Re: [MinTamil] வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் புழக்கத்திற்கு..!

505 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:38:41 PM3/23/15
to mint...@googlegroups.com, vallamai


On Monday, March 23, 2015 at 5:25:48 PM UTC-7, megala.ramamourty wrote:
//வானரம் - குரங்கின் இரு பாலுக்கும் பொது.//
ஆம்...வானரம் என்பது குரங்கின் இருபாலுக்கும் பொதுவாகத்தான் பெரும்பாலும் வழக்கிலுள்ளது. வாலுள்ள குரங்கு, வாலில்லாக் குரங்கு இரண்டுக்குமே இது பொதுச்சொல் என்கிறது இணைய அகராதி.

ஆயினும், குற்றாலக்குறவஞ்சிப் பாடலொன்றில் ’வானரம்’ என்ற சொல் ஆண்குரங்கைக் குறிப்பதாய் வந்துள்ளதாகத் தோன்றுகிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்...(அடடா... என்ன அழகான பாடல்!)

குறுந்தொகைப் பாடலொன்றில் ‘கலை’ என்ற சொல் ஆண் குரங்கை (கடுவனைக்) குறிப்பதாக வந்திருக்கக் காண்கிறேன்.

கலை என்பது முசுவைக் குறிக்கும்.
கல்-/கர்- = கருப்பு.
கலைமா(ன்) = கிருஷ்ணமிருகம் = blackbuck.

அகநானூறு 241 பற்றி CTamil லிஸ்ட்டில் பேசியபோது,

இந்தியாவில் குரங்கின் இனங்கள் பற்றிச் சொன்னேன்.

நா. கணேசன்

 

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி...(குறுந் - 69)


அன்புடன்,
மேகலா


Notes: 

kalai - refers to the stag of blackbuck. (kalaimAn2, is the vehicle of Durga in art and literature, and we know it is the black buck from Tamil sculptures). The stag in this Akam 241 poem is chasing after a mirage, that is what thetalaivi thinks of his pursuits, perhaps.

The pAlai-t-tiNai poem Akam 241under discussion is very similar in contents with the pAlai poem 151. Note the similarity of the poets' names as well. Same kalaimAn2 (blackbuck stag) appears in both and stands for the hero. Also, the talaivi < - > palli in 151 where as talaivi < > manti in 241.

Note that the "cemmuka manti" which is the female of the special bonnet macaques (macaca r. diluta. current range: extreme south of India). I think the cemmuka manti stands for the talaivi herself, the manti (female monkey) plays nellik kAy-s just like she is playing with kazaGku beans back home, with her heart being tossed up and down in the emotional times when he has gone off to far away places leaving her behind.

பொதிகைமலைச் செம்முக மந்தி (அரிய இனம்):



"துய்த்தலைச் செம்முக மந்தி” (அகம் 241). Even though this special bonnet monkey
(macaca r. diluta) is now restricted to extreme South, in Sangam times, its historic range could have included entire south India):



பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு 
சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்
(புறநானூறு 200)

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந்தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
(புறநானூறு பாடல் 378) 

கடுவன் 
முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக் 
கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த 
செம்முக மந்தி செல்குறி கருங்கால் 
பொன்இணர் வேங்கைப் பூஞ்சினை
(நற்றிணை 151)

ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க
(நற்றிணை 95)

வட்டக் கழங்கில் தாஅய்த் துய்த்தலைச்
செம்முக மந்தி 
ஆடும்
(அகநானூறு 241)

கருவிரற் செம்முக வெண்பற்சூன் மந்தி
பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப்-பெருவரைமேற்
றேன்றேவர்க் கொக்கு மலைநாட! வாரலோ
வான்றேவர் கொட்கும் வழி
(திணைமாலை நூற்றைம்பது)

சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ 
டுழிதரும் எழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. 
(சம்பந்தர், முதல் திருமுறை)

கைம்மகவேந்திக் கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்
செம்முக மந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி
(சம்பந்தர், திருமுறை)


Choice 2: ஊர்க்குரங்கு (அ) நாட்டுக்குரங்கு (macaca r. radiata): சினைக்காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் மந்திகளின் நிறம் சற்றுச் சிவப்பாயிருக்கும். They are called Bonnet moneys and endemic in south India. 












செம்முகக் குரங்கு (Rhesus macaque}:
http://en.wikipedia.org/wiki/Rhesus_macaque The rhesus monkeys are very, very rare in south India, but whether they existed in the South in sangam times is unknown. 
















To learn more, 
The special bonnet monkey (macaca r. diluta)
http://www.flickr.com/photos/anujnair/3500620860/
http://www.drkrishi.com/tag/macaca-diluta

Common bonnet monkey:
http://obiologoamador.blogspot.com/2010/10/macaco-de-barrete-macaca-radiata.html
http://www.treknature.com/gallery/Asia/India/photo228119.htm

The Bonnet Macaque Revisited: Ecology, Demography and Behaviour - Anindya Sinha
http://oldwww.wii.gov.in/envis/primates/page30.htm



------------------------
கலை மான் (Blackbuck stag): antilope cervicapra
http://en.wikipedia.org/wiki/Black_buck



கலைமான் (ஆண்) திருகுகொம்பு உடையது. பெண்மாண்களுக்குத் திருகுகொம்பு இல்லை (female blackbucks have little spikes only, if at all they show up.)





இந்தியாவிலே உருவான மான் குடும்பம் - கலைமான் (கிருஷ்ணமிருகம்).
ஆசியா வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கலைமான்
இயற்கையின் நன்கொடை.




இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள். இந்த வகை மான்களில் கருநிறத்தில் அல்லாமல் பழுப்பு நிறமாக பெண்ணினம் இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாக இம் மானினத்தைப் புல்வாய் என்கிறோம்.

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)

கல்-/கரு- ‘black' > கலை, இரலை (Cf. ஈரல்) - இரண்டும் கருமான் ஆகிய புல்வாய்-ஏறு ஆகும்.

கருமை நிறமல்லாத பெண்-புல்வாய்க்கு கரியபொருள் தரும் கலை அல்லது இரலை என்ற பெயர் பொருந்தாது அன்றோ? எனவே, ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாய் முழு இனத்தையும் குறிப்பிடப் புல்வாய் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளுகிறார். 

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 
(தொல். பொருள். மரபியல் 46)

துர்க்கை/கொற்றவை சிந்து சமவெளிக் காலத்திலிருந்து தொல்தமிழர் வணங்கும் தெய்வம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கொற்றவையின் வாகனம் கலைமான் (Blackbuck stag) என்று தமிழ் இலக்கியமும் சிற்ப வரலாறும் காட்டிநிற்கிறது.


[Photo Courtesy: Dr. Michael Rabe, St. Xavier University, Chicago.
Durga with black antelope as vahana. From Chennai museum, originally from Tanjore district. Note that Durga sculptures with black antelope are found only in Tamil Nadu in India.]

சிலப்பதிகார வேட்டுவ வரியில், எயினர் மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்து திரிதரு கோட்டுக் கலைமான் ஊர்தியில் ஏற்றுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் (சிலம்பு)

சிவபெருமானின் கையில் கணிச்சி மழுவும், கலைமானும் (கருமான்) விளங்குகின்றன. தேவாரச் செய்யுள்களில் ”கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி மெய்யமரும் பொடிப் பூசி”, “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும், ”கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம்”, ”செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் 
கையர் கனைகழல் கட்டிய காலினர்” ”மைஞ்ஞிறமான்”...

சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கலைமான் ஏந்துவது ஏன்?

Presence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338 
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25]. 
[...] 
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it. 

Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim. 

Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin." 

பிரமனுக்கும் கலைமான் உரி உண்டு, சிவன் மனைவி கொற்றவை, பிரமனின் கலைமகள் இருவருக்கும் கலைமான் ஊர்தி. வட மொழியில் கலைமான் (கருமான்) க்ருஷ்ணமிருகம்
என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கருமான் = கிருஷ்ண மிருகம். ஈஸ்வரன் (பிரமனும்தான்) விரும்பி எப்போதும் அணிவது கிருஷ்ணமிருகம் எனப்படும் கலைமான் (கருமான்) தோலையே. சிவன், பிரம்மா சிலைகளில் யக்ஞோபவீதத்தில் கலைமான் தலை இருக்கும். 
பிரமன், சிவன் அணிவதால் அவர்கள் துணைவியர் கலைமகள், கொற்றவை இருவருக்கும் கருமான்/க்ருஷ்ணமிருகம் வாகனமும் ஆகும். ”கருமானின் உரியதளே உடையா வீக்கி” தேவாரம்.

காளமேகப் புலவர் சிவபிரானின் திருவீதி உலாவையும் - தமிழரின் 10 சாதிகளையும் சிலேடையாகப் பாடும் பலருமறிந்த செய்யுளில் கருமான் என்பது கம்மாளனுக்கும்,கலைமான் ஏற்றைக்குமாய் வருகிறது.

கட்டளைக் கலித்துறை

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் தாழக் கருமான் துகிலினைக் கொண்டணிந்த
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! 

கலைமான் கறுப்பு நிறத்தினால் ஏற்பட்ட பெயர் என்று காட்ட மேலும் இரு விலங்குகளுக்கும் கலை என்ற பெயர் காட்டலாம். முசு (Tufted gray langur, லாங்கூலம்/நாங்கூழை) குரங்கில் விசேடமாக ஆணுக்கு கலை எனப் பெயர். முசு ஆங்கிலத்தில் Madras langur (or) Malabar langur எனப்படுகிறது. முசுவுக்கு மைம்முகன் என்ற பெயரை நிகண்டு கொடுக்கிறது. வடநாட்டில் இதற்கு நெருங்கிய உறவுடைய முசுவை ஹனுமான் குரங்கு என்கிறார்கள்.

http://www.birding.in/mammals/presbytes_01.htm
http://hannahz.hubpages.com/hub/7-Fun-Facts-on-the-Gray-Langur-Indias-Most-Widespread-Monkey










இந்துமகாசமுத்திரத்தை வாழிடமாகக் கொண்ட சுறா மீன்களுக்கும் கலை என்ற பெயர். கலைமான் போலவே பெரும்பகுதி கருமை காணலாம்.
http://en.wikipedia.org/wiki/Tiger_shark
http://www.ehow.com/info_8432415_types-sharks-indian-ocean.html 









 
    




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 23, 2015, 8:56:25 PM3/23/15
to mint...@googlegroups.com, vallamai
On Monday, March 23, 2015 at 3:20:18 PM UTC-7, செல்வன் wrote:
நாகு - இளமை என்பதற்கான தமிழ்ச்சொல்


பெரும்பாணாற்றுப்படையிலும், புறநானூற்றிலும், திருமுருகாற்றுப்படையிலும் பலியாகும்
”விடை” என்பது ஆடு. அதனை ஊர்மன்றில் அறுத்து புலாச்சோறு செய்து ஊரார் உண்டு மகிழ்ந்தார்கள்
என்று பெரும்பாணாற்றுப்படையிலும், திருமுருகில் முருகனுக்கு கிடாய்ப் பொலி (பலி) தரப்பட்டது
என்றும் பார்க்கலாம். இவையெல்லாம், ஊரே மாட்டை வெட்டிச் சாப்பிட்டதல்ல. அப்படி சங்க
இலக்கியத்தில் அரசவை, திருக்கோவில்கள், ஆகோள் கொண்டபின் ஊர்மன்றத்தில் நடக்கும்
கொண்டாட்ட திருவிழா எல்லாவற்றிலும் ஆடு இல்லை, மாடுகளைக் கொன்று ஊரார் எல்லோரும்
உண்டார்கள் என்றால், மாடு அடித்து சாப்பிடும் வழக்கம் எப்போது மாறியது? என்று காட்டவேண்டும் அல்லவா?
சங்க காலத்திலும் அதன் பின்னரும் வேளிர்களும், வேளாளர்களும் சமூகத்தில் மாடு அடித்துப்
பலி இடுதலை நிறுத்திவிட்டார்கள் என்பது வரலாறு. 

அதே பெரும்பாணாற்றுப்படையிலே முல்லை நில இடைச்சியர் பெண்ணொருத்தி
நெய்க்கு விலையாக ஆணிப்பசும் பொன்னே கொடுத்தாலும் பெற்றுக்கொள்ளமாட்டாளாம்.
அதற்குப் பதிலாக நாகு இளம்கன்றுடன் உள்ள எருமையை வாங்கிக்கொள்வாளாம்.
அப்பொழுது பால்கறந்து ஊற்றி அவள் குலவணிகம் தழைக்கும் அல்லவா?

நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள், 
எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் 
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின், 

எருமை நல்லான் = நல்ல எருமைமாடு. அதன் கன்னங்கரிய கண்ணுக்குட்டி = கருநாகு
முல்லை நில ஆய்ச்சி பெறுவது. ஆயர்களுக்கும், ஆய்ச்சியர்க்கும் மாடுகள்
தெய்வம். பொன்னைத் தூசாக எண்ணுவர். கிருஷ்ணபிரான் ஆயன் தான்.
அவனோ, அவர் குலத்தாரோ மாடு பலிகொடுத்து மாட்டுக்கறி தின்றான் என்று சங்க இலக்கியத்திலோ,
மஹாபாரதத்திலோ உண்டா? இருந்தால் தாருங்கள்!

நா. கணேசன்
 

shylaja

unread,
Mar 23, 2015, 9:02:13 PM3/23/15
to mintamil, vallamai
தமிழ்மொழியின் தொன்மையைப்பற்றி விளங்கும் பாடலை அண்மையில் ஒரு தமிழ்ப்பாவலர் மூலமாய் தெரியவந்தது


வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினில்
கையினால் உரை காலம் இறந்திட
பைய நாவை அசைத்த பழந்தமிழ்....

சைகைமொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் மாறியதும் பயன்படுத்திய முதல்மொழி தமிழ்தானாம்!

அகத்தியர் வளர்த்த தமிழுக்கு ராமர்பெருமானே வணங்கியதாய் கம்பராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு.

அகத்தியரை ராமன் வணங்கியதும் அவர் இப்படிக்கூறுவதாய் அமைந்தபாடல் இது.


நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்றவனும் அன்போடு தழீஇ அழுத கண்ணான்
நன்றுவர வென்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்.


கண்ணனின் சிறுவயது சேட்டைகளை பெரியாழ்வார் கூறும்போது,

எண்ணைக்குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழும்பிக்
கண்ணைப் புரட்டி விழித்து
கழகண்டு செய்யும்பிரானே!


விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார்.

அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க! 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

நலம்   வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!

வேந்தன் அரசு

unread,
Mar 23, 2015, 10:34:05 PM3/23/15
to vallamai, mintamil
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

shylaja

unread,
Mar 23, 2015, 10:38:44 PM3/23/15
to vallamai, mintamil
பந்தனை.............அசதி, களைப்பு

(//அந்தியம் போதிலரியுருவாகி அரியையழித்தவனை
பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.//

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Mar 23, 2015, 10:41:03 PM3/23/15
to vallamai, mintamil
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..

2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Mar 23, 2015, 11:03:18 PM3/23/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்

வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார். 

பொருட்குற்றமாம். 

..... தேமொழி 




On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

shylaja

unread,
Mar 23, 2015, 11:07:48 PM3/23/15
to vallamai, mintamil
வேந்தர் அல்லவா  அதான்:):)

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 23, 2015, 11:34:46 PM3/23/15
to vallamai
கலைமான் பிணைமானுக்கு ஊழியம் செய்வதுதானே இலக்கியம் காட்டும் மரபு.  கலைமான் என்றால் ஆண்மான் என்றதும் காட்சி மாறிவிட்டதோ
சர்க்கரைச்சீமான்

N. Ganesan

unread,
Mar 24, 2015, 6:52:07 AM3/24/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Monday, March 23, 2015 at 8:03:16 PM UTC-7, தேமொழி wrote:
கலை = ஆண்மான்
பிணை = பெண்மான்

வேந்தர் மிக நுட்பமாக ஆராய்து கவலைப்படுகிறார். 

பொருட்குற்றமாம். 

கலை என்பது முசுவைக் குறிக்கும்.
கல்-/கர்- = கருப்பு. கலைமா(ன்) = கிருஷ்ணமிருகம் = blackbuck.
ஆண் விலங்குகளே கறுப்பாய் இருப்பதால், கலை என்றால்
அவற்றிற்கு வரும்.

சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்
தெரிய வாய்ப்பில்லை. 

மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோ
பால்மயங்கலாம்.

ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:

நா. கணேசன்
 

..... தேமொழி 




On Monday, March 23, 2015 at 7:41:03 PM UTC-7, shylaja wrote:
என்ன தவறு வேந்தரே புரியவில்லையே..
2015-03-24 8:04 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
கண்ணே கலைமானே என்று கண்ணதாசன் கடைசியாக எழுதிய பாடல் தவறோ
கண்ணே பிணைமானே என்று எழுதி இருக்கலாம்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 7:03:53 AM3/24/15
to vallamai, mintamil

2015-03-24 16:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சினிமா பாடலாசிரியர்களுக்கு இந்த சொல்வேர் நுட்பம்
தெரிய வாய்ப்பில்லை. 

மேலும், இசைக்காகவோ, வேறுகாரணங்களுக்காகவோ
பால்மயங்கலாம்.

ஆண் மயில் தானே தோகை விரிக்கும்?

மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்:

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்விவிழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின் உணர்ந்து, அரசர் கோ நகர் அடைந்தார். 

பால காண்டம், சந்திரசைலப் படலம்.

நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன 

கைகேயியைப் பற்றிய பிரபலமான மேற்கோள்.

‘பால் மயங்கலாம்’ என்று மனங்கனிந்து சொன்னீரோ, கம்பன் சினிமாக் கவிஞன் ஆகாமல் பிழைத்தானோ!  கண்ணே கலைமானே பாட்டை அளவுக்கு மேல நோண்டினவர் என்ன சொல்ல வரார்னு புரியல.  அடுத்தவங்கள முட்டாளடிக்கறதுல ஒரு சந்தோஷமோ!  இருக்கட்டும்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 7:43:53 AM3/24/15
to mintamil, vallamai
இந்த இழை தமிழ் மரபு கட்டளைக்கு முக்கியமான இழை. வருங்காலத்துக்கு உதவும். இதை பொறுப்புடன் வழி நடத்துவது பொது பணி. அங்கு போய் குரங்கு படங்கள் 'மானாவாரியாக'( இந்த சொல்லை கவனிக்கவும்.)நிரப்புவதில் யாருக்கு ஆதாயம்? மிக்க ஆவலுடன், செல்வன் செய்த மாதிரி, நானும் எழுத நினைத்தேன். சாண்றுக்கு கிரியா அகராதி, லிஃப்கோ அகராதி, லெகசிகன் எல்லாம் என் கண் முன்னால் அணி வகுத்து நிற்கின்றன. இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.

Hari Krishnan

unread,
Mar 24, 2015, 7:45:59 AM3/24/15
to mintamil, vallamai

2015-03-24 17:13 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
இந்த் இழை 'குருட்டாம்போக்கில்'( இந்த சொல்லை கவனிக்கவும்.) போவதால் எனகு சலிப்பு மிகுந்து விட்டது.

மன்னிக்கவும்.  இழைத் தலைப்பை கவனிக்கத் தவறிவிட்டேன்.  உங்களுடைய பங்களிப்பால் செழிப்பு பெருகட்டும்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2015, 8:05:34 AM3/24/15
to vall...@googlegroups.com, mintamil
புரிதலுக்கு நன்றி, திரு.ஹரிகி. மற்றவர்களும் புரிந்து கொண்டால் நான் 'ஆசுவாசப்படுத்திக்கொள்வேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 24, 2015, 8:08:58 PM3/24/15
to mint...@googlegroups.com, vallamai

On Tuesday, March 24, 2015 at 8:33:49 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:

ஏற்றம் ,கவலை,  போன்ற  சொற்களும்  வழக்கொழிந்து போய்விட்டன


கமலை - பேச்சு வழக்கில் கவலை. 

இன்னுமோர் குறிப்பு. கோம்பை ... போன்ற சொற்களில்
கோம்- வேர் இயங்குவது. இதுவே, கோமளம்.
வெண்காலூர் நீதியரைசரால் பதவிநீங்கியுள்ள செயலலிதா அம்மையாரின்
ஒரு பெயர் கோமளவல்லி என்று கேள்வி.  

கோமளம் > கமலம் (வடமொழியில் அரைவிரிந்தத்தின் (= அரவிந்தத்தின்) 
ஒரு பெயர்). இது த்ராவிடம் என்பர் சம்ஸ்க்ருத அறிஞர்,

 கமலம் போல் மூங்கில், இரும்புத் தப்பை ஃப்ரேம் மேல்,
தோல் மூடிச் செய்யப்படுவது கமலை. பேச்சுவழக்கில்
கமலை கவலை இறைப்பது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 25, 2015, 8:56:29 AM3/25/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, March 24, 2015 at 9:23:18 PM UTC-7, Dev Raj wrote:

நட வாவி’ என்பதும் உள்ளது; படிக்கட்டுகளோடு ஒருவர் இறங்கிச்சென்று நீராடும்
நீர் நிலை என்று பொருள் கொண்டேன்; தவறாகவும் இருக்கலாம்


தவறில்லை. 

நடைவாவி > நடவாவி. “stepwell"
திருமதி. சுபா விடியோ பதிந்த வெள்றை ஸ்வத்திக நடைவாவியை
தமிழில் ‘சோத்திக நடவாவி’ எனப் பெயர்.

நெல்வாயில் அரைத்துறை > அரத்துறை (தேவார தலம்)
அரை = அரைச மரம் (தொல்காப்பியம்) = அரச மரம். இதிலிருந்து
அரைசி, அரைசன், அரைசு > அரசி, அரசன், அரசு உருவாகிறது.

அரைவிரிந்த (பூ) > அரவிர்ந்த > அரவிந்தம் (என தமிழ்ச்சொல் வடமொழிச் சொல்லாய்
வடக்கே திரிபு ஏற்பட்டதும் காண்க).
இங்கே, அரை = ஆர். தாமரைப் பொகுள் (கர்ணிகம்) அரை/ஆரில் முடியும். கர்ணிகத்தில்/பொகுட்டில்
விரிவன இதழ்கள். அரவிந்தம் சொற்பிறப்பும், அரவிந்தப் பாவையான லக்‌ஷ்மியை
கோவலன் (க்ருஷ்ணன்) மனைவியாக கர்ணகீ (>கண்ணகி) தன் தமிழ்த்தேசிய நாவலில் ஹீரோ-ஹீரோயின்
ஆக்குகிறார் இளங்கோ அடிகள். அவரது சமண சமயத்தில் பலதார மணம் கண்டிக்கப்படுகிறது.
(உ-ம்: குறள்.) எனவே, கோவலன் பரத்தையர் உறவுகளுக்காக நாவலில் கொல்லப்படுகிறான்.

நா. கணேசன்
 

தேவ்

N. Ganesan

unread,
Mar 26, 2015, 7:47:20 PM3/26/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, March 24, 2015 at 11:58:00 AM UTC-7, தேமொழி wrote:


On Tuesday, March 24, 2015 at 11:36:22 AM UTC-7, Suba.T. wrote:


அடுக்களை (சமையலறை)

அடுக்களை என்பது பேச்சு வழக்கு என்று நினைத்திருந்தேன். இது தூய தமிழா? கட்டுரைகளில் பயன்படுத்தலாமா?


மணிமேகலையில் சமையலறை என்ற பொருளில்தான் வருவதாகத் தெரிகிறது சுபா.

நாஞ்சில்நாடன் தாலி பற்றி விரிவாகச் சொல்லியுள்ளார். சிலம்பிலிருந்து:
அஞ்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

அடுக்களைத் தாலி என்பது பற்றியும் சொல்லியுள்ளார்.
எம்ஜிஆர் கடைசி காலத்தில் கட்டினது அடுக்களைத் தாலி.

வள்ளலார் புதியகோட்பாடுகள் தந்தவர். தாலிவாங்குதல்
பற்றிச் சொல்லியுள்ளார் புரட்சிகரமாக. தாலி வாங்குதல்
பற்றிக் கம்பன் பாடிய பாட்டைக் காட்டினேன்.

நா. கணேசன்
 

புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது
வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம்

மணிமேகலை   ( பாடல் 29, வரி 61)
தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை



..... தேமொழி

N. Ganesan

unread,
Mar 28, 2015, 3:15:30 AM3/28/15
to mint...@googlegroups.com, vallamai
மீன்களின் பெயர்கள்:

சங்க நூல்களில் மீன்கள்

லேபிள்கள்: தமிழ்
1 ) அயிலை (காணாங்கெழுத்தி)

2 ) 
அயிரை

3 ) 
ஆரல்

4 ) கயல்
(
வெண்கயல்செங்கயல்கருங்கயல்
(
காக்கா மீன்) ; குறுமுழிக் கெண்டை
இரு கயல் மீன்கள் பாண்டியரின் அடையாளமாகச் 
சங்க
 காலத்திலிருந்து மிக பிற்காலம் வரை 
வழங்கியிருக்கின்றன
.
பாண்டியனுக்கு 'மீனவன்என்ற பெயரும் இதனால் வந்தது...



5 ) கெண்டை (வெண் கெண்டைசேல் கெண்டை)

6 ) 
கெடிறு (கெளிறுகெளுத்தி)

7 ) 
கொழு மீன் (நெய்த்தலைக் கொழுமீன்நெத்திலி - பொருவா)

8 ) 
குழல் மீன் (பூங்குழல்பால்மீன்பால்கெண்டை )

9 ) 
நுழை மீன் (நிலம் கரைஞ்சான்)

10 ) 
மலங்கு ( விலாங்குமிராங்கநூழைசேற்றுப்பாம்பு)

11 ) 
வரால்
(
வரி வரால்வெள்ளராவஞ்சிரம்விரால்
இருவிரால்
பூவரால்குறவை)

12 ) 
வாளை (நன்னீர்ச் சுறாபூனை மீன்சொட்டை வாளை)

13 ) 
சுறா
(
கோட் சுறாகடுஞ்சுறாகடுமுரண் எறி சுறா,நிணச்சுறாஓங்கில்சுறாபெருமீன்,வள்ளுவன் சுறா,பிள்ளைச்சுறவுபால்சுறா)
ஆற்றுச்சுறாநீலச்சுறாகொப்புளிச் சுறாகுண்டன் சுறாகூர சுறா,
திமிங்கிலச் சுறா } 

14 ) 
கோட்டு மீன்
கொம்பன் சுறாசம்மட்டித் தலையன் சுறா (ஆங்கிலத்தில்),
நெட்டைக் கொம்பன் சுறாகுட்டைக்கொம்பன் சுறாகட்டைக்கொம்பன் சுறாமண்வெட்டிச் சுறா)

15 ) 
வாள் சுறா
வாட் சுறாவாள்வாய்ச் சுறவுவேளா சுறாதண்டச் சுறவு
இம் மீனின் வாளைப் பரதவர் நட்டு வணங்கியதை பட்டினப்பாலை கூறியுள்ளது.
வாள் சுறாவையே மகரம் என அழைத்துள்ளனர். 

16 ) இறா ( சேயிறா, பெருஞ்சேய் இறா, வெள்ளிறா, பச்சிறா, மோட்டிறால், கூர்நல்லிறா )


17 ) சிறு மீன் ( ஐய், சிறுகண் செங்கடை, கண்ணிக் குறியன் ) 


18 ) பெரு மீன் ( திமிலம்; திமிங்கிலம், யானை மீன், பனை மீன்)


இடுகையிட்டது தீர்த்தக்கரை (கங்காதரணி) நேரம் ஞாயிறு, டிசம்பர் 05, 2010 

வேந்தன் அரசு

unread,
Mar 28, 2015, 6:59:31 AM3/28/15
to vallamai, மின்தமிழ்
இவற்றுள் செம்மீன் எது?

28 மார்ச், 2015 ’அன்று’ 3:15 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 28, 2015, 9:22:45 AM3/28/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Saturday, March 28, 2015 at 3:59:31 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
இவற்றுள் செம்மீன் எது?


2015-03-28 3:59 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

இவற்றுள் செம்மீன் எது?


கே-/கே(ழ்) என்னும் வேரினின்றும் தோன்றும் கயல் = கெண்டை (< கேழ்) . “red carp"

விரிவு பின்னர்,
நா. கணேசன் 

N. Ganesan

unread,
Mar 28, 2015, 1:57:57 PM3/28/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, March 26, 2015 at 6:32:03 PM UTC-7, Pandiyaraja wrote:

கீதாம்மா மதுரைப்பக்கத்துப் பேச்சு வழக்கை நன்றாகவே உற்றுக் கவனித்திருக்கிறீர்கள். சங்கம் வளர்த்த மதுரை அல்லவா! அவற்றில் பல சொற்கள் சங்க வழக்காறுகள் என்பதுதான் விந்தையான செய்தி.

 


பாண்டிநாட்டிலும், ஈழநாட்டிலும் “வெள்ளென” என்பதை விரைந்து/வேகமாக என்ற பொருளில்
லட்சக்கணக்கானோர் நாள்தோறும் பயன்படுத்துகிறார்கள். அரிசோனனும் குறிப்பிட்டார்.
அப் பழைய பொருளைக்  கொண்டால், சங்கப்பாடல்களில் இரண்டுக்கு பொருள் சிறக்கும்
எனத் தோன்றுகிறது.

(1) புறம் 359”
இழைகிளர் நெடுந்தே ரிரவலர்க் கருகாது
கொள்ளென விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்குநீ யெய்திய புகழே

காஞ்சித் திணை, பெருங்காஞ்சித் துறை
 இது யாக்கை நிலையாமை கூறி்ப் புகழுண்டாக வாழ்தலை வற்புறுத்தியது.

வெள்ளென - விரைந்து, திடுதிப்பென்று
இவ்வுலகை நீத்துவிட்டாய் என்றாலும்,
இரவலர்க்கு நீ கொடுத்தது உன் புகழாய் நிற்கும் என்கிறார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை - குறள்.
திணையும், துறையும் ”வெள்ளென” = வேகமாக 
சென்றுவிட்டாலும் என்று புலவர் 

(2) புறம் 207

 
பாடாண் திணை. பரிசில் துறை.

எழுவினி நெஞ்சஞ் செல்கம் யாரோ
பருகு வன்ன வேட்கை யில்வழி
அருகிற் கண்டு மறியார் போல
அகனக வாரா முகனழி பரிசில்
5 தாளி லாளர் வேளா ரல்லர்
வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
பெரிதே யுலகம் பேணுநர் பலரே
மீளி முன்பி னாளி போல
உள்ள முள்ளவிந் தடங்காது வெள்ளென
10 நோவா தோன்வயிற் றிரங்கி
வாயா வன்கனிக் குலமரு வோரே.

 வெளிமான் துஞ்சியபின் அவன் 
தம்பி இளவெளிமானைப் பரிசில் கொடுவென, அவன் சிறிது 
கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது.


பெருஞ்சித்திரனார் கோபத்துடன் பாடிய பாடல் இது.
இங்கேயும் மக்களிடை பெருவழக்காக இருக்கும் “வெள்ளென = விரைவாக்”
என்ற பொருள் சாலும்.

பெருஞ்சித்திரனார்க்குப் பேதுறவு பெரிதாயிற்று. “அறிவிலா மடவோனை 
யிரந்தது குற்றம்; இவனை அறிவு நெறியில் தெருட்டுவதும் நம் கடனே; 
அதனைப் பின்பு செய்வோம்,” எனத் தமக்குள்ளே நினைந்தார். இனித் 
தம்நெஞ்சில்எழுந்தசிவப்பைமாற்றி,  “நெஞ்சே,அருகில் இருப்ப 
இருகண்களால் கண்டு வைத்தும் காணார்போல் முகங் கசந்து நல்குவார் 
நல்கும் பரிசில் பெரிதாயினும், தாளாளர் விரும்பார். வருகென வரவேற்ற 
நல்குவதுசிறிதாயினும்ஏற்றல் தக்கது; அதுவே நம் வரிசைக்கும் தகுதி. 
வரிசையுடையநமக்குஉலகம் பெரிது; நம்மை விரும்பியேற்றுப் பேணும் 
பெரியோர் பலர் உளர். ஆளிபோல மீளிமை குன்றாத நெஞ்சே, நீ உள்ளம்
உடையற்க.கனியாதபழங்கருதிஉழல்பவர்யாவரும்இரார்; எழுக விரைந்து (=வெள்ளென)
வேறிடஞ் செல்வேம்” என மொழிந்து கொண்டார். அதனோடமையாது, 
எடுத்தார்ஏட்டையும்எழுத்தாணியையும்.  தாம்தம்நெஞ்சொடு 
நேர்ந்தவற்றை யெழுதினார்; அது சிறந்த பாட்டாயிற்று. அப்பாட்டு இது.

வாயா வன்கனிக்கு உலமருவோர் யாரோ? நெஞ்சமே? 
உள்ளம் உள்ளவிந்தடங்காது யாளிபோல இனி வெள்ளென (=விரைவாய்)  எழுக!
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

இரண்டு புறப்பாட்டிலும் வெள்ளென = வேகமாய் என்ற அர்த்தம்
மக்களின் பெருவழக்கால் சிறப்படைகிறது.

நா. கணேசன்

1. அருவாக்கறது=தீர்ப்பது

உண்மையில் இது அறவு ஆக்குவது. அறவாக்கல் என்பது பேச்சில் அருவாக்கறது என்று வழங்குகிறது. அறவு என்பது இல்லாமல் போதல்.

 

பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் - மது 216

பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது - பதி 89/4

கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் - அகம் 162/19

நீர் அறவு அறியா கரகத்து - புறம் 1/12

நீர் அறவு அறியா நில முதல் கலந்த - புறம் 271/1

 

 

2. ஊடால= இடையிலே, நடுவிலே

ஊடு என்பது இடையில் என்ற பொருள் தரும். சோளத் தட்டைகளுக்கு இடையே மொச்சையை விதைத்திருப்பார்கள். துவரைச் செடிகளுக்கு ஊடே தட்டையை (தட்டாம்பயறு - காராமணி) விதைத்திருப்பார்கள். இவற்றுக்கு ஊடுபயிர் என்று பெயர். இதற்கும் சங்க வழக்கு உண்டு.

வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் - நற் 366/2

3. எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

இது மிளாறு அல்ல. விளர். சில இடங்களில் விளாரு எனப்படும். எங்கள் தலைமையாசிரியர் கையில் நீண்ட புளியம் விளாரு வைத்திருப்பார். பள்ளிக்குத் தாமதமாக வருவோரை உட்காருமிடத்தில் (ஸ்ரீரங்கம் சுஜாதா வழக்கு!) டவுசரோடு சேர்த்து ஒரு வாங்கு வாங்குவார்.

விளர் என்றால் முற்றாத என்று பொருள். வேப்பங்குச்சி போன்றவை எளிதில் உடைந்துவிடும். புளியங்குச்சி இலேசில் ஒடியாது. முற்றிய குச்சி விறைப்பாக இருக்கும். அடி ‘சுளீர்’எனத் தைக்காது. புளியங்குச்சி முற்றாததாக இருந்தால் வளைந்துகொடுக்கும். அடி பயங்கரமாக வலிக்கும். அதுதான் விளாரு. கைகால்கள் மெலிவாக இருப்பவனைக் குச்சிக்கை, குச்சிக்கால் என்போம். அதனை விளர்க் கை என்கிறார் சங்கப்புலவர்.

இடை சுரத்து இறுத்த மள்ள, விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் - புறம் 254/3,4
4.ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா
அருமையான சங்க வழக்கு இது. உயரமான மலையை ஓங்கு மலை என்பர். இதோ சில சங்க வழக்குகள்:
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154
5. மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். 
இன்னும் எங்களைப் போன்றோர் பயன்படுத்துவது. பைய பைய என்று அடுக்குத்தொடராகவும் வரும். இது பைபய என்று சங்க காலத்தில் வழங்கியுள்ளது.
கை பிணி விடாஅது பைபய கழி-மின் - மலை 383
பைபய பசந்தன்று நுதலும் சாஅய் - அகம் 95/1
 
 ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Mar 29, 2015, 9:14:19 AM3/29/15
to mint...@googlegroups.com, mr.ns...@gmail.com, vallamai, housto...@googlegroups.com
On Sunday, March 29, 2015 at 3:55:18 AM UTC-7, கோதண்டராமன் wrote:
தாலி வாங்குதல் என்பது தாலி அறுத்தல் என்ற பொருளில் சில குடும்பங்களில் வழக்கில் உள்ளது. நள்ளிரவு நேரத்தைத் தாலி வாங்கற நேரம் என்பர்.

தாலி அறுத்தல் என்பது பற்றி சிறுவனிடம் காளமேகம் சிலேடையாகச் சொன்னதை
உவேசா எழுதியுள்ளார். இணையத்தில் அதைச் சிலமுறை எழுதிய ஞாபகம். பார்த்துத் தருகிறேன்

கம்பன் தாலி வாங்குதல் பற்றிப் பாடியுள்ளான். அவ்விருத்தம் இங்கே:

மு. இராகவையங்காரும் தமிழர்கள் இன்னும் கையாளும் வழக்கங்களில்
அரக்கர்கள் சமாச்சாரங்களாகச் சிலவற்றை வான்மீகி பாடியிருப்பதை
சொல்லியுள்ளார்கள். திரு. நாராயணையங்கார் வான்மீகி தமிழரே
என்றார். இப்பத்த இந்தாலஜி படி சொல்லணும்னாக்க, வால்மீகி
தொன்மையான திராவிடர். மகத மண்டிலத்தில் வாழ்ந்தவர் எனலாம்.

கொங்குநாட்டில் பரவலாக இருக்கும் முறை. தலைவியை ஊஞ்சலில் இருத்தி மங்கலன் வாங்குவான்.
வாக்குதல்/வாங்குதல் - பூவும், பொட்டும் கொண்ட மணவாழ்க்கையைச் சாய்த்தல் என்னும் பொருளில்
சொல்வது இந்த வாங்குதல். வாக்கிய- என்னும் சொல்லுக்குப் பேரா. பாண்டியராஜா சங்கவிளக்கம்
கொடுத்திருந்தார்கள். 

வாங்கு-/வாக்கு- தன்வினை/பிறவினை இணைச்சொற்கள் (தேங்கு-/தேக்கு- .... போல)

2009-ல் வாக்கு-/வாங்கு-

கொங்குநாட்டுக் கலியாணங்களில் பெருந்திரி விளக்கு என்று எடுப்பார்கள். அதனையும் கம்பன்
பாடியிருப்பதை ஆழ்வார், கம்பனில் பெரும்புலவர் கம்பராமன் ஐயா பாடிக்காட்டி பலமுறை
விளக்கியுள்ளார்கள். யாராவது விருந்தினர், உறவினர் வந்தால் “நம்ம வீட்டுக்கு வாங்க,
நம்ம தோட்டத்துக்குப் போய்ப்பார்க்கலாம்” என்று அழைப்பது மரபு. இதைப்போல,
“எம்” என்றும் பொருள்படும்படி “நாம்” என்று பாடியுள்ள கொங்கு மண்வாசனையை
கம்பன் பதிந்திருக்கிறான் என்றும் பாடிச் சொன்னார்கள்.

அன்புடன்,
நா. கணேசன்
 

நெற்றியும் முடி உள்ள தலைப்பகுதியும் சேரும் இடத்தை முன்னுச்சி என்று சொல்வார்கள். இது தற்போது வழக்கில் உள்ளதா? 

மரக்கிளையைக் கொம்பு என்று சொல்வது அணில் கொம்பிலே ஆமை கிணற்றிலே,  முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல என்ற பழமொழிகளில் மட்டும் வழங்குகிறது. நடைமுறையில் வழங்குவதாகத் தெரியவில்லை. 

N. Ganesan

unread,
Mar 29, 2015, 10:04:28 AM3/29/15
to mint...@googlegroups.com, mr.ns...@gmail.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com
http://www.visvacomplex.com/TheAgelessImmortalCow.html

சாவா மூவா பேராடு

டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மலேசியா
JayBee


    
                தமிழ்க்கல்வெட்டுக்களில் ஒரு சொற்றொடரைக் காணலாம். 
                'சாவா மூவா பேராடு' என்று காணப்படும். 
                கோயில்களில் நிறுவப்படும் திருப்பணிகளில் திருநுந்தாவிளக்குத் திருப்பணி முக்கியமானது. 

                திருநுந்தாவிளக்கைத்தான் இப்போது 'தூங்காமாணி விளக்கு' என்றும் 'தூண்டாமணிவிளக்கு' என்றும் சொல்கிறோம். இந்த வகை விளக்கு இடைவிடாமல் எப்போதும் எரிந்துகொண்டேயிருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். 
                அது reservoir. அதில்தான் நெய் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் கலசத்திலிருந்து நெய், அதன் அடியில் உள்ள சிறு விளக்குக்கு வரும். அதில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றிவைத்திருப்பார்கள். 
                அந்த விளக்கை அணையவிடுவதில்லை. 

                திருநுந்தாவிளக்குக்கு நெய் நிறையத் தேவைப்படும். ஆகவே அதற்கு நெய் தினப்படி கிடைப்பதற்காக நிவந்தமாக மாடு அல்லது மாடுகள் கொடுப்பார்கள். இந்த மாடு கறவை மாடாக இருக்கவேண்டும்.
                மாடு கிழண்டு போனாலோ, இறந்து போனாலோ அல்லது பால் வற்றிப்போனாலோ வேறொரு பசு கொடுக்கப்படும். இது ஒரு never-ending-chain போல விளங்கும். இதற்காகக் கணிசமான பொருளோ, பொற்காசுகளோ, அல்லது நிலமோ கோயிலுக்குக் கொடுப்பார்கள். அந்த மாட்டின் பராமரிப்பு போக்குவரத்து இத்யாதி விஷயங்களுக்காக.

                இவ்வாறு கொடையில் தடுமாற்றமில்லாது கொடுக்கப்படும் மாடுகளை 
'சாவா மூவாப் பேராடு' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அந்த நிவந்தத்தில் சம்பந்தப்பட்ட மாடு சாகவும் மாட்டாது, மூப்பாகவும் மாட்டாது என்பது அடிப்படையான விஷயம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

N. Ganesan

unread,
Mar 29, 2015, 8:48:21 PM3/29/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கொங்குநாட்டில் அண்ணி, மதினி, நாத்தனார் என்னும் உறவை நங்கையா(ள்) என்போம்.
நங்கை என்பது விளி.

இளங்கோ அடிகள் “நாத்தூண் நங்கை” என்றார். பழமைபேசி நங்கை பற்றிச் சொல்கிறார்.

நா. கணேசன்

தேமொழி

unread,
Mar 30, 2015, 2:00:19 AM3/30/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

///
ஈர் எனும் சிறு பூச்சி
///


ஈர்  என்பது பேனின் முட்டை

பழமொழி: ஓய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்

ஈர் (p. 96) [ īr ] , ஈருs. a nit, the egg of a louse.

ஈர்கொல்லி, (vulg. ஈருளி), ஈர்வலிஈரு ருவி, a kind of comb, used to draw out and destroy nits.
ஈர்வழிக்கஈர்த்துவிட, to comb off the nits.

 



On Sunday, March 29, 2015 at 10:19:22 PM UTC-7, Pandiyaraja wrote:
அன்றைய மதுரை இன்றைய தேனி மாவட்டப்பகுதிகளில் வழங்கியது.
சீமத்தண்ணி- மண்ணெண்ணெய் . இது மண்ணைத் தோண்டுவதால் ஊறுவதுதானே. மண்ணைப் பிழிந்து எடுப்பது அல்லவே!
தொறக்குச்சி - திறவுக்குச்சி = திறவுகோல் - சாவி.
மண்டையிடி = தலைவலி
தொறட்டி - மரத்தில் உயரத்தில் இருப்பவற்றை வளைப் பிடித்து இழுக்க - இழுத்து ஒடிக்க
கவட்டை = Catpult
நாதாங்கி = தாழ்ப்பாள்
கிடுகு = தென்னை ஓலையால் பின்னுவது
ஈர்வலி = தலையில் உள்ள ஈர் எனும் சிறு பூச்சியை எடுக்க உதவும் கருவி.

ப.பாண்டியராஜா

மகப்பேறு இல்லத்துக்கு ஓர் அழகிய சங்கத் தமிழ்ச் சொல் உண்டு.
ஈனில்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் .. என்று சொல்கிறோம் இல்லையா. அந்த ஈன்.


உள்ளூர் குரீஇ துள்ளு நடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர்
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூக் கொழுதும் - குறுந்தொகை 85.

ப.பாண்டியராஜா


On Monday, March 30, 2015 at 10:28:19 AM UTC+5:30, iyenga...@gmail.com wrote:
என் மாமனார் வீட்டில் இன்றும் கிளையையும் ஒடித்த கழியையும் கொம்பு என்றே சொல்லுகிறார்கள். 
அடியேன் ஜனா ராமானுஜ தாசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

Innamburan S.Soundararajan

unread,
Mar 30, 2015, 10:38:37 AM3/30/15
to vall...@googlegroups.com, mintamil
கைக்கா உருளி, குளவாத்திரம், 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 30, 2015, 11:27:45 AM3/30/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, Kana Praba, mozhitrust, S. V. Shanmukam, Dr. Krishnaswamy Nachimuthu


On Friday, March 27, 2015 at 10:24:58 AM UTC-7, oruarizonan wrote:
செட்டினாட்டுப்பக்கம் வழக்கொழிந்த சில தமிழ்ச்சொற்களும்,அவற்றின் பொருளும் 

> கருதறுத்தாச்சு
 = கதிர் அறுத்தாயிற்று. கொங்கிலும் உள்ள தொடர்.

முக்கு = corner.

நோவு = நோய் (மா = மாவு, நா = நாவு போல)

அரிசோனன்> வெள்ளென --  விரைவில் 

இதனால் தான், கேரளாவில் மலைச்சரிவில் விரைந்தோடி கடலுக்குச் செல்லும்
நீரையே பார்த்தோர் தண்ணீரை வெள்ளம் என்கின்றனர். 
வெள்ளத்தை ஆள்பவன் வெள்ளாளன். வெள்ளத்தை ஆள்வது வெள்ளாண்மை/வெள்ளாமை.

ஞெள்ளு/நெள்ளு (> எள்ளு. சுமேரியாவுக்கு சிந்துவெளி கொடுத்த பயிரும், பெயரும் எள்ளு.)
என்றால் கருமை. இது நள்- > நாள் (= இருள்) என்றாகி, நாள் = நடச்த்திரம் என்ற பொருளில்
“நாளும், கோளும்” என தொல்காப்பிய சூத்திரம். ஞெள்- > ஞெண்டு = நண்டு/நள்ளி.
நள்- (= இருள், கருமை) நல்ல- = கருமை. நல்- > அல்- “இரவு’ அல்லும் பகலும்.
அலவன் = இருளில் திரியும் நண்டு. அல்லி = சந்திரனைக் கண்டு இரவில் மலரில் குமுதல் ஆம்பல்.

வெல்லுதலுக்கு முதற் கருவியாய் இருந்த வேல் (முருகனின் ஆயுதம். ஓரிலை கொண்டது) (1) வெல்லு- > வேல்.
(2) நெள்ளு-/நள்ளு > நாள் “விண்மீன் (3) வெள்ளென - விரையும் நீர் வெள்ளம். இதை ஆள்வானுக்கு வேள்
எனப் பெயர். மரியாதைப்பன்மை வேளிர். உ-ம்: கொங்குவேளிர் பெருங்கதை பாடினார்.


புறநானூறு 359 & 207 பாடல்களில்
“வெள்ளென” என்னும் மரபுத்தொடரை
இன்னும் தமிழில், லட்சக்கணக்கான
மக்களால் தினந்தோறும் பேச்சில் உள்ளதைப் பார்க்கலாம்.

கானா பிரபா
‏@kanapraba
வெள்ளென = சீக்கிரமாக, முன்கூட்டியே உ-ம் அவன் வெள்ளெனவே வந்திட்டான். ஒரு ஈழத்தமிழ் மொழிவழக்கு 

veḷḷeṉa - adv. early in the morning, quickly, in haste.

----------------------------------------------------------------------------------------------------------

இணுவில் அமெரிக்கன் மிசன் ஒரு சிறு பாடசாலை என்பதால் பெரிய மைதானம் கிடையாது. அயலில் உள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையின் விளையாட்டு மைதானம் தான் ஆபத்துக்கு கை கொடுக்கும். எங்கள் பாடசாலை விளையாட்டுப் போட்டியென்றால் எங்களை விட சைவப்பிரகாச வித்தியாசாலைப் பெடியளுக்குத் தான் சந்தோசம். ஏனெண்டால் பள்ளிக்கூடம் வெள்ளென விட்டால் தானே விளையாட்டுப் போட்டி நடக்கும். அவங்களுக்கும் அரை நாள் பாடசாலை.

----------------------------------------------------------------------------------------------------------

'எள்ளுன்னா எண்ணெயோட நிக்கிற புள்ளைங்களை இன்னிக்குத் தேடினாலும் கிடைக்காது... சரி வானம் கருத்திடுச்சு... வெள்ளென வீடு போய்ச் சேர்றேன்...'' என்றபடியே வாசம்பா கிளம்ப...

----------------------------------------------------------------------------------------------------------

டேய்...வேலு..இன்னும் முத்து வரலியாடா வேலைக்கு..? நானும் பார்க்கறேன்..ஒரு வாரமா லேட்டா தான் வரான், வெள்ளென  போயிற்றான்..பெரியையாவுக்குத் தெரியுமாடா இது...? தெரியாதுன்னு வெச்சுக்க...தெரிஞ்சுச்சுன்னா அம்புட்டுத்தேன்...மாப்ளைக்கு மஞ்சத் தண்ணி ஊத்திறுவாரு...! ஒரு குரல் சந்தோஷித்தது.

----------------------------------------------------------------------------------------------------------

இத்தனை வெள்ளென மகளைக்கண்ட பெற்றோருக்கு நெஞ்சு பதை பதைத்தது. "என்னம்மா என்ன நடந்தது" என்று பதற்றத்துடன் விசாரித்தார் தகப்பன். "


----------------------------------------------------------------------------------------------------------

   திரி கருகிய வாடையும் மண்ணெண்ணை நெடியும் மூக்குச் சுவரில் மோதி விலகியது.

 “ஒண்ணுக்கு ரெண்டுக்குக் கூட நிம்மதியா போ முடியுதா? வெள்ளென வந்து தொலையறானுங்க!” (பக்:78,79 )

----------------------------------------------------------------------------------------------------------

” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன்  புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

----------------------------------------------------------------------------------------------------------

"வெள்ளென வாங்கோ".

சரி என்றவாறே இருவரும் ஒழுங்கையால் நடக்கத்தொடங்கினோம். எனது மச்சான் என்னை விட உள்ள ஊரி சந்து பொந்துகள் எல்லாம் தெரிஞ்சு வைத்திருந்தார். அவருக்கு இது இரண்டாது முறை பயணம். ஒரு சில நட்புகளையும் பிடிச்சு வைத்திருந்தார். அவருக்கு பியர் குடிக்க வேணும்.
“ தோ பாரு முனிம்மா… என்னா கத்தனாலும் யாரு காதுலேயும் உலாதின்னு ஆய்டுச்சி…

----------------------------------------------------------------------------------------------------------

புறநானூறு 359 & 207 பாடல்களில்
“வெள்ளென” என்னும் மரபுத்தொடரைப் பாருங்கள்:
இன்றும் இந்த 2 புறப்பாட்டின் “வெள்ளென” தமிழில் மக்கட்பெருவழக்காய்
வாழ்கிறது.

நா. கணேசன்
 

உண்டென --  நிறைய 
வெள்ளென --  விரைவில் 
சிராங்காய் -  கைப்பிடி அளவு 
கருக்கல்ல --  விடிவெள்ளி முளைக்கும் நேரத்தில் 
கொட்டான் --  ஓலையால் செய்யப்பட்ட பாத்திரங்கள் 
சந்தை --  [இது பல இடங்களிலும் கையாளப்படும் சொல்;  இப்பொழுது "மால்" ஆகிவிட்டது சந்தை]
பலசரக்கு --  வீட்டுக்குத் தேவையான சமையல் சாமான்கள்;  இதை மளிகை சாமான்கள் என்றும் சொல்வதுண்டு 
ஊருணி, குளம், கண்மாய் 
மேப்பேச்சு -- எதிர்த்து வாயாடுதல் 
சுணக்கம், தாமதம், தயக்கம் 
மரத்தடி --  அரச மரங்களுக்குக் கீழே மக்கள் உட்கார்து பேசுவதற்காக கட்டப்பட்ட திண்ணை போன்ற அமைப்பு 
கிணத்தடிக் கல்லு --  கிணற்றுக்குப் பக்கத்தில் முழல் உயரத்தில் துவைக்கப் போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கல் 
சாணை பிடி - கூர்மைப்படுத்து 
புள்ளி வைத்தல் --  பால் தயிர் கொடுப்பவர்கள் கணக்கிற்காக, வீட்டுக் கோலத்தில் இருக்கும் செம்மண்ணில் விரலைத் தண்ணீரில் தொட்டுத் தோய்த்து வாடிக்கையாளர் வீட்டுச்  சுவரில் வைக்கும் அடையாளம். 
சடுதி - விரைவில் 
முக்கு -  மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் 
தேர்முட்டி -- கோவில் தேர் நிறுத்தப்படும் இடம் 
சங்கூதிட்டான் --  நேரத்தைக்குறி க்க காலை, நண்பகல், இரவு ஊதப்படும் சங்கு [siren] ஒலியைக் குறிப்பது 
நோவு -  வலி 
கருதறுத்தாச்சு --  அறுவடை முடிந்தது 
சரியான வேக்காடு --  அதிக வெப்பம் 
படியேறியாச்சு --  செல்லவேண்டிய இடத்தை அடைந்து விட்டார்கள் 
மலையேறியாச்சு --  சாமி வந்து ஆடியவர்கள் அமைதி அடைதல் 
சங்கட்டம் --  தொல்லை, மனவேதனை 
நெறஞ்சிருக்கு --  தங்களிடம் ஒன்றும் இல்லை என்பதைக் குறிக்கும் இடக்கரடக்கர்ச்சொல் 

ஒரு அரிசோனன் 



2015-03-27 10:01 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

திரு பாண்டியராசன்
பைய என்ற சொல்லை திருஞானசம்பந்தர் தேவாரத்தில்
எடுத்தாண்டுள்ளார்.
பையவே சென்று பாண்டியர்க்கு
ஆகவே.....

On 27-Mar-2015 7:17 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:


On Thursday, March 26, 2015 at 6:32:03 PM UTC-7, Pandiyaraja wrote:

3. எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

இது மிளாறு அல்ல. விளர். சில இடங்களில் விளாரு எனப்படும். எங்கள் தலைமையாசிரியர் கையில் நீண்ட புளியம் விளாரு வைத்திருப்பார். பள்ளிக்குத் தாமதமாக வருவோரை உட்காருமிடத்தில் (ஸ்ரீரங்கம் சுஜாதா வழக்கு!) டவுசரோடு சேர்த்து ஒரு வாங்கு வாங்குவார்.

விளர் என்றால் முற்றாத என்று பொருள். வேப்பங்குச்சி போன்றவை எளிதில் உடைந்துவிடும். புளியங்குச்சி இலேசில் ஒடியாது. முற்றிய குச்சி விறைப்பாக இருக்கும். அடி ‘சுளீர்’எனத் தைக்காது. புளியங்குச்சி முற்றாததாக இருந்தால் வளைந்துகொடுக்கும். அடி பயங்கரமாக வலிக்கும். அதுதான் விளாரு. கைகால்கள் மெலிவாக இருப்பவனைக் குச்சிக்கை, குச்சிக்கால் என்போம். அதனை விளர்க் கை என்கிறார் சங்கப்புலவர்.

இடை சுரத்து இறுத்த மள்ள, விளர்த்த
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் - புறம் 254/3,4

"விளாரு" கொண்டு போட்டுத் தாக்குவது "விளாசுவது"


..... தேமொழி 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 31, 2015, 8:26:45 AM3/31/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, March 25, 2015 at 10:40:14 PM UTC-7, கோதண்டராமன் wrote:
பொருந்தாது முரண்படுதல் என்ற பொருளில் முசுறுதல் என்ற சொல்லை சில தச்சர்கள் பயன்படுத்துகிறார்கள். ஜன்னல் கதவு முசிறிக்கிட்டு நிக்குது. கொஞ்சம் இழைச்சு விடு.

தை-த்தல் (தைக்க- மலையாளம்): தைக்கன் - தய்க்கன் > தச்சன்.
இவர்கள் பயன்படுத்தும் drill கருவி - தமர் (< தைமர்)
மலையாள ஆசாரிகள் தச்சுவேலைக்கு கோவை மாவட்டத்தில் தமர் என்கின்றனர். 
-அர் (உ-ம்: இடக்கர், இடங்கர் (குடம் - Gharial-   தந்த சொல்) போல அஃறிணைப் பொருளுக்கு
வரும் - அர் விகுதி. 7000 ஆண்டுகளாக ( Mehrgar) இந்தியாவில் மரத்தைக் கடையவும்,
தீயுண்டாக்கவும் (ஞெலிகோல்) உள்ளது “தமர்” (< தைமர்)

தமர் (< தைமர்) ‘drill' - இது “தம்” தமர் = உறவினர் என்ற சொல்லிலிருந்து வேறானது.
இதேபோல், (1) கா(ய்)ம் + அர்  (< காய்-தல்/காந்து-)= காமர்/காமரு “red hot, glow/shining, red color'. காமர் கயல் = செங்கயல், காமர்பதி = பூவல் நிலம் = செம்மண் நிலம்.
(2) காம்+மரு = காமரு/காமர் = விரும்பத்தக்க, அழகிய (காமம் என்னும் தமிழ்ச்சொல். ’கமம் நிறைந்து இயலும்’ - தொல்.)
இந்த இரண்டு காமருக்கும் வேறுபாடு உள்ளது. 

--------------------------------------------

முக்- என்னும் வேர் தரும் சொற்கள் பல. முக்கு = corner.
முகிடு (திருப்புகழில்) = முகடு “where the roof curves drastically"
முகிடு/முகிறு > முசிறு-தல் “projecting, ..."

தண்ணீரில் முசிறிக் கொண்டுள்ள நிலப்பகுதிகள் பலவற்றைக்
கொண்டுள்ள இடம் முசிரி (கிரேக்கர்கள் Muziris). தமிழ் இலக்கியங்கள்
முயிரிக்கோடு என்கின்றன. கதிர் அறுத்தல் கருதறுத்தல் ஆவது போல,
முசிரிபட்டனம் > முசிரிபத்தனம், பேச்சுவழக்கில் முரசீபத்தனம்
என வடமொழி இலக்கியங்கள் கூற, மரிசி/மிரிசி/மிர்சி = மிளகு ஏற்றுமதி ஆகும்
பட்டினத்தின் பெயரால் வடமொழிகளில் ஏற்படும் பெயர்.



















நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 1, 2015, 10:21:40 AM4/1/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, March 25, 2015 at 9:40:51 PM UTC-7, myself wrote:
அதே போல் விடியற்காலையை மதுரைப்பக்கம் கருக்கல் என்பார்கள்.  மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு "உரம் விழுதல்" எனப்படும். 

2015-03-26 10:06 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
ஒரு காலத்தில் அடுக்களை தான் பயன்பாட்டில் இருந்தது.  பின்னர் வந்ததே கிச்சன்! :) கூடம், தாழ்வாரம், முற்றம், பட்டாசாலை, சாப்பாட்டுக் கூடம், கல்யாணக் கூடம் என்றெல்லாம் உண்டு. எங்க ஊர்ப்பக்கம் புஞ்சைப் பயிர்கள் விளையும் நிலத்தைக் காடு என்பது உண்டு. 

கொங்குநாட்டிலும் புன்செய் நிலம் காடு என்றும், கிணறு (அ) கால்வாய்ப் பாசனம் (< பாய்- ) உள்ள நிலம் தோட்டம் எனப்படும்.
கிணறு, குளம் தொட்டு (=தோண்டி) வளம்பெருக்குவதால் தோட்டம் என்ற சொல் பயன்படுத்துகிறோம். 
காடு, புஞ்சைக் காடு. குளமோ, கால்வாயோ, கிணறோ இல்லாதது.

 

 

N. Ganesan

unread,
Apr 1, 2015, 10:48:23 AM4/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, L Srinivas, George Hart


On Wednesday, March 25, 2015 at 9:40:51 PM UTC-7, myself wrote:
அதே போல் விடியற்காலையை மதுரைப்பக்கம் கருக்கல் என்பார்கள்.  மெல்ல நட என்பதற்கு "பைய, பைய நட" என்பார்கள். குழந்தைகளுக்கு விழும் சுளுக்கு "உரம் விழுதல்" எனப்படும். 


 பொதுவாக, -க்- > -ச்- > -ய்- மாற்றங்கள் சொல்தொகுதிகளில் நிறையப் பார்க்கலாம். எ-டு: (1) உகிரு (DEDR 559) > உசிரு > உயிர்.
(2) மொகளை (வடக்கே, மொகர/மகர) > மொசளெ (கன்னடம்-தெலுங்கு) > மொதளை/முதலை 
....

பச்சை வண்ணத்தைக் குறிக்கும் சொல் இந்த -க்- > -ச்- > -ய்- என்ற விதிக்கு உட்பட்டு இயங்குவது. ஒரு வண்ணச் சொல்
Elasticity உள்ள பொருட்களுக்கும், “மெள்ள” என்ற பொருளிலும் விரிவாகியுள்ளது.

பாகல் - பச்சையாக உள்ள பாகற்காய், பலாக்காய், முள் உடைய பாவக்காய். இது நிறம்பற்றி வந்த பெயர்.
பாக- ‘green' > பாசி 'moss'. பாகக் > பக்கு- > பச்சை > பய்ய- பைய 'slow".
பையிர்(=பயிர்)  மிக மெள்ள வளர்வது. எனவே பையன்/பையல்.
பயிர் போல, மிக மெதுவாக அடியெடுத்து வைப்பதை ”பைய நட” என்கின்றனர்.

எலாஸ்டிக் பொருள்கள் மெள்ளவிரியும். பாம்பின் படம் “பை” எனப்படுவது இதனால்தான்.
எலாஸ்டிக் பண்புகொண்டிருப்பதால் “பை” = bag. சங்க இலக்கியத்தில் பைக்கு
“பக்கு” என்றே சொல் உண்டு (கலித்தொகை, ஐங்குறுநூறு).
பாக-/பக்கு- ‘green' > பச்சை > பை/pay (as in paiyaRu 'green daal', paiyan/paiyal 'boy in the slow-growing stage',
pay/pai '(elastic) bag', paiyir/payir 'plant that slowly grows'. Obviously, plant growth and green color
are linked together by ancient Tamils in forming these words.

pak-/pAk- 'green' > paccai > pai- (as in pai-yir, paiyal, pai or pakku meaning 'bag', paiya "slowly").
I wrote in CTamil list the following examples for Dravidian -k- > -c- > -y- in word formations.

On Sun, Mar 22, 2015 at 7:10 AM, George Hart <glh...@berkeley.edu> wrote:
I have often wondered whether the common spoken form of the second person singular (வந்தாய் > வந்தை, pronounced vante) is from a much older, or something similar, as -ஐ is a common second-person suffix (See Rajam’s book on Classical Tamil, pp. 626-627).  There seem to be some forms in spoken Tamil (like உசிர்) that are older than the received written ones (உயிர்).  

It looks Spoken Tamil word "uciru" (life force) is much older than uyir (and from uyir, Tamil derives its verb, uy-tal "to live").
It looks at PD stage, Dravidians thought a life force gets in to all living beings, hence they use the verb, uku-tal to denote this life form. So, PD ukiru (from the verb, uku-tal) > uciru (in all Dravidian languages with slight variation) > uyir (in Tamil).

Let me add two more examples of -k- > -c- 
(I)  Take the case of Crocodile species' names in India. There are a total of three species in India. And, the amazing fact is ancient Tamil literature like puRanAn2URu, pattuppaaTTu record their names. And Peraaciriyar, Tolkappiyam commentator on PoruL atikaaram, quotes these Sangam poetry lines to describe the 3 species of Indian crocs. All the crocodile species' names in India are essentially Dravidian, read A. Parpola's long paper on Crocodile cult in Indus era and later. With Fr. H. Heras linking Fish sign of IVC to astral deities in the Sky and Parpola's Crocodile sign in IVC seals' symbols, and the Indian crocodile names not coming from Munda or Austro-Asiatic answers many questions posed on ancient India.   The IVC signs are indeed linguistic signs as Fish and Makara signs link them to Dravidian (and not Munda). Recent Genetics also shows Munda immigration into East India is not that old as we see in many Linguitsics papers. It is only 4 or 5 thousand years,
"So, Austroasiatic would arrive in the Neolithic predominantly through men who took local women as brides. Presumably, this would coincide with the oldest use of rice in India, which current research dates to around 2300 BCE in Lothal in Gujarat. Pre-Vedic, but only by a few hundred years.

If so, it undermines Witzel's hypothesis that Austroasiatic is related linguistically to Harappan, which was present thousands of years earlier and is remote from Austro-Asiatic language first contact with India."

-k- > -c- transformation (like ukiru > uciru, and then uyir)
We can reconstruct mutalai's original PD word as MokaLai.

This PD * mokaLe (= mok + aLai) > mokara/makara in the North Dravidian
and in the South India mokaLai > mocaLe (Kannada/Telugu) > motaLe or mutalai (in Tamil-Malayalam).

(II) The second example is akai-tal > acai-tal > ayar-tal (all attested within Tamil itself).

(1) அசா acā , n. < அயா. Languor, faintness; தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201).

(2) அசாவிடு-தல் acā-viṭu-, v. intr. < அசா +. To rest; இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவி டூஉம் புள்ளினம் (கலித். 132, 3).

(3) அசாவு-தல் acāvu- , 5 v. intr. < அயாவு-. To droop, languish, grow slack; தளர்தல். அரு மை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611).

(4) அசா acā , n. < அயா. Distress; துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338).

-------------------

சென்னைப் பேரகராதியில் கொடுத்துள்ளதுபோல் அசா < அயா என எனக்குத் தோன்றவில்லை.

39 Ta. acar (-v-, -nt-)

39 Ta. acar (-v-, -nt-) to become faint, drowsy; acarttu (acartti-) to cause to be drowsy or sluggish; acati drowsiness; acappu inattentiveness, absence of mind; acāvu (acāvi-) to droop, languish, grow slack; acā languor, faintness; acai (-v-, -nt-) to be weary, exhausted, grow feeble, walk or ride slowly; acaivu weariness, exhaustionañar (-v-, -nt-) to be lazy, slothful; n. mental distress, disease; ayar (-v-, -nt-) to lose consciousness (as in fainting, sleep, drunkenness), become weary, forget; (-pp-, -tt-) to forget; ayarcci, ayarti languor, faintness, forgetfulness; ayarppu, ayarvuforgetfulness; ayā languor, faintness; ayāvu (ayāvi-) to be distressed; añcal laziness, sloth. Ma. aśati drowsiness, forgetfulness; aśattu pōka to forget oneself; ayarkka to swoon, feel estranged, disagree; ayarcca fatigue, distress, affliction, forgetfulness; ayarti, ayarppu swoon, forgetfulness, discord. Ka. asur to feel disgusted, have an aversion or a dislike, be impatient; n. fatigue, faintness; asurusuru exhaustion; ayil, aylu bewilderment, madness; āsaṟ to be weary; n. weariness, fatigue, languor. Tu. ajakè idleness; ? āsarů thirst, that which slakes thirst. Te. asurusuru an onom. word to express weariness; anjali-gunjali fatigued, tired. DED(S) 41.

இதெல்லாம் அகைதல் > அசைதல் > அய(ர்)தல் என்று ஆகும்.

(1) உகு-(உகிரு) > உசிரு > உயிர்
(2) மொகளை(மொகளெ) > மொசளெ (கன்னடம்/தெலுகு)  போல, -க்- > -ச்-
 
This -k- > -c- > -y- in Tamil is similar to what happens in Indo-Aryan too. (a) vAk-devi > vAc-, cognate with English "vocal" etc., (b) arka "the sun' > arca "glowing, to praise 'arcana' etc., where -k- changes to -c- in second syllable.

N. Ganesan


N. Ganesan

unread,
Apr 1, 2015, 11:00:17 AM4/1/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, April 1, 2015 at 7:33:39 AM UTC-7, Pandiyaraja wrote:
>>
 புஞ்சைப் பயிர்கள் விளையும் நிலத்தைக் காடு என்பது உண்டு. 
>>
இதுதான் சங்கத் தமிழரின் முல்லை நிலம் - வானம்பார்த்த பூமி. மாயோன் மேயக் காடுறை உலகமும்  என்று தொல்காப்பியர் கூறும் காடும் இதுவே.
ப.பாண்டியராஜா

நன்றி, ஐயா.  நல்ல காட்டு: ”மாயோன் மேய காடுறை உலகமும்” தொல். சூத்திரத்தில் ஒற்று மிகாதன்றோ?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 1, 2015, 7:56:07 PM4/1/15
to mint...@googlegroups.com, vallamai, SP. VR.. SUBBIAH


On Thursday, March 26, 2015 at 6:37:57 AM UTC-7, tsparu2001 wrote:
///'ஓவியமாக’ - செல்லமாக, அருமையாக, மிகவும் விரும்பிய,
மனத்துக்கு அணுக்கமாக///

மதுரையிலும் உண்டு இது!.. 'ரொம்ப ஓவியமா வளர்க்கறாங்க' என, செல்லப் பிள்ளைகளைச் சொல்வதுண்டு..

"என் ஆம்பிள்ளையானும் என்னை ஓவியமா வச்சிருந்தாருடா!”

கோவை வாத்தியார் சுப்பையா சிறுகதையிலிருந்து.

நா. கணேசன் 


'அசவு' போல்  'சடவு' என்றொரு சொல்லும் மதுரை வட்டார வழக்கில் இருக்கிறது. அலுப்பு என்ற பொருளில் பயன்படுத்துவதுண்டு. 'ரொம்பத்தான் சடைச்சிக்கிறியே' என்பதுண்டு.

'கோளாறு' என்பது, பாதுகாப்பாக என்ற பொருளில் உபயோகிக்கிறார்கள். 'பாத்து கோளாறா போயீட்டு வா' என்பதுண்டு. சூதானம் என்பதும் இதற்கு மாற்றுச் சொல்.

பெண் கொடுத்து பெண் எடுக்கும் திருமணங்களை 'குண்டு மாத்து' கல்யாணம் என்று சொல்வதுண்டு. குண்டு என்பது ஒரு பாத்திரம் (கீதாம்மா வைச்சிருப்பாங்கன்னு நினைக்கறேன் :))!). பருப்பு வேக வைக்கும் பாத்திரத்தை, 'பருப்பு குண்டு' என்பதுண்டு. சீரில் அவர்கள் என்ன செய்வார்களோ அதையே இவர்களும் செய்வார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் பயன்படுத்துவதுண்டு. அது போல், போகிணி (வாயகன்ற பாத்திரம்), வட்டை (டபரா), கங்காளம், ஜோடு தவலை இதெல்லாம் பாத்திரப் பெயர்கள்.

நெற்குதிரை 'குளும' என்றும் சொல்வார்கள்.

சின்ன வயதில் கேட்ட மற்றொரு சொல், 'குட மாத்து பிள்ளைகள்'. ஒரு வீட்டில் இருவர் (ஓரிரு மாத இடைவெளியில் ) கர்ப்பவதிகளாக இருந்தால், இருவரையும் நிறை குடம் எடுத்து வரச் செய்து, ஒரு நிலைப்படியில் இரு புறமும் இருவரையும் நிற்க வைத்து, பரஸ்பரம் குடத்தை மாற்றிக் கொண்டு, இருவரும் நிலையைத் தாண்டி, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் வர வேண்டுமாம்!..அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை, இம்மாதிரி அழைக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் ஒரே ஈடு என்பதைக் குறிக்க, இம்மாதிரி சொல்கிறார்கள் என்று தோன்றுகின்றது.


பார்வதி இராமச்சந்திரன்.


On Thu, Mar 26, 2015 at 6:49 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
​ 
​     

N. Ganesan

unread,
Apr 4, 2015, 1:53:02 PM4/4/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com
On Saturday, April 4, 2015 at 6:41:27 AM UTC-5, கோதண்டராமன் wrote:
தானியங்கள் மண்ணோடு கலந்திருந்தால்  கை விரல்களை அதன் மீது மேலோட்டமாக ஓட்டி தானியத்தை மட்டும் சேகரிப்பார்கள். அது போல, வைக்கோல், சிறு துரும்புகளை நீக்கவும் இவ்வாறு செய்வதுண்டு. இதற்கு பீராய்தல் என்று பெயர். இது கிராமப் புறங்களில் மட்டும் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது. 


விவசாயத்தில் பயன்படும் ஒரு சொல்லை விளக்கியமை சிறப்பு. ridge gourd எனப்படும் பீர்க்கு அதன் மேலோடும் வரிகள் (ridge-s ) பீர் என்பதால் ஆன பெயர்.
பீரம்/பீர்க்கு பற்றிய செய்யுள் ஒன்று,


பேர்செர்விஸ் என்ற பேராசிரியர் சிந்து சமவெளி ஆய்வில் பல நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தவர். நியூ யார்க் மாகாணத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்து ஆர்க்கியாலஜி பயின்றதால் செய்யமுடிந்தது என்பார். அவரது புகழ்மிக்க நூலில், பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இசுலாமிய ஸூஃபி குருமார்களின் பெயர் பிர்-/பீர்- என்றிருப்பதைக் குறிப்பிட்டு இதன் மூலம் என்ன என விலங்கவில்லை என்றார். நான் தமிழின் பிரான், பிராட்டி (தம்பிரான், தம்பிராட்டி) என்பனவும், ரிட்ஜ் கஒஉர்ட் எனப்படும் பீர்க்கின் பெயரையும் ஒப்பிட வேண்டியிருந்தேன். பிர்-/பீர்- மேல்வரி, தலைமை பூணல் என்பதற்குப் பொருந்தும் திராவிடச்சொல்லாக பீர், பிரான் இருப்பமை தெளிவு.

Reference: The Harappan civilization and its writing : a model for the decipherment of the Indus script, Walter A. Fairservis (E.J. Brill, 1992).

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 7, 2015, 9:59:55 AM4/7/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, April 7, 2015 at 4:50:35 AM UTC-7, கோதண்டராமன் wrote:
"அறைக்குள் எடுத்து வரும்போது விசுலா (விசுபலகை bench)  எசகேடா (இசைகேடாக - கோணல் மாணலாக) மாட்டிக்கொண்டுவிட்டது. உள்ளேயும் போகவில்லை.வெளியேயும் எடுக்க முடியவில்லை."

பழைய சொல்லைக் காட்டியமைக்கு நன்றி. விசிப்பலகை என்பதன் பேச்சுவடிவம். 
விசிப்பலகை திவாகர நிகண்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. MTL entry:
"விசி³ vici , n. < விசி¹-. [T. bisi.] 1. Fastening, tie; கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56). 2. Leather strap for drums; பறையிறுக்கும் வார். (யாழ். அக.) 3. Bench; விசிப்பலகை. (திவா.) 4. Cot; கட்டில். (யாழ். அக.) 

இப்பொழுது கீபோர்ட் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு விரல்விசை தட்டுவதால் விசைப்பலகை என்கிறோம். 

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 7, 2015, 10:39:50 AM4/7/15
to mint...@googlegroups.com, vallamai, Lakshmi Srinivas, George Hart, Dr. Krishnaswamy Nachimuthu, E. Annamalai, Vasu Renganathan


On Tuesday, April 7, 2015 at 7:33:28 AM UTC-7, malarmangay64 wrote:

அயிரம்._ஆற்றுமணல்  அதிலிருந்துதான் ஆயிரம் வந்தது என்பதை எப்படி  ஏற்பது?
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி.
சிற்றிலக்கிய காலமும் பக்திஇலக்கிய காலமும் ஒன்றே.
அளந்தறியமுடியாத ஆற்றுமணலும்பருப்பொருளான ஆனையின்அளந்தறிதலும் ஒன்றாகமுடியுமா?


முனைவர் மலர்விழி,

ஆற்றுமணல் அயிரை என்றால் 1000-ஆ ஆற்றங்கரை, கடற்கரையில் இருக்கிறது??

கன்னடத்தில் சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் என்று -க்- > -ச்- > -ய்- விதி முழுதும்
இயங்குவதைப் பார்த்தால் ஸஹஸ்ர என்ற 1000 எண்ணின்பேர் தமிழில் தற்பவம் ஆதல்
புரிந்துவிடும்.

மேலும் பேசுவோம்,
நா. கணேசன்
 

On 07-Apr-2015 7:43 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:


On Tuesday, April 7, 2015 at 6:59:18 AM UTC-7, malarmangay64 wrote:

நன்றி. வடமொழி ச்சார்பினை அறிந்து கொண்டேன்.


நன்றி, முனைவர்  மலர்விழி. இந்த வார இறுதியில்
கிட்டல் பாதிரியாரின் கன்னட அகராதி பார்த்துக்கொண்டிருந்தேன்.

பழைய கன்னடத்தில் ஆயிரத்தை சாயிரம் என்கிறார்கள் என
அறிந்தேன். சிப்பி:இப்பி, சமர்:அமர், சமணர்:அமணர் (சமண சமயம்
கர்நாடகா வழியாகக் கொங்கிலும் மதுரையிலும் நிலைபெற்றது)
போல தென் திராவிட மொழிகளில் சகசிரம் > சாசிரம் > சாயிரம் (> ஆயிரம்)
என 1000 எண்ணின் பெயர் உண்டானது எனத் தெரிகிறது.

அயிரை என்றால் ஆற்றுமணல். அதிலிருந்து ஆயிரம் என்றால்
ஆற்று மணல் ட்ரில்லியம், ஃஜில்லியன் கணக்கில் அல்லவா இருக்கிறது?
எனவே, பொருந்தாது. த்ராவிட மொழியியல் நிபுணர்கள் அளிக்கும்
தென்திராவிட மொழிகளில் சாயிரம்/ஆயிரம் இரண்டையும் பார்த்தால்
பழைய சொற்கள் இவை இரண்டின் தாதுவேர் விளங்கும்.

நா. கணேசன்


On 07-Apr-2015 7:25 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:


2015-04-07 5:24 GMT-07:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

மதுரை வழக்கில் சாப்பாட்டிற்கான தொடுகறி (sidedish)
வெஞ்சனம் என்று வழங்கப்படும்


கோவையிலுந்தான். வ்யஞ்சனம் என்னும் வடசொல்லின் தற்பவம்.

வெஞ்சனம் veñcaṉam 

n. < vyañjana. 1. Vegetable relish; சமைத்த கறியுணவு. Colloq. 2. Condiment; கறிக்குதவும் பண்டம். 3. Sauce; குழம்பு. (W.) 4. Consonant; மெய்யெழுத்து. (W.)

(சென்னைப் பல்கலைப் பேரகராதி).


நா. கணேசன்

 
On 31-Mar-2015 3:38 pm, "Jana Iyengar" <iyenga...@gmail.com> wrote:
மிகவும் நன்றி. இன்றும் எங்கள் ஆத்தில் அறுவாயிடுத்து என்றுதான் சொல்கிறோம். மேலும் -
அயல்கிறது - காரமாக இருக்கிறது;
தொறாக்கோல் - திறவுகோல், சாவி (பலர் ஸாவி என்று தப்பாககூறுகிறார்கள். ஹிந்தியிலும் இத சாவி தான்)
சொக்காய் - சட்டை 
காணேனே - காணவில்லை 

அடியேன் ஜனா ராமானுஜ தாசன்.

2015-03-31 15:03 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
ரொம்ப நன்றி ஐயா.  தங்கள் மேலதிக விளக்கமும் அருமையாக உள்ளது.  புரியாதவை புரிந்தன. 

2015-03-27 7:02 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:

கீதாம்மா மதுரைப்பக்கத்துப் பேச்சு வழக்கை நன்றாகவே உற்றுக் கவனித்திருக்கிறீர்கள். சங்கம் வளர்த்த மதுரை அல்லவா! அவற்றில் பல சொற்கள் சங்க வழக்காறுகள் என்பதுதான் விந்தையான செய்தி.

 

1. அருவாக்கறது=தீர்ப்பது

உண்மையில் இது அறவு ஆக்குவது. அறவாக்கல் என்பது பேச்சில் அருவாக்கறது என்று வழங்குகிறது. அறவு என்பது இல்லாமல் போதல்.

 

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Jana

N. Ganesan

unread,
Apr 7, 2015, 11:19:51 AM4/7/15
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, April 7, 2015 at 7:55:21 AM UTC-7, Dev Raj wrote:
On Tuesday, 7 April 2015 07:39:48 UTC-7, N. Ganesan wrote:
கன்னடத்தில் சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் என்று -க்- > -ச்- > -ய்- விதி முழுதும்
இயங்குவதைப் பார்த்தால்
 

1000க்குக் கன்னடத்தில் ‘ஸாவிர’ 
உங்கள் விதிக்குள் [க்- > -ச்- > -ய்] ’வ்’ இயங்கவில்லை; ஏன் ?

-k- > -v- : பாகக்காய் : பாவக்காய் 
சகசிரம் > சாகிரம் > சாவிரம்.

ஆனால், சாசிரம் (கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என அழைக்கப்படும் புரந்தரதாசர் பாட்டுகளில்), சாயிரம்
எல்லாம் உண்டு. -க்- > -ச்- . 
(1) உகிரு > உசிரு > உயிர் (தமிழ்)
(2) மொகளை > மொகர/மகர (இரண்டும் வடக்கே இன்றும் உள்ளன).
மொகளை > மொசளெ (கன்னடம், தெலுங்கு). மொதளை/முதலை (தமிழ்)
(3) சகசிரம் > சாசிரம் > சாயிரம்/ஆயிரம் (தமிழ்)

வேந்தன் அரசு

unread,
Apr 8, 2015, 7:16:58 AM4/8/15
to vallamai, மின்தமிழ்
சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் 

மணல்> >>>>>கயிறு

7 ஏப்ரல், 2015 ’அன்று’ 11:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 8, 2015, 8:11:41 AM4/8/15
to mint...@googlegroups.com, vallamai, housto...@googlegroups.com


On Wednesday, April 8, 2015 at 5:02:32 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:


2015-04-08 16:46 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம் 

அயிர் என்றால் மணல். மணல் ஒரு அளவீடு. எனவே அயிர் தான் ஆயிரம் ஆகியது. ச் + ஆயிரம் > சாயிரம் > சாவிரம்  > சாவிரே (கன்னடம்) 
அயிர் > அசிர்  > அசார் (இந்தி) 

ச் திடுமென ஏன் சேர்கிறது? எனவே,

சமணர் > அமணர், சிப்பி > இப்பி, ....
சகசிரம் > சாசிரம் > சாயிரம் > ஆயிரம்

சகசிரம் என்னும் வடசொல் சாயிரம் > ஆயிரம்.
சசிரம் என்னும் சொல்லில் “மணல்” என்ற பொருள் இல்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 8, 2015, 9:41:56 AM4/8/15
to mint...@googlegroups.com, vallamai
சுக்கு < சுருங்கு
இஞ்சி நீர் வற்றிச் சுருங்கினால் சுக்கு ஆகிறது.
பருப்பு > பப்பு போல, சுருக்கு > சுக்கு.

சுருக்கமாக அளிப்பது சுங்கம் (< சுருங்கு-).  சுர்க > 
சுல்க (> உல்கு, குறளில்)
சுங்கம்/சுக்கம் + இடம் = சுக்கடம் > உக்கடம் (கோயம்புத்தூரின் ஒரு பகுதி).
இது, சுர்க என்னும் தமிழ்ச்சொல் மாறி வடசொல்லாக  šulka ஆகிறது.

சுருக்காக இருக்கும் புள்ளி (அ) விந்துவுக்கு (bindu) ஒரு பெயர் சுக்கை.

சுக்கை² cukkai , n. perh. T. tcukka. cf. ulkā. Star; நட்சத்திரம். (பிங்.)
சுக்கை&sup4; cukkai n. < šulka. Passage money, freight; கப்பற்சுங்கம். (J.)
வானத்தில் சுருக்கமான புள்ளி மின்னிக் கொண்டிருப்பதால்
சுக்கை என்றால் விண்மீன் எனப் பொருள்.

சுக்கை என்றால் புள்ளி(பிந்து) மற்றும் விண்மீன், இரண்டும் வெள்ளை நிறம்.
எனவே, சுக்கில/சுக்கிர (ல-ர விகுதி மாற்றம்) என்னும் வடசொல் தோன்றுகிறது.
சுக்கில = சுக்கிர = வெண்மை நிறம் ( சுக்கை = புள்ளி/விந்து/விண்மீன் என்னும்
தமிழ்ச் சொல் தரும் வடமொழிச்சொல்லின் வண்ணப்பெயர் ஆகும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 8, 2015, 3:17:13 PM4/8/15
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 8, 2015 at 10:05:34 AM UTC-7, Dev Raj wrote:
On Tuesday, 7 April 2015 08:19:50 UTC-7, N. Ganesan wrote:
(1) உகிரு > உசிரு > உயிர் (தமிழ்)


உயிரைக் குறிப்பதாக ‘உகிரு’ எந்த மொழியில் எந்தக் காலகட்டத்தில் 
வழக்கில் இருந்தது ?

Must be few thousand years ago. *ukaru/ukiru is reconstructed from DEDR 559:
DEDR 559 Ta. uka (-pp-, -nt-)

559 Ta. uka (-pp-, -nt-) to ascend, rise stately, soar upward; ukappu, uvappu height, elevation; ukaḷu (ukaḷi-) to leap, bound, frisk, gambol, jump over, run about; ukaḷi (-pp-, -tt-) to leap, jump, delight, exult; ukalu (ukali-) to billow, rise and roll in large waves; ukai (-pp-, -tt-) to rise, leap, jump up. Ma. uvakka to jump up; ukkuka to leap, spring upward or forward, start, rebound. Ka.oge to come forth, arise, be born. Tu. ubarů high; above. Te. uṅkincu to spring, jump. ? Cf. 2828 Kol. sok-. DED(S) 477.


*ukiru (from DEDR 559) > uciru > uyir

Like 
(1) pAk-/pakk- > pacc- > pay-/pai- (e.g., payir, paiyal)
(2) sahasra (Skt.) > sAsiram > sAyiram/Ayiram (Tamil for 1000)
(3) mokaLay > mocaLe > motale/mutalai (Tamil)
etc.,

N. Ganesan



உகிர் - நகத்தைக் குறிப்பது :

நீர் உறை கோழி நீலச் சேவல் 
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர
                          - ஐங்குறுநூறு 


 ............................................................. வல்லாளன் 
மன்னும் மணிக்குஞ்சி பற்றி வரவீ ர்த்து,
தன்னுடைய தாள்மேல் கிடாத்தி, - அவனுடைய
பொன்னகலம் வள்ளுகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின்னலங்கும் ஆழிப் படைத்தடக்கை வீரனை......
                                                            - அருளிச்செயல்      

தமிழ் ‘உகிர்’ கன்னடத்தில் ‘உகுரு’ [நகம்]ஆகிறது


தேவ்

N. Ganesan

unread,
Apr 10, 2015, 9:19:28 AM4/10/15
to mint...@googlegroups.com, vallamai
நிமை:இமை ‘eye lid', நிமைத்தல் > இமைத்தல் [திருப்புகழ்]

தமிழில் ஆயிரம் என்ற சொல் சகசிரம் (sahasra) என்ற சொல்லின்
மாறுபாடு என திராவிட மொழியியல் அறிஞர்கள் முடிபு. ஆனால்,
ப. கிருஷ்ணமூர்த்தி கூட, கன்னடத்தில் சாயிரம் என்ற சொல்லைக்
குறிப்பிடவில்லை. அதனால், -க்- > -ச்- > -ய்- (in second syllable)
அவர் எழுத இயலவில்லை. சொன்முதல் ச்- அழிபாடு குறித்த சொற்கோவைகளை
முன்னர்க் கொடுத்துள்ளேன். சுள்-/சுண்-/சுட்- > உண்ணம் > உஷ்ணம் என்ற
வடசொல் பிறப்பு இது என முன்னர் எழுதியுள்ளேன்.

ச்- என்னும் சொல்முதல் எழுத்து கெடுமாப்போலே, ந்- என்ற
எழுத்து அழிந்து சொற்கள் பல உருவாகியுள்ளன. உ-ம்:
நீர் > ஈரம், நிணக்கு > இணக்கு, ...  நுக்- என்ற வேர்ச்சொல் தரும் 
நுக்கு-/நுகு- “to fit tightly, to tighten up, to force/load 
(something) upon or inside". இத் தாதுவே, நுகைத்தல் என்கிற
போது “to loosten, to become lax, tired" என்றும் பொருள்
வருகிறது. நுக்- வேரில் ந்- இழப்பு வரும்போது வரும் சொல் யாதெனப்
பின்னர் பார்ப்போம். அதற்காக ந்- வர்க்க உயிர்மெய் எழுத்தைச்
சொல்முதலாய்க் கொண்ட வார்த்தைகளைப் பார்த்தால்,
கண்ணிமை = கண் + நிமை எனத் தெரிந்தது. இமைத்தலின் பழைய
சொல்லைத் திருப்புகழில் பயன்படுத்தியுள்ளார் அருணகிரிநாதர்.

”நிமை¹ nimai , n. < இமை. cf. nimēṣa. Eyelid; இமை. நீலிக்குக் கண்ணீர் நிமையிலே. (பழ.).

நிமை²த்தல் nimai- , 11 v. tr. < நிமை. [K. evē.] To wink; இமைத்தல். புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க (திருப்பு. 497).”
[லெக்ஸிகானில் நிமை > இமை, நிமைத்தல் > இமைத்தல் என ந் loss
பதிவாகணும். லெக்ஸிகான் எடிட்டர் பேரா வ. ஜெயதேவன் அவர்களுக்கும்,
பா. ரா. சுப்பிரமணியன், செ. வை. சண்முகம், கி. நாச்சிமுத்து, சிற்பி  - கடிதம்
அனுப்பியுள்ளேன்.]

அருணைத் திருப்புகழ் - இரத சுரதமுலை:

"அதரமுமே அருத்தி முறையே அருந்த உரை எழப் பரிவாலே
புருவம் நிமிர இரு கண் அ(வ்)வாள் நிமைக்க உபசார(ம்)
மிஞ்ச அவசம் கவசம் அளவு இயலே தரிக்க
 ... வாய் இதழ்
ஊறலை தக்கபடி உண்ண வேண்டிய முறைப்படி அருந்த, அன்பு
காரணத்தால் சில சொற்கள் பேச, புருவம் மேல் எழ, இரு கண்களும்
ஒளி வீசி இமைக்க, உபசார வார்த்தைகள் அதிகரிக்க, தன்வசம்
அழிதலானது மேற் போர்வை போன்ற அளவான தன்மையில் உண்டாக,"

இந்த த்ராவிடபாஷைகளின் சொல் சம்ஸ்கிருதத்திலும் இயங்குகிறது.
 நிமிஷ என்ற மோனியர்-வில்லியம்ஸ் அகராதிச்சொல் நிமிழ- என்ற தமிழ்ச்சொல்லின் திரிபு. கலூழ் > கலூஷ போல எனலாம்.
nimiSa m. twinkling , shutting the eye (also considered as a measure of time , a moment MBh. R. ; as a disease Sus3r.) ; N. of a son of Garud2a MBh. ; of Vishn2u L. ; %{-kSetra} n. N. of a district Cat. ; %{-SA7ntara} n. the interval of a moment ; (%{eNa}) , in a mñmoment MBh. Ka1v.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 11, 2015, 7:01:48 AM4/11/15
to vallamai, மின்தமிழ்
 விண்மீனுக்கு தெலுகில் ”சுக்க” தமிழில் உடு.உடுக்கு வெள்ளை எனும் பொருளில் தமிழ்ச்சொல் இல்லை. மின்னுவதால் மீன் என்று இருக்கலாம்  வெள்ளி என்பது சிறப்புச்சொல். சுக்க,  சுக்கிலம் எனும் சொல்லில் இருந்து தோன்றிருக்காலம், சுக்கில பட்சம் வளர்பிறை,

10 ஏப்ரல், 2015 ’அன்று’ 9:19 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
Apr 11, 2015, 7:22:58 AM4/11/15
to மின்தமிழ், vallamai
2015-04-11 16:31 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
 விண்மீனுக்கு தெலுகில் ”சுக்க” தமிழில் உடு.உடுக்கு வெள்ளை எனும் பொருளில் தமிழ்ச்சொல் இல்லை. மின்னுவதால் மீன் என்று இருக்கலாம்  வெள்ளி என்பது சிறப்புச்சொல். சுக்க,  சுக்கிலம் எனும் சொல்லில் இருந்து தோன்றிருக்காலம், சுக்கில பட்சம் வளர்பிறை,


சுக்கில (தியானம்)  - அர்த்தமகதியில் தூய அல்லது வெள்ளை நிறத்தைக்குறிக்கும் சொல்லாகும்.

இரா.பா


 


 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 11, 2015, 8:58:16 AM4/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, April 11, 2015 at 4:22:59 AM UTC-7, இரா.பா wrote:


2015-04-11 16:31 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
 விண்மீனுக்கு தெலுகில் ”சுக்க” தமிழில் உடு.உடுக்கு வெள்ளை எனும் பொருளில் தமிழ்ச்சொல் இல்லை. மின்னுவதால் மீன் என்று இருக்கலாம்  வெள்ளி என்பது சிறப்புச்சொல். சுக்க,  சுக்கிலம் எனும் சொல்லில் இருந்து தோன்றிருக்காலம், சுக்கில பட்சம் வளர்பிறை,



தமிழில் தெலுங்கில் சுக்க என்பதற்கான நேர்சொல் உண்டு. சுக்கை ‘star' பிங்கலந்தை நிகண்டு தருகிறதே. பழைய
மடலைத் தருகிறேன்.

தமிழ்ச் சொல் தரும் வடமொழிச்சொல்லின் வண்ணப்பெயர் ஆகும்.

நா. கணேசன்

 
சுக்கில (தியானம்)  - அர்த்தமகதியில் தூய அல்லது வெள்ளை நிறத்தைக்குறிக்கும் சொல்லாகும்.

இரா.பா


வேந்தன் அரசு

unread,
Apr 11, 2015, 10:22:31 AM4/11/15
to vallamai, மின்தமிழ்
கோலத்தின் இடையே வைக்கப்படும் புள்ளிக்கு சுக்க என்று தெலுகில் மாட்டாடுவார்.

11 ஏப்ரல், 2015 ’அன்று’ 8:58 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 11, 2015, 10:54:06 AM4/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, April 11, 2015 at 7:22:31 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
கோலத்தின் இடையே வைக்கப்படும் புள்ளிக்கு சுக்க என்று தெலுகில் மாட்டாடுவார்.

சுருங்கு/சுருக்கு தரும் வார்த்தை: சுங்கம்/சுக்கம் சுக்க+இடம் = சுக்கடம் > உக்கடம் (கோவையில்).
சுருங்கு > சுல்கம் (வடமொழியில் > உல்கு (குறளில்) [ர்-ல் மாறுபாடு].

இதுவே, சுக்கை (தமிழ். பார்க்க: பிங்கலந்தை), சுக்க (தெலுகில்) - வானில் உள்ள dot. எனவே, சுக்கை = ஸ்டார்.
இத் த்ராவிடச் சொல், வடமொழிக்கு ஒரு வண்ணப்பேர் கொடையாக்கியது. சுக்கிரம்/சுக்கிலம் = வெள்ளை.

சுர்ங்கு > சுங்க ‘dot'. இச் சொல்லை, சுங்கடிச் சீலை என்பதில் காண்க.

நா. கணேசன்

 
...

N. Ganesan

unread,
Apr 11, 2015, 11:38:21 AM4/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
பேராசிரியர்கள் எமனோ-பர்ரோ த்ராவிடச்சொல் வேர்ச்சொல் அகராதியில் தொகுத்தளித்துளர்.

DEDR 2646 Ta. cukkai 2646 Ta. cukkai star (< Te.) Ka. cukke small mark, dot; cikki, cikke spot, speck, dot (as of cat, leopard), star. Te. cukka star, spot, dot, drop. Kol. sukka star. Nk. cukka (c = ts) id. Nk. (Ch.)cukkin id. Pa. cukka id. Ga. (S.2cukka drop of rain; (S.3sukka star. Go. (Tr.) sukkum, (G.) huko, (Mu.) hukka, hukkom, (S.) hukka, (Ma.) ukkum, ukka, (Ko.) ukam id. (Voc. 3432).Konḍa suka id. Pe. huka (pl. -ŋ) id.; hukeraŋ, hukeriŋ (pl. only recorded) stars. Manḍ. hukeriŋ id. Kui suka star. Kuwi (F.) hūka, (S. Su. P.) hukka id.; (Ḍ.) suk'erika stars. DED(S) 2175.
...

N. Ganesan

unread,
Apr 11, 2015, 2:58:47 PM4/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, Kasi, Arul Veerappan, arul selvan

மூன்று கொங்குநாட்டுச் சொற்களைப் பார்ப்போம்:

(1) கவுதாரி - இது கதுவாலி என்பதன் பேச்சுவடிவம்
(மதுரை மருதை, குதிரை குருதை, கதிர் கருது ஆவது போல)

(2) ஊறுபட்ட. குழம்பில் ஊறுபட்ட காரம். ஊறுபட்ட = மிகமிக அதிகமாக.
பொரியலில் ஊறுப்பட்ட உப்பு  = ஏகப்பட்ட உப்பு.
சால உறு தவ நனி கழி கூர் மிகலே - கொங்குநாட்டுப் பவணந்தி முனிவரின் நன்னூல்.
ஊறுபட்ட - உறு என்பது நீண்டது.

(3) புழைக்கடை/புழக்கடை எழுத்துக்கள் இடம்மாறுகின்றன:
புக்காளி (அ) பொக்காளி

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 13, 2015, 12:26:49 AM4/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

340 கொங்கு வட்டார வழக்குச் சொற்கள்:

போச்சாதுபோ - போய்ச்சாய்து என்பதன் பேச்சுவழக்கு. 
”போய்த்தொலையுது, பரவாயில்லை” = போச்சாதுபோ, போச்சாது விடு

பூலவாக்கு = பூரவாக்கு = முழுச்சேதி (பூர = பூராவும்/பூரணமான). ர-ல எனத் திரிந்தது.

N. Ganesan

unread,
Apr 13, 2015, 12:40:16 AM4/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, April 12, 2015 at 9:26:48 PM UTC-7, N. Ganesan wrote:

340 கொங்கு வட்டார வழக்குச் சொற்கள்:

போச்சாதுபோ - போய்ச்சாய்து என்பதன் பேச்சுவழக்கு. 
”போய்த்தொலையுது, பரவாயில்லை” = போச்சாதுபோ, போச்சாது விடு

பூலவாக்கு = பூரவாக்கு = முழுச்சேதி (பூர = பூராவும்/பூரணமான). ர-ல எனத் திரிந்தது.

பூர்விகம் - பூரவகம் - பூலவாக்கு என ஆகியிருக்கும்.
”அவனது பூலவாக்கு (= பூர்விகம்) எல்லாம் தெரிஞ்சுது”  



 
மூன்று கொங்குநாட்டுச் சொற்களைப் பார்ப்போம்:

(1) கவுதாரி - இது கதுவாலி என்பதன் பேச்சுவடிவம்
(மதுரை மருதை, குதிரை குருதை, கதிர் கருது ஆவது போல)

(2) ஊறுபட்ட. குழம்பில் ஊறுபட்ட காரம். ஊறுபட்ட = மிகமிக அதிகமாக.
பொரியலில் ஊறுப்பட்ட உப்பு  = ஏகப்பட்ட உப்பு.
சால உறு தவ நனி கழி கூர் மிகலே - கொங்குநாட்டுப் பவணந்தி முனிவரின் நன்னூல்.
ஊறுபட்ட - உறு என்பது நீண்டது.

(3) புழைக்கடை/புழக்கடை எழுத்துக்கள் இடம்மாறுகின்றன:
புக்காளி (அ) பொக்காளி

நா. கணேசன்
...

N. Ganesan

unread,
Apr 13, 2015, 12:44:13 AM4/13/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Saturday, April 4, 2015 at 10:53:00 AM UTC-7, N. Ganesan wrote:
On Saturday, April 4, 2015 at 6:41:27 AM UTC-5, கோதண்டராமன் wrote:
தானியங்கள் மண்ணோடு கலந்திருந்தால்  கை விரல்களை அதன் மீது மேலோட்டமாக ஓட்டி தானியத்தை மட்டும் சேகரிப்பார்கள். அது போல, வைக்கோல், சிறு துரும்புகளை நீக்கவும் இவ்வாறு செய்வதுண்டு. இதற்கு பீராய்தல் என்று பெயர். இது கிராமப் புறங்களில் மட்டும் வழக்கில் இருப்பதாகத் தெரிகிறது. 



பீராய்தல் - பூராயம் என்ற சொல்லை பேச்சு வழக்கில் ஏற்படுத்தியுள்ளது போலும்.

பூராயம் pūrāyam , n. 1. Close investigation, attention; ஆராய்ச்சி. (W.) பூராயமாயுணர வூக மது தந்ததும் (தாயு. பரிபூ. 8). 2. Object of curiosity; விசித்திரமானது. (W.) பேரும் பூராயமாய் (தாயு. பரிபூ. 6). 3. That which engages attention, as the first development of intellect in a child; குழந்தைகளின் கவனத்தைக்கவரும் பொருள். (W.)
 
விவசாயத்தில் பயன்படும் ஒரு சொல்லை விளக்கியமை சிறப்பு. ridge gourd எனப்படும் பீர்க்கு அதன் மேலோடும் வரிகள் (ridge-s ) பீர் என்பதால் ஆன பெயர்.
பீரம்/பீர்க்கு பற்றிய செய்யுள் ஒன்று,


பேர்செர்விஸ் என்ற பேராசிரியர் சிந்து சமவெளி ஆய்வில் பல நல்ல முன்னேற்றங்களைக் கொண்டுவந்தவர். நியூ யார்க் மாகாணத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்து ஆர்க்கியாலஜி பயின்றதால் செய்யமுடிந்தது என்பார். அவரது புகழ்மிக்க நூலில், பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இசுலாமிய ஸூஃபி குருமார்களின் பெயர் பிர்-/பீர்- என்றிருப்பதைக் குறிப்பிட்டு இதன் மூலம் என்ன என விலங்கவில்லை என்றார். நான் தமிழின் பிரான், பிராட்டி (தம்பிரான், தம்பிராட்டி) என்பனவும், ரிட்ஜ் கஒஉர்ட் எனப்படும் பீர்க்கின் பெயரையும் ஒப்பிட வேண்டியிருந்தேன். பிர்-/பீர்- மேல்வரி, தலைமை பூணல் என்பதற்குப் பொருந்தும் திராவிடச்சொல்லாக பீர், பிரான் இருப்பமை தெளிவு.

Reference: The Harappan civilization and its writing : a model for the decipherment of the Indus script, Walter A. Fairservis (E.J. Brill, 1992).

நா. கணேசன்
...

N. Ganesan

unread,
Apr 15, 2015, 11:56:54 PM4/15/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, vallamai

வெடியால < விடிகாலை. 
ஆயிரம் < சாயிரம் < சகசிரம் போல.

”செல்லச்சாமி தனது மகனை கூப்பிட்டு “ டேய் கண்ணு, வெடியால சீக்கிரமா எந்திரிடா, சந்தைக்கு போயி ஆட்டுக்குட்டி ஒன்னு வாங்கிட்டு வந்துடலாம் டா, வெடியால இருட்டுக்குள்ள வண்டி ஓட்ட முடியலடா. கண்ணு நல்ல தெரியமாட்டங்குதுடா” என்றார்.

சின்னத்தம்பியும் “சரிங்கப்பா போலமுங்க” என்று தலையை ஆட்டினான்.”

இந்த வெடியால = விடிகாலை. தீபாவளி ”வாண வெடியால” அல்ல :) 

ஈமுக் கோழிகள் - கொங்குச் சிறுகதை:
உட்டேஞ் சவாரி! செந்தமிழ் செல்வன்

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 4, 2015, 5:20:08 PM5/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

பகர்தல் = இடம்விட்டு இன்னொரு இடம் வலசை போதல்

உரையிலே பகர்தல் = “புகழ்தல்” என்ற பொருளைச் சொல்லியுள்ளனர்.

ஆனால், தாராவில் சில வகைகள் (e.g., red-crested pochard duck, அன்றில் (ibis = க்ரௌஞ்சம்), அன்னம் (goose = ஹம்சம்)
மூன்று பறவைகளுமே வலசையாய் வந்தவை. அதனைச் சொல்கிறார் என்றால் உரை சிறக்கும்.

வலசை போவதுபோல், முருகனை ஏற்றி அண்டமெல்லாம் சுற்றிவரும் மயிலை
பகர மாமயில் மிசைவர நினைவதும் ஒருநாளே” என்கிறார் அருண்கிரிநாதர்.

பகர்த்து-தல் pakarttu- , 5 v. tr. Caus. of பகர்²-. [M. pakarttuka.] To transcribe, copy; பெயர்த்து எழுதுதல். Nāñ.
தன்வினை/பிறவினைச் சோடியாக, பகருதல்/பகர்த்துதல்.
பகருதல் = வலசை போதல் (இடம் விட்டு இடம் பெயர்தல்).

நா. கணேசன்

சென்னைப் பேரகராதியிலே ”தாரா” பற்றி பழம்பாடல்கள் மேற்கோள் காட்டவில்லை.

அங்காவித் தாரா வணைவது கண்டின்ப மொரு
பங்காவித் தாரா பதியேயென் றேங்குவளோ
துங்காவித் தாரா துணை முலையா ராசை கொள்ளும்
செங்காவித் தாரா திருமலை வேலேந்திரனே. (கடிகைமுத்துப்புலவர்)

குறிப்புரை (நா. கணேசன்):
அங்க ஆவித் தாரா - உடலும் உயிரும் ஒன்றாய் அன்னப் பேடும் சேவலும் அணைவது
கண்டு ‘இன்பம் ஒரு பங்காக இத் தாராபதியே!” என்று ஏங்குவளோ?
துங்கா! விஸ்தாரா! துணைமுலையார் ஆசைகொளும் 
செங்கழுநீர்த் தாரனே! (ஊற்றுமலை) திருமலை வேலப்ப இந்திரனே!


-----------------------
மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடைய
நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீல கண்டனார்
பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்
தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே

------------------

நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்---
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே கோட்டகத்தில்
தாரா மல்கு ஆக்கூரில்-தான்தோன்றிமாடமே.

------------------------


990ஊரான் குடந்தை உத்தமன் 
      ஒரு கால் இரு கால் சிலை வளையத் 
தேரா அரக்கர் தேர்-வெள்ளம் 
      செற்றான் வற்றா வரு புனல் சூழ் 
பேரான் பேர் ஆயிரம் உடையான் 
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற 
தாரான்-தாரா வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமம் அடை நெஞ்சே        

 
996தாரா ஆரும் வயல் சூழ்ந்த 
      சாளக்கிராமத்து அடிகளை 
கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் 
      கலியன் ஒலிசெய் தமிழ்மாலை 
ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் 
      அமரர் நல் நாட்டு அரசு ஆளப் 
பேர் ஆயிரமும் ஓதுமின்கள் 
      அன்றி இவையே பிதற்றுமினே   

-----------------------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages