அண்டகோளவிருத்தி - ஒருங்குறி கோப்பு

13 views
Skip to first unread message

இராம்குமார் முகவை

unread,
Jan 12, 2012, 12:52:36 PM1/12/12
to santhav...@googlegroups.com
இயன்றவரையில் நூலில் தரப்பட்டுள்ள படியே தட்டியிருக்கிறேன். சொற்பரவலுக்காக சிற்சில இடங்களில் எழுதுச் சிதையாமல் பிரித்திருக்கிறேன். சிலபக்கங்கள் சாய்வாக ஒளிவருடப்பட்டதால் ஓரத்தில் எழுத்துகள் முழுமையாக இல்லை. இந்த எழுத்தாக இருக்கும்னு எழுதி இருக்கேன். இயன்றால் சரி பார்க்கவும்.

ஒளிவருடப்பட்ட கோப்பு இந்த பக்கத்தில்  http://www.archive.org/details/vaanmeegarumtham015949mbp தரவிறக்கக் கிடைக்கும்.

சொற்கள் கடுமையாக கூட்டி எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் துணிவில்லை, மெய்ப்புப் பார்ப்பவர்கள் தகுந்த இடங்களில் பிரித்தெழுதினால் படிப்பவருக்கு எளிதாக இருக்கும்.

வைணவ உரைகளின் பெருமைக்கு இந்தக் கட்டுரை ஒருசோறு பதம். சிந்தாமணி பதிப்பிற்கு உவேசா அவர்களின் சமணத்தேடலின் பொருள் தெள்ளிதின் விளங்குகிறது. இன்னும் முழுமையாகப் புரியாவிட்டாலும் என்னளவில் அனைவரும் படிக்கவேண்டிய நல்ல கட்டுரை. பதிப்பித்தமைக்கும், இங்கே பகிர்ந்து கொண்டமைக்கும் அ. இராஜகோபாலன் அவர்களுக்கு என் நன்றி.

நன்றியுடன்,
முகவை இராம்குமார்.
அண்டகோள விருத்தி.zip

Hari Krishnan

unread,
Jan 12, 2012, 9:28:54 PM1/12/12
to santhav...@googlegroups.com


2012/1/12 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

சொற்கள் கடுமையாக கூட்டி எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் துணிவில்லை, மெய்ப்புப் பார்ப்பவர்கள் தகுந்த இடங்களில் பிரித்தெழுதினால் படிப்பவருக்கு எளிதாக இருக்கும்.

அப்படி ஒன்றும் கடுமையாகக் கூட்டி எழுதப்படவில்லையே!  நீங்கள் அருட்பா மருட்பா கண்டன மறுப்பு போன்ற நூல்களில் பயிலும் நடையோடு இதை ஒப்பிட்டால், நடையும் எழுதப்பட்டுள்ள விதமும் எளிதாகவே தோன்றுகின்றன.  ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது இதுபோன்ற---

இதனால் தமிழ்மொழி இருவேறு வகைப்பட்ட தன்றென்றும், உறுதிப்பொருளில் உயர்ந்ததான வீடுபேற்றுக்குரிய தமிழ்நூல்வழக்கே ஆரியத்தமிழ் என்றும், அவ்வீடு பேற்றில், தண்ணியவாய அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் தமிழ்நூல்வழக்கே தண்டமிழ் என்றும் கருதி அப்பாட்டிற் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியதாயிற்று.


இடங்களாக இருப்பின்,


இதனால், தமிழ்மொழி இருவேறு வகைப்பட்டது அன்று என்றும், உறுதிப் பொருளில் உயர்ந்ததான வீடு பேற்றுக்கு உரிய தமிழ்நூல் வழக்கே ஆரியத் தமிழ் என்றும், அவ்வீடு பேற்றில், தண்ணியவாய (குளிர்ச்சி பொருந்தியதான) அறம் பொருள் இன்பங்களை உணர்த்தும் தமிழ்நூல் வழக்கே தண்டமிழ் என்றும் கருதி அப்பாட்டில் கூறி இருப்பதாகக் கொள்ள வேண்டியது ஆயிற்று.

என்பதைப் போல் பிரித்தெழுதிவிடலாம்.  நீங்கள் நினைப்பது இதைத்தான் என்றால், ஓரிரு வாரங்கள் கழித்து இந்தப் பணியை முடித்துத் தருகிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

இராம்குமார் முகவை

unread,
Jan 13, 2012, 7:33:18 AM1/13/12
to santhav...@googlegroups.com
ஆமாம். சில இடங்களில் படிப்பதற்கு சரவலாக இருந்தது. காட்டாக ஒரு தொடர்.

'புலனெறிவழக்கோடொவ்வாமைக்குரிய' - புலநெறி வழக்கோடு ஒவ்வாமைக்குரிய ன்னு இருந்தால் படிப்பது எளிது. 

அங்கங்கே பொருள் தருவதும் நல்லதே. ஆரியவழக்குன்னு குறிப்பிடும் இடங்களில் நிறைய வடமொழிச்சொற்களும் கையாளப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கும் பொருள் இணைத்தால் சிறப்பாக இருக்கும்னு நினைக்கிறேன். வேண்டுமானால் இரண்டு கோப்பு வடிவங்களையும் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் குறிப்பிட்ட நூல்கள் இன்னும் படிக்கவில்லை.

நன்றி,
முகவை இராம்குமார்.

2012/1/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

naa.g...@gmail.com

unread,
Jan 13, 2012, 8:55:21 AM1/13/12
to சந்தவசந்தம், மின்தமிழ்
On Jan 12, 9:52 am, இராம்குமார் முகவை <mugavai...@gmail.com> wrote:
> இயன்றவரையில் நூலில் தரப்பட்டுள்ள படியே தட்டியிருக்கிறேன். சொற்பரவலுக்காக
> சிற்சில இடங்களில் எழுதுச் சிதையாமல் பிரித்திருக்கிறேன். சிலபக்கங்கள்
> சாய்வாக ஒளிவருடப்பட்டதால் ஓரத்தில் எழுத்துகள் முழுமையாக இல்லை. இந்த
> எழுத்தாக இருக்கும்னு எழுதி இருக்கேன். இயன்றால் சரி பார்க்கவும்.
>
> ஒளிவருடப்பட்ட கோப்பு இந்த பக்கத்தில்http://www.archive.org/details/vaanmeegarumtham015949mbpதரவிறக்கக்

> கிடைக்கும்.
>
> சொற்கள் கடுமையாக கூட்டி எழுதப்பட்டிருக்கிறது. எனக்குத் துணிவில்லை,
> மெய்ப்புப் பார்ப்பவர்கள் தகுந்த இடங்களில் பிரித்தெழுதினால் படிப்பவருக்கு
> எளிதாக இருக்கும்.
>
> வைணவ உரைகளின் பெருமைக்கு இந்தக் கட்டுரை ஒருசோறு பதம். சிந்தாமணி பதிப்பிற்கு
> உவேசா அவர்களின் சமணத்தேடலின் பொருள் தெள்ளிதின் விளங்குகிறது. இன்னும்
> முழுமையாகப் புரியாவிட்டாலும் என்னளவில் அனைவரும் படிக்கவேண்டிய நல்ல கட்டுரை.
> பதிப்பித்தமைக்கும், இங்கே பகிர்ந்து கொண்டமைக்கும் அ. இராஜகோபாலன்
> அவர்களுக்கு என் நன்றி.
>
> நன்றியுடன்,
> முகவை இராம்குமார்.
>
>  அண்டகோள விருத்தி.zip
> 117KViewDownload

ஆம் திரு. முகவை இராம்குமார். இதை அலகிட்டு
இணைய உலா வரச் செய்தோருக்கு தமிழன்னை
நன்றி சொல்வாள்.

திரு. அப்பன் ராஜகோபாலன் ஐயா இந்த
திரு. நாராயணையங்காரின் அரிய கட்டுரைகளை
மறுஅச்சு செய்தது மட்டும் அல்லாமல், இணையத்திற்கும்
அளித்துள்ளார்கள். அன்னார் வழங்கியுள்ள தமிழ்க்கொடை போற்றத்தக்கதாகும்.

அண்டகோள விருத்தியுரை எந்த ஆண்டு திரு,
நாராயணையங்கார் அச்சிட்டார்? என அறிய அவா.

திரு. ரா. ராகவையங்கார் எழுதிய உரை
தமிழ் மரபு அறக்கட்டளையில் கிடைக்கும்.
அதன் வெள்ளுரை (plain-text format) திரு, குமரன்
மல்லி தட்டெழுதியுள்ளார் - அவரது வலைப்பதிவொன்றில்.
இரண்டு உரைகளையும் தமிழ் ஆர்வம் கொண்டோர்
ஒப்பிட்டுப் படிக்கலாம்.

-------------

ஆரியத்தமிழ் கொண்டு நம்மாழ்வார் தமிழ்ச்
சங்கத்தில் பொற்கிழி அறுத்த முத்தகச் செய்யுள்
இது. 20-ஆம் நூற்றாண்டின் இரு பெரும் புலவர்கள்
அற்புதமான உரைகண்டு விளக்கியுள்ளார்கள்.
நாராயணையங்கார் ஸ்வாமி ஆரியத்தமிழுக்கும்,
தண்டமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக
விளக்கியுள்ளார். ஆரியத்தமிழ் என்பதை
வட இந்தியாவில் தொன்மையாய் இருந்த
தமிழ்-த்ராவிட பாஷை என்று கொள்கிறேன்.
மொழியியல், தொல்லியல் தற்கால ஆய்வுகள்
கூடற்புராணமுடையார் ஆரியத்தமிழ் என்று
போற்றும் நம்மாழ்வார் படைப்புக்கு மிகப் பொருந்தும்.
ஆரியத்தமிழை - உ-ம்: இன்று ஈரான், பாக்கிஸ்தான்
(ஆனால், பண்டை இந்தியா, சிந்து) உள்ள பிராகுவி
போன்ற மொழிகளாகக் கொள்ள வாய்ப்புள்ளது.
வட இந்தியாவின் எழுத்தில்லா ஆரியத்தமிழ்
பாஷைகளை எழுத த்ராவிட லிபியான
கிரந்தம் சாலச் சிறந்தது.

ஸ்ரீ நம்மாழ்வாரின் அகவலில் ஆமா என்னும்
முக்கியமான சொல் இருக்கிறது. அதன்
பொருள் காண இரு புலவர்களும் இடர்ப்பட்டுள்ளனர்
என்று தெரிகிறது. நாராயணையங்கார் அண்டகோள
மெய்ப்பொருள் செய்யுளில்
ஆமா என்பதை “அம் மா” என்றாக்கி, அதற்கு
ஏதுவாக, “பெருமரம்” என்பதைப் பெருமா என்றாக்குகிறார்.
அது தேவையில்லை என கருத இடமுண்டு.
ரா. ரா. ஸ்வாமியோ ஆமா என்பதை ஆமாறு என்று
கொண்டு வியாக்கியானம் செய்கிறார்.
ஆனால், ஆமா (அல்லது ஆமான்) சங்கத் தமிழ்ப்
பொருள் என்ன? ஆரியத்தமிழர் வாழ்ந்த தொல்
கலாச்சாரத்தில் ஆமா உண்டா? அதன் இடம் என்ன?
பிற்காலத்தில் போதிதருமர், சாக்கிய நாயனார்
போன்றோர்களுக்கு முன்னோரான சக வம்மிச
ராஜாக்களின் காசுகளில் ஆமா உண்டா?
அந்தச் சக குலத் தோன்றல் புத்தருக்கும் ஆமாவுக்கும்
யாது தொடர்பு? என்று கண்டால் ஸ்ரீ நம்மாழ்வார்
ஆரியத்தமிழ் அகவல் இன்னும் ஒளிகூடும்
என்று அடியேன் எண்ணுகிறேன். இதற்கான
கட்டுரை ஒன்று எழுதி திருமிகு. அ. ரா. போன்ற
புலவர்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க பெரியகடவுள்
துணைவேணும்.

பொங்கல் வாழ்த்து,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2008/01/pongal.html
http://groups.google.com/group/santhavasantham/msg/1439622ff3ff5796

RAJAGOPALAN APPAN

unread,
Jan 15, 2012, 10:41:22 AM1/15/12
to santhav...@googlegroups.com
'ஆழ்வார் சங்கத்தாருக்கு எழுதிய அகவல் என்ற குறிப்புடன், ஆழ்வார் திருநகரியில் தாயவலந்த்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டில் கிடைத்த ஒற்றை ஏட்டில் இந்தப்பாடல் காணப்பட்டது' என்றும், 'இதன் பொருள் இப்போது நன்கு  விளங்கவில்லை' என்றும் குறிப்பிட்டு, செந்தமிழ் இதழ் தொகுதி 3 பக்கம் 405 ல் ரா.ராகவையங்கார் ஆசிரியராக இருந்தபோது இந்தப்பாடலை வெளியிட்டிருக்கிறார். 1903 லிருந்து செந்தமிழ் வெளி வரத்தொடங்கியதாக அறிகிறேன். மூன்றாவது தொகுதி என்றால் 1905ம் ஆண்டாக இருக்கலாம். வெகு காலத்திற்குப் பிறகு, நம்மாழ்வார் கால ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ண சடகோபதாசன் என்பார் இந்தப் பாடல் பற்றிய ஐய வினா ஒன்றை எழுப்பியிருக்கிறார். அது செந்தமிழ் தொகுதி 28 பகுதி 11 ல் வெளியாகியிருக்கிறது. தொகுதி 3  தொடங்கி தொகுதி 28 வரையும் அதற்கு மேலும்  இந்தப்பாடலுக்கு உரை காணப்படவில்லை என்று தெரிகிறது.
 
//அண்டகோள விருத்தியுரை எந்த ஆண்டு திரு,
நாராயணையங்கார் அச்சிட்டார்? என அறிய அவா//
 
 
திருநாராயணையங்கார் 1931 ல் அதற்கு உரை செய்ததாக அறிகிறேன்.  ரா.ராகவையங்காரின் 'அண்டகோள மெய்ப்பொருள்'1934 ல் வேதவேதாந்தவர்த்தனீ மஹாசபையாரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
 
 'ஆமா' பற்றிய தங்கள் ஆய்வில் வெளிவரவிருக்கிற புதிய தகவல்களுக்காக ஆர்வத்துடன் நானும் காத்திருக்கிறேன்.

அன்புடன்,
அ.ரா.

Reply all
Reply to author
Forward
0 new messages