வெண்பாவில் விளாங்காய்ச் சீர்

547 views
Skip to first unread message

ramaNi

unread,
May 15, 2018, 12:05:41 PM5/15/18
to சந்தவசந்தம்
#ரமணி_ஆய்வுக்கட்டுரை
வெண்பாவில் விளாங்காய்ச் சீர்
குருநாதன் ரமணி
15/05/2018

இன்றைய யாப்பியல் வல்லோர் விளாங்காய்ச் சீர் என்றழைக்கும் மூவசைக் காய்ச்சீர் பற்றியும், அத்தகைய சீர் ஏன் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன என்றும் கொஞ்சம் ஆராய்வோம். அத்துடன், திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களிற் காணும் விளாங்காய்ச் சீர் வெண்பாக்களையும் சேகரித்து விவாதிப்போம்.

★★★
ஏன் விளாங்காய்ச் சீர் என்று பெயர்?

நிரையசை நடுவாக வரும் காய்ச்சீர்கள் இருவகை: கூவிளங்காய், கருவிளங்காய்.  நிரையசையில், குறிலிணை, குறிலிணையொற்று, குறில்நெடில், குறில்நெடிலொற்று ஆகிய நால்வகை உறழ்ச்சிகள் காணப்படும்.

விளங்காய், விளாங்காய்ச் சான்றுகள்

வேர்ப்பலவின் => குறிலிணை நிரைநடு => கூவிளங்காய்
வேர்ப்பலாவின் => குறில்நெடில் நிரைநடு => கூவிளாங்காய்
மற்றெனுஞ்சொல் => குறிலிணையொற்று நிரைநடு => கூவிளங்காய்
மற்றுமோர்சொல் => குறில்நெடிலொற்று நிரைநடு => கூவிளாங்காய்

புழுவிதமாய் => குறிலிணை நிரைநடு => கருவிளங்காய்
புழுவெலாமாய் => குறில்நெடில் நிரைநடு => கருவிளாங்காய்
விலங்குகள்நான் => குறிலிணையொற்று நிரைநடு => கருவிளாங்காய்
விலங்கெலாம்நான் => குறில்நெடிலொற்று நிரைநடு => கருவிளங்காய்

குறிப்பு
விளாங்காய்ச் சீர் என்று யாப்பிலக்கண நூல்களில் இல்லை. நெடிலோசையில் முடியும் நிரைநடுவாம் காய்ச்சீரும் விளங்காய் என்னும் வகையே. எனினும், அத்தகைய சீரில் ஓசை நீளுவதைக் குறிக்க விளாங்காய் என்று குறிப்பது இக்காலப் புலவர் வழக்கு.

★★★
விளாங்காய்ச் சீரின் ஓசை

மேற்காணும் நிரைநடு காய்ச்சீர்களில் ஓசையை மாத்திரை கொண்டு அளந்து பார்ப்போம்.

வேர்ப்பலவின் => 2+1/2+1/2+1+1+1+1/2 => 6 1/2  மாத்திரைகள்
வேர்ப்பலாவின் => 2+1/2+1/2+1+2+1+1/2 => 7 1/2  மாத்திரைகள்
மற்றெனுஞ்சொல் => 1+1/2+1+1+1/2+1+1/2 => 5 1/2  மாத்திரைகள்
மற்றுமோர்சொல் => 1+1/2+1+2+1/2+1+1/2 => 6 1/2  மாத்திரைகள்

புழுவிதமாய் => 1+1+1+1+2+1/2 => 6 1/2  மாத்திரைகள்
புழுவெலாமாய் => 1+1+1+2+2+1/2 => 7 1/2  மாத்திரைகள்
விலங்குகள்நான் => 1+1+1/2+1+1+1/2+2+1/2 = 7 1/2  மாத்திரைகள்
விலங்கெலாம்நான் => 1+1+1/2+1+2+1/2+2+1/2 = 8 1/2  மாத்திரைகள்

இங்ஙனம், குறில்நெடில் நிரைநடு வாய்வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசையளவில் ஒரு மாத்திரை அதிகம் ஒலிக்கக் காணலாம். இவ்வாறு ஒலித்தலால் செப்பலோசை விளாங்காய் வரும் சீர்களில் நீண்டொலித்துச் செய்யுளின் ஓட்டம் தடைப்படும் என்பது வெண்பா மரபு. எனவேதான், விளாங்காய்ச் சீர்கள் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன.

★★★
நீளோசை மட்டுந்தானா? சீர் பிரிதலுந்தான்!

மரபுச் செய்யுள்களில் ஈரசை, மூவசைச் சீர்களே பெரிதும் பயன்படுகின்றன. ஈரசை, மூவசைச் சீர்களின் அடிப்படை நோக்கமே, அவை தம்மில் குறைந்த வேரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது என்பதே. இவ்வகையில் தான் ஈரசை, மூவசைச் சீர்களில் கட்டுண்ணும் நேர்நிரை அசைகள் அமைகின்றன. 

குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, ஓரசை மட்டுமே பயிலும் அசைச்சீர் தனியே மரபுச் செய்யுளில் வருதலில்லை, எனவே, ஈரசைச் சீர்களைப் பிரித்தாலும் அவை இரண்டு அசைச் சீர்களாகவே பிரிதல் காணலாம்.

ஈரசைச் சீர்களோடு நேர், நிரை அசைகள் பின்தொடர்ந்து வருவனவே மூவசைச் சீர்கள். இதனாற்றான் அவற்றின் ஈரசைச் சீர்ப் பெயர்களோடு காய், கனி என்ற பெயர்கள் சேர்த்து அழைக்கிறோம்.

எனவே, மூவசைச் சீர்களைப் பிரித்தால் அவை ஈரசைச் சீர் + அசைச் சீர் (தேமா + காய் என்பதுபோல்) என்றே பிரியவேண்டும். ★★★ இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது! ★★★ அவ்வாறு பிரிந்தால் அது காய்ச்சீர்க்கு உரிய இயல்பான ஓசையின் மிக்கு ஒலிப்பதாக ஆகும். வெண்பாவின் கனிச்சீர்கள் வருதலாகா என்பதால், வரும் காய்ச்சீர்கள் விளாங்காய்ச் சீராக இருத்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மரபு.

இப்போது மேலுள்ள விளங்காய், விளாங்காய்ச் சீர்களைப் பிரித்து ஓசையுடன் படித்துப் பார்ப்போம்.

வேர்ப்பலவின் => வேர்ப்பல + வின் =>  கூவிளம் + அசைச்சீர்
.. வேர்ப்ப + லவின் => தேமா + அசைச்சீர் என்று படித்தல் தவறு!
.. வேர்ப்பல என்று தொடர்வதால், வேர்ப்ப என்றபின் நிறுத்தம் வராது என்றறிக.

வேர்ப்பலாவின் => வேர்ப்ப + லாவின் => தேமா + தேமா => ஈரசைச்சீர் இரண்டு
.. வேர்ப்ப என்றபின், லா என்ற நெடிலால் அங்கு நிறுத்தமும் ஓசை நீளலும் காண்க.

மற்றெனுஞ்சொல் => மற்றெனும் + சொல் => கூவிளம் + அசைச்சீர் 
.. மற்றெ + னுஞ்சொல் என்று படிப்பதில்லை!

மற்றுமோர்சொல் => மற்று + மோர்சொல் => தேமா + தேமா => மற்று பின் ஓசை நிறுத்தம்+நீளல்

புழுவிதமாய் => புழுவித + மாய் => கருவிளம் + அசைச்சீர்
.. புழுவி + தமாய் என்று படிப்பதில்லை!

புழுவெலாமாய் => புழுவெ + லாமாய் => தேமா + தேமா => புழுவெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.

விலங்குகள்நான் => விலங்குகள் + நான் => கருவிளம் + அசைச்சீர்
.. விலங்கு + கள்நான் என்று படிப்பதில்லை!

விலங்கெலாம்நான் => விலங்கெ + லாம்நான்  => தேமா + தேமா => விலங்கெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.

★★★
விளாங்காய் இழுபறி!

வேர்ப்பலாவின் தோல்சிராய்த்து வெட்டியேநாம் தேனிறைத்துச்
சேர்ந்தவாறே உண்ணுவோமே யின்று.

இலக்கணப்படி இது குறள் வெண்பா. முதலேழும் காய்ச்சீர் ஆதலால் முதல் வகையான ஏந்திசைச் செப்பலோசை பயில்வது தான். ஆயின் ஓசை நிற்பதும் நீள்வதுமாக ஒவ்வொரு சீரிலும் தடுமாற்றம் காணலாம்!

விளாங்காய்களை விளங்காய்களாக்கி எழுதினால், இக்குறள்

வேர்ப்பலவின் தோல்செதுக்கி வெட்டிசுளை தேன்கூட்டிச்
சேர்ந்திருந்தே உண்ணுவம்நாம் இன்று.

இவ்விதமாய் ஏந்திசைச் செப்பல் தடங்கலின்றி ஒலித்தல் காணலாம்.

★★★
விளாங்காய் பற்றி இன்றைய யாப்பியல் ஆசிரியர்கள்

கி.வா.ஜகந்நாதன், 'கவி பாடலாம்'
கேள்வி-பதில் பக்.228, கேள்வி 15

வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங் 
கால்பற்றிக் காண்போம் கதி. 

கேள்வி: இந்த வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?

பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு.

★★
பசுபதி, 'கவிதை இயற்றிக் கலக்கு', பக்72

விளாங்காய்ச் சீர்களை வெண்பாவில் உபயோகித்தால், செப்பல் ஓசை சிறிது குறைந்துவிடுகிறது. அதனால், விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில், வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. அந்த விளாங்காய்ச் சொல்லைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும், ஆனால் ஓசையும் குறையக்கூடாது என்றால், வகையுளியைத் தவிர வேறு வழியில்லை.

காட்டு

கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
(கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும்.)

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச் 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும் 
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து. 

★★
பாவலர் ம.வரதராசன்

இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள. 

கவிதைகளையும், செய்யுட்களையும் இக்காலத்தில் உரைபோல் படித்துவிடுகிறோம். ஆனார் முற்காலத்தில் அவற்றை இசையாகவே பாடினர். அவ்விதம் பாடும்போது இவ்வழி விளங்காய்ச் சீர் சற்றே நீண்டொலிப்பதால் சந்தம் கெட்டுத் தடுமாறும் நிலையின் காரணமாக விளாங்காயைக் கூடுமானவரை தவிர்த்தார்கள். இதைக் காரணம் காட்டியே இற்றைப் புலவர் விளாங்காய் வரலாகா என்றனர்.(வரக்கூடாது எனச் சொன்னாரில்லை) வரலாகா என்றால் அது இசைத்தற்கு ஆகா என்று பொருள். சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை. 

★★
அகரம் அமுதன் 

வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. 

நானும் நளவெண்பா வெண்பாக்கள் முழுவதும், பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பா, இருபா விருபது, உண்மை விளக்கம், திருக்களிற்றுப்படியார், வினா வெண்பா ஆகிய பாக்களில் பலநாட்கள் தேடினேன். 

ஆகவே, எந்தவகையான பாக்களிலும், விளாங்காய்ச் சீர் வருவது சிறப்பன்று.

★★★
பழந்தமிழ் வெண்பாக்களில் விளாங்காய்ச் சீர்கள்

திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களில் காணும் வெண்பாக்களில், விளாங்காய்ச் சீர் உள்ளனவற்றை, அன்பர்கள் பின்னூட்டமாக எடுத்தாண்டால், நாம் அவற்றை விவாதிக்கலாம்.

★★★
முடிவுரை

யாப்பிலக்கணம் ஒரு பாவகை அல்லது பாவினத்தில் அமையும் அசை, சீர், தளை, ஓசை போன்ற இலக்கணக் கூறுகளை மட்டுமே பேசும். செய்யுளில் அமையும் எதுகை, மோனை போன்ற தொடை வகைகள் பற்றியோ, செப்பலோசை சிதைக்கும் விளாங்காய்ச் சீர் போன்றன பற்றியோ இலக்கணம் பேசுவதில்லை. 

இங்குதான் செய்யுள் மரபு என்பதன் ஆளுமை தொடங்குகிறது. அளவடிகளில் பொழிப்பு மோனை அழகு, ஈரடிக்கோரெதுகை அழகு, வெண்பா ஈற்றடியில் வகையுளி அமையலாம், வெண்பா வடிகளில் விளாங்காய்ச் சீர் வந்தால் செப்பலோசை சிதையும் போன்ற மரபு இலக்கியக் கூறுகளைச் சரியாக அறிந்துகொள்வது மரபுச் செய்யுள் புனைதிறனை மேம்படுத்தும்.

★★★ ★★★ ★★★

Lalitha & Suryanarayanan

unread,
May 15, 2018, 10:16:26 PM5/15/18
to santhav...@googlegroups.com
"இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது!"  - அருமை ரமணி.

சிவசூரி.

ramaNi

unread,
May 15, 2018, 10:34:15 PM5/15/18
to சந்தவசந்தம்
வேரைக் கண்ட திருப்தி எனக்கும் எழுந்தது, இதை எழுதும்போது.
ரமணி

Siva Siva

unread,
May 15, 2018, 11:30:48 PM5/15/18
to santhavasantham

/ இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள.  /
/ சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை.  /

இப்படி சொன்னவர் எக்காரணத்திலோ உதாரணங்களைக் காட்டவில்லை! எந்நூலில் எப்பாடல்களில் இத்தகைய சீர்கள் உள்ளன என்று மேற்கோள் காட்டவில்லை!
"நமச்சிவாய வாஅழ்க" என்ற சிவபுராணச் சொற்றொடரையும்  "நமசிவாய வாழ்க" என்று எழுதியிருக்கின்றார்!


/ எனவே, மூவசைச் சீர்களைப் பிரித்தால் அவை ஈரசைச் சீர் + அசைச் சீர் (தேமா + காய் என்பதுபோல்) என்றே பிரியவேண்டும். ★★★ இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது! ★★★  /
??
So, something like  எமக்கிரங்கா is verboten in வெண்பா  because it can be "எமக்கி" "ரங்கா"?



காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11. 4.2 - 

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்

படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்

என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்

கன்பறா தென்நெஞ் சவர்க்கு


N. Ganesan

unread,
May 15, 2018, 11:48:41 PM5/15/18
to சந்தவசந்தம்


On Tuesday, May 15, 2018 at 7:16:26 PM UTC-7, Lalitha and Suryanarayanan wrote:
"இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது!"  - அருமை ரமணி.

சிவசூரி.

தமிழறிஞர் திரு. சொ.சொ.மீ. அவர்கள் உரையில் கவிஞர் கண்ணதாசன் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பற்றி எழுதிய வெண்பாவைப் பகிர்ந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . நன்றி.

"எங்கடனைத் தீர்ப்பாய் இறைவா திருமலைவாழ்
வெங்கடே சப்பெருமாள் வேந்தனே - மங்காத
செல்வத்தை அள்ளித் தினமும் தருவாயேல்
நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்".....(கவிஞர் கண்ணதாசன்)

N. Ganesan

unread,
May 15, 2018, 11:58:29 PM5/15/18
to Santhavasantham

2014-05-03 9:29 GMT-07:00 Siva Siva <naya...@gmail.com>:
தேவாரத்தில் நாலடித் தரவு கொச்சகக் கலிப்பாவின் தோற்றமுடைய பாடல்களிலும் விளாங்காய் அரிதாகவே காண்கின்றேன்.

தேடியதில் கண்ட ஓர் இடம்:

அப்பர் தேவாரம் - 4.12.5
மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த விசைபாடும் பழனஞ்சே ரப்பனையென்
கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான் கடவேனோ. 


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
May 16, 2018, 12:32:32 AM5/16/18
to சந்தவசந்தம்
வணக்கம் சிவசிவா.

ஒரன்பர் என் 'சடுதியில் மரபுகவி' குழுமத்தில் கீழ்க்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி, அதில் வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசைநயம் பொருட்டே என்கிறார்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். ... 1079

விசாரித்துப் பார்த்ததில், வள்ளுவர் 19 குறட்பாக்களில் இந்த தூஉ அளபெடையைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கண்டேன். சில சான்றுகள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461

இக்கால வழக்கில் இந்த தூஉம் சொற்களை எப்படிச் சொல்வோம் என்று கண்டால், முறையே
உடுப்பதுவும், உண்பதுவும், துப்பாயதுவும் கெடுப்பதுவும், எடுப்பதுவும், அழிவதுவும், ஆவதுவும் என்பது போல் வருகிறது.

இந்த உடுப்பதுவும் போன்ற பிரயோகம் வள்ளுவர் காலத் தமிழ் வழக்கில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதுபற்றி அன்பர்கள் கருத்தை விழைகிறேன்.

அன்புடன்,
ரமணி

ramaNi

unread,
May 16, 2018, 12:37:37 AM5/16/18
to சந்தவசந்தம்
/ எனவே, மூவசைச் சீர்களைப் பிரித்தால் அவை ஈரசைச் சீர் + அசைச் சீர் (தேமா + காய் என்பதுபோல்) என்றே பிரியவேண்டும். ★★★ இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது! ★★★  /
??
So, something like  எமக்கிரங்கா is verboten in வெண்பா  because it can be "எமக்கி" "ரங்கா"?

அப்படியில்லை. எமக்கிரங்கா என்பதைக் காய்ச்சீர் நோக்கம் கருதிப் பிரித்தால் எமக்கிரங் + கா என்றே பிரியும். படிப்பதும் அவ்வாறே, எமக்கி ரங்கா என்றல்ல! எனவே குறிலிணை நடுவரும் காய்ச்சீர்கள் வெண்பாவில் இயல்பு.

வேர்ப்பலாவின் எனும் விளாங்காய்ச் சீர் வேர்ப்பலா + வின் என்று பிரிவதாயினும், குறில்நெடில் நடுவருவதால், வேர்ப்ப + லாவின் என்று படிக்கும்போது பிரியும் இதனாற்றான் செப்பலோசைச் சிதைவு என்பது என் கருத்து.

N. Ganesan

unread,
May 16, 2018, 9:19:43 AM5/16/18
to சந்தவசந்தம்


On Tuesday, May 15, 2018 at 9:32:32 PM UTC-7, ramaNi wrote:
வணக்கம் சிவசிவா.

ஒரன்பர் என் 'சடுதியில் மரபுகவி' குழுமத்தில் கீழ்க்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி, அதில் வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசைநயம் பொருட்டே என்கிறார்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். ... 1079

விசாரித்துப் பார்த்ததில், வள்ளுவர் 19 குறட்பாக்களில் இந்த தூஉ அளபெடையைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கண்டேன். சில சான்றுகள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461

இக்கால வழக்கில் இந்த தூஉம் சொற்களை எப்படிச் சொல்வோம் என்று கண்டால், முறையே
உடுப்பதுவும், உண்பதுவும், துப்பாயதுவும் கெடுப்பதுவும், எடுப்பதுவும், அழிவதுவும், ஆவதுவும் என்பது போல் வருகிறது.

இந்த உடுப்பதுவும் போன்ற பிரயோகம் வள்ளுவர் காலத் தமிழ் வழக்கில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதுபற்றி அன்பர்கள் கருத்தை விழைகிறேன்.

கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், அழிவதூஉம், ஆவதூஉம் : கருவிளாம் சீர்கள் தாம்.  
விளாம் சீரைவிட மாத்திரை அதிகம். “விளாஅம்” சீர் எனலாமோ??

அளபெடை உ மாத்திரை நீட்டிப்பு. உடுப்பதுவும், உண்பதுவும், ... இவற்றிலிருந்து வேறானது உடுப்பதூஉம், உண்பதூஉம், ....

நா. கணேசன்

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
May 16, 2018, 10:12:42 AM5/16/18
to சந்தவசந்தம்
2018-05-16 18:49 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, May 15, 2018 at 9:32:32 PM UTC-7, ramaNi wrote:
வணக்கம் சிவசிவா.

ஒரன்பர் என் 'சடுதியில் மரபுகவி' குழுமத்தில் கீழ்க்கண்ட திருக்குறளை மேற்கோள் காட்டி, அதில் வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசைநயம் பொருட்டே என்கிறார்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். ... 1079

விசாரித்துப் பார்த்ததில், வள்ளுவர் 19 குறட்பாக்களில் இந்த தூஉ அளபெடையைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று கண்டேன். சில சான்றுகள்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. 15

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461

இக்கால வழக்கில் இந்த தூஉம் சொற்களை எப்படிச் சொல்வோம் என்று கண்டால், முறையே
உடுப்பதுவும், உண்பதுவும், துப்பாயதுவும் கெடுப்பதுவும், எடுப்பதுவும், அழிவதுவும், ஆவதுவும் என்பது போல் வருகிறது.

இந்த உடுப்பதுவும் போன்ற பிரயோகம் வள்ளுவர் காலத் தமிழ் வழக்கில் இல்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இதுபற்றி அன்பர்கள் கருத்தை விழைகிறேன்.

கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், அழிவதூஉம், ஆவதூஉம் : கருவிளாம் சீர்கள் தாம்.  
விளாம் சீரைவிட மாத்திரை அதிகம். “விளாஅம்” சீர் எனலாமோ??

அளபெடை உ மாத்திரை நீட்டிப்பு. உடுப்பதுவும், உண்பதுவும், ... இவற்றிலிருந்து வேறானது உடுப்பதூஉம், உண்பதூஉம், ....

நா. கணேசன்
 


உயிரளபெடை அலகு பெறாமை

963. அளபெடை யாவியு மவற்றோ ரற்றே.

என்பது, உயிரளபெடையும் அலகு காரியம் பெறாவாம்.

(வ-று.)

‘‘பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னந் தோற்றிலவால்-நெல்லுக்கு
நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் மென்முலைக்கும்
மாறோமா லன்றளந்த மண்.’’

உயிரளபெடை. (2)

ஆய்தமும் ஒற்றும் அலகு பெறுமிடம்

964. ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
     வேறல கெய்தும் விதியின வாகும்.

என்பது, ஆய்தமும் மெய்யும் அளபெடுப்புழிக்குற்றெழுத்தின் பயத்தவாம்.

(வ-று.)

எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃகு வார்க்கில்லை வீடு.

ஆய்தம்.

கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு.

மெய் (3)

மொழிமுதற் குறில் தனித்து நின்று அலகு பெறும் இடம்

965. விட்டிசைத் தல்லா விடின்முதற் றனிக்குறில்
     நேரசை யாகா தென்மனார் புலவர்.

என்பது, விட்டிசைத்து நின்றவழியல்லது விட்டிசையாதவழி மொழிமுதற்கணின்ற
தனிக்குறில் நேரசையாகாவாம்.



 



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
May 16, 2018, 10:38:25 AM5/16/18
to சந்தவசந்தம்


On Wednesday, May 16, 2018 at 7:12:42 AM UTC-7, Hari Krishnan wrote:


உயிரளபெடை அலகு பெறாமை

நன்றி. 99.99999% விளாஅஞ் சீர்கள் அலகுபெறுவதில்லை.

வகையுளியில் அலகுபெறுமோ?
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

அன்புடன்,
நா. கணேசன் 

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
May 16, 2018, 10:52:33 AM5/16/18
to சந்தவசந்தம்
2018-05-16 20:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, May 16, 2018 at 7:12:42 AM UTC-7, Hari Krishnan wrote:


உயிரளபெடை அலகு பெறாமை

நன்றி. 99.99999% விளாஅஞ் சீர்கள் அலகுபெறுவதில்லை.

வகையுளியில் அலகுபெறுமோ?
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

அன்புடன்,
நா. கணேசன் 


இசைநிறையளபெடையில் மிகும்.

இன்னிசை அளபெடையில் மிகாது.  

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
May 16, 2018, 10:53:27 AM5/16/18
to சந்தவசந்தம்
2018-05-16 20:22 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


2018-05-16 20:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, May 16, 2018 at 7:12:42 AM UTC-7, Hari Krishnan wrote:


உயிரளபெடை அலகு பெறாமை

நன்றி. 99.99999% விளாஅஞ் சீர்கள் அலகுபெறுவதில்லை.

வகையுளியில் அலகுபெறுமோ?
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. 12

அன்புடன்,
நா. கணேசன் 


இசைநிறையளபெடையில் மிகும்.

இன்னிசை அளபெடையில் மிகாது.  


பெறும், பெறாது என்றிருந்திருக்க வேண்டும்.   

ramaNi

unread,
May 16, 2018, 11:29:59 AM5/16/18
to சந்தவசந்தம்
அன்பர்களுக்கு வணக்கம்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். ... 1079

இன்னிசை அளபெடை பற்றிக் கொஞ்சம் யோசித்தேன். அது எவ்வாறு இன்னிசை ஆகிறது?  மேலுள்ள குறளை

உடுப்பதும் உண்பதும் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

என்று எழுதினால் எவ்வாறு இன்னிசை ஆகாநிற்கிறது? இதே சொற்களை ஔவையார் அளபெடையில்லாமல்,  'உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்' என்று கையாள்வதேன்?

இவ்வாறெல்லாம் யோசித்தபோது ஆங்கில யாப்பின் caesura கைகொடுத்தது! caesura என்பது ஒலியற்று மௌனமாகச் செல்லும் நிறுத்தம். இது செய்யுள் அடியில் எங்கும் வரலாம். பொதுவாகச் செய்யுள் அடியீற்றில் நிறுத்தம் உண்டு (அதனால் தான் அடி என்ற definition).

உண்பதும் உடுப்பதும் காணின் பிறர்மேல்
என்றால் முதற்சீர், இரண்டாம் சீர் முடிவில் நிறுத்தம் இல்லை (அடுத்த சீரின் முடுகியல் முதல் காரணமாக).

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
என்றால் முதலிரண்டு சீர் முடிவிலும் நிறுத்தம் அமைகிறது. அந்த நிறுத்தம் சொற்பொருளை எண்ணிப் பார்க்கச் சொல்கிறது.

ஔவையாரின்
உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
என்பதில் இரண்டாம் நான்காம் சீர்முதல் அமையும் நெடிகள் நிறுத்தம் அமைய உதவுகின்றன.

பொதுவாக நிறுத்தம் அமையும் சீரின் அடுத்த சீர் நெடிலிலோ ஒற்றுள்ளிட்ட அசையிலோ தொடங்கக் காணலாம்.

அகர முதல் எழுத்தெல்லாம் || ஆதி
பகவன் முதற்றே உலகு.

தோன்றிற் புகழொடு தோன்றுக || அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று.

எனவே, இன்னிசை அளபெடையில் நோக்கம் அதன்பின் ஒரு நிறுத்தம் அமையச் செய்வதே என்று சொல்லலாம் அல்லவா?

அன்புடன்,
ரமணி

*****
 

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
May 17, 2018, 1:34:29 AM5/17/18
to சந்தவசந்தம்
இந்தக் குறட்பாக்கள் இரண்டையும் பலமுறை விவாதித்திருக்கிறோம்.  எனக்கு நினைவிருக்கும்வரை, Kattalaikk kalithurai என்ற இழையில் கடைசியாக விவாதித்தோம்.


இந்த இழையிலும் இவ்வாறான விளக்கங்கள் பேசப்பட்டன.  இறுதியில் கவிமாமணி இலந்தை இவ்வாறு சொன்னார்:


2017-07-15 20:24 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
இலக்கணம் நோக்கி அளபெடை அலகு பெற்றும் அலகு பெறாமலும் வரும் என்பது சொல்லப்பட்டுள்ளது. இதற்கு வேறு வரையறை இரு[ப்பதாகத் தெரியவில்லை.

இலந்தை.


 
இந்த இழையையும் பார்க்கவும்.



--
அன்புடன்,
ஹரிகி.

ramaNi

unread,
May 17, 2018, 1:55:38 AM5/17/18
to சந்தவசந்தம்
தகவலுக்கு நன்றி, ஹரிகி. அளபெடை அலகிடல் பற்றிப் புரிந்துகொண்டேன். நான் சொல்லவந்தது காய்ச்சீர் இன்னிசை அளபெடையின் பின்வரும் ஒலிநிறுத்தம் பற்றியே. 
ரமணி

Ramamoorthy Ramachandran

unread,
May 17, 2018, 10:54:06 PM5/17/18
to santhav...@googlegroups.com
இன்பமளி நல்வெளிப்பா எம்மவர்க்கும் ஏற்றதென
அன்புடைய நம்புலவர் ஆதரித்தார்  - தென்தமிழிற்
கேற்ற விளாங்காய்ச்சீர் எங்கேனும் தென்பட்டா
லேற்ற லெவர்க்கு மினிது!
அன்புடன் 
புலவர் இராமமூர்த்தி .




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
May 17, 2018, 10:59:53 PM5/17/18
to santhav...@googlegroups.com
காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - ஓதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி 
ஒளிக்கின்ற தென்னோ வுரை! - நளவெண்பா.

ramaNi

unread,
May 17, 2018, 11:05:39 PM5/17/18
to சந்தவசந்தம்
அருமை, புலவரே.

குறளில் விளாங்காய்ச்சீர் கூட்டளபெ டையாம்
உறழும் அளபெடையில் லாவோர் - குறள்தனைக்
கண்டே னிலைநானும் கண்டவர் விண்டுரைத்தால்
பண்பினை காண்போம் பகிர்ந்து.

--ரமணி

*****

N. Ganesan

unread,
May 18, 2018, 8:57:34 AM5/18/18
to Santhavasantham
2018-05-17 19:53 GMT-07:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
இன்பமளி நல்வெளிப்பா எம்மவர்க்கும் ஏற்றதென
அன்புடைய நம்புலவர் ஆதரித்தார்  - தென்தமிழிற்
கேற்ற விளாங்காய்ச்சீர் எங்கேனும் தென்பட்டா
லேற்ற லெவர்க்கு மினிது!
அன்புடன் 
புலவர் இராமமூர்த்தி .


2014-ல் இதுவரை இங்கே வந்த விளாங்காய்ச் சீர்கொண்ட செய்யுள்மடல்களைத் தொகுத்தேன்.
யாப்பு அறியா யானும் ஒருகுறள் தமிழ்நாடு, தமிழர் வாழ்வு துலங்கச் சொன்னேன். பார்த்தருள்க.

(நாளை சிங்கைக் கவிஞர் அ.கி.வ. குடும்பத்தார் ஹ்யூஸ்டன் மீனாட்சியைத் தரிசிக்க வருகை.)

--------------------



On Saturday, November 8, 2014 3:15:06 AM UTC-8, meev1955 wrote:
இருவருமே நல்லாசிரியரைப்போலப்
பாடம் எடுத்தமைக்கு மிக்க நன்றி.
அன்பன்,
மீ.வி

விளாங்காய் விலக்கப்பட்டாலும், சில விதிவிலக்குகள்
உண்டு என்று சந்தவசந்தக் கவிஞர்கள் உதாரணங்கள்
காட்டியுள்ளனர். 

”இன்று கண்ட ”விளாங்காய்”ச் சீர் பயிலும் வெண்பா ஒன்று:

ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.
(பொருநராற்றுப்படை)

இங்கு, அளபிடை இன்னிசை வகையாதலால் அலகு பெறாததெனக் கொள்ளவேண்டும் எனத் தோன்றுகிறது. அனந்த் ” 

”சமீபத்தில் நான் கட்டளைக்கலித்துறை காவியம் எழுதிய போதுநான் செயதசில
ஆய்வுகளின் விளைவுகளில் ஒன்று. முன்னும் பின்னும் சரியான ஓசையுள்ள
சீர்களை அமைத்தால் விளாஞ்ச்சீரும் காய்ச்சீரும் மிக நயமாக உட்கார்ந்து
கொள்கின்றன..
எ.:கா
உன்னையா ஐயுற்றேன், உன்னையா சோதித்தேன் உத்தமியே
என்னையேன் இன்னும் நீ ஏற்றுகின் றாயோ எழிலரசி?
என்னநான் சொல்லுவேன்,எங்குநான்செல்லுவேன் ஏந்திழையே
முன்னையான் செய்தவம் மூண்டதோ இவ்விதம் முத்தமிழே!

இலந்தை” 10/4/2011

இதே பொருளடக்கத்துடன் இன்னோர் இழை,

” 'ஔவையார்' படம் கொத்தமங்கலம் சுப்புவிற்கு நிறைய புகழ்
தேடித் தந்தது. அதைப் பார்த்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிரமண்யம் 'சிவாஜி' இதழில் 1953- இல் 'ஔவையார் வெண்பா'க்கள்  எழுதினார். அதில் ஒன்று:
 
திடமெல்லாம் வாசன் திடமாகா! செய்யும்
படமெல்லாம் ஔவைபடம் போல -- நடமாடா!
பாட்டெலாம் சுந்தராம்பாள் பாட்டாகா என்றுலகின்
ஓட்டெல்லாம் கூறும் உணர்.” (கவிஞர் பசுபதி ஐயா, 6/23/2008

------------------------

இந்த இரண்டு விதிவிலக்கு வெண்பாவைக் கொடுத்து, 2 ஈற்றடிகளும்
கொடுத்து நான் கேட்க கிரேசி மோகனார் எழுதிய விளாங்காய் வெண்பாக்கள்
இவை:

’வீடு  வரையுறவு,  வீதி  வரைமனைவி
 காடு வரைபிள்ளை  கூறினார், -தோடு
 செவிதைக்கும் வண்ணம்,  சினிமாவுக்(கு)  ஏற்றம்,
 கவிதைக்குக்  கண்ணதாசன்  காண்’’....கிரேசி  மோகன்....


2014-06-21 7:10 GMT+05:30 crazy.mohan <crazy...@gmail.com>:

கணேசன் சாரின் "பாட்டுக்கு சுந்தராம்பாள் பார்" ஈற்றடி வெகுவாக என்னை "ஈர்த்த அடி"....

" ஆனை பழத்தை அடைய, அதிகோப, 
  ஞானப் பாழமது நெக்குருக, -கானத்தை,
  நாட்டுக்குத் தந்தவராம், நாமறிந்த அவ்வையார்,
  பாட்டுக்கு சுந்தராம்பாள் பார்"....கிரேசி மோகன்.... “

-----------------------------

’வேண்டாம் தனித்தமிழ் நாடு’ என்னும் ஈற்றடியை
விஞ்ஞானி ஜெயபாரதன் ஐயா (http://jayabarathan.wordpress.com/)வல்லமையில் தந்திருந்தார்.

தமிழர் பாரதமாதாவில் இணைய, சிந்து சமவெளியின்
தொல்தமிழ், பஞ்ச திராவிட தேசங்கள் பற்றி ஆராய,
கல்வெட்டு படிக்க  வேதஞானம், கிரந்தஞானம்
வேண்டும். இன்றைய கணிநுட்பில் ஒரு இந்திய லிபியில்
இருந்து இன்னொன்றுக்கு மாற்றுதல் மிக எளிது. நம்
உலாவியிலே அந்த Apps-ஐ பொருத்திவிட்டால் 
இந்தி, தெலுங்கு மலையாளம் என்ற வலைப்பக்கங்களை
தமிழோ அல்லது கிரந்தமோ அல்லது ஆங்கிலமோ எந்த
எழுத்திலும் வாசிக்கலாம். இந்திய அரசியல் யாப்பில்
எல்லா மாநில லிபிகளும் சரியாசனம் பெறுதல் இந்தியாவின்
ஒற்றுமைக்கு மேலும் உதவும். நூறு ஊறுகாய், நூறு சீலை
துணிமணிகள் இருக்கின்றன இந்தியாவில். அதுபோலே,
20 - 25 லிபிகள் இந்தியாவில் இருக்கட்டுமே. அதென்ன
இந்தி எழுத்துக்கு மாத்திரம் தனிச்சிறப்பு? பழமையும்
வியாபகமும் என்று பார்த்தால் கிரந்தலிபி முக்கியம்,
எத்தனை மொழிக் குடும்பங்களை - வட இந்திய, தென்னிந்திய,
தென்கீழ் ஆசிய மொழிகளை எழுதப்பயன்பட்ட கிரந்த லிபி
இந்தியாவின் லத்தீன்லிபி. லத்தீனலிபியில் எல்லா ஐரோப்பிய மொழிகளும்
- இப்போது துருக்கி, இந்தோனேசியா, வியட்நாம், மலாயா, ... -
எழுதுவதுபோல பயன்படும். ராஜராஜ சோழ சக்ரவர்த்தி கிரந்தத்தை
தமிழ் எழுத ஆணையிட்டான். அதன் வளர்ச்சியே இன்று நாம்
பாவிக்கும் தமிழ்லிபி. எனவே விளாங்காய்ச் சீர்களுடன் ஒரு குறள்:

வேண்டுக வேதஞானம், வேண்டும் கிரந்தஞானம்,
வேண்டாம் தனித்தமிழ் நாடு!

நா. கணேசன் 

--------------------

இப்போது(இலந்தையார் சொன்னபின்) நன்குபுரிகிறதா விசு அவர்களே.
 இரண்டு குறில்தாம் நடுவில் இருக்கவேண்டும்.. காய்ச்சீரில் 
 குறில்நெடில் சேர்ந்து இருக்கப்படாது.
 - சொர்க்--கமா-க-- இதில் கமா.. விளா..
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


2014-11-07 23:36 GMT+05:30 Subbaier Ramasami <elan...@gmail.com>:
- hide quoted text -

ஆண்ஊளள விஸ்வநாதன்

விளாங்காய் என்றால் நடுவில் புளிமா  குறில் நெடில் என்னும் அமைப்பில் வரும்
முறுக்குமீசை   நிரை  குறில் நெடில் நேர் -  கருவிளாங்காய்

அதிகமணம் -  கருவிளங்காய் - இது வரலாம் ஏனென்றால் இடையில் இருகுறில் ஒற்றடுத்த நிரையசை

எனவே காய்ச்சீர் நடுவே குறில்நெடில் வந்தால் தவிர்க்கவும்

சொர்க்கமாக  என்பதை சொர்க்கமென  என மாற்ரினால்  கூவிளங்காயாகும்
சொர்க்கமாக என்பது கூவிளாங்காய்

இலந்தை

2014-11-07 9:50 GMT-06:00 M. Viswanathan <meev...@gmail.com>:

அன்புக்குரிய கவியோகியாருக்கு,

சொர்க் கமா க

நேர்  நிரை  நேர்

கூவிளங்காய்


விளங்காய்ச்சீர் அல்லவே!.....

அன்பன்,

மீ.வி.



விசு அவர்களே..
 சொர்கமாக.. விளாங்காய்ச்சீர் வராது வெண்பாவில்.
 சொன்னோமே. சொர்க்கம்.. என்பதுதான் சரியான பதம்.க் ஏன் விட்டது?

 பாரெங்கும் வாழுமே சொல்....சொர்க்கமிதே!-- என இடலாமே!
 யோகியார்

--

 
 


On Thu, May 17, 2018, 11:25 ramaNi <sai...@gmail.com> wrote:
தகவலுக்கு நன்றி, ஹரிகி. அளபெடை அலகிடல் பற்றிப் புரிந்துகொண்டேன். நான் சொல்லவந்தது காய்ச்சீர் இன்னிசை அளபெடையின் பின்வரும் ஒலிநிறுத்தம் பற்றியே. 
ரமணி

On Thursday, May 17, 2018 at 11:04:29 AM UTC+5:30, Hari Krishnan wrote:

இந்தக் குறட்பாக்கள் இரண்டையும் பலமுறை விவாதித்திருக்கிறோம்.  எனக்கு நினைவிருக்கும்வரை, Kattalaikk kalithurai என்ற இழையில் கடைசியாக விவாதித்தோம்.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

ramaNi

unread,
May 18, 2018, 10:15:02 AM5/18/18
to சந்தவசந்தம்
குறில்நெடில் நடுவரும் விளாங்காய்ச்சீர் சேர்த்து வெண்பா ஒரோவழி எழுதுவது இன்று சிலருக்கு வழக்காவிட்டது போலும். எனினும் பழந்தமிழ் நூல் வெண்பாக்களில் இவ்வாறு காய்ச்சீர் அளபெடை பயிலாத விளாங்காய்ச் சீர்கள் அமையும் வெண்பாக்கள் இருந்தால் நாம் இவ்விழையில் சேகரித்துத் தொகுக்கலாமே?

அன்புடன்,
ரமணி

On Friday, May 18, 2018 at 6:27:34 PM UTC+5:30, N. Ganesan wrote:



Ms. Tamil

unread,
May 25, 2018, 12:51:47 PM5/25/18
to santhav...@googlegroups.com
2018-05-18 19:45 GMT+05:30 ramaNi <sai...@gmail.com>:
குறில்நெடில் நடுவரும் விளாங்காய்ச்சீர் சேர்த்து வெண்பா ஒரோவழி எழுதுவது இன்று சிலருக்கு வழக்காவிட்டது போலும். எனினும் பழந்தமிழ் நூல் வெண்பாக்களில் இவ்வாறு காய்ச்சீர் அளபெடை பயிலாத விளாங்காய்ச் சீர்கள் அமையும் வெண்பாக்கள் இருந்தால் நாம் இவ்விழையில் சேகரித்துத் தொகுக்கலாமே?


ஒரு சிறு நிரல் எழுதி, tamilvu.org-இல் உள்ள திருக்குறள் பதிப்பில் (http://www.tamilvu.org/ta/library-l2100-html-l2100vur-128292) விளாங்காய்ச் சீர்களைத் தேடினேன்.  அளபெடைச் சீர்களை விலக்கினால் கிடைத்தவை:

குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு (793)

அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம். (842)

தேடலில் வினைவிழாவார் (குறள்  901) என்ற சீரும் கிடைத்தது.  அது tamilvu.org-இல் தட்டச்சுப் பிழை போல் தோன்றுகிறது.

====

tamilvu.org நளவெண்பாவில் தேடியதில் கிடைத்தது (அளபெடைச் சீர்களை விலக்கி):


97. வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டார் உவப்பக் கலந்து.

தையரேய்க்கும் (பாடல் 155 -- கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்) என்ற சீரும் கிடைத்தது.  எனினும்,அச்சீர் ஐகாரக் குறுக்கத்தினால் கருவிளங்காய் ஆகிறது.

====

Project Madurai ஔவைக் குறளில் (http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0316.html) விளாங்காய்ச் சீர்கள் கிடைக்கவில்லை.  (யிடையறாதே, பாவமாயு போன்ற சீர்கள் பிற பதிப்புகளில் வேறு விதமாகப் பிரித்து எழுதப்படுகின்றன.)

அன்புடன்,
அர்விந்த்

பி.கு. பதிப்புகளில் தட்டச்சுப் பிழைகள் இருந்தால் தேடல் முடிவுகளிலும் பிழைகள் ஏற்படலாம்!

Pas Pasupathy

unread,
May 25, 2018, 1:27:48 PM5/25/18
to Santhavasantham
நன்றி, அர்விந்த்.

(793) , (842) ..இரண்டிலும் ‘தி’ குற்றியலிகரம். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ms. Tamil

unread,
May 25, 2018, 11:27:26 PM5/25/18
to santhav...@googlegroups.com
2018-05-25 22:57 GMT+05:30 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

(793) , (842) ..இரண்டிலும் ‘தி’ குற்றியலிகரம். 

ஆஹா!
நன்றி ஐயா!
  
தையரேய்க்கும் (பாடல் 155 -- கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்) என்ற சீரும் கிடைத்தது.  எனினும்,அச்சீர் ஐகாரக் குறுக்கத்தினால் கருவிளங்காய் ஆகிறது.


திருத்தம்: தையரேய்க்கும் ஐகாரக் குறுக்கத்தினால் புளிமாங்காய் ஆகிறது என எண்ணுகிறேன்.

N. Ganesan

unread,
May 26, 2018, 1:32:32 AM5/26/18
to சந்தவசந்தம்


On Friday, May 25, 2018 at 9:51:47 AM UTC-7, Ms. Tamil wrote:



97. வானவர்கோன் ஏவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு  தற்றொழுதான்
கண்டார் உவப்பக் கலந்து.


3-ம் அடி:
 வண்டார் நளன்போந்து வச்சிராய் தற்றொழுதான்

இப்படி ஏடுகளில் இருந்திருக்குமோ?

நா. கணேசன்
Message has been deleted

N. Ganesan

unread,
Jun 2, 2018, 6:33:29 PM6/2/18
to Santhavasantham
2018-05-15 9:05 GMT-07:00 ramaNi <sai...@gmail.com>:
#ரமணி_ஆய்வுக்கட்டுரை
வெண்பாவில் விளாங்காய்ச் சீர்
குருநாதன் ரமணி
15/05/2018

இன்றைய யாப்பியல் வல்லோர் விளாங்காய்ச் சீர் என்றழைக்கும் மூவசைக் காய்ச்சீர் பற்றியும், அத்தகைய சீர் ஏன் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன என்றும் கொஞ்சம் ஆராய்வோம். அத்துடன், திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களிற் காணும் விளாங்காய்ச் சீர் வெண்பாக்களையும் சேகரித்து விவாதிப்போம்.


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

"சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை.  குறிப்பு : விளாங்காய் என்ற வாய்ப்பாடு எந்த யாப்பியல் நூல்களிலும் இல்லை. யாப்பை விளக்க வந்த யாப்பருங்கலக் காரிகையிலும் இச்சீர்கள் உள்ளன,"

யாப்பருங்கலக் காரிகையில் விளாங்காய்ச் சீர்களைக் காணோம்:
(இருந்தால் தாருங்கள்.)

மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
”குறிலிணை, குறில்நெடில், இவை ஒற்றுடன் சேர நான்கும் "நிரையசை " என்பதே யாப்பியல் விதி. குறில் நெடில் இடையுற்ற நேரீற்று முச்சீர் "விளங்காய் " எனப்படும். எந்த யாப்பியலாரும் "விளாங்காய்" எனக் குறிப்பிடவில்லை. இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள. இவை வாராவெனின் அவர்கள் எடுத்தாளக் காரணம் உண்டா? அவர்களுக்குத் தெரியாதா? இது தவறான கருத்து (விதியன்று)”

திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் ஒன்றிலும் விளாங்காய் அலகுடன் சீர்களைக் காணோம்.
எந்தச் செய்யுள்களை அடிப்படையாக வைத்து மா. வரதராசன் பேசுகிறார்?

நா. கணேசன்

 

★★★
ஏன் விளாங்காய்ச் சீர் என்று பெயர்?

நிரையசை நடுவாக வரும் காய்ச்சீர்கள் இருவகை: கூவிளங்காய், கருவிளங்காய்.  நிரையசையில், குறிலிணை, குறிலிணையொற்று, குறில்நெடில், குறில்நெடிலொற்று ஆகிய நால்வகை உறழ்ச்சிகள் காணப்படும்.

விளங்காய், விளாங்காய்ச் சான்றுகள்

வேர்ப்பலவின் => குறிலிணை நிரைநடு => கூவிளங்காய்
வேர்ப்பலாவின் => குறில்நெடில் நிரைநடு => கூவிளாங்காய்
மற்றெனுஞ்சொல் => குறிலிணையொற்று நிரைநடு => கூவிளங்காய்
மற்றுமோர்சொல் => குறில்நெடிலொற்று நிரைநடு => கூவிளாங்காய்

புழுவிதமாய் => குறிலிணை நிரைநடு => கருவிளங்காய்
புழுவெலாமாய் => குறில்நெடில் நிரைநடு => கருவிளாங்காய்
விலங்குகள்நான் => குறிலிணையொற்று நிரைநடு => கருவிளாங்காய்
விலங்கெலாம்நான் => குறில்நெடிலொற்று நிரைநடு => கருவிளங்காய்

குறிப்பு
விளாங்காய்ச் சீர் என்று யாப்பிலக்கண நூல்களில் இல்லை. நெடிலோசையில் முடியும் நிரைநடுவாம் காய்ச்சீரும் விளங்காய் என்னும் வகையே. எனினும், அத்தகைய சீரில் ஓசை நீளுவதைக் குறிக்க விளாங்காய் என்று குறிப்பது இக்காலப் புலவர் வழக்கு.

★★★
விளாங்காய்ச் சீரின் ஓசை

மேற்காணும் நிரைநடு காய்ச்சீர்களில் ஓசையை மாத்திரை கொண்டு அளந்து பார்ப்போம்.

வேர்ப்பலவின் => 2+1/2+1/2+1+1+1+1/2 => 6 1/2  மாத்திரைகள்
வேர்ப்பலாவின் => 2+1/2+1/2+1+2+1+1/2 => 7 1/2  மாத்திரைகள்
மற்றெனுஞ்சொல் => 1+1/2+1+1+1/2+1+1/2 => 5 1/2  மாத்திரைகள்
மற்றுமோர்சொல் => 1+1/2+1+2+1/2+1+1/2 => 6 1/2  மாத்திரைகள்

புழுவிதமாய் => 1+1+1+1+2+1/2 => 6 1/2  மாத்திரைகள்
புழுவெலாமாய் => 1+1+1+2+2+1/2 => 7 1/2  மாத்திரைகள்
விலங்குகள்நான் => 1+1+1/2+1+1+1/2+2+1/2 = 7 1/2  மாத்திரைகள்
விலங்கெலாம்நான் => 1+1+1/2+1+2+1/2+2+1/2 = 8 1/2  மாத்திரைகள்

இங்ஙனம், குறில்நெடில் நிரைநடு வாய்வரும் விளாங்காய்ச் சீர்கள் ஓசையளவில் ஒரு மாத்திரை அதிகம் ஒலிக்கக் காணலாம். இவ்வாறு ஒலித்தலால் செப்பலோசை விளாங்காய் வரும் சீர்களில் நீண்டொலித்துச் செய்யுளின் ஓட்டம் தடைப்படும் என்பது வெண்பா மரபு. எனவேதான், விளாங்காய்ச் சீர்கள் பழந்தமிழ் வெண்பா நூல்களில் பெரிதும் தவிர்க்கப்பட்டன.

★★★
நீளோசை மட்டுந்தானா? சீர் பிரிதலுந்தான்!

மரபுச் செய்யுள்களில் ஈரசை, மூவசைச் சீர்களே பெரிதும் பயன்படுகின்றன. ஈரசை, மூவசைச் சீர்களின் அடிப்படை நோக்கமே, அவை தம்மில் குறைந்த வேரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது என்பதே. இவ்வகையில் தான் ஈரசை, மூவசைச் சீர்களில் கட்டுண்ணும் நேர்நிரை அசைகள் அமைகின்றன. 

குறிப்பிட்ட சில இடங்கள் தவிர, ஓரசை மட்டுமே பயிலும் அசைச்சீர் தனியே மரபுச் செய்யுளில் வருதலில்லை, எனவே, ஈரசைச் சீர்களைப் பிரித்தாலும் அவை இரண்டு அசைச் சீர்களாகவே பிரிதல் காணலாம்.

ஈரசைச் சீர்களோடு நேர், நிரை அசைகள் பின்தொடர்ந்து வருவனவே மூவசைச் சீர்கள். இதனாற்றான் அவற்றின் ஈரசைச் சீர்ப் பெயர்களோடு காய், கனி என்ற பெயர்கள் சேர்த்து அழைக்கிறோம்.

எனவே, மூவசைச் சீர்களைப் பிரித்தால் அவை ஈரசைச் சீர் + அசைச் சீர் (தேமா + காய் என்பதுபோல்) என்றே பிரியவேண்டும். ★★★ இரண்டு ஈரசைச் சீர்களாகப் பிரிதல் கூடாது! ★★★ அவ்வாறு பிரிந்தால் அது காய்ச்சீர்க்கு உரிய இயல்பான ஓசையின் மிக்கு ஒலிப்பதாக ஆகும். வெண்பாவின் கனிச்சீர்கள் வருதலாகா என்பதால், வரும் காய்ச்சீர்கள் விளாங்காய்ச் சீராக இருத்தல் தவிர்க்கப்பட வேண்டும் என்பது மரபு.

இப்போது மேலுள்ள விளங்காய், விளாங்காய்ச் சீர்களைப் பிரித்து ஓசையுடன் படித்துப் பார்ப்போம்.

வேர்ப்பலவின் => வேர்ப்பல + வின் =>  கூவிளம் + அசைச்சீர்
.. வேர்ப்ப + லவின் => தேமா + அசைச்சீர் என்று படித்தல் தவறு!
.. வேர்ப்பல என்று தொடர்வதால், வேர்ப்ப என்றபின் நிறுத்தம் வராது என்றறிக.

வேர்ப்பலாவின் => வேர்ப்ப + லாவின் => தேமா + தேமா => ஈரசைச்சீர் இரண்டு
.. வேர்ப்ப என்றபின், லா என்ற நெடிலால் அங்கு நிறுத்தமும் ஓசை நீளலும் காண்க.

மற்றெனுஞ்சொல் => மற்றெனும் + சொல் => கூவிளம் + அசைச்சீர் 
.. மற்றெ + னுஞ்சொல் என்று படிப்பதில்லை!

மற்றுமோர்சொல் => மற்று + மோர்சொல் => தேமா + தேமா => மற்று பின் ஓசை நிறுத்தம்+நீளல்

புழுவிதமாய் => புழுவித + மாய் => கருவிளம் + அசைச்சீர்
.. புழுவி + தமாய் என்று படிப்பதில்லை!

புழுவெலாமாய் => புழுவெ + லாமாய் => தேமா + தேமா => புழுவெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.

விலங்குகள்நான் => விலங்குகள் + நான் => கருவிளம் + அசைச்சீர்
.. விலங்கு + கள்நான் என்று படிப்பதில்லை!

விலங்கெலாம்நான் => விலங்கெ + லாம்நான்  => தேமா + தேமா => விலங்கெ பின் ஓசை நிறுத்தம் + நீளல்.

★★★
விளாங்காய் இழுபறி!

வேர்ப்பலாவின் தோல்சிராய்த்து வெட்டியேநாம் தேனிறைத்துச்
சேர்ந்தவாறே உண்ணுவோமே யின்று.

இலக்கணப்படி இது குறள் வெண்பா. முதலேழும் காய்ச்சீர் ஆதலால் முதல் வகையான ஏந்திசைச் செப்பலோசை பயில்வது தான். ஆயின் ஓசை நிற்பதும் நீள்வதுமாக ஒவ்வொரு சீரிலும் தடுமாற்றம் காணலாம்!

விளாங்காய்களை விளங்காய்களாக்கி எழுதினால், இக்குறள்

வேர்ப்பலவின் தோல்செதுக்கி வெட்டிசுளை தேன்கூட்டிச்
சேர்ந்திருந்தே உண்ணுவம்நாம் இன்று.

இவ்விதமாய் ஏந்திசைச் செப்பல் தடங்கலின்றி ஒலித்தல் காணலாம்.

★★★
விளாங்காய் பற்றி இன்றைய யாப்பியல் ஆசிரியர்கள்

கி.வா.ஜகந்நாதன், 'கவி பாடலாம்'
கேள்வி-பதில் பக்.228, கேள்வி 15

வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங் 
கால்பற்றிக் காண்போம் கதி. 

கேள்வி: இந்த வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?

பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு.

★★
பசுபதி, 'கவிதை இயற்றிக் கலக்கு', பக்72

விளாங்காய்ச் சீர்களை வெண்பாவில் உபயோகித்தால், செப்பல் ஓசை சிறிது குறைந்துவிடுகிறது. அதனால், விளாங்காய்ச் சீர்களைப் பொதுவில், வெண்பாவில் பயன்படுத்தாமல் இருப்பது நன்று. அந்த விளாங்காய்ச் சொல்லைப் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும், ஆனால் ஓசையும் குறையக்கூடாது என்றால், வகையுளியைத் தவிர வேறு வழியில்லை.

காட்டு

கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
(கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும்.)

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச் 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும் 
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து. 

★★
பாவலர் ம.வரதராசன்

இவ்வகைச் சீருள்ள பல வெண்பாக்கள் திருக்குறள், நளவெண்பா., திருவாசகம் போன்ற முன்னோர் பாடல்களில் பயின்றுள. 

கவிதைகளையும், செய்யுட்களையும் இக்காலத்தில் உரைபோல் படித்துவிடுகிறோம். ஆனார் முற்காலத்தில் அவற்றை இசையாகவே பாடினர். அவ்விதம் பாடும்போது இவ்வழி விளங்காய்ச் சீர் சற்றே நீண்டொலிப்பதால் சந்தம் கெட்டுத் தடுமாறும் நிலையின் காரணமாக விளாங்காயைக் கூடுமானவரை தவிர்த்தார்கள். இதைக் காரணம் காட்டியே இற்றைப் புலவர் விளாங்காய் வரலாகா என்றனர்.(வரக்கூடாது எனச் சொன்னாரில்லை) வரலாகா என்றால் அது இசைத்தற்கு ஆகா என்று பொருள். சான்றுகளாகப் பல முன்னோர் பாடல்களே இருக்கையில் விளாங்காய் வரக்கூடாது எனச் சொல்வது பிழை. 

★★
அகரம் அமுதன் 

வெண்பாவின் இடையில் விளாங்காய்ச்சீர் அமைவது குற்றமோ தவறோ அல்ல. தவிர்க்கப் படவேண்டிய ஒன்று. 

நானும் நளவெண்பா வெண்பாக்கள் முழுவதும், பாவேந்தர் பாரதிதாசனின் மணிமேகலை வெண்பா, இருபா விருபது, உண்மை விளக்கம், திருக்களிற்றுப்படியார், வினா வெண்பா ஆகிய பாக்களில் பலநாட்கள் தேடினேன். 

ஆகவே, எந்தவகையான பாக்களிலும், விளாங்காய்ச் சீர் வருவது சிறப்பன்று.

★★★
பழந்தமிழ் வெண்பாக்களில் விளாங்காய்ச் சீர்கள்

திருக்குறள், நளவெண்பா, திருவாசகம் போன்ற நூல்களில் காணும் வெண்பாக்களில், விளாங்காய்ச் சீர் உள்ளனவற்றை, அன்பர்கள் பின்னூட்டமாக எடுத்தாண்டால், நாம் அவற்றை விவாதிக்கலாம்.

★★★
முடிவுரை

யாப்பிலக்கணம் ஒரு பாவகை அல்லது பாவினத்தில் அமையும் அசை, சீர், தளை, ஓசை போன்ற இலக்கணக் கூறுகளை மட்டுமே பேசும். செய்யுளில் அமையும் எதுகை, மோனை போன்ற தொடை வகைகள் பற்றியோ, செப்பலோசை சிதைக்கும் விளாங்காய்ச் சீர் போன்றன பற்றியோ இலக்கணம் பேசுவதில்லை. 

இங்குதான் செய்யுள் மரபு என்பதன் ஆளுமை தொடங்குகிறது. அளவடிகளில் பொழிப்பு மோனை அழகு, ஈரடிக்கோரெதுகை அழகு, வெண்பா ஈற்றடியில் வகையுளி அமையலாம், வெண்பா வடிகளில் விளாங்காய்ச் சீர் வந்தால் செப்பலோசை சிதையும் போன்ற மரபு இலக்கியக் கூறுகளைச் சரியாக அறிந்துகொள்வது மரபுச் செய்யுள் புனைதிறனை மேம்படுத்தும்.

★★★ ★★★ ★★★

N. Ganesan

unread,
Jun 2, 2018, 7:06:45 PM6/2/18
to Santhavasantham
விளாங்காய்ச்சீர் வெண்பாவில் விலக்கு என்பதைக் கவிஞர் இரமணி
மரபுச் செய்யுளாக விளக்கியுள்ளார். கற்போம். குறள், நளவெண்பா,
யாப்பருங்கலக் காரிகை, காரைக்கால் அம்மை, .... பாடல்களில் 
விளாங்காய்ச் சீர் இல்லை. அம்மரபைக் கண்டு தெளிவாய்
இலக்கணங்கண்ட இரமணி அவர்களுக்கு வாழ்த்து.

வெண்பாவில் ’விளாங்காய்ச்சீர்’

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
நிரைநடு வாய்வரும் காய்ச்சீர் இரண்டு
கருவிளங் கூவிளங் காய்ச்சீர் எனவே
நிரையிற் குறிலிணை, ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிற ழாது
நிரையிற் குறில்நெடில், ஒற்றுடன் என்றால்
நிரைநடு காய்ச்சீர் ஒலிபிறழ் வாமென
அன்றுநம் முன்னோர் அறிந்துவெண் பாவினில்
நன்றல என்றிவ் வகைப்படும் சீர்கள்
பெரிதும் தவிர்த்தே இயற்றினர் வெண்பா
அரிதெனக் காண்போம் அவை. ... 1

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
கீழ்வரும் வெண்பாவில் நாற்சீர் விளாங்காயென்
றாழ்ந்துவரும் ஓசையை ஆய்ந்தறி யும்செவியால்
மாற்றுவோம் பாவை வகயுளி யாகவோ
மாற்றெனச் சீரமைத் தோ. ... 2

ஒருவிகற்பக் குறட்பா
(சிர்கள் 1, 3, 5, 6-இல் விளாங்காய்)

வேர்ப்பலாவின் தீங்கனி வெட்டியேநாம் தேனுடன்
சேர்த்தவாறே உண்பமேயென் றே.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி செய்து விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலா வின்தீங் கனிவெட்டி யேதேனைச்
சேர்த்தவா றேயுண்போம் நாம்.

ஒருவிகற்பக் குறட்பா
(வகையுளி யின்றி விளாங்காய்ச்சீர் நீக்கியது)

வேர்ப்பலாத் தீங்கனி வெட்டியே தேன்தடவிச்
சேர்த்தபடி உண்போமே நாம்.

(பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

N. Ganesan

unread,
Jun 2, 2018, 7:16:55 PM6/2/18
to சந்தவசந்தம்
பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

ய் என்னும் உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா?

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை 
உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)


மணி அடித்தான் = மணியடித்தான் (’y' is the glide for word-final i in the first word)
எனவே, ஈற்றடி “தள்ளியி யற்றல் தகை”.

N. Ganesan

unread,
Jun 2, 2018, 7:51:38 PM6/2/18
to சந்தவசந்தம்


On Saturday, June 2, 2018 at 4:16:55 PM UTC-7, N. Ganesan wrote:
பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

ய் என்னும் உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா?

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை 
உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)


மணி அடித்தான் = மணியடித்தான் (’y' is the glide for word-final i in the first word)
எனவே, ஈற்றடி “தள்ளி யியற்றல் தகை”.

தள்ளி இயற்றல் தகை - வகையுளி தவிரும்.

N. Ganesan

unread,
Jun 3, 2018, 12:29:01 AM6/3/18
to Santhavasantham, Pas Pasupathy
பசுபதி: > கண்ணதா சக்கவிஞன்' 'சாமிநா தைய்யன்' போன்ற வகையுளிகள் 
>வெண்பாவின் மற்ற அடிகளிலும் வரும்.

சாமிநாத என்னாமல், சாமிநா தைய்யன் என்னும் வெண்பாத் தாருங்கள்.

-------------------

விளாங்காய்ச்சீர் விலக்கம்: நல்ல பதிவு இரண்டு:



 
இரமணி> பலவிகற்பப் பஃறொடை வெண்பா)
விளங்காய் நிரைநடுச் சீர்களில் இங்ஙன்
குறில்நெடில் ஒற்றுடன் கூடி வருதல்
விளாங்காய்ச்சீர் என்பதாம் இந்நாள் வழக்கு
விளாங்காய்ச்சீர் வந்தமைய வெண்பா வியற்றல்
இலக்கணத் தப்பென வில்லை யெனினும்
ஒலிபிறழ் வென்று தவிர்த்தே அவற்றைநாம்
தள்ளிவி யற்றல் தகை. ... 3

ய் என்னும் உடம்படுமெய் வரவேண்டும் அல்லவா?

இ, ஈ ஐ வழி யவ்வும் ஏனை 
உயிர்வழி வவ்வும் (நன்னூல், 162:1-2)


மணி அடித்தான் = மணியடித்தான் (’y' is the glide for word-final i in the first word)
எனவே, ஈற்றடி “தள்ளி யியற்றல் தகை”.
தள்ளி இயற்றல் தகை - வகையுளி தவிரும்.
 

 

--

N. Ganesan

unread,
Jun 3, 2018, 10:34:58 AM6/3/18
to Santhavasantham

பசுபதி: > கண்ணதா சக்கவிஞன்' 'சாமிநா தைய்யன்' போன்ற வகையுளிகள் 
>வெண்பாவின் மற்ற அடிகளிலும் வரும்.

சாமிநாத என்னாமல், சாமிநா தைய்யன் என்னும் வெண்பாத் தாருங்கள்.

-------------------

2018-06-03 0:41 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2018-05-18 6:22 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
> 'கருவிளங்காய்' என்பதே சரி ; கருவிளாங்காய்ச்சீர் என்று சொல்வது தவறு.
> கண்மணி
>

விளாங்காய்ச்சீர் வெண்பா ஓசைக்கு ஒத்துவராது என்பதால்,
திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்துவதில்லை.

அதை விளக்க, விளங்காய், விளாங்காய் சீர்கள் எனப் பகுக்கின்றனர்.

குறளில் விளாங்காய்ச் சீர்கள் இல்லை என யாப்பிலக்கண நூல்கள்
எழுதினோர் புகல்வது கண்ணதாசன், சுந்தராம்பாள், புதன்வியாழன், நமச்சிவாய, ...
இவை போன்றவை இல்லாமையால்.

 விளங்காய், விளாங்காய் போன்ற பாகுபாடுகள் யாப்பிலக்கண நூல்களில் இடம்பெறாவிட்டாலும் இந்த வேறுபாடுகள் நம்முடைய யாப்பிலக்கண வரலாறு நெடுகிலும் போற்றப்பட்டுள்ளன.  விளாங்காய்ச் சீர் வெண்பாவில் மட்டுமன்றி, கட்டளைக் கலித்துறையிலும் பயிலாது.

இந்த வேறுபாட்டை மன்ற மையத்தில் (Forum Hub) 1999ல் முதன்முறையாகச் சுட்டினேன்.  அங்கே இடம்பெற்றிருந்த பெரியோர்கள் சந்தவசந்தத்தில் இணைந்தார்கள்.  அதன்பிறகு அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

'தும்பைப்பூ போலாடை; தொங்கா முறுக்குமீசை' என்று என் ஆசிரியரைப் பற்றி ஒரு பட்டிமன்றத்தில் வெண்பா எழுதிப் படித்தேன்.  அந்த மன்றத்தில் தசாவதானி ராமையா அமர்ந்திருந்தார். (இது 1972ல் நடந்தது. அப்போது எனக்கு 19 வயது.)  என்னுடைய வெண்பாவைக் கேட்டுக்கொண்டிருந்தவர், மறுநாள் நான் என் ஆசிரியரைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனபோது,'தம்பி, நீங்க ஐயா மேல பாடுனீங்களே, அந்த வெண்பாவ இன்னொருதடவ சொல்லுங்க' என்று கேட்டு, அதிலுள்ள 'முறுக்குமீசை' என்ற சீர் வெண்பாவில் பயிலாது என்பதை விளக்கினார்.  (தசாவதானி இராமையா அவர்கள்தாம் தற்போது சோடச அவதானம்--பதினாறு கவனகம்--செய்துகொண்டிருக்கும் கனகசுப்புரத்தினம் அவர்களின் தந்தையார்.)

திருக்குறளில்

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
 

என்ற குறளைச் சொல்லி இதில் விளாங்காய்ச்சீர் எப்படித் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று விளக்கினார்.  'நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' என்ற குறளையும் சுட்டினார்.  நாகரீகம் என்பது நாகரிகம் என்று குறுகியிருப்பது விளாச்சீருக்காக என்று கூறினார்.

ஒரு வெண்பாவில் (அல்லது கட்டளைக் கலித்துறையில்) மூன்று அசைகள் இருந்து, அவற்றில் இரண்டாவது அசை 'குறில்நெடிலாக' அமைந்திருந்தால் அதை விளங்காய் என்பதற்குப் பதிலாக விளாங்காய் என்று அழைப்பது புலவர்களுடைய வழக்கம்.  இது தவறான பயன்பாடன்று.  என்னுடைய வெண்பாவில் உள்ள 'முறுக்குமீசை' என்பதைப் போல் இருந்தால் (இரண்டவது அசை 'குமீ'--குறில்நெடில்) அது விளாச்சீர்.

ஆனால் இரண்டு அசைகளாக அமையும் விளச் சீரில் குறில்நெடிலாக அமையலாம்.  இதற்கு விளாச்சீர் கிடையாது.
-- 
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Jun 3, 2018, 10:38:00 AM6/3/18
to Santhavasantham
ஹரிகி எழுதினார்: 
 
விளங்காய், விளாங்காய்ச் சீர்களில் வேற்றுமை இருக்கிறது; இது நளவெண்பா, காளமேகம் இயற்றிய வெண்பாக்கள், முத்தொள்ளாயிரம் முதலான எல்லா வெண்பாக்களுக்கும் பொருந்தும் என்று நம்மால் சொல்லத்தான் முடியும்.  கேட்பதும் கேட்காததும் அவரவர் உகப்பு.

தொல்காப்பியத்துக்கு நச்சினார்க்கினியர் செய்த உரையில் 'ஊரொறால்' குறளை வைத்து விளாங்காய்ச் சீரை (விளாங்காய்ச் சீர் என்ற பெயரில் நச்சினார்க்கினியர் குறிப்பிடவில்லை. அது பிற்காலத்து நடைமுறை.) விளக்கியிருப்பதை 1950களில் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் எடுத்து விளக்கியிருந்தார் என்று புலவரேறு சீனிவாசன் அவர்கள் பதிப்பித்த திருக்குறள் பரிமேலழகர் உரையின் முன்னுரையில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  பல வருடங்களுக்கு முன்னர் மன்ற மையத்திலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வல்லமையிலும் இதை விளக்கியிருந்தேன்.  எழுதியவை இப்போது கிடைக்கவில்லை.

’ஊரொறால்’  - நச்சினார்க்கினியர் விளக்கம் காணக் காத்துள்ளேன்.


புலவரேறு சீனிவாசன் அவர்களுடைய முன்னுரையைப் படியெடுத்து அனுப்புமாறு நண்பரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளேன்.  நாளை அல்லது நாளை மறுதினம் கிடைக்கலாம்.  கிடைத்ததும் இங்கே இடுகிறேன்.  

அது வரையில் வாதிடுவது வீண் என்பதை உணர்ந்திருப்பதால் அமைதி காக்கிறேன்.  மூன்றுகால் முயல்களோடு பேசிப் பயனில்லையென்னும் இடங்களில் மௌனமே நன்மை எனக் கருதுகிறேன்.

கவிவேழம், கவிமாமணி இலந்தைக்கும் பேராசிரியர் பசுபதிக்கும் தெரியாத யாப்பை இங்கே வந்து கற்கவும் தேவையில்லை; காட்டவும் தேவையில்லை.  :-)

ஆமாம். 

அன்புடன்
நா. கணேசன்

 
-- 
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

 
2018-06-03 6:23 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
>
>
> 2018-06-02 22:22 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>
>>
>> ///ஆனால், விளாங்காய்ச் சீர்கள் ஒன்றும் இல்லை.
>> இருந்தால் தாருங்கள். குறளை ஆராய்ந்தபோது விளாங்காய்ச் சீரு ஒன்றுங்
>> காணோம்.///
>>
>> திருவள்ளுவருடைய தமிழ் நடையின் சிறப்புத்தன்மை ---அவர் பயன்படுத்தும் மூவசைச்
>> சீர்களில் ---இரண்டாவது அசையில் குறில் நெடில் இணைந்து ஒற்றடுத்து வருவதில்லை.
>> இது திருவள்ளுவர் தமிழ்நடைக்கு அழகு சேர்த்துள்ளது. வெற்றியும் பெற்றுள்ளது. 
>> அதற்காக விளாங்காய்ச்சீர் என்று புதிதாக சீர் உருவாக்கும்  உரிமையை
>> நீங்களாகக் கையிலெடுத்துக் கொண்டு  அது மரபிலக்கணம் என்று எதிர்வாதம்
>> செய்வீர்களா?.........அது நீங்களாக உருவாக்கிக்கொண்ட
>> புத்திலக்கணம்.........மரபுக்கவிதைக்கு இந்தப் புத்திலக்கணம் தேவை இல்லை.
>> கண்மணி    
>
>
> திருவள்ளுவர் மட்டுமில்லை. ஓர் உதாரணத்திற்கு அவர் பெயரைச் சொன்னேன்.
>
> வள்ளுவர், காரைக்காலம்மை, முதலாழ்வார்கள், யாப்பருங்கலக் காரிகை,  நளவெண்பா,
> சிலம்பில் உள்ள வெண்பாக்கள், முத்தொள்ளாயிரம், .... எதிலும்
> விளாங்காய்ச் சீர்களைக் காணோம். எனவே, சந்தவசந்தக் கவிஞர்கள் தருவது பொது
> இலக்கண விதி.
>
> வெண்பா விளாங்காய்ச் சீரை விலக்குகிறது. இது தவறு என்கிறீர்கள். அதற்கான
> காட்டுகள் ஒன்றும் கொடுக்காமல் பேசுகிறீர்கள்.
>
> நா. கணேசன்


N. Ganesan

unread,
Jun 3, 2018, 3:28:48 PM6/3/18
to சந்தவசந்தம்
உங்கள் பழைய மடல்கள் கிடைத்துள:
முந்தைய இழையில் பகிரப்பட்ட சில கருத்துகள்:

On Monday, 9 June 2014 17:49:48 UTC+5:30, Hariki wrote: 

பதினான்கு வருடங்களுக்கு முன்னால் மன்ற மையத்தில் எழுதியதை தவறிப் போய் சேமித்து வைத்திருக்கிறேன்.  அதிலிருந்து:
======================

குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா  

இனனும் அறிந்தியாக்க நட்பு (குறள் 793)

அறிந்தியாக்க என்று குறில் நெடில் வருகிறதே எனலாம். அறிந்தியாக்க   என்பது அறிந்து+யாக்க - குற்றியலிகரம். காரிகை பின் வருமாறு சொல்கிறது:   "சீரும் தளையும் சிதையின் சிறிய இஉ அளபோடு   ஆரும் அறிவர் அலகு பெறாமை"    சென்ற இடத்தால் செலவிடாத் தீதொரீஇ  நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்ற குறளுக்கான பரிமேலழகர் உரையைப் பார்க்கவும். "செலவிடாது என்பது   குறைந்து நின்றது"என்றெழுதுகிறார். "செலவிடாது" என்றால் குறில்நெடில் வருவதால் மாற்றி எழுதியிருக்கிறார்.   ஒள்ளியார் என்ற சொல்லை ஒளியார் என்று வள்ளுவர் பயன்படுத்துவதும் (குறள் 714) இதனாலேயே.   நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்   வித்தகர்க் கல்லால் அரிது (235) குறளின் பரிமேலழகர் உரையைப் பார்க்கவும். "போல் என்பது ஈண்டு உரையசை.   ஆகும் என்பதனை முன்னும் கூட்டி 'அரிதுஎன்பதனைத் தனித்தனி கூட்டி உரைக்க." என்கிறார். நத்தமாகும் என்றே   உரை சொல்கிறார். வள்ளுவர் "நத்தமாகும்" என்றே எழுதியிருக்கலாம். குறில்நெடிலை விலக்குவதற்காக இப்படிச் செய்திருப்பதாக பரிமேலழகர் உரையால் அறிகிறோம்.
==========================

On Monday, 9 June 2014 18:18:27 UTC+5:30, Hariki wrote: 

==============

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்   
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (662)  

ஐயா: நான் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது இளம்பூரணரால் சொல்லப்பட்டது.   தொல்காப்பியத்தின் உரைப் பகுதியில். பொருளதிகாரத்தில். இளம்பூரணம் தற்போது என்னிடத்தில் இல்லாததால்,   புலவர் சீனிவாசன் பதிப்பித்த திருக்குறள் முன்னுரையிலிருந்து பின் வருவதைத் தருகிறேன்:   Quote:   "மூவசைச் சீரில் நடு அசையின் இரண்டாமெழுத்து நெடிலாக வருதல் கூடாது என்பதற்கு யாப்பிலக்கணத்தில்  தனியாக விதி கூறப்படவில்லை. தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் ஓரிடத்தில் இளம்பூரணர் வெண்பா   நூல்களெல்லாம் அமைந்துள்ள முறையைக் கூர்ந்து நோக்கி இவ்வுண்மையைக் கூறினார். திருக்குறளில் ஒரு பாட்டை   எடுத்துக் காட்டி அங்ஙனம் கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக நமக்கு அறிவுறுத்தினார்.   ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்   ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் (662)   இப்பாட்டின் முதற்சீர் ஊறொராமை எனற்பாலது ஊறொரால் என நின்றது. இளம்பூரணர் (தொல் - பொருள் -   பொருளியல்) முதல் நூற்பா உரையில்   'இரண்டு என்னும் தொகைக்கு ஊறொராமை எனப்பொருள் உரைக்கவேண்டும்'   என உரைத்தார். ஊறொராமை என்னும்போது நடு அசையின் இரண்டாமெழுத்து நெடிலாக வந்து கூவிளாங்காய்   என்றாகிவிடும். அதனால் அச்சொல்லை வள்ளுவர் செய்யுள் விகாரமாக்கினார். ஊறொரால் என்னும் போது ஈரசையாகி   கூவிளாம் என்றாகிறது.   இளம்பூரணர் எடுத்துக் காட்டிய நுட்பத்தை முதல்முதலில் நம் தமிழுலகிற்கு எடுத்துக் காட்டியவர் சென்னை   பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் இராம - சுப்பிரமணியன் ஆவார். அவருக்கு என் நன்றி என்றும்   உரியது. பேராசிரியர் இராம - சுப்பிரமணியன் அவர்கள் கண்டு கூறிய நுட்பத்தைக் கொண்டு வெண்பா இலக்கியங்கள்   அனைத்தையும் ஆராய்ந்த போதுஅப்படிக் கருவிளாங்காய்கூவிளாங்காய் என வரும்படியாக ஒரு வெண்பாவும்   அகப்படவில்லை."

========= 

N. Ganesan

unread,
Jun 3, 2018, 3:51:38 PM6/3/18
to Santhavasantham

அன்பின் ஹரிகி,

உங்கள் பழைய மடல்கள் கிடைத்துள்ளன. வல்லமையில் பழைய மடல்களில் பார்க்கலாம். அதில், நளவெண்பாவின் உதாரணம் அச்சிடுவோர் செய்த பிழை எனக் கருதுகிறேன். ய என்றிருந்ததை யு என்று போட்டுள்ளனர். ஏட்டில் இருந்து காயிதத்துக்கு மாறும்போது இவ்வாறு ஆவது பல இடங்களில் காணலாம். ஒற்றெழுத்து ஆக்கும் புள்ளி ஏட்டில் இராது. யகரம் யுகரம் ஆக்கப்பட்டுள்ளது. 

இளம்பூரணர் தான் வெண்பாவில் விளாங்காய்ச் சீர் விலக்கத்தைத் தெளிவுபடுத்தியவர். நச்சினார்க்கினியர் ஏதாகிலும் சொல்லியுள்ளாரா? இளம்பூரணர் பற்றிய பதிவு ஒன்று: http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html

தொல்காப்பியரின் பெயர் குலப்பெயர் எனப் பலர் கூறியுள்ளனர். அவருள் ஒருவர் இளம்பூரணர். தொல்காப்பியரின் சமய, சமூகப் பின்புலம் என்பது பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடலாம். ஏன் மருதத்திணையின் கடவுள் என இந்திரனைச் சொல்கிறார் என மருத நாயகன் வாழ்க்கைப் பாடல்களைப் பார்த்தால் விளங்கும். உ-ம்.: சமணர்களின் கதைவாயிலாக, தமிழில் உருவாகும் இந்திரன் அகலிகைகதையில் அவன் பூனை ஆனது, .... இன்னும் பல.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jun 3, 2018, 6:38:18 PM6/3/18
to சந்தவசந்தம்
2013/8/5 ramaNi <sai...@gmail.com>

இந்தச் சீர்கள் வரும் நிரையசையின் நெடில்(ஒற்றுகள்) சீர்களைப் பிரிப்பதால் செப்பலோசை குன்றும். இவற்றைப் பயபடுத்தத்தான் வேண்டுமானால் வகையுளி ஒன்றே வழி:

’வட்ட மாக, வந்தி டாதோ; மூவ ரேகாண், கிளைப்ப லாக்கண்’ என்பது போல.

சரிதானா, ஹரிகி அவர்களே?


அன்புடன்,
ரமணி

:)

சரிதான்.

1998ல் நான் இணையப் பிரவேசம் செய்த கையோடு தொடங்கிய முதல் ‘அனல் பறக்கும்’(பறந்த!) விவாதம் இந்த விளாங்காய்தான்.  நம்ப வேட்டை அண்ணாச்சிகிட்டேந்து தொடங்கினது.  அந்த விவாதங்களை சேர்த்து வைத்திருந்தேன். ஃபோரம்ஹப் எனப்படும் மன்ற மையத்தில் நடந்த விவாதங்கள்.  இன்று படித்தால் சுவையாய் இருக்கின்றன.  இணைத்திருக்கிறேன்.




-- 
அன்புடன்,
ஹரிகி.

Old ForumHub discussion attached. what font is this? can it be converted to Unicode? Thanks.
YappilakkaNam.doc

N. Ganesan

unread,
Jun 3, 2018, 6:44:59 PM6/3/18
to Santhavasantham
In Unicode font, Hariki has given this earlier in a thread started by me back in 2013! 
Vilaangaai.doc

N. Ganesan

unread,
Jun 3, 2018, 10:49:22 PM6/3/18
to சந்தவசந்தம்
பேரா. இராம. சுப்பிரமணியன் போன்றோரை வைத்து தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதி வாங்காதது தமிழின் இழப்பு. நல்ல அறிஞர்களை தமிழ், இந்திய சமுதாயம் ஆதரிப்பதில்லை.

http://ta.kavithai.wikia.com/wiki/வேணு.குணசேகரன்
தமிழறிந்தவர்கள், தமிழாய்ந்தவர்கள் படித்து, இது நூலாக வேண்டிய தரமுடையதென உணர்த்தியதன் தூண்டுதலே இந்த வெளியீடு.. குறிப்பாக, தொல்காப்பியத்துக்குச் சீர் உரை எழுதிய பேராசிரியர் இராம சுப்பிரமணியன் அவர்கள் ’போர்வாளும் பீரங்கியும்’ காவியத்தின் கைப்பிரதியை படித்துப்பார்த்து, மிகச்சிறந்த மரபுக்கவிதை நூல் என்று வாழ்த்துரை வழங்கினார்.

Irama Subramanian – Anjali Notes

Posted by Snapjudge மேல் ஏப்ரல் 25, 2007

காலமானார் இராம. சுப்பிரமணியன்

சென்னை, ஏப். 25: தொல்காப்பிய எழுத்துப் படலத்துக்குப் புத்துரை நல்கிய இலக்கணக் கடல் பேராசிரியர் இராம. சுப்பிரமணியன் (80) சென்னையில் ஏப். 23-ம் தேதி காலமானார். அன்று மாலையே அவரது இறுதிச் சடங்கும் நடைபெற்றது.

அவருக்கு மனைவி, மகள், 3 மகன்கள் உள்ளனர்.

சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றச் செயலர் நு.ர.ஆறுமுகம் உள்பட நூற்றுக்கணக்கான தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர் அவர்.

------------------

இராம. சுப்பிரமணியனின் கண்டுபிடிப்பு வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வாராது. ஹரிகி.

பேரா. இராம. சுப்பிரமணியன் கட்டுரையைப் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 3, 2018, 10:57:51 PM6/3/18
to Santhavasantham
2018-06-03 19:36 GMT-07:00 AnnaKannan K <annak...@gmail.com>:
யகரம், யுகரம் ஆவதால் இதன் விளாங்காய்ச் சீருக்கு எந்த ஊறுமில்லை.

ஏடுகளில் ஒற்றெழுத்து புள்ளி இல்லாமல் இருக்கும். அதனைக் குறிப்பிட்டேன்.
அப்போது, விளாங்காய்ச் சீர் மறைந்து விளாச்சீர் ஆகிவிடும்.

ஆய்தம்/ஆயுதம் தமிழில் ஒரே பொருளில் வரும். உ-ம்: ஃ எழுத்தின் பெயர்.

NG
 

On Mon, Jun 4, 2018, 12:51 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


2018-06-03 11:46 GMT-07:00 AnnaKannan K <annak...@gmail.com>:
முந்தைய இழையில் பகிரப்பட்ட சில கருத்துகள்:


நளவெண்பாவில் விளாங்காய்ச் சீர் இல்லை. ய என்று ஏடுகளில் இருந்ததை யு என எண்ணி அச்சிட்டிருப்பர்.
இதுபோல், பிழைகள் நேர்தல் இயற்கை.

நா. கணேசன் 


N. Ganesan

unread,
Jun 4, 2018, 9:01:47 AM6/4/18
to Santhavasantham, Hari Krishnan, Periannan Chandrasekaran, Jean-Luc Chevillard
1998-ல் நடந்த விளாங்காய்ச்சீர் விலக்கு பற்றிய இழையை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

பெரி. சந்திரா திருவாசகம் சிவபுராணம் தொடங்கும் வரிகளைக் காட்டியுள்ளார்:
’நமச்சிவாய வாஅழ்க, நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதில் என்னெஞ்சில் நீங்காதான்தாள் வாழ்க’

கலிவெண்பாவில் ஒரே விதிவிலக்காக இருப்பது ’நமச்சிவாய’ என்று ஹரிகி எழுதியுள்ளார்.

என் கேள்வி:
’நம சிவய’ என்பது பஞ்சாட்சரம்/ஐந்தெழுத்து. சிவபுராணத்தில் 2-ஆம் அடி இமைப்பொழுதும்
என்று தொடங்குகிறது. எனவே, முதல் அடி நமச்சிவய என்று தொடங்கியிருக்குமோ?

இதற்கு விடை: இருக்கும் திருவாசகச் சுவடிகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.
நமச்சிவய என்றும் பாடமோ? சிவபுராணத்தில்.

NG

Pas Pasupathy

unread,
Jun 4, 2018, 5:29:17 PM6/4/18
to Santhavasantham
விளாங்காய்ச் சீர் பற்றி மேலும் எழுதவேண்டிய அவசியம் இருப்பது போல் தெரிகிறது.

மேலும் சில விவரங்கள்: ( சில மாதங்களுக்குமுன் என் நூலின் இரண்டாம் பதிப்பை எழுதத் தொடங்கினேன்.  வேறு வேலைகள் காரணமாகச் சிறிது தடங்கல்.  மேலும்  பல குறிப்புகள் எழுத வேண்டும். இருப்பினும், இங்கே சில கேள்விகள் எழுந்ததால்  விளாங்காய்ச் சீர் பற்றி  அங்கே சேர்த்திருக்கும் சில குறிப்புகளை இங்கிடுகிறேன்) 

1) சில பழமிலக்கிய வெண்பாக்களில் ‘விளாங்காய்ச்’சீர் இருக்கலாம். 
ஓர் உதாரணம்;
யா.கலத்தில் ஒரு வெண்பாவில் விளாங்காய்ச் சீர் உள்ளது.   
தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது
 பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள்
 நாற்கதி சாதி கிழமைதான் நன்கமையப்
 பாற்படுக்க பானான்கின் டால்.’

 காலப் போக்கில் ஓசை தொடர்புள்ள பல பரிந்துரைகள்  எழுந்தன போல் இதைப்பற்றியும் பிற்காலத்தில் புரிதல் தெளிவானது என்று கொள்ளலாம். ( இன்னொரு காட்டு: கட்டளைக் கலித்துறை பற்றிய இலக்கணத்திலும்,    இலக்கண நூல்களில் பெரும்பாலும் எழுதப்படாத,  ஓசை தொடர்புள்ள  பரிந்துரைகள் பிற்காலத்தில் எழுந்தன.   ) 


2) என் நூலில் ப.194 -இல் இதைப் பற்றி   இன்னும் ஒரு குறிப்பும் உள்ளது.  

“ 

இந்தப் பாவில் வரும் ' மந்தமாருதம்' 'இலங்குசாமரை' என்ற சீர்களை நாம் மூவசைச் சீர்கள் (விளாங்கனிச் சீர்கள்) என்று கொள்ளலாம். ஆனால், பழம் இலக்கண நூல்களில், இவற்றை 'மந்-த-மா-ருதம்' ( தேமாந்தண்ணிழல்) , 'இலங்-கு-சா-மரை'

( புளிமாந்தண்ணிழல்) என்று நான்கசைச் சீர்களாக அலகிட்டிருப்பதைப் படிக்கலாம். இதனால், விளாங்காய்ச் சீர்கள் உண்மையில் நான்கசைச் சீர்களே என்பதும், அவற்றை ஏன் வெண்பா போன்ற சில கவிதைகளில் தவிர்க்க வேண்டுமென்று சொல்கிறார்கள் என்பதும் இந்த உதாரணத்தால் விளங்கும் ’

இதைப் பற்றி இருக்கும் யா.கலப் பக்கம் :

http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?pno=68&bookid=3  

தி.வே.கோபால ஐயரின் “இலக்கணப் பேரகராதி” யிலும் மேற்கண்டவை போன்ற குறிப்புகள் இருப்பதைப் படிக்கலாம். இவை நேர்பு, நிரைபு போன்றவற்றின் தொடர்பில் எழுந்த சிந்தனைகள். 

3)   இத்தகைய சிந்தனைகள் , பல மாற்றங்களுக்குப் பின்,  பிற்காலத்தில்,  ”குறில்-நெடில் “ உண்டாக்கும் ஓசையைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலாக மாறி,  “விளாங்காய்ச் சீர்” பற்றிய பரிந்துரையாய் மலர்ந்திருக்க வேண்டும்.  தமிழறிஞர்களும், கவிஞர்களும் ஆன மூவர் இதைப் பற்றித் தெளிவாக எழுதியிருக்கிறார்கள்.

 3.1 
ஒருவர் ‘வாகீச கலாநிதி’ கி.வா.ஜ. அவர் எழுதிய கேள்வி-பதில் எல்லோரும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கி.வா..வின்கவி பாடலாம்என்ற நூலிலிருந்து ஒரு கேள்வி-பதில்:
கே: வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைபூங்

     கால்பற்றிற் காண்போம் கதி.

    இந்த வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?

பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது தவறு. 


3.2

இரண்டாம் மேற்கோள்:


’இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகனின் ஒரு “கேள்வி-பதில்” 


கே: வெண்பாவில் வீடுபேற்றை, கேட்கமாட்டேன் என்பன போன்ற விளாங்காய்ச் சீர் வரலாமா?

பதில்: வெண்பாவில் என்ன? எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத் தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய ஓசையைக் கெடுத்துவிடும்.

 

வாய்க்குவாய்த்த சொல்லிலான மாலைபோலச் செய்யுளாக்கித்

தாய்க்குநீங்கள் ஆற்றலாமோ தாழ்வு?

 

இது விளாங்காய்ச் சீர்களால் ஆன வெண்பா. இதில் வெண்டளை, எதுகை, மோனைகள் எல்லாம் குறைவின்றியே இருக்கின்றன. ஆனால் வெண்பாவுக்குரிய செப்பலோசை இருக்கிறதா? எனவே, தவிர்க்க முடியாத இடங்களில் விளாங்காய்ச் சீர்கள் அருகி வரலாம் என்க. 

3.3 
மூன்றாவது நூலிலிருந்து ஒரு மேற்கோள்:

பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து :

வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையிற் குறினெடிலிணைந்த நிரையசையுடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத்தகுவனுமான ‘தம்பிரானே’ என்பதுபோன்ற கூவிளங்காயும் , ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணாவெனவும், வரின் ஓசைநயங் கெடுமெனவு மறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கு மிந்நியாயங் கொள்க” 

 பசுபதி 
4-06-2018 

N. Ganesan

unread,
Jun 4, 2018, 6:05:05 PM6/4/18
to Santhavasantham

புலவர் குழந்தையின் பரிந்துரை:

வெண்பாவைப் பாட விரும்புவோர் ஈங்குநள
வெண்பாவைச் சால விருப்புடனே -- பண்பாகப்
பன்முறையும் நன்கு படித்தாற் சிறந்தவெண்பா
நன்முறையிற் பாடிவிடும் நா.

2009/7/23 veNbA virumbi <mvms...@gmail.com>:

- hide quoted text -

> நேயர்களுக்கு வணக்கம்.  வெண்பாச் சிறப்புப் பற்றிய பரிந்துரைகள்
> தோற்றுவித்த பாடலொன்றை இங்குக் கொடுக்கிறேன்.  பிழை பொறுக்கவும்; நன்றி.
> ***********
> ***********
> (வெண்பா)
>
> எதுகையொடு மோனை இடந்தேர்ந் தமைத்தல்
> மதுரமலி ஈற்றடி வைத்தல் - பொதுவில்
> வகையுளிக்கோ தின்றி வரைதல் விளாங்காய்
> வகையொதுக்கல் ஆன்றோர் வகுத்த - வகைமதித்துக்
> கண்போற் றளைநெறி காத்தலந்தச் சீர்பொருந்தல்
> வெண்பாக் களிக்கு மெருகு.
> **********
> **********
>
> On Jul 22, 12:59 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
>> *வெண்பாச் சிறப்புக்கு: * ( இலந்தை சில வருடங்களுக்கு முன் மன்ற மையத்தில்
>> இட்டது)
>>
>> 1. சீரான எதுகை
>> 2 . ஒன்றாம் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே மோனை(பொழிப்பு மோனை)
>> 3. தளை தட்டாமை
>> 4 அழகான ஈற்றடி
>> 5. செப்பமான ஈற்றுச் சீர்(காசு, நாள் பிறப்பு ,மலர்)
>>
>> ஓசை ஓசைப்படாமல் வந்து உட்கார்ந்து கொள்ளும்
>> ============
>> இத்துடன் ,
>> 6. விளாங்காய்ச் சீர்களைத் தவிர்த்தல்
>> 7. முடிந்தவரை வகையுளியைத் தவிர்த்தல்.
>>
>> சேர்த்துக் கொள்ளலாம்.
>> --
>>
>> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagam
> >
>

--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam



--

Kaviyogi Vedham

unread,
Jun 4, 2018, 7:52:19 PM6/4/18
to santhavasantham
இந்த விளாங்காய், பனங்காய். பிண்ணாக்குக் காய்.பற்றிய அற்ப விவாதத்தை இனியும் தொடராதீர் என நண்பர் கணேசனை
வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.. வெண்பாச் சீர்களில் இனியும் விளாங்காய் வரக்கூடாது என இலக்கணச்
 சான்றோர் பசுபதியே சொல்லியாயிற்று. அப்புறம் என்ன? 
கேட்க வேண்டியதுதானே??முருங்கைப் பிசின் மாதிரி அன்பர்கள் இழுப்பானேன். ?
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




N. Ganesan

unread,
Jun 4, 2018, 8:25:01 PM6/4/18
to Santhavasantham, Hari Krishnan
நன்றி, பேரா. பசுபதி.

1998-ல் விவாதம் ஃபோரம்ஹப்பில் நடந்தபோது, பேரா. இராம. சுப்பிரமணியன் (பச்சையப்பன் கல்லூரி) ஒரு நூல் இயற்றி அச்சிட்டுள்ளார்.
நூற்பெயர்: கணக்கு வழக்கு: இலக்கிய இலக்கணம்.

Kaṇakku val̲akku : ilakkiya ilakkanam

Author:Irāma Cuppiramaṇiyan̲
Publisher:Cen̲n̲ai : Tirumakaḷ Nilaiyam, 1998.
http://books.dinamalar.com/details.asp?id=13914#
கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்)

விலைரூ.35

ஆசிரியர் : அரிமா.தமிழ்வேள்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: இலக்கியம்


பேராசிரியர்.இராம சுப்பிரமணியன்
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559

தமிழ்நாட்டில் உள்ளோர் வாங்கவோ, இல்லையெனில் நூலகத்தில் பெறவோ முடியும்.
இந்த நூலில் இராம. சுப்பிரமணியன் இதுபற்றி எழுதிய கட்டுரையை ஸ்கான் செய்து சந்தவசந்த உறுப்பினர் அனுப்ப வேண்டுகிறேன்.
எல்லோருக்கும் பயன்படும். நன்றி.

விளாங்காய்ச் சீர் வெண்பாவில் விலக்கினால் சிறப்பு என்ற இலக்கணம்
எழுதியுள்ள முதல்நூல் இதுவாகலாம். 

அன்புடன்,
நா. கணேசன்
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.

RAJAGOPALAN APPAN

unread,
Jun 4, 2018, 9:03:45 PM6/4/18
to santhav...@googlegroups.com
இலங்குதாமரை, மந்தமாருதம் இரண்டுமே இரண்டு சொற்கள் ஒரே சீராகப் பயின்று வந்தவை. சொற்கள் தனித்து ஒலிக்க ப்படும்போது, கு,தா மற்றும் த,மா இயற்கை யாகவே பிரிந்து ஒலிப்பதால்  அவை நிழற்சீர்களாக அலகிடப் பட்டிருக்கலாமல்லவா?
அ.ரா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 5, 2018, 12:42:55 AM6/5/18
to Santhavasantham, Hari Krishnan
விளாங்காய்ச்சீர் பாவில் விளங்காச்சீ ரென்று
விளக்கிய வித்தகரைப் போற்று 

நா. கணேசன்
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 5, 2018, 1:11:10 AM6/5/18
to Santhavasantham
On Wednesday, January 21, 2015 at 6:40:49 AM UTC-8, pbalakrishnan1 wrote:
இறைவன் மேல் நிந்தாஸ்துதியில் பாடப்படும் பாடல்களில் நகைச்சுவையைக் காணலாம். புள்ளிருக்கு 
வேளூர்-வைத்தீஸ்வரன் கோயில் வைத்திய நாதன் மேல் காளமேகப் புலவர் பாடிய ஒரு பாடல்:

வாதக்கா லாம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரர்க்கு - ஓதக்கேள்
வந்த நோய் தீர்க்க வகையறியான் வைத்ய நாதன்
எந்த நோய் தீர்த்தான் இவன்?
- அரிமா இளங்கண்ணன்

பேரை மாற்றுவதால் விளாங்காய்ச்சீர் உற்பத்தி.

 காளமேகம் பாடியவாறு, ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழின்பம் நூலில் பாக்கலாம்:

தமிழ்நாட்டிலுள்ள   சிறந்த  திருக்கோவில்களுள் ஒன்று வைத்தீசுரன்
கோவில்.   புள்ளிருக்கு   வேளூர்   என்பது   அதன்  பழம்  பெயர்.
அங்குள்ள   ஈசன்   வைத்தியநாதன்.   மருத்துவருளெல்லாம்   பெரிய
மருத்துவன்;    வன்பிணியையும்    தீர்க்க    வல்லவன்.    “பிரிவிலா
அடியார்க்கு   என்றம்  தீரா  நோய்  தீர்த்தருள   வல்லான்”   என்று
திருநாவுக்கரசர்  அப்  பொருமானைப்  பாடினார்.   பிறவி   யென்னும்
பெரும்பிணிக்கு  ஏதுவாகிய  “இருள்   சேர்   இருவினையும்” துடைக்க
வல்ல  வைத்தியநாதனை  ‘வினை  தீர்த்தான்’   என்று  பொது மக்கள்
போற்று    வாராயினர்.   ‘வினை   தீர்த்தான்’    என்ற    பெயரைக்
கேள்வியுற்றார்  வசைபாடும்  திறம்  வாய்ந்த  ஒரு   கவிஞர்,  உடனே
புறப்பட்டது வசைப் பாட்டு.

“வாதக்கா லாம்தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரற்கு - மாதரையில்
வந்தவினை தீர்க்க வகையறியான் வேளூரான்
எந்தவினை தீர்த்தான் இவன்!”

என்று   கவிஞர்  பாடிய  பாட்டையும்  வஞ்சப்  புகழ்ச்சியாக நெஞ்சார
ஏற்றுக்கொண்டு  வைத்தீசுரன்  கோவிலில்   வாழ்கின்றார்  செஞ்சடைக்
கடவுள்.

N. Ganesan

unread,
Jun 5, 2018, 1:11:57 AM6/5/18
to Santhavasantham
http://indusladies.com/community/threads/என்-கவிதை-முயற்சிகள்.176979/page-27
மீட்டிடப் போதுமான: மடக்கணி
(நேரிசை வெண்பா)

மீட்டிட வந்தனள் வீணையை! என்னைநீ
மீட்டிட வந்தாயோ வேலவா! - மீட்டிடப்
போதுமான காசில்லாப் பொன்னணி போலவென்
போதுமான தேமூழ்கிப் போய்!

விளக்கம்
மீட்டிட என்ற சொல்லின் பொருள் முறையே:
இசைத்திட, காப்பாற்ற, அடகு வைத்ததைத் திருப்ப.

போதுமான என்ற சொல்லின் பொருள் முறையே:
தேவையான அளவு; பொழுதும் ஆனதே!

குறிப்பு:
போதுமான என்ற சீர் விளாங்காய்ச் சீராகி ஓசை குறைப்பினும்,
மடக்குப் பொருளாக வருவதால் அதை அங்ஙனம் அமைத்தேன்.

--ரமணி, 29/01/2016

*****
 


Pas Pasupathy

unread,
Jun 5, 2018, 8:26:57 AM6/5/18
to Santhavasantham
ஆம். இது பழைய முறை. மேலும் நேர்பு, நிரைபு என்றெல்லாம் பார்ப்பர். ‘ஆறுமுகம்’ என்றால் ‘நேர்புநிரை’ என்று அலகிடுவர். குறிலிணை வந்தாலும்  அனந்-த-சதுட்-டயம்  என்று அலகிட்டனர் என்கிறது யா.கலம்

இப்போது சீரை நாம் அலகிடும் முறையே வேறு . ( அனந்-தச-டுட் -டயம் என்றுதான் அலகிடுவோம். ஆ-றுமு-கம் = நேர் நிரை நேர் என்போம்.) சீரில் ஒரு சொல்லா, இரு சொற்களா என்பதைப் பார்ப்பதில்லை. 

பிற்காலத்தில், ஒரு சீரில்  கண்ணதாசன் போல் இரு சொற்கள் வந்தாலும்,   ஒரே சொல்தான் (தம்பிரானே, ஆற்றலாமோ) வந்தாலும் , குறில்-நெடில் நடுவில் வந்தால், ”இரு சொற்கள் போல்”    பிரிந்து, ஒலித்துக் கொடுக்கும் ஓசைப் பிரச்சினையை உணர்ந்தனர்.  

அந்தப் புரிதலைத்தான் கி.வா.ஜ, இரா.திருமுருகன், பாம்பன் சுவாமிகள் எழுதியுள்ளனர். 
கி.வா.ஜ வின் கேள்வி-பதில் ‘மஞ்சரி’யில் 60-களில் வந்தது என்று நினைக்கிறேன். இலந்தை அங்கேதான் கி.வா.ஜ வின் “ கவி பாடலாம்” கட்டுரைகளைப் படித்ததாகச் சொல்லியிருக்கிறார்.  


2018-06-04 21:03 GMT-04:00 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
இலங்குதாமரை, மந்தமாருதம் இரண்டுமே இரண்டு சொற்கள் ஒரே சீராகப் பயின்று வந்தவை. சொற்கள் தனித்து ஒலிக்க ப்படும்போது, கு,தா மற்றும் த,மா இயற்கை யாகவே பிரிந்து ஒலிப்பதால்  அவை நிழற்சீர்களாக அலகிடப் பட்டிருக்கலாமல்லவா?
அ.ரா.


N. Ganesan

unread,
Jun 5, 2018, 9:14:40 AM6/5/18
to சந்தவசந்தம்


On Monday, June 4, 2018 at 2:29:17 PM UTC-7, பசுபதி wrote:
விளாங்காய்ச் சீர் பற்றி மேலும் எழுதவேண்டிய அவசியம் இருப்பது போல் தெரிகிறது.

மேலும் சில விவரங்கள்: ( சில மாதங்களுக்குமுன் என் நூலின் இரண்டாம் பதிப்பை எழுதத் தொடங்கினேன்.  வேறு வேலைகள் காரணமாகச் சிறிது தடங்கல்.  மேலும்  பல குறிப்புகள் எழுத வேண்டும். இருப்பினும், இங்கே சில கேள்விகள் எழுந்ததால்  விளாங்காய்ச் சீர் பற்றி  அங்கே சேர்த்திருக்கும் சில குறிப்புகளை இங்கிடுகிறேன்) 

1) சில பழமிலக்கிய வெண்பாக்களில் ‘விளாங்காய்ச்’சீர் இருக்கலாம். 
ஓர் உதாரணம்;
யா.கலத்தில் ஒரு வெண்பாவில் விளாங்காய்ச் சீர் உள்ளது.   
தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது
 பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள்
 நாற்கதி சாதி கிழமைதான் நன்கமையப்
 பாற்படுக்க பானான்கின் டால்.’

"துணைராசி” என்ற பாடமும் இவ்வெண்பாவுக்கு ஏடுகளில் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 5, 2018, 9:24:31 AM6/5/18
to Santhavasantham, Ramamoorthy Ramachandran, SUBBAIER RAMASAMI

On Monday, June 4, 2018 at 2:29:17 PM UTC-7, பசுபதி wrote:
விளாங்காய்ச் சீர் பற்றி மேலும் எழுதவேண்டிய அவசியம் இருப்பது போல் தெரிகிறது.

மேலும் சில விவரங்கள்: ( சில மாதங்களுக்குமுன் என் நூலின் இரண்டாம் பதிப்பை எழுதத் தொடங்கினேன்.  வேறு வேலைகள் காரணமாகச் சிறிது தடங்கல்.  மேலும்  பல குறிப்புகள் எழுத வேண்டும். இருப்பினும், இங்கே சில கேள்விகள் எழுந்ததால்  விளாங்காய்ச் சீர் பற்றி  அங்கே சேர்த்திருக்கும் சில குறிப்புகளை இங்கிடுகிறேன்) 

1) சில பழமிலக்கிய வெண்பாக்களில் ‘விளாங்காய்ச்’சீர் இருக்கலாம். 
ஓர் உதாரணம்;
யா.கலத்தில் ஒரு வெண்பாவில் விளாங்காய்ச் சீர் உள்ளது.   
தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது
 பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள்
 நாற்கதி சாதி கிழமைதான் நன்கமையப்
 பாற்படுக்க பானான்கின் டால்.’

"துணைராசி” என்ற பாடமும் இவ்வெண்பாவுக்கு ஏடுகளில் உள்ளதா என்று ஆராய்தல் வேண்டும்.


இந்த வெண்பா ஏட்டில் இருந்து சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளதா?
என் ஐயத்தின் காரணம்: ஈற்றடிக்குப் பொருள் என்ன?

புலவர் ஐயாவோ, மற்றவர்களோ ஈற்றடியின் பொருள், ஏதாவது எழுத்துப்பிழை பற்றி விளக்குங்கள்.
நனிநன்றி.
 

--

N. Ganesan

unread,
Jun 5, 2018, 9:36:04 AM6/5/18
to சந்தவசந்தம்


On Tuesday, June 5, 2018 at 5:26:57 AM UTC-7, பசுபதி wrote:
ஆம். இது பழைய முறை. மேலும் நேர்பு, நிரைபு என்றெல்லாம் பார்ப்பர். ‘ஆறுமுகம்’ என்றால் ‘நேர்புநிரை’ என்று அலகிடுவர். குறிலிணை வந்தாலும்  அனந்-த-சதுட்-டயம்  என்று அலகிட்டனர் என்கிறது யா.கலம்

இப்போது சீரை நாம் அலகிடும் முறையே வேறு . ( அனந்-தச-டுட் -டயம் என்றுதான் அலகிடுவோம். ஆ-றுமு-கம் = நேர் நிரை நேர் என்போம்.) சீரில் ஒரு சொல்லா, இரு சொற்களா என்பதைப் பார்ப்பதில்லை. 

பிற்காலத்தில், ஒரு சீரில்  கண்ணதாசன் போல் இரு சொற்கள் வந்தாலும்,   ஒரே சொல்தான் (தம்பிரானே, ஆற்றலாமோ) வந்தாலும் , குறில்-நெடில் நடுவில் வந்தால், ”இரு சொற்கள் போல்”    பிரிந்து, ஒலித்துக் கொடுக்கும் ஓசைப் பிரச்சினையை உணர்ந்தனர்.  


ஒரு கேள்வி. Prothetic Vowel https://en.wikipedia.org/wiki/Prothesis_(linguistics)    பற்றி.

கம்பர் இராமாயணம் என்ற இருசொற்கள் சேரும்போது, கம்பராமாயணம் என்கிறோம். தக்கை + இராமாயணம், சேரும்போது தக்கைராமாயணம்.

யாப்பருங்கல மேற்கோள் வெண்பாவில் துணை + இராசி = துணைராசி என்றாதல் இயற்கை அல்லவா?
பிற்கால ஏடுகளில் திருத்தப்பட்டதோ? மேலும் அவ்வெண்பா ஈற்றடியும் பொருள் புரியவில்லை.

RAJAGOPALAN APPAN

unread,
Jun 5, 2018, 9:23:19 PM6/5/18
to santhav...@googlegroups.com
துணையிராசி என்று வருவதே சரியாக இருக்கும். ஐ யோடு இகரம் புணரும் போது யகர உடம்படு மெய் தோன்றி, யி ஆகும். பழைய பாடல்களில் இந்த விதி நிச்சயம் கடைப்பிடிக்க ப்பட்டிருக்கும்.
அ.ரா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 6, 2018, 7:29:57 AM6/6/18
to Santhavasantham
2018-06-05 18:23 GMT-07:00 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
துணையிராசி என்று வருவதே சரியாக இருக்கும். ஐ யோடு இகரம் புணரும் போது யகர உடம்படு மெய் தோன்றி, யி ஆகும். பழைய பாடல்களில் இந்த விதி நிச்சயம் கடைப்பிடிக்க ப்பட்டிருக்கும்.
அ.ரா.

என் கேள்வி வேறு. இராமன் என்பதில் இ- என்பது Prothetic Vowel. (இதற்கு தமிழ் இலக்கணத்தில் பெயருண்டா?  https://en.wikipedia.org/wiki/Prothesis_(linguistics)  ).

கம்பர் இராமாயணம் என்ற இருசொற்கள் சேரும்போது, கம்பராமாயணம் என்கிறோம். தக்கை + இராமாயணம், சேரும்போது தக்கைராமாயணம்.

யாப்பருங்கல மேற்கோள் வெண்பாவில் துணை + இராசி = துணைராசி என்றாதல் இயற்கை அல்லவா?
பிற்கால ஏடுகளில் திருத்தப்பட்டதோ? மேலும் அவ்வெண்பா ஈற்றடியும் பொருள் புரியவில்லை.

N. Ganesan

unread,
Jun 8, 2018, 8:22:15 PM6/8/18
to சந்தவசந்தம்

இன்னுமோர் உதாரணம்:

என் ஆசான் பழ.முத்துவீரப்பர் மணிவிழா!

மணிவிழாக் காணுகின்ற முத்துவீ ரப்ப
அணிமலர் கொண்டுன் அடியிணைகள்-வாழ்த்தி
உமையும் சிவனுமாய் வாழ்வும் வளமும்
அமைந்திட வேண்டினேன் நான்

                                     - கடம்பூர் இரமேஷ்

https://kadambooran.wordpress.com/2013/02/27/என்-ஆசான்-பழ-முத்துவீரப்/

விளாங்காய்ச் சீர் விலக்கப்பட்டுள்ளது.

தெரிவு:

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 9, 2018, 8:50:30 AM6/9/18
to Santhavasantham, karanthaijayakumar, kadambu...@gmail.com
விளாங்காய்ச் சீர் வெண்பாக்களில் தவிர்க்கப்படணும் - செப்பலோசைப் பிறழ்ச்சி தவிர்க்க
என மரபுக்கவிஞர்கள் கற்பிக்கும் பாடம் பற்றிப் பார்க்கையில்,
உவேசா விளாங்காய் பற்றி எழுதின பழமையான கதை ஒன்றை
கவிஞர் மதுரபாரதி அண்ணன் (தென்றல் இதழாசிரியர்) எழுதியுள்ளதை
மீண்டும் ஒருமுறை படித்தேன்.  ~NG

உ.வே.சா.வின் விளாங்காய்க் கதை

ஒரு ஆசாமி நிறையச் சம்பாதித்தான். நன்றாகத் தனக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு இல்லாதது ஒன்றே ஒன்றுதான்: தருமகுணம். கடற்கரைக் காக்காய்க்குச் கடலைபொறி போடாத கருமி அவன். 

அந்தக் காலத்தில் வங்கி கிடையாது. இவனிடமோ ஏராளமாகப் பொற்காசுகள். செல்வம் 'பெற்றான் பொருள் வைப்புழி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கும் வங்கியாகிய பசியால் துடிக்கும் வறியவரின் வயிறுபற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதில் நம்பிக்கையில்லை. வயதாகிவிட்டது. ஒரு துணியில் தங்கக் காசுகளை முடிந்து, தன்வீட்டு மண்சுவரில் ஒரு ஓட்டை செய்து, அதில் உள்ளேவைத்துப் பூசிவிட்டான். அவனுக்கு உங்களைப் போல ஒரு நல்ல நண்பன் இருந்தான். அவன் மட்டும் விடாமல் "தர்மம் செய், அதுதான் கடைசி வரையில் உன்னைப் பாதுகாக்கும், உன்னோடு கூடவரும்" என்று சொல்லியபடியே இருப்பான். 

அந்திமக் காலம் வந்தது. நோயிலும் பாயிலும் விழுந்தான் கிழவன். மரணத் தறுவாய். எங்கெங்கோ இருந்த மக்கள் எல்லோரும் வந்து தந்தையின் படுக்கை அருகே நிற்கிறார்கள். அவனது ஆசையை நிறைவேற்றவேண்டுமே. அப்பனுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உபசரிக்கிறார்கள், நச்சரிக்கிறார்கள். 

திடீரென்று கிழவனுக்கு நண்பன் அறம் செய்யச் சொன்னது நினைவுக்கு வந்தது. சாகும்போதாவது தர்மம் செய்யலாமே என்ற எண்ணமும் வந்தது. "சுவருக்குள்ளே பொற்காசு முடிப்பு இருக்கிறது" என்று சொல்லவேண்டும். வாய் அடைத்துவிட்டது. அருகில் நின்ற மகனிடம் கையைப் பொற்கிழி போலக் காண்பித்து, சுவரையும் காண்பித்தான். 

"ஐயோ, அப்பா எதையோ கேட்கிறார். புரிந்துகொண்டு கொடுக்கமுடியாத பாவியாகிவிட்டேனே" என்று நினைத்து ஒரு மகன் கதறினான். இவர் மீண்டும் அதே சைகை காட்டினார். 

"ஆஹா, எனக்குத் தெரிந்துவிட்டது!" ஒரு மகன் கூக்குரலிட்டான். "அவருக்குப் புளிப்பான விளாங்காய் ரொம்பப் பிடிக்கும். அது வேண்டும் என்று கேட்கிறார்" என்றான் ஒருவன். 

"மூன்றாவது வீட்டில் விளாமரம் இருக்கிறது. நான் போய் நிலைமையைச் சொல்லி எப்படியாவது ஒரு காய் வாங்கிக்கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்னொரு மகன் ஓடினான். 

அவன் வருவதற்குள் கிழவனின் உயிர் பிரிந்தது. சுவற்றில் புதைத்த பொன் குடும்பத்தினருக்கோ, ஏழைகளுக்கோ பயன்படாமல் போயிற்று. ஊர்க்காரன் ஒருவன் சொன்னானாம் "இத்தனைத் துட்டு வச்சிக்கிட்டு என்ன பிரயோசனம்? நாலுபேருக்குச் சோறு போட்டிருந்தா வயிறு குளுந்து வாழ்த்துவாங்க. இப்ப ஒண்ணுமில்லாமப் போயிட்டாம் பாரு. இவன்லாம் பொறந்து என்ன புண்ணியம்?" 

இதையும் வள்ளுவன் சொல்கிறான்: 

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் 
தோற்றம் நிலக்குப் பொறை
 

(நன்றியில் செல்வம்: 1003) 

[சம்பாதிப்பது ஒன்றே குறியாக வாழ்ந்து, (அந்தப் பொருளை ஏழைகளுக்குக் கொடுப்பதனால் வரும்) புகழை விரும்பாத மனிதர் பிறந்ததே உலகத்துக்குப் பாரம்.] 

நன்றி: என் சரித்திரம், எழுதியவர்: உ.வே.சாமிநாதையர், பதிப்பு: டாக்டர் உ.வே.சாமிதையர் நூல் நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090, தமிழ்நாடு, இந்தியா.

ramaNi

unread,
Jun 9, 2018, 9:57:44 AM6/9/18
to சந்தவசந்தம்
உ.வே.சா.வின் விளாங்காய்க் கதைக்கோர் வெண்பா வெழுதத் தோன்றியது.

பொருள்விளங்காப் பூச்சினுள் பொன்விளங்காய் மைந்த
மரவிளாங்காய் வேண்டேன்நான் வாய்விளங்கா நின்றேன்
விளங்காய ஈகை விளங்காமல் போனேன்
விளாம்பூச்சுள் வைத்தேன்பொன் வீண்!

[விளாம்பூச்சு = சித்திரப் பூச்சுவகை]

--ரமணி, 09/06/2018

*****

N. Ganesan

unread,
Jun 9, 2018, 10:01:52 AM6/9/18
to Santhavasantham
இது சீவக சிந்தாமணியில் வரும் கதை என்பதாக நினைவு.

என் சரித்திரத்தில் பார்க்கவேணும்.

இக் குறள் சரியா எனப் பாருங்கள்:
செப்பலோ சைபிறழாச் சீர்வெண்பாப் பாட
விளாங்காய்ச்சீர் தன்னை விலக்கு



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

ramaNi

unread,
Jun 9, 2018, 10:12:40 AM6/9/18
to சந்தவசந்தம்
சரியாக உள்ளது. என் பாக்கள் சரிபார்க்க நான் அவலோகிதம் பயன்படுத்துகிறேன். 

வங்கிப் பணியில் கணிணி நிரல்கள் பற்பல எழுதியதால் கவிதையின் syntax checking செய்ய, அவலோதகம் compiler ஆக உதவுகிறது!
ரமணி

Kaviyogi Vedham

unread,
Jun 9, 2018, 11:52:28 AM6/9/18
to santhavasantham
avalokithaththukku Nanri Ramani!,
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




ramaNi

unread,
Jun 9, 2018, 11:59:17 AM6/9/18
to சந்தவசந்தம்
மகிழ்ச்சி, யோகியாரே, எனக்கது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதை அமைத்த Virtual Vinodh போற்றற்குரியவர்.
ரமணி

N. Ganesan

unread,
Jun 10, 2018, 12:47:55 AM6/10/18
to Santhavasantham, uma...@yahoo.com
2018-06-09 6:57 GMT-07:00 ramaNi <sai...@gmail.com>:
உ.வே.சா.வின் விளாங்காய்க் கதைக்கோர் வெண்பா வெழுதத் தோன்றியது.

பொருள்விளங்காப் பூச்சினுள் பொன்விளங்காய் மைந்த
மரவிளாங்காய் வேண்டேன்நான் வாய்விளங்கா நின்றேன்
விளங்காய ஈகை விளங்காமல் போனேன்
விளாம்பூச்சுள் வைத்தேன்பொன் வீண்!

[விளாம்பூச்சு = சித்திரப் பூச்சுவகை]

--ரமணி, 09/06/2018

*****

இக்கதை நாலடியிலும், சிந்தாமணியிலும் பயிலுகிறது. சமணர்கள் வாழ்க்கை முடிவில் ஈட்டியதைப் பிறர்க்கு அளித்துத் துறவு மேற்கொள்வர்.
வாழ்க்கை நிலையாமையை வலியுறுத்தும் கதை.

கிவாஜவும் எழுதியிருக்கிறார் இக் கதையை. எந்த நூல் என்று யாருக்காவது நினைவிருக்கிறதா?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 10, 2018, 1:07:01 AM6/10/18
to Santhavasantham, uma...@yahoo.com
கிவாஜ “என் சரித்திரம்” அச்சிடுங்கால் இதனைக் கவனிக்கவில்லை போலும்:
பொன்னும் புளிவிளாங்காயாம்.”

------

’பொன்னும் புளிவிளங்கா யாம்’ - நாலடியார்

N. Ganesan

unread,
Jun 10, 2018, 8:58:17 AM6/10/18
to சந்தவசந்தம்


On Saturday, June 9, 2018 at 10:07:01 PM UTC-7, N. Ganesan wrote:
கிவாஜ “என் சரித்திரம்” அச்சிடுங்கால் இதனைக் கவனிக்கவில்லை போலும்:
பொன்னும் புளிவிளாங்காயாம்.”


இதில் பார்த்தால், ‘என் சரித்திரம்’ அச்சீட்டில் ஏற்பட்ட கவனப் பிசகு என்பது வெள்ளிடைமலை.

அதுபோலவே, 
‘நமச்சிவாய வாஅழ்க’, ‘வச்சிராயு தன்’, ‘துணையிராசி’ என்னும் மூன்றும் முறையே
‘நமச்சிவய வாஅழ்க’, வச்சிராய் தன்’, ‘துணைராசி’ என்பவற்றைக் கவனப்பிசகாக நேர்ந்த பிழைகள்
என்பது அடியேன் கருத்து ஆகும். ஏட்டில் இருந்து அச்சுக்கு வரும்போது இவை நிகழப் பல வாய்ப்புகள்.
ஏடுபெயர்ப்போரும் அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 19, 2018, 9:47:32 AM6/19/18
to Santhavasantham
க. வச்சிரவேல் முதலியார், பி.ஏ., எல்.டி., எழுதிய உரை

சைவத் திருமுறைகளில் உள்ள வெண்பாக்களில் - நேரிசை, இன்னிசை - எங்கும்
விளாங்காய்ச் சீர் இல்லை.

உ-ம்: திருவருட்பயன் ஆராய்க.

-------------------

“என் சரித்திரம்” நூலில் 
”புளிவிளாங்கா யாம்” என்றிருப்பது கவனப் பிசகால் நேர்ந்த அச்சுப்பிழை.
ஐயரவர்களிடம் கேட்டு எழுதினோர் செய்த பிழை.
நாலடியார் அச்சுநூல்களில் “புளிவிளங்கா யாம்” என்றுதான் உள்ளது.


கிவாஜ “என் சரித்திரம்” அச்சிடுங்கால் இதனைக் கவனிக்கவில்லை போலும்:
பொன்னும் புளிவிளாங்காயாம்.”


இதில் பார்த்தால், ‘என் சரித்திரம்’ அச்சீட்டில் ஏற்பட்ட கவனப் பிசகு என்பது வெள்ளிடைமலை.

அதுபோலவே, 
‘நமச்சிவாய வாஅழ்க’, ‘வச்சிராயு தன்’, ‘துணையிராசி’ என்னும் மூன்றும் முறையே
‘நமச்சிவய வாஅழ்க’, வச்சிராய் தன்’, ‘துணைராசி’ என்பவற்றைக் கவனப்பிசகாக நேர்ந்த பிழைகள்
என்பது அடியேன் கருத்து ஆகும். ஏட்டில் இருந்து அச்சுக்கு வரும்போது இவை நிகழப் பல வாய்ப்புகள்.
ஏடுபெயர்ப்போரும் அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jun 19, 2018, 11:43:32 PM6/19/18
to Santhavasantham
வெண்பாவில் விளாங்காய்ச் சீர் வராது என இளம்பூரண அடிகளும், அவரைத் தொடர்ந்து பரிமேலழகரும் நுட்பமாக எழுதியதை விளக்கிய பேரா. இராம. சுப்பிரமணியன் எழுத்தைப் படிக்க ஆவல்கொண்டேன். அவருடன் பணியாற்றிய பேரா. ரா. சீனிவாசன், திருக்குறளில் வரும் செய்திகளை, குறள் வெண்பாக்களைத் தராமலே உரைநடையில் விளக்கியுள்ளார். அதற்கு இராம. சுப்பிரமணியன் எழுதிய நூன்முகம். ரா.சீ. நூல் இங்கே:

NG





Reply all
Reply to author
Forward
0 new messages