Fw: ஆயுத எழுத்து

165 views
Skip to first unread message

sharadha subramanian

unread,
Mar 23, 2012, 6:29:58 AM3/23/12
to mint...@googlegroups.com


--- On Fri, 23/3/12, sharadha subramanian <shara...@yahoo.co.in> wrote:

From: sharadha subramanian <shara...@yahoo.co.in>
Subject: ஆயுத எழுத்து
To: mmin...@googlegroups.com
Date: Friday, 23 March, 2012, 3:58 PM

வல்லின எழுதுக்களை ஆண் எ.ழுதுக்கள் என்றும் மெல்லின எழுதுக்களை பெண் எழுத்துக்கள் எனவும், அ..க் என்ற எழுத்து அலி எழுத்து என அமரர் தமிழ்புலவர் திரு,கி.வா.ஜா. த்ம் கேள்வி பதில் என்ற நூலில் குரிப்பிட்டுக்கிறார்

விஜயராகவன்

unread,
Mar 23, 2012, 6:41:57 AM3/23/12
to மின்தமிழ்
இது கிவாஜாவின் சொந்தக் கருத்து.

தமிழில் எழுத்துகளோ, பெயர்சொற்க்களோ பால் என்ற குணம் இல்லை.


வகொவி

On Mar 23, 11:29 am, sharadha subramanian <sharadh...@yahoo.co.in>
wrote:
> --- On Fri, 23/3/12, sharadha subramanian <sharadh...@yahoo.co.in> wrote:

Santhanam Swaminathan

unread,
Mar 23, 2012, 12:31:29 PM3/23/12
to mint...@googlegroups.com
எழுத்துக்களில் ஆண் பெண் எழுத்துக்கள் வடமொழியில் கூட இல்லை. ஆனால் பெயர்சொற்கள் வினைச் சொற்களுக்கு உண்டு. கி.வா.ஜ .போன்ற ஒரு அறிஞர் சொன்னால் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டாரே. வேறு ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று பார்ப்ப்போம்.

 காஞ்சி மகாசுவாமிகள் எழுத்துக்களைப் பற்றி பேசுகையில் தெலுங்கு எழுத்துக்கள் மட்டும் வாமார்த்தமாக (இடது சுழியாக) எழுதப்படுவதால் சக்தியின் அம்சம் என்றும் தமிழ் வலது சுழியாக (கடிகாரம் போல CLOCKWISE) எழுதப்படுவதால் சிவனின் வடிவம் என்றும் கூறியுள்ளார். 

இன்னொரு வியப்பான விஷயம் மொழி என்று வரும்போது சிவனையும் சக்தியையும்தான் வடமொழி தென்மொழி இலக்கியங்கள் பேசுகின்றன. விஷ்ணுவை விட்டது ஏனோ?
 
Swami
020 8904 2879
07951 370 697



From: sharadha subramanian <shara...@yahoo.co.in>
To: mint...@googlegroups.com
Sent: Friday, March 23, 2012 10:29 AM
Subject: [MinTamil] Fw: ஆயுத எழுத்து

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


N. Kannan

unread,
Mar 23, 2012, 9:33:33 PM3/23/12
to mint...@googlegroups.com
2012/3/24 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

> இன்னொரு வியப்பான விஷயம் மொழி என்று வரும்போது சிவனையும் சக்தியையும்தான்
> வடமொழி தென்மொழி இலக்கியங்கள் பேசுகின்றன. விஷ்ணுவை விட்டது ஏனோ?
>

ஹி..ஹி..

அரிச்சுவடி என்று கல்வியின் தொடக்கம் அமைவது ஏன்? :-)

‘அ’ எனும் எழுத்தின் பொருள் என்ன என்று அகரமுதலி சொல்கிறது? :-)

க.>

Innamburan Innamburan

unread,
Mar 24, 2012, 1:45:10 AM3/24/12
to mint...@googlegroups.com
அப்டிப்போடுன்னானாம்


2012/3/24 N. Kannan <navan...@gmail.com>
B68.gif

Banukumar Rajendran

unread,
Mar 24, 2012, 1:54:55 AM3/24/12
to mint...@googlegroups.com
எனக்கும் மருத்துவர் ஜெயபாரதிக்கு அகத்தியக் குழுமத்தில் நடந்த கருத்தாடல்! (2004ல்)

http://www.treasurehouseofagathiyar.net/32200/32217.htm

<<<<<அரை நூற்றாண்டுக்கு முன்னர், படிப்பு ஆரம்பமாகும்போது,
'அரி, சித்தரி, நானா, மோனா, இத்தன்னா, தூனா, சீனா, இந்நன்னா, தானா,
இம்மன்னா' என்று எழுத்துக் கூட்டிச் சொல்லச் சொல்லி சொல்லிக்
கொடுப்பார்கள்.
அந்த 'அரி நமோத்துசிந்தம்' என்பது ஏதோ சமண மந்திரம்
இல்லையா? 'சித்தர் வணக்கம்' என்றோ என்னவோ சொல்வார்களில்லையா?>>>>>>


ஓம் நமஸித்தேப்யா:

இது இன்றளவும் எங்களிடம் நடைமுறையில்உள்ளது. சுருக்கமாக சித்தம் நம என்று சிறுப்பிள்ளைகள் புரியும் வண்ணம் உச்சரிக்கப்படுகிறது. (சித்தம் அர்ஹம் நமோஸ்து என்று ஜினாலயம் நுழையும் முன் சொல்லும் மந்திரம். வழிப்பாட்டின் நோக்கத்தை உணர்த்தும் மந்திரம்). பிள்ளைகள் பாடம் தொடங்கும் முன் இம்மந்திரத்தை சொல்லியே பாடம் தொடங்குவார்கள். அந்தக் காலத்தில் தமிழகம், கருநாடகம், ஆந்திரா, மராட்டா ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் இருந்தது என்று அறிஞர்கள் கூறுவார்கள்.சிரிபுராணம் முன்னிரையில் அறிஞர்.ஸ்ரீ சீதாராமய்யா அரி.டாக்டர்.வே.வெங்கடராஜலு ரெட்டியார் தெலுங்கு மொழியின் முக்கிய ஆக்கத்திற்கு ஜைனர்களின் பங்கை குறிப்பிட்டிருக்கிறார்.

ஜைனவியலை சித்தாந்தம் என்று அழைப்பர். சித்தம்+அந்தம். அதாவது, "A philosophy by which the end-goal(antam) is siddha or siddhatva or siddhawood". "என்னவோ ஒன்னு சொல்லப் போறான் என்று நினைப்பவர்க்கு சித்தாந்தம் என்ற சொல் வழக்கை *தமிழில்* முதன்முதல் *ஆண்டவர்கள்* சமணர்கள்". ;-)

பானுகுமார்.
=============================


Santhanam Swaminathan

unread,
Mar 24, 2012, 2:40:09 AM3/24/12
to mint...@googlegroups.com
Dear Kannan
You have scored a point.Ten Marks!!

ஆனால் வீர சைவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? 
விதண்டா வாதம் இல்லை. உண்மையில் முதலில் நெல்லில் அல்லது மணலில்
 குழந்தைகள் எழுதும் போது அவர்கள் ஓம் நமசிவாய எழுதுவார்களா? 
ஓம் நமோ நாராயணா எழுதுவார்களா? அரிச்சுவடி என்ற சொல்லின் 
Etymology எடிமாலஜியை ஆராய்வதும் பல புதிய விஷயங்களைக் 
கொண்டுவரலாம். பரஞ்ஜோதி முனிவர், பாரதி எல்லோரும் 
மொழி முதல்வன் சிவன் என்றே சொல்கிறார்கள்.
ஆதி சிவன் பெற்றுவிட்டான் (பாரதி) 
கண் நுதல் கடவுள் தந்த மொழி தமிழும் வட மொழியும் (பரஞ்சோதி முனிவர்)
Swami
020 8904 2879
07951 370 697



From: Innamburan Innamburan <innam...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, March 24, 2012 5:45 AM
Subject: Re: [MinTamil] Fw: ஆயுத எழுத்து

DEV RAJ

unread,
Mar 24, 2012, 2:51:54 AM3/24/12
to மின்தமிழ்
அக்ஷராணாம் அகாரோSஸ்மி (கீதை)

நிகண்டு ‘அ’ விஷ்ணுவைச் சொல்வதாகவும்,
‘க’ நான்முகனைச் சொல்வதாகவும் உள்ளது.
சில தந்திர நூல்கள் வேறுவகையாகவும்
விளக்குகின்றன.

ஆந்திரர் ‘ஓம் நம: சிவாய’ என்றும், தமிழர்
‘ஓம் நமோ நாராயணாய’ என்றும் பயிற்சியைத்
தொடங்குவர்.

‘ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்’ என்றும் எடுத்துக்கொள்ளலாம்;
‘ஈசாந: ஸர்வ வித்யாநாம்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்


தேவ்


On Mar 23, 11:40 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> Dear Kannan
> You have scored a point.Ten Marks!!
>
> ஆனால் வீர சைவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா?
> விதண்டா வாதம் இல்லை. உண்மையில் முதலில் நெல்லில் அல்லது மணலில்
>  குழந்தைகள் எழுதும் போது அவர்கள் ஓம் நமசிவாய எழுதுவார்களா?
> ஓம் நமோ நாராயணா எழுதுவார்களா? அரிச்சுவடி என்ற சொல்லின்
> Etymology எடிமாலஜியை ஆராய்வதும் பல புதிய விஷயங்களைக்
> கொண்டுவரலாம். பரஞ்ஜோதி முனிவர், பாரதி எல்லோரும்
> மொழி முதல்வன் சிவன் என்றே சொல்கிறார்கள்.
> ஆதி சிவன் பெற்றுவிட்டான் (பாரதி)
> கண் நுதல் கடவுள் தந்த மொழி தமிழும் வட மொழியும் (பரஞ்சோதி முனிவர்)
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
>
> ________________________________

>  From: Innamburan Innamburan <innambu...@gmail.com>


> To: mint...@googlegroups.com
> Sent: Saturday, March 24, 2012 5:45 AM
> Subject: Re: [MinTamil] Fw: ஆயுத எழுத்து
>
> அப்டிப்போடுன்னானாம்

> இ
>
> 2012/3/24 N. Kannan <navannak...@gmail.com>
>
> 2012/3/24 Santhanam Swaminathan <swami...@yahoo.com>


>
>
>
>
>
>
>
>
>
>
>
> >> இன்னொரு வியப்பான விஷயம் மொழி என்று வரும்போது சிவனையும் சக்தியையும்தான்
> >> வடமொழி தென்மொழி இலக்கியங்கள் பேசுகின்றன. விஷ்ணுவை விட்டது ஏனோ?
>
> >ஹி..ஹி..
>
> >அரிச்சுவடி என்று கல்வியின் தொடக்கம் அமைவது ஏன்? :-)
>
> >‘அ’ எனும் எழுத்தின் பொருள் என்ன என்று அகரமுதலி சொல்கிறது? :-)
>
> >க.>
>
> >--

> >"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com


> >To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

> >For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Mar 24, 2012, 3:24:48 AM3/24/12
to mint...@googlegroups.com
2012/3/24 DEV RAJ <rde...@gmail.com>:

> ‘ஏதத் ஸர்வம் ஜநார்தநாத்’ என்றும் எடுத்துக்கொள்ளலாம்;
> ‘ஈசாந: ஸர்வ வித்யாநாம்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
> அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம்
>

ஏற்றுக்கொள்கிறேன்.

நம் ஸ்வாமி கேட்டதற்காக ஒரு பதில். அவ்வளவுதான். ‘அறிவின் பயன் ஹரியை
அறிந்து கொள்ளுதலே!’ என்பதில் நம் சாஸ்திரங்கள் மாற்றுச் சொன்னதில்லை.
எனவே ஹரியை அறியும் படிப்பு ஹரிச்சுவடி. ‘அ’ எனில் விஷ்ணு என்றே சைவர்கள்
பதிப்பித்த நூட்களும் சொல்லும் (நம் கிட்டங்கியில் ஒரு புத்தகம் உள்ளது.
பெயர் சட்டென நினைவிற்கு வரவில்லை).

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Mar 24, 2012, 3:51:36 AM3/24/12
to மின்தமிழ்
On Mar 24, 12:24 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> ஏற்றுக்கொள்கிறேன்.

நீர் ஏற்றுக்கொள்கிறீர், ஸ்வாமி.

நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: |
நாராயண பரோ த்யாதா த்யாநம் நாராயண: பர:||
என அருமறை ஒளிவு மறைவின்றி
ஓயாமல் நாம கீர்த்தநம் செய்கிறது.

யார் ஏற்கிறார் ?


தேவ்

N. Kannan

unread,
Mar 24, 2012, 4:22:15 AM3/24/12
to mint...@googlegroups.com
2012/3/24 DEV RAJ <rde...@gmail.com>:

> On Mar 24, 12:24 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>> ஏற்றுக்கொள்கிறேன்.
>
> நீர் ஏற்றுக்கொள்கிறீர்,  ஸ்வாமி.
>
> நாராயண பரம் ப்ரஹ்ம தத்வம் நாராயண: பர: |
> நாராயண பரோ த்யாதா த்யாநம் நாராயண: பர:||
> என அருமறை ஒளிவு மறைவின்றி
> ஓயாமல் நாம கீர்த்தநம் செய்கிறது.
>
> யார் ஏற்கிறார் ?

ஹரி போல் !! :-)

என்ன செய்ய? வேத வியாசர் அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து,
அலசி ஆராய்ந்துவிட்டு இந்த முடிவிற்கு வருகிறார். வைதீக மதஸ்தர்களே
வியாசரைக் கைவிட்டால் பின் என்ன செய்வது? கலி முற்றி விட்டது என்று கொள்ள
வேண்டியதுதான்.

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி ஸ்வாமிகள் இது குறித்துச் சொல்லும் கருத்து
ஊன்றிக் கவனிக்கத் தக்கது:

http://thirumozi.blogspot.com/ (கேசவம் பரம் எனும் ஒலிப்பதிவைக் கேட்கவும்)

நா.கண்ணன்

nkantan r

unread,
Mar 25, 2012, 5:12:01 AM3/25/12
to மின்தமிழ்
நண்பர்களே!

எதிலும் மதமும் சமயமுமா? இந்த "அரிச்சுவடி" என்ற சொல் முதலில் எப்பொழுது
யாரால் பயன்படுத்தப்பட்டது?

பழங்காலத்தில் (400, 500 ஆண்டுகளுக்கு முன்னால்) தமிழ் கற்க துவக்கத்தில்
"அரிச்சுவடி" (சிறிய சுவடி) யும் பின்னர் "நெடுஞ்சுவடியும்" (தமிழ் +
கிரந்த) இருந்தன. (அரிச்சுவடி = 247 தமிழ் எழுத்துக்கள்);
(நெடுஞ்சுவடி=355 +2 எழுத்துக்கள்)

rnkantan

> http://thirumozi.blogspot.com/(கேசவம் பரம் எனும் ஒலிப்பதிவைக் கேட்கவும்)
>
> நா.கண்ணன்

DEV RAJ

unread,
Mar 25, 2012, 7:07:20 AM3/25/12
to மின்தமிழ்
அரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார்யார் தேரு மிடத்து.

அரி - சிறிய எனும் பொருளில் எங்கு
சொல்லப்படுகிறது என்பதை அறிய
ஆவல்; நெடுஞ்சுவடி பற்றிய
மேலதிகத் தகவல்களையும்
எதிர் பார்க்கிறேன்

தேவ்

DEV RAJ

unread,
Mar 25, 2012, 8:52:32 AM3/25/12
to மின்தமிழ்
நெடுங்கணக்கு உள்ளது;
நெடுஞ்சுவடி கிடையாது.

தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
*அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே
(அரிசினம் - கடுங்கோபம்)

On Mar 25, 2:12 am, nkantan r <rnkan...@gmail.com> wrote:

>>> இந்த "அரிச்சுவடி" என்ற சொல் முதலில் எப்பொழுது
யாரால் பயன்படுத்தப்பட்டது? <<<


அறப்பளீசுர சதகம் (18ம் நூற்றாண்டு) -

* அரிதேவ தேவனென் பதையறி யமுதனூல்
அரிச்சுவடி யேசாட்சியாம்*


சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
சூழ்கிர கணஞ் சாட்சியாம்
சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
தூய மாத்திரை சாட்சியாம்
ஆதியிற் செய்ததவ முண்டில்லை யென்பதற்
காளடிமை யேசாட்சி யாம்
* அரிதேவ தேவனென் பதையறி யமுதனூல்
அரிச்சுவடி யேசாட்சியாம்*
நாதனே மாதேவ னென்பதற் கோருத்ர
நமக சமகஞ் சாட்சியாம்
நாயேனை ரட்சிப்ப துன்பார மரியவே
னாளுமர்ச் சனைசெய் சரணத்
தால்நா யகமிக்க வேதநா யகனான
வண்ணலே யருமை மதவே
ளனுதினமு மனதினினை தருசதுர கிரிவள
ரறப்பளீ சுர தேவனே. 52
- அம்பலவாண தேசிகர்


நன்றி : அரங்கனார்

தேவ்

On Mar 25, 2:12 am, nkantan r <rnkan...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Mar 25, 2012, 9:26:43 AM3/25/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com

On Mar 25, 2:12 am, nkantan r <rnkan...@gmail.com> wrote:

> நண்பர்களே!
>
> எதிலும் மதமும் சமயமுமா? இந்த "அரிச்சுவடி" என்ற சொல் முதலில் எப்பொழுது
> யாரால் பயன்படுத்தப்பட்டது?
>
> பழங்காலத்தில் (400, 500 ஆண்டுகளுக்கு முன்னால்) தமிழ் கற்க துவக்கத்தில்
> "அரிச்சுவடி" (சிறிய சுவடி) யும் பின்னர் "நெடுஞ்சுவடியும்" (தமிழ் +
> கிரந்த) இருந்தன. (அரிச்சுவடி = 247 தமிழ் எழுத்துக்கள்);
> (நெடுஞ்சுவடி=355 +2 எழுத்துக்கள்)
>
> rnkantan

’அரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக்
கொடுக்கும்போது
பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப்
பெயர்.
திண்ணைப் பள்ளிக்கூடங்கள் 20-ஆம் நூற்றாண்டிலும் அரி ஓம் நமோத்து
கற்பித்தார்கள்.
இணையத்திலும் அப்படிக் கற்றோர் உள்ளனர். முனைவர் இராமகி பதிவில்
பாருங்கள்:
http://valavu.blogspot.com/2011/01/2.html
“தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச்
சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்) எழுத்தையே உணர்த்தும். ஒரு காலத்தில்
செயினரின் தொடர்பால் தமிழ்நாட்டின் திண்ணைப் பள்ளிக் கூடங்களில் “அரி ஓம்
நமோத்து சிந்தம்” என்று சொல்லித்தான் பள்ளிப் பாடம் தொடங்குவார்கள். [என்
பள்ளிப் பாடமும் அப்படித்தான் தொடங்கியது.]”

சென்னைப் பல்கலைப் பேரகராதி (பக்கம் 2337):
நெடுங்கணக்கு neṭu-ṅ-kaṇakku
, n. < நெடு- மை +. 1. Alphabet; அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.) 2.
A long account or reckoning; நெடு நாட்கணக்கு. (W.) 3. Bad debt;
வாராக்கடன். (W.)

தொல்காப்பிய எழுத்ததிகாரம் 94-ன் உரையில் நெடுங்கணக்கை அரிச்சுவடி
என்றிருப்பதாய் அறிகிறோம். அந்த உரையை தேடிப் பார்ப்போம்.
இலக்கண, இலக்கிய நூல்களில் உள்ளவற்றில் இது முதலில் இருக்கலாம்.

நா. கணேசன்
--------------------

எம் கண்டன் - மணிகண்டனா? தமிழ் ஆர்வம் உடைய நீங்கள் தமிழில்
கையெழுத்திடலாமே.

N. Kannan

unread,
Mar 25, 2012, 9:34:55 AM3/25/12
to mint...@googlegroups.com
2012/3/25 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ’அரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக்
> கொடுக்கும்போது
> பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப்
> பெயர்.

சரி! இதிலுள்ள அரி ஓம்!? எந்த அரி!? எந்த ஓம்? :-)

ஏன் அனைத்து இந்துச் சடங்குகளும் அரி ஓம் என்று தொடங்குகின்றன. எல்லா சமண
ஏற்பாடுதானோ? :-)

க.>

Hari Krishnan

unread,
Mar 25, 2012, 10:09:51 AM3/25/12
to mint...@googlegroups.com


2012/3/25 DEV RAJ <rde...@gmail.com>

அரி - சிறிய எனும் பொருளில் எங்கு
சொல்லப்படுகிறது என்பதை அறிய
ஆவல்; நெடுஞ்சுவடி பற்றிய
மேலதிகத் தகவல்களையும்
எதிர் பார்க்கிறேன்

அரியினை அரிபிடித்த அதுபோல்
அரியெனை அரிபிடித் தானே.....

என்று என்னுடைய 15-16 வயதில் விளையாட்டாக சிலேடை எழுதினேன்.  கழகத் தமிழகராதி அரி என்ற சொல்லுக்கு 87 பொருள் தருகிறது.  இணைப்பைக் காண்க.  சிறிய என்ற பொருளில் இந்தச் சொல்லைப் பார்த்ததில்லை; கழகத் தமிழகராதியிலும் இப்பொருளில்லை.


--
அன்புடன்,
ஹரிகி.
img091.jpg

Hari Krishnan

unread,
Mar 25, 2012, 10:20:31 AM3/25/12
to mint...@googlegroups.com


2012/3/25 DEV RAJ <rde...@gmail.com>

அறப்பளீசுர சதகம் (18ம் நூற்றாண்டு) -

* அரிதேவ தேவனென் பதையறி யமுதனூல்
         அரிச்சுவடி யேசாட்சியாம்*

நெடுஞ்சுவடி என்று பார்த்ததும் குழம்பித்தான் போனேன்.  நெடுங்கணக்கு என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

அரிச்சுவடி, எண்சுவடி என இருவகைகள் இருந்திருக்கின்றன.  இதைப் பற்றி உவேசா சொல்லியிருப்பது இணைப்பில்.  எண்சுவடி என்று தனியாக இருந்திருப்பின், அரிச்சுவடிக்கு என்ன பயன் அல்லது பொருள் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப.....
img092.jpg

Hari Krishnan

unread,
Mar 25, 2012, 10:22:43 AM3/25/12
to mint...@googlegroups.com


2012/3/25 N. Kannan <navan...@gmail.com>

சரி! இதிலுள்ள அரி ஓம்!? எந்த அரி!? எந்த ஓம்? :-)

ஏன் அனைத்து இந்துச் சடங்குகளும் அரி ஓம் என்று தொடங்குகின்றன. எல்லா சமண
ஏற்பாடுதானோ? :-)

அட நீங்க வேற.... யானத் தல உம்மாச்சியே சமணர்கள் கண்டுபிடிச்சதுதான்.  அப்புறம்தான் சிவனுடைய பிள்ளைனு இந்த சைடுக்கு ஓட்டிக்கினு வன்ட்டாங்க.  அல்லாம் அங்கேந்து திருடினதுதான்.

N. Ganesan

unread,
Mar 25, 2012, 9:52:28 AM3/25/12
to மின்தமிழ்

On Mar 25, 6:34 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> ஏன் அனைத்து இந்துச் சடங்குகளும் அரி ஓம் என்று தொடங்குகின்றன. எல்லா சமண
> ஏற்பாடுதானோ? :-)
>

ஹிந்து சடங்குகள் ’அரி ஓம்’ என்றா தொடங்குகின்றன? ‘அரி ஓம் நமோத்து’
என்றா?

நா. கணேசன்

DEV RAJ

unread,
Mar 25, 2012, 12:00:43 PM3/25/12
to மின்தமிழ்
மறையோத்து ‘ஹரி: ஓம்’ எனத் தொடங்கும்;
தமிழ்ப் பயிற்சியும் அதையொட்டி
அமைந்திருக்க வாய்ப்புண்டு.

கணேசர் ஐயாவிடம் இருக்கும் கொங்கு நாட்டுத்
தொல் சமணச் சுவடிகளில் தொடக்கம் ஒருவேளை
‘அரி ஓம்’ என இருக்கலாம். ஹரி என்பதே சமணப்
பெயர்தான் என நிறுவவும் வல்லவர் நம் ஐயா
பவுத்தருக்கு முன்பே தமிழ்ச் சமணர் சித்த வரிவடிவைப்
பயன்படுத்தியிருக்கலாம். ஹரி என்பதே சமணப் பெயர்தான்
என நிறுவவும் வல்லவர் நம் ஐயா.

The one and only International Indologist ஐயா சொன்னால் சரி;
சிற்றறிவினரான நமக்கு என்ன தெரியும் ?

ஹரி ஓம்


தேவ்

Vij

unread,
Mar 25, 2012, 1:32:32 PM3/25/12
to mint...@googlegroups.com
அரி ஓம் என ஒன்றும் இல்லை. ஹரி ஓம் என்றால் பொருள் இருக்கு.


சம்ஸ்கிருதத்தில் அரி என்றால் எதிரி என்ற அர்த்தம்

ஆப்தே டிக்ஷ்னரியில் இருந்து


--------------------------------------------------------------------------------
56. अरि ari : (page 216)

Loss of a royal power or sovereignty.
अरि ariअरि a. [ऋ-इन्] Moving, going, reaching; obtaining, aspiring, devoted
to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf. Uṇ.4.138); (used in the Veda
like an adjective in the sense of 'ungenerous', 'malicious', 'not
worshipping or devoted', 'hostile'); विजितारिपुरःसरः R.1.59,61; 4.4.-2 An
enemy of mankind (said of the six feelings which disturb man's mind);


--------------------------------------------------------------------------------
57. अरि ari : (page 216)

obtaining, aspiring, devoted to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf.
Uṇ.4.138); (used in the Veda like an adjective in the sense of 'ungenerous',
'malicious', 'not worshipping or devoted', 'hostile'); विजितारिपुरःसरः
R.1.59,61; 4.4.-2 An enemy of mankind (said of the six feelings which
disturb man's mind); कामः क्रोध- स्तथा लोभो मदमोहौ च मत्सरः;
कृतारिषड्वर्गजयेन Ki.1.9.-3 A species of खदिर or Mimosa

--------------------------------------------------------------------------------
58. अरि ari : (page 217)

गदारिसरोजशङ्खैः Līlā.-8 A lord, master. -9 The wind.-1 A pious or religious
man.-Comp. -कर्षण a. tamer or subduer of enemies.-कुलम् 1 a host of
enemies.-2 an enemy,-केलिः Sport of a foe, sexual enjoyment cf. अरिकेलिः
शत्रुलीला स्त्रीरत्योश्चापि कीर्तितः Nm.-गूर्त a. Ved. ready for the
destruction of enemies; praised by devoted

--------------------------------------------------------------------------------
59. अरि ari : (page 217)

schemes directed against enemies; administration of foreign affairs.-त्र a.
protecting from enemies.-धायस् a. possessed by lords only (i. e. very
precious) -नन्दन a. "an enemy's joy", affording triumph to an enemy.-निपातः
invasion made by enemies. -भद्रः the foremost or most powerful enemy;
पप्रच्छ भद्रं विजितारिभद्रः R.14.31.-मर्दः 'curshing enemies, N. of a plant
(काममर्द; Mar.

--------------------------------------------------------------------------------
60. अरि ari : (page 217)

from enemies.-धायस् a. possessed by lords only (i. e. very precious) -नन्दन
a. "an enemy's joy", affording triumph to an enemy.-निपातः invasion made by
enemies. -भद्रः the foremost or most powerful enemy; पप्रच्छ भद्रं
विजितारिभद्रः R.14.31.-मर्दः 'curshing enemies, N. of a plant (काममर्द; Mar.
कासविंदा).-मर्दन a. crushing or trampling foes, destroying


ஹரி ஓம் என்பது மரபான incantation. அதை ஏன் ஜைநர்கள் அரி ஓம் என பொருளில்லாமல்
மாற்றப்போகின்ரனர்


வகொவி

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post

nkantan r

unread,
Mar 25, 2012, 1:59:55 PM3/25/12
to மின்தமிழ்
தேவ் அவர்களே!

என்னிடத்தில் தமிழ் அகராதி ஏதும் இல்லை; கேட்டறிந்த்தைச் சொன்னேன்.

தமிழ் விக்‌ஷனரியில்:
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF

72 பொருள் காட்டப்பட்டுள்ளன. 7வது "குறைவு" எனும் பொருளில்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81

"ஆங்கிலத்தில்: reduced" எனக் காட்டபட்டுள்ளது. ஆனால் எந்த எ.கா ட்டும்
(example, usage) இல்லை.

(PS: i know wiktionary is not authentic as it is based on users, as
ignorant as i am)

rnkantan

> > > நா.கண்ணன்- Hide quoted text -
>
> - Show quoted text -

nkantan r

unread,
Mar 25, 2012, 2:15:04 PM3/25/12
to மின்தமிழ்
நன்றி;

பல்கலைப் பேரகராதி நெடுங்கணக்கு என்பது "அரிச்சுவடி" எனச்
சுட்டியுள்ளது. "முழு சுவடியையும் குறிக்க" தற்கால வழ்க்கில் உள்ள
"அரிச்சுவடி" எனும் சொல்லை உபயோகித்துள்ளது.
(the dictionary /lexicon has used the word alphabet, to indicate
nedunkannakku; but in tamil அரிச்சுவடி means reduced part of the full
alphabet!

"அரி" என்பது "அரிதல்" (cut, reduce,) எனும் வினைச் சொல்லின் வேர்ச்சொல்.
(root)

rnkantan

nkantan r

unread,
Mar 25, 2012, 2:28:34 PM3/25/12
to மின்தமிழ்
அய்யா!

==quote:


“தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச்

சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்)=== quote ends

அரி எனும் சொல்லுக்கு "எழுத்து" எனும் பொருள் உண்டா? "அரிச் சுவடி "
எனும் சொல்லைத் தவிர, வேறு இடங்களில், அரி= எழுத்து என்று பயன்பாடு
உள்ளதா?
rnkantan

பிகு: தாங்கள் இணத்துள்ளப் பக்கத்திலும், அரி= எழுத்து என்று எனக்குத்
தென்படவில்லை.
"அரிகால்= அரிந்து விட்ட தாள்" கண்ணில் பட்ட்து;
=========


On Mar 25, 6:26 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

DEV RAJ

unread,
Mar 25, 2012, 2:50:23 PM3/25/12
to மின்தமிழ்
On Mar 25, 10:32 am, "Vij" <vcvi...@hotmail.com> wrote:
> அரி ஓம் என ஒன்றும் இல்லை
> சம்ஸ்கிருதத்தில் அரி என்றால் எதிரி என்ற அர்த்தம்<<<


தமிழில் ஹஸ்தி இல்லை; அத்தி என்பர்.
ஹேது இல்லை; ஏது என்பர்.
ஹேமம் இல்லை; ஏமம் என்பர்.
ஹிமம் இல்லை; இமம் என்பர் (இமய மலை)
தமிழில் ஹரன் இல்லை; அரன் என்பர்.

இதுவோஎமை ஆறுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
- தேவாரம்


ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு
திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள்
*அரியரி யென்றவை யழைப்ப*
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்
திருவெள்ளியங் குடியதுவே !

வெள்ளியங்குடியின் குயில்கள் எதிரியை
அழைக்கின்றன, போலும் !


தேவ்

> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post

N. Ganesan

unread,
Mar 25, 2012, 12:42:45 PM3/25/12
to மின்தமிழ்

On Mar 25, 9:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> மறையோத்து ‘ஹரி: ஓம்’ எனத் தொடங்கும்;
> தமிழ்ப் பயிற்சியும் அதையொட்டி
> அமைந்திருக்க வாய்ப்புண்டு.
>

சமணர்கள் தமிழ்ப் பள்ளிகளில் ’அரி ஓம் நமோத்து சிந்தம்’
என தமிழ் கற்பித்தனர். மறையோத்து ஆட்கள் ‘அரி ஓம்’
என்று சொல்லவில்லை.

ஓம் என்பது தமிழ்ச் சொல், இந்திய சமயங்களில் இத்
தமிழ்ச்சொல் இருக்கிறது. உ-ம்: சமணம், பௌத்தம், ஹிண்டுயிஸம்,
...
Asko Parpola, "On the Primary Meaning and Etymology of the Sacred
Syllable OM", Studia Orientalia (Finnish Oriental Society) vol 50,
1980. Parpola's Om thesis:
Om's original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ =
'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm
is expressly said to be a word expressing agreement. Etymology: <
Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized
by the following m as Jaffna Tamil ôm < âm.
http://www.scribd.com/doc/15050686/Parpola-Om

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 25, 2012, 1:17:25 PM3/25/12
to மின்தமிழ்

On Mar 25, 2:12 am, nkantan r <rnkan...@gmail.com> wrote:

> நண்பர்களே!
>
> எதிலும் மதமும் சமயமுமா? இந்த "அரிச்சுவடி" என்ற சொல் முதலில் எப்பொழுது
> யாரால் பயன்படுத்தப்பட்டது?
>
> பழங்காலத்தில் (400, 500 ஆண்டுகளுக்கு முன்னால்) தமிழ் கற்க துவக்கத்தில்
> "அரிச்சுவடி" (சிறிய சுவடி) யும் பின்னர் "நெடுஞ்சுவடியும்" (தமிழ் +
> கிரந்த) இருந்தன. (அரிச்சுவடி = 247 தமிழ் எழுத்துக்கள்);
> (நெடுஞ்சுவடி=355 +2 எழுத்துக்கள்)
>
> rnkantan
>

"ari Om namOttu cintam" - the Jaina mantra seems to refer to
Arihants - the first step by acquiring knowledge in a school to become
a siddha.

http://en.wikipedia.org/wiki/Arihant_(Jainism)

N. Ganesan

Vij

unread,
Mar 25, 2012, 4:17:48 PM3/25/12
to mint...@googlegroups.com
தேவ் சாரே


’தமிழில்` அப்படி இல்லை என சொல்லிவிடமுடியாது.


தமிழ் என்பது ஒரு போர்வை அதற்க்குள் சில மொழிகள் ஒளிந்துள்ளன.

தேவாரம் மிடீவல் தமிழ், அதுவும் செய்யுள். அது பேச்சு மொழியும் இல்லை,
உரைநடையும் இல்லை. அதனால் நமக்கு கிடைக்கும் மிடீவல் இலக்கியங்கள்தான் தமிழ்
என சொல்லமுடியாது. பழைய காலத்து செய்யுள்கள் தொல்காப்பியத்தை அப்படியே ஃபால்லோ
பண்ணின, ஏனெனில் தொல்காப்பியமே செய்யுள் நடையைத்தான் குறியாக கொண்டிருந்தது.
அப்பவே டிக்ளோசியா இருந்தது


நீங்கள் கொடுத்திருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உதாரணங்கள் கொடுக்கலாம்.
கூகிளாண்டவரை கேட்டுப் பாருங்கள்.

’ஹரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது நேராக சம்ஸ்கிருதத்திலிருந்து வருவது, அது
எல்லோருக்கும் தெரியும், அதில் ஒரு வார்த்தையை மட்டும் ஏன்
திரிக்கப்போகின்றனர் - சமணர்களோ மற்றவர்களோ.

தனித்தமிழ் ஊக்கத்தினால் அதை அரி என எழுதலாம், சிலர் அரி எனக் கூட சொல்லலாம்.
ஆனால் அதன் செம்மையான எழுத்தும், உச்சரிப்பும் ஹரி என்பது எல்லோருக்கும்
தெரியும்.

(தமில் என மொழி இருக்கு என ஒத்துக் கொள்கிறீர்களா??)

ராமகி ப்ளாக்கில் அரி அரிச்சுவடியின் அரி என வேறு சொல்கிறார், அதும் பேர்தான்
ஃபோக் எடிமாலஜி.


வகொவி


தேவ்

Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post

N. Ganesan

unread,
Mar 25, 2012, 8:23:17 PM3/25/12
to மின்தமிழ்

On Mar 25, 9:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> மறையோத்து ‘ஹரி: ஓம்’ எனத் தொடங்கும்;
> தமிழ்ப் பயிற்சியும் அதையொட்டி
> அமைந்திருக்க வாய்ப்புண்டு.
>
> கணேசர் ஐயாவிடம் இருக்கும் கொங்கு நாட்டுத்
> தொல் சமணச் சுவடிகளில் தொடக்கம் ஒருவேளை
> ‘அரி ஓம்’ என  இருக்கலாம். ஹரி என்பதே சமணப்
> பெயர்தான் என நிறுவவும் வல்லவர் நம் ஐயா
> பவுத்தருக்கு முன்பே தமிழ்ச் சமணர் சித்த வரிவடிவைப்
> பயன்படுத்தியிருக்கலாம். ஹரி என்பதே சமணப் பெயர்தான்
> என நிறுவவும் வல்லவர் நம் ஐயா.
>
> The one and only International Indologist ஐயா சொன்னால் சரி;
> சிற்றறிவினரான நமக்கு என்ன தெரியும் ?
>
> ஹரி ஓம்
>

அரி பக்தர் முனைவர் தேவ் சொன்னால் சரியாத்தான் இருக்கும்.

நா. கணேசன்

> தேவ்

DEV RAJ

unread,
Mar 25, 2012, 11:13:56 PM3/25/12
to மின்தமிழ்
கேரளத்தில் வித்யாரம்பம் -

ஓம்ʼ ஹரி ஸ்ரீ க³ணபதயே நம​:

ഓം ഹരി ശ്രീ ഗണപതയേ നമഃ; അവിഘ്നമസ്തു ശ്രീ ഗുരുഭ്യോ നമഃ

http://ml.wikipedia.org/wiki/%E0%B4%B5%E0%B4%BF%E0%B4%A6%E0%B5%8D%E0%B4%AF%E0%B4%BE%E0%B4%B0%E0%B4%82%E0%B4%AD%E0%B4%82

Hari Krishnan

unread,
Mar 25, 2012, 11:38:09 PM3/25/12
to mint...@googlegroups.com


2012/3/26 DEV RAJ <rde...@gmail.com>

கேரளத்தில் வித்யாரம்பம் -

ஓம்ʼ ஹரி ஸ்ரீ க³ணபதயே நம​:

அரிச்சுவடி, எண்சுவடி பற்றி உவேசா சொல்லியிருப்பதைச் சுட்டியிருந்தேன்.

பொதுவாகவே, ஹரிஓம் என்று சொல்லித்தான் எதையும் தொடங்குவது ஹிந்துக்களின் பழக்கம்.  பாடகர் ஓ எஸ் அருண், ‘போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ’ பாடலை எப்படித் தொடங்குகிறார் என்று கேட்டுப் பாருங்கள்.  (இணைப்பு)

பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்கள் அனேகமாக எல்லாமே (எந்த தெய்வத்தைப் பற்றிய பாடலென்றாலும்) ஹரீ என்றுதான் தொடங்கும்.

இதுவும் ஹரிசுவடிதான். :)

(இதற்கும் பிடிவாதம் பிடித்தால், அடுத்தது, ஹரி என்று தொடங்குவது ஏன் என்ற சேங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர் விளக்கம் குரல் பதிவாக வரும்.  சமணர்கள் அரி நமோத்து சித்தானம் என்று தொடங்குவார்கள்.  இங்கே ஒரு பதிவில் அரி நமோத்து சிந்தம் என்று சமணர்கள் தொடங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது!  சிந்தம் என்றால் என்ன என்று யாராவது பிளிறுவார்களா?)
Bo Sambo piece.mp3

Hari Krishnan

unread,
Mar 25, 2012, 11:45:06 PM3/25/12
to mint...@googlegroups.com


2012/3/26 Hari Krishnan <hari.har...@gmail.com>

பொதுவாகவே, ஹரிஓம் என்று சொல்லித்தான் எதையும் தொடங்குவது ஹிந்துக்களின் பழக்கம்.  பாடகர் ஓ எஸ் அருண், ‘போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ’ பாடலை எப்படித் தொடங்குகிறார் என்று கேட்டுப் பாருங்கள்.  (இணைப்பு)

சின்மயா மிஷனைச் சேர்ந்த யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பாருங்கள்.  ஹரி ஓம் என்று தொடங்கி, விடைபெறும்போது மீண்டும் ஹரி ஓம் என்று சொல்லித்தான் விடைபெறுவார்கள்.

சின்மயா மிஷன் ஒருவேளை சமண மடமோ?  :D

DEV RAJ

unread,
Mar 26, 2012, 12:03:05 AM3/26/12
to மின்தமிழ்
மால்கௌன்ஸ் - ஹிந்தோளம் -
http://www.youtube.com/watch?v=XJCqDLLdKHY


On Mar 25, 8:45 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/26 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Mar 26, 2012, 12:33:16 AM3/26/12
to mint...@googlegroups.com
அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
அரஹந்த் - பாகதம்
அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்

ஓம் = பஞ்ச நமஸ்கார மந்திரம் ( http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html )


இரா.பா,
சென்னை

Hari Krishnan

unread,
Mar 26, 2012, 12:38:39 AM3/26/12
to mint...@googlegroups.com


2012/3/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>

அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
அரஹந்த் - பாகதம்
அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்

மிக்க நன்றி பானுகுமார்.  அரிஹந்த் என்றால் கந்தத்தை அறுத்தவர் என்று தெரிந்து கொண்டேன்.  இதில் கந்தம் என்ற பொருள்படுவது எது, அறுத்தவர் என்று பொருள்படுவது எது என்றும் சொன்னால் மேலும் நன்றியுடையவனாவேன்.  (அரி என்றால் அறுத்தவரா, ஹந்த் என்றால் அறுத்தவரா என்று சொன்னால்கூட போதுமானது.)

DEV RAJ

unread,
Mar 26, 2012, 12:50:18 AM3/26/12
to மின்தமிழ்
பஞ்ச மந்திரம்

நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)

णमो अरिहंताणं॥
णमो सिद्धाणं॥
णमो आयरियाणं॥
णमो उवज्झायाणं॥
णमो लोए सव्वसाहूणं॥

एसो पंच णमोकारो॥

ணமோகார மந்திரத்தில் ‘ஓம்’ கிடையாது
இன்றும் வழக்கத்தில் இருப்பதை ஒத்தி
ஒட்டியுள்ளேன், ஆதாரத்துக்காக


தேவ்

On Mar 25, 9:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
> அரஹந்த் - பாகதம்
> அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்
>
> ஓம் = பஞ்ச நமஸ்கார மந்திரம் (http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html)
>
> இரா.பா,
> சென்னை
>
>
>
>
>
>
>

> On Sun, Mar 25, 2012 at 7:04 PM, N. Kannan <navannak...@gmail.com> wrote:
> > 2012/3/25 N. Ganesan <naa.gane...@gmail.com>:


>
> > > ’அரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக்
> > > கொடுக்கும்போது
> > > பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப்
> > > பெயர்.
>
> > சரி! இதிலுள்ள அரி ஓம்!? எந்த அரி!? எந்த ஓம்? :-)
>
> > ஏன் அனைத்து இந்துச் சடங்குகளும் அரி ஓம் என்று தொடங்குகின்றன. எல்லா சமண
> > ஏற்பாடுதானோ? :-)
>
> > க.>
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

nkantan r

unread,
Mar 26, 2012, 1:40:10 AM3/26/12
to மின்தமிழ்
தேவ் அவர்களே!
என்னிடத்தில் தமிழ் அகராதி ஏதும் இல்லை; கேட்டறிந்த்தைச் சொன்னேன்.

தமிழ் விக்‌ஷனரியில்:
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF

72 பொருள் காட்டப்பட்டுள்ளன. 7வது "குறைவு" எனும் பொருளில்.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0...

"ஆங்கிலத்தில்: reduced" எனக் காட்டபட்டுள்ளது. ஆனால் எந்த எ.கா ட்டும்
(example, usage) இல்லை.

**********************************************
நா கணேசன் அவர்களே, நன்றி;
=====quote1


சென்னைப் பல்கலைப் பேரகராதி (பக்கம் 2337):
நெடுங்கணக்கு neṭu-ṅ-kaṇakku
, n. < நெடு- மை +. 1. Alphabet; அரிச்சுவடி. (தொல். எழுத். 94, உரை.)
2.
A long account or reckoning; நெடு நாட்கணக்கு. (W.) 3. Bad debt;
வாராக்கடன். (W.)

=========quote ends

பல்கலைப் பேரகராதி நெடுங்கணக்கு என்பது "அரிச்சுவடி" எனச்
சுட்டியுள்ளது. "முழு சுவடியையும் குறிக்க" தற்கால வழ்க்கில் உள்ள
"அரிச்சுவடி" எனும் சொல்லை உபயோகித்துள்ளது.
(the dictionary /lexicon has used the word alphabet, to indicate
nedunkannakku; but in tamil அரிச்சுவடி means reduced part of the
full
alphabet!

"அரி" என்பது "அரிதல்" (cut, reduce,) எனும் வினைச் சொல்லின்
வேர்ச்சொல்.
(root)

==quote2:


“தமிழில் அரி என்ற சொல் (அரிச் சுவடி = எழுத்துச் சுவடி என்ற கூட்டுச்

சொல்லை இங்கு எண்ணிப் பாருங்கள்)=== quote ends

அரி எனும் சொல்லுக்கு "எழுத்து" எனும் பொருள் உண்டா? "அரிச் சுவடி "
எனும் சொல்லைத் தவிர, வேறு இடங்களில், அரி= எழுத்து என்று பயன்பாடு
உள்ளதா?
rnkantan

(PS1: i know wiktionary is not authentic as it is based on users, as
ignorant as i am)

பிகு2: தாங்கள் இணைத்துள்ளப் பக்கத்திலும், அரி=எழுத்து என்று எனக்குத்


தென்படவில்லை.
"அரிகால்= அரிந்து விட்ட தாள்" கண்ணில் பட்ட்து;

(அரிச்சுவடி யில் வல்லினம் - ச்- மிகுவதால், அரிகால் போல் இல்லை
(வினைத்தொகையா?)

> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like


> > > to visit our Muthusom Blogs at:

> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at

> > >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

DEV RAJ

unread,
Mar 26, 2012, 4:23:22 AM3/26/12
to மின்தமிழ்
On Mar 25, 10:40 pm, nkantan r <rnkan...@gmail.com> wrote:
>>> 72 பொருள் காட்டப்பட்டுள்ளன. 7வது "குறைவு" எனும் பொருளில்.<<<
>>>"ஆங்கிலத்தில்: reduced" எனக் காட்டபட்டுள்ளது. ஆனால் எந்த எ.கா ட்டும்
(example, usage) இல்லை. <<<

நன்றி நண்பரே

நீங்கள் சொல்வதில் ஆதாரம் இருப்பின் ஏற்பதில் தடை இல்லை;
usage இல்லையென்றும் நீங்கள் நேர்மையுடன் எழுதுகிறீர்கள்.
எந்தப் பொருளில் usage இருக்கிறதோ அதை எடுத்துக்காட்டினால்
அதை ஏற்பதே நியாயம். நீங்கள் சொல்லும் நெடுஞ்சுவடி
வழக்கில் இல்லாத சொல்.

அறப்பளீசுர சதகம் பாடல் காட்டாகத் தரப்பட்டது.

**** “அரி ஓம் நமோத்து சிந்தம்” ***

இதில் ஓம், நமோத்து, (நமோSஸ்து) இவை ணமோகாரத்தில் இல்லை;
மறையோத்திலும், இசையிலும், கல்விப் பயிற்சியிலும்
'ஹரி ஓம்’ சொல்லும் வழக்கம் இருப்பது எடுத்துக்காட்டப்பட்டது.
ஹரி எனும் பெயர் சமணத்தில் இல்லை; அரி
என எடுத்துக்கொள்ளலாம் என்றால் அரியை ( எதிரியை)
வணங்கலாமா எனும் வினா எழும்.

எதற்கு அணியமாக உள்ளதோ அதை ஏற்கலாம்;
சமயங்களும் மொழிகளும் பிரிக்க முடியாதபடி
உள்ளன என்பது வேறோர் இழையில்
சொல்லப்பட்டது;

அரி - வரியைக் குறிக்கும் என்பதும் ஏற்புடையதே;
அரிச்சுவடி வரிவடிவத்தையும்,
எண்சுவடி எண்களையும் போதிப்பதாகக்
கொள்ளலாம்; நெடுஞ்சுவடி இல்லை


தேவ்

On Mar 25, 10:40 pm, nkantan r <rnkan...@gmail.com> wrote:
> தேவ் அவர்களே!
> என்னிடத்தில் தமிழ் அகராதி ஏதும் இல்லை; கேட்டறிந்த்தைச் சொன்னேன்.
>
> தமிழ் விக்‌ஷனரியில்:http://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF
>

> 72 பொருள் காட்டப்பட்டுள்ளன. 7வது "குறைவு" எனும் பொருளில்.http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0...

> > > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopostto this group,


> > > > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at

> > > >http://groups.google.com/group/minTamil-Hide quoted text -

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 4:51:02 AM3/26/12
to மின்தமிழ்
On Mar 24, 7:54 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அந்த 'அரி நமோத்துசிந்தம்' என்பது ஏதோ சமண மந்திரம்
> இல்லையா? 'சித்தர் வணக்கம்' என்றோ என்னவோ சொல்வார்களில்லையா?>>>>>>
>
> ஓம் நமஸித்தேப்யா:
>
> இது இன்றளவும் எங்களிடம் நடைமுறையில்உள்ளது. சுருக்கமாக சித்தம் நம என்று
> சிறுப்பிள்ளைகள் புரியும் வண்ணம் உச்சரிக்கப்படுகிறது. (சித்தம் அர்ஹம்
> நமோஸ்து என்று ஜினாலயம் நுழையும் முன் சொல்லும் மந்திரம். வழிப்பாட்டின்
> நோக்கத்தை உணர்த்தும் மந்திரம்).


அதாவது ”சித்தம் அர்ஹம் நமோஸ்து” என்பதன் சுருக்கம் ’சித்தம் நம’
என்பதா?? அல்லது ’சித்தம் நம’ எதன் சுருக்கம்?


வகொவி

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 5:07:33 AM3/26/12
to மின்தமிழ்
On Mar 26, 6:38 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/26 Banukumar Rajendran <banukuma...@gmail.com>

>
> > அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
> > அரஹந்த் - பாகதம்
> > அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்
>
> மிக்க நன்றி பானுகுமார்.  அரிஹந்த் என்றால் கந்தத்தை அறுத்தவர் என்று தெரிந்து
> கொண்டேன்.  இதில் கந்தம் என்ற பொருள்படுவது எது, அறுத்தவர் என்று பொருள்படுவது
> எது என்றும் சொன்னால் மேலும் நன்றியுடையவனாவேன்.  (அரி என்றால் அறுத்தவரா,
> ஹந்த் என்றால் அறுத்தவரா என்று சொன்னால்கூட போதுமானது.)

From Wikipedia

The exact interpretation and etymology of words such as arahant and
arhat remains disputed. In the Theravada tradition, and in early PTS
publications, the word arahant or arhat is interpreted to mean the
"worthy one"[1] This has been challenged by more recent research,
resulting from the etymological comparison of Pali and early Jain
Prakrit forms (arihanta and arahanta).[2] The alternative etymology is
"foe-destroyer" or "vanquisher of enemies," which corresponds to the
Jain definition.[3] The latter challenges the assumption that the root
of the word is Pali araha (cf. Sk. arha); Richard Gombrich has
proposed an etymology of ari + hanta, bringing the root meaning closer
to Jina (an epithet commonly used of both the leaders of the Jain
religion and Buddha).[4]


There is a strong possibility the Jain definition also comes from the
'ari' to be enemy, foe, destroyer


Vijayaraghavan

N. Kannan

unread,
Mar 26, 2012, 6:19:41 AM3/26/12
to mint...@googlegroups.com
2012/3/26 Hari Krishnan <hari.har...@gmail.com>:

நன்றி ஹரி கி

ஓ எஸ் அருணின் ‘போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ’ பாடல் அற்புதம். அவர் ஹரீ
என்று இழுக்கும் போதே உணர்வுகள் சும்மா ஜிவ்வென்று சுண்டி
இழுக்கப்படுகிறது!. இந்தப்பாடல் எப்போதும் என்னைக் கவரும் பாடல்.
தீனதயாளுவான சிவனின் பாடல். நெஞ்சை உருக்குகிறது.

> பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல்கள் அனேகமாக எல்லாமே (எந்த தெய்வத்தைப் பற்றிய
> பாடலென்றாலும்) ஹரீ என்றுதான் தொடங்கும்.
>

உண்மை!


> சேங்காலிபுரம் அநந்தராம தீக்ஷிதர் விளக்கம் குரல் பதிவாக வரும்.


அடடா! அதையும் கொடுத்து விடுங்கள். அவரது உபன்யாசம் கேட்டு
மாமாங்கமாகிறது. குருவாயூர் அப்பன் பற்றி அவர் சொல்லிக் கேக்கணும். அது
பூர்வ ஜென்ம புண்ணியம்!


நா.கண்ணன்

Rajagopalan

unread,
Mar 26, 2012, 7:01:50 AM3/26/12
to மின்தமிழ்
"ஆதியந்தம் அரியென யாவையும்
ஓதினார் அலகில்லன உள்ளன
வேதமென்பன மெய்ந்நெறி நன்மையன்
பாதமல்லது பற்றிலர் பற்றிலார்."

என்பது கம்பன் பாடல். வேதமே அக்காலக் கல்வி. ஆதியந்தம் அரியென ஓதுதலே
கற்றல். எழுத்தெல்லாம் அகர முதல என்ற வள்ளுவன் அதை ஆதி பகவன் என்ற
உலகத்தின் முதலுக்கு உவமை கூறினான். ஓங்காரமே உலகின் முதலொலி. அது அ,உ,ம
என்ற மூன்று எழுத்துகளின் கூட்டு. ப்ரணவப் பொருளில், அகரம் பரம் பொருளைக்
குறிப்பதாகவே கூறப்படுகிறது. சுவடி என்பது ஏடு. அச்சுவடியைக் கற்பது,
அகரப் பொருளான இறைவனை (மெய்ப் பொருளை )அறிவதற்கான தொடக்கம்.

அ.ரா


On Mar 25, 10:32 pm, "Vij" <vcvi...@hotmail.com> wrote:
> அரி ஓம் என ஒன்றும் இல்லை. ஹரி ஓம் என்றால் பொருள் இருக்கு.
>
> சம்ஸ்கிருதத்தில் அரி என்றால் எதிரி என்ற அர்த்தம்
>
> ஆப்தே டிக்ஷ்னரியில் இருந்து
>

> ---------------------------------------------------------------------------­-----


> 56. अरि ari : (page 216)
>
> Loss of a royal power or sovereignty.
> अरि ariअरि a. [ऋ-इन्] Moving, going, reaching; obtaining, aspiring, devoted
> to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf. Uṇ.4.138); (used in the Veda
> like an adjective in the sense of 'ungenerous', 'malicious', 'not
> worshipping or devoted', 'hostile'); विजितारिपुरःसरः R.1.59,61; 4.4.-2 An
> enemy of mankind (said of the six feelings which disturb man's mind);
>

> ---------------------------------------------------------------------------­-----


> 57. अरि ari : (page 216)
>
> obtaining, aspiring, devoted to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf.
> Uṇ.4.138); (used in the Veda like an adjective in the sense of 'ungenerous',
> 'malicious', 'not worshipping or devoted', 'hostile'); विजितारिपुरःसरः
> R.1.59,61; 4.4.-2 An enemy of mankind (said of the six feelings which
> disturb man's mind); कामः क्रोध- स्तथा लोभो मदमोहौ च मत्सरः;
> कृतारिषड्वर्गजयेन Ki.1.9.-3 A species of खदिर or Mimosa
>

> ---------------------------------------------------------------------------­-----


> 58. अरि ari : (page 217)
>
> गदारिसरोजशङ्खैः Līlā.-8 A lord, master. -9 The wind.-1 A pious or religious
> man.-Comp. -कर्षण a. tamer or subduer of enemies.-कुलम् 1 a host of
> enemies.-2 an enemy,-केलिः Sport of a foe, sexual enjoyment cf. अरिकेलिः
> शत्रुलीला स्त्रीरत्योश्चापि कीर्तितः Nm.-गूर्त a. Ved. ready for the
> destruction of enemies; praised by devoted
>

> ---------------------------------------------------------------------------­-----


> 59. अरि ari : (page 217)
>
> schemes directed against enemies; administration of foreign affairs.-त्र a.
> protecting from enemies.-धायस् a. possessed by lords only (i. e. very
> precious) -नन्दन a. "an enemy's joy", affording triumph to an enemy.-निपातः
> invasion made by enemies. -भद्रः the foremost or most powerful enemy;
> पप्रच्छ भद्रं विजितारिभद्रः R.14.31.-मर्दः 'curshing enemies, N. of a plant
> (काममर्द; Mar.
>

> ---------------------------------------------------------------------------­-----

> Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 8:23:55 AM3/26/12
to மின்தமிழ்
On Mar 26, 1:01 pm, Rajagopalan <appan.rajagopa...@gmail.com> wrote:
> "ஆதியந்தம் அரியென யாவையும்
> ஓதினார் அலகில்லன உள்ளன
> வேதமென்பன மெய்ந்நெறி நன்மையன்
> பாதமல்லது பற்றிலர் பற்றிலார்."
>
> என்பது கம்பன் பாடல்.

அது மிடீவல் செய்யுள். அதன் வார்த்தை முறைகள் இக்காலத்தைவிட வேறு.


‘வகொவி

N. Ganesan

unread,
Mar 26, 2012, 9:22:51 AM3/26/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 25, 9:33 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அரிஹந்த் - சமஸ்கிருதம் - கந்தத்தை அறுத்தவர்.
> அரஹந்த் - பாகதம்
> அரிகந்தர் - கந்தழி - கந்தத்தை அழித்தவர்
>
> ஓம் = பஞ்ச நமஸ்கார மந்திரம் (http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html)
>
> இரா.பா,
> சென்னை
>
>

நன்றி, பானுகுமார்.

தென்னாட்டில் திராவிடமொழிகளைப் போதிக்க
சமணர்கள் ஆதியில் இலக்கணங்கள் எழுதி,
ஊர்மக்களுக்கு தம் பள்ளிகளில் முயன்றனர்.
அப்போது ‘அரி ஓம் நமோத்து சிந்தம்’ (பாண்டிநாட்டு
வழக்கு, இராமகி ஐயா பதிவு). சித்தம் - சிந்தை. பிற ஊர்களில் சித்தம்,
சித்தாணம் என்றும் இருந்துள்ளது.
‘அரி நமோத்து சிந்தம்’ மணலில் திண்ணைப்பள்ளியில்
எழுதும்போது சொல்வது:
http://www.thoguppukal.in/2012/01/blog-post_8799.html

சமணர்களின் மந்திரத்தில் அரி என்னும் வார்த்தை
அருகரை/அரிகந்தரைக் குறிப்பதாக
உள்ளது. வடசொல் அர்த்தம் பார்ப்போம்:


अरि ari : (page 217)
गदारिसरोजशङ्खैः Līlā.-8 A lord, master. -9 The wind.-1 A pious or
religious
man.-Comp. -कर्षण a. tamer or subduer of enemies.-कुलम् 1 a host of
enemies.-2 an enemy,-केलिः Sport of a foe, sexual enjoyment cf.
अरिकेलिः
शत्रुलीला स्त्रीरत्योश्चापि कीर्तितः Nm.-गूर्त a. Ved. ready for the

destruction of enemies; praised by devoted .

--------------

ஆய்தம் எழுத்தின் பெயர் - தொல்காப்பியத்தில்.

தமிழுக்கு இலக்கணம் எழுதிய தொல்காப்பிய முனிவரைச்
சமணர் என்பர் அறிஞர் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர்.

பாவாணர் போன்றோர்கள் ஆய்தம் எனும் பெயர் ஆய்வது
என்னும் வினைச்சொல்லில் பிறப்பது (verbal noun) என்று
சொல்லியுள்ளனர். ஆனால் எனக்கு ஆய்தம் என்பதன் வேர்ச்சொல்
ஆய்வது தான் என்பதில் பெருத்த ஐயமுண்டு. எழுதியுமுள்ளேன்.

ஆய்வது/ஆய்தல் > ஆய்தம் என்றால், பாய்வது/பாய்தல் > பாய்தம்,
சாய்வது/சாய்தல் > சாய்தம், தேய்வது/தேய்தல் > தேய்தம்,
தோய்வது/தோய்தல் > தோய்தம் என்று பெயர்ச்சொற்கள் இருக்க
வேண்டுமே. ஆனால், காணோம். எனவே, மு. இராகவையங்கார்
100+ ஆண்டுகளுக்கு முன்னர் காட்டிய சொற்பிறப்பை
ஆய்தம் என்னும் எழுத்தின் பெயராகக் கொள்ள வாய்ப்புகள் மிகுதி.

---------------------------------------------
ஆய்தம் தமிழ் வேர் கொண்டதன்று. ஏன்? 2 காரணங்கள்:

(1) ஆய்த எழுத்து மிகப் பிற்காலத்திலேயே கல்வெட்டு, செப்பேடுகளில்
பதிவாகிறது. பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடு - வெஃகா என்னும்
இடப்பெயர்.
அதன் வடிவம் விஸர்க்கம். இன்று கணினிகளிலும், ஆய்த/ஆயித/ஆயுத
எழுத்தின் பெயர் விஸர்க்கம் தான்.

(2) ஒருமொழியில் ஒரு சொல் பலவிதங்களில் எழுதப்பட்டால்,
அது வேறு மொழியில் இருந்து கடனாகப்பெற்றது என்பதைக்
காட்டும் என்பர். ஆய்தம்/ஆய்தம்/ஆயிதம் எழுத்துக்கு தமிழர்கள்
பயன்படுத்துவது அச்சொல் வேர் தமிழன்று என்று காட்டி நிற்கிறது.

---------------------------------

அப்படியாயின், எந்தச் சொல்லில் இருந்து
ஆய்தம் என்ற எழுத்துப் பெயரைத் தொல்காப்பியம் தருகிறது?
என ஆய்வோம்.

மு. இராகவையங்கார், ஆராய்ச்சித் தொகுதியில் சாமிநாத ஐயர்
என்பவர் கூற்றைத் தந்துள்ளார்.
ஆஶ்ரித = இணைவது, ஒட்டுவது, தஞ்சம் என்பது, ...
என்றெல்லாம் பொருள் இருக்கிறது. இதெல்லாம் விஸர்க்கத்தின்
பண்பு ஆதலால், விஸர்க்கத்தின் ஒரு பெயர் ஆஶ்ரிதமாம்.
ஆய்தம்/ஆயுதம்/ஆயிதம் < ஆஶிதம் < ஆஶ்ரிதம் (வடசொல்)
எனக் கருதலாம்.

ஆய்தம் < ஆஶ்ரிதம் - இச் சொற்பிறப்புக்கு இரண்டு ஒப்புகள் தரமுடியும்:

(1) ஒப்புமையாக ஒரு வார்த்தையை ‘ஆராய்ச்சித் தொகுதி’ தருகிறது:
ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்) என்றானது.
தமிழில், ஶ்மசிரு > மயிர் என்றாகிறது. முதன்முதலில்
சமணரான திருவள்ளுவர் தமிழில் பயன்படுத்துகிறார்
என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.

(2) தொல்காப்பியம் சமண வழியில் ஆய்தம் < ஆசிதம் (< ஆஶ்ரிதம்)
என்றாக்கியதற்கு சமணர்களின் மிகப்புனிதமான பஞ்சமந்திரத்திலேயே
சான்று இருக்கிறது. ஆசிரியர் (< ஆசார்ய) என்பது பிற்கால வழக்கு,
ஆனால் பண்டை வழக்கு ஆயிரியர் என்பதற்கு சமண மந்திரங்கள்
சாட்சி.

பஞ்சமந்திரத்தில் 3-ஆம் வாக்கியம்:
”நமோ *ஆயிரியாணம்* (ஆச்சாரியரை வணங்குகிறேன்)”

அரஹந்தா அசரீரா *ஆயிரியா* தஹ உவத்தாயா முனினோ|
படமம் கரணம் பண்ணோ ஓம்கார பஞ்ச பரமேஷ்டி ||
http://banukumar_r.blogspot.in/2011/05/blog-post.html

ஆசிரியர் என்னும் சொல்லை ஆயிரியர் என்னும் சமணர்
வழக்குப் போல, ஆசிதம் என்னும் சொல் ஆயிதம்/ஆயுதம்
என்றாகி, தொல்காப்பியத்தில் ஆய்தம் என்றாகி உள்ளது
எனக் கொள்ளலாம். அரி ஓம் நமோத்து சிந்தம், அரி நமோத்து சித்தாணம்
என்று முதலில் குழந்தைகளுக்குச் சொல்லி எழுத்துகளை
மணலில் விளம்பச் செய்த சமண ஆயிரியர்கள் (= ஆசிரியர்கள்)
ஆய்தம் என்று பிராகிருத வாயிலாக தமிழுக்கு
விசர்க்க எழுத்தைத் தந்துள்ளனர், அது தொல்காப்பியத்தில்
காண முடிகிறது. நெடுங்கணக்கை அரிச்சுவடி என்பது
“அரி நமோத்து சித்தாணம்” என்னும் அருக வழிபாட்டின்
விளைவு என்பது வெள்ளிடைமலை [1]

நா. கணேசன்

[1] //அரி(சி)யில் எழுதத் தொடங்கும் எழுத்துவகை என்பதால்
அரிச்சுவடி என்ற பெயர் ஏற்பட்டது.] // (http://valavu.blogspot.com)
முனைவர் இராமகி அரிச்சுவடி அரிசியில் எழுதுவதால்
எனக் கருதியுள்ளார்கள் என்பது தெரிகிறது. ஆனால்
எல்லோரும் அரிசியில் எழுதுவதில்லை, மணலில்
எழுதித்தான் பெரும்பாலோர் பள்ளியைத் தொடங்கினர்.
அரி நமோத்து சித்தம் - சமண வழிபாட்டு தொடர்.

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 11:02:05 AM3/26/12
to மின்தமிழ்
http://www.siththarkal.com/2010_08_01_archive.html

”சித்தர் வணக்கம்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத்
தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து
சிந்தம்’’ என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக்
கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ”


http://www.yarl.com/forum3/index.php?showtopic=22601&st=220

http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=11
சமணமும் தமிழும்
மயிலை, சீனி. வேங்கடசாமி
9. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத்
தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. ‘‘ஹரி நமோத்து
சிந்தம்’’ என்று கூறிய பின்

மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ் சமனத்தில் அதாரிடி, அவர் சொல்வதை கேட்பதா,
ராமகி சொல்வதை கேட்பதா.

வகொவி

> விளைவு என்பது வெள்ளிடைமலை ...
>
> read more »

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 11:09:06 AM3/26/12
to மின்தமிழ்
தி.க. வீரமணி எழுதுகிறார் , எப்படி ஈவேராவை முதலில் சந்தித்தாராம்

http://thamizhoviya.blogspot.de/2008/12/blog-post_9677.html

===============

அப்பள்ளிக்கு நான் விருப்பத்தோடு செல்லவில்லை. காரணம், கண்டிப்பு
மிகுந்த, பிரம்புடன் காட்சியளித்த ஆசிரியை அவர்! வாஞ்சையும், அன்பும்
ததும்பிய அவரிடம் கண்டிப்பும் தண்டனையும்கூட எப்போதும் வந்துவிடும். சில
நேரங்களில் அடம்பிடித்து, சண்டித்தனம் செய்து தெருவையே இரண்டாக்கி
கூச்சலிடுவேன். என் மூத்த அண்ணாரிடமும் மற்றவர்களிடமும் அடியும் வாங்கி
அந்தப் பள்ளிக்கு பரபரவென இழுத்துச் செல்லப்பட்டதும் உண்டு.

ஹரி நமோத்து சிந்தம் அட்டையில் அட்சராப்பியாசம் (எழுத்துப் பயிற்சி)
அந்தக் காலத்தில் அப்படித்தான் தொடங்கியது. அந்த ஆசிரியையிடம் ஓரிரு
ஆண்டு முடித்துத்தான், நல்ல மாணவனாகக் கடலூர் முதுநகரின் மற்றொரு
கோடியில் இருந்த முஸ்லிம் ஹையர் செகண்டரி பள்ளியில் சேர்ந்தேன் இரண்டாவது
வகுப்பில்!

=============

வகொவி

On Mar 26, 3:22 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> விளைவு என்பது வெள்ளிடைமலை ...
>
> read more »

விஜயராகவன்

unread,
Mar 26, 2012, 12:04:01 PM3/26/12
to மின்தமிழ்


இடாக்குடர் கணேசன்

நீங்கள் குழப்பி அடிக்கிறீர்கள்.

அந்த கட்டுரை எங்கும் "ari Om namOttu cintam" ஐயும் அர்ஹந்தையும்
முடிச்சு போடவில்லை.

மயிலை சீனி "ari Om namOttu cintam" தவறு என நிரூபித்து விட்டார்.

வகொவி

Banukumar Rajendran

unread,
Mar 26, 2012, 12:44:47 PM3/26/12
to mint...@googlegroups.com
அன்பின் விஜயராகவன்,

//மயிலை சீனி. வேங்கடசாமி தமிழ் சமனத்தில் அதாரிடி, அவர் சொல்வதை கேட்பதா,
ராமகி சொல்வதை கேட்பதா.//

தாங்கள் காட்டிய சுட்டி முழுமையானதாகயில்லை என்று நினைக்கிறேன்! இதோ, சமணமும்
தமிழும் பொத்தகத்திலிருந்து...!


சித்தர் வணக்கம்


(சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி - இந்துமதத்தில்

சமணக் கொள்கைகள் – பக்கம் 97, 98)


“பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத்

தொடங்குபோது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. “ஹரி

நமோத்து சிந்தம்” என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு

எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம்

கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம்

இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு.

சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர்.

எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான்

மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம்

செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே,

“சித்தம் நம” என்று கன்னட நாட்டினரும், “ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம”

என்று தெலுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து

பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர்

வழங்குவது நினைவுக் கூறத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர்

வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத்

தம் பள்ளியில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும்

நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம்

என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு

எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக்

கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக்காலத்திலும் மற்றவர்களாலும்

வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும்

சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது

வெளிப்படை.”



இரா.பானுகுமார்,
சென்னை

Banukumar Rajendran

unread,
Mar 26, 2012, 12:48:51 PM3/26/12
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

வணக்கம். நலமா?

திரு. கண்ணன் ஐயா இவ்வாறு எழுதியிருந்தார்:

//

ஹி..ஹி..

அரிச்சுவடி என்று கல்வியின் தொடக்கம் அமைவது ஏன்? :-)

எனும் எழுத்தின் பொருள் என்ன என்று அகரமுதலி சொல்கிறது? :-)

.>

 

> ’அரி ஓம் நமோத்து சிந்தம்என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக்
>
கொடுக்கும்போது
>
பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப்
>
பெயர்.

சரி! இதிலுள்ள அரி ஓம்!? எந்த அரி!? எந்த ஓம்? :-)

ஏன் அனைத்து இந்துச் சடங்குகளும் அரி ஓம் என்று தொடங்குகின்றன. எல்லா சமண ஏற்பாடுதானோ? :-)

.>

கண்ணன் ஐயா சும்மா சுத்திவிட எழுதினார் (ஸ்மைலியால்) என்று எடுத்துக் கொண்டு, அவரின் பதிவுக்கு விடையாக என் பங்குக்கு எழுதினேன். அவசரத்தில் ஸ்மைலிப் போட மறந்துவிட்டேன்! :-)


 

//

மிக்க நன்றி பானுகுமார்.  அரிஹந்த் என்றால் கந்தத்தை அறுத்தவர் என்று தெரிந்து கொண்டேன்.  இதில் கந்தம் என்ற பொருள்படுவது எது, அறுத்தவர் என்று பொருள்படுவது எது என்றும் சொன்னால் மேலும் நன்றியுடையவனாவேன்.  (அரி என்றால் அறுத்தவரா, ஹந்த் என்றால் அறுத்தவரா என்று சொன்னால்கூட போதுமானது.)

Description: http://mail.google.com/mail/images/cleardot.gif

//


சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள் போல தெரிகிறது. :-)


என் பெரிய மகன் பெயர் அரிகந்த்! என் தாத்தா அவ்வார்த்தை தவறு, அரஹந்த்

என்றுதான் இருக்கவேண்டும் என்றார். அரஹந்த் என்பது ஆங்கில “Arrogant” என்பது

போல் அனைவரும் அழைப்பார்கள், அர்த்தமும் மாறிவிடும் என்று கடைசியாக

அரிகந்த் என்றே இருக்கட்டும் என்று விட்டுவிட்டோம். இது தனிக்கதை!

 

சமணத்தின் மற்றொரு பிரிவினரான ஸ்வேத்தாம்பர்கள் அரிஹந்த் என்ற

சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். தென்னிந்திய சமணர்கள் அரஹந்தர் என்று

அழைக்கிறார்கள். அரிஹந்த் = அரி + ஹந்த். அரி – எதிரி. ஹந்த் – அழித்தவன்.

அருகருக்கு ஏது எதிரி? இங்கே எதிரி என்பது வினைகள். வினையை வென்றவன்

என்ற பொருளில் அரிஹந்த்.


அரிஹந்த் என்பது பிழையான வார்த்தை என்பது தமிழ்ச் சமண அறிஞர்களின்

பொதுவான எண்ணம். அர்கத்-> அருக்க -> அருக்கன் -> அருகன். தகுதியுடையவன்

என்று பொருள். (இது என்னுடைய தியரி)

ஏன் அருகன்?

எவர் எல்லா வினைகளையும் அறுத்து, தூய அறிவைப் பெற்றுத் திகழ்கிறாரோ,

அவரே நாம் தொழத் தகுதிப் பெற்றவர்/அருகதை உடையவர். வினையின் நீங்கி,

விளங்கிய அறிவால் முனைவன்” என்றது அருகனை என்பது பாடம்.


(சும்மா, வெட்டி ஒட்டுபவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! :-)))


இரா.பானுகுமார்,

சென்னை



--

Banukumar Rajendran

unread,
Mar 26, 2012, 12:54:33 PM3/26/12
to mint...@googlegroups.com


“அட்சர அப்பியாசம் செய்வித்தல் – கோவில் அல்லது வீட்டில் அரிசியினைப் பரப்பி அதில் “ஓம் நம ஸித்தேப்யஹ:” என எழுத பயில்வித்து பின்னர் அ, ஆ எழுத்துக்களைக் கற்பிப்பர்”.

( -    ஜைனவியல் கட்டுரைத் திரட்டு – சமணச் சடங்குகள் – பக்கம் 125 )

சித்தம் நம: என்பது “ஓம் நம ஸித்தேப்யஹ:” என்பதன் சுருக்கம்.


இரா.பானுகுமார்,
சென்னை

 


வகொவி

DEV RAJ

unread,
Mar 26, 2012, 12:56:38 PM3/26/12
to மின்தமிழ்
On Mar 26, 6:22 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> ஶ்மஶ்ரு > மசிரு (கன்னடம்) என்றானது <<<

கன்னடத்தில் ரோமத்தை அச்சொல் குறிக்காது;
தமிழின் குழல் ’கொடலு’ என்றாகும்
அங்கஜ, அலக, வேணி, ஜடெ, குந்தல, குருளு
போன்ற பெயர்கள் உள்ளன


தேவ்

> விளைவு என்பது வெள்ளிடைமலை ...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Mar 26, 2012, 2:09:52 PM3/26/12
to mint...@googlegroups.com
இந்த நூலில் அரிச்சுவடி பற்றிய தகவல் உள்ளது.  நூல் முழுதும் இணையத்தில் கிடைக்கவில்லை.  வசதியுள்ளோர் படித்து மற்றவர் படிக்கே இங்கே வெளியிட வேண்டும்
நாகராசன்

Inline image 1

Inline image 2

2012/3/26 DEV RAJ <rde...@gmail.com>
alphabet.jpg
alphabet1.jpg

DEV RAJ

unread,
Mar 26, 2012, 2:36:28 PM3/26/12
to மின்தமிழ்
On Mar 25, 9:42 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> மறையோத்து ஆட்கள் ‘அரி ஓம்’
என்று சொல்லவில்லை. <<<

Yagnas/Fire Sacrifice is based on Purusha Suktam in Rig Veda.
The same Suktam is also mentioned in other Vedas as well.
Purusha Suktam, and so all veda mantrams , start with the invocation
'GurubyO nama: Hari: Aum" .

http://in.answers.yahoo.com/question/index?qid=20110329025010AAZt4MX


On Mar 25, 9:42 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 25, 9:00 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
> > மறையோத்து ‘ஹரி: ஓம்’ எனத் தொடங்கும்;
> > தமிழ்ப் பயிற்சியும் அதையொட்டி

> > அமைந்திருக்க வாய்ப்புண்டு.
>
> சமணர்கள் தமிழ்ப் பள்ளிகளில் ’அரி ஓம் நமோத்து சிந்தம்’
> என தமிழ் கற்பித்தனர். மறையோத்து ஆட்கள் ‘அரி ஓம்’
> என்று சொல்லவில்லை.
>
> ஓம் என்பது தமிழ்ச் சொல், இந்திய சமயங்களில் இத்
> தமிழ்ச்சொல் இருக்கிறது. உ-ம்: சமணம், பௌத்தம், ஹிண்டுயிஸம்,
> ...
> Asko Parpola, "On the Primary Meaning and Etymology of the Sacred
> Syllable OM", Studia Orientalia (Finnish Oriental Society) vol 50,
> 1980. Parpola's Om thesis:
> Om's original meaning: Om in the Vedic ritual = 'yes', om = tathâ =
> 'yes' also in ordinary conversation, and in the Chandogya Upanishad ôm
> is expressly said to be a word expressing agreement. Etymology: <
> Dravidian âm < âkum 'yes' < 'it is (fitting, suitable)', â labialized
> by the following m as Jaffna Tamil ôm < âm.http://www.scribd.com/doc/15050686/Parpola-Om
>
> நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 26, 2012, 12:21:42 PM3/26/12
to மின்தமிழ்

taakTar aiyaa,

I just showed the link to Arihant & who is he.

"ari namOttu cittam" is this Arihant.

NG

N. Ganesan

unread,
Mar 26, 2012, 3:20:08 PM3/26/12
to மின்தமிழ்

On Mar 26, 11:36 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 25, 9:42 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:>>> மறையோத்து ஆட்கள் ‘அரி ஓம்’
>
> என்று சொல்லவில்லை. <<<
>
> Yagnas/Fire Sacrifice is based on Purusha Suktam in Rig Veda.
> The same Suktam is also mentioned in other Vedas as well.
> Purusha Suktam, and so all veda mantrams , start with the invocation
> 'GurubyO nama: Hari: Aum" .
>
> http://in.answers.yahoo.com/question/index?qid=20110329025010AAZt4MX
>

Hari Aum
&
ari Om namOttu sittam
are qute different.

N. Ganesan

DEV RAJ

unread,
Mar 26, 2012, 7:41:12 PM3/26/12
to மின்தமிழ்
On Mar 26, 12:20 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> Hari Aum & ari Om namOttu sittam are qute different<<<

Ari and Ari hantA are quite different.
Aksha – Aksha kumAra (RAvaNa’s son)
Aksha hantA - AnjanEya (destroyer of Aksha kumAra)
AkshahantAram vandE
not Aksham vandE

Indologist Sir,
You must know the difference

dev

Hari Krishnan

unread,
Mar 26, 2012, 9:44:43 PM3/26/12
to mint...@googlegroups.com


2012/3/26 DEV RAJ <rde...@gmail.com>

கன்னடத்தில் ரோமத்தை அச்சொல் குறிக்காது;
தமிழின் குழல் ’கொடலு’ என்றாகும்
அங்கஜ, அலக, வேணி, ஜடெ, குந்தல, குருளு
போன்ற பெயர்கள் உள்ளன

கூத்லு என்பது பரவலான வழக்கு.

Banukumar Rajendran

unread,
Mar 26, 2012, 11:40:36 PM3/26/12
to mint...@googlegroups.com
On Mon, Mar 26, 2012 at 10:20 AM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
பஞ்ச மந்திரம்

நமோ அரஹந்தாணம் (அருகரை வணங்குகிறேன்)
நமோ சித்தாணம் (சித்தரை அல்லது அசரீரியை வணங்குகிறேன்)
நமோ ஆயிரியாணம் (ஆச்சாரியரை வணங்குகிறேன்)
நமோ உவச்சாயாணம் (உபாத்தியாயரை வணங்குகிறேன்)
நமோ லோயே சவ்வ சாகுணம் (சாதுக்களை அல்லது முனிவர்களை வணங்குகிறேன்)

णमो अरिहंताणं॥
णमो सिद्धाणं॥
णमो आयरियाणं॥
णमो उवज्झायाणं॥
णमो लोए सव्वसाहूणं॥

एसो पंच णमोकारो॥

ணமோகார மந்திரத்தில் ‘ஓம்’ கிடையாது


:-))

பஞ்ச மந்திரத்தின் சுருக்கமே ஓம்.
பிறகு ஓம் நமோ அரஹந்தாணம் என்று கூறலாகுமோ? ;-)


இரா.பானுகுமார்,
சென்னை



 
இன்றும் வழக்கத்தில் இருப்பதை ஒத்தி
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Mar 27, 2012, 8:32:14 AM3/27/12
to மின்தமிழ்


On Mar 26, 4:41 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 26, 12:20 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> Hari Aum & ari Om namOttu sittam are qute different<<<
>
> Ari and Ari hantA are quite different.

Ari has meanings, Lord, Master as well.

Hari Krishnan

unread,
Mar 27, 2012, 12:39:38 PM3/27/12
to mint...@googlegroups.com


2012/3/24 N. Kannan <navan...@gmail.com>

ஹி..ஹி..

அரிச்சுவடி என்று கல்வியின் தொடக்கம் அமைவது ஏன்? :-)

‘அ’ எனும் எழுத்தின் பொருள் என்ன என்று அகரமுதலி சொல்கிறது? :-)

க.>

என்ன கண்ணன்!  இப்பத்தான் அகராதியை போட்டோ எல்லாம் புடிச்சிட்டு வரேன்... இங்க வந்தா நீங்க அதே கேள்வியக் கேக்கறீங்க.  என்னடாது ஒருத்தருக்குமா அகராதி பாக்கணும்னு தோணலனு நெனச்சபடியே போட்டோ எடுத்தா, எனக்கு முன்னாடி நீங்க யோசிச்சிருக்கீங்க.

தமிழின் ‘ஆக்சுபோர்டு‘ அகராதி (:P) எனப்படும் ஓடிஎல்: 

+. One who scrapes up and appropriates whatever comes in his way, grasping person; கண்டதைத் தனக்கென்று சேகரிப்போன். Colloq.

*அரிச்சுவடி ari-c-cuvaṭi

n. < Hari

ஆனால் மின்வடிவத்தைக் காட்டிலும் அச்சு வடிவம் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் சொல்கிறது.  குறிப்பிட்ட பக்கத்தின் புகைப்படம் இணைப்பில்.  அகராதி புடிச்ச பயலுவளோட இம்ச தாங்கல, ல?

ஹரி, விஷ்ணு என்றெல்லாம் பிதற்றியிருக்கிறார்களே... அடுத்த ஆர்க்யூமென்ட்டை சொல்லட்டுமா?  அந்த அகராதியைத் தொகுத்தவர்கள் லே ஸ்காலர்கள்.  அவர்களுக்கு டாக்டர் பட்டம் இல்லை.  டிம்பக்டூவில் உள்ள தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் டகாலக்கடி டிகால்டி நேத்திக்குக் காத்தால எனக்கு போன் போட்டு சொன்னார்.  அது அரிச்சுவடிதானாம். :))
Arichchuvadi.JPG

Hari Krishnan

unread,
Mar 27, 2012, 12:50:31 PM3/27/12
to mint...@googlegroups.com


2012/3/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

012/3/26 DEV RAJ <rde...@gmail.com>
கன்னடத்தில் ரோமத்தை அச்சொல் குறிக்காது;
தமிழின் குழல் ’கொடலு’ என்றாகும்
அங்கஜ, அலக, வேணி, ஜடெ, குந்தல, குருளு
போன்ற பெயர்கள் உள்ளன

கூத்லு என்பது பரவலான வழக்கு.

ஒருதடவைக்கு இருதடவை விசாரிச்சுட்டேன்.  மசிரு என்ற ஆட்சி கன்னடத்தில் இல்லை.  மொசரு என்றால் தயிர்.  மசிரு என்று ரோமத்தைச் சொல்லிக் கேள்விப்பட்டதே இல்லை என்று சத்தியம் பண்ணுகிறார்கள்.  goodhalu or goodhlu is the word for hair in Kannada.  மசிரு என்று ஒரு சொல்லைக் கன்னடத்தில் உற்பத்தி செய்த பேரறிஞர் யாரென்று தெரிந்துகொள்ளலாமா?  (தெரிஞ்சாத்தானே சொல்றதுக்கு... ஏதானும் டாக்டர் சிவராம காரந்த், அநந்தமூர்த்தின்னு பேர உதிர்த்துட்டு போனா போச்சு... யாரானும் போயி வெரிஃபையா பண்ணப் போறாங்க?  சொல்வதாகத் தெரியவருகிறது என்று பேசிக்கொள்ளவதாக கேள்விப்பட்டதாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள் என்று தெரியவருகிறதாக.....:D)

DEV RAJ

unread,
Mar 27, 2012, 1:32:05 PM3/27/12
to மின்தமிழ்
On Mar 27, 5:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> Ari has meanings, Lord, Master as well.<<<


இருந்தால் எடுத்துக்காட்டலாம்.

’அரி’- எதிரி, பெரும்பான்மை வழக்கு;
அரிமர்தந பாண்டியர் இருந்துள்ளார்

மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் (710 -765 )
ரணதீரனுடைய மகனான இவர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து
அதன் தென்மேற்குப் பகுதியான மழகொங்கைக் கைப்பற்றியவர்;
அரிகேசரி நல்லூர், அரிகேச நல்லூர் எனத் திரிந்தது, வீரவநல்லூருக்கு
அருகில்.
(நெல்லை மாவட்டம் )

சின்னமனூரின் மற்றொரு பெயரும் அரிகேசரி நல்லூர்தான், (தேனி மாவட்டம்)

arijana (p. 027) [ ari-gana ] m. coll. enemies; -tâ, f. hostility.

arindama (p. 027) [ arim-dama ] a. foe-taming, victori ous.

arimardana (p. 027) [ ari-mardana ] a. enemy-crushing.

arisudana (p. 027) [ ari-sûdana ] m. foe-destroyer.

arihan (p. 027) [ ari-han ] a. foe-slaying.

arikarshana, m. harasser of foes.

अरि ari : (page 216)

अरि ariअरि a. [ऋ-इन्] Moving, going, reaching; obtaining, aspiring,
devoted to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf. Uṇ.4.138); (used
in the Veda like an adjective in the sense of 'ungenerous',
'malicious', 'not worshipping or devoted', 'hostile');

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=apte&query=%E0%A4%85%E0%A4%B0%E0%A4%BF&matchtype=exact&display=utf8

தேவ்

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 27, 2012, 1:41:41 PM3/27/12
to mint...@googlegroups.com
On 03/27/2012 11:02 PM, DEV RAJ wrote:
> On Mar 27, 5:32 am, "N. Ganesan"<naa.gane...@gmail.com> wrote:
>>>> >>> Ari has meanings, Lord, Master as well.<<<
> இருந்தால் எடுத்துக்காட்டலாம்.

வேணும்னா ஒரு பொருள். வேண்டாம்னா வேற பொருள்.

N. Ganesan

unread,
Mar 27, 2012, 1:59:51 PM3/27/12
to மின்தமிழ்

On Mar 27, 10:32 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 27, 5:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> >>> Ari has meanings, Lord, Master as well.<<<
>
> இருந்தால் எடுத்துக்காட்டலாம்.
>
> ’அரி’- எதிரி, பெரும்பான்மை வழக்கு;
> அரிமர்தந பாண்டியர் இருந்துள்ளார்
>

ari - Lord, Master. See Apte.

Also, arivari & ariccuvaTi can be pure Tamil also.

> மாறவர்மன் அரிகேசரி பராங்குசன் (710 -765 )
> ரணதீரனுடைய மகனான இவர் கொங்கு நாட்டின் மீது படையெடுத்து
> அதன் தென்மேற்குப் பகுதியான மழகொங்கைக் கைப்பற்றியவர்;
> அரிகேசரி நல்லூர், அரிகேச நல்லூர் எனத் திரிந்தது, வீரவநல்லூருக்கு
> அருகில்.
> (நெல்லை மாவட்டம் )
>
> சின்னமனூரின் மற்றொரு பெயரும் அரிகேசரி நல்லூர்தான், (தேனி மாவட்டம்)
>
> arijana (p. 027) [ ari-gana ] m. coll. enemies; -tâ, f. hostility.
>
> arindama (p. 027) [ arim-dama ] a. foe-taming, victori ous.
>
> arimardana (p. 027) [ ari-mardana ] a. enemy-crushing.
>
> arisudana (p. 027) [ ari-sûdana ] m. foe-destroyer.
>
> arihan (p. 027) [ ari-han ] a. foe-slaying.
>
> arikarshana, m. harasser of foes.
>
> अरि ari : (page 216)
>
> अरि ariअरि a. [ऋ-इन्] Moving, going, reaching; obtaining, aspiring,
> devoted to, zealous (Ved.).-रिः 1 An enemy, foe (cf. Uṇ.4.138); (used
> in the Veda like an adjective in the sense of 'ungenerous',
> 'malicious', 'not worshipping or devoted', 'hostile');
>

> http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=ap...

DEV RAJ

unread,
Mar 27, 2012, 11:53:56 PM3/27/12
to மின்தமிழ்
On Mar 27, 10:59 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ari - Lord, Master. See Apte.
> Also, arivari & ariccuvaTi can be pure Tamil also.


முன்பு எழுதியது -

On Mar 26, 1:23 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> அரி - வரியைக் குறிக்கும் என்பதும் ஏற்புடையதே;
> அரிச்சுவடி வரிவடிவத்தையும்,
> எண்சுவடி எண்களையும் போதிப்பதாகக்
> கொள்ளலாம்; நெடுஞ்சுவடி இல்லை


அரி பற்றி எழுதிவரும்போது
அரிச்சுவடிக்குத் தாவுவது
ஒரு நழுவல்.

இந்திய சமயத்துறையில் *வடமொழிப்
பயன்பாட்டில்* பெரியவர்களை,
ஆண்டவனை ‘அரி’
என்று சொல்லும் வழக்கமில்லை.
ப்ரபு என்றோ, பகவான் என்றோ சொல்வர்.

உலகப்புகழ் இண்டாலஜிஸ்ட்
கணேசருக்குத் தெரியாமலில்லை;
வழக்கம்போல் விதண்டாவாதம்

தேவ்

DEV RAJ

unread,
Mar 28, 2012, 1:49:49 AM3/28/12
to மின்தமிழ்
On Mar 27, 10:59 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ari - Lord, Master. See Apte.

அரி - சக்கரம் , திகிரி எனும் பொருளையும் தரும் -
க³தா³ அரி* ஸரோஜ ஶங்கை²​:
அரி* நலிந ஶங்க²பாணிர்முகுந்த³:

கோசம் காட்டும் பொருள் என்று
அதை இங்கு பேசமுடியாது.

ஆதன் - உயிர், அறிவிலி இரண்டையும் குறிப்பது.
தேம்பாவணி ஆதாமை ஆதன் என்கிறது;
மனுக்குலத்தின் ஆதி பிதாவை
அறிவிலி என்று சொல்லலாகுமா ?

தேம்பாவணி பற்றிப் பேசும்போது,
கணேசர் ஐயா ‘ஆதன் அறிவிலியைச் சொல்கிறது;
See Kamba Ramayanam’ என்று சொல்வாரா ?


தேவ்

Hari Krishnan

unread,
Mar 28, 2012, 6:07:01 AM3/28/12
to mint...@googlegroups.com


2012/3/27 Hari Krishnan <hari.har...@gmail.com>

 மொசரு என்றால் தயிர்.

தவறு நிகழ்ந்துவிட்டது.  மொசரு என்றால் மோர்; மஜ்ஜிகே என்றால் தயிர்.  (பெண்ணே, ஹாலு இரண்டும் நேரடித் தமிழ். beண்ணே=வெண்ணெய்; ஹாலு=பால்).

மஜ்ஜிகேவுக்கு ரைம் ஞாபகத்துக்கு வருகிறது.  அதுவும் இந்த ஊரில் இருந்துகொண்டு சொல்லாமல் இருக்க முடியாது.  அனைத்து இல்லங்களிலும், ஹோட்டல்களிலும் பிரபலமான ஒன்று.  சஜ்ஜிகே=ரவா கேசரி.  சௌசௌ பாத் என்றொன்று உண்டு.  ஒரே தட்டில் ஒரு கிண்ணம் ரவா கேசரி; ஒரு கிண்ணம் ரவா உப்புமா (உப்பிட்).  இதுதான் சௌசௌ பாத்.  (பெங்களூர் கத்தரிக்காய்க்கும்--இந்த ஊரில் சீமே கத்ரிகா--இந்த சௌசௌ பாத்துக்கும் என்ன தொடர்பு என்று குடிவந்த முதல் வருடம் முழுக்க முழித்திருக்கிறேன்.  பிறகு நண்பர் எஸ்கே (சைபர்பிரம்மா) சொல்லித்தான் இந்த உண்மை தெரிய வந்தது.:)) )

தவறுக்கு மன்னிக்கவும்.

Dhivakar

unread,
Mar 28, 2012, 7:07:56 AM3/28/12
to mint...@googlegroups.com
மஜ்ஜிக என்றால் தெலுங்கில் மோர்.

தயிர் மோராகலாம், ஆனால் மோர் தயிராகுமா.. கன்னடமும் தெலுங்கும் கைகோர்த்தால் எதுவும் ஆகலாம்!!

2012/3/28 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Mar 28, 2012, 7:19:51 PM3/28/12
to mint...@googlegroups.com
அன்பின் ஹரிகி

மிக்க நன்றி!

’அ’ எனும் அட்சரம் விஷ்ணு என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய
நிலையில் தமிழகம் உள்ளது. என்ன செய்ய?

தாங்கள் அளித்ததோடு இன்னொரு சான்று. 1905-ல் யாழ்ப்பாணத்து மானிப்பாய்
(?) முத்துதம்பிப் பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்ட அபிதான கோசம்
இணைப்பில்!

இனியாவது உண்மை உணர்ந்தால் சரி. வாதத்திற்கு மருந்துண்டு :-)

நா.கண்ணன்

2012/3/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> தமிழின் ‘ஆக்சுபோர்டு‘ அகராதி (:P) எனப்படும் ஓடிஎல்:

> *அரிச்சுவடி ari-c-cuvaṭi

abithanakosam.jpg

Hari Krishnan

unread,
Mar 28, 2012, 9:45:45 PM3/28/12
to mint...@googlegroups.com


2012/3/29 N. Kannan <navan...@gmail.com>

’அ’ எனும் அட்சரம் விஷ்ணு என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய
நிலையில் தமிழகம் உள்ளது. என்ன செய்ய?

அக்னிப் பிரவேச காட்சியில் ராமனுடைய கட்சி நியாயம் என்ன என்பதைச் சொல்வதற்கும், தர்மபுத்திரன் தரப்பின் நியாயம் என்ன என்பதை விளக்குவதற்கும்கூட ஆள் வேண்டியிருக்கிறதல்லவா?  நன்கு கற்ற, கசடறக் கற்ற அறிஞர்கள் காணாமல் போய்விட்டார்கள்.  ராமனையும் தர்மனையும்கூட ஒருவர் தர்மவான்கள், நியாயவான்கள் என்று பேசும் அவசியம் எழுந்திருக்கிறது.

ஒன்றே ஒன்றுதான் கேட்பேன்.  (நான் கற்பின் கனலியில் எழுப்பிய கேள்விதான் என்றாலும், அதே கேள்வியை) சீதையிடம் கேட்டால், இன்று நாம் பேசுகிற பேச்சுகளில் ஒன்றே ஒன்றையாவது ஒப்புக்கொள்வாளா? சபிப்பாள்.  அந்தக் கட்டுரையை எழுதிய அரை மணிநேரத்தில் நான் நண்பனோடு நங்கநல்லூர் ஆஞ்சநேயர் ஆலயத்து ராமன் சன்னிதியின் நின்று கொண்டிருந்தேன்.  மானசீகமாக ஆயிரம் முறையும் அதற்கு மேலும் ‘அம்மா என்னை மன்னித்துவிடு’ என்றுதான் வேண்டிக்கொண்டேன்.  

சிரிக்கப் போகிறவர்கள் சிரிக்கட்டும்.  சத்தியத்தைப் பேச நாணமோ, அவமானமோ ஒரு பொருட்டே இல்லை.

நன்றி கண்ணன்.

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2012, 10:59:20 PM3/28/12
to mint...@googlegroups.com
//’அ’ எனும் அட்சரம் விஷ்ணு என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய
நிலையில் தமிழகம் உள்ளது. என்ன செய்ய?//

மொழி குமுகப் பயன்பாட்டுக்கு உருவான ஒரு கருவி.  ஒரு சில மொழிகள் தனித்தன்மையும் உயர்வும் பெறும்போது அவை இறை மறைப் பண்புகளைப் பெறுகின்றன.  பண்டைய எகிப்த்தில் மொழி மூன்று நிலைகளில் பயன்பட்டுள்ளது
1. இறைமறை வளங்களை வெளிப்படுத்த
2. இலக்கிய வரபு வளங்களை உருவாக்க பரிவர்த்தனை செய்ய
3. பொதுப் பயனாளர்கள் அன்றாட வாழ்க்கையில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள
இந்தியாவில் வடமொழியான சமஸ்கிரிதமும் (அதன் கிளைமொழிகளும்) தென் மொழியான தமிழும் (அதன் கிளை மொழிகளும்) இந்த மூன்று நிலைகளிலும் ஒன்றுக்கொன்று வேறுபடுமின்றன.  அது போன்றே வடபுலத்தில் வாழ்ந்த இந்துக்களும் தென்புலத்தில் வாழ்ந்த பழங்குடியினரும் குமுகப் பிரிவில் இறை வழிபாடுகளில் வேறுபடுகின்றனர்.  இரண்டு மொழிக்குடும்பங்களும் வெவ்வேறு இலக்கண அமைப்பைக் கொண்டுள்ளன
தமிழ் சமஸ்கிரித மொழிகளில் எழுத்துக்கு குறிப்பாக உயிர் எழுத்துக்களுக்கு  இறைவனை இணைத்து சில அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
எனவே அறிஞர்கள் ஒரு மொழியில் உள்ளஒரு  உயிர் எழுத்துக்கு ஒரு இறைவனை இணைத்துக்காட்டுவது பல பிரிவுகள் உள்ள இந்து சமயத்தில் ஒரு பிரிவின் இறைவனை மட்டும் குறிப்பதாக ஒரு சில ஆதாரங்களைக் காட்டி நிறுவுதல் எளிதன்று.  காட்டப்படும் மேற்கோள் வெளியிட்ட அறிஞரின் சமயப் பின்புலத்தை ஒட்டி அமைவது இயல்பு
எனவே தமிழில் அ என்பது ஹரி அல்லது விஷ்ணு என்று கூறுவது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து சொல்லப்படும் கருத்து. இதை சைவர்கள் ஏற்றுக்கொள்ளாததோடு அ என்பது சிவனைக் குறிக்கும் என்று வாதிட வழி வகுக்கும்.  அதை எதிர்கொள்ள ஆவணங்கள் தேவை
அரிச்சுவடி என்பது தமிழுக்கும் சமஸ்கிரிதத்துக்கும் பொதுவான ஒரு கல்விச் சாதனம்
சம்ஸ்கிரிதத்திலும் எழுத்துக்கள் உள்ளன. அ என்ற எழுத்தும் உண்டு
சமஸ்கிரித அ என்னும் உயிர் எழுத்து ஹரியைக் குறிக்கிறது என்று சொல்ல முடியுமா?
நாகராசன்


2012/3/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 28, 2012, 11:05:27 PM3/28/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 04:49 AM, N. Kannan wrote:
> ’அ’ எனும் அட்சரம் விஷ்ணு என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய
> நிலையில் தமிழகம் உள்ளது. என்ன செய்ய?
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம்
உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.

http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=10704&padhi=704&startLimit=22&limitPerPage=1&sortBy=&ampsortOrder=DESC

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2012, 11:22:20 PM3/28/12
to mint...@googlegroups.com
Inline image 1
Nagarajan

2012/3/29 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ama...@amachu.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
tamil1.jpg

Hari Krishnan

unread,
Mar 28, 2012, 11:30:29 PM3/28/12
to mint...@googlegroups.com
2012/3/29 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ama...@amachu.net>
ஆரும் அறியார் அகாரம் அவன்என்று

பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.

அரன் பெரியவனா அரி பெரியவனா என்று வாதிடுபவர்கள் அறிவில்லாதவர்கள் என்று கம்பன் சொல்கிறான்: 


"அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்" என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பர கதி சென்று அடைவு அரிய பரிசேபோல், புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுர நதியின் அயலது, வான் தோய் குடுமிச் சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி, அப்பால்

(கிஷ்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்)

அரனும் அரியும் வேறுவேறு என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.  கம்பன் வழியைப் பின்பற்றுபவர்களக்கு இறைவன் ஒருவனே.

ஒருநாமம் ஓருருவம்
    ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம்
    தெள்ளேணங் கொட்டாமோ.
--திருவாசகம்.

எந்தப் பெயரும், உருவமும் இல்லாத ஒருவனுக்கு ஆயிரம் பெயர்களும் வடிவங்களும் உண்டாக்கிப் பாடுகிறோம்.  இதில் அரியென்ன அதிகன் அல்லது அரன் என்ன அதிகன் (என்வரையில்--

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;

கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;

மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;

ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

--பாரதி.

உணர்ந்தும், உணராதும் பலவகையாகப் பரவிடும் பரம்பொருள்.

N. Kannan

unread,
Mar 29, 2012, 5:09:54 AM3/29/12
to mint...@googlegroups.com
அன்பின் ஆமாச்சு:

நான் சைவ-வைணவ உயர்வை நோக்காகக் கொண்டு அதைச் சொல்ல வரவில்லை. பன்னெடும்
காலமாக இருக்கும் வழக்கு என்று உண்டு. அதை சமிஸ்கிருத இலக்கணத்தில் ரூடி
என்பார்கள். எனவே வைதீக மாக்கத்தில் உள்ளதைச் சொன்னேன். சைவ சித்தாந்த
நெறியில் எதுவெல்லாம் விஷ்ணுவிற்குச் சொல்லப்படுகிறதோ அது அனைத்தும்
சிவனை முதன்மையாக வைத்துச் சொல்லப்படும். சொல்ல வரும் விஷயம் ஒன்று
என்பதால் நாம் பெயர்ச்சொல்லில் மாட்டிக்கொண்டு முழிக்கக் கூடாது :-)

நா.கண்ணன்

பிகு: அபிதான கோசம் ஆசிரியர் சைவ சித்தாந்த வழியில் வந்தவர் என்றே
எண்ணுகிறேன். அவர் ‘வழக்கில்’ உள்ளதைப் பதிவு செய்துள்ளார்.

2012/3/29 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ama...@amachu.net>:

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 29, 2012, 6:48:23 AM3/29/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 02:39 PM, N. Kannan wrote:
> சைவ சித்தாந்த
> நெறியில் எதுவெல்லாம் விஷ்ணுவிற்குச் சொல்லப்படுகிறதோ அது அனைத்தும்
> சிவனை முதன்மையாக வைத்துச் சொல்லப்படும்.

நன்குணர்நதுள்ளேன்.

அப்படியும் இருக்குன்னு சான்றளித்தேன்.

என் இன்னொரு நாமம் ஹரிஹரபுத்ரன் ;-)

--

ஆமாச்சு

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 29, 2012, 6:59:02 AM3/29/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 09:00 AM, Hari Krishnan wrote:
> அரன் பெரியவனா அரி பெரியவனா என்று வாதிடுபவர்கள்
வாதமெங்கே?

அகாரம் ஈசனுமாம் என்று தக்கதோர் சான்றளித்தேன் ;-)

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Mar 29, 2012, 7:53:20 AM3/29/12
to மின்தமிழ்

On Mar 28, 8:05 pm, "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ama...@amachu.net> wrote:
> On 03/29/2012 04:49 AM, N. Kannan wrote:> ’அ’ எனும் அட்சரம் விஷ்ணு என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த வேண்டிய
> > நிலையில் தமிழகம் உள்ளது. என்ன செய்ய?
>
> ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
> பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
> தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
> ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.
>
> சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம்
> உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.
>

> http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=10&Song_idField=...

த்யலாஜிக்கல் விளக்கங்கள் சைவத்தை முதலில் காட்டுகின்றன.
உ-ம்: பாணினி சரிதம். பாணினிக்கு முன்னிருந்த சிவசூத்திரங்கள் தான்
சம்ஸ்க்ருத அட்சரமாலையை அளிக்கின்றன. சிவ சூத்திரங்களை
வைத்துக்கொண்டு பாணினி முதலில் சம்கிருதத்துக்கு இலக்கணம்
எழுதினார். வடமொழிக் கதைகள்.

நடராஜரின் டமருகத்தில் ஒருபுறம் பாணினிக்கு ஓசை அருளிய
சிவன், தமிழ் ஓசைகளை உடுக்கையின் மறுபுறம் எழுப்பி
அகத்தியருக்கு யருளினாராம். தமிழ்க் கதைகள்.


' விடையுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள்
வடமொழிக்குரைத் தாங்கு இயன்மலயமா முனிக்குத்
திடமுறுத்தியம் மொழிக்கு எதிராக்கிய தென்சொல்
மடமகட்கு அரங்கென்பது வழுதிநாடன்றோ? '
-
திருவிளையாடற்புராணம். (பரஞ்சோதி முனிவர்)

' வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனின்
கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்? '
-
காஞ்சிப்புராணம் (சிவஞான முனிவர்)


நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 29, 2012, 8:53:49 AM3/29/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 26, 9:44 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இதோ, சமணமும் தமிழும் பொத்தகத்திலிருந்து...!
>

நன்றி, பானு. பள்ளி ஆசிரியராய் விளங்கிய மயிலை சீனி வேங்கடசாமி நாயகர்
தமிழில் சமணம், பௌத்தம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளைத் தொடங்கிவைத்த
முனைவர் ஆவார். பின்னர் கோவைகிழார் போன்றோர் ஈடுபட்டனர்.
நிற்க,

அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
அரிகன் = அருக தேவர். இதேபோல், கோவையில், அரிமேடு
என்ற பகுதியை ஆராயவேண்டும் என்றார். முசிரி என்ற கேரள
துறைமுகப் பட்டினத்துடன் பாலைக்காட்டுக் கணவாய் வழியாய்
உள்ள உறவுகள் வெளிப்படும். அரிமேடு, அரிகமேடு போல
சமணர் வாழ்ந்த பகுதியாகலாம் என்றார். அதன் அருகே
சிரமணம்பட்டி உள்ளது, இன்று சரவணம்பட்டி ஆகிவிட்டது பாருங்கள் என்றார்.

கடாரத் தமிழறிஞர் ஜேபி அவர்கள் சமணர்களின் நமோகார மந்திரம்
அரி, சித்தரி, நானா, மோனா, ... என தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதை
விளக்கியுள்ளார்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/44867
http://www.treasurehouseofagathiyar.net/07700/7794.htm

கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல். இது சமணர்களின் வடமொழி
கணித நூல்களில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில் அரிய புஸ்தகம். விஞ்ஞானத்தை சிரமண சமயத்தவர்
தமிழருக்கு திண்ணைப் பல்ளிகளில் போதிக்க மேற்கொண்ட முயற்சி.
த்ராவிட பாஷைகளின் அரிய தொல்லோசை ஆய்தம்,
சார்பு என்பதற்கு ப்ராகிருதச் சொல்லான ஆயிர்தம் என்பதை ஆயிதம்/ஆய்தம்
என்றாக்கியுள்ளார் தொல்காப்பியர் (ஒப்பு: சமண நமோகார
மந்திரத்தில் ஆயிரியர் < ஆசிரியர்).

கப்பலோட்டிய தமிழர் வ உ. சி தமிழில் கிரந்தம் தவிர்க்கவேண்டும் என்ற
கருத்துடையவர். அதை மறுத்து பிள்ளையவர்கள் பெயரைக் குறிப்பிடாமல்
பாரதியார் எழுதினார். அதில் மகாகவி ‘தொல்காப்பியர் கட்டின அரிச்சுவடி’
என்று குறிப்பிடுகிறார். தமிழில் டையாக்ரிடிகல் மார்க்ஸ் வேண்டும் என்று
முதலில் எழுதியவர் பாரதியாரே.

ஊருக்குப் பத்து பிள்ளைகளுக்கு அரிச்சுவடி சொல்லித்தர திண்ணைப்
பள்ளிக்கூடங்கள் இருந்தன. இவைஎல்லாம் தயாரித்த மாணவர் தொகை
சொற்பமே. சேசாத்திரிக்கு லிட்டரஸி பற்றி திண்ணைப் பள்ளி நிலைமை
பற்றி எழுதணும். இதை ஒரு தொழிலாக செய்வதுபற்றி கிறித்துவ
மிஷநரிகளும், காலனிய அதிகாரிகளும் எழுதியுள்ளனர்.

உவேசா அவர்களின் பாட்டனார் இப்படி ஒரு திண்ணைப்பள்ளி
ஆரம்பித்தவர் என்று உவேசா, என் சரித்திரம் கூறுகிறது:

In the autobiography if U. V. Saaminathaiyar, a discoverer of
Classical Tamil texts, he talks of his
grandfather, and his starting of a tiNNaip paLLikkuuTam 'pial school'.
UVS says he learnt
ariccuvaTi "alphabet" from his grandfather. In these paragraphs, there
are many Sanskrit
words, but only ariccuvaTi (not Hari-cuvaTi).

” "என் பாட்டனார் காலத்தில் எங்கள் குடும்பத்தில் கடன் ஏற்பட்டமையால்
அவர் தம்முடைய நிலத்தைப் போக்கியம் வைத்துப் பணம் வாங்கிப் பழைய கடனை
அடைத்தார். நிலத்தை வைத்துக் கொண்டு பாதுகாத்து அதில் வரும் வருவாயினால்
சுகமாக வாழ்ந்து வரும் நிலையிலிருந்த அவருக்கு அந்நிலத்தைப் போக்கியம்
வைப்பதால் ஜீவனத்துக்குக் கஷ்டமுண்டாகுமென்று தெரியும். ஆனாலும் கடனை
வைத்துக் கொண்டு உண்ணும் உணவு அவர் உடம்பில் ஒட்டவில்லை. ‘கடனில்லாச்
சோறு கால் வயிறு போதும்’ என்பது பழமொழி. ‘ஏதாவது வேலை செய்து
சம்பாதிக்கலாம்; கடன் நிர்ப்பந்தம் மட்டும் கூடாது’ என்று எண்ணித்
துணிந்து போக்கியத்துக்கு வைத்து விட்டார்.

அவருக்குத் தமிழிலும் ஸம்ஸ்கிருதத்திலும், கணக்கிலும் நல்ல பழக்கம்
இருந்து வந்தது. ஆகையால், ‘ஜீவனத்துக்கு என்ன செய்வோம்!’ என்று ஏங்காமல்
ஒரு பள்ளிக்கூடம் வைத்துப் பல பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுக்க
ஆரம்பித்தார். அவரிடம் பலர் படித்தார்கள். அந்தப் பிள்ளைகளின் மூலமாகக்
கிடைக்கும் வரும்படியைக் கொண்டு அவர் செட்டாகக் குடித்தனம் செய்து
வந்தார். அவருக்கு அம்மணியம்மாளென்ற ஒரு பெண்ணும், வேங்கட சுப்பையர்,
ஸ்ரீ நிவாஸையர் என்ற இரண்டு பிள்ளைகளும் முறையே பிறந்தனர். வேங்கட
சுப்பையரே என்னுடைய தந்தையார்.

என் பாட்டனாரை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. எனக்கு அரிச்சுவடி
சொல்லிக் கொடுத்தவர் அவரே. எவ்வளவோ தெய்வ ஸ்தோத்திரங்களை வாய்ப் பாடமாகச்
சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவை இப்போது மறந்து போய்விட்டன. ஆனால் அவர்
கொடுத்த பலமான அடிகளை மாத்திரம் நான் மறக்க வில்லை." “
(உவேசா, என் சரித்திரம்).

பிற பின்,
நா. கணேசன்

> சித்தர் வணக்கம்
>
>  (சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி - இந்துமதத்தில்
>
> சமணக் கொள்கைகள் – பக்கம் 97, 98)
>
>  “பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத்
>
> தொடங்குபோது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. “ஹரி
>
> நமோத்து சிந்தம்” என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு
>
> எழுத்துக் கற்பிப்பர். இக்காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம்
>
> கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம்
>
> இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சித்தம் என்பதன் திரிபு.
>
> சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர்.
>
> எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான்
>
> மற்றவர்களும் கைக்கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம்
>
> செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே,
>
> “சித்தம் நம” என்று கன்னட நாட்டினரும், “ஓம் நமஸ்ஸிவாய சித்தம் நம”
>
> என்று தெலுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து
>
> பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.
>
> இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர்
>
> வழங்குவது நினைவுக் கூறத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர்
>
> வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத்
>
> தம் பள்ளியில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும்
>
> நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைகளுக்கும் பள்ளிக்கூடம்
>
> என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக் கூடங்களில், சிறுவர்களுக்கு
>
> எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும்
> வழக்கத்தைக்
>
> கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக்காலத்திலும் மற்றவர்களாலும்
>
> வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும்
>
> சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது
>
> வெளிப்படை.”

Banukumar Rajendran

unread,
Mar 29, 2012, 11:00:26 AM3/29/12
to மின்தமிழ்


---------- Forwarded message ----------
From: Banukumar Rajendran <banuk...@gmail.com>
Date: Thu, Mar 29, 2012 at 8:13 PM
Subject: Re: [tiruvalluvar] Re: Fw: ஆயுத எழுத்து
To: tiruva...@googlegroups.com




On Thu, Mar 29, 2012 at 6:23 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mar 26, 9:44 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> இதோ, சமணமும் தமிழும் பொத்தகத்திலிருந்து...!
>

நன்றி, பானு. பள்ளி ஆசிரியராய் விளங்கிய மயிலை சீனி வேங்கடசாமி நாயகர்
தமிழில் சமணம், பௌத்தம் பற்றிய ஆழ்ந்த ஆய்வுகளைத் தொடங்கிவைத்த
முனைவர் ஆவார். பின்னர் கோவைகிழார் போன்றோர் ஈடுபட்டனர்.
நிற்க,

அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
அரிகன் = அருக தேவர். இதேபோல், கோவையில், அரிமேடு
என்ற பகுதியை ஆராயவேண்டும் என்றார். முசிரி என்ற கேரள
துறைமுகப் பட்டினத்துடன் பாலைக்காட்டுக் கணவாய் வழியாய்
உள்ள உறவுகள் வெளிப்படும். அரிமேடு, அரிகமேடு போல
சமணர் வாழ்ந்த பகுதியாகலாம் என்றார். அதன் அருகே
சிரமணம்பட்டி உள்ளது, இன்று சரவணம்பட்டி ஆகிவிட்டது பாருங்கள் என்றார்.

கடாரத் தமிழறிஞர் ஜேபி அவர்கள் சமணர்களின் நமோகார மந்திரம்
அரி, சித்தரி, நானா, மோனா, ... என தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டதை
விளக்கியுள்ளார்:
http://groups.yahoo.com/group/agathiyar/message/44867
http://www.treasurehouseofagathiyar.net/07700/7794.htm

கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.

திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!

“முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - இலக்கம் - கடவுள் வாழ்த்து

“வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - நெல்லிலக்கம் - கடவுள் வாழ்த்து

“முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
அத்தனேயாதி யறவரசே சித்தனே
எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
இந்நூலை யானுணர்க வென்று” - எண்சுவடி - கடவுள் வாழ்த்து

“பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - பெருகுழி - கடவுள் வாழ்த்து

“அருகனை அமலனை அசலனை அடிதொழச்
சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - சிறுகுழி - கடவுள் வாழ்த்து

ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!


மற்ற நூல்கள் கொள்வார் இல்லாமையால் மறைந்தொழிந்தது!
--
You received this message because you are subscribed to the Google Groups "திருவள்ளுவர் சங்கத்தமிழ்" group.
To post to this group, send email to tiruva...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tiruvalluvar...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tiruvalluvar?hl=en.



"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 29, 2012, 11:03:34 AM3/29/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 06:23 PM, N. Ganesan wrote:
> அரிகன் = அருக தேவர்.
அருகன் --> அரிகனென்று ஏன் திரியனும்?


Hari Krishnan

unread,
Mar 29, 2012, 11:06:17 AM3/29/12
to mint...@googlegroups.com


2012/3/29 "ம. ஸ்ரீ ராமதாஸ்" <ama...@amachu.net>

அருகன் --> அரிகனென்று ஏன் திரியனும்?

There is very large retail cloth shop in Chennai by name Arihant.  I now understand the name.  ஆனாலும், அருகன் என்றால், அருகிலே இருப்பவன் என்ற பொருளைத் தருவதுபோன்ற சாயையை ஏற்படுத்துகிறது.  அர்ஹன் அருகன் என்றானதா?  பானுகுமார்தான் சொல்லவேண்டும்.  

"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 29, 2012, 11:15:45 AM3/29/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 06:23 PM, N. Ganesan wrote:
> அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
> கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
> யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
> அரிகன் = அருக தேவர்.
மாத்தணும்னா ஆராய்ச்சியின் பேரில் கண்டதுன்னு சொல்லிட்டா போச்சு.

பி. எச். டி முடிச்சவங்க சொல்லிட்டா, அந்தகாலத்துல இருந்தவங்க யாரும் பி. எச். டி
முடிச்சிருக்காததுனால, முடிச்சவங்க சொன்னதை வச்சு, முந்தையோர் சொன்னதெல்லாம் மடமைன்னு
ஒதுக்கிடலாம் ;-)

ராமர் எங்கே இஞ்சியனியங் படிச்சாரா? நாகர்கோவில்ன்னு பெயரிருப்பதை வச்சு சரடு விடலாம். ;-)

எல்லாருமே அரிச்சுவடின்னு பயன்படுத்தியிருந்தாதான் என்ன?

எல்லாரும் கிட்டத்தட்ட இன்னிக்கு கி.பி, கி.மு தான் பயன்படுத்தறோம். ஒன்றில் தொடங்கி
பல்வற்றுக்கும் தொடர்ந்து எங்கும் வழக்கமாய் நிலவும் இத்தகைய பலவற்றை காணலாம்.


"ம. ஸ்ரீ ராமதாஸ்"

unread,
Mar 29, 2012, 11:15:55 AM3/29/12
to mint...@googlegroups.com
On 03/29/2012 06:23 PM, N. Ganesan wrote:
> அரிச்சுவடி - சமணர் வழக்கு என்பது பற்றி புலவர் செ. இராசு ஐயா, ஈரோடு
> கருத்து. புத்ச்சேரியில் அரிகமேடு என்பது சமணர் வாழ்ந்த பகுதி,
> யவனர்களுடனும், பிற இந்தியாவின் பகுதிகளுடனும் தொடர்புடையது.
> அரிகன் = அருக தேவர்.
மாத்தணும்னா ஆராய்ச்சியின் பேரில் கண்டதுன்னு சொல்லிட்டா போச்சு.

பி. எச். டி முடிச்சவங்க சொல்லிட்டா, அந்தகாலத்துல இருந்தவங்க யாரும் பி. எச். டி
முடிச்சிருக்காததுனால, முடிச்சவங்க சொன்னதை வச்சு, முந்தையோர் சொன்னதெல்லாம் மடமைன்னு
ஒதுக்கிடலாம் ;-)

ராமர் எங்கே இஞ்சியனியங் படிச்சாரா? நாகர்கோவில்ன்னு பெயரிருப்பதை வச்சு சரடு விடலாம். ;-)

எல்லாருமே அரிச்சுவடின்னு பயன்படுத்தியிருந்தாதான் என்ன?

எல்லாரும் கிட்டத்தட்ட இன்னிக்கு கி.பி, கி.மு தான் பயன்படுத்தறோம். ஒன்றில் தொடங்கி

பலவற்றுக்கும் தொடர்ந்து எங்கும் வழக்கமாய் நிலவும் இத்தகைய பலவற்றை காணலாம்.


Nagarajan Vadivel

unread,
Mar 29, 2012, 11:29:48 AM3/29/12
to mint...@googlegroups.com
From Buddhist perspective and Adi Dravida view point
Inline image 1
Inline image 2
Nagarajan
2012/3/29 Banukumar Rajendran <banuk...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

ayothy2.jpg
ayothy1.jpg

Banukumar Rajendran

unread,
Mar 30, 2012, 1:38:47 AM3/30/12
to மின்தமிழ்

கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.

திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!

“முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - இலக்கம் - கடவுள் வாழ்த்து

“வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - நெல்லிலக்கம் - கடவுள் வாழ்த்து

“முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
அத்தனேயாதி யறவரசே சித்தனே
எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
இந்நூலை யானுணர்க வென்று” - எண்சுவடி - கடவுள் வாழ்த்து

“பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - பெருகுழி - கடவுள் வாழ்த்து

“அருகனை அமலனை அசலனை அடிதொழச்
சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - சிறுகுழி - கடவுள் வாழ்த்து

ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!




ஒளவையாரின் மற்றொரு நூலை மறந்துவிட்டேன்.

 'அஞ்சு வயதில் ஆதியை ஓது ஆதியை ஓத அறிவுண்டாமே' - கல்வி ஒழுக்கம் - கடவுள் வாழ்த்து!

N. Ganesan

unread,
Mar 30, 2012, 5:52:29 AM3/30/12
to மின்தமிழ், tiruva...@googlegroups.com
On Mar 29, 10:38 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:

> >> கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
> >> கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.
>
> > திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!
>
> > “முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
> > அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - *இலக்கம்* - கடவுள் வாழ்த்து

>
> > “வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
> > நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - *நெல்லிலக்கம்* - கடவுள் வாழ்த்து

>
> > “முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
> > அத்தனேயாதி யறவரசே சித்தனே
> > எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
> > இந்நூலை யானுணர்க வென்று” - *எண்சுவடி - *கடவுள் வாழ்த்து

>
> > “பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
> > எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
> > நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
> > விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - *பெருகுழி* - கடவுள் வாழ்த்து

>
> > “அருகனை அமலனை அசலனை அடிதொழச்
> > சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - *சிறுகுழி* - கடவுள் வாழ்த்து

>
> > ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!
>

நன்றி. ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.

”ஆத்தி சூடி:அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” - ஔவையார்

ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.

ஆத்தி லோகம் என்பது மனிதர்கள் வாழும் ஜம்புத்வீபத்தை விடப்
பெரிய உலகம் என்கின்றன ஜைன நூல்கள். தாதகி (= ஆத்தி) தேடிப் பாருங்கள்:
http://www.indianetzone.com/49/madhyaloka.htm

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர். மகாவீரருக்கு
முந்தையவர். மகாவீரரும், இவரையும் தான் தீர்த்தங்கரர்களில்
சரித்திரத்தில்
வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.
http://en.wikipedia.org/wiki/Parshvanath
http://en.wikipedia.org/wiki/Tirthankara
இஃதுணராது சிவன், விநாயகன் என்றெல்லாம் சொல்வது தற்கால வழக்கு.

ஔவை - மூத்தவள். ஆத்திசூடி, கல்வியொழுக்கம் தந்தவர்கள் சமணர்களே.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Mar 30, 2012, 9:21:09 AM3/30/12
to mint...@googlegroups.com


2012/3/30 N. Ganesan <naa.g...@gmail.com>

நன்றி. ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.

ஆத்திசூடி, இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;


புதிய ஆத்திசூடி படிக்கவில்லை போலிருக்கிறது.  படித்திருந்தால், பொருள் விளங்கவில்லை போலிருக்கிறது.

N. Kannan

unread,
Mar 30, 2012, 7:42:49 PM3/30/12
to mint...@googlegroups.com
2012/3/30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
> போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
> செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
> மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.
>

சமீபத்தில் நாங்கள் திருமலை பெருங்கற்கால ஓவியங்களை ஆவணப்படுத்திக்
கொண்டிருக்கும் போது அங்கிருந்த ஆதவ குலத்தினர், ‘ஆத்தி’ மரம் என்பதே
விஷ்ணுவைக் குறிப்பது என்றனர். கண்ணனின் குழல் ஆத்தி மரத்தால் செய்தது
என்றனர் இந்த முல்லைக்குடிகள்!!

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Apr 1, 2012, 12:10:24 PM4/1/12
to மின்தமிழ்
On Mar 30, 2:52 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர்

கணேசர் ஐயா,

காதகி த்வீபத்துக்கும் பார்ச்வநாதருக்கும் என்ன தொடர்பு ?
தமிழ்ச் சமண நூல்களில் பார்ச்வ நாதரை ஆத்தி சூடி
அமர்ந்த தேவனாகச் சொல்கின்றனவா ?


தேவ்

On Mar 30, 2:52 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 29, 10:38 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > >> கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
> > >> கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.
>
> > > திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!
>
> > > “முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
> > > அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - *இலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
> > > நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - *நெல்லிலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
> > > அத்தனேயாதி யறவரசே சித்தனே
> > > எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
> > > இந்நூலை யானுணர்க வென்று” - *எண்சுவடி - *கடவுள் வாழ்த்து
>
> > > “பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
> > > எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
> > > நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
> > > விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - *பெருகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > “அருகனை அமலனை அசலனை அடிதொழச்
> > > சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - *சிறுகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!
>

> நன்றி.ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.


>
> ”ஆத்தி சூடி:அமர்ந்த தேவனை
> ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” - ஔவையார்
>
> ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
> போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
> செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
> மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.
>
> ஆத்தி லோகம் என்பது மனிதர்கள் வாழும் ஜம்புத்வீபத்தை விடப்
> பெரிய உலகம் என்கின்றன ஜைன நூல்கள். தாதகி (= ஆத்தி) தேடிப் பாருங்கள்:http://www.indianetzone.com/49/madhyaloka.htm
>
> ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர். மகாவீரருக்கு
> முந்தையவர். மகாவீரரும், இவரையும் தான் தீர்த்தங்கரர்களில்
> சரித்திரத்தில்

> வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.http://en.wikipedia.org/wiki/Parshvanathhttp://en.wikipedia.org/wiki/Tirthankara


> இஃதுணராது சிவன், விநாயகன் என்றெல்லாம் சொல்வது தற்கால வழக்கு.
>

> ஔவை - மூத்தவள்.ஆத்திசூடி, கல்வியொழுக்கம் தந்தவர்கள் சமணர்களே.
>
> நா.கணேசன்

DEV RAJ

unread,
Apr 1, 2012, 12:30:49 PM4/1/12
to மின்தமிழ்
சைத்யாலய வந்தநம் -

ஜம்பூ³-தா⁴தகி-புஷ்கரார்த்³த⁴-வஸுதா⁴-க்ஷேத்ர த்ரயே யே ப⁴வா:,
சந்த்³ராம்போ⁴ஜ-ஶிக²ண்டி³கண்ட²-கநக-ப்ராவ்ருʼக³ங்க⁴நாபா⁴ ஜிநா: |
ஸம்யக்³ஜ்ஞாந-சரித்ர-லக்ஷண-த⁴ரா த³க்³தா⁴ஷ்டகர்மேந்த⁴நா: |
பூ⁴தாநாக³த-வர்தமாந-ஸமயே தேப்⁴யோ-ஜிநேப்⁴யோ-நம: ||

ஜம்பு - தாதகி - புஷ்கரார்தம் ஆகிய உலகங்களில்
வாழ்ந்துபோன எல்லா ஜிநர்களையும் துதிக்கும்
இந்த அழகிய ச்லோகம் தாதகிக்கும் பார்ச்வநாதருக்கும்
தனியான எந்த ஒரு தொடர்பையும் சொல்லவில்லை

தேவ்

> > வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.http://en.wikipedia.org/wiki/Parshvanathhttp://en.wikipedia.org/wiki/...

N. Ganesan

unread,
Apr 1, 2012, 2:58:40 PM4/1/12
to மின்தமிழ்

On Apr 1, 9:10 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:

> On Mar 30, 2:52 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர்
>
> கணேசர் ஐயா,
>
> காதகி த்வீபத்துக்கும் பார்ச்வநாதருக்கும் என்ன தொடர்பு ?

தேவ் ஐயா

காதகி த்வீபம் என்றால் என்ன, காதகி என்றால் என்ன என அறியேன்.
அதனால் நான் அப்படி எதுவும் எழுதவில்லை.

நீங்கள் தான் விளக்கவேண்டும்.

நா. கணேசன்

DEV RAJ

unread,
Apr 1, 2012, 10:47:27 PM4/1/12
to மின்தமிழ்
காதகி - எழுத்துப்பிழை
அடுத்த மடலில் சரியான வடிவம் தரப்பட்டது;
சிறு பிழையைப் பெரிது படுத்தாமல்
அதற்கு விளக்கம் கூறலாம்


தேவ்

N. Ganesan

unread,
Apr 21, 2012, 6:54:10 AM4/21/12
to திருவள்ளுவர் சங்கத்தமிழ், vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tamil_...@googlegroups.com, mintamil, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, yavaru...@googlegroups.com
கேட்டு மகிழ்க, குழைந்தைகளுக்கும் தருக:

ஆத்திசூடி:
http://www.youtube.com/watch?v=mCkM6pOJBGE&

A classical Indian poetry by the legendary Ovvaiyaar is brought to
life on modern day with the dynamic touch of world music. Enjoy this
original composition that will lift your spirits up. This song is
available now on iTunes, Amazon & cdbaby.

Produced by: SHISHA PRODUCTION
Composed & Arranged by: Shamroz Khan, Shivaranjini, Aleem & David C.
Raja
Vocals Arranged & Sung by: Shamroz Khan, Shivaranjini, Aleem & David
C. Raja
Flute & Additional Vocals by: J.B. Manimaran

Video Features:
Down Syndrome Association Singapore
Mr Sankara Raman
Mahesh & Naresh
Sharu & Vasanth
Meridian Primary School Tamil Department

நா. கணேசன்


On Mar 30, 2:52 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> On Mar 29, 10:38 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
> wrote:
>
>
>
>
>
>
>
>
>
> > >> கணக்கதிகாரம் பௌத்தர், சமணர்களால் திண்ணைப்பள்ளிகளில்
> > >> கணக்கு கற்பிக்க ஏற்பட்ட நூல்.
>
> > > திண்ணை சிறார்களுக்கு சிரமணர்களின் அரிச்சுவடி!
>
> > > “முக்குடை யருகன் முதல்வனைப் போற்றிவாழ்
> > > அக்கண லக்கம் அறிந்திடலாமே”  - *இலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “வல்மதி முக்குடை யான்மல ரடிதொழ
> > > நெல்லணி லக்கமென் னெஞ்சினில் வருமே” - *நெல்லிலக்கம்* - கடவுள் வாழ்த்து
>
> > > “முத்தணிந்த முக்குடைக்கீழ் மூவாமுதல்வனே
> > > அத்தனேயாதி யறவரசே சித்தனே
> > > எண்ணூலி லாறைந்து வாயுமெனக் கருள்வாய்
> > > இந்நூலை யானுணர்க வென்று” - *எண்சுவடி - *கடவுள் வாழ்த்து
>
> > > “பண்ணவன் கமலவூர்தி பரமேட்டி பாதம்போற்றி
> > > எண்ணினற் குழிகள்மாற எழில்பெருங் குழிக்குக்காப்பு
> > > நண்ணவே கணக்காய்ந்த நானிலத்துள்ள வெல்லாம்
> > > விண்ணவள் கமலமாது வாணிநாமகள் தாள்தானே” - *பெருகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > “அருகனை அமலனை அசலனை அடிதொழச்
> > > சிறுகுழி முப்பதும் சிந்தையில் வருமே” - *சிறுகுழி* - கடவுள் வாழ்த்து
>
> > > ஆத்திச்சூடி (அகத்தில் சூடி) யாவரும் அறிந்ததே!
>

> நன்றி.ஆத்திசூடி.என்பது யார் என்பது விளக்குவோர் குறைவு.


>
> ”ஆத்தி சூடி:அமர்ந்த தேவனை
> ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே” - ஔவையார்
>
> ஆத்தி மரம் பாரத வரலாற்றில் மிக முக்கியமானது. லோகாயதத்தை வர்ணிக்கும்
> போது மணிமேகலையில் வருவது. காராணை விழுப்பரையன் வளமடலில்
> செய்னக்கொண்டார் மணிமேகலைக் கருத்தைப் பயன்படுத்துகிறார்.
> மூவேந்தரில் சோழர்களின் குலச்சின்னம் ஆத்தி மரம்தான்.
>
> ஆத்தி லோகம் என்பது மனிதர்கள் வாழும் ஜம்புத்வீபத்தை விடப்
> பெரிய உலகம் என்கின்றன ஜைன நூல்கள். தாதகி (= ஆத்தி) தேடிப் பாருங்கள்:http://www.indianetzone.com/49/madhyaloka.htm
>
> ஆத்தி சூடி அமர்ந்த தேவன் = பார்சுவநாத தீர்த்தங்கரர். மகாவீரருக்கு
> முந்தையவர். மகாவீரரும், இவரையும் தான் தீர்த்தங்கரர்களில்
> சரித்திரத்தில்

> வாழ்ந்த புருஷர்கள் என்கின்றனர்.http://en.wikipedia.org/wiki/Parshvanathhttp://en.wikipedia.org/wiki/Tirthankara


> இஃதுணராது சிவன், விநாயகன் என்றெல்லாம் சொல்வது தற்கால வழக்கு.
>

> ஔவை - மூத்தவள்.ஆத்திசூடி, கல்வியொழுக்கம் தந்தவர்கள் சமணர்களே.

N. Ganesan

unread,
Apr 21, 2012, 7:45:07 PM4/21/12
to யாவரும் கேளிர், tamil_...@googlegroups.com, thami...@googlegroups.com, mintamil, vall...@googlegroups.com

On Apr 21, 2:36 pm, திருவள்ளுவன் இலக்குவனார் <thiru2...@gmail.com>
wrote:
> அன்புடை யீர்,
> நீங்கள் தெரிவித்தபின்பு இப்பொழுதுபார்த்தே ன்.
> நன்றி. முனை வர் இராம.கி. நன்கு எழுதி உள்ளார்.
> வீட்டில்  தொலை க் காட்சிப் பெ ட்டி இல்லை. எனவே,   காண வில்லை.
>
> 60 ஆண்டு க் கால வட்டமும் தமிழருடை யதே. ஆனால், ஆரியர்கள் தமிழ்ப் பெ யர்களை
> அழித்து சமசுகிதருதப் பெ யர்களை ப் புகுத்தியதால்  அதை முன்னவர்கள்
> எதிர்க்காததால் வந்த வினை. காலப் பயன்பாட்டிற்குக்கட்டாயமாகத் திருவள்ளுவர்
> ஆண்டே தொடர வேண்டும்.
>
> சித்திரை யை இளங்கோ அடிகள் ஆண்டுப் பிறப்பாகவும்
> ஆவணியை த் தொல்காப்பியர் ஆண்டுப் பிறப்பாகவு்ம் கொண்டாடலாம்.
>
> 60 ஆண்டு சமசு.பெ யர்களை அடியோடு நீக்க வேண்டும்.
> இதுவே என் கருத்து.
>

எழுத்தாள நண்பர் ரவிக்குமாரின் யாவரும் கேளிர் குழுமத்தில்
உங்கள் முதல் மடல் கண்டேன் நன்றி.

-------

தமிழறிஞர்கள் கலைஞர் பேச்சை யுட்யூபில் தருகிறார்களா? என்று பார்ப்போம்.

ஆவணி மாதம் பற்றி:
http://groups.google.com/group/mintamil/msg/a9e47f0ef25862b4

இளங்கோ அடிகள் எல்லாம் மிகப் பின்னர்.
சித்திரையை ஆரியச் சமணர் ஆகிய தொல்காப்பியருக்கு
வழங்கினால் - இலக்கியம் - வள்ளுவன் - தை 1
இலக்கணம் - தொல்காப்பியன் - சித்திரை 1
என எளிய மக்கள் நினைவில் நிறுத்த மிக உதவும்.

எனவே, என் ஓட்டு ஆர்யத் தமிழ்ப் புத்தாண்டு தொல்காப்பியர் திருநாள்
என்பதற்கு ஆகும். காப்பியனைத் தூக்கி ஆவணியில் போட்டால்
அவன் புகழ் தெரியாது, பரவாது. நீர்த்துப் போகச் செய்துவிடும்.

தமிழருக்கு இரு புத்தாண்டு அல்லவா?
தனித்தமிழ் புத்தாண்டு இலக்கியத்துக்கு - வள்ளுவன் திருநாள்
ஆர்யத் தமிழ் புத்தாண்டு இலக்கணத்துக்கு - காப்பியன் திருநாள்
என ரிஸர்வ் செய்வோம்.

மற்ற திருநாள்கள் (உ-ம்: இளங்கோ, சாத்தன், கம்பன், குமரகுருபரர், உமறு,
வீரமாமுனி, பாரதி, ...) எல்லாம் அரசாங்க குழு அறிவிக்கலாம்.

BTW, இரு புத்தாண்டு நம் தமிழர் ஏற்றனர். அதுபோலவே,
தமிழ்க் கல்விக்குப் பலர் செல்லாத நிலையில் (மலாயாவில்
சுப. நற்குணன் தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கை
குறைவதற்கு வாக்குப்பதிவு நடத்தலைக் கண்டேன். தமிழ்நாட்டில்
மிடில் க்லாஸ் எல்லாம் ஆங்கில பள்ளிகளை பலாபழத்தை நாடும்
பறவைகள் போல நாடுவதைப் பார்க்கிறோம்) இந்த நிலையில்
தமிழ் எழுத்தை திராவிட இயக்கம் தமிழருக்குக் கொடுத்த
பெரியார் வழியில் எழுத்துச் சீர்மை அத்யாவசியம் ஆகிறது.
பரீட்சார்த்தமாய் பெரியாரின் விடுதலை எழுத்தை சில ஆண்டுகள்
பாவிப்போம். ஓலைச் சுவடி எழுத்துமுறைக்கு மாற்று பெரியார்
விடுதலை எழுத்து. ஓலைச் சுவடி பழைய தமிழ் ஆண்டுக்கு
தனித்தமிழ் புத்தாண்டு மாற்று. அது போல.

தனித்தமிழ் ஈழம் பிறக்குமாயின் தனித்தமிழ் புத்தாண்டும்,
விடுதலைச் சீர்மை எழுத்தும் வரும். காலம் கனியும், காத்திருப்போம்.

வணக்கம் & நன்றி,
நா. கணேசன்

> 2012/4/21 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
> > On Apr 21, 5:58 am, vallamai editor <vallamaiedi...@gmail.com> wrote:
> > > அன்பின் ஐயா,
>
> > > பகிர்விற்கு நன்றி. குழந்தைகளுக்கு கற்பிக்க மிக பயனுள்ளது.
>
> > நன்றி, பவளா. கலைஞர் தொலைக்காட்சி பார்த்தீர்களா?
> > திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் சோமசுந்தர பாரதி
> > - கட்டுரையை ஆவணமாக என் பெயரைக் குறிப்பிட்டுக்
> > கலைஞர் கருணாநிதி பேசி இருக்கிறார். கலைஞரின் முழுப் பேச்சையும்
> > யுட்யூப் காணொளி யாராவது தந்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில்
> > இருந்து போன் கால்கள் வந்தன.
>
> > தனித்தமிழ் ஈழம் வரும் என்கிறார் கலைஞர். அதற்கான முயற்சிகளை
> > மேற்கொள்கிறார் முதல்வர் ஜெயலலிதா. தனித்தமிழ் ஈழம் அமையுமா?
> > எனக் காலம் விடைசொல்லும். தனித்தமிழ் ஈழம் புலிகளின் தலைமை
> > திருவள்ளுவர் தொடராண்டை ஏற்றிருந்தது எனத் தெரிகிறது.
> > கண்ணபிரான் ரவிசங்கரின் பதிவு:
> >http://madhavipanthal.blogspot.com/2012/04/tamilnewyear.html
>
> > இணையத்தில் இன்னும் லட்சக் கணக்கான தமிழர்கள் எழுதும்போது
> > தனித்தமிழ் ஈழம் அமைய வாய்ப்பிருக்கிறது. நாவலர் பாரதியார்
> > தந்த திருவள்ளுவர் ஆண்டு தனித்தமிழ் ஈழ அரசாங்கத்தில் நடைமுறையாகும்.
> > புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் தைப் புத்தாண்டு பாடல்களைப்
> > படிக்க வேண்டுகிறேன்.
>
> > அன்புடன்
> > நா. கணேசன்
>
> > > 2012/4/21 N. Ganesan <naa.gane...@gmail.com>

Dev Raj

unread,
Nov 23, 2014, 12:26:03 PM11/23/14
to mint...@googlegroups.com
On Sunday, 25 March 2012 06:26:43 UTC-7, N. Ganesan wrote:

’அரி ஓம் நமோத்து சிந்தம்’ என்பது சமணர்கள் அரிச்சுவடி சொல்லிக் கொடுக்கும்போது பயிற்றுவித்த முதல் மந்திரம். அதனால் நெடுங்கணக்குக்கு அரிச்சுவடி எனப் பெயர்.

 
தேவநேயப் பாவாணர் -
நம்மாழ்வார் காலத்திற்குப் பின் நெடுங்கணக்கு அரிச்சுவடி என்று பெயர் பெற்றுவிட்டது. இடைக்காலத்தில், 'அரி ஓம் நம' என்று தொடங்கி எழுத்தறிவிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.

Reply all
Reply to author
Forward
0 new messages