கீதை இது ஒன்று மட்டுமன்று;
பல உள்ளன. அவற்றையும்தான் தமிழ் இலக்கியம்
சொல்வதில்லை. ஆசாரியர்கள் பகவத்கீதையில் முழுமை
கண்டதால் இதற்கு முதன்மை தந்தனர்.
கீதை காலத்தால் முற்பட்டிருக்க வேண்டும்
எனும் தேவையுமில்லை. அக்காலத்தில் நிலவிய
பல கருத்துகளுக்கும் இடம் தந்தே அது பேசி வருகிறது.
அதை ஏற்றே ஆக வேண்டும் எனும் கட்டாயமும்
இல்லை. கீதை இருந்ததை வியாசர் பதிவு
செய்துள்ளார்; அது மட்டுமே கீதையை நம்புவோருக்குப்
போதுமானது.
தமிழ் பக்தி இலக்கியங்களில் கீதையின் தாக்கம் இல்லை
என்பதுதான் மிகப்பெரிய புரட்டு.
‘மாயன் அன்றோதிய வாக்கு’ எது ?
‘மெய்ம்மைப் பெருவார்த்தை ‘ எது ?
தென்னக வைணவத்தின் உயிர்நாடி
கீதா சரம ச்லோகம் என்பது உலகறிந்த
உண்மை.
காலத்தொன்மை வாய்ந்த பாகத மொழி ஒன்றில்
கீதைக்கு உரை இருந்ததும் உண்மை.
சிறையில் வாடிய தேசத்தலைவர்கள்
கீதையால் புத்தொளி பெற்று நாட்டை
வழி நடத்தியதும் வரலாற்று உண்மை.
மேற்கத்திய அறிஞர்கள் இதன்பால்
ஈர்க்கப் பட்டிருப்பதும் உண்மை.
உண்மைகளை ஆராயாமல்
அவதூறு சொல்வது நாகரிமன்று
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒருவர் தலைக் குறிப்பு போல் தன் பிளாகில் நினைத்தால், அதற்கு நாம்
ஒன்றும் செய்யமுடியாது.There is no need to take congnizance of such
things . You can't argue people out of their entrenched positions and
beliefs , by presenting facts and rational arguments.
வகொவி
> > ஆரூரன்- Hide quoted text -
>
> - Show quoted text -
ப்ரொஃபெஸர் ஜீ எடுத்துக்காட்டிய இச்
செய்தியைப் பாருங்கள் -
>>> harata Deviyin Thiru Dasangam
என கூகிளில் தேடவும் சில இணையதளங்கள் கிடைக்கும்;
வெட்டி ஒட்டியவர்கள் முதல் எழுத்தை விட்டுவிட்டார்கள்.
எனினும் இது தொடர்ந்து இணையத்தில் வலம் வருகிறது <<<
ஒரு கருத்து சரியோ தவறோ போகிற போக்கில்
ஒத்தி ஒட்டுவது தற்போது எளிதாகி விட்டது.
ஆராந்தறிய நேரமில்லை; பரபரப்புச் செய்தி
காட்டிப் புகழ் பெற வேண்டும் இதுவே
பெரும்பாலானோர் நோக்கம்.
திருவாசகம், அபிராமி அந்தாதி போன்றவற்றில்
யாரும் காலத்தொன்மைக்கு முதன்மை தருவதில்லை;
கருத்துக்கே முக்கியத்துவம்.
மறை சுதந்திரமானது; அது எதையும் சார்ந்து
பின்செல்லத் தேவையில்லை; பிற நூல்கள்
எழுதப்பட்டால் அவை மறை சார்ந்ததாக
இருக்க வேண்டும். மறை ஒரு சில
ஆதிகாரிக புருஷர்களைச் சொல்கிறது;
ஏனெனில் சிந்தனை நகர்வுக்கு யுகம்
தோறும் அவர்கள் தவறாமல் பிறக்க
இருப்பவர்கள்.
கீதை முடிவில் அர்ஜுநனைக் கூட
வற்புறுத்தவில்லை -
யதேச்சஸி ததா குரு (விரும்பியபடி
செய்) என்று விட்டுவிட்டது.
நம்மிடம் எதற்காகக் கருத்துத்
திணிப்புச் செய்யப் போகிறது ?
மேலும் இவர்கள் பகவத் கீதையில் மட்டும்
ஏன் இவ்வளவு கரிசனம் காட்ட வேண்டும் ?
ரிபு கீதை, தத்த கீதை போன்ற பல
கீதைகள் உள்ளன. சொல்லப்போனால்
இவை பகவத் கீதையைக் காட்டிலும்
தொன்மையானவை.
காரணம் உளவியல் ரீதியானது.
நாத்திகம் தலைவிரித்தாடிய காலத்தில்
ஸ்வாமி சித்பவாநந்த அவர்கள் கீதைக்கு உரை எழுதி
வெளியிட்டார், மிகுந்த வரவேற்புடன்.
உலக அளவிலும் அது தற்போதும்
புகழ் பெற்றதாக விளங்குகிறது.
இவர்களுக்கு கீதையைப் பழிப்பதா ?
கீதையை மக்களிடம் எடுத்துச் செல்வோரைக்
குறை கூறுவதா என்னும் உளவியல்
குழப்பம். அதுதான் காரணமாக
இருக்க வேண்டும்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாடியவர்: கோப்பெருஞ் சோழன்
திணை: பொதுவியல்
துறை: பொருண்மொழிக் காஞ்சி
`செய்குவம் கொல்லோ நல்வினை’எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,
புறநானூறு 215
செய்குவம் கொல்லோ நல்வினை -
நியதம் குரு கர்ம த்வம், கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
தம்மிசை நட்டு - யஶோ லப⁴ஸ்வ
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே -
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம் |
சங்க இலக்கியம் படர்க்கையில் சொல்வதை
கீதை முன்னிலையில் தெரிவிக்கிறது
தேவ்
நான் 'உண்மைகளை ஆராயாமல்
அவதூறு சொல்வது நாகரிமன்று' என்று தேவ் சொல்வதை வழி மொழிகிறேன். வகொவியின்,You can't argue people out of their entrenched positions and beliefs , by presenting facts and rational arguments.' என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். பேராசியர் அருளிய தலை சீவிய காதையும் புரிகிறது.
நம் தலை விதி, தளை விதி என்று நொந்துகொள்கிறேன்.
எழுதுவதை விட்டு விடலாமா? என்று ரோசனை.
இந்த தொடர் குறித்த உங்கள் கருத்தை நேரடியாக என் முன் பகிர்வது உங்கள்
போன்ற பெரிய, படித்த மனிதர்களுக்கு அழகு. அதைத் தவிர்த்து,
மதிப்பிற்குரிய திரு. தேவ் அவர்களுக்கு ஏதோ ஆறுதல் தருவது அல்லது
அறிவுருத்துவது போன்ற பின்னூட்டங்கள் நன்றாக இல்லை.
There is no need to take congnizance of such
> things . You can't argue people out of their entrenched positions and
> beliefs , by presenting facts and rational arguments.
என்று கடந்து செல்ல நினைக்கும் நீங்கள் இந்த பின்னூட்டத்தையும் இடாமலே
கடந்து சென்றிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
அன்புடன்
ஆரூரன்
There is no need to take congnizance of suchஎன்று கடந்து செல்ல நினைக்கும் நீங்கள் இந்த பின்னூட்டத்தையும் இடாமலே
> things . You can't argue people out of their entrenched positions and
> beliefs , by presenting facts and rational arguments.
கடந்து சென்றிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
இந்தக் கட்டுரையில் நூலாசிரியரின் நோக்கம் பற்றியும், நான் இதை
எழுதியதையும், நீங்கள் ஒருவராவது தெளிவாக புரிந்து கொண்டதில் மிக்க
மகிழ்ச்சி. யாருடைய நம்பிக்கையையும், யாருடைய மனதையும் அவமதிக்கும்
எண்ணம் எனக்கோ நூலாசிரியருக்கோ இல்லை. வலைப் பதிவில் எழுதப்பட்ட விதம்
அவ்வாறு ஏதாவது மன உலைச்சலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக
வருந்துகிறேன். கட்டுரைத் தலைப்பு சொல்வது கீதையும் தமிழரும். கீதை
குறித்த தமிழர்களின் நிலைப்பாடு பற்றித்தான். திருக்குறளின் மாண்புகழை
நிலைநிறுத்தத்தான்.
கீதையும், குறளும் ஒன்று தான். கீதாச் சாரம் சொன்னதைத்தான் குறள்
சொல்கிறது என்று அதற்கு ஆதாரமாக சில மேற்கோள்களைச் சொல்வதில் எனக்கு
உடன்பாடு இல்லை.
துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என்று
எல்லாவற்றிலும் அறைகுறை நம்பிக்கை வைத்து, வாதத்திற்காக ஒன்றோடு ஒன்றைத்
தொடர்பு படுத்தி, எல்லாம் ஒன்றுதான் என்று பேசும் நபர்களாக இருந்தால் இது
குறித்து நான் தொடரமாட்டேன். ஆனால் நீங்கள் அப்படியல்ல. தெளிந்த
சிந்தனையாளர். நிறைய படித்தவர், எனவே உங்கள் கருத்துக்காக
காத்திருக்கின்றேன்.
இதை ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக கொண்டு உங்கள் கருத்தை சொல்ல வேண்டும்
என்பதே என் ஆவல்.
கீதையின் காலம் குறித்தும், பாரதக் கதையில் அது ஒரு பிற்ச்சேர்க்கை
என்பதை வலியுறுத்தக் காரணமும் , மகாபாரதக் கதையில், கிருஷ்ணன்
அருச்சுனனுக்கு போர்க்காலத்தில் சொல்லப் பட்டதாக கூறப்படுவதை மறுக்க
வேண்டிய சூழலும் ஏன் ஏற்படுகின்றது என்றால், அங்கே சொல்லப் பட்டதெல்லாம்
கடவுளின் பெயரால் கடவுள் சொன்னது என்று சொல்லப் படும்போதுதான்.
மறைக்கப் பட்ட மரபுச் செல்வம் என்னும் நூலில், சூரியன்.கா. பாண்டியன்
பின் வருமாறு எழுதுகிறார்.
”அத்வைத இந்து மதம் ஒரு மூர்த்தியை மூன்று மூர்த்திகளாக மாற்றியது.
பிராமணீயம் அதைப் பல தேவதா மதமாக ஆக்கியது. மூன்று மூர்த்திகளில் ஒருவரை
வாழ்த்தி மற்றவறின் முக்கியத்துவத்தை பெரிது படுத்திக் காட்டுவதற்காகவே
பகவத் கீதை இயற்றப் பட்டது.”
வருணத்திட்டத்தின் முதல் அறைகுறை தோற்றங்களை ரிக் வேத புருஷசூக்தத்தில்
நாம் ஏற்கனவே கண்டிருக்கின்றோம். அதில் சமுதாயம் முழுவதுமே ஒரு உலகளாவிய
அல்லது சமூக மனிதனாகவும், சமுதாயம் என்பது அவனது நிழலுருவாகவும், பல்வேறு
தொழில் தகுதியினர் அவனது வெவ்வேறு உறுப்புகளாகவும் கருதப் படுகின்றது.
பகவத் கீதை மனுஸ்மிருதியின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டு மனித இனத்தை
இவ்வாறு பிரிப்பதற்கு அது கடவுளால் அளிக்கப் பட்டதெனக் கூறி, ஒப்புதல்
அளிக்கின்றது. நான்காம் அத்தியாயம் 13வது சுலோகம் இதை திட்டவட்டமாக
கூறுகிறது என்று நூலாசிரியர் கூறுகிறார்.
இந்த நூலின் ஆசிரியர் வலியுறுத்த விரும்புவது, கீதை, மகாபாரதக் கதையில்
வலிந்து சேர்க்கப் பட்ட பிற்ச்சேற்கை என்பதே. அதே போல இந்தியத்
தத்துவங்கள் குறித்து விரிவாக ஆய்வு நடத்திய நோபல் பரிசு பெற்ற டாக்டர்
ஆல்பர்ட் சுவைட்சர் சொல்வதைப் போல பகவத் கீதை பிராமணியத்தின் சாரம்
என்றால், திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டின் சாரம் என்பதை உறுதி
படுத்துவதே ஆசிரியரின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
திருக்குறளுக்கும் மனு நீதிக்கும் இடையே வேறுபாடு உள்ளது. மனு நீதிச்
சட்ட விதிகளில் பிராமண உணர்வின் மேலாதிக்கத்தின் கீழ், உலகமும்
வாழ்க்கைய்உம் உண்டு என்கின்ற உறுதிப் பாட்டுத் தத்துவம் உரைக்கப்
படுகிறது. அதற்குப் பக்கத்திலியே, உலகமும் வாழ்க்கையும் இல்லையென்கின்ற
மறுப்புத் தத்துவமும் சகித்து ஏற்றுக் கொள்ளப் படுகின்றது.
“தமிழ் பண்பாட்டிற்கு எதிரிடையான கருத்துக்கள் கொண்டதும், வேத மரபின்
வாரிசுமான கீதையின் தாக்கம் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை.
ஏற்றுக் கொள்ள வேண்டியதுமில்லை என்பது தான் ஆசிரியரின் வாதம்.
கீதையின் போதனைகள் பொதுநல நோக்கில் கடமைய வற்புறுத்துவன என்று கொள்ளும்
போது, யாருடைய எத்தகைய கடமைகள் என்பதை நுனித்து நோக்கினால் அதன்
அடித்தளத்திலே குறிப்பிட்ட வருணச் சார்பு நலன் இருப்பதை தெளிவாக
இனங்காணலாம். ஆனால் குறள் ஒழுக்க நெறி சார்ந்த மனித இனம் என்னும்
குறிக்கோளை முன் வைக்கிறது.
வர்ணாசிரமத்தை கட்டிக் காக்கவும், தெய்வ நம்பிக்கையுடன் கூடிய ஒரு தத்துவ
விளக்கம் தேவைப்பட்டது. இவ்விருவகைத் தேவைகளையும் நிறைவு செய்யும்
நோக்கில் உருவானதே கீதை. சமண, பெளத்த, ஆசிவகச் சிந்தனைகளின் வரவு தமிழர்
பண்பாட்டில் அகிம்சை, நிலையாமை என்பன தொடர்பான எண்ணங்கள் வேரூன்ற
வழிவகுத்தது.
//தமிழ் பக்தி இலக்கியங்களில் கீதையின் தாக்கம் இல்லை
என்பதுதான் மிகப்பெரிய புரட்டு.//
கீதையின் சாரங்களை பக்தி இலக்கியங்கள் இல்லை என்பதைத் தான் அவர்
குறிப்பிடுகிறாரே தவிர கீதை குறித்தே, பக்தி இலக்கியங்கள் பேசவே இல்லை
எனக் குறிப்பிடுகின்றார். (குறிப்பாக வர்ணாசிரமம் குறித்தும் அத்வைத
கருத்துக்கள் குறித்தும்)
உங்களின் மேலான கருத்துக்காக காத்திருக்கின்றேன்.
அன்புடன்
ஆரூரன்
தமிழர் நாகரிகத்தின் சிறப்பு இசைபட வாழ்தல்.
’தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்கிறது
தமிழ் மறை. புகழெனின் உயிரையும் கொடுக்கும்
அந்த உயர்ந்த சிந்தனையை கீதையிலும் காண முடிகிறது.
ஈரோடு வலைப்பதிவர்களின் தன்மையை,
உயர்தரத்தை நான் நன்கு அறிந்தவன். அந்த வலைப்பதிவர்
கூட்டத்திலும் கலந்துகொள்ள ஆவல் கொண்டிருந்தேன்.
இல்லத்தை விட்டு வெளியில் நகர இயலாத சூழல்.
தரமான, தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகளைப்
பகிர்பவர் நீங்கள். நீங்கள் வெளியிட்டிருக்கும்
கட்டுரையில் உண்மை உள்ளதா என ஆராயுங்கள்.
அதன் ஆசிரியர் கீதையைக் கற்றவரா, அதன்
ஏற்றத்தைக் கூறும் அறிஞர்கள் ஏன் அவ்வாறு
செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்தவரா எனக்
காய்தல், உவத்தல் இன்றி மறுபடியும் யோசித்துப்
பாருங்கள். கீதை எழுதப்பட்ட மொழியை
மறந்து விடுங்கள்;
செய்தொழில் யாதாயினும் செய்யும் மனப்பான்மைதான்
ஒரு செயலுக்கு உயர்வைத் தருகிறது என
முடிவாக அது கூறும் உயர்ந்த கருத்தின்பால்
கண் செலுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
தேவ்
கருத்தைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. இது உங்களுக்கும்
புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
On Mar 29, 9:33 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/29 Aruran Visu <visuaru...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வருணப்பாகுபாடு பற்றி அவர்கள் மிகைப்படுத்தத்தேவை என்ன ?
ஸித்தி என்பதை வருணம் சார்ந்ததாக கீதை சொல்கிறதா ?
‘ஸித்திம் விந்ததி மாநவ:’ மாந்தர் அனைவரையும்
உள்ளடக்கியது. தவத்தால் உயர்ந்த ஓர் அந்தணனுக்கு
உள்ளத்தளவில் பக்குவம் ஏற்படாமையால்
ஒரு மாதரசியிடமும், ஒரு கசாப்புக்கடைக்
காரரிடமும் ஞானம் பெற்றதை கீதையை
ஒட்டி மஹாபாரதமும் சொல்லியுள்ளது.
சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை ஒரு
சாராருக்கு ஒதுக்க வேண்டும் எனும்
பிடிவாதமான நோக்கம் இருந்திருப்பின்
இக்கதைக்குத் தேவையென்ன ?
பிறப்பால் அந்தணராக இல்லாத கண்ணனின்
மொழிக்கு இத்தனை மரியாதை ஏன் ?
சென்ற நூற்றாண்டில் வடபுலத்தில் கீதையைப் பரப்பியவர்
உயர்வகுப்பினர் அல்லர்
தேவ்
நிறைகுடம் தழும்பாது என்பதை மீண்டும் அனைவருக்கும் உணர்த்திவிட்டீர்கள்.
மிகுந்த நன்றி. இக்கட்டுரையில் சொல்லியிருக்கும் அனைத்திலும் எனக்கும்
முழு ஒப்புதல் இல்லை. விவாதத்தில் விடுவதன் மூலம் இன்னும் தெளிவு
பெறலாமே என்றுதான் இதை இந்த குழுமத்தில் இணைத்தேன்.
உங்கள் அன்பிற்கும் ஈரோடு குழுமத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும்
அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். கீதையை, காய்தல் உவர்த்தல் இன்றி
எளிய வடிவில் என்போன்றவர்க்கும் புரியும் படியாக நீங்களே ஒரு தொடராக
எழுதினால் மகிழ்வேன்.
அன்புடன்
ஆரூரன்.
கட்டுரைத் தலைப்பு சொல்வது கீதையும் தமிழரும். கீதை
குறித்த தமிழர்களின் நிலைப்பாடு பற்றித்தான். திருக்குறளின் மாண்புகழை
நிலைநிறுத்தத்தான்.
கீதையும், குறளும் ஒன்று தான். கீதாச் சாரம் சொன்னதைத்தான் குறள்
சொல்கிறது என்று அதற்கு ஆதாரமாக சில மேற்கோள்களைச் சொல்வதில் எனக்கு
உடன்பாடு இல்லை.
இந்த புத்தகத்தை நூலாசிரியர் அனுமதியுடன், ஓரிரு நாளில் மின்னூலாக்கி
வெளியிடுகின்றேன். அதைப் படித்துப் பாருங்கள். முழுமையான புத்தகம்
உங்களுக்கு வேறு ஒரு பார்வையைக் கொடுக்கலாம். நூலாசிரியரின் கருத்தை
அப்படியே பிரதிபளித்துக் காட்ட என்னால் இயலவில்லை என்பதும் உண்மையே.
மின்னூல் வெளிவந்த பின் படித்துப் பாருங்கள், பின் விவாதம் செய்ய
ஏதுமிருப்பின் விவாதிக்கலாம்.
அன்புடன்
ஆரூரன்
சில பொதுவான கருத்துகள் -
குறள் மெய்யியலை முழுவதும் சொல்லவில்லை;
ஆங்காங்கு கோடி காட்டுகிறது. வாழ்வியலைச் செம்மை
செய்யும் நோக்கம் கொண்ட அதற்குப் பல கோணங்களில்
அறிஞர் உரை எழுதுகின்றனர்.
கீதை அத்ருஷ்டமான - பொறி புலன்களுக்கு
அப்பாற்பட்ட நிலையைப் பேசுகிறது. அதற்குப்
பலவிதமான கோணங்களில் / நிலைப்பாடுகளில்
உரைகள் தோன்றுவதில் வியப்பில்லை.
13ம் நூற்றாண்டுக்கும் முன் சங்கரர், ராமாநுஜர் செய்தவை
தவிர 19 உரைகள் தோன்றிவிட்டன. அவற்றுள்
பல ஆதிசங்கரரின் காலத்துக்கும் முற்பட்டவை.
பாகத உரை இருந்ததையும் ஆசார்ய புருஷர்கள்
மறைக்கவில்லை. அதன் வடமொழி வடிவம் இன்றும்
உள்ளது. பல உரைகள் காலப்போக்கில் மறைந்தன.
போர்முனையில் உபதேசம் நிகழ வாய்ப்புள்ளதா
எனும் ஐயம் எழ வாய்ப்புண்டு. தாக்குதல் வேகம்
இருந்தாலும் இரு தரப்பிலும் ஒருவிதத்
தயக்கம் இருந்ததாகத் தெரிகிறது.
இரு அணியிலும் இருந்தோர் நெருங்கிய
உறவினர்கள்; தோழர்கள்; ஒருசாலை
மாணாக்கர்கள்.
கீதை முடிந்த பின்னரும் போர்
தொடங்கி விடவில்லை. தர்மபுத்ரர்
நிராயுதபாணியாகக் கௌரவர்
அணிக்குள் புகுந்து பெரியோரின்
ஆசிகளைப் பெறுகிறார். அங்கிருந்த
அரசர்களிடம் அறத்தின் பக்கலில்
இருந்துகொண்டு போர்புரியுமாறு
கம்பீரமாகப் பேசுகிறார். தம் அணியில்
சேர அவர்களுக்கு இறுதி வாய்ப்புக்
கொடுக்கிறார்.
யுயுத்ஸு என்பவன் மட்டும்
முரசுகள் அதிர துர்யோதனனை
விடுத்து, தன் படையுடன் யுதிஷ்டிரருடன்
மீண்டுவந்து பாண்டவர் அணியில் இணைகிறான்.
அதன் பின்னர் போர் தொடங்குகிறது.
யுயுத்ஸு த்ருதராஷ்டருக்கு வேறொரு
மனையாளிடம் பிறந்தவன்
தேவ்
On Mar 28, 10:59 pm, N Sellakrishnan <n_sellakrish...@moe.edu.sg>
wrote:
> *கீதையைப் பற்றி ஆழ்வார்கள்:*
>
> திருமழிசையாழ்வார் * *
யுயுத்ஸு த்ருதராஷ்டருக்கு வேறொரு
மனையாளிடம் பிறந்தவன்
"Janamejaya said, 'O illustrious one, tell me the names of Dhritarashtra's sons according to the order of their birth beginning from the eldest.'
"Vaisampayana said, 'O king, they are as follows: Duryodhana, and Yuyutsu, and also Duhsasana; Duhsaha and Duhshala, and then Durmukha; Vivinsati, and Vikarna, Jalasandha, Sulochna, Vinda and Anuvinda, Durdharsha, Suvahu, Dushpradharshana; Durmarshana, and Dushkarna, and Karna; Chitra and Vipachitra, Chitraksha, Charuchitra, and Angada, Durmada, and Dushpradharsha, Vivitsu, Vikata, Sama; Urananabha, and Padmanabha, Nanda and Upanandaka; Sanapati, Sushena, Kundodara; Mahodara; Chitravahu, and Chitravarman, Suvarman, Durvirochana; Ayovahu, Mahavahu, Chitrachapa and Sukundala, Bhimavega, Bhimavala, Valaki, Bhimavikrama, Ugrayudha, Bhimaeara, Kanakayu, Dridhayudha, Dridhavarman, Dridhakshatra Somakirti, Anadara; Jarasandha, Dridhasandha, Satyasandha, Sahasravaeh; Ugrasravas, Ugrasena, and Kshemamurti; Aprajita, Panditaka, Visalaksha, Duradhara, Dridhahasta, and Suhasta, Vatavega, and Suvarchasa; Adityaketu, Vahvasin, Nagadatta and Anuyaina; Nishangi, Kuvachi, Dandi, Dandadhara, Dhanugraha; Ugra, Bhimaratha, Vira, Viravahu, Alolupa; Abhaya, and Raudrakarman, also he who was Dridharatha; Anadhrishya, Kundaveda, Viravi, Dhirghalochana; Dirghavahu; Mahavahu; Vyudhoru, Kanakangana; Kundaja and Chitraka. There was also a daughter named Duhsala who was over and above the hundred. And Yuyutsu who was Dhritarashtra's son by a Vaisya wife, was also over and above the hundred.
அன்புடன்
ஆரூரன்
On 29/03/2012, N Sellakrishnan <n_sella...@moe.edu.sg> wrote:
> *கீதையைப் பற்றி ஆழ்வார்கள்:*
>
> திருமழிசையாழ்வார் * *
நீங்கள் செய்வது ஃப்ளேமிங்.
http://en.wikipedia.org/wiki/Flaming_(Internet)
Flaming, also known as bashing, is hostile and insulting interaction
between Internet users. Flaming usually occurs in the social context
of an Internet forum, Internet Relay Chat (IRC), Usenet, by e-mail,
game servers such as Xbox Live or Playstation Network, and on video-
sharing websites. It is frequently the result of the discussion of
heated real-world issues such as politics, religion, and philosophy,
or of issues that polarise subpopulations, but can also be provoked by
seemingly trivial differences.
உங்கள் ஃப்ளேமிங் உபாயமே தலைப்பில் உள்ளது. நீங்கள் நெடுமாரனின்
புஸ்தகத்தை critical faculty யோடு படிக்காமல், அது சொன்ன்வற்றை ஏற்றுக்
கொண்டீர்கள். அப்படியே இருக்கட்டும் , உங்கள் மனநிலைகளை ஃப்ளேமிங் உடன்
போட்டால், அதில் ஏன் மற்றவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும், அதைதான்
தேவுக்கு எச்சரிக்கை கொடுத்தேன் , ஃப்ளேம் செய்பவர்களுடன்
விவாதிக்காதீர்கள் என. . நான் செய்த்தது எச்சரிக்கையே தவிர , அறிவுரை
அல்ல. நான் யாருக்கும் அறிவுரைகள் தருவதில்லை - மற்றவர்கள் கேட்டு எனக்கு
விருப்பம் இருந்தால் ஒழிய.
வகொவி
On Mar 29, 6:24 am, Aruran Visu <visuaru...@gmail.com> wrote:
> அன்பிற்குரிய விஜயராகவன்,
>
> இந்த தொடர் குறித்த உங்கள் கருத்தை நேரடியாக என் முன் பகிர்வது உங்கள்
> போன்ற பெரிய, படித்த மனிதர்களுக்கு அழகு. அதைத் தவிர்த்து,
> மதிப்பிற்குரிய திரு. தேவ் அவர்களுக்கு ஏதோ ஆறுதல் தருவது அல்லது
> அறிவுருத்துவது போன்ற பின்னூட்டங்கள் நன்றாக இல்லை.
>
> There is no need to take congnizance of such
>
> > things . You can't argue people out of their entrenched positions and
> > beliefs , by presenting facts and rational arguments.
>
> என்று கடந்து செல்ல நினைக்கும் நீங்கள் இந்த பின்னூட்டத்தையும் இடாமலே
> கடந்து சென்றிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
>
> அன்புடன்
> ஆரூரன்
>
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
போர்முனையில் உபதேசம் நிகழ வாய்ப்புள்ளதா
எனும் ஐயம் எழ வாய்ப்புண்டு. தாக்குதல் வேகம்
இருந்தாலும் இரு தரப்பிலும் ஒருவிதத்
தயக்கம் இருந்ததாகத் தெரிகிறது.
இரு அணியிலும் இருந்தோர் நெருங்கிய
உறவினர்கள்; தோழர்கள்; ஒருசாலை
மாணாக்கர்கள்.
தமிழில் இவ்வாறு முப்பத்திரண்டு அல்லது நாற்பத்து நான்கு எழுத்துகளைக் கொண்ட வாக்கியங்களாக ஒரு நூறு இருநூறு படித்து, நேரக்கணக்கைப் பாருங்கள். ஒவ்வொரு வாக்கியமும் இரண்டு அல்லது மூன்று வினாடிகளுக்குமேல் நேரம் எடுக்காது.
மேலும் முனைவர் செல்லக் கிருஷ்ணன் ஆழ்வார்களில் ஊறித்திளைத்தவர். அவரும்
கலந்து கொள்வது இவ்வுரையாடலை சிறப்பிக்கும்!
நா.கண்ணன்
2012/3/29 Hari Krishnan <hari.har...@gmail.com>:
From: Aruran Visu <visua...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thursday, 29 March 2012 1:55 PM
Subject: Re: [MinTamil] கீதை எனும் புரட்டு
ஷட்ஶதாநி ஸவிம்ஶாநி ஶ்லோகாநாம் ப்ராஹ கேஶவ:|
அர்ஜுந: ஸப்தபஞ்சாஶத் ஸப்தஷஷ்டிம் து ஸஞ்ஜய:||
த்⁴ருʼதராஷ்ட்ர: ஶ்லோகமேகம் கீ³தாயா மாநமுச்யதே |
இது பீஷ்ம பர்வத்திலேயே காணப்படும் ச்லோகம்.
கண்ணபிரான் சொன்னவை - 620
அர்ஜுநன் சொன்னவை - 57
மொத்தம் - 677
ஹரிகி ஐயா சொல்வதுபோல் சரளமான
உரையாடல் எடுத்துக்கொள்ளும்
நேரம் குறைவுதான்.
யோகமாயையால் ஏற்பட்ட விச்வரூபமும்
சிறிது நேரம் நீடித்த பரத்வ ஸூசநம்.
ஆழ்வார் கீதையைச் சொல்லும்போது
மாயன் எனும் சொல்லைப்
பிரயோகித்தார், இக்காரணத்தால்
தேவ்
On Mar 28, 2:32 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்’ என்னும் நம்மாழ்வாரின் பத்துப் பாடல்கள்
> கீதையின் எளிய தமிழாக்கம்.
>
இது உங்கள் கருத்தா?
திருவாய்மொழியின் பழைய வியாக்கியானங்களில் கீதையின் எளிய
தமிழாக்கம் என்று கூறியுளரா?
நன்றி,
நா. கணேசன்
--
>>> கீதையின் சாரத்தை, அதில் கண்ணன் சொல்வதாகச்
சொல்லப்படுபவைகளை, ஆழ்வார்கள்
உறுதிபடுத்துகிறார்களா? <<<
கீதை சொல்லும் கர்ம, ஞான, பக்தி யோகங்களை
நெறி என்னும் பெயரால் ஆழ்வார்கள் சுட்டுவர்;
‘நெறியெல்லாம் எடுத்துரைத்த...’
‘நீ காட்டும் நெறி’
‘நெறி காட்டி நீக்குதியோ ?’
இவை கண்ணபிரான் சொல்லும் நெறிகளை
உறுதிப் படுத்தப் போதுமானவை.
*********************
பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில் - எற்றேயோ!
மாய! மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா! காட்டும் நெறி.
நீகாட்டும் நெறி எற்றேயோ? = அயோக்யதாநுஸந்தாநம் பண்ணிப் பின்வாங்கப்
பார்த்த வென்னை வசப்படுத்தி உன் பக்கலிலேயே அவகாஹிக்கும்படி
ஒரு வழி காட்டிற்றே! இஃது என்ன ஆச்சரியம்! என்கை.
எற்றே என்பது அதிசய விரக்கச் சொல்; எற்று - எத்தன்மையது!
*****************************
’நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ்வாழ்வாரை நாம்
உபாயமாகப் பொருந்தவிட்டுக் கொண்டோம்; இனி இவர் நம்மை
நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்;
அப்படியே யிருக்கட்டும்; அல்லும் பகலும் அழுது கதறிக்
கொண்டிருக்கட்டும்; நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பினாராகில்
கரும யோகம், ஞான யோகம் முதலிய ஸாதநங்களை அனுட்டித்து
மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம்
பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட ஆழ்வார்
அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார் -
நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை
என்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்
என்செய்தா லென்படோம் யாம்?
பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்,
நிர்ஹேதுக க்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு;
எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும்
செய்யக்கூடும். சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக்
கைவிடப் பார்ப்பாய்; சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி
வலுக்கட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய். இப்படி எத்தனையோ
செய்துமிருக்கிறாய். இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத்
திருவுள்ளம் பற்றியிருப்பது எது? ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக்
கைவிடப் பார்க்கிறாயோ? அல்லது, திருவருளைக் காட்டி அழகிய
திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ?
எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள்
உடன்பட வேண்டியவர்களேயன்றி உன்னை நியமிக்கவல்லார்
ஆருமில்லை; ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’
என்பதைச் சோதிவாய்திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு
ஆறுதலாயிருக்கும்.
நெறிகாட்டி நீக்குதியோ நின்பால்? - நெறியென்றால் வழி;
வழியாவது உபாயம்; பகவத் கீதையில் சரமச்லோகத்துக்குக்
கீழே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ள கர்ம - ஜ்ஞாநாதி
ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்யரின் விளக்க உரை
********************************
இதற்கும்மேல் ஆரூரர் ஐயா என்ன எதிர்பார்க்கிறார் ?
அருளிச் செயல் முழுவதும் கீதையின் வரிக்கு வரி
மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும்
என எதிர்பார்க்கிறாரா ? தெரியவில்லை
தேவ்
On Mar 29, 1:25 am, Aruran Visu <visuaru...@gmail.com> wrote:
> மதிப்பிற்குரியீர், கீதையைப் பற்றிய வரிகள் ஆழ்வார்களால் பாடப் பட்டதை
> எப்பொழுதும் யாரும் மறுக்கவில்லை. கீதையின் சாரத்தை, அதில் கண்ணன்
> சொல்வதாகச் சொல்லப்படுபவைகளை, ஆழ்வார்கள் உறுதிபடுத்துகிறார்களா? என்பதே
> கேள்வி......அப்படி இருப்பின் அவற்றைச் சொல்லுங்கள், நானும் படித்துத்
> தெளிந்து கொள்கிறேன்.
>
> அன்புடன்
> ஆரூரன்
>
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
விஸ்வரூபம் எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்? அது விவரிக்கப் படுகிற முறையும் விஜயனின் வியப்பும் அந்நிகழ்வுக்கே வெகுநேரம் ஆகியிருக்குமென்று தோன்றுகிறதே!மேலும் மிக விரிவாக விஜயன் சொல்லுவனவற்றைப் பார்த்திருப்பதற்கே வெகுநேரம் ஆகியிருக்க வேண்டுமே!
"அதாவது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அணு அளவு மாத்திரமே சைஸ் உள்ள ஒரு பொருள் இருந்தது.அது 1 வினாடிக்கும் பலகோடி மடங்கு குறைவான நேரத்தில், -நேரம் என இங்கே சொல்லுவதே நகைமுரண்,காரணம் அப்போது நேரம் பிறக்கவில்லை,-
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Mar 29, 1:25 am, Aruran Visu <visuaru...@gmail.com> wrote:
> மதிப்பிற்குரியீர், கீதையைப் பற்றிய வரிகள் ஆழ்வார்களால் பாடப் பட்டதை
> எப்பொழுதும் யாரும் மறுக்கவில்லை. கீதையின் சாரத்தை, அதில் கண்ணன்
> சொல்வதாகச் சொல்லப்படுபவைகளை, ஆழ்வார்கள் உறுதிபடுத்துகிறார்களா? என்பதே
> கேள்வி......அப்படி இருப்பின் அவற்றைச் சொல்லுங்கள், நானும் படித்துத்
> தெளிந்து கொள்கிறேன்.
>
> அன்புடன்
> ஆரூரன்
குறளுக்கும், கீதைக்கும் ஒப்பிடும் பாடல் வள்ளுவமாலையில் உண்டு.
கீதை மனிதர்களால் எழுதப்பட்டு ஏன் மாபாரதத்தின் இடையிலே
செருகப்பட்டது என்பதன் சரித்திரப் பின்னணி இவ்விழையில் இதுவரை
காணோம். பிறகு பார்ப்போம். கட்வுள் பேசுவதாய் வரும் கற்பனை
எங்கிருந்து இந்தியாவுக்கு வருகிறது என.
கீதை பழந்தமிழகத்தில் பெருவாரியாய் இல்லை என்பதை நிறுவ,
இன்று எல்லா வீட்டிலும் இருக்கும் கண்ணன் அருச்சுன உபதேசம்
தேரில் இந்த படம், பெயிண்டிங், ப்லாஸ்டர் ஆப் பாரிஸ் சிறப்ம், ....
தமிழ்நாட்டில் எங்கும் பழஞ்சிற்பங்களில் காண முடிவதில்லை.
பக்தி இலக்கியங்களில் கண்ணன் தூது நடந்த போது பேசிய வார்த்தையையும்
சொல்லலாம். குறள், மக்கள் பக்தி இலக்கியத்தில் வர்ணாசிரமத்தை
தூக்கிப் பிடிக்கும் கீதை பற்றி அதிகம் காணோம்.
ஆண்டாள் திருவரங்கனைக் கலியாணம் பண்ணக் கனாக் கண்டு,
அந்தப் ப்ரேமையில் ஆழ்ந்திருந்த ஆண்டாள் (< யாழ்தல்/ஆழ்தல்).
ஆண்டாள் திருக்கலியாண உற்சவம் போன்றவை பெருமாள்
கோயில்களில் நடக்கின்றன.
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மை பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே
இந்தப் பாட்டில் ஸ்ரீரங்கம் பெரியபெருமாள் தன் தந்தையுடன்
பேசிய வார்த்தை பற்றிப் பேசுகிறாள் ஆண்டாள் என்றும்
கொள்ளலாம். பழைய வியாக்கியானங்கள் என்ன சொல்கின்றன
என்று தெரிந்தோர் எழுதினால் கற்றுக்கொள்ளலாம்.
கீதையின் “எளிய” தமிழாக்கம் என திவாகர் குறிப்பிடும் நம்மாழ்வார்
பாசுரங்கள்
கீதை தான் என உறுதி செய்ய இயலவில்லை. பிரதிவாதி சுவாமியின்
உரையிலும் அவ்வாறு ஒன்றும் காணோம். கீதை பற்றியே
காஞ்சி ஸ்வாமி குறிப்பிடலை அதன் உரையில்.
ஆழ்வார்கள் தேரில் நின்று பார்த்தனுக்கு கீதை சொன்னார்
என்று தெளிவாக எங்கும் குறிப்பிடவில்லை.
19-ஆம் நூற்றாண்டில் கீதை பிரபலம் ஆக ஒரு முக்கிய
காரணம், - கிறித்துவத்தின் வருகை, காலனிய ஆட்சியில்
இந்தியா அடிமையானது. இசுலாமியருக்கு குரான்,
கிறுத்துவருக்கு பைபிள், ஹிண்டுக்களுக்கு என்ன புஸ்தகம்?
என்ற கேள்வி முன்னிறுத்தப்பட்டது. விவேகானந்தர், திலகர்,
காந்தி, ... எல்லாம் கண்டுபிடித்த விடை - கீதை.
எனவேதான் அதன் பாப்புலாரிட்டி. மேலும் ஐரோப்பிய மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டதாலும்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> This is Nammazhwar version of Geetha only. Thiru Mathi. Srinivasan clearly
> stated that this Geetha only. I will later scan and put the same here.
> Otherwise you can always see explanations from the scholar's note for the
> above.
>
Thanks, Dhivakar sir. You earlier wrote:
" ஏற்கனவே நான் குறிப்பிட்ட ‘கடல் ஞாலம்
செய்தேனும் யானே என்னும்’ என்ற பாடலில் தொடங்கி, அந்த பத்துப்பாடல்களும்
கீதையின் சரம ஸ்லோகத்தின் தமிழாக்கப்பகுதிதான். "
Not really. & no old commentator says so.
Also, Nammalvar poems are NOT "eLiya" Tamil.
> I will also put one more extra proof from Nammazhwar later, as I am
> travelling now.
>
I know that line. Dr. Chella Krishnan also gave that line.
Also, note there is a verse in Nammalwar;s decad that you mention
has Advaita like lines. And, how Srivaishnavaites explain that verse
is interesting.
BTW, Nammalwar, Velala of Nanjilnad, knew Vedas quite well.
The Vedic banyan tree, & the aamaa in his "Aaryan Tamil" verse
that won him golden award at the Pandyan court needs to be explained.
I think I can contribute a little towards Nammalvar's proze-winning
poem, as mentioned Sri. A. Raa of Madurai:
http://groups.google.com/group/santhavasantham/msg/82438cb4a37905bd
வேதம் தமிழ் செய்த மாறன், சடகோபன், வண்குருகூர் ஏறு,
- எங்கள் வாழ்வு!
N. Ganesan
> Dhivakar.
>
செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே
நெஞ்சில் நினைப்பது ஒன்றாய் வாயாற் சொல்வது வேறொன்றாய், பின்பு
அநுஷ்டிப்பது மற்றொன்றாயிருக்கும் செவ்வைக் கேடர்களை ஒருங்க விடுக்கை
மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமவராய், அக்குணம்
விளங்குமாறு கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெருமான், முன்பு அர்ஜுநனை
வ்யாஜீகரித்து அவனுடைய தேர்த்தட்டிலே நின்றுகொண்டு, யதார்த்தமுமாய்
ச்லாக்யமுமான ஒருவார்த்தையை அருளிச்செய்தார்,
அதாவது -
“உன்காரியங்களை யெல்லாம் குறையறத் தலைக்கட்டிவைக்க நானிருக்கிறேன், நீன
ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியத்தில்லை, உனது ஸகல பாரங்களையும் என்பக்கல்
ஸமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு“
என்று உரைத்த சரம ச்லோகம். அவ்வார்த்தையைக் கேட்டு அதன்படியே
நிஷ்டையுடையராயிருப்பர் பெரியாழ்வார் என்கிறாள் முன்னடிகளில், அவருடைய
மகளான தனக்கும் அந்த அத்யவஸாயமே புகல் என்று காட்டியவாறு.
கண்ணபிரான் எந்தத் தேரில் இருந்து கொண்டு கீதை அருளிச்செய்தானோ
அந்தத்தேர் பெரியதிருவடியின் அபராவதாரமென்பது ஸம்ப்ரதாயம்,
விட்டுசித்தரும் பெரியதிருவடியின் அபராவதாரபூதர், ஆகவே விட்டுசித்தர்
அப்போது தேராக இருந்துகொண்டு கீதையைக் கேட்டிருப்பர் என்கிற கருத்துப்பட
இப்பாசுரத்தில் இரண்டாமடி அமைந்திருக்கிற அழகு காண்மின்.
http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=911
தேவ்
--
இண்டாலஜிஸ்ட் ஐயா மற்றொரு குழுமத்தில் cut off century 12ம் நூற்றாண்டு
என
முடிவு செய்ததாக நினைவு
>> விவேகானந்தர், திலகர், காந்தி, ... எல்லாம் கண்டுபிடித்த விடை...... <<.
பட்டியலில் ஞானேசுவரர், ராகவேந்திரர் எல்லாரையும்
சேர்த்துக்கொள்வதுதானே ?.
ஸ்வாமி விவேகாநந்தர் கீதையோடு, கங்கையையும் சேர்த்துப்
பிரபலப்படுத்தியதை விட்டுவிட்டீரே !!
Swami Vivekananda - The Gita and the sacred waters of the Ganga
constitute the Hinduism of the Hindus. Last time I went to the West, I
also took a little of it with me, fearing it might be needed, and
whenever opportunities occurred I used to drink a few drops of it. And
every time I drank, in the midst of the stream of humanity, amid that
bustle of civilisation, that hurry of frenzied footsteps of millions
of men and women in the West, the mind at once became calm and still,
as it were.
That stream of men, that intense activity of the West, that clash and
competition at every step, those seats of luxury and celestial
opulence — Paris, London, New York, Berlin, Rome — all would disappear
and I used to hear that wonderful sound of "Hara, Hara", to see that
lonely forest on the sides of the Himalayas, and feel the murmuring
heavenly river coursing through the heart and brain and every artery
of the body and thundering forth, "Hara, Hara, Hara!"
19ம் நூற்றாண்டுக்குபின்தான் கங்கை ஒன்று இருப்பதே வெளிஉலகுக்குத் தெரிய
வந்தது
தேவ்
On Mar 30, 5:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
19-ஆம் நூற்றாண்டில் கீதை பிரபலம் ஆக ஒரு முக்கிய
காரணம், - கிறித்துவத்தின் வருகை, காலனிய ஆட்சியில்
இந்தியா அடிமையானது. இசுலாமியருக்கு குரான்,
கிறுத்துவருக்கு பைபிள், ஹிண்டுக்களுக்கு என்ன புஸ்தகம்?
என்ற கேள்வி முன்னிறுத்தப்பட்டது. விவேகானந்தர், திலகர்,
காந்தி, ... எல்லாம் கண்டுபிடித்த விடை - கீதை.
விட்டால் பாக்கியராஜ் சுந்தரகாண்டம்னு படம் எடுத்தப்புறம் தான் ராமாயணம் தமிழ்நாட்டில் பேமஸ் ஆச்சு எனவும் சொல்வீர்கள் போல:-)
இன்று ஆங்கிலத்தில் தமிழகத்தைப் பற்றி இருக்குமளவிற்கு செய்தியும் விவரமும் தமிழில்
இல்லாமல் இருக்கலாம் என்று கருத இடமும் சான்றும் ஏராளமுண்டு.
இது வடமொழிக்கும் பொருந்தும். தமிழகத்தில் வாழ்ந்த வடமொழியறிஞர்களின் நூலினையும்
ஆதாரமாகக் கருதுததல் நல்லது.
Charles Wilkins' translation of the Gita was itself soon translated
into French (1787) and German (1802). It proved to be a major
influence on Romantic literature and on European perception of Hindu
philosophy. William Blake later celebrated the publication.
On Mar 30, 5:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
கீதை பழந்தமிழகத்தில் இல்லாமல் போனால் தான் என்ன? இத்தகைய கருத்து வெளிப்பாடுகளின்
உளவியல் என்ன?
தமிழர் பழங்காலத்தில் என்ன செய்ததாக நிறுவுகிறோமோ அதைத் தான் இன்றுள்ளோர் இனி
கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோமா?
ஆரெனக்கின்று நிகர் சொல்லின் மாயனன்றைவர் தெய்வத்
தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள்தெரியப்
பாரினிற் சொன்ன இராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினிற் சென்று பணிந்தது, என்னாவியும் சிந்தையுமே.
தேவ்
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஶிஷ்யதே |
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோSத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||
(கீதை 7/17)
உதா³ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் |
ஆஸ்தி²த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க³திம் ||
(கீதை 7/18)
ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴:||
(கீதை 7/19)
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச: ||
(கீதை 18/66)
தேவ்
முன்பு எப்போதோ எழுதியது, நேரமிருப்பவர் வாசிக்கலாம்...
http://thirumozi.blogspot.co.uk/2008/01/029.html
நா.கண்ணன்
அன்பு ஆரூரன்,
காந்தி போன்றோர் கீதையை பைபிளுக்கு நேராக
மேலைநாட்டாருக்குக் காட்ட, இந்தியாவில் 20-ஆம்
நூற்றாண்டில் அந்நூலின் புகழ் பிராந்திய மொழிகளில்
வெகுவாகப் பரவலாயிற்று. பள்ளிக் கல்வியும்,
அச்சில் வெகுஜன பத்ரிகைகளும் பெருகிய காலகட்டம் அது.
கீதாச்சார்யனான மாட்டிடையன் க்ருஷ்ணபிரான்
கையில் பிரப்பங்கோல் வைத்து ஆநிரை மேய்த்து,
கீதை என்னும் பாலாமிர்தத்தைக் கறந்தளிப்பவனைப்
புகழ்பாடும் கீதா த்யான ஸ்லோகம் உள்ளது.
அதில் வேத்ர என்று வெதிர்ங்கோலுக்கு வரும்.
மன்னார்குடி ராஜகோபாலசாமிக்கு ஒரு ஸ்தோத்திரத்தில்
வேத்ரம் த்ரைமம் என்று சொல்லும் கருத்தைக் கொண்ட
பிற்கால ஸ்லோகம் போல இத் தியான ஸ்லோகம்.
’அண்ணா’ என் சுப்பிரமணியம் மயிலாப்பூர்
ராமகிருஷ்ண மடத்திருந்த நல்ல வடமொழி அறிஞர்.
ஏராளமான ஸம்ஸ்க்ருத நூல்களுக்கு தமிழுரை
செய்தவர். ஸ்ரீவித்யா தந்திர நூல்களில் அத்தாரிட்டி.
அவரே மாட்டிடையனின் பிரப்பங்கோலை
கண்ணன் சாரதியாய் இருந்தபோது உள்ள தேரில்
குதிரைகளை முடுக்கும் குதிரைச் சவுக்கு
என்று மாற்றுகிறார். ஆனால், பழைய உரைகாரர்கள்
ஸ்லோகப் பொருளை தெளிவாகச் சொல்லியுள்ளார்கள்.
இந்த இழையில், முக்கியமாக மே 1-லிருந்து கருத்தாடல்
மடல்களைப் படிக்கவும்.
http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/686c78bf014c6f3d?scoring=d&
கண்ணன் பார்த்தனுக்கு கீதையை உபதேசம் தமிழ்நாட்டில்
முக்கியமானதாயின், பார்த்தசாரதி கோயில் என்று
புகழ்ப்படும், ஆழ்வார்கள் பாடிய, கோயில் திருவுண்ணாழியில்
காந்தி போன்றோர் பிரபலப்படுத்திய போர்க்கள கீதா உபதேசம்
இல்லையே. குடும்ப போர்ட்ரைட் போஸ் தான் தருகிறார்:
The primary sanctum enshrines Venkatakrishnan with
Rukmini, Balaraman, Satyaki, Anirudha, Pradyumna - in a
standing posture facing east.
கீதை உபதேசம் போன்ற கலைப்படைப்பு எப்போது தமிழ்நாட்டில்
உருவாகிறது எனப் பார்க்கணும். அடுத்த மடலில் கீதையின் motif
எப்படி இந்தியா வருகிறது எனப் ஆராய்வோம்.
நா. கணேசன்
மூலவர் எந்தத் திருக்கோலத்தில்
இருப்பினும் ஆழ்வார்களின் அநுபவம்
திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.
திருக்கண்ணபுரத்தில் இராமபிரானாகக் குலசேகரர்
பாடுவார்.
கீதையைப் பற்றிப் பிற வடமொழி
நூல்களில் இருக்கும் சான்றுகள் போதுமானவை;
ஆராய்ச்சியாளருக்கு நடுநிலைமை இருக்குமானால்
அவற்றையும் ஒளிக்காமல் முன்வைப்பது
கடமை
தேவ்
> மடல்களைப் படிக்கவும்.http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/686c78bf014...
ஆய்வாளர் ஐயா பார்த்தஸாரதி ஆலயத்தில்
ஆய்வு நடத்தியுள்ளாரா ?
ஸ்ரீ பார்த்தஸாரதி ஆலயத்தில் உத்ஸவ மூர்த்தியின் பெயர்
பார்த்தஸாரதி, முகமண்டலத்தில் வடுக்களுடன்.
மூலவர் வேங்கட க்ருஷ்ணன். கருவறையினுள்
காலாட்படை முழுவதையும் நிறுத்த முடியுமா ?
18 அக்ஷௌஹிணி படையும் இல்லை, தேரும்
பரிகளும் இல்லை என்றெல்லாம் பேசினால்
என்ன செய்வது ?
”கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே”
அரங்கநகரப்பன் கிடந்த வண்ணம் காணப்படுகிறார்;
கருவறையினுள் பிராட்டி கிடையாது.
நாச்சியார் பாடுவது கண்ணபிரான் உருக்குமிணிப்
பிராட்டியைக் கரம் பற்றிய வரலாற்றை.
மேலும் பல உதாரணங்கள் சொல்ல முடியும்.
இழையில் கூறப்பட்டுள்ள பல விவரங்களுக்கு
ஆரூரன் ஐயா விடை கூறாததும் வியப்பைத்
தருகிறது
தேவ்
On Apr 7, 1:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> மடல்களைப் படிக்கவும்.http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/686c78bf014...
அரங்கத்தின் உண்ணாழிக்குள் ஆழி இல்லையே :)))
குருவுக்குத் தக்கணை செலுத்திய அரங்கன்:
மாதவத்தோன் புத்திரன்போய் மறிகடல்வாய் மாண்டானை
ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர்......
(ஐயா அரங்கம் போனால் உண்ணாழியினுள்
மறிகடல் உள்ளதா என உன்னிப்பாகப் பார்த்துத்
தெளிவு பெறலாம்)
பரீக்ஷித்தைப் பிழைப்பித்தவன் வாழுமிடம் திருவரங்கம்:
மருமகன் றன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன் மார்,
உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர்,
திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை,
பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே
இராக்கதரை அழித்தவனூர் திருவரங்கம்:
கூன்தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள்ளாய்க் கடியசொற்கேட்டு,
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமு மாங்கொழிய,
கான்தொடுத்த நெறிபோகிக் கண்டகரைக் களைந்தானூர்,
தேன்தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே
இராவணனைக் கொன்றவனூர் திருவரங்கம் :
பெருவரங்க ளவைபற்றிப் பிழகுடைய இராவணனை
உருவரங்கப் பொருதழித்துஇவ் வுலகினைக்கண்
பெறுத்தானூர் குருவரும்பக் கோங்கலரக் குயில்கூவும் குளிர்பொழில்சூழ்
திருவரங்க மென்பதுவே என்திருமால் சேர்விடமே.
அசுரர்களை ஆழியால் அழித்தவனூர் திருவரங்கம்:
கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே
ஆழிவிடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர்
தாழைமட லூடுரிஞ்சித் தவளவண்ணப் பொடியணிந்து
யாழினிசை வண்டினங்கள் ஆளம்வைக்கும் அரங்கமே.
அரக்கரை மாய்த்தவன் துயில் கொள்வது அரங்கத்தில்:
கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறிய
பிழக்குடைய அசுரர்களைப் பிணம்படுத்த பெருமானூர்
தழுப்பரிய சந்தனங்கள் தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு
தெழிப்புடைய காவிரிவந்து அடிதொழும் சீரரங்கமே.
கேழலாய்ச் சீயமாய்த் தோன்றியவன் அரங்கன்:
வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய்
எல்லையில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர்
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு எம்பெருமான் குணம்பாடி
மல்லிகைவெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே.
**********************
இந்த எட்டாம் திருமொழி சொல்லும் வரலாறுகளை அரங்கன்
ஆலயக் கருவறையினுள் காண இயலாது என்பதையும்
ஆய்வாளர் ஐயா அவர்களின் சமூகத்தில் பணிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்; நாலாயிரப் பகுதியை வாய்வெருவ ஒரு
வாய்ப்பளித்தமைக்கு நன்றியும்கூட
தேவ்
On Apr 7, 1:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> மடல்களைப் படிக்கவும்.http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/686c78bf014...
தோத்ரம் - பொதுவாக விலங்குகளுக்கான
சாட்டை என்றும் பொருள் தருகிறது;
பழைய மடலாடலுக்குப்பின்
இதை உறுதி செய்துகொண்டேன்.
'தோத்ரம்' கீதை தியான சுலோகத்தில் மட்டும்
காணப்படவில்லை; பாரதம் பீஷ்மபர்வத்தில் ஆயுதங்களோடு
சேர்த்தும் வகைப்படுத்தப் பட்டுள்ளது -
*தோத்ர* அங்குஶ நிபாதஶ்ச ஆயுதா⁴நாம் ச நி:ஸ்வந:|
க⁴ண்டாஶப்³த³ஶ்ச நாகா³நாமந்யோந்யமபி⁴தா⁴வதாம் ||
ஸ்யந்தந ஆரூடரான பெருமான்
கரத்தில் இருப்பது சாட்டை என்பதே
பொருத்தமானதும் கூட.
तोत्रम् tōtram : (page 777)
A goad for driving cattle or elephants; तोत्राङ्कुशनिपातश्च आयुधानां च
निःस्वनः Mb.6.45.
5; नामृष्यत्तदधिक्षेपं तोत्राहत इव द्विपः Bhāg.8.11.11.-Comp. -वेत्रम्
a rod borne by Viṣṇu.
தேவ்
On Apr 7, 1:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> மடல்களைப் படிக்கவும்.http://groups.google.com/group/mintamil/browse_frm/thread/686c78bf014...
On Apr 7, 10:20 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Apr 7, 1:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> மாட்டிடையன் க்ருஷ்ணபிரான் கையில் பிரப்பங்கோல் வைத்து ஆநிரை மேய்த்து......<<<
>
> தோத்ரம் - பொதுவாக விலங்குகளுக்கான
> சாட்டை என்றும் பொருள் தருகிறது;
> பழைய மடலாடலுக்குப்பின்
> இதை உறுதி செய்துகொண்டேன்.
>
> 'தோத்ரம்' கீதை தியான சுலோகத்தில் மட்டும்
> காணப்படவில்லை; பாரதம் பீஷ்மபர்வத்தில் ஆயுதங்களோடு
> சேர்த்தும் வகைப்படுத்தப் பட்டுள்ளது -
>
> *தோத்ர* அங்குஶ நிபாதஶ்ச ஆயுதா⁴நாம் ச நி:ஸ்வந:|
> க⁴ண்டாஶப்³த³ஶ்ச நாகா³நாமந்யோந்யமபி⁴தா⁴வதாம் ||
>
> ஸ்யந்தந ஆரூடரான பெருமான்
> கரத்தில் இருப்பது சாட்டை என்பதே
> பொருத்தமானதும் கூட.
>
I'm busy today. writing from airport.
totra vetram is NOT cATTai at all.
cATTai will have kayir/kasai in it,
but not totravetram which is goad for
cattle & elephants.
totravetram in the shloka has a *Tamil* name used every day,
and in Tamil literature for 1000s of years. It is not
cATTai.
More later,
N. Ganesan
> तोत्रम् tōtram : (page 777)
>
> A goad for driving cattle or elephants; तोत्राङ्कुशनिपातश्च आयुधानां च
> निःस्वनः Mb.6.45.
> 5; नामृष्यत्तदधिक्षेपं तोत्राहत इव द्विपः Bhāg.8.11.11.-Comp. -वेत्रम्
> a rod borne by Viṣṇu.
>
> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ap...
இங்கே கேட்கப் பட்ட கேள்விகளுக்கு இதுவரை நேரான பதில் எதுவும் வரவில்லை.
மாடு குறித்து கட்டுரை எழுதச் சொன்னதற்கு மாணவன் தனக்குத் தெரிந்த தென்னை
மரம் குறித்து கட்டுரை எழுதி, பின் அந்த மாட்டை தென்னை மரத்தில்
கட்டுவார்கள் என்று சொன்னது போன்றே பல பதில்கள் இருந்தாக தோன்றுகிறது.
ஒருவேளை கேள்விகளைச் சரியாக நான் கேட்க வில்லையோ என்ற ஐயமும்
ஏற்படுகிறது. தவறுகள் என்னுடையாதாகவே இருக்கட்டும்.
என்னுடைய பதிவும், தமிழரும் கீதையும் நூலும் சாதாரண மனிதன் இயங்கும்
தளத்திலிருந்து எழுப்புகின்ற கேள்விகள் இவைதான்.
1. மகாபாரதப் போர் ஒரு வரலாற்று நிகழ்ச்சிதானா?
2. சந்திர குப்த மவுரியரின் அரசவையில் கிரேக்கத் தூதரான மெகஸ்தனிஸ்
குறிப்புகளிலிருந்து கி.மு324-300) மதுராவில் ஸவுரசேனர்கள் கிருஷ்ணனை
அக்காலத்தில் வழிபட்டு வந்ததாக தெரிகின்றது. ஆனால் வட இந்தியாவின் மற்ற
இடங்களில் கிருஷ்ணன் வழிபாடு பரவியிருக்கவில்லை. மதுராவில் ஒரு கோத்திர
வர்க்கத்தாரின் தேவன் என்ற நிலை மட்டுமே அன்று கிருஷ்ணனுக்கு இருந்தது.
அவ்வாறு இருந்த கிருஷ்ணன் சில நூற்றாண்டுகளில் சர்வ வல்லமை படைத்த
கடவுளாக மாறியது எப்படி?
3. ஆழ்வார்கள் பாசுரங்கள் பக்திமயமான பாசுரங்கள். எனவே கீதையைப் பற்றி
விரிவாக கூறப்படாமல் இருக்கலாம் என்று கூறினாலும் கூட, கடைச்சங்க
காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் முதல் பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த
வில்லிப்புத்தூரார் வரை பாரதம் பாடிய பலரில் எவரும் கீதையைச்
சிறப்பித்துச் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த உண்மையாகும் பாரதக்
கதை பலராலும் தமிழில் பாடப்பட்டிருக்கும் போது, கீதோ உபதேசத்தை ஏன்
ஒருவரும் தமிழில் எழுதவில்லை? கீதைக்கு அவர்கள் அந்த அளவு முக்கியத்துவம்
கொடுக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ளலாமா?
4. வில்லிப்புத்தூராரின் பாரதத்தில் வீட்டுமப் பருவத்தில் முதற்போர்ச்
சருக்கம் எனும் பாகத்தில் கண்ணன் விசயனது மயக்கத்தைத் தெளிவித்தல்
என்னும் தலைப்பில் 8 பாடல்கள் உள்ளன. வியாசரின் பாரதத்தில் 18
சருக்கங்களில் கூறப்பட்டுள்ள பகவத் கீதையின் சாரம் எதுவும் இந்த 8
பாடல்களில் எந்த இடத்திலும் காணப்படவில்லை.
5.பகவத் கீதை ஒரு தனி நூலென்றும், பின்னர் அது மகாபாரதத்தில் சேர்க்கப்
பட்டதென்றும் புகழ்பெற்ற இந்தியவியலாளர் தேலங்க் கருத்துத்
தெரிவித்துள்ளார். நடுநிலையாளர்களான ஆராய்ச்சியாளர்கள் பலரும் இதை
அங்கீகரிக்கின்றனர். கீதை மகாபாரத்த்தின் ஒரு பகுதி இல்லையென்றால் அதன்
ஆசிரியர் யார்? எப்பொழுது அது எழுதப் பட்டது?
கி.மு.6ஆம் நுற்றாண்டிற்கு முன் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில்
பயன்படுத்தப் படவில்லை என்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகின்றார்.
அப்படியென்றால் மகாபாரதத்தில் இரும்பாலான ஆயுதங்கள் பயன்படுத்தப்
பட்டதாக கூறப்படுகிறதே அது எப்படி?
இப்படி பல கேள்விகள் எழுப்பப் பட்டாலும் அதற்கான நேரடியான பதில்கள்
உங்களிடமிருந்து வரவில்லை.
ஏற்கனவே இந்த இழையில் நான் எழுப்பிய சந்தேகங்கள் குறித்து நீங்கள்
பேசவில்லை. இதை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
விருந்தில் வைக்கப் பட்டது பருப்புக் குழம்பே அல்ல, ஏனெனில் அதில்
பருப்பே இல்லை, கடுகு சீரகம், தாளிக்கப் படவில்லை, காயந்த மிளாகாயோடு,
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, பெருங்காயம் சேர்க்கப் படவில்லை என்று பல
காரணங்கள் சொல்லும் போது, இல்லை இல்லை, அது பருப்புக் குழம்புதான், அதில்
பெருங்காயம் சேர்க்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் என்னிடம் பெருங்காயம்
இருந்தது, அது,தீர்ந்து போயிருக்கிறது. இந்த குழம்பில் பெருங்காய வாடை
இருக்கிறது எனவே அது பருப்புக் குழம்புதான் என்று வாதம் புரிவது போல்
இருக்கிறது, இதுவரை நீங்கள் எழுதியதெல்லாம்.
அடிக்கடி ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்து உதாரணமாக நீங்கள் காட்டியதைவிட
மிக அதிகமான பாடல் வரிகளை நூலாசிரியர் தன் நூலில்
குறிப்பிட்டிருக்கிறார்.
.
மகாபாரத கதையில் ஒரு சிறு பகுதிதான் கீதை என்பதும். அதுவும் பின்னாளில்
வலிந்து உட்புகுத்தப் பட்டது, சங்க இலக்கியந்தொட்டு, பிரபந்தங்கள் வரை
பலராலும் பல இடத்திலும் பாரதக் கதையில் நடந்த நிகழ்ச்சிகள்
குறிப்பிடப்பட்டிருந்த போதும், கீதை என்ற வார்த்தையோ, கீதையில் இறைவன்
சொன்னதாகக் கூறப்படுகின்ற கருத்துக்களையோ யாரும் சொல்லவில்லை என்பது
உண்மை.
திருக்குறளில் சொல்லப் படுகின்றவைதான் கீதையிலும் சொல்லப்
பட்டிருக்கின்றது என்ற கருத்துக்கள் மிக முட்டாள்தனமானது. இது
உங்களுக்கும் தெரியும்.
ஒழுக்க நெறி சார்ந்த மனித இனம் என்கிற குறிக்கோளை திருக்குறள் வரைந்து
காட்டுகிறது. பிராமணியத்திலும், புத்த மதத்திலும் பகவத் கீதையிலும்
உள்ளது போன்ற அளவுக்கு, செயலுக்குறிய நேர்பயன் (கைம்மாறு) என்ற கருத்து
குறளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது நூலாசிரியர் கருத்து.
கீதையின் போதனைகள் பொதுநல நோக்கில் கடமையை வற்புறுத்துவன என்று கொள்ளும்
போது, யாருடைய, எத்தகு கடமைகள் என்பதை நுனித்து நோக்கினால் அதன்
அடித்தளத்தில் வருணச் சார்பு நலன் இருப்பதை தெளிவாக இணங்காணலாம்
நால்வருணத்தினரும் தத்தமக்கு விதிக்கப் பட்ட கடமைகளை மீறலாகாது 3:35,
18:41-47 ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பற்றி உங்கள் நேரடியான கருத்தை
வேண்டுகிறேன்.
இது போன்ற பல கேள்விகளை இந்த புத்தகம் கேட்கிறது.
தமிழரும் கீதையும் நூலை மின்னூலாக்கி இத்துடன் இணைத்துள்ளேன், படித்துப்
பாருங்கள். ஏற்கனவே நீங்கள் சொல்லியபடிக்கு, பிறரின் மேற்கோளுக்கு
விடைகூறுவது காலவிரயம் என்று நீங்கள் இதை அப்படியே விட்டுவிடலாம்.
எனக்குப் புரிய வைக்க நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும்,
உங்கள் அன்பிற்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மொழி அரசியல் வேண்டாம் என்று எங்கோ குறிப்பிட்டிருந்தீர்கள். மொழி
அரசியல் என்பது குறித்து கொஞ்சம் விளக்கம் அளித்தீர்கள் என்றால்
மகிழ்வேன்.
எதைப் பற்றிப் பேசினாலும், எந்தவொரு கருத்தைச் சொல்லவரும் போதும், அல்லது
யார் எதைப் பற்றிப் பேசினாலும், அதுகுறித்து வேதங்கள், பிராமணங்கள்,
உபநிசத்து, இவற்றில் இப்படிச் சொல்லியிருக்கிறது என்று அனைத்திலும்
சமஸ்கிருதத்தை துலாக் கோலின் ஒருபாகத்தில் நிறுத்தி மறுபக்கத்தை
எடைபோடும் உங்கள் மனோபாவம் உங்கள் எல்லா எழுத்துக்களிலும் வெளிப்படையாகத்
தெரிகிறது.
ஆதிசங்கரரின் அத்வைதத்தையும் அதற்கு எதிரான இராமானுசரின்
விசிட்டாத்வைதத்தையும் ஒருசேர ஏற்றுக் கொண்டு, இரண்டும் சொல்வது
ஒன்றுதான் என்பதும்,, ராமன் கருப்பு, கருப்புச் சாமி கருப்பு இரண்டும்
கருப்பு. இரண்டும் ஒன்று என்று கூறுவது போலத்தான் இந்த இருமொழிக்
கொள்கையும்.
தமிழ் மரபு அறக்கட்டளை என்பதும் மின் தமிழ் என்பதும் அதன் பெயர் சொல்வது
போல, தமிழின் சிறப்புக்களை போற்றிப் பாதுகாக்கவும், தமிழரின் தொண்மை,
நாகரீகம் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பற்றிய ஒரு ஆய்வுக் களமாக விளங்க
வேண்டும் என்ற கருத்தோட்டத்தோடுதான் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்
என்று நான் நம்புகிறேன். மட்டுறுத்துனர்கள் தான் விளக்க வேண்டும்.
எப்பொழுதும் இரண்டிருந்தால் தான் இது பெரிதா? அது பெரிதா என்னும் அரசியல்
தோன்றும். என் மொழி சிறந்ததா? உன் மொழி சிறந்ததா என்ற கேள்வி மின்
தமிழைப் பொருத்தவரை இல்லை என்றே நினைக்கின்றேன். இல்லையென்றால் அது மின்
கன்னடம், மின் மலையாளம் அல்லது மின் மொழி அல்லது தென்னிந்திய மின் மொழி
போன்ற பொது தளத்திலிருந்து கூட செயல்பட்டிருக்கலாம்.
என் மொழி சிறந்தது என்று நான் சொன்னால், இல்லை இல்லை, என் மொழி அதைவிடச்
சிறந்தது என்று கன்னடரோ, தெலுங்கரோ, மலையாளிகளோ சொல்லலாம் அது அவர்கள்
கருத்து. ஆனால் அதைச் சொல்லுமிடம் மின் தமிழ் அல்ல என்று நினைக்கின்றேன்.
மீண்டும் சொல்கிறேன், மின் தமிழ் குழுமம் தமிழுக்கானது. தமிழருக்கானது.
இங்கு தமிழின் சிறப்புகள் தமிழரின் தொண்மை, நாகரீகம், பண்பாடு,
கலாச்சாரம் சமயம், சமூகம் இவற்றிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்
படவேண்டும். அவை முறையே பேணிகாக்கப் படவேண்டும் என்று நான்
விரும்புகிறேன்.
அன்புடன்
ஆரூரன்..
தமிழரும்கீதையும் நூல். நூலாசிரியரின் ஒப்புதலோடு மின்னூலாக்கப்
பட்டுவிட்டது. தமிழ் மரபு அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் செய்துவிட்டேன்.
விரைவில் இணைக்கப் படும் என்று நம்புகிறேன்.
இல்லையென்றால்... என இழுக்கத் தேவையில்லை;
இதற்கான விடை கூறப்பட்டது; பீஷ்ம பர்வத்திலிலேயே உரையாடல்
பற்றிக் கூறப்படுகிறது. பின்னாலும் உள்ளது. முன்முடிவுகளோடு
விவாதம் தொடர்வதில் பயனில்லை.
பெருங்குரு - ஒரு பண்டைய இசை நூல்; அதைப் பற்றிய
குறிப்பு தேம்பாவணியில் உள்ளதா ? சீறாப்புராணத்தில் உண்டா
என்றால் விடை கிடைக்காது.
கீதை பற்றி பாகவதம் சொல்கிறது; பாரதம் சொல்கிறது.
பாத்ம புராணம் அத்யாய வாரியாக கீதையின்
பெருமை கூறுகிறது. மெய்யியலில் அறிஞர் குறிப்பிட்டு
விவாதிக்கின்றனர்.
கீதா -:
गीता - f. a song , sacred song or poem , religious doctrines
declared in metrical form by an inspired sage (cf. अगस्त्य-गीत्/अ ,
भगवद्-गीत्/अ [often called गीता Prab. vi , 9÷10 &c ], राम-गीत्/अ , शिव-
गीत्/अ)
அகஸ்த்ய கீதை, சிவ கீதை, ராம கீதை - இவையும் சொல்லப்பட்டுள்ளன.
கீதை என்றால் திருமொழி என்று பொருள்
ஆழ்வார்கள் பனுவல் நாலாயிரத்திலும் ‘திவ்ய ப்ரபந்தம்’
எனும் சொல்லைத் தேடினால் கிடைக்காது.
திருமுறை எனும் குறிப்பைக் காரைக்கால்
அம்மையாரின் பாடல்களில் காண முடியாது.
கம்ப ராமாயணம் எனும் சொல் கம்ப ராமாயணத்தில் இல்லை;
வால்மீகி ராமாயணம் வால்மீகி ராமாயணத்தில் இல்லை
அயஸ் - ரிக்
The word > ayas > has been mentioned in the Vedas many times. The Rig
Veda was composed close to the Harappan Civilization. Could some one
have known about iron in those days ? How old are the Vedas ?
It is well known that Dhritrashtra embraced a dummy made of iron ,
instead of Bhima, after the Mahabharata War . Bhima=s mace was made of
iron . Similarly there are clear descriptions of iron in the
Mahabharata at many places. **Many say that these descriptions were
written or included many centuries after the Mahabharata War, if that
War ever took place.**
the Vedas, the Ramayana, and the Upnishads , took place on the plains
of India, which are , as the author understands , the biggest plains
in the world ; and Fig. 18 shows that people including the sages ,
traveled from the North to South India in those times. Therefore, the
development of steel or iron was not limited to one particular area.
Right from Kashmir to the South India, the technology was constantly
transferred.
http://www.engr.mun.ca/~asharan/ironage/IRONAGEINDIA2.htm
தேவ்
> ...
>
> read more »
> ...
>
> read more »
1. மகாபாரதப் போர் ஒரு வரலாற்று நிகழ்ச்சிதானா?
2. சந்திர குப்த மவுரியரின் அரசவையில் கிரேக்கத் தூதரான மெகஸ்தனிஸ்
குறிப்புகளிலிருந்து கி.மு324-300) மதுராவில் ஸவுரசேனர்கள் கிருஷ்ணனை
அக்காலத்தில் வழிபட்டு வந்ததாக தெரிகின்றது. ஆனால் வட இந்தியாவின் மற்ற
இடங்களில் கிருஷ்ணன் வழிபாடு பரவியிருக்கவில்லை. மதுராவில் ஒரு கோத்திர
வர்க்கத்தாரின் தேவன் என்ற நிலை மட்டுமே அன்று கிருஷ்ணனுக்கு இருந்தது.
அவ்வாறு இருந்த கிருஷ்ணன் சில நூற்றாண்டுகளில் சர்வ வல்லமை படைத்த
கடவுளாக மாறியது எப்படி?
On Apr 9, 12:06 am, Aruran Visu <visuaru...@gmail.com> wrote:
>>> கீதை மகாபாரத்த்தின் ஒரு பகுதி இல்லையென்றால் அதன்
ஆசிரியர் யார்? எப்பொழுது அது எழுதப் பட்டது? <<<


வீட்டுக்கு வந்த ஒருவரை பெண்கள் சரியாக எடை போட்டு விடுவார்கள். ஏன் இப்படி அவசரப் பட்டு என் மனைவி கூறுகிறாள் என்று நினைப்பதுண்டு. சில காலத்துக்குப் பின் அவள் கணிப்பே சரி என்றும் முடிவுக்கு வந்துள்ளேன். //
சுருங்கச் சொன்னால் எல்லா காசுகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. அவைகளைப் பார்த்தும் புரியாதபோது அறிஞர்களிடம் கேள்வி கேட்பதில் தவறே இல்லை .கேள்வி நிறைய கேளுங்கள்--ஆனால் படித்துவிட்டு------mintamil is for discussion. Please dont hesitate to question every one and every thing. but not on negative evidence.
Swami
020 8904 2879
07951 370 697
> தமிழ் மரபு அறக்கட்டளை என்பதும் மின் தமிழ் என்பதும் அதன் பெயர் சொல்வது
> போல, தமிழின் சிறப்புக்களை போற்றிப் பாதுகாக்கவும், தமிழரின் தொண்மை,
> நாகரீகம் கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பற்றிய ஒரு ஆய்வுக் களமாக விளங்க
> வேண்டும் என்ற கருத்தோட்டத்தோடுதான் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்
> என்று நான் நம்புகிறேன். மட்டுறுத்துனர்கள் தான் விளக்க வேண்டும்.
>
அன்பின் ஆரூரான்:
தமிழ் மரபு அறக்கட்டளை ஆரம்பித்த போதே சிங்கப்பூரில் உள்ள பல நண்பர்கள்
இதைத் தென்னாசிய மரபு அறக்கடளை என்று மாற்றினால் போதிய நிதி வசதிகள்
கிடைக்கும் என்றனர். ஆயினும் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையே என்றே
அழைத்தோம். இதன் ஆரம்ப காலத்தில் நான் கர்நாடக சட்டசபைக்கு
அழைக்கப்பட்டேன். மின்னாக்கமெல்லாம் புகழ் பெறாத காலமது. கர்நாடக அரசு
ஆர்வமுடன் உதவ முன்வந்தது. ஆயினும், யாம் தமிழ் மரபு பற்றியே பேச
வேண்டுமென விரும்பினோம். பின்னால் காஞ்சி காமகோடி பீடம் சென்றபோது இரண்டு
பெரியவர்களும் மிகவும் அணுசரணையோடும், மிக்க அன்போடும் என்னை நடத்தினர்,
மேரு நூலகத்தைக் காட்டினர், எம் முயற்சி வெல்ல நல்லாசிகள் வழங்கினர்.
அங்கு மிகத்தொன்மையான சமிஸ்கிருத நூல்கள் அழிந்து படும் நிலையில் கண்ட
பின்னும் தமிழ்ச் சுவடிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்ச்
சுவடிகளைத் தேடினோம். தமிழ்ப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து யாம் தேடி
சேகரித்து இருக்கும் சுவடிகள் பற்றிய முயற்சிகளைத் தாங்கள் அறிந்து
இருப்பீர்கள். எம் மின்னூல் சேகரத்தில் இதுவரை சமிஸ்கிருத நூல் ஏதும்
இல்லை. யாம் தமிழ் மரபுதான் பேணி வருகிறோம்.
> மீண்டும் சொல்கிறேன், மின் தமிழ் குழுமம் தமிழுக்கானது. தமிழருக்கானது.
> இங்கு தமிழின் சிறப்புகள் தமிழரின் தொண்மை, நாகரீகம், பண்பாடு,
> கலாச்சாரம் சமயம், சமூகம் இவற்றிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்
> படவேண்டும். அவை முறையே பேணிகாக்கப் படவேண்டும் என்று நான்
> விரும்புகிறேன்.
மின்குழுமம் என்பதன் நடப்பு (dynamics) வித்தியாசமானது. எழுதுவோரை வைத்தே
எண்ணப்போக்கு நடை பெறுகிறது. மின்தமிழில், தமிழின் மேன்மை பேசுவோர் இல்லை
என்று யாராவது குறைபாடு வைத்தால் அவர் ஒரு சோம்பேறி என்பேன். யாராவது
ஏதாவது இங்கு எழுதி அதைத் தடை செய்திருக்கிறோமா? ஆரூரானின் கேள்விகளை
ஆர்வமுடன் தானே பதிவு செய்கிறோம். ஒன்றுமே எழுதாமல் வெறும் குத்துப்
பிள்ளையார் போல் உட்கார்ந்து கொண்டு ‘லொள்ளை’ சொல்வோர் மீது எனக்கு
எப்போதும் மதிப்புக்கிடையாது. தமிழின் உயர்வை அவன் சொல்லவில்லை, இவன்
சொல்லவில்லை என்று கேட்பதைவிட ஏன் என்னால் சொல்ல முடியவில்லை? என்று
கேட்டுக்கொள்ளுதல் நலம். நான்கு பேர் எழுதும் போது உள்ள சார்பு
(statistical bias) இரண்டு பேர் எழுதும் போது கூடி விடுகிறது. குறை
கணிதத்தில் இல்லை, எழுதுவோர் அதிகமில்லை என்பதே! எழுதுவோரை எழுதாதே என்று
சொல்லும் அளவிற்கு நாகரீகமற்றவராக நாங்கள் இன்னும் மாறிவிடவில்லை! குறை
சொல்வோர் எழுத வாருங்கள். அறிவு பூர்வமாக, ஆய்வு பூர்வமாக தமிழின்
மேட்சிமை காட்டுவோம். அதற்குத்தான் இத்தளம் உள்ளது.
வதந்திகளைத் தவிர்ப்போம். வம்புகளை விடுவோம். ஆக்க பூர்வமாக
செயல்படுவோம். நமக்கு தமிழரென்ன உணர்வு இருந்தால் கூடிச் செயல்பட
முயல்வோம். நகர்வைத் தடுக்க வேண்டாம்!
புரிதலுக்கு நன்றி.
நா.கண்ணன்
` மகாபாரதப் போர் ஒரு வரலாற்று நிகழ்ச்சிதானா?` என கேள்வி எழுப்புகிறீர்கள்.
ஆனால் அந்த கேள்விக்கும் `கீதை ஒரு புரட்டு` என்பதற்க்கும் தொடர்பில்லை. கீதை
நடந்தாலும் நடக்காவிட்டாலும், மகாபாரதப்போர் நடந்திருக்கும், கீதை என்பதற்க்கு
மகாபாரதப் போர் necessary condition. ஆனால் மகாபாரதப் போர் என்பதற்க்கு கீதை
necessary condition இல்லை.
மகாபாரதப் போர் / கீதை வரலாற்று நிகழ்ச்சிகள்தானா என்பது தமிழில் என்ன
எழுதப்பட்டிருந்தாலும், எழுதப்படாது போனாலும் விடை கிடைக்காது. ஏதோ தமிழில்
எழுதப்பட்டவைதான் வரலாற்று நிகழ்ச்சிகள் என்பது மொழி மைய வாத மாயை.
உங்கள் எண்ணப்படி வரலாற்று நிகழ்ச்சிகள் இல்லாதவை புரட்டு என்பதுதானே ? அதை
ஒத்துக் கொள்ளும் . அதை ஒத்துக் கொண்டால் உங்கள் வாதத்தின் அடிப்படை புரிந்து
விடும்.
நீங்கள் சரியான கேள்வி எழுப்பினால்தான் சரியான விடைகள் வரும்,
வகொவி
மின்குழுமம் என்பதன் நடப்பு (dynamics) வித்தியாசமானது. எழுதுவோரை வைத்தே
எண்ணப்போக்கு நடை பெறுகிறது. மின்தமிழில், தமிழின் மேன்மை பேசுவோர் இல்லை
என்று யாராவது குறைபாடு வைத்தால் அவர் ஒரு சோம்பேறி என்பேன். ஒன்றுமே எழுதாமல் வெறும் குத்துப்
பிள்ளையார் போல் உட்கார்ந்து கொண்டு ‘லொள்ளை’ சொல்வோர் மீது எனக்கு
எப்போதும் மதிப்புக்கிடையாது. தமிழின் உயர்வை அவன் சொல்லவில்லை, இவன்
சொல்லவில்லை என்று கேட்பதைவிட ஏன் என்னால் சொல்ல முடியவில்லை? என்று
கேட்டுக்கொள்ளுதல் நலம். நான்கு பேர் எழுதும் போது உள்ள சார்பு
(statistical bias) இரண்டு பேர் எழுதும் போது கூடி விடுகிறது. குறை
கணிதத்தில் இல்லை, எழுதுவோர் அதிகமில்லை என்பதே!
நா.கண்ணன்
ஒருபுறம் அறிஞர்கள் நூலை டிஜிட்டைஸ் செய்ய முயற்சி.
ஆனால், இணையத்தில் ஒன்றும் இல்லை என்றும் படிக்கிறோம்.
நிலைமை தமிழ் இணையப் பல்கலை போன்ற தளங்களில்
தமிழறிஞர்களின் ஏராளமான நூல்களைத் தந்துகொண்டுதான்
உள்ளது. இது காலத்தின் வளர்ச்சி. நிறைய இணையத்தில்
கிடைக்கின்றன. மென்மேலும் வளரும். தமிழர் இணையத்தில்
தமிழ் பற்றி எழுத ஆரம்பித்த நாளில் இருந்து பார்த்த
அநுபவம் எனக்குண்டு. ஓர் உதாரணம் காட்டலாம்:
நிரஞ்சன் பாரதிக்கு அ.கி.ப., நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
என்ற நல்ல நூலின் வலைக்கண் பற்றிக் குறிப்பிட்டேன்:
http://groups.google.com/group/santhavasantham/msg/49cc2a6a47601a7d
பழ. நெடுமாறன் ஐயா நல்ல தமிழறிஞர். தமிழர்கள் மனத்தில்
அவர் உழைப்புக்கு என்றும் இடமிருக்கும். பழ. நெடுமாறன்,
அவரது குடும்பத்தார் (மகள் பூங்குழலி, ...) போன்றோரிடம்
பேசு நெடுமாறன் ஐயாவின் அன்பர்கள் அவரது படைப்புகளை,
எல்லாம் பிடிஎஃப் ஆக்கி இணையம் ஏற்ற வேண்டும்.
யுனிகோட் ஆக்கவும் ரிஸோர்ஸஸ் பங்களிக்க வேண்டும்.
திருமிகு. ஆரூரன் கருத்துரைக்கும் இந்த கீதை நூலுக்கும்,
செம்மொழி நூலுக்கும், தமிழ்நாட்டு நீர்வளம் இந்திய
அரசால் எப்படி வறிதானது என விளக்கும் நூலுக்கும்
வெள்ளுரை (ப்லெயின் - டெக்ஸ்ட், not jpeg rich text)
தட்டச்சுச் செலவினங்களை என்னால் அளிக்க முடியும்.
பொள்ளாச்சி நசன் போன்றோர் மேற்பார்வையில்
தமிழச் சமுதாயத்து மேன்மைக்குப் பாடுபட்டோர் நூல்கள்
யுனிகோட் ஆகி, துழாவிகளில் தேடுவோருக்கு எளிதில்
கிடைக்கணும்.
தமிழரின் சொத்தான தமிழ்க் கருவூலங்கள் எல்லாம்
இணைய உலா வரும். இன்று 12000 ஆக இருக்கும்
வலைப்பதிவுகள் இலட்சமாகும். ஏற்கெனவே சொன்னதுதான்.
தமிழ் அரசும், தலைவர்களும் தமிழ் இணையம் வளர்த்திருந்தால்
லட்சக்கணக்கான பதிவர்களை 5 (அ) 7 ஆண்டுகளாய்
உருவாக்கி இருந்தால், பத்திரிகைகள் இருட்டடிப்பு நடத்த
முடியாது. லட்சம் தமிழரும் ஈழத்தில் மாண்டிரார்.
நா. கணேசன்
குறளின் 133 அதிகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான அதிகாரம் எது?
முற்காலத்தில் முக்கியத்துவம் இல்லாத ஒன்றுக்கு பிற்காலத்தில் முக்கியத்துவம்
ஏற்பட்டிருந்தாலும் கூட நல்லதென்கிறபோது அதை ஏற்றுக்கொள்வதும் அறிவுடையமையே.
கற்காலத்தில் இல்லாதவொன்று இப்போது கடைபிடிக்கபடுகிறதென்றால் அதனை விட்டு கற்காலத்திற்கே
போகவேண்டுமென்பது ஆசையோ!
நெடுமாறன் ஐயாவின் அன்பர்கள் அவரது படைப்புகளை
பொள்ளாச்சி நசன் போன்றோர் மேற்பார்வையில்
தமிழச் சமுதாயத்து மேன்மைக்குப் பாடுபட்டோர் நூல்கள்
யுனிகோட் ஆகி, துழாவிகளில் தேடுவோருக்கு எளிதில்
கிடைக்கணும்.
தமிழ் அரசும், தலைவர்களும் தமிழ் இணையம் வளர்த்திருந்தால்
லட்சக்கணக்கான பதிவர்களை 5 (அ) 7 ஆண்டுகளாய்
உருவாக்கி இருந்தால், பத்திரிகைகள் இருட்டடிப்பு நடத்த
முடியாது. லட்சம் தமிழரும் ஈழத்தில் மாண்டிரார்.
நா. கணேசன்
15ம் நூற்றாண்டில் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி இயற்றிய ‘ஸ்ரீ
வேங்கடேச ஸுப்ரபாதம்’
20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ் பெற்றது; இவர் ஸ்ரீ ராம
மங்களாசாஸநம், பால கோபால
மங்களாசாஸநம் எனும் நூல்களையும் எழுதியிருப்பது பலர் அறிந்திராத செய்தி
தேவ்
//> எனவே நான்
> லொள்லு சொல்லும் குத்துப்பிள்ளையார் என்ற பட்டத்துக்கும் கண்ணனின்
> வெறுப்புக்கும் தகுதியுள்ளவன் அல்ல//
இப்படி வாரலாமா? சும்மா தேமேன்னு விமான நிலையத்தில் அமர்ந்திருந்த உங்களை
நாங்கள்தானே அழைத்து வந்தோம். பின் எப்படி உங்களை ‘அந்தக் கோஷ்டியில்’
சேர்ப்பது? :-))
2012/4/9 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> நானும் அவ்வாறே நம்பியிருந்தேன். எனக்கு இது ஒரு ஆய்வுக்களம் அல்ல இது ஒரு
> மடலாடற்குழு மட்டுமே என்று இங்கு பலமுறை தெளிவாகச் சொல்லப்பட்டது
>
நான் பலமுறை சொன்னது போல் இதன் dynamics வேறு. ஆய்வுக்களம் எனில் ஒரு
அறிவியல் சஞ்சிகை போல் நடைபெற வேண்டும். அதற்கான infra structure உள்ளதா?
என்று ரூம் போட்டுதான் யோசிக்கணும் :-)
> இந்த மடலாடற்குழுவில் சிலநேரங்களில் சில மனிதர்களால் அறிந்தும் அறியாமலும்
> polarization எனப்படும் எதிர்நிலை உருவாகி கருத்துமோதல் நடந்துவிடுகிறது. இது
> எப்போது தோன்றும் அதை எப்படித் தடுப்பது என்பது யாருக்கும் தெரிவதில்லை.
> தமிழகத்தில் வடக்கிலும் தெற்கிலும் ஜாதிய மோதல் நடந்த ஊர்களில் எல்லாம்
> இருகுழுக்கள் எதிர் எதிராக நின்று மோதுவதையும் பலகுழுக்கள் வாழும் இடங்களில்
> மோதல் நடப்பதில்லை என்பது ஆய்வில் நிறுவப்பட்ட உண்மை
>
இது எனக்கும் மிக நெருடலாகத்தான் உள்ளது. ஏன் சிலர் அமில மொழி
பேசுகின்றனர் என்று புரியவில்லை. after all this is only a discussion.
யாரும் எதுவும் எங்கும் எடுத்துக்கொண்ட் போய்விடப்போவதில்லை. ஏதோ நம்
கையை விட்டுப் போய்விடுவது போல் உணர்வதாலோ? இல்லை தன் முகத்தில் ஒரு
கீறல் என்று உணர்வதாலோ? இல்லை அழுத்தமான தன் அடையாளம் குலைக்கப்படுவதாக
உணர்வதாலோ இது நிகழ்ந்து விடுகிறது!
நேரில் பார்க்கும் போதும், தனி மடலிலும் சாதுவாக உள்ளோர் மின் தமிழுக்கு
வந்தவுடன் ருத்ர தாண்டவம் ஆடத்தொடங்குவது ஏன் என்று புரியவில்லை.
எப்போதும் போல் இனிமையாகவே இங்கும் இருக்கலாம். என்ன கொண்டு வந்தோம்?
என்ன அள்ளிக்கொண்டு போகப்போகிறோம்? என்பதை அடிக்கடி நினைத்தும், நம்
வயதிற்கு ஏற்றவகையில் நம் எழுத்து முதிர்ச்சியைக் காட்டுகிறதா? என்றும்
அடிக்கடி சோதித்துக் கொண்டால் கொதி நிலை தவிர்க்கலாம்!
> மிகத்தீவிரமான ஆய்வை மின் தமிழில் நடத்தமுடியுமா என்பது பற்றிய தெளிவான
> முடிவில்லாத நிலையில் இந்த மடலாடற்குழு தொன்மம் எது புனைவு எது என்பதை >அடையாளம> கண்டு அதை அகற்றும்பணியைத் தொடர்ந்து செய்யலாம்
>
நாம் தொடர்ந்து செய்து கொண்டுதான் வருகிறோம். யார் தமிழர் என்ற கேள்வியை
இங்குள்ள யாராலும் நேர்மையுடன் நேர்கொள்ள முடியாத போது எப்படித் தமிழ்
மரபு என்பதை மட்டும் சரியாகப் புரிந்து கொள்வது? தொன்மத்தை உடைக்கும்
செயலே வம்பாக, gossip ஆக, எம்மை என்ன பெயர் சொல்லிப் புறம் தள்ளலாம்
எனும் புதிய புனைவுகளுக்கு இடமளிக்கும் போது எது புனைவு? எது தொன்மம்?
என்று எப்படிச் சொல்வது?
> மறுக்கமுடியாத உண்மை ஆனாலும் சிலநேரங்களில் சில மனிதர்களின் தூக்கலான எழுத்தும்
> குத்தலான வார்த்தைகளால் மின்தமிழ் பொதுமக்கள் பார்வையில் ஒரு ஆரோக்கியமான
> நிகழ்வுகளாகப் பார்க்கப்படுவதில்லை என்ற நிலை. இணையத்தில் எழுதாத எழுத்துக்கள்
> ஒளியின் வேகத்தில் இணையத்தில் வெளியாகிறது. படிப்பவர்கள் இத்தளம்
> அறிவுப்பூர்வமாக தமிழின் மேட்சிமையைக் காட்டுவதாக இருக்கவேண்டும் என்பதே
> தமிழகத்தில் அரசாளுமையில் உள்ள பலரின் எதிர்பார்ப்பு. அன்மைக் காலத்தில் பலர்
> மிந்தமிழின்மீது ஆர்வமுள்ளவர்களிடம் தனியாக மிந்தமிழின் நடுநிலையும்
> நம்பகத்தன்மையையும் நழுவவிடவேண்டாம் என்று அக்கறையுடன் சொல்வதுண்டு
>
>
அய்யா! இங்குள்ள பலருக்கு தாம் கண்ணாடி வீட்டிற்குள் அம்மணமாக
இருக்கிறோம் என்ற புரிதலே வ்ரவில்லையே :-) என்ன செய்ய? நம் ஒவ்வொரு
எழுத்தும், செயலும் சொல்லிய உடன் ஆயிரக்கணக்கோரால் மின்தமிழ் மன்றம்
தாண்டியும் பார்க்கப்படுகிறது எனும் உண்மை புரிந்தால் இன்னும் அடக்கம்
வரும், அன்பு வரும், சகோதரதத்துவம் வரும்!
> யாம் தமிழ் மரபுதான் பேணி வருகிறோம் என்று சொன்னாலும் தமிழ் மரபு
> அறக்கட்டளையின் பலமும் பலவீனமும் மின் தமிழ். மின்தமிழில் எதிர் எதிர் நின்று
> சூட்டைக்கிளப்பும் எதிமறை வாதங்கள் குறைந்து தமிழ் மரபுக்கு வளம் சேர்க்க
> மடலாடற்குழுவை எவ்வாறு செப்பனிடுவது என்பதை ரூம் போட்டு யோசிப்போம். நான்
> யோசிக்கிறேன்.
யோசித்துச் சொல்லுங்கள்! எனக்கும்தான் தெரியவில்லை! நான் பெரியோர்
என்றால்! இல்லை நாங்கள் பள்ளிப் பிள்ளைகள் என்று சொன்னால் நான் என்ன
செய்வது?
> அறிஞர்களின் துணைகொண்டு குறைப்பிட்ட தமிழ்மரபுத் தகவல்களைக் குழுவாக உருவாக்க
> ஒரு விக்கி
> ஆய்வுத்தரம் உள்ள எழுத்துக்களை வெளியிட ஒரு ஆராய்ச்சிச் சஞ்சிகை
> கட்டுரைக்குத் தேவையான மின்நூலகளை எழுதுவோர் படிக்க வாய்ப்பு
> ஏற்படுத்திக்கொடுத்தல்
எல்லாம் செய்யலாம். தேவையான மனித வளங்களை இனம் கண்டால்!
> மிந்தமிழில் சூட்டைக் கிளப்பும் திராவிடச் சிந்தனைக்கென்று திராவ்டம் பற்றிய
> தொன்மம் புனைவு கால நிர்ணயம் பற்றி எழுதத் தனியாக ஒரு தளம் அமைத்து நடத்துவது
> என நான் ரூம்போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறேன்
ஆரூரான் சொல்லிய வண்ணம் மின்தமிழ் ஜீனியர் வர வேண்டிய காலம் வந்துவிட்டது
போலும் :-))
நான் ரெடி! நீங்க ரெடியா? :-)
நா.கண்ணன்
அது என்ன *ஜீனியர்* ?
ஜீனி சேர்த்துச் செய்ய வேண்டிய பலகாரமா ?
சீனி வெள்ளைக்காரர் வரவுக்குப்பின் புகுந்த
பண்டம். பழந்தமிழர் உணவில் வெல்லமும்,
பனாட்டும்தான் இடம் பெற்றன; சீனிக்குத்
தமிழில் இடமில்லை என்று கிளம்பப்
போகிறார்கள் :))
தேவ்
On Apr 9, 3:29 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பேராசிரியரே!
>
> //> எனவே நான்
>
> > லொள்லு சொல்லும் குத்துப்பிள்ளையார் என்ற பட்டத்துக்கும் கண்ணனின்
> > வெறுப்புக்கும் தகுதியுள்ளவன் அல்ல//
>
> இப்படி வாரலாமா? சும்மா தேமேன்னு விமான நிலையத்தில் அமர்ந்திருந்த உங்களை
> நாங்கள்தானே அழைத்து வந்தோம். பின் எப்படி உங்களை ‘அந்தக் கோஷ்டியில்’
> சேர்ப்பது? :-))
>
> 2012/4/9 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>:
கரும்பு இல்லை, வெல்லம் இல்லை என்று சொல்லவில்லை, ஐயா.
கால்ஷியம் பாஸ்பேட், பாஸ்பொரிக் அமிலம் கலந்து
சுத்திகரித்து வெள்ளை நிறத்தோடு தயாரிக்கும் சீனி (white sugar)
முன்பு இருந்ததில்லை
தேவ்
On Apr 9, 10:57 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> //சீனி வெள்ளைக்காரர் வரவுக்குப்பின் புகுந்த பண்டம். பழந்தமிழர் உணவில்
> வெல்லமும், பனாட்டும்தான் இடம் பெற்றன; சீனிக்குத் தமிழில் இடமில்லை என்று
> கிளம்பப் போகிறார்கள் :))//
>
> மானுடவியலார் இந்தியா ஒரு மனித இனக் கலப்புக்குப் பேர்போன சோதனைக்களம் என்று
> கூறுவர். எப்படி அமெரிக்காவில் நூறு விழுக்காடு அமெரிக்கன் இல்லை என்று
> மானுடவியலார் சொல்வதுபோல் (இணைப்பைப் பார்க்க) கோதுமைக் கலரிலிருந்து மஞ்சள்
> கருப்புவரை ஒரு வண்ணப்ப்ட்டியில் நிறைக்கும் அளவுக்கு இந்தியர்களின் தோலின்
> வண்ணம் அமைந்து தனித்தமிழன் என்று ஒருவன் இல்லை என்று கூறுவர்
>
> நீங்கள் சீனி என்பது வெள்ளைக்காரன் கொண்டுவந்தது என்று சொல்லும் அனுமானத்தை
> ஏற்றுக்கொள்ள இயலாது என்பதற்கான காரணங்கள் கீழே:
>
> http://www.kew.org/plant-cultures/plants/sugar_cane_history.html
>
> Sugar cane has a very long history of cultivation in the Indian
> sub-continent. The earliest reference to it is in the Atharva Veda (c.
> 1500-800 BC) where it is called *ikshu* and mentioned as an offering in
> sacrificial rites. The Atharva Veda uses it as a symbol of sweet
> attractiveness.
>
> Sugar cane was originally grown for the sole purpose of chewing, in
> southeastern Asia and the Pacific. The rind was removed and the internal
> tissues sucked or chewed. Production of sugar by boiling the cane
> juice<http://www.kew.org/plant-cultures/plants/sugar_cane_food_early_techno...>
> was first discovered in India, most likely during the first millennium BC.
>
> The word 'sugar' is thought to derive from the ancient Sanskrit *sharkara*.
> By the 6th century BC sharkara was frequently referred to in Sanskrit texts
> which even distinguished superior and inferior varieties of sugarcane. The
> Susrutha Samhita listed 12 varieties; the best types were supposed to be
> the vamshika with thin reeds and the paundraka of Bengal. It was also being
> called guda, a term which is still used in India to denote jaggery. A
> Persian account from the 6th century BC gives the first account of solid
> sugar and describes it as coming from the Indus Valley. This early sugar
> would have resembled what is known as 'raw' sugar: Indian dark brown sugar
> or gur.
>
> At this time honey was the only sweetener in the countries beyond Asia and
> all visitors to India were much taken with the 'reed which produced honey
> without bees'. The Greek historian Herodotus knew of the sugarcane in the
> 5th century BC and Alexander is said to have sent some home when he came to
> the Punjab region in 326 BC. Practically every traveller to India over the
> centuries mentions sugarcane; the Moroccan Ibn Battuta wrote of the
> sugarcanes of Kerala which excelled every other in the 14th century;
> Francois Bernier, in India from 1658-59, wrote of the extensive fields of
> sugarcane in Bengal.
>
> Sugar in literatureIndian literature abounds in references to the
> ...
>
> read more »
>
> 3_One_Hundred_Percent_American.pdf
> 3794KViewDownload
மேலும் சொல்லியிருக்கிறேன்..ஸ்வாமி :-) இன்னொரு இழையில்.
ஜூனியர்..ஜீனியர் ஆகிவிட்டதோ? கவனிக்கவில்லை :-))
க.>
க.><<<<<மின் தமிழ்ஜீயர் என அவசரத்தில் நான் வாசித்திருந்தேன்:)(கண்ணன் தேவ் க்கெல்லாம் என் மேல கோபம் வராது தெரியும்:))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இ ஐயா இல்லத்தில் இன்சுவை உணவளித்த
இமவான் மகளார் மீது எனக்கேன் கோபம்
வரப்போகிறது ?
முனைவர் கண்ணனின் குடும்பம் பெரிதாகி விட்டது;
பொறுப்பும் மிகுந்து விட்டது. அவருக்குக் கட்டி மேய்க்க வேண்டிய
கட்டாயம். நாமோ மரபு எது என்று தெரியாமல் இன்னும் மழலையர்
வகுப்பைத் தாண்டி வெளிவர மறுக்கிறோம் :((
இறைவா , நீ தாராய் பறை !
தேவ்
On Apr 10, 7:08 pm, shylaja <shylaj...@gmail.com> wrote:
> 2012/4/10 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/4/10 DEV RAJ <rde...@gmail.com>:
> > > On Apr 9, 3:29 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> > >>>> ஆரூரான் சொல்லிய வண்ணம் மின்தமிழ் ஜீனியர் வர வேண்டிய காலம் வந்துவிட்டது
> > > போலும் :-)) <<<
>
> > > அது என்ன *ஜீனியர்* ?
> > > ஜீனி சேர்த்துச் செய்ய வேண்டிய பலகாரமா ?
> > > சீனி வெள்ளைக்காரர் வரவுக்குப்பின் புகுந்த
> > > பண்டம். பழந்தமிழர் உணவில் வெல்லமும்,
> > > பனாட்டும்தான் இடம் பெற்றன; சீனிக்குத்
> > > தமிழில் இடமில்லை என்று கிளம்பப்
> > > போகிறார்கள் :))
>
> > மேலும் சொல்லியிருக்கிறேன்..ஸ்வாமி :-) இன்னொரு இழையில்.
>
> > ஜூனியர்..ஜீனியர் ஆகிவிட்டதோ? கவனிக்கவில்லை :-))
>
> > க.><<<<<மின் தமிழ்ஜீயர் என அவசரத்தில் நான் வாசித்திருந்தேன்:)(கண்ணன்
> > தேவ் க்கெல்லாம் என் மேல கோபம் வராது தெரியும்:))
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
>> க.><<<<<மின் தமிழ்ஜீயர் என அவசரத்தில் நான் வாசித்திருந்தேன்:)(கண்ணன்
>> தேவ் க்கெல்லாம் என் மேல கோபம் வராது தெரியும்:))
>>
மின்தமிழ் ஜீயர் வேளாச்சேரியில் இருக்கிறார் :-)
(வெ.சா இவரை அப்படித்தான் அழைப்பாராம்!)
க.>
2012/4/11 shylaja <shyl...@gmail.com>:
>> க.><<<<<மின் தமிழ்ஜீயர் என அவசரத்தில் நான் வாசித்திருந்தேன்:)(கண்ணன்
>> தேவ் க்கெல்லாம் என் மேல கோபம் வராது தெரியும்:))
>>
மின்தமிழ் ஜீயர் வேளாச்சேரியில் இருக்கிறார் :-)<<<<<வேளாச்சேரியா?:) அண்மையில் எந்த ஊர் போய்வந்தீங்க யாரைப்பார்த்தீங்க கண்ணன் ஜீ,என்னாச்சோ உங்களுக்கு ?:) ஜூனியர் ஜீனியர் ஆகிறார் வேளச்சேரி வேளாச்சேரி ஆகிறது!!! ஆனாலும் ஜீயர் யாரென இன்னும் க்ளூ ப்ளீஸ்!
(வெ.சா இவரை அப்படித்தான் அழைப்பாராம்!)
க.>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வேளச்சேரி வேளாச்சேரி ஆகிறது!!! ஆனாலும் ஜீயர் யாரென இன்னும் க்ளூ ப்ளீஸ்!
2012/4/11 shylaja <shyl...@gmail.com>வேளச்சேரி வேளாச்சேரி ஆகிறது!!! ஆனாலும் ஜீயர் யாரென இன்னும் க்ளூ ப்ளீஸ்!
அது எதானும் ஜூயரை நெனச்சு ஜீயர்னு அடிச்சிருப்பார். ஜூயர் வண்டலூரில் இருக்கிறார். :D//>>>>>>:):) ஹஹ்ஹா அங்க இ சார் இங்க நீங்களா?:) ஏற்கனவெ கொள்ளையாய் சிரிப்பேன் இப்போ தாங்கல :)
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புள்ள தேவ்,
எரிச்சல், அருவருப்பு, கோவம்,
அகங்காரம் ... போன்ற
உணர்வுகளின் வடிகாலுக்கு (outlet) எனக்கு மட்டுமே "காப்பிரைட் (copyright)"!!! என் உரிமையில் தலையிடாதீர்கள்!!
:-) :-) :-)
க.><<<<<மின் தமிழ்ஜீயர் என அவசரத்தில் நான் வாசித்திருந்தேன்:)(கண்ணன்
தேவ் க்கெல்லாம் என் மேல கோபம் வராது தெரியும்:))
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
to visit our Muthusom Blogs at:
http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil
--
பணிவினால் மனம் அதொன்றிப் பவள வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாய்த் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் !
அணியனார் செம்பொனாய அருவரை யனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே?
(தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமாலை, 21)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
On Wed, Apr 11, 2012 at 9:25 PM, rajam <ra...@earthlink.net> wrote:அன்புள்ள தேவ்,
எரிச்சல், அருவருப்பு, கோவம்,
அகங்காரம் ... போன்ற
உணர்வுகளின் வடிகாலுக்கு (outlet) எனக்கு மட்டுமே "காப்பிரைட் (copyright)"!!! என் உரிமையில் தலையிடாதீர்கள்!!
:-) :-) :-)
அநாவசியமாக என் உரிமையை எனக்குத் தெரியாமல் நகட்டிக்கொண்டு போனவர்கள் மீண்டும் என்னிடமே ஒப்படைத்துவிடவும்.:-))
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
இது விவேகாநந்தர், திலகர், காந்திஜீ மூவரும் ஹிண்டு லீக் ஒன்றை
அமைத்து யோசித்து ஒரு விடை கண்டதைப்போன்ற தோற்றத்தை
ஏற்படுத்தும் முயற்சி. அவ்வாறு செய்தாலும் அதில் தவறென்ன,
தெரியவில்லை.
ஸ்வாமி சித்பவாநந்த ஜீ (March 11, 1898 - November 16, 1985)
ஸ்வாமி சிந்மயாநந்த ஜீ (8 May 1916 – 3 August 1993)
இவர்களும் கூட்டணி அமைத்துக்கொண்டு பரப்புரை செய்தனரா ?
இந்த ஆராய்ச்சி வித்தகர்தான் கூற வேண்டும்.
காந்திஜீ கீதைக்கு அறிமுகமானது இங்கிலாந்தில், அவர் சட்டம் பயிலச்
சென்றிருந்த சமயத்தில். வழக்கமாக கீதை படித்துக்கொண்டிருந்த ஆங்கில
சகோதரர்கள் இருவர் மோஹனதாஸரையும் தம்மோடு இணைந்து கொள்ளுமாறு
வற்புறுத்தினர். காந்தி பாரதத்திலிருந்து வந்திருப்பதால் அவருக்கு
ஸம்ஸ்க்ருதம்
தெரிந்திருக்கும், அது கீதையை நன்கு புரிந்து கொள்ளப் பயன்படும் என
அவர்கள் எண்ணினர்;
ஆனால் காந்திஜீ அது சமயம் வடமொழி அறிந்தவராக இருக்கவில்லை.
அந்த ஆங்கிலேய நண்பர்கள் கூறியபடி அவர் ஸர்.எட்வின் அர்னால்ட்
எழுதிய ஆங்கில விளக்கத்தைப் படிக்கத் தொடங்கினார். கீதையால் பெரிதும்
கவரப்பட்ட அவருக்கு
கீதா படநம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. குறிப்பாக கீதை இரண்டாம்
அத்யாயத்தின்
கடைசி 19 சுலோகங்களும் அவரில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
பிற்காலத்தில் அவர்
கீதை வாசிக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை என்றானது. சிறை
வாழ்க்கையில் அவர் மேலும் அந்நூலை ஆழ்ந்து பயின்றார். அணுக்கத்
தொண்டர்களின்
கோரிக்கையை ஏற்று குஜராதி மொழியில் விளக்க உரை எழுதினார்,
எர்வாடா சிறையில். பின்னர் தேஸாய் ஜீ அதன் ஆங்கில மொழிபெயர்ப்புத்
தந்தார்.
Gandhi on BhagawadGita -
The Gita is the universal mother. She turns away nobody. Her door is
wide open to anyone who knocks. A true votary of Gita does not know
what disappointment is. He ever dwells in perennial joy and peace that
passeth understanding. But that peace and joy come not to skeptic or
to him who is proud of his intellect or learning. It is reserved only
for the humble in spirit who brings to her worship a fullness of faith
and an undivided singleness of mind. There never was a man who
worshipped her in that spirit and went disappointed. I find a solace
in the Bhagavad-Gita that I miss even in the Sermon on the Mount. When
disappointment stares me in the face and all alone I see not one ray
of light, I go back to the Bhagavad-Gita. I find a verse here and a
verse there , and I immediately begin to smile in the midst of
overwhelming tragedies -- and my life has been full of external
tragedies -- and if they have left no visible or indelible scar on me,
I owe it all to the teaching of Bhagavad-Gita.
அநாஸக்தி யோகம் (பயன்கருதாச் செயல்பாடு) கீதையின்
முடிவு என அவர் உறுதியாக நம்பினார். கீதை மன அழுத்தத்துக்கு
மருந்தாக அமைந்ததால் காந்திஜீ அதைப் போற்றி வந்தாரேயன்றி,
பிற மதநூல்களுக்குப் போட்டியாக அதை முன்னிறுத்த
நினைத்தவரில்லை.
லோகமாந்ய திலகரும் கீதையின் கர்ம யோகத்தால்
கவரப்பட்டவர். இவர்கள் அரசியல் புலத்தில் செயலாற்றியவர்கள்.
கீதையைப்பற்றி விநோபாஜீ - -
"The Gita is prepared to go to the lowest, the weakest and the least
cultured of men. And it goes to him not to keep him where he is, but
to grasp him by the hand and lift him up. The Gita wishes that man
should make his action pure and attain the highest state."
கீதா ப்ரெஸ் நிறுவனர் ஸேட் ஜயதயால் ஜீ அவர்களும் கர்மயோகமே கீதையின்
இலக்கு என்று கருதியவர்; இவர் அரசியல் சார்பற்றவர்.
பரமஹம்ஸ யோகாநந்த ஒரு விளக்க உரை எழுதினார்.
*பாப்புலாரிட்டி* இருந்தால் தரக்குறைவானது என முடிவு செய்ய முடியாது;
கணேசர் ஐயா இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆனவர்;
சிறுவாணி நீர் தூய்மைக்கும், சுவைக்கும் மிகவும் புகழ் பெற்றது
தேவ்
On Mar 30, 5:24 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 29, 1:25 am, Aruran Visu <visuaru...@gmail.com> wrote:
>
> > மதிப்பிற்குரியீர், கீதையைப் பற்றிய வரிகள் ஆழ்வார்களால் பாடப் பட்டதை
> > எப்பொழுதும் யாரும் மறுக்கவில்லை. கீதையின் சாரத்தை, அதில் கண்ணன்
> > சொல்வதாகச் சொல்லப்படுபவைகளை, ஆழ்வார்கள் உறுதிபடுத்துகிறார்களா? என்பதே
> > கேள்வி......அப்படி இருப்பின் அவற்றைச் சொல்லுங்கள், நானும் படித்துத்
> > தெளிந்து கொள்கிறேன்.
>
> > அன்புடன்
> > ஆரூரன்
>
> குறளுக்கும், கீதைக்கும் ஒப்பிடும் பாடல் வள்ளுவமாலையில் உண்டு.கீதைமனிதர்களால் எழுதப்பட்டு ஏன் மாபாரதத்தின் இடையிலே
> செருகப்பட்டது என்பதன் சரித்திரப் பின்னணி இவ்விழையில் இதுவரை
> காணோம். பிறகு பார்ப்போம். கட்வுள் பேசுவதாய் வரும் கற்பனை
> எங்கிருந்து இந்தியாவுக்கு வருகிறது என.
>
> கீதைபழந்தமிழகத்தில் பெருவாரியாய் இல்லை என்பதை நிறுவ,
> இன்று எல்லா வீட்டிலும் இருக்கும் கண்ணன் அருச்சுன உபதேசம்
> தேரில் இந்த படம், பெயிண்டிங், ப்லாஸ்டர் ஆப் பாரிஸ் சிறப்ம், ....
> தமிழ்நாட்டில் எங்கும் பழஞ்சிற்பங்களில் காண முடிவதில்லை.
> பக்தி இலக்கியங்களில் கண்ணன் தூது நடந்த போது பேசிய வார்த்தையையும்
> சொல்லலாம். குறள், மக்கள் பக்தி இலக்கியத்தில் வர்ணாசிரமத்தை
> தூக்கிப் பிடிக்கும்கீதைபற்றி அதிகம் காணோம்.
>
> ஆண்டாள் திருவரங்கனைக் கலியாணம் பண்ணக் கனாக் கண்டு,
> அந்தப் ப்ரேமையில் ஆழ்ந்திருந்த ஆண்டாள் (< யாழ்தல்/ஆழ்தல்).
> ஆண்டாள் திருக்கலியாண உற்சவம் போன்றவை பெருமாள்
> கோயில்களில் நடக்கின்றன.
>
> செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
> மெய்ம்மை பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
> தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
> தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே
>
> இந்தப் பாட்டில் ஸ்ரீரங்கம் பெரியபெருமாள் தன் தந்தையுடன்
> பேசிய வார்த்தை பற்றிப் பேசுகிறாள் ஆண்டாள் என்றும்
> கொள்ளலாம். பழைய வியாக்கியானங்கள் என்ன சொல்கின்றன
> என்று தெரிந்தோர் எழுதினால் கற்றுக்கொள்ளலாம்.
>
> கீதையின் “எளிய” தமிழாக்கம் என திவாகர் குறிப்பிடும் நம்மாழ்வார்
> பாசுரங்கள்கீதைதான் என உறுதி செய்ய இயலவில்லை. பிரதிவாதி சுவாமியின்
> உரையிலும் அவ்வாறு ஒன்றும் காணோம்.கீதைபற்றியே
> காஞ்சி ஸ்வாமி குறிப்பிடலை அதன் உரையில்.
>
> ஆழ்வார்கள் தேரில் நின்று பார்த்தனுக்குகீதைசொன்னார்
> என்று தெளிவாக எங்கும் குறிப்பிடவில்லை.
>
> 19-ஆம் நூற்றாண்டில்கீதைபிரபலம் ஆகஒருமுக்கிய
> காரணம், - கிறித்துவத்தின் வருகை, காலனிய ஆட்சியில்
> இந்தியா அடிமையானது. இசுலாமியருக்கு குரான்,
> கிறுத்துவருக்கு பைபிள், ஹிண்டுக்களுக்கு என்ன புஸ்தகம்?
> என்ற கேள்வி முன்னிறுத்தப்பட்டது. விவேகானந்தர், திலகர்,
> காந்தி, ... எல்லாம் கண்டுபிடித்த விடை -கீதை.
> எனவேதான் அதன் பாப்புலாரிட்டி. மேலும் ஐரோப்பிய மொழிகளில்
> மொழிபெயர்க்கப்பட்டதாலும்.
>
> நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது விவேகாநந்தர், திலகர், காந்திஜீ மூவரும் ஹிண்டு லீக் ஒன்றை
அமைத்து யோசித்து ஒரு விடை கண்டதைப்போன்ற தோற்றத்தை
ஏற்படுத்தும் முயற்சி. அவ்வாறு செய்தாலும் அதில் தவறென்ன,
தெரியவில்லை.
ஐயன்மீர்,
ஆய்வுப்புலத்தில் எல்லாமே ‘அச்சது பொடி செய்த அதிதீரர்’
செய்வதுதான் முடிவு. Cut off century எது என்பதும் அவர்தான்
அவ்வப்போது நோக்கம்போல முடிவு செய்வார்.
அரவிந்தர் கூட்டணியில் இருந்தாரா ?
ரமண மஹரிஷி இருந்தாரா ?
வில்லி பாரத ஆசிரியர்,
பகவத் கீதை வெண்பாவின் ஆசிரியர் அதில் இருந்தனரா ?
என்றால் அடியேனிடம் ஆதாரம் இல்லை.
இந்த ஹிண்டு லீகில் ஜவஹர்லால் நேருவும்
இருந்ததாகக் கேள்வி .
"The Bhagavad-Gita deals essentially with the spiritual foundation of
human existence.
It is a call of action to meet the obligations and duties of life;
yet keeping in view the spiritual nature and grander purpose of the
universe."
~ Pandit Jawaharlal Nehru
இந்த வலைமனை சொல்லும் நபர்களும்
இருந்திருக்கலாம்; யாரும் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தை
ஆராயக் கிளம்ப வேண்டாம் -
http://hinduism.about.com/od/thegita/a/famousquotes.htm
மஹரிஷி ஸ்ரீ ரமணர் பகவத் கீதையிலிருந்து
42 சுலோகங்களை ஒரு சிறு தொகுப்பாக்கி
அளித்துள்ளார்; பின்னர் அவரே மலையாளத்திலும்,
தமிழிலுமாக அதை மொழிபெயர்த்தார்.
சாயம் காலியாகி விட்டது;
இன்னும் நிறையத் தேவைப்படுகிறது
தேவ்
On Apr 13, 11:23 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2012/4/14 DEV RAJ <rde...@gmail.com>
>
> > இது விவேகாநந்தர், திலகர், காந்திஜீ மூவரும் ஹிண்டு லீக் ஒன்றை
> > அமைத்து யோசித்து ஒரு விடை கண்டதைப்போன்ற தோற்றத்தை
> > ஏற்படுத்தும் முயற்சி. அவ்வாறு செய்தாலும் அதில் தவறென்ன,
> > தெரியவில்லை.
>
> அயத்து, இரதம் இடப் பசும் பொன் ஆவதுபோல், அருச்சுனன் ஆர் அறிஞன் ஆக
> *நயத்து இரத மொழிக் கீதை நவின்ற பிரான் *மயக்கு அறியார், `நாள் செய்வான் தன்
> *பாப்புலாரிட்டி* இருந்தால் தரக்குறைவானது என முடிவு செய்ய முடியாது;
> கணேசர் ஐயா இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆனவர்;
வித்தியாசமான சிந்தனை! கணேசனார் யோசிப்பார் என்று தோன்றுகிறது!
க.>
கீதையெனும் புரட்டு
அன்புடன்
ஆரூரன்
கீதையெனும் புரட்டு
அதெல்லாம் ஒன்றும் கிடையாது, ஐயா.
ஒரு சாராருக்கு மட்டும் இதெல்லாம் ஒருவகை ‘இணையப் பதப்படுத்தல்’
என்று அறிவுரை கிடைக்கும்.
விவிலியத்தையோ, கொரானையோ ஆராயப் புகுந்தால் முயற்சி
உடனே முறியடிக்கப்படும். முற்போக்கு அறிவுஜீவிகள் ஒரே
அணியில் திரண்டு வருவர்.
பைபிள், கொரானுக்கான ஆய்வுப் பதிவுகளும் தயார் நிலையில்
உள்ளன; மனம் திறந்த ஆய்வுக்கு, உரையாடலுக்குத் தயாராக
இருப்பவர் முன்வரலாம்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil