Re: வாட்ஸ்ஆப்பில் வந்தவுரு

237 views
Skip to first unread message

Rajja Gopalan

unread,
Jun 10, 2022, 3:35:17 PM6/10/22
to சந்தவசந்தம்
image0.jpeg

Rajja Gopalan

unread,
Jun 10, 2022, 3:38:18 PM6/10/22
to Santhavasanthsm சந்தவசந்தம்

image0.jpeg


எந்த னிட ரந்து விழ

உந்து வினைப் பந்து விட

வந்த ருளுஞ் சிந்தை யுக - வருவாயே!


நந்தி சிவ பிந்து என

எந்தன் முடி வந்து பதி

சுந்த ரிசி வந்த பதந் -தருவாயே!


இந்து மதி யுந்துஞ் சுக

சிந்து நிதி கந்த குஹ

நந்தி மகன் தந்த பர - சிவமாயே


அந்த மற எந்த னுயி்ர்ச்

சந்த மென வந்துன் மடி

இந்த நொடி தந்து விடு - அருட்தாயே


மீரா








image0.jpeg


முனிவருந் தேவரும் முகிழறம் மேவிடும்
பனிவிழும் பூமரம் பரவச மாகிடும்
தனியுறும் யோகியர் தவமிருந் தூறிடும்
கனிவுறும் யாவரின் கவலைகள் ஓடிடும்

உத்தர கண்ட உயர்மலைச் சீதளம்
பத்ரி நாதரின் பதமருள் ஆலயம்
முத்தியை அருளும் முதலிப் பூதலம்
நித்தியந் தொழுது நிறைவுறு மனமே!

ஹர ஹர சிவசிவ ஹரிநா ராயண
ஹரிஹர னெனவருள் புரிநா ராயண
ஹரிநா ராயண ஹரசிவ சிவயென
ஹரிஹர வடிவினைத் தினம்முனி மனமே!

மீ. ரா

Rajja Gopalan

unread,
Jun 10, 2022, 5:39:18 PM6/10/22
to Santhavasanthsm சந்தவசந்தம்

எந்த னிட ரந்து விழ
உந்து வினைப் பந்து விட
வந்த ருளுஞ் சிந்தை யுக - வருவாயே!

நந்தி சிவ பிந்து என
எந்தன் முடி வந்து பதி
சுந்த ரிசி வந்த பதந் -தருவாயே!

இந்து மதி யுந்துஞ் சுக
சிந்து நிதி கந்த குஹ
நந்தி மகன் தந்த பர - சிவமாயே

அந்த மற எந்த னுயி்ர்ச்
சந்த மென வந்துன் மடி
இந்த நொடி தந்து விடு - அருட்தாயே

மீ. ரா

எந்தன் இடர் அந்து விழ (for my troubles to cut asunder) உந்து வினைப் பந்து விட (the triggering ball of karma-phala to fade  away) வந்து அருளும் சிந்தை உக வருவாயே (may you come with the intent-mind  to bestow grace ! - may you come)

நந்தி சிவ பிந்து என (as the indwelling Bhindu of Shiva),  எந்தன் முடி வந்து பதி (May you come and set foot on my head), சுந்தரி சிவந்த பதந் -தருவாயே! (O Sundari, give Your red  feet!)

இந்து மதி யுந்துஞ் (Yoi are endowed with the crescent moon) சுக சிந்து நிதி (You are the ocean of joy, treasure),  கந்த குஹ
நந்தி மகன் தந்த  (who gave Lord Muruga and Lord Ganesha), பர - சிவமாயே (O, the Suprene Maya)

அந்த மற (by ending the end, making eternal) எந்தனுயி்ர்ச் சந்தமென  (as  the song of my soul),  வந்துன்மடி இந்த நொடி தந்து விடு - (come and give refuge in your lap, this very moment t) - அருட்தாயே (O graceful Mother)

Approximate meaning.  🙏

Sent from my iPhone

On 10 Jun 2022, at 20:38, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Jun 15, 2022, 1:57:42 PM6/15/22
to Santhavasanthsm சந்தவசந்தம்
image0.jpeg

🙏
நின்றாளும் எந்தை நித்தியமே நமஸ்காரம்!
கன்றாக யானுந்தன் காலடியில் நமஸ்காரம்!
சாய்ந்த தலையிலருட் சாகரமே நமஸ்காரம்!
சந்திரனாய் உந்தன்முகம் சங்கரரே நமஸ்காரம்!
மாடியிலே வந்ததநிலா! மாதவனே நமஸ்காரம்!
மல்லிகையாய்ப் புன்னகைக்கும் மன்னவனே நமஸ்காரம்!
காஞ்சி மஹாமாமுனியே! கற்பகமே நமஸ்காரம் !
கண்ணெதிரில் பரமாத்மா! காலடியில் நமஸ்காரம்!

மீ. ரா
15.6.2022

Sent from my iPhone

On 10 Jun 2022, at 22:39, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Jun 18, 2022, 3:25:28 PM6/18/22
to Santhavasanthsm சந்தவசந்தம்
image0.jpeg


                             


வட்டத்தினில்  சொட்டும்மதி யெனக்

கிட்டத்தரக் கொட்டும்நிதி யுனை

முட்டத்திரு விட்டத்தமிழருள்  அமுதாக


இட்டப்படிக் கட்டுப்பட மனஞ்

 சட்டப்படி  வொட்டும்நின தருள்

 எட்டத்தகு நிட்டைதரவரும் - அறிவாகத்


திட்டப்படி  வெட்டுஞ்சுடு வினைக்

கொட்டம்பொடி பட்டுன்அடி மலர்

 நட்டென்மதி மொட்டுமினி - மலராக


வெட்டத்திசை எட்டுங்கடந் தொளி

கொட்டுஞ்சிவ னிட்டத்துணை மணிச்

சிட்டென்னுமை சத்சித் சுகமருள் - தருவாயே!

                         

                                மீ்ரா

                           18.6.2022

            

          

Rajja Gopalan

unread,
Jul 15, 2022, 6:32:22 AM7/15/22
to Santhavasanthsm சந்தவசந்தம்



அருவாம் பரசிவ அமுதடை யாளம்
அனுபவ சித்சுகம் அருளிட லாகும்
திருவா னைக்கா திகழருட் தெய்வம்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

காவிரி கொள்ளிடக் காவலில் மலரும்
பூவிரிக் கும்முகப் பொன்னொளி மிளிரும்
ஸ்ரீநிதி சின்மயி சேயெனக் கருளும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

நாவலின் மரநிழல் நமசிவப் படிவம்
நதியடி பணிவுற நனைவுறு வடிவம்
காவினில் தொழுதுல காள்கிற பருவம்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

காதணி தாடங்க மாயருள் வீசும்
கண்மலர் ஓரம் கனிவருள் பூசும்
தீதழித் தாளவள் திருவடி பேசும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

பாப இருட்திரள் பழியற விலகும்
பார்வதி திருக்கரப் பைங்கிளி பழகும்
தீப மணிச்சுடர் தினமருள் புரியும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

மங்கள நாயகி மாதவி பதியும்
பங்கயப் பூவிழிப் பரிவருள் நிதியம்
சங்கரி ஸ்ரீஹரி சோதரி அபயம்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

குங்குமம் சந்தனம் குளிர்த்திரு நீறும்
குறுசித் தாடையில் குலவிளக் காயும்
திங்களின் கிரீடமும் திலகமும் அருளும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

நேர்த்திய நிலைமலர் மாலையும் செண்டும்
நிறையணி கலனணி நிழலருள் கொண்டும்
தீர்த்தமுந் தலமுமுன் திருவடி என்றும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

அம்மா அகிலாண் டேஸ்வரி எனவுன்
அடியவ ராகியர் அனுதினம் புகலும்
செம்மா மணியே சிவமே சரணம்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!
தினமுன தடிமலரந் திடவருள் தரவும்
திருக்கரிக் காஜக தீஸ்வரி சரணம்!

மீ. ரா
15-7-2022
image0.jpeg

Rajja Gopalan

unread,
Jul 25, 2022, 12:13:04 AM7/25/22
to Santhavasanthsm சந்தவசந்தம்


image.png

Rajja Gopalan

unread,
Jul 26, 2022, 12:53:07 AM7/26/22
to Santhavasanthsm சந்தவசந்தம்




குருவருள் தரவர வேண்டும்
குறையற இனிதுற வேண்டும்
ஸத்குரு ஸாயி ப்ரஹாஸா
சித்சுக மாகிய - ஷீர்டி நிவாஸா (குரு)

பூமியில் இருளற வந்தாய் - அருட்
தூமியில் ஓளியினைத் தந்தாய்
ஸ்வாமியின் சீரடி என்பால் - தரும்
சந்நிதி ஸாயி - ஷீர்டி நிவாஸா (குரு)

நானெனும் ஆணவம் தேய - கொடு
நமபயம் ஆனவை போக
தீனனென் பாலருள் ஏக - அருட்
தேன்மழை ஸாயி - ஷீர்டி நிவாஸா (குரு)

மீ. ரா
25-7-2022

Rajja Gopalan

unread,
Jul 26, 2022, 12:54:51 AM7/26/22
to Santhavasanthsm சந்தவசந்தம்


அஞ்சுவ தெதற்கு?
நெஞ்சில் அமர்த்து!
அன்னை பவானி
முன்னில் நிலைத்து
பஞ்சவி காரப்
பளுவை விடுத்துக்
கொஞ்சும் கோமதி
கோலம் தொடுத்துச்
செஞ்சுடர் முகத்துச்
சீரை எடுத்துச்
சீரடியில் தலை
சேர அணைத்து
அஞ்சுகமே என
அன்பில் அழைத்து
அனுதினம் கூவு!
அருமறைச் சாறு!
ஜய் ஜய் பவானி
ஜய் ஜய் பவானி
ஜய் ஜய் பவானி
ஜய் ஜய் பவானி!

மீ. ரா
26-7-2022

*துல்ஜாபுர் ஶ்ரீ பவானி*

பார்வதி₂ பை₄ரவி பா₄ர்க₃வி பை₃ந்த₄வி
பாப விமோசனி பரம ஶிவே!

ப₄வப₄ய நாஶினி ஶிவ மய தோஷனி
பா₄வாபா₄வ ப்ரமாண நிதே₄!

துலஜ புரீஶ்வரி கலஸ குசாம் பு₃ஜ
ஸுதா₄ ப்₄ருதி வர தே லலிதே!

ஜய ஜய ஹே ஶிவகாமி ப₄வானி
தவ சரணம் கதி பாலயமாம்!


மீ. ரா
26-7-2022
image0.jpeg

Rajja Gopalan

unread,
Jul 26, 2022, 4:28:27 AM7/26/22
to Santhavasanthsm சந்தவசந்தம்
image0.jpeg

Rajja Gopalan

unread,
Aug 2, 2022, 12:53:49 AM8/2/22
to Santhavasanthsm சந்தவசந்தம்
image0.jpeg

Anand Ramanujam

unread,
Aug 2, 2022, 1:10:03 AM8/2/22
to santhav...@googlegroups.com
 அமுதம் அதுஎனது வடிவம் எனும்
அறிவும் தரவருளும் குரு”

அஹம் ப்ரம்மாஸ்மி என்னும் வேதாந்த மந்திரத்தை அழகுத் தமிழில் சொல்லுவது போல் அமைந்த அருமையான வரிகள்!
சிறப்பான பாடல்! வாழ்த்துகள்!

- இரா. ஆனந்த்

On Tue, Aug 2, 2022 at 10:23 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/35D3A6A4-C111-4675-99D6-B985CE688F68%40gmail.com.




காலைப் பிடித்தழுவ தறிக - என்
காலைப் பிடித்தழுகும் கொடிய
தோலை உரித்தருள வருக - வெந்
நோயை ஓழித்தருளு மிடுக - ஐய (காலை)

சோலைச் சபரிமலை நாதா!
உன் சுதன்என் னுடனும் ஒரு வாதா?
பாலன் என்பாலன்பு காட்டு! நின்
பரிவில் இடு நற்தாலாட்டு.  (காலை)

அழுகும் உடலருகும் அழியும்!
அதனுள் சுடரொளிர மிளிரும்!
அமுதம் அதுஎனது வடிவம் எனும்
அறிவும் தரவருளும் குருவுன் (காலை)

ஐயா! ஐயப்பா நின்சரணம்
பொய்யா அமுத நிதி வரனும்
செய்யா வினையும் பொடிபடவும்
மெய்யா கியமதியும் தரணும்!  (காலை)

மீ. ரா
2.8.2022

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/35D3A6A4-C111-4675-99D6-B985CE688F68%40gmail.com.

Rajja Gopalan

unread,
Aug 2, 2022, 7:47:28 AM8/2/22
to santhav...@googlegroups.com
Thanks Ananthji, 
Presently being  held in Bangalore  against my return plan to London, as my left got infected and am  still running between pathological labs.

  Ayyan Ayyappan is the solace

Namaskarams 

Sent from my iPhone

On 2 Aug 2022, at 10:40, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



Anand Ramanujam

unread,
Aug 2, 2022, 2:25:02 PM8/2/22
to santhav...@googlegroups.com
Sorry to hear you are unwell. Hope you feel better soon! 

Regards,
Anand

Rajja Gopalan

unread,
Aug 3, 2022, 1:22:55 AM8/3/22
to santhav...@googlegroups.com
Thank you
God bless

Sent from my iPhone

On 2 Aug 2022, at 23:55, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Aug 11, 2022, 5:28:41 AM8/11/22
to santhav...@googlegroups.com


*Vande Mahaa Kaalam*

Kaala kaalam Mahaa Kaalam
Kaarunya kalaadharam |
Kaumaari hrdayaanandam
Kailaasha Nathaam kataaksham |
Paarvathi Naayakam Shivam
Pavithram Kaala Bhairavam |
Namaami Shankaram vandhE
Sarva paapa samrakshanam ||

Mee. Ra
11-8-2022
image.png

Rajja Gopalan

unread,
Aug 12, 2022, 10:59:08 AM8/12/22
to santhav...@googlegroups.com

🙏
*pādāravindam pratamām*
*paramasukham auṣadam |*

*ādhāramūlam abhayam*
*ātmācaitanya śantatam |*

*hrīmkāram hitaprasādam*
*hetum kaivalya sādhanaṃ |*

*śrim śriakhilāndeśvarim*
*smarāmi caraṇam bhaje |*

I meditate upon the Lotus Feet, the foremost of all, the supreme-bliss-endowing, the cure for all grief, the root cause of all, the grace that helps to transcend all fear, the eternal effulgence that shines within, the power embellished in the Seed Mantra ‘Hreem’, all benign-grace-bestowing, the supreme means (to all our goals), the instrument for liberation, the embodiment of all auspiciousness, Sri Akilandeswari, (Her) divine feet I worship!

Mee. Ra
12.8.2002
image.png

Rajja Gopalan

unread,
Aug 13, 2022, 12:29:48 AM8/13/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

சன்னலிலே எட்டிப் பார்த்து

கன்னமிட வட்டம் போட்டு

மின்னுகிற வெள்ளித் தட்டு - 

வண்ண நிலா!

என்னுயிரைக் கட்டிப் போட்ட

எண்ண வுலா!


பொன்னொளியைக் கதிரும் சிந்த

கன்னலதில் குளிரைத் தந்த

சின்னவடி வாகும் பந்து -

வண்ண நிலா - 

என்னுயிருக் குள்ளே வந்த

எண்ண வுலா!


என்னுளணர் வாகும் தேயம்

மின்னலிட மாறும் காயம்

சொன்னகதை யாகும் மாயம்

வண்ண நிலா - 

தன்னுள்வரும் சீவன் ஆகும் 

எண்ண வுலா!


மீ. ரா

13.8.2002

N. Ganesan

unread,
Aug 13, 2022, 12:44:25 AM8/13/22
to சந்தவசந்தம்

அருமை. இது போன்ற காட்சி ஒன்றால் உதித்த வெண்பா, தனிப்பாடல்களைத் தொகுக்க மூல காரணம்.

86 அம்மானையும் வாசித்தமைக்கு நன்றி புலவரையா.

பிச்சைக்காரரில் தொடங்கி தனவந்தர் வரை மனப்பாடமாகச் சொல்லி அநுபவித்த இதுபோன்ற பாடல்களை
முதன்முதலாகத் தொகுத்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்கு நாம் எல்லாம் கடன்பட்டுள்ளோம்.
அவரோடு பழகிய தமிழ்த்தாத்தா ஒரு இரவலரிடமிருந்து பெற்ற வெண்பாவையும், தில்லையம்பூர்க் கவிராயர்
பணியையும் “பிச்சைப் பாட்டு” என்று கட்டுரையில் விவரித்தார்கள்: அக் கட்டுரை பார்ப்போம்,

    பிச்சைப் பாட்டு
    சென்னையில் இப்பொழுதுள்ள இராசதானிக் கல்லூரி (Presidency College) ஆரம்பத்தில் ஒரு சிறு பள்ளிக்கூடமாக இருந்தது. அப்போது மாகாணப் பள்ளிக்கூடம் (Provincial School) என்ற பெயரால் அது வழங்கி வந்தது. அக்காலத்தில் அதில் வெவ்வேறு துறைகளில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்பல அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிற் சிறந்த புகழ்வாய்ந்தவர்களாக விளங்கிய வித்துவான் தாண்டவராய முதலியார் முதலியவர்கள் அதில் தமிழ்ப்பண்டிதர்களாக இருந்தார்கள். அவர்களுள் ஒருவரான விசாகப் பெருமாளையரென்ற வீரசைவ வித்துவான் இலக்கணப் பயிற்சி மிக்கவர். அவர் இயற்றமிழாசிரிய ரென்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். அவருடைய தம்பியராகிய சரவணப் பெருமாளையரும் தமிழ்ப்புலமை மிக்கவர். அவ்விருவரும் சில நூல்களை இயற்றியுள்ளார்; சில பழைய நூல்களைப் பதிப்பித்து மிருக்கின்றனர். அவர்களிடத்திற் பாடங்கேட்ட சிறந்த மாணாக்கர்கள் பலர். தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவர் அவர்களுள் ஒருவராவர்.

    இவர் தமிழ்மொழியிற் பேரன்புடையவர்; சிறந்த நூற்பயிற்சியுள்ளவர். தம் ஆசிரியர் இயற்றிய பஞ்சலக்ஷண வினாவிடை, பாலபோத இலக்கணமாகியவற்றையும், வேறு நூல்க களாகிய நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுர்ரை, தண்டியலங்காரம், வச்சணந்தி மாலை, விஷப்பிரதி விஷத்திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரதநூல் முதலியவற்றையும் ஆராய்ந்து பதிப்பித்திருக்கிறார். இவர் பல மாணக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் வந்தார்; சித்தூர் ஹைஸ்கூலில் பல வருஷங்கள் தமிழாசிரிய‌ராக வேலை பார்த்தார்; திரிசிரபுரம் சி.தியாகராச செட்டியார் ஆறுமாதம் ஓய்வெடுத்துக்கொண்ட காலத்தில் கும்பகோணம் காலேஜிலும் பண்டிதராக இருந்து பாடஞ் சொன்னார்.

    மற்ற வித்துவான்களோடு இவர் மனங்கலந்து பழகிப் பொழுதுபோக்குவார். இவரிடம் பொறாமை யென்பது மருந்துக்கும் இல்லை. பழம் புலவர்களுடைய வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் இவருக்கு மிக்க ஊக்கம் இருந்து வந்தது. எங்கே சென்றாலும், அங்கே வழங்கும் புலவர் வரலாறுகளையும் பழம்பாடல்களையும் கேட்டு இவர் தொகுத்து வந்தார். பலரிடம் வினாவி அவர்கள் எழுதியனுப்பும் தனிச் செய்யுட்களையும் சேர்த்து வந்தார். பழைய பாட்டென்று யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு எழுதிக்கொள்வார். இங்ஙனம் பலவகையாகச் சேர்த்துத் தனிப்பாடற் றிரட்டென்னும் புத்தகத்தை ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு முன் வெளியிட்டார். இக்காலத்தில் பல‌ தனிப்பாடற்றிரட்டுக்கள் உலாவுகின்றன. முதன் முதலில் அத்தகைய நூலை வெளியிட்ட‌ பெருமை சந்திரசேகர கவிராஜ பண்டிதரையே சார்ந்ததாகும்.

    இவர் என்பால் அன்புடையவராக இருந்தார். இவருடைய புத்தகத்திற் சேர்த்துக் கொள்ளும்படி நானும் பல செய்யுட்களை எழுதிஅனுப்பியதுண்டு. அக்காலத்தில் நான் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வந்தேன். இவர் திருவாவடுதுறைக்கு வந்த சமயங்களில் இவரோடு மனமகிழ்ந்து பொழுதுபோக்குவது எனது வழக்கம். என்னுடைய தமிழாசிரியராகிய மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலம் சென்றுவிட்டமையால் பழைய நூல்களில் உள்ள சில சந்தேகங்களை அக்காலத்தில் இவரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். கோபம் சிறிதும் இல்லாமல பொறுமையோடு இவர் பேசுவார்; விஷயங்களை ஆராய்வார்; பிறர் தூஷித்தாலும் கவனியார். தாம் தனிப்பாடல்களைச் சேகரித்த வரலாறுகளைப்பற்றி அவ்வப்போது சொல்வார். அவற்றை அக்காலத்திற்கேட்டபோது எனக்கு அளவிறந்த வியப்பு உண்டாகும். அவர் கூறியவற்றுள் ஒன்றை இப்போது தெரிவிக்கிறேன்.

    சந்திர சேகர கவிராஜ பண்டிதர் சென்னையில் இருந்தபோது வண்ணார் பேட்டையிலுள்ள சஞ்சீவிராயன் தெருவிற் சில வருஷங்கள் வசித்துவந்தார். ஒருநாள் இரவு நிலா நன்றாக எறித்தது. இராப்பிச்சைக்காரன் ஒருவன் வீடுதோறும் சென்று அன்னப்பிச்சை வாங்கிக்கொண்டே வந்தான். அவன் பல ஊர்களைச் சுற்றினவன்; பல செய்யுட்களை அவன் அறிந்திருந்தான். "அம்மா, பிச்சை" என்று மட்டும் சொல்லிப் பிச்சை வாங்காமல், இனிய சாரீரத்தோடு தமிழ்ப்பாடல்களைப் பாடி அன்னங்கேட்பது அவன் வழக்கம்.

    பிச்சைக்காரன் பாடிக்கொண்டே சந்திர சேகர கவிராஜபண்டிதர் இருந்த தெருவழியே வந்தான். அவனுடைய இனிய குரல் வீட்டுக்குள் இருந்தவர்களை வெளியே வரச்செய்தது; பெண்டிர் அவன் பாட்டில் மயங்கி அவனுக்கு மனமுவந்து அன்ன மளித்தனர்.

    தெம்மாங்கு, வெண்ணிலாப்பாட்டு, பராபரக்கண்ணி முதலியவற்றை அவன் பாடுவான். ஒருகண்ணியில் ஓரடியையே திருப்பித்திருப்பிப் பாடுவான். ஒரு தெரு முழுவதற்கும் அந்த ஒரு கண்ணியே அவனுக்குப் போதியதாக இருக்கும். அன்று வீசிய நிலாவொளியில் அவனுடைய ஞாபகம் நிலாவைப்பற்றிய பாட்டொன்றிற் சென்றது.

    "ஊரைச் சுடுமோ"

    என்று அவன் ஆரம்பித்தான். தமிழ்ப்பாட்டாக யார் எதைச் சொன்னாலும் கேட்பதில் ஆவல்கொண்ட கவிராஜபண்டிதரை அந்த ஒலி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருவித்தது. பண்டிதர் பிச்சைக்காரனருகிலே சென்று நின்றார். அவன், "ஊரைச்சுடுமோ" என்னும் தொடரையே பலமுறை நீட்டியும் குறுக்கியும் சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்றான். பண்டிதருக்கோ அந்த நிமிஷத்திலேயே பாட்டு முழுவதையும் அவன் சொல்லிக் கேட்க வேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. அவனாகச் சொல்லட்டு மென்று காத்திருந்தார். "ஊரைச் சுடுமோ" என்பதற்குமேல் ஓரெழுத்துக் கூட அவன் வாயிலிருந்து வரவில்லை.

    அவர் பொறுமையை இழந்தார்; "அந்தப் பாட்டை முழுவதும் சொல்லிவிடப்பா" என்று கேட்டார். பிச்சைக்காரன் தலையெடுத்துப் பார்த்தான்; ஒன்று மில்லாமற் பிச்சை வாங்குவதைவிடச் சில பாட்டுக்களைப் பாடிப் பிச்சை வாங்க வெண்ணித் தான் பாடிவரும் பாட்டை ஒரு பெரியவர் கவனத்தோடு கேட்டு வருகிறாரென்பதை அவன் உணர்ந்தபோது அவனுக்குச் சிறிது கர்வமும் உண்டாயிற்று.

    "இதோ சொல்லுகிறேன்" என்று கூறி மறுபடியும், "ஊரைச் சுடுமோ" என்றே தொடங்கினான். 'இவனுக்கு இதற்குமேல் தெரியாதோ?' என்ற சந்தேகம் பண்டிதருக்கு உண்டாயிற்று.

    பலமுறை, "ஊரைச் சுடுமோ" என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்லிவிட்டு அப்பால் பெரிய புதையலை வெளியிற் கொண்டு வந்தவன் போல அவன்,

    • "உலகந் தனைச்சுடுமோ"

  • என்றான்.

    அதைக்கேட்ட பண்டிதர் அந்தப் பாட்டு ஒரு வெண்பாக இருக்கவேண்டுமென்று ஊகித் தறிந்தார். "பாட்டின் இனிமை முதலடியிலேயே ததும்பி நிற்கிறது! பின் அடிகள் எவ்வளவு இனிமையாக இருக்குமோ!" என்று ஏங்கினார்.

    "ஐயா, நான் மறந்துவிட்டேன். தானாக வந்தால் வரும்; நானாக நினைத்தால் வருவதில்லை" என்றான் பிச்சைக்காரன்.

    "யோசித்துப் பாரப்பா" என்று சொல்லிப் பண்டிதர் அவனைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்னமிடச் செய்தார். அவன் தன்னால் ஆனவரைக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தும் வரவில்லை. முதலடிக்கு மேலே பாடும் வழக்கம் அவனுக்கு இல்லை.

    "பாட்டு முழுவதும் உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பண்டிதர்.

    "நன்றாகத் தெரியும். எனக்கு ஒரு கிழவனார் அந்தப்பாட்டைச் சொல்லித் தந்தார். பிச்சைக்காரனுக்கு ஓரடி போதாதா? ஐயா!" என்றான் அவன்.

    பண்டிதர், "எப்போதாவது பாட்டு முழுவதும் ஞாபகம் வந்தால் வந்து சொல்; இனாம் தருகிறேன்" என்றார்.

    பிச்சைக்காரன், "என்னால் முடிந்தவரையிற் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அடுத்த தெருவுக்குப் போனான். பண்டிதருக்குத் தம் வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. அவன் உத்ஸாகங்கொண்டு ஒருகால் அடுத்த தெருவில் பாட்டு முழுவதையும் சொல்லக் கூடுமோவென எண்ணினார்; அவனைப் பின் தொடர்ந்தார். அவன் அங்கும், "ஊரைச் சுடுமோ" என்ற தொடரையே பாடினான். தெருக்கோடியில் அவனுடைய வாயிலிருந்து இரண்டாவது அடியும் வந்தது:

    • "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
      ஆரைச் சுடுமோ வறியேனே"

  • என்று அவன் பாடினான். பண்டிதர் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்; 'எத்தனை அழகான வெண்பா' என்று மகிழ்ந்தார். 'மற்றப் பகுதியும் இப்படியே இவன் வாயிலிருந்து நழுவி வராதா!' என்று ஆவலோடு எதிர்பார்த்தார். அன்று அந்த இரண்டடிக்குமேல் பிச்சைக்காரன் திருவாய் மலரவில்லை.

    அப்பால் இரண்டு மூன்று நாட்கள், அன்னப்பிச்சை கேட்டு வந்த அவனிடம் இந்தக் கவியைப் பிச்சை கேட்டுக்கொண்டே பண்டிதரும் தொடர்ந்து அலைந்தார். ஒரு பயனும் உண்டாகவில்லை. பிச்சைக்காரனும் நாள் முழுவதும் பாட்டை ஞாபகப்படுத்திப் பார்த்தான். தோற்றவில்லை.

    நான்காம் நாள் அவனுக்கு ஞானோதயமானது போலப் பாட்டின் பிற்பகுதி உதயமாயிற்று. அதைக் கேட்ட பண்டிதர் சிறந்த குரு ஒருவரிடம் உபதேசம் பெற்றுப் பிரம்மானந்தத்தை அனுபவித்தவர் போலானார். பல வருஷங்கள் தவஞ்செய்து ஓர் அருமையான பிள்ளையைப் பெற்றால் தந்தைக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகும்! பண்டிதர் அடைந்த ஆனந்தம் அதை விட அதிகமென்றே சொல்ல வேண்டும்.

    பண்டிதர் பிச்சைக்காரனுக்கு 'இனாம்' கொடுத்தார். வேறு சில செய்யுட்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தப் பிச்சைக்காரன் தந்த பிச்சையாகிய பாட்டைத் தனிப்பாடற்றிரட்டிற் சேர்த்துப் பதிப்பித்தார். அது வருமாறு:-

    • * "ஊரைச் சுடுமோ வுலகந் தனைச்சுடுமோ
      ஆரைச் சுடுமோ வறியேனே - நேரே
      பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீ ரிந்த
      நெருப்புவட்ட மான நிலா."

  • * இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலாவொளியை வெறுத்துக் கூறியது.

    பண்டிதர் பதிப்பித்த தனிப்பாடற் றிரட்டில் உள்ள மற்றப் பாட்டுக்கள் சிலவே அவருடைய ஞாபகத்தில் இருந்தன. அவற்றுள்ளும் இந்தப்பாட்டே அவருடைய மனத்தில் பசுமரத்தாணிபோலப் பதிந்து நிலவியது. - உவேசா


N. Ganesan

unread,
Aug 13, 2022, 12:50:44 AM8/13/22
to சந்தவசந்தம்
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே   சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே   ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான்
மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர்  வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே  காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.


On Friday, August 12, 2022 at 11:29:48 PM UTC-5 rajjag wrote:

N. Ganesan

unread,
Aug 13, 2022, 1:14:57 AM8/13/22
to Santhavasantham



On Fri, Aug 12, 2022 at 11:29 PM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
>
>
>
> சன்னலிலே எட்டிப் பார்த்து
> கன்னமிட வட்டம் போட்டு
> மின்னுகிற வெள்ளித் தட்டு -
> வண்ண நிலா!
> என்னுயிரைக் கட்டிப் போட்ட
> எண்ண வுலா!
>
>
> பொன்னொளியைக் கதிரும் சிந்த
> ன்னலதில் குளிரைத் தந்த

ன்னலதில் குளிரைத் தந்த

> சின்னவடி வாகும் பந்து -
> வண்ண நிலா -
>
> என்னுயிருக் குள்ளே வந்த
> எண்ண வுலா!
> என்னுணர் வாகும் தேயம்

   என்னுளுணர் வாகும் நேயம்
>
> மின்னலிட மாறும் காயம்
> சொன்னகதை யாகும் மாயம்
> வண்ண நிலா -
> தன்னுள்வரும் சீவன் ஆகும்
> எண்ண வுலா!
>
>
> மீ. ரா
>
> 13.8.2002
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 13, 2022, 10:25:15 AM8/13/22
to Santhavasantham
தமிழிலே, நிலாப்பாட்டுகள் ஆயிரக் கணக்கில்.

பாரதி சூரியனைப் பற்றி வசனகவி செய்ய,
வல்லிக்கண்ணன் திங்கள் பற்றி அதே பாணியில்.

திங்கள்
        பாரதி அடிச்சுவட்டிலே
        ’இளவல்’ (வல்லிக்கண்ணன்)

திங்களை வாழ்த்துகின்றோம்.
அது இனியது.
அழகின் சுடர்
ஒளியின் களஞ்சியம்
இன்பத்தின் வித்து
காதலுக்கு ஜீவன்
திங்கள் நன்று
அது வாழ்க.

திங்கள் வளர்வது; வளர்ச்சி தருவது. திங்கள் ஒளியுள்ளது ஒளி இல்லாதது. திங்கள் தேய்ந்து மறைவது, பிறப்பது, வளர்வது, மிளிர்வது, மனித வாழ்வு போல.

அது அழகு தருவது.
ஆனந்தம் அளிப்பது.
சாந்தி கொடுப்பது.
அது நன்று.

இரவின் கார்நிறம் ஆனந்த நிலையம்,
எண்ணற்ற மீன்கள் இன்பத் துகள்கள்
இருள் நீர்ப் பரப்பில்
மின்னும் மீனிடை
மலரும் திங்கள் மோகன மலரோ?
தேவருலகத்து ஒளித் தாமரை அதுவோ?
சக்தியின் சிரிப்போ?
இயற்கையின் முகமோ?
ரதி முகப் பிம்பமோ?
அரம்பையர் அழகு காணும் பளிங்கோ?
எதாயின் என்?
அது எழில் நிறைந்தது.
அது வாழ்க.

திங்கள் அழகானது.
அதுவே அழகு தருகின்றது.
அதன் ஒளி அமுதத் தூற்றல்.
சந்திரிகை பனி ஒளி தெளிக்கிறது.
பாரெங்கும் பால்ஒளிப் பகட்டு.
வான் வெளி, கோபுரம்,
தென்னை, மரக் கூட்டம்,
குட்டிச் சுவர், குப்பைமேடு
கட்டாந் தரை, நீர் நிலை,
துள்ளும் கடல்
அகண்ட மணல் வெளி
மங்கையர் வனப்பு
மிருகத் தோற்றம்
எல்லாம் சொக்கழகு பெறுகிறது.
அம்புலி மயக்கும் சக்தி உடையது.
அது இனியது.

திங்களே,
நீ வளர்ந்து பூர்ண முறுகின்றாய்.
பின் தேய்வது ஏன்?
ஏக்கமா, கவலையா, காதலா?
துக்கமா, வெறுப்பா, சோர்வா?
இருளைக் கொல்கிறாய் நீ.
அந்த இருளே தின்கிறதோ உன்னை?
மீண்டும் மலர்கிறாய் ஓர் நாள்.
அத் தோற்றம் கவர்ச்சி மிக்கது.
உமையின் சிரிப்புப் போல.

சசியே,
ஞாயிறு உன் காதலனா?
தந்தையா? போஷகனா?
ஞாயிறு வெம்மை தருவது.
நீ வெம்மை பெற்றாய்.
ஆனால் தண்மை சிந்துகின்றாய்.
குளிர் நிலவு உன் மேனியின் கதிர்.
அம்புலி, அழகின் உரு நீ.
அழகு ஒளி பெற்றாய். ஆயினும்
உண்மை ஒளி உனக்கு இல்லையோ?
பின் இந்த சோபை பெற்றது ஏனடி?
இரவல் உடையில், மேல் பூச்சில்
மின்னும் சுந்தரி நீயோ?
வெறும் பகட்டுக்காரி தானோ?
வெம்மைக் கதிரை
குளிர் நிலவாக்கும்
மாயக் கண்ணாடிதானோ?

உயிர்களுக்கு உணர்வூட்டுகிறாய் நீ.
மலருக்கு மகிழ்ச்சியும்
கடலுக்கு எழுச்சியும்
மனிதனுக்கு இன்பமும்
இரவுக்கு எழிலும் தருகிறாய்.
இருளின் மோனத்தில் புரளும் உயிர்கள்
இன்ப மூச்செறிகின்றன
உன் மென் ஸ்பர்சம் பட்டதும்.
நீ சிரிக்கின்றாய்.
வாழ்க.

திங்களே,
நீ ஞாயிற்றின் மகள் தான்.
ஆம். சந்தேகம் இல்லை.
ஒளியும் ஞாயிறும்
இணங்கிப் புணர்ந்த அதிர்ச்சியில்
பிறந்தாய் நீ.
செந்தழல்ப் பிழம்பின் பகுதி நீ.
ஒளி உயிர்ப்பின் சிறு உயிர் நீ.
செங்கதிரோனின் வெண் மகள் நீ.
உன்னுடன் பிறந்த கோளக் கூட்டங்கள்
உன் சோதரர் என்றுணர்.
சுக்கிரன், புதன், சனி,
யுரேனஸ், நெப்த்யூன் …
எல்லாம் உன் அண்ணன் தம்பியர்.
உங்கள் குலம் பெருமை பெற்றது.
உங்கள் புகழ் சிறந்தது.
நீங்கள் வாழ்க.

ஒளி உங்கள் தாய்.
அவள் உயிருக்கு உயிரூட்டும் மாயக்காரி.
அவளை மறைக்க முடியாது,
கொல்ல முடியாது, ஒழிக்க முடியாது.
ஆத்மாவைப் போன்றவள் அவள்,
அவளை வாழ்த்துகின்றேன்.
வணங்குகின்றேன்.
ஒளி வாழ்க.
ஒளிக் கூட்டம் வாழ்க.
சூரியன், சந்திரன், கோளங்கள்
சிருஷ்டியின் சிறப்புகள்.
அவை வாழ்க!

கிராம ஊழியன், 1-ஆகஸ்ட்-1944,

Anand Ramanujam

unread,
Aug 13, 2022, 10:25:41 AM8/13/22
to santhav...@googlegroups.com
பிச்சைக்காரரிடம் பண்டிதர் வெண்பா பெற்ற கதையைச் சொன்ன விதம் மிக அருமை! 

ரசித்துப் படித்தேன்! பகிர்ந்தமைக்கு நன்றி!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Aug 18, 2022, 5:07:09 AM8/18/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

*எப்படி வருவாயோ கண்ணா!*


தவழ்ந்து வருவாயோ கண்ணா!

     தவழ்ந்திடு வாயென - மனத்

     தாழ்திறந்து தவித்தேன்!

     தாவிஅணைப் பாயெனத்

     தாயனெவே இனித்தேன்!


தத்தி நடப்பாயோ கண்ணா!

     தத்திநடப் பாயென -  அகத்

     தரையினையும் துடைத்தேன்!

     ததும்பி வழிவாயெனத்

     தாகத்துடன் சுகித்தேன்!


உருண்டு  வருவாயோ கண்ணா!

      உருண்டிடு வாயென - உன்

      உரலாகி  வரித்தேன்!

      உவந்திடு வாயென

      ஊகித்துச் சிரித்தேன்!


 உள்வரு வாயோ கண்ணா!

       உள்வரு வாயென - என்

       உளக்கதவந் திறந்தேன்!

       உனைஅணைப் பேனென

       உலகினையும் மறந்தேன்!

 

எப்படி வருவாயோ கண்ணா!

        எப்படி வந்தாலும் - எனை

        எடுத்தணைப் பாயே!

        கற்பனை அல்லாத

        கருணை செய்வாயே!


சொப்பென எனையே கண்ணா!

       சொப்பெடுத் தாடி - நற்

       சுகமருள் வாயே!

       சொப்பன வாழ்விதிற்

       சுடரருள் வாயே!

          

Happy Janmashtami


மீரா

18-2-2022


Anand Ramanujam

unread,
Aug 19, 2022, 9:25:24 PM8/19/22
to santhav...@googlegroups.com
 எப்படி வந்தாலும் - எனை

        எடுத்தணைப் பாயே!’


உள்ளம் உருக்கும் சொற்கள்! மிக அருமை!


- இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Aug 21, 2022, 3:19:23 AM8/21/22
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
Aug 22, 2022, 2:19:04 AM8/22/22
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
Sep 4, 2022, 4:42:56 PM9/4/22
to santhav...@googlegroups.com


Are You asleep O my Lord
or just You pretend to ignore?
Are you mere stone O my Lord
Or unmoving until we adore!

Don’t our flooding tears soak
Thine divine feet to evoke
The Gentle grace for our sake
To bestow goodness partake!

Is not Your dream
all world that gleam!
Why then the darkness fall?

Or is the night Thy womb
in which all bloom
So my fear mere illusory scrawl!

Narayana Om Narayana
The rhymes my breathing hum
So You come! This sure welcome!
To succumb vain desires that dim!

Mee. Ra
image.png

Anand Ramanujam

unread,
Sep 4, 2022, 6:01:12 PM9/4/22
to santhav...@googlegroups.com

Excellent poetry with rhyming words, that will surely move the Lord!

- R. Anand

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 4, 2022, 7:29:14 PM9/4/22
to சந்தவசந்தம்
A moving query with profound questions to Lord Ranganatha (who is yet to answer the questions raised in the Thamizh song ஏன் பள்ளி கொண்டீர் ஐயா?)
ananth

On Sun, Sep 4, 2022 at 4:42 PM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

Rajja Gopalan

unread,
Sep 5, 2022, 5:36:32 AM9/5/22
to santhav...@googlegroups.com
🙏

Sent from my iPhone

On 5 Sep 2022, at 00:29, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Sep 11, 2022, 4:22:01 AM9/11/22
to santhav...@googlegroups.com

image0.jpeg

குருமலர் அடியிற் கோடி
குளிர்மலர் குவித்துப் பாடி
திருவருள் பெறவே நாடித்
தினமினிப் பணிவோம் நாமே

அருள்மிகு காஞ்சிப் பீடம்
அமர்ந்தருட் தேவே போற்றி
குருபரா ஞானத் தீபம்
கொடுத்தொளி காட்டு வாயே!

ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர

Sent from my iPhone

On 5 Sep 2022, at 10:36, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏

Rajja Gopalan

unread,
Sep 24, 2022, 8:26:46 AM9/24/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

🙏

படுத்தாள்வார் என்னைப் 
       படுத்துகின்ற ஊழவிழ்த்துக்
கொடுத்தாள்வார் தில்லைக் 
         கோவிலருள் நடராசன்
தடுத்தாள்வார் தன்னுட்
         தானுமொரு பாதிஹரி 
எடுத்தாள்வார் எம்முன்
       எழிலுறக்கம் காண்பீரே!

மீ. ரா

Sent from my iPhone

On 5 Sep 2022, at 00:29, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:



Pas Pasupathy

unread,
Sep 24, 2022, 9:11:18 AM9/24/22
to santhav...@googlegroups.com
மிக அருமை!

On Sat, 24 Sept 2022 at 08:26, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

🙏

படுத்தாள்வார் என்னைப் 
       படுத்துகின்ற ஊழவிழ்த்துக்
கொடுத்தாள்வார் தில்லைக் 
         கோவிலருள் நடராசன்
தடுத்தாள்வார் தன்னுட்
         தானுமொரு பாதிஹரி 
எடுத்தாள்வார் எம்முன்
       எழிலுறக்கம் காண்பீரே!

மீ. ரா




VETTAI ANANTHANARAYANAN

unread,
Sep 25, 2022, 4:45:32 PM9/25/22
to santhav...@googlegroups.com
மிக அருமை. 

> ஊழவிழ்த்துக் கொடுத்தாள்வார்

அவிழ்த்துக் கொடுத்தல் = சொந்தப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல் (கழக அகராதி); இப்பாடலில், படுத்தும் ஊழை எடுத்துக் கொடுத்தல் என்ற பொருள் வாராமலிருக்க, 

படுத்துமூழ் அறுத்தவிழ்த்துக் / கொடுத்தாள்வார் என்னலாம்.

அனந்த்

Rajja Gopalan

unread,
Sep 30, 2022, 5:06:59 AM9/30/22
to santhav...@googlegroups.com

பூவாரம் பதுமநிதி
பொன்மாலை பசுமைமிகு
பாவாடை பவளநகை
பட்டுமிளர் நீலவுடை
தூவானம் ஒளிர்மகுடம்
துய்த்தஅகில் வைத்தமுகம்
ஆவாரம் பூஞ்சிரிப்பு
அருட்கரத்தின் பளபளப்பு
தேவாரத் திருவூலம்
தென்னவனென் ஈழபதிப்
பாவாணன் உடன்பதியும்
பார்வதியுன் அருட்தோற்றம்!
வாவாயென் வழிகாட்டு!
வாரியணைத் தேயூட்டு
சாகாதுன் சந்நிதியைச்
சாருமமு தாயூட்டு!





மீ. ரா
image3.jpeg

Rajja Gopalan

unread,
Sep 30, 2022, 5:08:02 AM9/30/22
to santhav...@googlegroups.com


Sent from my iPhone

> On 30 Sep 2022, at 10:06, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
>
> 
image0.jpeg
image3.jpeg

Rajja Gopalan

unread,
Oct 1, 2022, 2:05:08 AM10/1/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

🙏

அண்ணலார் பெருமாள் வாழி!

அனந்தநற் சயனத் தாழிக்

கண்ணனார் திருமால் வாழி!

கருணையின் உருவா யாகித்

தண்ணிலா வடிவிற் தாயார்

தமையிரு வுருவாய்த் தாங்கி

உண்ணுவார்க் கமுத மான

உடையவர் வாழி வாழி!


திருநகர்ப் பெருமான் வாழி!

தீவினை அழிப்பான் வாழி!

அருமறைப் பொருளான் வாழி!

ஆதியந் தற்றான் வாழி!

பெருநிறை வளிப்பான் வாழி!

பேறருட் திருமால் வாழி!

குருவடி கொடுப்பான் வாழி!

கோவிந்தன் வாழி வாழி!


மீரா

1.10.2022

Rajja Gopalan

unread,
Oct 22, 2022, 1:31:06 AM10/22/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

Rajja Gopalan

unread,
Oct 22, 2022, 2:58:54 AM10/22/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

🙏

நல்லர்க்கு அருள்வோனே!

நன்மறையுட் பொருளோனை

சொல்லற் கரியததைச்

சொல்லித் தருவோனே!

வல்லசிவக் காஞ்சியினில்

வந்தகுரு வழியோனே!

பல்லக்கிற் பகலொளியே!

பவனியிட  அருள்வாயே!


மீ்ரா

21-10-2022


Sent from my iPhone

On 22 Oct 2022, at 06:31, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


image0.jpeg
Sri lakshmi varaaha nrusimha swami ( simhadri  appanna) hill temple, simhachalam, vishakapatnam.

🙏. Very rare form of bliss indeed!

வட்டவடிவோ! அருள்
கொட்டும் அமுதோ!
எட்டமுடியாச் சிவ
நிட்டை உருவோ!

பட்டையிடுமோர்ப் பர
முட்டை எனவோ!
நட்டநடுவாய்த் திரு
விட்டல் அரியோ!

சுட்டுங்கதிரோ! குளிர்
கொட்டும் மதியோ!
மட்டிலடங்கா நிலம்
முட்டுங் கிரியோ!

கட்டும் அறுகோ! நரன்
இட்ட வடிவோ!
சொட்டும் சுடரோ! எனுள்
நட்ட ஹரிஓம்!

விட்டல ஹரி! ஜய
விட்டல ஹரி!
விட்டல ஹரி! அருள்
விட்டல ஹரி

( கிரி - வராஹம், அறுகு - சிங்கம்)

மீ. ரா
21-10-2022

rathnam

unread,
Oct 22, 2022, 6:45:13 AM10/22/22
to santhav...@googlegroups.com


தரிசனம் செய்திருக்கிறேன்🙏🏻

நிலம்பிளந்த கேழலாம் நிலைபிளந்த சிங்கமாம்
நலமளிக்கும் நாதனாம்  நலங்கனிந்த  ஞானமாம்
தலமணைத்த சீலனாம்  தனைமறந்த தெய்வமாம்
புலனுருக்கும் மாயனாம் புகலளிக்கும் யோகமே

On Sat, 22 Oct 2022 at 11:01 AM, Rajja Gopalan <raj...@gmail.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Oct 22, 2022, 7:23:21 AM10/22/22
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 22 Oct 2022, at 11:45, rathnam <irathin...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Oct 28, 2022, 4:54:10 AM10/28/22
to santhav...@googlegroups.com


பாலால் நனைந்து பரிவாய் நின்றருளும்
வேலா நீயிருக்க ஏதுபயம் - காலாநீ
வந்துபார் கந்தனருள் வாளெனது ஊழறுக்கும்
தண்டபா ணியன்றோ துணை
image.png

rathnam

unread,
Oct 28, 2022, 8:08:32 AM10/28/22
to santhav...@googlegroups.com

வந்தவனைக் கண்டேனே

கந்தனென்று சொன்னானே

சுந்தரனாய் நின்றானே

சிந்தனையை வென்றானே

ஆனந்தம் ஆறுமுகம்

தேனந்தத் தேறுமுகம்

ஈனமிலா ஏறுமுகம்

ஞானமலர் நாறுமுகம்

அருணகிரி அமரேசன்

விருத்தகிரி முருகேசன்

குருநாதன் குமரேசன்

சிருங்கார சிவநேசன்





--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 28, 2022, 9:19:09 PM10/28/22
to santhav...@googlegroups.com
On Fri, Oct 28, 2022 at 3:54 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


பாலால் நனைந்து பரிவாய் நின்றருளும்
வேலா நீயிருக்க ஏதுபயம்  -  காலாநீ
வந்துபார் கந்தனருள் வாளெனது ஊழறுக்கும்
தண்டபா ணியன்றோ துணை

மீ. ரா


ஶ்ரீ கந்த சஷ்டிப் பெருவிழா
-------------------------------------------

கந்த சஷ்டி கவசம்:
சின்னக் குயில் சித்ரா பாட்டாக,
https://youtu.be/ElVaIJJmpBk

*கந்த சஷ்டி கவசம் - வரலாறு *
சென்னிமலை தேவராய குருக்கள் பாடியது கந்த சஷ்டி கவசம். சூலமங்கலம் சகோதரிகள் இசையால் தமிழ் மக்கள் மனதில் நிரந்தரமாகக் குடிபுகுந்த காங்கேயனின் ஸ்துதி. தேவராய பண்டிதர் வழி வந்த இலக்குமண பாரதி கொங்குநாட்டில் பெரும்புலவர். சிவமலைக் குறவஞ்சி பாடினார். கிடைக்கிறது. ஆனால், காங்கேயம் சிவமலை மயில்விடுதூது, மடவிளாகத் தலபுராணம் அழிந்துவிட்டன.

சென்னிமலைக் குருக்கள் தேவராய பண்டிதர் செய்த கந்தசஷ்டிக் கவசம்
https://nganesan.blogspot.com/2020/07/chennimalai-devarayar-kandasashti.html

கவிதையில் கடிதம்! - 200 ஆண்டுகள் பழைய சீட்டுக்கவி
http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

நாகஸ்வர இசையில் - மங்கள வாத்தியம்:
(க, த - கல்வெட்டில் மயக்கம் தரும் எழுத்துகள்.
நாகஸ்வரம் நாதஸ்வரம் ஆக அதுவும் ஓர் காரணம்.)
https://youtu.be/9jVKtlNkdHI
https://youtu.be/KxzPYc0DfNA

இன்னம் பிறவாமைக்கு இச்சையுற்றோர் ஏத்துமொரு
மன்னவன்போல் தென்பழனி மாமலைவாழ் – முன்னவனை
யாரோ எனக்கருத்துள் ஐயுறவேண் டாம்அனற்கட்
சீரோன் தவப்பயனாம் சேய்
                                          - பழனித் திருவாயிரம் (வண்ணச்சரபம்)

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
https://youtu.be/wzCaQChY6Zs

நாத விந்து கலாதி நமோநம - சிரவை ஆதீனப் பள்ளி
https://youtu.be/WcwQsiJO_Js

    *தென்கொங்குடைய முருகா போற்றி! *
    *எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! *

நா. கணேசன்

Sent from my iPhone

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Oct 29, 2022, 2:18:28 AM10/29/22
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 28 Oct 2022, at 13:08, rathnam <irathin...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Nov 6, 2022, 7:53:11 AM11/6/22
to santhav...@googlegroups.com
image0.jpeg
🙏🏻

*அன்னை ஸ்ரீ அகிலாண் டேஶ்வரி
வரவேண்டும் - தரவேண்டும்*

அம்மா தாயே அகிலாண் டேஶ்வரி
     அருள்தர நீஉடன் வர வேண்டும் - நின 
      தருட்பரி சானவை தர வேண்டும்!

பெம்மான் சிவனார் பெருவருள் அமுதைப்
     பெய்திடும் முகிலாய் வர வேண்டும் - துணை
      செய்திடும் கருணை தர வேண்டும்!

சிம்மா சனமெனச் சிந்தையி லுனது
     சீரடி  மலரிட  வர வேண்டும் - அருட்
     சேவடி அருளினைத் தர வேண்டும்!

எம்மாம் பெரிதுன தருள்விழி முனையம்
      என்னிடம் பதிவுற வர வேண்டும் -  அருட்
      கன்னலின் அமுதம் தர வேண்டும்!

சுந்தரி அந்தரி சூட்சும காரணி
      சுடரறி வருள்குரு வர வேண்டும் - எனுட்
      திடமதித் தெளிவினைத் தர வேண்டும்!

வந்தனம் வந்தனம் ஶங்கரி சந்ததம்
      வழிதரும் குருவென வர வேண்டும் - திரு
      வடிவருட் புகலினைத் தர வேண்டும்!

ஜய் ஜய் ஶ்ரீபர மேஶ்வரி பூரணி
     ஜபமென தாகிட  வர வேண்டும் - தினம்
     சுபமினி தானவை தர வேண்டும்!

ஜய் ஜய் ஶ்ரீபர மேஶ்வரி பூரணி
     ஜனங்களுக் குதவிட வர வேண்டும் - ஜகம்
     சுகமுற அமைதியைத்  தர வேண்டும்!

rathnam

unread,
Nov 8, 2022, 12:11:58 AM11/8/22
to santhav...@googlegroups.com
🙏🏻🙏🏻

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Nov 15, 2022, 2:14:49 AM11/15/22
to santhav...@googlegroups.com


🙏🙏

வட்ட வட்டக் கண்கள் கொண்டு
கொட்டக் கொட்டப் பார்க்கிறாய்!
வாசு தேவன் வடிவம் நம்முள்
பேசும்! இன்பம் சேர்க்கிறாய்!

கிட்டத் தட்ட முட்டும் அன்பைத்
திட்ட வட்டம் ஆக்கினாய்!
கேச வாவுன் வேஷம் இன்பத்
தேசு தந்து காக்கிறாய்!

கட்ட நட்டம் விட்ட தென்று
நட்ட இட்ட தெய்வமாய்
காசி னிக்கு ஈசன் என்ற
வாசு நந்தன் மெய்யனாய்

வெட்ட வெட்ட உள்ளக் கேணி
கொட்டும் வெள்ளம் மாதவா!
வேஷ மேனுன் தாச னானேன்!
நேசன் எந்தன் நாயகா!

மீ. ரா

image.png

rathnam

unread,
Nov 15, 2022, 5:45:56 AM11/15/22
to santhav...@googlegroups.com
...வாசு நந்தன்...

வசுதேவர் நந்தகோபர் மகன் என்ற அர்த்தமா..ஐயா?

On Tue, 15 Nov 2022 at 12:44 PM, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


🙏🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Nov 15, 2022, 12:31:58 PM11/15/22
to santhav...@googlegroups.com
ஆம் கவிஞரே

Sent from my iPhone

On 15 Nov 2022, at 10:45, rathnam <irathin...@gmail.com> wrote:



rathnam

unread,
Nov 16, 2022, 1:49:28 AM11/16/22
to santhav...@googlegroups.com

கண்ணான கண்ணமுதைக் கண்முன்னே காட்டியதும்

எண்ணாத எண்ணமெல்லாம் என்னுள்ளே என்னுள்ளே


On Tue, 15 Nov 2022 at 12:44 PM, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


🙏🙏
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Dec 20, 2022, 2:20:27 AM12/20/22
to santhav...@googlegroups.com
image0.jpeg

🙏


பெரு 

மலையைச் சிறு விரலின் 

நுனி 

பெயரும் -  குடை பிடியும்


திரு 

வடிவந் தரும் அருளில்

மனம்

உருகும் -  அடி படியும்!


கரு

முகிலும் மழை பொழியும்!

அதில்

அமுதென் றருள் நனையும்


குரு

பரனுன் பத மலரென்

முடி

படவந் தருள் வாயே!


ஜய

வ்ருந்தா வன லோலா!

கோ

விந்தா குரு சீலா!


ஶ்ரீ 

ராதா  மணி யாரா!

ஹரி 

க்ருஷ் ணாமு ராரே!


ஹரே

க்ருஷ் ணாவி நோதா

ஹரி

க்ருஷ் ணாத யாளா!


ஹரே

க்ருஷ் ணப்ர போதா!

ஶ்ரீ

க்ருஷ் ணாஸம் பூதா!


மீ்ரா

Rajja Gopalan

unread,
Dec 21, 2022, 12:25:33 AM12/21/22
to santhav...@googlegroups.com



🙏
*தேனே முருகா*


பல்லவி

முருகா எனமனம் முனித்தேனே - முத்துக்
குமரா எனதினம் நினைத்தேனே!
கந்தா எனில் வரும் கலித்தேனே!
கதிர்கா மத்துறையும் சுகத்தேனே - திரு (முருகா)

சரணம்-1

மாமயில் அமர் அறு மலைத்தேனே - குற
மாதவள் மன மகிழ் பதித்தேனே!

தேவர்கள் தொழும் திரள் அருட்தேனே!
……. முருகா முருகா முருகா முருகா
திருச் செந்தூர் அழகனைத் துதித்தேனே! - திரு (முருகா)

சரணம்-2

சரவண பவமென ஜபித்தேனே - எனுள்
ஷண்முகத் தின்னருள் குவித்தேனே!

பவபயம் விடுபட நிலைத்தேனே!
……. முருகா முருகா முருகா முருகா
பழனியம் பதியினில் திளைத்தேனே! - திரு (முருகா)

மீ. ரா
image0.jpeg

Rajja Gopalan

unread,
Dec 23, 2022, 4:21:27 AM12/23/22
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
Dec 30, 2022, 6:35:41 AM12/30/22
to santhav...@googlegroups.com


image.png

Rajja Gopalan

unread,
Jan 11, 2023, 3:17:55 PM1/11/23
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
Jan 21, 2023, 12:41:19 PM1/21/23
to santhav...@googlegroups.com


🙏

*உள் உந்து வடைமாலை*

குருவே
நாவடைய வேண்டுமினி
நல்வாக்கு!

இனிதான
பாவடைய வேண்டும்நற்
பரிமாணம்!

வீணாகச்
சாவடையத் தானோயிச்
சகவாழ்வு?

என்னுள்ளான்
மாவடைய வேண்டும்திரு
மெஞ்ஞானம்!

அன்பிலிதோ
பூவடையில் மாலை
அணிவித்தேன்!

அனுமனுந்தன்
தாவடையும் நகையுந்
தரிசித்தேன்!

காவலருள்!
ராமமடை வெள்ள ரகசியமுந்
தந்தாயே!

சேமமருள்
ஜய ஆஞ்ச நேயா!
ஶ்ரீ ஆஞ்சநேயா!

மீ். ரா
Z.jpeg

Rajja Gopalan

unread,
Jan 21, 2023, 12:43:05 PM1/21/23
to santhav...@googlegroups.com


🙏

கருப்பொருளாய் இன்பக் கடல்அலையாய் அன்பில்
அருட்தருவாய் அம்மா அபிராமி - உற்ற
திருக்கடையூர் என்னுள் தெரியாயோ அம்மா
விருப்புடைய என்னுள் விழை

As the root cause of all, as the waves of ocean-bliss, Oh Mother Abhirami, with Love, may You bestow Thine grace (upon me) - the Fitting place Thirukkadiyur is only within my heart, don’t You know Mother!,
(So) in me Who is keenly seeking, May You rest!

Rajja

Sent from my iPhone

> On 21 Jan 2023, at 17:41, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
>
> 
> <Z.jpeg>
image.png

Rajja Gopalan

unread,
Jan 24, 2023, 5:13:50 AM1/24/23
to santhav...@googlegroups.com
image0.jpeg

🙏

*சொக்கும் உன்னழகு சுந்தராநடராஜா!*


நேர்கொண்ட பார்வை!

நிமிர்ந்த எழில்வடிவம்!

சீர்கொண்ட சென்னி!

சிரித்தமுகம் கூர்நாசி!

வார்கண்ட விடநீலம்!

வரித்தஉரி மதயானை!

பார்கண்ட சுடர்ச்சோதி!

பரசிவனுன் திருவாடல்!


கைநளினம்விரல்நெளியும்!

கால்வளையும்கண்மலரும்!

பொய்யடியில் மிதிபடவும்

புவனமெலாம் ஒளிபெறவும்

ஐயா!உன் அருளாடல்!

அடடாஎன் மனவூஞ்சல்

உய்யவரு வாயென்று

உருகினேன் நடராஜா!


குத்துவிளக் காய்அம்மா

கூடயிருந் தருள்கின்ற

சித்துஎனக் குள்ளின்பச்

சீரளித்து வாழ்த்தட்டும்!

முத்துமணி மார்பா!

மூத்தசிவ தேசிகனே!

கத்துஅறக் காப்பாய்!

கருணைமிகு நடராஜா!


மீரா

NATARAJAN RAMASESHAN

unread,
Jan 24, 2023, 5:38:48 AM1/24/23
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு

        - தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Anand Ramanujam

unread,
Jan 24, 2023, 7:38:18 AM1/24/23
to santhav...@googlegroups.com
 என் மனவூஞ்சல் உய்யவருவாய்
அருமை!

- இரா. ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 24, 2023, 10:51:51 AM1/24/23
to santhav...@googlegroups.com

Rajja Gopalan

unread,
Jan 24, 2023, 6:28:47 PM1/24/23
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 24 Jan 2023, at 15:51, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Feb 2, 2023, 3:29:12 AM2/2/23
to santhav...@googlegroups.com

🙏🙏

*உபந்யாஸச் சக்ரவர்த்தி *
*ஶ்ரீமான் அனந்தராமதீட்சிதர்*
*திருவடிகளுக்கு நமஸ்காரம்*

ஓங்கார மானபொருள்
ஒன்றினையே என்றென்றும்
ரீங்கார மாயிசைத்து
நின்றவராய் என்றும்ஒளி
தூங்காத மணிவிளக்குத்
தூயசுடர் உபந்யாஸம்
சேங்காலி புரத்துதித்த
செம்மலே நமஸ்காரம்!

சின்னமுத்து அண்ணாவாள்
செல்வன் நால்வேதம்
மின்னமுத்து நன்மாலை
மிளிரமறைப் பொருளோதி
சொன்னவித்து உள்ளத்துள்
சோதிமலர்த் தடமாகும்
அன்னர்தத்து வத்தேறல்
அனந்தராம தீட்சிதர்வாள்

பாகவதம் ராமகதை
பரசிவனார் தாயுமையாள்
நாரணரின் பாமாலை
நலமருளும் புராணமென
சாரமழை மேகமிழைச்
சாரணரே நமஸ்காரம்!
பூரணரே நமஸ்காரம்!
பொன்னடியில் நமஸ்காரம்!

மீ. ரா
2.2.2023

(His discourses fed / still feeds many hearts with the nourishment for spiritual health.)

image0.jpeg

Rajja Gopalan

unread,
Feb 14, 2023, 2:14:57 PM2/14/23
to santhav...@googlegroups.com
image.png



மாதங்கி காந்திமதி மாதரசி வேதவதி
மலையத் வஜன் மைந்தினி!
மாறாத சிவஞான ஸ்வரூபிணி ஶ்ரீசக்தி
மகிழுவன நாதர் துணையே!

நாதங்க ளானசிவ போதங்க ளதிலூடும்
நாரா யணீ பைரவி!
நடராச நடமைய நாயகி காமாட்சி
நவதுர்க்கை யான உனையே

வேதங்க ளாவுமிசை ஓதுந்தே வாதியரும்
வேண்டியுன் திருவடி யிலே
வீழ்ந்தார் எனிலிந்த வீணனுக் காயுனது
விழிமுனையைக் காட்ட வாராய்!

போதாது எனக்குனது வேதா கமப்பொருளை
போதித்து அருள் செய்திடு!
மாதா அகிலபுவ னாதியர சாட்சி புரி
மலைவளர் காதல் உமையே!

மீ. ரா

Rajja Gopalan

unread,
Mar 3, 2023, 12:36:20 AM3/3/23
to santhav...@googlegroups.com

image

🙏🙏


நீலமும் புஷ்ப ராக 

நெளிவளை தங்கக் காப்பும்

சீலமும் முத்தும் செவ்வை 

டூரியம் பவளக் கோப்பும்

மூலமுன் மகுடப் பேறில் 

மும்மணி வைரக் கற்கள்

ஆலமுண் டானின் கண்ட 

அடர்கரு  ஊதாப் பூவும்

நாலிதழ் மறையாய் நெஞ்சில் 

நலமிடும் அழகுப் பேழை

சூலுன துதரத் தாரம்

சுகவடி வருளக் காணும்

மாலனே மலராய் நெற்றி

மரகதம் பதித்த வேந்தே!

காலினிற் பதிக்க எந்தன்

கல்மனம் செதுக்க வாராய்!


Blue and emerald, along with the blinking arch like golden wears, paired with elegant pearls and crimson rubies and such gems in tandem, the reigning crown of enormous gold studded with sparkling diamonds, like the neck of the Lord Siva who drank the poison, the dark blue stones of blossom decorating Thine bosom, spreading like the four petals of Vedas, as a treasure chest bestowing grace, with the abdominal that gives birth to all, O Lord Hari, giving joy to all is Thine supreme form, with the large Precious gem embellished on Thine forehead,  may You show me Thine divine feet, and to decorate that grace-bestowing divine feet, may You come and sculpt my stony heart!


Rajja

3-3-2023

Anand Ramanujam

unread,
Mar 3, 2023, 6:35:27 AM3/3/23
to santhav...@googlegroups.com
‘கல்மனம் செதுக்க வாராய்’

அறுசீர் விருத்தத்தில் அழகிய நடையில் அமைந்த அருமையான கவிதை.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த இந்தப் பாசுரத்தை நினைவுறுத்துகிறது:

பாயும் நீர் அரங்கம் தன்னுள் 
பாம்பணைப் பள்ளி கொண்ட, 
மாயனார் திருநன் மார்வும் 
மரகத உருவும் தோளும், 
தூய தாமரைக் கண்களும் 
துவரிதழ் பவள வாயும், 
ஆயசீர் முடியும் தேசும் 
அடியரோர்க்கு அகலலாமே.

The rendering in English is also excellent.

 இரா ஆனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Mar 3, 2023, 7:03:18 PM3/3/23
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 3 Mar 2023, at 11:35, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Mar 17, 2023, 5:26:53 PM3/17/23
to santhav...@googlegroups.com



🙏

*பூஜைக்கு வந்த மலர்!*

செஞ்சடை மறைத்து மின்னும்
சிவபர ஸ்படிக லிங்கம்
தஞ்சமென் றடைந்து முன்னம்
தயவுடன் பணிந்து உய்யும்
நெஞ்சிலே வைத்த கையும்
நேர்அமர்ந் திருந்து செய்யும்
பஞ்சஅட் சரத்தால் பூஜை
பவித்திரக் குருசெய் தாரே!

நஞ்சற நம்முள் தெய்வம்
நான்மறை ஞானப் போதம்
வெஞ்சற மனதுட் தூய்மை
வேரிட வித்திட் டாரே!
சஞ்சலம் ஏதற் கினிமுன்
சங்கர சத்குரு காணீர்!
பஞ்செனக் கருகும் துயரம் !
பகலவன் குருவுன் சரணம் !

மீ. ரா
17-2-2023
image0.jpeg

Rajja Gopalan

unread,
Mar 19, 2023, 4:28:05 AM3/19/23
to santhav...@googlegroups.com
image0.jpeg

அருள்மிகு அன்பில் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல்  விழாவை முன்னிட்டுதிருக்கோயில் சார்பாக அம்மனுக்கு வழங்கப்பட்டது🙏🙏🙏

🙏


அன்பில் முன்பெழுந்து 

        அருளமுது தந்தினிந்து

முன்பின் என்வினைகள் 

          முழுதவிந்து தருவிருந்து

அன்பைத் தருமாரி 

         அம்மனுக்கு மலரவிழ்ந்து

இன்பம் பெறவிழைந்து

           எங்களது நமஸ்காரம்!


வாரியருள் தந்தாய்!

      வழிபடுவர்க் கருள்நேயம்

கோரியவர்க் குதவும்

      குலவதியேமாமாயி!

நேரிலெதிர் நின்றாய்!

       நிழலடியை என்சென்னி

மாரியம்மன் தாயே!

        மகிழ்ந்து பதிப்பாயே!


வெம்மைக் காமாலை 

     வேனில் அம்மையுடற்

செம்மைப் பெருநோய்கள்

    சீக்குமறக் காப்பாயே!

மும்மைத் துயரறுத்து

      முக்திவழிப் பயனளித்து

இம்மைச் சுகமளித்து

      ஈடுகொடுத் தாள்வாயே!



மீரா

19-3-2023


Sent from my iPhone

On 17 Mar 2023, at 21:26, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:


<image0.jpeg>



🙏

sudha's creations

unread,
Mar 19, 2023, 10:56:45 AM3/19/23
to santhavasantham
பெருமாளை அப்படியே கண் நிறுத்திவிட்டார்... எங்கள் கும்பகோணத்தில் சாரங்கபாணி சுவாமி தான் நினைவுக்கு வருகிறார்...
சுதா வேதம் 

--
image.png

Kaviyogi Vedham

unread,
Mar 19, 2023, 11:00:20 AM3/19/23
to santhav...@googlegroups.com
attagaasam. rasiththen,
 yogiyar

Rajja Gopalan

unread,
Mar 21, 2023, 5:25:01 PM3/21/23
to santhav...@googlegroups.com


image0.jpeg



ॐ नमः शिवाय ।

अरूपादि  रूपम्  अखण्ड स्वरूपं 
विरूपम् महामाय विश्व  प्रसूतं
कृपानन्द मूलम्  गिरीशं महेशं
प्रबोधं शिवानन्द बोधं भजामि ।

जटावारिहारम् प्रभा चन्द्र चूडम्
सदानन्द सारम्  सभा नाट्य राजम्
कटाक्षेप कान्तम् च कैलास नाथं
चिदाकाश लोलम् शिवोहम् भजामि ।

महा कालरुद्रम् महा योग सत्यम्
महा देव शम्भुं महत्वं प्रभुत्वं
भजे नित्यवासं भजे ज्ञानराजं
भजे सथ्य भावम् पवित्रं भजामि |

ௐ நம꞉ ஶிவாய |

அரூபாதி₃ ரூபம் அக₂ண்ட₃ ஸ்வரூபம் 
விரூபம் மஹாமாய விஶ்வ ப்ரஸூதம்
க்ருபானந்த₃ மூலம் கி₃ரீஶம் மஹேஶம்
ப்ரபோ₃த₄ம் ஶிவானந்த₃ போ₃த₄ம் ப₄ஜாமி |

ஜடாவாரிஹாரம் ப்ரபா₄ சந்த்₃ர சூட₃ம்
ஸதா₃னந்த₃ ஸாரம் ஸபா₄ நாட்ய ராஜம்
கடாக்ஷேப காந்தம் ச கைலாஸ நாத₂ம்
சிதா₃காஶ லோலம் ஶிவோஹம் ப₄ஜாமி |

மஹா காலருத்₃ரம் மஹா யோக₃ ஸத்யம்
மஹா தே₃வ ஶம்பு₄ம் மஹத்வம் ப்ரபு₄த்வம்
ப₄ஜே நித்யவாஸம் ப₄ஜே ஜ்ஞானராஜம்
ப₄ஜே ஸத்₂ய பா₄வம் பவித்ரம் ப₄ஜாமி |

மீ. ரா
21-3-2023

Rajja Gopalan

unread,
Apr 2, 2023, 5:51:06 PM4/2/23
to santhav...@googlegroups.com


* Dharma sthala  Krupaa kara*
Raagam. Kannada Darbaari

*Pallavi*

Dharma sthala  Krupaa kara   Shankara
Manjuna thEshwara  Mahaa prabho. (Sri)

*Anu Pallavi*

Chandra sekhara Sadaa Shiva  Sham bhava
tungaNe  traavati theera mahO dhaya

 *Charanam*

AngE Paarvathi Ardha Na reesh wara
Mangala rUpa Mahaa Prabho!

Ganga jatAdhara haalaala Sundara 
Karuna hara sukha VaradheE  

Para Shiva  namah  Shiva  namah Shivaya
Namo namah Jagad Pitharam ShivE  (Sri)

Mee. Ra

*Meaning* 

The compassionate Siva Who is in Dharmasthala as Sri Manjunaathar is the supreme Lord 

With crescent moon, ever blissful, with escort of Shaambavi, at the elegant Netravati river bank, as the most benevolent 

Sharing the body with Sri Parvati. As ArdhaNarreshwara, auspicious form, Thou, the supreme Lord. 

With Ganga in the matted Locks,  o enchanting, consumed Halaala poison, you are full of compassion and the giver of happiness.  To that 

Lord Parameshwara, obeisance to Lord Shiva, Obeisance to the Father of the Universe, Nama Shivaya 


🙏)

Rajja


Rajja Gopalan

unread,
Apr 29, 2023, 7:24:18 AM4/29/23
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
May 5, 2023, 3:49:13 AM5/5/23
to santhav...@googlegroups.com

image

🙏

*நாரயணா ஶ்ரீமந் நாராயணா*


பூரண நிலவொளி பொழிகிறது!

      புண்ணியர்  வழிபடப்  புலர்கிறது!

காரண ஹரித்திரு மாலவனின்

      காலடித்  தாமரை மலர்கிறது!


தோரண மாவிலைத் துளசிமணித்

      தூமல ராய்மனம் தெளிகிறது!

சீரணம் ஆனது செய்வினைகள்!

       சித்திரைப் பௌர்ணமி நல்லருளில்


சூரண மாயொரு திருநாமம் 

      சுகந்தர வரமிட வருகிறது!

சாரணர் சத்திய நாரணரின்

      சந்நிதி முந்நிலை தருகிறது!


ஜயஜய சத்திய நாராயணா

       நலந்தரும் நித்திய பாராயணா 

ஜயஜய ஶ்ரீஹரி நாராயணா!

      ஜகதோத் தாரணா நாராயணா!


நாரயணா ஶ்ரீமந் நாராயணா!

     நாரயணா ஶ்ரீமந் நாராயணா!

நாரயணா ஶ்ரீமந் நாராயணா!

     நாரயணா ஶ்ரீமந் நாராயணா!


மீரா

5-5-2023

Rajja Gopalan

unread,
May 26, 2023, 8:53:25 AM5/26/23
to santhav...@googlegroups.com


🙏
செம்ம லரிதோ! குளிர்ச்
செந்த ணலிதோ!
சம்ம ணமிடும் ஒளிர்ச்
சந்தி ரனிதோ!

செம்ம ணியிதோ! மிளிர்ச்
செம்ப வளமோ!
பெம்மன் அன்புரு தளிர்ப்
பேழை என்பதோ!

அம்மை என்பதோ! அமுத
அருவி யோ!கொடும்
வெம்மை தீர்த் தருள்
விருந்து என்பதோ!

எம்மை ஆள் பொருள்
என்ற ஜோதியோ!
பொம்மை யாமெனுட்
புகுந்த நீதியே!

மீ. ரா
26-5-2023

Sent from my iPhone

image.png

Rajja Gopalan

unread,
May 28, 2023, 8:31:07 AM5/28/23
to santhav...@googlegroups.com

🙏
*பணிவிலே உயர்வு*

*ஆளுமை என்பதென்ன?*
அனைத்தையும் கட்டிக்காக்கும்
தோளுடை வீரம்! யாவும்
துயரற வாழச்செய்யும்
வாளுடன் வறுமைநீக்கும்
வளமிகு திட்டம்ஈட்டல்!
தாளினில் ஆன்றோரன்ன
தயவினிற் பட்டம்சூட்டல்!

*காலிலே வீழல்நன்றோ?*
கனிவருள் தருவார்பாதம்
மேலுயர் வார்கள்போற்றி
மெய்ப்புகழ் அடைதல்நீதி!
வாலறி வாரடி யார்கள்
வகுத்திடக் கொடுத்த சொல்கோல்
சாலுற ஆட்சி செய்து
சரித்திரம் படைக்கும் அன்றோ!

*பதவியில் உயர்வோர்க் கழகு?*
பணிவுடன் பழகிக் காத்தல்!
இதமுடை வார்த்தை ஆற்றல்!
இழிசெயல் இடித்து ஓட்டல்!
உதவிடும் நலத்திட் டத்தால்
உயர்த்திடல்! உழைத்தார்க் கின்பம்
நிதமினிச் செயவரு *மோடி*
நிச்சயம் பெறல்புகழ் கோடி!

மீ. ரா
image.png

Rajja Gopalan

unread,
May 28, 2023, 8:35:49 AM5/28/23
to santhav...@googlegroups.com

*செங்கோல். (சொல்கோல். தவறு)
Sent from my iPhone

> On 28 May 2023, at 13:31, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
>
> 
> <image.png>

Rajja Gopalan

unread,
Jun 1, 2023, 4:26:21 PM6/1/23
to santhav...@googlegroups.com


image


🙏


*பழம்காய்மலர் - பாடம்*


பழுத்தது பாடமும் சொல்லும்!

பணிவிலே காய்த்தது கல்லும்

வழுத்திடு வாரவர் முன்னம்

வரிந்திட நின்றருள் கொள்ளும்!

விழுத்துணை ஆல்மரக் கன்றும்

விளைந்திடும் பாலகன் என்றும்

கழுத்திடம் கருத்தவர் வடிவை

கருணயின் குருவெனப் பணியும்!


மீரா



Sent from my iPhone

On 28 May 2023, at 13:35, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Jun 3, 2023, 8:20:19 AM6/3/23
to santhav...@googlegroups.com

image



🙏🙏


சாய்ந்தமர்ந் தேயிது  ஜோதி!

சங்கராச் சாரியர் நீதி!

ஓய்ந்தமர்ந் ததுவும்உ பாதி!

உண்மையாய் ஆனஅ  நாதி

ஆய்ந்தருள் மறைகளும் ஓதி

அற்புத மிடுமனு பூதி

காய்ந்தநம் கலனில்வி பூதி

கனிகிற மழையின்சம் பூதி!


Leaning as the restful light!

The Effulgence of  Sankara’s might!

Resting is the adjunct’s plight!

As the  infinite Truth is at Sight!

Which the Vedas seek as the Insight,

The mystical  bliss in front forthright 

As the falling grace upon our arid hearts

The shower of bliss that forever lasts!


Aum Gurubhyo Namah



மீ. ரா

Rajja Gopalan

unread,
Jun 5, 2023, 5:11:36 AM6/5/23
to santhav...@googlegroups.com

image0.jpeg


🙏


ஓம் குருப்யோ நம:


செம்மறைச் சாமம் ஓதச்

செந்தணல் யாகம் ஆக

மும்மறை ஞான தீரன்

முற்றுணர் வேதச் சீலன்

நம்குரு காஞ்சி நாதன்

நற்றுற வேற்ற நாளின்

இம்மைநாற் பதாண்டு போற்றி!

இனும்நூறு வேண்டு வோமே!


ஜயஜய சங்கர ஹரஹர சங்கர


மீராஜகோபாலன்


Sent from my iPhone

On 3 Jun 2023, at 13:20, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



<image.png>



Rajja Gopalan

unread,
Jun 22, 2023, 6:23:05 PM6/22/23
to santhav...@googlegroups.com
image.png

Rajja Gopalan

unread,
Jul 19, 2023, 4:28:51 AM7/19/23
to santhav...@googlegroups.com
image0.jpeg

Rajja Gopalan

unread,
Jul 22, 2023, 5:51:03 AM7/22/23
to santhav...@googlegroups.com

image.png

கலையவளை நிலையவளைக்
கடலவளை நதியவளை
மலையவளை நிலமவளை
மழையவளை வெயிலவளை
நிதியவளை நிறைவவளை
நிழலவளைக் குளிரவளை
மதியவளைக் கதிரவளை
மறையவளை முறையவளைப்
புதிதவளைப் புதிரவளைப் புகலவளைச் சுகமவளை
விதியவளை ரதியவளை விடையவளை உடையவளை
நல்லவளை உள்ளவளை
நயனவளைச் சுடரவளை
வல்லவளை மாசக்தி
வடிவவளைத் தாயவளை

முத்துவளை  ரத்னவளை  
முகிழுமணி யாரவளை
பத்துவளைப் படிகவளைப்  
பலநூறு ஆனவளைக்
கல்லில்வளைக் கனகவளை கவின்வயிர மாலைவளை
பல்வடிவி லானவளை  
பவளவளை யாரவளை
சூடுவளை யானறியச்  
சுகவளைய மாயெனது
வீடுவிளை யாடுமிடம் !  
வெற்றியெனக் கானாயே!  
பாடுவளைப் பாடுவளைப் பாட்டுவளைத் தேயெனது
கூடுவளை யாதுயர்த்திக்
கொலுவிருக்க லானாயே!

ஓம் ஜய பரசாக்தி!

மீ. ரா
22-7-2023

On Wed, 19 Jul 2023 at 09:28, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:




🙏

அண்டபகி ரண்டமும் விண்டதிர வேமறையுள்
கண்டபரந் தாமனுனுட்  சென்றமர - வந்தருள்க
தொண்டன் எனக்குங்கால் தோதாகா தோகருடா
தண்டம் தலையுந்தன் தாள்!


Making all the Universes to tremble in sheer ecstacy, Sri Paranthaanan,  Who the Vedas see as their true import, mounted on you! May you come to bless!

For this servant, O Garuda, won’t Your dive feet heed! My staff (belongings) and my head (the Self) are prostrating at Thine feet!

Rajja

Rajja Gopalan

unread,
Aug 13, 2023, 5:45:56 AM8/13/23
to santhav...@googlegroups.com


🙏

மங்களா ஸாசனீ! மாதவி!பார்வதி!
மாசக்தி ! காந்தி மதிநீ!
மாலக்ஷ்மி! சாரதே! மாங்கல்ய பூஷணீ!
மாமாயி! சக்தி உமைநீ!

திங்களா தித்யசத கோடிஜகத் காரணீ!
தேவமுனி யோர்பணி வுறுந்
திரிகால ருபிணீ! திவ்ய ஆனந்தினீ!
திவ்யபரி பூரணி நீ!

பங்கயாட் சநற் பரிவருட் கடாட்சினீ!
பழுமறைப் பொருளமுது நீ!
பைரவி! ஶ்ரீப்ரஹந் நாயகி! ஆனைக்கா
பயத்தகி லாண்ட தேவி!

எங்களா லாதுமிய லாதனால் வந்தருள்
எமையாளும் பர தெய்வமே!
எழிலரசி! காமாட்சி! மீனாட்சி! அன்னையே!
என்றுமுனை யேபணி வனே!

மீ. ரா
image.png

Rajja Gopalan

unread,
Aug 31, 2023, 7:32:21 PM8/31/23
to santhav...@googlegroups.com

image

🌸🙏🌸


கண் திறந்து பாராத்தா

கடம்பங் குடிராணி! - அருட்

பொன்னழகி ராக்காயி!

பூரணியே மாமாயி!


ஊருசனங் கூடி 

உந்தன்மணிக் கோபுரத்தை

பாருயரக் கட்டி - துதி

பாடுவதைப் பாராத்தா!


வெங்கலமும் மண்கலமும்

வெள்ளி மணிவிளக்கும்

மங்களமாய் ஏத்தி - உனை

மனங்குளிரச் சீராட்டி


தங்கமணித் தோரணமுந்

தாழம்பூத் தாமரையும்

வாழமரத் தோடே - மலர்

வரிசையிலே  மாவிலையும்


பேழையிலே அட்சதையும்

பெரும்பந்தல் நட்டுவச்சு

சூழவரும் பூத்தட்டு - பல

சுமந்துவரப் பாராத்தா!


வாசப்புறந் தெளிச்சு

வாரிழைத்த நற்கோலம்

பூசுஞ்செம் மண் - இட்டுப்

புதுப்பட்டுப் பாயுமிட்டு


ஊஞ்சலையும் ஆடவிட்டு

உலவையிட்டு மாலையிட்டு

சாஞ்சகதிர் நெல்போல - நினைச்

சரணடைந்தோம் பாராத்தா!


நல்லகதி தரும்பெரிய

நாயகியே பாராத்தா!

சொல்லரிய சோதியளே! - சுடர்ச்

சூலியெமைப் பாராத்தா!


அம்புலியாற் கீறி

ஆகாயக் கங்கையிடும்

கும்பத்தில் பன்னீரு! - அருட்

குடமுழுக்கு நந்நீரு!


அம்பிகையே நம்புகிறோம்!

அன்பிலருள் சேராத்தா!

வெம்புலியின் மேலமரும் - திரு

வேதியளேபாராத்தா!


மாசுமுடல் நோவுமற

தேசுமனத் தேயொளிர

நேசமுடன் உள்ளாராய் - இனித்

தேசமுள்ள எல்லாரும்


வாழவரம் சேராத்தா!

வாசவியெம் ராசாத்தி!

ஈசனருட் பேறாத்தா! - இனி

எங்களைநீ பாராத்தா!


கடம்பங்குடி பூத்தவளே!

கண்ணிலருள் கோத்தவளே!

உடனடியைக் காட்டாத்தா! - உல

குய்யவருள்  கூட்டாத்தா!


சாதிமத பேதமற

சனங்களெல்லாம் நீதியுற

வீதிவரு வாயாத்தா - அனு

பூதியருள் வாயாத்தா!


மீரா


(கும்பாபிஷேகம்: 3-9-2023)

Rajja Gopalan

unread,
Sep 15, 2023, 2:00:12 AM9/15/23
to santhav...@googlegroups.com
image0.jpeg


வானச்சுட ரானக்கதிர் கோடிப்பொரு ளாகும்

தேனத்தனை யாவுஞ்சுவை யூடித்திர ளாகும்

ஞானச்சிவ மானக்கயி லாயக்கிரி மேலுன்

மோனத்திரு காணக்களித் தேனப்பனே யானே!


மீரா


Rajja Gopalan

unread,
Sep 17, 2023, 1:48:16 AM9/17/23
to santhav...@googlegroups.com
image0.jpeg

வேளை அதி காலை உதி  சோதிச் சுடராக

மூளை மதி வேலை ஸ்ருதி - போதித் ததுவாக

நாளை நிதிச் சோலைக் கதி - சாதித் திடலாகத்

தாளைத் துதிவேலைப் பதிபாதிப்பினி ஏதே!


At dawn, like the rising lustre of Sun

May the task of the mind be the Vedic Truth

so that the day become a garden of wealth

Adore the feet and meditate on Lord Murugan - Then where is affliction! 


Rajja



Sent from my iPhone

On 15 Sep 2023, at 07:00, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Sep 23, 2023, 5:21:35 AM9/23/23
to santhav...@googlegroups.com


இடக்கால் எடுத்துயர்த்தல் இடக்கா? - இலைஎன்னுள்
விடக்கால் விடுத்த விடையருளா? -
நடக்கால் நடராசன் நாயகியா? -
நாரணனே
தடக்கால் பதியெந்தன் தலையுனக்குத் -
தந்தேனே!


why lifting the left leg, is it a sport?
or inside me
imprinting Thine feet as Your grace?
Or because Thou art the consort of Siva?
O Narayana!
To place Thine divine feet, is my head
That I offered, Haven’t I!

Mee. Ra

>
>>
>>>
image0.jpeg

Rajja Gopalan

unread,
Sep 23, 2023, 5:46:42 AM9/23/23
to santhav...@googlegroups.com

image

பூடகமாய் நெஞ்சுட் 

          பொன்னொளியாய்க் கொஞ்சும்

நாடகசா லுஞ்சும் 

           நாரணனே  தஞ்சம்!


வீடகமாய் விஞ்சும் 

           விண்வெளியாய் மஞ்சம்

ஊடகமாய்க் கெஞ்சும் 

            உன்னடியேன் தஞ்சம்!


As the indwelling secret of the heart
     the sacred effulgence of golden spot
Is the eternal remains of Nataka Sala Temple
      O Narayana, my refuge, I am humble !

My heart be your home! and the vast
    expanse of space your retreat!
Subtly In my heart,  is this pleading
     slave of yours, in refuge ever needing!

Rajja Gopalan

unread,
Oct 14, 2023, 1:45:54 AM10/14/23
to santhav...@googlegroups.com
image0.jpeg


🙏
மாகாளி நீயே! 
மாலக்ஷ்மி நீயே! 
மாஞானி கலைவாணி  
மாதங்கித் தாயே!

maakaal'i neeye! 
maalakshmi neeye! 
maaJnaana kalaivaani  
maathankith thaaye!

தேகாதி யந்தக் 
கரணாதி தாண்டும்
போதானு பூதிப்  
புகலான மாயே!

dehaadhi andak
karanaathi thaandum
bhodaanu bhutip
puhalaana  maaye!

ஏகாதி மூல 
ஶ்ரீ சக்ர ராஜ
ராஜாதி ராணீ! 
ரமணீய வாணீ!

ekaathi moola 
shree chakra raaja
raajaathi raanee! 
ramaneeya vaanee!

வாராஹீ! நவராத்ரி 
பீடாலங் காரீ!
வரவேண்டுந் தரவேண்டும் 
வளம்யாவும் நீயே!

vaaraahee! navaraathri 
peetaalang kaaree!
varaventun tharaventum 
val'amyaavum neeye!

Rajja


Sent from my iPhone

On 23 Sep 2023, at 10:46, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



<image.png>

Rajja Gopalan

unread,
Oct 14, 2023, 4:15:25 PM10/14/23
to santhav...@googlegroups.com


Sent from my iPhone

On 14 Oct 2023, at 06:45, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



Anand Ramanujam

unread,
Oct 14, 2023, 6:52:50 PM10/14/23
to santhav...@googlegroups.com
கவிதையும் பாட்டொலியும் மிக அருமை!
…  

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Oct 15, 2023, 3:32:42 PM10/15/23
to santhav...@googlegroups.com
🙏🙏

Sent from my iPhone

On 14 Oct 2023, at 23:52, Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:



Rajja Gopalan

unread,
Oct 20, 2023, 6:44:38 AM10/20/23
to santhav...@googlegroups.com


image

காளியாய் வாணியாய்க் காலாத்ரி தேவியாய்
கருணைதிரு மகள்வடிவ மாய்
கற்பகத் தருநிதி கௌமாரி ஜோதியாய்க்
கைவல்யந் தரும் அமுதமாய்

தாளினால் எந்தலை தகுமகுடஞ் சூடுவாய்!
தயைவிழி மழைபொழிகு வாய்!
தாயுனது சேயனெமை நீயணைந் தாதரி!
தக்கதுணை என்றுமருள் வாய்!

கோளினா லேதுகுறை? கூற்றன்பயம் ஏதினி?
கும்பிட்டு ஐயன் துணையாய்க்
கூவினோம் மஞ்சமா தேவியுன் நாமமே!
குங்குமக் காரி! வருவாய்!

மாளிகா புரத்தருள் மஞ்சமா தேவியே!
மாங்கல்ய தாரந் தருவாய்!
மன்றமிருந் தெங்களிருள் மங்கியொளி பொங்கவருள்
மாதரசி நீயருளு வாய்!

மீ. ரா

20-10-2023

Rajja Gopalan

unread,
Oct 28, 2023, 1:32:27 AM10/28/23
to santhav...@googlegroups.com

*Divinity in the Shadow of Darkness*


image0.jpeg



The eclipse

A passing  shadow of darkness

Blanketing the luminance of grace!

A few moments of drama

Causing adversity and trauma!

Sometimes and for somethings!


To revere and adhere 

To the rules of the game 

Set by the scriptures of fame

Must be the common sense!

But our ego so dense

Is Eager to miss the point

Quoting mere astronomical slant!

That even the scientists do not dare

Yet our pseudo knowledge tries to bare!


Eclipse,  the shades that hide

Is the Nescience, our vain  pride!

The luminous Moon is our reflecting Mind

The role it plays as the Jiva to grind!

Know that the  True effulgence is in the Sun

That is Our eternal Self, the Conscious Inn!


Take the bath to shed the dirt of filth!

May the vain  ego go and bring forth

The divine light in us to shine!

And the Oblations for ancestors to dine! 

A fasting in faith for a few hours to last

To bring us joy which forever last!


God bless! 


Rajja 

28-10-2023

Anand Ramanujam

unread,
Oct 28, 2023, 7:51:28 AM10/28/23
to santhav...@googlegroups.com
our pseudo knowledge tries to bare”

Very true!

Excellent poem!


On Sat, Oct 28, 2023 at 1:32 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:

*Divinity in the Shadow of Darkness*





--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Rajja Gopalan

unread,
Oct 28, 2023, 8:30:26 AM10/28/23
to santhav...@googlegroups.com
image


🙏

அசையாய் அருள் இசையாய்
அருவுருவாய் அமர் சிவமே!
அமுதாய்ப்பவ  இருள் யாவையும்
அரிவாய்! பர சிவமே!

விசையாய்மிசை முழுதும் படர்
வெளி யாகிய  மாயை
விரிவாயுமை துணையாய் வரும்
விழுதே அமு தெனவே

பசையாய்ப் புகல் இருதாள்மலர்
படர்வேன் விடல் அறியேன்
பரிவாய்வரந் தருவாய்க் குரு
பரனே உடன் வரவே 

தசையாயுடல் தடை தாண்டிய
தகையாய் ஒளிர் ஞானந்
தருவாய்க்கதி அருள்வாய் உனுள்
தழைவேன் இனித் தவமே!  

மீ. ரா
28-10-2023

Sent from my iPhone

On 28 Oct 2023, at 06:32, Rajja Gopalan <raj...@gmail.com> wrote:



*Divinity in the Shadow of Darkness*


It is loading more messages.
0 new messages