Re: சங்கச் சொல்வளம்

54 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 21, 2014, 12:17:30 PM12/21/14
to mint...@googlegroups.com, vallamai, coral shree, thami...@googlegroups.com


On Saturday, December 20, 2014 11:22:35 AM UTC-8, தேமொழி wrote:
"சங்கச் சொல்வளம்" என்று பாண்டியராஜா ஐயா தொடங்கிய இந்த இழையில் கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட  "இரியல்" என்று  சொல்லைத் தொடர்ந்து மேலும் பல சங்கச்சொற்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இழையில் அறிமுகமான மற்றொரு சொல்லான  "அலங்கு" என்ற சொல்லின் பொருளைப்  பற்றி மேலும் பல கோணங்களையும், மேலதிகத் தகவல்களையும்  சில குழும உறுப்பினர்கள் மேலும் சில இழைகளில் விளக்கமளித்து வருகிறார்கள்.

அவர்களது விளக்கங்களையும் தவறவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். கீழே அந்த இழைகளின் சுட்டிகள்: 

நூதலோசு:  சங்கநூல் + பழம் நூல்கள் சொல்வளம் = அலங்கு 

வேந்தன் சரவணன்: அலங்கு என்பது என்ன?

திரு. கணேசன்: கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

 
வலைக்கண்களுக்கு நன்றி, தேமொழி.  சிகாகோவில் உள்ள ஸ்ரீமதி பவளசங்கரி திருநாவுக்கரசு 
வல்லமையில் வெளியிட்டுள்ளார்கள். அவருக்கு என் நன்றி. அதன் தொடுப்பு:
கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)

நா. கணேசன்

From CTamil (CNRS, Paris) list:
In Malayalam, the noun aṉakkam (അനക്കം) means movement, the intransitive verb aṉaṅṅŭ (അനങ്ങ്) means to move and the transitive verb aṉakkŭ (അനക്ക്) means to cause to move.  This word aṉaṅṅŭ may be related to Tamil alaṅku.  Interesting that a Tamil 'l' becomes an 'ṉ' in Malayalam.  Wonder if there are other Tamil-Malayalam word pairs where the Tamil 'l' changes to 'ṉ' in Malayalam.  I have observed a r-l change in Tamil word rakaḷai (commotion, row, quarrel etc.) and its Malayalam equivalent lahaḷa.  Is lahaḷa/rakaḷai a Dravidian word?  As I understand it, traditional south Dravidian words do not begin with a r or l.   Those that do begin with these letters in modern Dravidian most probably had a vowel preceding them in the older form of the word as in the case of raṇṭŭ / iraṇṭŭ meaning two.

Thanks and regards,
Radhakrishna Warrier


From: naa.g...@gmail.com
Date: Sat, 20 Dec 2014 19:37:44 -0800
To: cta...@services.cnrs.fr
Subject: [ctamil] அலங்கல் - mane of a horse

Kamban sings in a verse,
"Ayiram tErai, ATal An2aiyai, alaGkal mAvai
Ayiram talaiyai, Azip paTaikaLai aRuttum appAl".

Earlier, KonguvELir wrote with the same idea:
"aTalpEr yAn2aiyum, alaGkumayirp puraviyum".

Looking at the description of the mane of horses
from Sangam poetry onwards, it looks Kamban's
"alaGkal mA" refers to horses with manes.
Then, we can say "alaGkal arimA" would be male lion.

Here is my note on the verb, alaGku- < alai- "to move".

கம்பனில் ஓர் சொல்: அலங்கல் = குதிரையின் அலங்கு உளை (பிடரிமயிர்)
or, in Vallamai e-zine,

N. Ganesan




 

வேந்தன் அரசு

unread,
Dec 21, 2014, 1:23:29 PM12/21/14
to vallamai, மின்தமிழ், coral shree, தமிழாயம்
கதையில் ஒரு ட்விஸ்ட் இருக்கு என்பதற்கு கதையில் ஒரு சூரல் இருக்கு எனலாம்.

21 டிசம்பர், 2014 ’அன்று’ 9:17 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 10, 2015, 10:16:21 AM3/10/15
to mint...@googlegroups.com, vallamai, thami...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Tuesday, March 10, 2015 at 4:30:36 AM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
2015-03-10 9:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம். - . கணேசன்

எரு வெப்பக்கருத்துடையது எனலாம். எங்கள் வீட்டில் சில மரஞ்செடி இலைகளை ஒரு குண்டில் இட்டு மூடி ஒவ்வொரு நாளும் அதன் மேல் தண்ணீர் தெளித்தோம். 8 மாதங்கள் கழித்து அதைத் தோண்டிய போது இலைகள் மட்கி அந்த குண்டே வெப்பமாக இருந்தது. எருவும் வ ஏப்பமாக இருந்தது. 

கைத்தொழுவான். 

எரிக்கு (அ) எருக்கு வெப்பக் கருத்துடையது. பயன்படாத பாலை, குறை நிலங்களில் மிகுதியும் வளர்வது.
அதன் தழைகளை உரமாகப் பயன்படுத்தியதால் உரத்திற்கு எரு என்றே ஒருபெயர் ஏற்பட்டது.
வெருவுதல் என்பதற்கும் எரி-/எரு(க்கு) ஒரு தொடர்புமில்லை.

சாணி வறட்டி செய்கிறோம். எரி பொருள் தான் வறட்டி (< வறள்- ). எருவறட்டி, எருமுட்டை
இதெல்லாம் எரிக்கப்படுதலால் வரும் பெயர்கள்.

எரிக்கஞ்செடி (எருக்கு)

இதன் காய் வெடித்து கிழவிதலைப் பஞ்சு போல் இருப்பதால், ஒரு உவமையகுபெயர் வடக்கே உண்டு


எருக்கு/எரிக்கு > எக்கெ (கன்னடம்). இது ஹிந்துஸ்தானியில் அக், சம்ஸ்க்ரிதத்தில் அர்க்க, ஹிந்தியில் ஆக், ....
என்றெல்லாம் த்ராவிடச் சொல் எரிக்கஞ் செடிக்கு இன்றளவும் வழங்குகிறது. அமெரிக்க கண்டத்தில்
செவ்விந்தியர்கள் தம் மொழியை இழந்து ஸ்பானிச் இந்தோ-ஐரோப்பிய மொழி பேசுதல்போல
வடக்கே திராவிட மொழி மாறி இந்தியாகி இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு சான்றாம்.

நா. கணேசன்


On Monday, March 9, 2015 at 5:25:22 PM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:
எருவிடத்தில் பூக்கும் செடிகள் தான் "எருக்கஞ்செடிகள்" ஆயினவோ என எண்ணத்தோன்றுகிறது."சாணி"ப்பிள்ளையாருக்கு எருக்க மாலை சூடுவதன் சூட்சுமமும் இதுவாக இருக்கலாம்.

எருக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதன் இலைகளை வெட்டி எருவாகப் பயன்படுத்துவது வழக்கம். இதனால்
எருக்கு என்ற பெயரில் இருந்து எரு (=உரம்) என்றானதோ எனத் தோன்றுகிறது. எருக்கு = gigantic swallow-wort or manure-leaf .
மலையாளத்தில் “எரிக்கு”  என்கின்றனர். அதனால் சூரியன் எரிக்கும் பாலைத்திணையில் அதிகம் விளையும் எரிக்கு/எருக்கு போலும். இதன் தழைகள் உரமாக மிகுதியும் (manure-leaf) பயன்படுவதால் எரு போலும். எருக்கஞ்ச் செடிக்கும் சூரியனுக்கும் உள்ள தொடர்பு வடமொழியில் எருக்கு அர்க்க என்கின்றார்கள். அர்க்க (அருக்கன்) என்றால் சூரியன்.


எரி (சூரியன்) எனவே, பாலைத்திணைச் செடி எரிக்கு/எருக்கு. இதன் தழைகள் உரம். எனவே உரத்துக்கு எரு என ஒரு பெயர் வந்தது போலும். எரிக்கஞ்செடி வடசொல்லில் அர்க்க- .அர்க்க என்றாலே சூரியன் வடக்கே என்பதும் பார்க்கலாம்.

நா. கணேசன்

 
  

N. Ganesan

unread,
Mar 11, 2015, 11:09:56 AM3/11/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, pipi...@gmail.com, housto...@googlegroups.com, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com


On Tuesday, March 10, 2015 at 10:07:56 AM UTC-7, Pandiyaraja wrote:
அன்புடை அம்மையீர்,
இன்றைய தமிழ்நாட்டு மேடைப்பேச்சு வழக்கில், 'என்னுடைய முதற்கண் வணக்கம்" (?!!). தங்கள் பாராட்டு மொழிகளுக்கு மிக்க நன்றி. அதன்மூலம் சிந்திக்க வைத்ததற்கும் மிக்க நன்றி. ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் கேட்பார். பெரும்பாலோர் இது out of syllabus என்று சொல்லிவிட்டுப்போய்விடுவர். நான் அப்படியில்லை. எனவே தொடர்ந்து சிந்தித்தேன். பல இணையதளங்களைப் பார்வையிட்டேன். ஒரு பதில் கிடைத்தது.
முதலில், இந்தத் தொடர் வரும் பகுதி:

குறிஞ்சிப்பாட்டில் காதல்வயப்பட்ட தலைவி காதலனைக் காணாமல் பலவிதத் துயரங்களுக்கு ஆளாகி மெலிந்துபோகிறாள். இதைக் கண்ட செவிலி ஐயுறுகிறாள். தலைவியின் தோழியை விசாரிக்கிறாள். தோழி உண்மையை மெல்ல மெல்ல வெளிவிடுகிறாள். (இது புதியவர்களுக்கு)
ஒலிமென் கூந்தல் என்தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவரும் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவின் கடவுள் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்
உட்கரந்துறையும் உய்யா அரும்படர்
........-------------------
இவ்வாறு செவிலி படும்பாட்டையும் தலைவியின் நிலையையும் தோழி எடுத்துக்கூறுகிறாள். இதன் பிற்பகுதியின் உரை: "என் தோழியின் நன்மை மிக்க அழகு கெடவும், நறும்தோள் மெலியவும், வளை நெகிழ்தலை ஏதிலார் அறியவும் --- "
ஆக புள் என்பதற்கு வளை (நெகிழ்தல்) எனப் பொருள்கொள்ளப்பட்டுள்ளது. அகராதியில் புள் என்பதற்கு வளையல் என்றொரு பொருள் உண்டு எனக் காண்கிறோம். ஆனால் புள் கை போகிய புன்தலை மகாஅர் என்ற மலைபடுகடாம் அடியில் வளையல் என்று பொருள்கொள்ளப்பட்டுத் தரப்படும் பொருள் எனக்கு ஏற்புடையதாக இல்லை. அது வேறு கதை.
இங்கும் புள் என்பதற்கு வளையல் என்ற பொருள் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளையல் என்னவோ ரகசியமாகக் கழன்றுவிட்டதாகவும் அதைப் பிறர் அறிந்துவிட்டனர் என்றும் கொள்ளப்படுகிற பொருள் பொருத்தமானதாகப் படவில்லை. பொதுவாகப் புள் என்பதற்குப் பறவை என்று பொருள்.

புள் என்றால் பறவைகள் உண்ண மரம், நிலம், புழு குத்தும் அலகு எனப் பொருள். புள் > புள்ளி, பொள்ளு- ... உடலின் முக்கியமான உறுப்புகளின் பெயர்ச்சொற்கள் புள்- என்னும் வேர் கொண்டன.

பலவகை விளக்கங்கள் “புள்” என்றால் சொல்லலாம் எனத் தெரிகிறது. அவற்றில். நச்சினார்க்கினியர் வளையல் என்று விளக்கியிருக்கிறார். 14-ஆம் நூற்றாண்டில் அவ்வாறு ஏன் சொல்லியிருக்கிறார்? - எனப் பார்க்கவேண்டும். சங்க காலத்திலும் சரி, அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பும் சரி, சங்கை அறுத்து வளையல்களை இந்தியப் பெண்கள் விரும்பி அணிந்துள்ளனர். சங்கு (’sankha) என்ற வடசொல்லே கொங்கு ‘வளை’ என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான். சிந்து சமவெளி நாகரீகம் கொற்கை, இராமேசுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான சங்குகளை இறக்குமதி செய்துள்ளது. 1938-ல் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ராவ்பகதூர் கே. என். தீக்‌ஷிதர் இந்த இறக்குமதி பற்றி சென்னைப் பல்கலைப் பேருரையில் சொல்லியுள்ளதைப் பாருங்கள்:
(பக். 12 கடைசி பாரா, பக். 13-ல் தொடர்ச்சி)
Considering that the conch shell which is typical of the Indus valley civilization and which seems to have been in extensive use in the Indus cities was obtained from the south-east coast of the Madras Presidency, it would not be too much to hope that a thorough investigation of the area in the Tinnevelly Dt. and the neighboring regions such as the ancient sea port of Korkai will one day lead to the discovery of some site which would be contemporary with or even a little later than the Indus civilization."

Of course, Prof. Jonathan Mark Kenoyer, Archaeologist, U. of Wisconsin, Madison has done Phd dissertation and scores of papers and excavations on the 'sankha bangles, ... in Indus IVC.
See prof. J. M. Kenoyer's CV (& importance of 'sankha from Tamizhakam in Indus Valley of the Bronze Age).

Here is a lecture by J. M. Kenoyer on the relationship between Meluḫḫa (IVC) and Mesopotamia,
(Scholars like him, for generations, have dug and excavated Sumerian artefacts, and we see how fragile World's archaeological heritage is. ISIS thugs destroying all of Iraq's museums.)

Naccin2Akkin2iyar taking 'puL' (=bird) as "kuruku" (White Stork or Painted Stork) and as an "aaku-peyar" since stork's white color matches with that of Conch bangles, so traditionally vaLai is often called "kuruku" (stork) in Tamil literature for at least 2000 years. Nac. takes puL = kuruku (white stork, நாரை) = வளை (bangle). Let me give some examples where kuruku is used to refer to girls' bangles in Sangam literature onwards:

(a)
புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலை படு. 253). இங்கே நச்சினார்க்கினியர்
புட்கை = புள், அதாவது குருகு நிறத்த வளை அணியும் சிறுமியர் என்று விளக்கியுள்ளர்.
அதே போல், ”நற்கவின் தொலையவும், நறுந்தோள் நெகிழவும்
புள்பிறர் அறியவும் புலம்பு வந்தலைப்பவும்” இங்கேயும் புள் என்பது குருகு (நாரை)
நிறத்த வளையல் என்றே பொருள் கொண்டார்.

(b) பதிற்றுப்பத்து
அவலெறிந்த வுலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
தடந்தா ணாரை யிரிய வயிரைக்
கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
வெண்கை மகளிர் வெண்குருகு ஓப்பும்

இங்கே, வெண்கை என்றது குருகு (வளையல்) அணிந்த மகளிர்
வெள்ளாங்குருகை ஓப்புதலாம்.

(c) குறுந்தொகை 303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.

செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.
அம்மூவன் பாடல் இது. இங்கே குருகு - தலைவின் வளை ஒலி கேட்டுத் துஞ்சும்
தலைவனைச் சிலேடையாகச் சொல்கிறாள். அவளை விரைவில் மணந்துகொள் என்கிறாள் தோழி.

(d) இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித்
    தன் துணைப் பிரிந்த யாஅம் தனிக் குருகு உசவுமே, நல்லந்துவனார், கலித்தொகை
தலைவன் பிரிய, தலைவியின் குருகு, அதாவது வளைகள், கழன்று நெகிழ்தலைப் பாடுகிறார்.
சங்க இலக்கியத்தில் குருகு = வளை என்று பொருள்படும் இடங்களை நன்கு பார்த்தால்
சிந்து நாகரீகத்தில் ஏன் சங்கு வளையல்கள் என்று புரிந்துகொள்ள முடியும் என்று கருதுகிறேன்.

(e) அங்கைசேப்பக் குருகிரங்க
          வலங்கலம்பூங் குழறுயல்வர
      மங்கைநல்லார் பவழவம்மி
          யரைத்தசாந்த மலர்பெய்மாலை (சிந்தாமணி, இலக்கணையார் இலம்பகம்).
நச்சினார்க்கினியர் விளக்குகிறார்: அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க

குருகு = நாரையின் வெள்ளை நிறத்தால் Bracelet, armlet; கைவளை. கைகுவிபிடித்துக் குருகணி செறித்த (கல்லா. 44, 22). வெண்குருகு, வெள்ளாங்குருகு (=நாரை). ”சள்ளை வெள்ளையங் குருகு தானது வாமெனக் கருதி வள்ளை வெண்மலர் அஞ்சி மறுகிஓர் வாளையின் வாயில்” (சுந்தரர் தேவாரம்).

(f) மாணிக்கவாசகர் சிலேடையில் சிறப்பாகச் சில இடங்களில் சொல்லியுள்ளார். உதாரணம், கோவை இலக்கியங்களில் தலைவி பரத்தையரை கூட்டுவிக்கும் தொழிலுடைய பாணனுக்கு வாயில் மறுப்பாள். ‘உள்ளே வராதே’ என்று கிடக்கும் கல்லை வீசி எறிவாள். அச் சினம் தணிக்கப் பாணன் புலந்துரைப்பான். அப்பொழுது கன்றே அமையும். உண்ணத் தந்த ஆவின் கன்று எனவும், என்னைப் பார்த்துக் கொள்ளும் கோவத்தைத் தணியும் என்றும் பாணன் வேண்டுவன். ஆக் கன்று வேளாண்மாந்தர் பாணர்க்கு உணத்தருதலை சங்க இலக்கியம் முதல் அப்பர், ... எல்லோரிடமும் 2000 வருட இலக்கியங்களில் காணலாகும்.

மாணிக்கவாசகர் இன்னோர் இடத்திலும் சிலேடையை - சங்க இலக்கியம் போல லாவகமாகக் கையாளுகிறார். அவரது திருவெம்பாவைப் பாட்டு ஒன்றில் குருகு என்பது வெள்ளை நாரையும், உமையாளின் கை வளைகளையும் குறிக்குமாறு பாடியுள்ளது படித்து இன்புறத்தக்கது.
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

(g) இன்னும் பல உதாரணங்கள் குருகுப் புள்ளை வளையல் என்று பொருள்கொள்ளும் அகப்பாடல்களைக் காட்டலாம். காளமேகம் - சிலேடை:

மாக்கைக்கு இரங்கும் குருகும், வளர்சக்ர வாகப்புள்ளும்
தாக்கச் சரபம் குழைந்தது எவ்வாறு? சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித் திருஅறச் சாலையில் அன்னம்இட்டுக்
காக்கைக்கு ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங்குயிலே! 

ஓர் உரை. இன்னும் சொல்லலாம்.

5000 ஆண்டுகளாய் இந்திய மாதர்கள் விரும்பி அணியும் சங்கு வளையல்கள் குருகு, புள் என
தமிழில் அழைக்கப்பட்ட பழமரபை நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். நச்சரையும் கருத்தில் 
கொண்டு மேலும் ஆராயலாம்.

நா. கணேசன்



 
சில இடங்களில் இது பறவை மூலமாகக் கிடைக்கும் சகுனம் அல்லது நிமித்தம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சில பறவைகள் குறுக்காகப் பறந்து செல்வது தீநிமித்தம் எனக்கொள்ளப்படுகிறது. இது புள்பகை எனப்படுகிறது (புறம் 68) இதற்குப் பொருள்சொன்ன உரைவேந்தர் இது காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட்டோடித் தீநிமித்தம் செய்தல் என்பார். காக்கை கரைவது விருந்தினர் வருகையைக் குறிக்கும் என்று இன்றும் நாம் பேசிக்கொள்வதுண்டு (இது நல்நிமித்தமா, தீநிமித்தமா?!!!!) ஆந்தை அலறுவது இன்றைக்கும் அஞ்சப்படுகிறது. "டே மச்சி, நாளைக்கு டெஸ்ட் இருக்காதுடா". "ஏண்டா பட்சி சொல்லுச்சா?" இன்றைக்கும் பேச்சு வழக்கு இது. இவ்வாறு தன் காதலுக்கோ, காதலனுக்கோ ஏதேனும் தீங்கு நேரலாம் எனப் பறவை மூலம் தீநிமித்தம் கண்டு நொந்துபோயிருந்தபோது, தலைவியின் தீநிமித்தத்தை எவ்வாறோ பிறர் அறிந்து கௌவை தூற்றினர் என்று இங்கே பொருள்கொள்ளலாம். "ஏண்டி அவ என்னண்டோ இருக்கா?" "அவ ஒரு பய மேல உசுரா இருக்கா. ராத்திரி ஆந்த அலறுச்சில்ல. அதில இருந்து கலங்கிப்போயிருக்கா" "ஆந்த அலறுன்னா என்னடி?" "போடி இவளே, ஆந்த அலறுனா ஆம்புளக்கி ஆகாதுடி".
விடை சரியா? மார்க் எவ்வளவு?
ப.பாண்டியராஜா



On Tuesday, March 10, 2015 at 1:25:03 AM UTC+5:30, rajam wrote:
எப்பவும்-போல் அருமை என்று சொன்னால் சுவையற்றுப்போய்விடுமோ என்று ஐயம். ஆனாலும் சொல்லுவேன் — அருமை!

இரண்டு கருத்துகள்/கேள்விகள்:

///ஒன்றன் பேரளவு நமக்குள் ஏற்படுத்தும் மலைப்பினால் ஏற்படும் அச்சமே உரு.///

///உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு///

1. “உரு உட்காகும் …” என்று தொல்காப்பியர் உரியியலில் சொன்னதைத் தங்கள் விளக்கத்தின் அடிப்படையில் வைத்துப் பார்த்தால் … வானவில்-போன்ற உணர்ச்சிகளின் பல்வேறு நிலைகளைச் சொற்படுத்திய தமிழரின் உணர்வுக்கூர்மையை வியக்கத்தான் முடிகிறது!

2. 'அச்சம்’ என்பதுக்குக் குறிஞ்சிப்பாட்டு அடிகளை மேற்கோள் காட்டியதால் … ஏற்கனவே என்னுள் பலகாலம் அடங்கியிருந்த ஒரு கேள்வி: 

“புள் பிறர் அறியவும்” என்ற தொடருக்கு என்ன பொருள்? 

மக்கள் சிலிர்த்தெழவேண்டாம். இது என் ‘அறியா வினா.’ 

இவண்,
ராஜம்


On Mar 8, 2015, at 11:48 PM, Pandiyaraja <pipi...@gmail.com> wrote:

அன்புடையீர்,
சென்ற கட்டுரையைத் தொடர்ந்து பலவிதமான கருத்துப் பரிமாற்றங்கள் செய்த அன்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
இந்தக் கட்டுரையில் 'அச்சம்' இடம்பெற்றுள்ளது. சிறிது அச்சத்தோடுதான் அனுப்பியிருக்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா



4. அஞ்சுதல்
 
 

ச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

4.1 அச்சம்

நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:-

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகி

சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489 – 492

தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி தோழியை விசாரிக்கிறாள். தலைவியின் நோயின் காரணம் கேட்கிறாள்.

இப்போது தோழியின் நிலை என்ன? செவிலியிடம் உண்மையைச் சொன்னால் அதனால் தலைவியின் காதலுக்கு ஊறு நேரலாமோ என்ற உணர்வு; தலைவிக்காகச் செவிலியிடம் உண்மையை மறைத்தால் தலைவியின் காதல்நோய் மிகுமே என்ற உணர்வு. யாருக்காகப் பேசினாலும் கேடு வருமே என்கிற உணர்வு. இங்கே தோழிக்கு இரண்டு வகையான தீர்வுகளில் எதை எடுப்பது என்ற தடுமாற்றம் மேலிடுகிறது. பகைமையுணர்வு கொண்டு போரிட எதிர்த்து நிற்கும் இரு பெரு வேந்தரிடையே பேசிப் பகைமையைத் தீர்க்க முயலும் ஒரு சான்றோனைப் போல தோழி தவிக்கிறாள்.

இகல்மீக்கடவும் இருபெரும் வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல

இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென் – குறிஞ்சிப்பாட்டு 27 - 29

காதல்கொண்ட ஒரு தலைவன் மணமுடிக்கக் காலம் தாழ்த்துகிறான். இதனால் காதலி மனம் வருந்துகிறாள். அவளது தோழி இதனைத் தலைவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். ஒருநாள் தலைவியைச் சந்திக்கக் காதலன் வரும் நேரம் பார்த்து, அங்கு இருக்கும் வண்டினைப் பார்த்துக்கூறுவதுபோல் உரக்கப் பேசுகிறாள். “ ஏ வண்டே, நீ போய்த் தலைவி இன்னும் தன் வீட்டாரிடம்தான் (உயிருடன்தான்) இருக்கிறாள் என்று சொல். அப்படிச் சொல்வதால் உனக்கு ஒன்றும் நேரிடாது. நல்ல சொல் சொல்ல அச்சம் தேவையில்லை அல்லவா!” என்கிறாள்.

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர்நாட்டு
அண்ணல் நெடுவரை சேறியாயின்
------ ------ ------ -----  -

தமரின் தீராள் என்மோ … குறுந்தொகை – 392

அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.

4.2 உட்கு

தன் காதலியைச் சந்திக்கக் காதலன் ஒருவன் சென்றுகொண்டிருக்கிறான். குறுக்கே ஓர் ஆறு பெருவெள்ளத்துடன் ஓடுகிறது. அதை எப்படிக்கடக்கலாம் என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, சற்றுத்தள்ளி, ஒரு மதங்கொண்ட யானை சற்றும் அஞ்சாமல் இறுமாப்புடன் நீருக்குள் இறங்குகிறது. ஆனால் ஆற்றுநீரின் வேகம் அந்தக் களிற்றியானையின் செருக்கை அழித்து அதனைப் புரட்டியெடுத்து இழுத்துக்கொண்டு செல்கிறது. இதைப் பார்த்த அவன் மனம் துணுக்குறுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையைப் பார்த்த அவன், நீருக்குள் இறங்க எடுத்துவைத்த காலைச் ‘சட்’-டென்று பின்னிழுத்துக் கரையேறுகிறான். அவன் மனம் ‘படக் படக் என்று அடித்துக்கொள்கிறது. அவன் உள்ளத்தை நடுங்கவைத்த அந்த வெள்ளம் அவனுக்குள் ஏற்படுத்தியதுதான் உட்கு.

மராஅ யானை மதம்தப ஒற்றி

உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் :18/4,5

ஒரு நள்ளிரவு – கும்மிருட்டு. மழை ஓங்கி அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்த வெளியில் ஒரு மறைவில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். மேகங்கள் ‘கடமுட’- வென்று உருமிக்கொண்டிருக்கின்றன. அப்போது பளீரென்று ஒரு பெரிய மின்னல் கண்ணைக் கூசவைக்கிறது. அடுத்த நொடியில் ‘சடசட’-வென்று ஆரம்பித்த ஒலி, மிகப்பெரிய ஓசையுடன் ‘டமார்’-என்று ஒரு பேரிடியாய் முழங்குகிறது. உங்கள் உடம்பே ஒரு குலுங்கு குலுங்குகிறது. அந்த அதிர்வினால் ஏற்பட்ட மனக்கலக்கம் உண்டாக்கியதுதான் உட்கு.


பானாள்

...
Reply all
Reply to author
Forward
0 new messages