்ட வேந்தர், வேளாளர், திணை மாந்தர் (உழவர், கிழார், பாணர்) எல்லோரும் அன்றாடம் எஞ்சிய சோற்றைப் பழைய சோறாக்கும் பக்குவம் தெரிந்து பதமாக உண்டனர். இது தரம் தாழ்ந்த உணவுமுறையாக அன்று கருதப்படவில்லை.
பசுங்கட் கருனை, கருங்கட் கருனை இரண்டும் ஒரே பொருளன. அப்பெயர்க் காரணம் பின்வருமாறு: பண்டைத் தமிழர் உண்ட ஊன்வகைகள் பலப்பல ஆயினும் அவ்விலங்குகள்/ பறவைகளைப் பதப்படுத்தும் போதும் சமைக்கும் போதும்; கண் நீக்கப்படாது திறந்த நிலையில் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருப்பது கருவாடும் மீனும் தான்.மீனைச் சுத்தம் செய்வோர் செதில்களை நீக்குவர்; இருபுறமும் செவுள்களை நீக்குவர்; குடலை நீக்குவர்; வாயில் பல் இருக்கும் பகுதியை வெட்டி எறிவர்; மேல் அண்ணத்தை ஒட்டிய சவ்வை நீக்கி சமைப்பர். தலை திறந்தநிலைக் கண்களுடனேயே காட்சி அளிக்கும்.எனவே சோற்றோடு கூட்டும் மீனும் கருவாடும் பசுங்கட் கருனை/ கருங்கட் கருனை எனப்பட்டது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsqdR1Seep_ZqYghN0SyZii8rVqOd_shgGnpqU%2BwyrCGQ%40mail.gmail.com.
> மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை
> உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:
'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
"பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர்.
அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர்"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.பழஞ்சோற்றுப் பெரும்புகவு = பழைய சோறு என்று ஐயமின்றித் தெளியலாம்.கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.(தொடரும்)சக
On Sun, 15 Oct 2023, 6:51 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
"சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி" (பட்டி.44-45)என்ற அடிகள் காவிரிப்பூம் பட்டினத்து அட்டிற்சாலையில் நெல்லு(அரிசி)ச்சோறு ஆக்கி வடித்த வளத்தைப் பேசுகின்றன.
நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன.
முதல்நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் உண்ணும் போது அது 'பொம்மல்' என்று அழைக்கப்பட்டதை நற்றிணை (பா-60) மூலம் அறிகிறோம்.
"தண்புலர் விடியல்
கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு
கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார்.
மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:
இங்கு பழைய சோற்றுக்குச் சொட்டானமாக வரால் மீன் குழம்பு அமைகிறது.
(தொடரும்)
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvaCStpS5sZ3CMOPrv2er4ZteJ%3Di7%3D92UuxqYm6kJEdxg%40mail.gmail.com.
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர
அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்) அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம். Murugan, Agananuru, piRagu, ...
உவித்தல் - நீரில் இட்டு கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு - humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்: "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).
சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdoqo0-KrU27wV-TN4f6YwgH7MZkvy_cGzJr82MBHGNiw%40mail.gmail.com.
சக
பசுங்கட்கருனை / கருங்கட் கருனை மீன் எனக் கருதக் காரணமாகும்... வஞ்சிர மீன் கருவாடு . இதே போல் எந்தக் கருவாடாக இருந்தாலும் இப்படித்தான் திறந்தநிலையில் கண்கள் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருக்கும்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsDCR28BZt%3DZaY5dt0cUfH-k%2BUf%2B5cjVW9MUaFnLHCOfw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUc8Dy8xtheKJ%2BgdoyfsW%3Dvbs4bogY3PNoWYKbRcm9xPLg%40mail.gmail.com.
"அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி காடி வெள் உலை கொளீஇ நீழல் ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை 5 செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன மெய் களைந்து இனனொடு விரைஇ...
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ் புழுக்கல்"புறம்.399
குறுநில மன்னன் ஆகிய தொண்டைமான் இளந்திரையன் செந்நெல் அரிசியைப் புழுக்கி விருந்து அளித்தான். ‘பெருஞ் செந்நெல்லின் தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல்’ எனப் பெரும்பாணாற்றுப்படை அடி-474ல் அவ்வரிசியின் நீளத்தைப் பேசுகிறது.
எயினர் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருத்த அரிசிச் சோற்றை விருந்தினர்க்கு அளிக்கின்றனர் (பெரு.அ.131-133).
தவிட்டுச்சத்து நீங்காத கைக்குத்தல் அரிசியில் வெந்த சோறு எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். இதை
“மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண் சோறு” (அகம்.136) என்ற பாடலடி காட்டுகிறது. இது ஒரு மணவிருந்தின் வருணனை ஆகும். மேற்சுட்டிய பாடலடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் 'இறைச்சி கூட்டி ஆக்கிய வெள்ளிய சோறு' என உரை கூறியுள்ளனர். ஆனால் ஆலையில் இயந்திரத்தால் தவிடு நீக்கி வெண்மை கூட்டும் அரிசியை விடக் (polished rice); கைக்குத்தல் அரிசியில் சோறு ஆக்கினால் அது எண்ணெய்ப் பசையுடன் (rice bran oil) இருப்பது அனுபவத்தில் காணும் நடைமுறை உண்மை. எனவே இங்கு இடம்பெறும் புழுக்கு ஊன்புழுக்கு அன்று; அதனால் நெய் ஊனிலிருந்து உருகிய கொழுப்பும் அன்று. பாடல் தோன்றிய காலம் கைக்குத்தல் அரிசி மட்டும் புழங்கிய காலம் ஆதலால்; நெல்லரிசிப் புழுக்கு என்பதே பொருந்தும்.
இரண்டு வேளையும் வரகுச்சோறே உண்ட பாணர்க்குக் கிள்ளிவளவன் அரிசிச் சோறாம் ‘அமலை’ உண்ணுமளவு பொருள் கொடுத்தான் என்கிறது புறம்.34. நெல்லுச் சோறு சாப்பிடுவது வாழ்க்கைத் தரம் உயர்ந்தமைக்கு உரிய அடையாளமாகக் கருதப் பட்டது.
சக
...முகிழ் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
///நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும்./// Dr.Ganesan wrote on 18th Oct.இந்தக் கொள்கை தவறு என்பதைப் பின்வரும் மேற்கோளும் விளக்கமும் உணர்த்துகிறது.முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் உண்டமை பற்றிப் பாடுகிறார்....முகிழ் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்பொரு.அ.112-114முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)முரவை போகிய = தீட்டியமுரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசிவிரல்என நிமிர்ந்த... புழுக்கல்= விரல் போல நீண்டு வெந்த...எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் போது; 'நிமிரல்' ஒலிக் குறிப்பால் உருவான பெயர் அன்று என்பதும்; அது அரிசி வேகும் போது அளவால் நீண்டு விரல் போலக் காணப்படுவதால் உருவான பெயர் என்றும் புரிகிறது.சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQkTXZtgZnh3NmUwwaYWLamWsQ%2BBTXx%2BEciBKyjsGYm-w%40mail.gmail.com.
தனித்தன்மை வாய்ந்த கொக்கின் உகிர்
இத்தகு புதைநிலையே நீரில் ஊறும் சோறுக்குக் கொக்கின் உகிர் உவமையாக உருவெடுக்கக் காரணம் ஆகி உள்ளது.
https://www.tnwatchablewildlife.org/files/DiscoverBirds_4_beaks_and_feet.pdf
சக
தனித்தன்மை வாய்ந்த கொக்கின் உகிர்
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPRRCZytXwBFcX4b03beOF8aO4jQcV7uvYsjaj%2BbQkiTSg%40mail.gmail.com.
சக
இன்று காலை எழுந்தவுடன் எடுத்த படமும் காணொலியும்...பருக்கையின் அளவில் மாற்றம் இல்லை. அதைக் காட்டத் தான் ஒரு தேக்கரண்டி சோறும் ஒரு பருக்கையும் இடையில் ஒரு அரிசியும் வைத்துக் காட்டி இருக்கிறேன். நேற்றைய பருக்கையின் அளவோடு இதன் அளவை ஒப்பிட்டுப் பார்க்க... மாற்றம் ஏதும் இல்லை. சோறு இன்னும் பொருமிப் பொம்மல் ஆகவில்லை.
அடுத்து ஒரு பருக்கையை இரு விரல்களால் மூன்று முறை நசுக்கியும் அது மசியவில்லை... சோறு விறைப்புடன் இருக்கிறது. (காணொலி:இணைப்பில்) அதனால் தான் பண்டைத் தமிழன் 'கொக்குகிர் நிமிரல்' என்று பெயர் வைத்து இருக்கிறான்.எனவே நிமிரல் = வெந்த சோறு.; கொக்குகிற நிமிரல் = ஓர் இரவு ஊறிய சோறுஇந்தக் கொக்குகிர் நிமிரலைத் தான் சேரன் வஞ்சனும் கரிகால் பெருவளத்தானும் விருந்தினருடன் சேர்ந்து உண்டனர் எனலாம்.இந்தக் கொக்குகிர் நிமிரலுக்கு இணையாகச் சேர்த்து உண்ணத் தக்கவையாகத் தொகையிலக்கியம் காட்டுவன...1. சுட்ட கருவாடு (ஏற்கெனவே பதிந்தது... சில மாற்றங்களுடன்...)புலவர்க்குப் 'பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரலு'க்கு உரிய இணையாகப் ‘பசுங்கட் கருனைச்' சூடு அளிக்கிறான் பிடவூர் கிழான்மகன் பெருஞ் சாத்தன் என்ற உழவர் தலைவனைப் பெரிதும் மதிக்கும் இன்னொரு கிழான்... பாடலில் அவன் பெயர் இல்லை (புறம்.395). பசிய கண்ணை உடைய மீனின் சூடு அங்கே இணை சேர்கிறது.சூடு = சுட்டது; பசிய கண்ணை உடைய கருனை (கூட்டு)= கருவாடு.இந்த இணை இன்று வரை மக்கள் மத்தியில் தன் பெரும் செல்வாக்கை இழக்கவில்லை.2. உப்புக்கண்ட வறுவல்முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் உப்புக்கண்ட வறுவலுடன் நீரில் ஊறிய சோறுஉண்டமையைப் பாடுகிறார்."...முகிழ் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப அயின்ற காலை" பொரு.அ.112-115
முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)முரவை போகிய = தீட்டியமுரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி
விரல் என நிமிர்ந்த = விரல் போல் நீளமாகி வெந்துகாடியின் மிதப்ப = 'புளிச்ச தண்ணி' எனப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நீராகாரத்தில் மிதந்து இருக்கநிரல் அமை = அதற்கு ஒத்த இணையாகச் சேரும்பரல் வறைக்கருனை = பரல்களைப் போல் தோன்றும் வறுத்த (deep fry) பொரிக்கறியுடன்அயின்ற காலை = உண்ட போழ்து...நிமிர்ந்து வெந்த சோற்றை உண்கலத்தில் பரிமாறி; அத்துடன் உப்புக்கண்ட வறுவலைக் கூட்டினால் அது புளித்த நீரில் மிதக்கும்.ஆக இம் மேற்கோள் பகுதியில் இடம் பெறும் 'விரல் போல் நீண்டு வெந்த சோறு புளித்த காடி'யோடு இருப்பதால் பழைய சோறு ஆகிறது. அதோடு இணையாகச் சேரும் கருனை பார்ப்பதற்குப் பரல் போல் தோற்றம் அளிப்பதால் அது உப்புக்கண்டம் ஆகிறது.எனவே சோழன் கரிகாலன் பழைய சோறுக்கு ஏற்ற துணை உணவோடு விருந்து அயர்கிறான்.சேரன் வஞ்சன் பாயல் நாட்டுப் பகுதியின் வேந்தன் ஆவான்.வஞ்சன் பரிமாறிய கூட்டு மானிறைச்சியைப் பதப்படுத்தி வறுத்த (deep fry) உப்புக் கண்டம் ஆகும்."...யான்உண அருளல் அன்றியும் தான்உண் மண்டைய கண்ட மான் வறைக்கருனை கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர... உரை செல அருளியோனே பறை இசை அருவி பாயல் கோவே" புறம்.398தனது உண்கலத்தில் இருந்த மான்கறி உப்புக்கண்டத்தை எடுத்துப் புலவரின் உண்கலத்திற்குப் பரிமாறி உண்ண வைத்தான் என்பதை வெளிப்படையாகப் பெருமை பொங்கப் பாடுகிறார் புலவர்.சக
ஆயிற்று... சோறு நுரைத்து இருப்பதைப் பார்க்கவும். இப்போது இது பழைய சோறு. இதைத்தான் பிடவூர் உழவர் உண்டனர். ஆக கொக்குகிர் நிமிரலைக் கரிகால் பெருவளத்தானும் சேரன் வஞ்சனும் உண்ண உழவர் பொம்மல் / பழைய சோறு உண்டனர். இன்றைய சமூகம் ஆறிய சோற்றில் நீர் ஊற்றினாலே அதைப் பழையது என்று சொல்லக் காரணம் சமைப்பது இயந்திரத் தீட்டல் அரிசி. அந்தச் சோறு இப்படி மூன்று நாள் தாங்காது.
சக
எங்கள் ஊரில் இரண்டே இரண்டு கடைகளில் மட்டும் தான் கைக்குத்தல் அரிசி கிடைக்கிறது. இத்துடன் இணைத்திருக்கும் படத்தில் காண்பது போல் பழுப்பு (ப்ரௌன்) வண்ணத்தில் இருக்கும். இது தீட்டப்படாதது... அதாவது உமியை மட்டும் நீக்கி விட்டுச் (unpolished) சந்தைப் படுத்துவது. அதனால் தான் இந்த நிறம். இப்போது நான் இதை ஊறப் போடுகிறேன். மணி பகல்12 ஆகி விட்டது. சோறு வடித்தவுடன் 'நிமிரல்' எனும் சுடுசோற்றுக்கு உரிய விளக்கம் பொருந்துகிறதா? எனப் பார்ப்போம்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu3Vd7G7frK9zsb5cVvDYKSyrbhCCf2K4u46UUasqYY%3DA%40mail.gmail.com.
"...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலை" பொரு.அ.112-115
"அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை நிழல் காண் தேறல் நிறைய வாக்கி யான் உண அருளல் அன்றியும் தான் உண் மண்டைய கண்ட மான் வறை கருனை கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே
பறை இசை அருவிபாயல் கோவே" புறம். 398
ஒரு சிறு வேறுபாடு. இங்கே காட்டுவது மான்கறி உப்புக் கண்டம் அன்று; வெள்ளாட்டங்கறி உப்புக் கண்டம்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcyFEkY_7jx0qedSFAQqC0EDuYk2B49aP0paEwSR%3D-y0A%40mail.gmail.com.