தீபாவளி ஒரு இந்தியப்பண்டிகை

1,044 views
Skip to first unread message

தேமொழி

unread,
Oct 30, 2016, 3:35:52 AM10/30/16
to மின்தமிழ்
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை. 

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). 

புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).  இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),  கண்டு தனது  படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட  பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால்  பன்றி அவதாரம்  எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும்  கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன்  தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான்.  அழிக்கப்படமுடியாது என்ற  ஆணவத்தில் (தாய்க்குலத்தைப்  பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும்  அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார்  என்பது புராணக்கதை. 

இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட  கதைகளும்  உள்ளன.  அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட  கதையும்  உண்டு.  எனவே இக்கதைகளின் அடிப்படையில்  நரகாசுரன்  என்பவனின்  பிறப்பே கேள்விக்குரியதாக  இருக்கிறது.  எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை  அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.

கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்: 
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம் 
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.

நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. 

பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது.  விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது.   தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில்  கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும்   இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட  நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில்   புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி  தென்னிந்திய  மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது  தென்னிந்தியாவின் மரபு. 

நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.   

ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.  

கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம். 

இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின்  பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும்,  பல்வேறு பின்புலம் கொண்ட  இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும்.  வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.   தமிழகத்தில் இதைத் தவிர்த்து, விளக்கேற்றிக் கொண்டாட  கார்த்திகை பண்டிகையும் உண்டு. 

விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும்  உரியதன்று.  உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன.  இவ்விழாக்களுக்கிடையேயான  ஒற்றுமைகள் என்னவென்று  நோக்கினால்,  இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின்  குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும்.  இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.  

உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:
கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)
யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)
குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)
செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)
ஹாக்மானே - ஸ்காட்லாந்து  (Hogmanay - Scotland)
தசங்காடய்ங் - மயன்மார்  (The Tazaungdaing Festival - Myanmar)
செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)
லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)
லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)
இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாகவே உலகில் பண்டைய நாட்களில் இருந்து,  குளிர்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளே அதிகம்.  இதற்குக் காரணம் வேளாண்மையை மேற்கொண்டு மக்கள் ஒரு குழுவாக குடியிருக்கத் தொடங்கியதற்கு தொடர்புப்படுத்தும் வழக்கமும் உள்ளது.  அறுவடை முடித்து உணவுப்பண்டங்கள் நிரம்பியிருக்கும்  காலம் என்பதாலும், தட்பவெட்பநிலை காரணமாகத் தொழிலில் சுணக்கம் ஏற்படும் நாட்களை இவ்வாறு கூடி உணவுண்டு பொழுதைக் கழிக்க   பண்டிகைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  

அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு   (Seasonal affective disorder -SAD) ஆட்படுவது  வழக்கம்.  அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம்.  மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே  இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம். 

N. Kannan

unread,
Oct 30, 2016, 5:29:10 AM10/30/16
to மின்தமிழ்
தேமொழி:

மிக அழகான முயற்சி. ஒவ்வொரு தீபாவளியிலும் மிகக்கேவலமாக தீபாவளி கொண்டாடுபவர்கள் திட்டப்படுவதும், வெறும் நரகாசுரன் கதையை வைத்துக் கொண்டு கும்மி அடிப்பதும் (இவ்வருடத்   தீபாவளி தமிழ்மலர் இப்படியொருகட்டுரை இட்டுள்ளது) வழக்கமாகிவிட்டது. தாங்கள் ஆழமாக சிந்தித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள்.

இதை இன்னும் கொஞ்சம் எண்ணக் கோர்வையில் சிறு, சிறு மாற்றம் செய்து/ஒழுங்கு செய்து, கூடுதலாக தமிழ் இலக்கியச் சான்றுகளையும் கொஞ்சம் அலசிப் போட்டால். காலம், காலமாக போற்றிப் பாதுகாக்கும் ஓர் ஆவணமாகப் போய்விடும். நமது த.ம.அ பதிவாக இதை நிரந்தரப் படுத்தலாம்.

தயவு செய்து யோசித்து ஆவண செய்யவும். புண்ணியமாகப் போகும்!

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Malarvizhi Mangay

unread,
Oct 30, 2016, 6:17:37 AM10/30/16
to mint...@googlegroups.com

எங்கும் இதே போக்குதானே என்றெண்ணி
மின்தமிழிற்கு வந்தால் இங்கும் இதேபோக்குதான்! கண்ணன் ஐயா!
ஏதாவது செய்யுங்கள்.சிலபோது அடாவடிப்பதிவுகளுக்கு  நியாயமான மறுப்புத்தெரிவித்து எதிர்வினாக்கேட்டால் அதற்குப் பதிலும் வருவதில்லை.சா தீயச் சாடல் 'சமய அதீதக் காழ்ப்பு இவைமிகுந்து விட்டபடியால் மடலாடுதற்கே நான்  வந்து வெகுநாட்களாகிறது.
தமிழர் மரபைக் காக்கிறோம் என்றுசொல்லிக்கொண்டே படுகுழியில் மெள்ளத் தள்ளி /விழுந்து விடுவோமோ
என்று உள்ளுக்குள் ஒருபட்சி சொல்லுதய்யா!!!

Geetha Sambasivam

unread,
Oct 30, 2016, 7:09:33 AM10/30/16
to மின்தமிழ்
//There are FOUR special nights as per Tantra..
1- Maha Ratri - Shivaratri
2- Krur Ratri - Holi
3 - Moha Ratri - Janamashtami
4- Kaal Ratri - Diwali.
Each Ratri has special energies flowing through the earth, and correct sadhna for correct purpose done on these ratris bring amazing results.
Let's talk of Diwali only now...
Kaal ratri is controlled by Mother Dhumavati, the 7th Mahavidya.
So as per Dhumavati's attributes all sadhnas done to attain money, good business, control spirits etc are done on Diwali.
The month from rainy season to Diwali are controlled by Jyestha Nakshatra...
Jyestha is the name of Dhumavati also.. hence Dhumavati sends all negativity to the earth during this period. hence no good work marriage etc is done during this time.
The night before Diwali, the negativity is at the highest, Sun being in Kanya Rashi becomes Neech and there is no Moon.
To ward off negative forces, our rishis advised to symbolically light lamps in the house and use fire works etc to symbolically ward off darkness - the Tamas
Then on Diwali, Jyestha nakshatra sets and Rohini comes. Rohini is Kamala, the Tantric form of Laxmi, so people worship Laxmi and they get results.
Courtesy
Ashwini Swamy (blugeni)//


மேலே குறிப்பிட்டிருப்பது முகநூலில் நண்பர்  ஒருவர் பகிர்ந்தது. இதுவும் தீபாவளிக்கான காரணத்தையும் அன்றைய தினம் லக்ஷ்மிக்கு வழிபாடு செய்வதையும் சுட்டுகிறது. இது நக்ஷத்திரங்களையும் பருவத்தையும் ஒட்டிச் சொல்வது. ஆனால்  பொதுவாக நரகாசுர வதம் என்பது தத்துவ ரீதியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது புராணக் கதையாகி நூறு வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் உண்மையில் நம் மனமாகிய சொர்க்கத்தில் ஏற்றப்பட வேண்டிய ஞானதீபம் ஆனது நரகமான சிந்தனைகளால் நம் கொடூரச் செயல்களால் நிறைவேறாத ஒன்றாக இருக்கிறது.கொடிய குணங்கள் என்னும் அசுரர்களால் நம் மனம் இருளடைந்து காணப்படுகிறது. அந்த இருள் அகன்று மனத்தில் ஒளி வீச வேண்டும். உள்ளொளியை நாம் கண்டு அனுபவிக்க வேண்டும். ஆகவே கொடூர குணங்களாகிய   நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே நரகத்தை ஒழிக்கும் தினமாக நம் மனதில் ஞான தீபம் ஏற்றிக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டது நாளடைவில் நரகாசுரனாக மாறி விட்டது. உண்மையில் நரகாசுரன் என்பவனும் சரி, அசுரர்களும் சரி நம்முள்ளே தான் இருக்கின்றனர். நம்மிடமே அசுர குணமும் உள்ளது. சுர குணமும் உள்ளது. அசுர குணத்தை ஒழிக்கும், ஒழிக்கச் சொல்லும் நாளே தீபாவளி. எங்கும் ஒளிமயமாக வீடும், நகரும், நாடும் பிரகாசிப்பதைப் போல் நாமும் நல்லொளியில் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அசுரர்களாகக் கருதி அழித்து ஒழிக்க வேண்டும். இதைப் பலரும் பலமுறை சொல்லி ஆகிவிட்டது. ஆனால் யாரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நரகாசுர வதத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். :)))))))

2016-10-30 15:47 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

 


Parvathy ramanathan

unread,
Oct 30, 2016, 7:19:01 AM10/30/16
to mint...@googlegroups.com
நல்ல, ஆக்ககரமான பதிவு.
நன்றி.
அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துகள்.

மனத்தின் கருமை நீங்கி ஒளிபிறக்கட்டும்.
பார்வதி


30 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:09 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 30, 2016, 9:09:22 AM10/30/16
to mintamil

வணக்கம்.

On 30-Oct-2016 1:05 pm, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 
>
> நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?
>
> சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?
>
> என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 
>
> முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 
>
> நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை. 
>
> உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி  தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

(1) தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு அவரது  இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா?

(2) வேறுபிற தீர்தங்கர்ர் இறந்த நாட்களும் இது போல் மகிழ்ச்சியாக க்   கொண்டாடப் படுகிறாதா ?

>
> பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும்

(3) மன்னரின் பெயர் என்ன? இவரது ஆணை குறித்த பதிவுகள் ஏதும் உண்டா?

மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர்.

(4) எண்ணை தேய்த்துக் குளிப்பதும், புத்தாடை உடுத்துவதும், எண்ணெய்ப் பலகாரம் சாப்பிடுவதும்  மன்னரது ஆணையில் இருந்ததா  இல்லையா?

மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.

(5) நல்லதொரு தீர்தங்கர் இறந்த அன்றுதான் புதுக்கணக்கு ஆரம்பம்.  இதற்குச் சமணச் சான்றுகள் ஏதும் உண்டா ? 
தீர்தங்கர் இறந்த காரணத்தால் புதுக் கணக்கு என்று மார்வாடிகள் கூறுகின்றனரா ?  சான்றுகள் ஏதும் உண்டா ? 

 சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). 
>
> புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது
(அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).

(6) யார் அந்தப் பலர் ?

 இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),

(7) 50வருடங்களுக்கு முன்னர் செல்போன், இணையம், ATM இவை போன்றனவும் ,
நிலவிற்கு மனிதன் சென்றான் என்பதுவும் புராணக் கதைகள் போல் நம்ப முடியாதனவாக இருந்தன !

அன்பன்
கி. காளைராசன்

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Oct 30, 2016, 11:02:00 AM10/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அன்புள்ள தேமொழி,

தீபாவளி விருந்தாக இந்தக் கட்டுரையைப் படைத்திருக்கின்றீர்கள். நன்றி.
நேற்று பேஸ்புக் பக்கத்தில் டாக்டர்பத்மா மகாவீரர் பற்றிய சிறு பதிவு பகிர்ந்திருந்தார் - அவரது நினைவு நாளாக.

மின்தமிழ் மேடையில் நான் இக்கட்டுரையை இணைத்திருக்கின்றேன்.

அன்புடன்
சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Megala Ramamourty

unread,
Oct 30, 2016, 12:09:21 PM10/30/16
to மின்தமிழ்
நல்ல அலசல் தேமொழி. பாராட்டுக்கள்!

ஐப்பசி, கார்த்திகை போன்ற கூதிர் மாதங்களின் குளிரையும் இருட்டையும் விரட்டவேண்டிய அவசியம் (மின்சாரச் சாதனங்கள் நடைமுறைக்கு வராத) அற்றை மக்களுக்கு ஏற்பட்டது. அதற்கான உபாயமே விளக்கேற்றுதல். தீ, குளிரையும் இருட்டையும் ஒருசேரவிரட்ட அவர்களுக்குப் பெரிதும் உதவியது. இதற்கான உபாயமே ஐப்பசி மாதத் தீபாவளியாகவும், கார்த்திகை மாத மலைதீபமாகவும் உருவெடுத்திருக்கவேண்டும்.  :-)

இந்நிகழ்வுகள் பண்டிகைகளாக அவதாரம் எடுத்ததெல்லாம் பிற்றை நாளைய வழக்கங்களே. ஒவ்வொரு சமயப்பின்னணியினரும் இதற்குத் தம் சமயம் சார்ந்த வகையில் ஏதேனும் சாதகமான(!) காரணங்களை தேடிப்பிடித்து உருவாக்கிக்கொண்டு அவையே உண்மைக் காரணங்கள் என்று பரப்புரை செய்கின்றனர். அவ்வளவே!  :-)

அத்தோடு விவசாயத்தையும் அதுசார்ந்த தொழில்களையுமே அன்று  பெரிதும் நம்பியிருந்த  எளிய மக்களுக்குக் குளிர்காலத்தில் அதிக வேலையும் இருந்திருக்கவில்லை. விளைவு?  தம் கையிருப்பில் இருந்த அரிசி, உளுந்து போன்றவற்றையெல்லாம் வடை, அதிரசம், முறுக்கு என்று விதவிதமாகச் சுட்டுத்தின்று பொழுதைக் கழித்திருப்பர். எப்போதுமே நம்மவர் சாப்பாட்டுப் பிரியர்களாயிற்றே!   :-))

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, புத்தாடைகள் உடுப்பது, பட்டாசு வெடிப்பது போன்றவையெல்லாம் காலவோட்டத்தில் புதிது புதிதாக இணைந்துகொண்ட வழக்கங்களாக இருக்கவேண்டும்.   :-)


அன்புடன்,
மேகலா

Megala Ramamourty

unread,
Oct 30, 2016, 12:12:48 PM10/30/16
to மின்தமிழ்
//இதற்கான உபாயமே ஐப்பசி மாதத் தீபாவளியாகவும், கார்த்திகை மாத மலைதீபமாகவும் உருவெடுத்திருக்கவேண்டும்.//

இவையே ஐப்பசி மாதத் தீபாவளியாகவும், கார்த்திகை மாத மலைத்தீபமாகவும் உருவெடுத்திருக்கவேண்டும் என்றிருக்கவேண்டும்.

Oru Arizonan

unread,
Oct 30, 2016, 1:01:42 PM10/30/16
to mintamil


2016-10-30 0:35 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:

//நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.  // 

இந்துசமய பண்டிகைகள் நடக்கும் சமயத்தில் -- அது சைவமோ[சிவன்], சாக்தமோ[சக்தி], வைணவமோ[விஷ்ணு], காணபத்யமோ[பிள்ளையார்], கௌமாரமோ[முருகன்], சௌரமோ[கதிரவன்] -- எப்பிரிவாக இருந்தாலும்சரி, அதை நேராகவோ, மறைமுகமாவோ, ஆய்வு என்றபெயராலோ தாக்கி எழுதுவது இங்கு ஒரு தனிக்கலையாகவே கையாளப்படுகிறது.  முக்கியமாக, பிராமணர்கள்தான் எவ்விதச் சூழ்ச்சிகளுக்கும் காரணம் என்ற எடுத்துக்காட்டு இல்லாவிட்டால் அப்பதிவு சுகப்படுவதேயில்லை..




//ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.//

 அதிலும், ஆரியர் திராவிடர் என்ற பொய்மையான உருவாக்கத்தை -- போராட்டத்தை -- நம்மைப்பிரிக்க வெள்ளைப்பறங்கிகள் எழுதிவைத்த ஆவணங்களில் மயங்கி -- தங்களையே பிரித்துக்கொள்ள தமிழர்கள் எழுதிவைத்தவற்றையும் சான்றுகாட்டியாகவேண்டும்.  இல்லாவிட்டால், இந்து சமயத்தோர் அவர்கள் திருவிழாவில் மகிழ்வாக இருந்து விடுவார்களே!

மற்ற எச்சமாயத் திருவிழாக்களிலும் இப்படிப்பட்ட பதிவுகள் வெளிவருவதுண்டா?  

மட்டுறுத்துனர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

பாவம், உயர்திரு கண்ணன் அவர்கள்!  மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் இத்தகைய பதிவுகளை நிறுத்துங்கள் என்று நேரடியாகச் சொல்லவியலாமல் மிகவும் diplomaticஆக //ஒவ்வொரு தீபாவளியிலும் மிகக்கேவலமாக தீபாவளி கொண்டாடுபவர்கள் திட்டப்படுவதும், வெறும் நரகாசுரன் கதையை வைத்துக் கொண்டு கும்மி அடிப்பதும் (இவ்வருடத்   தீபாவளி தமிழ்மலர் இப்படியொருகட்டுரை இட்டுள்ளது) வழக்கமாகிவிட்டது. தாங்கள் ஆழமாக சிந்தித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்கள்.// என்று பாராட்டவும் செய்து, //இதை இன்னும் கொஞ்சம் எண்ணக் கோர்வையில் சிறு, சிறு மாற்றம் செய்து/ஒழுங்கு செய்து, கூடுதலாக தமிழ் இலக்கியச் சான்றுகளையும் கொஞ்சம் அலசிப் போட்டால். காலம், காலமாக போற்றிப் பாதுகாக்கும் ஓர் ஆவணமாகப் போய்விடும். நமது த.ம.அ பதிவாக இதை நிரந்தரப் படுத்தலாம்//  புறங்கையில் இலேசாகத் தட்டவும் செய்திருக்கிறார்.   அத்துடன், //தயவு செய்து யோசித்து ஆவண செய்யவும். புண்ணியமாகப் போகும்!// என்று கெஞ்சவேறு செய்திருக்கிறார்.  ஒரு பெரிய ஆராய்ச்சியாளர், மின்தமிழ் குழுமத்தின் உரிமையாளர் இப்படிகெஞ்சுவதுதான் பாவமாக, பரிதாபமா இருக்கிறது.

பட்டாசுவெடிக்கும் சத்தம் காதைத் துளைப்பதால் தமிழ்மக்கள் -- குறிப்பாக இந்துசமயத்தோர் -- பாவப்பட்டோ, பரிதாபப்பட்டோ போகவில்லை.  இம்மாதிரி முடிவற்ற தூற்றுதல்களால்தான் பாவப்பட்டுப் பரிதாபப்பட்டுப் போயிருக்கிறார்கள்.

'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே!" என்று முக்கண்ணனையே எதிர்த்துநின்ற நக்கீரன் பிறந்த பாண்டிநாட்டில் உதித்த வீரப்பெண்மணி மலவிழிமங்கை ஒருவர்மட்டும் 
//எங்கும் இதே போக்குதானே என்றெண்ணி
மின்தமிழிற்கு வந்தால் இங்கும் இதேபோக்குதான்! கண்ணன் ஐயா!
ஏதாவது செய்யுங்கள்.சிலபோது அடாவடிப்பதிவுகளுக்கு  நியாயமான மறுப்புத்தெரிவித்து எதிர்வினாக்கேட்டால் அதற்குப் பதிலும் வருவதில்லை.சா தீயச் சாடல் 'சமய அதீதக் காழ்ப்பு இவைமிகுந்து விட்டபடியால் மடலாடுதற்கே நான்  வந்து வெகுநாட்களாகிறது.
தமிழர் மரபைக் காக்கிறோம் என்றுசொல்லிக்கொண்டே படுகுழியில் மெள்ளத் தள்ளி /விழுந்து விடுவோமோ
என்று உள்ளுக்குள் ஒருபட்சி சொல்லுதய்யா!!!// 
என்று பொங்கியெழுத்திருக்கிறார் என்பதை நினைத்தால் அதே பாண்டிநாட்டில் பிறந்துவளர்ந்த 'ஒரு அரிசோன'னுக்கு ஆறுதலாக இருக்கிறது.
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Oct 30, 2016, 2:14:56 PM10/30/16
to மின்தமிழ்


மின்தமிழ் மேடையேற்றியதற்கு நன்றி சுபா.

தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. 

நண்பர் காளைராசனுக்கும் திரு. அரிசோனனுக்கும் ...
புராணக்கதைகள் பகுதியை எழுதுவதற்கு,   மின்தமிழில் முன்னர்  வெளியான; தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் தொகுப்பு ஒன்றையே  பெரும்பாலும் பயன்படுத்தி இக்கட்டுரையை எழுதினேன்.  கருத்துக்கள் யாவும் முன்னரே நாம் அறிந்தவை தான்.
மேலும் தகவல் வேண்டுமாயின் அக்கட்டுரை குறிப்பிடும் நூல்களை தேடிப் படிப்பது உதவும். 

சமயங்கள் குறித்த  ஜோசப் கேம்பெல் கருத்து,  உலகின் குளிர்கால பண்டிகைகள், உலகின் பிற விளக்கொளி பண்டிகைகள், உலகளவில் தீபாவளி கொண்டாட்டம், பண்டிகை கொண்டாடும் உளவியல் காரணம் போன்றவை தீபாவளி கொண்டாட்டம் குறித்து பரந்த பார்வையை  காட்டுவதற்காக இணைக்கப்பட்டடுள்ளது. 

நன்றி. 

..... தேமொழி


தேமொழி

unread,
Oct 30, 2016, 5:35:57 PM10/30/16
to மின்தமிழ்

United Nations extends Diwali greetings with message on its headquarters facade

This is the first time the organisation has marked the celebration since it decided, in 2014, against holding meetings on the festival day.




The United Nations Headquarters in New York's Manhattan marked the celebration of Diwali with festival greetings on its facade. This was the first time the international organisation has celebrated the festival since it announced that Diwali would be a "non-meeting" day in 2014, The India Express reported.

..... themozhi





Seshadri Sridharan

unread,
Oct 31, 2016, 5:59:19 AM10/31/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com
2016-10-30 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 

The mythological story goes like this: When the gods and the demons were churning the ocean, many valuable things were recovered from the bottom of the sea. Of these, the most notable things were the mammoth, the heavenly tree Párijáta, nectar, etc. One most important entity thus recovered was the goddess Lakśmii: she arose from the seabed in the process of churning. According to mythology, she was married to Náráyańa. So one thing is proven here: that Lakśmii was not Shiva's daughter – she arose from the seabed. The second thing is that this so-called event of churning the ocean as mentioned in the mythology took place 5500 years after Shiva. So from that point of view also, Lakśmii cannot be Shiva's daughter. According to mythology, Shiva was also involved in the event of churning – after the churning was over.

There is another allusion to Lakśmii. It is said that once when Lord Krśńa was absent from His capital, Dwaraka, a demon named Narakasura launched an attack on Dwaraka. I have already told you that asura does not mean any weird creature. They are a group, a community, of people who originally lived in Assyria. Later on the Scythians, both in India and outside, were a branch of the Asura community. The Scythians were mainly earth-coloured; they were short but stocky. They were not actually Asuras, but a sub-tribe of the Asuras. As I said, Krśńa was absent from His capital when it was raided by Narakasura. Then Satyabhámá fought a battle against this Asura and killed him.

That was the fourteenth day of the dark fortnight. The Asura having been killed in the battle, the people of Dwaraka illumined the city with fourteen oil-lamps. That day is still observed as Naraka Caturdashii in western India, and the same day in eastern India is called Bhúta Caturdashii. And the following day, eastern India celebrates Shyámá Pújá, the worship of the goddess Shyámá.

I have already told you about Shyámá –

Shiitakále bhaveduśńá griiśme ca sukhashiitalá;
Atasii puśpavarńábhá sá Shyámá parikiirttitá.

[One who is warm in winter and cool in summer,
Who has the soothing colour of the atasii flower, is called Shyámá.]

But in Dwaraka the next day, there was great festivity: feasting, merrymaking, fireworks, etc., and that evening Satyabhámá was worshipped by the people. Since that day, Satyabhámá has been worshipped as Mahálakśmii, and the people of those regions open new charge accounts on that day.

This worship of Mahálakśmii was accepted by the Puranic Shakti Cult. In some places, the worship of Mahálakśmii is preceded by the worship of Alakśmii, a goddess representing misfortune. This Mahálakśmii was the wife of Shrii Krśńa, and her name originally was Satyabhámá. This Lakśmii was not of the Puranic Age because Krśńa was far older than the age of the Puranas; and this Mahálakśmii was born 3500 years later than Shiva, so she cannot be the daughter of Shiva.

We come across another Lakśmii in Jain Tantra, Buddhist Tantra and Post-Shiva Tantra, described as Kamalá, one of the Ten Mahávidyás. Many people wrongly believe that Mahálakśmii and Kamalá are one and the same entity. This is not correct. Mahálakśmii was Satyabhámá, Krśńa's wife. I have already said that the concept of Dashamahávidyá was a synthesis of Buddhist Tantra, Jain Tantra and Post-Shiva Tantra. This concept of Dashamahávidyá evolved by taking certain entities from each and every Tantra. So this Kamalá of Dashamahávidyá is not the real Lakśmii, and this concept of Kamalá had its origin in the days of Dashamahávidyá, which was more than 5500 years after Shiva. So she cannot be the daughter of Shiva either.

People thought of them as one and the same goddess during the days of the Puranic Shakti Cult.

Kamalá acalá han parishram guńe;
Álasye Alakśmii ási báŕe dine dine.

[Kamalá remains steady in the house of a person if the person
labours hard;
But if one is idle, then Alakśmii takes her place there, and the
person's misfortunes pile up.]

This couplet proves that people have started identifying Lakśmii with Kamalá.

Each of the Ten Mahávidyás was considered a wife of Shiva, so Kamalá cannot be the daughter of Shiva. Regarding Kamalá, it is said, Káiṋcanakántih sudiipatá sumanohará Kamalá harahrdivásinii – “Her colour is golden and shining, very lovely, and she is rooted in the heart of Shiva; she is the wife of Shiva.” So this clearly shows that Lakśmii, or Kamalá, is not the daughter of Shiva and Durgá, as people think.

The concept of Durgá arose in the Puranic days, only about 1300 years ago, and the concept of Lakśmii is a little older than that. The concept of Mahálakśmii is about 3500 years old, and other concepts are about 1750 years old. So Lakśmii could never be the daughter of Shiva or Durgá (Durgá has no relation to Shiva, because the idea of Durgá came 5500 years later than Shiva).

We come across another laokik goddess who is neither the wife of Lord Krśńa, nor Kamalá of Dashamahávidyá, nor the goddess Lakśmii who arose from the bottom of the sea at the time of churning. She is the laokik goddess Lakśmii, the presiding deity of wealth. In many parts of eastern India, the people perform daily or weekly worship of this deity. She is neither a Puranic goddess nor a Vedic goddess nor a Tantric goddess; she is purely a laokik goddess, and there is no biija mantra, or acoustic root, for this goddess, nor is there any dhyána mantra or prańáma mantra for her. People worship this deity by reciting rhymed verses in Bengali; not even the religious services of a priest are required to worship this goddess. She has no relation whatsoever with Shiva.

Thus analysing from the different sources – history, mythology, Tantric texts, etc., we come to the conclusion that the goddess Lakśmii is in no way related to Shiva.

Now the mythological goddess Lakśmii and the laokik goddess Lakśmii are said to have an owl as their mount, whereas Kamalá of Dashamahávidyá is said to have an elephant as her mount, so these two goddesses cannot be one. Naturally, now, no one should be mistaken about Lakśmii.

Then comes Sarasvatii, the goddess of learning. Sarasvatii is not a Vedic goddess. In the Vedas there is mention of Sarasvatii, but that Sarasvatii is not a goddess but a river. Let us analyse the etymological meaning of the word sarasvatii. The word saras in Sanskrit means a big lake of water, or white effulgence, and the entity who has this white effulgence is sarasvatii (saras + matup + ii, a feminine suffix). So sarasvatii means one who has this white effulgence or who has a big lake. In the Vedas we come across the mention of Sarasvatii – Ambitame nadiitame deviitame Sarasvatii. This Sarasvatii is the name of a river, and the river is so useful, so beneficial for the people that it is revered as the greatest goddess.

The goddess Sarasvatii has no relation with this river. There is a story about the River Sarasvatii. In ancient times there were two rivers, Carmańvatii and Drśadvatii, in central India. The history behind the name of the river Carmańvatii is this: When the Aryans were living in the Rajasthan area in the western part of India, they found many animals there, because there were forests and sufficient rainfall. They used to perform sacrificial rites by killing these animals. There is a story that once they performed a sacrificial ritual killing hundreds of thousands of animals; the heaps of those animals' skins was as high as a mountain, and blood streamed down unceasingly from that pile of skins. It 'looked as if a river was flowing. After a long distance, this stream of blood flowed into the Ganges River. As the stream of blood flowing from the pile of animal skins took the form of a river, it was named Carmańvatii in Sanskrit.(3) The present name of the river is Chambal.

Then there was another river, Drśadvatii by name. This river originates from the Vindhya Mountain in the Bákhelkhańd́a area, and flows northwards towards the Ganges. Drśad in Sanskrit means “pebbles”. As the river was full of pebbles, the people called it “Drśadvatii”. This river used to flow northwards, and the Carmańvatii used to flow towards the east. Further on, they used to meet at a point south of Prayaga, and then they used to flow together past Kaoshámbii, into the Ganges near Prayaga. The combined flow of the two rivers, Carmańvatii and Drśadvatii, became known as Sarasvatii.

 by Prabhat Ranjan Sarkar on 23 May 1982, Calcutta, Published in:Namah Shiváya Shántáya, Chapter: All Bask in the Glory of Shiva 2 Discourse 7

Malarvizhi Mangay

unread,
Oct 31, 2016, 7:50:32 AM10/31/16
to mint...@googlegroups.com

அரிசோனரே அதே அதே.என்னா
வேகம்.உங்க அஞ்சலைப்படிச்சதத்
தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.
கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!? நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா  ஹி  ஹீ,

Innamburan S.Soundararajan

unread,
Oct 31, 2016, 10:26:04 AM10/31/16
to mintamil
மலர்விழிமங்கைக்கு விடை அளித்தால் ஃப்ளேமிங் மின் தமிழை அலங்கோலப்படுத்தும். பெப்பே பீப்பீ ஊதும். அனுபவம் பேசுகிறது.
அன்புடன்
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Oct 31, 2016, 11:55:14 AM10/31/16
to மின்தமிழ்
2016-10-30 23:01 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:

மின்தமிழ் மேடையில் நான் இக்கட்டுரையை இணைத்திருக்கின்றேன்.

​Suba:

Probably, you did not read my response. This article needs a bit of a rearrangement (ideas​ - flow)

Themozhi may revise it after going through this thread fully, incorporating other ideas. I want an article in THF that can be referred later for any reference (as it is going to happen next Deepavali, anyway)

Kannan

N. Kannan

unread,
Oct 31, 2016, 12:09:28 PM10/31/16
to மின்தமிழ்
2016-10-30 18:17 GMT+08:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

தமிழர் மரபைக் காக்கிறோம் என்றுசொல்லிக்கொண்டே படுகுழியில் மெள்ளத் தள்ளி /விழுந்து விடுவோமோ
என்று உள்ளுக்குள் ஒருபட்சி சொல்லுதய்யா!!!

​இப்படியொரு முடிவிற்கு வருவதற்குக் காரணம் ஒரு சிறு குழப்பம். 
இதை ஆரம்பத்தில்  திரு.தேனீயாருக்கு விளக்கியிருக்கிறேன். 
சாராம்சம் இதுதான். தமிழ் மரபு அறக்கட்டளை தாய் நிறுவனம். அதன்
வேலை தமிழ் வளங்களை மின்னாக்கம் செய்வது. அது தொடர்ந்து 
எத்தடையுமின்றி கடந்த 15 வருடங்களாக நடந்து வருகின்றது.

மின்தமிழ் வருவதற்கு முன், நாம் இ-சுவடி (இலத்திரன் - சுவடி) எனும்
மடலாடற்குழு நடத்தி வந்தோம். இரண்டு குழுக்களின் நோக்கம் வேறு.
மடலாடற்குழு = தமிழ் மரபு அறக்கட்டளை அல்ல.
மடலாடற்குழு ஒரு ஜனநாயக அமைப்பு. அதுவொரு கருத்துக்களம்.
தமிழர்களின் கருத்து வெளிப்பாட்டைக் காட்டும் தளம். இன்றைய எழுத்து
நாளைய சரிதம். இங்கு நிறைய சுதந்திரம் உண்டு. நாங்கள் எல்லாக் கருத்துக்களையும்
மதிக்கிறோம். அதே சமயம், அமைதியைக் குலைக்கும் இடுகைகளை மட்டுப்படுத்துகிறோம்.

மடலாடற்குழு தமிழ் வளத்தை அதிகப்படுத்தியுள்ளது.

புலவருக்குள் சர்ச்சை என்பது நக்கீரன் காலத்திலிருந்து உண்டு. நாம் அன்னப்பறவை
போல் பாலை (நமக்குத்தேவையான நற்கருத்துக்களை) எடுத்துக் கொண்டு
நீரை (வேண்டாத விவாதங்கள்) பிரித்து வெளியே தள்ளிவிட வேண்டும்.
அது அவரவர் சாமர்த்தியம். வெறுத்துப் போய் வெளியேறியவர்கள் உண்டு.
நின்று நிலைத்தவர்களும் உண்டு. மடலாடற்குழு ஒரு ஆறு. அது ஓடிக்கொண்டே
இருக்கும், நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்!

புரிதலுக்கு நன்றி.

நா.கண்ணன்

Innamburan S.Soundararajan

unread,
Oct 31, 2016, 12:37:22 PM10/31/16
to mintamil
சர்ச்சை பிரச்னை அல்ல, கண்ணன். நானும் பல வருடங்களாக பார்த்து வருகிறேன். 
வசை தான் பிரச்னை.அதுவும் உண்மைக்கு தீங்கு விளைப்பதால்.அமைதியைக் குலைக்கும் 
இடுகைகள், அதுவும் பதவி வகிக்கும் அங்கத்தினர்களின் உண்மைக்கு புறம்பான வசை 
மட்டுறுத்தப்படவில்லை. தமிழ் மரபு அறக்கட்டளையையும் , மின் தமிழையும் மதிக்கும் நான், 
இதையெல்லாம் சொல்வதாக இல்லை. நீங்கள் மேற்படி எழுதியதால்,இதையும் கூற வேண்டிய 
நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது.
புரிதலுக்கு நன்றி.

Malarvizhi Mangay

unread,
Oct 31, 2016, 1:09:58 PM10/31/16
to mint...@googlegroups.com

வாதங்களுக்கு நானும் தயார்.விதண்டாவாதங்களுக்கு? பதிவேற்றப்பட்டால் இருதரப்பு நியாயவாதங்களும்மேடையில் ஏற்றப்படவேண்டும்.ஆனால் கலகக்குரல்கள் மட்டுமே  ( சில பதிவுககளில்ு)  பதிவாகின்றன.நியாக்குரல்கள் அவலக்குரல்கள் போலக் கடாசி வீசப்படுகின்றன.கண்ணனய்யா நீங்கள் தட்டினீர்கள் நான் கொட்டிவிட்டேன்.

Suba

unread,
Oct 31, 2016, 1:48:17 PM10/31/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​அன்புள்ள  கண்ணன்​
​இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் தகுந்த மேற்கோள்களுடன் அமைந்திருக்கின்றன . இதனை மேலும் தேமொழி விரிவாக்கும் போது அதனை நமது அடுத்த கட்டுரை தொகுப்பு நூலில் இணைக்கலாம். தற்சமயம் மின் தமிழ் மேடையில் இருக்க அனைத்து தகுதிகளும் உள்ள கட்டுரையாகத்தான் இக்கட்டுரை உள்ளது. அதன் பொருட்டே இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

அன்புட்ன
சுபா





Kannan

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 4:33:17 PM10/31/16
to mintamil
2016-10-31 10:48 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:

2016-10-30 23:01 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:

//​இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் தகுந்த மேற்கோள்களுடன் அமைந்திருக்கின்றன . இதனை மேலும் தேமொழி விரிவாக்கும் போது அதனை நமது அடுத்த கட்டுரை தொகுப்பு நூலில் இணைக்கலாம். தற்சமயம் மின் தமிழ் மேடையில் இருக்க அனைத்து தகுதிகளும் உள்ள கட்டுரையாகத்தான் இக்கட்டுரை உள்ளது. அதன் பொருட்டே இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.//

 உயர்திரு சுபா அவர்களே,

தாங்கள் இரண்டு விஷயங்களால் தகுதிபெற்றது இக்கட்டுரை என்கிறீர்கள்/
1.  ஒன்று தகுந்த மேற்கோள்கள்   உள்ளன.
2.  இரண்டு, மின்தமிழ் மேடையில் ஏற்ற இது தகுதி வாய்ந்தது.

உங்கள் வாதத்திற்கு எதிர்வாதம் வைக்கிறேன்.  
இந்த இரண்டு தகுதிகளும் இக்கட்டுரைக்கு இல்லை. 
 இருபக்க வாதங்களையும்/கருத்துக்களையும் கண்ணுறாமல் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலில் மேற்கோள்களை பார்ப்போம்.
  • இவை இந்துசமய எதிர்பாளர்களாலும், ஒரு சாதியைக்குறிவைத்துத் தாக்கும் எதிர்ப்பாளர்களாலும் எழுதப்பட்டவை.  
  •  அப்படிப்பட்ட மேற்கோள்கள் கட்டுரையின் உள்நோக்கத்தை  வெள்ளிடைமலையாகத் தெரிவிக்கின்றன. 
  • கட்டுரையாளர் இந்துசமயப்பண்டிகையை எள்ளி நகையாடிக் கட்டுரையைத் துவங்குகிறார். 
  • அதிலிருந்தே அவரது இந்துசமயக் காழ்ப்புணர்ச்சி ஒளிவு-மறைவின்றிப் புலப்படுகிறது.
  • மேலும், அவர் ஒருதரப்பு சார்ந்தே தனது கருத்துக்களை வைக்கிறார்.
  • அவர் சமயப்பண்டிகைகளைச் சாடுவதென்றால், எல்லாச் சமயப்பண்டிகைகளையும் பட்டியல் எடுத்து, விருப்பு-வெறுப்பற்றமுறையின் தனது கருத்துக்களை வைத்திருக்கவேண்டும்.
  • இருதரப்பு மேற்கோள்களையும் [ஆதரவு/எதிர்ப்பு]வைத்து, இக்கட்டுரையாளர் தனது கருத்தை வலுப்படுத்தியிருக்கவேண்டும்.
  • கட்டுரையாளர் அவ்வாறு செய்யவில்லை .
  • இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள்கள் ஒருதரப்பாகவே இருப்பதால் அவை தள்ளத்தக்கவை.
  • அவ்வாறு செய்யாததால் இக்கட்டுரையின் நோக்கம் மட்டுமல்ல, அதை மினதமிழ் மேடையில் ஏற்ற முடிவு செய்திருப்பதும்  இந்து சமய/பிராமண எதிர்ப்பு மட்டுமே   வேறொன்றும் இல்ல.
தவிர, இக்கட்டுரையை மின்தமிழ் மேடையில் ஏற்றும் முடிவு நடுநிலைமையானது அல்ல.

அதற்கான காரணங்கள்:
  • வேளாங்கண்ணி  தேவாலயம் ஒருகோவிலைச் சிதைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்ற கட்டுரையைத் தாங்கள் எதிர்த்தீர்கள்.
  • அது ஒரு சமயத்தைத் தாக்குகிறது என்கிறீர்கள்.
  • வரலாறாக, விருப்பு-வெறுப்பின்றி எழுதவேண்டும், ஒரு சமயத்தைத் தாக்குவதாகத் தலைப்பு இருக்கலாகாது  என்கிறீர்கள்.
  • அக்கருத்துடன் எனக்கு உடன்பாடே!  
  • மதிப்பிற்குரிய மறவன்புலவு அய்யாவின் சிவன் சேனை பற்றிய பதிவுகளை இனிமேல் இடக்கூடாது என்னும்போது நான் ஏன் என்ற வினா வைத்தேன்.
  • அதற்கு, "இந்துசமயம், மட்டுமல்ல, எச்சமயத்தை எதிர்த்தும் இடப்படும் பதிவுகளை எதிர்ப்பேன்[not exact words, but essence is the same] என்கிறீர்கள்.
  • இக்கட்டுரை வரலாறும் அல்ல, வரலாறு பற்றியதும் அல்ல.  
  • இதன் நோக்கம் இந்துசமயத்தாரின் திருநாளன்று அத்திருநாளை எல்லை நகையாடுவது ஒன்றுமட்டுமே!
  • அந்தத் தீயநோக்கத்தை ஆதரிப்பதுபோலுள்ளதால் --  பலரும் படிக்கும் மின்தமிழ் மேடையில் இதை ஏற்றுவது நடுநிலைமையற்றதே.
  • வேளாங்கண்ணிக்கட்டுரையை யாரவது மின்தமிழ் மேடையில் ஏற்றச்சொன்னால் தாங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
  • சம்மதிக்க மாட்டீர்கள்.  எதிர்ப்பீர்கள். ஏனெனில் அது கிறித்தவச் சமய எதிர்ப்பு என்பீர்கள்.
  • நபிகள் நாயகத்தைப்பற்றி தரக்குறைவாக ஒரு கட்டுரை வந்தபோது என்னிடமிருந்துமட்டுமே எதிர்ப்பு வந்தது என்பதையும் நினைவில் வையுங்க.
  • அதே தராசுக்கோல் இக்கட்டுரை விஷயத்தில் ஏன் கையாளப்படவில்லை?
மேற்கோள்காட்டுகிறேன் என்று ஒருவர்  கீழ்க்கண்ட கருத்துக்களை [கிறித்தவ நண்பர்கள், முக்கியமாக பாண்டியராஜா அவர்கள் என்னை மன்னிக்க.
இக்கட்டுரை மினதமிழ்மேடை ஏறியது தவறு என்பதைச் சுட்டிக்காட்டவே எழுதுகிறேன்;  என் நோக்கம் கிறித்தசமயத்தைத் தாழ்வு செய்வதல்ல.  
கிறித்தவரான அவரிடம்   பெரியபுராணம் பற்றிக் கேட்டுத் தெளிந்தவன் நான்.  எனவே சமயத்தைக்கடந்த நல்லதொரு மாணிக்கம் அவர்.
அவர் மனத்தைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல.]

"1..சில ஆண்டுகளுக்கு முன்னர் பனி உருகி, இமய மலையில் பல்லாயிரம்பேர் இறந்தனர்;  
ஆயினும் கேதார்நாத் கோவில் அழியவில்லை. [இது உண்மைத் தகவல் - முதல் மேற்கோள்]
2.  சென்ற ஆண்டு நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கத்தால் பலர் இறந்தனர்.
வீடுகள் சேதமடைந்தன.  ஆயினும் ஒரு சிவன் கோவில் அழியவில்லை. [இதுவும் உண்மைத் தகவல் -- இரண்டாம் மேற்கோள்]
3.  சில நாள்களுக்கு முன்னர் இத்தாலியில் நிலநடுக்கத்தால் பலர் மாண்டனர்.
ஒரு மாதாகோவில் தரைமட்டமாகியது [இதுவும் உண்மைத் தகவல் --  மூன்றாம் மேற்கோள்]

இந்த மூன்று உண்மைகளை வைத்து ஒருவர் இயற்கையின் சீற்றம்கூட சிவன் கோவில்களைத் தீண்டவில்லை;
ஆனால், மாதாகோவிலை அழித்தொழித்தது.  
எனவே இயற்கையே இந்துசமயத்தை மதிக்கிறது;  கிறித்தவத்தை அழிக்கிறது என்று எழுதுவது எவ்வளவு முட்டாள்தனம்.
இப்படிப்பட்ட கட்டுரையை ஒருவர்  எழுதினால் அதை மின்தமிழ் மேடையில் ஏற்றுவீர்களா?   

சிறிது மாற்றங்களுடன் அதை மின்தமிழ் மேடையில் ஏற்றலாம் என்று உயர்திரு கண்ணன் சொல்வாரா?
 அப்படியே சொன்னாலும் சொன்னால் அதை நீங்கள் ஏற்பீர்களா?  மாட்டீர்கள்!
 அதையும் மீறி, உயர்திரு கண்ணன் அதை மின்தமிழ்மேடையில் ஏற்றமுடிவெடுத்து, உயர்திரு பாண்டியராஜா அவர்கள் 
மறுப்பு தெரிவித்தால், 'மேற்கோள்கள் உள்ளன" என்று நீங்களோ, உயர்திரு கண்ணனோ பதிலிருப்பீர்களா?

இதற்குமேல் நான் என்ன எழுதவேண்டும்?  

I rest my case.

எதை மின்தமிழ் மேடையில் ஏற்றுவதும், ஏற்றாமலிருப்பதும் தங்கள் உரிமை.
ஆனால் இக்கட்டுரை மின்தமிழ்மேடை ஏறச்   சிறிதும் தகுதியற்றது.
தங்கள் முடிவை மறுபரிசீலனை பண்ணுமாறு ஒரு மின்தமிழனாகக் கேட்டுக்கொள்கிறேன்.
சுபா அவர்கள் ஒருதடவை சொன்னால் அது நூறுதடவை சொன்னமாதிரி என்று இவ்விஷயத்தில் இருக்கமாட்டேன்.

மலர்விழி மங்கை அவர்களே,
////அரிசோனரே அதே அதே.என்னா வேகம்
.உங்க அஞ்சலைப்படிச்சதத்

தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.
கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!?

நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா  ஹி  ஹீ,//

 //
நக்கீரரிடம் கேட்டுப்பயனில்லை.  அவரைக்கூடத் தமிழரல்ல என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஏனெனில், இந்துசமயக் கடவுளான முருகன்மேல் சான்றுகள் இன்றித் திருமுருகாற்றுப்படை என்ற 
நம்பவியலாத கவிதைக்கொத்தை இயற்றியவர் என்று ஒதுக்கி ஒரு கட்டுரை வந்தால் அது 
மின்தமிழ் மேடை ஏறினாலும் ஏறலாம்.
அவரோ, "மின்தமிழ் மேடை ஏறினாலும்,  குற்றமே!" என்பதைத் தவிர வேறு என்ன சொல்வார், பாவம்!

அமெரிக்காவில் தீபாவளியை மதித்து ஒரு அஞ்சல்தலை வெளியிட்டுவிட்டார்கள்; 
Inline image 1


சொக்கநாதனிடம் கேட்டால் -- "மின்தமிழர்கள் யாராவது ஒருவர் என்னையே இல்லையென்று சொல்லி ஒரு கட்டுரை எழுதி, 
மின்தமிழ்மேடையில் ஏற்றிவிடுவார்கள்;  என்னை விட்டுவிடு, மலர்விழி மங்காய்!" என்று ஒதுங்கிவிடுவார்.
ஒரு அரிசோனன் 

N. Kannan

unread,
Oct 31, 2016, 6:34:16 PM10/31/16
to mint...@googlegroups.com

On Oct 30, 2016 3:35 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும்  உரியதன்று.  உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன.  இவ்விழாக்களுக்கிடையேயான  ஒற்றுமைகள் என்னவென்று  நோக்கினால்,  இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின்  குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும்.  இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.  

>//

தீபாவளியின் கொண்டாட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், ஜாதீய, இனவாரித் தாக்குதல்களும் மின்புலத்தில் உலவும் காலையில் தீபாவளி நாம் எதிர்பார்க்காத சர்வதேசப் பரிமாணம் கொள்வதைப் பதிவு செய்கிறது இவ்விழியம்.  ஒபாமா வந்த பின் வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாடுகிறது. இப்போது 10 பிரவுனிங் தெரு! புராணங்கள் என்பவை சாதாரண மனிதனின் கவிதை. ஓர் உருவகம். அதன் பொருள் என்னவென்று யோசித்துப் புரிந்து கொள்ள வேண்டும். நிந்தித்து அல்ல!
//

நா.கண்ணன்

VID-20161101-WA0000.mp4

தேமொழி

unread,
Oct 31, 2016, 8:22:00 PM10/31/16
to மின்தமிழ்
கண்ணன்,

[1]
எனது கட்டுரைக்கு என்ன தலைப்பு கொடுத்துள்ளேனோ - "தீபாவளி ஒரு இந்தியப்பண்டிகை",  அதனை விளக்கும் நோக்கில் 

இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின்  பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும்,  பல்வேறு பின்புலம் கொண்ட  இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும்.  வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.  

என்று கூறி, பிறகு கிடைத்த ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்த்துப்  படத்தையும்  இணைத்துள்ளேன்.

தீபாவளி பண்டிகை  இந்தியரை ஒருங்கிணைக்கும் பண்டிகை என்று குறிப்பிட்டதிலும்,  
உலகெங்கிலும் இந்தியர்களின் விழாவாக அறியப்படும் நிலைக்கு, இந்தியாவின் அடையாளமாக காணப்படும் நிலையை தீபாவளி அடைந்துள்ளது   என நான் எழுதியதில்   கருத்துப்பிழை உள்ளதா? 

இதைத்தான் நீங்களும் கீழ்வருமாறு  கூறி காணொளி கொடுத்துள்ளீர்கள் 

///
தீபாவளியின் கொண்டாட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், ஜாதீய, இனவாரித் தாக்குதல்களும் மின்புலத்தில் உலவும் காலையில் தீபாவளி நாம் எதிர்பார்க்காத சர்வதேசப் பரிமாணம் கொள்வதைப் பதிவு செய்கிறது இவ்விழியம்.  ஒபாமா வந்த பின் வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாடுகிறது. இப்போது 10 பிரவுனிங் தெரு! 
///


[2]
அத்துடன்....
கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்: 
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம் 
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.
நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. 


என்று நான்  கூறியுள்ளதையும் கவனிக்கவும். இதனை .... the victory of the good over the evils... என்ற கருத்தைக் கூறியுள்ளேன்.

இந்த "இரண்டு கருத்துகளின்" சாரத்தைத்தானே பிரதமர் தெரசா மே இங்கு https://youtu.be/msXuo7NqW8M?t=55s     கூறுகிறார்.


தீபாவளி என்று துவங்கும் பொழுது கொடுக்கும் முன்னுரையையிலோ ...
(இதை நான் சுபாவின் கேள்விக்குப் பதில் சொல்லும் விதத்தில் துவங்கியிருப்பதால் துவக்கம் பொதுவான துவக்கத்தில் இருந்து மாறுபட்டுள்ளது )

அல்லது பண்டிகையின்  பிண்ணனியை அறிமுகப்படுத்தக் கொடுத்த literature review போன்ற கருத்துக்களின் தொகுப்பில் என்ன பிழை இருக்கக்கூடும்.  

இங்கு  நான் எனது கருத்துக்கள் எதையும் வைக்கவில்லை.  புதியதாக யாரும் அறியாத கருத்தையும் நுழைக்கவில்லை. அத்துடன் இக்கருத்துகளும் முன்னரே மின்தமிழில் பதிவாகி இருப்பதையும் காட்டியுள்ளேன். 

ஒரு முன்னுரை - Introduction
தொடர்ந்து இதுவரை அறிந்த தகவல்கள் - Literature Review
பிறகு இன்றையநிலை - Observation on current status 
இறுதியில் என் கருத்தாக உளவியல் கூறும் கருத்தை கொண்டு வந்து இணைத்துள்ளேன் - Interpretation and Conclusion 
அந்த வரிசையில் எழுதியுள்ளேன் 

அக்காடெமிக்  துறையில் இருப்பவர்களுக்கும், முனைவர் பட்டம் அளவில் ஆய்வு செய்தவர்களுக்கும் நான் வெளிப்படையாக பக்கத் தலைப்புகள் கொடுத்து இவ்வாறு  எழுதாவிட்டாலும்,  நான் ஒரு கல்வியாளர் எழுதும் மரபில்  கட்டுரையைக் கட்டமைத்திருப்பது புரியும். 
அதற்குப் பிறகும் கோர்வையாக இல்லை என்பது தனிப்பட்ட கோணங்கள், இது போன்ற விமர்சனத்தை  எழுத்தாளர் எதிர்கொண்டு தனது  கோணத்தை விளக்குவது போல இங்கு நானும்  விளக்கம் வைத்துள்ளேன்.  

மேலும், உங்கள் ஆலோசனையின்படி  தமிழ் இலக்கியங்களில் இருந்து சான்றுகள் மேற்கோள்களை இணைக்கும் வாய்ப்பிருக்குமா என்பதும் ஐயமே. 16 ஆம் நூற்றாண்டு காலவாக்கில் தமிழகத்தில் நுழைந்த பண்டிகை என்பதை மயிலை சீனி. வேங்கடசாமி, டாக்டர் மா.இராசமாணிக்கனார் தமிழிலக்கியமும் கல்வெட்டு பின்புலமும் கொண்ட தமிழிலக்கியத்துரையில் மதிக்கப்படும் ஆய்வ்வாளர்கள் கூறியுள்ளார்கள்.  எனவே நாயக்கர் காலத்து இலக்கியங்களில் இருந்து கிடைத்திருந்தால், யாரேனும் அறிந்தால் ஆற்றுப்படுத்தவும்.  அவற்றையும் இணைத்து உங்கள் விருப்பப்படி மரபு விக்கியில் இணைப்போம்.  தமிழகத்தில் தீபாவளி என்பது கட்டுரையில் இழையோடும் தமிழ்க் கட்டுரை என்பதால் சமண, சீக்கிய, பவுத்தம் என அனைத்தையும் கட்டுரையின் குறிக்கோளில் இருந்து விலகும் நிலையை அளிக்கும். ஏனெனில் நான் எழுதுவது முற்றிலுமாக தொகுத்து ஆராய்ந்து வழங்கும் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையும் அல்ல. 

ஆய்வு எழுதுபவர்கள் அதன் சாரத்தை சுருக்கமாக பிற இதழ்களுக்கு எழுதும் கட்டுரையின் நிலையில் இருப்பது இக்கட்டுரை. 

சுபாவின் கோணம்...கீழ்காணும் மின்தமிழ் கட்டுரையின் வரிசையில் இணைப்பதாக இருந்திருப்பது எனக்குப் புரிகிறது...
வினாயக சதுர்த்தி 

பொங்கலோ பொங்கல் !!! 

பட்டி நோம்பி 


மேலும் நீங்கள் மரபு விக்கியில் இணைக்கலாம் என்று சொன்னீர்கள்,  ஆனால் சுபா (முன்னர் "வாணிகச் சாத்தும் தமிழகத்தின் வணிகப் பெருவழிகளும்"  (https://groups.google.com/d/msg/mintamil/TRaMTBdwveE/n_cSodV5CQAJ)  என்ற எனது கட்டுரையை மரபு விக்கியில் இணைக்கப் பரிந்துரைத்தவர்கள்) எனது  கட்டுரையின்  நடையின் அடிப்படையில் மின்தமிழ்மேடைக்கு திருப்பி விட்டுள்ளார்கள். பின்னர் விரிவாக்கி அங்கு பதியலாம் என்பதை அவர்கள் அளித்த  மறுமொழியின் வழி நான் புரிந்து கொண்டேன்.

நான் மரபு விக்கியையோ, மின்மிழ்மேடை பதிவிடுதலையோ எதிர்பார்த்து நான் எழுதவில்லை. கொஞ்சம் முன்னர் யோசித்திருந்தால் கட்டுரையை எழுதி இணைய இதழ்களில் வெளியிட அணுகியிருப்பேன்.  எனக்கு அது போன்ற எண்ணம் இருந்திருக்கவில்லை.

நன்றி.

..... தேமொழி




Gowthama Sanna

unread,
Oct 31, 2016, 10:49:49 PM10/31/16
to மின்தமிழ்
அன்புள்ள தேமொழி.. 

தீபாவளி பற்றின உங்களின் கட்டுரையினை படித்தேன். அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பது
தவிர்க்க முடியாததுதான். ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். அது எங்கு வேண்டுமானாலும்
வெளிப்படலாம். உங்களின் கட்டுரை ஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தகவல் குறைபாடுகள் அதில் இருக்கலாம்
என்று சிலர் வாதிடலாம் அது ஆரோக்கியமானது. நோக்க குறைபாட்டை கண்டுபிடிப்பது முற்றிலும் வேறு வகையானது. அதைப்பற்றி உங்களுக்கு 
கவலை இருக்காது என்று நினைக்கிறேன்.

தீபாவளி குறித்த எனது கட்டுரை பண்டிதரின் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டது உங்களுக்கு பயன்தரலாம்


சன்னா
 

--

தேமொழி

unread,
Oct 31, 2016, 11:10:15 PM10/31/16
to மின்தமிழ்


On Monday, October 31, 2016 at 7:49:49 PM UTC-7, Gowthama Sanna wrote:
அன்புள்ள தேமொழி.. 

தீபாவளி பற்றின உங்களின் கட்டுரையினை படித்தேன். அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பது
தவிர்க்க முடியாததுதான். ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். அது எங்கு வேண்டுமானாலும்
வெளிப்படலாம். உங்களின் கட்டுரை ஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தகவல் குறைபாடுகள் அதில் இருக்கலாம்
என்று சிலர் வாதிடலாம் அது ஆரோக்கியமானது. நோக்க குறைபாட்டை கண்டுபிடிப்பது முற்றிலும் வேறு வகையானது. அதைப்பற்றி உங்களுக்கு 
கவலை இருக்காது என்று நினைக்கிறேன்.

தீபாவளி குறித்த எனது கட்டுரை பண்டிதரின் கோட்பாட்டின் அடிப்படையில் எழுதப்பட்டது உங்களுக்கு பயன்தரலாம்



உங்கள் கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு சன்னா.  

ஆம், உங்கள் கட்டுரை நிச்சயம் உதவும். 

கட்டுரையை விரிவுபடுத்தும்பொழுது, பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள்   “பெருந்திரட்டு” எனும் பண்டைய தமிழ் நூலில் (‘பாண்டி படலம்’ எனும் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை) சான்றாகக்  காட்டியதை,  தீபாவளியின் பௌத்த  பின்னணி தகவலாக இணைத்துவிடலாம். 

உங்கள் உதவிக்கு நன்றி.

Parvathy ramanathan

unread,
Oct 31, 2016, 11:18:13 PM10/31/16
to mint...@googlegroups.com
@ sannah

//அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பதுதவிர்க்க முடியாததுதான்.//.

அருமையான் கண்டுபிடிப்பு


//இதே போல் தீபவதி காலத்தில் மேற்கொள்ளப்படும் விரதத்தைப் பற்றி குறிப்பிடும் போது, அது ஐந்தொழுக்கக் கொள்கைகளான கொலை செய்யாமை, களவு செய்யாமை, மது அருந்தாமை, பிறன் மனை விழையாமை, பொய் சொல்லாமை எனும் விரதங்களை @மற்கொண்டு வந்ததையும் அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டார். ஆனால், 

பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் இந்த உன்னதமானவற்றை மறைத்து கதைகளை கட்டி வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாளாக்கி மூட நம்பிக்கைகளை கட்டி தீபவதி நாளை திரித்தார்கள் என்று அயோத்திதாசர் குற்றம் சாற்றுகிறார்.

உண்மையிலேயே அவர்களுக்கு வயிரு ரொம்பப் பெரிசுதான். ஹஹஹா!!

பார்வதி

1 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:49 அன்று, Gowthama Sanna <g.sa...@gmail.com> எழுதியது:

தேமொழி

unread,
Oct 31, 2016, 11:18:13 PM10/31/16
to மின்தமிழ்


On Monday, October 31, 2016 at 4:50:32 AM UTC-7, malarmangay64 wrote:

அரிசோனரே அதே அதே.என்னா
வேகம்.உங்க அஞ்சலைப்படிச்சதத்
தொடர்ந்தே இக்கட்டுரை மின்தமிழ் மேடை ஏறியாகிவிட்டது.

கண்ணன் சாருக்குப் பெப்பே!
கருத்துச்சொன்ன எனக்கும் பெப்பே!
நியாங்கேட்ட உங்களுக்கும் பெப்பே!
தீபாவளி பண்டிகை எப்ப எங்க யாரு கொண்டாடுறாக. அரிசோனரே!? நக்கீரரிடமே கேக்கட்டா? சொக்கநாதனிடம் கேக்கட்டா?! ஹ. ஹா  ஹி  ஹீ,



மலர், 

திரு. அரிசோனன் அவர்களது  மடலுக்குப் பிறகு சுபா மின்தமிழ்மேடையில் கட்டுரையை  ஏற்றவில்லை.

கீழே படம் இணைக்கிறேன்.  இது காலக்கோட்டில் மடல்கள் வந்த வரிசையைக் காட்டும்...

அத்துடன் என்னுடைய இந்த  மறுமொழி  விதண்டாவாதமும் அன்று.  :))

அத்துடன் இக்கட்டுரை தீபாவளி அன்றும் குழுமத்தில் பதியப்படவில்லை.

அமெரிக்காவிலேயே 30 ஆம் தேதி என்று எனது திரையில் தெரிகிறது. 

you be the judge 


 ..... தேமொழி

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 11:36:36 PM10/31/16
to mintamil


2016-10-31 19:49 GMT-07:00 Gowthama Sanna <g.sa...@gmail.com>:
// அருமையான. மூடத்தனத்தினில் மூழ்கியவர்கள் சர்வதேச தளத்திலும் இயங்குவார்கள் என்பது
தவிர்க்க முடியாததுதான்.///

 மற்றவர்களை மூடர்கள் என்று நினைப்பதிலிருந்தே, பதிவுசெய்தவரின் அதிபுத்திசாலித்தனம் விளங்காநிற்கிறது [தமிழ் அறியாதவர்களுக்கு:  விளங்காநிற்கிறது = விளங்கி நிற்கிறது].  இப்படிப்பட்ட அதிபுத்திசாலித்தனம் [மூடத்தனம்] கொண்டவர்களுக்கு அடிவருடிகள் சர்வதேச தளத்திலும் இயங்குகிறார்கள் என்பது கண்கூடு.

//ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். //

 ஹிட்லர் என்ற அரக்கன் மடிந்ததை  விடுதலையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஜெர்மனியைக் கூறுபோட்த சுவரை உடைத்தெறிந்ததையும் உன்னதமாகவே கொண்டாடுகிறார்கள்.
அடிமைத்தளையை உடைத்தெறிந்த விடுதலை நன்னாளை 'சுதந்திர தினம்" என்று அனைத்து நாடுகளும் கொண்டாடுகின்றன.

// உங்களின் கட்டுரை ஆய்வின் அடிப்படையில் அமைந்த ஒன்று என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. தகவல் குறைபாடுகள் அதில் இருக்கலாம்
என்று சிலர் வாதிடலாம் அது ஆரோக்கியமானது. நோக்க குறைபாட்டை கண்டுபிடிப்பது முற்றிலும் வேறு வகையானது. அதைப்பற்றி உங்களுக்கு 
கவலை இருக்காது என்று நினைக்கிறேன்.//

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் முறைவேறு.  இங்கு எழுதப்பட்டிருக்கும் கட்டுரையின் முறைவேறு.
ஒளியேற்றிக் கொண்டாடப்படும் திருநாள்களை பற்றி எழுதவேண்டும் என்றால், அதை எழுதும் முறைவேறு.
ஒரு சம்யத்தைமட்டும் தாக்குவதல்ல.

  • முதலில் கட்டுரையின் நோக்கத்தை எழுதவேண்டும்.
  • ஒளியேற்றிக்கொண்டாடப்படும் திருநாள்கள் என்ன, எங்கு, எவ்விதம் கொண்டாடப்படுகின்றன என்று தெளிவாக எழுதவேண்டும்.
  • அதன் காரணங்களை விருப்பு-வெறுப்பின்றி, காழ்ப்புணர்ச்சியின்றி எழுதவேண்டும்.
  • எந்தப்பக்கமும் சாயாமல் திருநாள்கள் கொண்டாடப்படுவதின் காரணத்தை ஆராயவேண்டும்.
  • பிறகு தங்கள் கருத்தை தக்க சான்றுகளுடன் எழுதவேண்டும்.
  • இப்படி இக்கட்டுரை எழுதப்படவில்லை.
  • தங்கள் பதிவும் கட்டுரையைச் சரிவர எழுதவேண்டும் என்று பரிந்துரைக்காமல், மற்றவர்களை/அதுவும் உலகமெங்கும் வாழும் தமிழரை -- மூடர்கள் என்று பட்டம்சூட்டுவதாகவே உள்ளது.
  • அப்படிப்பட்ட உங்களால் நடுநிலைமையுடன் எப்படி வழிகாட்ட இயலும்?
  • நீதிபதியே நடுநிலைமை இல்லாமல் தீர்ப்பு வழங்கவேண்டும் என்று எழுதியர்தானே நீங்கள்!
  • எனவே, உங்கள் கருத்தை ஏற்காத மற்றவரை மூடர் என்று பழிப்பதில் வியப்பேதுமில்லை.
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 31, 2016, 11:45:32 PM10/31/16
to mintamil
@ கௌதம் சன்னா,
// ஒருவரின் மரணத்தினை கொண்டாடுவது Necro வகையினை சார்ந்த ஒருவகையான மனநோய். அது எங்கு வேண்டுமானாலும்
வெளிப்படலாம். //

ஆமாம், ஆமாம்.  நாங்கள் மனநோய் உள்ளவர்களே!
மற்றவர்களை மூடர்கள் என்றுசொல்லும் தங்களுக்கு எவ்வித மனநோய் இருக்கிறது என்பதை யார் சோதனைசெய்வது?

இன்னொன்றும் சொல்ல விட்டுப்போய்விட்டது.

கோலியாத் அரக்கனைக்  கவண்கல் வீசிக்கொன்ற இளம் தாவீதனையும் கொண்டாடத்தான் செய்கிறார்கள்.
ஆக, உலக மக்கள்/உலகச் சமயம் அனைத்தும் மூடத்தனப் படுகுழிக்குள் வீழ்ந்து அல்லற்பட்டு நிற்கின்றன,
அவை மனநோய் கொண்டவை என்றுதானே முடிவுகட்டவேண்டும், உங்கள் கணிப்புப்படி!

உங்கள் கணிப்பு மிக அருமை!  அருமையோ அருமை!

தேமொழி

unread,
Nov 1, 2016, 12:28:47 AM11/1/16
to மின்தமிழ்
திரு. அரிசோனன்,  


On Monday, October 31, 2016 at 8:36:36 PM UTC-7, oruarizonan wrote:

ஆய்வுக்கட்டுரைகள் எழுதும் முறைவேறு.  இங்கு எழுதப்பட்டிருக்கும் கட்டுரையின் முறைவேறு.
ஒளியேற்றிக் கொண்டாடப்படும் திருநாள்களை பற்றி எழுதவேண்டும் என்றால், அதை எழுதும் முறைவேறு.
ஒரு சம்யத்தைமட்டும் தாக்குவதல்ல.

  • முதலில் கட்டுரையின் நோக்கத்தை எழுதவேண்டும்.
  • ஒளியேற்றிக்கொண்டாடப்படும் திருநாள்கள் என்ன, எங்கு, எவ்விதம் கொண்டாடப்படுகின்றன என்று தெளிவாக எழுதவேண்டும்.
  • அதன் காரணங்களை விருப்பு-வெறுப்பின்றி, காழ்ப்புணர்ச்சியின்றி எழுதவேண்டும்.
  • எந்தப்பக்கமும் சாயாமல் திருநாள்கள் கொண்டாடப்படுவதின் காரணத்தை ஆராயவேண்டும்.
  • பிறகு தங்கள் கருத்தை தக்க சான்றுகளுடன் எழுதவேண்டும்.
  • இப்படி இக்கட்டுரை எழுதப்படவில்லை.

திரு. கண்ணனுக்கு நான் அளித்த விளக்கம் இங்குள்ளது.


இதனை நீங்கள் தவறவிட்டிருப்பதாகத்  தெரிகிறது.

நான் ஒளியேற்றிக் கொண்டாடப்படும் திருநாள்களைப் பற்றி எழுத முற்படவில்லை.

தீபாவளியைப் பற்றி எழுதிவிட்டு பிறநாடுகளில் அவ்வாறு  ஒளியேற்றிக் கொண்டாடப்படும் மற்றும் சில  திருநாள்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.

நான் எழுதிய  கோணம்  நீங்கள் சொல்வதில் இருந்து மாறுபட்டது.
அந்தப்பதிலை  படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  நான் உங்கள் கோணத்தில் கட்டுரையை எழுதவில்லை.  

ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமென்றால் நாட்டின் பிரதமாராக இருந்த இந்திராவைப் பற்றி நான் கட்டுரை எழுதினேன் என்றால், 
சொல்லி முடிக்கும் பொழுது இவரைப்போல ஆசியாவில்  இருந்த பண்டாரநாயகா, கோல்டா மேயர், பெனாசிர், ஷேக் ஹசினா என நாட்டின் தலைவர் பதவி ஏற்ற மற்றும் சில பெண்மணிகளையும்  குறிப்பிட்டு..
இதற்கு காரணம் ஆசிய மக்கள் பெண்தலைவர்களை ஏற்றும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்கள் என எனது கருத்தையும் சொல்லி முடிப்பது போல.

இந்திராவைப் பற்றிய கட்டுரையில்  இந்திராவை மட்டும் விரிவாக எழுதுவது முறையல்ல, மற்ற எல்லோரையும் அப்படி விவரிக்க வேண்டும்  என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. 



.....தேமொழி



Oru Arizonan

unread,
Nov 1, 2016, 1:25:00 PM11/1/16
to mintamil
@தேமொழி 
//இந்திராவைப் பற்றிய கட்டுரையில்  இந்திராவை மட்டும் விரிவாக எழுதுவது முறையல்ல, மற்ற எல்லோரையும் அப்படி விவரிக்க வேண்டும்  என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. //

கோணத்தை விளக்கியமைக்கு நன்றி.

அக்கோணத்தின்படியே கண்ணுற்றாலும், உங்கள் கட்டுரை நடுநிலைமையிலிருந்து எழுதப்படவில்லை.

இந்திரா காந்தியைத் தாக்கவேண்டும் என்ற மனநிலையில் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துவிட்டு, அவர் சேலை காட்டியிருக்கிறார், அப்படிச் சேலை கட்டிய பெண்கள் இவர்கள் என்றோ, அவர் முடியை பாப் செய்துகொண்து நரையுடன் தென்படுகிறார், அப்படிப்பட்ட பெண்கள் இவர்கள் என்று முடிவுரை எழுதுவதுபோலத்தான் உங்கள் கட்டுரை உள்ளது. 

இங்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் பலரும் விடுமுறையில் செல்வதாலும், கிறித்தவர் அல்லாதோரையும் வாழ்த்தவேண்டும் என்பதற்காகவும், "Happy holidays!"  என்ற வாழ்த்துமடல்கள் தோன்றின.  அதற்காக கிறிஸ்துமஸை கிறித்தவப்பண்டிகை அல்ல என்று கூறுவதைப்போலத்தான் இருக்கிறது, நீங்கள் எழுதிய "தீபாவளி ஒரு இந்தியப்  பண்டிகை" என்பதும்.

உங்கள் கட்டுரை நடுநிலைமையில் இருந்து எழுதப்பட்டதல்ல, எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் என்று நான் நிறுவிவிட்டேன். இந்துசமயத்தைத் தாக்குவது ஒன்றே அதன் குறி என்றும் ஐயம் திரிபறத்தெரிகிறது.  அதையே  மற்றவர்களும் எழுதியுள்ளார்கள் -- அவர்களையும், என்னையும்சேர்த்து மூடர்கள் என்று எழுதியுள்ள ஒருவரைத் தவிர.

இதற்குமேல் இதைப்பற்றி மடலாட ஒன்றுமில்லை.

பணிவன்புடன்,
ஒரு 

Oru Arizonan

unread,
Nov 1, 2016, 1:30:29 PM11/1/16
to mintamil
இப்படியல்லவா விளக்கம் எழுதியிருக்கவேண்டும்!


பல்வேறு  பதிவுகளுக்கிடையில் புதைந்துகிடந்த தங்களது மாணிக்கத்தை இன்றுதான் கண்டேன்.
மிக்க நன்றி, கீதா அம்மா!

அன்புடன்,
ஒரு அரிசோனன் 



2016-10-30 4:09 GMT-07:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
//There are FOUR special nights as per Tantra..
1- Maha Ratri - Shivaratri
2- Krur Ratri - Holi
3 - Moha Ratri - Janamashtami
4- Kaal Ratri - Diwali.
Each Ratri has special energies flowing through the earth, and correct sadhna for correct purpose done on these ratris bring amazing results.
Let's talk of Diwali only now...
Kaal ratri is controlled by Mother Dhumavati, the 7th Mahavidya.
So as per Dhumavati's attributes all sadhnas done to attain money, good business, control spirits etc are done on Diwali.
The month from rainy season to Diwali are controlled by Jyestha Nakshatra...
Jyestha is the name of Dhumavati also.. hence Dhumavati sends all negativity to the earth during this period. hence no good work marriage etc is done during this time.
The night before Diwali, the negativity is at the highest, Sun being in Kanya Rashi becomes Neech and there is no Moon.
To ward off negative forces, our rishis advised to symbolically light lamps in the house and use fire works etc to symbolically ward off darkness - the Tamas
Then on Diwali, Jyestha nakshatra sets and Rohini comes. Rohini is Kamala, the Tantric form of Laxmi, so people worship Laxmi and they get results.
Courtesy
Ashwini Swamy (blugeni)//


மேலே குறிப்பிட்டிருப்பது முகநூலில் நண்பர்  ஒருவர் பகிர்ந்தது. இதுவும் தீபாவளிக்கான காரணத்தையும் அன்றைய தினம் லக்ஷ்மிக்கு வழிபாடு செய்வதையும் சுட்டுகிறது. இது நக்ஷத்திரங்களையும் பருவத்தையும் ஒட்டிச் சொல்வது. ஆனால்  பொதுவாக நரகாசுர வதம் என்பது தத்துவ ரீதியாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது புராணக் கதையாகி நூறு வருடங்களுக்குள் தான் இருக்கும். ஆனால் உண்மையில் நம் மனமாகிய சொர்க்கத்தில் ஏற்றப்பட வேண்டிய ஞானதீபம் ஆனது நரகமான சிந்தனைகளால் நம் கொடூரச் செயல்களால் நிறைவேறாத ஒன்றாக இருக்கிறது.கொடிய குணங்கள் என்னும் அசுரர்களால் நம் மனம் இருளடைந்து காணப்படுகிறது. அந்த இருள் அகன்று மனத்தில் ஒளி வீச வேண்டும். உள்ளொளியை நாம் கண்டு அனுபவிக்க வேண்டும். ஆகவே கொடூர குணங்களாகிய   நரகத்திலிருந்து விடுதலை பெற வேண்டியே நரகத்தை ஒழிக்கும் தினமாக நம் மனதில் ஞான தீபம் ஏற்றிக் கொள்ளும் நாளாக அனுசரிக்கப்பட்டது நாளடைவில் நரகாசுரனாக மாறி விட்டது. உண்மையில் நரகாசுரன் என்பவனும் சரி, அசுரர்களும் சரி நம்முள்ளே தான் இருக்கின்றனர். நம்மிடமே அசுர குணமும் உள்ளது. சுர குணமும் உள்ளது. அசுர குணத்தை ஒழிக்கும், ஒழிக்கச் சொல்லும் நாளே தீபாவளி. எங்கும் ஒளிமயமாக வீடும், நகரும், நாடும் பிரகாசிப்பதைப் போல் நாமும் நல்லொளியில் நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அசுரர்களாகக் கருதி அழித்து ஒழிக்க வேண்டும். இதைப் பலரும் பலமுறை சொல்லி ஆகிவிட்டது. ஆனால் யாரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் நரகாசுர வதத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். :)))))))

2016-10-30 15:47 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba

unread,
Nov 1, 2016, 1:34:38 PM11/1/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-10-31 21:33 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


தவிர, இக்கட்டுரையை மின்தமிழ் மேடையில் ஏற்றும் முடிவு நடுநிலைமையானது அல்ல.

அதற்கான காரணங்கள்:
  • வேளாங்கண்ணி  தேவாலயம் ஒருகோவிலைச் சிதைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்ற கட்டுரையைத் தாங்கள் எதிர்த்தீர்கள்.
​திரு ஒரு அரிசோணன்,

அந்தக் கட்டுரை நான் எதிர்த்தேனா, பதிவின் தலைப்பைப் பற்றிய என் கருத்தினைச் சொன்னேனா?

எத்தகைய வாக்கியங்கள் கொண்டு நான் அந்தக் கட்டுரையை எதிர்த்தேன் என தாங்கள் அதனை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து இங்கே பகிருங்கள். பின்னர் அடுத்தடுத்த வரிகளுக்கு நான் செல்கிறேன்.

சுபா

தேமொழி

unread,
Nov 1, 2016, 2:50:14 PM11/1/16
to மின்தமிழ்


On Tuesday, November 1, 2016 at 10:25:00 AM UTC-7, oruarizonan wrote:
@தேமொழி 
//இந்திராவைப் பற்றிய கட்டுரையில்  இந்திராவை மட்டும் விரிவாக எழுதுவது முறையல்ல, மற்ற எல்லோரையும் அப்படி விவரிக்க வேண்டும்  என்று உங்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல. //

கோணத்தை விளக்கியமைக்கு நன்றி.

அக்கோணத்தின்படியே கண்ணுற்றாலும், உங்கள் கட்டுரை நடுநிலைமையிலிருந்து எழுதப்படவில்லை.

இந்திரா காந்தியைத் தாக்கவேண்டும் என்ற மனநிலையில் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துவிட்டு, அவர் சேலை காட்டியிருக்கிறார், அப்படிச் சேலை கட்டிய பெண்கள் இவர்கள் என்றோ, அவர் முடியை பாப் செய்துகொண்து நரையுடன் தென்படுகிறார், அப்படிப்பட்ட பெண்கள் இவர்கள் என்று முடிவுரை எழுதுவதுபோலத்தான் உங்கள் கட்டுரை உள்ளது. 

இங்கு கிறிஸ்துமஸ் சமயத்தில் பலரும் விடுமுறையில் செல்வதாலும், கிறித்தவர் அல்லாதோரையும் வாழ்த்தவேண்டும் என்பதற்காகவும், "Happy holidays!"  என்ற வாழ்த்துமடல்கள் தோன்றின.  அதற்காக கிறிஸ்துமஸை கிறித்தவப்பண்டிகை அல்ல என்று கூறுவதைப்போலத்தான் இருக்கிறது, நீங்கள் எழுதிய "தீபாவளி ஒரு இந்தியப்  பண்டிகை" என்பதும்.

இது தவறான முறையில் விளக்கம்  கொடுக்கும் முயற்சி.

சமணத்தில் இருந்த துவக்கத்தை காட்டாது இருக்க நினைத்தால், சந்தேகமின்றி அது  மறைக்கும் முயற்சி.


இங்கு  happy holidays என்று வாழ்த்துவதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம்  மற்றொரு  மறைத்துப் பேசும் முயற்சி மட்டுமல்ல பொருத்தமற்ற ஒப்பீடு.

மக்களுக்கு பல்வேறு பின்புலங்கள் உள்ளவர்களும் நம்மோடு இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்னர் தோன்றியது  ஒரு பொதுவான வாழ்த்தை சொல்லிவிடும் ஒரு முறை, அது  பண்பு தெரிந்த முறை 

இதையே Season's Greetings என்பது மற்றொரு வகையில் சொல்வதுண்டு ... காரணம்...

Dec 24 Christmas Eve & Hanukkah (until Jan 1)
Dec 25 Christmas Day
Dec 26 Kwanzaa (until Jan 1)
Dec 26 'Christmas Day' observed
Dec 31 New Year's Eve

இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை.

இந்த முறை நம்நாட்டிலும் உண்டு. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என எல்லாவற்றையும் சேர்த்து பொதுவில் வாழ்த்திவிடுவது.

இதை பெரும்பாலும் கடைப்பிடிப்பவை நிறுவனங்கள்.

தங்கள் வாடிக்கையாளருக்கு சிறு பரிசு, நாட்காட்டி போன்றவையுடன் 'சீசன்ஸ் க்ரீட்டிங்க்ஸ் அண்ட் பெஸ்ட் விஷஸ்' என்று சொவது  எத்தனை காலமாகவோ வழக்கில் உள்ளது.

..... தேமொழி 



 

தேமொழி

unread,
Nov 1, 2016, 5:35:40 PM11/1/16
to மின்தமிழ்

31.10.16

எதற்காக தீபாவளி ?




 
 எதற்காக தீபாவளி ?

தீபாவளி : வாரியார் அவர்களின் விளக்கம்.

தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.

பெரும்பாலோர், நரகாசுரைனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனையழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை. அப்படியிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப்பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்தகாசுரன் சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.

ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று.

[...]

கெளதமர் கெளரியைத்தொழுது துதித்தனர். இந்த விரதத்தைக் கெளதமர் கூற, விதிப்படி உமையம்மையார் நோற்று, இறைவருடைய இடப் பாகத்தைப் பெற்று மகிழ்ந்தனர்.

கெளரி நோற்ற காரணத்தால், கேதாரிகெளரி விரதம் எனவும் இது பேர் பெற்றது.

இருபத்தொருநாள் அனுட்டிக்க முடியாதவர்கள், ஐப்பசி தேய்பிறைச் சதுர்த்தசியன்று மட்டும் மேற்கூறிய முறைப்படி அனுட்டிக்க வேண்டும்.

இவ்விரதத்தை எல்லோரும் மேற்கொண்டு, அன்று சிவமூர்த்தியை வழிபட்டு, நலம் பெறுதல் வேண்டும். தீபங்களை வரிசையாக ஏற்றி, அன்புடன் வழிபட வேண்டும்.


[திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் அருளிச்செய்த வாரியார் விரிவுரை விருந்து எனும் நூலிலிருந்து]

N. Kannan

unread,
Nov 2, 2016, 10:01:07 AM11/2/16
to மின்தமிழ்
நன்றி தேமொழி.

நான் குறையாகக் காணவில்லை என்பதை என் இடுகை தெளிவாகச் சொல்கிறது. எனது தொணி என்னவெனில் எப்போதும் இனிமேல் இப்பிரச்சனை வந்தால் நாம் சட்டென தேமொழியின் கட்டுரையை மேற்கோள் காட்ட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன். நான் ஐக்கிய நாடுகள் பிரதமர் சொன்னதை இவ்விழையின் இன்னொரு தரவாக இருக்கட்டுமே என்றுதான் போட்டேன். உங்கள் கட்டுரைக்கு அது வலுதான் சேர்த்திருக்கிறது.

புரிதலுக்கு நன்றி.

நா.கண்ணன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Nov 2, 2016, 10:10:39 AM11/2/16
to மின்தமிழ்
இன்னொன்றும் சொல்லத் தோன்றுகிறது!

ஏன் இவ்விடுகையில் பலர் பதட்டமடைகின்றனர் எனத் தெரியவில்லை. 
உலகின் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ்ஸிற்கும் பல்வேறு
காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. அது போல் தான் இதுவும். இன்று
தீபாவளி இந்தியப் பண்டிகை எனும் நிலையும் தாண்டி சர்வதேசப் பண்டிகை
என்றாகிவிட்டது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே தவிர
பதட்டமடைய வேண்டியதில்லை!

நா.கண்ணன்

சி. ஜெயபாரதன்

unread,
Nov 2, 2016, 11:41:56 AM11/2/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
ஆண்டாண்டு தோறும் தமிழர் மற்ற இந்தியர்போல் நெடுங்காலம் பின்பற்றப்படும் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடுவது பெருமகிழ்ச்சி அளிக்க வல்லது.   அதன் மூலகாரணம் எப்படி இருந்தால் என்ன ?

புத்தாடை அணிவது, தீபம் ஏற்றுவது, வெடிகள் வெடிப்பது மக்களுக்கு புத்துயிர் அளிப்பது.

சி. ஜெயபாரதன். 

nkantan r

unread,
Nov 2, 2016, 12:15:32 PM11/2/16
to மின்தமிழ்
as usual in mintamil!
 
1) ms thenmozhi probably intended to present the various reasons for deepavali celebrations; the title is clear about that; there is no negative connotation in the title
2) the content is certainly haphazard and not properly reviewd or arranged; it probably meant to bring the origins of the festival and how it migrated over religions and regions;
3) it gives a tone of negativeness about celebration itself rather than the current method of celebration;
4) religiously conservative people normally have thin skin and very sensitive mind (otherwise how religious tenets can have a sway over them!?) and they are bound to be "offended!"
5) and i find the reactiions so

Leaving the rants and counter-rants, let me try to bring the train ( i assume the idea of this thread is to analyse the origins of the festival and how it evolved or -how the metamorphosis happened-)  back on rails and i am sure all the learned members can contribute to this!

to my knowledge padma purana - i was looking at it to see how the mandori lived after ravan's death -  mentioned "diwali"  ( since my knowledge of sanskrit is dismissal and since PP is a huge compendium, i am looking at specific stanzas related to ramayan because it is believed that padmapurana was compiled over different periods of time and regions and it mentions a version of ram and sita story
there it is mentioned that "ayodhya people were overjoyed on learning about RAM's return, decorated the city with ROW OF LIGHTED LAMPS"

I am not saying about the historical proof of ramayana - i dont know when and where and if really RAM lived; but any literary work reflects the time of the writing if not the time of the event.  so i can take that around 4AD-6AD there was a way of decorating houses by rows of lighted lamps!

(obviously cut-out culture was not prelevant at the time of padma-purana and way of showing love was by cleaning the city, decorating with rangoli and rows of lamps!)

i am sure others can bring out the origins and the metamorphosis of the festival! (remember ganpathi puja was personal and conducted in each home and was conducted in a sober way with a small vinayak made out of turmeric and clay! now we see 30 footer statues, huge commercialization, noise and polluting the seas with the immersion!)

regards
rnkantan


Malarvizhi Mangay

unread,
Nov 2, 2016, 12:31:00 PM11/2/16
to mint...@googlegroups.com

நன்று.நீங்கள் கண்ணன் அல்லவா! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டுகிறீர்கள்.!!!

தேமொழி

unread,
Nov 2, 2016, 1:50:26 PM11/2/16
to மின்தமிழ்


On Wednesday, November 2, 2016 at 9:15:32 AM UTC-7, nkantan r wrote:
as usual in mintamil!
 
1) ms thenmozhi probably intended to present the various reasons for deepavali celebrations; the title is clear about that; there is no negative connotation in the title

நன்றி  :)
 
2) the content is certainly haphazard and not properly reviewd or arranged; it probably meant to bring the origins of the festival and how it migrated over religions and regions;

ஆம் . விளக்கம் கீழே.. 

3) it gives a tone of negativeness about celebration itself rather than the current method of celebration;
4) religiously conservative people normally have thin skin and very sensitive mind (otherwise how religious tenets can have a sway over them!?) and they are bound to be "offended!"

இவர்களது "மனம்  புண்பட்டது" என்ற வழக்கமான பதில்கள் எனக்குப் பழகிவிட்டது. 
புண்படுவது என்ற விளக்கம்  ஒருவழிப்பாதையாக இருப்பதில்தான் எனக்கு ஒப்புதல் இல்லை.

 
5) and i find the reactiions so

Leaving the rants and counter-rants, let me try to bring the train 
( i assume the idea of this thread is to analyse the origins of the festival and how it evolved or -how the metamorphosis happened-)  back on rails and i am sure all the learned members can contribute to this!

மீண்டும் நன்றி.

////

On Friday, October 28, 2016 at 2:08:30 AM UTC-7, Suba.T. wrote:

​எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கின்றது.

வாசிக்கும் போது  சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆராய்ந்து சொல்பவர் என்பதால் தேமொழியிடம் கேட்கலாமே.. அதனால் கேள்விகளை  முன்வைக்கின்றேன் :-)

நரகாசுரன் கெட்டவனா?
அல்லது புராணத்தயாரிப்பாளர்களால் கெட்டவனாகக் காட்டப்படுகின்றானா?
இன்று நம் வழக்கில் தீபாவளிப்புராணம் தோன்றிய சரியான காலகட்டம் எது? எந்த நூலில் உள்ளது?

விரும்பினால் தனி ஒரு இழையாகப் பிரித்து விடுங்கள் தேமொழி.

சுபா
 
 ////

இந்த மூன்று கேள்விகளுக்கும் விடையளிக்கும் விதத்தில் எழுதப்பட்டது. 


to my knowledge padma purana - i was looking at it to see how the mandori lived after ravan's death -  mentioned "diwali"  ( since my knowledge of sanskrit is dismissal and since PP is a huge compendium, i am looking at specific stanzas related to ramayan because it is believed that padmapurana was compiled over different periods of time and regions and it mentions a version of ram and sita story
there it is mentioned that "ayodhya people were overjoyed on learning about RAM's return, decorated the city with ROW OF LIGHTED LAMPS"

analyse the origins of the festival and how it evolved or -how the metamorphosis happened...
இதற்கான செய்திகள் இங்கிருந்தும் பெறப்பட்டன. 


கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம். 


 

I am not saying about the historical proof of ramayana - i dont know when and where and if really RAM lived; but any literary work reflects the time of the writing if not the time of the event.  so i can take that around 4AD-6AD there was a way of decorating houses by rows of lighted lamps!

(obviously cut-out culture was not prelevant at the time of padma-purana and way of showing love was by cleaning the city, decorating with rangoli and rows of lamps!)

i am sure others can bring out the origins and the metamorphosis of the festival! (remember ganpathi puja was personal and conducted in each home and was conducted in a sober way with a small vinayak made out of turmeric and clay! now we see 30 footer statues, huge commercialization, noise and polluting the seas with the immersion!)

நல்ல ஒப்பீடு.
நன்றி.

 

regards
rnkantan


N. Kannan

unread,
Nov 3, 2016, 1:29:07 AM11/3/16
to மின்தமிழ்
2016-11-03 0:30 GMT+08:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:

நன்று.நீங்கள் கண்ணன் அல்லவா! பிள்ளையையும் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும்
ஆட்டுகிறீர்கள்.!!!

​நல்ல கதையாக இருக்கிறதே! :-))

I have been observing for nearly two decades.​ The biggest problem of e-mail group is to take an entry as personal. There is no need. It is an idea, a thought, collection of electrons. Why should I allow myself to be carried away by ideas/thoughts?

Think over it ;-)

Kannan

Banukumar Rajendran

unread,
Nov 3, 2016, 4:39:14 AM11/3/16
to மின்தமிழ்


2016-10-30 13:05 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை. 

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  

========================= 


Mahavira attained Moksha (liberation) on this day at Pawapuri on 15 October 527 BCE, on Chaturdashi of Kartika, as confirmed by Tilyapannatti of Yativrsabha.

Mahavira, the 24th Tirthankara of this era, revitalised Jain dharma. According to tradition, the chief disciple of MahaviraGanadhara Gautam Swami also attained omniscience i.e. absolute or complete knowledge (Kevala Jñāna) on this day, thus making Diwali one of the most important Jain festivals.

Mahavira attained his nirvana at the dawn of the amavasya (new moon). According to the Śvētāmbara text Kalpasutra, many gods were present there, illuminating the darkness.[1] The following night was pitch black without the light of the gods or the moon. To symbolically keep the light of their master's knowledge alive:

16 Gana-kings, 9 Malla and 9 Lichchhavi, of Kasi and Kosal, illuminated their doors. They said: "Since the light of knowledge is gone, we will make light of ordinary matter" ("गये से भवुज्जोये, दव्वुज्जोयं करिस्समो").

Dipavali was mentioned in Jain books as the date of the nirvana of Mahavira. In fact, the oldest reference to Diwali is a related word, dipalikaya, which occurs in Harivamsa Purana, written by Acharya Jinasena[2] and composed in the Shaka Samvat era in the year 705.

ततस्तुः लोकः प्रतिवर्षमादरत् प्रसिद्धदीपलिकयात्र भारते |
समुद्यतः पूजयितुं जिनेश्वरं जिनेन्द्र-निर्वाण विभूति-भक्तिभाक् |२० |
tatastuḥ lokaḥ prativarśam ādarat
prasiddha-dīpalikaya-ātra bhārate
samudyataḥ pūjayituṃ jineśvaraṃ
jinendra-nirvāṇa vibhūti-bhaktibhāk

Translation: The gods illuminated Pavanagari by lamps to mark the occasion. Since that time, the people of Bharat celebrate the famous festival of "Dipalika" to worship the Jinendra (i.e. Lord Mahavira) on the occasion of his nirvana.

Dipalikaya roughly translates as "light leaving the body".[citation needed]Dipalika, which can be roughly translated as "splendiferous light of lamps", is used interchangeably with the word "Diwali".[citation needed]

Jain New Year[edit]

The Jain year starts with Pratipada following Diwali. Jain calendar is known as Vira Nirvana Samvat and their year 2539 started with Diwali of year 2012. The Jain business people traditionally start their accounting year from Diwali. The relationship between the Vir and Shaka era is given in Titthogali Painnaya and Dhavalaa by Acharya Virasena:
पंच य मासा पंच य वास छच्चेव होन्ति वाससया|
परिणिव्वुअस्स अरिहितो तो उप्पन्नो सगो राया||

Thus the Nirvana occurred 605 years and 5 months before the Saka era.

=======================


இரா.பா








 
சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). 

புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).  இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),  கண்டு தனது  படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட  பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால்  பன்றி அவதாரம்  எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும்  கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன்  தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான்.  அழிக்கப்படமுடியாது என்ற  ஆணவத்தில் (தாய்க்குலத்தைப்  பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும்  அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார்  என்பது புராணக்கதை. 

இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட  கதைகளும்  உள்ளன.  அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட  கதையும்  உண்டு.  எனவே இக்கதைகளின் அடிப்படையில்  நரகாசுரன்  என்பவனின்  பிறப்பே கேள்விக்குரியதாக  இருக்கிறது.  எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை  அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.

கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்: 
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம் 
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.

நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. 

பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது.  விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது.   தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில்  கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும்   இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட  நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில்   புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி  தென்னிந்திய  மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது  தென்னிந்தியாவின் மரபு. 

நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.   

ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.  

கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம். 

இந்தியத் துணைக்கண்டத்தின் சமண சமயத்தில் துவங்கி, இன்று அப்பகுதியில் வாழும் சமணர், இந்துமதத்தின் பல உட்பிரிவினரும், பௌத்தரும், சீக்கியரும் என்று  பற்பல சமயப்பின்னணி கொண்டவரும் குளிர் காலத் துவக்கத்தில் விளக்கேற்றிக் கொண்டாட விரும்பும் ஒரு  பண்டிகையாக தீபாவளி சமய எல்லைகளைக் கடந்த விழாவாக மாறிவிட்டிருக்கிறது.  உலகில் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வாழும் இந்தியர்களின் பலதலைமுறையினரும் கொண்டாட, இன்று  உலகில் பலநாடுகளில் கொண்டாடும் நிலையை எட்டி இந்தியப் பண்டிகை என்றால் தீபாவளி என்ற பொதுத்தன்மையையும் அடைந்துவிட்டது. பண்டிகையின்  பின்னணி எனக் கூறப்படும் காரணம் எதுவாக இருப்பினும்,  பல்வேறு பின்புலம் கொண்ட  இந்தியர்களையும் ஒருங்கிணைக்கும் தீபாவளிப் பண்டிகையை இந்துப் பண்டிகை என்பதைவிட இனி "இந்தியப்பண்டிகை" என்பதே சாலப் பொருந்தும்.  வலைத்தள அமெரிக்க நாட்காட்டிகளில் இடம்பெறும் ஒரே இந்தியப்பண்டிகை தீபாவளி.   தமிழகத்தில் இதைத் தவிர்த்து, விளக்கேற்றிக் கொண்டாட  கார்த்திகை பண்டிகையும் உண்டு. 

விளக்கொளி ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள்(Festival of Lights) இந்தியாவிற்கு மட்டும்  உரியதன்று.  உலகில் பலநாடுகளில் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் விழாக்கள் வழக்கத்தில் உள்ளன.  இவ்விழாக்களுக்கிடையேயான  ஒற்றுமைகள் என்னவென்று  நோக்கினால்,  இவையாவும் புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகள் என்பதும், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுவது புவிநடுக்கோட்டிற்கு வடக்கேயுள்ளபகுதியின்  குளிர்காலத்துடன் (winter solstice - அதாவது நவம்பர்,டிசம்பர், ஜனவரி மாதங்களில்) தொடர்புடையவை என்பதுமாகும்.  இரவு நீண்டுவிடும் காலத்தில் விளக்கொளிகள் தரும் அழகிற்காகவும் இவை கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.  

உலகநாடுகளில் குளிர் காலத்தில் கொண்டாடப்படும் விளக்கொளி விழாக்கள் சில:
கிறிஸ்துமஸ் - உலகெங்கும் (Christmas)
யூதர்களின் ஹனூக்கா பண்டிகை (Jewish Festival of Lights Hanukkah)
குவான்சா - ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் (Kwanzaa - African)
செயிண்ட் லூசியா நாள் - சுவீடன் (St. Lucia's Day - Sweden)
ஹாக்மானே - ஸ்காட்லாந்து  (Hogmanay - Scotland)
தசங்காடய்ங் - மயன்மார்  (The Tazaungdaing Festival - Myanmar)
செயிண்ட் மார்ட்டின் டே - ஹாலந்து (St. Martin's Day - Holland)
லோய் குர்தாங் - தாய்லாந்து (Loi Krathong - Thailand)
லியோன் - ஃபிரான்ஸ்(Lyon - France)
இவையாவும் ஏதோ ஒரு வகையில் தீமை ஒழிந்து நன்மை மேலோங்கிய நாளாகவோ, வெற்றித் திருநாளாகவோ, ஒரு புதிய தொடக்கமாகவோ, அறியாமை நீங்கும் நாளாகவோ கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒளியில் இருள் நீங்குவது அறியாமை நீங்கி அறிவு பெறுவதுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. 

பொதுவாகவே உலகில் பண்டைய நாட்களில் இருந்து,  குளிர்காலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளே அதிகம்.  இதற்குக் காரணம் வேளாண்மையை மேற்கொண்டு மக்கள் ஒரு குழுவாக குடியிருக்கத் தொடங்கியதற்கு தொடர்புப்படுத்தும் வழக்கமும் உள்ளது.  அறுவடை முடித்து உணவுப்பண்டங்கள் நிரம்பியிருக்கும்  காலம் என்பதாலும், தட்பவெட்பநிலை காரணமாகத் தொழிலில் சுணக்கம் ஏற்படும் நாட்களை இவ்வாறு கூடி உணவுண்டு பொழுதைக் கழிக்க   பண்டிகைகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.  

அத்துடன் உளவியல் அடிப்படையில், குளிர் காலத்தில் பகல்பொழுது குறுகியும் இருண்டும் இருக்கும் நாட்களில் சிலர் மனச்சோர்வு நிலைக்கு   (Seasonal affective disorder -SAD) ஆட்படுவது  வழக்கம்.  அப்பொழுது தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிகம் உணவை நாடுவதும் வழக்கம்.  மனச்சோர்வுக்கு மருந்தாக உணவு உண்ணுவது, போதைப்பொருட்களை மூளை எவ்வாறு கையாள்கிறதோ அதே அடிப்படையிலேயே  இயங்கச் செய்கிறது என்று கூறுகிறது அறிவியல். பண்டிகை என்பது விதம் விதமாக சமைத்துண்ணும் வாய்ப்பை வழங்குகிறது என்பதால் குளிர் காலங்களில் அவற்றின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கொள்ளலாம். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 3, 2016, 9:26:41 AM11/3/16
to mintamil

வணக்கம்.

எண்ணை தேய்த்துக் குளிப்பதும், புத்தாடை உடுத்துவதும், எண்ணெய்ப் பலகாரம் சாப்பிடுவதும் , வெடி வெடிப்பதும் சமணத்தில் உண்டா ? என நான் அறியேன். அறிந்தோர் அன்புள்ளம் விளக்கிடுமாறு வேண்டுகிறேன்.

அன்பன்
கி். காளைராசன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 3, 2016, 10:48:54 AM11/3/16
to mintamil

வணக்கம்.

(1) மாலைமலரில் தீபாவளி பற்றிய தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைக்கிறது.
http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/10/29102758/1047700/Myth-Events-for-Diwali-celebration.vpf

(2) இந்தியா பரந்துபட்ட பல்வேறு கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டது. இதனால் இந்தியா எங்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றன. 
இதைச் சீர் (?) செய்ய நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது ஒரு "காலண்டர் கமிட்டி " போட்டு, பல திருவிழாக்களுக்கான நாட்களை மாற்றி அமைத்து அரசு விடுமுறை நாட்களைக் குறைத்தனர் -
இதனால்தான் பல பண்டிகைகள் ஒரே நாளில் வருகின்றன.

இதுபற்றிய மேலதிக த் தகவல்களை அறியேன்.

"காலண்டர் கமிட்டி "  எந்தெந்தத் திருவிழாக்களை ஒன்றாக்கியது என்பது தெரிந்தால் தான் எதையும் உறுதியான இறுதியாக க் கூறமுடியும்.

அன்பன்
கி. காளைராசன்

On 30-Oct-2016 1:05 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை. 

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). 

தேமொழி

unread,
Nov 3, 2016, 4:11:08 PM11/3/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Thursday, November 3, 2016 at 7:48:54 AM UTC-7, kalai wrote:

வணக்கம்.

(1) மாலைமலரில் தீபாவளி பற்றிய தொகுப்பு ஒன்று வாசிக்கக் கிடைக்கிறது.
http://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2016/10/29102758/1047700/Myth-Events-for-Diwali-celebration.vpf


நன்றி, இதில் சத்தியவான் சாவித்திரி கதையையையும், பகீரதன்  கதையையும்  கூட தீபாவளியுடன்  இணைத்த தகவல் கிடைக்கிறது !!!!!!

[சத்தியவானை எமனிடம் இருந்து போராடி உயிரோடு மீட்ட நன்னாளே தீபாவளி திருநாள்.

பகிரதன் தன் முன்னோர்கள் புனிதமடைய வேண்டி தேவலோக கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளும் தீபாவளி திருநாள் என்றே கொண்டாடப்படுகிறது.]


 

(2) இந்தியா பரந்துபட்ட பல்வேறு கலாச்சாரங்களையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டது. இதனால் இந்தியா எங்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றன. 


சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் ...
சற்றொப்ப 30 வேறுபல நாட்காட்டி  முறையைப் பயன்படுத்திய காரணத்தால் "ஒரே பண்டிகையை"  கிரிகாரியன் காலண்டர்படி வேறு வேறு நாட்களில் கொண்டாடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. 

ஆனால் இந்த நாட்களுக்கிடையில் அதிக இடைவெளிகள் இல்லை.  

... it must be noted in this context that many of these calendars have strong similarities, in terms of months, and also the beginning of the year. For example, the Kaliyuga, the Vikram Samvat, the Saka, the Bengali San and several other calendars begin very close to each other in the middle of April. There is evidence that their respective beginnings were typically fixed at the same point, the vernal equinox, from which they have moved over the long stretch of time in the last two millennia, during which the ‘correction’ for the integer value of the length of the year in terms of days has been slightly inadequate — again in much the same way.


 

இதைச் சீர் (?) செய்ய நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது ஒரு "காலண்டர் கமிட்டி " போட்டு,


நல்ல தகவல், இக்குழுவின் அறிக்கை இங்கிருக்கிறது. 

வெவ்வேறு நாட்காடிகளைப் பின்பற்றி  "ஒரே பண்டிகையை வேறு வேறு நாளில் கொண்டாடுவதால்" எழும் இடையூறுகளைக்க  களைய நாட்காட்டி முறையை "சக ஆண்டு" அடிப்படைக்கு மாற்றியுள்ளார்கள். 
இதனால் இந்த மாதம், இந்த நட்சத்திரம், இத திதி  என்று குறிப்பிட வேண்டும் என்றால் இந்தியா முழுவதும்  அனைவருக்கும் ஒரே நாட்காட்டி என்ற முறை வந்தது.

 

பல திருவிழாக்களுக்கான நாட்களை மாற்றி அமைத்து அரசு விடுமுறை நாட்களைக் குறைத்தனர் -
இதனால்தான் பல பண்டிகைகள் ஒரே நாளில் வருகின்றன.



"ஒரே பண்டிகையை" முன்னும் பின்னும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுவதைத்  தவிர்த்தனர், இதனால் "ஒரே பண்டிகை ஒரே நாளில் கொண்டாடுமாறு" மாற்றியமைத்தனர் என்பதுதான் இந்த அறிக்கையைப்  படித்த பிறகு நான் புரிந்து கொண்டது.  
அறிக்கையின் முன்னுரையில் இருக்கும் தகவல் ... 

India uses 30  different systems for fixing up the same holidays in different parts of the country and frequently, two rival schools of pancanga-makers in the same city fix up different dates for the same festival. This is a state of affairs which Independent India cannot tolerate. A revised national calendar, as proposed by us, should usher a new element of unity in India. 
[...]
The Committee has also compiled a list of all religious festivals observed in different parts of India and listed them under the headings (i) Lunar, and (ii) Solar, with their criteria for fixing the dates of their observances (pp. 102-106). 

இதன்படி,  ஒரே பண்டிகையை ஒவ்வொருவரும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடுவதைத் தவிர்த்து ஒன்றாக செய்தால் விடுப்புக்களை சீரமைக்கலாம் என செய்த முடிவாகத்தான்  தெரிகிறது.


 

இதுபற்றிய மேலதிக த் தகவல்களை அறியேன்.

"காலண்டர் கமிட்டி "  எந்தெந்தத் திருவிழாக்களை ஒன்றாக்கியது என்பது தெரிந்தால் தான் எதையும் உறுதியான இறுதியாக க் கூறமுடியும்.


திருவிழாக்களை ஒன்றாகியது என்றால்????

மகாவீரர் மறைந்த தினம்,  சீக்கிய குரு கோவிந்த் சிங் விடுதலை  போன்ற பிற சமயப் பிரிவுகளின்  விழாக்களையும் அரசு தீபாவளி வரும் நாளில்  ஒருங்கிணைத்தது  என்று குறிப்பது போல அல்லவா பொருள் வருகிறது?  

நாட்காட்டி சீரமைப்பு முறையால், 
ஐப்பசி  மாத சதுர்த்தசி - அமாவாசை நாளில்,  
நிலவொளியே இல்லாத இரவில் விளக்கேற்றி, 
இந்தியாவின் எந்த மூலையில்,  யார் யார்   எந்த ஒரு  காரணம் சொல்லி பண்டிகை  கொண்டாடினாலும், அந்தப்   பண்டிகை யாவும்,  அந்த  ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொண்டாடுமாறு தானே  அமைந்துவிடும்.  
இது ஒரே நாட்காட்டியை பின்பற்றுவதால் அமையும் மாற்றம்.  இதை அரசு பண்டிகைகளை ஒருங்கிணைத்தது என்றா சொல்ல முடியும்?



..... தேமொழி

தேமொழி

unread,
Nov 3, 2016, 10:27:19 PM11/3/16
to மின்தமிழ்
வெள்ளைமாளிகையில் இந்த ஆண்டு தீபாவளி விளக்கேற்றி கொண்டாடிய அதிபர் ஒபாமாவின் உரை:

யூடியூப் தளத்தில் விளக்கேற்றும் காணொளி: https://www.youtube.com/watch?v=khdliTMF8Cg

(அடுத்த ஆண்டு ஹில்லாரி கிளிண்டன்  விளக்கேற்றுவார்)

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 3, 2016, 11:29:01 PM11/3/16
to mintamil

வணக்கம்.

இதுவே டிரம்பாக இருந்தால் காலணியைக் கழட்டிவிட்டு விளக்கு ஏற்றியிருப்பார் :)

>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Nov 4, 2016, 2:12:35 AM11/4/16
to மின்தமிழ், kalair...@gmail.com


On Thursday, November 3, 2016 at 8:29:01 PM UTC-7, kalai wrote:

வணக்கம்.
On 04-Nov-2016 7:57 am, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> வெள்ளைமாளிகையில் இந்த ஆண்டு தீபாவளி விளக்கேற்றி கொண்டாடிய அதிபர் ஒபாமாவின் உரை:
>
> யூடியூப் தளத்தில் விளக்கேற்றும் காணொளி: https://www.youtube.com/watch?v=khdliTMF8Cg
>

> (அடுத்த ஆண்டு ஹில்லாரி கிளிண்டன்  விளக்கேற்றுவார்)
>
> ..... தேமொழி

இதுவே டிரம்பாக இருந்தால் காலணியைக் கழட்டிவிட்டு விளக்கு ஏற்றியிருப்பார் :)



:))



இங்கு டிரம்ப் மட்டுமல்ல சுற்றி நின்று விளக்கேற்றுபவர் எவருமே காலணியை கழற்றியிருக்க மாட்டார்கள்.


..... தேமொழி 
 

 

>


> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

namasivayampillai sellakrishnan

unread,
Nov 7, 2016, 5:52:04 PM11/7/16
to mint...@googlegroups.com
வாரியார் சுவாமிகள் வணங்கத் தக்கவர். நாளும் தமிழையும் ஆன்மிகத்தையும் செல்லும் தேயமெல்லாம் விதைத்தவர். ஆனால் தீபாவளி பற்றிய அவரது விளக்கம் அதீத சைவ சமயப் பற்றின் வெளிப்பாடு. சுவாமிகள் கூறுவது போலக் கேதாரகெளரி விரதம் தமிழகத்தில் அனைவரும் கடைப்பிடிக்கும் நோன்பு அன்று.  அந்த நாளில்  தமிழர்கள் யாரும் வரிசையாக விளக்குகளை வைத்து வீட்டை அலங்கரிப்பதும் இல்லை. ஆனாலும்,அனைத்து இந்து தமிழர்களும் தீபாவளியை விடாமல் கொண்டாடுவது கண்கூடு. 

தமது வாழ்நாளில் பெரும் பகுதியைக் கம்ப ராமாயணப் பேருரை நிகழ்த்தியவர்தாம் வாரியார் சுவாமிகள். 

ஒருபகல்  உலகு எலாம் உதரத்துள் பொதிந்து 
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை,
திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை

என்று காவியத் தொடக்கத்திலும்,

உம்பரோடு இம்பர்காறும் உலகம் ஓர் ஏழும்ஏழும்
எம்பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய,
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி  காத்தான்
அம்பரத்து அனந்தர்  நீங்கி அயோத்தியில் வந்த வள்ளல்

என்று காவிய நிறைவிலும் பாடும் கம்பன் தன் இராமன் பரமபதத் திருமாலே என மிகத் தெளிவாகக் கூறுவான். 'என்னை ஆளுடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போனான்' என்றும், 'ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகுடையான்' என்றும் 'ஆழ்வாராகி'க் கம்பன்  உருகுவான்.

'மழுவாளிக்கு  நீ தந்த ஐயத்தால், சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர்' என்றும், 

' என் உரு கொடு இவ் உலகினை  ஈனுதி, இடையே
உன் உருக் கொடு புகுந்து நின்று ஓம்புதி, உமைகோன்
தன் உருக் கொடு துடைத்தி' 

என்று பிரமன் துதியிலும்,

'தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவர் ......நண்ணும் அத்தீ எரி நரகத்துக் கடிது செல்க யான்'

என்று பரதன் சூளுரையிலும்

'ஆழி அம் கமலக் கையன் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் போல் இருண்டன திசைகள் எல்லாம்'

என்று கவிக்கூற்றாகவும் கம்பன் பல இடங்களில் சமய வாதம் பேசுவான்.

ஆனால் சுவாமிகளோ, தமது கம்பராமாயண இசையுரையில் இராமன் வனவாசத்தின் போது இரவு முழுவதும் சிவாய நம என்னும் பஞ்சாட்சரத்தைக் கண்விழித்து ஜபித்துக் கொண்டிருந்தான் என்றும் அதிகாலையில் நீராடி, மேனி முழுதும் திருநீறு தரித்தான்
 ( நீராடி நீறும் ஆடி) என்றும் கூசாது கூறிப் பஞ்சாட்சர ஜபம் இராமன் எவ்வாறு செய்தான் என்று தாளத்துடன் பாடியும் காட்டுவார். சேவல் 'கொக்கரக்கோ' என்று கூவுவதற்கு, கொக்கு + அறு+ கோ ( அதாவது சூரபன்மன் மா மரமாக மாறியபோது முருகப்பெருமான் தனது வேலால் அதை இரு கூறாக்கிச் சேவலும் மயிலுமாக மாற்றினான் - கொக்கு என்பதற்கு மா மரம் என்பதும் ஒரு பொருள்) என்று விளக்கிச் சேவல் தினந்தோறும் "கொக்கு அறுத்த கோவே!" என்று கந்தவேளைக் கூவி அழைப்பதாக விளக்கி மகிழ்வார்.  இவை போன்றவைதாம் சுவாமிகளின் 'தீபாவளி' பற்றிய விளக்கமும்.

- டாக்டர் ந. செல்லக்கிருஷ்ணன்










N. Ganesan

unread,
Nov 7, 2016, 9:50:46 PM11/7/16
to மின்தமிழ்

தீபாவளி யாருடையது? -ஜெயமோகன்


நா. கணேசன்

N. Kannan

unread,
Nov 7, 2016, 11:08:38 PM11/7/16
to மின்தமிழ்
தீபாவளி யாருடையது? -ஜெயமோகன்
//எதிர்மறையாக மட்டுமே வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவது, எதிரிகளை கண்டுபிடித்துப்பெருக்கிக் கொண்டே செல்வது, நம்மை தூய மேன்மையான மக்கள் ஆகவே ஒடுக்கப்பட்டோம் என சுயபரிதாபம் கொள்வது, அதை வன்மமாக ஆக்கிக்கொள்வது போன்றவை ஒருவகை மனநோய். சிந்தனையின் ஒருகட்டத்தில் அது நம்மை பீடிக்கிறது. ஏனென்றால் கருத்துலகாக நம்மைச்சூழ்ந்திருக்கும் எண்ணங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை//

மிகையில்லாத உண்மையிது.

சும்மா இருக்கின்ற நாயை சிறுபிள்ளையாக இருக்கும் போது “சூ”காட்டுவர். அந்த நாயும் எதற்கு, ஏன் என்று யோசிக்காமல் குறைத்துக்கொண்டு ஓடும். அது போன்ற ஒரு பரிதாபமான நிலமையில் தமிழகம் உள்ளது.

வெளி நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்கள் சில வருடங்களில் அங்கு குடியுரிமை பெறத்துடிப்பர். ஏன், தமிழக அகதி முகாமிலும் அதே எண்ணம்தான். கூடியவிரைவில் இந்தியக் குடியுரிமை பெறவே ஆசைப்படுவர். நிலமை அப்படி இருக்கையில் பல்லினக் கூட்டாக ஆயிரம், ஆயிரம் வருடங்களாக இந்திய மண்ணில் வாழும் மக்களிடம் இனவாதம் பேசி உரிமையை மறுதலிப்பது பேதமை, பாசாங்குத்தனம். ஏன் விஷமத்தனமும் கூட. இப்படி இனவாதம் பேசும் தலைவர்களின் இரத்தத்தை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். எத்தனை விழுக்காடு ஆரிய, பிற இன ரத்தம் ஓடுகிறது என்று தெரிந்துவிடும்!

தமிழனின் அவசரத்தேவை பொருளாதார மேம்பாடு. Social, political, economic empowerment. இதைக் கல்வி மூலமாகவே சாதிக்க முடியும். சாதீய, இன, சமய சார்புடைய கருத்தியலால் அல்ல. மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது தமிழ் விழியம். அறிவியல் பெருகிவிட்ட 21ம் நூற்றாண்டில் தமிழன் அறிவியல் சார்ந்த நூதன மனிதனாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Nov 7, 2016, 11:19:31 PM11/7/16
to மின்தமிழ்
2016-11-03 17:40 GMT+08:00 namasivayampillai sellakrishnan <nsellak...@gmail.com>:
வாரியார் சுவாமிகள் வணங்கத் தக்கவர். நாளும் தமிழையும் ஆன்மிகத்தையும் செல்லும் தேயமெல்லாம் விதைத்தவர். ஆனால் தீபாவளி பற்றிய அவரது விளக்கம் அதீத சைவ சமயப் பற்றின் வெளிப்பாடு. 
​.....​
 
இவை போன்றவைதாம் சுவாமிகளின் 'தீபாவளி' பற்றிய விளக்கமும்.


நன்றி​
 டாக்டர் ந. செல்லக்கிருஷ்ணன்
​:

​ஆழ்வாராதிகளின் அடியொட்டியும், வேத, ஆகம வழியிலும், வேத வியாசரின் திறனாய்வின் அடிப்படையிலும் ஆதிப்பரம்பொருளின்​ தன்மைகள் இன்னயின்ன என அறுதியிட்ட கோட்பாடுகளின் வழியில்தான் கம்பன் நடக்கிறான். ஆனால் காலவோட்டத்தில் அவன் கடத்தப்பட்டுவிட்டான் ;-) கிபி நான்காம் நூற்றாண்டில் நானாதேசிகள் எனும் கடலாண்மைக் குழு பர்மாவில் நாரணற்குக் கோயில் எழுப்புகிறது. தொடர்ந்து திருவுடைய மன்னரைக் காணில் திருமாலைக் கண்டதாகவே வணங்கும் ஒரு அரச வழக்கம் மலேசியா, தாய்லாந்து, காம்போஜம், ஜாவம் போன்ற நாடுகளில் நிறுவப்படுகிறது. ஆயினும், முடிந்தவரை நேரடியாகப் பேசாமல் மழுப்பல் பேச்சே இம்மண்ணில் அதிகரித்துவிட்டது. 

தங்களைப் போன்ற ஆய்வாளர்கள் அவ்வப்போதாவது வந்து உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டுப் போவது நல்லது. இது பொது நலத்திற்கு நன்மை.

நா.கண்ணன்

Dev Raj

unread,
Nov 8, 2016, 5:15:57 AM11/8/16
to மின்தமிழ்
On Tuesday, 1 November 2016 08:48:13 UTC+5:30, pramanathan42 wrote:
பிற்காலத்தில் வந்த வேத பிராமணர்கள் இந்த உன்னதமானவற்றை மறைத்து கதைகளை கட்டி வயிற்றுப் பிழைப்பிற்காக மக்களை முட்டாளாக்கி மூட நம்பிக்கைகளை கட்டி தீபவதி நாளை திரித்தார்கள் என்று அயோத்திதாசர் குற்றம் சாற்றுகிறார்.
 

முற்காலத்தில் பிராமணர் பட்டாசுக்கடை - துணிக்கடை நடத்தினார்களா ?
மக்களும் அத்தனை முட்டாளாக இருந்தனரா ?
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு புரோஹிதருக்குத்  தக்கிணை 
தரும் வழக்கம் அயோத்திதாசர் காலத்தில் இருந்ததா ?


தேவ் 

N. Kannan

unread,
Nov 8, 2016, 10:52:13 AM11/8/16
to mint...@googlegroups.com

n Nov 8, 2016 3:45 PM, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
>
> On Tuesday, 1 November 2016 08:48:13 UTC+5:30, pramanathan42 wrote:

> மக்களும் அத்தனை முட்டாளாக இருந்தனரா ?

இதை நான் பல தளங்களில் சொல்லிவருகிறேன். கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இவர்கள் சொல்ல வருவது தமிழர்கள் முட்டாள்கள் என்பதே!

இது எவ்வகையில் கணியன் பூங்குன்றனின் கணக்கான, "தீதும் நன்றும் பிறர்தர வாரா!" என்பதோடு ஒத்துப்போகும்.

நா.கண்ணன்

Innamburan S.Soundararajan

unread,
Nov 8, 2016, 11:02:53 AM11/8/16
to mintamil
அறிவில் குறைந்தவர்களை முட்டாள் என்கிறது, அகராதி. இந்த தரணிதனில் முட்டாள்கள் எந்ததொரு பிராந்தியத்தின் ஏகபோகம் அல்ல. நாத்திகராயினும், ஆத்திகராயினும், இரண்டாம் கெட்டானாயினும், அறிவில் குறையாதவர்கள் முட்டாளல்லாராயினர். இது தரணீதரானந்ந்தா இயற்றிய மனப்பாடத்திலிருந்து. செனனையில் காணக்கிடைக்காத கல்வெட்டு.

--

Oru Arizonan

unread,
Nov 8, 2016, 11:15:06 AM11/8/16
to mintamil
ஜெயமோகன் எழுதியுள்ள இந்த வரிகளும் கூர்ந்து நோக்கத்தக்கவை:

//அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.
பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்.
தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.//
ஒரு அரிசோனன் 

Dev Raj

unread,
Nov 8, 2016, 6:17:17 PM11/8/16
to மின்தமிழ்
On Sunday, 30 October 2016 13:05:52 UTC+5:30, தேமொழி wrote:
 
உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

இந்தக் கதைக்கு மயிலையார் தமிழ்ச் சமண நூல்களிலிருந்து என்ன ஆதாரம் காட்டியுள்ளார் ?


தேவ்


தேமொழி

unread,
Nov 8, 2016, 6:28:33 PM11/8/16
to மின்தமிழ்
இக்கட்டுரை உதவுமா பாருங்கள்.....

தீபாவளியும் மகாவீரரும்

http://tamil.thehindu.com/society/spirituality/தீபாவளியும்-மகாவீரரும்/article6505171.ece

Published: October 16, 2014
தொகுப்பு: ஆதி


ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படும் நாள் அன்றுதான் வர்த்தமான மகாவீரர் நினைவும் அனுசரிக்கப்படுகிறது. இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லாமல், எப்படி இரண்டும் ஒரே நாளில் வரும்? இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.

தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை என்கிறார் சமண-பவுத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

சொற்பொழிவு

சமணர்களின் இருபத்தி நாலாவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்கே கூடியிருந்த மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் அவர் வழங்கிய சொற்பொழிவு அதிகாலையில்தான் முடிவடைந்தது. அதனால் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் வீடுகளுக்குச் செல்லாமல், அவரவர் இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டனர்.

அப்போது வர்த்தமான மகாவீரர், அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார் (இறந்தார்). உலகுக்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை நினைவுகூர்ந்து வழிபடும் வகையில், அவர் இறந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி விழா கொண்டாடும்படி பாவாபுரி அரசர் ஏற்பாடு செய்தார். மகாவீரரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அந்தப் பண்டிகைதான் தீபாவளி (தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை).

ஒற்றுமைகள்

“சமண சமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருமளவில் இந்து மதத்தில் சேர்ந்தனர். அதற்குப் பிறகும் தீபாவளியைக் கொண்டாடிவந்தனர். அதைத் தொடர்ந்து இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘சமணமும் தமிழும்' என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மகாவீரர் அதிகாலையில் வீடுபேறு அடைந்ததால்தான், தீபாவளியும் அதிகாலையில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், “தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் நீத்தார் நினைவை அனுசரிக்கும்போது, இறுதி நாளைக் குறிக்கும் சடங்காக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இருக்கிறது.

அதை ஒட்டியே தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அம்சங்களே தீபாவளிக்கும், மகாவீரர் நினைவு நாளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை.


********************

 


தேவ்


Dev Raj

unread,
Nov 8, 2016, 8:40:59 PM11/8/16
to மின்தமிழ்
On Wednesday, 9 November 2016 04:58:33 UTC+5:30, தேமொழி wrote:
இக்கட்டுரை உதவுமா பாருங்கள்.....

தீபாவளியும் மகாவீரரும்


Published: October 16, 2014
தொகுப்பு: ஆதி
 

அக்கட்டுரை சமணர் யாத்த தமிழ் நூல்களிலிருந்து யாதொரு ஆதாரத்தையும் தரவில்லை.

உயிர் நீத்தாருக்காக சடங்கு அனுசரிக்கும் வழக்கத்தையும்  சமணம் 
ஆதரிப்பதில்லை. நீராடும் வழக்கம் என்பதே சமணத் துறவியர்க்குக் கிடையாது,
நீரில் இருக்கும் சிற்றுயிர்கள் மாளும் என்பதால்.

மேலும் மஹாவீரர் பரிநிர்வாணம் அடைந்த காலத்தில் மக்கள் பெருவாரியாகச் சமணத்தில் சேர்ந்திருக்கவே இல்லை;
சில கணதரர்கள் தவிரச் சமணக் கோட்பாடுகளை வெளியுலகம் அறிந்திருக்கவே இல்லை. சாவக நோன்பு காக்கும்
இல்லறப்பிரிவினர் சமணத்தில் முதலில் கிடையவே கிடையாது; அது பின்னால் புகுந்த ஏற்பாடு.

சமணக்கோட்பாடுகள் முதன்முதலாக ஏட்டில் பதிவு பெற்றது எந்த நூற்றாண்டில் ? 
சமணம் தென்னகத்தில் முதலில் நிலைகொண்ட கருநாடகப் பிராந்தியச் சமண நூல்களோ,
தமிழ்ச் சமண நூல்களோ சமணரின் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சொல்லவில்லை. 

இந்துச் சடங்குகளை மட்டம் தட்டும் அவக்கரமே உம்மிடம் நிலை கொண்டிருப்பதால்,
தேடலில் வல்லுநரான நீவிர் இவற்றையெல்லாம் பார்க்காமல் பதிவு செய்கிறீர்.


தேவ்

தேமொழி

unread,
Nov 8, 2016, 9:51:33 PM11/8/16
to மின்தமிழ்
திரு தேவ்,

நேற்று திரு. காளைராசன் அவர்களுக்கு ஒரு சுட்டி கொடுத்தேனே அதிலிருக்கும்  கட்டுரை என்ன சொன்னது?
http://tamil.thehindu.com/society/spirituality/தீபாவளியும்-மகாவீரரும்/article6505171.ece
&

கீழுள்ள இத்தளங்களையும் நான் பயன்படுத்தியதாக முன்னர் (https://groups.google.com/d/msg/mintamil/S_Q2SNgqeFA/QwqRP_TzAQAJ) குறிப்பிட்டுள்ளேன். 

1. இத்தளங்களில் (இந்த நான்கு தளங்களில்)  உள்ள கருத்துக்களை யார் தொகுத்து எழுதினாலும் இவ்வாறுதான் கட்டுரை அமையும்.

2. மேலும், அனைத்து இந்தியர்களும் கொண்டாடும் பண்டிகை என்று அமெரிக்க அதிபரும் இங்கிலாந்து பிரதமரும் கூறும் பொழுது அவர்களது தகவல்செய்தி உதவியாளர்கள் மிகக்கவனமாகச் செயலாற்றுவார்கள் என்பதையும் அறிக.

தீபாவளி ஒரு இந்தியப் பண்டிகை என்று சொல்வதிலோ ஏற்றுக் கொள்வதிலோ எந்தப் பிழையையும் நான் காணவில்லை.
அத்துடன்,  எனது தகவல் தேடும் திறனைப் புகழ்ந்தமைக்கு  நன்றி.

மேலும் நீங்கள் சமஸ்கிரத + தமிழ் பண்டிதர் என குழுமத்தினர் குறிப்பிடுவதைப் பார்க்கிறேன்.

இயன்றால் மாற்றுக் கோணத்தில் நீங்கள் தீபாவளிப் பண்டிகை தமிழிலக்கியங்களில் தோன்றும் இடங்களை எல்லாம் (ஆரியர் இழையில் நீங்கள் செய்தது போலவே) செய்யலாமே.  

அவ்வாறுதானே திரு. சன்னா அவர்கள் புத்த மதக் குறிப்பிருக்கும் இடத்தை எடுத்துக்காட்டி உதவினார். 

நன்றி. 

..... தேமொழி

தேமொழி

unread,
Nov 8, 2016, 9:55:28 PM11/8/16
to மின்தமிழ்


On Tuesday, November 8, 2016 at 5:40:59 PM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 9 November 2016 04:58:33 UTC+5:30, தேமொழி wrote:
இக்கட்டுரை உதவுமா பாருங்கள்.....

தீபாவளியும் மகாவீரரும்


Published: October 16, 2014
தொகுப்பு: ஆதி
 

அக்கட்டுரை சமணர் யாத்த தமிழ் நூல்களிலிருந்து யாதொரு ஆதாரத்தையும் தரவில்லை.

உயிர் நீத்தாருக்காக சடங்கு அனுசரிக்கும் வழக்கத்தையும்  சமணம் 
ஆதரிப்பதில்லை. நீராடும் வழக்கம் என்பதே சமணத் துறவியர்க்குக் கிடையாது,
நீரில் இருக்கும் சிற்றுயிர்கள் மாளும் என்பதால்.

மேலும் மஹாவீரர் பரிநிர்வாணம் அடைந்த காலத்தில் மக்கள் பெருவாரியாகச் சமணத்தில் சேர்ந்திருக்கவே இல்லை;
சில கணதரர்கள் தவிரச் சமணக் கோட்பாடுகளை வெளியுலகம் அறிந்திருக்கவே இல்லை. சாவக நோன்பு காக்கும்
இல்லறப்பிரிவினர் சமணத்தில் முதலில் கிடையவே கிடையாது; அது பின்னால் புகுந்த ஏற்பாடு.

சமணக்கோட்பாடுகள் முதன்முதலாக ஏட்டில் பதிவு பெற்றது எந்த நூற்றாண்டில் ? 
சமணம் தென்னகத்தில் முதலில் நிலைகொண்ட கருநாடகப் பிராந்தியச் சமண நூல்களோ,
 
தமிழ்ச் சமண நூல்களோ சமணரின் தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சொல்லவில்லை. 

தமிழ் வைதீக சமய நூல்கள் வைதீக மதத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை  சொல்லும் இடங்களைப் பட்டியலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 ..... தேமொழி


Dev Raj

unread,
Nov 8, 2016, 10:31:36 PM11/8/16
to மின்தமிழ்
On Wednesday, 9 November 2016 08:25:28 UTC+5:30, தேமொழி wrote:
தமிழ் வைதீக சமய நூல்கள் வைதீக மதத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை  சொல்லும் இடங்களைப் பட்டியலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


நான் அம்மதத்தினர்  தீபாவளி கொண்டாடிய தொல் வரலாற்றை வண்ணப்படம் போட்டுக்காட்டவில்லை; 
எனக்குச் சற்றும் அப்பட்டியல் தரும் பொறுப்புக் கிடையாது


தேவ்

தேமொழி

unread,
Nov 8, 2016, 10:43:25 PM11/8/16
to மின்தமிழ்
நன்றி, 
"கிடைத்த தகவல்களை காட்டாமல்",  கொடுக்காமல் இருப்பது முறையல்ல. 
அது கட்டுரையை  முழுமையடையச் செய்யாது. 
எனவே "இருக்கும் தடயங்களை வைத்து"  என்ற அளவில்  இக்கட்டுரை அமைந்துள்ளது எனக் கொள்வோம்.
மேலும் தகவல் கிடைத்தால் அதற்கேற்றவாறு மாற்றியமைப்போம்.  உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

..... தேமொழி 

 


தேவ்

Oru Arizonan

unread,
Nov 8, 2016, 11:39:23 PM11/8/16
to mintamil


2016-11-08 18:40 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
//இந்துச் சடங்குகளை மட்டம் தட்டும் அவக்கரமே உம்மிடம் நிலை கொண்டிருப்பதால்,
தேடலில் வல்லுநரான நீவிர் இவற்றையெல்லாம் பார்க்காமல் பதிவு செய்கிறீர்.//

 நானும் சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டேன், தேவ் ராஜ்.

அதற்கெல்லாம் பதில்சொல்லமாட்டார் அவர்.  அவரது குறி இந்துசமயத்தையும், பிராமணர்களையும் தாக்குவது ஒன்றே!  இது மின்தமிழர்கள் அறிந்த உண்மையன்றோ!

ஒரு அரிசோனன் 

சேது

unread,
Nov 9, 2016, 2:37:09 AM11/9/16
to மின்தமிழ்
வடமாநிலங்களில்நரகாசுரன்கதைஇல்லை.வடார்க்காடுமாவட்டத்தில்பொங்கல்தான்சிறப்பாக க்கொண்டாடப்படும்.திகழிஅல்லதுதிதிகொடுப்பதுபிள்ளைகள்.தமிழர்கள்அனைவரும்பங்காளிகள்.சம்பந்தகாரர்கள்யார்.தேடவேண்டும்.


On Sunday, October 30, 2016 at 1:05:52 PM UTC+5:30, தேமொழி wrote:
நீங்க செத்துப் போனதை ஏன் எல்லாரும் கொண்டாடுறாங்க? 

நீங்க ஏதாவது தப்பு பண்ணுணீங்களா?  நீங்க நல்லவரா கெட்டவரா?

சொல்லுங்க ... நீங்க நல்லவரா கெட்டவரா?

என்று கற்பனையில் இப்படி யாரும் நரகாசுரனிடம்  இன்று  கேட்க முடியாது. 

முதலில் நாம் அறிய வேண்டியது  நரகாசுரன் என்றொரு அசுரன் இருந்தானா என்பதாகத்தான் இருக்கவேண்டும். 

நரகாசுரன்  இறந்த நாளைத் தீபாவளி என்று விளக்கு ஏற்றி, புத்தாடை உடுத்தி,  பலகாரம் உண்டு, பட்டாசு வெடித்து மகிழும் அளவிற்கு நரகாசுரன் இறப்பு அப்படி என்ன  மகிழ்ச்சி தருவதா? அதுவும் அந்த அசுரனே  என் இறப்பு மக்களைத் துன்புறுத்தும் கொடியவர்  அனைவருக்கும் ஒரு  பாடமாக அமையட்டும் என்ற நோக்கில் அதனைப் பண்டிகையாகக்  கொண்டாடச் சொல்லி வேறு கேட்டுக் கொண்டானாம்.  அப்படிச் சொன்னவன் தீயவனாகவா இருக்க முடியும்?  இந்த நரகாசுரன் கதை நாமறிந்த இந்துமத புராணக்கதை. 

உண்மையில் தீபாவளிப் பண்டிகையின் தோற்றத்தை  சமணசமயத்தில் காட்டுகிறார்கள் பண்டிகையின் தோற்றத்தை ஆராய்ந்த அறிஞர்கள்.  வாழ்வாங்கு வாழ்ந்து, மக்களின் நலனுக்காக அவர்களை நல்வழிப்படுத்தத் தனது இறுதிநாள் வரை அறிவுரைகள் கூறிய சமணசமயத்தின் கடைசி தீர்த்தங்கரர்  வர்த்தமான மகாவீரர் மறைந்த தினத்தை விளக்கேற்றி வைத்து,  அவரது அறிவுரையின் ஒளி தொடர்ந்து மக்களின் அறியாமை இருளை நீக்கி அவர்களை  வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சமணர்கள் வழிபடுநாளாகக் கருதிய நாள்தான்  தீபாவளி நன்னாள் என்பது இவர்கள் முடிவு (சமணமும் தமிழும்,  பக்கம்: 79-80, கல்வெட்டாராய்ச்சி  அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி).  

பாவாபுரி நகரின் மன்னரது அரண்மனையில் இரவுமுழுவதும் அறிவுரை வழங்கினார் மகாவீரர். அது முடிவதற்கு இரவு நெடுநேரமாகிவிட, மக்கள் அனைவரும் அங்கேயே உறங்கினர். அவர்கள் விழித்தெழுந்து பார்த்த பொழுது  மகாவீரர் வீடு பேறு அடைந்திருந்தார் (அக்டோபர் 15,   527 பொ. ஆ. மு).  அறியாமை இருளை அகற்றும் அவரது அறிவுரை, தொடர்ந்து மக்களின் வாழ்வில் ஒளிவீசி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதன் அறிகுறியாக மன்னரும் மக்களும் முடிவெடுத்து ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்து வழிபடும் இம்மரபைத்  துவக்கினர். மகாவீரர் மறைந்தது அதிகாலை என்பதால் அந்நேரத்தில் வழிபடுதல் மரபு  என்பது சமணம் கூறும் வரலாறு.  ஆகவே தீபாவளி வழக்கில் வந்தது மகாவீரர் மறைந்த  பொ. ஆ. மு. 600 இல். இது வேத காலத்திற்கும் முற்பட்ட காலம்.  வேதங்களில் சமணதீர்த்தங்கரர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன.  தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி; வரிசையாக ஒளிவிளக்கேற்றும் தீபாவலி விழா பின்னர் தீபாவளி என்று திரிந்தது என்று விளக்கப்படுகிறது.  சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் இன்றைய நாளிலும் தீபாவளி கொண்டாடுவதும், அந்நாளைப் புதுக்கணக்கு துவக்கும் நாளாகக் கடைப்பிடிப்பதும் தீபாவளியின் சமண சமயப் பின்னணியைக் காட்டி நிற்கின்றது.  சமண சமயத்தார் பலவிதக் காரணங்களால் (விரும்பியோ/விரும்பாமலோ) இந்து மதத்தைத் தழுவ நேர்ந்த பொழுது, தங்களது மகாவீரர் மறைந்த நாளின் நினைவைப் போற்றும்  வகையில் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும்  தீபாவளி  பழக்கத்தைக் கைவிடாது தொடர்ந்தனர் (தமிழர் நாகரிகமும் பண்பாடும், பக்கம்: 33-34, டாக்டர் மா.இராசமாணிக்கனார்). 

புராணக் கதைகள் புனைந்துரைக்கப்பட்ட பிற்காலத்தில் தீபாவளிப்  பண்டிகைக்குத் தக்கவாறு  இந்துமதக் கதைகள் பல உருவாக்கப்பட்டன என்பதே அறிஞர் பலரும்  கூறுவது (அபிதான சிந்தாமணி, சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்).  இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டியது (நம்பமுடிகிறதா?), கடலுக்கு அடியில் ஒளித்தது (அறிவுக்குப் பொருந்துகிறதா?),  கண்டு தனது  படைப்புத் தொழில் தடைப்பட்டதாக மிரண்ட  பிரம்மா திருமாலிடம் வேண்டுகிறார். திருமால்  பன்றி அவதாரம்  எடுத்து புவியை மீட்க, இதனால் பூமியும் பன்றியும்  கொண்ட உறவில் பிறந்த பவுமன் (இயற்கையில் நிகழக்கூடியதா?) என்பவன்  தாயைத் தவிர யாராலும் தான் கொல்லப்படக்கூடாது என்ற வரம் பெறுகிறான்.  அழிக்கப்படமுடியாது என்ற  ஆணவத்தில் (தாய்க்குலத்தைப்  பற்றிய தப்புக்கணக்கு போட்ட முதல் மனிதனாக இருக்கக்கூடும்) தேவர்களுக்கும் மக்களுக்கும்  அவன் துன்பம் தர, திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்க, திருமகள் சத்யபாமாவாக அவரை மணக்க, இருவரும் 'நரக'ர்களை (மக்களை) துன்புறுத்திய 'அசுர'னுடன் போர் புரிகிறார்கள். சத்யபாமா தனது மகன் நரகாசுரனாக மாறிவிட்ட பவுமனைக் கொல்கிறார்  என்பது புராணக்கதை. 

இதில் நரகாசுரனே தனது இறந்தநாளைக் கொண்டாடவேண்டும் என்று கேட்டதாக ஒரு வடிவமும், சத்யபாமா கேட்டுக் கொண்டதாக மற்றொரு வடிவமும் கொண்ட  கதைகளும்  உள்ளன.  அதுபோல இரண்யாட்சதன் கதைக்குப் பதிலாக  மது, கைடபர் என்ற அரக்கர்கள் வேதத்தை ஒளித்து வைத்து அதை மீட்க திருமால் பன்றி வடிவம் எடுத்ததாகவும் மற்றொரு வேறுபட்ட  கதையும்  உண்டு.  எனவே இக்கதைகளின் அடிப்படையில்  நரகாசுரன்  என்பவனின்  பிறப்பே கேள்விக்குரியதாக  இருக்கிறது.  எந்தவகையில் மாற்றி மாற்றிச் சொன்னாலும் இவை  அறிவுக்கும் அறிவியலுக்குப் புறம்பான கதைகள் என்பதில் ஐயமில்லை.

கதைகள்  உருவாகிய நோக்கம்  என்று இரண்டு காரணங்களை நாம் கணிக்க இயலும்: 
1) அனைவரும் கொண்டாட விரும்பும் சமண தீபாவளியை இந்துமதத்திற்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்பது ஒரு நோக்கம் 
2) அதேசமயம் நல்லவர்களுக்குத் தீங்கிழைப்பவர் யாராக இருப்பினும் அவர்கள்  அழிக்கப்படுவார்கள் என்ற சமயக்கருத்தை மக்களிடம் கொண்டு செல்வதும் மற்றொரு நோக்கம்.

நல்லவருக்கு நல்லதே  நடக்கும் என்ற இந்த  நீதியை   அனைத்துச் சமயங்களும் பாகுபாடின்றி வலியுறுத்துகிறது; மக்களை நல்வழிப்படுத்தச் சமயங்கள் போதிக்கும் ஒரு அடிப்படைக்  கொள்கை இது. உலகம் முழுவதும் எந்த ஒரு சமயமும் இதில் வேறுபடுவதில்லை.  உண்மை சமயக் கருத்தை மறந்துவிட்டு சமயவெறி பிடித்து அலைபவர்கள் இந்த  அடிப்படைக் கருத்துக்கு மாறாக நடப்பதும் வழமையே.  மேலும், தலைவன் அல்லது நாயகன்  ஒருவன் தோன்றி தீயவர்களை அழிப்பான் (the victory of the good over the evils) என்பதும், அவன் வரவை எதிர்பார்ப்பதும் உலக சமய புராணங்கள் யாவற்றிலும் (இன்றைய திரைப்படங்கள் உட்பட) காணப்படுவதும்  கூட.  இதனை உலக சமயங்களையும் புராணக்கதைகளையும் ஆராய்ந்த அறிஞர் ஜோஸப் கேம்பெல் (Joseph Campbell, 1904 – 1987) என்ற அமெரிக்க புராணவியலாளர் (American Mythologist) கூறியுள்ளார். உலக மதங்களையும் அவற்றின் புராணக் கதைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்த ஜோஸப் கேம்பெல், தனது ஆய்வின் முடிவாக உலகில் உள்ள புராணக்கதைகள் அனைத்தும் ஒரே வகையான அடிப்படை நியதிகளையே கொண்டிருக்கின்றன எனக் கருதினார். இதனை இவர் “ஒற்றைப் புராணம்” (monomyth) என்ற கோட்பாடாக அறிமுகப்படுத்தினார். அதாவது உலகில் வழங்கி வரும் கதைகளனைத்தும் ஒரே அடிப்படையில் அமைந்தவை, அதன்படியே ஒவ்வொரு மனித வாழ்க்கையும் வாழ்ந்து காட்டப் படுகிறது என்பது அவர் முடிவு. 

பண்டைய தமிழிலக்கியங்களில் தீபாவளிக்கான சான்றுகள் காட்ட இயலாது.  விஜயநகர ஆட்சி தமிழகத்தில் தொடங்கியதும் தீபாவளி கொண்டாடுவதும் தோன்றியது.   தீபாவளி என்பது புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாக விஜயநகர ஆட்சியில்  கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பார் குறிப்பிடுவதாக பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு, பக்கம் : 433-434) சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர ஆட்சிக் காலத்தில், மதுரையில் குடியேறிய விஜய நகரத்திலிருந்து வந்த சவுராஷ்டிரர்களும்   இதைப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய பகுதிகளை ஆண்ட  நாயக்கர்களால் தமிழகத்தில் பதினாறாம் நூற்றாண்டு காலவாக்கில்   புகுத்தப்பட்டு தீபாவளி, அந்நாட்கள் தொடங்கி  தென்னிந்திய  மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நரகாசுரன் கதையை தீபாவளியுடன் இணைத்துக் கூறப்படுவது  தென்னிந்தியாவின் மரபு. 

நரகாசுரன் கதை பார்ப்பனர்களால் இட்டுக்கட்டப்பட்டது என்பது தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அவர்களது கருத்து  (தமிழர் மதம்,   பக்கம் : 200-201).  பார்ப்பனர்கள் நடத்திய  உயிர்ப்பலி கொடுக்கப்பட்ட வேள்விகளை எதிர்த்த மன்னன் ஒருவனை, அவன்  மக்களை (பார்ப்பனர்களை) துன்புறுத்திய  அசுரன் என்று உருவகப்படுத்தி கண்ணனிடம் கூற,    கண்ணன் அவனை அழித்தான் என்று உருவாக்கப்பட்ட கதை என்பது மறைமலை அடிகள் தரும் விளக்கம்.  மக்கள் வாழுமிடங்களில் அத்துமீறி நுழைந்த ஆரியர் தங்களது சோம பானம் சுரா பானத்தை மக்களுக்கு ஊற்றிக்கொடுத்து அவர்களைப் போதைக்கு அடிமைப்படுத்தியதையும் பிறகு அவர்களது தானியங்களையும் உடைமைகளையும் கைப்பற்றியதைத் தட்டிக்கேட்ட அரசன் நரகாசுரனாகக் காட்டப்பட்டு மற்றொரு அரசனான கண்ணன் துணையுடன் கொல்லப்பட்டான் என்ற மற்றொரு கோணமும் உண்டு.   

ஆகவே, சார்புநிலை ஒழித்து செயல்களின் அடிப்படையில் எடை போட்டால்,  உயிர்க் கொலைகளைத் தடை செய்தவனோ, மக்களைப் போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களது உடைமைகளைச் சூழ்ச்சியால் கவர்ந்தவர்களைக் கண்டித்த செயற்கரிய செய்த நரகாசுரன்  தீயவனாக இருக்க வாய்ப்பில்லை.  ஆரியர் தம்மை  எதிர்த்தவரை 'அசுரர்' எனக் குறிப்பிடுவர். சுரா பானத்தைக் குடித்த ஆரியர்களை 'சுரர்கள்' என்றும், அதனைக் குடிக்காதவர் 'அசுரர்கள்' என்றும் கூறுவர். இவர்கள் கறுத்த நிறத்துடன், கோரைப்பற்களும், கொம்புகளும்  உடைய கொடியவர்களாகவும், சுரர்கள் நற்குணம் பொருந்திய தேவர்களாகக் கூறுவதும் புராணக்கதை வழக்கம்.   அசுரர் என்பவர் என்பவர் குறிப்பிட்ட எந்த இனத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் கண்டறியப்பட இயலவில்லை என்றாலும், அவர்கள் ஆரியர்களின் பகைவர்கள் என்பது உறுதி.  திராவிடர்களும் ஆரியர்களின் பகைவர்களாகக் கருதப்பட்டவர்களே. இக்காரணத்தின் அடிப்படையில் தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று கா.சுப்பிரமணியன் பிள்ளை தனது  தமிழ் சமயம் (பக்கம் : 62)  என்ற நூலில் குறிப்பிடுகிறார்.  

கிருஷ்ணாவதார  நரகாசுரன் அழிப்பு கதை  மட்டுமின்றி, கண்ணன்  கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனிடம் இருந்து ஆயர்குலத்தைக் காப்பாற்றியதையும் இணைத்துக் கூறும் தீபாவளிக்  கதையும் உண்டு. திருமாலின் பிற அவதாரக் கதைகளுடன் இணைப்பதும் வழக்கில் உள்ளது. மன்னன்  மாபலியைப் பாதாளத்திற்கு அனுப்பிய பிறகு அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது மக்களைக் காணவரும்  நாளாகவும் (மலையாள ஓணம் பண்டிகை) கூறப்படுகிறது. அது போல,  இராமாவதாரத்துடன் தொடர்புப்படுத்தி, இராவணனைக் கொன்று  சீதையை சிறைமீட்டு, தனது வனவாசம் முடிந்து இராமர் அயோத்தி திரும்பிய நாளை மக்கள்    மகிழ்ச்சியுடன்  விளக்கேற்றிக் கொண்டாடியதே தீபாவளிப் பண்டிகை என்றொரு மற்றொரு  இந்துமதத்தின் தீபாவளிக் கதையும் உண்டு. வட இந்தியாவில் வழக்கத்தில் உள்ள தீபாவளிக்  கதை இராமரின் கதை.  சக்தி  கேதாரகௌரி விரதத்தை  21 நாள் கடைப்பிடித்த பின்னர், சக்தியைச் சிவன் தனது உடலில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தனாரீஸ்வரர்  என்று மாறிய நாள்  தீபாவளி என்ற ஒரு கந்தபுராணக் கதையும் உண்டு.  அதுமட்டுமின்றி  சீக்கியர்களும் தங்களது குரு கோபிந்த் சிங் (Guru Har Gobind) விடுதலை பெற்ற நாளைக் கொண்டாட பொற்கோவில் வரை விளக்கேற்றி வழிபடும் வழக்கமும் உண்டு.  நேபாளத்தில் உள்ள மகாயான பௌத்தர்கள் உருவவழிபாடு செய்ய கிடைத்த உரிமையைத் திருமால், திருமகள் ஆகியோரை வழிபட்டும்;  மயன்மாரில் உள்ள தேரவாத பௌத்தர்கள் புத்தர் வீடுபேறு அடைந்ததை விளக்கேற்றிக் கொண்டாடும் வழக்கமாகவும் தீபாவளி  உள்ளது.  ஆனால் இப்பண்டிகைகளில் சிலவற்றில்  நாட்கள் வேறுபடுவதும், பண்டிகை  கொண்டாடும் நாட்களின் எண்ணிக்கை வேறுபடுவதும் வழக்கம். 

N. Ganesan

unread,
Nov 9, 2016, 6:32:33 AM11/9/16
to மின்தமிழ், vallamai


On Tuesday, November 8, 2016 at 6:55:28 PM UTC-8, தேமொழி wrote:

தமிழ் வைதீக சமய நூல்கள் வைதீக மதத்தினரின் தீபாவளிக் கொண்டாட்டத்தை  சொல்லும் இடங்களைப் பட்டியலிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 ..... தேமொழி

 
ஒன்றும் இல்லை. 

பாரதியார் தமிழ்நாட்டில் பிரபலமான பாஞ்சாலி வழிபாட்டை வைத்து தேச விடுதலைக்கு பாஞ்சாலி சபதம் என்று எழுதினார். உருவகம். அதில் பாஞ்சாலி = பாரதமாதா.

அதுபோல, தெலுங்கில் இந்திய சுதந்திரத்துக்கு எழுதிய நூல் உண்டு. அதில் கிருஷ்ணன் நரகாசுர வதம் முக்கியம். விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள்
அறிமுகப்படுத்தியது தீபாவளி. எல்லோருக்கும் பெரிதாக அச்சு ஜர்னலிஸம், தீபாவளி மலர்கள் 20-ஆம் நூற்றாண்டில் பெரிதும் உதவின.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 9, 2016, 6:36:47 AM11/9/16
to மின்தமிழ்


On Tuesday, November 8, 2016 at 11:37:09 PM UTC-8, சேது wrote:
வடமாநிலங்களில்நரகாசுரன்கதைஇல்லை.வடார்க்காடுமாவட்டத்தில்பொங்கல்தான்சிறப்பாக க்கொண்டாடப்படும்.திகழிஅல்லதுதிதிகொடுப்பதுபிள்ளைகள்.தமிழர்கள்அனைவரும்பங்காளிகள்.சம்பந்தகாரர்கள்யார்.தேடவேண்டும்.


கொங்கு நாட்டிலும் பொங்கல்தான் பிரதானம். தமிழர் திருநாள் என்பது பொங்கல் தான். அதனாலே தான் திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் அன்று பிறக்கிறது.

20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Nov 9, 2016, 6:45:02 AM11/9/16
to மின்தமிழ், vallamai


On Monday, November 7, 2016 at 8:19:31 PM UTC-8, N. Kannan wrote:
2016-11-03 17:40 GMT+08:00 namasivayampillai sellakrishnan <nsellak...@gmail.com>:
வாரியார் சுவாமிகள் வணங்கத் தக்கவர். நாளும் தமிழையும் ஆன்மிகத்தையும் செல்லும் தேயமெல்லாம் விதைத்தவர். ஆனால் தீபாவளி பற்றிய அவரது விளக்கம் அதீத சைவ சமயப் பற்றின் வெளிப்பாடு. 
​.....​
 
இவை போன்றவைதாம் சுவாமிகளின் 'தீபாவளி' பற்றிய விளக்கமும்.


நன்றி​
 டாக்டர் ந. செல்லக்கிருஷ்ணன்
​:

​ஆழ்வாராதிகளின் அடியொட்டியும், வேத, ஆகம வழியிலும், வேத வியாசரின் திறனாய்வின் அடிப்படையிலும் ஆதிப்பரம்பொருளின்​ தன்மைகள் இன்னயின்ன என அறுதியிட்ட கோட்பாடுகளின் வழியில்தான் கம்பன் நடக்கிறான். ஆனால் காலவோட்டத்தில் அவன் கடத்தப்பட்டுவிட்டான் ;-) கிபி நான்காம் நூற்றாண்டில் நானாதேசிகள் எனும் கடலாண்மைக் குழு பர்மாவில் நாரணற்குக் கோயில் எழுப்புகிறது. தொடர்ந்து திருவுடைய மன்னரைக் காணில் திருமாலைக் கண்டதாகவே வணங்கும் ஒரு அரச வழக்கம் மலேசியா, தாய்லாந்து, காம்போஜம், ஜாவம் போன்ற நாடுகளில் நிறுவப்படுகிறது. ஆயினும், முடிந்தவரை நேரடியாகப் பேசாமல் மழுப்பல் பேச்சே இம்மண்ணில் அதிகரித்துவிட்டது. 

பர்மாவின் பகன் நகரத்தில் உள்ள கல்வெட்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. குலசேகராழ்வாரின் முகுந்தமாலை சுலோகம் ஒன்றுடன் கிரந்தத்தில் தொடங்குகிறது.
கேரளாவில் இருந்து சென்ற வணிகர்கள் எழுதிய கல்வெட்டு. துரை. சுந்தரம் இழையில்: பர்மாவில் ஒரு தமிழ்க் கல்வெட்டு பார்க்கலாம்.
எல்லா தென்கீழாசிய தமிழ்க் கல்வெட்டுகளும் அதில் உள்ள கோப்பு: https://groups.google.com/forum/#!msg/mintamil/dxd5loryFRo/8NR5bawMBgAJ

குலசேகராழ்வார் - மல்லை (மல்லசமுத்திரம்) பாடுகிறார். கொல்லிமலையின் அரசன் என்கிறார்.


மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை 
      வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து 
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் 
      தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் 
கொல்லி காவலன் மால் அடி முடிமேல் 
      கோலமாம் குலசேகரன் சொன்ன 
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் 
      நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே
 
நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 9, 2016, 6:54:57 AM11/9/16
to மின்தமிழ், vallamai

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

 

ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம்   பக்கம் : 62

*****

வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!

தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.

ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434

 

***********

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201

***********

அகராதிக் குறிப்பில்

இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)

நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)

சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)

அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)

ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்

-  நூல்: அபிதான சிந்தாமணி

***********

சமண சமயப் பண்டிகையே தீபாவளி

தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி     அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80

***********

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை

வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.

ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்

பக்கம்: 33, 34 

N. Kannan

unread,
Nov 9, 2016, 11:54:40 AM11/9/16
to mint...@googlegroups.com

n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன் 

நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.

வாளொடு முன் தோன்றினால் யாரையாவது பலி கொடுக்க வேண்டிய கட்டாயம் ;-)

நா.கண்ணன்

Dev Raj

unread,
Nov 9, 2016, 12:34:55 PM11/9/16
to மின்தமிழ்
On Wednesday, 9 November 2016 17:02:33 UTC+5:30, N. Ganesan wrote:
விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள் அறிமுகப்படுத்தியது தீபாவளி. எல்லோருக்கும் பெரிதாக அச்சு ஜர்னலிஸம், தீபாவளி மலர்கள் 20-ஆம் நூற்றாண்டில் பெரிதும் உதவின.

தீபாவளிக் கொண்டாட்டம் வடபுலத்தில் பிரபலமாகவும் விஜயநகர அரசே காரணமா ?

தீபாவளி மலர்கள் எதற்கு உதவின , தெரியாது; பழைய தீபாவளி மலர்கள் வெளியிட்ட
கட்டுரைகள் தரத்தில் உயர்ந்து விளங்கின. 90களில் திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்
நடத்திய ‘ஓம் சக்தி’ மாத இதழ் விகடன் தீ .ம கட்டுரைகளையே மீண்டும் வெளியிட்டது;
கோபுலு அவர்களின் கைவண்ணமும் மீள்பார்வை பெற்றது. பகீரதன் அவர்கள்
ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்


தேவ்

Oru Arizonan

unread,
Nov 9, 2016, 12:36:59 PM11/9/16
to mintamil


2016-11-09 9:54 GMT-07:00 N. Kannan <navan...@gmail.com>:

//நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.//


உயர்திரு கண்ணன் அவர்களே,

இதைத்தான் நான் பலமுறை எழுதிவருகிறேன்.  வரவர மின்தமிழில் இந்துசமய - பிராமண எதிர்ப்பு வழக்கத்திற்கும் அதிகமாகிவிட்டது என்று.  வேறொரு இழையில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி அவர்களை இழிவுசெய்யும் இழையும் துவக்கப்பட்டிருக்கிறது.

சங்ககாலத்திலிருந்தே பிராமணன் தமிழ்நாட்டிலேயே இருந்து தமிழாய்மட்டும் பேசிவந்தாலும் அவன் தமிழன் இல்லை [வந்தேறி] என்னும் வாதங்களும், அவன்மட்டுமே தமிழ்நாட்டின் அனைத்துனைத் தீமைகளுக்கும் ஒட்டுமொத்தக்க காரணம்  என்பதுபோன்ற பதிவுகள் அவ்வப்போது வைக்கப்படுகின்றன.

இந்துசமயம் தமிழ்ச்சமயம் இல்லை என்னும்போது, புத்தமும், சமணமும் எப்படித் தமிழ்ச் சமயங்கள் ஆகும்?  அவையும் வடநாட்டிலிருந்து வந்தவைதானே?  அவற்றைப் போற்றுவதுபோல[நான் போற்றுவதைக் குறைசொல்லவில்லை] இந்துசமயம் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்படுவது குறைவதில்லை.

இன்னொரு பக்கம் தமிழர் பலர் போற்றும் ஈ.வே.ரா அவர்களைப்பற்றி மோசமாகவும் எழுதப்படுகிறது.

வேறொரு பக்கம் அவரைப்பற்றி எழுதுவதாக, இந்துசமய/பிராமண எதிர்ப்புப் பதிவுகளும் வெளியாகின்றன.

மதிப்பிற்குரிய நரசையா,மற்றும் இன்னம்பூரான் அவர்களும் இதை பலமுறை எழுதிவிட்டனர்.  

ஆயினும் இப்படிப்பட்ட இழைகள் மழைப்பிறகு குப்பையில் முளைக்கும் காளான்கள்  கிளம்பிக்கொண்டே இருக்கின்றன.

மினதமிழின் ஒரு உரிமையாளர் என்ற முறையில் தாங்கள் சாதி/சமய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி, இப்படித் தேவையற்ற, தமிழரைப்பிரித்து, இனவெறி உண்டுபண்ணும் இழைகளைமட்டுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேமொழி

unread,
Nov 9, 2016, 3:14:10 PM11/9/16
to மின்தமிழ்
இது  மிகவும் முக்கியமான கவனிப்பு, திரு. கணேசன்  பாராட்டுகள்.  ஒரு புதிய கோணம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. 

இந்தக் கோணத்தில் சென்றால் இன்று மேலைநாட்டு முதலாளித்துவம் பரப்பிக்கொண்டிருக்கும் வணிக விழாக்கள் அன்னையர், தந்தையர், காதலர் தினம் யாவற்றையும் புரிந்து கொள்ளலாம்.

அன்று புதியதாக ஊடகக்  களத்தில் இறங்கிய  அச்சு, பத்திரிக்கை வழி செய்தி பலரையும் சென்றடைய வழி ஏற்பட்டது போல, இன்று இணையம் செய்கிறது.  பண்டிகைகள் பரவுகின்றன.  அன்னையர், தந்தையர், காதலர் தினம் இந்தியாவில் பரவிவிட்டது.  

இன்று காதலர் தினம் கொண்டாடுபவரை கரித்துக் கொட்டுபவர்கள், தீபாவளியும்  அவ்வாறு ஒரு காலத்தில்  தமிழகத்தில் நுழைந்தது  என்றால் வைது  கொண்டிருப்பவர்களே.  எல்லாம் காலத்தின் கோலம்.

அடுத்த நூற்றாண்டில் யாராவது காதலர் தினம் நம் நாட்டுக்கு உரியதல்ல என்று சொன்னாலும் எதிர்ப்பை அதிகமாகவே சந்திக்கலாம்.

..... தேமொழி

 

நா. கணேசன்

தேமொழி

unread,
Nov 9, 2016, 3:28:50 PM11/9/16
to மின்தமிழ்


On Wednesday, November 9, 2016 at 8:54:40 AM UTC-8, N. Kannan wrote:

n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன் 

நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.


மறைந்த முன்னோர்களை வழிபடுவது, போற்றுவது,  நினைவுச்சின்னம் அமைப்பது உலகம் முழுவதும் தொன்று தொட்டு உள்ள வழக்கம். 

அது அன்பின் வெளிப்பாடு.  அதற்கு   எந்தப் பெயர் சூட்டினால் என்ன. 

அதனைப் பற்றில்லாமல், செய்யாமல் விட்டால் துன்பம் வரும் என்று சொல்லி வலியுறுத்தி சடங்காக மாற்றும்பொழுது  அந்த உணர்வு அவமானத்திற்குள்கிளாறது.

முப்பாட்டன், முப்பாட்டி பெயர் தெரியாதவர்கள் பலர்.  பெயர் தெரியவில்லையா சரி நாமே  ஒரு பொதுப்பெயர் வைத்து சடங்கை முடிப்போம் என்பது எந்த வகை மூதாதையர் பற்றில், நினைவு போற்றுதலில் அடங்குமோ தெரியவில்லை.

..... தேமொழி 


 

வர, வர பிராமணர்கள் பற்றிய கதைகள் எல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது. இவனும் மற்ற தமிழன் போல் ஒருவன். எல்லோர் செய்வதையும் இவனும் செய்கிறான்.

தேமொழி

unread,
Nov 9, 2016, 4:19:43 PM11/9/16
to மின்தமிழ்


On Wednesday, November 9, 2016 at 8:54:40 AM UTC-8, N. Kannan wrote:

n Nov 9, 2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன் 

நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!


இதற்கு, மலேசிய சிங்கப்பூர் பகுதிகளில் சாதிகள், அதன் சங்கங்கள் இக்காலத்தில் பெரிதுபடுத்தப்பட்டு சச்சரவுகள் துவக்கப்படுவதையும், இந்த நிலைமைக்குத்  தமிழக திரைப்படங்களின் தாக்கம் காரணம்  என்று கூறப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் வழி நடக்கும் ஊடுருவல் புரியலாம். 

..... தேமொழி


 

இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.

N. Ganesan

unread,
Nov 9, 2016, 9:46:09 PM11/9/16
to மின்தமிழ், vallamai


On Wednesday, November 9, 2016 at 9:34:55 AM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 9 November 2016 17:02:33 UTC+5:30, N. Ganesan wrote:
விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள் அறிமுகப்படுத்தியது தீபாவளி. எல்லோருக்கும் பெரிதாக அச்சு ஜர்னலிஸம், தீபாவளி மலர்கள் 20-ஆம் நூற்றாண்டில் பெரிதும் உதவின.

தீபாவளிக் கொண்டாட்டம் வடபுலத்தில் பிரபலமாகவும் விஜயநகர அரசே காரணமா ?

தீபாவளி மலர்கள் எதற்கு உதவின , தெரியாது; பழைய தீபாவளி மலர்கள் வெளியிட்ட
கட்டுரைகள் தரத்தில் உயர்ந்து விளங்கின.

அரசாங்கத்தில் ஓவிய, சிற்பக் கல்லூரிகள் தொடங்கினர். தென்னிந்தியாவில் தீபாவளி மலர்களால் ஏற்பட்ட நன்மைகளில் முக்கியமானது
ஓவியக் கலை வளர்ச்சி. 

தென்னிந்திய ஓவியங்கள் வட இந்தியா முகலாய பெயிண்டிங்ஸ் (< ஈரான், இஸ்லாம்) - பின்னர் பஹாடி பெயின்டிங்ஸ் (ஹிந்து) போல
நுட்பத்தில் வளர்ச்சி அடையவில்லை. பெர்ஸ்பெக்டிவ் இல்லை. 2 பரிமாணம் தான்.  ...

மிகச் சிறந்த ஓவியங்களை பல்வேறு வகைகளில் சைத்ரீகர்கள் வரைய உதவியவற்றுள் முக்கியமானது தீபாவளி மலர்கள்.

நா. கணேசன்
 
90களில் திரு பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 9, 2016, 11:48:10 PM11/9/16
to mintamil

வணக்கம் .


On 09-Nov-2016 5:24 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> On Tuesday, November 8, 2016 at 11:37:09 PM UTC-8, சேது wrote:
>>>
>>> வடமாநிலங்களில்நரகாசுரன்கதைஇல்லை.வடார்க்காடுமாவட்டத்தில்பொங்கல்தான்சிறப்பாக க்கொண்டாடப்படும்.திகழிஅல்லதுதிதிகொடுப்பதுபிள்ளைகள்.தமிழர்கள்அனைவரும்பங்காளிகள்.சம்பந்தகாரர்கள்யார்.தேடவேண்டும்.
>>>
>>
>> கொங்கு நாட்டிலும் பொங்கல்தான் பிரதானம். தமிழர் திருநாள் என்பது பொங்கல் தான்.

அன்றைய இன்றைய பொருளாதாரம் முக்கிய காரணம்.

அதனாலே தான் திருவள்ளுவர் ஆண்டு பொங்கல் அன்று பிறக்கிறது.
>>
>> 20-ஆம் நூற்றாண்டில் பத்திரிக்கைகள் சென்னை கலாசாரத்தைப் பரப்பின. அவற்றால் தீபாவளி வெளிச்சம் அடைந்தது.
>>
>> நா. கணேசன் 
>
>
> தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ....
>
> தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
>

> தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
>
>  
>
> ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
> நூல்: தமிழ் சமயம்   பக்கம் : 62
>
> *****
>
> வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!
>

> தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.
>
> தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
>
> வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
>
> மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
>
> ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்
>
> நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
>
>  
>
> ***********
>
> பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி
>

> வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
>
> பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
>
> ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
> நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201
>
> ***********
>
> அகராதிக் குறிப்பில்
>
> இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
>
> நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
>
> சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
>
> அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
>
> ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
>
> -  நூல்: அபிதான சிந்தாமணி
>
> ***********
>
> சமண சமயப் பண்டிகையே தீபாவளி
>

> தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
>
> வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
>
> சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
>
> ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி     அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
> நூல்: சமணமும் தமிழும்  பக்கம்: 79-80
>
> ***********
>
> அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
>
> வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
>
> ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
> நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும்
>
> பக்கம்: 33, 34 
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Kannan

unread,
Nov 10, 2016, 12:46:08 AM11/10/16
to mint...@googlegroups.com

On Nov 10, 2016 2:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>> நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!
>
>
> இதற்கு, மலேசிய சிங்கப்பூர் பகுதிகளில் சாதிகள், அதன் சங்கங்கள் இக்காலத்தில் பெரிதுபடுத்தப்பட்டு சச்சரவுகள் துவக்கப்படுவதையும், இந்த நிலைமைக்குத்  தமிழக திரைப்படங்களின் தாக்கம் காரணம்  என்று கூறப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் வழி நடக்கும் ஊடுருவல் புரியலாம். 
>
> ..... தேமொழி

ஏதோ தீபாவளி மலர்கள் வந்ததால் தீபாவளி வந்தது என்பது அறியாமை. மலேசியத் தமிழ் இடப்பெயர்வு 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.

அங்குள்ள தமிழர்கள் பயபக்தியோடு தினம் மணி அடித்து பூசை செய்வதைக் காண்கிறேன். மதுரை வீரன்,  சங்கிலிக் கருப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள். இவர்கள் ஐயர் செய்வதைக் காப்பி அடிக்கவில்லை. ஒருவேளை ஐயர்கள் இதைக் காப்பி அடித்து இருக்கலாம். பல விஷயங்களில் பிராமண ஒழுக்கம் என்பது தமிழ் மண் சார்ந்தே உள்ளது. அதை வள்ளுவனே பதிவு செய்கிறான். எனவே தன்னைப் பார்த்து திருந்தும் வலிமை இல்லாதோர் பரப்பும் கோட்பாடே பிராமண எதிர்ப்பு என்பது.

மேலும் இதன் அடிப்படையே தமிழனுக்கு மூளை இல்லை என்பது. ஆரியர்கள் சொன்னார்கள் அதனால் நாங்கள் கெட்டுப்போய் விட்டோம் என்பது கட்டுக்கதை போல் படுகிறது.

வள்ளுவன் தமிழ் வாழ்வியலை ஓவியம் போல் எழுதி வைத்துவிட்டான். அவனிடமிருந்து இக்கோட்பாட்டிற்கான சான்று ஏதுமில்லை. அவன் பிராமணர்களை தமிழ் வாழ்வியலோடு இணைத்தே காண்கிறான். மேலும் அவன் தமிழகத்தை எப்பொருள் எத்தன்மையாயினும், யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காணும் சமூகமாகவே காண்கிறான்.

அவனுக்கு முன்னுள்ள பெரியோரும் "தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை" என்றே சொல்லிப்போயினர். அப்படியொரு அறிவு சார் வழியில் வரும் தமிழனை முட்டாள் எனக் காட்ட தமிழ் அறிஞர்கள் முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் பிரபலமாய் இருந்த இனவாதக் கோட்பாடுகளே! நாட்சியை விடக் கொடுமையான இனவாதம் தமிழ் இனவாதம். அதற்குப் பெயர் சாதீயம்.

இக்குழுவில் இச்சிந்தனையை உரத்து சொல்லும் ஒரே தமிழன் சேசாத்திரி ஒருவர்தான். பாவம் அவர் அடிக்கடி மட்டுறுத்தலில் மாட்டிக் கொள்கிறார். ஆயினும் மனம் தளராமல் தைர்யமாகச் சொல்கிறார்.

இவ்வளவு கதையும் எதற்கு என்றால் ஏதோ கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர் போட்டதால் தீபாவளி தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது எனச் சொல்ல முற்படுபதால்!

தீபாவளி ஒரு இந்திய விழா! அது இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அதன் வடிவங்கள் மாறி இருக்கலாம்.

ஈழத்தில், மலேசிய-சிங்கப்பூரில் இதன் நடைமுறையை ஆராய்ச்சி செய்யலாம். தமிழ் இலக்கியத் தரவுகளைத் தேடலாம்.

இந்த நரகாசுரன் தமிழன் எனும் தாழ்வு மனப்பான்மைக் கதையாடலை நிறுத்தலாம்.

நா.கண்ணன்

Dev Raj

unread,
Nov 10, 2016, 1:39:50 AM11/10/16
to மின்தமிழ்
On Wednesday, 9 November 2016 22:24:40 UTC+5:30, N. Kannan wrote:

நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.



தர்ப்பணம், படையல், பிண்ட ப்ரதாநாம் - எல்லாம் என்றென்றும் உள்ளவை !
தமிழகத்தையே நம்பியிருப்போரும் புரிந்துகொண்டு கடைப்பிடித்து வரும் சடங்குகளே.




                                                                               புறநானூற்றில் புல் மேல் பிண்டம்

நீத்தார் கடன் தீர்க்கும் தறுவாயில் தருப்பைப் புல்லைப் பரப்பி அதன் மீது பிண்டமிட்டுத் தென்புலத்தார் கடனாற்றுதல் 
தொன்மையான வழக்கம்.

புலவர் ஒருவர் பெரும் புரவலன் வேள் எவ்வி என்பானைக் காணச் சென்றார் . அவன் பலரோடுண்டு இறும்பூதெய்தும் மாண்புடைத்தவன். அவன் இறந்து பட்டான்.  அங்கு அவன் காதல்மனைவி கண்ணீரோடு புல்லின் மேல் பிண்டமிடக்கண்டார். புலவரல்லவா ? கையறுநிலையில் பாடல் மலர்ந்தது.

வெள்ளிருக்கிலையார்  -
நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
ன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயிற்
பலரோ டுண்டன் மரீஇ யோனே.
                                           -  புறநானூறு

’பலரோடும் பகுத்துண்டு வாழ்ந்த அவன் புல்லின் மேல் அவனுக்காக இடப்பெறும் 
இப்பிண்டத்தை ஏற்று மகிழ்வானா ?’ எனும் வினா வாசிப்போரை மனம் நெகிழச் செய்கிறது. 

[வெள்ளிருக்கிலையார் - இப்பெயர் விநாயகருக்கானது என்பர்]

வள்ளுவமும் இந்த வைதிகச் சடங்குக்கே முதன்மை தந்து பேசுகிறது -
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

இன்றும் காருவாத் திதிகளில் நீர்த்துறைகளில் தென்புலத்தார் கடன்செலுத்த அலைமோதும்
கூட்டம் போலி முற்போக்குப் பகுத்தறிவுப் பிரசாரங்கள் தமிழகத்தில் எடுபடாமற் போனதை
அறிவிக்கிறது.


தேவ்

 

தேமொழி

unread,
Nov 10, 2016, 1:55:05 AM11/10/16
to மின்தமிழ்


On Wednesday, November 9, 2016 at 9:46:08 PM UTC-8, N. Kannan wrote:

On Nov 10, 2016 2:49 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>>> நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே!
>
>
> இதற்கு, மலேசிய சிங்கப்பூர் பகுதிகளில் சாதிகள், அதன் சங்கங்கள் இக்காலத்தில் பெரிதுபடுத்தப்பட்டு சச்சரவுகள் துவக்கப்படுவதையும், இந்த நிலைமைக்குத்  தமிழக திரைப்படங்களின் தாக்கம் காரணம்  என்று கூறப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஊடகங்களின் வழி நடக்கும் ஊடுருவல் புரியலாம். 
>
> ..... தேமொழி

ஏதோ தீபாவளி மலர்கள் வந்ததால் தீபாவளி வந்தது என்பது அறியாமை. மலேசியத் தமிழ் இடப்பெயர்வு 200 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது.

அங்குள்ள தமிழர்கள் பயபக்தியோடு தினம் மணி அடித்து பூசை செய்வதைக் காண்கிறேன். மதுரை வீரன்,  சங்கிலிக் கருப்பன், மாரியம்மன் போன்ற தெய்வங்கள். இவர்கள் ஐயர் செய்வதைக் காப்பி அடிக்கவில்லை.


"கடவுள் வழிபாடு" என்ற கருத்தும்  ...
"மூதாதையர் நினைவேந்தல் செயல்கள்" போல, 
சமயம், நாடு, கால எல்லைகளைக் கடந்து மனித குலத்தில் "தொன்றுதொட்டு" வரும் ஒரு கோட்பாடல்லவா?

 

ஒருவேளை ஐயர்கள் இதைக் காப்பி அடித்து இருக்கலாம். பல விஷயங்களில் பிராமண ஒழுக்கம் என்பது தமிழ் மண் சார்ந்தே உள்ளது. அதை வள்ளுவனே பதிவு செய்கிறான். எனவே தன்னைப் பார்த்து திருந்தும் வலிமை இல்லாதோர் பரப்பும் கோட்பாடே பிராமண எதிர்ப்பு என்பது.

மேலும் இதன் அடிப்படையே தமிழனுக்கு மூளை இல்லை என்பது. ஆரியர்கள் சொன்னார்கள் அதனால் நாங்கள் கெட்டுப்போய் விட்டோம் என்பது கட்டுக்கதை போல் படுகிறது.

வள்ளுவன் தமிழ் வாழ்வியலை ஓவியம் போல் எழுதி வைத்துவிட்டான். அவனிடமிருந்து இக்கோட்பாட்டிற்கான சான்று ஏதுமில்லை. அவன் பிராமணர்களை தமிழ் வாழ்வியலோடு இணைத்தே காண்கிறான். மேலும் அவன் தமிழகத்தை எப்பொருள் எத்தன்மையாயினும், யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காணும் சமூகமாகவே காண்கிறான்.

அவனுக்கு முன்னுள்ள பெரியோரும் "தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை" என்றே சொல்லிப்போயினர். அப்படியொரு அறிவு சார் வழியில் வரும் தமிழனை முட்டாள் எனக் காட்ட தமிழ் அறிஞர்கள் முற்பட்டதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் பிரபலமாய் இருந்த இனவாதக் கோட்பாடுகளே! நாட்சியை விடக் கொடுமையான இனவாதம் தமிழ் இனவாதம். அதற்குப் பெயர் சாதீயம்.


"சாதீயம்" என்ற கருத்தும் தமிழகத்திற்கு மட்டும் இருப்பதல்ல.  இந்தியா முழுவதும்தானே இருக்கிறது.  இன்றுவரை சாதீய அடிப்படையில் வன்முறை நிகழ்த்தப்படுவது இந்தியாவில் நிகழ்ந்து வரவில்லையா? இந்தியாவின் மாநிலவாரியாகவே புள்ளிவிவரம் கிடைக்கும். 

தமிழர்கள் கிடக்கட்டும், இந்தியா முழுவதும் இந்த உயர்வு தாழ்வு பேதம் எதனால் தோன்றியது, எவ்வாறு தோன்றியது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராய்வதும் மானுடவியல் கோணத்தில் விளக்கம் கொடுக்கக் கூடும். 

 

இக்குழுவில் இச்சிந்தனையை உரத்து சொல்லும் ஒரே தமிழன் சேசாத்திரி ஒருவர்தான். பாவம் அவர் அடிக்கடி மட்டுறுத்தலில் மாட்டிக் கொள்கிறார். ஆயினும் மனம் தளராமல் தைர்யமாகச் சொல்கிறார்.

இவ்வளவு கதையும் எதற்கு என்றால் ஏதோ கல்கி, விகடன், அமுதசுரபி தீபாவளி மலர் போட்டதால் தீபாவளி தமிழர்கள் மத்தியில் பரவி விட்டது எனச் சொல்ல முற்படுபதால்!

தீபாவளி ஒரு இந்திய விழா! அது இருந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அதன் வடிவங்கள் மாறி இருக்கலாம்.

ஈழத்தில், மலேசிய-சிங்கப்பூரில் இதன் நடைமுறையை ஆராய்ச்சி செய்யலாம். தமிழ் இலக்கியத் தரவுகளைத் தேடலாம்.

இந்த நரகாசுரன் தமிழன் எனும் தாழ்வு மனப்பான்மைக் கதையாடலை நிறுத்தலாம்.


எப்பொழுதும் ஒரு கதை சொல்லப்பட்டால், 'the moral of the story' என்று நேராகவோ, உள்ளுறை நோக்கமாக வெளியில் தெரியாமலோ ஒரு value கொடுத்துச் செல்வது  ethical theory எனப்படும்  (The Moral of the Story: An Introduction to Questions of Ethics and Human Nature).

இதனை ஜோசப் கேம்பல் the victory of the good over the evils என்று கூறுவார்.  நரகாசுரன் கதையும் அந்த அடிப்படைதான்.



ஆனால் அதற்கு மறைமுகமாக வெளித்தெரியாதவாறு subliminal messages இருக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பெரியாரின் கோட்பாடு.  
அந்த அடிப்படையில் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/22.pdf#page=25  மறைமுகக் காரணத்தை அவர் மக்களுக்குக் கொண்டு செல்ல முயன்றார்.
நீங்கள் கூறிய வள்ளுவர் மேற்கோள் போலத்தான்  இத்தமிழ்ப் பெரியோர்கள்  முறையும் இருக்கிறது. 


மாற்றுக்கோணத்தை சேசாத்திரி மட்டுமல்ல.  
காசு பிள்ளை, மறைமலையடிகள், பெரியார் போன்றவர்கள் மாற்றுக் கோணத்தைக் காட்டினாலும்  தமிழர்களுக்கு இதில் கோபம் வர எந்தக்  காரணம் இருக்காது என்பது எனது கருத்து. 

subliminal messages செய்தி முறை  இக்காலத்திலும் கையாளப்பட்டுள்ளது .  
எறும்பும் வெட்டுக்கிளியும் கதை உல்டா செய்யப்பட்டு, எறும்பு உழைக்கத் தடை செய்யப்படுகிறது இந்தியாவில், 
அது சிலிக்கான் வேளி வந்து உழைத்து சுகமாக வாழ்கிறது என்று ஒரு கதை.  
இந்தக் கதையின் உள்நோக்கம் புரியாமலே பகிர்ந்து வந்தவர் பற்பலர். அது சமூகநீதி அடிப்படையில்  இந்தியாவில்  இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கதை  என்பதை, அதன் subliminal message ஐ  உணர்ந்தவர் வெகு சிலரே.  

ஒருவரை தீர ஆராய்க என்று சொல்வதில் எந்தக் குடமுமில்லை.

..... தேமொழி

 

தேமொழி

unread,
Nov 10, 2016, 1:59:24 AM11/10/16
to மின்தமிழ்
குடமுமில்லை = குற்றமும் இல்லை 

ஒருவரை தீர ஆராய்க என்று சொல்வதில் எந்தக் குடமுமில்லை.= ஒருவரை தீர ஆராய்க என்று சொல்வதில் எந்தக் குற்றமும் இல்லை 

Seshadri Sridharan

unread,
Nov 10, 2016, 3:10:06 AM11/10/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201


இப்படி கற்பனையான அறிக்கை விடுவதற்கு சும்மா இருக்கலாம் மறைமலையார். தமிழரை தவறான மதக்கருத்து அடிப்படையில் முட்டாள் ஆக்கியவருள் இவரும் ஒருவர். 

பெரியாருக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இல்லை.

கண்ணன் நரகனை கொன்றதன் நினைவு நாள் தான் தீபாவளி  என்பது பொய் என்றால் தம் உயிர்க்கொலை வேள்விக்கு  உடன்படாத நரகனை கண்ணனை கொண்டு கொன்றுவித்தனர் என்பது மட்டும் எப்படி உண்மையாக இருக்கும். நல்ல கற்பனை.  மறைமலையார் பெரும் பொய்யர். 

ஆரோதன் 


Immediately after Narakasura attacked Dwaraka, Satyabhámá lost no time and launched a fierce counterattack against the invading forces. Narakasura's army was defeated and he died on the battlefield. The day Narakasura was killed was the day before the new-moon day of the month of Karttik [mid-October to mid-November]. The whole city of Dwaraka was transported with joy. They jubilantly celebrated by lighting fourteen candles and, on the following evening, worshipped Satyabhámá with festivities and diipávalii [elaborate lights]. Even to this day, people in some parts of India worship Diipánvitá Mahálakśmii [the goddess of good fortune] with great revelry, shooting off firecrackers. On this same day, Bengalees conduct the worship called Shyámá Pújá

by P R Sarkar on 9 October 1988, Calcutta, Published in: The Awakening of Women, Chapter: Satyabhama and Rukminii

N. Ganesan

unread,
Nov 10, 2016, 8:44:38 AM11/10/16
to மின்தமிழ், vallamai, dorai sundaram


On Wednesday, November 9, 2016 at 10:39:50 PM UTC-8, Dev Raj wrote:
On Wednesday, 9 November 2016 22:24:40 UTC+5:30, N. Kannan wrote:

நான் தமிழகத்தை மட்டும் நம்பியிருந்தால் இது உண்மையாகப் பட்டிருக்கும். ஆனால் மலேசியா, சிங்கை, இலங்கையிலும் கொண்டாடப் படுகிறதே! இங்கெல்லாம் பிராமண ஆதிக்கம் என்பதே இல்லையே! பிராமணன் தர்ப்பணம் செய்கிறான், இவர்கள் படையல் வைக்கின்றனர். அவ்வளவுதான் வித்தியாசம்.



தர்ப்பணம், படையல், பிண்ட ப்ரதாநாம் - எல்லாம் என்றென்றும் உள்ளவை !
தமிழகத்தையே நம்பியிருப்போரும் புரிந்துகொண்டு கடைப்பிடித்து வரும் சடங்குகளே.

பலி, பிண்டம் - இரண்டும் முக்கியமான சம்ஸ்கிருதச் சொற்கள். இரண்டும் திராவிடமொழிகள் தந்தவை.

பலி < பொலி. பிண்டம், பிழிதல்/பிடித்தல் என்னும் வினைச்சொல் தந்த பெயர்ச்சொல்.
பலி, பிண்டம் மிகப் பழைய தமிழ்ச்சொற்கள்.  வள்ளுவர் தென்புலத்தார் என்பது
வடக்குநோக்கி (சல்லேகானம்) இருத்தல் என்னும் பழையமரபு. யமதிசை தெற்கு என்பதன் குறிப்பு.
பிண்டம் வைத்தலை அதில் காணோம்.

தீபாவளி நரகாசுரன் கதைகள் அண்மைக்காலத்தையவை. பாஞ்சாலி சபதம் போல,
இந்திய சுதந்திர இயக்கத்தின்போது தீபாவளி நரகாசுரன் கதை தெலுங்கில் உருவகமாகவும் எழுதப்பட்டது.
பொதுக் கல்வி, அச்சுப் பத்திரிகைகளின் வளர்ச்சி - 20-ஆம் நூற்றாண்டில் இவற்றோடு
ஆந்திர விழா தீபாவளி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது.

நா. கணேசன்

 

Dev Raj

unread,
Nov 10, 2016, 11:44:40 AM11/10/16
to மின்தமிழ்
On Thursday, 10 November 2016 19:14:38 UTC+5:30, N. Ganesan wrote:
.......................................................... வள்ளுவர் தென்புலத்தார் என்பது
வடக்குநோக்கி (சல்லேகானம்) இருத்தல் என்னும் பழையமரபு. யமதிசை தெற்கு என்பதன் குறிப்பு.
பிண்டம் வைத்தலை அதில் காணோம்.

தென்புலத்தார்க்கான சடங்கை விரிவாக வள்ளுவர் எழுத வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா ?
விருந்தோம்பலைச் சொல்லும்போது எந்த வகையான உணவுவகைகளை விருந்தினர்க்கு அளிக்க வேண்டும் 
எனும் விவரமும் வள்ளுவர் சொல்லியிருக்க வேண்டுமோ ! 


தீபாவளி நரகாசுரன் கதைகள் அண்மைக்காலத்தையவை. பாஞ்சாலி சபதம் போல,
இந்திய சுதந்திர இயக்கத்தின்போது தீபாவளி நரகாசுரன் கதை தெலுங்கில் உருவகமாகவும் எழுதப்பட்டது.
பொதுக் கல்வி, அச்சுப் பத்திரிகைகளின் வளர்ச்சி - 20-ஆம் நூற்றாண்டில் இவற்றோடு
ஆந்திர விழா தீபாவளி தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது.


இதைப்பல முறை எழுதி விட்டீர் . ஆந்திர விழா வடநாட்டில் கொண்டாடப்படக் காரணமும்
அச்சுப்பத்திரிகைகளா ? 


தேவ்


Dev Raj

unread,
Nov 10, 2016, 12:19:52 PM11/10/16
to மின்தமிழ்
On Thursday, 10 November 2016 13:40:06 UTC+5:30, ஆரோதன் wrote:

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம்   பக்கம் : 200-201


இப்படி கற்பனையான அறிக்கை விடுவதற்கு சும்மா இருக்கலாம் மறைமலையார். தமிழரை தவறான மதக்கருத்து அடிப்படையில் முட்டாள் ஆக்கியவருள் இவரும் ஒருவர். 

பெரியாருக்கும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இல்லை.

கண்ணன் நரகனை கொன்றதன் நினைவு நாள் தான் தீபாவளி  என்பது பொய் என்றால் தம் உயிர்க்கொலை வேள்விக்கு  உடன்படாத நரகனை கண்ணனை கொண்டு கொன்றுவித்தனர் என்பது மட்டும் எப்படி உண்மையாக இருக்கும். நல்ல கற்பனை.  மறைமலையார் பெரும் பொய்யர். 

ஆரோதன் 



ஆகா, கெணறு வெட்ட பூதம் கெளம்பீருச்சே !

தேவ்

Prakash Sugumaran

unread,
Nov 10, 2016, 12:47:34 PM11/10/16
to mintamil
ஏற்கனவே வெளியான தகவல்களாக இருந்தாலும், இது பொதுவெளியில் சிறப்பான முயற்சியே.

இரண்டு காரணங்கள் சுட்டப்படவில்லை;
உமைக்கு இடப்பாகம் வழங்கி அர்த்தநாரிஸ்வர கோலம் கண்ட நாளில் தீப ஒளியேற்றி மக்கள் மகிழ்ந்து தொடர்ந்தது.
மகாவீரர் மெய்ஞானம் பெற்று, காடு விட்டு நாட்டை அடைந்து உணவு கேட்ட நாள்.

தேமொழி

unread,
Nov 10, 2016, 5:05:54 PM11/10/16
to மின்தமிழ்
Diffusion of innovation  என்றொரு theory இருக்கிறது.  

Diffusion of innovations is a theory that seeks to explain how, why, and at what rate new ideas and technology spread.

Diffusion of innovations is a theory that seeks to explain how, why, and at what rate new ideas and technology spread. Everett Rogers, a professor of communication studies, popularized the theory in his book Diffusion of Innovations; the book was first published in 1962.
Rogers proposes that four main elements influence the spread of a new idea: the innovation itself, communication channels, time, and a social system. This process relies heavily on human capital. The innovation must be widely adopted in order to self-sustain. Within the rate of adoption, there is a point at which an innovation reaches critical mass.

- ஊடகத்தின் தன்மை (communication channels  and a social system)
 (ஊடகம் மக்களை அடைந்துவிட்டிருக்கும் அளவின்  தகுதி - 
படித்தவர்கள் மட்டும் பத்திரிக்கை வாங்கிப் படித்த அன்றைய  காலத்தையும்,
இன்று பள்ளி மாணவர்கள்  கையில் கூட  கைபேசி இருக்கும் நிலைமைகளை இங்கு ஒப்பிடலாம்)  

- அது செய்திகளைக் கடத்தும்  விரைவு (time)
(தேவைப்படும் காலம் - 
வாரம் ஒன்று நாளுக்கு ஒன்று   எனப் பத்திரிக்கை  வெளிவருவதையும் 
வாட்சப் மூலமாக ஒளியின் வேகத்தை விஞ்சும் வகையில் செய்தி பலநாடுகளுக்குச் சென்றுவிடுவதையும் இங்கு ஒப்பிடலாம் ) 


..... தேமொழி  

N. Ganesan

unread,
Nov 10, 2016, 9:20:47 PM11/10/16
to மின்தமிழ், vallamai

ஆந்திராவில் நரகாசுரவதம் பற்றிய தீபாவளிப் புராணம் சில நூற்றாண்டுகளாகப் பரவி உள்ளது.

Now, a 72-ft Narakasura idol to be installed
““It is for the first time in the city that such a huge Narakasura idol is being installed. Narakasura vadha symbolises triumph of good over evil,” he said.”
காசியில் ராம்லீலா போல https://en.wikipedia.org/wiki/Ramlila , நரகாசுரனை எரிக்க 72 அடி பொம்மை.

நரகாசுர வதம் - தீபாவளி:



1933 - Prithvi Putra: Directed by Potina Srinivasa, the film starred K. Raghuramaiah, Parepalli Satyanarayana, and Surabhi Kamalabai. The film was based on the story of Narakasura - the demon who asks of Lord Krishna that his death be marked by celebrations and observed every year, and that he be permitted to attend. This is believed to be the first Telugu film to be financed locally.

“His Narakasura Vijayam, a translation of Varanasi Dharma Suri's Sanskrit 'Vyayoga' was first published in 1872. It is believed to be the first Telugu drama to be printed. Since this was first ever translation to telugu he had to work out his own path for it. ”
N. G. Ranga using Narakasura vadham to mobilize Peasantry

தியாகராஜர் கிருதி:
O Thief of (fresh) butter! O Blessed Son of nanda! O Brave One who is Friend of arjuna! O Hero in the form of nara siMha! O Splendorous like fresh thunder-cloud! O Brother of pArvatI! O Slayer of demon naraka! O Unborn! O Lord saluted by this tyAgarAja!

A beautiful poem on Venkateswara where Annamayya describes whom all he killed.
"Charam 02:
When your consort Satyabhama killed "Narakasura" in
battle, you patted her back for her prowess and for her
success in the battle. She is your "Sangraama Lakshmi".
Taking the form of "Narasimha" you killed demon
"Hiranyakasipu" and granted boons to the 'Devas', at the
behest of your consort "Varalakshmi"."

Several Lakshmi-s are mentioned in this 15th century song
where Narakasura killed by Sangramalakshmi.

N. Ganesan

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 11, 2016, 3:48:19 AM11/11/16
to mintamil

கண்ணன் நரகனை கொன்றதன் நினைவு நாள் தான் தீபாவளி.

இருக்கலாம். காரணம், நரகனுக்கும் தீபாவளிக்கும் சொல் அளவில் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.

தமிழில் தீயுழி என்றால் நரகம் என்ற பொருள் அகராதியில் உண்டு.

தீயுழியே தீபாவளி என்று திரிந்திருக்கவேண்டும்.

தீயுழி --> தீவுளி --> தீவளி ---> தீபாவளி

இன்றும் பல ஊர்களில் குறிப்பாக கிராமங்களில் தீபாவளி என்று கூறாமல் தீவளி என்றே அழைக்கின்றனர்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளா !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

Dev Raj

unread,
Nov 11, 2016, 11:16:57 AM11/11/16
to மின்தமிழ்
On Friday, 11 November 2016 07:50:47 UTC+5:30, N. Ganesan wrote:

நரகாசுர வதம் - தீபாவளி:

தியாகராஜர் கிருதி:
O Thief of (fresh) butter! O Blessed Son of nanda! O Brave One who is Friend of arjuna! O Hero in the form of nara siMha! O Splendorous like fresh thunder-cloud! O Brother of pArvatI! O Slayer of demon naraka! O Unborn! O Lord saluted by this tyAgarAja!


இந்த யூ ட்யூப், சத்குரு தியாகையாவின் கிருதி இவற்றையெல்லாம் 
பார்த்த பின்தான் இந்த பாகவத சுலோகம் எழுதப்பட்டதோ !

ஸகுண்டலம் சாருகிரீடபூஷணம் 
பபௌ ப்ருதிவ்யாம் பதிதம் ஸமுஜ்ஜ்வலத் |  
ஹாஹேதி ஸாத்வித்ய்ருஷய​: ஸுரேஶ்வரா 
மால்யைர்முகுந்தம் விகிரந்த ஈடிரே ||
 
என்னே கணேசர் ஐயாவின் ஆராய்ச்சி !!!!


தேவ்

Dev Raj

unread,
Nov 11, 2016, 11:32:19 AM11/11/16
to மின்தமிழ்
On Thursday, 10 November 2016 19:14:38 UTC+5:30, N. Ganesan wrote:
.................................................வள்ளுவர் தென்புலத்தார் என்பது வடக்குநோக்கி (சல்லேகானம்) இருத்தல் என்னும் பழையமரபு. யமதிசை தெற்கு என்பதன் குறிப்பு.
பிண்டம் வைத்தலை அதில் காணோம்.


(சல்லேகானம்) - அது என்ன சல்லேகானம் ?
பாட்டில் ஒரு வகையோ !
வடக்கிருத்தலை மனத்தில்கொண்டு நீவிர் எழுதியிருந்தால்
அதற்கும் தென்புலத்தாருக்கும் என்ன தொடர்பு ?


தேவ்

Dev Raj

unread,
Nov 11, 2016, 1:04:25 PM11/11/16
to மின்தமிழ்
On Wednesday, 9 November 2016 17:02:33 UTC+5:30, N. Ganesan wrote:
.........................................அதில் கிருஷ்ணன் நரகாசுர வதம் முக்கியம். விஜயநகர காலத்தில் தெலுங்கு மக்கள்
அறிமுகப்படுத்தியது தீபாவளி. 


இந்தியாவில் நெடுங்காலம் ஆண்ட அரச பரம்பரைகளுள் ஒன்று பிற்காலச் சோழர் பரம்பரை.
பரந்த நிலப்பரப்போடு வலிமையான கப்பற் படையுடன் ஆண்டனர் சோழர்கள்.
அவர்கள் ஆண்ட பிரதேசங்களில் எல்லாம் [பொங்கல் போன்ற] தமிழர் பண்டிகைகள் 
பரவியதற்கு ஆதாரங்கள் உண்டா ?

விஜய நகர மன்னர் காலத்தில் வடபுலத்தில் ஆண்ட மன்னர்கள் யாவர் ?
அவர்களையும் மீறி தீபாவளி அங்கெல்லாம் பரவியதா ?


தேவ்

  
Reply all
Reply to author
Forward
0 new messages