சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள் இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?கட்டுரையைப் படியுங்கள்.மிக்க நன்றி,ப.பாண்டியராஜாபின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.சங்கச் சொல்வளம்
1. அசைவுகள்
சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு)
அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).
துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).
துளங்கு - தல் To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).
-----------------
துயலுதல் துயர் என்னும் சொல்லைப் பற்றிச் சிந்திக்கிறேன்.
https://groups.google.com/forum/#!msg/vallamai/kujQLXZ9COI/-YesVZ1ool4J
...நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த ...
சிறு குழை துயல்வரும் காதின் ----------- - பெரும் 161
தாளுருவி அசையும் காதினையும் ---
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330
நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,
இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன. எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப் பெறமுடியும்.
இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம் அல்லது சூழலை ஆய்வோம்.
முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.
அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).
துயல்(லு) - தல் To sway, wave, swing; அசைதல். மணிமயில் ... துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).
துளங்கு - தல் To move; to sway from side to side, as an elephant; to shake; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).
இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.
1. அலங்குதல் - இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.
பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல். தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை நன்கு காணலாம். எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில் ஆடுவது அலங்குதல். அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.
அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும். அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே. இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும். அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான். கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.
கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை அலங்கல் எனப்பட்டது எனலாம்.
அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில் அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட ஒருவகை அசைவையே குறிக்கிறது. அவற்றில் சில:
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை - குறு 76/3
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
பரிபாடல் அடியைப் பாருங்கள். அருவி எப்படி அலங்கும்? இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.
அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்
மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15: 19-21
பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்! ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும். அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால் அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர். இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.
2. துயல்(லு) - (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway
துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.
வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 79
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை - திரு 86
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் - திரு 207
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு 164
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல - சிறு 2
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் - பெரும் 161
வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ - குறி 127
இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம். இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர், அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின் அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் - முகபடாம் எனப்படும். இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும் ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா? அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும் தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்? ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே. காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே. சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும் ஆரத்தின் ஆட்டமும் இதுவே.
எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.
அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க - பொரு
சங்கச் சொல்வளம்
2. இரிதல்
இன்றைக்கு வழக்கிழந்துபோன அருமையான சங்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இரிதல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் இதுதான்:1. To be destroyed, ruined;
கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear;
ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)3. To fall away, as a garment; to drop; to recede;
விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)4. To drop, as perspiration; to ebb, as the tide;
வடிதல்.5.To fear, dread;
அஞ்சுதல். (திவா.)வழக்கம்போல் இச்சொல் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காண்போம்.
தொண்டைமான் இளந்திரையனின் வள்ளண்மையைப் பாடவந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணன் ஒருவன் அந்த மன்னனைத் தேடிச் சென்று பரிசில் பெறுவதாகத் தனது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கூறுகிறார். பலவித நிலங்களைக் கடந்து சென்ற பாணன் அறுவடைக்குத் தயாராக இருக்கும் முல்லைநிலக் காடு ஒன்றன் வழியாகச் செல்கிறான். முல்லைநிலக் காடுகள் வானம்பார்த்த பூமியாதலால், விதைப்புக்குப் பின் பொதுவாக மக்கள் காட்டின் உள்ளே செல்லமாட்டார்கள். அப்போது, புதராய் வளர்ந்துகிடக்கும் பயிர்களுக்கிடையே காடைக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். இவை மிக்க அச்சம் கொண்டவை. சிறிதளவு ஆளரவம் கேட்டாலேயே வெருண்டு ஓடுபவை. அறுவடைக்காரர்கள் திடீரென்று பயிருக்குள் நுழைந்தவுடன் இவை அச்சங்கொண்டு பதறியடித்துச் சிதறி ஓடுகின்றன. இதைக் கூறவந்த புலவர்:


-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ ஐயா துரை! அருமையான படங்கள். முயல்கள் தப்பித்துக்கொள்ளும். அந்த இரண்டு மனிதர்கள்? இதை எடுத்த அந்த மூன்றாம் மனிதர்? உயிருக்குப் பயந்த ஓட்டம் - பர்ர்பவருக்கு அருமையான காட்சிதான். பதைப்பவருக்கு எப்படியிருந்திருக்கும்?மிக்க நன்றி ஐயா.
ப.பாண்டியராஜா
//பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்//மதிப்பிற்குரிய முனைவர் அவர்களேநெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போல் என்பார்கள்.ஆனால் அந்த சிதறலில் ஒரு மறைவான பதற்றம் அச்சம் இவற்றை பார்க்க இயலாது.அது வெறும் தாறுமாறான (ரேண்டம்) ஒட்டம்.ஆனால் அந்த உள் அச்சம் (பேனிக்)எனும் உணர்வை அற்புதமாய் படம் பிடிக்கும் அழகான சொல் "இரியல்".விளக்கம் தொடருங்கள்.படிக்க படிக்க தமிழின் தொன்மைச்சுவை கூடிக்கொண்டே போகிறது.அன்புடன் ருத்ரா
On Monday, December 1, 2014 12:20:21 AM UTC-8, Pandiyaraja wrote:
சங்க இலக்கியம் என்பது ஒரு சுரங்கம். எந்தப் பக்கம் தோண்டினாலும் ஏதாவது ஒரு மணி கிடைக்கும். இப்போது நான் சொற்களைத் தோண்டப்போகிறேன். கிடைக்கின்ற மணிகளை இங்கு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.இது அசைவுகளைப் பற்றியது. அலங்குதல் என்றால் அசைதல். அலங்கு கழை என்றால் அசைகின்ற மூங்கில். அப்புறம் துயல்வரு கழை என்கிறார்கள். இதனையும் அசைகின்ற மூங்கில் என்கிறார்கள். துளங்கு நாவாய் என்கிறார்கள் இங்கேயும் அசைகின்ற கப்பல் என்கிறார்கள். இங்கே அலங்குதல், துயலுதல், துளங்குதல் என்ற மூன்றுவிதமான அசைவுகளைப் பார்க்கிறோம். இவை ஒரு சொல் பன்மொழியா? இல்லையெனில், இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடு (கள்) என்ன?கட்டுரையைப் படியுங்கள்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
பின்குறிப்பு : இது வேர்ச்சொல் ஆராய்ச்சி அல்ல. சொல்வள ஆராய்ச்சி.
சங்கச் சொல்வளம்
1. அசைவுகள்
சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு)
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
...
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".
...
2014-12-10 13:02 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:என்பது போல் ‘இரி தவிற்க” என்று சொல்லமுடியுமா? இரிதலின் வேர், ‘இரி’ யா?
இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும். எடுத்துக் காட்டாக,எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய
திசை யானைகளும் அஞ்சி ஓடின (உலகத்தை அழிப்பேன் என்று இராமன் சினம் கொண்டு நிற்கிறான். அவனை சடாயு சமாதானப்படுத்துகிறான்.பேனிக் என்பதற்கு சமமான சொல்லாக இதைத் தமிழில் பயன்படுத்த முடியும்.இரி என்பதே வேர்தான் என்று நினைக்கிறேன்., n. < இரி¹-. 1. The state of being agitated, perturbed or tossed about through fear; அச்சத்தால் நிலைகெடுகை. (பெரும் பாண். 202.) 2. Running, speeding, racing; விரைந்து செல்கை. பெருநீர்
பார்க்கவும்.--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
On Wednesday, 10 December 2014 00:03:42 UTC-8, Hari wrote:இரியல், இரியல் போதல், இரிந்தனர், இரியலுற்றார் என்றெல்லாம் ஏராளமான இடங்களில் கம்பன் பயன்படுத்தியிருக்கிறான். அச்சத்தால் சிதறி ஓடுதல் என்று பொருள்படும். எடுத்துக் காட்டாக,எஞ்சல் இல் திசையில் நின்ற யானையும் இரியல் போய
திசை யானைகளும் அஞ்சி ஓடின
இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றிஇனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்தஅரவரசப் பெருஞ்சோதி அந்தன் என்னும் அணிவிளங்கும்உயர்வெள்ளை அணையை மேவி...[குலசேகர ஆழ்வார்]இருள் அஞ்சி ஓட .....
இருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும் அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் | - | இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப்பெற்ற |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருவரங்கம் பெரியகோயிலில் உபயகாவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்திருளாநின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார். ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால் ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்கமணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது. ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க, ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்லவேண்டாவே. இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல். துத்தி-படத்தின் மேலுள்ள பொறி. மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும். பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னியென்று பெயராயிற்று. “பொன்னி திரைக்கையாலடிவருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.
கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.
On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".Not really.
On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".Not really.ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல்.
10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".Not really.ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல்.ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.
இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.
10 டிசம்பர், 2014 ’அன்று’ 8:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
On Wednesday, December 10, 2014 3:48:06 AM UTC-8, Zஈனத் Xஏவியர் wrote:இரியல் எனும் சொல்லுக்கு மிக சரியான ஆங்கில சொல் “shift".Not really.ஷிப்ட் = பெயர்தல், மாறுதல், மாற்றிவைத்தல், தள்ளிவைத்தல்.ஆம் அதே பொருள்தான். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயர்வது. நான் சொல்லியது இரியல், இரீ அல்ல.புகழ் சால் சிறப்பின் நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்று படு பரிசிலர்க் காணின் கன்றொடுகறை அடி யானை இரியல் போக்கும்
--------------------சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடையகொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்
--------------பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
------------வெண்திரை கிழித்த விளங்கு சுடர் நெடுங்கோட்டுப்
பொன்கொழித்து இழிதரும் போக்குஅருங் கங்கைப்
பெருநீர் போகும் இரியல் மாக்கள்
ஒருமரப் பாணியில் தூங்கி யாங்கு
--------------------------அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்
அன்பு நண்பர் சேவியர் அவர்களுக்கு,
கோமளம்-வடசொல், கண்ணால் துகைக்கவொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.
இரியல் பற்றி இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல் தருவதற்குக் கொடுத்த வாய்ப்புக்காகத் தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள ஐந்து எடுத்துக்காட்டுகளையும் இங்கு அலசியிருக்கிறேன்.இரியல் என்பதற்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருளைக் காண்போம்.
“அச்சத்தினால் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதையோ அல்லது ஆர்வத்தினால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதையோ நமது இலக்கியங்கள் ‘இரியல் போகுதல்' என்று சொல்கின்றன.”
எனவே இரியலுக்கு எப்போதும் வெருட்சி தேவையில்லை. அச்சம், அவசரம், படபடப்பு - ஆகியவற்றின் கலவையுடன் சேர்ந்த இயக்கமே இரியல். இந்தக் கலவையில் சில நேரங்களில் அச்சம் 0 % இருக்கலாம். படபடப்பு 10 % இருக்கலாம். ஆனால் அவசரம் எப்போதும் உண்டு.
இரியல் என்பதற்குத் தாங்கள் கொடுத்திருக்கும் மூன்றாவது, நான்காவது ஆகிய இரண்டு (பெரும்பாணாற்றுப்படை 202, 432) இடங்களுக்கும் இரியல் என்பதற்கான பொருள் மிகச் சரியாக ஒத்துவருவதை ஏற்கனவே கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது.
தவ பள்ளி தாழ் காவின்
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
55 ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி
பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்
தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும்
என்ற பட்டினப்பாலை அடிகளில் புகையை வெறுத்த குயில்கள் என்ன செய்கின்றன என்பது மட்டுமல்ல, எப்படிச் செய்கின்றன என்பதுதான் கேள்வி.
இனிய சோலையில் இன்புற்றிருக்கின்றன குயில்கள். திடீரென்று பெரும்புகை எழுகின்றது. அது ஆவுதி நறும்புகையேயெனினும், குயில்களுக்கு அது பிடிக்கவில்லை. பிடிக்காமல் அடுத்த கிளைக்குத் தாவி அமரவில்லை. ‘படபட’-வென்று இறக்கைகளை வேகமாக அடித்துக்கொண்டு இடத்தையே காலிசெய்து பூதம் காக்கும் நகருக்குள் தற்காலிகமாகத் தஞ்சம்புகுகின்றன. துச்சில் என்பது temporary abode. ஓரிடம்விட்டு வேறிடம் போகும்போது அவை நின்று நிதானித்துச் செல்வதில்லை. அதிலும் மனம்வெறுத்துச் செல்லும்போது வேகம் இன்னும் அதிகரிக்கும். அந்த வேகத்துடன் கூடிய இயக்கம்தான் இரியல்போகுதல். இங்கு காண்பது அச்சம்/ஆர்வம் கொண்ட அவசரம் அல்ல. வெறுப்பினால் வந்த அவசரம்.
இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13
மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.
இரியல் போகும் அல்ல – இரியல் போக்கும் என்றிருப்பதைக் கவனிக்கவேண்டும். இது தன்வினை அல்ல, பிறவினை.
உங்கள் வீட்டுக்கு ஒருவர் வருகிறார். வயதானவர். ஓரளவு பழக்கமானவர். வறியவர். கையில் ஒரு கசங்கிய நூறு ரூபாய்த் தாளை வைத்துக்கொண்டு தயங்கியபடி, “சில்லறை இருக்குமா?” என்கிறார். உங்களுக்கும் கொடுக்கலாம் என்று எண்ணம். “கொஞ்சம் பொறுங்கள்” என்று சொல்லி, வீட்டுக்குள் சென்று, பணப்பையைத் திறந்து சரியான சில்லறை நோட்டுகளை எடுத்து, ஒருதரத்துக்கு இருதரம் எண்ணிச் சரிபார்த்து, மீண்டும் வாசலுக்கு வந்து அவருக்குச் சில்லறை கொடுத்து அனுப்புகிறீர்கள். உள்ளே செல்லும்போதும், திரும்பும்போதும் உங்கள் நடையில் ஒரு நிதானம் இருக்கும். மற்ற செயல்களில் ஒரு பரபரப்பற்ற அடங்கிய நிலையே காணப்படும்.
இன்னொரு நாள் வேறொருவர் வருகிறார். உங்களுக்கு மிகவும் பழக்கமானவர். வேண்டியவர். நீங்கள் மிகவும் மதிப்பவர். வாசலில் நின்று, “சில்லறை இருக்குமா?” என்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? மிக்க மரியாதையுடன் “உள்ளே வாருங்கள் ஐயா” என்று அழைப்பீர்கள். “பரவாயில்ல, வேறொரு சமயம் வருகிறேன். இப்போது சில்லறை மட்டும் தாருங்கள்” என்கிறார். முன்பு போலவே உள்ளே சென்று சரியான சில்லறை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். ஆனால் உங்கள் நடையில் ஒரு அவசரம் இருக்கும். செயல்களில் ஒரு பரபரப்பு இருக்கும். கொஞ்சம் அதிக நேரம் ஆனால்கூட உங்கள் மனைவி, “என்னங்க, சில்லறை எடுத்தாச்சா?” என்று ஓங்கிக் குரல் கொடுக்கலாம். இதுதான் இரிதல், இரியல் போதல். இதற்குக் காரணம் உங்கள் உள்ளத்தில் உள்ள மரியாதை.
சரி, பாடலுக்கு வருவோம். பாணன் ஒருவன் வேள் ஆயிடம் பரிசில் வேண்டி வருகிறான். அவன் வந்து, வேண்டி, ஆயும் கொடுக்க எண்ணி, அருகில் உள்ள உதவியாளரிடம் “இரண்டு யானை கொடுத்தனுப்பு” என்று பாணனையும் அனுப்ப, யானை வரத் தாமதமானால், பாணன், “என்னங்க, யானை எப்போக் கிடைக்கும்?” என்று வினவினால், “எல்லால் வரும்யா, என்ன இப்போ அவசரம்? கொஞ்சம் பொறு” என்ற அதட்டல் வர, பாணன் தன்மானமுள்ளவன் என்றால் ஔவைப் பாட்டி போல, “காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை, எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்று அகன்று போயிருப்பான்.
இங்கே நடந்தது என்ன? பரிசிலரைக் கண்டவுடனேயே, மன்னன் உடனே யானைக்கு உத்தரவிடுகிறான். அவன் குரலிலிருந்த அவசரத்தையும், கண்டிப்பையும் பார்த்த உதவியாளர் வேகமாக ஓடுகிறார். யானைகளை அவிழ்த்துக்கொண்டு வருகிறார். அந்த யானைகள் ஆடி அசைந்து மெல்ல வருகின்றன. தாமதமானால் அரசன் கோபிப்பானே என்று பணியாளன் அந்த யானைகளை அடித்து விரட்டிக்கொண்டு வேகமாக வருகிறான். இதுதான் இரியல் போக்கல். யானைகள் இரியல் போகவில்லை. அவற்றுக்கு அவசரம் கிடையாது. பணியாளன் அவற்றை இரியல் போக்குகிறான். காரணம் அரசனின் அதிரடி உத்தரவு. அதற்குக் காரணம் அரசன் பரிசிலர்மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும். சில்லறை மாற்றும் இரண்டாம் கதை போல.
பரிசில் பெற்றுத் திரும்பிய இரவலன், தன் சுற்றத்தாரிடம், “என் தலையைக் கண்டமாத்திரத்தில், யானையை அடித்து விரட்டிக்கொண்டு வந்தார்கள்” என்று கூறும்போது அவன் முகத்தில் எத்துணை பெருமிதம் நிலவியிருந்திருக்கும்!
அந்த இரியல் போக்கல் என்பது வெறும் இடம் மாற்றம் மட்டும் அல்ல. இதற்கு உரைகாரர் கூறும் கூற்றை (அவர் ஓர் உரைவேந்தர், என் பெருமதிப்புக்குரிய ஆசிரியர் – மதுரைத் தியாகராசர் கல்லூரியில்) நான் அப்படியே ஏற்றுக்கொள்ளமாட்டேன். இரியல் போக்கலில் உள்ள அவசரமும், பரபரப்பும்தான் இங்குள்ள இலக்கிய இன்பம். அந்தப் புலவனுக்கு எத்துணை மரியாதை கிடைத்தது என்பதை உட்பொதிந்து உரைக்கும் சிறப்புப்பொருள்.
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன்
என்று இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தப் இரவலனின் மகிழ்ச்சியுடன் கூடிய பெருமிதமும், அதை நுண்ணிதாகப் புலப்படுத்தும் புலவரின் நுண்மாண் நுழைபுலமும் நன்கு வெளிப்படும்.
இனி அடுத்து,
சிறுகுடிக் கிழான் பண்ணற் பொருந்தித்
தன்னிலை அறியுநனாக அந்நிலை
இடுக்கண் இரியல்போக … புறம் 388/4-6
என்பதைப் பார்ப்போம்.
சிறுகுடிக்குரியனாகிய பண்ணனையடைந்து தனது வறுமைநிலையை அறிவித்தானாக, அப்பொழுதே, அவனுற்ற பசித்துன்பம் நீங்குமாறு .. என்று உரை கூறுகிறார் ஔவை சு.து அவர்கள். அப்பொழுதே நீங்குதல்தான் இரியல்போதல். இங்கேயும் வெறும் நீங்குதல் என்று மட்டும் கொண்டால் இலக்கிய நயம் கிட்டாது.
காதலன் ஒருவன் காதலியைப் பார்க்க வேகமாக வருகிறான். கிட்டே வந்தும்விட்டான். அப்போது ஒரு சிறிய கல்லில் தடுக்கிவிடுகிறான். கால் விரலில் இரத்தம். “அம்மா” என்று அலறுகிறான். “ஐயோ” என்று பதறிப்போன காதலி அருகில் வந்து அமர்ந்து, தன் கைக்குள் வைத்திருந்த கைக்குட்டையைப் பிரித்து நெட்டுவாக்கில் மடித்து, கால்விரலைச் சுற்றி இறுக்கமாகக் கட்டி, ஆதரவுடன் தடவிக்கொடுத்து, “ரொம்ப வலிக்குதா?” என்று கேட்கிறாள். “முதலில் வலித்தது, நீ தொட்டுக் கட்டுப்போட்டுத் தடவிக்கொடுத்தவுடனேயே வலி இருந்த இடமே தெரியவில்லை. ஒரேநொடியில் பறந்ந்ந்ந்ந்ந்ந்ந்து போச்சு” என்று அவன் சொல்ல, சற்றே கன்னம் சிவக்க, ஒரு நாணம் கலந்த முறுவலுடன் காதலி அவனைப் பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும் பேரின்பத்துக்கு இணை வேறுண்டோ? “இதை விடுத்து, “ரொம்ப வலிச்சுச்சு, கட்டுப்போட்டிட்டில்ல, கொஞ்சம் பரவாயில்லை” என்று கூறியிருந்தால் அந்த இன்பம் கிடைத்திருக்குமா?
கண்ணன் குசேலரின் அவலைத் தின்றுகொண்டே குசேலரைப் பார்த்துச் சிரித்தான். அந்த நொடியில் அங்கே குசேலரின் வீட்டில் இருந்த பஞ்சம் பஞ்சாய்ப் பறந்துபோய்விட்டது” என்ற கூற்றில் இருக்கும் பஞ்சாய்ப் பறத்தல்தான் இங்கே இடுக்கண் இரியல் போக எனக் கூறப்பட்டுள்ளது.
இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது. அதைவிடுத்து வெறும் நீங்குதல் (shift) எனக்கொண்டு, நிலைமையைச் ‘சப்’-பென்று ஆக்கிவிடாதீர்கள் வேந்தன் அரசு!
ப.பாண்டியராஜா
இனி தாங்கள் கூறியுள்ள புறநானூற்று அடிகளைக் காண்போம்.
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய் – புறம் 135 / 11-13
மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின் கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும் மலையையுடைய நாடனே மா வேளாகிய ஆயே! - ஔவை.துரைசாமிப் பிள்ளை உரை.
--------------------சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
தன் நிலை அறியுநன் ஆக அந்நிலை
இடுக்கண் இரியல் போக உடையகொடுத்தோன் எந்தை கொடை மேந் தோன்றல்இடுக்கண்ணுக்குஏ அச்சமா?
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றி
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறுமலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.
இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.
On Friday, December 12, 2014 9:39:12 AM UTC+3:30, தேமொழி wrote:
On Thursday, December 11, 2014 9:06:06 PM UTC-8, Pandiyaraja wrote:இரியல்-இல் உள்ள அவசரம், படபடப்பு, வேகம் ஆகியவற்றின் கலவை (கலவை விகிதங்கள் வெவ்வேறாக இருக்கலாம்)யே இலக்கிய இன்பம் தருவது.
இரியல் என்றால் இப்பொழுது பதறுதல் என்றும் பொருள் வரும் போலிருக்கிறது ஐயா.ஆம். இரிதலில் கொஞ்சம் அச்சமும் கலந்திருக்கும். பெருநீர்க் கங்கையில் படகில் போகும்போதுஇமயத்தின் வெள்ளம் வருமோ என்ற அச்சம். கருங்கடலில் போகும்போது திரும்புவரோ, புயலில்மடிவரோ என்ற அச்சம்.
இரீ, இரியல் போகு இரண்டுக்கும் வேற்றுமை காண்கிறேன்.
"சங்கச் சொல்வளம்" என்று பாண்டியராஜா ஐயா தொடங்கிய இந்த இழையில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட "இரியல்" என்று சொல்லைத் தொடர்ந்து மேலும் பல சங்கச்சொற்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.இந்த இழையில் அறிமுகமான மற்றொரு சொல்லான "அலங்கு" என்ற சொல்லின் பொருளைப் பற்றி மேலும் பல கோணங்களையும், மேலதிகத் தகவல்களையும் சில குழும உறுப்பினர்கள் மேலும் சில இழைகளில் விளக்கமளித்து வருகிறார்கள்.அவர்களது விளக்கங்களையும் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கீழே அந்த இழைகளின் சுட்டிகள்:நூதலோசு: சங்கநூல் + பழம் நூல்கள் சொல்வளம் = அலங்குவேந்தன் சரவணன்: அலங்கு என்பது என்ன?திரு. கணேசன்: கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wednesday, December 31, 2014 6:04:34 AM UTC-6, ருத்ரா இ.பரமசிவன் wrote:மதிப்பிற்குரிய முனைவர் திரு.பாண்டியராஜா அவர்களேபருவ வானத்து பால் கதிர் பரப்பிஉருவ வான் மதி ஊர்கொண்டாங்குகூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டுஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253இந்த வரிகளில் ஊர்தல் எனும் மெதுவாய் நகர்வதை அந்த திங்களின் ஒளி வட்ட நகர்வைக்கொண்டு அழகாய் விளக்கியுள்ளீர்கள்.அதில் "நோன் குறட்டு "என்ற சொல் உற்று நோக்கத்தக்கது.அந்த சக்கரத்தின் "கட கடத்த"ஒலியை அது காட்டுகிறது.மனிதனின் "குறட்டை"ஒலியும் அது தானோ.சக்கரம் அச்சில் "பிடிப்பு" ஏற்படுத்திக்கொள்வதில் அது நைகிறது (நோன்)குறட்டு என்பதற்கு வலுவான பிடிவாதம் என்ற பொருளும் வருகிறது.குறடு + ஆரம் = குறட்டாரம்
நம்மிடையே வாழும் மலைவாழ் மக்களிடம் இத்தகையஅரிய திறமை இருப்பதால் அவர்கள் இயற்கையின் சீற்றங்களைநன்கு தாக்குப்பிடிக்கின்றனர்.கொச்சையாய் அதை குறச்சாதனை என்கிறோம்.குறிஞ்சித்திணையின் உட்பொருளே அந்த குறட்டு தான்.குறமகள் இளஎயினியின் சங்கப்பாடலில் அந்த குறிஞ்சியின் வெளிச்சம் நன்கு தெரிகிறது.மேலும் இப்படி ஒரு "பிடிமானக்கருவியை" நாம் "பற்றுக்குறடு" என்கிறோம்.உங்கள் சிறுபாணாற்றுப்படை பாடலின் வரிகள் பலவிதமான "சொற்குடைவு"களை நம்மிடம் நல்குகின்றன.தங்கள் "சங்கச்சொல்வளம்" தமிழ் ஒலிப்புகளின் "சொற்சுரங்கம்" என்பதில் ஐயமே இல்லை.
1. அகைதல் / அகைத்தல்
ஒரு உயரமான அண்டாவில் நீர் நிறைய இருக்கிறது. அதன் கீழ்ப்புறத்தில் ஒரு குழாய் இருக்கிறது. அந்தக் குழாயைத் திறந்து ஒரு குவளை நீர் பிடிக்கிறோம். அண்டாவில் நீர்மட்டம் குறையும். இன்னும் கொஞ்சம் நீர் பிடிக்கிறோம். நீர் மட்டம் மேலும் குறையும். இவ்வாறு குழாயைத் திறந்துவைத்தால் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.
அடுத்து, அந்தக் குவளையை அண்டாவின் மேல் பாகத்தில் உள்ளே விட்டு நேராக நீர் முகக்கிறோம். அப்போதும் நீரின் மட்டம் குறையும். இவ்வாறு அடுத்தடுத்துக் குவளையில் நீர் மொண்டுவருகிறோம். இவ்வாறு நீரை மொண்டுகொள்ளும்போதெல்லாம் நீரின் உயரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும். இந்த இருவகைக் குறைதலுக்குமுள்ள வேறுபாடு என்ன?
முதலாவதில் நீர் வடிய வடிய, நீரின் உயரம் தொடர்ச்சியாகக் குறைந்துகொண்டே வருகிறது. அடுத்ததில், ஒருமுறை நீர் மொள்ளும்போது நீரின் உயரம் சடார் என்று ஓரளவுக்குக் குறைகிறது. ஒவ்வொரு முறையும் நீர் மொள்ள மொள்ள நீரின் உயரம் சடார் சடார் என்று குறைந்துகொண்டுவருகிறது. நீரின் உயரம் குறைதல் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு நடக்கிறது. அறிவியல் வழக்கில், முதலாவது continuos அடுத்தது discreet. ஆப்பிளை எடைத்தராசில் நிறுத்து வாங்கினால் அது continuos. 1 கிலோ, 1¼ கிலோ, 1½ கிலோ என்று வாங்கலாம். எண்ணிக்கைக் கணக்கில் வாங்கினால் அது discreet. 1 பழம், 2 பழம் என்றுதான் வாங்கமுடியும். 1¼ பழம் கிடைக்காது!
ஒரு குளத்தின் மடைவழியாக வயலுக்கு நீர் பாயும். சில நேரங்களில் அருகில் இருக்கும் வயலுக்குப் பாய்ச்சுவதற்கு ஒரே ஆள் அல்லது இரண்டு ஆட்கள் சேர்ந்து ஒரு கூடையின் மூலம் நீரை முகந்து முகந்து வயலுக்குப் பாய்ச்சுவர். இதைப் பற்றிக் கூற வந்த ஒரு புலவர் கூறுகிறார்,
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென்தொடை வன்கிழார் - மதுரைக்காஞ்சி 92,93
(கயன்=குளம்; அகைய=குறைய; தொடை=கட்டு; கிழார்=நீர்முகக்கும் கருவி)
‘குளத்துநீர் குறையும்படியாக (நீரை முகந்து)வயலை நிறைக்கும் மெல்லிய கட்டுக்களையுடைய வலிமையான பூட்டுப்பொறி' என்பது இதன் பொருள்.
அகைதல் அல்லது அகைத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டுக் குறைதல் அல்லது குறைத்தல் என்று பொருள்படும். ஒரு யானை மரத்தின் தளிருள்ள கிளைகளை ஒவ்வொன்றாக ஒடித்து-ஒடித்து உண்ணும். இதை,
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் என்கிறது மலைபடுகடாம் (429)
(உம்பல்=யானை;முறி=தளிர்).
குளத்தில் மடை இருந்தால், அதன் வழியே நீர் வெளியே செல்லும்போதும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். ஆனால், இது தொடர்ச்சியாக நடைபெறும். எனவே இது ஒரு continuos process. எனவே இது அகைத்தல் அல்ல. ஒரு பொறியினால், நீரை முகந்து முகந்து வெளியே கொட்டும்போது, நீர் விட்டுவிட்டுத்தானே குறையும்! ஒரு முகத்தலுக்கும் அடுத்த முகத்தலுக்கும் இடைப்பட்ட சிறிய இடைவெளியில் நீர் குறைவதில்லை. எனவே, இது ஒரு discreet process. இந்த நுணுக்கமான வேறுபாட்டையும் குறிப்பிடுவதற்குப் புலவர் தெரிந்தெடுத்துள்ள சரியான சொல், அவரின் சொல்திறனையும் தமிழின் சொல்வளத்தையும் காட்டுகிறது அல்லவா!
, n. < id. +. See அகைவாய்க்கால். இவ்வூர் அகையாறும் ஆக இறையிலி (S. I. I. ii, 56).
அகைவாய்க்கால் akai-vāykkāl, n. < id. +. Branch channel; கிளைவாய்க்கால். (S. I. I. iii, 171.)
நா. கணேசன்
3. நிழத்து
உயர்ந்த ஒரு கோபுரத்தின் உச்சியில் இருக்கும் ஒரு பெரிய வெண்கலமணி ‘கணீர்’ என்று ஒலிக்கிறது. பின்னர் அந்த ஒலி சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து தேய்ந்து மறைகிறது. சுற்றுப்புறச் சந்தடிகள் மணி ஒலியைச் சீக்கிரமாகவே அமுக்கி முழுங்கிவிடுகின்றன. இதுவே, நள்ளிரவாயிருந்தால், வேறு எந்தச் சந்தடியும் இல்லாத நேரத்தில் மணி ஒலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தாலும் நீண்ட நேரத்துக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். இதுதான் நிழத்துதல். முல்லைப்பாட்டில், தலைவனான அரசன் போர்மேற் சென்றிருக்கிறான். அவனுடைய பாசறைக் காட்சிகளை மிக அழகாகவும், வெகு விளக்கமாகவும் ஆசிரியர் கூறிக்கொண்டே வரும்போது நள்ளிரவு நெருங்குகிறது. அப்போது அங்கு இருந்த நீண்ட நாவினை உடைய மணியைப் பொழுது அறிவிப்போர் முழக்குகின்றனர். ஓங்கி ஒலித்த மணியின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து இறுதிவரை நீண்ட நேரம் ஒலிப்பதைப் புலவர் நப்பூதனார்,
நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள் – முல்லைப்பாட்டு 50
என்று கூறுகிறார். அது நள்ளிரவு நேரம். அரசனின் இருப்பிடம் வேறு. எனவே எங்கும் ஒரே அமைதி. எனவே மணியோசை இறுதிவரை ஒலித்து அடங்குகிறது. ஒருவேளை அது பகல் நேரமாயிருந்து, அந்நேரத்தில் வேறு அரவங்கள் இருந்திருந்தால் மணியோசை கடைசிவரை ஒலிக்காமல் சற்று நேரத்திலேயே அடங்கிப்போயிருக்கும். அவ்வாறு இடையில் சட்டென்று அடங்கிப்போகாமல் இறுதிவரை ஒலித்து மிக நுணுக்கமாக ஆகி மறைந்துபோவதே நிழத்தல்.
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32
என்கிறது தொல்காப்பியம். எனவே நிழத்தல் என்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து மிகவும் நுணுகிப்போதல் என அறியலாம்.
இவ்வாறு நுணுகிக் குறையாமல் நின்றுபோவதை அடங்குதல் அல்லது அவிதல் எனலாம். உருமிக்கொண்டு வருகிற கருத்த மேகங்கள் இடி மின்னலுடன் பெருமழை பெய்து ஓய்ந்து போவதை,
உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் – அகம் 158/1,1
என்கிறது அகநானூறு. பெய்கின்ற மழை நின்றபின் அதன் ஒலி அடங்கிப்போவதையே மழை நின்று ஒலி அடங்கிய நள்ளிரவு என்கிறது இப் பாடல். அவிதலுக்கும் நிழத்தலுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்.
மழை பெய்யாமல் வறங்கூர்ந்ததால் பெரிய மலையினின்றும் விழும் அருவி கொஞ்சம் கொஞ்சமாக நீர்வரத்துக் குறைந்து, நுணுகிப்போய் வறண்டுபோவதும் நிழத்தலே.
காட்டு விலங்குகளான யானை, காட்டுப்பன்றி போன்றவை தினைப்புனத்தை மேய்ந்து அல்லது தோண்டிக் கொஞ்சம் கொஞ்சமாகப் புனத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதும் நிழத்தலே. இதனை,
அருவி மா மலை நிழத்தவும் – பொருநராற்றுப்படை - 235
நிழத்த யானை மேய் புலம் படர – மதுரைக்காஞ்சி - 303
வாய் மடுத்து, இரும் புனம் நிழத்தலின் – குறிஞ்சிப்பாட்டு - 156,157
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலைபடுகடாம் - 193
...

கணேசன் ஐயா அவர்களுக்கு,நிழத்தல் வேறு, நிழற்றல்/நிழற்றுதல் வேறு. நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்? இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் முற்றிலும் இல்லையென்றாகும். இதைத்தான் தொல்காப்பியர் உள்ளதன் நுணுக்கம் என்கிறார். நான் பொருள்வழிச் சொல்லைப் பார்ப்பவன்.
காரணம் எனக்கு வேர்ச்சொல்லாய்வு தெரியாது. எனவே வேர்களுக்குள் நான் நுழைவதில்லை. பொருளைத்தான் பார்க்கிறேன். அந்தப் பொருளும் பயன்பாட்டுவழிதான் தெரியும். எனவேதான் சொற்களின் வருமிடங்களை உற்றுப்பார்க்கிறேன். அவற்றினின்றும் பொருளை derive செய்கிறேன். பின்னரே அகராதிகளைப் பார்க்கிறேன். தங்கள் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா
...
நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது.
On Saturday, February 14, 2015 at 10:30:12 PM UTC-8, Pandiyaraja wrote:கணேசன் ஐயா அவர்களுக்கு,நிழத்தல் வேறு, நிழற்றல்/நிழற்றுதல் வேறு. நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்? இருப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் முற்றிலும் இல்லையென்றாகும். இதைத்தான் தொல்காப்பியர் உள்ளதன் நுணுக்கம் என்கிறார். நான் பொருள்வழிச் சொல்லைப் பார்ப்பவன்.நிழற்றல்/நிழத்தல் இரண்டும் ஒன்றுதான் ஐயா. வடமலை நிகண்டுச் சூத்திரம் அதைக்காட்டத் தந்தேன்.நிழற்றல் எனும்பெயர் நிழற்செய லுடனேநுணுக்க மெனவே நுவன்றனர் புலவர்”நீங்கள் சொல்லியபடி நிழத்தல் = இல்லையென்றாதல் முற்றிலும் சரி. இது எவ்வாறு ஆகும்?”நிழத்தல் = நிழற்றல். முல்லைப்பாட்டு அடி 50: நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்இதற்கான உரையைப் பாருங்கள். நிழத்திய = நிழற்றிய என்று உள்ளது. சென்னைப் பேரகராதி:நிழற்று²-தல் niḻaṟṟu- , 5 v. intr. < நிழத்து-. To be still, calm; அடங்குதல். (முல்லைப். 50, உரை.)நிழல்- என்னும் அடிப்படைச்சொல் நிழத்து/நிழற்று என “இல்லை என்றாதல்” என்னும் பொருள் ஏற்பைக்குறிப்பிட்டேன். நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது.
2015-02-15 19:19 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:நிழற்று-தல் என்றால் அடிப்படையான பொருள் நிழல் (shadow). பிம்பத்தைப் பிடித்துப் பார்க்கின் ஒன்றும் சிக்காது. எனவே, நிழத்து-தல் “இல்லை என்றாதல்” என்ற பொருளையும் ஏற்கிறது.நிழலைத் தர, ஒளிவீச என்றும் பொருள்படும். கம்பன் பல சமயங்களில் இரண்டு பொருளிலும் ஆண்டிருக்கிறான்.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.
...
மிக்க நன்றி கணேசன் ஐயா!தாங்கள் பேச்சுவழக்கையும் சங்க வழக்கையும் போட்டுக் குழப்புவது வியப்பை அளிக்கிறது. காற்று, ஆற்று - க்குப் பதிலாக, காத்து, ஆத்து என்று சங்க வழக்குகள் உளவா? சேரி மொழியைப் பற்றித் தொல்காப்பியம் பேசினாலும் அது உரையாடலின்போது வரலாம் என்பர். இங்கே நிழத்திய என்பது தூய இலக்கிய வழக்கு. சேரி மொழி அல்ல.தயவுசெய்து சங்கச் சொற்களுக்குப் பிற்காலத்திய நிகண்டு, அகராதி போன்றவற்றினின்றும் பொருளைத் திணிக்காதீர்கள். முதலில் சங்கச் சொற்களுக்குப் பொருள் சங்கப்ப்பாடல்களில்தான் பார்க்கவேண்டும். கிடைக்காவிடில் பிற்காலத்தோர் கூறுவதைப் பார்க்கலாம்.நான் வைத்திருக்கும் அனைத்து உரைகளும் நிழத்திய என்பதற்கு நுணுகிய, அவிந்த அடங்கிய என்ற பொருளையே தருகின்றன. பெருமழைப்புலவர், "நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணிகளின் ஓசை நுணுகிய நடுயாமத்தே" என்கிறார். பின்னர் விளக்கத்தில் இதனையே 'அடங்கிய' என்கிறார். மறைமலை அடிகள் தன் முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை எனும் நூலில், "மணியினோசை அடங்கிய நள்ளிரவில் .. " என்கிறார் (பக்.89) "நிழத்திய = நுணுகிய, அஃதாவது முன்னுள்ள ஓசை அடங்கிய; இச்சொல் நுணுக்கப் பொருளையுணர்த்துதல் ,ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயின் நான்கும் நுணுக்கப் பொருள" என்னுந்தொல்காப்பிய உரியியற் சூத்திரத்தில் காண்க; இனி, நிழற்றல் எனப் பாடமோதுவாருமுளர். நிழற்றல் ஒளிவிடுதலெனப் பொருடரும் பிறிதொரு சொல்லாதலின் அஃதீண்டைக்குப் பொருந்தாது; அற்றேல், திவாகரத்தில் நிழற்றல் நுணுக்கமும் நிழற்செயலுமாகும் என்று அஃது இரு பொருளும் உடைத்தாக ஒதப்பட்டவாறென்னையெனின், அது காப்பியத்தோடு முரணுவதாலிற் கொள்ளற்பாதன்றென மறுக்க என்றது. " என்று கூறுகிறார். எனவே நிழத்தல் நிழற்றல் ஆகியவை வேறு என நான் சொல்லவில்லை. இது மறைமலையடிகள் கூற்று.
ப.பாண்டியராஜாபி.கு:"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இதுங்ஒய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
ப.பாண்டியராஜா
...
"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இதுங்ஒய்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்
அன்புள்ள ஐயா!மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.
...
அன்பின் ஐயா!முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ப.பாண்டியராஜா
On Monday, February 16, 2015 at 8:07:45 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, February 16, 2015 at 6:22:56 AM UTC-8, Pandiyaraja wrote:அன்புள்ள ஐயா!மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.நிழ(ல்) என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வரும். அழ(ல்) - அழற்று என்றும், அழத்து என்றும் வருவது போல்.நிழத்து/நிழற்று = தேய்ந்து மறைவது (நிழல் ஒளி வந்தால் தேய்ந்து மறைந்துவிடும்).அப்படிப் பொருள் இல்லை என்று யாரும் - நான் உள்பட - எங்கும் சொல்லவில்லையே.முல்லைப்பாட்டுச் சுவடிகளிலே நிழத்து இருக்கிறது, நிழற்று இருக்கிறது.இரண்டும் ஒன்றே என்கின்றன நிகண்டுகள். மொழியியலாளரும் இவை ஒன்றே என்பதும் கவனத்தில் கொள்வோம்.நா. கணேசன்ப.பாண்டியராஜா
On Monday, February 16, 2015 at 6:44:08 PM UTC+5:30, N. Ganesan wrote:On Monday, February 16, 2015 at 3:41:07 AM UTC-8, Pandiyaraja wrote:"நான்கும் நுணுக்கப் பொருள" என்று மறைமலையடிகள் கூறினும், அது, "உள்ளதன் நுணுக்கம்" எனப் பெருமழைப் புலவர் கூறுகிறார். உள்ளதன் நுணுக்கம் என்பதுதான் சென்று தேய்தல். 1-ஆக உள்ளது 1/2 ஆக நுணுகி, 1/2 ஆக உள்ளது 1/4-ஆக நுணுகி, 1/4-ஆக உள்ளது 1/8-ஆகி, 1/8-ஆக உள்ளது 1/16-ஆகி, இவ்வாறு 1, 1/2, 1/4, 1/8, 1/16 ................ என்று உள்ளதன் நுணுக்கமாக (decreasing sequence) ஆகி, இன்று சென்று தேய்கிறது (tends to zero) என்ற கருத்தை உணர்த்திநிற்கும் அழகிய தமிழ்ச்சொல் நிழத்தல். சுஜாதாவின் மொழியில் இதுங்ஒ
...
On Monday, February 16, 2015 at 6:42:45 AM UTC-8, Pandiyaraja wrote:அன்பின் ஐயா!முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.ப.பாண்டியராஜா
மிக்க நன்றி ஐயா!தாங்கள் இன்னும் theoretical -ஆகவே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் தாங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் இதற்கு எடுத்துக்காட்டு உண்டா? (ஆற்று > ஆத்து, காற்று > காத்து)சங்க இலக்கியத்தில் நிழற்று, நிழத்து இரண்டும் உண்டு. இரண்டும் வெவ்வேறான பொருளில் வருகின்றன.
நிழற்ற (2)
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற/கரை சேர் மருதம் ஏறி - ஐங் 74/2,3
நிலவு கடல் வரைப்பின் மண்_அகம் நிழற்ற/ஏம முரசம் இழுமென முழங்க - புறம் 3/2,3
நிழற்றி (1)
நில வரை எல்லாம் நிழற்றி/அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே - அகம் 273/16,17
நிழற்றிசினே (1)
காதல் நன் மரம் நீ நிழற்றிசினே/கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்த - புறம் 272/3,4
நிழற்றிய (2)
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை - அகம் 204/1
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் - புறம் 189/2
நிழற்றுதல்-மன்னே (1)
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே/இனி பசந்தன்று என் மாமை கவினே - ஐங் 35/3,4
நிழற்றும் (2)
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்/எம் கோ வாழிய குடுமி தம் கோ - புறம் 9/7,8
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை - புறம் 51/2------------நிழத்த (4)
நிழத்த யானை மேய் புலம் படர - மது 303
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த/முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க - பரி 6/19,20
நில வரை அல்லல் நிழத்த விரிந்த - பரி 10/3
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த/துறுகல் விடர் அளை பிணவு பசி கூர்ந்து என - அகம் 147/4,5
நிழத்தலின் (2)
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது - குறி 157
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி - மலை 193
நிழத்தவும் (1)
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ - பொரு 235
நிழத்திய (1)
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் - முல் 50இவற்றின் அடிப்படையில் தாங்கள் பேசினால் நல்லது. நல்ல விவாதத்துக்கு மிக்க நன்றி.
ப.பாண்டியராஜா
On Monday, February 16, 2015 at 8:19:24 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, February 16, 2015 at 6:42:45 AM UTC-8, Pandiyaraja wrote:அன்பின் ஐயா!முல்லைப்பாட்டில் நிழற்று என்ற பாடத்தைப் பாடபேதமாகக் கொண்டு, அதனை ஆய்ந்து, மறைமலை அடிகள் ஒதுக்கிவிட்டதை என் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.ப.பாண்டியராஜாமறைமலையடிகள் ஆய்வுகள் கால்ட்வெல் போன்ற மொழியியல் அறிஞர்கள் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக்கொண்டு தனித்தமிழை, தனித்தமிழர் மாட்சியை ஒரு புது வழி காட்டுவன. ஆனால், அவரது எழுத்துக்களுக்கும்,வரலாற்றுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. மறைமலை அடிகள் சொன்னதால் நிழற்று = நிழத்து என்பதுமாறிவிடாது. நிகண்டுகள் பல நூற்றாண்டுக்கு முன்னரே ஆராய்ந்து சொல்லிய செய்தியிது. இன்றையமொழியியல்புலவரும் ஒப்புவதில்லை. நிழல்- என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வருவது தமிழில்நிறைய. தேய்ந்து மறையும் நிழல் என்பதன் வினைச்சொல் ஆக்கங்கள். அரதப் பழசானவை.நா. கணேசன்
On Monday, February 16, 2015 at 8:07:45 PM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, February 16, 2015 at 6:22:56 AM UTC-8, Pandiyaraja wrote:அன்புள்ள ஐயா!மதுரைப்பக்க பேச்சு வழக்கெல்லாம் நான் அறியாததா! ஆனால், தாங்கள் இன்னும் இன்றைய பேச்சு வழக்கையும், அன்றைய சங்க வழக்கையும் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். காற்று > காத்து, ஆற்று > ஆத்து போன்றவை எங்காவது சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா என்று காட்டுங்கள்.நிழத்து என்பதை நீங்கள் நிழற்றுவின் கொச்சை வழக்கு என்று கூறினாலும், இங்கே நிழத்து என்பது சென்று தேய்ந்து மறைவது என்பதை ஒத்துக்கொண்டபின்னர் எனக்குச் சொலவதற்கு வேறு எதுவும் இல்லை.நிழ(ல்) என்பது நிழத்து என்றும், நிழற்று என்றும் வரும். அழ(ல்) - அழற்று என்றும், அழத்து என்றும் வருவது போல்.நிழத்து/நிழற்று = தேய்ந்து மற
...
தாங்கள் (இன்னும்) மீண்டும்theoretical -ஆகவே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
இன்னும் தாங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில் இதற்கு எடுத்துக்காட்டு உண்டா? (ஆற்று > ஆத்து, காற்று > காத்து)சங்க இலக்கியத்தில் நிழற்று, நிழத்து இரண்டும் உண்டு. இரண்டும் வெவ்வேறான பொருளில் வருகின்றன.
ப.பாண்டியராஜா
...
>>"அவ்வாறு தெரியவில்லை"
Dear Dr.Ganesan,I don't find any reason for continuing this because you refuse to see the truth and also refuse to come out with facts. This is like dribbling the ball without moving any further.You have the right to say the same thing about my position.
With regards,P.Pandiyaraja
...
Dear Sir,Repeatedly you are going back to the roots and to the different versions of the texts. I am always looking forward to the usage. So, finally I put forth this question. Can you show me any single example where நிழற்ற has been used in SANGAM literature with the meaning of நிழத்த - dwindling. All your theoretical derivations are meaningful only when you have supporting documentary evidence , in this case the Sangam works. Otherwise we can both leave this and go back to our own routine.
With regards,P.Pandiyaraja
On Tuesday, February 17, 2015 at 8:53:27 AM UTC+5:30, N. Ganesan wrote:
On Monday, February 16, 2015 at 9:51:19 AM UTC-8, Pandiyaraja wrote:> ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்> ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – தொல்காப்பியம்– உரிச்சொல் – 32அன்பின் பாண்டியராஜா ஐயா,தொல்காப்பியப் பதிப்புகளின் இண்டெக்ஸ் பார்த்து பேரா. கி. நாச்சிமுத்து தெரிவித்தது.சுவடி வேறுபாடாக நிழற்றல் என்றும் இந்த தொல்காப்பியச் சூத்திரத்திற்கு இருக்கிறதாம். 1976 பதிப்பு என்றார்.”ஓய்தல் ஆய்தல் நிழ
...
On Monday, February 16, 2015 at 8:12:53 PM UTC-8, Pandiyaraja wrote:Can you show me any single example where நிழற்ற has been used in SANGAM literature with the meaning of நிழத்த - dwindling.
I am tired Dr.Ganesan. I am asking for OTHER QUOTATIONS FROM OTHER SANGAM LITERATURE FOR நிழற்ற WITH THIS MEANING - NOT TEXT VARIATIONS.If you have any instances please continue here. Otherwise, I think it is high time we stop this.P.Pandiyaraja
...
On Mar 8, 2015, at 11:48 PM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:அன்புடையீர்,சென்ற கட்டுரையைத் தொடர்ந்து பலவிதமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.இந்தக் கட்டுரையில் 'அச்சம்' இடம்பெற்றுள்ளது. சிறிது அச்சத்தோடுதான் அனுப்பியிருக்கிறேன்.மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா
4. அஞ்சுதல்அச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
4.1 அச்சம்
நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம்.
பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:-
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிசெற்றமும் உவகையும் செய்யாது காத்துஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகிசிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489 – 492
தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி தோழியை விசாரிக்கிறாள். தலைவியின் நோயின் காரணம் கேட்கிறாள்.
இப்போது தோழியின் நிலை என்ன? செவிலியிடம் உண்மையைச் சொன்னால் அதனால் தலைவியின் காதலுக்கு ஊறு நேரலாமோ என்ற உணர்வு; தலைவிக்காகச் செவிலியிடம் உண்மையை மறைத்தால் தலைவியின் காதல்நோய் மிகுமே என்ற உணர்வு. யாருக்காகப் பேசினாலும் கேடு வருமே என்கிற உணர்வு. இங்கே தோழிக்கு இரண்டு வகையான தீர்வுகளில் எதை எடுப்பது என்ற தடுமாற்றம் மேலிடுகிறது. பகைமையுணர்வு கொண்டு போரிட எதிர்த்து நிற்கும் இரு பெரு வேந்தரிடையே பேசிப் பகைமையைத் தீர்க்க முயலும் ஒரு சான்றோனைப் போல தோழி தவிக்கிறாள்.
இகல்மீக்கடவும் இருபெரும் வேந்தர்வினையிடை நின்ற சான்றோர் போலஇருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென் – குறிஞ்சிப்பாட்டு 27 - 29
காதல்கொண்ட ஒரு தலைவன் மணமுடிக்கக் காலம் தாழ்த்துகிறான். இதனால் காதலி மனம் வருந்துகிறாள். அவளது தோழி இதனைத் தலைவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். ஒருநாள் தலைவியைச் சந்திக்கக் காதலன் வரும் நேரம் பார்த்து, அங்கு இருக்கும் வண்டினைப் பார்த்துக்கூறுவதுபோல் உரக்கப் பேசுகிறாள். “ ஏ வண்டே, நீ போய்த் தலைவி இன்னும் தன் வீட்டாரிடம்தான் (உயிருடன்தான்) இருக்கிறாள் என்று சொல். அப்படிச் சொல்வதால் உனக்கு ஒன்றும் நேரிடாது. நல்ல சொல் சொல்ல அச்சம் தேவையில்லை அல்லவா!” என்கிறாள்.
அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பிநல்மொழிக்கு அச்சம் இல்லை அவர்நாட்டுஅண்ணல் நெடுவரை சேறியாயின்------ ------ ------ ----- -தமரின் தீராள் என்மோ … குறுந்தொகை – 392
அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.
4.2 உட்கு
தன் காதலியைச் சந்திக்கக் காதலன் ஒருவன் சென்றுகொண்டிருக்கிறான். குறுக்கே ஓர் ஆறு பெருவெள்ளத்துடன் ஓடுகிறது. அதை எப்படிக்கடக்கலாம் என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, சற்றுத்தள்ளி, ஒரு மதங்கொண்ட யானை சற்றும் அஞ்சாமல் இறுமாப்புடன் நீருக்குள் இறங்குகிறது. ஆனால் ஆற்றுநீரின் வேகம் அந்தக் களிற்றியானையின் செருக்கை அழித்து அதனைப் புரட்டியெடுத்து இழுத்துக்கொண்டு செல்கிறது. இதைப் பார்த்த அவன் மனம் துணுக்குறுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையைப் பார்த்த அவன், நீருக்குள் இறங்க எடுத்துவைத்த காலைச் ‘சட்’-டென்று பின்னிழுத்துக் கரையேறுகிறான். அவன் மனம் ‘படக் படக் என்று அடித்துக்கொள்கிறது. அவன் உள்ளத்தை நடுங்கவைத்த அந்த வெள்ளம் அவனுக்குள் ஏற்படுத்தியதுதான் உட்கு.மராஅ யானை மதம்தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் :18/4,5ஒரு நள்ளிரவு – கும்மிருட்டு. மழை ஓங்கி அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்த வெளியில் ஒரு மறைவில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். மேகங்கள் ‘கடமுட’- வென்று உருமிக்கொண்டிருக்கின்றன. அப்போது பளீரென்று ஒரு பெரிய மின்னல் கண்ணைக் கூசவைக்கிறது. அடுத்த நொடியில் ‘சடசட’-வென்று ஆரம்பித்த ஒலி, மிகப்பெரிய ஓசையுடன் ‘டமார்’-என்று ஒரு பேரிடியாய் முழங்குகிறது. உங்கள் உடம்பே ஒரு குலுங்கு குலுங்குகிறது. அந்த அதிர்வினால் ஏற்பட்ட மனக்கலக்கம் உண்டாக்கியதுதான் உட்கு.
பானாள்
உத்தி அரவின் பைத்தலை துமியஉரவுரு முரறும் உட்குவரு நனந்தலை – அகம் 202/9-11ஆக, உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு
4.3 உரு
ஒரு குறுகலான சந்திற்குள் நுழைகிறீர்கள். சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பெரிய யானை – பழக்கியதுதான் – அதன் பாகன் மேலே அமர்ந்திருக்க, உங்களை ஒட்டி விரைவாகக் கடந்துசெல்கிறது. சிலநொடிகள்தான். இருப்பினும் அந்த பிரமாண்ட உருவம் உங்களுக்கு மிக அருகில் கடந்துசெல்லும்போது அந்தப் பேருருவம் உங்கள் இதயத்துடிப்பைச் சற்று அதிகரிக்கும் அல்லவா! அந்தப் பேரளவு ஏற்படுத்திய திகைப்பினால் உண்டாகும் கலக்கம் கலந்த அச்சமே உரு.
ஒரு பேய்க்காட்சியை இவ்வாறு காட்டுகிறது திருமுருகாற்றுப்படை.
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க50 பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டுஉரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு.47 - 51ஒரு பேரளவைப் பார்த்துக் கொள்ளும் அச்சம் உரு. ஆனால் அந்தப் பேரளவு என்பது தோற்றத்தில்மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை.
சோழப்பேரரசு எத்துணை வலிமை மிக்கது? எத்துணை மாண்புடையது? அதன் தலைமைப் பொறுப்பை வகிப்பதென்பது எளிதான செயல் அன்று. அதற்கு உரித்தானாய்ப் பிறந்த கரிகாலனைச் சிறுவயதில் வஞ்சனையால் சிறையிலடைத்தனர். சீறும் புலியாய்ச் சிறையினை உடைத்து, எதிர்த்தோரைக் கொன்று தன் உரிமைத் தாயத்தை அடைகிறான் கரிகாலன். அதனைப் பாட வந்த புலவர் கூறுகிறார்:
பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி,
அரும் கரை கவியக் குத்தி, குழி கொன்று,பெரும் கை யானை பிடி புக்காங்கு,225 நுண்ணிதின் உணர நாடி, நண்ணார்செறிவு உடை திண் காப்பு ஏறி, வாள் கழித்துஉரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட்டினப்பாலை 222 - 227சோழப்பேரரசின் அரசுரிமையை உருகெழு தாயம் என்கிறார் புலவர். அதன் மாண்பு அத்துணை பெரிது.
காதல் கொண்ட ஒரு தலைவி தலைவனைச் சந்திக்கமுடியாமல் ஏங்குகிறாள். அந்த ஏக்கத்தில் நோய்பீடித்தவள் போல் ஆகிறாள். இதைக் கண்ட வீட்டார் அவளின் நோய் தீர்க்க வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். குறித்த நாளின் வேலன் வந்து வெறியாட்டு எடுக்கிறான். அவன் சாமிவந்து ஆடும்போது பார்ப்போர் குலை நடுங்குகிறது. வீட்டுக்கு வந்திருப்பது முருகன் அன்றோ! அந்த முருகனின் பேராற்றலை எண்ணி மக்கள் நடுக்கத்துடன் வணங்குகின்றனர். அந்த முருகு என்னும் தெய்வத்தைப் புலவர்,
உரு கெழு சிறப்பின் முருகு – அகநானூறு 138:10
என்கிறார்.
ஆக, ஒன்றன் பேரளவு நமக்குள் ஏற்படுத்தும் மலைப்பினால் ஏற்படும் அச்சமே உரு.
4.3 வெரு
ஆளரவமற்ற ஒரு காட்டுப்பாதையில் இருவர் ஓர் இருசக்கரவாகனத்தில் செல்கின்றனர். எதிரே ஒரு காட்டுயானை உருகெழு தோற்றத்துடன் அஞ்சுவர நின்றுகொண்டிருக்கிறது. பதற்றத்தில் அவர்கள் சரிந்துவிழுகின்றனர். எழுந்து பின்னே சிறிது தொலைவு ஓடுகின்றனர். நின்று திரும்பிப் பார்த்தால் யானை அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறது. சற்றே துணிவு வந்து அந்த இருவரும் வண்டியை நோக்கி மெதுவாகச் செல்கின்றனர். வெகுண்ட யானை அவர்களை நோக்கி விரைந்து வருகிறது. அவ்வளவுதான், அரண்டுபோய் அவர்கள் மீண்டும் பின் திரும்பி ஓடுகின்றனர். அந்தப் பீதி கலந்த அச்சமே வெரு. இவ்வாறு வெருண்டு ஓடச் செய்யும் வேழத்தின் நடையை,
வெருவரு செலவின் வெகுளி வேழம் - பொரு 172
வேழத்து அன்ன வெருவரு செலவின் - மது 392
என்று கூறுகின்றன நம் இலக்கியங்கள்.
அக் காலத்து கிரேக்கர்களும் ரோமானியர்களும் நல்ல உடற்கட்டை உடையவர்களாய் இருந்தனர். கைகால்கள் எல்லாம் ‘கிண்’-ணென்று இருக்க, உடம்பெல்லாம் முறுக்கேறிய திண்மை கொண்டவர்கள் அவர்கள். பரேரெறுழ் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் என்பார் நக்கீரர் நெடுநல்வாடையில். பார்த்தாலேயே மிரண்டு பின்வாங்கத்தக்கதான அவர்களின் தோற்றத்தை,
மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்துவலிபுணர் யாக்கை வன்கண் யவனர் – முல்லைப்பாட்டு 59 - 61என்று வருணிக்கிறது முல்லைப்பாட்டு. வெறும் அச்சத்தைத் தோற்றுவிக்கும் தோற்றம் அல்ல. உள்ளத்தில் உட்குவரச் செய்யும் தோற்றம் அல்ல. பார்த்துப் பிரமித்துப்போய் நிற்கக்கூடிய உருகெழு தோற்றமும் அல்ல. வெருண்டு பின்வாங்கவைக்கும் தோற்றம். அதுவே வெருவரு தோற்றம்.
இருங்கழி ஓரத்தில் அமர்ந்து நீண்ட தூண்டிலைப் போட்டு அமர்ந்திருக்கிறான் ஒரு மீனவன். நீருக்குள் நீந்திவந்த ஒரு பெரிய வாளைமீன் தூண்டிற்புழுவைக் கவ்வுகிறது. ‘சுருக்’-கென்று முள் தைக்க, ஒரே உதறு உதறி, தூண்டிற் கொக்கியின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறது. பின் வேறோர் இடத்துக்குச் செல்கிறது. அங்கு கரையிலிருக்கும் ஒரு நீண்ட நாணலின் நிழல் நீரின் மேல் விழுந்திருக்கிறது. நீரின் அலையால் அந்த நிழல் மெதுவாக அசைய, அதனைத் தூண்டில் என்று எண்ணிய மீன் மிரண்டு பின்வாங்குகிறதாம். இந்த அழகிய நகைச்சுவைக் காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை இவ்வாறு கூறுகிறது.
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
285 நெடும் கழை தூண்டில் நடுங்க, நாண் கொளீஇகொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,பொதி இரை கதுவிய போழ் வாய் வாளைநீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும்பாணாற்றுப்படை 284 - 288இப்போது பேச்சுத்தமிழில் இதனை அரட்டி என்பார்கள்.
அச்சத்தைக் குறிக்கும் இந்த உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் சில பாடல் வரிகளில் அடுத்தடுத்தும் வருவதுண்டு.
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி - புறம் 58/17அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி/மெல்லிய இனிய மேவர கிளந்து - குறி 137,138ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் - பதி 82/2வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் - கலி 100/2பிறந்த ஞான்றே நின்னை உட்கி/சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே - பரி 14/25,26இந்தச் சொற்களுக்குள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும்போதுதான் சங்க இலக்கியங்களின் மாண்பு தெரியவரும்.
நடந்துவரும் பாதை அச்சம் தருவது என்பதைக் கூறவந்த புலவர்களும் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் - அகம் 157/9உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை - அகம் 267/5கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் - அகம் 198/15வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் - கலி 150/12பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப்போட்டு மிகச் சரியான பொருளை உணர்த்தும் சங்கப் புலவர்களின் மாண்பும், அவர்களின் எண்ணத்திற்கேற்ப சொற்களை எடுத்து வழங்கும் சங்கத் தமிழின் திறமும் அவற்றை மிக உன்னிப்பாகக் கவனித்துப் படித்துப்போருக்குத்தான் தெரியவரும்.
சங்கச் செய்யுளின் சொல்வளத்தையும், சொல் திறத்தையும் படித்துச் சுவைத்துப்பாருங்கள்.
எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க மாலை சூடுவதன் சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.
4. அஞ்சுதல்
அச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
4.1 அச்சம்

அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.
4.2 உட்கு

ஆக, உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ பேரளவு ஏற்படுத்திய திகைப்பினால் உண்டாகும் கலக்கம் கலந்த அச்சமே உரு.
4.3 வெரு
வழக்கம்போல் கட்டுரைக்கு மெருகூட்டிய துரை அவர்களுக்கு மிக்க நன்றி.
முதல்படம் தெளிவாகத் தெரியவில்லை. ஒலியும் இல்லை. ரஜனிபோல் இருக்கிறது. என்ன காட்சி என்று தெரியவில்லை. நான் அதிகம் திரைப்படங்கள் பார்ப்பது இல்லை. என் அறியாமையே காரணம்.
அடுத்தபடம் சூப்பர் என்று சொன்னால் எனக்குப் பிடிக்குமெனினும் தமிழின் நலன் கருதி மிக அருமை என்பேன். அந்த மின்னல் - இடிக்காட்சி எனக்குப் பின்னர் தேவைப்படும். மின்னலின் வகைகள் பற்றி எழுதவுள்ளேன்.
உங்களுக்குத் தெரியுமா துரை? இந்த மின்னல் வகைகளை நம் சங்கப் புலவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பாடிவிட்டும் சென்றிருக்கிறார்கள். நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது.கைத்தொழுவான்.
On Mar 10, 2015, at 10:07 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:அன்புடை அம்மையீர்,இன்றைய தமிழ்நாட்டு மேடைப்பேச்சு வழக்கில், 'என்னுடைய முதற்கண் வணக்கம்" (?!!). தங்கள் பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி. அதன்மூலம் சிந்திக்க வைத்ததற்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பார். பெரும்பாலோர் இது out of syllabus என்று சொல்லிவிட்டுப்போய்விடுவர். நான் அப்படியில்லை. எனவே தொடர்ந்து சிந்தித்தேன். பல இணையதளங்களைப் பார்வையிட்டேன். ஒரு பதில் கிடைத்தது.முதலில், இந்தத் தொடர் வரும் பகுதி:குறிஞ்சிப்பாட்டில் காதல்வயப்பட்ட தலைவி காதலனைக் காணாமல் பலவிதத் துயரங்களுக்கு ஆளாகி மெலிந்துபோகிறாள். இதைக் கண்ட செவிலி ஐயுறுகிறாள். தலைவியின் தோழியை விசாரிக்கிறாள். தோழி உண்மையை மெல்ல மெல்ல வெளிவிடுகிறாள். (இது புதியவர்களுக்கு)ஒலிமென் கூந்தல் என்தோழி மேனிவிறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்வேறுபல் உருவின் கடவுள் பேணிநறையும் விரையும் ஓச்சியும் அலவுற்றுஎய்யா மையலை நீயும் வருந்துதிநற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்உட்கரந்துறையும் உய்யா அரும்படர்........-------------------இவ்வாறு செவிலி படும்பாட்டையும் தலைவியின் நிலையையும் தோழி எடுத்துக்கூறுகிறாள். இதன் பிற்பகுதியின் உரை: "என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறும்தோள் மெலியவும், வளை நெகிழ்தலை ஏதிலார் அறியவும் --- "ஆக புள் என்பதற்கு வளை (நெகிழ்தல்) எனப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அகராதியில் புள் என்பதற்கு வளையல் என்றொரு பொருள் உண்டு எனக் காண்கிறோம். ஆனால் புள் கை போகிய புன்தலை மகாஅர் என்ற மலைபடுகடாம் அடியில் வளையல் என்று பொருள்கொள்ளப்பட்டுத் தரப்படும் பொருள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அது வேறு கதை.இங்கும் புள் என்பதற்கு வளையல் என்ற பொருள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளையல் என்னவோ ரகசியமாகக் கழன்றுவிட்டதாகவும் அதைப் பிறர் அறிந்துவிட்டனர் என்றும் கொள்ளப்படுகிற பொருள் பொருத்தமானதாகப் படவில்லை. பொதுவாகப் புள் என்பதற்குப் பறவை என்று பொருள். சில இடங்களில் இது பறவை மூலமாகக் கிடைக்கும் சகுனம் அல்லது நிமித்தம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சில பறவைகள் குறுக்காகப் பறந்து செல்வது தீநிமித்தம் எனக்கொள்ளப்படுகிறது. இது புள்பகை எனப்படுகிறது (புறம் 68) இதற்குப் பொருள்சொன்ன உரைவேந்தர் இது காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தல் என்பார். காக்கை கரைவது விருந்தினர் வருகையைக் குறிக்கும் என்று இன்றும் நாம் பேசிக்கொள்வதுண்டு (இது நல்நிமித்தமா, தீநிமித்தமா?!!!!) ஆந்தை அலறுவது இன்றைக்கும் அஞ்சப்படுகிறது. "டே மச்சி, நாளைக்கு டெஸ்ட் இருக்காதுடா". "ஏண்டா பட்சி சொல்லுச்சா?" இன்றைக்கும் பேச்சு வழக்கு இது. இவ்வாறு தன் காதலுக்கோ, காதலனுக்கோ ஏதேனும் தீங்கு நேரலாம் எனப் பறவை மூலம் தீநிமித்தம் கண்டு நொந்துபோயிருந்தபோது, தலைவியின் தீநிமித்தத்தை எவ்வாறோ பிறர் அறிந்து கௌவை தூற்றினர் என்று இங்கே பொருள்கொள்ளலாம். "ஏண்டி அவ என்னண்டோ இருக்கா?" "அவ ஒரு பய மேல உசுரா இருக்கா. ராத்திரி ஆந்த அலறுச்சில்ல. அதில இருந்து கலங்கிப்போயிருக்கா" "ஆந்த அலறுன்னா என்னடி?" "போடி இவளே, ஆந்த அலறுனா ஆம்புளக்கி ஆகாதுடி".விடை சரியா? மார்க் எவ்வளவு?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/fKA_3hTTQwo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புள்ள முனைவர் பாண்டியராஜா அவர்களுக்கு, ‘என்னுடைய தலைதாழ்ந்த வணக்கமும் நெஞ்சார்ந்த கைகூப்பும்’ ;-)'இழையைப் பிரிக்காதே, இடியப்பமாக்காதே’ என்று மின்தமிழ்க்குழுமத்தில் முதலில் ஓங்கிக் கூச்சல்போட்டவள் நான்தான் என்று நினைக்கிறேன். அதனால் தயங்கிக்கொண்டேதான் ‘புள் பிறர் அறியவும்’ பற்றிய கேள்வியை இந்த இழையில் முன்வைத்தேன்.ஒரு தனியிழையில் அதைப் பற்றி உரையாட விருப்பம். இன்னும் ஓரிரு நாளில் சொல்கிறேன். இப்போது வேறு சில வேலைகளுக்காக மெனக்கிட்டுக்கொண்டிருக்கிறேன்.சுருக்கமாக …///விடை சரியா? மார்க் எவ்வளவு?/// என்று கேட்டிருந்தீர்கள்.ம்ம்ம் … முயற்சிக்கு 35, தேடுதலுக்கு 25, பொருந்தாத பொருளை வெட்டி நீக்கியதுக்கு 50, … இப்படிச் சேர்த்துக்கொண்டே போகலாம்!!! ;-)
அன்புடை அம்மையீர்,இன்றைய தமிழ்நாட்டு மேடைப்பேச்சு வழக்கில், 'என்னுடைய முதற்கண் வணக்கம்" (?!!). தங்கள் பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி. அதன்மூலம் சிந்திக்க வைத்ததற்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பார். பெரும்பாலோர் இது out of syllabus என்று சொல்லிவிட்டுப்போய்விடுவர். நான் அப்படியில்லை. எனவே தொடர்ந்து சிந்தித்தேன். பல இணையதளங்களைப் பார்வையிட்டேன். ஒரு பதில் கிடைத்தது.முதலில், இந்தத் தொடர் வரும் பகுதி:குறிஞ்சிப்பாட்டில் காதல்வயப்பட்ட தலைவி காதலனைக் காணாமல் பலவிதத் துயரங்களுக்கு ஆளாகி மெலிந்துபோகிறாள். இதைக் கண்ட செவிலி ஐயுறுகிறாள். தலைவியின் தோழியை விசாரிக்கிறாள். தோழி உண்மையை மெல்ல மெல்ல வெளிவிடுகிறாள். (இது புதியவர்களுக்கு)ஒலிமென் கூந்தல் என்தோழி மேனிவிறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்வேறுபல் உருவின் கடவுள் பேணிநறையும் விரையும் ஓச்சியும் அலவுற்றுஎய்யா மையலை நீயும் வருந்துதிநற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்உட்கரந்துறையும் உய்யா அரும்படர்........-------------------இவ்வாறு செவிலி படும்பாட்டையும் தலைவியின் நிலையையும் தோழி எடுத்துக்கூறுகிறாள். இதன் பிற்பகுதியின் உரை: "என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறும்தோள் மெலியவும், வளை நெகிழ்தலை ஏதிலார் அறியவும் --- "ஆக புள் என்பதற்கு வளை (நெகிழ்தல்) எனப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அகராதியில் புள் என்பதற்கு வளையல் என்றொரு பொருள் உண்டு எனக் காண்கிறோம். ஆனால் புள் கை போகிய புன்தலை மகாஅர் என்ற மலைபடுகடாம் அடியில் வளையல் என்று பொருள்கொள்ளப்பட்டுத் தரப்படும் பொருள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அது வேறு கதை.
இங்கும் புள் என்பதற்கு வளையல் என்ற பொருள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளையல் என்னவோ ரகசியமாகக் கழன்றுவிட்டதாகவும் அதைப் பிறர் அறிந்துவிட்டனர் என்றும் கொள்ளப்படுகிற பொருள் பொருத்தமானதாகப் படவில்லை. பொதுவாகப் புள் என்பதற்குப் பறவை என்று பொருள்.
சில இடங்களில் இது பறவை மூலமாகக் கிடைக்கும் சகுனம் அல்லது நிமித்தம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சில பறவைகள் குறுக்காகப் பறந்து செல்வது தீநிமித்தம் எனக்கொள்ளப்படுகிறது. இது புள்பகை எனப்படுகிறது (புறம் 68) இதற்குப் பொருள்சொன்ன உரைவேந்தர் இது காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தல் என்பார். காக்கை கரைவது விருந்தினர் வருகையைக் குறிக்கும் என்று இன்றும் நாம் பேசிக்கொள்வதுண்டு (இது நல்நிமித்தமா, தீநிமித்தமா?!!!!) ஆந்தை அலறுவது இன்றைக்கும் அஞ்சப்படுகிறது. "டே மச்சி, நாளைக்கு டெஸ்ட் இருக்காதுடா". "ஏண்டா பட்சி சொல்லுச்சா?" இன்றைக்கும் பேச்சு வழக்கு இது. இவ்வாறு தன் காதலுக்கோ, காதலனுக்கோ ஏதேனும் தீங்கு நேரலாம் எனப் பறவை மூலம் தீநிமித்தம் கண்டு நொந்துபோயிருந்தபோது, தலைவியின் தீநிமித்தத்தை எவ்வாறோ பிறர் அறிந்து கௌவை தூற்றினர் என்று இங்கே பொருள்கொள்ளலாம். "ஏண்டி அவ என்னண்டோ இருக்கா?" "அவ ஒரு பய மேல உசுரா இருக்கா. ராத்திரி ஆந்த அலறுச்சில்ல. அதில இருந்து கலங்கிப்போயிருக்கா" "ஆந்த அலறுன்னா என்னடி?" "போடி இவளே, ஆந்த அலறுனா ஆம்புளக்கி ஆகாதுடி".
விடை சரியா? மார்க் எவ்வளவு?
ப.பாண்டியராஜா
On Tuesday, March 10, 2015 at 1:25:03 AM UTC+5:30, rajam wrote:
...
On Mar 11, 2015, at 3:53 AM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:மறந்துவிட்டதா பேராசிரியர் ஐயா!நாங்கள் PUC படிக்கும்போது கணிதப்பாட வினாத்தாளில் Two thirds of the paper carries full marks என்று போட்டிருப்பார்கள். Answer any five போன்றவை கிடையாது. பெரியதும், சின்னதுமாகப் பலவித மதிப்பெண்களைக்கொண்ட கேள்விகள் இருக்கும். எதைவேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். சரியாக இருந்தால் மார்க் உண்டு. கேள்விக்கான மார்க்குகளைக் கூட்டினால் சுமார் 150 வரும். சிலருக்கு மதிப்பெண்களின் மொத்தம் நூற்றுக்கு மேல் வரும். அப்படிவந்தால் கடைசியில் 100/100 எனப் போடுவார்கள். சிலர் 100-க்கு மேலே வந்தாலே விடைத்தாள் திருத்துவதை நிறுத்தி வெளியே 100/100 போட்டுவிடுவார்கள். அம்மையார் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். அவரும் கணிதம் படித்தவர்தானே!எப்படியோ சரி அல்லாத விடை எழுதி, Centum வாங்கிவிட்டேன்.எனக்கு முதலிலேயே தெரியும், இது அவருக்கு அறியா வினா அல்ல என்று. மலைபடுகடாம்-இல் வரும் புள் பற்றிய எனது விளக்கத்தைக் கேட்டால் சிரிப்பீர்கள். ஆனால் அதுவும் வளையல் அல்ல என்பது உறுதி. இந்த வழியில் சென்று வேந்தன் சற்று கிட்ட வந்திருக்கிறார் என எண்ணுகிறேன். பார்ப்போம் அம்மையாரின் வேறு இழையை.
ப.பாண்டியராஜா
(என்ன, தேடுதலுக்கான 25 கொஞ்சம் கம்மி. நான் தேடியெடுத்த 90-உக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட நேரமில்லை.
On Wednesday, March 11, 2015 at 9:17:17 AM UTC+5:30, கணினிதாசன் wrote:ஒரு புள்ளிவிவரப்புலி செய்யுற வேலையா இது100 மதிப்பெண்கள் அதிகம் என்று வரையறுத்தபின் 110 எப்படிப் போட முடியும்?அதைவிடக் கொடுமை 110%தாங்கமுடியல சாமி கண்ணச் சுத்துதுகணினிதாசன்
///நாங்கள் PUC படிக்கும்போது கணிதப்பாட வினாத்தாளில் Two thirds of the paper carries full marks என்று போட்டிருப்பார்கள். Answer any five போன்றவை கிடையாது. பெரியதும், சின்னதுமாகப் பலவித மதிப்பெண்களைக்கொண்ட கேள்விகள் இருக்கும். எதைவேண்டுமானாலும் எழுதலாம். அத்தனை வேண்டுமானாலும் எழுதலாம். சரியாக இருந்தால் மார்க் உண்டு. கேள்விக்கான மார்க்குகளைக் கூட்டினால் சுமார் 150 வரும். சிலருக்கு மதிப்பெண்களின் மொத்தம் நூற்றுக்கு மேல் வரும். அப்படிவந்தால் கடைசியில் 100/100 எனப் போடுவார்கள். சிலர் 100-க்கு மேலே வந்தாலே விடைத்தாள் திருத்துவதை நிறுத்தி வெளியே 100/100 போட்டுவிடுவார்கள். அம்மையார் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள் என எண்ணுகிறேன். அவரும் கணிதம் படித்தவர்தானே!///ஆமாமா, ஆமாமா! அப்படியே அந்தக்காலப் பி.யூ.சி பழக்கம் இங்கேயும் தொடர்ந்ததுங்க — யூனிக்ஸ் (UNIX) வகுப்பில் ஆசிரியரை வியப்பில் ஆழ்த்தி 60/50 என்ற மதிப்பெண் வாங்கினேனாக்கும்! ;-)
///(என்ன, தேடுதலுக்கான 25 கொஞ்சம் கம்மி. நான் தேடியெடுத்த 90-உக்கும் மேற்பட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட நேரமில்லை. ///நேரமில்லாமல் போனது விளங்காமலில்லை! ஆனாலும், தேடுதலுக்கான மதிப்பெண் ஏற்கனவே “முயற்சியில்” சேர்க்கப்பட்டுவிட்டது!!! ;-) கூடுதல் மதிப்பெண் வேணும்-னா … பின்னாடி முயற்சியின் வெற்றியில் பாப்பம், என்னா!+++++++++++++++++++++அன்புள்ள முனைவர் பாண்டியராஜா,என்னை மன்னிக்கவும். இழை பிசிறுபடுகிறது. பிற்காலத்து நூல்களிலிருந்து பாணன் போன்றோர் பற்றிய கருத்துகள் இங்கே வலிந்து புகுத்தப்படுவது தேவையில்லை.
...
இந்த இழைக்கும் திரு கணேசன் எழுதியதற்கும் என்ன சம்பந்தம் என்றே புரியவில்லை. திரு கணேசன் இதை யாருக்குச் சொல்ல விரும்பினாரோ அவருக்கே நேரடியாகத் தனி இழை தொடங்கி அனுப்பி இருக்கலாம். இங்கு இதன் தேவை என்ன என்றே புரியவில்லை! :(
2015-03-10 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:On Tuesday, March 10, 2015 at 4:30:36 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது.கைத்தொழுவான்.எரிக்கு (அ) எருக்கு வெப்பக் கருத்துடையது. பயன்படாத பாலை, குறை நிலங்களில் மிகுதியும் வளர்வது.அதன் தழைகளை உரமாகப் பயன்படுத்தியதால் உரத்திற்கு எரு என்றே ஒருபெயர் ஏற்பட்டது.வெருவுதல் என்பதற்கும் எரி-/எரு(க்கு) ஒரு தொடர்புமில்லை.சாணி வறட்டி செய்கிறோம். எரி பொருள் தான் வறட்டி (< வறள்- ). எருவறட்டி, எருமுட்டைஇதெல்லாம் எரிக்கப்படுதலால் வரும் பெயர்கள்.எரிக்கஞ்செடி (எருக்கு)இதன் காய் வெடித்து கிழவிதலைப் பஞ்சு போல் இருப்பதால், ஒரு உவமையகுபெயர் வடக்கே உண்டுஎருக்கு/எரிக்கு > எக்கெ (கன்னடம்). இது ஹிந்துஸ்தானியில் அக், சம்ஸ்க்ரிதத்தில் அர்க்க, ஹிந்தி
...
அன்பின் பேரா. பாண்டியராசா அவர்கட்கு,சில உதாரணங்கள், நிழற்று = நிழத்து என நிகண்டுகளிலும், பழைய உரைகளிலும் ஏன் தருகின்றனர் என்று காணப்பார்ப்போம்:(1) பற்று = பத்துதீப் பற்றியது = தீப் பத்தியது(2) காற்று = காத்து(3) ஏற்று = ஏத்து(4) புற்று = புத்து(5) ஆற்று = ஆத்து(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)(6) சுற்று = சுத்து(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு(8)மாற்று = மாத்து(9) ஊற்று = ஊத்து(10) கீற்று = கீத்து(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)...இவை போல,நிழற்று = நிழத்து
15 பிப்ரவரி, 2015 ’அன்று’ 9:02 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:அன்பின் பேரா. பாண்டியராசா அவர்கட்கு,சில உதாரணங்கள், நிழற்று = நிழத்து என நிகண்டுகளிலும், பழைய உரைகளிலும் ஏன் தருகின்றனர் என்று காணப்பார்ப்போம்:(1) பற்று = பத்துதீப் பற்றியது = தீப் பத்தியது(2) காற்று = காத்து(3) ஏற்று = ஏத்து(4) புற்று = புத்து(5) ஆற்று = ஆத்து(காப்பி சூடா இருக்கு. ஆத்திக் கொடு)(6) சுற்று = சுத்து(7) இற்றுப்போனது = இத்துப் போச்சு(8)மாற்று = மாத்து(9) ஊற்று = ஊத்து(10) கீற்று = கீத்து(11) போற்று = போத்து (கேரளாவில் போற்றி/போத்தி)...இவை போல,நிழற்று = நிழத்துஇவை பிற்காலத்து திரிபுகள்.
இந்த புள் ஒலி பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு பறவையின் ஒலியாகவே இருக்க வேண்டும். இப்படி பறவையின் ஒலியை எழுப்பி வேடர்கள் பறவைகளைப் பிடிப்பதுமுண்டாம். இதனை வள்ளுவர் கூடா ஒழுக்கத்தில் கூறுகிறார்.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. - 274
2015-03-11 9:40 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:அம்மாபுள் என்பது தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான ஒரு சங்கேத ஒலிக்குறிப்பாக இருக்கலாம். அதாவது, தலைவன் தான் வந்துவிட்டதை தலைவிக்குத் தெரிவிக்க ஒருவகையான ஒலியை எழுப்புவான். அதைக்கேட்டதும் தலைவி அவனைச் சந்திக்கத் தயாராவாள்.இந்த புள் ஓசையினை தலைவியின் குடும்பத்தார் அறிந்துவிட்டதனால் தலைவியை வெளியே விடாமல் இற்செறித்தனர். இதனால் தலைவியை தனிமைத் துன்பம் அலைக்கக் கழிக்கத் துவங்கியது.
விளைவுகள் என்று கருதுவதற்குப் பதிலாக அறிகுறிகள் என்று கருதலாமேசென்னை மனநோய் மருத்துவமனையின் இயக்குனராக இருந்த டாக்டர் ஓ சோமசுந்தரம் சங்க இலக்கியத்தில்குறிப்பிடப்பட்ட பசலைநோய் பற்றி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அவர் நோயின் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளார்
புள் என்ற சொல் குறிஞ்சித் திணையிலும் முல்லை மற்றும் நெய்தலிலும் திணை ஒழிக்கத்தின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளதாகக் கருதினாள் குறிஞ்சியில் பிரிவுபற்றி விளக்க வாய்ப்பில்லை. குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவிக்குமட்டுமே தெரிந்த புள்ளின் ஒலியைப் பயன்படுத்தி தலைவியைச் சந்தித்திருக்கவேண்டும். அதுவே வெளியில் கசிந்து அனைவரும் அறியும் நிலை உருவாகியிருக்கவேண்டும் என்று கருதினால் புள் கழன்றுவிழும் வளையல்களைவிட காட்டுமைனாவின் ஒலிப்பைத்தான் குறிப்பிட வாய்ப்புள்ளது.
கணினிதாசன்
No Result is also a Result என்பார் பேராசிரியர் சங்கரராஜுலு. இதோ ஒரு No Result.புள் பிறர் அறியவும் – குறிஞ்சிப்பாட்டு 10
(கட்டுரையின் முழுமை கருதி இக் கூற்றின் முன்-பின் பகுதிகள் கொடுக்கப்படுகின்றன)
தினைப்புனத்தில் கதிர்களைக் கொத்தித் தின்ன வரும் பறவைகளை விரட்டுவதற்காகத் தோழியருடன் தலைவி தினைப்புனக் காவலுக்குச் செல்கிறாள். காவல் முடிந்து வீடு திரும்பும் மாலை வேளையில் அருவியில் குளித்துப் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருக்கும் (99 வகைப் பூக்கள்!) வேளையில் அங்கு தலைவன் வருகிறான். அப்போது அங்கு வரும் யானையின் சீற்றத்தினின்றும் அவர்களைக் காக்கிறான். இருவரும் காதல்கொள்கிறார்கள். அவன் வேறூர்க்காரன். அன்றிலிருந்து முடிந்தபோதெல்லாம் இரவில் காதலியின் வீட்டுப்பக்கம் வருகிறான். யாருக்கும் தெரியாமல் அவர்கள் சந்திப்பு நிகழ்கிறது. சில நாட்களில் சந்திப்பு நிகழாமற்போனதும் உண்டு.
சிலநாட்களில், காதலன் வந்துசெல்லும் தடயத்தை எவ்வாறோ உணர்ந்த காவலர்கள், காதலியின் வீட்டுப்பக்கம் காவலைக் கடுமையாக்குகிறார்கள். சிலநாட்களில் தெருநாய்கள் இவன் வரவை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. சிலநாட்களில் காதலியின் அருகே படுத்திருக்கும் தாய் தற்செயலாக எழுந்து உட்கார்ந்துகொள்கிறாள். சிலநாட்களில் நிலவு பகலாய்க் காய்கிறது. அந்த நாட்களிலெல்லாம் அவன் காதலியைச் சந்திக்காமலேயே போய்விடுவதும் உண்டு.
இப்படியிருக்கையில் காதலி நாளுக்குநாள் மெலிந்துகொண்டே போகிறாள். இவளது நோய்க்குக் காரணம் என்னவென்று தெரிய, செவிலி உள்ளூரில் இருக்கும் மருத்துவர்களையும் குறிசொல்பவர்களையும் நாடுகிறாள். ஆனால் பயனில்லை. பல்வேறு தெய்வங்களைப் பல்விதமாக வழிபட்டு வேண்டுகிறாள். எதற்குமே பலனில்லை. இறுதியில் தலைவியின் தோழியிடம் காரணம் கேட்கிறாள். அப்போதுதான் தோழி மெதுவாக எல்லாக் கதையையும் கூறுகிறாள்.
இப்போது பாடலுக்கு வருவோம்.
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்,
பரவியும், தொழுதும், விரவுமலர் தூயும்,
வேறுபல் உருவின் கடவுள் பேணி,
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று
எய்யா மையலை! நீயும் வருந்துதி – 2 – 8
இது தலைவியின் செவிலித்தாய் நோய்க்குக் காரணம்காண எடுத்துக்கொண்ட முயற்சி பயனில்லாமல் போனது.
அடுத்து தோழி தலைவியின் நோய்பற்றிக் கூறியது:
நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர் – 9 - 11
தலைவியின் மனத்திற்குள் மறைந்துகிடக்கிறது நோய். அது அவளை என்ன செய்கிறது.
(1). அவளது நல் கவினைத் தொலைக்கிறது.
(2). நறும் தோளை நெகிழ்க்கிறது.
(3). புள்ளைப் பிறர் அறியவைக்கிறது.
(4). தனிமை அவளை அலைக்கழிக்கிறது.
நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்
The master poet, Kapilar is describing a Cascade of Events happening for the heroine.
The four events that you list from Kapilar's masterpiece is happening in succession.
(a) she loses her beauty (b) her shoulder and hands are becoming thin and weak,
this is biological. (c) As a result of biological event, the material decorations on her hands,
adornments on the arms and shoulder, do not hold and fall off. The size is too large,
and have to be remade by artisans. "puL piRar aRiyavum" is this, people notice that the
girl's jewelry no longer fits her and are too big for the emaciated body (d) she starts pining
for the guy. Only solution is to marry her (like in so many Tamil movies nowadays).
அப்படியென்றால் நோயினால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றுதான் புள் பிறர் அறிதல் என்றாகிறது. இதனாலேயேதான் உரைகாரர்கள் புள் என்பதற்கு வளையல் என்று பொருள்கொண்டு மெலிந்துபோவதால் தலைவியின் கையிலுள்ள வளையல்கள் ஒவ்வொன்றாய்க் கழன்றுவிழுவதைக் கவனித்துக் காரணம் கேட்கிறார்கள் என்று பொருள்கூறியிருக்கிறார்கள். ‘வளை நெகிழ்தலை ஏதிலார் அறியாநிற்பவும்’ என்று பெருமழைப்புலவர் உரை கூறுகிறார். இதனை அவர் தொல்காப்பியர் கூறிய புறஞ்செயச் சிதைத்தல் என்ற மெய்ப்பாட்டின்கண் அடக்குவார். உள் கரந்துறையும் உய்யா அரும்படர் என்பதற்கு ‘அவள் நெஞ்சினுள்ளே இவையிற்றிற்கெல்லாம் காரணமாய் மறைந்திருக்கிற பிழைத்தற்கரிய நோயை’ என்று உரைகாண்கிறார் பெருமழைப்புலவர். எனவே இந்த நோயின் காரணமாக இந்த நான்கு விளைவுகளும் ஏற்படுகின்றன என்பது அவர் கருத்து. இப்பொழுது Cause நோய். Effect இந்த நான்கும்.
(1) நற்கவின் தொலையவும் (2) நறுந்தோள் நெகிழவும்
(3) புள்பிறர் அறியவும் (4) புலம்பு வந்து அலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்
இந்த நோய்க்குரிய காரணம் என்ன? காதல்தான். ஆனால் காதல் எண்ணம் மட்டுமே தலைவியை வாட்டுவதாகத் தோழி கூறவில்லை. காதலன்தான் ஏறக்குறைய ஒவ்வோர் இரவும் இரவுக்குறியில் அவளை வந்து சந்தித்துவிட்டுப்போகிறானே! இருப்பினும் இந்த மாய வரவின் இயல்பு நினைந்து, வலைப்படு மஞ்ஞையைப் போல் நலம்கெட்டு நினைத்து நினைத்துக் கண்ணீர் விடுகிறாள் என்கிறாள் தோழி (246 – 251). அப்படி என்ன இந்த மாய வரவின் இயல்பு? அதையும் தோழி சொல்கிறாள். தலைவன் வருகிற வழியில் புலிகளும், யாளிகளும், கரடிகளும், காட்டுமாடுகளும், யானைகளும் நடமாடித்திரியும். மழைபெய்தால் பலத்த இடி இடிக்கும். வருத்தும் அணங்குகள் திரியும். பாதைகளில் பாம்புகளும், பாதையோரப் பள்ளங்களில் முதலைகளும் பேய்களும், மலைப்பாம்புகளும் இருக்கும். கண்டால் கொன்றுகுவிக்கும் வழிப்பறிக்கொள்ளையரும் உண்டு. இன்னோரன்னவும், பிறவுமாகிய நிச்சயம் சாவுக்கேதுவான பல இடும்பைகள் தலைவன் வருகின்ற வழியில் உள்ளன. எனவே அந்த வழியாக நாள்தொறும் நடந்துவரும் தலைவனின் பாதுகாப்பை நினைந்து பெருமழையால் தாக்கப்பட்ட மலர்போல அழகழிந்து இமை சோர்ந்து, கண்கள் கலங்கி, நீரைச் சொரிந்து மார்பில் மழையாய்க் கொட்டுகிறது கண்ணீர் என்கிறாள் தோழி. இந்த அச்சம் – தலைவன் ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளும் வாழ்வா சாவா என்ற Risk – இதுவே தலைவியின் நோய்க்குக் காரணம். (இவ்வாறு தோழி கூறுவதால், இந்த நோய் தீர ஒரே மருந்து தலைவி-தலைவன் திருமணமே என்பது தோழி கூறவந்த உள்கருத்து).
இதை விளக்கும் வரைபடம்:
இந்த வகையில் பொருள்கொண்டால் புள் பிறர் அறிதல் என்பது அரும்படரால் ஏற்பட்ட விளைவு என்றாகிறது.
நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்
உட்கரந்து உறையும் உய்யா அரும்படர்
The master poet, Kapilar is describing a Cascade of Events happening for the heroine.
The four events that you list from Kapilar's masterpiece is happening in succession.
(a) she loses her beauty (b) her shoulder and hands are becoming thin and weak,
this is biological. (c) As a result of biological event, the material decorations on her hands,
adornments on the arms and shoulder, do not hold and fall off. The size is too large,
and have to be remade by artisans. "puL piRar aRiyavum" is this, people notice that the
girl's jewelry no longer fits her and are too big for the emaciated body (d) she starts pining
for the guy. Only solution is to marry her (like in so many Tamil movies nowadays.
ஏற்கனவே பிறர் பார்க்கும்படி தலைவியின் நற்கவின் தொலைகிறது, நறுந்தோள் நெகிழ்கிறது. இதை அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். பின் வளையல் கழன்று விழத்தானே செய்யும். இதனை மூன்றாவது விளைவாகப் புலவர் சொல்லவேண்டியதில்லை. ஒவ்வொன்றும் தனித்தனி விளைவுகளாக இருந்தால்தான் அவற்றைத் தோழி (புலவர்) வரிசைப்படுத்தியிருப்பார். முதலிரண்டின் விளைவை மூன்றாவது புதுவிளைவாகக் கூறவேண்டியதில்லை. ஏற்கனவே, இந் நோயை விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய் என்று தோழி கூறுகிறாள்(அடி 3). இழை நெகிழ்த்த இந்தக் கடும் நோயால் இவள் வளை நெகிழ்ந்து விழுந்தது என்ற கூற்று கூறியது கூறல் ஆகாதா? எனவே, புள் பிறர் அறிய என்பதற்குக் கைவளை நெகிழ என்ற பொருள் தள்ளப்படுகிறது. அதனால், புள் பிறர் அறிய என்பது நோயின் விளைவுகளில் வேறு ஒன்றாக இருக்கவேண்டும். அது என்ன விளைவு?
புள் என்பதற்குச் சங்கேத ஒலி என்று பொருள் கொள்ளலாம் என வேந்தன் கூறியுள்ளார். ஆனால் இது உள்கரந்து உறையும் உய்யா அரும்படரின் விளைவு அல்லவே! சொல்லப்போனால் இது அந்த நோய்க்கு ஒரு காரணம். தலைவன் எழுப்பும் சங்கேத ஒலியைப் பிறர் அறிந்தால் சந்திப்பு தடைப்படும். ஊரில் அலர் எழும். ஆனால் அந்நாள் வரை இருவரின் காதல் வேறு யாருக்கும் தெரியாது. செவிலிக்கும் தெரியாததால்தான் அவள் தோழியை வினவுகிறாள். மேலும் வேறு பல காரணங்களால் சந்திப்பு தடைப்படும்போதெல்லாம் தலைவன் முனியல் உறான் என்று தோழி கூறுகிறாளேயொழிய தலைவி நிச்சயம் வேதனைப்பட்டிருப்பாள். எனவே, அம்மையார் முதலில் கூறியபடி, இந்த புள் பிறர் அறிதல் ஒரு cause. புலம்பு வந்து அலைத்தல் அதன் effect. அதாவது, புள் பிறர் அறிந்ததால், (சந்திக்க முடியாமல்) புலம்பு வந்து அலைக்க உய்யா அரும்படர் உண்டாகிறது. எனவே புள் பிறர் அறியவும் (அதனால்) புலம்பு வந்து அலைப்பவும் என்பதை ஒரே கூற்றாகக் கொள்ளவேண்டும். இப்போது, உய்யா அரும்படரால் புலம்பு வந்து அலைத்ததா, புலம்பு வந்து அலைத்ததால் உய்யா அரும்படர் உண்டானதா? ஆனால் அரும்படரின் காரணத்தை ஏற்கனவே பார்த்தோம். அது தலைவன் எடுத்துக்கொள்ளும் Risk.காதல்வயப்பட்ட பெண்கள் (ஆண்களும்) தனிமையை மிக விரும்புவர். ஏற்கனவே நடந்ததை அசைபோட்டு மகிழ்ந்தவண்ணம் இருப்பர். நடப்பதை எண்ணி ஏங்கியவண்ணம் இருப்பர். இதற்காகவே அவர்கள் தன்மையை நாடுவர். அந்தத் தனிமை அவர்களுக்கு இனிமை. ஆனால் இங்கோ தலைவியின் தனிமை அவளை அலைக்கழிக்கிறது – வருத்துகிறது – நிலைகெடச்செய்கிறது. பார்க்க முடியாவிட்டால் அந்த ஏக்கம்; பார்க்கமுடிந்தால் தலைவனின் பாதுகாப்பைப் பற்றிய அச்சம். எனவே மனம் தனிமையை நாடினும் அந்தத் தனிமை அவளை வாட்டுகிறது. இதுவும் அவளின் உய்யா அரும்படருக்கு ஒரு காரணம் ஆகிறது. எனவே இத் தொடர், புள் பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும் உட்கரந்து உறையும் உய்யா அரும்படர், நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்’ என்று படிக்கப்பெறவேண்டும்.
இதை விளக்கும் வரைபடம்:
இங்கும் ஒரு சிக்கல் இருக்கிறது. புள் பிறர் அறிய என்ற தொடர் பாட்டின் தொடக்கத்தில் வருகிறது (அடி 10). அப்பொழுது இன்னமும் தோழி தலைவியின் காதலைப் பற்றிச் செவிலிக்குத் தெரிவிக்கவில்லை. செவிலிக்கோ தலைவியின் நோயின் காரணம் இன்னதென்று தெரியாது. எனவேதான் அவள் தோழியை வினவுகிறாள். தோழி மிக மெதுவாகக் கதையைத் தொடங்குகிறாள். “முத்து, மணி, பொன் ஆகியவற்றால் செய்த அணிகலன் கெட்டுப்போனால் (அறுந்துபோனால்) சரிசெய்துகொள்ளலாம்; சான்றாண்மையும், பெருமையும், ஒழுக்கமும் கெடுமாயின் அதனைச் சரிசெய்தல் எளிதல்ல” என்று தோழி மிகக் கவனமாக முன்னுரை போடுகிறாள். இந்தக் காதல் கதையைத் தோழி சொல்வதைக் கபிலர் கையாளும் பாங்கு உளவியல் நோக்கில் உற்று ஆய்வதற்கு உரியதாகும்.
மெதுவாக நடந்ததைக் கூறிவந்த தோழி, 212-ஆவது அடியில்தான் ‘அருவிடர் அமைந்த களிறுதரு புணர்ச்சி’ என்று தலைவி தலைவன் மனம் ஒப்பிப்போனதை அறிவிக்கிறாள். எனவே புள் என்பது தலைவனின் சங்கேத ஒலி என்ற குறிப்பைத் தோழி பத்தாவது அடியில் குறித்திருப்பாளா? இதே தொடர் இறுதி அடிகளில் வந்திருந்தால் இதனை ஏற்றிருக்கலாம்.
அப்படியென்றால் மீண்டும் square 1. புள் பிறர் அறிதல் விளைவாக இருந்தாலும், அல்லது காரணமாக இருந்தாலும் அவற்றுக்குரிய பொருள் ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. எனவே இது முற்றிலும் வேறு பொருளை உடையது.
தொடர்ந்து சிந்திப்போம்..
ப.பாண்டியராஜா
...
On Thursday, March 12, 2015 at 12:55:38 PM UTC-7, கணினிதாசன் wrote:புள் என்ற சொல் குறிஞ்சித் திணையிலும் முல்லை மற்றும் நெய்தலிலும் திணை ஒழிக்கத்தின் அடிப்படையில் கையாளப்பட்டுள்ளதாகக் கருதினாள் குறிஞ்சியில் பிரிவுபற்றி விளக்க வாய்ப்பில்லை. குறிஞ்சித் திணையில் தலைவன் தலைவிக்குமட்டுமே தெரிந்த புள்ளின் ஒலியைப் பயன்படுத்தி தலைவியைச் சந்தித்திருக்கவேண்டும். அதுவே வெளியில் கசிந்து அனைவரும் அறியும் நிலை உருவாகியிருக்கவேண்டும் என்று கருதினால் புள் கழன்றுவிழும் வளையல்களைவிட காட்டுமைனாவின் ஒலிப்பைத்தான் குறிப்பிட வாய்ப்புள்ளது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
பேரா. பாண்டியராசா விளக்கத்துடன் ஒத்துப்போகிறேன். புள் எனக் கபிலர் பெருமான் பாடுவதுநாகணவாய் அல்லது வேறெந்தப் புள்ளும் அன்று.
| |||
|
மணிமேகலை காப்பியத்தை ஒரு கருத்தரங்கு உரைக்காகப்படித்துவருகிறேன். அதில் புகார் நகரில் விடியல் நிகழ்ச்சிகள் விவரிக்கப்படுகின்றன.“பணைநிலப் புரவி பலஎழுந்து ஆலப்பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்பபூங்கொடி யார்கைப் புள்ஒலி சிறப்ப"புள் இரண்டு பொருளிலும் மேற்கண்ட பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.பூங்கொடியார் குறித்துப் பேசும்போது வளையல் என்ற பயன்பாடு இயல்பாகிறது.
253. புள் கை போகிய 1 புன்றலைமகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமானசிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,
2பிள்ளையைப் பெற்றால்வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார். (நச்சர்)
53. புன்றலைமகார் : மலைபடு. 217.
இவ்வடி , புள் வளையென்னும் பொருளில் வருமென்பதற்கு மேற்கோள்; சீவக. 2591, ந. (உவேசா குறிப்பு).
| |||||
| |||||
| ||||||||||||||||||||||||||
(இ - ள்.) புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க இசையை நுகர்ந்து; வல்லான் நினைந்து புனைந்து இயற்றிய - வல்லானொருவன் சிந்தித்து அணிந்து இயற்றிய; பள்ளி - பள்ளியிலே; செம்பொன் படை அமளிமேல் - செம்பொன்னாற் படுத்த அணையின் மேலே; மழலை மணியாழ் தான் வெளவிக் கொள்ளும் தீஞ்சொல் அலங்காரப் பூங்கொடியை - மழலை பொருந்தியதும், அழகிய யாழ்தான் கருதிக்கொள்ளும் தகையது ம் ஆன இனிய மொழியையுடைய, ஒப்பனை செய்யப்பட்ட மலர்க்கொடி போல் வாளை; மணிக் குவட்டினை எள்ளி வீங்கித் திரண்ட தோள்மேல் புல்லி - மணிகளிழைத்த மலையை இகழ்ந்து பருத்துத் திரண்ட தோளிலே தழுவி; இருந்தான் - அமர்ந்திருந்தான். | ||||
(வி - ம்.) புள் - வளை. 'புட்கை போகிய புள்தலை மகார்' (மலைபடு 253) என்றார். தாளத்தை ஒற்றுதலின் வளையொலித்தன. | ||||
| சூ. 247 : | செயப்படு பொருளைச் செய்தது போலத் |
தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே | |
| (49) | |
க-து : | வழக்கின்கண் வினைச்சொல் பற்றி நிகழ்வதொரு மரபு கூறுகின்றது. |
உரை : செயப்படுபொருள் வினையாகக் கிளத்தலை வினைமுதல் வினை | |
எ-டு: திண்ணை மெழுகிற்று - சோறு அட்டது எனவரும். | |
இனி, மரம் வெட்டியது என்றாற் போலவன்றி மரம் வீழ்ந்தது | |
"வழக்கியன் மரபே" என்றதனான், இவ்வாள் வெட்டிற்று, | |
புள் கை போகிய புன்றலை மகாரோடு (மலைபடுகடாம்)"252. [ மிகுத்துப் பதங்கொண்ட பரூஉக்கட்பொதியினிர் :] பரூஉ கண் பதம் மிகுத்து கொண்டபொதியினிர் - பருத்த இடத்தையுடைய தசையாகிய உணவை முழுதுந் தின்னாமல் மிகுத்துவைத்துக் கட்டிக் கொண்ட பொதியின் சுமையினையுடையிராய்,253. புள் கை போகிய புன்றலை மகாரோடு - வளை கையினின்றும் போதற்குக் காரணமான சிவந்த தலையினையுடைய பிள்ளைகளோடே,2பிள்ளையைப் பெற்றால் வளையிடாராகலின், வளைபோதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.254 - 5. [ அற்கிடை கழித லோம்பியாற்றநு, மில்புக் கன்ன கல்லளை வதிமின் :] இடை கழிதல்ஓம்பி ஆற்ற நும் இல் புக்கன்ன கல்அளை அற்கு வதிமின்- அவ்விடத்துப் போதலைப் பரிகரித்து வழியிடத்தனவாகியநும் இல்லிலே புக்காலொத்த கன்முழைஞ்சுகளிலே இராக்காலத்துத்தங்குவிர் ;இஃது அசையுநற்புலமும் (67) வல்சியும்(68) சேரக்கூறிற்று." (நச்சினார்க்கினியர்).புள் கை போகிய புன்றலை மகாரோடு =”தாய்மார்களின் புள் (=வளையல்கள்) கையில் இருந்து போகப்பட்டதற்குக் காரணமான சிவந்த தலையுடைய மக்களுடன்”
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆர்த்தலை பின் வந்தவர்களும் நிறைய பயன் படுத்தியுள்ளார்கள் என்றே தோன்றுகிறது."மருங்கு வண்டு சிறந்தார்ப்பமணிப் பூவாடையது போர்த்தி " (சிலம்பு)பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கிஎழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்.விழுந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார். (கம்பர்)மும்முரசு ஆர்த்தவர் தமிழர் (கருணாநிதி)
ஆர்ப்ப என்ற சொல் பன்னிரு திருமுறைகளிலும் வருமாறு காண்க.அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 02055007,மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை ஆர்ப்ப தன்முன் பன்னிரு திருமுறை 050485007,ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே பன்னிரு திருமுறை 060385002,அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப, பன்னிரு திருமுறை 060425006,கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்ப பன்னிரு திருமுறை 060685006,அரைமேல் ஆர்ப்பது நாகம் பன்னிரு திருமுறை 0701850071ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்,.... வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பன்னிரு திருமுறை 08107012,சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத் தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் பாடகம் மெல்லடி ஆர்க்கும் பன்னிரு திருமுறை 08109007,வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் பன்னிரு திருமுறை 08109008,துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத் பன்னிரு திருமுறை 08223009,அறைகுரல் முரசம் ஆர்ப்பக் கைபோய் பன்னிரு திருமுறை 11007004,கூழைபின் தாழ வளைஆர்ப்பக் கைபோந்து பன்னிரு திருமுறை 11008064,தங்கழல்கள் ஆர்ப்ப விளக்குச் சலன் சலன் என்றங்கழல்கள் ஆர்ப்ப அனலேந்திப் பன்னிரு திருமுறை 11009061,
கைவரும் புள்ளொடு சங்கினம் ஆர்ப்பநம் சேர்ப்பர்திண்தேர் அவ்வரு தாமங் களினம்வந் தார்ப்ப அணைகின்றதே பன்னிரு திருமுறை 11029097பரித்தூரம் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் பன்னிரு திருமுறை 11037135பரந்தஆர்ப் பரவம் பொங்க பன்னிரு திருமுறை 12030014மறைகளும் முழங்கி ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12000215மங்கலந் துவன்றி ஆர்ப்பத் பன்னிரு திருமுறை 12000159முரசொடு சங்கம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12000106வானவர் பூவின் மாரி பொழியமா மறைகள் ஆர்ப்பபன்னிரு திருமுறை 12030035
ஆர்கலி ஏழு மொன்றாய் மன்னிய ஒலியின் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12080053
வானவர் வளர்பூ மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12100179எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280256பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280483மறையொலிபோய் வானளப்ப மாமுரசம் ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12280540
பொன்னணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப பன்னிரு திருமுறை 12281226
பெருஞ்சேனை ஓதங் கிளர்ந்த தெனஆர்ப்பக் கதிர்வெண் திருநீற் றன்பர்குழாம் கங்கை கிளர்ந்த தென ஆர்ப்ப எதிர்வந் திறைஞ்சும் அமைச்சர்குழாம் ஏறும் இவுளித் துகளார்ப்ப பன்னிரு திருமுறை 12720022
2016-05-21 13:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:கிடைத்தது நன்றி ஐயா.ஒரு யாழில் உள்ள நரம்புகள் அனைத்தும் ஒருசேர ஒலி எழுப்புவதை நரம்புகள் ஆர்த்தல் என்கிறார் திருமுருகாற்றுப்படைப் புலவர்... என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.ஆர்த்தல் என்று சங்ககாலத்தில் வழக்கில் இருந்த ஒரு சொல்லை இன்றைய பாரதிதாசனும் தனது பாடலில் எடுத்தாண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது.ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களேஉங்கள் ஆதியந்தம் சொல்லவோ?நீங்கள் ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்உதித்தது மெய்யல்லவோ?சித்திரச் சோலைகளே உமைநன்குதிருத்த இப்பாரினிலே - முன்னர்எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோஉங்கள் வேரினிலேகடல் அலைகளைக் குறிப்பிடும் பொழுதும் ஆர்த்திடும் கடல் அலைகளென படித்த நினைவுண்டுநன்றி ஐயா..... தேமொழி
On Saturday, May 21, 2016 at 12:33:09 AM UTC-7, Pandiyaraja wrote:மிக்க நன்றி அம்மையே!மீண்டும் கட்டுரையை இணைப்பாக அனுப்புகிறேன்.என்னுடையதளத்தில் இன்னும் இக்கட்டுரையை ஏற்றவில்லை. கட்டுரைத் தொடர் முடிந்த பின்னர் முழுமையாக ஏற்ற எண்ணம். கட்டுரை எண் கடைசியில் 6. என்றுதான் எனது கோப்புகளில் இருக்கிறது. எனவேதான் இதனை 7. என்று எண்ணிட்டேன். இருப்பினும் மீண்டும் சரிபார்க்கிறேன்.அனைத்துக்கும் மீண்டும் எனது நன்றி அம்மையே!
ப.பாண்டியராஜா
On Saturday, May 21, 2016 at 12:00:01 PM UTC+5:30, தேமொழி wrote:ஐயா கட்டுரை முழுமையாக வரவில்லை எனத் தோன்றுகிறது ...எனக்கு இணையம் வழி குழுமமடலைப் படிக்கும் பொழுதுகோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற - ஐங் 383/1களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் - ஐங் 416/3வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ - கலி <spஇத்துடன் வெட்டுப்பட்டுவிட்டது.இனி இங்கும் பதிவிட்டபின்னர், உங்கள் தளத்தில் இருக்குமிடத்தின் சுட்டியையும் அத்துடன் கொடுத்து விடுங்களேன்...முழுமையாக வரவில்லை என்றால் நான் சுட்டியைத் தொடர்ந்து உங்கள் தளத்திற்குச் சென்று படித்துக் கொள்கிறேன்.அத்துடன் இது அதிகாரம் 8 என்று இருக்க வேண்டுமோ? சரிபார்க்கவும் ஐயா.
சங்கச் சொல்வளம்
1. அசைவுகள்2. நகர்வுகள்3. குறைத்தல்கள்4. அஞ்சுதல்5. உண்ணுதல்6. உண்ணும் விதங்கள்7. உணவு வகைகள்8. ஒலித்தல் வகைகள்கட்டுரைக்கு மிக்க நன்றி.அன்புடன்..... தேமொழி
On Friday, May 20, 2016 at 11:05:39 PM UTC-7, Pandiyaraja wrote:அன்புடையீர்,சங்கச் சொல்வளம் என்ற தலைப்பில் உண்ணும் வகைகள், உணவு வகைகள் ஆகிய கட்டுரைகளின் தொடர் முடிவுற்றது. அடுத்து ஒலி வகைகள் என்ற தலைப்பில் ஒலித்தல் வகைகள், ஒலிப்பு வகைகள் ஆகியவை வரவிருக்கின்றன. முதலில் வருவருவது ஒலித்தல் வகைகள். இந்தவகையில் வரும் முதற்கட்டுரை இது.
ப.பாண்டியராஜா
சங்கச் சொல்வளம் –
7.1 ஒலித்தல் வகைகள்
ஒலிவகைகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஆரவாரம் என்பது ஒலிப்பு. அது பெயர்ச்சொல். ஆரவாரி என்பது ஒலித்தல். அது வினைச்சொல். இப் பகுதியில் வினைச்சொற்களாக வரும் ஒலித்தல் வகைகளைக் காண்போம்.