ஆனால் அவ் விளக்கம் எனக்குப் பொருத்தமாகத் தோன்றாததால் புதிய ஆய்வு முயற்சியினை மேற்கொண்டு புதிய கட்டுரை ஒன்றை வடித்துள்ளேன்.சங்க்ச் சொல்வளம் என்ற தலைப்பில் பாண்டியராஜா ஐயா அலங்குதல் என்ற சொல்லுக்குப் படங்களுடன் விளக்கம் கொடுத்திருந்தார்.
அதன் சுட்டி இதோ கீழே:
http://thiruththam.blogspot.in/2014/12/blog-post.html
திருத்தம் பொன்.சரவணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
மிக்க நன்றி ஐயா!இரண்டையும் படித்து ஒப்பிட்டவர்கள் தங்கள் கருத்தையும் சொல்லட்டுமே. கொஞ்சம் பொறுத்திருப்போம்.நன்றி,ப.பாண்டியராஜா
அன்புடை சரவணன் அவர்களுக்கு,
தங்கள் மடலிலிருந்து சில பகுதிகளைத் தெரிந்தெடுத்து அவற்றுக்கு என் மறுமொழியை அளித்திருக்கிறேன். தங்கள் கூற்று சிவப்பு எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளது.
… சினை என்பதற்கு மரக்கிளை என்ற
பொருளில் அலங்கு சினை என்பதற்கு
அசைகின்ற மரக்கிளை என்றும், கழை
என்பதற்கு மூங்கில் என்ற பொருளில் அலங்கு
கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்றும் உரை இயற்றியுள்ளனர். இவை இங்கு பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம்,
சாதாரணமாக சிறுகாற்று வீசும்போது மரத்தில் உள்ள இலைகளும், பூக்களும்
அசையுமேயன்றி கிளைகள் அசையாது.
சிறு காற்று என்று எப்படிக் கொண்டீர் எனத் தெரியவில்லை. அடிக்கிற காற்று பெருங்காற்றாக இருக்கவேண்டாம். சாதாரணக் காற்றில்கூட மரத்தில் சினைகள் அசைவதைப் பார்த்ததில்லையா?
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
படமே தந்திருந்தேன் – இலவமரத்தில் சினைகள் எவ்வாறு அமைந்திருக்கும் என. காற்றில் அவை ஆடமாட்டா என்று எப்படிக் கொண்டீர் ஐயா?
அதைப்போல சிறுகாற்றில் மூங்கில் இலைகள் அசையுமே ஒழிய மரம் அசையாது.
மீண்டும் சிறுகாற்று எனக் கொண்டிருக்கிறீர். சாதாரணக் காற்றில் மூங்கில் மரங்கள் ஆடுவதை என் கல்லூரி வளாகத்திலேயே பார்த்திருக்கிறேன்.
மேலும் இவற்றின் அசைவினைப் பற்றி இப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
சங்கப் புலவர்கள் எதையும் தேவை இல்லாமல் குறிப்பிடமாட்டார்கள். அவர்கள் காட்சியை உயிரோட்டமாகக் காட்டுவதற்காகவே அவற்றை அசைவற்ற புகைப்படமாகக் காட்டாமல் அசைவுள்ள விழியமாகக் காட்டுகிறார்கள்.
ஓவியத்தில் அசைவைக் காட்டமுடியாது. ஆனால், குறும்படத்தில் காட்டமுடியும் அல்லவா? ஒரு மரம் எப்போதும் கற்சிலை போல் அசைவற்று இருக்காது. வெயில் காலங்களில் சில நேரங்களில் புழுக்கம் அதிகமாயிருக்கும்போது, நாமே கூறுவோம்,”பாருங்கள், ஒரு இலை கூட அசையவில்லை” என்று. அந்நிலை வேறு சாதாரணமாக மரங்கள் ஆடிக்கொண்டும் அசைந்துகொண்டும்தான் இருக்கும். அதனை அப்படியே புலவர் நம் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார்.
எனவே அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்று பொருள் கொள்வதும் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. இச் சொல்லின் மூலம் சினை மற்றும் கழையுடன் தொடர்புடைய வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அதைப் பற்றிக் கீழே காணலாம்.
சரி, அலங்குகழை வேண்டாம். இவற்றைப் பாருங்கள்:
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு - சிறு 265ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் - ஐங் 220/2ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் - கலி 41/3ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/2ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் - அகம் 72/11
எனவே மூங்கில் மரங்கள் காற்றில் ஆடும், அசையும், அலங்கும், துயல்வரும்.
அலங்கு சினையும் அலங்கு கழையும்:
அலங்கு சினை
மற்றும் அலங்கு கழையில் வருகின்ற அலங்குதல்
என்னும் வினை குறிக்கும் பொருள் பூத்தல்
என்பதாகும். அதாவது,
அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்றும்
அலங்கு கழை என்பது பூத்த மூங்கில் என்றும் பொருள்படும்.
பூ என்பது
எப்படி பூக்கும் செயலையும் (வினைச்சொல்) பூவையும் (பெயர்ச்சொல்) குறிக்கிறதோ அதைப்போல
அலங்கு என்பதும் பூக்கும் வினை மற்றும் பூப்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுகிறது.
பொதுவாக மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்திருப்பதில்லை. மரங்களின் பூக்கும் பருவம் பல காரணங்களால்
வேறுபடுகின்றது. மரங்கள்
பூத்திருக்கும் சமயம் அது பார்ப்போரின் கண்களை ஈர்த்து சிந்தையைக் கவர்கிறது. இதனால் தான் மரங்கள் பூத்திருக்கும் நிலையினை பல
பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுச்
சொல்லியுள்ளனர். மேலும் மரங்கள் பூக்கும் பருவம் சங்க காலத்தில் மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்து
செல்லும் தலைவன் இன்னின்ன மரங்கள்
பூக்கும் காலத்திற்கு முன் திரும்பிவிடுவதாகக் கூறிச் செல்வதைப் பல சங்கப் பாடல்களில் காணலாம். மரங்கள் பூக்கும் நிகழ்வினைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பல சொற்களுள் ஒன்று தான் அலங்கு என்பதாகும். இதற்கான
ஆதாரங்களைக் கீழே காணலாம்.
ஆதாரங்கள்:
அலங்கு என்பது பூத்தலைக் குறிக்கும்
என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் நேரடியாகவே உணர்த்துகின்றன.
பூ உடை
அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி -
குறு 134/4
பூ உடை அலங்கு சினை என்று கூறுவதில் இருந்து, அலங்கு சினை
என்பது பூக்களை உடைய மரக்கிளையே என்பது தெளிவாகிறது. மேலும்,,
அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்கிறீர்கள். எனில், பூ உடை அலங்கு சினை என்பது பூவை உடைய பூத்த சினை என்று ஆகாதோ? பூத்த சினையில் பூக்கள் இருக்கும். பூ உடைய சினை பூத்துத்தான் இருக்கும். எனவே பூ உடை பூத்த சினை என்பது கூறியது கூறல் ஆகாதோ?
அலங்கு சினை என்பது ஆடும் சினை எனக் கொண்டால்,
பூ உடை அலங்கு சினை என்பதிலிருந்து, ‘பூ இல்லாது அலங்குகின்ற சினை இருக்கலாம்’, ‘பூ இருந்தும் அலங்காத சினை இருக்கலாம்’ என்று கொள்ளலாம். எனவே பூவை உடையதாய் ஆடிக்கொண்டிருக்கும் சினையே பூ உடை அலங்கு சினை.
அலங்கு சினை என்பது பூத்த சினை எனக் கொண்டால், பூ உடை அலங்கு சினை என்பதிலிருந்து, ‘பூ இல்லாது பூத்த சினை’ என்றோ, பூ இருந்தும் பூக்காத சினை என்றோ கொள்ளமுடியுமா? எனவே பூ உடையதாய்ப் பூத்த சினை என்று கொள்வதே முரண் அன்றோ?
இவட்கே அலங்கு இதழ்
கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
அழல் அகைந்து
அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய -
அகம் 272/17
என்ற பாடல்களில் மரங்கள் பூத்திருக்கும் நிலை நேரடியாகக் கூறப்பட்டுள்ளதுடன், அலங்கு
எனும் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளதில்
இருந்து அலங்கு என்னும் சொல் பூத்தலையே குறிப்பது தெளிவு.
இவற்றிலும் அதே கூறியது கூறல் தொடர்கிறது. ஒரு சினையில் ஒரு புதுப் பூ இருக்கிறது என்று சொன்னாலேயே அந்த சினை பூத்திருக்கிறது என்றுதானே பொருள்! அப்படியிருக்க அலங்கு சினை புதுப்பூ என்பது ஏன்?
இவைதவிர இன்னொரு ஆதாரத்தையும் கீழே காணலாம்.
அலங்கல் என்னும் சொல்லுக்குப் பொருள் பூமாலை என்று அகராதிகள் கூறுகின்றன.
சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு.
(குருபரம். ஆறா. 121.)
வின்சுலோ அகராதி:
அலங்கல், (p. 40) [ alngkl, ] s. A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.
இந்த அலங்கல் என்னும் சொல்லானது அலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அலங்கல் என்பது அலங்கினால் அதாவது
பூக்களால் ஆன மாலையைக் குறிப்பதில்
இருந்து அலங்கு என்பது பூ / பூத்தலைக் குறிப்பது உறுதிப்படுத்தப் படுகிறது.
ஒரு நற்றிணைப் பாடலைப் பாருங்கள்:
பரல் தலைபோகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை – நற் 169/6-9
பரல் மிக்க பாலைநிலத்தில் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவை போன்ற தலையை உடைய கள்ளியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமலரை ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையை உடைய இடையன் இரவிலே கொய்து வெளிய பன்ங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற மாலையின் நறிய மனம் தெருவில் ஒருங்கு கமழா நிற்கும் இந்த மாலை அம் பொழுதினிலே” என்பார் பின்னத்தூரார்.
துரு என்பது செம்மறியாடு. அது கூட்டம் கூட்டமாகத் திரியும். வெள்ளாடு போல தனித்து மேயாது. அவற்றை வழிநடத்திச் செல்லும்போது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே செல்லும். என்னே இத ஆடு தலை துரு என்கிறார் புலவர் , அலங்கு சினைப் பலவு என்பது போல. The motion indicates that this is a lively picture. தொடலை என்பது பூ, இலை, தழை ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை. இதைக் கழுத்தில் போட்டவாறு இடையன் மேய்க்கும்போது அம் மாலை கழுத்தில் ஆடிக்கொண்டே இருக்கும் அல்லவா! எனவேதான் இதனை அலங்கல் அம் தொடலை என்கிறார். Here too, the motion indicates that this is a lively picture. அலங்கல் என்பது தனித்து மாலை என்ற பொருளையும் தரும். ஆனால் அவ்விடங்களிலும் அது ஆடுகின்ற மாலையைத்தான் குறிக்கும்.
பொதுவாகப் புலியின் மேனியை வேங்கை மலருக்கு ஒப்பிடுவார்கள். புலி குட்டி போட்டிருக்கிறது. அதன் குட்டிகள் சும்மாவா இருக்கும். அங்குமிங்கும் துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது எப்படியிருக்கிறதாம்: வேங்கைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அங்குமிங்கும் அசைவதுபோல் இருக்கிறதாம்.
கருங்கால் வேங்கை
அலங்கம் அம் தொடலை அன்ன குருளை – நற்றிணை 383/1,2
இங்கும் அலங்கல் அம் தொடலை வருவதைக் காணுங்கள்.
வெறும் தார் மார்பன், கோதை மார்பன், மாலை மார்பன் என்னாமல் அலங்கல் மார்பன் என்னும்போது அங்கே action is also indicated.
எனவே, மதிப்பிற்குரிய சரவணன் அவர்களே, கருத்துகள் எப்போதும் மாறுபடலாம். அவரவர் போக்கு அவருக்கு. அவரவர் நோக்கு அவருக்கு. நம் கருத்தை முன்வைத்துவிட்டோம். தமிழுலகம் சிந்திக்கட்டும். எனவே நாமே மீண்டும் மீண்டும் வாதிட்டுக்கொள்வதில் பொருள் இல்லை.
ஒன்று செய்யலாம். நல் நிலையிலுள்ள தமிழறிஞர்கள் தம் ஆய்வாளர்களிடம் இதை விட்டுவிடலாம். ஒரு பல்கலைக்கழகத்துப் பதிவாளராயிருக்கும் காளையான தமிழறிஞர், கல்லுரி முதல்வராகச் சந்திர முகத்துடன் மோகனப் புன்னகை புரிபவர் ஆகியோர் இதனைத் தம் தமிழ்த்துறை மாணவருக்குத் தலைப்பாகக் கொடுத்து வாதிடச் செய்யலாம்.
எனவே தயவுசெய்து இதற்குப் பதில் இங்கு எழுதவேண்டாம். எழுதினாலும் அதற்குப் பதில் நான் எழுதப் போவதில்லை.
ஆய்வாளர்கள் முடிவுசெய்யட்டும்.
மிக்க நன்றி,
அன்புடன்,
ஒன்று செய்யலாம். நல் நிலையிலுள்ள தமிழறிஞர்கள் தம் ஆய்வாளர்களிடம் இதை விட்டுவிடலாம். ஒரு பல்கலைக்கழகத்துப் பதிவாளராயிருக்கும் காளையான தமிழறிஞர், கல்லுரி முதல்வராகச் சந்திர முகத்துடன் மோகனப் புன்னகை புரிபவர் ஆகியோர் இதனைத் தம் தமிழ்த்துறை மாணவருக்குத் தலைப்பாகக் கொடுத்து வாதிடச் செய்யலாம்.
ஒரு நற்றிணைப் பாடலைப் பாருங்கள்:
பரல் தலைபோகிய சிரல் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன்கை இடையன் எல்லிப் பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை – நற் 169/6-9
பரல் மிக்க பாலைநிலத்தில் வளர்ந்தோங்கிய சிச்சிலிப் பறவை போன்ற தலையை உடைய கள்ளியின் மேலே படர்ந்து தழைத்த முல்லையின் நறுமலரை ஆடுகின்ற தலையையுடைய யாட்டின் தொகுதியை மேய்க்கச் செலுத்துகின்ற வலிய கையை உடைய இடையன் இரவிலே கொய்து வெளிய பன்ங்குருத்தின் போழுடனே சேர்த்துத் தொடுத்த அசைகின்ற மாலையின் நறிய மனம் தெருவில் ஒருங்கு கமழா நிற்கும் இந்த மாலை அம் பொழுதினிலே” என்பார் பின்னத்தூரார்.
துரு என்பது செம்மறியாடு. அது கூட்டம் கூட்டமாகத் திரியும். வெள்ளாடு போல தனித்து மேயாது. அவற்றை வழிநடத்திச் செல்லும்போது தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே செல்லும். என்னே இத ஆடு தலை துரு என்கிறார் புலவர் , அலங்கு சினைப் பலவு என்பது போல. The motion indicates that this is a lively picture. தொடலை என்பது பூ, இலை, தழை ஆகியவற்றால் தொடுக்கப்பட்ட மாலை. இதைக் கழுத்தில் போட்டவாறு இடையன் மேய்க்கும்போது அம் மாலை கழுத்தில் ஆடிக்கொண்டே இருக்கும் அல்லவா! எனவேதான் இதனை அலங்கல் அம் தொடலை என்கிறார். Here too, the motion indicates that this is a lively picture. அலங்கல் என்பது தனித்து மாலை என்ற பொருளையும் தரும். ஆனால் அவ்விடங்களிலும் அது ஆடுகின்ற மாலையைத்தான் குறிக்கும்.
பொதுவாகப் புலியின் மேனியை வேங்கை மலருக்கு ஒப்பிடுவார்கள். புலி குட்டி போட்டிருக்கிறது. அதன் குட்டிகள் சும்மாவா இருக்கும். அங்குமிங்கும் துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றன. அது எப்படியிருக்கிறதாம்: வேங்கைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலை அங்குமிங்கும் அசைவதுபோல் இருக்கிறதாம்.
கருங்கால் வேங்கை
அலங்கல் அம் தொடலை அன்ன குருளை – நற்றிணை 383/1,2
இங்கும் அலங்கல் அம் தொடலை வருவதைக் காணுங்கள்.
வெறும் தார் மார்பன், கோதை மார்பன், மாலை மார்பன் என்னாமல் அலங்கல் மார்பன் என்னும்போது அங்கே action is also indicated.
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/22014-12-15 15:40 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் - நற் 28/7ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் - அகம் 27/2பாடல்களில் கூறியது கூறலும் உண்டு என்பதற்கு நீங்கள் காட்டிய மேற்காணும் இரண்டு பாடல்களே சாட்சி.கழை = மூங்கில் = வெதிர்.ஆடுகழை வேறு அலங்குகழை வேறு.
On Monday, December 15, 2014 2:10:31 AM UTC-8, Pandiyaraja wrote:
அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2014-12-17 6:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.தொங்கி அசைவது மாலை மட்டும் தானா?இலைகள், ஆடைகள், பூக்கள், மெல்லிய கிளைகள், சிறுகனிகள் இன்னும் பல.இவைகள் தொங்கி அசைவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?இவைகட்கு ஏன் அலங்கல் என்று பெயரில்லை?
அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றன
On Tuesday, December 16, 2014 8:15:12 PM UTC-8, வேந்தன் சரவணன் wrote:2014-12-17 6:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அலங்கல் - தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் - கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.தொங்கி அசைவது மாலை மட்டும் தானா?இலைகள், ஆடைகள், பூக்கள், மெல்லிய கிளைகள், சிறுகனிகள் இன்னும் பல.இவைகள் தொங்கி அசைவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?
| அழாஅம் உறைதலும் உரியம் பராரை அலங்கல் அஞ்சினைக் குடம்பை புல்லெனப் புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு 25 |
2014-12-17 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றனஆதாரங்கள்?
On Wednesday, December 17, 2014 6:17:16 AM UTC-8, வேந்தன் சரவணன் wrote:2014-12-17 19:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:அலையும் எல்லா பொருளுக்கும் அலங்கல் [பொருளின் பெயர்] என்று இலக்கியங்கள் கூறுகின்றனஆதாரங்கள்?
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை அலங்க லுலவை யேறி |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அலங்கல் உலவை = பூக்களை உடைய மரக்கொம்பு.