[பசுத்தோல் போர்த்திய புலிகள் காணும் கலியின் லக்ஷணம் அறிந்தவன்!]
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் அம்மானை வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை!
எப்போதோ படித்தது. - புலவர் இராமமூர்த்தி.
திருத்தம்:இரண்டாமடி - வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் அம்மானை
--
எக்கண் இருந்தாலும் எண்டிசையும் நோக்கியருள் ன்.
[பசுத்தோல் போர்த்திய புலிகள் காணும் கலியின் லக்ஷணம் அறிந்தவன்!]
மலைமகளைத் தான்மணந்தோன் மூவருளும் மேலான
நிலையுடையோன் என்னுமுயர் நீர்மையன்காண் அம்மானை
நிலையுடையோன் என்னுமுயர் நீர்மையனே ஆமாகில்
தலையெடுக்கும் ஆணவமும் சார்ந்தவனோ அம்மானை
தலையெடுக்கும் வேளையில்ஊண் தானிரக்கும் அம்மானை!
(தலைஎடுத்தல்: உண்டாதல், தலையைக் கொய்தல். பின்னது, தான் சிவபெருமானினும் உயர்ந்தவன் என்று தருக்குக் கொண்ட பிரமனின் ஐந்தாம் தலையைக் கொய்தபின் அதற்குப் பரிகாரமாய்த் தலையோட்டில் பிச்சையெடுத்துண்டதைக் குறிப்பது. சிவன் தான் எளிமை காப்பதுடன் பிறரது ஆணவ மலத்தையும் அழிப்பவன் என்றவாறு.)
குறிப்பு: தரவு கொச்சகக் கலிப்பா வகையில் அமையும் அம்மானைப் பாடல்களில் அடிகளுக்குள் வெண்டளை பயிலுமாறு அமைப்பதை இலக்கியத்தில் காண்கிறோம். ஈற்றடியில் சிலேடையணி அமைத்தல் சிறப்பு. புலவர் இராமமூர்த்தி இட்ட ‘ஈசன் பசுவாகி.. ‘ என்ற பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. (’இலக்கிய வேலில்’ இட்ட அம்மானைக் கட்டுரையை இணைத்துள்ளேன்.)
அனந்த் 7-7-2016
On Jul 6, 2016 5:43 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:
- நன்றி, கணேசன்.
- தனிப்பாடற்றிரட்டில் காணும் பாடலில் தட்டச்சுத் தவஊ ஒன்று உள்ளது:
- ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
- வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
- வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
- காசளவு பாலும் கறவாதோ அம்மானை
- கன்றை *உதைத்த காலி* கறக்குமோ அம்மானை. (30)
- இங்கு, ஈற்றடி புலவர் இராமமூர்த்தி தந்தபடி, “கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானை!” என்றிருக்க வேண்டும் (வெண்டளை ஒட்டிச் சீர்பிரித்தது).
- அனந்த்
கணேசனார்க்கு நன்றி. அவர் இடுகையால் அனைத்துப்பாடல்களையும் படித்தேன். -புலவர் இராமமூர்த்தி.
கணேசனார்க்கு நன்றி. அவர் இடுகையால் அனைத்துப்பாடல்களையும் படித்தேன். -புலவர் இராமமூர்த்தி.
On Thursday, July 7, 2016 at 5:07:37 PM UTC-7, ananth wrote:
- நன்றி, கணேசன்.
- தனிப்பாடற்றிரட்டில் காணும் பாடலில் தட்டச்சுத் தவஊ ஒன்று உள்ளது:
- ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
- வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
- வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
- காசளவு பாலும் கறவாதோ அம்மானை
- கன்றை *உதைத்த காலி* கறக்குமோ அம்மானை. (30)
- இங்கு, ஈற்றடி புலவர் இராமமூர்த்தி தந்தபடி, “கன்றைஉதை காலி கறக்குமோ அம்மானை!” என்றிருக்க வேண்டும் (வெண்டளை ஒட்டிச் சீர்பிரித்தது).
- அனந்த்
தனியிழையில் மூவரம்மானை நூல் பிடிஎப் பார்ப்போம். அதைத் தட்டெழுதினால் சில பாட வேறுபாடுகள் கிடைக்கலாம்.நா. கணேசன்
On Jul 6, 2016 5:43 AM, "Ramamoorthy Ramachandran" <rawmu...@gmail.com> wrote:
> ஈசன் பசுவாகி ஏமனொரு கன்றாகி
> வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் அம்மானை> வீசுபுகழ் ஆரூரின் வீதிவந்தார் ஆமாயின்> காசளவு பாலும் கறவாதோ அம்மானை> கன்றை உதைகாலி கறக்குமோ அம்மானை!> எப்போதோ படித்தது. - புலவர் இராமமூர்த்திமூவரம்மானை - பழைய பதிப்பு பார்த்தேன். அதில் காணோம்.ஆனால், தனிப்பாடற்றிரட்டு நூலில் இருக்கிறது.புலவர் செங்கை பொதுவன் தட்டச்சித் தந்துள்ளார்.பழைய 86 அம்மானைப் பாடல்கள் வாசிக்கலாம்:நா. கணேசன்
கோபால்.எட்டிவிடக் கசப்பாகும் என்பதனால் அம்மானை! [எட்டி விடமாய்க் கசக்கும்]]எட்டாநற் கனியென்ற தென்னவிதம்? அம்மானைஎட்டாநற் கனியிந்த எழிலான அம்மானை!கிட்டாமற் போகாது கிடைத்துவிடும் அம்மானை!
கிட்டாமற் போகாது கிடைத்துவிடு மேயாகில்
உமையவளுக் குப்பாதி தந்தமையால் ஒன்றரைக்கண்!சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் அதனையுமே!சமயத்தில் கண்ணப்பன் தனக்கிழந்தான் என்றக்கால்இமையாத அரைநுதற்கண் இருக்குமே அம்மானைஇருப்பதுவும் எரிக்கும்கண்! என்செய்வான் அம்மானை!நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.குறிப்பு:(''ஈசன் பசுவாகி'' எப்போதோ படித்தது! யார் இயற்றியதுஎன்பதை அடியேன் அறியேன்!)
நன்றி உ.வே.சா. எழுத்துவன்மை என்னுளத்தை நெகிழச் செய்த்து. பிச்சைக்காரனிடமும் பிச்சை எடுத்துத் தந்த தமிழ். கோபாலின் அம்மானையால் செல்வம் சேர்க்கிறது. கோபால் வாழ்க! -புலவர் இராமமூர்த்தி.
பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன. அம்மானைப் பாடல்களின் 4-ஆம் அடியில் வினாவைத் தொடர்ந்து அம்மானை என்ற சொல்லை அமைப்பது வழக்கம் (பாடலில், கேள்வி எழுப்பும் பெண்ணின் பகுதியை இது குறிப்பிடும்.) 6,7,8,10-ல் இச்சொல் இல்லை. இவ்வாறான அமைப்பு இலக்கியத்தில் உள்ளதா என அறியேன்
அனந்த்
--
கோபால்.நல்வாழ்த்துக்களுடன்,சில நாட்கள் வெளியூரில் இருந்தபோது வலைக்கு வெளியில் மாட்டிக் கொண்டிருந்தேன். விடுபட்டவுடன் மீண்டும் வலைக்குள் தலைகுனிந்து நுழைகிறேன். என் அம்மானை முயற்சிக்குப் பாராட்டுத் தந்தவர்களுக்கு அன்பு நன்றி.சில பாடல்களின் 4ஆம் அடியில் அம்மானை இல்லாமல் எழுதுகையில் எனக்கும் சந்தேகம் வந்தது; அது தோழியின் பேச்சாயிற்றே என்று. நான் என்னுள் ஒரு கற்பனை செய்துகொண்டேன். கேள்வி வந்தவுடன் இடைவெளிவிடாமல் மறித்து இவள் பதிலை வீசுவதாக! அறிஞர்கள் இது தவறென்று கருதினால் மாற்றி எழுகிறேன்.
2016-07-10 8:23 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன. அம்மானைப் பாடல்களின் 4-ஆம் அடியில் வினாவைத் தொடர்ந்து அம்மானை என்ற சொல்லை அமைப்பது வழக்கம் (பாடலில், கேள்வி எழுப்பும் பெண்ணின் பகுதியை இது குறிப்பிடும்.) 6,7,8,10-ல் இச்சொல் இல்லை. இவ்வாறான அமைப்பு இலக்கியத்தில் உள்ளதா என அறியேன்
கோபால்.நல்வாழ்த்துக்களுடன்,86 பழைய அம்மானையும் பாருங்கள், திரு. கோபால். அதுபோல், மாற்றி எழுதித் தாருங்கள்:நன்றி திரு கணேசன். முயல்கிறேன்.[திரு என்பது முழுச்சொல். திருவாளர் என்பதன் சுருக்கமாகக் கொண்டு புள்ளிவைக்கப் படுகிறதா?]
2016-07-13 7:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
gopal.probably a copying of custom from English.The English custom is consistent in supplying a dot after an abbreviation. Thus, even if we copy their custom, a dot after a full word, except as a mark of end of a sentence, is wrong. 'Sri.' is wrong. 'Smt.' is right.