தமிழைச் சிதைக்கும் கயவர்கள் ...

177 views
Skip to first unread message

rajam

unread,
Sep 5, 2015, 9:02:44 PM9/5/15
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், ra...@earthlink.net
அண்மையில் சில நாட்களாக இணையப்பக்கம் வாராமலிருந்தேன், பல காரணங்களுக்காக. சில நண்பர்களின் பதிவுகள் என்னை நோக்கியதெனத் தனிமடல் மூலம் அறிந்து இன்று இணையப்பக்கம் வந்தேன். 

முன்பெல்லாம் ஆர்வத்துடன் எல்லா இடுகைகளையும் ஆர்வத்துடன் படிப்பேன்; பலவகை உணர்ச்சியெழும். அதெல்லாம் இனிமேல் கூடாதென்று மருத்துவர் அறிவுறுத்தவே இணையம் என்பதை அந்நியப்படுத்திக்கொண்டுவருகிறேன்.

இன்று இணையப்பக்கம் வந்தபோது சில நல்ல செய்திகள் — பவளஶ்ரீயின் பிறந்தநாள், சுபாவின் பட்டமளிப்புவிழாத் தொடர்பான விருந்து போன்றவற்றைப் படித்து மகிழ்ந்தேன். இருவரும் என் பெண்கள். அவர்களுக்கு என் அன்பும் ஆசியும். 

ஆனால் … ஓரிரண்டு இழைகள் என்னைத் தடுமாறவைத்தன. 

“குஞ்சி” என்றால் ஆணின் பிறப்புறுப்பாம்! அதனால் பொதுமன்றத்தில் அந்தச் சொல்லைப் பயன்படுத்தலில் கவனம் செலுத்தவேண்டுமாம்!

இந்த 73 ஆண்டுக்கால அகவையில், எனக்குத் தெரிந்த அளவில் “குஞ்சி” என்ற சொல் ஆணின் பிறப்புறுப்பைக் குறிப்பது என்று கேள்விப்பட்டதேயில்லை. 

“குஞ்சி” என்ற சொல்லை முதன்முதலாக நான் அறிந்தது குறிஞ்சிப்பாட்டில் தலைவனின் தலைமுடியைப் பற்றிய விளக்கத்தில்தான். பிற எந்த இலக்கியத்திலும் ஆணின் பிறப்புறுப்பை அந்தச்சொல் சுட்டுவதாக என் ஆசிரியர்களும் படிப்பிக்கவில்லை; நானும் பார்க்கவில்லை.

இது (“குஞ்சி”) ஏதேனும் சில குழுவினரிடையே குழூஉக்குறியாகப் பயன்பட்டு இடக்கரடக்கல் என்று ஒதுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

ச்சும்மா, இந்த இணையக்காலத்தில் … பாலியல் வக்ரம் பிடித்தவர்களின் பதிவுகளினால் வக்ரமில்லாத சாதாரண விளக்கங்கள் கறைபடுகின்றன.

++++++++++

இதற்கு எங்கள் குடும்பத்தினர் புழங்கும் penis, pubic hair … போன்ற ஆங்கிலச்சொற்களே தேவலை; அவர்களுக்கு நான் தமிழைச் சொல்லும்போது “குஞ்சி” என்பதன் உண்மைப்பொருளை அறிந்து வியந்து பாராட்டுவார்கள்.

கவலையுட்ன்,
ராஜம்





Nagarajan Vadivel

unread,
Sep 5, 2015, 10:17:50 PM9/5/15
to மின்தமிழ்
விளக்கத்துக்கு நன்றி ராஜம் அம்மா
குஞ்சி என்பதைச் செவ்விலக்கியத்தில் எழுதவியலாது என்று கணேசனார் ஒரு பின்னூட்டம் இடுகிறார்
விளக்கம் கேட்டால் பதில் இல்லை
நான் உயர்நிலைப் பள்ளியில் என் தமிழ் ஆசிரியர் குஞ்சி என்றால் என்ன என்பதை நினைவில் கொண்டு எழுதினால் ஒளியின் வேகத்தில் கூகிள் கொடுக்கும் கொச்சை பச்சை வார்த்தைகளைக் கொண்டு எடைபோடுவது பொருத்தமாக இல்லை.

கூகிளை முழுதும் நம்பாமல் இலக்கிய வளங்களைத் தேடவேண்டும் என்ற எண்ணம் இல்லாத காரணத்தால் நடந்தது என்றே கருதுகிறேன்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Sep 5, 2015, 11:28:06 PM9/5/15
to mintamil
தங்களின் பதிவு, குஞ்சி என்ற சொல்லைப் பற்றிய விளக்கத்துடன் இருந்ததை வரவேற்கிறேன், ராஜம் அம்மா.

சித்தர் எழுதியிருப்பதைப்போல, சிலர் போருல்தேரியாதபோது, கேட்டு அறியாமல், தமக்குத் தோன்றியவண்ணம் எழுதுவது, நம் போன்றவருக்கு வருத்தத்தைவிட, வியப்பையே அளிக்கிறது.

நான் சில மாதங்களுக்குமுன்னர், "மயிர் என்ற சொல் ஏன் தாழ்வாகக் கருதப்படுகிறது?" என்ற தலைப்பில் ஒரு இழைகூட வைத்திருந்தேன்.  திருவள்ளுவர் தமது குறளில் கையாண்ட அச்சொல் இப்பொழுது விலக்கப்படுவது எனக்குப் புரியாத புதிராகவே உள்ளது.  நான் இந்தியாவைவிட்டுக் கிளம்பும்வரை அப்படி அச்சொல் விளக்கப்பட்டவில்லை.

அதுமட்டும் அல்ல;  இப்பொழுது தோல் என்ற தமிழ்ச் சொல்லுக்குப்பதிலாக சருமம் என்ற சொல் கையாளப்படுகிறது.  இன்னும் பல உதாரணங்களைக் கொடுக்கலாம்.

இப்படி மறைந்துவரும், ஒதுக்கப்பட்டுவரும் தமிழ்ச்சொல்களை நாம் உயிர்ப்பிக்கவேண்டும் என்பது எனது அவா.

ஒரு அரிசோனன்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 6, 2015, 12:39:08 AM9/6/15
to mintamil
ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் வழக்கிலுள்ளபொழுது தவறான பொருள் தொனிக்கக்கூடும் என்ற எண்ணம் சிறிதளவு மனதில் எழுந்தாலும் அச்சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தவேண்டியதில்லை என்பது என் எண்ணம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Banukumar Rajendran

unread,
Sep 6, 2015, 6:55:56 AM9/6/15
to மின்தமிழ்
ஆமோதிக்கிறேன் ஐயா!



இரா.பானுகுமார்

Nagarajan Vadivel

unread,
Sep 6, 2015, 7:08:45 AM9/6/15
to மின்தமிழ்

2015-09-06 10:09 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
ஒரு சொல்லுக்கு பல பொருட்கள் வழக்கிலுள்ளபொழுது தவறான பொருள் தொனிக்கக்கூடும் என்ற எண்ணம் சிறிதளவு மனதில் எழுந்தாலும் அச்சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தவேண்டியதில்லை என்பது என் எண்ணம்.

​நீங்கள் கூறுவது இந்த இழைக்குப் பொருந்தாது.  இழையின் தலைப்பை ஒட்டியே நான் குஞ்சி என்ற பழைய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினேன்.  அதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் குஞ்சி என்பது கெட்ட வார்த்தை என்ற கூகிள் பட்டியலைப் பார்த்து எனக்கு அறிவுறுத்தம் செய்தார்கள்

நான் தமிழ்ல் தப்பாக எழுதுவேன் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் ஆபாசமாக எழுதமாட்டேன் என்பது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்

மின் தமிழுக்க வந்த புதிதில் யூட்யூபில் சில்க் ஸ்மிதாவின் முழுக்க முழுக்க ஆடை அணிந்த ஒரு பாடலைப் போட்டு நான் வாங்கிக் கட்டிக்கொண்டது பலருக்குத் தெரியாது

நான் அகராதிகளைச் சரிபார்த்தே அந்த வார்த்தையை எழுதினேன்.  அதைத் திசை திருப்பிய பாவம் என்னைச் சேராது

அ.த​

Satish Kumar Dogra

unread,
Sep 6, 2015, 7:54:30 AM9/6/15
to mint...@googlegroups.com
பஞ்சாபி மொழியில் "குஞ்சி" என்பது "சாவி". அது மட்டும் இல்லாமல், ஒரு பரீட்சக்கான கேள்வித்தாளுக்கு பதில்கள் கொண்டுள்ள key யையும் "குஞ்சி" என்பார்கள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

nkantan r

unread,
Sep 6, 2015, 8:12:16 AM9/6/15
to மின்தமிழ்
I donot know the background story of this thread; but I have been in Chidambaram for many years (especially formative years of 2 to 20!); and certainly kunchithapatham is a highly revered word and kunchitha in that means (as per my old science teacher, who knew more tamil than my tamil teacher!) one that is not grounded; in the dance form of Lord natarja, one foot is grounded ( many interpret it is ON muyalagan, but it is actually only a toe pressing the muyalagan, , because I have been close to that dancing form and seen, but that is another story which cannot be told!) and the other foot is not grounded.

this "kunchitha" foot is considered more revered as it is not "touching upon the sinful earth" and also it belongs to the ambal (remember the left side of shiva is actually ambal; few may know that natarja wears two different ear-rings; the right and left are different!); and in my days of Chidambaram, many sons were named kunchithapatham!

2) and the word kunchu is also not reprehensible; on this day of janmashtami, many remember and worship kunchuk Krishnan!

3) kunchi, as madam brought out, is not releated to kunchu or kunchitha!

regards
rnkantan

Suba.T.

unread,
Sep 6, 2015, 8:14:02 AM9/6/15
to மின்தமிழ், Subashini Tremmel
இடையில் வீட்டு  விருந்து,   விருந்தினர்  வருகை என்பதனால் முழுதாக எல்லா பதிவுகளையும் வாசிக்க இயலவில்லை. 
இன்று இந்த இழையை வாசித்த போது எனது தனிப்பட்ட கருத்தையும் பதிய விரும்புகின்றேன்.

ஒரு சொல்லின் இயல்பான பொருள் என்பது பயன்பாட்டில் வழக்கில் இல்லாது போவது என்பது பல சொற்களுக்கு நடந்திருக்கின்றதாகவே உணர்கின்றேன். வழக்கில் ஒழிந்த சொற்களை புழக்கத்துக்கு கொண்டு வருவதும் தமிழ் மொழி வளர்ச்சியில் அடங்கும் ஒரு செயல்பாடாகவே நான் காண்கின்றேன்.

சில சொற்கள் எழுத்து வழக்கிலேயே அதன் பொருள் மாறிப் போய் அமைவதுண்டு.
சில சொற்கள் எழுத்து வழக்கில் உள்ள பொருள் அதிகம் பயன்பாட்டில் இல்லாத  நிலையில் பேச்சு வழக்கில் வேறு பொருள் கொண்டு நிலவுவதும் உண்டு.
இந்த நிலையில் அச்சொல்லின் பழமையான பொருளை  விளக்கி பயன்பாட்டில் கொண்டு வருவதை நான் தவறாகக் கருதவில்லை. 

சில சொற்கள் மிக வக்கிரமான பொருள் கொண்டவையாக சமூகத்தில் நிலவும் நிலை கூட  இப்போது வழக்கில் இருப்பதைக் காண்கின்றேன்.

உதாரணமாக அக்கா என்பது. வயதில் மூத்த சகோதரி என்ற ஒரு உறவை வெளிப்படுத்தும் இச்சொல் இப்போது கேங்ஸ்டெர் தலைவி என்றும், காமசிந்தனையை மிக அசரவைக்கும் வகையில் வெளிப்படுத்டும் ஒரு பெண்ணை சுட்டி விளிப்பதாகவும் புழக்கத்தில் உள்ளது. அதற்காக இந்தச் சொல்லை நமது குடும்ப நிலை தமிழ் மொழி பயன்பாட்டிலிருந்து நாம் நீக்கி விட முடியுமா?
மச்சி என்ற சொல்லும் இதே போலத்தான்.

பொதுவாக காம சிந்தனை  வக்கிரப்படும் மனத்தில் எல்லாமே அசிங்கத்தனமாகவே தான் வெளிப்படுத்தப்படும். நம் உடலின்  குறிப்பிட்ட உறுப்புக்கள், அதன் செயல்பாடுகள் இச்சைகள் என்பனவற்றை இயல்பாகக் காணமுடியாது வக்கிரப்பட்டு சிந்திப்பதால் எல்லாமே அசிங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகின்றது என்று மட்டுமே என்னால் இதனைக் காண முடிகின்றது.

சுபா


Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 6, 2015, 9:21:06 AM9/6/15
to mintamil
அன்புள்ள பேராசிரியர் ஐயா,
தங்களுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி. தங்கள் எழுத்தில் ஒருபோதும் ஆபாசம் கண்டதில்லை. எனவே ஆபாச எழுத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. கோழிக்குஞ்சு, காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சு போன்ற சொற்கள், சொலவடைகள் புழக்கத்தில் உள்ளவையே. 
குஞ்சிதபாதம் என்ற பெயரைப் பாதியாக நண்பர்கள் கேலியாக பயன்படுத்தி கதாநாயகன் படும்பாட்டைவைத்துச் சிவகார்த்திகேயன் நடித்த முழுநீள படமே அண்மையில் வந்தது. 

குஞ்சி என்ற சொல்லுக்கு முடி என்ற பொருள் இலக்கியத்தில் இருந்தாலும் வழக்கில் வேறு பொருள்களும் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

கீழ்க்கண்டவாறு ஒரு இழையில் எழுதும்போது வேறு பொருளும் அதற்குச் சிறிதளவாது தொனிக்க வாய்ப்பிருக்கிறது.
​“கூந்தலுக்குமட்டும் இயற்கை மணம் ஆடவரின் குஞ்சிக்கு ​இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?
காதலிக்கு ஒரு நீதி காதலனுக்கு இன்னொரு நீதியா
விளங்குலியே 
அ.த”

ஆடவர் என்று எழுதுகிறபோது தொடர்ந்து முடி போன்ற சொல்லை பயன்படுத்தினால் வேறு பொருளில் திசை திரும்ப வாய்ப்பில்லை. தாங்கள் அறியாததில்லை.

என் கருத்தில் உவப்பில்லையென்றால் பொருத்துக்கொள்ளவும் ஐயா. நன்றி. 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-09-06 16:38 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

rajam

unread,
Sep 6, 2015, 2:20:01 PM9/6/15
to மின்தமிழ், ksuba...@gmail.com
நீங்கள் சொல்வது புரிகிறது, சுபா.

மொழி கற்பிக்கும் ஆசிரியை என்ற நிலையில் என் கோணப்பார்வையையும் சொல்கிறேன்.

ஒரு சொல்லுக்கு அடிப்படைப்பொருள் ஒன்றுதான் இருக்கமுடியும். அதுவே 'இயற்பெயர்.' பிறகு அது 'ஆகுபெயராக' வழங்கப்படும் நிலை உண்டாவதும் இயல்பே. எடுத்துகாட்டாக, 'மொட்டை' என்பதுக்கு அடிப்படைப்பொருள் ஒன்று, அது மொண்ணையாக/வழுவழுப்பாக இருக்கும் ஓர் அஃறிணப்பொருளைக்குறிக்கும். அதுவே ஒரு மனிதனைச் சுட்டினால் அது ஆகுபெயர். எங்கள் ஊரில் 'மொட்டை' என்ற ஒருவர் இருந்தார்.

ஆகவே, இங்கே 'குஞ்சி' என்ற இயற்பெயர் ஆடவனின் தலைமயிரைக் குறிப்பது இயற்பெயர். அதுவே ஆணின் பிறப்புறுப்பைக் குறித்தால் அது 'ஆகுபெயர்.' 

நான் வளர்ந்துவந்தகாலத்தில் தலைப்பின்னலுக்கு முடியாக வாழைநார், 'ரிப்பன்,' 'குஞ்சம்/குஞ்சலம்' என்று பயன்படுத்துவோம். இன்றும் நாட்டியம் ஆடும் பெண்களின் பின்னலில் அதைப் பார்க்கலாம். அந்தக் குஞ்சம்/குஞ்சலம் என்ற பொருளின் உருவமும் அசைவும் சில வக்ரம் பிடித்த மனங்களில் ஆணுறுப்பை நினைவூட்டியிருக்கும். ஆகவே, அடுத்தடுத்து இந்தக் குஞ்சி என்ற தொடக்கக்காலப்பொருள் சிதைந்து போயிருப்பதாகத் தெரிகிறது. பாவம், தமிழ்மொழி.

சிவனின் இலிங்கத்துக்குக் கோயில்கட்டிக் கும்பிடும் சமூகத்தில் 'குஞ்சி' என்ற சொல்லின் இன்றைய வழக்காறு வியப்பைத்தருகிறது. அந்தச் சொல்லே பயன்படுத்தலாகாது என்ற நிலையும் இரங்கற்குரியதே.

இதனால் என்ன தப்பு என்று கேட்கலாம். சொல்கிறேன்.

1. நல்லதொரு பழந்தமிழ்ச்சொல் வழக்கிலிருந்து அப்புறப்படுத்தப்படுகிறது. அது தானாக மறையவில்லை. மக்களால் சிதைக்கப்படுகிறது.

2. தமிழரல்லாதாருக்குத் தமிழிலக்கியம் கற்பிக்கும்போது அவர்களுக்கு எதைச்சொல்லுவது என்ற தடுமாற்றநிலை ஏற்படலாம். 

[என்னைப்பொருத்த அளவில் இப்போதுதான் இந்த வக்கிரம் பிடித்த பொருள் தெரியவந்தது.]

3. ஒரு சொல்லுக்கு உரிய பொருள் ஏதோ ஒரு காரணத்துக்காகக் கீழ்த்தரமானது என்று முடிவுசெய்தவர்கள் அந்தப் பொருளை வெளிப்படுத்த இன்னொரு சொல்லைப் பயன்படுத்துவது ஒரு முறை. ஆனால் இது எல்லாருக்கும் எளிதில் புரியாது.

எடுத்துக்காட்டாக, 'சிறுநீர்' என்பதற்கு இரண்டு பொருளில்லை. இதைக் குறிப்பிடப் பழைய புலவனும் சுற்றிவளைத்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறான். 

நற்றிணை 103-இல் "நீர்-அல்-ஈரத்து" என்ற தொடர் வருகிறது. இங்கே "நீர்-அல்-ஈரம்" என்பது "மூத்திரம்" என்பதைக் குறிக்கும். பின்னத்தூரார் உரையும் சொல்கிறது. 

இப்படியாகப்பட்ட சுற்றிவளைசொல் மொழிபெயர்ப்பாளர்களைத் திகைக்கவைத்திருக்கிறது.

இதேபோல ... "பாசியற்றே பசலை, தொடுவழி தொடுவழி நீங்கி விடுவழி விடுவழிப் பரத்தலானே" என்ற குறுந்தொகைக்கு உரையெழுதியவர்களின் குறிப்பிலிருந்து "தொடுவழி" என்பது "இடக்கரடக்கல்" என்பதுமட்டும் தெரிகிறது. அதன் அடிப்படைப்பொருள் விளக்கமாக இல்லை. 

சரி, அதனால் இழப்பென்ன? 'பசலை', 'திதலை,' 'சுணங்கு' என்ற சொற்களின்  அடிப்படைப்பொருளை யாருமே திட்டவட்டமாக அறியக்கூடவில்லை. 

இப்போது 'குஞ்சி' என்ற சொல்லின் 'புது விளக்கம்' கிடைத்திருக்கிறது. இனி, மொழிபெயர்ப்பாளர்கள் நிலை என்னாகுமோ!

ஒரு மொழியில் சொற்கள் தாமாக மறைவதில்லை, மறைவு என்பது பயனர்களின் விளையாட்டின் கேடு. 

தமிழைப்பொருத்த அளவில் இது மிகவும் பொறுப்பானது. நம் பழைய இலக்கியங்கள் சாகவில்லை. அந்த இலக்கியங்களில் உள்ள சொற்களுக்கு அவ்விலக்கியங்கள் உருவான காலங்களில் என்ன பொருள் வழங்கிற்றோ அதைப் புரிந்துகொள்ளவேண்டும். பிற்காலத்தில் கொத்துப்பட்ட பொருளைப் பழைய இலக்கியங்களில் பொருத்திப்பார்க்கக்கூடாது.

வேண்டுமென்றால் மொழித்தூய்மையாளர்கள் (language puritans) ஒரு பட்டியல் உருவாக்கித்தரட்டும். 

இயற்பெயர் ........................................... ஆகுபெயர்
குஞ்சி (ஆணின் தலைமயிர்) ....................குஞ்சி (ஆணுறுப்பு)
மயிர் (??) ................................................மயிர் (??)
தோல் (??) ...............................................தோல் (??)
பூளை (ஒருவகைப் பூ) ................................பூளை (ஆணுறுப்பு?)

இந்த மாதிரி ஆகுபெயரோ என்னவோ உருவாவதெல்லாம் பள்ளிச்சிறுவர்களிடமிருந்து அல்லது பாலியல் உணர்வு மிகுந்த பிறரிடமிருந்து கிளுகிளுப்புக்காக என்பது என் கருத்து.

தெருமொழி (street language) வழக்கு என்பது இலக்கியமொழியைச் சிதைப்பது கொடுமை.

++++++++++

திரு சொ.வி ஐயா சொன்னது: "குஞ்சி என்ற சொல்லுக்கு முடி என்ற பொருள் இலக்கியத்தில் இருந்தாலும் வழக்கில் வேறு பொருள்களும் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே."

என் மறுமொழி: இல்லை, நேற்றுவரை எனக்கு இந்தப் பொருள் தெரியாது.


டாக்டர் நாகராசன் அவர்கள் "ஆடவரின் குஞ்சிக்கு ​இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?" என்று கேட்டது இலக்கியம் பற்றிய உரையாடலில். அதில் எந்தத்தவறும் இல்லை, தெருமொழிக்கு அங்கே இடமில்லை.

[பி.கு: இலக்கியத்தை விளக்கும்போது எந்தச் சொல்லையும் நான் புறக்கணிக்கமாட்டேன்!]

கவலையுடன்,
ராஜம்

Oru Arizonan

unread,
Sep 6, 2015, 4:42:28 PM9/6/15
to mintamil


2015-09-06 11:20 GMT-07:00 rajam <ra...@earthlink.net>:
//அதுவே ஆணின் பிறப்புறுப்பைக் குறித்தால் அது 'ஆகுபெயர்.'
குஞ்சி (ஆணின் தலைமயிர்) ....................குஞ்சி (ஆணுறுப்பு) //

ராஜம் அம்மா,

இன்றைய நடைமுறையிலும் 'குஞ்சி' என்ற சொல்லுக்கு தாங்கள் குறிப்பிடும் ஆகுபெயர் வழக்கிலில்லை.  

தேமொழி

unread,
Sep 6, 2015, 5:53:09 PM9/6/15
to மின்தமிழ்
இதில் மட்டுறுத்தர் என்ற கோணத்தில் இடையிட்ட எனது பார்வையையும் சொல்ல வேண்டியது 
எனது பொறுப்பு/கடமை:

குஞ்சி என்பது சிறு பையன்களுடன் பெரியோர் குறிக்கும் வழக்கில் உள்ள ஒரு சொல்தான். வேறு பெயர்களும் சிறுவர்களிடம் பேசும் பொழுது குறிப்பிடும் வழக்கமும் இன்றுவரை உள்ளது. ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும் 

எனது பள்ளி நாட்களில் இராமயணத்தில் வரும் குஞ்சி என்பதற்கு விளக்கம் அளிக்கும் பொழுது ஆசிரியை இறுக்கமான முகத்துடன் பாடம் நடத்துவதும், மாணவிகள் புத்தகத்திற்கு பின் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தும் வழக்கமும் இருந்தது.

இவையெல்லாம் யாரும் யாரிடமும் வேலைமெனக்கெட்டு சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்வதில்லை.  சிவகார்த்திகேயன் படம் போல ஆங்காங்கு அரசால் புரசலாகப் பேச்சில் இருப்பதால் தெரிந்து கொண்டு, பிறகு அவ்வாறு சொல்வது பொதுமன்றில் சரியல்ல எனப் புரிந்து தவிர்த்துவிடுவதுதான்  நாகரிகமாகப் பேச வேண்டும் என்று கருதுபவர் நடவடிக்கை.

தமிழில் இடக்கரடக்கல் என்ற வழக்கு உள்ளதை நாம் அறிவோம் அல்லவா? சங்கடத்தில் ஆழ்த்தும் சொற்கள் தவிர்க்கப்படுவது வழக்கம் 

பேராசிரியருக்கு விளங்கும் படி விளக்க வேண்டுமென்றால்...

ஒரு எடுத்துகாட்டு....

தாசி என்ற சொல் அடிமை என்ற பொருளில் வருவது.  பாரதிதாசன், கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக் கொள்ள யாரும் யோசிப்பதில்லை.

அதையே ஒரு பெண் தாசி என்று தனது பெயர் முடிவது போல வைத்துக் கொள்ள விரும்பியதாக நான் அறிந்ததில்லை.

(மாதவி என்று எனது மகளுக்குப் பெயர் வைத்த  பொழுதே என் அம்மாவிற்கு விருப்பம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. ஆனால் அவர் நேரடியாகச் சொல்லவில்லை.)

தாசி என்பது அடிமை என்றுதான் பொருள், நான் மீண்டும் அதை புழக்கத்திற்கு கொண்டுவருகிறேன் என்று பெண்கள் இருக்கும் இடத்தில் சொல்ல நினைத்தால் பெண்கள்  தங்கள்  காலில் இருப்பதை டக்கென்று கையில் தூக்கிவிட மாட்டார்களா?

காலப்போக்கில் வேறு பொருள் ஒரு சொல்லிற்கு வழக்கத்திற்கு வரத் தொடங்கினால், அது தவறான கோணத்தைக் குறிக்கும் என்று தெரியும்பொழுது தவிர்த்து விடுவதுதான்  நல்லது.

திரு. கணேசன் செவியிலக்கியங்களில் எழுத வழியில்லை என்றபொழுது அவர் எந்தக் கோணத்தில் குறிக்கிறார் என்பது மிகத் தெளிவாகப் புரிகிறது.
_____________________________________________________________________________________________________________________________

பேராசிரியர்:
கூந்தலுக்குமட்டும் இயற்கை மணம் ஆடவரின் குஞ்சிக்கு ​இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?
காதலிக்கு ஒரு நீதி காதலனுக்கு இன்னொரு நீதியா
விளங்குலியே 

**


நா. கணேசன்:
செவ்வியல் இலக்கியங்களில் எழுதவியலாது.

**


பேராசிரியர்:
ஏன் எழுதவிய்லாது
புறப்பொருள் வெண்பாமாலையில் ஆடவர் பூக்களை அணிவதாகக் குறிப்புள்ளதே.  பூவைக் குறிப்பாக் கொண்டு ஒரு பாடல் அகமா புறமா என்று பிரித்தறியமுடியுமே
இந்நிலையில் உங்கள் விளக்கமிலா ஒரு வரி விடை தெளிவை உருவாக்கவில்லை.  சற்றே விளக்கவும்

**

தேமொழி:
தொடர்வது சரியல்ல 

தொடர்ந்து மேலும் விளக்கமாக ..

தேமொழி:
மட்டுறுத்தர் சார்பில்,  குழுமத்தின் கௌரவம் கருதி இடையிட்டு சொன்னது பேராசிரியரே.
குழுமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய, மதிப்பைக் குறைக்கக் கூடிய  கருத்தாடல்களைத் தவிர்ப்பது நலம்.  
இவையெல்லாம் பெரும்பாலோரை முகம் சுளிக்க வைக்கும் உரையாடல்கள்.  
______________________________________________________________________________________________________________________

நான் நீங்கள் சொல்லும் கோணத்தில் கேட்கவில்லை கணேசன் ஐயா, ஆண்களின் முடியைக் குறிப்பிட்டேன் என்று சொல்லி பேராசிரியர் தொடர்ந்திருக்கலாம்.  
அதைவிட்டு அதற்கு திரு. கணேசனிட "விளக்கம்" கேட்டால் அவர் கொடுக்கும் விளக்கம் படிக்கத் தகுந்ததாக இருக்குமா?  

தெரியாததற்கு விளக்கம் கேட்கலாம் ... தெரிந்ததற்கு ஏன் விளக்கம் கேட்கவேண்டும், புறம் தள்ளிவிட்டு தனது  கோணத்தை விளக்கி தொடர்ந்திருக்கலாம். 

..... தேமொழி




Nagarajan Vadivel

unread,
Sep 6, 2015, 10:56:38 PM9/6/15
to மின்தமிழ்
இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் வரிகள்.  மட்டுறுத்துனர் என்ற நிலையில் நீங்கள் தவறிழைத்தீர்கள் என்ற குற்ற உணர்வே இல்லாமல் எழுதும் வரிகள் இவை.  எதையும் தவறென்று தீர்ப்பளிக்கும் முன் தவறிழைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது நீதியின் இயல்பல்லவா

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளதா என்ற தலைப்பில் விவாதம் தொடர்ந்து அது கூந்தலே இல்லை என்றும் காதலியின் கூந்தல் என்றும் தொடர்ந்ததில் ஆணின் தலைமுடியான குஞ்சிக்கு மணம் உண்டா என்று கேட்ட கேள்வியின் பொருள் தவறா என்று நான் கேட்ட கேள்விக்கு விடை அளிக்க மறுத்தது நீங்கள்

உச்ச நீதி மன்றம்கூட இப்போது ஒற்றைவரித் தீர்ப்பு தருவதில்லை. உங்கள் தீர்ப்புக்கு இப்போது கட்சிக்காரனாக மாறி வாதிடுகிறீர்கள்.  இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.  

நடந்தது இலக்கியம் சார்ந்த மடலாடல் இதில் நாட்டார் வழக்குச் சொற்கள் வந்தது என்று நீங்கள் கருதுயதற்கு அடிப்படை என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்து நான் பிறழ்நிலையில் எழுதி இந்த மடலாடலின் மாண்பக் கெடுப்பவன் என்று நீங்கள் கொண்டிருக்கும் கருத்து என்றே கருத இடம் உள்ளது

குறைந்தது என் வயதுகோ அல்லது படிப்பிக்கோ மரியாதை கொடுத்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலம் தொடர்வது சரியல்ல களங்கம் ஏற்படும் என்றெல்லாம் எழுதிவிட்டு இப்போது ஏன் அவ்வாறு எழுதினேன் என்று விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள்

முதலில் நான்வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருந்தேன் இப்போது வேதனைப்படுகிறேன் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை.  எதை எழுதினாலும் அதை எதிர்ப்பது என்று தொடர்ந்தால் சுயமரியாதையுள்ள எவரும் தொடர முடியாது

கணேசர் செவ்விலிக்கியத்தில் தொடர முடியாது என்று சொல்லி இப்போது அவரே குஞ்சிபற்றி எழுதுவது நேர்மைக்கு முரணானது என்று உணராமலே அவர் எழுதியது சரி என்று சொல்வது வெந்த புண்ணில் வேல்விட்டு ஆட்டுவதுபோல் உள்ளது

நான் அப்போதே வேண்டிய வண்ணம் இழையை நீக்கிவிடுங்கள் அல்லது என்னை எடுத்தெறியப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டிருந்தேன் நீங்கள் அதைச் செய்யாமல் இப்போது இப்படித் தீர்ப்பு வழங்குவது மட்டுறுத்துனர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இறுமாப்பு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் அது கடந்துபோகட்டும் என்று நான் தமிழ் கொரிய உறவுக்கான கட்டுரையில் கவனம் எலுத்தும்போது இப்படி ஒரு மடலைப் போட்டு என் ஆளுமையைத் தாக்குவீர்கள் என்று எண்ணவில்லை

நான் எந்தச் சூழலிலும் என்னை வெறுத்ததில்லை. இப்போது ஏன் மின்தமிழில் சேர்ந்தோம் ஏன் இன்னும் தொடர்கிறேன் என்று எண்ணி என்னையே வெறுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்

தவறென்றால் தலைமை நீதிபதியென்றாலும் அவரைக் கேள்வி கேட்காமல் நான் விட்டதில்லை.  உங்கள் மட்டுறுத்துனர் பதிவியோ அல்லது நீங்களோ நான் எதிர்த்துப் போரிடவேண்டிய தகுதி உள்ளவை அல்ல.  

அருள் கூர்ந்து என்னிடம் இனிமேல் இதுபோன்ற கருத்தாடல்களைத் தொடராதீர்கள்.  மட்டுறுத்துனர் வேலையில் உள்ள அதிகாரம் என்ன என்பதை உணர்ந்து நடந்தால் இதுபோன்ற முரண்பாடுகள் தோன்றாது என்பதை நினைவில் கொண்டால் நல்லது. 

நான் பங்குபெறுவது இந்த மடலாடல் குழுவில் ஏற்புடையதாகத் தெரியவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகளால் உணர்ந்துகொள்ள முடிகிறது.  தமிழ் மரபு அறக்கட்டளை தமிழனின் இழந்த மரபை மீட்டெடுப்பது மட்டுமல்ல.  இருக்கும் குறைகளை அறிந்து அவற்றைக் களைவதும் என்று நான் கருதுவதால் நான் இருண்ட பக்கத்தையே எழுதுகிறேன் அதுவே குற்றம் என்று கருதும் நிலையில் நான் அமைதியாக இருப்பது நல்லது என்று  அறியமுடிகிறது

நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக யாருக்கும் அஞ்சாமல் தலை வணங்காமல் பணிபுரிந்து அதற்காக நிறைய இழந்தவன்.  தன்மானத்துக்கு மதிப்பில்லை என்றால் இந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியே வேண்டாம் என்று விலகி வந்தவன்.  அதையே மின் தமிழிலும் செய்ய அதிக நேரம் ஆகாது

அன்டார்ட்டிகா தமிழன்



தேமொழி

unread,
Sep 6, 2015, 11:29:33 PM9/6/15
to மின்தமிழ்


On Sunday, September 6, 2015 at 7:56:38 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
இதெல்லாம் என் பொறுமையைச் சோதிக்கும் வரிகள்.  மட்டுறுத்துனர் என்ற நிலையில் நீங்கள் தவறிழைத்தீர்கள் என்ற குற்ற உணர்வே இல்லாமல் எழுதும் வரிகள் இவை.  எதையும் தவறென்று தீர்ப்பளிக்கும் முன் தவறிழைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்பளிக்கவேண்டும் என்பது நீதியின் இயல்பல்லவா

நான் சொன்னது எனக்கு தவறென்று தோன்றவேயில்லை  பேராசிரியரே, நான் என் கடமையை செய்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

அத்துடன், 

நான் தீர்ப்பு சொல்லும் பொறுப்பிலும் இல்லை, மட்டுறுத்தர் என்பது traffic constable / போக்குவரத்து காவலர் போன்ற ஒரு சிறு பொறுப்பு அவ்வளவுதான்.  அதற்கும் மேல் ஏதேனும் தேவை என்றால் மட்டுறுத்தர் குழுவிற்கு பரிந்துரை செய்து, அங்கும் அனைவரும் வாக்களித்துதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. 


பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளதா என்ற தலைப்பில் விவாதம் தொடர்ந்து அது கூந்தலே இல்லை என்றும் காதலியின் கூந்தல் என்றும் தொடர்ந்ததில் ஆணின் தலைமுடியான குஞ்சிக்கு மணம் உண்டா என்று கேட்ட கேள்வியின் பொருள் தவறா என்று நான் கேட்ட கேள்விக்கு விடை அளிக்க மறுத்தது நீங்கள்

உச்ச நீதி மன்றம்கூட இப்போது ஒற்றைவரித் தீர்ப்பு தருவதில்லை. உங்கள் தீர்ப்புக்கு இப்போது கட்சிக்காரனாக மாறி வாதிடுகிறீர்கள்.  இதெல்லாம் எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை.  

நடந்தது இலக்கியம் சார்ந்த மடலாடல் இதில் நாட்டார் வழக்குச் சொற்கள் வந்தது என்று நீங்கள் கருதுயதற்கு அடிப்படை என்னைப்பற்றி நீங்கள் கொண்டிருக்கும் கருத்து நான் பிறழ்நிலையில் எழுதி இந்த மடலாடலின் மாண்பக் கெடுப்பவன் என்று நீங்கள் கொண்டிருக்கும் கருத்து என்றே கருத இடம் உள்ளது

குறைந்தது என் வயதுகோ அல்லது படிப்பிக்கோ மரியாதை கொடுத்து என்னிடம் விளக்கம் கேட்டிருக்கலம் தொடர்வது சரியல்ல களங்கம் ஏற்படும் என்றெல்லாம் எழுதிவிட்டு இப்போது ஏன் அவ்வாறு எழுதினேன் என்று விளக்கம் வேறு கொடுக்கிறீர்கள்

முதலில் நான்வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருந்தேன் இப்போது வேதனைப்படுகிறேன் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நிலை.  எதை எழுதினாலும் அதை எதிர்ப்பது என்று தொடர்ந்தால் சுயமரியாதையுள்ள எவரும் தொடர முடியாது

கணேசர் செவ்விலிக்கியத்தில் தொடர முடியாது என்று சொல்லி இப்போது அவரே குஞ்சிபற்றி எழுதுவது நேர்மைக்கு முரணானது என்று உணராமலே அவர் எழுதியது சரி என்று சொல்வது வெந்த புண்ணில் வேல்விட்டு ஆட்டுவதுபோல் உள்ளது

நான் அப்போதே வேண்டிய வண்ணம் இழையை நீக்கிவிடுங்கள் அல்லது என்னை எடுத்தெறியப் பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டிருந்தேன் நீங்கள் அதைச் செய்யாமல் இப்போது இப்படித் தீர்ப்பு வழங்குவது மட்டுறுத்துனர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இறுமாப்பு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் அது கடந்துபோகட்டும் என்று நான் தமிழ் கொரிய உறவுக்கான கட்டுரையில் கவனம் எலுத்தும்போது இப்படி ஒரு மடலைப் போட்டு என் ஆளுமையைத் தாக்குவீர்கள் என்று எண்ணவில்லை

நான் எந்தச் சூழலிலும் என்னை வெறுத்ததில்லை. இப்போது ஏன் மின்தமிழில் சேர்ந்தோம் ஏன் இன்னும் தொடர்கிறேன் என்று எண்ணி என்னையே வெறுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்

உண்மைதான், எனக்கும் கூட அந்த எண்ணம்தான் தோன்றுகிறது.   மட்டுறுத்தர் பொறுப்பை சுபா கொடுத்ததை ஏற்றுக் கொண்டது சரியா என்றுதான் நானும் யோசிக்கிறேன்.  

ஏனெனில் மட்டுறுத்தர் என்ற பொறுப்பு கொடுக்காவிட்டாலும் நான் மனதில் பட்டதை சொல்லும் ஆள்தான்.  நான் குழும உறுப்பினர் என்ற முறையில் இருந்த பொழுதும், சரியில்லை என்று தோன்றும் பொழுது நான் சொல்லத் தயங்கியதில்லை.  



தவறென்றால் தலைமை நீதிபதியென்றாலும் அவரைக் கேள்வி கேட்காமல் நான் விட்டதில்லை.  உங்கள் மட்டுறுத்துனர் பதிவியோ அல்லது நீங்களோ நான் எதிர்த்துப் போரிடவேண்டிய தகுதி உள்ளவை அல்ல.  

அருள் கூர்ந்து என்னிடம் இனிமேல் இதுபோன்ற கருத்தாடல்களைத் தொடராதீர்கள்.  மட்டுறுத்துனர் வேலையில் உள்ள அதிகாரம் என்ன என்பதை உணர்ந்து நடந்தால் இதுபோன்ற முரண்பாடுகள் தோன்றாது என்பதை நினைவில் கொண்டால் நல்லது. 

நான் பங்குபெறுவது இந்த மடலாடல் குழுவில் ஏற்புடையதாகத் தெரியவில்லை என்பதை இதுபோன்ற நிகழ்வுகளால் உணர்ந்துகொள்ள முடிகிறது.  தமிழ் மரபு அறக்கட்டளை தமிழனின் இழந்த மரபை மீட்டெடுப்பது மட்டுமல்ல.  இருக்கும் குறைகளை அறிந்து அவற்றைக் களைவதும் என்று நான் கருதுவதால் நான் இருண்ட பக்கத்தையே எழுதுகிறேன் அதுவே குற்றம் என்று கருதும் நிலையில் நான் அமைதியாக இருப்பது நல்லது என்று  அறியமுடிகிறது

நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக யாருக்கும் அஞ்சாமல் தலை வணங்காமல் பணிபுரிந்து அதற்காக நிறைய இழந்தவன்.  தன்மானத்துக்கு மதிப்பில்லை என்றால் இந்தப் பல்கலைக் கழகப் பேராசிரியர் பதவியே வேண்டாம் என்று விலகி வந்தவன்.  அதையே மின் தமிழிலும் செய்ய அதிக நேரம் ஆகாது


நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன். 

..... தேமொழி 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

rajam

unread,
Sep 6, 2015, 11:32:18 PM9/6/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
உங்கள் பார்வையைப் பகர்ந்ததுக்கு நன்றி, தேமொழி.

சில ஐயங்கள்.

///குஞ்சி என்பது சிறு பையன்களுடன் பெரியோர் குறிக்கும் வழக்கில் உள்ள ஒரு சொல்தான். வேறு பெயர்களும் சிறுவர்களிடம் பேசும் பொழுது குறிப்பிடும் வழக்கமும் இன்றுவரை உள்ளது. ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.///

///எனது பள்ளி நாட்களில் இராமயணத்தில் வரும் குஞ்சி என்பதற்கு விளக்கம் அளிக்கும் பொழுது ஆசிரியை இறுக்கமான முகத்துடன் பாடம் நடத்துவதும், மாணவிகள் புத்தகத்திற்கு பின் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தும் வழக்கமும் இருந்தது.///

"பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.” என்றால் … இராமாயணம் படிக்கும் அளவு கல்விநிலை உயர்ந்தபின்னும் ஏன் அப்படி நடந்தது? அப்போது தோன்றியிருந்த மொழிவழக்குக்காக … இலக்கியத்தை விளக்கிய ஆசிரியைக்கு ஏன் அந்தவகைச் சிக்கல்? ஆசிரியையின் கடமை இலக்கியத்தை விளக்குவது, அதைச் சரியாக நிறைவேற்றப் பொதுமக்கள் வழக்கு தடுக்கிறது என்றால் யாருக்கு இழப்பு? 

இதே-போலத்தான், நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களிலும் “முலை” என்ற இலக்கிய வழக்கை “முகை” என்ற சொல்லால் மறைத்தார்கள். சீவக சிந்தாமணிப் பாடல்களில் சிலவற்றை முழுக்க முழுக்க அப்புறப்படுத்தியிருப்பார்கள். கோனார் உரை வாங்கிப் படித்த மாணவியர்கள் அந்தப் பாடல்களைப் பிற மாணவியருக்குச் சொல்லிக் கிளுகிளுத்ததும் உண்டு.

இங்கே இந்தப் பொதுமன்றத்தில் நாம் எல்லாரும் சிறுபிள்ளைப்பருவம் கடந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. இங்கே ‘குஞ்சி’ என்ற சொல் இடக்கரடக்கலாகப் பயன்படுகிறது என்ற உண்மைகூட என்னைப்போன்றோருக்கு (திரு ஒரு அரிசோனன் உட்பட) நேற்றுவரை தெரியவில்லை. ஆக, இது சில குறிப்பிட்ட மக்களிடையேயோ, வட்டார வழக்காகவோ, ஊடகக் கிருமியாகவோ புழங்கும் என்பது என் ஊகம். 

எப்போதும் விலாவாரியாக விளக்கும் கணேசன், இந்த இடத்தில் ஏனோ ஒரே வரியில் ‘செவ்விலக்கியத்தில் எழுத இயலாது’ என்று சொல்லிவிட்டார்! ஏன், எதைச் சொல்லவியலாது என்று கேட்பது மக்களுக்கு உரிமை. அதுக்கு விளக்கமில்லை என்றால் … ???

ஆக … அறிவுசான்ற மக்கள் நிரம்பிய இந்தக்குழுவில் ஒரு மிக அழகிய பழந்தமிழ்ச்சொல்லின் பயன்பாடு பற்றிக் கேள்வியும் பகடியும் உண்டாவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனல், அந்தச் சொல் (குஞ்சி) என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பது அறிவுத்தொடர்பான ஆய்வுக்குத் தடை கட்டும். 

பிறநாட்டாருக்குப் பண்டை இலக்கியத்தைக் கற்பிக்க முயன்று பார்க்கவும். 

கவலையுடன்,
ராஜம்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 7, 2015, 12:11:10 AM9/7/15
to மின்தமிழ், ra...@earthlink.net

நன்றி அம்மா.


On Sunday, September 6, 2015 at 8:32:18 PM UTC-7, rajam wrote:
உங்கள் பார்வையைப் பகர்ந்ததுக்கு நன்றி, தேமொழி.
சில ஐயங்கள்.
///குஞ்சி என்பது சிறு பையன்களுடன் பெரியோர் குறிக்கும் வழக்கில் உள்ள ஒரு சொல்தான். வேறு பெயர்களும் சிறுவர்களிடம் பேசும் பொழுது குறிப்பிடும் வழக்கமும் இன்றுவரை உள்ளது. ஆனால் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.///

///எனது பள்ளி நாட்களில் இராமயணத்தில் வரும் குஞ்சி என்பதற்கு விளக்கம் அளிக்கும் பொழுது ஆசிரியை இறுக்கமான முகத்துடன் பாடம் நடத்துவதும், மாணவிகள் புத்தகத்திற்கு பின் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிப்பைக் கட்டுப்படுத்தும் வழக்கமும் இருந்தது.///

"பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவையாவும் வழகொழிந்துவிடும்.” என்றால் … இராமாயணம் படிக்கும் அளவு கல்விநிலை உயர்ந்தபின்னும் ஏன் அப்படி நடந்தது? அப்போது தோன்றியிருந்த மொழிவழக்குக்காக … இலக்கியத்தை விளக்கிய ஆசிரியைக்கு ஏன் அந்தவகைச் சிக்கல்? ஆசிரியையின் கடமை இலக்கியத்தை விளக்குவது, அதைச் சரியாக நிறைவேற்றப் பொதுமக்கள் வழக்கு தடுக்கிறது என்றால் யாருக்கு இழப்பு? 


யாருக்கும் எந்த இழப்பும் இல்லை அம்மா.  பல திரையிசைப்பாடல்களில் தணிக்கைக்குழு வார்த்தைகளை மாற்ற வைத்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  அது பொதுவாழ்வில் சரியல்ல என்ற கோணத்தினால்தான்.  

இந்தியாவில் மட்டுமல்ல அமெர்காவிலும்தான் தொலைகாட்சியில் ப்ளீப் செய்கிறார்கள். எழுதினால் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் தவிர *** போடுகிறார்கள்.    

வீட்டில் என்னவோ பேசிக் கொள்ளட்டும், வெளியிடத்தில் தேவையில்லை என்ற மனப்பான்மைதான் அது.  அதற்காக யாரவது தண்டனை கொடுத்தாக நான் அறிந்ததில்லை.  அது போன்று மக்கள் தவிர்க்கும் சொற்களை சொல்பவர்தான் தனது மதிப்பைதான்  குறைத்துக் கொள்வார்.  பொது இடங்களில் இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கலாமே என்று சொல்பவரை இதுவரை யாரும் மரியாதைக் குறைவாக  நோக்குவார்கள் என்று நான் அறிந்தில்லை.


இதே-போலத்தான், நாங்கள் கல்லூரியில் படித்த நாட்களிலும் “முலை” என்ற இலக்கிய வழக்கை “முகை” என்ற சொல்லால் மறைத்தார்கள். சீவக சிந்தாமணிப் பாடல்களில் சிலவற்றை முழுக்க முழுக்க அப்புறப்படுத்தியிருப்பார்கள். கோனார் உரை வாங்கிப் படித்த மாணவியர்கள் அந்தப் பாடல்களைப் பிற மாணவியருக்குச் சொல்லிக் கிளுகிளுத்ததும் உண்டு.


இதில் கிளுகிளுப்படைந்து நான் பார்த்ததில்லை, சிலர் வெட்கப்படுவார்கள்,  சிலர் மிகவும் கூசுவார்கள். 
நல்ல பண்புகளுக்கு முக்கியம் கொடுத்து வளர்க்கப்பட்ட சிலர் சில வார்த்தைகளை சுட்டுப் போட்டாலும் சொல்ல மாட்டார்கள். எழுத மாட்டார்கள்.  மொழியின் வளத்தைப் பயன்படுத்தி மாற்றுச் சொற்களை பயன்படுத்தி சொல்லவந்த கருத்தை பதமாக சொல்லி சென்றுவிடுவார்கள்.  


இங்கே இந்தப் பொதுமன்றத்தில் நாம் எல்லாரும் சிறுபிள்ளைப்பருவம் கடந்தவர்கள் என்பது என் நம்பிக்கை. இங்கே ‘குஞ்சி’ என்ற சொல் இடக்கரடக்கலாகப் பயன்படுகிறது என்ற உண்மைகூட என்னைப்போன்றோருக்கு (திரு ஒரு அரிசோனன் உட்பட) நேற்றுவரை தெரியவில்லை. ஆக, இது சில குறிப்பிட்ட மக்களிடையேயோ, வட்டார வழக்காகவோ, ஊடகக் கிருமியாகவோ புழங்கும் என்பது என் ஊகம். 

எப்போதும் விலாவாரியாக விளக்கும் கணேசன், இந்த இடத்தில் ஏனோ ஒரே வரியில் ‘செவ்விலக்கியத்தில் எழுத இயலாது’ என்று சொல்லிவிட்டார்! ஏன், எதைச் சொல்லவியலாது என்று கேட்பது மக்களுக்கு உரிமை. அதுக்கு விளக்கமில்லை என்றால் … ???

ஆக … அறிவுசான்ற மக்கள் நிரம்பிய இந்தக்குழுவில் ஒரு மிக அழகிய பழந்தமிழ்ச்சொல்லின் பயன்பாடு பற்றிக் கேள்வியும் பகடியும் உண்டாவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. ஆனல், அந்தச் சொல் (குஞ்சி) என்பதைப் பயன்படுத்தக்கூடாது என்பது அறிவுத்தொடர்பான ஆய்வுக்குத் தடை கட்டும். 

குழும உறுப்பினர் ஒருவர் தூக்க கலக்கத்தில் தான் அனுப்ப எண்ணாத படத்தை தவறாக அனுப்பிவிட்டு பரிந்து பரிந்து வருத்தம் தெரிவித்த  பொழுது நான் அசந்து போனேன்.  அத்தனைக்கும் அது நம் கோவில்களில் வெளிப்படையாக இருக்கும் சிலைகளின் ஒளிப்படம்தான்.

ஒருசிலர் இதேவேலையாக அது போன்ற படங்களைப் போடும் பொழுது, இவர் ஏன் இவ்வளவு நொந்து கொள்கிறார் என்று வேடிக்கையாகக் கூட இருந்தது.  

ஒவ்வொருவரும் பண்பாடு/நாகரிகம் என்பதற்கு வைத்திருக்கும் அளவு கோல் வேறு. அவ்வளவுதான்.

அறிவியல் வகுப்பில் உடல்கூறுகள் பற்றி வரையும்பொழுது இருப்பவர் மனநிலை  வேறு. கழிவறையில் படம் வரைந்து கொச்சையாக ஏதேனும் எழுதிவைப்பவர் மனநிலை வேறு.  
 

பிறநாட்டாருக்குப் பண்டை இலக்கியத்தைக் கற்பிக்க முயன்று பார்க்கவும். 

வெளிநாட்டாருக்கு இலக்கியம்  என்று பார்ப்பதையும் விட,   செக்ஸ் எஜுகேஷன் எடுக்கும் ஆசிரியர்களையும், பிள்ளைகளுக்கு சரியாக அதை சொல்லிக் கொடுக்க தடுமாறும் பெற்றோர்களையும் பார்த்தாலே போதுமே.

.....தேமொழி 
 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 1:11:53 AM9/7/15
to மின்தமிழ்

2015-09-07 8:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன். 

​இங்கே குழப்பம் ஏற்பட்டதற்கு அடிப்படையே உங்கள் நிலைப்பாடுதான்.  இது உங்கள் தனிக் கருத்தா அல்லது மட்டுறுத்துனர் என்ற நிலையில் மேற்கொண்ட மட்டுறுத்தலா என்று கேட்டபோது என் தனிக் கருத்து என்று சொல்லியிருக்கலாம்.

இப்போது இதுவே என்கோணம் என்று சொல்லுவது பொருத்தமாஅக இல்லை எனொஅதே என் கருத்து.  மட்டுறுத்துனர் மடலாடல் குழுவின் கொள்கையை நிலை நிறுத்துபவர்.  அவருக்கு என்று தனிக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. 

மட்டுறுத்துனர் என்ற உங்கள் செயல் இந்த மடலாடல் குழுவுக்கு மிகவும் தேவை. அதை இழக்க சுபா ஒருக்காலும் விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும்​. அந்தச் சூழ்நிலை ஏற்பட்டை அறிந்தால் அவர் ஏன் இப்படி எனக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் என்று என்னைத்தான் கேட்பார்

நான் வயது வந்தோர் கல்வித்துறையில் கால் நூற்றாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்தவன்.  தனி மனித வளர்ச்சியில் பிறப்பில் இருந்து இறப்புவரை அவன் கடக்கும் பாதையை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுப்பவன்.  எனவே குஞ்சி என்பதை நான் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவன் என்று கருதுகிறேன்

உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இப்போது மாட்டை வாலைப்பிடித்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது

மட்டுறுத்துனர் என்ற நிலையில் இல்லாமல் தனிப்பட்ட கருத்து என்று வந்தால் நான் வாதிடத் தயார்.  மட்டுறுத்துனர் என்றால் நீங்கள் அதிகாரி நான் வலுவில்லாதவன்

அ.த



தேமொழி

unread,
Sep 7, 2015, 1:46:43 AM9/7/15
to மின்தமிழ்
On Sunday, September 6, 2015 at 10:11:53 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-09-07 8:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன். 

​இங்கே குழப்பம் ஏற்பட்டதற்கு அடிப்படையே உங்கள் நிலைப்பாடுதான்.  இது உங்கள் தனிக் கருத்தா அல்லது மட்டுறுத்துனர் என்ற நிலையில் மேற்கொண்ட மட்டுறுத்தலா என்று கேட்டபோது என் தனிக் கருத்து என்று சொல்லியிருக்கலாம்.

தனிக்கருத்து என்ற நிலையில் சொன்ன பொழுது... முன்னரெல்லாம் அப்படியும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே....

இந்த முறை அப்படி நினைத்து சொல்லவில்லை.  அதை மறைத்து மாற்றிச் சொன்னேன் என்றால் அது பொய் 

 

இப்போது இதுவே என்கோணம் என்று சொல்லுவது பொருத்தமாஅக இல்லை எனொஅதே என் கருத்து.  மட்டுறுத்துனர் மடலாடல் குழுவின் கொள்கையை நிலை நிறுத்துபவர்.  அவருக்கு என்று தனிக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. 


பேராசிரியரே நான் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவள் என்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

நான் இடையிட்டதன் நோக்கமும் தெளிவாகக் குறிப்பிட்டு  விட்டேனே!!!

 

மட்டுறுத்துனர் என்ற உங்கள் செயல் இந்த மடலாடல் குழுவுக்கு மிகவும் தேவை. அதை இழக்க சுபா ஒருக்காலும் விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும்​. அந்தச் சூழ்நிலை ஏற்பட்டை அறிந்தால் அவர் ஏன் இப்படி எனக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் என்று என்னைத்தான் கேட்பார்
 
அதெல்லாம் சுபா யாரையும் பாப்பா போல நடத்த மாட்டார், எந்த சூழ்நிலை பற்றியும் அவர் கருத்தை... அவர் கோணத்தை அவர் சொல்வார் அவ்வளவுதான். சும்மா பேருக்குதான் ஹெச் எம் என்று .... அதெல்லாம்  சும்மா நாம் விளையாட்டுக்கு சொல்வது, 
நீங்கள் உண்மையாகவே நம்புவீர்கள் என நான் நினைக்கவே இல்லை. 
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. 
 

நான் வயது வந்தோர் கல்வித்துறையில் கால் நூற்றாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்தவன்.  தனி மனித வளர்ச்சியில் பிறப்பில் இருந்து இறப்புவரை அவன் கடக்கும் பாதையை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுப்பவன்.  எனவே குஞ்சி என்பதை நான் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவன் என்று கருதுகிறேன்

உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இப்போது மாட்டை வாலைப்பிடித்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது

மட்டுறுத்துனர் என்ற நிலையில் இல்லாமல் தனிப்பட்ட கருத்து என்று வந்தால் நான் வாதிடத் தயார்.  மட்டுறுத்துனர் என்றால் நீங்கள் அதிகாரி நான் வலுவில்லாதவன்

??? இது ஏதோ சர்வ அதிகாரமும் உள்ளவரிடம் பேசுவது போல இருக்கிறது பேராசிரியரே, 
நான் என்ன off with their heads என்று சொல்லும் சர்வாதிகாரியா?
rebuttal செய்வதற்கு நீதிமன்றங்களே அனுமதிக்கின்றன.   
நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நான் என் கோணத்தை பதிவு செய்கிறேன் 
நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நீங்களும் உங்கள் கோணத்தை சொல்லிவிட்டுப் போகலாமே... 
இது அவரரவர் எடுத்த நிலையை ஆவணப்படுத்துவதுதானே.  
அடுத்தவர் வாயையே திறக்கக் கூடாது என்றால் மடலாடல் குழுவின் கருத்துப் பரிமாற்ற நோக்கமே கேள்விக்குரியதாகிறது. 

..... தேமொழி


அ.த



Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 1:56:21 AM9/7/15
to மின்தமிழ்

2015-09-07 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. 
 

​இது இங்கே தேவைதானா? சுபா ஒன்றும் பாப்பா இல்லை.  மலேசியப் பெண்கள் பற்றிய குறிப்பை நான் சொன்னபோது என்னைக் கல்லால் அடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.  
உழக்குக்குள் கிழக்கும் மேற்கும் பார்க்காதீர்கள்.  

பெண்டிர் முற்போக்கு என்ற போர்வையில் இணையத்தில் கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்களை வாருவதில் எல்லாச் சக்திகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

பெண் என்றால் மரியாதை கொடு என்று கையை முறுக்கிப் பெறும் வாய்ப்பை வைத்துக்கொண்டு ஆண்களைச் சாடுவது மின்தமிழ் மரபு.  

அதிலும் நான் என்றால் அல்வாதான்

அ.த​

தேமொழி

unread,
Sep 7, 2015, 2:08:04 AM9/7/15
to மின்தமிழ்


On Sunday, September 6, 2015 at 10:56:21 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-09-07 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. 
 

​இது இங்கே தேவைதானா? சுபா ஒன்றும் பாப்பா இல்லை.  மலேசியப் பெண்கள் பற்றிய குறிப்பை நான் சொன்னபோது என்னைக் கல்லால் அடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.  

அட அப்படியா !!!  இது எனக்குத் தெரியாதே!!! சுபா சரியாகத்தான் முடிவெடுப்பார் என்பது என் நம்பிக்கை 

எதற்கும் நீங்கள் அப்படி என்னதான் சொன்னீர்கள் என்று கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன்.   
எதையாவது ஏடாகூடாமாக சொல்வதே  உங்கள் வழக்கம் போலிருக்கிறதே.!!!  (வாதத்தில் சேம் சைட் கோல் போடக்கூடாது பேராசிரியரே )

உழக்குக்குள் கிழக்கும் மேற்கும் பார்க்காதீர்கள்.  

பெண்டிர் முற்போக்கு என்ற போர்வையில் இணையத்தில் கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்களை வாருவதில் எல்லாச் சக்திகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

பெண் என்றால் மரியாதை கொடு என்று கையை முறுக்கிப் பெறும் வாய்ப்பை வைத்துக்கொண்டு ஆண்களைச் சாடுவது மின்தமிழ் மரபு.  

வாய்ப்பு கிடைக்கும்பொழுது நீங்கள்தான் வாதத்தை திசை திருப்பி இங்கு  பெண்களை சாடுகிறீர்கள், 
பெண்களை மட்டை என்றெல்லாம் அவதூறாக சொல்கிறீர்கள்  

அதிலும் நான் என்றால் அல்வாதான்

சரி, உங்களுக்கு அல்வா பிடிக்கவில்லை என்றால், இனிமேல் நீங்கள் என்றால் மைசூர் பாக்  என்று ஒரு புதுமை செய்துவிட்டால் போகிறது பேராசிரியரே. 

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 2:19:01 AM9/7/15
to மின்தமிழ்
சாத்தான் வேதம் ஓதுவதென்றால் இதுவா என்று அந்த எல்லாம் வல்ல செல்வனைத்தான் கேட்க வேண்டும்

பாண்டியர்கள் பெண்வழி மரபைச் சார்ந்தவர்கள் எனவே பாட்டி அம்மா எல்லாருமே ஆதிக்கச் சக்திகள்தான்.  மனைவியும் மகளும் அயன் கந்தவிலாஸ் பெண்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.  ஆணுக்குச் சொத்துரிமை கிடையாது ஆண் எண்றால் பெண்ணைச் சார்ந்திருக்கவேண்டும் என்ற சட்டப் பின்னணியில் வாழ்பவர்கள்
இங்கே பண்ணுக்கு உரிமையில்லை என்றெல்லாம் பேசி அதற்குக் காரணமானவர்களை அடித்துவிரட்டவேண்டும் என்று பேசுவதெல்லாம் எனக்குச் செமக் காமெடி

அனேகமாக உலத்கதிலேயே இளம் வயதில் 700 பெண்கள் வேலை செய்த ஆய்வுத்திட்டத்தில் பணிபுரிந்த ஆண்கள் மூவரில் நான் ஒருவன்.  அதனால் பெண்களின் பலமும் பலவீனமும் நன்குதெரியும்.  தமிழ்நாட்டில் பெண்கள் என்றால் வலுவில்லாதவள் என்று சொல்லிச் சொல்லியே ஆண்களை வலுவிழக்கச் செய்யும் ராஜதந்திரம் தெரிந்தவர்கள்

நீங்கள் பாவம் அமெரிக்காவில் இருந்துகொண்டு ஆவியை வீணாக்கிக்கொண்டுள்ளீர்கள்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Sep 7, 2015, 2:29:34 AM9/7/15
to மின்தமிழ்
On Sunday, September 6, 2015 at 11:19:01 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
சாத்தான் வேதம் ஓதுவதென்றால் இதுவா என்று அந்த எல்லாம் வல்ல செல்வனைத்தான் கேட்க வேண்டும்

பாண்டியர்கள் பெண்வழி மரபைச் சார்ந்தவர்கள் எனவே பாட்டி அம்மா எல்லாருமே ஆதிக்கச் சக்திகள்தான்.  மனைவியும் மகளும் அயன் கந்தவிலாஸ் பெண்வழிச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.  ஆணுக்குச் சொத்துரிமை கிடையாது ஆண் எண்றால் பெண்ணைச் சார்ந்திருக்கவேண்டும் என்ற சட்டப் பின்னணியில் வாழ்பவர்கள்
இங்கே பண்ணுக்கு உரிமையில்லை என்றெல்லாம் பேசி அதற்குக் காரணமானவர்களை அடித்துவிரட்டவேண்டும் என்று பேசுவதெல்லாம் எனக்குச் செமக் காமெடி

அனேகமாக உலத்கதிலேயே இளம் வயதில் 700 பெண்கள் வேலை செய்த ஆய்வுத்திட்டத்தில் பணிபுரிந்த ஆண்கள் மூவரில் நான் ஒருவன்.  அதனால் பெண்களின் பலமும் பலவீனமும் நன்குதெரியும்.  தமிழ்நாட்டில் பெண்கள் என்றால் வலுவில்லாதவள் என்று சொல்லிச் சொல்லியே ஆண்களை வலுவிழக்கச் செய்யும் ராஜதந்திரம் தெரிந்தவர்கள்

நீங்கள் பாவம் அமெரிக்காவில் இருந்துகொண்டு ஆவியை வீணாக்கிக்கொண்டுள்ளீர்கள்


பேராசிரியரே உங்கள் மடலுக்கு மரியாதை கருதி பதிலளிக்க முயல்கிறேன்.  

ஆனாலும் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே  

அ.த

2015-09-07 11:38 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, September 6, 2015 at 10:56:21 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-09-07 11:16 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. 
 

​இது இங்கே தேவைதானா? சுபா ஒன்றும் பாப்பா இல்லை.  மலேசியப் பெண்கள் பற்றிய குறிப்பை நான் சொன்னபோது என்னைக் கல்லால் அடிப்பேன் என்று சொல்லியிருக்கிறாரே.  

அட அப்படியா !!!  இது எனக்குத் தெரியாதே!!! சுபா சரியாகத்தான் முடிவெடுப்பார் என்பது என் நம்பிக்கை 

எதற்கும் நீங்கள் அப்படி என்னதான் சொன்னீர்கள் என்று கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன்.   
எதையாவது ஏடாகூடாமாக சொல்வதே  உங்கள் வழக்கம் போலிருக்கிறதே.!!!  (வாதத்தில் சேம் சைட் கோல் போடக்கூடாது பேராசிரியரே )

உழக்குக்குள் கிழக்கும் மேற்கும் பார்க்காதீர்கள்.  

பெண்டிர் முற்போக்கு என்ற போர்வையில் இணையத்தில் கிடைக்கும் மட்டற்ற சுதந்திரத்தைப் பயன்படுத்தி ஆண்களை வாருவதில் எல்லாச் சக்திகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்

பெண் என்றால் மரியாதை கொடு என்று கையை முறுக்கிப் பெறும் வாய்ப்பை வைத்துக்கொண்டு ஆண்களைச் சாடுவது மின்தமிழ் மரபு.  

வாய்ப்பு கிடைக்கும்பொழுது நீங்கள்தான் வாதத்தை திசை திருப்பி இங்கு  பெண்களை சாடுகிறீர்கள், 
பெண்களை மட்டை என்றெல்லாம் அவதூறாக சொல்கிறீர்கள்  

அதிலும் நான் என்றால் அல்வாதான்

சரி, உங்களுக்கு அல்வா பிடிக்கவில்லை என்றால், இனிமேல் நீங்கள் என்றால் மைசூர் பாக்  என்று ஒரு புதுமை செய்துவிட்டால் போகிறது பேராசிரியரே. 

..... தேமொழி


அ.த​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 7, 2015, 2:45:16 AM9/7/15
to மின்தமிழ்

2015-09-07 11:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
ஆனாலும் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே  

​புரியாததற்கு நீங்கள் ஏன் பதிலளிக்க முயலவேண்டும் புரியவில்லையே

அ.த​

தேமொழி

unread,
Sep 7, 2015, 2:51:35 AM9/7/15
to மின்தமிழ்
எல்லாம் ஒரு பணிவு ...ஒரு மரியாதை நோக்கத்தில்தான் பேராசிரியரே 

..... தேமொழி

செல்வன்

unread,
Sep 7, 2015, 3:45:20 AM9/7/15
to mintamil
சினிமா தான் தமிழ் சமூகத்தை கெடுக்கிறது என்றால் மிகையல்ல.

https://www.youtube.com/watch?v=jTLRw6NOwAE

shylaja

unread,
Sep 7, 2015, 4:52:54 AM9/7/15
to mintamil
2015-09-06 22:46 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

On Sunday, September 6, 2015 at 10:11:53 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-09-07 8:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் குறுக்கிட்டதைப் பற்றிய விவாதம் வந்தால் நான் ஏன் செய்தேன்என்று என் கோணத்தை சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது, மேலும் தன்மானம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதனால் சில இடங்களில் நானும் வெளிநடப்பு செய்துள்ளேன். 

​இங்கே குழப்பம் ஏற்பட்டதற்கு அடிப்படையே உங்கள் நிலைப்பாடுதான்.  இது உங்கள் தனிக் கருத்தா அல்லது மட்டுறுத்துனர் என்ற நிலையில் மேற்கொண்ட மட்டுறுத்தலா என்று கேட்டபோது என் தனிக் கருத்து என்று சொல்லியிருக்கலாம்.

தனிக்கருத்து என்ற நிலையில் சொன்ன பொழுது... முன்னரெல்லாம் அப்படியும் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே....

இந்த முறை அப்படி நினைத்து சொல்லவில்லை.  அதை மறைத்து மாற்றிச் சொன்னேன் என்றால் அது பொய் 

 

இப்போது இதுவே என்கோணம் என்று சொல்லுவது பொருத்தமாஅக இல்லை எனொஅதே என் கருத்து.  மட்டுறுத்துனர் மடலாடல் குழுவின் கொள்கையை நிலை நிறுத்துபவர்.  அவருக்கு என்று தனிக்கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. 


பேராசிரியரே நான் கருத்து சுதந்திரத்தை ஆதரிப்பவள் என்பது உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன்.

நான் இடையிட்டதன் நோக்கமும் தெளிவாகக் குறிப்பிட்டு  விட்டேனே!!!

 

மட்டுறுத்துனர் என்ற உங்கள் செயல் இந்த மடலாடல் குழுவுக்கு மிகவும் தேவை. அதை இழக்க சுபா ஒருக்காலும் விரும்பமாட்டார் என்பது எனக்குத் தெரியும்​. அந்தச் சூழ்நிலை ஏற்பட்டை அறிந்தால் அவர் ஏன் இப்படி எனக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள் என்று என்னைத்தான் கேட்பார்
 
அதெல்லாம் சுபா யாரையும் பாப்பா போல நடத்த மாட்டார், எந்த சூழ்நிலை பற்றியும் அவர் கருத்தை... அவர் கோணத்தை அவர் சொல்வார் அவ்வளவுதான். சும்மா பேருக்குதான் ஹெச் எம் என்று .... அதெல்லாம்  சும்மா நாம் விளையாட்டுக்கு சொல்வது, 
நீங்கள் உண்மையாகவே நம்புவீர்கள் என நான் நினைக்கவே இல்லை. 
 
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும்  வார்த்தையா என்ன? 
 
பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை  தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே. 
 
கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.

 பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே  கோபித்துக்கொண்டு என்னால்  இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக  என் பார்வையில்படாத  செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும்  பேராசிரியரும்  இதற்கு தக்க  பதில் உரைத்தால்  நன்றியுடையவளாக இருப்பேன். 

  

நான் வயது வந்தோர் கல்வித்துறையில் கால் நூற்றாண்டு பேராசிரியராகப் பணிபுரிந்தவன்.  தனி மனித வளர்ச்சியில் பிறப்பில் இருந்து இறப்புவரை அவன் கடக்கும் பாதையை வகுப்பெடுத்துச் சொல்லிக் கொடுப்பவன்.  எனவே குஞ்சி என்பதை நான் சரியாகப் பயன்படுத்தும் பக்குவம் உள்ளவன் என்று கருதுகிறேன்

உங்களுக்குக் கொடுத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இப்போது மாட்டை வாலைப்பிடித்து நிறுத்த முயற்சிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது

மட்டுறுத்துனர் என்ற நிலையில் இல்லாமல் தனிப்பட்ட கருத்து என்று வந்தால் நான் வாதிடத் தயார்.  மட்டுறுத்துனர் என்றால் நீங்கள் அதிகாரி நான் வலுவில்லாதவன்

??? இது ஏதோ சர்வ அதிகாரமும் உள்ளவரிடம் பேசுவது போல இருக்கிறது பேராசிரியரே, 
நான் என்ன off with their heads என்று சொல்லும் சர்வாதிகாரியா?
rebuttal செய்வதற்கு நீதிமன்றங்களே அனுமதிக்கின்றன.   
நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நான் என் கோணத்தை பதிவு செய்கிறேன் 
நான் இவ்வாறு நினைத்து சொன்னேன் என்று நீங்களும் உங்கள் கோணத்தை சொல்லிவிட்டுப் போகலாமே... 
இது அவரரவர் எடுத்த நிலையை ஆவணப்படுத்துவதுதானே.  
அடுத்தவர் வாயையே திறக்கக் கூடாது என்றால் மடலாடல் குழுவின் கருத்துப் பரிமாற்ற நோக்கமே கேள்விக்குரியதாகிறது. 

..... தேமொழி


அ.த



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
 



அன்புடன்
ஷைலஜா

குருர் ப்ரும்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வர;
குருர் சாட்சாத் பரப்ரும்ம தஸ்மை
ஸ்ரீ குருவே நம;



வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

வென்றிலன் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ, மற்று அவ் இராமன் பெயர் நிற்குமாயின்?
பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்தன்றோ?
இன்றுளார் நாளை மாள்வர்; புகழுக்கும் இறுதியுண்டோ?

Geetha Sambasivam

unread,
Sep 7, 2015, 5:04:47 AM9/7/15
to மின்தமிழ்
//சிவனின் இலிங்கத்துக்குக் கோயில்கட்டிக் கும்பிடும் சமூகத்தில்//

அம்மா, தங்கள் கருத்தை மறுப்பதற்கு மன்னிக்கவும். சிவலிங்கம் இந்தப் பொருளில் அமையவில்லை. :(   இது குறித்த சிறியதொரு விளக்கக் கட்டுரை இந்தச் சுட்டியில் காணலாம். எங்கள் மானசிக குருநாதர் வாய்மொழியாகச் சொன்னவற்றை சில விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளேன்.  பிறப்பால் அவர் ஒரு ஶ்ரீவைஷ்ணவர் என்றாலும் பேதங்கள் எதுவும் காட்டாததொரு உயர்ந்த சித்தர் பெருமான். வயதில் இளையவர் ஆனாலும் தக்ஷிணாமூர்த்தியைப்போன்றவர். 







2015-09-06 23:50 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
நீங்கள் சொல்வது புரிகிறது, சுபா.

மொழி கற்பிக்கும் ஆசிரியை என்ற நிலையில் என் கோணப்பார்வையையும் சொல்கிறேன்.

 

ஜீவ்ஸ்

unread,
Sep 7, 2015, 5:05:33 AM9/7/15
to மின்தமிழ்
அக்கோவ்,

எவ்ளோ நாள் தான் சாந்தசொரூபினி சக்குபாயாவே இருப்பீங்க. உங்க கம்பெடுத்த அவதாரத்தை எங்களுக்கெல்லாம் காமிக்கவே இல்லையேங்க்க்கா ? இது எப்ப நடந்தது ?  நான் பாக்கவே இல்லையே ?   திஸ் நேஷன் வாண்ட்ஸ் டு நோ தி ஆன்ஸர்... 


//பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்//

அவ்வ்.. அப்ப என்ன தம்பீ தம்பீன்னு பாசத்தோட அழைச்சதெல்லாம் பொய்யா? சொல்லுங்க கோப்பால் சொல்லுங்க  அதெல்லாம் பொய்யா.....


துரை ஜி இதற்கு உண்டான அசை படத்தை பகிர்வாராக 

அன்புடன்
ஐயப்பன் , 

shylaja

unread,
Sep 7, 2015, 5:09:27 AM9/7/15
to mintamil
2015-09-07 2:05 GMT-07:00 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
அக்கோவ்,

எவ்ளோ நாள் தான் சாந்தசொரூபினி சக்குபாயாவே இருப்பீங்க.>>>

சாந்த சக்குதான்பா   ஆனா  அப்படி இருக்க விடமாட்டாங்கபோல்ருக்கே:)
 
உங்க கம்பெடுத்த அவதாரத்தை எங்களுக்கெல்லாம் காமிக்கவே இல்லையேங்க்க்கா ? இது எப்ப நடந்தது ?  நான் பாக்கவே இல்லையே ?   திஸ் நேஷன் வாண்ட்ஸ் டு நோ தி ஆன்ஸர்... 


//பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்//

அவ்வ்.. அப்ப என்ன தம்பீ தம்பீன்னு பாசத்தோட அழைச்சதெல்லாம் பொய்யா? சொல்லுங்க கோப்பால் சொல்லுங்க  அதெல்லாம் பொய்யா...>>.
 
அட   உன்னை நான் விரட்டிட்டதா நினச்சேனே  இன்னும் இங்கதான் இருக்கியாகோபால்?:)..


துரை ஜி இதற்கு உண்டான அசை படத்தை பகிர்வாராக >>>
 
துரை  இருக்கீங்களா   இல்ல  விரட்டி அடிச்சிட்டேனா உங்களையும்? 

அன்புடன்
ஐயப்பன் , 
On Monday, September 7, 2015 at 2:22:54 PM UTC+5:30, shylaja wrote:
ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும்  வார்த்தையா என்ன? 
 
பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை  தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே. 
 
கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.

 பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே  கோபித்துக்கொண்டு என்னால்  இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக  என் பார்வையில்படாத  செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும்  பேராசிரியரும்  இதற்கு தக்க  பதில் உரைத்தால்  நன்றியுடையவளாக இருப்பேன். 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 7, 2015, 5:28:09 AM9/7/15
to மின்தமிழ்


On Monday, September 7, 2015 at 1:52:54 AM UTC-7, shylaja wrote:


2015-09-06 22:46 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

ஷைலஜா தவிர யாரும் கம்பை கையில் எடுத்துக் கொண்டு  அடுத்தவரை விரட்டியதாக நான் கேள்விப் பட்டதில்லை. >>>>>>>>> இதுவும் விளையாட்டுக்கு சொல்லும்  வார்த்தையா என்ன? 

நான் அப்படிதான் நினைத்து எழுதிவிட்டேன் ஷைலஜா   :((


 
 
பொது மன்றத்தில் இது என்ன வார்த்தை  தேமொழி? எனக்கு ஒன்றும் பெரிய இமேஜ் இல்லைதான் ஆனால் சராசரிப்பெண்ணாக இந்த வரிகள் என்னை பாதிக்கும் என்று படித்த பண்பு நிறைந்த நீங்கள் நினைத்திருக்கலாமே. 


உங்களை வருத்தும் எண்ணம் இல்லை, ஆனாலும் விளையாட்டு என நினைத்து செய்திருக்கிறேன் மன்னிகவும் 
 
கம்பைக்கையில் எடுத்துகொண்டுஅடுத்தவரை விரட்டினேனா? எங்க எப்ப?எத்தனைபேர் என்னால் குழுமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போயிருக்கிறார்கள்? எனக்கு அதட்டிப்பேசவே வராது.அது என்னை அறிந்தவர்களுக்குத்தெரியும். அன்பே தொழில் அன்பே ஆயுதம்!ஆனால் சொல்லவேண்டியதை சொல்லவேண்டிய நேரத்தில் மட்டும்அழுத்தமுடன்சொல்வது வழக்கம்.

 பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே  கோபித்துக்கொண்டு என்னால்  இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக  என் பார்வையில்படாத  செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும்  பேராசிரியரும்  இதற்கு தக்க  பதில் உரைத்தால்  நன்றியுடையவளாக இருப்பேன். 

அவர்கள் வந்து சொல்ல தேவையா?

இரு வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த உரையாடல் நினைவில் இருந்தது... அந்த பிளாஷ்பேக்கில் நான் செய்த  தவறுதான்...வேறென்ன?

________________________________


என்னது? அன்பும் அழகும் அறிவும் கொண்ட நீங்க மோசமா? ஈரோடு வந்து   குச்சில அடிப்பேன் ஆம்மா:) எல்லாருக்கும் என்னை கலாட்டா செய்றதுன்னா அல்வா  அதான்  வேற என்ன பவழா?

***


அடடா... இல்லை ஷைலு. உங்க கைல அடி வாங்கினாலும் சுகம்தான். அதுக்காகவாவது  வாங்க ஈரோடு..  நான் என்னை அறிமுகம் செய்து கொள்ளாதது என் தவறுதான் இல்லையா.. இந்த மின்வெட்டு செய்யிற வேலைதான்... போங்க... 

***


சேச்சே  உங்களப்போய் அடிப்பேனா அதுக்கு வேற சிலர் இருக்காங்க பவழா:)

***


இதென்ன அடிப்பேன் என்ற குட்டு மிரட்டல் மட்டும்தானே
என்னை அண்ணா கண்ணன் வரவேற்புநாளன்று செம்மல் ஐயா படம்பிடிக்கும்போது கையில் குச்சியுடன் பின்னால் நின்றூகொண்டு மிரட்டியதை நினைத்தால் இப்பவும் உடல் நடுங்குகிறது
எப்ப அடிப்பார்கள் என்று உறுதி செய்ய முடியாத நிலையில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகக் கைக்கெட்டாத தூரத்தில் இருப்பதைவிட்டு அவர்களை ஈரோட்டுக்கு வாங்க என்று அழைக்கிறீர்களே

***


சாமி அது குச்சி  இல்லீங்க..தம்மாத்தூண்டு  பூவின் தண்டு...:)  பெண் ஆதிக்கம் என்று  எப்போ  பேச ஆரம்பிச்சீங்களோ அப்போ குச்சியைத்தேடினேன்  கிடைக்கல பொழைச்சீங்க:)

***
__________________________________




 ..... தேமொழி 






Iyappan Krishnan

unread,
Sep 7, 2015, 5:40:52 AM9/7/15
to mintamil
ஆனாலும் உங்களுக்கு இவ்ளோ ஞாபகசக்தி தேமொழி ஜி :)))
**
​மாடு மேய்க்கும் கண்ணா பாட்டை மாத்தி " குச்சிக் கையில் கொண்ட அக்கா அக்கா"ன்னு ​ பாட்டை மாத்திப் பாடனும் போல இருக்கு.  :))))
***

ஒரு கூட்டுக் கிளியாக மெட்டில் பாடிப் பார்க்கலாம் :)))

ஒரு குச்சிக் கையோடு மறு கையில் புக்கோடு 
பாத்தேன் நானும் பாத்தேன்
மைபாவை செஞ்சாலும், மைசூர்பாகென்று தான்
சொல்லும் மொழி கேட்டேன்..
என்னென்ன தேவைகள்... அக்காவைக் கேளுங்கள்...

போகும் வழியெங்கெங்கும் பசியும் வரலாம்
கண்டதை சாப்பிட்டால் வயிறும் கெடலாம். ( போகும் )
இட்டிலிப் பொடியோடு எனக்குந்தான் இரயிலிலே 
நீ தந்த நாளும் மறக்குமா.... 

( மைபாக்கா -- ராஜா கல்யாணத்துக்கு இட்லி  காரப்பொடி, தோசைன்னு கொண்டாந்தீங்களே ஞாவகம் இருக்கா ::)) )


2015-09-07 14:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
சாமி அது குச்சி  இல்லீங்க..தம்மாத்தூண்டு  பூவின் தண்டு...:)  பெண் ஆதிக்கம் என்று  எப்போ  பேச ஆரம்பிச்சீங்களோ அப்போ குச்சியைத்தேடினேன்  கிடைக்கல பொழைச்சீங்க:)




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

shylaja

unread,
Sep 7, 2015, 5:45:32 AM9/7/15
to mintamil
பெரும்பாலும் வல்லமை  குழுமத்து   உரையாடல்கள்  அல்லவா அவைகள்?  அன்று  சொல்லப்பட்ட விதம்  அதை அவர்கள் நகைச்சுவையுடன் ஏற்றுக்கொண்ட  விதத்தையும் போட்டுவிட்டு அந்த கம்பைக்கயில் எடுத்த வரிகளை  இணைத்திருக்கலாம்.பரவாயில்லை விளையாட்டுக்கு என்று சொல்லி மன்னிப்பும் கேட்டுவிட்டபிறகு நான் இதைத்தொடரவில்லை.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 



அன்புடன்
ஷைலஜா
தும் வேதம் உள்ளளவும் யானும்

தேமொழி

unread,
Sep 7, 2015, 5:59:01 AM9/7/15
to மின்தமிழ்
புரிதலுக்கு நன்றி.

..... தேமொழி

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Sep 7, 2015, 6:57:29 AM9/7/15
to Groups


rajam

unread,
Sep 7, 2015, 4:20:30 PM9/7/15
to mint...@googlegroups.com, ra...@earthlink.net
அன்புள்ள கீதா,

நலமே நாடுகிறேன். மன்னிப்பெக்கெல்லாம் தேவையே இல்லை, கீதா! நீங்கள் எந்தத்தவறும் செய்யவில்லை. கருத்து வேறுபாடுகள் வாழ்க்கையில் நடைமுறை, இல்லையா.

உங்கள் சுட்டியில் சென்று கருத்துகளை அறிந்துகொள்வதில் எனக்குத் தடையேதும் இல்லை. இயன்றவுடன் செய்வேன். நன்றி.

அன்புடன்,
ராஜம்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gv-JFQ41d1A/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

rajam

unread,
Sep 7, 2015, 4:24:07 PM9/7/15
to mintamil, vce.pr...@gmail.com
படம் புரியலை, விளக்கவும். நன்றி!

அன்புடன்,
ராஜம்


Begin forwarded message:

From: துரை.ந.உ <vce.pr...@gmail.com>
Date: September 7, 2015 at 3:57:06 AM PDT
Subject: Re: [MinTamil] தமிழைச் சிதைக்கும் கயவர்கள் ...



Oru Arizonan

unread,
Sep 7, 2015, 4:59:08 PM9/7/15
to mintamil
2015-09-07 2:04 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
//சிவலிங்கம் இந்தப் பொருளில் அமையவில்லை. :(   இது குறித்த சிறியதொரு விளக்கக் கட்டுரை இந்தச் சுட்டியில் காணலாம். எங்கள் மானசிக குருநாதர் வாய்மொழியாகச் சொன்னவற்றை சில விஷயங்களை இதில் பகிர்ந்துள்ளேன்.  பிறப்பால் அவர் ஒரு ஶ்ரீவைஷ்ணவர் என்றாலும் பேதங்கள் எதுவும் காட்டாததொரு உயர்ந்த சித்தர் பெருமான். வயதில் இளையவர் ஆனாலும் தக்ஷிணாமூர்த்தியைப்போன்றவர். //

கீதா அம்மா,

சிவலிங்கம்பற்றிய விளக்கத்திற்கு நன்றி.  நானும் இம்மாதிரி பலவிளக்கங்களைப் படித்திருக்கிறேன்.  ஐரோப்பியர்கள் 'phallic symbol" என்று ஏற்படுத்திய பெருங்குழப்பமே இது.  

நான் விளக்கம் எழுதலாமா என்று நினைத்தேன்.  தாங்கள் கொடுத்திருக்கும் சுட்டியைவிடத் தெளிவாக, எளிமையாக, புரியும்படி என்னால் எழுதியிருக்க இயலாது.  எனவே, தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.

ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Sep 7, 2015, 5:04:17 PM9/7/15
to mintamil
2015-09-07 2:05 GMT-07:00 ஜீவ்ஸ் <jee...@gmail.com>:
//அக்கோவ்,
எவ்ளோ நாள் தான் சாந்தசொரூபினி சக்குபாயாவே இருப்பீங்க. உங்க கம்பெடுத்த அவதாரத்தை எங்களுக்கெல்லாம் காமிக்கவே இல்லையேங்க்க்கா ? இது எப்ப நடந்தது ?  நான் பாக்கவே இல்லையே ?   திஸ் நேஷன் வாண்ட்ஸ் டு நோ தி ஆன்ஸர்... //

பார்த்துக்கொள்ளுங்கள், ஜீவரே!
ஒரு அரிசோனன்

 
Disclaimer:  This picture is given only in pure humor.  No malicious intentions, however subtle, is intended.

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 8, 2015, 1:04:21 AM9/8/15
to mintamil
"மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர் செண்டாலே"

என்பது போல திருமிகு ஷைலஜா மிரட்டல் செல்ல அன்பு மிரட்டல்!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Nagarajan Vadivel

unread,
Sep 8, 2015, 1:10:07 AM9/8/15
to மின்தமிழ்
அடி விழுமோ என்று பயந்து போனவர்களுக்குப் பாட்டெதுவும் கிடையாதோ
மாமனோ அத்தையோ செண்டால் அடித்தாலே அழுகை வருது 
குச்சியைப் பார்த்தால் பயம் வராதா
அ.த

தேமொழி

unread,
Sep 8, 2015, 1:13:05 AM9/8/15
to மின்தமிழ்
எனகென்னவோ நடப்பைப் பார்த்தால் மண்சட்டி பொன்சட்டி பழமொழிதான் சரியாக இருக்கும் போலிருக்கிறது.

..... தேமொழி 

துரை.ந.உ

unread,
Sep 8, 2015, 1:21:30 AM9/8/15
to rajam, mintamil
On Tue, Sep 8, 2015 at 1:53 AM, rajam <ra...@earthlink.net> wrote:
படம் புரியலை, விளக்கவும். நன்றி!

அன்புடன்,
ராஜம்
 

​போதும்ன்னு சொன்னேம்மா :)))
( இழை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தெரிந்தது ..... அதனால்தான் ஒரு ’ஸ்டாப் சின்னல்’ போட்டு வைத்தேன் :))
 




Satish Kumar Dogra

unread,
Sep 8, 2015, 2:32:29 AM9/8/15
to mint...@googlegroups.com
கம்பராமாயணத்தில் "குஞ்சி" என்ற வார்த்தை பல இடங்களில் "தலை மயிர்" என்ற அர்த்தத்தில் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு உதாரணம் -

கூய்,கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார்.      
(சுந்தர காண்டம் - 5947) 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Innamburan S.Soundararajan

unread,
Sep 8, 2015, 4:18:21 AM9/8/15
to mintamil, Shylaja Narayan, Innamburan S.Soundararajan
 பேராசிரியர் மற்றும் இ சார்  இருவரைமட்டுமே  அவர்களை நேரில்பார்த்து எங்கள் குடும்ப உறவினர் போலப்பழகிய உரிமையில் அவ்வப்பொழுது  ஏதும் உரிமையாக சொல்வது வழக்கம்,அதற்கு அவர்களே  கோபித்துக்கொண்டு என்னால்  இங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு போனதாக  என் பார்வையில்படாத  செய்தி இருக்கிறதா என்ன? இ சாரும்  பேராசிரியரும்  இதற்கு தக்க  பதில் உரைத்தால்  நன்றியுடையவளாக இருப்பேன். - ஷைலஜா

~ தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒரு வகையிலும் ஒவ்வாத இந்த தொடரின் [குஞ்சி = சிறுமையானது/குஞ்சிப்பெட்டி/பறவைக்குஞ்சு/தாயின் தங்கை/ சிற்றப்பன்/ ஆண்குறி -பக்கம்  959: Tamil Lexicon 1982] பல வாசகங்கள் எனக்கு வருத்தம் அளித்தன. எப்படியாவது அண்டார்டிக்கா தமிழனை விரட்டி அடிக்க முயன்றும், அது நடக்க வில்லை.நான் ஆண்மகன். அதனால் பயந்த ஸ்வபாவம். அதான், சூடான அடுப்பின் அருகில் வரவில்லை. ஷைலஜா மேற்கண்ட படி எழுதிய பிறகு, அதை என் கவனத்துக்கு கொண்டு வந்த பிறகு, நான் பதில் உரைக்க கடமை பட்டுள்ளேன். அது என் மீது ஆங்காரத்தையும், நிந்தனையையும் தூண்டி விடும். எனினும், நான் பதில் உரைக்காவிடின், அது ஷைலஜாவின் மாசற்ற மனதை புண்படுத்தும்.  இதோ பதில்:

1. வக்ரம் இருபாலாருக்கும் உண்டு. ஒழுக்கமும் தான். எது ஒழுக்கம்? எது வக்ரம்? என்ற கலக்கமும் தான். அவரவர் அனுபவம் கட்டியம் கூறும்.

2. சில நல்ல உள்ளங்கள் என்ன தான் கேலி செய்தாலும், நாமும் சேர்ந்து சிரிப்போம். ஷைலஜா அந்த ரகம். மற்றவர்கள் என்னை விரட்டி அடிக்க படாத பாடு பட்ட காலகட்டங்களில், எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஷைலஜாவும், சுபாஷிணியும், பேராசிரியர் மட்டுமே. எனக்கு பல அபிமான புத்திரிகளுண்டு. அவர்களில் ஒருவரான ஷைலஜாவுக்கு என் மகள் என்னை விரட்டுவது போல இயங்க முழு உரிமையும் உண்டு.

3. பவளசங்கரியும் அவளது குடும்பமும் என்னுடன் வைத்துக்கொண்டிருக்கும் உறவு அலாதி. அன்பும், கனிவும் அடிப்படை. தேமொழி தான் என் நூல் ஒன்றை வடிவு அமைத்தார். என் வலைப்பூவில் சேர்ந்து இயக்கினார், சிலகாலம். இத்தனை நல்லுறவு பல்லாண்டுகளாக இருந்தாலும் (லும்!)...

4.'படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்' என்ற படி ஓதுவார்கள் என்னை தாக்கி வந்த காலகட்டத்தில், என் படைப்பு ஓரிடத்தில் 'அற்புதமாக' வரவேற்கப்பட்டு, அங்கேயே 'கண்றாவி'என சமாதி கட்டப்பட்ட கதையையும், ஓரிடத்தில் பிறந்த கிருஷ்ணன் வேறிடத்தில் புகலிடம் புகுந்த மாதிரி, என் படைப்பு வேறிடம் அனுப்பப்ட்டு [என்னால் அல்ல.] அங்கே எனக்கு கிடைத்த தர்ம அடிகளை எண்ண இயலாது. இத்தனைக்கும் நான் எழுதிய 'சலபஞ்சிகா' என்ற இடுகை தொல்காப்பியத்தில் மெய்ப்பாட்டியலுக்கு எல்லா வகையிலும் உகந்ததே. இளங்கோ அடிகளையும், திருவள்ளுவரையும், கம்பரையும் போற்றுவதே. அபத்தமான பொருளை தப்பான அகராதியில் தேடி, தனக்கு வரக்கூடிய அபவாதத்தை என் தலையில் 'டின்' கட்டினார்கள். விலக நினைத்தேன்.ஷைலஜா, சுபாஷிணி, அ.த. ஆகியோர் கை கொடுத்து ஆதரித்தார். இது நிற்க.

4. அண்மையில் 'சலபஞ்சிகா' வின் அபூர்வமான சிற்பத்தை வைத்திருக்கும் அமெரிக்காவின் மெட்ரோபோலிட்டன் ம்யூசியத்தில் இத்துறைத்தலவர் வந்திருந்தார். 'சலபஞ்சிகா' வை பற்றி அவர் பேச்சு எடுக்க, நம் குழுக்களில் அவள் அடித்த ஆர்பாட்டம் பற்றி பேசிக்கொண்டோம். சிரிச்சு மாளலே. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டார், " How far you people will carry on with your political correctness, and that too, of the dubious genre, at the cost of aesthetics? 

5. என்னத்தைச்சொல்ல?!

அன்புடன்,
இன்னம்பூரான்
8 9 15
2015-09-08 10:51 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
Sep 8, 2015, 4:48:34 AM9/8/15
to mintamil, பண்புடன்
​நிறைய இடங்களில் உள்ளனவே

பாண்டியராஜா ஐயா, கம்பராமாயண தொடரடைவு முழுமை செய்துவிட்டாரா தெரியவில்லை. அப்படிச் செய்திருந்தால் அதில் என்னென்ன பாடல்கள் இந்த வார்த்தையுடன் வருகின்றன என்று  எளிதாக கண்டெடுக்க இயலும். 

2015-09-08 12:02 GMT+05:30 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:
கம்பராமாயணத்தில் "
​​
குஞ்சி" என்ற வார்த்தை பல இடங்களில் "தலை மயிர்" என்ற அர்த்தத்தில் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு உதாரணம் -

கூய்,கொழும் புனல்,
​​
குஞ்சியில்,
​​
கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார்.      
(சுந்தர காண்டம் - 5947) 



Geetha Sambasivam

unread,
Sep 8, 2015, 4:51:25 AM9/8/15
to மின்தமிழ்
நல்ல விளக்கம். 

shylaja

unread,
Sep 8, 2015, 5:45:15 AM9/8/15
to Innamburan S.Soundararajan, mintamil
நன்றி இசார்..  எல்லோரும் நல்லவரே  ஏனோ சந்தர்ப்பங்கள்  சில நேரம் நமக்கு  எதிராகி அன்பானவர்களையும் நமக்கு எதிரியாக சிலக்கணம் பார்க்கவைக்கிறது. மேகங்கள் கலைந்தால் ஒளி தெரியவருகிறது.  மேகங்கள்  போல  எதுவும் கடந்துபோகும்! அதுசரி அதென்ன நான் ஆண்மகன் அதனால் பயந்த சுபாவம் என்று ஒரு வரி?:) பேராசிரியரின் ஆத்ம நண்பர் என்பதை இப்படியா காட்டிக்கொள்வது?:)
--
 



அன்புடன்
ஷைலஜா




N. Ganesan

unread,
Sep 8, 2015, 8:50:17 AM9/8/15
to மின்தமிழ், vallamai


On Monday, September 7, 2015 at 11:32:29 PM UTC-7, dogratamil wrote:
கம்பராமாயணத்தில் "குஞ்சி" என்ற வார்த்தை பல இடங்களில் "தலை மயிர்" என்ற அர்த்தத்தில் பார்த்திருக்கிறேன். இதோ ஒரு உதாரணம் -

கூய்,கொழும் புனல், குஞ்சியில், கூந்தலில்,
மீச்சொரிந்தனர், வீரரும், மாதரும்;
ஏய்த்ததன்மையினால், எரி இன்மையும்,
தீக்கொளுந்தினவும், தெரிகின்றிலார்.      
(சுந்தர காண்டம் - 5947) 


 ‘குஞ்சி ஆண்மயிர் புட்பார்ப்புக்
 குன்றியின் கொடிமுப் பேரே’

              - சூடாமணி நிகண்டு

குஞ்சி என்பது சிறிய அளவில் உள்ள முடி.
ஆண் தலைமயிர், பெண் தலைமயிரை
விடச் சிறிதாய் இருக்கும். எனவே,
சூடாமணி நிகண்டில் சூத்திரம் இது.
சிறிய தலைமுடி ஆண் எனினும், பெண் எனினும்
குஞ்சி வருகிறது. “குஞ்சி அழகும், கொடுந்தானைக்
கோட்டழகும்”. பள்ளி செல்லும் சிறுமியின் 
தலைமுடி - குஞ்சி. 

”உச்சி முச்சிக் குஞ்சி” - மீனாட்சி பிள்ளைத்தமிழ்
குஞ்சி = tassels (e.g., in a University
graduation ceremony cap). Refer Ciivaka CintaamaNi

சம்பந்தர் என்னும் குழந்தையின் சிறுமயிரைக்
கூட்டி முடிக்க இயலாத குழந்தைப் பருவம்
= குஞ்சி கூடாப் பருவம் 
கொங்குதங் குங்குஞ்சி கூடாப் பருவத்துக் குன்றவில்லி
பங்குதங் கும்மங்கை தன்னருள் பெற்றவன், பைம்புணரிப்
பொங்குவங் கப்புனல் சேர் த புதுமணப் புன்னையின்கீழ்ச்
சங்குதங் கும்வயற் சண்பையர் காவலன் சம்பந்தனே
                            - நம்பியாண்டார்நம்பி

மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் 
வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா 
இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா 
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய்
                            - உண்ணிக்கிருஷ்ணனின் குஞ்சி
                       (ஆழ்வார் பாசுரம்)

வேடர்கள் வரவின் சிறப்பு (அரிச்சந்திரபுராணம்)

பீலிகட்டி யதன் மீதுமொய்த் தொளி 
   பிறங்கு செட்டைகள் அணைத்துநீள் 
மாலை யிட்டுவளர் குஞ்சி துஞ்சநெல் 
   வரிந் திறுக்கிமலர் சூடியே 
காலி னிற்றொடு செருப் பணிந்துகழல் 
   கட்டி நீடுடி கறங்கவை 
வேல்பிடித் துடலம் வேர்வ ரும்பிட 
   விரைந்து வந்தன ரனந்தரே.
     (இ - ள்.) பீலி கட்டி - மயில் தோகையைக் கட்டிக்கொண்டு, 
அதன்மீது - அதன்மேல், மொய்த்து ஒளி பிறங்கு செட்டைகள் அணைத்து
- நெருக்கமாக ஒளிவிளங்குகின்ற இறகுகளைச் சேர்த்து, நீள் மாலையிட்டு
- நீண்ட மாலையணிந்து, வளர் குஞ்சி துஞ்ச - வளர்ந்த குடுமிகளில் 
தொங்கும்படி, நெல் வரிந்து இறுக்கி - குளநெற்கதிரை வரிந்து இறுகக் 
கட்டிக்கொண்டு, மலர் சூடி - அதற்குமேல் பூ முடித்து, காலினில்.

சமணர்கள் வளர, வளர தலைமயிரை இணுங்குவதை மேருமந்தரபுராணம்
குஞ்சி வாங்கல் என்கிறது.

மாதவ னருளிச் சித்தி வருகமற் றிவர்கட் கென்னாப்
    போதணி குஞ்சி வாங்கப் புணர்ந்துமா தவத்திற் சென்றா
    ராதாம் பண்ணு நாமத் தரசிளங் குமரன் பாலின்
    மாதிரம் பில்கு நல்ல வார்த்தைமா முனிவ னானான்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொன்னபோது),    மாதவன்  - தர்மருசி
முனிவரனானவன், இவர்கட்கு   -     இவ்விருவர்கட்கும்,    சித்தி -
ஸ்வாத்மோ பலப்தியாகிய ஸித்தியானது,வருக - வரக்கடவது,என்னா -
என்று,   அருளி  - ஆசீர்வதித்து, போதணி - புஷ்பமாலைகளணிந்த,
குஞ்சி    - தலைமயிர்    முதலானவைகளை, வாங்க    -    தபோ
*தீக்ஷாவிதியின்   கிரமத்தால்    பரிஹரித்து ஜினதீக்ஷையினை யருள,
மாதவத்தில்  - பெரிதாகிய தபத்தில், புணர்ந்து - சேர்ந்து, சென்றார் -
இவ்விருவரும்  சென்றார்கள், (அவர்களுள்), ஆதரம் பண்ணு நாமத்து
- ப்ரீதிங்கரனென்னும்         பெயருடைய,     அரசிளங்குமரன் -
இராஜபுத்திரனாகியவன், பாலின்     -   பால்போல்,    மாதிரம்   -
மாதுரியத்தை,பில்கும் - கொடுக்கும், நல்ல - நன்மையாகிய, வார்த்தை.

----------------------

குஞ்சி - அளவிற் சிறிய தலைமயிர். முக்கியமாக, ஆண்களின்
குடுமி. பெண்களின் சிறிய முடிக்கும் வரும். குஞ்சி என்பது 
நீண்ட குழல், சடை அல்ல.  அதனால் தான், குஞ்சரம்
என்னும் வலிய, திண்ணிய குன்று போன்ற ஆண்யானைக்கு
குஞ்சரம் என்னும் பெயர் குஞ்சி/குஞ்சு என்பனவற்றில் இருந்து
வேறாகக் காணவேண்டும்.

நா. கணேசன்

Innamburan S.Soundararajan

unread,
Sep 8, 2015, 12:10:39 PM9/8/15
to vall...@googlegroups.com, மின்தமிழ்
குஞ்சிபாதமே!
ஓடோடி வந்து எம்மை உய்விப்பாயாக.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages