[MinTamil] எட்டயபுரத்தை நோக்கி - தொடர்

983 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
May 22, 2010, 5:01:03 AM5/22/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
பகுதி 6
 
வாகனத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபத்தின் வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம். இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. கட்டணத்தைச் செலுத்தி டிக்கட்டைப் பெற்றுக் கொண்டு நினைவு மண்டபத்திற்குள் சென்றோம். 
 
இந்தக் கட்டடம் உள்ளேயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் தூய்மையாக உள்ளன. சுவர்களில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை சித்திரமாக தீட்டி வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சித்திரமும் ஒரு கதை சொல்லும் அருமையான சித்திரங்கள். அங்கு சுற்றுப் பயணிகளுக்குத் தகவல் வழங்குவதற்காக ஒருவரை நியமித்திருக்கின்றார்கள். எங்களைப் பார்த்ததும் அருகில் வந்து தகவல் விசாரித்து விட்டு எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். ஒவ்வொரு சித்திரத்திற்கும் ஒரு கதை உள்ளது என்று ஆரம்பித்து கதையைக் கூற ஆரம்பித்தார்.
 
(அவர் கூறிய விஷயங்களை இங்கு பதிவாக்குகின்றேன். அவரது விளக்க ஒலிப்பதிவு  வலைப்பக்கத்தில் இணைக்கப்படும்)
 
பாஞ்சாலங்குறிச்சியை தனது கோட்டைக்கான இடமாக  கட்டபொம்மன் வம்சத்தினர் தேர்ந்தெடுத்தமைக்கு ஒரு கதை கூறுகின்றனர். அவர்கள் பார்த்த ஒரு காட்சி அவர்களை இவ்விடத்தை தேர்ந்தெடுக்க வைத்துள்ளது.
 
ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டயை அமைத்திருக்கின்றார் கட்டபொம்மன் வம்சத்தினர். அவரது பாட்டனார்  ஆட்சிப் பொறுப்பை வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அவரது 30வது வயதில் வழங்குகின்றார். தனது பாட்டனார் பாஞ்சாலன் ஞாபகமாக இந்தப் பகுதிக்குப் பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரும் வழங்குகின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தனது ஆட்சியின் போது 6 ஆண்டுகள் ஆங்கிலேயர்களுக்கு வரி கட்டாமலேயே இருந்திருக்கின்றார். இதனை அறிந்த ஆங்கிலேய அதிகாரி இவரிடம் வரி கட்டும் படி கோரி செய்தி அனுப்புகின்றார். வரி கட்ட முடியாது என்று தெரிவித்து கட்டபொம்மன் மறுக்கின்றார். வரி தர முடியாது என்று கூறிவிட்டாலும் இதனால் ஏதும் விபரீதம் விளையுமோ என்று அவருக்கு மனதில் கலக்கம் இருக்கின்றது. வரி தர முடியாது என்று சொல்லிவிட்டோம். இதனால் ஏதும் கேடு ஏற்படுமோ என எண்ணம் தோன்ற தனது குலதெய்வமான ஜக்கம்மாவை இவரும் இவரது மனைவியும் வழிபடுகின்றாகள்.

ஜாக்சன் துரை என்பவர் 10.9.1790ல் தனது ஆட்களை அனுப்பி கட்டபொம்மனை அழைத்து வந்து கட்ட வேண்டிய பாக்கி வரியை கட்டாததன் காரணைத்தை அறிய விசாரனை நடத்துகின்றார். இந்த விசாரணை நடைபெறும் போது கட்டபொம்மன் தந்திரமாக தனது வாளால் அவரைத் தாக்கி விட்டு தப்பித்து ஓடி விடுகின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்துப் ஓடினாலும் இவரது கணக்குப்பிள்ளை தாணாபதிப்பிள்ளை பிடிபட்டு விடுகின்றார். இவரை பிடித்து ஆங்கில அர்சாங்கம் கைது செய்து திருச்சி சிறையில் அடைக்கின்றார்கள். கணக்குப்பிள்ளை பின்னர் விடுதலை செய்யப்படுகின்றார்.

கட்டபொம்மனும் அவரது மனைவியும் சில வீரர்களுடன் ஒட்டப்பிடாரத்துக்கு அருகில் ஓர் இடத்தில் தங்கியிருக்கின்றார்கள். அப்போது அனைத்து பொறுப்பும் மந்திரி தானாபதி பிள்ளைக்குப் போய் சேர்கின்றது.

திருச்சியில் தன்னை சிறைபிடித்து வைத்ததை மனதில் வைத்து அதற்காக பழிவாங்க வேண்டும் என்றும் பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான தபால் போக்குவரத்தைத் தடை செய்து விடுகின்றார் மந்திரி தானாபதிப்பிள்ளை.
 
எட்டயபுரம் ஜமீனோடு ஒப்பிடும் போது கட்டபொம்மனின் அரசாங்கம் சிறியதே.  ஆக ஆங்கிலேயர்கள் எட்டயபுர ஜமீன் ஆதரவோடு கட்டபொம்மன் தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர்.

கட்டபொம்மன் சிறந்த முருக பக்தர். திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் போது வீரர்களுடன் கோயிலுக்குச் சென்று விடுவாராம். அந்த நேரத்தில் கோட்டையைத் தாக்கினால் கோட்டையைக் கைபற்றிவிடலாம் என்று ஆங்கில அரசு திட்டமிடுகின்றனர்.  5.9.1799 அன்று பானர்மேன் என்ற ஒரு ஆங்கிலேய அதிகாரி தன் வீரர்களுடன் கோட்டைக்கு வருகின்றார். அந்த சமயம் கட்டபொம்மன் கோட்டையில் இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டையை இடித்து உடைத்து தரை மட்டமாக்கி விட்டுச் சென்று விடுகின்றனர்.

இப்படி தரை மட்டமாக்கிய பின்னர், மந்திரி தாணாபதிப்பிள்ளையின் ஆலோசானையைக் கேட்டு தம்பி ஊமைத்துரையையும் அழைத்துக் கொண்டு  புதுக்கோட்டைக்குச் சென்று விடுகின்றார் கட்டபொம்மன். 9.9.1799ல் கட்டபொம்மன் தனது இடத்தை விட்டு வேறு இடம்  சென்று விட்டார் என்ற தகவல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குச் செல்கின்றது. கட்டபொம்மன் இல்லாததால் எல்லாவறறையும் இடித்து உடைக்க உத்தரவிடுகின்றார்.

கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த திருச்சி மன்னர், விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத் தெரிவிக்கின்றார். தகவல் கிடைத்த ஆங்கிலேயர்கள் அங்கு சென்று அவரை திருச்சி புதுக்கோட்டையில் கைது செய்து விடுகின்றார்கள். கைது செய்து அங்கிருந்து கயத்தாறு கொண்டு செல்கின்றார்கள். அங்கு அவரை விசாரனை செய்கின்றார்கள். விசாரணையின் அடிப்படையில் 16.10.1799 அன்று அவரை புளியமரத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிட உத்தரவிடுகின்றார்கள்.

கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின்னர் ஆங்கிலேய அரசு பொது  மக்களையும் சிறையில் அடைக்கின்றனர்.  சிறையில் அடைக்கப்பட்டவர்களில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும் ஒருவர். இவர் சிறையிலிருந்து தப்பித்து பாஞ்சாலங்குறிச்சி வருகின்றார்.
 
திரும்பி வந்ததும் அங்குள்ள  மக்களை ஒன்று திரட்டி மீண்டும் முதலில் கோட்டை இருந்த இடத்திலேயே ஒரு கோட்டையயும் கட்டி விடுகின்றார் தம்பி ஊமைத்துரை.  இந்த செய்தி ஆங்கிலேயர்களுக்கு எட்டுகின்றது. மீண்டும் எப்படி ஒரு கோட்டை கட்டப்பட்டிருக்கின்றது என்ற செய்தி கேட்டு நேரில் வந்து பார்க்க வருகின்றனர். மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்கின்றது. ஊமைத்துரைக்குத் துணையாக இருந்து படைக்கு தலைவராக இருந்து போராடுகின்றார் வெள்ளயத்தேவன். ஊமைத்துரை கட்டிய கோட்டையை பீரங்கிகளை வைத்து ஆங்கிலேயர்கள் உடைத்து தரைமட்டமாக்கி விடுகின்றனர்.  
 
அன்புடன்
சுபா
 
படங்கள்:
 
1. முயல் நாயை விரட்டும் காட்சி
2.மேனர்மேனின் படை கட்டபொம்மனின் கோட்டையை இடித்து சண்டையிடும் காட்சி.
 
குறிப்பு: மேலும் சில படங்களுடனும் ஒலிப்பதிவுடனும் விரைவில் இந்தப் பகுதி த.ம.அ வலைப்பக்கத்தில் இணைக்கப்படும்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2.JPG
1.JPG

Innamburan Innamburan

unread,
May 22, 2010, 6:46:22 AM5/22/10
to mintamil
'இந்த மண்டபத்தின் உள்ளே சென்று பார்வையிட சிறு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.'
சரியான காரியம். அதனால் நேர்த்தியாக வைத்துக்கொள்ளமுடிகிறது. சமீபத்தில் அப்ரஹாம் லிங்கன் நினைவுச்சின்னங்களை காண சென்றிருந்தோம். அந்த நினைவுகள் வருகின்றன. ஒரு காலகட்டத்தில் வரி செலுத்த தயாராக இருந்த கட்டபொம்மனை ஆங்கில் அரசு அவமதித்ததாகவும், அவர் வெகுண்டு எழுந்ததாகவும் வரலாறு படித்திருக்கிறேன். (ஸ்டாலின் குணசேகரன்?) அரசு வரலாற்றை கவனமாக சொல்லவேண்டும்.
இன்னம்பூரான் 

2010/5/22 Innamburan Innamburan <innam...@googlemail.com>
' திருச்சி மன்னர்' ? அவர் புதுக்கோட்டை மன்னர் அல்லவோ?
இன்னம்பூரான்

2010/5/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 24, 2010, 1:37:32 PM5/24/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
திருத்தம்..

2010/5/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
பகுதி 6
 
..

கட்டபொம்மன் புதுக்கோட்டையில் தங்கியிருக்கும் விஷயம் அறிந்த திருச்சி மன்னர், விஜயநகர தொண்டைமான் என்பவர் இந்தத் தகவலை ஆங்கிலேயர்களுக்குத்

இது புதுக்கோட்டை மன்னர் என்றிருக்க வேண்டும். நன்றி திரு.இன்னம்பூரான்.
 
-சுபா
 
 

Subashini Tremmel

unread,
May 24, 2010, 2:31:47 PM5/24/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
பகுதி 7
 
வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்
 
இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை.  அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும்  அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
 
அவர் கடமை வந்தவர்களை மண்டபத்தை ஒரு முறை சுற்ற வைத்து படங்களைக் காட்டி பின்னர் வெளியே அனுப்பி வைப்பது. அவ்வளவே. அதை செய்வதிலேயே அவர் கவனம் முழுவதும் இருந்தது, ஒரு இயந்திர மனிதனைப் போல!
 
மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் உடனே இருப்பது சித்திரக் கூடம். இதற்கு உள்ளே சென்றால் மேலும் ஒரு சிறிய கூடம் ஒன்று இருக்கின்றது. அதன் மையத்தில் மிக கம்பீரமான வீர பாண்டிய கட்டபொம்மனின் சிலை ஒன்று பிரமாண்டமாக வடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றது.  பக்கத்தில் அகழ்வாராய்ச்சியின் போது சேகரிக்கப்பட்ட சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து அவசரமாக சில படங்களையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.
 
இவற்றை வெகு விரைவாக  எங்களைப் பார்க்க வைத்து விட்டு வெளியே கொண்டு வந்து விட்டு விட்டு எங்களிடம் சன்மானத்திற்காக கையை நீட்டினார் அந்த அதிகாரி. இது மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து விட்டு புல்வெளியில் இறங்கி நடந்தோம்.
 
அழகான நினைவு மண்டபம். சுத்தமாக பாதுகாக்கப்படுகின்றது. ஆனாலும் இது மட்டும் போதாது. மேலும் இந்த வரலார்று சிரப்பு மிக்க இடத்தை  மேம்ப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக எனக்கு அதிருப்தி தருபனவாக இருந்த சில விஷயங்கள்.
 
சித்திரங்களுக்கு விளக்கம் கொடுத்த அதிகாரி: அவர் வருகையாளர்களிடம் கவனத்தோடு பொறுமையாக தகவல்களை வழங்க வேண்டியது அவசியம். சில விஷயங்கள் புதிதாக இருக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு அவற்றை ஒதுக்கி விடாமல் பொறுமையாகக் கேட்டு அதற்கு பதிலளிக்க வேண்டியது இவ்வகையான சுற்றுலாத்துறை அதிகாரிகளின் பொறுப்பு.  இவ்வகை அதிகாரிகள் தானே சுற்றுலாத்துறையின் தூதுவர்களாக இருக்கின்றனர். இவர்களின் கனிவான திறமையான விளக்கங்கள் தான் மேலும் பலர் இங்கு வந்து செல்ல உதவும். 
 
அதோடு இங்கு வரும் வருகையாளர்களுக்கு வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றை விளக்கும் ஒரு சிறு கையேட்டை வழங்கலாம்.  இதனை இலவசமாகத்தான் தரவேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு  சிறு தொகைக்கு விரும்புவோர் வாங்கிச் செல்லும் வகையில் சிறு கையேட்டை இங்கு வைப்பதன் வழி வருகை தரும் சுற்றுப் பயணிகளுக்குச் சரியான தகவல் சென்றடைய உதவ முடியும். இங்கு மட்டுமல்ல. பொதுவாகவே வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்,  ஆலயங்களில் கூட இப்படிப்பட்ட சிறு கையேடுகளை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். இது சரியான தகவல் மக்களுக்குச் சென்று சேர பெரிதும் உதவும்.
 
இவ்வகையான முக்கியமான நினைவுக் கூடங்களில் அதிலும் தூரத்திலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் சுற்றுப் பயணிகள் வந்து செல்கின்ற நிலையில் இங்குள்ள அதிகாரிகள் சற்று கவனமுடன் செயல்பட வேண்டியதும் மிக முக்கியமான ஒன்று. அதிலும் வருகை தரும் சுற்றுப் பயணிகளிடம் சன்மானம் பெருவதற்காக கை நீட்டுவது முற்றிலுமாக போக்கப்பட வேண்டிய ஒரு செயல்.
 
வருகை தரும் சுற்றுப்பயணிகளுக்குக் கழிப்பறைகள் அதிலும் தூயமையாகப் பாதுகாக்கப்படும் கழிப்பறைகள் இருக்க வேண்டியது முக்கியம்.  தூரத்திலிருந்து பயணம் செய்து வருபவர்களின் அடிப்படை தேவைகளைக் கவனத்தில் கொண்டு கிராமமோ நகர்ப்புறமோ எல்லா இடங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம்.
 
குறை சொல்வதற்காக குறிப்பிடப்படுபவை அல்ல இவை. சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நினைவு மண்டபம் மேலும் சிறப்புடன் பலரும் வந்து பார்த்து பாராட்டிச் செல்லும் வகையில் அமைந்திட இந்த சிறிய மேம்பாடுகள் பெரிதும் உதவும்.
 
இவற்றைப் பற்றி பேசிக் கொண்டே மண்டபத்திலிருந்து வெளியே வந்த எங்களை ஒல்லியான, உயரமான தோற்றத்துடன்  தலைப்பகை அனிந்திருந்த ஒரு மனிதர் எதிர் கொண்டார். எங்களிடம் அவர் வீரபாண்டிய கட்டபொம்மனின்  நேரடி வாரிசு வீமராஜா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
 
அன்புடன்
சுபா
 
குறிப்பு:
படம் : மண்டபத்திற்குள்ளேயுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலை
3.jpg

Innamburan Innamburan

unread,
May 24, 2010, 2:58:12 PM5/24/10
to mint...@googlegroups.com
நன்றி, சுபாஷிணி.
௧. சித்திரங்களுக்கு விளக்கம் கொடுத்த அதிகாரி 'கடனே' என்று இயங்கியது வியப்பாக இல்லை; வெட்கமாக இருக்கிறது;
௨. அரசு ஊழியர் என்றால், சம்பளமும் கணிசமாக இருக்கும். கை நீட்டியது இழுக்கு; குற்றம்;
௩. 'வரலாற்றை விளக்கும் ஒரு சிறு கையேடு' பொருத்தமான் அறிவுரை. மாதிரிக்கு, இங்கு லிங்கன், மார்க் ட்வைன் கையேடுகளை கொணருகிறேன்.  
௪. கழிவறை பற்றிய கருத்தும் வரவேற்கவேண்டியது.

இன்னம்பூரான்


2010/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 25, 2010, 2:25:41 AM5/25/10
to mint...@googlegroups.com
வீரபாண்டிய கட்டபொம்மனின்  நேரடி வாரிசு வீமராஜா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார்
 
பாராட்டுக்கள்
 
 
தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை தூண்டும் உத்தியைக் கையாண்டு எழுதுகிறீர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
25-5-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Chandrasekaran

unread,
May 25, 2010, 8:28:12 AM5/25/10
to mint...@googlegroups.com
சுற்றுலாத் துறை சுதந்திரமாகச் செயல் படுவது தமிழகத்திப் பொருத்தவரை கஷ்டம். தொல்லியல்துறை மற்றும் கோயில்கள் என்றால் இந்து அரநிலையத் துறை ஆகியவை மூக்கை நுழைக்கும். கமிஷன் அடிக்கும் பொதுப் பணித் துறையினர் தான் அந்த கழிவறை கட்டும் காண்டிராக்ட் போன்றவர்றை செய்வார்கள். ‘எல்லாருக்கும்' கொடுத்தது போக மிச்சத்தில், எச்சம்தான் மிஞ்சும். அதனால்தான் கழிவறை தறம் கீழ்தறமாக இருக்கிறது. முதலில் தனியாக சுதந்திரம் மிக்க நிறுவனத்திற்கு கீஏ எல்லா சுர்றுலா தலங்களையும் கொண்டுவரவேண்டும். பல துறைகள் மூக்கை நுழைக்கக் கூடாது. சுலபமாக, தனியார் கம்பெனி ஒன்று ஒரு சுற்றுலா மையத்தி மேம்படுத்துகிரது என்றால், அதற்கான செலவுகளை வரிவிலக்காக அளித்தால், கட்டாயம் தரம் கூடும். வரிப் பணம் உருப்படியாக விஷயங்களுக்கு செலவாகும்.

சந்திரா

Geetha Sambasivam

unread,
May 25, 2010, 9:59:41 AM5/25/10
to mint...@googlegroups.com
அருமையான தொகுப்பு. கழிப்பறைகள் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கேயுமே மோசமாய்த் தான் பராமரிக்கப் படுகிறது.  சிதம்பரத்தில் சுலப் இண்டர்நேஷனல் காரர்களால் பராமரிக்கப் பட்டு ஓரளவு சுத்தம் காண முடியும். ஆனால் வெளிநாட்டாரிடம் அதிகமான பணம் வசூலிப்பார்கள். குறைந்த பக்ஷமாய்ப் பதினைந்து ரூபாய். உள்நாட்டு மக்களிடமும் பெண்கள் என்றால் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என வசூலிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆகவேண்டும். இதிலே அரசியல் தலையீடும், கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கீடும் உண்டு. கழிப்பறையைவிட மோசமாக இருக்கும் அவை!

2010/5/25 Subashini Tremmel <ksuba...@gmail.com>
320.gif

Subashini Tremmel

unread,
May 25, 2010, 12:46:48 PM5/25/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
மேலும் படங்களுடனும் ஒலிப்பதிவுடனும் கடந்த இரண்டு பகுதிகளை இணைத்திருக்கின்றேன்
 
 
 
அன்புடன்
சுபா


 
2010/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>

பகுதி 7
 
வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்
 
இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை.  அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும்  அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
 

--

kasi pdk

unread,
May 25, 2010, 12:56:05 PM5/25/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

தமிழகத்திலோ பொறுத்தவரை, தனி நபர் கடனை அது ரூ.14 ஆயிரத்து 353ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.

தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது.

தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல'

Subashini Tremmel

unread,
May 25, 2010, 3:05:25 PM5/25/10
to mint...@googlegroups.com
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி தேனீயார். 
அன்புடன்
சுபா

2010/5/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Subashini Tremmel

unread,
May 25, 2010, 3:10:28 PM5/25/10
to mint...@googlegroups.com


2010/5/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

௩. 'வரலாற்றை விளக்கும் ஒரு சிறு கையேடு' பொருத்தமான் அறிவுரை. மாதிரிக்கு, இங்கு லிங்கன், மார்க் ட்வைன் கையேடுகளை கொணருகிறேன்.  
 
ஐரோப்பிய நகரங்களில் புராதன இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் இவ்வகையில் கிடைக்கும் விளக்கக் கையேடுகளை வாசித்து தேவாலயங்கள், அரச கோட்டைகள் போன்றவற்றின் தகவல்களை அறிந்து கொள்கிறேன். அது எவ்வளவு பயனாக இருக்கின்றது என்பது அனுபவ உண்மை. ஏதோ பார்த்தோம் என்பதற்கும் வரலாற்று பின்னனி, சில சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொண்டு பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.
 
சுபா

Subashini Tremmel

unread,
May 25, 2010, 3:19:35 PM5/25/10
to mint...@googlegroups.com


2010/5/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

அருமையான தொகுப்பு. கழிப்பறைகள் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கேயுமே மோசமாய்த் தான் பராமரிக்கப் படுகிறது.  சிதம்பரத்தில் சுலப் இண்டர்நேஷனல் காரர்களால் பராமரிக்கப் பட்டு ஓரளவு சுத்தம் காண முடியும். ஆனால் வெளிநாட்டாரிடம் அதிகமான பணம் வசூலிப்பார்கள். குறைந்த பக்ஷமாய்ப் பதினைந்து ரூபாய். உள்நாட்டு மக்களிடமும் பெண்கள் என்றால் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என வசூலிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆகவேண்டும். இதிலே அரசியல் தலையீடும், கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கீடும் உண்டு. கழிப்பறையைவிட மோசமாக இருக்கும் அவை!

 
அடிப்படை தேவைகளுக்கு இப்படியா கஷ்டப்பட வைப்பது?   எவ்வளவு எளிமையாக ஒரு கழிப்பறை நிலயத்தை மேற்பார்வை செய்யலாம்.
 
இவற்றை தனியாக ஒரு நிறுவனத்திடம் கொடுத்து நிர்மானிப்பதை விட  அனைத்து பொது இடங்களும் அடிப்படை வசதிகளை குறிப்பாக கழிப்பறைகளை நேர்த்தியாக உருவாக்கி கபராமரிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு இதனை உறுதி செய்து நடைமுறைப்படுத்தலாமே.  இது தனியாரிடம் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு விஷயமில்லையே. மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று என்பதை புரிந்து கொண்டால் அதனை பராமரிக்கும் வழிமுறையைப் பற்றியும் சிந்திக்கலாம்.
 
-சுபா
320.gif

நண்பன்

unread,
May 26, 2010, 1:33:47 AM5/26/10
to mint...@googlegroups.com
காசு  கொடுத்து வாங்க  வேண்டியதை  எல்லாம்  இலவசமாக  கொடுகிறார்கள்

இலவசமாய்  செய்ய வேண்டியதில்  காசு  பார்கிறார்கள்

2010/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>



நன்றியுடன் நாசரு  

Geetha Sambasivam

unread,
May 26, 2010, 3:56:27 AM5/26/10
to mint...@googlegroups.com
புரியாமல் எல்லாம் இல்லை. அடிப்படைத் தேவைகளைக் காசாக்கப் புரிந்தே வைத்திருக்கிறார்கள். இப்போ கடந்த பத்து வருஷங்களாக இந்த அளவுக்கானும் கழிப்பறைகள் இருக்கின்றன. அதுக்கும் முன்னால் நினைத்தே பார்க்க முடியாது! :((((( அதிலும் பெண்கள், வயோதிகர்கள் என்றால் திண்டாட்டம் தான்!

2010/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
320.gif

annamalai sugumaran

unread,
May 26, 2010, 7:58:48 AM5/26/10
to mint...@googlegroups.com
எதோ ஒரு ஊரில் அவசரமாக பஸ் நிலையத்தில் இருந்த  கழிப்பறைக்கு சென்றேன் .வெளியே நவீனக் கழிப்பறை என்று மிகபெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது .
உள்ளேப்போனால் வயறுபிரட்ட
ஆரமித்தது  அத்தனை துர்நாற்றம் .
போனமாதிரியே அவசரமாக வெளியே வநது ,இரண்டு ருபாய் கேட்ட காப்பாளரிடம் நவீன கழிப்பறை என்று போட்டிருக்கிறீர்கள் ஆனால் நவீனம் எங்கிருக்கிறது என்று கேட்டேன் .
அவர் எனன சார் அப்படி சொல்லிட்டீங்க , இங்கே பாருங்கள் கணினியில் ரசிது தருகிறோம் என்றாரே  பார்க்கலாம் .!
நவீனம் காசுவாங்குவதில்  தான் இருக்கிறது உள்ளே இல்லை .
 
இப்போதெல்லாம் டீ.வீ  எல்லாம் இனாமாக கிடைக்கிறது .ஆனால் சிறு நீர் போவதற்கு ஏழைக்குக் கூட இரண்டு ருபாய் வேண்டி இருக்கிறது . நண்பர்  கூறியது சரிதான்
அன்புடன் ,
சுகுமாரன்


 
2010/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !
320.gif

Innamburan Innamburan

unread,
May 26, 2010, 8:26:40 AM5/26/10
to mint...@googlegroups.com
காப்பாளர் நவீனத்திற்கு நவீன இலக்கணமாக திகழ்கிறார்! கண்ணன், ரிச்
ஃபார்மேட்டிங் போனால் தான் குகிள் தமிழ் வருகிறது. ரிச்சில் அடித்து
ப்ளைனில் போட்டேன்.

இன்னம்பூரான்


2010/5/26 annamalai sugumaran <amirth...@gmail.com>


>
> எதோ ஒரு ஊரில் அவசரமாக பஸ் நிலையத்தில் இருந்த  கழிப்பறைக்கு சென்றேன் .வெளியே நவீனக் கழிப்பறை என்று மிகபெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தது .
> உள்ளேப்போனால் வயறுபிரட்ட
> ஆரமித்தது  அத்தனை துர்நாற்றம் .
> போனமாதிரியே அவசரமாக வெளியே வநது ,இரண்டு ருபாய் கேட்ட காப்பாளரிடம் நவீன கழிப்பறை என்று போட்டிருக்கிறீர்கள் ஆனால் நவீனம் எங்கிருக்கிறது என்று கேட்டேன் .
> அவர் எனன சார் அப்படி சொல்லிட்டீங்க , இங்கே பாருங்கள் கணினியில் ரசிது தருகிறோம் என்றாரே  பார்க்கலாம் .!
> நவீனம் காசுவாங்குவதில்  தான் இருக்கிறது உள்ளே இல்லை .
>
> இப்போதெல்லாம் டீ.வீ  எல்லாம் இனாமாக கிடைக்கிறது .ஆனால் சிறு நீர் போவதற்கு ஏழைக்குக் கூட இரண்டு ருபாய் வேண்டி இருக்கிறது . நண்பர்  கூறியது சரிதான்
> அன்புடன் ,
> சுகுமாரன்
>
>
> 2010/5/26 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>
>> புரியாமல் எல்லாம் இல்லை. அடிப்படைத் தேவைகளைக் காசாக்கப் புரிந்தே வைத்திருக்கிறார்கள். இப்போ கடந்த பத்து வருஷங்களாக இந்த அளவுக்கானும் கழிப்பறைகள் இருக்கின்றன. அதுக்கும் முன்னால் நினைத்தே பார்க்க முடியாது! :((((( அதிலும் பெண்கள், வயோதிகர்கள் என்றால் திண்டாட்டம் தான்!
>>
>> 2010/5/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>
>>>
>>>
>>> 2010/5/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>>
>>>> அருமையான தொகுப்பு. கழிப்பறைகள் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கேயுமே மோசமாய்த் தான் பராமரிக்கப் படுகிறது.  சிதம்பரத்தில் சுலப் இண்டர்நேஷனல் காரர்களால் பராமரிக்கப் பட்டு ஓரளவு சுத்தம் காண முடியும். ஆனால் வெளிநாட்டாரிடம் அதிகமான பணம் வசூலிப்பார்கள். குறைந்த பக்ஷமாய்ப் பதினைந்து ரூபாய். உள்நாட்டு மக்களிடமும் பெண்கள் என்றால் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என வசூலிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் கொடுத்துத் தான் ஆகவேண்டும். இதிலே அரசியல் தலையீடும், கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கீடும் உண்டு. கழிப்பறையைவிட மோசமாக இருக்கும் அவை!
>>>>
>>>

N. Kannan

unread,
May 26, 2010, 8:31:53 AM5/26/10
to mint...@googlegroups.com
என்ன இது புதுக்கதை :-)?
நான் எப்போதும் plain text modeல்தானே அடிக்கிறேன்.
சார் உங்க கணினிக்கு பேய் பிடிச்சிருக்கு;-)
பூசாரியைக் கூப்பிடுங்க :-))

க.>

2010/5/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Subashini Tremmel

unread,
May 26, 2010, 10:25:10 AM5/26/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
பகுதி 10
 
வீரஜக்கதேவி
 
எங்களுக்கு முன் வந்து நின்ற அந்த மனிதர் கட்டபொம்மனின் வாரிசு என்று எங்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள நாங்கள் ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டோம். அவர் சொல்வது உண்மையாக இருக்குமா அல்லது இது ஒரு ஏமாற்றுத்தனமா என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்குமா?  எனக்கு தெரிந்த  வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்படி அவருக்கு குழந்தைகள் இல்லை. அப்படித்தான் என்னுடன் வந்திருந்த மற்றவர்களுக்கும் சிந்தனை ஓடியிருக்க வேண்டும்.
 
ஆக சந்தேகம் தோன்ற அவரைப் பார்த்ததில் அவருக்கு எங்களின் மனதில் ஓடும் எண்ணங்கள் புரிந்திருக்கு வேண்டும். எங்களைப் போன்று இங்கு வரும் சுற்றுப் பயணிகள் பலரை அவர் இங்கு சந்தித்திருப்பார் அல்லவா? ஆக அன்பாக எங்களிடம் தன்னைப் பற்றி அறிமுகம் கூறிவிட்டு "அப்புறம் பேசலாம். முதலில் எங்கள் குலதெய்வம் வீரஜக்கதேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு வாருங்கள். பின்னர் விளக்குகின்றேன்" என்று கூறி எங்களை கோட்டையின் வாசல் பகுதிக்கு அழைத்து வந்தார்.
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வம் வீரஜக்கதேவி கோயில் சிறியதாக எளிமையான தோற்றத்தில் தான் உள்ளது. உள்ளே கோயிலுக்குள் சென்று சுவாமியை ப்ரார்த்தனை செய்தோம். கோயில் பூசாரி/குருக்கள் எங்களுக்கு தீபாராதனை காட்டி ப்ரசாதம் வழங்கினார்.  வீரபாண்டிய கட்டபொம்மன் நின்று வழிபட்ட வீரஜக்கம்மாள் கோயில். மனதிற்கு மேலும் பிரமிப்பாகவே இருந்தது. பூசை முடித்து வரும் வரை எங்களோடு பக்கத்திலேயே இருந்து எங்களுக்கு மேலும் ஒரு அதிகாரியை அறிமுகம் செய்து வைத்தார் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசி என கூறிக்கொண்டவர்.   
 
இந்த அதிகாரியும்  இந்த நினைவு மண்டபத்திலேயே வேலை செய்பவர். அவர் எங்களை வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டை இருந்த இடமான தற்போது சிதலமடைந்து கிடக்கும் பகுதிக்கு எங்களை அழைத்துச் சென்றார். கோட்டையின் இப்பகுதியை பூட்டியே வைத்திருக்கின்றனர். சில நேரங்களில் நல்ல புதிய  அனுவங்களை இறையருள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சான்று என்றே தோன்றியது. இந்த அதிகாரி எங்களை மிகவும் அன்போடு அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்று பூட்டியிருந்த கதவையும் திறந்து எங்களுக்கு நாங்கள் கேட்கும் முன்னரே வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையைப் பற்றிய விளக்கமும் கொடுக்க ஆரம்பித்தார். 
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் சிம்மாசனம் இருந்த இடம், அமைச்சர்கள் அறிஞர் பெருமக்கள் கூடி விவாதிக்கும் அரசவை போன்ற இடங்களைக் காட்டினார். பக்கத்தில் சற்று தள்ளி அந்தப்புரம் இருந்த இடத்தையும் நீச்சல்குளம் இருந்த இடத்தையும் பார்வையிட்டோம். பின்னர் சற்று நடந்து செல்லும் வழியில்  ஒரு குற்ப்பிட்ட பகுதியைக் காட்டி எப்போதும் இப்பகுதி குளிர்ச்சியாகவே இருக்கும் .. காலணியைக் கழற்றி விட்டு நடந்து பாருங்கள் என்று சொல்லி சோதிக்கச் சொன்னார். இந்த இடம் முன்னர் நடன கலைஞர்கள் நடனமாடும் ஒரு மேடையாக இருந்திருக்கின்றது.   இப்பகுதியை நவதானியங்களைக் கொட்டி அதற்கு மேல பிரத்தியேகமாக தயார் செய்து கட்டியிருக்கின்றார்கள்.
 
இதனைப் பார்த்து மேலே நடக்கையில் ஒரு பாதையைக் காட்டி இங்குதான் சுரங்கப்பாதை உள்ளது. 2 கிமீ தூரம் இந்த சுரங்கப் பாதை உள்ளது என்று குறிப்பிட்டார். இப்பகுதியை இப்போது பாதுகாப்புக் கருதி பூட்டியே வைத்திருக்கின்றனர்.
 
இப்பகுதியில் மேலும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட உடைந்த சிலைகள், மஞ்சள் அறைக்க பயன்படுத்திய அம்மி, உரல், என பலவற்றையும் சிறப்பாக காட்சிக்கு வைத்திருந்தார்கள். அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட மேலும் சில பொருட்கள் இப்போது கண்யாகுமரி அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் தகவலையும் தெரிவித்தார். இவற்றையும் பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு எக்களுக்கு விளக்கமளித்த அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளிவே வந்தோம்.  எங்களை தனியே அழைத்து வந்து கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்கு முன் அமரவைத்து தன்னை பற்றிய செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார் வீமராஜா.
 
குறிப்பு: கட்டுரையோடு சேர்த்து படங்களும் ஒலிப்பதிவும் இங்கே வழங்கப்பட்டுள்ளன.  

Subashini Tremmel

unread,
May 29, 2010, 3:01:00 AM5/29/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
பகுதி 11
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள்
 
நெடிய உருவம். தலைப்பாகையுடன், கூரிய பார்வையுடன் எங்களிடம் வந்து தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று அறிமுகப்படுத்திக் கொண்டவரின் பெயர் ஜெகவீர பாண்டிய பீமராஜா.  அமைதியான மனிதர். எங்களிடம் அன்பாகப் பழகி 'பேச நேரம் இருக்கின்றதா' என்று கேட்டுக் கொண்டு தனது கதையைக் கூறினார்.
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசுகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் தற்போது வாழ்கின்றனராம். அவர்களுக்கு வசிப்பதெற்கென்று எந்த கோட்டையுமில்லை. குறிப்பாக இவரது தொழில் ஊர் ஊராகச் சென்று ஜோதிடம் பார்ப்பது. ஆனால் எங்கு சென்றாலும் மீண்டும் பாஞ்சாலங்க்குறிச்சிக்கு வந்து விடுவாராம்.

சுதந்திர போராட்டத்தின் போது வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பெரிதும் உதவிய பாளைய பகுதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்துவதை இன்றளவும் அவர்களது வாரிசுகள் பின்பற்றி வருகின்றனராம்.  நினைவு நாட்கள், சிறப்பு நாட்களில் அவரகளை சந்திக்கச் சென்று சிறப்பு நினைவு நாள் பூஜையில் கலந்து கொண்டு வருவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்திருக்கின்றார் இவர்.
 
ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின் போது கட்டபொம்மனுக்கு ஆதரவாக செயல்பட்ட பாளையங்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தளி பாளையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த உடுமலை அருகிலுள்ள தளி பாளையத்தை ஆட்சி செய்த எத்தலப்பன் சிலை திருமூர்த்தி அணை பகுதியில் உள்ளதாம். போராட்டத்தில் உயிர் நீத்த தளி பாளையக்காரர் சிலைகளுக்கு கட்டபொம்மன் வாரிசுகள் என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்துவதை கடமையாக இவர் வைத்திருக்கின்றார்.
 
சரி. இவர் எந்த வகையில் வீர பாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு என்று கூறிக் கொள்கின்றார் என்பதை அறிய அவரிடம் இதனைக் கேட்டபோது ஒரு விளக்கம் கூறினார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் வீரபாண்டிய கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதை அடுத்து அவரது மனைவி ஜக்கம்மாள் என்ற மல்லம்மாள் நிபந்தனை கைதியாக திருச்சி சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றார். அப்போது சிறையிலிலேயே கர்ப்பிணியாக இருந்த மல்லம்மாளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களின் ஒருவரின் பரம்பரையில் வந்தவர் தான் இந்த ஜெகவீரபாண்டிய பீமராஜா என்று தன்னைப் பற்றிய தகவலை வழங்கினார். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடுத்து ஐந்தாவது தலைமுறையாம்.
 
கட்டபொம்மனின் ராஜ்யம் பிற பாளையக்காரர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதால் 1872ம் ஆண்டுக்குப் பிறகு மாதந்தோறும் 52.50 ரூபாய் பென்ஷனாக கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் அறிமுகப்படுத்திய ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜமீன் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் தடை செய்யப்பட்ட போது இவர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டிருக்கின்றது. 
 
பின்னர் தி.மு.க கட்சி தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் ஜமீன் வாரிசுகளுக்கு 50 ரூபாய் பென்ஷன் தொகை மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த உதவித்தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு இப்போது 1000 ரூபாய் வழங்கப்படுகின்றதாம்.  இந்த உதவித் தொகை போதாததால் வருமையில் வாழ்வதாககவும் வருனமானத்திற்கு ஜோதிடம் பார்த்து பொருளீட்டுவதைத் தொழிலாக செய்து வருவதாகவும் வீமராஜா குறிப்பிட்டார்.
 
நினைவு மண்டபம் கட்டப்பட்ட பின்னர் இந்த வாரிசுகளுக்கு அங்கேயே பக்கத்திலேயே குடியிருக்கவும் வசதியும் செய்து கொடுத்திருக்கின்றது தமிழக அரசு. ஆனால் தற்போது இந்தக் குடியிருப்பு போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் வாரிசுகள் சிலர் வேறு இடங்களுக்கு குடியிருப்பை காலி செய்து விட்டு சென்று விட்டனராம்.  ஆனால் வீமராஜாவும் அவரது குடும்பமும் இங்கேயே இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வருகின்றார்களாம். 
 
வீமராஜாவின் மகன் தற்போது ஒரு தனியார் கம்பெனியில் வேன் ஓட்டுனராகப் பணிபுரிகின்றாராம்.  "நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே கட்ட பொம்மனின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தால் அங்கேயே இருந்து வாழ முடியும். கட்ட பொம்மனின் கோட்டை அமைந்திருந்த 30 ஏக்கர் நிலத்தில் தற்போது  6 ஏக்கர் பரப்பில் மட்டுமே மேம்பாட்டு பணிக,ள் நினைவு மண்டபம் ஆகியவை நிர்மானிக்கபப்ட்டிருக்கின்றன. பிற பகுதிகள் குப்பை கிடங்காக உள்ளன.அப்பகுதியிலும் பல வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அப்பகுதியையும் ஆய்வு செய்யவேண்டும்"  என்றும்  கூறினார்.
 
சுதந்திர போராட்டத்தின் போது தனது மூதாதையரான வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு உதவியவர்களையும் மறக்காமல் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றார் வீமராஜா. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அப்போது உதவிய  கோவை மாவட்டத்தின் தளி பாளையம், திண்டுக்கல் மாவட்டத்தின்  விருப்பாச்சி பாளையம்  ஆகிய பாளையக்காரர்களின் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தானும் தனது குடும்பத்தினரும் பாஞ்சாலங்குறிச்சியை விட்டு போகமாட்டோம் என்று உறுதியுடன் எங்களிடம் பேசினார்.
 
சில நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்ட படங்களையும் அவர் சில நிகழ்ச்சிகளில் சிறப்பு செய்யப்படும் சில படங்களையும் எங்களுக்குக் காட்டினார். ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. காலம் மாறிக் கொண்டிருக்கின்றது. இனிமேலும் ஜமீன், அரச பரம்பரை என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு பொருளாதார சலுகைகளை எதிர்பார்ப்பது என்பது தற்கால நிலைக்கு ஒத்துவராத ஒன்று. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு தன்னையும் மாற்றிக் கொண்டு கல்வி, தொழில் மேம்பாடு, சுய காலில் நின்று தனது குடும்பத்தை பேணுதல் என்ற நிலையில் அரச ஜமீன் வாரிசுகளும் எல்லா சாதாரண குடிமகனைப் போல வாழ பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திர்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்த நினைவு மண்டபத்தில் நடந்த அனைத்துமே அளவில்லா பிரமிப்பு உணர்ச்சியையே கொடுத்திருந்ததால் மதியம் 4 மணியை நெருங்கிக் கொண்டிருந்தாலும் பசி மறந்து  நிகழ்வுகளில் ஒன்றிப் போயிருந்தோம்.
 
வீமராஜாவிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது எங்களிடம் ஜோதிடத்தில் நம்பிக்கை இருக்கின்றதா என்று கேட்டார். ஆமாம் என்றோம். உடனே கையைக் காட்டுங்கள் என்று கூறி எங்கள் ஐந்து பேருக்கும் கைரேகை ஜோதிடம் பார்த்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பலன் கூறினார்.  அவருக்கு நன்றி கூறி ஜோதிடத்திற்கு பணம் கொடுத்து விட்டு புறப்படும் போது எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில் நிற்கும் ஒருவரைக் காட்டி "அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு வந்திருக்கின்றார்." என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம்? எத்தனை வாரிசுகள் உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது. 
 
 
அவர் சொன்னது போலவே நாங்கள் வாகனத்திற்கு அருகில் வரவும் எங்களிடம் வந்து தன்னை தானும் வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று கூறிக் கொண்டு பேச வந்தார். இவரிடமும் பேசியிருக்கலாம். ஆனால் நாங்கள் உடன் ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டிய நிலை. மாலை 4:30 மணிக்குள் அங்கு சென்று சேர வேண்டும். ஆக அவரிடம் வணக்கம் சொல்லி அவசரமாக கிளம்பும் நிலையை சொல்லி வாகனத்தில் ஏறி ஒட்டப்பிடாரம் நோக்கி புறப்பட்டோம்.
 
குறிப்பு: இக்கட்டுரையை படங்களுடன் காண இங்கே செல்லவும்!

N. Kannan

unread,
May 29, 2010, 6:28:37 AM5/29/10
to mint...@googlegroups.com
2010/5/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

>எங்களிடம் வந்து தூரத்தில் எங்கள் வாகனத்திற்கு அருகில்
> நிற்கும் ஒருவரைக் காட்டி "அவர் ஏதும் சொன்னால் நம்ப வேண்டாம். அவரும் தன்னை
> வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு புதிதாக இங்கு
> வந்திருக்கின்றார்." என்று எச்சரித்தார். இது என்ன ஆச்சரியம்? எத்தனை வாரிசுகள்
> உண்மையில் இருக்கின்றார்கள் என்று ஓரளவு திகைப்பு தோன்றத்தான் செய்தது.
>

கட்டு மீசையுடன் அவர் முறுக்காத்தான் இருக்கார்.

ஆனால், ஒரு முயல் நாயை எதிர்த்து நின்ற பூமியில்தானே இப்போது இவர்களும்
இப்படி கட்டபொம்மன் பேரைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்!!

பாவமாகவும் இருக்கிறது..அதே நேரத்தில் காலம் என்னவெல்லாம்
செய்துவிடுகிறது பாருங்கள்? இராஜராஜ சோழனின் வாரிசுகள் எங்காவது
கிளிஜோஸ்யம் சொல்லிக்கொண்டோ, in worst case பிச்சை எடுத்துக்கொண்டோ
இருக்கலாம்.

இதையெல்லாம் பார்க்கும் போது குலம், கோத்திரம் இவைகளில் உள்ள நம்பிக்கை
போய்விடுகிறது! குலத்தொழில் கல்லாமல் பாகம்பட்டால் அந்த கட்டபொம்மனுக்கு
இருந்த ரோஷம் எங்கே போயிற்று இவர்களுக்கு இப்போது?

ரொம்பவும் யோசிக்க வைக்கும் தொடர். அற்புதமாகப் போகிறது சுபா. எல்லோரும்
இப்போது தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் !!

க.>

Subashini Tremmel

unread,
May 29, 2010, 9:42:24 AM5/29/10
to mint...@googlegroups.com
கண்ணன்,


 
2010/5/29 N. Kannan navan...@gmail.com

 
கட்டு மீசையுடன் அவர் முறுக்காத்தான் இருக்கார்.

ஆனால், ஒரு முயல் நாயை எதிர்த்து நின்ற பூமியில்தானே இப்போது இவர்களும்
இப்படி கட்டபொம்மன் பேரைச் சொல்லிக்கொண்டு வாழ்கிறார்கள்!!
இந்தக் கதையைக் கேட்டபோது எனக்கு வேறொன்றும் ஞாபகத்திற்கு வந்தது. மலேசியாவில் 1400களில் மலாக்காவை புகழ் பெறச் செய்த மன்னர் பரமேஸ்வரன் - அவர் கதையிலும் இப்படி ஒரு மான் எதிர்த்து போராடியைக் கண்ட பின் தனது ராஜியத்தை இந்த இடத்திலேயே (மலாக்காவில்) அமைக்க அவர் முடிவு செய்ததாகவும்  நாங்கள் சரித்திர நூலில் படித்திருக்கின்றோம்.  அப்போதெல்லாம் விலங்குகள் கொடுக்கும் சிக்னலின் அடிப்படையில் பல ராஜாக்கள் பெரிய முடிவுகள் எடுத்திருக்கின்றார்கள்..:-)
 
அன்புடன்
சுபா 
 
 
 
பாவமாகவும் இருக்கிறது..அதே நேரத்தில் காலம் என்னவெல்லாம்
செய்துவிடுகிறது பாருங்கள்? இராஜராஜ சோழனின் வாரிசுகள் எங்காவது
கிளிஜோஸ்யம் சொல்லிக்கொண்டோ, in worst case பிச்சை எடுத்துக்கொண்டோ
இருக்கலாம்.

இதையெல்லாம் பார்க்கும் போது குலம், கோத்திரம் இவைகளில் உள்ள நம்பிக்கை
போய்விடுகிறது! குலத்தொழில் கல்லாமல் பாகம்பட்டால் அந்த கட்டபொம்மனுக்கு
இருந்த ரோஷம் எங்கே போயிற்று இவர்களுக்கு இப்போது?

ரொம்பவும் யோசிக்க வைக்கும் தொடர். அற்புதமாகப் போகிறது சுபா. எல்லோரும்
இப்போது தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள் !!

க.>

Tthamizth Tthenee

unread,
May 29, 2010, 11:56:58 PM5/29/10
to mint...@googlegroups.com
இயற்கையின் அங்கமான   விலங்குகள், பறவைகள் போன்ற்வைகள் அளித்த சங்கேதங்களை கண்டுதானே அந்தக் காலத்தில் வாழ்ந்தனர்
 
தற்போது காட்டில் வாழ்ந்த  சந்தன மரக்கடத்தல் வீரப்பன் கூட  பறவைஅலின் ஒலியை வைத்தே அனைத்தையும் கண்டு பிடித்து விடுவாராம்,
 
பூமி சாத்திரப்படி வீடு கட்ட நல்ல நிலங்களைத் தேர்ந்தெடுக்கும் போது
 
இப்போதும் சில் வழி முறைக்ளைப் பின் பற்றுகிறோம்
 
எந்த மனையில் நாம் பார்க்கும் போது பசு மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றனவோ  அந்த மனை சுபிக்‌ஷமாக இருக்கும் என்பது மனையடி சாத்திரம்
 
அதே போல் பசுக்கள்   கூட்டமாக எந்த இடத்தில் இளைப்பாறுகிறதோ
 
அந்த இடம் குளிர்ச்சியாகவும்  பூமியின் அடியில் நீரோட்டமும் இருக்கும் என்பதை உணர்ந்து அங்கே நீர் நிலைகளை அமைத்தவர்கள் நம் முன்னோர்
 
 
மனையடி சாத்திரம் என்பதே  இயற்கையை அடிப்படையாகக் கொண்டு  ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞானம்
 
சுபா அவர்கள் எழுதும்  எட்டைய புரம் நோக்கி என்னும் கட்டுரை நம்மை  பல அறிய செய்திகளை ஆராயத் தூண்டுகிறது
 
மன்னர்களும்  வண்டியோட்டிகளாக மாறும் விந்தை
 
காலத்தின் கோலம்
 
 
தொடருங்கள் சுபா அவர்களே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 

 
29-5-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

Subashini Tremmel

unread,
May 30, 2010, 3:27:46 AM5/30/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
பகுதி 12
 
கிராமத்தில் காளை மாடுகள்
 
அங்கிருந்து ஒட்டப்பிடாரம் செல்ல வேண்டும். ஆக புறப்பட்டு சற்று தூரம் வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது அந்தச் சூழலில் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றே தோன்றியது. ஒரு பெரிய மரம். அதன் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு  எங்களுக்காக ஜெயந்தி கொடுத்து அனுப்பியிருந்த உணவை சாப்பிடலாம் என்று முடிவெடுத்தோம்.
 
இட்லி அதற்கு மிளகாய்பொடியை நல்லெண்ணை விட்டு  தயாராக வைத்திருந்தார். கீதாவும் காய்கறி கலந்த ஒருவகை உப்புமா (அவர் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர்)  அதற்கு ஏற்ற ஒரு துவையல் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார். நாங்கள் நால்வரும் எங்கள் வாகன ஓட்டுனர் ரிஷான் அனைவருமாக சேர்ந்து சாப்பிட்டோம். அப்போதைய அவசர நிலைக்கு அது அமிர்தம். எப்போதுமே நாமாக சமைத்து சாப்பிடுவதை விட பிறர் தயார் செய்து கொடுத்து சாப்பிடும் போது அதன் சுவையே  தனிதான்.
 
சில மத்திய வயது பெண்கள் கூட்டம் கூட்டமாக சாலையில் உணவு பாத்திரங்களைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். வயலில் வேலை செய்பவர்களாத் தான் இருக்கக் கூடும். வயலில் உழைத்து விட்டு இல்லம் திரும்பிக் கொண்டிருந்த இந்தப் பெண்கள் பல கதைகளைப் பேசிக்கொண்டு எங்களைக் கடந்து செல்லும் போது எங்களைப் பார்த்து புன்னகை செய்து விட்டுச் சென்றனர்.  பள்ளியிலிருந்து இல்லம் திரும்பும் மாணவியர் சிலரையும் பார்த்தோம்.  சைக்கிளை ஓட்டிக் கொண்டு பள்ளிச் சீருடையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 
அங்கிருந்து புறப்பட்டு வாகனத்திற்கு வரும் போது இரண்டு மாடுகள் பூட்டிய ஒரு வண்டி எங்கள் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. ஒன்று கருப்பு நிற காளை மாடு.  மற்றொன்று வெள்ளை நிற மாடு. ஒருவர் இந்த மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு வர மற்றொருவர் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ஒருவர் இவர்களோடு பேசிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார். என்ன செய்கின்றார்கள் என்று புரியாததால் அவரிடம் கேட்டு தகவல் விசாரித்தோம். 
 
அந்தக் கருப்பு நிற மாடு அனுபவம் இல்லாத காளை மாடாம். வெள்ளை நிற காளை வண்டியோட்டத்திற்குப் பழக்கப்பட்ட காளையாம். ஆக பழக்கமில்லாத இந்த சிறிய காளையை இந்தத் திறமையான காளையுடன் இணைத்து பயிற்சி கொடுப்பதற்காகத்தான் இந்த முயற்சி என்று சந்தோஷமாக எங்களுக்கு விளக்கினார்கள்.  மனிதர்களும் இப்படித்தானே தொழிலை கற்றுக் கொள்கின்றோம். அனுபவம் மிக்க மூத்த அதிகாரிகளுடனும் பெரியவர்களுடன் கலந்து  பழகும் போது இளையவர்களும் பல தொழில் ரகசியங்களையும் அவர்களது அனுபவங்களையும் எளிதாகக் கற்றுக் கொள்கின்றோம்.
 
அந்தக் கருப்பு நிற காளையைப் பார்த்தால் அதற்கு இந்த வேலையில் இஷ்டம் இல்லை என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு இருந்தது.  பயிற்சி பெற்ற அந்த வெள்ளை நிறக் காளை சற்று உறுதியாக வண்டியை நிமிர்த்தி தாங்கி வந்து கொண்டிருந்தது. நாள் செல்ல செல்ல இந்த சிறிய காளையும் பழகிக் கொள்ளும். 
 
அங்கிருந்து புறப்பட்டு சற்று நேரத்தில் ஒட்டப்பிடாரத்தை அடைந்தோம்.  ஒட்டப்பிடாரத்தில் நாங்கள் பார்க்க வேண்டிய இடம் கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையாகக் குறிப்பிடப்படும் வ.உ.சிதம்பரம்பரனார் அவர்களது நினைவு இல்லம். 
 
இக்கட்டுரையை படங்களுடன் காண இங்கே செல்லவும்!
 

Innamburan Innamburan

unread,
May 30, 2010, 7:45:48 AM5/30/10
to mint...@googlegroups.com
"...எப்போதுமே நாமாக சமைத்து சாப்பிடுவதை விட பிறர் தயார் செய்து
கொடுத்து சாப்பிடும் போது அதன் சுவையே தனிதான்..."

இதில் ஒரு தத்துவமே அடங்கியிருக்கிறது, ஸுபாஷிணி. இந்து காளைகள்,
கலித்தொகை காரியையும், வெள்ளையையும் நிணைவுபடுத்துகின்றன:

இன்னம்பூரான்


2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

N. Kannan

unread,
May 30, 2010, 9:31:27 AM5/30/10
to mint...@googlegroups.com
சூப்பர் படங்கள் சுபா!
அதற்கு சண்டிக்காளை என்று பெயர்.
நாம் சண்டிக்காளையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் நம்மை
கட்டை வண்டி இழுக்க வைத்துவிடும்! :-)
இவ்வளவு பணிக்களுக்கு இடையிலும் தமிழகத்தின் கிராமத்து சூழலை அப்படியே
பாலு மகேந்திரா மாதிரிப் பதிவது அழகு! நடையும் வர, வர மெருகூறுகிறது!
இருந்தாலும் தூங்கப்போகும் முன் இடலி, மிளகாய்பொடியை
ஞாபகப்படுத்தியிருக்க வேண்டாம் (சப்புக்கொஉவது கேட்கிறதா? சுபா சென்னை
போனவுடன் முதல் வேலையா இந்த கீதம்மா வீட்டுக்குப்போய் ஒரு கை
பார்க்கத்தோன்றுகிறது. என்ன?)

க.>

2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:


> பகுதி 12
>
> கிராமத்தில் காளை மாடுகள்
>

Subashini Tremmel

unread,
May 30, 2010, 9:39:27 AM5/30/10
to mint...@googlegroups.com


2010/5/30 N. Kannan <navan...@gmail.com>

சூப்பர் படங்கள் சுபா!
அதற்கு சண்டிக்காளை என்று பெயர்.
 
இந்த இரண்டில் எது? பழகிய காளையா அல்லது அந்த சிறிய காளையா?
 
நாம் சண்டிக்காளையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் சமூகம் நம்மை
கட்டை வண்டி இழுக்க வைத்துவிடும்! :-)
இவ்வளவு பணிக்களுக்கு இடையிலும் தமிழகத்தின் கிராமத்து சூழலை அப்படியே
பாலு மகேந்திரா மாதிரிப் பதிவது அழகு! நடையும் வர, வர மெருகூறுகிறது!
 
உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர் இப்படி சொல்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.  நன்றி கண்ணன்.
 
இருந்தாலும் தூங்கப்போகும் முன் இடலி, மிளகாய்பொடியை
ஞாபகப்படுத்தியிருக்க வேண்டாம் (சப்புக்கொஉவது கேட்கிறதா? சுபா சென்னை
போனவுடன் முதல் வேலையா இந்த கீதம்மா வீட்டுக்குப்போய் ஒரு கை
பார்க்கத்தோன்றுகிறது. என்ன?)
 
நாம் வருவதற்கு முன்னரே அவர் எங்கேயாவது ஒளிந்து கொள்ளப்போகின்றார். ..:-)
 
-சுபா
 

க.>

2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> பகுதி 12
>
> கிராமத்தில் காளை மாடுகள்
>
> இட்லி அதற்கு மிளகாய்பொடியை நல்லெண்ணை விட்டு  தயாராக வைத்திருந்தார். கீதாவும்
> காய்கறி கலந்த ஒருவகை உப்புமா (அவர் குஜராத்தில் பிறந்து வளர்ந்தவர்)  அதற்கு
> ஏற்ற ஒரு துவையல் ஒன்றையும் கொண்டு வந்திருந்தார்.

Geetha Sambasivam

unread,
May 30, 2010, 10:50:37 AM5/30/10
to mint...@googlegroups.com


2010/5/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
May 30, 2010, 10:51:17 AM5/30/10
to mint...@googlegroups.com
மின் வெட்டு அதிகம் உள்ளதால் இணையத்துக்கு வர முடியலை. இப்போப் பரவாயில்லை இரண்டு நாட்களாக அவ்வளவாய் மின் வெட்டு இல்லை.

2010/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Tthamizth Tthenee

unread,
May 30, 2010, 11:05:16 AM5/30/10
to mint...@googlegroups.com
சுபா அவர்களின்  கட்டுரை எழுதும் தன்மை
 
பழகிய காளை போன்று மெருகேறுகிறது
 
பல சண்டிக் காளைகளை  நல்ல தடத்தில்  பழக்கும்  நடை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
30-5-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



--
360.gif

Subashini Tremmel

unread,
May 31, 2010, 2:56:39 PM5/31/10
to மின்தமிழ், ksuba...@gmail.com
 
பகுதி 13
 
 
வ. உ.சிதம்பரனார் பிறந்த இல்லம்

எட்டயபுரத்தில் நான் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் ரகுநாதன் நூல் நிலையத்தின் மேலாளர் திரு.இளசை மணியன் அவர்கள்.  அவரை நூலகத்தில் சந்தித்த வேளையில் கிடைத்தற்கு அரிதான சில நூல்களை எனக்குக் காட்டினார். அத்தோடு வ.உ.சிதம்பரம் பிள்ளையவர்களின் கையெழுத்தில் அமைந்த ஒரு கடிதம் ஒன்றினையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இக்கடிதத்தை இங்கே காணலாம்.    இது 30.11.1933ல் எழுதப்பட்டதாக திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.    
 
ஒட்டப்பிடாரம் சிறு நகருக்குள் வந்ததுமே எந்த சிரமமுமின்றி வ.உ.சி.அவர்கள் பிறந்த இல்லத்தை அடைந்தோம். இந்த நினைவு மண்டபத்தின் ஒரு பகுதியில் நூலகமும் இயங்கி வருகின்றது. அதற்கு "பொது நூலகம்" என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. ஆகவே நாங்கள் சென்றிருந்த சமையத்தில் சிலர் அங்கு அமர்ந்து செய்தித்தாட்கள் நூல்கள் ஆகியவற்றை வாசித்துக் கொண்டிருந்தனர்.
 
மண்டபத்தின் வாசலிலேயே  திரு.வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய செய்தி சுவரில் பொறிக்கப்பட்டு வருபவர்களுக்கு அறிமுகமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் சில முக்கிய குறிப்புச் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
 
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்
தோற்றம்: 5.9.1872 மறைவு : 18:11.1936
 
சுதந்திரம் நம்பிறப்புரிமை என்ற தாரக மந்திரத்தை தலைமேற்தாங்கி சுதேசியப்பற்றை ஊட்டி வளர்த்த வ.உ.சி. ஒட்டப்பிடாரத்தில் பிறந்தார்.
 
1895ல் வாய்மைமிக்க வழக்கறிஞரானார். அன்னியராதிக்கத்துக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதரவாகப் போராடிச் சிறைவாசம் சென்று "செக்கிழுத்த செம்மல்" ஆனார். (1908)
 
நாவாய் செலுத்தி நாடு செழிக்க " காலியா-லாவோ"  என்ற இரண்டு கப்பல்கள் (1907) கடலில் வணிக ரீதியில் மிதக்க விட்டார்.
 
சிறைத்தண்டனையிலிருந்து (1912) விடுதலையான பின் செந்தமிழ் செழிக்க இலக்கிய நூல்களை ஏராளமாக எழுதினார்.
 
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே தன் சுயசரிதையைக் கவிதையில்  எழுதிய ஒரே தலைவர் வ.உ.சி.
 
வ.உ.சி. பிறந்த இல்லம் புதிதாக நிர்மாணிக்க 7.8.1957 அன்று முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு 12.12.1961 அன்று முதலமைச்சர் திரு.கு.காமராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 
இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம். இந்த மண்டபத்தின் வாசலிலேயே மற்றொரு அறிக்கையும் இணைக்கப்படுள்ளது. அதில் திருநெல்வேலியில் உள்ள வ. உ.சி. மணிமண்டபம் பற்றிய சிறு குறிப்பு உள்ளது.
 
 
திருநெல்வேலியில் வ. உ.சி. மணி மண்டபம்
ரூ.80 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு  23.6.2005 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் திறந்து வைப்பட்டது
 
என்ற செய்தி வாசலில் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.
 
 
வ. உ.சிதம்பரனார் அவர்களது வாழ்க்கைக் வரலாறு குறிப்பு ஒரு இரும்பு தகட்டில்  எழுதப்பட்டு ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதில்  இருக்கும் குறிப்புக்கள்:
 
1872 செப்டம்பர் 5  வியாழன்.  பிறப்பிடம்: ஒட்டப்பிடாரம்
1895 திருமணம்
1900 தூத்துக்குடியில் வழக்கறிஞர் பணி ஏற்பு
1908 'சுதேசிக் கம்பெனி'  எனும் பெயரில் கப்பல் கம்பெனி நிறுவுதல்
1907 சூரத் காங்கிரசில் புரட்சி
1908 மார்ச் 12.  வ. உ.சி. கைது
1908 மார்ச் 13.   நெல்லை தூத்துக்குடியில் கலகம்
1908 ஜூலை 7. வ. உ. சிக்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை
 
இக்கட்டுரையை திரு.வ.உ.சிதம்பரனார் பிறந்த இல்லத்தின் படங்களுடன் காண் இங்கே செல்லவும்!

Subashini Tremmel

unread,
May 31, 2010, 2:58:23 PM5/31/10
to mint...@googlegroups.com
நன்றி தேனீயார்..:-)

 
2010/5/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 3, 2010, 1:57:41 AM6/3/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
பகுதி 14
 
வ. உ.சிதம்பரனார் பற்றி மேலும்
 
வ. உ.சிதம்பரனாரின் பிறந்த இல்லத்தை நல்ல முறையில் பராமரித்து வருகின்றனர். ஆனாலும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் தகவல்களும் ஒரு நினைவு மண்டபத்தில் உள்ளது போலன்றி ஒரு கிராமப்புற பள்ளிக்கூட சுவர்களில் ஒட்டி காட்சிக்கு வைத்திருக்கும் தகவல் போலத்தான் எனக்குத் தோன்றியது.
 
வ. உ.சிதம்பரனாரின் வாழ்க்கை குறிப்புச் செய்திகள், அவரது நூல்கள் பற்றிய விபரங்கள், குடும்பப் படங்கள் என சில புகைப்படங்களும் செய்திகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதிகமான விபரங்கள் வேறு எவற்றையும் காணோம்.  இருப்பினும் இங்குள்ள சில படங்கள் மிக அரிதானவை. 
 
 
முதலிலே நமக்கு தென்படுவது வ. உ.சிதம்பரனாரின் இளமை காலத்து புகைப்படம் ஒன்று.  இப்படத்தில் இவர் அணிந்திருக்கும் உடையைப் பார்க்கும் போது ஓரளவு 19ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் மக்கள் அணிந்த உடைகள், தலைப்பாகை, காலணி போன்றவற்றின் தன்மைகளை ஓரளவு தெரிந்து கொள்ள முடிகின்றது.
 
 
அடுத்ததாக இருப்பது வ. உ.சிதம்பரனாரின் முதல் மனைவி வள்ளியம்மை அவர்களுடன் இவர் சேர்ந்து இருப்பதாக உள்ள படம்.  இதில் வள்ளியம்மை சேலை மட்டும் கட்டியிருக்கின்றார்.  சேலைக்கேற்ற ரவிக்கை இல்லை. கழுத்தில் இவர் அணிந்திருக்கும் அணிகலன் வித்தியாசமாக இருக்கின்றது.  அதே போல காதில் அணிந்துள்ள அணிகலன், மூக்குத்தி போன்றவையும் வித்தியாசமாகth தோற்றம் அளிப்பதாக உள்ளன.
 
அடுத்து இருப்பதும் இவர் வள்ளியம்மையுடன் உள்ள மற்றொரு படம். இது பிற்காலத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வருடம் பற்றிய தகவல் இல்லை. இருவரும் சற்று முதிர்ச்சியுடன் காணப்படுகின்றனர். இந்தப் புகைப்படத்தில் வள்ளியம்மை சேலைக்கு ரவிக்கையும் அணிந்து காட்சி தருகின்றார்.  இவர் அணிந்திருக்கும் கழுத்து, கை அணிகலன்கள் பெரிதாக வித்தியாசமாக காட்சியளிக்கின்றன.
 
இதற்கு அடுத்து இருப்பது மேலும் ஒரு குடும்பப் படம். இதில் வ. உ.சி அவர்கள் அவரது மனைவிடன் சேர்ந்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது இரண்டாவது மனைவியாக இருக்கலாம். முகக் குறிப்பின் அடிப்படையில் வள்ளியம்மையை விட வித்தியாசமாகத் தோன்றுகின்றார். இவரது அணிகலன்கள் பெரிதாக வித்தியாசமாக இருக்கின்றன. சேலைக்குக் கைப்பகுதி இல்லாத ரவிக்கை அணிந்திருக்கின்றார். இது அந்த காலகட்டத்தில் நாகரிகமாக இருந்திருக்கக்கூடும்.
 
அதற்கடுத்து இவரது நெருங்கிய நண்பர் என்று குறிப்பிடப்பட்டு பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பக்கத்தில் ஒரு உறவினருடன் வ. உ.சி அவர்கள் இருப்பதாக ஒரு படம். அதற்குப் பக்கத்தில் சுப்ரமணிய சிவா அவர்களின் படம் ஆகியவை உள்ளன.
 
வ. உ.சி எழுதி இதுவை வெளிவராத நூல்கள் என ஒரு பட்டியல் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட நூல்களின் பெயர்கள் இதோ.
 
1. சிவ மதம்
2. விஷ்ணு மதம்
3. புத்த மதம்
4. ஊழை வெல்ல உபாயம்
5. இஸ்லாம் மதம்
6. கிருஸ்து மதம்
7. மனித மதம்
8. முத்தி நெறி
9. The Universal Scripture
10. திருக்குறள்
11. திலக் மகரிஷி
 
இக்கட்டுரையைப் படங்களுடன் காண இங்கே செல்லவும்.

Geetha Sambasivam

unread,
Jun 3, 2010, 2:03:14 AM6/3/10
to mint...@googlegroups.com
மிக அரிய தகவல்களுக்கும், அவற்றைப் பதிந்தமைக்கும் நன்றி. உங்களுடனேயே பயணிக்கிறேன்.

2010/6/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--

Subashini Tremmel

unread,
Jun 3, 2010, 2:38:19 AM6/3/10
to mint...@googlegroups.com

திருமட்தி கீதா, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த படங்களில் பெண்கள் அணிந்துள்ள அணிகலன்களின் பெயரை கண்டுபிடித்து எனக்கு எழுதுங்கள். கட்டுரையில் நான் சேர்த்துக் கொள்கிறேன்.
 
நன்றி
சுபா

 
2010/6/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 3, 2010, 3:01:01 AM6/3/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம் பார்த்தேன் ஒரு சில நகைகள் புரிந்தன.

புஜத்தில் வங்கி,  மணிக்கட்டில் வளையல்கள், (துளைகள் இருக்கும்) காதில் போடும் தண்டட்டி, மூக்கில் புல்லாக்கு, காரை எனப்படும் கழுத்தணி, கழுத்தை ஒட்டிய அட்டிகை, மூக்குத்தி, போன்றவை மற்றவை படத்தைக் கொஞ்சம் பெரிசாக்கிப் பார்க்கிறேன்.

Swaminathan Venkat

unread,
Jun 3, 2010, 4:34:08 AM6/3/10
to mint...@googlegroups.com
சுபாஷிணி அவர்களின் பிரயாண குறிப்புக்களையும் அவற்றுடன் வரும் புகைப்படங்களையும் தவறாது பார்த்து வருகிறேன். படங்கள் மிக முக்கியமானவை. அக்கால கட்டத்துக்கு நம்மை எடுத்துச் செல்பவை. குறிப்பாக சுபாஷிணியும் குறிப்பிட்டுள்ள உடை, நகை முதலியவை. உயர் குடும்பத்தை, கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கூட. ரவிக்கை அணிவதில்லையோ. முதல் மனைவி சிறு பிர்யாத்தில் இருந்தும் ரவிக்கை அணியவில்லை கழுத்தில் அணிந்திருக்கும் அட்டிகை ரொம்பவும் கனமாக இருக்கும் போல் இருக்கிறது.

V, Dhivakar

unread,
Jun 3, 2010, 5:11:38 AM6/3/10
to mint...@googlegroups.com
வ.உ. சிதம்பரம் பிள்ளை, கோவைச் சிறைவாசம் முடிந்தபின்னர் சென்னை வந்து குடியேறிவிட்டது அவர் வாழ்க்கையில் பல மாற்றங்களை செய்திருக்கலாம்.

1895க்கு அப்பால் உள்ள பிள்ளைமார் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் என்னுடைய 'எம்டன்' நாவலுக்காக சேகரணம் செய்யும்போது, தமிழகத்தில் இரண்டு விதமான பிரிவில் அப்போதைய பிள்ளைமார் குடும்பங்கள் தங்கள் கலாசாரத்தைக் காத்து வந்தது தெரிய வந்தது. தூத்துக்குடி, திருநெல்வேலி சார்ந்த மக்கள் பழைமையை நெடுங்காலம் தொடர்ச்சியாக பின்பற்றிவந்தனர். அந்த காலக் கட்டத்திலேயே தஞ்சை, திருச்சிப் பகுதியில் உள்ள பிள்ளைமார் குடும்பங்கள் காலத்தின் வெகு வேகமான மாற்றத்தைத் தங்கள் வழியே ஏற்றுக் கொண்டனர்.

பொதுவாக 'பட்டண' வாழ்க்கையின் தாக்கம் தெற்கே படிப்படியாகவே நகர்ந்தது என்றும் சொல்லலாம்.

திவாகர்

2010/6/3 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Subashini Tremmel

unread,
Jun 4, 2010, 7:23:56 AM6/4/10
to mint...@googlegroups.com
உங்கள் கருத்துக்கு நன்றி திரு.வெங்கட் சுவாமித்தன் அவர்களே.
ஆம். படங்கள் நாம் சொல்ல வரும் விஷயத்தை எளிதில் புரிந்து கொள்ளவும் அக்காலத்து நிகழ்ச்சிகளை ஓரளவுக்கு நமக்கு புரிந்து கொள்ளவும் உதவுகின்றன.  அதனால் தான் நான் பதிவு செய்த அனைத்து படங்களையும் தவறாது  கட்டுரையுடன் முடிந்தவரை இணைத்து வருகின்றேன். நீங்கள் குறிப்பிடுவது போல இந்த நகைகள் நிச்சயம் கனமான ஒன்றாகத்தான் இருக்கும். பார்க்க அப்படித்தான் தெரிகின்றன.
-சுபா
2010/6/3 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jun 4, 2010, 7:29:35 AM6/4/10
to mint...@googlegroups.com
பகுதி 15
 
வ. உ.சிதம்பரனாரின் இலக்கிய சமுதாயப் பணிகள்
 
கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காகவும், சிந்தனை புரட்சிக்காவும், சமுதாய நலனுக்காகவும் உழைத்தவர்களில் வ. உ.சிதம்பரனார்  மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். சிறை தண்டனை பெற்று சிறையில் மிகவும் உடல் வருத்தும் கடுமையான தண்டனைகளைப் பெற்றவர்; மாடுகள் இழுக்கும் செக்கை இழுக்கும் தண்டணையைப் பெற்று மிகவும் துன்புறுத்தப் பட்ட அவரை 'செக்கிழுத்த செம்மல்' என்றும் சிறப்பித்து அழைக்கின்றோம். 
 
இந்தியாவில் ஆங்கிலேயர்களின்  ஆட்சியை எதிர்த்தவர்கள் கையாண்ட யுக்திகள் பலவிதம். இதில் வ. உ.சிதம்பரனாரின் உத்திகளில் பொருளாதார அடிப்படையில் மக்கள் சுயமாக முன்னேறவும் ஆங்கிலேயர்களை அண்டி இல்லாமல் இயங்கவும் மேற்கொண்டதை இன்றும் நாம் போற்றுகின்றோம்.  வணிக குடும்பத்தில் பிறந்து வக்கீலாக கல்வி தகுதி பெற்று தொழில் செய்த போதிலும் வணிகத்திலும் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
 
தமிழர்களின் சரித்திரத்தில் கடந்த நூற்றாண்டில் வணிகக் கப்பல் விட்டு சரித்திரம் படைத்தவர் இவர். இதனால் இவர் கப்பலோட்டிய தமிழன் என்றும் சிறப்பாக அறியப்படுகின்றார். பெறும் செல்வந்தராக இருந்த போதிலும் மக்கள் நலனுக்காவும், நாட்டின் சுதந்திரத்துக்காகவும் மக்களோடு இணைந்து போராடி அவர்களுக்குச் சிந்தனை எழுச்சி ஊட்டியவர் இவர்.  
 
அப்போதிருந்த ஆங்கிலேய அரசு இவர் மேல் பழி சுமத்தி இவரை சிறைக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாது அவர்து சொத்துக்களையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். 
 
இவரது சமூகப் பணி இந்திய அரசியலின் சுதந்திர நோக்கத்தோடு நின்று விடவிலலலை.  இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டவர் வ. உ.சி அவர்கள்.   ஒரு படைப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும், பதிப்பாசிரியராகவும், மொழிபெயர்ப்பாசிரியராகவும், கவிஞராகவும் இவர் திகழ்ந்திருக்கின்றார். இவர் எழுதிய நூல்களின் பட்டியல் இங்கே:
 
  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • எனது பாடல் திரட்டு
  • வ. உ.வி.கண்ட பாரதி
  • சுயசரிதை
 
இவர் மொழி பெயர்ப்பு செய்த நூல்களின் பட்டியல்:
  • மனம் போல வாழ்வு
  • அகமே புறம்
  • வலிமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்
 
இவர் உரை எழுதியவையாக குறிப்பிடப்படும் நூல்களின் பட்டியல்:
  • சிவ ஞான் போதம்
  • இன்னிலை
  • திருக்குறள்
     
    இவரது முயற்சியில் இவரால் பனை ஓலை சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல்:
    • தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் (இளம்பூரனார் உரை)
    • தொல்காப்பியம் - சொல்லதிகாரம் (இளம்பூரனார் உரை)
    • சிவ ஞான் போதம்
     
    இத்தகைய இலக்கியப் பணிகள் மட்டுமின்றி இவர் பத்திரிக்கைகளையும் நடத்தியிருக்கின்றார். அவற்றின் பட்டியல்:
    • விவேக பாநு
    • தமிழ் நேஷனல்
    • பத்திரிகை
    • இந்து நேசன்
     
    சைவ சித்தாந்த சபையில் முக்கியமான அங்கம் வகித்தும் சைவ சித்தாந்த தத்துவங்களில் ஆர்வம் கொண்டவராகவும் திகழ்ந்திருக்கின்றார்.  சிவஞானபோத உரை எழுதுவதற்கு முன்னரே தூத்துக்குடியில் சைவ சித்தாந்த சபையில் அவர் பல சைவ  சித்தாந்தம் தொடர்பான உரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வந்துள்ளார்.   1934-35களில் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த தினமணி நாளிதழின் வருஷ அனுபந்தத்தில் தான் வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது சிவஞானபோத உரையின் முதல் வடிவை எழுதியிருக்கின்றார். பிறகு அந்த உரை, நூல் வடிவில் தூத்துக்குடி எட்டையபுரம் நெடுஞ்சாலையிலுள்ள குறுக்குச் சாலையில் அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.
     
    இவரது சொற்பொழிவுகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு 'எனது அரசியல் பெருஞ்செயல்'  என்ற தலைப்பில்  அச்சு வடிவம் கண்டுள்ளது.  இது அவரது அரசியல் அனுபவங்களை எடுத்துக் காட்டும் சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படுகின்றது.
     
     
    வ. உ.சிதம்பரனாருக்கு ஏழு குழந்தைகள். அவர்கள்:
    1. மரகத வல்லி
    2. ஆனந்த வல்லி
    3. வேத வலி
    4. ஞானம்மாள்
    5. ஆறுமுகம்
    6. சுப்பிரமணியம்
    7. வாலேஸ்வரன்
     
    இந்திய அரசு வ. உ.சிதம்பரனாரின் தேசியப் பற்றினை மதித்து அவரது பெயரில் தபால் தலையையும் வெளியிட்டு அவரை பெறுமை படுத்தியுள்ளது.
     
    இந்த நினைவு மண்டபத்திலேயே அவரது மறைவுக்குப் பின் அவருக்கு நடத்தப்பட்ட இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் உள்ளது. அவரது அனைத்து சேவைகளையும் தெரிந்து அவரது இல்லத்திலேயே இருந்து உணர்ந்து   இப்புகைப்படத்தைப் பார்க்கும் போது மனம் கலக்கம் கொள்வதை தடுக்கமுடியவில்லை.  இந்த இறுதி யாத்திரை புகைப்படத்தில் இவரது மகன்கள் வ.உ.சி. ஆறுமுகம், வ.உ.சி. சுப்பிரமணியம், வ.உ.சி. வாலேஸ்வரன்  ஆகியோர் இருப்பதாக இப்படத்தோடு உள்ள குறிப்பில் உள்ளது. இவர்களோடு இவரது நண்பர்கள் பெ.கந்தசாமி பிள்ளை, மாசிலாமணிப்பிள்ளை, பாபா ஜான் ஆகியோரும் இருப்பதாகவும் இந்தக் குறிப்பில் உள்ளது.
     
    வ.உ.சி. அவர்களின் வாரிசுகளைப் பற்றிய  சில தகவல்களை நாம் அவ்வப்போது தமிழக பத்திரிகைகளில் பார்க்கின்றோம்.  இச்செய்திகள் தொடர்பாக மின் தமிழில் வெளிவந்த சில  செய்திகளைக் காணாலாம்.
     
    வ. உ.சி அவர்களைப் பற்றிய தகவல்களை இணையத்திலும் சில வலைப்பூக்களில் காணலாம். குறிப்பாக:
     
    வ. உ.சி பற்றி மின் தமிழில் நண்பர்கள் சிலர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சில உள்ளன. குறிப்பாக: http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/64c8244df909debe
     
    சிறையிலிருந்து திரும்பிய பின்னர் தனது  இறுதி காலத்தில் வ. உ.சி அவர்கள் பொருளாதார அடிப்படையில் மிகுந்த சிரமமான நிலையில் வாழ்ந்திருக்கின்றார். அது பற்றி கல்கியில் வெளிவந்த தகவல் ஒன்று இங்கே உள்ளது.   http://groups.google.se/group/mintamil/browse_thread/thread/b4b1b28d9c536e9f இதில் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி என்பதர் தனது தாத்தா தியாகி என்.தண்டபாணியும் வ. உ .சி அவர்களும் கூட்டாக அரிசிக்கடை வைத்து வியாபாரமும் செய்ததையும் அதில் ஏற்பட்ட நஷ்டம் பொருளாத சிக்கல் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
     
    இலங்கையில் வெளியாகும் "வீரகேசரி" நாளிதழில் பால கங்காதர திலகரைப் பற்றி "திலக மகரிஷி" என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரைகள் பற்றிய செய்தி ஒன்றும் மின்தமிழில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதனை http://groups.google.az/group/mintamil/browse_thread/thread/3e8989cfb4c959da காணலாம்.
     
    வ. உ.சி அவர்களின் வாழ்க்கை அவரது சமூக சேவையை விளக்கும் இரண்டு கட்டுரைகள் மரபு விக்கியில் உள்ளன. அவற்றைக் காண
     
     
    இந்தக் கட்டுரையைப் படங்களுடன் காண இங்கே செல்லவும்.

    Tthamizth Tthenee

    unread,
    Jun 4, 2010, 8:56:48 AM6/4/10
    to mint...@googlegroups.com
    உயர் திரு வ  உ சிதம்பரனாரின் தாய்வழி வாரிசு ஒருவரை   சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தேன்,      அவருடைய பெயர்  யு முத்துக்குமாரசுவாமி,
     
    அவருடைய தொடர்பு எண்
     
    9840245279,  9940241933
     
    இணைய தொடர்பு:  mksch...@yahoo.com
     
    இவரைத் தொடர்புகொண்டால் இன்னும் அதிக விவரங்கள் கிடைக்கலாம்
    அவருடன்  தொலைபேசியில் உரையாடினேன்
     
    அவர்  திரு  வ உ சி அவர்களைப் பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டிருக்கிறார்
    அனேகமாக முடித்துவிட்டார் ,கூடிய விரைவில் வெளியிடப் போகிறார்
    அவரிடம்   அவரைப் பற்றிய குறிப்புகளை எனக்கு அனுப்புமாறு  வேண்டினேன்
    அவரும் அனுப்புவதாக  வாக்களித்தார், அவர் அந்தக் குறிப்புகளை அனுப்பியவுடன் மீண்டும் இந்த இழையில் நான் அந்தக் குறிப்புகளை அனுப்புகிறேன்
     
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ
     
     


     
    4-6-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



    --
    மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    Subashini Tremmel

    unread,
    Jun 5, 2010, 5:14:10 PM6/5/10
    to mint...@googlegroups.com
    நல்ல செய்தி தேனியார். நாம் அவரை தொடர்பு கொண்டு மேலும் விபரங்கள் பெற முயற்சிப்போம்.  திரு வ  உ சிதம்பரனாருக்கு உறவினர் என்ற முறையில் மேலும் அதிகமான தகவல்களை அவர் நமக்கு வழங்கக் கூடும். தகவலுக்கு மிக்க நன்றி.
     
    அன்புடன்
    சுபா
     
    குறிப்பு: மடலாடற் குழுவில் ஒருவரது அனுமதி பெறாமல் அவர்களது தொலைபேசி எணகளை நாம் வெளியிடக் கூடாது. இதனை சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

     
    2010/6/4 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Jun 5, 2010, 5:16:52 PM6/5/10
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    பகுதி 16
     
    சீவலப்பேரியில்..
     
    ஒட்டப்பிடாரத்தில் வ. உ.சிதம்பரனார் இல்லத்தில் குறைந்த நேரமே நாங்கள் இருக்கும் நிலை. ஆக அதே கட்டிடத்தில் உள்ள நூலகத்தை பார்வையிடுவதற்குள் நினைவு இல்லத்தின் பார்வையாளர்களுக்கான நேரம் முடிந்ததால் அங்கிருந்து பயணப்பட ஆரம்பித்தோம்..  அவரது நூல்களுள் சிலவும் அவர் நடத்தியதாக நாங்கள் அறிந்து கொண்ட சில பத்திரிக்கைகளும் கூட அங்கு இருக்க வாய்ப்புண்டு.  ஆனால் இதனை அறிந்து கொள்ள நேரம் இல்லாத நிலையில் புறப்பட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு!  
     
     
    வ. உ.சி அவர்கள் பதிப்பித்த நூல்கள், அவர்  எழுதி வெளியிடப்படாத நூல்களாகக் கருதப்படும் சில நூல்கள் ஆகியவற்றைத் தேடி அவற்றை மின்பதிப்பு செய்ய வேண்டியதற்கான அவசியம் உள்ளது. வ. உ .சி அவர்களின் சிந்தனைகள் மக்களை சென்றடைய வேண்டியதில்  நமக்கும் பெரும் பங்கு இருக்கின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளில் இதனையும் நாம் கருத்தில் கொண்டு செய்யல்பட வேண்டும் என்ற நினைப்போடு அங்கிருந்து புறப்பட்டோம். ஒட்டப்பிடாரத்திலிருந்து சீவலப்பேரி வந்து அங்கிருந்து நேராக நெல்லைக்குத் திரும்பலாம் என முடிவானது.
     
    ஒட்டப்பிடாரத்திலிருந்து சீவலப்பேரி செல்லும் வழியில் ஒரு பழம் கோயில் ஒன்று தென்பட்டது. சற்று நிறுத்திப் பார்த்துச் செல்லலாம் என  நினைத்து வாகனத்தை நிறுத்தினோம். அந்தக் கோயிலின் பெயர் உலகாண்டேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த அம்மன் கோயிலின் முன்புறத்தில் ஒரு காத்தவராயன் சிலை ஒன்றும் உள்ளது.  ஆலயத்தின் பக்கத்திலேயே வயல்கள். அந்த மாலை நேரத்திலும் வயலில் சிலர் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்.  வயலை உழுவதற்காகப் பயன்படுத்தப்படும் வண்டி ஒன்றும் பக்கத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
     
    சற்று நேரம் இந்த சூழலைப் பார்த்து இயற்கையை ரசித்துக் கொண்டே அன்று நாங்கள் பார்த்த விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டோம். 
     
    இந்தக் குறுகிய இடைவேளைக்குப் பின்னர் எங்கள் பயணம் தொடர்ந்தது. திரு.விஸ்வநாதன் சீவலப்பேரியில் ஒரு பிரசித்தி பெற்ற ஆலயம் இருப்பதாகவும் அங்கு சென்று பார்த்த பின்னர் நெல்லைக்குத் திரும்பலாம் என்று திடீரென்று ஒரு கருத்தைக் கூறினார். கோயிலின் பெயர் விஷ்ணு துர்கை ஆலயம்.  இந்த வட்டாரத்தில் சற்று பிரசித்தி பெற்ற ஆலயமாம். கீதா பகவதி இருவரும் கூட இங்கு வந்து பல நாட்கள் ஆகி விட்டதால் வழியில் நிறுத்தி இந்தக் கோயிலையும் பார்த்து வருவது என முடிவானது.  
     
    சீவலப்பேரியில் மேலும் சில பழமை வாய்ந்த ஆலயங்கள் இருக்கக் கூடும். வாகனத்தில் பயணிக்கும் போதே தூரத்திலிருந்து மேலும் ஒன்றிரண்டு ஆலயங்கள் வழியில் தென்பட்டன. சற்று நேரத்தில் திரு.விஸ்வநாதன் குறிப்பிட்ட விஷ்ணு துர்க்கை ஆலயத்தை வந்தடைந்தோம். இது மிகப் பழமையான ஆலயமாக இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதை ஆலயத்தை பார்த்தபோதே தெரிந்து கொண்டேன். ஆலயம் அமைதியான சூழலில்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்ற சமயத்தில் கோயிலில் அர்ச்சகர்கள் அலுவலகத்தோரைத் தவிர வேறு யாருமில்லை.
     
    கோயிலின் பின் புறத்தில் ஒரு சித்தர் சமாதியும் இருக்கின்றது.  கோயிலின் அமைப்பு மலேசிய ஹிந்து ஆலயங்களின் தோற்றத்தை எனக்கு நினைவூட்டுதாக அமைந்திருந்தது. ஆலயத்தில் வழிபாடு செய்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம். 
     
     
    சீவலப்பேரியிலிருந்த நெல்லை செல்லும் பாதை செல்வதற்கு பிரச்சனைகள் இல்லாத, ஓரளவு நன்றாக அமைக்கப்பட்ட நிலையிலேதான் இருக்கின்றது. பொதுவாக இப்பகுதியில் வாகனங்கள் பயணிப்பது சற்று குறைவாக இருப்பதனால்  எங்கள் பயணம் சுகமான ஒன்றாகவே அமைந்திருந்தது. சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒரு பழைய தேர் ஒன்று நிறுத்தி வைக்கப்படிருப்பதைக் கண்டேன்.
     
    சற்று அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு பார்த்த போது மிக அழகாக மரத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த தேர் சக்கரம் ஒன்று உடைந்த நிலையில் புழக்கத்தில் இல்லாத நிலையில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. அந்த தேருக்குப் பக்கத்தில் ஒரு மிகச் சிறிய பாழடைந்த ஆலயம் ஒன்று சிதிலமடைந்து ஒரு சிறு பகுதி மட்டும் உள்ளது. அதில் இருக்கும் தெய்வ வடிவம் என்ன என்பது தெரியவில்லை. யாராவது ஒரு சித்தரின்  சமாதியாக இருக்கலாமோ என்ற எண்ணமும் கூட தோன்றியது.  இந்தப் பெரிய உடைந்த தேர் அந்தப் பாழடைந்த சிறு கோயிலை மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது. இந்தத் தேர் உடைந்து பயன்பட்டில் இல்லாத நிலையிருந்த போதிலும் அதன் மர வேலைப்பாடுகள் பார்ப்பவர்களைப் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது என்று தான் கூற வேண்டும். 
     
     
    சீவலப்பேரியிலிருந்து தொடர்ந்து பயணிக்கும் போது சாலைக்குப் பக்கத்திலேயே தாமிரபரணி ஆறு ஓடிக் கொண்டிருப்பதையும் நாங்கள் பார்க்கத் தவறவில்லை.  அந்த மாலை வேளையில் ஆற்றின் கறைகள் மிகப் பசுமையாக மிக ரம்மியமாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது. சாலையில் ஆங்காங்கே சில கோயில்கள். பெரும்பாலும் காவல் தெய்வங்களின் கோயில்கள்.  அன்றும் கூட ஏதோ ஒரு திருவிழா ஏற்பாடாகியிருக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையின் ஒரு பகுதியில் சிலர் கூடி இருந்தனர்.
     
    மஞ்சள் நிற வேட்டி துண்டு அணிந்த ஆடவர்களில் சிலர் காவடி எடுப்பதற்காகத் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தனர். இவர்களை உற்சாகப்படுத்த கிராமிய இசைக் கலைஞர்கள்  வாத்தியக் கருவிகளுடன் கூடியிருந்தனர். ஆற்றங்கரையில் பூஜை செய்து அங்கிருந்து காவடி எடுத்துக் கொண்டு புறப்படுவார்கள் போலும். சற்று நேரம் அங்கிருந்து இதனை பார்த்துக் கொண்டிருந்து விட்டு புறப்பட தயாரானோம். அப்போது சாலையின் குறுக்கே அழகிய மயில் ஒன்று எங்களை கடந்து சென்றது.  இந்த சூழல் மறக்க முடியாத மிக அழகிய காட்சியாக என் மனதில் இன்றும் நிறைந்திருகின்றது.  
     
     
    இந்தக் கட்டுரையைப் படங்களுடன் காண இங்கே செல்லவும்.
     
     
    அன்புடன்
    சுபா
     
     


    2010/6/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Tthamizth Tthenee

    unread,
    Jun 6, 2010, 12:17:40 AM6/6/10
    to mint...@googlegroups.com
    மடலாடற் குழுவில் ஒருவரது அனுமதி பெறாமல் அவர்களது தொலைபேசி எணகளை நாம் வெளியிடக் கூடாது. இதனை சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
     
     
    அவரின் அனுமதி பெற்றே வெளியிட்டிருக்கிறேன்
     
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ
     
    6-6-10 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:

    Subashini Tremmel

    unread,
    Jun 6, 2010, 5:42:27 AM6/6/10
    to mint...@googlegroups.com
    மிக்க நன்று தேனீயார்.
    -சுபா

    2010/6/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Jun 9, 2010, 4:51:10 PM6/9/10
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

    பகுதி 17
     
    நெல்லையப்பர் தரிசனம்
     
    அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு உணவருந்தி விட்டு இல்லம் திரும்பலாம் என்பது எங்கள் திட்டம்.  அன்று நாள் முழுவதும் நாங்கள் சென்று வந்த கிராமப்புற பகுதிகளை விட  இங்கு சாலையில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே காட்சியளித்தது.

    திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை.

    தூரத்திலிருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தைப் பார்த்த உடன் அங்கு செல்லாமல் அன்று இல்லம் திரும்ப எனக்கு மனம் வரவில்லை. நண்பர்களிடம் தெரிவித்த போது, சரி சீக்கிரமாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி வாகனத்தை ரிஷானைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் ஆலயத்திற்குள் விரைந்தோம். அரைமணி நேரத்தில் பார்க்கக் கூடிய ஒரு ஆலயம் அல்ல அது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2002ம் ஆண்டு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள சிற்பங்கள், தெப்பக்குளம், கோயில் யானை ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்து நல்ல இறை தரிசனமும் பெற்று வந்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது.

    அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்ததுமே அலுவலகத்துக்கு விரைந்து புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ஆலய தலபுராணம் அல்லது குறிப்பு புத்தகம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். அன்று ஆலய வரலாற்றை விளக்கும் நூல் முடிந்து விட்டதாகவும் புதிய பிரதிகள் இன்னமும் வரவில்லை என்றும்  அலுவலகத்தில் இருந்த அதிகாரி கூறினார். எப்போதும் போல் ஏமாற்றம் தான்!

    மிகப்பெரிய ஆலயம். கற்களில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த மாலை வேளையில் கூட மிக அழகாகக் காட்சியளித்தன. எத்தனை விதமான வடிவங்கள்! நடந்து செல்லச் செல்ல வெவ்வேறு சன்னிதிகள்; அங்கு நடைபெறும் வழிபாடுகள்; அனைத்தையும் பார்த்துக் கொண்டு சுவாமி தரிசனமும் செய்து விட்டு சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன்.

    இந்த ஆலயத்தில் ஒரு பகுதியில் கற்தூண் ஒன்று இருக்கின்றது. அதில் ஏழு சிறு தூண்கள் சேர்த்து இதே போல நான்கு சிறு தூண்களை இணைத்து ஒரு பெறும் தூண் ஒன்றினை வடிவமைத்திருக்கின்றனர் சிற்பிகள். இந்த தூணிலுள்ள ஏழு சிறு தூண்களையும் தட்டினால் வெவ்வேறு ஒலிகள் கேட்குமாம். இதனை நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்தக் குறுகிய நேரத்தில் இந்தச் சோதனையைச் செய்யவும் நாங்கள் தவறவில்லை.

    இந்த ஆலயத்திலும் கூட கல்வெட்டுக்களும் சுவற்களில் பதித்த பழய தமிழ் எழுத்துக்களும் இன்னமும் உள்ளன. ஆலயத்தின் பல பகுதிகளில் இவ்வகையான எழுத்துக்களைக் கவனித்தேன்.  இந்த எழுத்துக்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அச்சு வடிவில் நூலாக பதிப்பித்தால் அதில் அடங்கியுள்ள செய்திகள் தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அப்படிப்பட்ட நூல் வெளி வந்துள்ளதா என்று எனக்குத் பயனாக அமையும்)

    ஒரு சிறிய தேர் ஒன்று சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த போது அந்தச் சுவரில் கூட சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

    ஆலயங்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி கலைக்கூடங்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை நான் தமிழகத்தில் இதுவரை பார்த்த பழம் கோயில்கள் அனைத்திலும் பார்த்திருக்கிறேன்.  இந்த கலைக்கூடங்களைப் பாதுகாப்பதுடன், சிலைகளின் பொருளை விளக்கும் கையேடுகள், சிறிய விளக்க அட்டைகளை ஏற்படுத்தி வைப்பது அந்தச் சிலைகளை பொருளறிந்து பார்க்க உதவும்.

    இந்தச் சிற்பக் கலைக் கூடத்தில் அரசனுக்கும் ஞானியருக்கும் மட்டும் சிலை இல்லாது, சாதரண மனிதர்களின் வடிவங்களும் கூட செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாட்டிய மங்கை, வீரன், குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணின் சிலை என பல் வேறு வடிவங்களை இந்த ஆலயத்தில் காணமுடிந்தது.

    ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

    கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தச் சிலைகளையும் விடுவதில்லை. சில கற்சிலைகளில் விபூதி கொட்டி வழிந்தி கொண்டிருந்தது. ஒரு சிலைக்கு மாலை போட்டு பொட்டு வைத்து அதனை வழிபடு பொருளாக ஆக்கிவிட்டனர். தூணில் இருக்கும் ஒரு சிலைக்கு பட்டு கட்டி அதன் வடிவம் கூட என்ன என்று தெரியாத வகையில் அதன் முகம் மட்டும் ஒரளவு தெரிய வைத்து அதனை பூஜைக்குறிய பொருளாக்கி வைத்திருக்கின்றனர். இன்னொரு பெரிய கற்சிலையில் உள்ள வடிவத்தின் கையில் ஒரு மின்சார விளக்கு  கட்டி தொங்கிக் கொண்டிருந்தது.  மற்றொரு பக்கத்தில் இரண்டு சிலைகளில் கழுத்துகளில் ஒரு பேனரின் நூல் கோர்த்து பேனர் கட்டியிருந்தார்கள்.

    இதையெல்லாம் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் கலைச்சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆலய வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வம் இல்லாதவ்ர்களாக இருபத்தைதெளிவாகக் காண முடிகின்றது.  ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். ஆனால் அவர்களின் முக்கிய எண்ணம் வழிபாடு, சடங்குகள், பூஜைகள் ஆகியவற்றோடு நின்று விடுகின்றது. இதற்கு மாறாக இந்த ஆலயத்திற்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்று சற்று தங்கள் கண்களை திறந்து பார்த்தால் அவர்களுக்கு அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் தெரியாமல் போகாது. இந்த கலைப் பொக்கிஷங்கள் நமது வரலாற்றுப் பெறுமைகள் என்று மக்கள் உணர்ந்தால் ஆலயத்தில் இறை தரிசனத்தையும் நிறைவாக முடித்து ஆலயத்தின் முழு வடிவத்தைத் தூய்மையாகவும் சிறப்பாகவும் பேணுவதிலும் நிச்சயமாக ஆர்வம் தோன்றும். இந்த விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் ஏற்படுத்த வேண்டியது நமக்குள்ள கடமைகளில் ஒன்று.

    சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வரும் போது ஆலயத்தின் தெப்பக்குளத்தை அடைந்தோம். மாலை நேரமாகி இருட்டத் தொடங்கி விட்டதால் தெளிவாகத் தெரியவில்லை.இருப்பினும் சுவர்களில் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கு வெளிச்சத்தில் இந்த தெப்பக்குளத்தை ஓரளவு பார்த்து ரசிக்க முடிந்தது.

    குறுகிய நேரத்தில் மிக அவசரமாக நெல்லையப்பர் ஆலயத்தைப் பார்த்து சுவாமி வழிபாடும் திருப்தியாக முடித்தோம். கொள்ளை பசி அனைவருக்குமே. திருநெல்வேலிக்காரர்களான இந்த மூவருக்குமே இந்த இடம் மிகப் பரிச்சயம் என்பதால் அதிக நேரம் எடுக்காமல்  சற்று பக்கத்தில்  இருந்த ஒரு அழகான உணவு விடுதியில் சாப்பிடலாம் என்று கூறி விட்டார்கள்.  தூய்மையான ஒரு உணவகம். நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகின்றது.  நாங்கள் விரும்பிய உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே பல விஷயங்களைப் பேசி பகிர்ந்து கொண்டோம்.  உணவின் ருசி அபாரம்.

    அன்றைய பயணம் இந்த விருந்தோடு முடிந்தது. மறுநாள் டிசம்பர் 15ம் திகதி செவ்வாய்கிழமை காலை நான் எட்டயபுரம் செல்வதாகத் திட்டம். எட்டயபுரத்தை நோக்கிய என் பயணத்திட்டத்தின் மிக முக்கிய நாள் அது. 

    எட்டயபுரத்தை நோக்கிய என் பயணக் குறிப்பு மீண்டும் தொடரும்..!

    இன்றைய கட்டுரையைப் படங்களுடன் காண இங்கே செல்லுங்கள்!

    குறிப்பு: இந்தத் தொடரை இப்பகுதியுடன் சில வாரங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நினைத்திருக்கின்றேன். செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் அடுத்த வாரம் தமிழகம் செல்லவிருப்பதால் இந்த நிலை. ஜூலை மாதம் மத்தியிலிருந்து எனது எட்டயபுரத்தை நோக்கிய பயணக் குறிப்புக்கள் படங்களுடனும் ஒளிப்பதிவுகளுடனும் இங்கு மீண்டும் தொடரும்.

     
    அன்புடன்
    சுபா
     
     

    2010/6/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    பகுதி 16
     
    சீவலப்பேரியில்..
     
    ... 

    Innamburan Innamburan

    unread,
    Jun 9, 2010, 7:18:59 PM6/9/10
    to mint...@googlegroups.com
    பற்பல வருடங்களுக்கு முன் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி சென்றிருக்கிறேன்.
    உங்கள் கட்டுரை அந்த நினைவலைகளை கொணர்ந்தது. பெரிய மாற்றம் ஒன்றும்
    இல்லை, ஏமாற்றத்தை தவிர!

    இன்னம்பூரான்

    2010/6/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

    karthi

    unread,
    Jun 9, 2010, 8:57:42 PM6/9/10
    to mint...@googlegroups.com

    "திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை."

    சுபா,

    விளங்கவில்லையே!

    ரெ.கா.

    Chandrasekaran

    unread,
    Jun 10, 2010, 3:36:22 AM6/10/10
    to mint...@googlegroups.com

    > இதையெல்லாம் பார்க்கும் போது பொதுவாகவே மக்கள் கலைச்சிற்பங்கள், வரலாற்று ஆவணங்கள், ஆலய வரலாறு ஆகிய விஷயங்களில் ஆர்வம் இல்லாதவ்ர்களாக இருபத்தைதெளிவாகக் காண முடிகின்றது.  ஆலயத்திற்கு மக்கள் வருகின்றார்கள். ஆனால் அவர்களின் முக்கிய எண்ணம் வழிபாடு, சடங்குகள், பூஜைகள் ஆகியவற்றோடு நின்று விடுகின்றது. இதற்கு மாறாக இந்த ஆலயத்திற்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்று சற்று தங்கள் கண்களை திறந்து பார்த்தால் அவர்களுக்கு அங்குள்ள கலைப் பொக்கிஷங்கள் தெரியாமல் போகாது. இந்த கலைப் பொக்கிஷங்கள் நமது வரலாற்றுப் பெறுமைகள் என்று மக்கள் உணர்ந்தால் ஆலயத்தில் இறை தரிசனத்தையும் நிறைவாக முடித்து ஆலயத்தின் முழு வடிவத்தைத் தூய்மையாகவும் சிறப்பாகவும் பேணுவதிலும் நிச்சயமாக ஆர்வம் தோன்றும். இந்த விழிப்புணர்வை மக்கள் சிந்தனையில் ஏற்படுத்த வேண்டியது நமக்குள்ள கடமைகளில் ஒன்று.

    அன்புள்ள சுபா,
    இதற்குத்தான் நாங்கள் ரீச் பவுஃண்டேஷன் ஏற்படுத்தினோம். எண்ணங்களை அப்படியே ப்ரதிபலிப்பது போல் எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்
    சந்திரா
    --
    To save culture & heritage visit:
    www.conserveheritage.org
    http://templesrevival.blogspot.com
    http://reachhistory.blogspot.com
    join http://groups/yahoo.com/temple_cleaners

    to do your bit to uplift the society visit
    www.dreamindia2020.org

    V, Dhivakar

    unread,
    Jun 10, 2010, 4:20:27 AM6/10/10
    to mint...@googlegroups.com
    சுபா!

    நெல்லையப்பர் கோவில் தூண் சிற்பங்களில் 'இராவணன்' தனியாக ஒரு சிற்பத்தை செதுக்கியிருக்கிறார்கள். பார்த்தீர்களா?

    தி


    2010/6/10 Chandrasekaran <plastic...@gmail.com>

    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



    --

    N. Kannan

    unread,
    Jun 10, 2010, 10:20:23 AM6/10/10
    to mint...@googlegroups.com
    சுபா:

    எங்கோ இடையில் எல்லாம் போய் விட்டது போலிருக்கிறது? எங்கிருந்து முதலில்
    இத்தகைய அழகியல் உருவானது. எக்காலத்தில் அனிச்சம் மலர் பட்டால் கூட
    நோகும் மென்மையான உணர்வுகள் இருந்தன. ஏன் இப்போது இப்படி மரத்துப்
    போனோம்? இடையில் எது, எப்போது காணாமல் போனது? மதுரை மீனாட்சி கோயிலில்
    பத்ரகாளி அம்மனை வெண்ணையடித்தே சிதைக்கும் வக்கிரம் எப்படி நம் மனதில்
    நுழைந்தது? அவள் அன்னை அல்லவோ? அவள் முகத்தில் தூர இருந்து வெண்ணெயையை
    எறியலாமோ? நம் அன்னையின் முகத்தில் இப்படி வீசுவோமா? என்ன ஆகிவிட்டது
    தமிழர்களுக்கு? குழந்தை கூட தனது செப்பையெல்லாம் பத்திரமாய்
    வைத்திருக்கும்!! ம்..ம்..

    கண்ணன்

    2010/6/10 Chandrasekaran <plastic...@gmail.com>:

    Tthamizth Tthenee

    unread,
    Jun 10, 2010, 10:55:12 AM6/10/10
    to mint...@googlegroups.com
    பத்ரகாளி அம்மனை வெண்ணையடித்தே சிதைக்கும் வக்கிரம் எப்படி நம் மனதில்
    நுழைந்தது? அவள் அன்னை அல்லவோ? அவள் முகத்தில் தூர இருந்து வெண்ணெயையை
    எறியலாமோ? நம் அன்னையின் முகத்தில் இப்படி வீசுவோமா? என்ன ஆகிவிட்டது
    தமிழர்களுக்கு? குழந்தை கூட தனது செப்பையெல்லாம் பத்திரமாய்
    வைத்திருக்கும்!! ம்..ம்..
     
    இப்போதெல்லாம்  குழந்தைகள் கூட  அன்னையின் முகத்தில் தூர நின்று வெண்ணையை அடிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள்
     
    எந்த விதை போடுகிறோமோ  அந்த விதைதான் முளைத்து அந்த மரமாகும்
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ
     
     
     
     
    10-6-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

    venkatachalam Dotthathri

    unread,
    Jun 10, 2010, 11:11:22 AM6/10/10
    to mint...@googlegroups.com
    நெல்லையில் காந்திமதி அம்மன் நெல்லையப்பர் வடக்குவீதியில் வெளியில் வந்தால் நயினார்குளம் கடலெனக் காட்சியளிக்கும். அங்கு படகு ஓட்டமும் இருந்தது. இன்று எப்படியோ?

    ஓம் வெ. சுப்பிரமணியன்.
    2010/6/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Jun 10, 2010, 12:13:30 PM6/10/10
    to mint...@googlegroups.com
    ரெ.கா அவர்களே,
     
    திருநெல்வேலி இருட்டுக் கடைகளில் கிடைக்கும் அல்வா மிகப் பிரபலமானது. ஏன் இந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. ஆனால் இது பிரபலாமான விஷயம்.
    -சுபா

    2010/6/10 karthi <karth...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Jun 10, 2010, 12:16:07 PM6/10/10
    to mint...@googlegroups.com
    இல்லையே. எது இராவணன் சிலை என்று எனக்கு விளக்கவும் அங்கு ஆட்கள் இல்லை; விளக்கக் கையேடுகளும் இல்லை. புதிதாக வருபவர்களுக்கு சிலைகளை கண்டு பிடிப்பது சிரமம் தான். நான் எடுத்த புகைப்படங்களில் இன்னும் சில படங்கள் உள்ளன நேரம் கிடைக்கும் போது அவற்றையும் பதிப்பிக்கின்றேன். அதில் இருக்கின்றதா என்று பார்த்து சொல்லுங்கள்.
     
    அன்புடன்
    சுபா

    2010/6/10 V, Dhivakar <venkdh...@gmail.com>

    devoo

    unread,
    Jun 10, 2010, 2:21:56 PM6/10/10
    to மின்தமிழ்
    *திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடம்*


    கடை வாசலில் பெயர்ப் பலகையோ, அதன் முகப்பில் மின்விளக்கோ கூட கிடையாது.
    சிறிய கடையின் உள்ளே அறுபது வால்ட் குண்டு பல்பு மட்டுமே. மின்சாரம்
    இருந்தும், அதுவும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏராளம் வந்தும்
    அநியாயத்துக்கு ஏனிப்படி அடம் பிடிக்கிறீர்கள் என்றால்,

    ''இருட்டுக்கடை அல்வா சூப்பர்னு ஒரு நிரந்தர டிரேட்மார்க் எங்க மேல
    விழுந்திடுச்சு. அதை நாங்க ஏன் மாத்தணும்? கடைக்கு மின்சாரம் சப்ளை வந்த
    பிறகும், ஒரே ஒரு குண்டு பல்புதான் மாட்டினாங்க என் அப்பா. அது ப்யூஸ்
    போனா, புதுசா ஒரு குண்டு பல்பு போட்டுடுவோம். அவ்வளவுதான். அதை
    இன்னியவரைக்கும் கடைபிடிச்சு வர்றோம். மத்தபடி எங்க கவனம் முழுவதுமே
    நாங்க தயாரிக்கிற அல்வாவின் குவாலிட்டிய மெய்ன்ட்டெய்ன் பண்ணிட்டு
    வர்றதுலதான் இருக்கும்'' என்கிறார் ஹரிசிங்.

    http://www.dinamalar.com/Supplementary/kalki_detail.asp?news_id=384&dt=12-11-09


    தேவ்

    On Jun 9, 7:57 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
    > "திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை."
    >
    > சுபா,
    >
    > விளங்கவில்லையே!
    >
    > ரெ.கா.
    >
    >   ----- Original Message -----
    >   From: Subashini Tremmel
    >   To: mint...@googlegroups.com
    >

    >   Cc: ksubash...@gmail.com


    >   Sent: Thursday, June 10, 2010 4:51 AM
    >   Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்
    >
    >   பகுதி 17
    >
    >   நெல்லையப்பர் தரிசனம்
    >
    >   அன்று நாள் முழுவதும் பல இடங்களுக்குச் சென்று வந்த களைப்பு தோன்றினாலும் அன்றைய அனுபவம் மன நிறைவைத் தருவதாக அமைந்திருந்தது. மாலை 6 மணியளவில் நாங்கள் திருநெல்வேலி நகரை வந்தடைந்தோம். அங்கு உணவருந்தி விட்டு இல்லம் திரும்பலாம் என்பது எங்கள் திட்டம்.  அன்று நாள் முழுவதும் நாங்கள் சென்று வந்த கிராமப்புற பகுதிகளை விட  இங்கு சாலையில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாகவே காட்சியளித்தது.
    >
    >   திருநெல்வேலி அல்வாவிற்கு புகழ் பெற்ற இடமாயிற்றே. நகரின் மத்தியிலேயே ஒன்றிடண்டு இருட்டுக் கடைகளின் பெயர் பலகைகளையும் நான் பார்க்கத் தவரவில்லை.
    >
    >   தூரத்திலிருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோயில் கோபுரத்தைப் பார்த்த உடன் அங்கு செல்லாமல் அன்று இல்லம் திரும்ப எனக்கு மனம் வரவில்லை. நண்பர்களிடம் தெரிவித்த போது, சரி சீக்கிரமாகச் சென்று பார்த்து விட்டு வந்து விடுவோம் என்று சொல்லி வாகனத்தை ரிஷானைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் ஆலயத்திற்குள் விரைந்தோம். அரைமணி நேரத்தில் பார்க்கக் கூடிய ஒரு ஆலயம் அல்ல அது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 2002ம் ஆண்டு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள சிற்பங்கள், தெப்பக்குளம், கோயில் யானை ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்து நல்ல இறை தரிசனமும் பெற்று வந்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது.
    >
    >   அன்று ஆலயத்தில் பக்தர்கள் அதிகமாக இருந்தனர். ஆலயத்திற்கு உள்ளே நுழைந்ததுமே அலுவலகத்துக்கு விரைந்து புகைப்படம் எடுப்பதற்குக் கட்டணம் கட்டி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு ஆலய தலபுராணம் அல்லது குறிப்பு புத்தகம் இருக்கின்றதா என்று தேடிப்பார்த்தேன். அன்று ஆலய வரலாற்றை விளக்கும் நூல் முடிந்து விட்டதாகவும் புதிய பிரதிகள் இன்னமும் வரவில்லை என்றும்  அலுவலகத்தில் இருந்த அதிகாரி கூறினார். எப்போதும் போல் ஏமாற்றம் தான்!
    >
    >   மிகப்பெரிய ஆலயம். கற்களில் செதுக்கப்பட்ட சித்திரங்கள் ஒவ்வொன்றும் அந்த மாலை வேளையில் கூட மிக அழகாகக் காட்சியளித்தன. எத்தனை விதமான வடிவங்கள்! நடந்து செல்லச் செல்ல வெவ்வேறு சன்னிதிகள்; அங்கு நடைபெறும் வழிபாடுகள்; அனைத்தையும் பார்த்துக் கொண்டு சுவாமி தரிசனமும் செய்து விட்டு சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டேன்.
    >
    >   இந்த ஆலயத்தில் ஒரு பகுதியில் கற்தூண் ஒன்று இருக்கின்றது. அதில் ஏழு சிறு தூண்கள் சேர்த்து இதே போல நான்கு சிறு தூண்களை இணைத்து ஒரு பெறும் தூண் ஒன்றினை வடிவமைத்திருக்கின்றனர் சிற்பிகள். இந்த தூணிலுள்ள ஏழு சிறு தூண்களையும் தட்டினால் வெவ்வேறு ஒலிகள் கேட்குமாம். இதனை நண்பர்கள் தெரிவித்தார்கள். அந்தக் குறுகிய நேரத்தில் இந்தச் சோதனையைச் செய்யவும் நாங்கள் தவறவில்லை.
    >
    >   இந்த ஆலயத்திலும் கூட கல்வெட்டுக்களும் சுவற்களில் பதித்த பழய தமிழ் எழுத்துக்களும் இன்னமும் உள்ளன. ஆலயத்தின் பல பகுதிகளில் இவ்வகையான எழுத்துக்களைக் கவனித்தேன்.  இந்த எழுத்துக்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அச்சு வடிவில் நூலாக பதிப்பித்தால் அதில் அடங்கியுள்ள செய்திகள் தமிழக வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை அப்படிப்பட்ட நூல் வெளி வந்துள்ளதா என்று எனக்குத் பயனாக அமையும்)
    >
    >   ஒரு சிறிய தேர் ஒன்று சுவரில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த போது அந்தச் சுவரில் கூட சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
    >
    >   ஆலயங்கள் என்பவை வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி கலைக்கூடங்களாக திகழ்ந்திருக்கின்றன. இந்த ஒற்றுமையை நான் தமிழகத்தில் இதுவரை பார்த்த பழம் கோயில்கள் அனைத்திலும் பார்த்திருக்கிறேன்.  இந்த கலைக்கூடங்களைப் பாதுகாப்பதுடன், சிலைகளின் பொருளை விளக்கும் கையேடுகள், சிறிய விளக்க அட்டைகளை ஏற்படுத்தி வைப்பது அந்தச் சிலைகளை பொருளறிந்து பார்க்க உதவும்.
    >
    >   இந்தச் சிற்பக் கலைக் கூடத்தில் அரசனுக்கும் ஞானியருக்கும் மட்டும் சிலை இல்லாது, சாதரண மனிதர்களின் வடிவங்களும் கூட செதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாட்டிய மங்கை, வீரன், குழந்தையுடன் செல்லும் ஒரு பெண்ணின் சிலை என பல் வேறு வடிவங்களை இந்த
    >

    > ...
    >
    > read more »

    devoo

    unread,
    Jun 10, 2010, 2:38:58 PM6/10/10
    to மின்தமிழ்
    *அழகியல்*

    நெல்வேலி வடிவன்னையை அழைக்கும் அழகு -


    வாரா திருந்தால் இனிநானுன்
    வடிவேல் விழிக்கு மையெழுதேன்,
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன்,
    மணியால் இழைத்த பணிபுனையேன்,

    பேரா தரத்தி னொடுபழக்கம்
    பேசேன், சிறிதும் முகம்பாரேன்,
    பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்,
    பிரிய முடன்ஒக் கலையில்வைத்துத்

    தேரார் வீதி வளங்காட்டேன்,
    செய்ய கனிவாய் முத்தமிடேன்,
    திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்
    திருக்கண் வளரச் சீராட்டேன் .

    தாரார் இமவான் தடமார்பில்
    தவழும் குழந்தாய் வருகவே!
    சாலிப் பதிவாழ் காந்திமதித்
    தாயே வருக! வருகவே!

    - அழகிய சொக்கநாதர்


    தேவ்


    On Jun 10, 9:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
    > சுபா:
    >
    > எங்கோ இடையில் எல்லாம் போய் விட்டது போலிருக்கிறது? எங்கிருந்து முதலில்
    > இத்தகைய அழகியல் உருவானது. எக்காலத்தில் அனிச்சம் மலர் பட்டால் கூட
    > நோகும் மென்மையான உணர்வுகள் இருந்தன. ஏன் இப்போது இப்படி மரத்துப்
    > போனோம்? இடையில் எது, எப்போது காணாமல் போனது? மதுரை மீனாட்சி கோயிலில்
    > பத்ரகாளி அம்மனை வெண்ணையடித்தே சிதைக்கும் வக்கிரம் எப்படி நம் மனதில்
    > நுழைந்தது? அவள் அன்னை அல்லவோ? அவள் முகத்தில் தூர இருந்து வெண்ணெயையை
    > எறியலாமோ? நம் அன்னையின் முகத்தில் இப்படி வீசுவோமா? என்ன ஆகிவிட்டது
    > தமிழர்களுக்கு? குழந்தை கூட தனது செப்பையெல்லாம் பத்திரமாய்
    > வைத்திருக்கும்!! ம்..ம்..
    >
    > கண்ணன்
    >

    > 2010/6/10 Chandrasekaran <plasticschan...@gmail.com>:

    karthi

    unread,
    Jun 10, 2010, 8:25:28 PM6/10/10
    to mint...@googlegroups.com
    புரிந்தது. நன்றி.

    Innamburan Innamburan

    unread,
    Jun 10, 2010, 10:58:36 PM6/10/10
    to mint...@googlegroups.com
    '...இடையில் எது, எப்போது காணாமல் போனது?...'
    20ம்தேதி சொல்கிறேன். ஒன்று நிச்சியம். ஆங்கிலேயர் ஆட்சி
    வரவில்லையென்றால், இன்னும் மோசமாயிருக்கும்.

    இன்னம்பூரான்

    2010/6/11 karthi <karth...@gmail.com>:

    Subashini Tremmel

    unread,
    Aug 17, 2010, 6:02:37 AM8/17/10
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
     
    18 - எட்டயபுரத்திற்குப் பயணம்
     
     
    இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தொடரை மீண்டும் தொடர்கின்றேன்.
     
    இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை இதுவரை வாசித்திராதவர்கள்
    இங்கே சென்று வலது பக்கத்திலுள்ள பகுதிகள் 1லிருந்து 17வரை வாசிக்கலாம்.  
     
    எனது பயணத்தின் முதல் நாளில் திருநெல்வேலி, கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சீவலப்பேறி ஆகிய இடங்களெல்லாம் சென்று இறுதியில் மீண்டும் திருநெல்வேலி வந்து சேர்ந்தோம். மறுநாள் நான் எட்டயபுரம் சென்று அங்கேயே தங்கியிருந்து  சில இடங்களைப் பார்க்க வேண்டும் என்பது எனது திட்டம்.
     
    சீதாம்மா எனக்கு தந்திருந்த குறிப்புக்களில்  நான் எட்டயபுரத்தில் பார்த்து வர வேண்டிய இடங்கள் என குறிப்பிட்டு எனக்கு பட்டியலிட்டிருந்த இடங்கள் இவை.   
    1. பாரதி நினைவு மண்டபம்
    2. பஸ் ஸ்டாண்டுக்கு முன் இருக்கும் சிதிலமடைந்த கட்டடம்
    3. முத்துசாமிதீட்சதர் சமாதி
    4. ராஜா உயர்நிலைப் பள்ளி
    5. பாரதமாதா டாக்கீஸ்
    6. சிவானந்தர் இல்லம்
    7. பாரதியார் பிறந்த வீடு
    8. பெருமாள் கோயில்
    9. சிவன் கோயில் (எட்டிஸ்வரர் கோயில்)
    10. அரண்மனை
    11. சோம சுந்திர பாரதியாரின் வீடு
    12. உமறுப்புலவர் சமாதி
    13. கீரைமஸ்தான் சாகிபு சமாதி
    14. ரகுநாதன் நூலகம் - பாரதி ஆய்வு மையம்
    இவற்றை பட்டியலிட்டதோடு எந்த வரிசையில் அவற்றை பார்த்து வர வேண்டும், எதற்குப் பின் எது என்று எனக்கு சில குறிப்புக்களையும் வழங்கியிருந்தார் சீதாம்மா.  அந்தக் குறிப்புக்களையும் பிரிண்ட் செய்து ஏற்கனவே தயாராக வைத்திருந்தேன்.  அதோடு எனக்கு எட்டயபுரத்தில் குரிப்பிட்ட இந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று எனக்கு விளக்கங்கள் அளிக்கும் வகையில் மதுரை பல்கலைக்கழக சரித்திர ஆசிரியர்  முனைவர். கருணாகர பாண்டியன் அவர்களிடமும் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி விளக்கியதோடு எனக்கு உதவுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார் சீத்தாம்மா.  நான் சென்னைக்கு வந்த ஓரிரு நாட்களிலேயே முனைவர். கருணாகர பாண்டியன் அவர்களை தொடர்பு கொண்டு நான் வந்துள்ளதையும் அவரை எட்டயபுரத்தில் சந்திக்க விருப்பதையும் கூறி உறுதி படுத்திக் கொண்டேன்.
     
    15ம் நாள் காலை நான் எட்டயபுரம் செல்லவேண்டும். முதல் நாள் இரவே நாங்கள் திருநெல்வேலி திரும்பிய பின்னர் மறுநாள் பயணத்தை திட்டமிட்டோம்.
     
    வாகன ஓட்டுனர் ரிஷான் காலை 7.30 மணிக்கு வந்தால், ஒன்றரை மணி நேரத்தில் எட்டயபுரத்தை அடைந்து விடலாம் என திட்டமிட்டோம். திரு.விஸ்வநாதனுக்கு வேலை இருந்ததால் அவர் இல்லாமல் என்னை எட்டயபுரம் வரை அழைத்துச் செல்ல துணையாக திருமதி.பகவதியும் திருமதி.கீதாவும் வருவதாகக் கூறினர். அப்படியே செய்வதாக முடிவானது. காலை 7 மணிக்கெல்லாம் கீதாவும் பகவதியும் வந்து விட்டார்கள். கீதா கொண்டு வந்திருந்த காலை உணவையும் சேர்த்து ஜெயந்தி செய்திருந்த இட்லியோடு காலையிலேயே விருந்து ஆரம்பித்து விட்டது.
     
    திட்டமிட்டபடியே காலை 7:30 மணிக்கு ரிஷான் வந்தவுடன் நாங்கள் புறப்பட்டோம். திருநெல்வேலியிலிருந்து எட்டயபுரம் செல்ல முதல் நாள் நாங்கள் சென்ற சாலையிலேயே பயணிக்க வேண்டியிருந்தது. 
    சாலையின் இரு புறங்களிலும் பசுமையை ரசித்துக் கொண்டே கதைகள் பேசிக் கொண்டு சுவாரசியமாக அமைந்தது எங்கள் பயணம். வழியில் கோவில்பட்டி இரயில் நிலையத்தையும் கடந்து ஆனால் கோவில்பட்டிக்குள் செல்லாமல் எங்கள் பயணம் தொடர்ந்தது.
     
    நினைத்ததற்கும் மாறாக தாமதம் ஏற்பட்டது. தூரம் அதிகமில்லையென்றாலும் சாலையின் நிலை வாகனத்தை சற்று மெதுவாக ஓட்டும்படி செய்து விட்டதில் தாமதம். காலை 9 மணிக்கு வந்துவிடுவதாக திருமதி.சாவித்ரிக்கு தெரிவித்திருந்தேன். ஆனால் 9:30 மணிக்குத்தான் எட்டயபுரத்தை அடைந்தோம்.  சாலைகளில் அவ்வளவாக ஆள் நடமாட்டமில்லை. நான்  செல்ல வேண்டிய இடம் எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லத்திற்கு அடுத்த இரண்டாவது வீடு என்பதால் அடையாளம் கேட்டு செல்வதில் ஒரு சிரமமும் ஏற்படவில்லை.
     
    9:30 மணி வாக்கில் திருமதி.சாவித்ரியின் இல்லத்தை வந்தடைந்தோம். தூரத்தில் பார்த்த உடனேயே எனக்கு ஊகிக்க முடிந்தது. வாசலில் முனைவர் கருணாகர பாண்டியனும் திருமதி.சாவித்ரியும் நின்று கொண்டு எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
     
    வாகனத்தை நிறுத்தி இறங்கி என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அன்புடன் அனைவரும் வரவேற்று உபசரித்தனர். என்னை சரியான இடத்தில் கொண்டு வந்து சேர்த்த திருப்தியில் பகவதியும் கீதாவும் வாகன ஓட்டுனர் ரிஷானும் திரும்ப ஆயத்தமானார்கள். மறுநாள் என்னை அழைத்துச் செல்ல மதியம் வருமாறு ரிஷானிடம் கூறிவிட்டு திருமதி.சாவித்ரியோடு அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்தேன். இது ஆசிரியர் துரைராஜ் அவர்களின் இல்லம். 
     
    திரு.துரைராஜ் அவர்களின் நற்பணிகள் பற்றி சீதாம்மா அவர்கள் எண்ணங்கள் ஊர்வலம் தொடரில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அக்குறிப்புக்களை வாசித்த ஞாபகம் அவரது இல்லத்திற்குள் செல்லும் போது தோன்றி மனதில் மகிழ்ச்சியை உருவாக்கியது. சிறந்த நல் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் சில மணி நேரங்களையோ நாட்களையோ செல்விடுவதிலும் ஒரு ஆனந்தம் இருக்கின்றதல்லவா. அததகைய உணர்வுகளை அனுபவப்பூர்வமாக இத்தகைய நிகழ்வுகளின் போது உணர முடிகின்றது.
     
    தொடரும்..
     
    குறிப்பு: கட்டுரையை படங்களுடன் வாசிக்க இங்கே செல்லவும்!
     
    அன்புடன்
    சுபா
     


     
    2010/6/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    ettayapuram.JPG
    durairaj.JPG

    Dhivakar

    unread,
    Aug 18, 2010, 7:49:50 AM8/18/10
    to mint...@googlegroups.com
    அட.. கேட்டதும் கிடைத்துவிட்டதே!!!!!

    தி

    2010/8/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    --
    "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
    To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
    For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Subashini Tremmel

    unread,
    Aug 19, 2010, 5:27:22 AM8/19/10
    to mint...@googlegroups.com
    மகிழ்ச்சிதானே..:-)
    இந்த வாரம் விடுமுறையில் இருப்பதால் தொடங்கி விட்டேன்.
    -சுபா

    2010/8/18 Dhivakar <venkdh...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 19, 2010, 5:40:59 AM8/19/10
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
    19. திருமதி.சாவித்ரி குடும்பத்தினர்
     
     
    அந்த சாலையில் இருக்கின்ற வீடுகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. சாலையின் உள்ளே நுழையும் போது ஒரு சிறிய விநாயகர் கோயில். அது பெருமாள் கோயில் சுவரை ஒட்டி அமைந்திருக்கின்றது.  அந்த சாலையில் உள்ள வீடுகளின் வரிசையில் சாலையில் நுழையும் போது இரண்டாவதாக இருப்பது சுவாமி சிவானந்தர் இல்லம். இங்கு பூஜைகளும் பஜனைகளும் மாலையில் நடைபெறுகின்றன. அதற்கு இரண்டு இல்லங்களை அடுத்து பாரதியார் பிறந்த இல்லம். அதற்கு பக்கத்தில் ஒரு வீடு. அதற்கு அடுத்ததாக திருமதி. சாவித்ரியின் இல்லம்.
     
    திருமதி சாவித்ரி பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். இவரது கணவர் மறைந்த திரு.துரைராஜ் ஆசிரியர். திரு.துரைராஜ்  அவர் வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் இருந்த பாரதி அன்பர்களை ஒருங்கினைத்து செயல்பட்டவர். எட்டயபுரம் அரண்மனையுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். எட்டயபுர ஜமீன் வம்சத்தில் மூத்த மகனான திரு.துரை பாண்டியன் அவர்களின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர். சிறந்த பேச்சாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருந்தவர். அதிலும் குறிப்பாக திரு.சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றங்களில் பேசியிருக்கின்றார். திரு.துரைராஜ் அவர்கள் உசிலம்பட்டி கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியிருக்கின்றார்.  மாணவர்கள் கல்வி வளர்ச்சியின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்று கொண்ட இவர் தனது சேகரிப்பில் இருந்த நூல்கள் அனைத்தையும் எட்டயபுரத்தில் உள்ள ரகுநாதன் நூலகத்திற்குக் கொடையாக வழங்கியிருக்கின்றார்.
     
    திருமதி.சாவித்ரியின் சகோதரர் திரு.பாஸ்கர தொண்டைமான் அவர்கள்.  அவர் ஒரு  தமிழ் தொண்டாளர். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.  பற்பல கவிதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும்,  நூல்களையும் எழுதியிருக்கின்றார். சீதா கல்யாணம், தமிழ்க்கோயில்கள் தமிழர்ப் பண்பாடு, பட்டிமண்டபம்,  இந்திய கலைச்செல்வம் போன்றவை இவர் எழுதிய நூல்களில் சில. இவரது நூல்கள் தமிழக அரசாங்கத்தால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை மின் தமிழிலும் காணலாம்.
    http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/91cea6ef787fbe2b?pli=1
     
    இவரது மூத்த சகோதரர் தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் பாரதி - காலமும் கருத்தும் என்னும் நூலை எழுதியவர். அமரர்.ஜீவாவுக்குப் பிறகு கலை இலக்கிய பெறுமன்றத்தின் தலைவராக தொண்டாற்றியவர். எட்டயபுரத்தில் "ரகுநாதர் நூல் நிலையம் - பாரதி ஆய்வு மையம்" அமைய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்.
     
     
    தனது கணவர், சகோதரர் போன்று மிகுந்த தமிழார்வம் கொண்டவர் திருமதி.சாவித்ரி. சில ஆண்டுகள் காந்தி கிராமத்தில் ஆசிரியையாகவும் பணியாற்றியிருக்கின்றார் இவருக்கு முதுமையின் காரணமாக தற்சமயம் பல செய்திகள் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் முடிந்தஹ் வ்ரை சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். 
     
    இவரது மகள் செல்வி.கிருஷ்ணவேணி அவர்கள். அங்கேயே படித்து பின்னர் பட்டம் பெற்று தற்சமயம் எட்டயபுரத்தில் உள்ள ராஜா உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகின்றார்.
     
    எனக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டி எட்டயபுரம் வரலாற்றை ஓரளவு விளக்க உதவியாக வந்திருந்த முனைவர். கருணாகர பாண்டியன் அவர்களும் திருமதி.சாவித்ரிக்கு உறவினர் தான். இவர். திரு.துரைராஜ் அவர்களின் சகோதரர்.  எட்டயபுரத்திலேயே வளர்ந்து பின்னர் தற்சமயம் பணி நிமித்தம் மதுரையில் இருக்கின்றார். எட்டயபுரத்தை பற்றிய தகவல்கள் வேண்டும் என்ற கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உதவ எந்த தயக்கமும் இல்லாமல் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு எட்டயபுரத்திற்கு அதி காலையிலேயே புறபட்டு தனது நண்பர் ஒருவருடன் தனது வாகனத்தில் வந்து சேர்ந்து விட்டார்.
     
     
    முனைவர். கருணாகர பாண்டியனுடன் தொலைபேசியில் இரண்டு முறை உரையாடியிருந்தாலும் எனது பயணத்தின் முழு நோக்கத்தையும் விளக்க வாய்ப்பு அமையவில்லை. எதற்காக அரண்மனையைப் பற்றிய படங்களும் செய்திகளும் தேவை என என்னை கொஞ்சம் சந்தேகத்துடனேயே முதலில் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். நானும் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தன்னார்வ நிறுவனத்தைப் பற்றியும் தொண்டூழியமாக உலகின் பல மூலைகளில் வாழும் நண்பர்கள் செய்யும் வரலாற்று சுவடுகளைப் பாதுகாக்கும், அறிமுகப்படுத்தும்  பணியின் ஒரு பகுதியே இந்த முயற்சி என எனது எண்ணத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினேன். நான் ஒரு பத்திரிக்கை நிருபராக இருப்பேனோ என சாவித்ரியும் நினைத்திருந்திருக்கின்றார். என்னைப்பற்றியும் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் அவர்கள் அனைவருக்கும் வியப்புடன் கூடிய மகிழ்ச்சி.  எட்டயபுரம் பற்றிய செய்திகள், அந்த கிராமத்தின் சரித்திர விஷயங்கள் இணையத்தில் பதிப்பிக்கப்பட முடியும், உலகின் பல மூலைகளில் உள்ளவர்கள் இந்த படங்களை பார்க்க முடியும், எட்டயபுரம் என்ற கிராமத்தின் எழிலைக் காண முடியும், அந்த கிராமத்தின் சிறப்புக்களை அதன் வழி ஓரளவு தெர்ந்து கொள்ளமுடியும் என்று தெரிந்தவுடன்  முனைவர். கருணாகர பாண்டியனுக்கு அளவில்லாத ஆனந்தம். அவரும் ஒரு சரித்திர ஆசிரியராயிற்றே. உடனே எல்லா தகவல்களையும் தன்னால் முடிந்த அளவுக்கு வழங்குவதாகக்  கூறினார்.
     
    கிருஷ்ணவேணி வழங்கிய சூடான காப்பியை அருந்திவிட்டு முதலில் பார்ப்பதற்கு பக்கத்தில் இருந்த பாரதியின் பிறந்த இல்லத்திற்கு நடந்தோம். அங்கிருந்து இரண்டாவது வீடு பாரதியின் பிறந்த இல்லம்.
     
    அன்புடன்
    சுபா

    குறிப்பு:  நண்பர்களே - திரு.தொ.மு.சி. ரகுநாதன், திரு.பாஸ்கர தொண்டைமான் ஆகியோர் எழுதிய நூல்களின் பட்டியலை /விபரங்களை  தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.  இத்தகவல்களையும் இக்கட்டுரையுடன் இணைத்து வைக்கலாம்.


     
    2010/8/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 19, 2010, 5:47:05 AM8/19/10
    to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
     
    திரு.தொ.மு.பாஸ்கர தொண்டைமான் பற்றிய தினமணி கட்டுரை ஒன்று நமது வலைப்பக்கத்திலும் இங்கு உள்ளது!
     
    -சுபா

    2010/8/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Tthamizth Tthenee

    unread,
    Aug 19, 2010, 5:32:10 AM8/19/10
    to mint...@googlegroups.com
    ஆஹா  தொடருங்கள்  மகிழ்ச்சி
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

     

    N. Kannan

    unread,
    Aug 19, 2010, 9:15:36 AM8/19/10
    to mint...@googlegroups.com
    2010/8/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

    >முதலில் பார்ப்பதற்கு பக்கத்தில் இருந்த பாரதியின் பிறந்த இல்லத்திற்கு நடந்தோம். அங்கிருந்து
    > இரண்டாவது வீடு பாரதியின் பிறந்த இல்லம்.
    >

    சுபா!

    அருமையாகப் போகிறது!
    நானும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தமாக உள்ளது.

    கொரியா, ஜப்பானில் விடுமுறை கலாச்சாரம் என்பதே கிடையாது. ஏதோ வாழ்வே
    கொடுத்த வேலையை மீண்டும், மீண்டும் செய்வதற்கு என்று போகிறது. இன்றுதான்
    என் சகா சொன்னான்.

    ‘இதை எப்படிச் செய்வது?’ என்று யதார்த்தமாகக் கேட்டால். கொரிய மொழியில்,
    ‘செவ்வனே செய்வது!’ என்று பதில் வருமாம். எனவே ஒரு காரியம் செம்மையாய்
    முடியும்வரை முயன்று கொண்டே இருப்பார்கள். அதற்கு வாழ்வு ஓடிவிடும்! :-(

    க.>

    Subashini Tremmel

    unread,
    Aug 19, 2010, 4:50:53 PM8/19/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    இணையத்தில் தேடியபோது தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
     
    1.
    தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய ஆறம்திணை அஞ்சலி செய்தி ஒன்று கிடைத்தது. http://archives.aaraamthinai.com/ilakkiyam/newpgs/jn03_thomuchi.asp அதனை யூனிகோடில் மாற்றி இங்கே இணைக்கின்றேன்
     
     
    அஞ்சலி
    தொ.மு.சிதம்பர ரகுநாதன் (20.10.1923 - 31.12.2001)


    தமிழில் முதுபெரும் எழுத்தாளரும் முற்போக்கு இடதுசாரி எழுத்தாளர் பரம்பரையின் முன்னோடியுமான தொ.மு.சி. என்ற தொ.மு. சிதம்பர ரகுநாதன் (78) பாளையங்கோட்டையில் 31.12.2001 ல் காலமானார்.
     
    தமிழ் இடதுசாரிப் படைப்புலகில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர். சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு ஒப்பிலக்கியம் என பல்வேறு களங்களில் ஆழங்கால் பதித்தவர். ஓர் எழுத்தாளராக மட்டுமின்றி பத்திரிகையாளராக இதழ் ஆசிரியராக முற்போக்கு எழுத்தாளர் பரம்பரையை வழி நடத்துபவராக இயக்கியவர்.
     
    பன்முக ஆளுமைச் செழுமையும், இடதுசாரிச் சிந்தனையின் மீதான ஈடுபாடும் 'அவரை' உயிர்ப்புமிக்க படைப்புமிகு ஆய்வு ஜீவியாக தொழில்பட வைத்துள்ளது.
     
    1941 - ல் இவரது முதல் சிறுகதை பிரசண்ட விகடனில் வெளியானது.
    1942 - ல் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டார், சிறை சென்றார். பின்னர் விடுதலையாகி கல்லூரியில் படிப்பு முடித்து இலக்கியத்தில் அதிக நாட்டம் கொண்டார்.
    1945 - முதல் குறுநாவலான புயல் வெளியானது.
    1948 - இலக்கிய விமரிசனம் எனும் நூல் வெளியானது.
    1950 - சோசலிச யதார்த்தவாதத்தை வெளிப்படுத்தும் அதற்கு உதாரணமாக காட்டக்கூடிய 'பஞ்சும் பசியும்' எனும் நாவலை எழுதி வெளியிட்டார்.
    1951 - ல் புதுமைப்பித்தன் வரலாறு எனும் நூலை எழுதி வெளியிட்டார்.
    1944 - தினமணியில் துணை ஆசிரியர்.
    1946 - முல்லை இதழில் பணியாற்றினார்.
    சாந்தி எனும் இலக்கிய மாத இதழை தானே பதிப்பித்து வெளியிட்டார்.
    சோவியத் நாடு இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்.
    பாரதியின் சீடராக பாரதி ஆய்வாளராக ரகுநாதன் தன்னை நிலைப்படுத்தினார். கங்கையும் காவிரியும், பாரதியும் ஷெல்லியும், பாரதி சில பார்வைகள், பாரதி காலமும் கருத்தும் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.பாரதி காலமும் கருத்தும் என்னும் ஆய்வு நூலுக்கு 1983ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
     
    1984 - இளங்கோவடிகள் யார்? எனும் நூலை 96 பக்கங்களில் எழுதி வெளியிட்டுள்ளார்.
    1999 - புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் என்ற நூலை வெளியிட்டார்.
     
    தொ.மு.சி. எழுதிய எழுத்துக்கள் அவரது ஆய்வுகள் விமரிசனங்கள் யாவும், தமிழில் மார்க்சிய சிந்தனைத் தனத்தின் விரிவையும், அதன்வழி கிளம்பும் விமரிசன ஆய்வுச் செல்நெறியையும் வளர்த்துச் செல்கிறது. தமிழின் நவீன காலத்து மடைமாற்ற காரணங்களான பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரை இனங்கண்டு அவர்களது ஆய்வுக்கான சரியான தடம் அமைத்துக்கொடுத்த ஆய்வாளர் விமரிசகர் தொ.மு.சி.

     
    சிறுகதை
    சேற்றில் மலர்ந்த செந்தாமரை
    க்ஷணப் பித்தம்
    சுதர்மம்
    ரகுநாதன் கதைகள்

    கவிதை
    ரகுநாதன் கவிதைகள்
    கவியரங்கக் கவிதைகள்
    காவியப் பரிசு

     
    நாவல்
    கன்னிகா
    புயல்
    பஞ்சும் பசியும்

    நாடகம்
    சிலை பேசிற்று
    மருது பாண்டியன்

    விமர்சனம்
    இலக்கிய விமர்சனம்
    சமுதாய விமர்சனம்
    கங்கையும் காவிரியும்
    பாரதியும் ஷெல்லியும்
    பாரதி காலமும் கருத்தும்

    வரலாறு
    புதுமைப்பித்தன் வரலாறு

    ஆய்வு

    இளங்கோவடிகள் யார்?
     
    நன்றி:ஆறாம்திணை
     
     
     
     
    திருநெல்வேலி, டிச. 9:  சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தொ.மு.சி. ரகுநாதன் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் பாராட்டினார்.
     
     திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழியல்துறை சார்பில் "தொ.மு.சி. ரகுநாதனின் இலக்கியத் தடங்கள்' என்ற தலைப்பில் துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கி வைத்து "சாகித்ய அகாதெமி' விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் பேசியது:
      சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு எளிமையாக வாழ்ந்தவர் ரகுநாதன். அவருடன் நெருங்கி உரையாடிய அனுபவம் எனக்கு உண்டு. ரகுநாதனின் புனைப்பெயர் வணங்காமுடி. யாருக்கும் தலைவணங்காதவர், மனசாட்சியை நம்பக்கூடியவர் அவர்.
     
      புத்தகப்பிரியராக வாழ்ந்த அவர், வீட்டில் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். அறிவை வளர்க்க, தேடல் இல்லை என்றால் வளர்ச்சி அடைய முடியாது என்பதில் அவர் அசைக்க முடியாக நம்பிக்கை வைத்திருந்தார்.
     
      வீட்டில் உள்ள நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வந்து குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புத்தகத்தை மட்டும் யாரும் வெளியில் எடுத்துச் செல்ல அவர் அனுமதிப்பதில்லை.
     
      ஜீவானந்தம் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர் ரகுநாதன். ஜீவா மட்டுமே அவரது நூலகத்தில் இருந்து புத்தகங்களை தைரியமாக எடுத்துச் செல்வார்.
     
      அவரது வீட்டில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களை நம்முடைய பல்கலைக்கழகங்கள் விலைக்கு கேட்டன. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்றன. ஆனால் அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. எட்டையபுரத்தில் நூலகம் அமைத்து அங்கு அந்த நூல்களை எடுத்துச் சென்றார்.
     
      சிறுவயதில் ரகுநாதன் பேச்சாளராகவும், எழுத்தாளராகவும், அரசியல் தொடர்பும் கொண்டிருந்தார். உளவியல் ரீதியாக அவர் எழுதிய "கன்னித்தாய்' நாவல், அதைத் தொடர்ந்து எழுதிய "முதல் இரவு' நாவல் ஆகியவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஆய்வு செய்து சில உண்மைகளை அவர் வெளிப்படுத்தினார். அதை சிலர் ஏற்றுக்கொள்ள வில்லை.
     
      சிறுகதை எழுத்தாளர் மட்டுமன்றி, புலமைப்பித்தனின் நண்பராகவும் வாழ்ந்தவர் ரகுநாதன். எந்தக் கூட்டமாக இருந்தாலும் தன்னுடைய வாதத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னவர் ரகுநாதன் என்றார் பொன்னீலன்.
     
      கருத்தரங்கில், ரகுநாதனின் மகள் மஞ்சுளா கலந்து கொண்டார்.
    ..
     
    -சுபா
     

    Innamburan Innamburan

    unread,
    Aug 19, 2010, 7:47:47 PM8/19/10
    to mint...@googlegroups.com
    மிக்க நன்றி, ஸுபாஷிணி, மூலங்கள் தேடுவதும், தகவல்கள் சேகரிப்பதும், ஆய்வுக்கு முதல் படி. இவருடைய படைப்புகள், இடதுசாரி கொள்கைகளுக்கும் மேற்பட்டு இலக்கிய உலகில் இயங்கியதற்கு சான்று. கொள்கையை விடவில்லை. அதையே பற்றிக்கொள்ளவில்லை.
    இன்னம்பூரான்

    2010/8/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 21, 2010, 4:53:51 AM8/21/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    கூட்டாஞ்சோறு வலைப்பக்கத்தில் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. இந்த தொடருக்கு பொறுந்தும் தகவல்களாக இருப்பதால் அதனையும் இங்கு பதிவு செய்கிறேன். முழு கட்டுரையயும் வாசிக்க இங்கே செல்லலாம்.   
     
     
    ஒரு சில குறிப்புக்கள் மட்டும் இங்கே...
     
     
    தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் (1904 – 1965)

    பாஸ்கரத் தொண்டைமான் 1965 ம் வருடம், மார்ச்சு மாதம் 31ம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
     
    இவர் எழுதிய பல நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கீழே:
    • வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன)
    • வேங்கடத்துக்கு அப்பால்
    • பிள்ளைவாள்
    • தமிழறிஞர் முதலியார்
    • ரசிகமணி டி.கே.சி.
    • கலைஞன் கண்ட கடவுள்
    • கல்லும் சொல்லாதோ கவி
    • அமர காதலர்
    • தென்றல் தந்த கவிதை
    • இந்தியக் கலைச் செல்வம்
    • தமிழர் கோயில்களும் பண்பாடும் (கலைக் கட்டுரைத் தொகுப்புகள்)
    • மதுரை மீனாட்சி
    • ஆறுமுகமான பொருள்
    • பிள்ளையார்ப்பட்டிப் பிள்ளையார்
    • கம்பன் சுயசரிதம்
    • கம்பன் கண்ட இராமன்
    • அன்றும் இன்றும்
    • சீதா கல்யாணம்
    • பட்டி மண்டபப் பேருரைகள்
    -சுபா

     
    2010/8/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    இணையத்தில் தேடியபோது தொ.மு.சிதம்பர ரகுநாதன் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.

    Subashini Tremmel

    unread,
    Aug 21, 2010, 7:36:57 AM8/21/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    20. பாரதி பிறந்த இல்லம்
     
     
    பச்சை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட வீடு அது.  வீட்டின் மாடிப்பகுதியில் பாரதி பிறந்த இல்லம் என்ற பெயர் பலகை மாட்டப்பட்டுள்ளது.  
     
    காலை ஏறக்குறைய  10 மணி இருக்கும் நாங்கள் அங்கு சென்ற போது.  ஒரு அதிகாரி ஒருவரும் ஒரு சில பார்வையாளர்களும் இந்த இல்லத்தில் இருந்தனர்.
     
    நுழை வாசலிலேயே  வீட்டின் இரண்டு பக்கங்களிலும் திண்ணை வைத்து கட்டப்பட்ட வீடு. வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றும் உள்ளது. திண்ணையைத் தாண்டி உள்ளே நுழையும் போது முகப்பு பகுதி வருகின்றது. இங்கே வலது புரத்தில் கருஞ்சிலை வடிவத்தில் பாரதியார் முகத்தை வடித்து வைத்திருக்கின்றனர். அதற்கு சற்று தள்ளி ஒரு பகுதியை பாரதி பிறந்த இடம் எனக்குறிப்பிட்டுள்ளனர். இப்பகுதியைக் கடந்து உள்ளே சென்றோம். அங்கே பாரதியார் வரலாற்றைக் கூறும் பாரதியின் தனிப்படங்கள், குடும்பத்தார் படங்கள், நண்பர்களின் படங்கள், சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் படங்கள் சில சுவற்றில் மாட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
     
    அதோடு பாரதியின் பத்திரிக்கைகள், அவர் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிக்கைகளின் புகைப்படங்கள் சிலவும் உள்ளன. அதற்கு பக்கத்தில் வாசலுக்கு அருகில் பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு ஆண்டு வாரியாகக் குறிக்கப்பட்டு ஒரு பலகையில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
     
    இவற்றோடு பாரதியின் கையெழுத்தின் பதிவுகள் இங்கு உள்ளன. அதோடு இந்த பாரதி பிறந்த இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிமுகப்படுத்தி, அரசுடமைப்படுத்தி திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் திறப்பு விழா செய்தியும் உள்ளது.
     
    இவற்றை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பின்னர் முனைவர்.கருணாகர் பாண்டியனிடம் பாரதி இல்லத்தைப் பற்றியும் அது எவ்வாறு அரசுடமையாக்கப்பட்டது என்ற செய்தியையும் கேட்டுப் பதிவு செய்து கொண்டேன். அவர் கூறியதிலிருந்து சில தகவல்கள் தெரியவந்தன.
     
    பாரதியார் இந்தத் தெருவில் தான் பிறந்து வளர்ந்திருக்கின்றார் என்பது உறுதி. பாரதியின் தாய் மாமன் திரு.சாம்பசிவம் ஐயர் பாரதி இங்கிருந்து சென்ற பிறகும் இந்த இல்லத்தில் இருந்திருக்கின்றார். அவருடைய உறவினர்கள் சிலர் கல்கத்தாவில் இருந்திருக்கின்றனர். அவர்கள் இந்த இல்லத்தைச் சில காலம் வேறொருவருக்கு வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். திரு.கருணாகர பாண்டியனின் அண்ணன் திரு.துரைராஜ் ஆசிரியர் எட்டயபுரத்தில் தமிழாசிரியராகவும் கல்லூரி ஆசிரியராகவும் இருந்தவர். 
     
    அவர் சாம்பசிவ ஐயரின் உறவினர்களை அணுகி இந்த இல்லத்தை வாங்கியிருக்கின்றார். வாங்கியவுடன் அந்த இல்லத்தில் ஒரு நூலகத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். 1973 வரை இந்த இல்லம் பலர் வந்து நூல்களை வாசித்து செல்லும் நூலகமாக இருந்துள்ளது. 1973ல் இன்றைய தமிழ்க முதல்வர்.திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இந்த இல்லத்தை பாரதி நினைவு இல்லமாக பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்ட போது இந்த இல்லத்தை அரசாங்கத்திடம் இக்கட்டிடத்திற்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு திரு.துரைராஜ் ஆசிரியர் குடும்பத்தினர்  ஒப்படைத்து விட்டனர்.
      
    இன்று இந்த இல்லம் தமிழக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டு தினமும் ஒரு சிலர் வந்து பார்த்துச் செல்லும் வகையில் பாதுகாக்கப்படுகின்றது.
     
    திரு.கருணாகர பாண்டியன் இச்செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒலிப்பதிவினையும், அதோடு பாரதி பிறந்த இல்லத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இங்கே காணலாம்.
      

    Swarna Lakshmi

    unread,
    Aug 23, 2010, 5:46:34 AM8/23/10
    to mint...@googlegroups.com
    மிக நன்றாக இருக்கிறது சுபா!! உங்களுடன் நாங்களும் பயணம் செய்வதைப்போன்று தோன்றுகிறது.
     
    நன்றி
    ஸ்வர்ணா


    From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
    To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
    Cc: ksuba...@gmail.com
    Sent: Tue, 25 May, 2010 10:16:48 PM
    Subject: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்

    மேலும் படங்களுடனும் ஒலிப்பதிவுடனும் கடந்த இரண்டு பகுதிகளை இணைத்திருக்கின்றேன்
     
     
     
    அன்புடன்
    சுபா


     
    2010/5/24 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    பகுதி 7
     
    வீர பாண்டிய கட்டபொம்மன் நினைவு மண்டபம்
     
    இப்படி மேலும் பல தகவல்களைச் சித்திரங்களாக சுவர்களில் தீட்டி அதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே சிறு குறிப்பும் சேர்த்திருக்கின்றனர். ஆனால் துரதிஷ்ட வசம். எங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வந்த அதிகாரி எங்களை அங்கு பொறுமையாக இருந்து சித்திரங்களைப் பார்த்து குறிப்புக்களை எடுத்துக் கொள்ள நேரம் கொடுக்கவில்லை.  அவர் படங்களுக்கான விளக்கத்தைச் சொல்லிக் கொண்டு சுற்றி இருப்பவர்கள் கேட்கின்றார்களா இல்லையா, அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கின்றோமா, கேள்விகளுக்கு சற்று விளக்கம் தரலாமே என்ற எண்ணம் ஏதுமில்லாமல் பாடத்தை மனனம் செய்து ஒப்புவிப்பவர் போல ஒப்புவித்துக் கொண்டே சென்றார். இடையில் புரியாத வார்த்தைகளுக்கு கேட்ட சந்தேகங்களையும்  அவர் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.
     

    Swarna Lakshmi

    unread,
    Aug 23, 2010, 5:51:43 AM8/23/10
    to mint...@googlegroups.com
    கழிவறைக் கஷ்டம் மட்டுமுல்லை. எங்கே சென்றாலும் கையை நீட்டுவது மிக அதிகமாக உள்ளது. முன்பெல்லாம் சில கோவில்களில் சிலர் மட்டுமே செய்து வந்த இச்செயல், இப்போது அங்கெங்கெனாதாபடி எங்கும் வியாபித்து உயிரை வாங்குகிறது. கோவில்களில் பிச்சை எடுப்பவர்களைப்பார்த்து முன்பு எப்படி நமக்கு கோபம் வருமோ அதுபோல, இப்போது எல்லா இடத்திலும் எல்லாரும் கையை நீட்டும் போது ஏதோ பிச்சைக்காரர்களின் தேசத்திற்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் மாத்திரமல்லாது  - சுற்றுலாத்துறையை நாசம் செய்யக்கூடிய விஷயம். அரசு ஏதாவது செய்தே ஆக வேண்டும்.
     
    ஸ்வர்ணா


    From: Chandrasekaran <plastic...@gmail.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Tue, 25 May, 2010 5:58:12 PM
    Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்

    சுற்றுலாத் துறை சுதந்திரமாகச் செயல் படுவது தமிழகத்திப் பொருத்தவரை கஷ்டம். தொல்லியல்துறை மற்றும் கோயில்கள் என்றால் இந்து அரநிலையத் துறை ஆகியவை மூக்கை நுழைக்கும். கமிஷன் அடிக்கும் பொதுப் பணித் துறையினர் தான் அந்த கழிவறை கட்டும் காண்டிராக்ட் போன்றவர்றை செய்வார்கள். ‘எல்லாருக்கும்' கொடுத்தது போக மிச்சத்தில், எச்சம்தான் மிஞ்சும். அதனால்தான் கழிவறை தறம் கீழ்தறமாக இருக்கிறது. முதலில் தனியாக சுதந்திரம் மிக்க நிறுவனத்திற்கு கீஏ எல்லா சுர்றுலா தலங்களையும் கொண்டுவரவேண்டும். பல துறைகள் மூக்கை நுழைக்கக் கூடாது. சுலபமாக, தனியார் கம்பெனி ஒன்று ஒரு சுற்றுலா மையத்தி மேம்படுத்துகிரது என்றால், அதற்கான செலவுகளை வரிவிலக்காக அளித்தால், கட்டாயம் தரம் கூடும். வரிப் பணம் உருப்படியாக விஷயங்களுக்கு செலவாகும்.

    சந்திரா

    Subashini Tremmel

    unread,
    Aug 27, 2010, 1:39:20 PM8/27/10
    to mint...@googlegroups.com
    அப்படியே வாருங்கள் ஸ்வர்ணா. அடுத்து உங்களை எட்டயபுர ஜமீன் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறேன்...:-)
     
    சுபா

    2010/8/23 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 27, 2010, 1:54:06 PM8/27/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    21.எட்டயபுரம் அரண்மனைக்கு செல்வோம்.. வாருங்கள்!
     
     
    பாரதி பிறந்த இல்லத்தைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டு எட்டயபுர அரண்மனையைப் பார்ப்பது என முடிவாகியது.
     
    காரிலே அரண்மனையை நோக்கி பயணம் செல்வோம் என்று திரு.கருணாகர பாண்டியன் கூறியவுடன் ஏதோ தூரத்தில் இருக்குமோ என நினைத்திருந்தேன். மூன்று நான்கு குறுக்கு வீதிகளைக் கடந்ததுமே அரண்மனையை வந்தடைந்து விட்டோம். அரண்மனை கட்டிடத்தின் முன்னால் வாகனத்தை நிறுத்தி இறங்கிக் கொண்ட பின்னர் எனது பதிவு செய்யும் வீடியோ, ஒலிப்பதிவு கருவிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி மூவரும் நடந்தோம். என்னுடன் திரு.கருணாகர பாண்டியன் மற்றும் மதுரையிலிருந்து வந்திருந்த அவர் நண்பரும் இருந்தார். வாசலில் எங்களுக்காக அரண்மனை மேலாளர் காத்துக் கொண்டிருந்தார். எட்டயபுர ராஜாவின் மூதத மகன் திரு.துரைபாண்டியன் எங்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்குமாறும் அரண்மனையைச் சுற்றிக் காட்டுமாறும் அவரிடம் சொல்லி அன்றைய தினம் நாங்கள் வரும் போது மேலாளர் இருப்பதை உறுதி செய்திருந்தார். ஆக அரண்மனை மேலாளரை சந்தித்த போது அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.
     
    அரண்மனையின் வாயிற்பகுதியில் உள்ளே நுழையும் போது நம்மை வரவேற்பது சிறிய பூந்தோட்டம். அழகிய சிலைகள், நீறுற்று (தண்ணீர் இல்லை) என கலை நயத்தோடு உருவாக்கப்பட்ட தோட்டம். முன்னர் மிக அழகாக இருந்திருக்க வேண்டும். இப்போது பழைய செழிப்பு குறைந்து தென்பட்டது. இந்த வாசல் பகுதியில் தான் அந்தக்காலத்தில் கச்சேரிகளும் நடக்குமாம். கருணாகர பாண்டியன் தனது சிறு பிராயத்தில் இங்கு ஜமீன் குழந்தைகளுடன் தான் ஓடி விளையாண்ட நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்திக் குறிப்பிட்டார். முன்னர், தீபாவளியின் போது எட்டயபுர மக்கள் இங்கு மாலையில் குவிந்து விடுவார்களாம். வானவேடிக்கைகள் இங்கு தான் நடக்குமாம்.
     
    அரண்மனை வாசலின் வலது பக்கம் இருப்பது பூந்தோட்டம். இடது பக்கம் ஒரு கோயில் இருக்கின்றது. அதற்கு பக்கத்தில் இருப்பது அரண்மனை தர்பார் மண்டம், ஜெஜ்ஜை மாளிகை என அழைக்கப்படுவது. இது கண்களைக் கவரும் அழகிய மோகூல் காலத்து கட்டிட அமைப்பு. கொஞ்சம் சீரமைத்து சுவற்றுக்கு வர்ணம் சேர்த்தால் இது கொள்ளை அழகாக இருக்கும். பார்ப்பவர் கண்களை கவரும் கட்டிடக் கலை.
     
    இந்த அரண்மையைத் தவிர்த்து தோட்டத்து பங்களா என்ற மற்றொரு அரண்மனையும் எட்டயபுர ஜமீனுக்கு பக்கத்திலேயே  இருக்கின்றது.
     இங்கேதான் பெரிய மஹாராஜாவும் இருந்திருக்கின்றார். ஆனால் அங்கிருந்து மாறி திருநெல்வேலிக்கு தற்சமயம் குடிபெயர்ந்து விட்டார்களாம். திருநெல்வேலியில் பஸ் நிறுத்தத்திற்குப் பின் புறம் இருக்கும் அந்த அரண்மனை பங்களா சிறந்த மர  வேலைப்பாடுகளுடன் கூடிய ஒரு பங்களா எனவும் தெரிந்து கொண்டேன். 
     
    அரண்மைக்கு நேர் எதிர் புறத்தில் இடது பக்கத்தில் தென்படும் சிறிய வீதியில் சென்றால் எட்டீஸ்வரன் கோயிலை அடைந்து விடலாம். நடக்கும் தூரம் தான். இதற்கு இடையில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. அது வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின்னர் அச்செய்தியை ஒரு செம்புத்தகட்டில் பதித்து வைத்திருக்கின்றனர். அந்தத் தகடு தற்சமயம் சுவற்றில்  பதிக்கபப்ட்டுள்ளது என்ற தகவலையும் அறிந்து கொண்டேன். இதனைப் பற்றி பின்னர் விளக்குகின்றேன்!
     
    இந்த அறிமுகத்தோடு பூட்டியிருந்த அரண்மனைக் கதவை மேலாளர் திறக்க அரண்மணையின் உள்ளே நுழைந்தோம். உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது வரிசை வரிசையாக சுவற்றில் மாட்டப்படிருக்கும் படங்கள் தான்.
     
    எட்டயபுர ஜமீன் அரசிகளைப் பொது மக்கள் 'கண்ணப்பன்' என்று தான் சிறப்பு பெயரிட்டு அழைப்பார்களாம். 'பெரிய கண்ணப்பன்', 'தோட்ட்டத்து கண்ணப்பன்' என்பன சில உதாரணங்கள். இதற்கு ஏதேனும் காரணம் நிச்சயம் இருக்கும்.
     
    உள்ளே சுவற்றில் ஒரு விலையுயர்ந்த கண்ணாடி ஒன்று மாட்டப்படிருந்தது. அது ஜெர்மனியிலிருந்து வாங்கப்பட்ட கண்ணாடி என்று கூறி மகிழ்ந்தார் கருணாகர பாண்டியன். ஜெர்மனியில் கண்ணாடி மற்றும் கண்ணாடியில் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் பிரசித்தி பெற்றவை. லின்ஸ் (Linz) நகரம் இவ்வகை கண்ணாடி உற்பத்திக்கு  பிரபலமான ஒன்று. அந்த காலத்திலேயே ஜெர்மன் கண்ணாடிக்கு மதிப்பு இந்திய அரசர்கள் பால் இருந்ததும் அதனை தருவித்து அரண்மனையை அழகு படுத்தியிருக்கின்றார்கள் என்பதும் ஒரு செய்தி தானே!
     
    இந்தக் கட்டுரையைப் மேலும் படங்களுடனும் பேட்டியின் ஒலிப்பதிவுகளுடனும் காணவும் கேட்கவும் இங்கே செல்லவும்!
     
    தொடரும்..

     

    அன்புடன்
    சுபா


     
    2010/8/21 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 27, 2010, 8:58:02 PM8/27/10
    to mint...@googlegroups.com

    அரசிகளை “கண்ணப்பன் “ என்று அழைக்கப்பட்டதுபற்றியும், அதிலே தோட்டத்துக் கண்ணப்பன் என்று குறிக்கப் பட்டதைப் பற்றியும் சில விளக்கங்கள் கூற விரும்புகின்றேன்.

    எட்டயபுரம் ஒரு ஜமீன். ஜமீன்தார் என்று இருந்தாலும்  மக்கள் அவரை மஹாராஜா என்றுதான் அழைப்பார்கள். அரசியை ராணியம்மா என்று கூறுவோம். பெரிய கண்ணப்பன் என்று அழைக்கப்பட்டது துரைப் பாண்டியனின் தந்தையின் முதல் மனைவியாகும். அதாவது அவர்கள்தான் பட்டத்து ராணி. அவர்களுக்குக் குழந்தை இல்லை. பிறகு அடுத்து ஒரு திருமணம் செய்து கொண்டார். அவர்கள்தான் சின்ன கண்ணப்பன். அதாவது சின்ன ராணி. அவர்களின் குழந்தைகள் ஐவர். முதல் பெண் தங்கம்மாள்தான் என் தோழி. நாங்கள் தங்கப் பாண்டியன் என்று அழைப்போம். அவர்களுக்குப் பிறகு இன்னொரு பெண்ணும் மூன்று பிள்ளைகளும் சின்ன ராணிக்குப் பிறந்தவர்கள். துரைப் பாண்டியனுக் குத்தான் அடுத்த பட்டம் சூட்டப் பட்டது.

    பாரதமாதா தியேட்டரை ஒட்டி ஓர் சிங்காரத்தோப்பு உண்டு. எட்டயபுர மன்னர்கள் அனைவரும் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் அவர்களே வல்லுனர்களாக இருந்தனர். அந்தத் தோட்டாத்தில் ஓர் அரண்மனை உண்டு. அங்கே இருந்து கொண்டு ஓவியம் வரைவார். துரைப்பாண்டியன் தந்தை அந்த தோட்டத்தில் டிராக்டர் ஓட்டியதை நான் பார்த்திருக்கின்றேன்.

    அவர் வாழ்க்கையில் திடீரென்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. திரைப்பட நடிகை

    கமலகுமாரி மேல் காதல் கொண்டு அவர்களைத் துணைவியாக்கிக் கொண்டார். அவர்களை அந்த தோட்டத்து அரண்மனையில் குடிவைத்தார்.

    இங்கே அக்கால மன்னர்களின் அந்தப்புர வாழ்க்கை எப்படி இருந்தன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ராஜ ராஜ சோழனுக்கு 14 மனைவிகள். இராஜேந்திர சோழனுக்கு 17 மனைவிகள். மனைவிகள் என்று வருகின்றவர்கள் பட்டத்து ராணியின் அந்தப் புரத்தில் சேர்ந்து இருக்கலாம். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சகல உரிமைகளும் உண்டு. அரண்மனையில் வேளம் என்று ஓர் இடம் உண்டு. இங்கும் மன்னருக்குப் பல பெண்கள் இருப்பார்கள். ஆசைப்பட்டு கொண்டு வரும் பெண்கள் இவர்கள். ஆனால் உரிமையில்லாதவர்கள். இங்கே இருப்பவர்களுக்கு வேளாட்டிகள் என்று பெய்ர். இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. இப்பொழுதும் செட்டி நாடுகளீல் வேளாட்டிச் சீர் என்று கல்யானத்தில் சிறு தொகை ஒதுக்கி ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு அளித்து வருகின்றனர்.இப்படி பிறந்த பிள்ளைகளின் வம்சத்திற்கு ஓர் ஜாதிப் பெயரும் அளிக்கப் பட்டுள்ளது. அந்த விளக்கம் பக்கம் போக இதற்குமேல் விரும்பவில்லைஅது தனி வரலாறு.

    எட்டயபுர மன்னர் விரும்பி மணந்தவர் தோட்டத்தில் இருந்ததால் தோட்டத்து கண்ணப்பன் என்று பெயர் வந்தது. அவர்கள் மகன் தான் ராம்குமார் பாண்டியன். அவர்கள் பொறுப்பில்தான் தியேட்டரும் பள்ளிக்கூடமும் இருக்கின்றன. அவர்கள் துணைவியார் கல்லூரியில் பேராசிரியயாக இருந்தவர்கள். இப்பொழுது இந்தக் குடும்பம் தனியாக நெல்லையில் இருக்கின்றனர். அந்த அம்மையார் பல தொண்டு நிறுவங்களுடன் இணைந்து சேவை செய்கின்றார்.

    மன்னர் அதற்கடுத்தும் ஒரு பெண்னை மணந்து நெல்லையில் குடிவைத்தார். அவர்களுக்கும் ஒரு மகன் உண்டு. துரைப் பாண்டியன் அங்குதான் இருக்கின்றார்கள் அரண்மனை முன்னால் நிறைய கடைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கின்றனர்.துரைப்பாண்டியன் திருமணம் செய்து கொல்ளவில்லை. ஆசிரியர் துரைராஜ் அவருக்கு நெருங்கிய நண்பர்.



    2010/8/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>
    --

    Swarna Lakshmi

    unread,
    Aug 28, 2010, 12:43:19 AM8/28/10
    to mint...@googlegroups.com
    அம்மா, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி இது என்று நினைக்கிறேன். நீங்கள் அந்தக் காலகட்டத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் என்பதால் கேட்கிறேன். ராஜாக்கள், ஜமீந்தார்கள் எல்லாம் பல தார மணம் கொண்டார்கள் என்பது வரலாறு. இது பொதுமக்களிடையேயும். அரண்மனைக்குள்ளேயும் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டது. ராணிகள் இதை எவ்வாறு எதிர்கொண்டார்கள் - நாம் படிக்கும் நாவல்களில் எல்லாம் இது மிக சாதாரணமாக காட்டப்பட்டாலும், உண்மையில் இதன் தாக்கம் என்ன - எப்படி யாருமே எந்த Possessiveness இல்லாமல் இருந்திருக்க முடியும்...
     
    கேள்வி தவறாயிருந்தால் மன்னிக்கவும்.
    ஸ்வர்ணா

    From: seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Sat, 28 August, 2010 6:28:02 AM
    Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்

    Dhivakar

    unread,
    Aug 28, 2010, 1:03:21 AM8/28/10
    to mint...@googlegroups.com
    ரொம்ப ரொம்ப அன்பாகவும் தங்களுக்குள் அக்கா தங்கை என்று கூப்பிட்டுக்கொண்டும் அன்பு பாராட்டிக்கொண்டும் அன்பே சிவம் என்ற பதத்திற்குப் பொருளாக இருந்துகொண்டும், ஒவ்வொரு ஊரில் (அதாவது தங்களுக்குப் பிடித்த ஊர்களில்) சிவனுக்குக் கோயில் எடுப்பித்துக் கொண்டும் சிவபக்தசிரோன்மணிகளாக இருந்தார்கள் என்று தனிப்பட்ட வகையில் அவரவர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.(!!??)

    இது ராஜராஜசோழன் காலத்தில்.. (இன்னும் கூட சிலகல்வெட்டுகள் உள்ளன. அதை இங்கு குறிப்பிடலாமா என்று தெரியவில்லை)


    2010/8/28 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Swaminathan Venkat

    unread,
    Aug 28, 2010, 7:06:41 AM8/28/10
    to mint...@googlegroups.com
    க்ல்வெட்டுக்களில் அப்படித்தான் குறிப்பிடுவார்கள். அது தான் அதிகார பூர்வமான பதிவு. பிரிட்டீஷ் காலத்தில் தம் அரசைப் பற்றி, கலவரங்களைப்பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள். நாம் என்ன சொல்கிறோம் அப்படி. தமிழ் நாடு அரசைக் கெட்டால, ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 40 ரூபாய்க்கு ஒரு கிலோ பருப்பு சாப்பிட்டுக்கொண்டு பொற்காலத்தில் மக்கள் வாழ்வதாகச் சொல்வார்கள்.
     
    அரசரின் அந்தபுரத்துக்குள் இருக்கும் வாழ்க்கையும் அதன் மதிப்பீடுகளும் வேறாகத்தான் இருக்கும். அவர்கள் அக்கா தங்கைகள் என்று சொல்லிக்கொள்வார்களாக இருக்கும். அபபடி வாழ் தங்களைப் பழக்கப் படுத்திக்கொள்வார்களாக் இருக்கும். வாழ்க்கைப் பார்வைகளும், எதிர்பார்ப்புகளும் மாறியிருக்கும்.  நேபாளத்தில் வேறு விதமான வாழ்க்கை இருப்பதாகச் சொல்கிறார்கள். மூத்த மகனுக்குத் தான் கல்யாணம் நடக்கும். அவளே குடும்பம் முழுதுக்கும் மருமகளாக இருப்பாள் என்று. பாண்டவ தர்மம்.

     

    Swarna Lakshmi

    unread,
    Aug 28, 2010, 12:55:59 PM8/28/10
    to mint...@googlegroups.com
    :)) மரபு சார்ந்த சமுதாயத்தின் ஒரு கூறாக இதையும் அறிய விரும்புகிறேன் - அரசியல் காரணங்கள் என்று சொன்னாலும், பொறாமை உட்பூசல்கள் இல்லாமல் வீடு இருந்திருக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஒரு இடத்தில் கூட வரலாறு இதைப்பற்றி பேசுவதாகக் காணோமே, வாரிசுக்குப் பட்டம் என்று விஷயத்தைத் தவிர - நிஜமான உறவினர்களே காலத்தின் கோலத்தில் அடித்துக்கொள்ளும்போது, பல ஆயிரம் குடும்பங்கள் எப்படி இத்தனை சுலபமாக பிரச்சனையை சமாளித்திருக்க முடியும்... அத்தனை பெண்களும் அறிவு முதிர்ச்சி கொண்டிருந்தார்கள் என்று எண்ணிப்பார்ப்பதும் அரிதாக இருக்கிறது.  பிரச்சனைகள் அதிகமாக இருந்திருந்தால், அரசர்கள் இவ்வளவு தூரம் சாதித்திருக்கவும் முடியாதே...
     
    கல்வெட்டுக்கள் போன்ற ஏதாவது ஆவணங்கள் இருந்தால் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். (பால குமாரன் உடையாரில் லேசாக உட்பூசல்கள் இருப்பதாக காட்டியிருக்கிறார் - பல காரணங்களால் அவர் காட்டியுள்ள ராஜராஜனையும் ராஜேந்திரனையும், குடும்பச் சூழலையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை)
     
    நன்றி
    ஸ்வர்ணா


    From: Dhivakar <venkdh...@gmail.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Sat, 28 August, 2010 10:33:21 AM

    Swarna Lakshmi

    unread,
    Aug 28, 2010, 1:02:18 PM8/28/10
    to mint...@googlegroups.com
    நீங்கள் சொல்வதும் சரியாகத்தான் தோன்றுகிறது ஐயா!!
    நேபாளத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி அத்தனை பெண்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள்... இதற்கு முன் இதைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை. எத்தனை விதமான சமுதாய விதிகள்!! ஒரு வேளை அரபு நாடுகளில் இருப்பதைப்போல பெண்கள் எண்ணிக்கை குறைவு என்பதாக இருக்குமோ??!!
     
    நன்றி


    From: Swaminathan Venkat <vswaminat...@gmail.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Sat, 28 August, 2010 4:36:41 PM

    Subashini Tremmel

    unread,
    Aug 28, 2010, 1:43:31 PM8/28/10
    to mint...@googlegroups.com
    நீங்கள் வழங்கியிருக்கும் கூடுதல் தகவல்கள் இக்கட்டுரைக்கு வளம் சேர்க்கின்றன சீத்தாம்மா.  நன்றி.
     
    -சுபா

    2010/8/28 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

    Subashini Tremmel

    unread,
    Aug 28, 2010, 1:54:03 PM8/28/10
    to mint...@googlegroups.com


    2010/8/28 Dhivakar <venkdh...@gmail.com>

    ரொம்ப ரொம்ப அன்பாகவும் தங்களுக்குள் அக்கா தங்கை என்று கூப்பிட்டுக்கொண்டும் அன்பு பாராட்டிக்கொண்டும் அன்பே சிவம் என்ற பதத்திற்குப் பொருளாக இருந்துகொண்டும், ஒவ்வொரு ஊரில் (அதாவது தங்களுக்குப் பிடித்த ஊர்களில்) சிவனுக்குக் கோயில் எடுப்பித்துக் கொண்டும் சிவபக்தசிரோன்மணிகளாக இருந்தார்கள் என்று தனிப்பட்ட வகையில் அவரவர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.(!!??)

     
     
     
    யோசித்துப் பார்க்கும் போது அக்காலப் பெண்கள் அதிலும்  அரசியர், அரச குலத்துப் பெண்கள் இதை சாதாரணமாக ஏற்றுக் கொண்டிருப்பார்களா என்று என்னால் யூகிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.  பெண் மனதிலிருந்து எப்போதும் இவ்வகையான நிலைக்கு ஒப்புதல் வராது என்பதே என் எண்ணம்.  பற்பல நிர்பந்தங்கள் ஏதாவது பின்னனியில் இருக்கவே இவ்வகை நிலை ஏற்படுகின்றது.  அரச கட்டளைக்காக,  ஸ்திரமான் ராஜ்யம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இப்பெண்கள் அமைதி காத்திருக்கலாம். ஆனால் அது அவர்களின் மனதின் ஒப்புதலோடு நிகழ்ந்த ஒன்றாக இருக்காது என்பதில் எனக்கு  மாற்றமில்லை.
     
    கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கல்வெட்டுக்கள் அரசிகளின் ஆணையின் பேரில் வடிக்கப்பட்டவை என்பதை விட அரசரின் ஆணையில் வடிக்கப்பட்டது என்பதே சரியாக இருக்கும்.  அரசரின் ஆணையில் வரும் சொற்கள்  தான் அங்கு பிரதிபலிக்க வாய்ப்பிருக்கின்றதே தவிர அரசியின் எண்னங்கள் அல்ல.  இல்லையா..:-)
     
    -சுபா

    Subashini Tremmel

    unread,
    Aug 28, 2010, 2:01:30 PM8/28/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    22.எட்டயபுர ஜமீன் படங்கள் 

    இன்றைய பதிவில் அரண்மனை வாசலில் உள்ள படங்களில் சிலவற்றை இணைத்திருக்கின்றேன். அவற்றைக் காண..!

     
    @சீத்தாம்மா.. இந்த படங்கள் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நம்புகின்றேன். நீங்கள் முன்னர் பலமுறை பார்த்திருப்பீர்கள். அப்போது நீங்கள் பார்த்ததற்கும் தற்போது இப்படங்களின் சட்டங்கள் வர்ணம் குலைந்து இருப்பதை பார்ப்பதற்கும் பெரிய மாற்றம் இருக்கும். இந்தப் படங்களில் உள்ளவர்களை உங்களுக்கு ஞாபகம் இருந்தால் இத்த இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள். படங்களுடன் தகவல்களும் இணைத்து வைத்தால் சிறப்பாக இருக்கும்.
     
    அன்புடன்
    சுபா


    2010/8/27 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    Kamala Devi

    unread,
    Aug 28, 2010, 8:38:27 PM8/28/10
    to mint...@googlegroups.com
    திவாகர், ஸ்வர்ணம்,
    கேரளத்தில் நம்பூதிரிகளுக்கு அந்தர்ஜனம் பார்யை இருந்தாலும் ,நாயர்குல [மேனோன்,நம்பியார்,என]
    மனைவிகள் , [ வேறிடத்தில்] பலர் இருப்பார்கள். ஆனால் அந்த பல பெண்களுக்கோ, அவர்களுக்குப்பிறந்த பிள்ளைகளுக்கோ,
    சொத்திலோ, சமூகத்திலோ எந்த உரிமையும் கிட்டாது. என்றாலும் நம்பூதிரிகளுக்கு மனைவியாக இருப்பதில்
    அவர்களுக்கு கோபமோ, வெறுப்போ இல்லை.நம்பூதிரியின் குழந்தையைச்சுமப்பதிலும், அவருக்கு உணவு படைப்பதிலும் அப்படி பரவசம்.ஏனெனில் மேல்சாந்தி அல்லாத நம்பூதிரிகள் பெண்களை  அப்படி ரசித்து வாழ்பவர்கள்.
    வர்மாக்களும் தம்பிரான்களுக்கும் கூட பலமனைவியர் உண்டு. 45 வயதிலும் 13 வயது சுந்தரிப்பாவையை அவர்கள் மணந்து கொள்வார்கள்..மற்ற தம்புராட்டிகள் பொறாமைப்பட மாட்டார்கள்.ஆசையோடு அந்தக்குழந்தையை அலங்கரித்து கணவருக்கு அனுப்பிவைப்பார்கள்.
    தம்பிரான் அத்தனை பெண்களையும் பூவாய், நட்சத்திரமாய், தென்றலாய், கொண்டாடுவார்.தம்புராட்டிகள்
    கவிதைப்பிரியைகள். லலிதம் கற்றவர்கள்.செளமியம், சுமுகம், நேசம் மட்டுமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தவர்கள் அந்தப்பெண்கள். ஸ்ரீதேவி  கொட்டாரத்தில் 12 மனைவியரோடு ராமவர்மா ரொம்ப
    ஜோராய் வாழ்ந்தே மறைந்தார்.
    திவாகர் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு,அம்பலப்பணிகளில் தங்களை அர்ப்பணித்துக்கொள்வார்கள். ஈஷ்வரன் அவர்களுக்கு நேரில் தரிசனம் கொடுத்த வரலாறு உண்டு.[கல்வெட்டுக்குறிப்பும் உண்டு.]
    காலத்தை கணிக்கவும், மரணத்தை உணரவும் கூட அவர்களுக்கு ஆற்றல் உண்டு.ஆனால் எத்தனை பெண்களை
    தம்புரான் கொண்டு வந்தாலும், அவர்களுக்கு கெட்டும் மின்னு[தாலி] க்கு மற்ற மனைவியரே புஷ்ப பூஜை செய்வார்கள். எழுதினால் நீளும்.
    ஆழ்வாரின் படிக்கட்டு  புகைப்படத்துக்குகூட, சுவாரஸ்யமான சம்பவம் உண்டு.
    பெண்கள் அம்பிகைகளாய் இச்சமூகத்தில் மதிக்கப்பெற்றவர்கள்.
    கமலம்

     
    http://www.kamalagaanam.blogspot.com



    From: Swarna Lakshmi <lakshm...@yahoo.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Sunday, 29 August 2010 01:02:18

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 28, 2010, 9:11:54 PM8/28/10
    to mint...@googlegroups.com

    ஸ்வர்ணாவின் கேள்விக்குப் பதில் கூறத் தயங்கிக் கொண்திருந்தேன் அதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் விவாதம் வளர்வதைப் பார்த்து நான் பதில் கூறுவது முக்கியம் என்பதை உணர்ந்து எழுதுகின்றேன்.

    ஆய்வு என்று வரும் பொழுது, அது நடந்த காலம், அப்பொழுது இருந்த நம்பிக்கைகள், சமுதாயச் சூழல் எல்லாவற்றையும் மனத்திற்கொண்டு பார்க்க வேண்டும்.

    கல்வெட்டுகளும் சாசனங்களும் கூடப் பின்னால் வந்தவைகள்தான்.

    வரலாற்றின்படி பேசுகின்றேன். தயுவு செய்து புராணங்களையும் செவிவழிச் செய்திகளையும் பிணைக்க வேண்டாம்.

    மனிதர்கள் தோன்றிய பொழுது அவன் உணர்ந்த பசிகL இரண்டு, வயிற்றுப் பசி, அடுத்து உடல்பசி. அப்பொழுது எந்த சட்ட திட்டங்களை யும் வகுத்து குடும்பமாக வாழவில்லை. ஆண் தன் உழைப்பின் பயனை தன் வாரிசுகளுக்குக் கொடுக்க நினைக்கவும் தோன்றியதுதான் குடும்பம். குழந்தையை ஈன்றெடுத்துப் பதுகாக்குக்ம் பெண்ணை தன் கட்டுப் பட்டுக்குள் கொண்டு வந்தான் வெறும் போகப் பொருளாய் இருந்தவ ளுக்குப் பொறுப்புகள் கொடுக்கப் பட்டன. பெண்ணிற்கு முக்கியக் கடமை குடும்பம் தான். தலைவிக்கு அதிக பேச்சுரிமை கூடக் கிடையாது. சில புலவர்களை வைத்து, அவ்வையார் போர்க்களத்தில் சமாதனம் செய்த செய்திகளை வைத்து பெண்ணிற்குச் சுதந்திரம் இருந்தது என்பதல்ல. உடம்போக்கு இருந்தாலும் சமுதாயத்திற்குக் கட்டுப் பாடவர்களே பெண்கள். ஆனுக்குப் பல பெண்களுடன் வாழும் சலுகை இருந்தது. ஒருவன் ஒருத்தி என்ற குடும்பத்தில் வருத்தம், ஊடல் , சிறு சிறு சண்டை நேரலாம். ஆனாலும் கணவனைத் தூக்கி எறிய நினைக்கார்.

    மன்னர் வாழக்கையில் பலதார மணங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எனவே அங்கே சண்டை வராது. மூத்த மனைவியின் பாதையில் மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ராஜா மனைவி என்ற அந்த்ஸ்தில் திருப்தியடன் வாழ்ந்தனர்

    சீதாம்மா கதையளக்கின்றாகள் என்று நினைக்கலாம்

    இரு உதாரணங்கள் கூறுகின்றேன்

    எனக்கு வயது 76.

    என் தாயாரை என் அப்பா அடிப்பதுண்டு. அடித்த பின் என் தாய் அவரை மூன்றுதரம் சுற்றி வந்து நமஸ்காரம் செய்து மன்னிச்சுடுங்கோ என்று கேட்டதைக் கன்ணால் கண்டிருக்கின்றேன். தப்பு அப்பாமேல் தான். கோபக் காரர். பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம். மாலையில் அப்பா சினிமாவிற்குப் போக காசுதருவார். மல்லிகைப்பூவும் வாங்கித் தருவார். நடந்த அனைத்தும் அம்மா மறந்து சிரிப்பார்கள்

    என்னைப் போராளியாக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. பெண்ணின் மன நிலை அந்த அளவுதான் அப்பொழுது இருந்தது.

     

    1962 வேலூருக்குப் பணியாற்றச் சென்றேன். அங்கே முஸ்லீம் குடும்பங்களுடன் அதிகம் பழக நேரிட்டது. சில குடும்பங்கலில் ஒரு ஆணுக்கு மூன்று அல்லது நான்கு மனைவிகள் ஒரே வீட்டில் பார்த்தேன். எந்த சண்டையும் இல்லை. வெளிப்படையாகத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கூறியது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தது.

    முதல் மனைவிக்குத்தான் அதிகாரம். கணவர் யாருக்கு வாங்கி வந்தாலும் முதல் மனவியிடம் கொடுப்பார் அந்த அம்மா மற்றவர்களுக்கு அளிப்பார்.

    அங்கே பிரித்து நடத்தப் படவில்லை. முதலில் வந்தவர்கள் என்ற மரியாதையில் ஒத்துப் போயினர்.

    ஒரு காலத்தில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எல்லாம் அவர் அறிவுரைப் படி நடந்து வந்தது. இவைகள் அக்கால சமுதாய மரபுகள்.

    குடும்பத்திலும் இது பொருந்தி இருந்தது.

    இப்பொழுது திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம்பற்றிய பேச்சும் ஆரம்பம். பெரியவர்களுக்குரிய மரியாதையும் குறைந்து விட்டது. இது இக்காலச் சூழல். எல்லாம் இருக்கும் பழக்க வழ்க்கங்களுக்கேற்ப மன நிலையும் அமைகின்றது

    ஆனால் ஒன்றைக் கூற வேண்டும். உரிமையுடன் வரும் மனைவிகள் ஒத்துப் போவார்கள். ஒட்ட வந்தவர்கள் பணிந்துபோய் வாழ்வார்கள். யாரவது வேறு காரணங்களால் வந்து சேர்ந்து தனித்து இடம் அமைத்து ஆண்மகன் தனிச் சிறப்பு செய்தால் சண்டைகள் , போராட்டங்கள் வருவதும் உண்டு. மற்ற பெண்கள் வந்தவளை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். பிறக்கும் குழந்தைகள் கூடப் பழகுவதில்லை

     

    தற்கால சம்பவம் ஒன்றைப் பெயரிடாமல் சொல்லுகின்றேன். அவர் ஒரு பெரிய பிரமுகர். பல பெண்களுடன் விளையாடுபவர். மனைவியும் குழந்தைகளும் ஒரு விட்டில் இருந்தனர். அந்த மனிதர் விளையாடுவாரே தவிர நிரந்தரமாச் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒருத்தி வந்தாள். அவளைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழல் வந்தது. தனியாக வீடு அமைத்து வைத்தார். அவளுக்கும் குழந்தை பிறந்தது. அவர் மனவியோ மற்ற குழந்தைகளோ இந்தப் பெண் வீட்டிற்கு வர மாட்டார்கள். வெகு நாட்கள் வரை வெளியார்கள் கூட வருவதில்லை. சில ஆண்டுகளாககொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்கள் வர ஆரம்பித்தனர். மனைவியில் பிள்ளைகள் எல்லோரும் சேராவிட்டலும் சிலர் சேர ஆரம்பித்துவிட்டனர் இந்தக் காலத்துக் கதை.

    நான் சொன்ன அத்தனையும் சமுதாய மரபின் வரலாறே!

    உணர்வுகள் என்பதும் காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாறி மாறி வருகின்றன. பொதுமைப் படுத்த முடியாது.

    சமீபத்தில் ஒரு கணவன் தன் மனைவிக்குப் பிறந்த நாள் பரிசு என்ன கொடுத்தான் தெரியுமா? ஒரு இளைஞனைக் கூட்டி வந்து பனம் கொடுத்து என் மனவியைச் சந்தோஷப் படுத்து என்று. இது பத்திரிகைச் செய்தி. திருமணத்திதற்குமுன் எப்படி வாழ்ந்தாலும் மணமான பின் சரியாக இருந்தால் போதும் என்று சொல்பவர் ஒரு கூட்டம். செக்ஸ் தவறில்லை

    என்றும் சிலர் பேச ஆரம்பித்திருக்கின்றனர். மேலை நாட்டு முறை.

    மேலை நாடுகளில் அதிகம் உணரப்படுவது , மதிக்கப்படுவது fidelity not chastity. காலம் மிக வேகமாச் சுழன்று கொண்டிருக்கின்றது. உணர்வுகளையும் மார்றங்களையும் பற்றிப் பேசும் பொழுது காலத்தை அவசியம் கொள்ளல் வேண்டும்.



    2010/8/28 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

    N. Kannan

    unread,
    Aug 28, 2010, 10:56:49 PM8/28/10
    to mint...@googlegroups.com
    என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துபவர் சீதம்மா! இருபதாம் நூற்றாண்டு
    ஆரம்பகாலப் பெண்ணின் மனோநிலையைச் சொல்லி அப்படியே கற்றைத்தாவலில் 21ம்
    நூற்றாண்டு பாலியல் சுதந்திரச் சிந்தனையைத் தொட்டுச் செல்லும் அழகு. மகா
    தைர்யசாலிதான்!

    கமலம், திவாகர், கொஞ்சம் சீதம்மா சொல்வது காலம் எப்படி மனித நிலையைத்
    தீர்மானிக்கிறது என்று. இராம காவியம் இந்தியா முழுவதும் புகழப்படும் அதே
    நேரத்தில் அவன் தந்தை ஏகபத்னி விரதன் அல்ல. நமக்குக்கிடைக்கும் கதை,
    அரசிகள் அனைவரும் சகோதரிகள் போலவும், பிள்ளைகள் அனைவரும் ஒருதாய்
    வயிற்றுப்பிள்ளைகள் போலவும் வளர்ந்தார்கள் என்று. சீனாவில் ஆணுக்கு எது
    அழகு என்று கண்டு காலை மடக்கி கோணலாக்கி நொண்டியாக நடந்ததும்
    பெண்கள்தான். விக்டோரிய ஐரோப்பாவில் இடை சிறுத்து இருக்க வேண்டும் எனும்
    அழகியல் நியதிப்படி விலா எலும்பை எடுக்கும் பெண்கள் இருந்திருக்கின்றனர்.
    இன்றையக் கொரியாவில் நான் அதிகம் பெண்ணியம் பேசினால் என்னைக்
    கட்டுப்படுத்துவது சக பெண் விஞ்ஞானிகளே! சமூகம் விதிக்கும் விதியை
    மதித்து வாழுதல் சமயோஜிதம் என்று கருகின்றனர். 21ம் நூற்றாண்டிலேயே
    அப்படியென்றால் சீதம்மா சொல்வது, கமலம் சொல்வது, திவாகர் சொல்வது
    அப்படியே உண்மையே! காரணம் உயிரியல் அடிப்படை. 90% பாலூட்டிகள் பலதார மணம்
    கொண்டவை. வல்லமை வெல்லும் எனும் உயிரியல் சட்டப்படி வல்லமை உள்ளவன்
    பலதாரங்கள் வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால், இந்த விதி எல்லோருக்கும் செல்லுபடியாவதில்லை. Possession என்பதும்
    உயிர்க்குணம். தனது எல்லை (territorial behaviour), தனது உணவு (போதிய
    உணவு உலகில் இருக்கும் போதும் பட்டிணிச்சாவு வருவது எதனால்?), தன் மனைவி,
    தன் கணவன், தன் பிள்ளை இப்படி. இக்குணத்தை அடக்கி உறவுகளைப்
    பொதுமைப்படுத்துவது பெரிய சவால். அதுவும் நடந்திருக்கிறது, நடக்கிறது.
    ஆனால் அதைப்பற்றிப் பேசினால் பிரச்சனையாகும். ‘பேசாப்பொருள்’ என்று ஒரு
    சிறுகதை என் வலைப்பதிவில் எழுதிவிட்டு பெண்களிடம் செருப்படி வாங்காத
    குறைதான் :-)) (அப்போது கமலம், சீதம்மா போன்றோர் இல்லை! என்ன செய்வது).
    ஆயினும் பல ஆண்கள் அது தமிழ் மண்ணில் நடைபெறுகிறது என்றே பின்னூட்டம்
    தந்தனர். Wife Swapping, Group Sex போன்றவற்றின் உளவியல் சுவாரசியமானது.
    பலர் இவை வெறும் விலங்கு இச்சை என்று சொன்னாலும், சீதம்மா
    சுட்டிக்காட்டுவது போல் அது அன்பினாலும் விளையலாம். இல்லையெனில், கமலம்
    சொல்வது போல் மூத்த மனைவி சின்னவளைச் சிங்காரித்து தலைவனிடம்
    அனுப்புவானேன்?

    மனிதன் முழு விலங்கும் அல்ல, முழு தேவனும் அல்ல. கொஞ்சம் இரண்டும்
    கெட்டான். எப்படியோ அட்ஜெஸ்ட் பண்ணி வாழ்வு ஓடுகிறது :-))

    க.>

    2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>


    சமுதாயத்திற்குக் கட்டுப் பாடவர்களே பெண்கள். ஆனுக்குப் பல பெண்களுடன்
    வாழும் சலுகை இருந்தது. ஒருவன் ஒருத்தி என்ற குடும்பத்தில் வருத்தம்,
    ஊடல் , சிறு சிறு சண்டை நேரலாம். ஆனாலும் கணவனைத் தூக்கி எறிய
    நினைக்கார்.
    >
    > மன்னர் வாழக்கையில் பலதார மணங்கள் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்று. எனவே அங்கே சண்டை வராது. மூத்த மனைவியின் பாதையில் மற்றவர்கள் அவரவர் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். ராஜா மனைவி என்ற அந்த்ஸ்தில் திருப்தியடன் வாழ்ந்தனர்
    >
    >

    Kamala Devi

    unread,
    Aug 28, 2010, 11:25:06 PM8/28/10
    to mint...@googlegroups.com
    அன்பின் சீதாம்மா, முனைவர் கண்ணன்
    ஞாயிறு என்பதால் வேலை அதிகம். அதனால்தான் உடனே எழுதவரமுடியவில்லை.
    இப்பொழுது சாய குடிக்கும் நேரம். அதனால் சாவகாசமாக பேசலாம்
    சீதாம்மா,
    கேரளத்தில்குறிப்பிட்ட ஒரு நம்பூதிரியின் 3வது மனைவியின், மகள் இப்பொழுது
    சிங்கப்பூரில் இருக்கிறாள்.என்டெ பிரிய தோழி.
    இன்றும் கேரளா போனால் தந்தையின் மூத்த தார மனைவியருக்கும், அவர்களின் பெண்களுக்கும்
    பரிசுப்பொருள் வாங்கிச்சென்று
    பார்த்துவருவாள்.ஆனால் அவர்களின் குறிப்பிட்ட பூஜைதினம்மட்டும், இவள் கேரளத்தில்
    இருந்தாலும் கூட இவளையோ, அவள் அம்மாவையோ அந்தப்பெண்கள்
    அழைக்கமாட்டார்கள்.இவர்களுக்கு அதில் கோபமும் இல்லை. நாம் எப்படி அந்தப்பூஜையில்
    கலந்துகொள்ளமுடியும்?என்று சாவதானமாகவே சொல்வார்கள்.
    நம்பூதிரி இவள் அம்மவைக்காண வரும் நாளுக்காக அந்த அம்மா விரதமிருப்பாள்.அவர்
    வரும்தினம் அவரும் அப்படி அன்பில் இழைந்து நெகிழ்ந்து நிற்பாராம். தோழி
    சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கும்.கணவரும் ஞானும் இந்த சேதியை ரசித்து கேட்போம்.
    சிங்கப்பூர், மலேசியாவில் இப்படி இன்னொரு பெண்டாட்டியிடம் போய் விட்டு வீட்டிற்கு
    வந்தால் செருப்படி விழும்.
    ஆனால் அங்கு தவறில்லை.காரணம் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வியல் சிந்தனையே வேறு.
    என டெ அச்சாவுக்கும் அம்மாவுக்கும் 20 வயதுக்குமேல் வயது வித்தியாசம். அம்மா
    குழந்தை, 20 வயது மூத்தவரை மணந்ததில் அம்மா கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. .என்டெ
    சேச்சி மார் எல்லோருமே 10 வயது பெரியவரைத்தான் மணந்திருக்கிறார்கள்.
    அச்சாவுக்கும் அம்மாவுக்கும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். அம்மா நிறைய
    பெற்றாள். சந்தோஷமாகவே வாழ்ந்தாள் .
    இன்று அவ்வளவு வயதில் பெரியவரை மணக்க நம் பிள்ளைகள் சம்மதிப்பார்களா?
    முனைவர் கண்ணன்.
    நிங்ஙளின் பேசாப்பொருள் மலையாளத்தில் வந்திருந்தால் தீவிர இலக்கியவாதிகள் ரொம்பவும்
    ரசித்திருப்பார்கள்.
    திவாகர், சொல்லும் தகவல்கள் ---வரலாற்றுத்தகவல்கள்--சத்யமானு
    கமலம்

    http://www.kamalagaanam.blogspot.com

    ----- Original Message ----
    From: N. Kannan <navan...@gmail.com>
    To: mint...@googlegroups.com
    Sent: Sunday, 29 August 2010 10:56:49
    Subject: Re: [MinTamil] Re: எட்டயபுரத்தை நோக்கி - தொடர்

    க.>

    --

    Dhivakar

    unread,
    Aug 29, 2010, 2:28:49 AM8/29/10
    to mint...@googlegroups.com
    உண்மையிலேயே எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பெண் உலகின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் பெரும்பங்கு வகிக்கிறாள். இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் கூகிள் கொடுக்கும் ஸ்பேஸ் போதவே போதாது.

    ஸ்வர்ணா!

    ஒரு எழுத்தாளன் எனும் முறையில் நானும் இந்த எண்ணத்தில் ஈடுபடுவதுண்டு. ஒரு ஆராய்ச்சிக்காக அந்தப்புரம் சென்றோமென்றால் நம் தலையை  அறுத்துக் கையில்கொடுத்து வெளியே அனுப்பிவிடுவார்கள்(!). எந்த அரசனும் தத்தம் அந்தப்புர வாழ்க்கையை வெளிப்படுத்துவதில்லை.

    பொதுவாகவே, அந்தப்புரத்தில் பெண்ணோடு பெண் எப்படி உறவாடி இருக்கவேண்டும் என்றால், எப்போதுமே பெண்ணிடம் மேலோங்கி இருப்பது தியாக குணம் - இது பாஸிடிவ். இன்னொரு குணம் உண்டு - அது அசூயை. இது நெகடிவ்.

    இன்னும் சொல்லப்போனால் ‘மெடீரியல் பெனிஃபிட்’ என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதில் வல்லவர்கள். அதாவது இந்த அரசர் மூலம் தனக்குப் பிறக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக அமையவேண்டும் என்பதில் வல்லவர்கள்.

    குலோத்துங்க சோழனின் உரிமைப்பெண்கள் (சீதம்மா சொல்வது போல) மூன்று பேரில் மூத்தவளுக்கு ஏழு மகன்களைக் கொடுத்தான் (ஒரு்வனுக்கு அடுத்தப்பட்டத்து அதிகாரத்தையும் சேர்த்து), இரண்டாமவளுக்கு சபையில் தன் பக்கத்தில் அமரும் உரிமையைக் கொடுத்தான். மூன்றாமவள் (ஏழிசைவல்லபி) வெளியே செல்லும்போது அவளோடுதான் செல்வான் - ஆதாரம் கலிங்கத்து பரணி.

    பெண்கள் சுயமாக சிந்தித்தார்களா என்பதை விட பெண்களைப் பெற்றவர்கள் எல்லாவற்றையும் சுயமாக சிந்தித்து அரசனை மருமகனாகப் பெற்றதன் மூலம் எல்லாவகை நன்மையும் அடைந்தார்கள் என்பதுதான் உண்மை

    சிறுவயதில் இருந்தே போதிக்கப்படும் கல்வி முறைகள், பெண் இப்படித்தால் இருக்கவேண்டும் என்று பால பருவத்திலேயே கற்பிக்கப்படுவது போன்றவை அந்தக் கால கட்டத்தில் ராணிகள் வாழ்வை செம்மைப்படுத்தியதாகவே கருதுகிறேன்.

    தெய்வபக்தி சோழர் கால கட்டத்தில் பெண்களிடையே பெரும்பங்கு வகித்தது. ராஜராஜன் பெரிய கோயில் கட்டும்போதே அவன் மனைவி லோகமாதேவி தஞ்சை பக்கத்திலேயே இன்னொரு கோயிலும் கட்டி பெரிய கோயிலுக்கு முன்பாகவே கும்பாபிஷேகம் செய்ததாக வரலாறு சொல்கிறது.

    இன்னொரு விஷயம் தெரியுமா.. ராஜன் மனைவியாவதில் எத்தனையோ சிரமங்கள் உள்ளன தாயே.. எவன் பலவானோ, எவன் வலியோனோ, அவன் மனைவி மட்டுமே பாதுகாப்புள்ளவள். எவன் தோல்வி அடைகின்றானோ அந்த அரசனின் மனைவி கைப்பற்றப்பட்டு, எதிரி அரசனின் ’உரிமையற்ற’ பெண்களின் கூட்டத்தில் சேர்க்கப்படுவாள். நியாயம் கிடைக்காத பல அரசிகள் தீப்பாய்ந்ததுண்டு. தன் கணவனான அரசன் போரில் தோல்வி அடைந்தான் என்று கேள்விப்பட்டதுமே தீப்பாய்ந்தவர்கள் இருந்த இழிவான நிலை பாரதத்தில் 1800-1850 ஆம் ஆண்டு வரை நீடித்தது.

    இத்தகைய தீப்பாய்ந்த பெண்கள் இன்னமும் கூட பல ஊர்களில் தேவதைக்குச் சமானமாக பூசிக்கப்பட்டு வருகிறார்கள். ஆந்திராவில் இவை சர்வ சாதாரணம் அந்தக் காலத்தில்.

    பின்னாளில் ராஜபுத்திரர் அரச வாழ்வில் ’சதி’ முக்கியத்துவம் பெற்றதே இதனால்தான்.

    தி

    2010/8/29 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 29, 2010, 3:17:36 AM8/29/10
    to mint...@googlegroups.com
    திவாகர் எழுதியதை நான் எழுத நினைத்தேன். அதைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தால் என்னையும் மீறி அரசியல் நழைந்துவிடும். என்னைப் ப்ஓன்றோர்க்கு தர்மசங்கடமான கேள்விகள். ,திவாகர் இருப்பதால் ஒதுங்கி விடுகின்றேன்

    2010/8/29 Dhivakar <venkdh...@gmail.com>

    Dhivakar

    unread,
    Aug 29, 2010, 3:27:47 AM8/29/10
    to mint...@googlegroups.com
    நான் எழுதியதையே சீதம்மா எழுதியிருந்தால் உண்மை இன்னமும் ‘பச்’ சென சுட்டெரித்திருக்கும். அத்தனை வல்லவை அவர்களுடையது. உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை.

    தி

    2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 29, 2010, 3:49:43 AM8/29/10
    to mint...@googlegroups.com
    எனக்கு இரு சொற்களுக்கு விளக்கம் வேண்டும். புரியாமல் கேட்கின்றேன்
    திவாகர் சொன்னாலும் சரி அல்லது தலைவர் கண்ண்னே சொன்னாலும் சரி
    தலைவா, கொஞ்சம் இந்தக் கிழவிக்கு அர்த்தம் சொல்லுங்க
    மரபு என்றால் என்ன? அதற்கு காலவரையுள்ளதா
    அரசியல் என்றால் என்ன
    இன்னொன்றும் கேட்கத் தோன்றி விட்டது
    எங்கும் தமிழர் பண்பாடு என்று சொல்கின்றார்களே
    தமிழர் பண்பாடுகளில் முக்கியமனவைகளைக் கூறுக
    தேர்தல் தெரு முழக்கம் போல் இந்த தமிழர் பண்பாடுபற்றி முழக்கம் கேட்டு குழம்பிபிட்டேன்.தப்பா நினைக்கதீங்கோ.

    2010/8/29 Dhivakar <venkdh...@gmail.com>

    Dhivakar

    unread,
    Aug 29, 2010, 4:04:04 AM8/29/10
    to mint...@googlegroups.com
    மரபுன்னா தொன்மை, தொன்றுதொட்டு என்று வரலாம். ஆனால் இந்த அரசியல், தமிழர் பண்பாடுக்கெல்லாம் விளக்கம் தெரியாது. உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன் - யாராவது பொருள் சொன்னால்..

    சரி, தமிழர் என்று கேட்டுள்ளீர்கள். எந்தத் தமிழர்?
    பண்டைக்காலத்து சங்கத்தமிழர் சந்ததிகளா.. எந்தக் காலத்து தமிழர்.. தமிழ் பேசுவோரா அல்லது தமிழ்நாட்டில் வசிப்போரா, அல்லது தாய்பாஷை தமிழாகக் கொண்டோரா, அல்லது தமிழர் என்பதை எப்படி கணக்கில் எடுப்பது, ஏதாவது முறைமை உள்ளதா..



    2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 29, 2010, 4:46:03 AM8/29/10
    to mint...@googlegroups.com

    தமிழர் என்றவுடன் எத்தனை கேள்விகள்?

    நான் வேலை செய்யும் பொழுது சில ஊர்களுக்குப் போயிருந்த பொழுது என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். தமிழகத்தில் அவர்கள் பேசும் தாய் மொழிக்குக் கணக்கெடுக்க வேண்டுமாம். அவர்கள் தெலுங்கு பேசுகின்றவர்கள் நாங்கள் அதிகம் இருப்போம் என்றார்கள்

    வரலாற்றைப் பார்க்கும் பொழுது நம் மூவேந்தர்களும் மற்ற மொழி பேசுகின்றவர்களுடன் மண உறவு வைத்திருந்திருக்கின்றார்கள். அதனால் தாய் மொழி, தந்தை மொழி என்று வந்துவிட்டது. சாதிக்குக் கணக்கு எடுப்பது போல் இதற்கும் எடுக்க வேண்டும். தமிழ் நாடு தமிழனுக்கே என்ற கோஷம் ஆரம்பமாகிவிட்டது. எதிர்காலத்தில் இனி ஒவ்வொரு சாதிக்கும் தனிப் பள்ளிக் கூடம், தனிக் கோயில், தனி சுடுகாடு வேண்டும். அதே போல் மொழிவாரியாக கோரிக்கை வந்தால் தமிழ் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை விரட்டிவிடுவார்களா?

    ஒரே குழப்பமா இருக்கு. திவாகர் என்னை வம்புக்கு இழுத்துவிட்டீர்கள்.

    எம்.ஜி. ஆர் அவர்கள் மலையாளம். தந்தை பெரியாருக்கோ கன்னடம். செல்வி ஜெயலலிதா கன்னடம். கலைஞர் அவர்களை தெலுங்கர் என்று சொல்வதுண்டு. காப்டன் விஜயகாந்த் தெலுங்கர். தமிழ்த் தானைதலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது?

    நமக்கு எதுக்கு வம்பு. ஓட்டு போடும் பொழுது யார் காசு அதிகம் தருகின்றார்களோ அவர்களுக்கு ஓட்டு போடும் தாராள மனம் நமக்கு வந்துவிட்டதே. ஆமாம் நாம் யார்? புரியவில்லைஎங்கோ போய்விட்டேன்

     

    மரபு “தொன்மை “ என்றீர்கள். அந்தத்தொன்மை என்பது என்ன

    ஏசு பிறப்பதற்கு முன்னா அல்லது பின்னா தப்பு தப்பு. நாம் தமிழர் மரபு பற்றி பேசுகின்றோம் முதல் சங்க காலமா, இடைச்சங்கம், கடைச் சங்க காலமா, களப்பிரர் காலமா, சமய காலமா?தற்காலம் வராதோ?

    மனிதன் நிகழ்காலம் என்று நினைப்பது கணப்பொழுதில் வந்து போய்விடுகின்றது. மனிதன் வாழ்வது எப்பொழுதும் இறந்த காலமா? இறந்த காலம் கடந்த காலத்தைக் காலத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வோமா தொடர்ந்து வருவது பெண் குழந்தையைப் பத்துமாதம் சுமந்து பெறுவதே. குறைப் பிரசவங்களும் அபூர்வமாக உண்டு. மாறாமல் நடப்பது இது ஒன்றுதான். கலாச்சாரம், பண்பாடு இவைகளைத் தெரிந்து கொள்ள ஆசை.

    அதனால்தான் கேட்டேன். திவாகர் உங்கள் ஆசை தீர்ந்ததா? சீதாம்மாவைச் சீண்டிவிட்டால் கிழவி உளற ஆரம்பித்துவிடுவாள்.

    அக்டோபர் மாதம் சென்னக்குப் போகின்றேன் 5 மாதங்கள் தங்கப் போகின்றோம். இந்தக் காலத்தில் நாமிருவரும் ராமச் சந்திரனைப் பார்க்கின்றோம். அடுத்த கதைக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்

     

     



    2010/8/29 Dhivakar <venkdh...@gmail.com>

    devoo

    unread,
    Aug 29, 2010, 4:58:15 AM8/29/10
    to மின்தமிழ்
    >> மரபு என்றால் என்ன?<<

    நான் சொல்லலாமா ?
    நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்தக்கணத்துக்கு முன்பிருந்து உலகின்
    தோற்றம் வரையிலான செய்திகள், நம் புரிதல் அனைத்தும் மரபினுள்
    அடங்கும் என்பது என் சிற்றறிவுக்கு எட்டும் கருத்து; தவறென்றால்
    திருத்திக்கொள்கிறேன்

    ( ’புரிதல்’ மரபிலக்கிய ஒப்புதல் பெற்ற சொல் என்று அரங்கனார்
    தெரிவித்துள்ளார்; இனிமேல் தயக்கமின்றிப் பயன்படுத்துவேன் )

    தேவ்


    On Aug 29, 2:49 am, seethaalakshmi subramanian


    <seethaalaks...@gmail.com> wrote:
    > எனக்கு இரு சொற்களுக்கு விளக்கம் வேண்டும். புரியாமல் கேட்கின்றேன்
    > திவாகர் சொன்னாலும் சரி அல்லது தலைவர் கண்ண்னே சொன்னாலும் சரி
    > தலைவா, கொஞ்சம் இந்தக் கிழவிக்கு அர்த்தம் சொல்லுங்க
    > மரபு என்றால் என்ன? அதற்கு காலவரையுள்ளதா
    > அரசியல் என்றால் என்ன
    > இன்னொன்றும் கேட்கத் தோன்றி விட்டது
    > எங்கும் தமிழர் பண்பாடு என்று சொல்கின்றார்களே
    > தமிழர் பண்பாடுகளில் முக்கியமனவைகளைக் கூறுக
    > தேர்தல் தெரு முழக்கம் போல் இந்த தமிழர் பண்பாடுபற்றி முழக்கம் கேட்டு
    > குழம்பிபிட்டேன்.தப்பா நினைக்கதீங்கோ.
    >

    > 2010/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>


    >
    > > நான் எழுதியதையே சீதம்மா எழுதியிருந்தால் உண்மை இன்னமும் ‘பச்’ சென
    > > சுட்டெரித்திருக்கும். அத்தனை வல்லவை அவர்களுடையது. உண்மை, வெறும்
    > > புகழ்ச்சியில்லை.
    >
    > > தி
    >

    > >   2010/8/29 seethaalakshmi subramanian <seethaalaks...@gmail.com>


    >
    > >>  திவாகர் எழுதியதை நான் எழுத நினைத்தேன். அதைச் சுட்டிக் காட்ட ஆரம்பித்தால்
    > >> என்னையும் மீறி அரசியல் நழைந்துவிடும். என்னைப் ப்ஓன்றோர்க்கு தர்மசங்கடமான
    > >> கேள்விகள். ,திவாகர் இருப்பதால் ஒதுங்கி விடுகின்றேன்
    >

    > >> 2010/8/29 Dhivakar <venkdhiva...@gmail.com>

    > >>> 2010/8/29 Kamala Devi <saahith...@yahoo.com.sg>


    >
    > >>> அன்பின் சீதாம்மா, முனைவர் கண்ணன்
    > >>>> ஞாயிறு  என்பதால் வேலை அதிகம். அதனால்தான் உடனே எழுதவரமுடியவில்லை.
    > >>>> இப்பொழுது சாய குடிக்கும் நேரம். அதனால் சாவகாசமாக பேசலாம்
    > >>>> சீதாம்மா,
    > >>>> கேரளத்தில்குறிப்பிட்ட ஒரு  நம்பூதிரியின் 3வது மனைவியின்,
    >

    > ...
    >
    > read more »

    seethaalakshmi subramanian

    unread,
    Aug 29, 2010, 5:12:16 AM8/29/10
    to mint...@googlegroups.com
    தேவ், நானும் அப்படித்தான் நினனத்துக் கொண்டிருக்கின்றேன்
    வேரு அர்த்தம் உண்டா என்று தெரிய ஆவல்
    அவ்வளவுதான்

    2010/8/29 devoo <rde...@gmail.com>

    --

    Innamburan Innamburan

    unread,
    Aug 29, 2010, 8:22:33 AM8/29/10
    to mint...@googlegroups.com, Innamburan Innamburan
    நீண்டதொரு இழை. ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்காமல், பெண்களின் நிலைமை, பல கால நிலைகளில் தெரிவிக்கப்பட்டாலும், வரலாறு பதிக்கப்பட்ட அளவு, நுட்பங்களை உணர்த்துவதின் கடினம் புரிகிறது. 70 வருட இடைவெளியுள்ள, இருந்தும் சமகாலத்தன்மையும் உள்ள மூன்று சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

    1. 70 வருடம் முன்னால் எனக்கு பெரிய தாத்தா முறையுள்ள ஒருவர், ஒரு விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு, பாட்டியை அடிக்க துரத்தினார். அவளோ, சிரித்துக்கொண்டே, 'நீங்கள் விளக்குமாற்றை தொடலாமோ?' என்று பிடுங்கி வைத்தாள். அவர் உறுமியதோடு சரி. எனக்கு அசாத்திய கோபம். அத்தை சொல்வாள், 'நீ, அவரை தள்ளி வைத்துவிட்டேன் என்று சொன்னாய்' என்று. 
    2. இன்று, 63 வருட இல்லறவாழ்க்கைக்குப் பிறகு மனைவியை இழந்த ஒருவருக்கு ஆறுதல் கூறச் சென்றேன். காதல் வயப்பட்டு, கலப்புத் திருமணம், அவர்களது. 'ஸாம்னேவாலே கிட்கி மே' (சாளரக்காதல்) என்று அந்த பெண்மணியை நான் கேலி செய்வது உண்டு. 'உனக்கு திமிரு ஜாஸ்தி' என்பார், கனிவுடன். சந்தர்ப்பவசமாக, அந்தக்காலத்து இளைஞியாக அவரது ஃபோட்டோ ஒன்று பார்த்து கண் கலங்கிவிட்டோம். 'கல்லும், முள்ளுமான', வெம்மையை குளிர்வித்த நிலவாக இருந்த அவர்களின் இல்லறவாழ்க்கை எனக்கு அத்துபடி. விளக்குமாற்று தாத்தாவும், இந்த சாளரக்காதலும் சமகாலம் எனலாம். என்னே வேறுபாடு!
    3. அன்று மனைவியை அடித்தார், சீதம்மாவின் தந்தை; பிறகு செய்த சமாதானம் எனக்கு பொருட்டல்ல. நம்பூதிரியின் சகிகளின் சகிப்புத்தன்மை இயலாமையின் ஒரு முகம். சில வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளைய இதழாளி, ஒரு ஆஃப்கனிஸ்தான் அந்தப்புரத்தில் நீண்டநாட்கள் வாழ்ந்து, பல தாரங்களின் மனநிலைப்பற்றி, புரிதலுடன் எழுதி இருந்தார். பெண்கள், கலப்பிடமில்லாமல், பெண்களுடன் அந்தரங்கங்கள் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி நடந்ததின் பயனாக, அவர் சொல்வது, '...இந்த பெண்கள் பொறுத்துப் போவது இயலாமை மட்டுமே. 'மரபு', மரபு' என்று கதைக்கிறார்களே, அது எல்லாம் மேல் பூச்சு. ஆண்களும் எங்களுக்கு போகப்பொருள் தான்; சொன்னால் கொலை விழும். ஆணாதிக்கம் கொடி கட்டி பறக்கக் காரணங்கள் இரண்டு: 1. ஊடலிலும், கூடலிலும் எங்கள் மேலாண்மை; 2. 'கற்பு', 'கற்பு' என்று நீதி ஓதுகிறீர்களே, அதை பறிக்க ஆணின் உடல் வலிமை போதும். ஓடிவிடமுடியும் அவர்களால். எங்கள் விருப்பத்திற்கு இடமில்லை...'. புத்தகம் கையில் இல்லை. நினைவில் இருப்பதை மொழியாக்கம் செய்தேன்.

    கொளுத்திப்போட்டாச்சு. முடிந்தவர்கள் தீவட்டி பிடிக்கட்டும்.
    இன்னம்பூரான்

    2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>:

    Dhivakar

    unread,
    Aug 29, 2010, 11:06:31 AM8/29/10
    to mint...@googlegroups.com
    >>திவாகர் உங்கள் ஆசை தீர்ந்ததா? சீதாம்மாவைச் சீண்டிவிட்டால் கிழவி உளற ஆரம்பித்துவிடுவாள்.

    அக்டோபர் மாதம் சென்னக்குப் போகின்றேன் 5 மாதங்கள் தங்கப் போகின்றோம். இந்தக் காலத்தில் நாமிருவரும் ராமச் சந்திரனைப் பார்க்கின்றோம். அடுத்த கதைக்கு அடிக்கல் நாட்ட வேண்டும்<<


    ஆஹா! அப்படியே.. தங்கள் ஆசிகள்..

    என் ஆசை இனிமேல்தான் தீரப்போகிறது..


    அன்புடன்

    திவாகர்


    2010/8/29 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>



    --
    Dhivakar
    www.vamsadhara.blogspot.com
    www.aduththaveedu.blogspot.com

    Tthamizth Tthenee

    unread,
    Aug 30, 2010, 1:50:01 AM8/30/10
    to mint...@googlegroups.com
    இது வரை  நிகழ்ந்த  இந்தக் கணம் வரை  நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்துமே  மரபுதான்
     
    அப்படியே  இந்தக் கணம் முதல் நடக்கப் போவதும்  மரபுதான்  இனி வரும் சந்ததியருக்கு
     
    ஆகவே  ஒவ்வொரு  கணமும்  மரபு என்பதே  என் புரிதல்
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ
     
     
     


     
    2010/8/29 Dhivakar <venkdh...@gmail.com>



    --
    மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc...@gmail.com
    http://www.peopleofindia.net


    Subashini Tremmel

    unread,
    Sep 13, 2010, 5:41:32 PM9/13/10
    to மின்தமிழ், ksuba...@gmail.com
    23.அரசவையிலிருந்து அந்தப்புரம் வரை
     
     
    இந்த அரண்மனையின் உள்ளே நுழையும் போது நாம் எதிர்கொள்ளும் படங்களைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பலரது படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  ஜமீன் குடும்பத்தார் படங்களோடு, சில ஆங்கிலேய அதிகாரிகள், அவர் தம் குடும்பத்தாருடன் எட்டயபுர ஜமீன் குடும்பத்தினர் சேர்ந்து இருப்பதாக உள்ள படங்கள் சிலவும் இவற்றில் அடங்கும்.
     
    இவை மட்டுமல்லாது  சித்திரங்கள் சிலவும் ஆங்கங்கே மாட்டப்பட்டும் தரையில் வைக்கப்பட்டும் மூலையில் குவிக்கப்பட்டும் காட்சியளித்தன.  கலைகளில் நாட்டம் மிகக் கொண்ட காசி மஹாராஜா அவர்களால் வரையப்பட்ட ஓவியங்களில் சிலவும் இவற்றில்  இருக்கலாம். முன்னர் திருவேந்திரத்திலிருந்து சுப்ரமணிய பிள்ளை என்ற ஓவியர் ஒருவரை இங்கு அரண்மனையை அழகு படுத்தும் ஓவியங்களைத் தீட்டித் தருவதற்காக அழைத்து வந்திருந்தார்களாம். அவரது கைவண்ணத்தினாலான ஓவியங்கள் சிலவும் நிச்சயம் நான் பார்த்தவற்றில் இருந்திருக்கக் கூடும்.
     
     
    அங்கிருந்து உள்ளே நுழையும் போது நேராக கண்ணில் தென்படுவது மன்னர்களுக்கு முடி சூட்டப்படும் அரண்மணை தர்பார். கடைசியாக 1985 ஆண்டு வாக்கில் இங்கு முடிசூட்டிக் கொண்டவர் திரு.துரைபாண்டியன் அவர்கள். அதற்குப் பின்னர் இங்கு அப்படி ஒரு வைபவம் நடக்கவில்லை என தெரிந்து கொண்டேன்.
     
    இந்த தர்பார் அளவில் சற்றே சிறியது. இதன் மண்டபப்பகுதி மாத்திரம் மிக நேர்த்தியான மரத் தூண்களைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கின்றது. நுணுக்கமான மலர் வடிவங்கள், சரஸ்வதி வீணை மீட்டுவது போன்ற வடிவம், யாழி ஆகியவற்றை பிரதான சின்னமாக இந்த தூண்களில் செதுக்கியிருக்கும் பாங்கு வியப்பளிக்கின்றது. வாசலை பார்த்தவாறு அமைக்கப்பட்டிருக்கும் இந்த தர்பாரின் நேர் பகுதியில் தான் அரசர் அமர்ந்திருப்பாராம்.
     
    அந்த மணடபத்திலிருந்து நேர் இடது புறத்தில் அரண்மனை வாத்தியக் கருவிகள் வைக்கபப்ட்டிருக்கின்றன. தூசி நிறைந்து காணப்பட்டாலும் இக்கலைப் பொருட்களின் அழகு சிதைந்து விடவில்லை. பெரிய மேளம் ஒன்று, அதன் பக்கத்திலேயே ஜமீன் குடும்பத்தினர் உபயோகப்படுத்திய உடற்பயிற்சிக் கருவிகளான கரலாகட்டை, இளவட்டக்கல் போன்றவையும் கீழேயே  வைக்கப்பட்டிருந்தன.  
     
    அதன் பகக்த்திலேயே சுவற்றில் முருகன், இராமர், கஜலக்ஷ்மி போன்ற தெய்வங்களின் படங்கள் இங்கு தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வந்ததை கட்டுவனவாக இருந்தது. இந்த அரண்மனை மண்டபத்தை ஒட்டி வாசலிலேயே ஒரு சிறிய கோவில் ஒன்றும் இருக்கின்றது. இருந்த போதும் உள்ளே சுவற்றில் மாட்டப்பட்டு தெய்வ வடிவங்களின் படங்கள் பூஜை செய்யப்பட்டதன் அறிகுறியும் தெரிகின்றன.
     
     
    இந்த பகுதிக்கு நேர் எதிராக சுவற்றில் அரண்மனை போர் கருவிகள் ஒவ்வொன்றாக வரிசையாக அடுக்கி வைத்திருக்கின்றார்கள். தற்போது இங்கு இருப்பவை ஒரு சில மட்டுமே. போருக்கு முன்னர் பயன்படுத்திய பெரிய வாள், மற்றும்  ஏனைய முக்கிய போர் கருவிகள் தற்போது இங்கு இல்லை. ஈட்டி போன்ற சில கருவிகள், சூரி என அழைக்கப்படும் ஒரு வகை போர் கருவி, இரும்பு வாள் ஆகியவை ஒரு சில வரிசையாக அடுக்கி வைக்கபப்ட்டிருக்கின்றன. இவை பாதுக்காக்கப்பட வேண்டியவை. ஒரு சில ஈட்டிகள் ஏறக்குறைய 3 மீட்டர் நீளம் கொண்டவை. அங்கு இருந்த ஒரு வாளினைத் தூக்கிப் பார்த்து அதன் கணத்தை கண்டு அதிசயித்துப் போனேன்.
     
     
    இவற்றைப் பார்த்து  புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம். மிகப்பெரிய ஒரு மரக்கதவு ஒன்று; அதனைத் திறந்து உள்ளே நுழைந்தோம். முன்னர் இங்கு வெள்ளியினாலான கதவு வைக்கப்பட்டிருந்ததாம். அந்த வெள்ளிக் கதவு இப்போது இல்லை. இந்த மரக் கதவைக் கடந்து நாங்கள் உள்ளே நுழைந்தோம்,  அரண்மனையின் அந்தப்புரத்தை நோக்கி!
     
    நீண்ட பாதை.  இப்பாதையை கடந்து உள்ளே செல்லும் போது விசாலமான மண்டபம் ஒன்றினை அடைந்தோம்.  அந்தப்புரத்தின் உள் நுழையும் போது அங்கும்  மரத்தாலான ஒரு கதவு இருக்கின்றது. இந்தக் கதவின் மேல் பகுதியில் ஜன்னல் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இந்த கதவுக்குப் பின்னால் வெளியில் நடக்கும் கலை, நாட்டிய நிகழ்ச்சிகளை முன்னர் அரச குடும்பத்து பெண்கள் இந்த ஜன்னல் வழியாகத்தான் பார்ப்பார்களாம். இந்த வழக்கம் சென்ற நூற்றாண்டிலோ அல்லது 19ம் நூற்றாண்டிலே இருந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு முன்னர் இப்படி இருந்திருக்கலாம் என நாங்கள் அப்போது பேசிக் கொண்டோம்.
     
    இந்த அந்தப்புர பகுதியில் பல சிறிய அறைகள் இருக்கின்றன. நீண்டு பருத்த தூண்கள் இந்த அந்தப்புரப் பகுதியைச் சற்று பெரிதாக்கிக் காட்டுவதாகவே  எனக்குத் தோன்றியது.
     
    இந்த அந்தப்புரத்திற்குச் சிறப்பு சேர்ப்பது இங்குள்ள சுவரோவியங்கள். மூலிகையினால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைக் கொண்டே இந்த சுவரோவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
     
    சுவரோவியங்கள் தயாரிப்பு முறை சற்றே நுணுக்கமானது என்றும் அறிந்து கொண்டேன். அதாவது, முதலில் சுவற்றை சுத்தமாக கழுவி தூய்மை செய்த பின்னர் அச்சுவற்றின் மீது எலுமிச்சை பழத்தின் களிம்பு பூசப்படுமாம். பின்னர் அரிசியின் உமியோடு களிமண் கலந்து சுவற்றின் மேல் பூசி விடுவார்களாம். அதற்குப் பின்னரே சுவற்றில் மூலிகை வர்ணம் கொண்டு  ஓவியம் தீட்டப்படுமாம்.  இப்படி தீட்டப்பட்ட ஓவியங்கள் அந்தப்புரம் முழுதும் சுவற்றின் மேல் பகுதியை அலங்கரித்து இருக்கின்றன. ஆண்டுகள் பல கடந்து விட்டாலும் கூட இந்த ஓவியங்கள் ஓரளவு நல்ல நிலையிலேயே இருப்பது ஓரளவு மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.
     
    அரண்மனையின் பிற பகுதியிலிருந்து வேறு பட்டு இப்பகுதியில் மட்டும் இத்தாலி நாட்டு பளிங்கு கற்கள் தரையை அலங்கரிக்கின்ற வகையில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இவை இன்னமும் சீரான நிலையிலேயே இருக்கின்றன. 
     
    தொடரும்..
     
    இக்கட்டுரையை ஒலைப்பதிவுடனும் புகைப்படங்களுடனும் காண இங்கே செல்லுங்கள்!!
     
    அன்புடன்
    சுபா
     


    2010/8/28 Subashini Tremmel <ksuba...@gmail.com>

    N. Kannan

    unread,
    Sep 14, 2010, 8:29:46 AM9/14/10
    to mint...@googlegroups.com
    சுபா:

    இவ்விடுகையில் ‘சுவர் + இன் = சுவரின்’ என்றுதான் வரவேண்டும். சுவற்றின்
    என்பது பிழை. அதேதான் சுவரில் என்பதற்கும். சுவற்றில் என்பது பிழை.
    எனக்கு பள்ளிக்கூட வாத்தியார் சொல்லிக்கொடுத்ததில் இது ஒன்றுதான்
    நிற்கிறது. மற்றவையெல்லாம் தேவ் சார் கவனிப்பிற்காக இத்தனை காலம்
    காத்துக்கிடந்தன :-))

    அந்தப்புரம் போனவுடன் லக,லக ..சரி..கல, கல என்ற ஒலி கேட்டதா?

    சுபா..அந்தச் சுட்டி வேலை செய்யவில்லை!

    க.>

    2010/9/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

    It is loading more messages.
    0 new messages