தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா? அது எப்போது தோன்றியது? டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு. உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி மூன்று புள்ளி எழுத்து உண்டா? ஏனென்னில் வடமொழி விசர்கத்தை தனி எழுத்தாக கருதுவதில்லை
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??
வகொவி
வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து
எனக்கூறுவது தவறு.
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது.
ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
உதாரணமாக "அது = athu; அஃது= a(h)dhu"இது எந்த அளவு சரி? இட்ஹற்குத் தனி ஒலி உண்டா?
ஹரிகியிடம் இருப்பது நம்மைப் போன்றோர் சாதாரண மூளையா? இல்லை ஏதும் சூப்பர் சூப்பர் கம்ப்யூட்டரா?
ஹரிகியிடம் இருப்பது சூப்பர் கம்ப்யூட்டர்தான். என்ன, நாமதான் சரியாக பயன்படுத்துவதில்லை.!! தென்றல் இதழில் இசைக்கவி ரமணன் தன் பேட்டியில் ஹரிகியைப் பற்றித் தெரிவிக்கையில், தன் பத்தாவது வயதிலேயே ‘திருப்புகழ்’ முழுதும் மனனம் செய்து பாடுபவர்’ என வியந்து கூறியிருந்தார். விசாகப்பட்டினம் வந்த போது நான் அவரை மிஸ் பண்ணிவிட்டேன் (சென்னையில் என் தந்தை மறைந்த வேளை அது).திருப்புகழ் பற்றி ஹரிகி கட்டுரைகள் எழுதியிருந்தால் எனக்குத் தேவை.
ஆயிரத்தையும் மனனம் செய்யவேண்டும்
யாரும் கூறக்கேட்டிராத மிக அரிய தகவல்;
நன்றி
தேவ்
On Mar 22, 5:22 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/22 Dhivakar <venkdhiva...@gmail.com>
On Mar 21, 11:12 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா?
ஆம். திருவெஃகா கல்வெட்டில் உள்ள ஆய்த எழுத்து வடிவம் விசர்க்கம்.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ங ,ஞ ஔ வர்கங்களில் பெரும்பாலான எழுத்துகள் எப்போதுமே இன்ஃப்ரீக்வண்ட்
தான். ஆனால் சாதாரண பல்லாயிரம் தமிழ் வார்த்தைகளில் ங ,ஞ ஔ வருகின்ரன.
> இவைகளை அரிச்சுவடியிலிருந்து நீக்கவும் ஒரு ஈ .வெ. ரா.பெரியார் வர வேண்டுமோ?
ஈவேரா செய்த மிஸ்சிஃப் தமிழ்லிருந்து ஔ , ஐ வை நீக்குவது. அதற்கு பதிலாக
போடப்படும் அவ் , அய் வேறு த்வனி, உதடு அசைவுகள் வேறு.
வகொவி
ஐயா
இதும் பேர்தான் Folk Etymology.
3 புள்ளி வைத்து கேடயம் போல் இருப்பதால் அதை ஆயுத எழுத்து என்பது, அதன்
மூல பேரான ஆய்த எழுத்து பிடிபடாமல் போனது
Folk Etymology பத்தி சில மாதங்கள் முன் விவாதித்தோம் (சிறகு கட்டுரை
சம்பந்தமாக)
வகொவி
http://www.tamileluthu.org/serthiruthangal/aaithaeluthu/
ஆயுத எழுத்து நீக்கம்
“ஃ” அக் என்ற வரிவடிவத்தை ஆயுத எழுத்தாக நாம் நடைமுறையில்
பயன்படுத்துகிறோம். இது தமிழ் எழுத்தின் வரிவடிவம் அல்ல, இச்சொல் வட
மொழிச் சொல். சமஸ்கிருதம் என்ற வடமொழயில் “ஆச்ரிதம்” என்ற சொல்லின்
திரிபு என ஜி.யு.போப் அவர்கள் கூறுகிறார். வடமொழியாகிய சமஸ்கிருதத்தில்
மூன்று புள்ளிகளை, நச்சினார்க்கினியர் சமஸ்கிருதத்தில் மூன்று புள்ளிகளை,
நச்சினியார்க்கினியர் காலத்தில் பயன்படுத்தினார்கள் என்று வித்வான் மு.
இராகவையங்கார் தம் நூலில் எழுதியுள்ளார்.
அசோகர் காலத்தில் பாலி எழுத்துக்களில் மூன்று புள்ளிகளையுள்ள “ஃ”
வடிவடிவம் “இ” இகரமாகப் படிக்கப்பட்டது என்று திரு.டி.ஏ. கோவிந்தராவ்
கூறுகிறார்.
தொல்காப்பியன் ஆயுத எழுத்தைச் சார்பெழுத்தாகச் சுட்டிக் காட்டுகிறார்.
அவை:
“குற்றிய லிகரம், குற்றியலுகர மாய்தமென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன”
(தொலகாப்பியம் எழுத்து அதிகாரம் – 1)
1. பாண்டிய நாட்டு தமிழ் வட்டெழுத்துகளில் 12- ஆம் நூற்றாண்டு வரை “ஃ”
மற்றும் “ஔ” என்ற இரண்டு வரிவடிவங்கள் இல்லை.
2. சேர நாட்டிலுள்ள தமிழ் வட்டெழுத்துக்களில் 17 – ஆம் நூற்றாண்டு வரை
“ஃ,ஔ” என்ற இரண்டு வரி வடிவங்களும் இல்லை.
3. சோழ நாட்டுத் தமிழ் வட்டெழுத்துக்களில் 8 -ஆம் நூற்றாண்டு வரை “ஃ -ஔ”
என்ற இரண்டு வரிவடிவங்களும் இல்லை.
4. இது போன்ற வரிவடிவம், சதவாகனர் காலத்திலும், பல்லவர்கள் ஆட்சியின்
ஆரம்பகால சாஸனங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றுரைக்கிறார். திரு.
சிவராம்மூர்த்தியவர்கள்.
5. Travancore Archelogical Series Vol. XIV, Page 213, Mr. T.A.
Govintha Rao
6. Indian Epigrahy and South Indian Scripts by C. Sivaramamurthy,
M.A.,
ஆனால் க், ங், ச், ஞ் என்ற மெய்யெழுத்து 18 பதினெட்டும் இடம் பெற்றுள்ளன.
ஆனால் ஃ, ஔ, கௌ, சௌ, ஞௌ, போன்ற உயிர் மெய்களும் இடம் பெறும் போது ஃ அக்
மட்டும் ஏன் இடம் பெறவில்லை? என்பதே கேள்வி?
ஃ – அக் என்னும் ஆய்தம் வரிவடிவம்
இன்னும் கூறினால் அக்கின் – ஃ வரிவடிவை மூன்று நிறுத்தல் குறிகள் என்றே
கூற வேண்டும். இந்த மூன்று நிறுத்தல் குறிகளினால் அக் என்ற ஒலியை எப்படி
எழுப்ப முடியும்? அகரத்தில் மலர்ந்து மெய்யில் முடியும் ஒலியல்லவா? இந்த
அகரவொலியை மூன்று புள்ளிகளால் எழுப்பச் சாத்தியமில்லை.
ஃ – அக் என்ற ஒலியை, மூன்று நிறுத்தல் குறி அல்லது மூன்று முற்றுப்
புள்ளிகள் எழுப்புகின்றன, என்று ஒரு சொல்லுக்கும் ஏற்றுக்கொள்ளவும்
முடியாது. அகர வரிவடிவமாவது பெற்றிருக்க வேண்டும்! அதுவுமில்லை.
விட்டுவிடுவோம். சரி “க்” என்ற மெய்யின் வரிவடிவச் சாயலையாவது
பெற்றிருக்கிறதா? அதுவுமில்லை. பிறகு எவ்வாறு இது தமிழ் எழுத்து என்று
நம்புவது? பின் எவ்வாறு “அக்” என்ற ஒலியை எழுப்புகின்றது? மூன்று
நிறுத்தல் குறிகள்தான். அக் என்ற ஒலியை எழுப்பும் வரிவடிமல்ல. 11ஆம்
நூற்றாண்டிற்குப் பிறகு “ஐ” என்னும் ஐகாரம் “ஔ” என்னும் ஔகாரம். “ஃ” அக்
என்னு ஆயுதம் ஆகியவைகள் ராஜராஜசோழன் காலத்தில் தமிழகத்தில்
புகுத்தப்பட்டு பரவலாக்கப் பட்டவைகள் எனலாம். இவைகள் தமிழ் மொழிக்
கலவைகள். ஃ சமஸ்கிருதம் வழி வந்தது. “ஐ”, “ஔ” இரண்டும் பல்லவர்களின்
“பிராமிலிபி” என்ற மொழியின் வழி வந்தவைகள். இவற்றின் ஒலிகளை மட்டும்
எடுதுக்கொண்டு, எழுத்தின் வரிவடிவத்தினை நீக்குகிறேன். வரிவடிவமே
இல்லாத்துமான மும்முறுப்புள்ளியை எழுத்து என எப்படி ஏற்பது?
ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒலித்திருடன்
தனக்கென்று ஒரு வரிவடிவமுமின்றி, ஒலிவடிவமுமின்றி, ஆயுத எழுத்தென்று
பெயர் எப்படி வந்தது? இது எழுத்தே அல்ல! மும் முற்றுப் புள்ளிகளே! அன்று
எவரோ சொன்ன பொய்யை, செய்த தவறை, இன்று வாழையடி வாழையாய், நாமும் செய்து
வருகிறோம் என்றால் நம் அறியாமையா? இல்லை மடமையா? தனக்கென ஒரு ஒலியே
இல்லாது, “அ” என்னும் அகரத்தின் ஒலியையும் “க்” என்னும் மெய்யின்
ஒலியையும் திருடுகிறது. இது ஒரு பக்கா திருடன். இதை நீக்கியே தீர
வேண்டும். வரிவடிவோ, ஒலிவடிவோ இல்லாத “ஃ” அக் என்னும் ஆயுத்த்தை
நீக்குகிறேன். பயன்படாமல் ஒதுக்கி வைத்துள குப்பையாகக் கருதுங்கள்.
“ஃ” அக் என்னும் ஆயுதம் நீக்கம்
(ஃ) அ+க் = அக்
இழப்பை ஈடு செய்யும் முறை
1. அஃது = அக்து
2. இஃது =`இக்து
3. எஃகு = எக்கு
என எளிமையில் எழுதப் படிக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளவும்
நீங்கள் ஆச்சர்யப்பட்டு விடுவீர்கள். தமிழ் கூகிளில் ”ஆயுத எழுத்து” என
போட்டால் 347000 பக்கங்கள், ஆய்த எழுத்து என தேடினால் 15200 பக்கங்கள்.
ஆயுதம் ஆய்தத்தை விட ரொம்ப பாபுலர்
வகொவி
கூகிள் முடிவு ‘ஆய்த எழுத்து’
திரைப்படத்தையும் சேர்த்துக்
காட்டுகிறது. நம்மவர்கள் அத்தனை
சீரியசா தமிழை ஆராய்கின்றனரா,
என்ன ?
தேவ்
நமக்கு தெரிந்த கல்வி ஆய்வு முறையிலோ,
நமக்கு தெரிந்த வரலாற்று ஆய்வு முறையிலோ
நமக்கு தெரிந்த அறிவின் துணைக் கொண்டோ
அவர் சொன்னார். இவர் சொன்னார்,
கூகுள் சொன்னது, யாகூ சொன்னது
விக்கி பிடியா சொன்னது என
தமிழ் மொழியின் எழுத்துக்களை ஆய்வு செய்வது
குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே முடியும்.
எழுத்து வடிவங்கள் அனைத்தும் சித்தர்களால் வடிவமைக்கப்பட்டவை.
இவை அனைத்தும் தத்துவ விளக்கங்களாக அமைக்கப்பட்டவை.
தத்துவம் விளக்கம் புரிந்தவர்கள் இதற்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
நமது உலகியல் அறிவை பயன்படுத்தி இது இப்படி இருக்கலாம்
அது அப்படி இருக்கலாம் என்பது நமது கற்பனை திறனையே காட்டும்.
தமிழ் எழுத்துக்கள் ஞானத்தோடு தொடர்புடையவை என்பதை
முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புள்ளி எதற்காக வைக்கப்படுகிறது,
புள்ளியில் தொடங்கி சுழிப்பது, நீட்டுவது, வளைப்பது, கீழிழுப்பது
முடிப்பது என ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கின்றது.
அதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் நாம் செய்கின்ற ஆய்வு
நமக்கு வேண்டுமானால் சரியாக படலாம்
ஆனால் உண்மை உணர்ந்த்வர்களால்
நமது செயல்கள் பரிகசிக்கப்படலாம்.
அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்
அப்ப ஒண்டி அந்த சித்தர் சொன்னார், இந்த சித்தர் சொன்னார் என சொல்ல
மாட்டீர்களா ? அது மட்டும் குருடன் யானையை பற்றி சொன்னதை போன்றதாகவே
இருக்காதா?
வகொவி
On Mar 21, 11:12 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன? வட மொழி விசர்கம் போல பயன் படுத்த உண்டாக்கிய எழுத்தா? அது எப்போது தோன்றியது? டாக்டர் நாகசாமி போன்றோர் கல்வெட்டுகளில் இது எங்கும் காணப்படவில்லை என்று சொன்னதாக நினைவு. உலகில் வேறு எந்த மொழியிலும் இப்படி மூன்று புள்ளி எழுத்து உண்டா? ஏனென்னில் வடமொழி விசர்கத்தை தனி எழுத்தாக கருதுவதில்லை
>
தமிழ் கணினிகளில் இன்று உலகெங்கும் பயன்படுத்துகிறபோது, ஆய்த எழுத்துக்கு
என்ன பெயர் தெரியுமா? அதிகாரபூர்வமாய், ஐஎஸ்ஓ ஸ்டாண்டர்ட் 10646-ல்
விசர்க்கம் என்பதே.
மேய்தல்/மேய்வது என்ற வினைச்சொல் ”மேய்தம்” என்று தமிழில் பெயர்ச்சொல்
படைப்பதில்லை.
ஆய்தம் என்பது சமணர்கள் தமிழுக்கு இலக்கணம் படைத்தபோது வடசொல்
ஒன்றிலிருந்து
படைத்துக்கொண்டதாய் தெரிகிறது.
ஆய்தம், அரிச்சுவடி பெயர்க்காரணம் - ஓர் ஆராய்ச்சி:
http://groups.google.com/group/mintamil/msg/01547d47d60335da
நா. கணேசன்
'அ' அகரம் எனப்பட்டது போல் 'ஃ' அஃதம் எனப்பட்டது. ஃ க்கு யகர மெய்யொலி உண்டு.
'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'
என்ற
குறளில் எஃகதனில் என்பது,
செய்க என்ற சொல்லின் எதுகையாக
வந்திருப்பது காண்க.' ஃ' க்கு யகர மெய்யொலி இயல்பானதே. அந்த வழியில் அஃதம் அய்தம் ஆகிப், பின் நீண்ட கால வழக்கில் ஒடுஉருபு,
ஓடுருபாகவும், அதுவுருபு, ஆதுருபாகவும்
நீண்டிருப்பது போல, முதநிலை நீண்டு,
ஆய்தம்
என்றாகியிருக்க வேண்டும். இந்த
மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும்
என்று 'ஆய்த எழுத்தின்
வரலாறு'
என்ற கட்டுரையில் செந்தமிழ் ஆசிரியர்
திருநாராயணையங்கார் குறிப்பிடுகிறார்.
மு.ராகவையங்கார் எழுதிய 'ஆய்தவோசை' என்கிற கட்டுரையில், ஆய்த எழுத்துப்
பற்றிய பல செய்திகளோடு
'அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி' என்ற குறளில், ஆய்தம் குகர
ஒலியேற்று, மாமுன் நிரையாகி வெண்டளை அமைவது எடுத்துகாட்டப்பட்டிருந்ததைப்
படித்தது நினைவுக்கு வருகிறது.
அ.ரா.
On Mar 22, 7:12 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> தமிழில் ஆயுத எழுத்தின் பயன் என்ன?
இது ஆய்த எழுத்தா , ஆயுத எழுத்தா??
வகொவி
தேவ்
மிக அரிய கருத்துக்கள்,
ஆய்தம் குகர ஒலி ஏற்பது உள்பட
நன்றி
தேவ்
2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>இன்று காலை புலவர் வெற்றியழகனோடு தொலைபேசியில் பேசினேன்.
அவர் கோவை தமிழ்நாட்டு மலர்ப்பணியில் ஈடுபட்டதால் கோவையில் இருக்கிறார்.
அவருடன் திருக்குறளில் தளை தட்டுதல் பற்ரிப் பேசினேன், ஒன்பது திருக்குறள்களில் தளை தட்டுதல் இருக்கிறதென்றும் அவ்வொன்பதற்கும் சமாதானம் சொல்ல இயலும் என்றும் சொன்னார். அதைத் தமிழ் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரையாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறேன்.
அதில்
ஒரு குறள்
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
திருக்குறளில் தளைதட்டுகிறது என்றொருவர் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வது எனக்கு வியப்பாக மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருக்கிறது. தமிழிலக்கியத்தைதப் பொருத்தவரை, குறள்வெண்பா என்பதன் இலக்கணமே திருக்குறளில்தான் தொடங்குகிறது.என்பது
தீர்த்தல் மாச்சீர்
அஃதொருவன் கூவிளங்காய்
தளை தட்டுகிறது. இதற்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் இருக்கிறது என்றார்.
இலந்தை
ஆய்த எழுத்தை நேரசையாகவும் கணக்கிடலாம்; நிரையசையாகவும் கணக்கிடலாம் என்பது எப்போதோ தெளிவாக்கப்பட்ட ஒன்றன்றோ? அஃதொருவன் என்ற இந்த இடத்தில் அகுதொருவன் என்று வாசிக்கவும்;கற்றில னாயினுமம் கேட்க; அஃதொருவற்கொற்கத்தின் ஊற்றாம் துணைஎன்னும்போதும் அகுதொருவன் என்று வாசிக்கவும்வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்என்னும்போது அஹ்தொருவன் என்று வாசிக்கவும் வேண்டுமென பேராசிரியர் எந்தக் காலத்திலேயோ சொன்னாரே! (திருவள்ளுவர் இலக்கிய மன்றம் க குணசேகரன்கூட இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார்; தசவதானி ராமையா விளக்கியிருக்கிறார்.)ஃ இல்லாமலேயே கூட ஒரு குறள் உண்டு.உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றின்புண்அ துணர்வார்ப் பெறின்.இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில் ‘அஃது’ என்னல் வேண்டும். ஆய்தம் விகாரத்தால் தொக்கது என்று பரிமேலழகர் குறிப்பெழுதுகிறாரே!திருக்குறளில் தளை தட்டுகிறது என்று சொன்னால், ஏதோ சொல்லத் தகாத வார்த்தையைச் சொன்னது போலக் கூசுகிறது ஐயா. எப்படிப் பொறுத்துக்கொள்கிறீர்கள் இதையெல்லாம்?
தமிழிலக்கியத்தைதப் பொருத்தவரை, குறள்வெண்பா என்பதன் இலக்கணமே
திருக்குறளில்தான் தொடங்குகிறது.
ஆய்த எழுத்தை நேரசையாகவும் கணக்கிடலாம்; நிரையசையாகவும் கணக்கிடலாம்
என்பது எப்போதோ தெளிவாக்கப்பட்ட ஒன்றன்றோ? அஃதொருவன் என்ற இந்த இடத்தில்
அகுதொருவன் என்று வாசிக்கவும்;
கற்றில னாயினுமம் கேட்க; அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாம் துணை
என்னும்போதும் அகுதொருவன் என்று வாசிக்கவும்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
என்னும்போது அஹ்தொருவன் என்று வாசிக்கவும் வேண்டுமென பேராசிரியர் எந்தக்
காலத்திலேயோ சொன்னாரே! (திருவள்ளுவர் இலக்கிய மன்றம் க குணசேகரன்கூட
இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார்; தசவதானி ராமையா
விளக்கியிருக்கிறார்.)
ஃ இல்லாமலேயே கூட ஒரு குறள் உண்டு.
உண்ணாமை வேண்டும் பலாஅல் பிறிதொன்றின்
புண்அ துணர்வார்ப் பெறின்.
இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில் ‘அஃது’ என்னல் வேண்டும். ஆய்தம்
விகாரத்தால் தொக்கது என்று பரிமேலழகர் குறிப்பெழுதுகிறாரே!
அன்புடன்,
ஹரிகி.
https://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/dc3f359b69ad82fe?hl=nl
On Mar 29, 12:39 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2012/3/29 DEV RAJ <rde...@gmail.com>
>
> > மிக அரிய கருத்துக்கள்,
> > ஆய்தம் குகர ஒலி ஏற்பது உள்பட
> > நன்றி
>
> > தேவ்
>
> கடந்த காலங்களில் ஐந்தாறு முறை எழுதிவிட்டேன் தேவ். உதாரணமாக சந்த
> வசந்தத்தில்:
>
> 2010/6/23 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2010/6/23 SUBBAIER RAMASAMI <eland...@gmail.com>
மேற்காணும் மூன்று கேள்விகளுக்கும் ஒரே விடை வாரா, வராது.
ஃ என்பது ஆய்தம், அஃகேனம், முப்பாற்புள்ளி அல்லது முப்புள்ளி,
(முற்புள்ளி அல்ல) தனிநிலை எனப்படும்.
ஆய்தவெழுத்து மொழிமுதலும் மொழியிறுதியும் ஆகாது. அது ஃஃ இப்படி
இரட்டித்து வரலாமெனச் சிங்கை ஐயா மா.கோ. சொல்வது எனக்குப் புதிய செய்தி.
அதற்கு அவர் விளக்கம் தந்தால் நல்லது.
அஃகேனம் என்பது கொச்சை வழக்கில் அஃகேனா என்றும் அஃகன்னா என்றும் சிதைந்து
வழங்கும். அஃகேனம் ககர மெய்யின் நுணுக்கமாதலின் ஆய்தம் என்றும்,
பின்வரும் வல்லின மெய்யை மெலித்தலின் நலிபு என்றும், மூன்று புள்ளிகளாற்
குறிக்கப்படுதலின் முப்புள்ளி என்றும், உயிரும் மெய்யுமல்லாது தனித்து
நிற்றலின் தனிநிலை என்றும் பெயர்பெறும்.
புலவர் சிலர், தமிழ் எழுத்துகளால் எல்லா மொழியொலிகளையுங் குறிக்க
வியலுமென்றும், ஏனைய மொழிகளின்
சிறப்பெழுத்துகளையெல்லாம் குறித்தற்கே அஃகேனம் தோன்றிற்றென்றும் கூறி. ஃப
- F என்றும் ஃச - Z என்றும் எழுதிக்காட்டுவர்.
எழுத்தென்பது உண்மையில் எழுத்தொலியே யென்றும், எழுதப்படுதலால் அஃது
எழுத்தெனப்பட்டதென்றும், ஆய்தத்தொடு பகரஞ் சேரின் ஆய்தமும் பகரமுமேயன்றி
வேற்றொலியொன்றும் தோன்றாதென்றும், வேண்டியவாறெல்லாம் ஒலிகளை மாற்றும்
மந்திரவாற்றல் ஆய்தத்திற்கில்லை என்கிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.
கரு.திருவரசு,
"வெல்லத் தமிழினி வெல்லும்"
ஆய்தவெழுத்து மொழிமுதலும் மொழியிறுதியும் ஆகாது. அது ஃஃ இப்படி
இரட்டித்து வரலாமெனச் சிங்கை ஐயா மா.கோ. சொல்வது எனக்குப் புதிய செய்தி.
அதற்கு அவர் விளக்கம் தந்தால் நல்லது.
உதாரணமாக "அது = athu; அஃது= a(h)dhu"இது எந்த அளவு சரி? இட்ஹற்குத் தனி ஒலி உண்டா?
சார்பெழுத்தில் ஒன்றாக ஆய்தம் தொல்காப்பியர் காலத்திலேயே கருதப்பட்டது.
சார்பெழுத்தென்றால் என்ன?
‘சார்ந்து வரின்அல்லது தமக்கு இயல்பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்’
என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களைச் சார்ந்து பிறப்பது
சார்பெழுத்து.
தொல்காப்பியர் சார்பெழுத்துக்கள் மூன்று என்னும் கருத்துடையவர்.
சார்ப்பெழுத்துக்களின் எண்ணிக்கை காலம் தோறும் இலக்கண ஆசிரியர்களின்
கொள்கைக்கு
ஏற்ப மாறி வந்துள்ளன. பவணந்தியார் கொள்கை சார்பெழுத்துக்கள் பத்து
என்பது. இது
அனைவருக்கும் உடன்பாடன்று. இவரது சார்பெழுத்துக் கருத்தில் ஒரு சிக்கல்
உள்ளது.
ஆய்தமே சார்பெழுத்தாக இருக்கும் போது சார்பெழுத்திற்கு ஒரு சார்பெழுத்தாக
ஆய்தக் குறுக்கம் இருக்கமுடியுமா? எழுத்துக்கள் மாத்திரை அளவில் மாற்றம்
பெறுமானால் அவற்றைப் பவணந்தியார் சார்பெழுத்துக்கள் என்றார். இது இவர்
கொள்கை.
உயிர்மெய்யைச் சார்பெழுத்தாகக் கொண்டதற்கும் அதுதான் காரணம்.
ஆய்தம், ஆயுதம் என்பன வெவ்வேறு சொற்கள். ஆயுதம் என்னும் வழக்காறு
மிகப்பிற்காலத்தைச் சேர்ந்தது. ஆய்தம் என்பது குறுகிய ஓசையைக் குறிக்கும்
என்பதற்கு முன்னரே தொல்காப்பிய சான்றுகளைக் காட்டினேன்.
‘ஆய்தல் ஓய்தல் உள்ளதன் நுணுக்கம்’என்பது தொல்காப்பிய உரியியல்
சூத்திரம்.
[திரு. ஆராதி (புதுவை) அவர்களின் கருத்து; முன்பு இங்கு வெளியானது ]
தேவ்
ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர்
"தமிழை
எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே
பாடிவிட்டார்.
தொல்காப்பியர் "ஆய்தம்" என்றே கூறுகிறார். தொல்காப்பியமும், நன்னூலும்
ஆய்தத்தைச் சார்பெழுத்து என்று கூற, நேமிநாதமும், வீரசோழியமும் முதல்
எழுத்து
என்றே கூறும்.
திருக்குறளில் 49 இடங்களில் ஆய்தம் வருகிறது. 43 இடங்களில் மெய்போல அலகு
பெறாமலும், 6 இடங்களில் அலகு பெற்றும் வருகிறது. "ஒள" என்ற எழுத்தின்பின்
ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய மெய்போல ஆய்தம் உயிர் ஏற
இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும் வராது. எனவே ஆய்தத்தைத்
"தனிநிலை"
என்பர்.
ஆய்தம் பல திரிபுகளைப் பெற்றது. தொல்காப்பியம் பஃது, அஃது, இஃது என்று
கூறுவது
(முப்)பது, அது இது என மாறிவிட்டது. இஃதை என்பது இத்தை என்றும்,
"இஃதெழுதிய"
என்பது "இய்தெழுதிய" என்றும் மாறியது. சங்ககால மன்னர், மன்னர் மகள்
இருவரும்
அஃதை என்று புலவர் ஒருவர் கூற மற்றொரு புலவர் "அகுதை" எனக்குறிப்பார்.
குறிலுக்குப் பின்னர் உகரம் ஏறிய வல்லினத்துக்கு முன்பு ஆய்தம் வரும்
என்று
கூறப்பட்டாலும் புணர்ச்சியில் கல்+தீது = கஃறீது எனக் கூறப்பட்டாலும்
"கற்றீது"
என மாறியது.
"ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும்,
பழந்தமிழில்
(தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. இலக்கண
ஆசிரியர்கள் ஆய்தத்தை ஒரு புள்ளி . இருபுள்ளி : மூன்று புள்ளி ஃ என்று
பலவாறு
கூறுவர். நச்சினார்க்கினியர் ஆய்தத்தை "நடுவுவாங்கியிட்டு எழுதுப"
என்கிறார்.
அவர் கூறும் வடிவம் தான் இரண்டாம் நந்திவர்மன் காசாக்குடிச் செப்பேட்டில்
வெஃகா
என்பது வெ கா என எழுதப்பட்டுள்ளது. வரகுணபாண்டியனின் திருச்செந்தூர்
கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம் முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
புலவர் செ.இராசு
[ திரு. கண்ணன் நடராஜன் அவர்கள் கொடுத்த தினமணி பதிவிலிருந்து]
தேடலுக்கு விடை கிடைத்து விட்டது !
’வரகுணபாண்டியனின் திருச்செந்தூர் கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம்
முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது’ என்று புலவர் செ.இராசு அவர்கள்
சொல்கிறார்
தேவ்
விஷுக் கைநீட்டம் -
கையெத்தும் தூ³ரத்தாயிருன்னெங்கில்
கைகும்பிள்நிறயெ கணி கொன்னப்பூக்களும்
நாணய கூம்பா³ரவும் நல்குமாயிருன்னு.
கண்ணெத்தா தூ³ரத்தாயதினால் ரூப ஓர் அயுதம்
ஒப்பம் விஷுவின்டெ நைர்மல்யத்தோடெ
ஸ்நேஹத்தில் சாலிச்ச நூறு ஆஶம்ஸகள்.
விஷுபுலரிகள் இனியும் வரும் நினக்காய்
அதிலொக்கெ நின் ப்ரதீக்ஷகள்ʼ ஸப²லமாயிடும்
ஜீவிதயாத்ரயில் கணிக்கொன்ன விரியிய்க்கும்.
நின்டெ நன்மய்க்காய் ப்ரார்த்தி²ச்சு ஸமர்ப்பிக்கும்
ஸ்நேஹ புஷ்பாஞ்ஜலியல்லாதெ
மற்றெந்து நல்கும் விஷு கைநீட்டமாய் !
தேவ்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பவளா அவர்களுக்கு,
இது குழுமத்திலிருந்து காணாமல் போயிருக்கும்
கமலம் சேச்சிக்கான ஓர் அழைப்பும் கூட.
கமலாதேவி அரவிந்தாக்ஷன் அவர்கள்
இதையே ஒரு தமிழ்க் கவிதையாக்க
வல்லவர். இல்லையெனில் அடியேன் புன்மொழி
கொண்டு சற்று விளக்க முயல்வேன்.
அப்பாடலில் பணப் பரிசைக் காட்டிலும் அன்பும், இணக்கமும்
உயர்ந்தவை எனும் கருத்து மிக எளிமையாகச்
சொல்லப்பட்டுள்ள விதம் மனம் கவர்வதாக உள்ளது.
கொன்றைப்பூ, நல்குதல், ஒப்பம், புலரி, நினக்கு,
நன்மை, மற்று போன்ற தமிழ்ச் சொற்களை நோக்குக
தேவ்
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil