மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்

727 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 17, 2022, 10:38:52 AM1/17/22
to Santhavasantham


மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்

மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்
-----------------------------------------
தைப் பொங்கல், மகர சங்கிராந்தி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. மகரம் என்பது முதலையின் ஆதிப் பெயர் என முதலில் விளக்கியவர், இந்தியக் கலைவரலாற்று நிபுணர், ஆனந்த குமாரசாமி ஆவார்.  https://en.wikipedia.org/wiki/Ananda_Coomaraswamy அவரது தந்தையார் ஸர் முத்துக்குமாரசாமி யாழ்ப்பாணத்தார். தமிழர்களில் முதல் பார்-அட்-லா.  மகரம் துருவ நட்சத்திரத்தின் சின்னமாக, 4700 ஆண்டுகளாக விளங்கி வருகிறது: http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html இந்தியாவில் மூன்று வகையான மகரங்கள் வாழ்கின்றன: (1) நன்னீர் முதலை (2) உவர்நீர் முதலை (கராம்; Cf. கரை - கடற் கரை) (3) கங்கை முதலை (விடங்கர்/இடங்கர் Cf. விந்து/இந்து). இந்த விடங்கர் எனப்படும் முதலை இனமானது லிங்கத்தின் தோற்றம், மகரவாய் எனப்படும் கோவில் நீர்வழிகளின் சிற்பங்கள், திருவாசிகள், காதுகளில் குண்டலம், ... எனப் பல இடங்களில் பயன்படுவது.  [References: 1 & 2]. மூன்று முதலை இனங்களையும் தொல்காப்பியம் மரபியல் உரையில் பேராசிரியரும், சங்க இலக்கியம், தொல்காப்பிய உரைகளில் நச்சினார்க்கினியரும் விளக்கியுள்ளனர். 
மகரம் என்பதன் உண்மையான பொருளும், அந்த உயிரினமும் தென்னிந்தியாவில் மறைந்த காலங்களில் உருவான தமிழ் இலக்கியங்களில், மகரம் என்பதைச் சுறா மீன் என்று பாடத் தொடங்கினர். ஆனால், சிந்துவெளியிலோ, சங்க காலத்திலோ மகரம் என்பது சுறா மீன் (சுறவம்) அன்று என்பது தெள்ளத் தெளிவாகத் தொல்லியல், சிற்பவியல், நாணயவியல், பனுவலியல் (Study of Texts), மொழியியல் போன்ற துறைகளின் ஆராய்ச்சியால் நிறுவப்பெற்றுள்ளது. உதாரணமாக, தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-துணைவேந்தர் பேரா. வ. ஐ. சுப்பிரமணியம் அவர்களின் நினைவஞ்சலி மலரில் என் கட்டுரையை வாசிக்கலாம். 
மகரயாழ் என்பதை, விடங்கர் https://en.wikipedia.org/wiki/Gharial கொண்டே சுவாமி விபுலானந்தர் தம் யாழ்நூலின் முகப்போவியமாய் அமைத்தார். 
இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் 27 நட்சத்திரங்கள் மிகப் பழமையானவை. சிந்துவெளியிலே கண்டுபிடிக்கப் பெற்றவை என்பதை விரிவாக பேரா. அஸ்கோ பார்ப்போலா போன்றோர் ஆழமாக ஆராய்ந்து காட்டியுள்ளனர் சீனாவுக்கும் அவ் வானியல் அறிவு சென்றுள்ளது. தொல்காப்பியத்தில் 27 நட்சத்திரப் பெயர்களுக்கான சூத்திரம் தந்துள்ளார் தொல்காப்பியர்.  பௌர்ணமி திதியில் எந்த நக்ஷத்திரம் உள்ளதோ, அந்த விண்மீனின் பெயரால் அமைவது தமிழ்த் திங்கள்/மாதத்தின் பெயராகும். இந்தப் 12 மாதப் பெயர்களில் தந்தை, தலைவன், கடவுள் எனப் பொருள்கொண்ட “தை” ஒன்றே தமிழ்ப் பெயர். குரீ/குரீஇ போல, தை தைஇ என்றும் தொன்மையான வடிவில் சங்க நூல்களில் வரும். சில ஆயிரம் ஆண்டு பின்னர். ராசி சக்கரம் (Zodiac)  பாபிலோனில் உருவாகி, இந்தியா வந்தடைந்தது.
புலவர் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை திராவிட இயக்கத்தின் முதல் எழுத்தாளர்களில் ஒருவர். தலவரலாறுகள், இதிகாசங்கள் போன்றவற்றைப் பற்றி நிறைய எழுதிய தமிழாசிரியர். கலைச்சொல் ஆக்கத்தில் உழைத்தவர். ஆ. ரா. வேங்கடாசலபதியின் ‘திராவிட இயக்கமும், வேளாளரும்’ என்ற முக்கியமான ஆய்வுநூலில் இ. மு. சுப்பிரமணிய பிள்ளை பற்றித் தெரிந்துகொள்ளலாம். இ.மு.சு. பிள்ளை தமிழ் மாதப் பெயர்களை, தொல்காப்பியத்திலே கூடக் குறிப்பிடும் மிகத் தொன்மையான விண்மீன் பெயர்களில் இருந்து மாற்றிச் சோதிடத்தில் ராசிக் கட்டம் என்றிருக்கும், ராசிச் சக்கரப் பெயர்களாக்க முற்பட்டார். மக்களிடையே இம்முயற்சி வெற்றியடையவில்லை. மிகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மலையாள மாதங்களில் இவ்வாறே ராசிகளின் பெயர்கள் மாதப் பெயர்களாக அமைந்துள்ளன. மலையாள மாதப் பெயர்களுக்கு, புதுமையாக தனித்தமிழ்ப் பெயர்களை உருவாக்கி இ. மு. சுப்பிரமணிய பிள்ளை எழுதினார். அவற்றைத் தனித்தமிழ் இயக்க ஆசிரியர்கள் சிலர் இன்றும் எழுதுவதை அவ்வப்போது காணலாம். ஆனால், தைத் திங்களுக்கு சுறவம் என்ற சொல்லை விட, தொல்தமிழ்/திராவிடப் பெயராக 5000 ஆண்டுகளாக உள்ள மகரம் என்ற சொல்லே பொருத்தமானது எனத் தொல்லியல், கலைவரலாறு, மொழியியல் காட்டுகின்றன.  சுறவம் என்று மகரத்தைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பழந்தமிழ்ச் சொல்லாகிய - சங்க இலக்கியத்தில் பயிலும் “மகரம்” என்ற சொல்லை தனித்தமிழ் ஆர்வலர்கள் இராசிச் சக்கரத்தால் புதிதாக உருவாகும் 12 மாதப் பெயர்களில் பயன்படுத்த வேண்டும். மகரம் வேறு, சுறவம் வேறு. எனவே, ராசி சக்கிரத்துக்கு உள்ள பெயர்களில் தனித்தமிழ் திங்கட் பெயர்களில் மகரம் என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்துவோம்.
இவ்வாண்டு. கி.பி. 2022-ல் திருவள்ளுவர் ஆண்டு எனத் தொடராண்டாகத் தைப் பொங்கல் தொடங்கி  Linear Year-ஐயும், சித்திரை முதல்நாளைத் தமிழ் புத்தாண்டு தினம் என்றும் தமிழ்நாட்டு அரசாங்கம் கொண்டாடுகிறது.
நா. கணேசன்

இ. மு. சுப்பிரமணிய பிள்ளை அமைக்கும் தனித்தமிழ் 12 ராசி மாதப் பெயர்கள்:
------------------------------------------------------------
"ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.
அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.
அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைசாகம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.
சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளிச் சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.
ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர் களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும்.
பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்தென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! " - இ. மு. சுப்பிரமணிய பிள்ளை
(செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25, 1951).
References:
------------------
(1) N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011. https://archive.org/details/MakaraADravidianEtymology2011
(2)  N. Ganesan, Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.     https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up
(3) Asko Parpola, Beginnings of Indian and Chinese Calendrical Astronomy.
Journal of the American Oriental Society. Vol. 134, No. 1 (January-March 2014), pp. 107-112.
(4) Asko Parpola, Crocodile in the Indus Civilization and later South Asian tradition, 2011, Kyoto, Japan. 53 p.
(5) Divine Couple in Ancient Indian Astronomy from 4MSR site near Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai:

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Jan 20, 2022, 8:42:38 PM1/20/22
to Santhavasantham
On Thu, Jan 20, 2022 at 12:52 AM Dr.Krishnaswamy Nachimuthu <tamizhkina@...> wrote:
> அன்புடையீர்,
> வணக்கம். நல்ல வரலாற்றுத் தொகுப்பு.ஆவணப்படுத்தவேண்டியது. நாம் எல்லாம் நீர் மேல் ஓடத்தில் போகிறோம் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு. வாழ்க. நன்றி
> கி.நாச்சிமுத்து

தமிழிலே ’ஃசோடியாக்’ வெகுகாலமாக உண்டு. உ-ம்: நெடுநல்வாடையில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய குறிப்பில், ஆடு என 12 ராசிகளில் முதல் ராசி குறிப்பிடப்படுகிறது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்பது வஞ்சி மாநகருக்கு - இன்றைய கரூர் - வடநாட்டு சோதிட நிபுணர்களைக் கொணர்ந்து முதன்முதலாக, ஆண்டுக் கணிப்பை விக்கிரம சகாப்தம் வழியாக நாட்டியதால், சேர மன்னன் பெற்ற விருதுப் பெயர் என்ற விளக்கம் இருக்கிறது. ஆடு என்பது யாதவர் மேய்க்கும் ஆடு (கால்நடை) அன்று என்பது சொல்லாமலே விளங்கும். இலக்கியமாகப் பார்த்தால், கொங்கு நாட்டுப் பெரும்புலவர், சமண முனிவர் திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியில் 12 ராசிகளையும், அதனால், தமிழ் ஆண்டு சித்திரையில் (ஆடு ராசி) தொடங்குவதைப் பாடல்களால் விவரித்துள்ளார். சமணர்களின் திருவள்ளுவ தேவர் என்னும் வழக்கையும், அவர்கள் தேவர் என்றாலே, வள்ளுவரைக் குறிப்பதையும் ஒப்பிடுக. ’கனலிவட்டம்’ என்று Zodiac-க்கு அழகிய கலைச்சொல் படைத்தளித்தவர் சிந்தாமணி உடையார் தாம்.
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)
https://groups.google.com/g/santhavasantham/c/-E6P993IAz8/m/0qx1ig1BAgAJ

மகர விஷு, மகர ரவி, மகர நாயறு, மகர ஞாயிறு என்றெல்லாம் சேரர், சோழர், பாண்டியர் கல்வெட்டுக்களில் ராசிப் பேரை வைத்துத் தை மாதம் குறிப்பிடப்படுகிறது. ராசிகளின் பெயர்களைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுதி, பிற்கால மூவேந்தர்களின் வானியல் ஆராயும் கட்டுரைகளைத் தமிழ் ஆசிரியர்கள் கல்லூரிகளில் எழுதவேண்டும். தொல்லியல் துறையினரும், தமிழ்  முனைவர்களும் சேர்ந்து இப்பணி செய்யின் சிறக்கும்.

மர்ரே எஸ். ராஜம்,
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZIdjuMy.TVA_BOK_0002443/page/471/mode/2up
மகர நாயறு, மகர ஞாயிறு - கல்வெட்டுச் சான்றுகள் காண்க. ஆக, 2000 ஆண்டுகளாகத் தமிழர்கள் புழங்கிவரும், தை மாதத்திற்கான
ராசிப் பெயர் மகரம். இதனை மாற்றத் தேவையில்லை. புலவர் இ. மு. சு. பிள்ளை சுறவம் என 1950-ல் எழுதியது, மகரம் என்ற பொருள்
மறைந்த காலத்திலே ஏற்பட்டதாகும்:  http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html
நன்றி,
நா. கணேசன்

பாரதிதாசனின் 1960களில் கருத்து மாற்றம்,
https://groups.google.com/g/santhavasantham/c/c1hlaid5pMw

காளமேகத்தின் ராசி சக்கரம் மீதான இரு வெண்பாக்கள்:
(1)
12 ராசிகளைத் தொடர்ச்சியாக ஒரே வெண்பாவில் அமைத்துள்ளார் கவி காளமேகம்:
      பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
      டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த
      நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்
      வசையறு மிராசி வளம்
இங்கே, மகரம் என்று தான் தை மாதம் வருகின்றதை அவதானிக்கவும். http://nganesan.blogspot.com/2022/01/makaram-in-tanittamil-12-rasi-months.html

(2)
யாண்டு/ஆண்டு (யாட்டை < யாடு) என்பது சித்திரை முதல் நாள் (நெடுநல்வாடை, சிந்தாமணி). ஆனால், அரசர் ஆட்சிக் காலம் கணக்கிடப் பட்டமேற்ற தினத்திலும், பருவங்கள் தொடங்குதல் மழைக்காலத்
தொடக்கத்திலும், கருப்பவாசம், கருவுற்ற நாளிலிருந்தும் கணிப்பர்.

விட்டிசைத்தல் பற்றிக் கற்பிக்க நல்ல உதாரணமாக ஒரு வெண்பாத் தந்துள்ளார் கவி காளமேகம். ”ஒஓ” என்னும் மூன்றாம் அடி மூன்றாம் சீரை விட்டிசைத்து வாசிக்கவேண்டும்.
இதில் 12 மாதங்களையும் முந்நான்கு என்று பகுக்கும் முறையை ஆண்டுள்ளார்.

       முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
       முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில்
       ஒன்றரிந்தா லாகுமோ ஒஓ மடமயிலே
       அன்றணைந்தான் வாராவிட் டால்!

முந்நான்கு = 12 ராசி.
(1) மகரம் - மகரகேதனன் - மன்மதன்
(2) தனுசு
(3) கன்னி
(4) மேஷம் (ஆடு).

N. Ganesan

unread,
Jan 20, 2022, 9:03:54 PM1/20/22
to Santhavasantham
வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று தொடங்கி வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

வருடத்தில் 12 மாதங்கள். 1 X 12 = 2 X 6 = 3 X 4 என 12-ஐப் பகுக்கலாம். 12 ராசிகளை Solar Mansions என்றும், 27 நட்சத்திரங்களை Lunar Mansions என்றும் அழைப்பர். தொல்காப்பியர் இந்த ஸோலார் + லூனார் மேன்ஸன்ஸின் பேர்களில் உள்ள இலக்கணத்தைக் குறிப்பிட்டுச் சூத்திரித்துள்ளார். முன்பெல்லாம். 27 நட்சத்திரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என ஆசியாவின்
பழைய இலக்கிய ஆய்வர்கள் (indology, sinology) கூறுவர். இப்பொழுது 27 நட்சத்திரங்கள் பற்றிய அறிவு இந்தியாவில் ஏற்பட்டது (சிந்துக் காலம், அதன் பின் வேதாங்க ஜ்யோதிஷத்தில் மொழிபெயர்ப்பு) என வரலாற்றில் பதிவாக ஆரம்பித்துள்ளது. நட்சத்திரங்களுக்குப் பழம்பெயர்கள் தமிழில் உள்ளதும் இதற்கோர் அடிப்படை. வேனில், மழை, கூதிர் காலங்களை ஆண்டின் மாதங்களை
வரிசைக்கிரமமாக சிந்தாமணி பாடுகிறது. திருத்தக்கதேவர்தாம் Zodiac-கு இப்பாடல்களில் தமிழில் முதன்முதலாகக் கலைச்சொல் தந்தவர். ஃசோடியாக்கை “கனலி வட்டம்” என்றும் ஆடு (Aries) தலையாக உள்ள ராசி சக்கரத்தை அழைக்கிறார். கனலிவட்டம் = ஞாயிற்றுமண்டிலம் = https://en.wikipedia.org/wiki/Zodiac சிந்தாமணியின் அப்பாடல்கள் சித்திரையில் தொடங்கும் வருஷத்தைக் காட்டுவன. தண்டாரணிய முனி அகஸ்தியனிடம் ஆசீர்வாதம் பெற்று, பஞ்சாங்கத்தை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்த தமிழ்வேள், சேரமன்னன்  ”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என்றும், வானியல் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்வதால்
வானவரம்பன் என்று புகழப்பெறுவதும் பதிற்றுப்பத்து பதிகம் காட்டுகிறது.

முந்நான்கு என்று வருடத்தின் பன்னிரண்டு மாதங்களைப் பகுப்பதை முதலில் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தியவர் தொல்காப்பியர் ஆவார். வட இந்தியாவில் வசந்தம் என்னும் பருவகாலத்தில் (இளவேனில்) தொடங்கி 6 பருவங்கள் பிரிக்கப்படும். ஆறை மூன்றாக்கினால் கிரீஷ்மம் (வேனில்), வர்ஷம் (மழை),  ஶரத் (குளிர்) என்று
குறுக்கிப் பயன்படுத்தலும் உண்டு: இக்‌ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள், சீவக சிந்தாமணி. இவை ஆண்டின் தொடக்க மாதமாகிய சித்திரையில் தொடங்குவன. தமிழ்நாட்டுக்கு சங்க காலத்தில் வேளாண்மை அடிப்படை. வேனில் (இள + முது வேனில்) பருவம், பூமத்தியரேகைக்கு அருகே இருப்பதால் கடுமையான வெயில்.
எனவே, இதை வைத்து தொல்காப்பியர் 6 பருவங்களைத் தொடங்கவில்லை. முந்நான்கு - வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் என்று உழவர்க்கு இன்றியமையாத மழைக்காலப் பருவத்தை பருவச் சுழற்சியில் முதன்மையாக வைக்கிறார். மழை, பனி (குளிர்), கோடை (வேனில்) என்று அமைக்கிறார் தொல்காப்பியர்:
இதனை மலையாளிகள் பிற்காலத்தில் தமக்கென ஒரு தொடராண்டு - கொல்லம் ஆண்டு என அமைக்கும்போது பயன்படுக்த்துகின்றனர். இதுபோல, தமிழர்கள் தமக்கென ஒரு தொடராண்டு - திருவள்ளுவர் ஆண்டு என தை மாதத்தில் 20-ஆம் நூற்றாண்டில் அமைத்தனர்.

வர்ஷம், ஶரத், க்ரீஷ்மம் - தொல்காப்பியர் இவ்வரிசையில் 6 பருவங்களைத் தருதல்:
கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும். (கூடு-தல் > கூது-தல், கடவு > கதவு, ...)
முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

On Mon, Apr 20, 2020 at 6:03 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,
அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்
சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்
எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்
வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.
அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றிய
பல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.
பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.
பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,
சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்று
இந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்
பண்டிதர்கள் சங்க காலப்  பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்
அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.
வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்
திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.
6X2 - இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/panchangam.htm
வசந்த ருது - இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
கிரீஷ்ம ருது - முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
வருஷ ருது -மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி)
சரத் ருது - கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை )
ஹேமந்த ருது - முன்பனிக்காலம் (மார்கழி, தை)
சிசிர ருது - பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)
(வசந்தம் மார்ச் 20-ல் தொடங்க வேண்டும். இதுபற்றிப் பாரதியார் நல்ல கட்டுரை எழுதினார்.)

வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று
சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

சித்திரையில் வருட தொடக்கம் எனக் காட்டும் சீவகசிந்தாமணி பாடல்கள்:
http://tamilvu.org/slet/l3100/l3300uri.jsp?page=1730
3070 நளிசிலம் பதனி னுச்சி நாட்டிய பொன்செய் கந்தி
னொளியொடு சுடர வெம்பி யுருத்தெழு கனலி வட்டந்
தெளிகடல் சுடுவ தொத்துத் தீயுமிழ் திங்க ணான்கும்
விளிவரு குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான்.

   (இ - ள்.) நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.

   (வி - ம்.) குரைய : அசை,

   நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.

( 472 )
3071 பார்க்கடல் பருகி மேகம் பாம்பினம் பதைப்ப மின்னி
        வார்ப்பிணி முரசி னார்த்து மண்பக விடித்து வான
        நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான்.
        மூர்த்தியாய் முனிவ ரேத்து முனிக்களி றனைய கோமான்.

   (இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

   (வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.

( 473 )
3072 திங்கணான் கவையு நீங்கத் திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்
பங்கயப் பகைவந் தென்னப் பனிவரை யுருவி வீசு
மங்குல்சூழ் வாடைக் கொல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
விங்குநான் காய திங்க ளின்னுயி ரோம்பி னானே.

   (இ - ள்.)

நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல். (474)

https://temple.dinamalar.com/news_detail.php?id=13563
சித்திரை திங்கள் வருஷத்தின் முதல் மாதம் எனக் காட்டும் முக்கியமான இலக்கியமாக
சீவக சிந்தாமணி திகழ்கிறது.
நா. கணேசன்

On Sat, Apr 18, 2020 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சித்திரையில் வருஷப் பிறப்பைத் தமிழர் கொண்டாடினர் என்பதற்கு
அரிய கல்வெட்டுச் சான்று உள்ளது. சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின்
ஆட்சியில் திருவலஞ்சுழி தலத்தில் க்ஷேத்திர பாலகர் திருக்கோயில்
கல்வெட்டு, கி.பி. 998-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ராஜராஜன், ராஜேந்திரன் என்னும் பெருமன்னர்கள்
கல்வெட்டுக்கள் தாம் உள்ளன. ராஜராஜ சோழன் சிவபாதசேகரன் என்றழைக்கப்பட்டது போல,
ராஜேந்திரசோழன் சிவசரணசேகரன் என ழைக்கப்பட்டது தெரிவது இத்தலக்
கல்வெட்டுக்களால் தான். அவர்கள் காலத்தில் எந்தத்
தனிநபர் கல்வெட்டும் இங்கே எழுதப்படவில்லை.

(1) சித்திரை விஷு (2) தட்சிண அயனம் (3) ஐப்பசி விஷு (4) உத்தர அயனம்
என்ற வரிசைக் கிரமத்தில் வருஷத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் எழுதப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் ஆட்சிக் கல்வெட்டு தமிழ்வருஷப் பிறப்பு சித்திரை விஷு என்று காட்டுகிறது.
அதுவே முதல் சங்கிராந்தியாக உள்ளது, திருக்கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் என்னும்
நிகழ்ச்சி நடக்கும். இந்த வருஷப் பிறப்பைத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும்
பல்லவர் காலத்தில் பரப்பியுள்ளனர், சித்திரை விஷு, ஐப்பசி விஷு இரண்டும்
“அரைநாள்” எனச் சங்க இலக்கியம் கூறும் Equinox.
வடசெலவு = உத்தராயணம், தென்செலவு = தட்சிணாயனம்.
இவை இரண்டும் ஞாயிறு திசை திரும்புநாள்கள் (Solstcies).
    சித்திரை விஷு = Vernal Equinox
    தட்சிணாயனம் = Summer Solstice
    ஐப்பசி விஷு = Autumnal Equinox
    உத்தராயணம் = Winter Solstice
https://www.weather.gov/cle/Seasons
https://www.youtube.com/watch?v=SCm5ws87uyY

இக் கல்வெட்டுச் சான்று போலச் சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 21, 2022, 6:00:02 AM1/21/22
to vallamai, housto...@googlegroups.com
On Makara and its Dravidian etymology,
N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011.

மகரம்: 12 ராசி மாதப் பெயர்களில் தூய பழந்தமிழ்ப் பெயர்

4700 ஆண்டுகளாய் தமிழர், இந்தியா வாழ்க்கையில் இடம்பெறுவது மகரம். வானியலில் முக்கிய இடம் வகிப்பது:

2300 ஆண்டுகளாய் மகரம் என்றால் முதலை என இந்தியக் கலைகளில் காட்டப்படுவது, உ-ம்: Bharhut stupi.
எனவே, தை மாதம் என்பதை சோழர், பாண்டியர் கல்வெட்டுகளில் மகர விஷு/ரவி/நாயறு/ஞாயிறு எனக்
கூறுவர். இது சுறா மீன் அல்ல.

ஹிந்து ராசி சக்கரம்: (பார்க்க, 10-ம் ராசி - மகரம்)
makara-rasi.png
913m6-IJDHL._SX522_.jpg

Compare these Rasi cakra-s' Makara with Makara from Bharhut, 2nd century BC.

That is why in Tanitamil names for Rasi chakra month names, we should use Makara as used by Tamils for the last 2000 years, and NOT as cuRA 'shark fish'.

Dr. N. Ganesan
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/25f30958-5c36-44c6-982d-d5568479158cn%40googlegroups.com.

N. Ganesan

unread,
Jan 23, 2022, 10:11:31 AM1/23/22
to vallamai
மொகுமொகு- (மொக்குதல் - வினை) > மொகளெ/மொகரெ > மகர-
------------------------------------------------

mokku-tal is a Tamil/Dravidian verb formed from the ideophone, mokumoku-. Ideophones are called "anukaraNa Ocaiccol" by medieval grammarians in Tamil books.

மொகுமொகு- (மொக்குதல் - வினை) > மொகளெ/மொகரெ > மகர-
Cf, பொலிபொலி- பொலி > பலி > bali. பொலிசை/பலிசை (வட்டி)  ....

கப்புதல்‌ - கொள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல்‌
மொக்குதல் - பெருமளவு சாப்பிடுதல் (நாஞ்சில் நாட்டு வழக்குச்சொல் அகராதி).
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3luQy/page/133/mode/2up?view=theater

திருவாசகத்தில் மாணிக்கவாசகர், http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8102
மொக்கணி - குதிரை வாயில் கொள்ளுக் கட்டும் பை. அருணகிரிநாதரும், ``சர்க்கரை மொக்கிய (கந்தர் அலங்காரம் - காப்புச் செய்யுள்). என, வாய் நிறைய இட்டுக் குதட்டுதலை, `மொக்குதல்` என்றார்.
மொகளெ > மொகலெ > மொசலெ (பல த்ராவிட மொழிகளில்) > முதலை.

http://www.tamilvu.org/library/ldttam/html/ldttamps.htm (பக். 918)
மொங்கன் காண்க : மொக்கன் .
மொங்கான்                  இடிகட்டை ; பெருத்துக் கனத்த பொருள் .
மொக்கன்                    தடித்தவர் ; தடித்தது .
மொக்கட்டை முகம் ; மழுக்கமானது .
மொக்குதல் ஒருசேர விழுங்கியுண்ணுதல் ; அடித்தல் .

MTL:
மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ- , v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
   மொக்கு¹-தல் mokku- , 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக் கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263). 2. To beat soundly; அடித்தல். (பிங்.)

மொகளெ > மொகலெ > மொசலெ (பல த்ராவிட மொழிகளில்) > முதலை.
மொகலெ > மொகரெ > மகர-

வட இந்திய மொழிகளில் சொன்முதல் ஒகரம் அகரமாதல்:
(1) மொகளெ/மொகரெ/மொகர > மகர-
(2) பொலி > பலி. bali என இத் தமிழ்ச்சொல் ஸம்ஸ்கிருதத்தில். பொலிசை > பலிசை ‘வட்டி’ - இரு சொல்லும் பல கல்வெட்டில்.
(3) கொங்கு (வளைதல்) > கங்கு- > சங்கு  (கொல் > சொல், வேங்கடராஜுலு ரெட்டியார்)
(4) கொக்கு/கொங்கு > கங்கம் (வடமொழியில் ஒ இல்லை ஆதலான்)  {{ Cf. கொக்கு/கொங்கு, அணக்கு/அணங்கு, .... இடக்கர்/இடங்கர் < விடங்கர்/விடக்கர். கங்கைமுதலை }}
(5) கொங்கு ராஜாக்கள் > கங்க ராஜாக்கள். வட கொங்கில், கர்நாடகம் ஆகிவிட்ட பகுதிகள்: கங்க ராஜ்யம். கொங்கூரில் (ஸ்கந்தபுரம்) பட்டாபிஷேகம்.
(6) மொத்து- > மத்து. தயிர் கடையும் மத்து. மொத்து- என்ற வினைச்சொல்லின்
இன்னொரு வடிவம் மத்து- மத்திகை “சாட்டை வார், whip, கசை”
என்ற பொருளில் பல இடங்களில் சங்க இலக்கியத்தில் உண்டு.
(7) மொத்தளம் > மத்தளம்
(8) கொறி > கறி
(9) இரும்பொறை > இரும்பறை (ஓதிமலை அருகே ஊர்)
(10) பூப்பொலி > பூப்பலி (சிலம்பு, .... இன்றும் கேரளத்தில் பூப்பொலி உண்டு)
(11) அஞ்சொலாள் > அஞ்சலாள் (> அவயாம்பாள், மாயூரத்தில்)
(12) தண்பொருநை > தம்பொன்ன > தம்பன்னி/தம்பபன்னி
(13) கொல்- > கல்- கொல்லெனச் சிரித்தாள். கொல்-/கல்- ”கல்லென் ஒசை”   (சொல் என்ற வார்த்தை < கொல் என்னும் ஒலிக்குறிப்பால்).
(14) பொத்தல் > பத்தல்.  யாழின் பத்தர். ‘குளப்பு வழி யன்ன கவடுபடு பத்தல்’ (பொருந. 4).
பத்தல் pattal, n. 1. A wooden bucket; மரத்தாலான நீரிறைக்குங் கருவி. தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த (பதிற்றுப். 19, 23).
(15) பொத்து- (பொருத்து) > பத்து : ’விளக்குத் திரியைத் தீக்குச்சியால் பத்தி வை’.
(16) கொம்பு > கம்பு

இவை போல் இன்னும் பல இருக்கும். சுவர்/மரம் தழுவுதலால், புல்லி/பொல்லி > பல்லி. இது -உ > -அ காட்டு.

மொகர-/மகர- : இந்திய வானியல், சமயங்களில் (4700 ஆண்டுகளாய்):
(a) Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

(b) N. Ganesan, Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.     https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up

(c) N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume,  Int. School of Dravidian Linguistics, 2011. https://archive.org/details/MakaraADravidianEtymology2011

On Pongal Day, 2016 I wrote
https://groups.google.com/g/santhavasantham/c/uy5DfwpFNI0/m/40MJ1oSaEAAJ

This is a brief note on the difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku-.

பொக்கை, பொக்கணம், பொக்கசம் போன்ற சொற்கள் துளை, ஓட்டை என்பதைக் குறிக்கும் சொற்கள். பொக்கசம் பொக்கணத்தில் போட்டு வைக்கப்படும் காசு, மணிகள், இத் தூய தமிழ்சொல்லை டில்லி ஆகாசவாணி “ஷென்னை” என்பதுபோல, பொக்கசம் > பொக்கிஷம் என்றாக்கி எழுதுகிறார்கள்! பழைய இலக்கியங்களிலும்,  ஆவணங்களிலும் பொக்கசம் என்றுதான் உள்ளது. பல்லி தெலுங்கில் balli என உச்சரிப்பர், பொலி/பலி bali ஆகும். அதுபோல், பொக்கசம் கன்னடம்-தெலுங்கில் bokkasa(mu). Voicing of word-initial p- as b- is seen in Dravidian words such as palli, pali, pokkacam in Andhra, Sanskrit, and Carnatic.

மொகுமொகு- , மொக்குதல், மொக்கணி:

வாய் நிறைய இட்டு, அவசர அவசரமாய் விழுங்குதலை மொகுமொகு எனத் தின்னுதல் என்கிறோம். இந்த மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லில் (ideograph) உருவாகும் வினைச்சொல்: மொக்குதல். 

கப்புகப்பு எனத் தின்னல் = மொக்மொக் எனத் தின்னல். கப்புதல் = மொக்குதல்.
இரண்டு வினைச்சொற்களையும் ஒரே பொருளில் தமிழ்க்கடவுள் முருகனின் திருப்புகழில் காணலாம்.

கப்புதல் - மொக்கி விரைந்துஉட்கொள்ளுதல் 
         மொக்குதல் - வாய் நிறையக்கொண்டு மெல்லுதல்.
"கைத்தல நிறைகனி யப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி."  (திருப்பு.விநாயக.1)

மொக்கு¹-தல் mokku-
, 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக்கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263).

மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ- , v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)

மொக்கணி mokkaṇi
, n. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.] 1. Feed-bag, nose-bag; குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை. மொக்கணி  முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 2. A kind of bridle for mules, etc.; கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.)

இலக்கியங்கள்:

(1)
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
     பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
[...]
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே!

உரை:
(உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,

(2) வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே  (திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் ... திருப்புகழ் (திருத்தணிகை)).
மொக்கு- = (விரைவாக) உண்ணு-

(3) கந்தரலங்காரம் (காப்பு)
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!

(4) கும்பேசர் குறவஞ்சி:
அக்கர வம்புனை முக்கணர் குடந்தை
ஆதி கும்பநாத ரன்ன வயலிலே
சிக்கிய பக்கியை மொக்கிடத் தாரேன்

(5) திருமாலிருஞ் சோலைமலை 
அழகர் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கவி காளருத்திரர் (?)
செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
        செற்றிய தழலெனவே
திக்குள சுறவகை நெற்குலை சடைபடு
        செய்த்தலை விழவருசேல்

மொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை
        முத்திட வளைதவழா
முக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை
        முற்பயில் வெளியெனவால் 

அறிஞர் அண்ணா அடிக்கடி சொன்ன கதை இது:
”ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை”

மொகுமொகு என்று உண்ணுதல் = மொங்குதல் - இதனால் மொகர-/மொங்கர் என தொல்திராவிட மொழியிலே
முதலைக்குப் பெயர் அளித்தனர். ஸம்ஸ்கிருதம் போன்ற வடமொழிகளில் குறில் ஒகரம் இல்லையாதலால்,
மொகர- > மகரம் என்றானது. உகிருதல் > உசிரு > உயிர் போல, மொகர > மொசலெ (கன்னடம், தெலுங்கில் முதலை).
மொசலெ மொதலெ முதலை என இன்றைய தமிழ். The Proto-Dravidian term for crocodiles
is Mokara. And, it mutates to mocale in Kannada and Telugu, and appears as mutalai in Tamil.

Indus civilization religion: மகர விடங்கர் - கொற்றி தம்பதி.
மகரம் என்ற த்ராவிடச் சொல்லாய்வு, தமிழ்ப் பல்கலை (தஞ்சை), திராவிடப் பல்கலை (ஆந்திரா) நிறுவிய துணைவேந்தர்
வ. ஐ. சுப்பிரமணியனார் நினைவில் ஆய்வுக்கட்டுரைகள் மலர், Int. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் அறிஞர்கள் நடத்திய மாநாட்டின்கண் வெளியிடப்பெற்றது.
A Dravidian Etymology for Makara - Crocodile
மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல், அதனால் பிறக்கும் மொக்குதல் என்னும் வினை. 
மொகரம்/மொங்கர் = முதலை. இன்றும் பாகிஸ்தானில் மொங்கர் என்று முதலையை அழைத்து வழிபடுகின்றனர்.

கொங்குநாட்டில் மொக்கணீச்சுரம் சிறப்பான கோவில். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இங்கே வந்து வழிபட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
                              கீர்த்தித் திருவகவல்:
          மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
          சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
கொங்குமண்டல சதகத்தின் பாடல்:

மொக்கணீசுரர்
24.  ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத் 
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன் 
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க 
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.

   இது ஆறை நாட்டுள்ள ஓர் ஊர். அவிநாசியினின்று சத்திய மங்கலம் 
   போகும் பாதையில் ஐந்தாவது மயிலிலுள்ள சேவூரினின்று வடமேற்கே 
   செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மயில் தூரத்தே அழிந்த 
   ஆலயமாக இருக்கிறது ஊர் அழிந்து போயிற்று. கோட்டூர்ப்பள்ளம் 
   என்ற    பெயர் மாத்திரம் சொல்ல இருக்கிறது. செட்டியார் நீராடிய 
   ஓடை தாழை யூற்று என்கிறார்கள். இவ்வாலயத்தின் உத்ஸவ மூர்த்திகள் சேவூர் 
வாலீசப் பெருமான் கோயிலில் சுமார் முந்நூறு வருஷங்களின் முன் 
சேர்க்கப்பட்டதாம். இச்சரிதத்தைச் சுற்றுமுள்ள குடியானவர்களெல்லாரும் 
கூறுகிறார்கள். (திருச்செங்கோடு அட்டாவதானி முத்துசாமிக்கோனார், 1923, 
கார்மேகக் கவிஞர் பாடிய கொங்குமண்டலசதகம்).

 (மேற்)

மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி 
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்

(திருவாசகம் - கீர்த்தித் திருவகவல்)


பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி 
எழிறரு மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங் 
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு 
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி

(வேம்பத்தூர் திருவிளையாடல்)

Summary: There is difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku- and is not to be confused with other words starting with pok- in DEDR 4452 & DEDR 4458.

Happy Pongal! Tiruvalluvar New Year Greetings!
நா. கணேசன்



N. Ganesan

unread,
Aug 2, 2022, 7:40:48 AM8/2/22
to Santhavasantham
சங்க இலக்கியமோ, பின்னர் வரும் சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களோ, பிங்கலந்தை, திவாகரம், சூடாமணி போன்ற எந்த நிகண்டுமோ வருஷப் பிறப்பு ஆவணியில் என்று கூறுவதில்லை. சக வமிசத்தார் ஏற்படுத்திய வருஷப் பிறப்பு சித்திரையில். மேஷ ராசியில் தொடங்குவது. ஆடு தலையாக, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன், .. என்பவற்றில் இந்த வருஷப் பிறப்பு உள்ளது. ருதுக்கள் ஆறு. முதல் ருது வசந்தம்/இளவேனில் சங்க காலத்தில் இருந்து இன்றுவரை வருஷப் பிறப்பு இதுதான்.

லீனியர் ஆண்டு ஒன்று வேண்டும் என தைப் பொங்கலைத் திருவள்ளுவர் ஆண்டு எனத் தமிழ்நாட்டில் 50+ ஆண்டு முன்னால் ஏற்பாடு அரசாங்கம் செய்தது. அதேபோல, சிங்க மாசத்தை (ஆவணி) கொல்லம் ஆண்டு என மலையாளிகள் லீனியர் மாதம் ஆகக் கொண்டாட ஆரம்பித்தனர். அவர்களுக்கும், சித்திரைக்கணி என்னும் பழைய வருஷப் பிறப்பு உண்டு. ஓணம் விழாவுக்கு அடுத்த விழா சித்திரைக்கணி தான் கேரளாவில். பொங்கல் தமிழர் வேளாண்மைத் திருவிழா எனவே திருவள்ளுவர் ஆண்டு. மகாபலி என்னும் அசுரன், வாமன அவதாரம் கேரளர் சிறப்பாகக் கொண்டாடுவது. வாணர்கள் என்னும் அரசர்கள் ஏற்படுத்தியது. எனவே, அந்த ஓணம் வரும் சிங்க மாசத்தை லீனியர் ஆண்டு என ஆக்கியுள்ளனர். தமிழ் இலக்கிய நூல்களில் ஆறு பருவங்கள் என வரும் பட்டியலின் தொடக்கம் இது. கொல்லம் ஆண்டு சங்க காலத்துப் புதுவருஷப் பிறப்பு நாள் அல்ல. சங்க காலத்தில் சித்திரை தான். அது 60 ஆண்டு சுழற்சி உடையது. கொல்லம் ஆண்டு, வள்ளுவர் ஆண்டு எல்லாம் பிற்காலத்தவை. லீனியர் ஆண்டு என்னும் வசதிக்காக ஏற்பட்டவை.

Reply all
Reply to author
Forward
0 new messages