அசுரர் குடி கெடுத்த ஐயனின் கதை

239 views
Skip to first unread message

செல்வன்

unread,
Oct 27, 2014, 11:26:14 AM10/27/14
to K Selvan
திருப்போரூர், கந்தசாமி, முருகன், திருக்கோயில், Tiruporur, Kandasamy, murugan, temple

முருகனைப் பற்றி நமக்கு கூறும் முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். கிமு 300 வாக்கில் தொல்காப்பியம் எழுதப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதற்கும் முந்தைய தமிழ் நூல்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவை நம்மிடம் இல்லை. தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது.
 
தொல்காப்பியம் முருகன் எனும் கடவுளின் வரலாற்றைப் பற்றி அதிகம் உரைக்கவில்லை எனினும் முருகனைச் சேயோன் (சேய் = மகன்) என மட்டுமே அழைப்பதில் இருந்து அவன் மிக வலிமையான ஒரு தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. 
 
அந்தத் தெய்வம் யார் என்பதை உரைக்கும் முதல் நூல், வால்மீகி இராமாயணம். வால்மீகி இராமாயணத்தின் காலம், கிமு 500 முதல் கிபி 200 வரை எனக் கருதப்படுகிறது. மகாபாரதமும் கிமு 400 முதல் கிபி 200 வரை பல்வேறு காலக்கட்டங்களில் உருவான நூலாகக் கருதப்படுகிறது.
 
வால்மீகி இராமாயணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்படுகிறது. சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம். 
 
முருகனுக்குச் சேயோன் என்பதற்கு ஒப்பான குமரா (மகன்) எனும் பெயரையும் வால்மீகி இராமாயணத்தில் முதல் முதலாகக் காண்கிறோம். வால்மீகியே குமரனைக் கார்த்திகேயன், ஸ்கந்தன் எனவும் அழைக்கிறார். சரவணன் எனும் பெயரும் இங்கேயே பிறந்தது என யூகிக்கலாம்.
 
தொல்காப்பியத்தில் சேயோன் என அழைப்பதும், வால்மீகி இராமாயணத்தில் குமரா என அழைப்பதும் ஒத்துப் போவதால் இவ்விரண்டு நூல்களும் தொல்காப்பிய காலமான கிமு 300க்கு அருகே எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கலாம்.
 
(மயிலேறும் முருகன், கம்போடியா கிபி 7ஆம் நூற்றாண்டு)
கார்த்திகேயனின் வரலாற்றை நமக்கு விரிவாக எடுத்துக் கூறும் அடுத்த நூல், மகாபாரதம். கிருத்திகையில் ஆறு கார்த்திகைப் பெண்கள் அவனை வளர்த்த கதையும், அவன் தேவசேனாதிபதியாகி இந்திரன் மகள் தேவசேனாவை மணந்த கதையும் மகாபாரதத்தில் வருகின்றன. கீதையில் கண்ணன் "சேனாதிபதியரில் நான் ஸ்கந்தன்" எனக் கந்தனின் பெருமையை எடுத்துரைக்கிறான். மகாபாரதம் சற்றேறக் குறைய கிமு 400 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 
 
ஸ்கந்தன் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குச் சிந்தியவன் என பொருள். சிவனின் சிந்திய ஸ்கலிதத்தைக் கங்கை தாங்கியதால் அவனுக்கு ஸ்கந்தன் எனப் பெயர்.
 
முருகன் வேதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள். ஸ்கந்தனுக்கான மந்திரங்களைச் சாம வேதம் உரைக்கிறது. சாம வேதத்தில் ஸ்கந்த- விசாகன் எனும் இரட்டைக் கடவுளருக்கான மந்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
 
முருகனின் வாகனமாக மயில் ஆனது, கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் எனத் தெரிகிறது. கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் எழுதிய பாணினி, மவுரியர்கள் மயிலில் ஸ்கந்தனை ஏற்றிச் சென்று, பொன் சம்பாதித்ததாகக் கூறுகிறார். இதற்கு மயில் மேல் முருகனை அமரவைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, நன்கொடை வசூலித்ததாகப் பொருள் கொள்ளலாம். இன்றும் இந்திய கோயில்களில் இம்மாதிரி ஊர்வலங்கள் செல்வதைக் காண்கிறோம்.
 
மயிலில் முருகன் ஏன் ஏறினான்? இதற்குக் கூறப்படும் ஒரு காரணம் என்னவெனில், மவுரியர் என்றாலே மயில் எனத் தான் பொருள். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்கு பின் வந்த குஷான மன்னர்கள், குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது. 
 
கிபி 150ஆம் ஆண்டுவாக்கில் குஷான மன்னன் ஹுவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில் "ஸ்கந்த கொமானோ பிசாகோ" (விசாகோ) என ஸ்கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக் கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் ஸ்கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக் கொள்ளலாம்.

 
வடக்கே குப்தர் காலத்தை முருக வழிபாட்டின் உச்சமாகக் கொள்ளலாம். குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்ற குப்த சக்ரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள். குப்தர் அரசவையில் இருந்த காளிதாசன், முருகனின் பிறப்பைக் குமார சம்பவம் எனும் நூலாக எழுதி, முருகனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான்.
 
தெற்கே கிமு 300 வாக்கில் சேயோன் என முருகன் அழைக்கப்பட்டதைக் கண்டோம். இந்திரன், வருணன், கொற்றவை, முருகன், திருமால் ஆகியோரைத் தமிழ் மண்ணின் தெய்வங்களாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வடக்கை போலவே இங்கேயும் முருக வழிபாடு, முருகனின் வரலாற்றுக் கதைகள் கிமு 300 - 400 முதல் கிபி 400 வரை உருவானதை அறியலாம்.
 
முருகனின் பிறப்புக் கதை, இராமாயணத்தில் உள்ளது போலவே, கலித் தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. 
 
திருமுருகாற்றுப்படையில் முருகன் மலைவாழ் மக்கள், குறவரின் தெய்வமாகக் கூறப்படுகிறான். முருகனை வணங்கி வேலாட்டம், வெறியாட்டம் முதலான ஆட்டங்களை மலைவாழ் மக்கள் நடத்தினார்கள். முருகன் பெண்கள் மேல் இறங்கும் தெய்வமாகவும் இருந்தான். இப்படி சாமி வந்த பெண்களை அமைதிப்படுத்த ஆற்றுனர்கள் எனும் ஷமான்கள் இருந்தார்கள். முருகனுக்குக் குருதி கலந்த அரிசிச் சோறு உணவாகப் படைக்கப்பட்டது என்கிறது திருமுருகாற்றுப்படை
 
முருகனை மேட்டுக்குடியினரும் வணங்கியதாகக் கூறுகிறது திருமுருகாற்றுப்படை. பிராமணர்கள் ஆறு அக்ஷர மந்திரம் ஓதி மலர்களைத் தூவி, முருகனை வணங்கினார்கள். செந்தூர் முருகனின் ஆலயத்தில் பாண்டிய மன்னர்கள் வந்து வழிபட்டார்கள்.
 
முருகன், தாரகாசுரனை அழிக்கப் பிறந்தவன். "அசுரர் குடி கெடுத்த ஐயா வருக" என்கிறது சஷ்டி கவசம். அவனது அவதார நோக்கம் அசுரரை அழித்து, தேவரைக் காத்தல். தேவரின் படை நடத்தும் தேவசேனாதிபதி அவன். தேவர்களின் சேனாதிபதி என்பதால் அவன் தேவசேனாதிபதி என அழைக்கப்பட்டானா அல்லது இந்திரனின் மகளான தேவசேனையின் பதி என்பதால் தேவசேனா பதி என அழைக்கப்பட்டானா என்பது சுவையான சொல் விளையாட்டு.
 
திருமுருகாற்றுப்படையில் முருகன் தேவசேனையை மணந்து, பின் தினைப்புனம் காத்த வள்ளியை மணந்ததும் குறிப்பிடப்படுகிறது. முதல் மனைவி தேவசேனையே என்பதாலும் வள்ளியை அவன் இரண்டாம் மனைவியாக மணந்தது, வள்ளியின் அந்தஸ்தைக் குறைப்பதாக ஆகுமா? திருமுருகாற்றுப்படை குறிப்பின்படி வள்ளியை அவன் மணந்தது தேவசேனைக்குத் தாங்க முடியாத அழுகையை வரவழைத்து அவள் கண்ணீரால் திருப்பரங்குன்ற மலை முழுவதும் நிரம்பியதாம்.
 
மற்றபடி இருதார மணம் புரிவோர், இரண்டாம் தாரத்தின் மேலேயே அதிக அன்புடன் இருப்பது இயல்பு. முதல் தாரத்தை விட இரண்டாம் தாரத்தைப் பிடித்ததனால் அல்லவா, அவர் இரண்டாம் தரம் மணம் புரிகிறார்? தசரதன் தன் கடைசி மனைவியான கைகேயியின் மேலே அன்புடன் இருந்தான். ஆக வள்ளியின் மேல் முருகனின் ஆசை எல்லை கடந்து இருந்ததையே நாம் அறிகிறோம். 
 
பின்னாளில் கார்த்திகேய வழிபாடு வடக்கே பொலிவிழந்தாலும் தமிழ்க் கடவுளாக முருகன் இன்னும் திராவிடர் மனதில் நிறைந்துள்ளான் என்பது மகிழ்ச்சியான விஷயமே.

--

Suba.T.

unread,
Oct 27, 2014, 4:01:43 PM10/27/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-27 16:25 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:

அசுரர் குடி கெடுத்த ஐயனின் கதை


​விரிவான அலசல். கட்டுரை மிக நன்று.​
வால்மீகி இராமாயணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்படுகிறது. சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம். 
​ஒரு கேள்வி எழாமல் இல்லை. இந்த மேலுள்ள பகுதியை​ உங்கள் குழந்தைகளிடம் அல்லது இக்கால தலைமுறை குழந்தைகளிடம் சொல்ல முடியுமா? சொன்னால் அவர்களது  பதில் எதுவாக இருக்கும்.

​சுபா​

 

தேமொழி

unread,
Oct 27, 2014, 4:51:26 PM10/27/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
:-)))

இவை 'மறை பொருளை' அறிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்டும் செய்திகள் வகையில் அடங்கலாம் சுபா.

சிவனுக்கு முதல் மனைவி பார்வதியின்  தொடர்பால் குழந்தை இல்லை.  மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் உருவாகிய குழந்தை முருகன். 

இதில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி, பார்வதிக்கு பிள்ளையாரும் பிறந்த குழந்தை கிடையாது, உருவாக்கப்பட்ட (தத்தெடுக்கப்பட்ட ?) குழந்தைதான். 

சிவனின் இருமனைவி நிலைக்கு, முதல் மனைவி வழியில் குழந்தை பிறக்க வழியில்லாமல் போனது காரணம் (என சொல்ல விரும்புகிறார்களோ?) 

இதுவே சமுதாயத்தில் பிறகு மறைமுகச் செய்தியாக இருமனைவி வாழ்க்கைக்கு அடிப்படையாக காட்டப்பட்டிருக்கலாம்.  

இவ்வாறு விவரிக்கப்படும் செய்திகளில் இயற்கையில் என்ன நிகழ வாய்பிருக்கிறது, நடைமுறையில் எது நிகழலாம் என வரையறுத்தால் இப்படிதான் என்னால் பொருள் கொள்ள முடிகிறது. 

மற்றவை யாவும் இந்த நிகழ்வுக்கு  தெய்வமுலாம் பூசுவதற்காக புனைந்துரைக்கப் பட்டவை. 

..... தேமொழி

Suba.T.

unread,
Oct 27, 2014, 6:24:59 PM10/27/14
to தேமொழி, மின்தமிழ், Subashini Tremmel
2014-10-27 21:51 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
:-)))

இவை 'மறை பொருளை' அறிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்டும் செய்திகள் வகையில் அடங்கலாம் சுபா.

​இப்படி பல முறை கேட்டிருக்கின்றேன் தேமொழி. அதோடு இவை புராணங்கள்.. மறை பொருள், ஞானப் பார்வையால் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை என விளக்கப்படுவதையும் கேட்கிறேன். வரிக்கு வரி அர்த்தம் பண்ணிக் கொள்ளக்கூடாது... என வரும் பதில்களையும் கேட்டிருக்கின்றேன்.

​என் கேள்வி மிக எளிதானது.. இந்த குறிப்பிட்ட பகுதியை எவ்வகையில் இக்கால தலைமுறையினருக்குச் சொல்வோம்.. அதற்கு அவரகளது ரியாக்‌ஷன் எப்படியானதாக இருக்கும்..?

சுபா





--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

தேமொழி

unread,
Oct 27, 2014, 6:54:10 PM10/27/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
///
On Monday, October 27, 2014 3:24:59 PM UTC-7, Suba.T. wrote:
​என் கேள்வி மிக எளிதானது.. இந்த குறிப்பிட்ட பகுதியை எவ்வகையில் இக்கால தலைமுறையினருக்குச் சொல்வோம்.. அதற்கு அவரகளது ரியாக்‌ஷன் எப்படியானதாக இருக்கும்..?
///


பெரும்பாலும் இதுதான்  என் மகளின் பதிலாக இருக்கும் சுபா. 

செல்வன்

unread,
Oct 27, 2014, 7:54:00 PM10/27/14
to mintamil

2014-10-27 15:01 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​ஒரு கேள்வி எழாமல் இல்லை. இந்த மேலுள்ள பகுதியை​ உங்கள் குழந்தைகளிடம் அல்லது இக்கால தலைமுறை குழந்தைகளிடம் சொல்ல முடியுமா? சொன்னால் அவர்களது  பதில் எதுவாக இருக்கும்.

சுபா,

இராமாயணமும், மகாபாரதமும் உலகின் மிகபெரும் இலக்கிய செல்வங்கள். இலக்கியங்கள், கலை படைப்புகள் என எடுத்துகொண்டால் அவை ஹாண்டில் செய்யும் விஷயங்கள் குழந்தைகளுக்கானவையாக இருக்காது. மைகெலேஞ்சலோவின் சிற்பங்களில் நிர்வாணம் இருக்கும், ஹோமரின் காவியமான இலியாட் ஒடிஸியில் கலவிகாட்சிகளின் வர்ணனை இருக்கும். ரவிவர்மாவின் சித்திரங்களில் அரை நிர்வாண காட்சிகள் வரும்...உலகின் முதல் இலக்கிய நூலான கில்கமேஷில் கூட நிறைய பாலியல் சார்ந்த விஷயங்கள் உள்ளன.

இலக்கியத்தில் ஆபாசம், அறுவறுப்பு என்பதே கிடையாது. அதை ரசிக்கும், உணரும் மெச்சூரிட்டி வந்த வளர்ந்த குழந்தைகளுக்கு அவற்றை படிக்க கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.


--

செல்வன்

unread,
Oct 27, 2014, 8:11:07 PM10/27/14
to mintamil

2014-10-27 15:51 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இவை 'மறை பொருளை' அறிந்து கொள்ள வேண்டும் என விளக்கப்டும் செய்திகள் வகையில் அடங்கலாம் சுபா.

சிவனுக்கு முதல் மனைவி பார்வதியின்  தொடர்பால் குழந்தை இல்லை.  மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பில் உருவாகிய குழந்தை முருகன். 

இதில் கவனிக்க வேண்டிய ஒரு செய்தி, பார்வதிக்கு பிள்ளையாரும் பிறந்த குழந்தை கிடையாது, உருவாக்கப்பட்ட (தத்தெடுக்கப்பட்ட ?) குழந்தைதான். 

சிவனின் இருமனைவி நிலைக்கு, முதல் மனைவி வழியில் குழந்தை பிறக்க வழியில்லாமல் போனது காரணம் (என சொல்ல விரும்புகிறார்களோ?) 

இதுவே சமுதாயத்தில் பிறகு மறைமுகச் செய்தியாக இருமனைவி வாழ்க்கைக்கு அடிப்படையாக காட்டப்பட்டிருக்கலாம்.  


சிவன், முருகனுக்கு எல்லாம் இரு மனைவியர் கிடையாது.

சிவனின் மனைவி சதி, அவள் இறப்புக்கு பின் பார்வதி மட்டுமே. கங்கை சிவனின் மனைவி அல்ல. கங்கை முருகனின் சராகேட் மதர்..வாடகைத்தாய்.

சிவனின் தலையில் விழுந்து ஆணவம் அடங்கி பூமியில் விழுந்ததை வைத்தும், முருகனின் சராகேட் மதராக இருந்ததை வைத்தும் சிவனின் வைப்பாட்டி கங்கை என கதை கட்டி சினிமாவும் எடுத்தார்கள் :-) ஆனால் சிவனின் மனைவி கங்கை என வேதமோ, இராமாயணம், மகாபாரதமோ கூறவில்லை.

இன்று கல்யாணமே செய்துகொள்லாமல் லெஸ்பியன் பெண்கள் செயற்கை குழாய் குழந்தை பெற்றுகொள்வது முன்னேற்றம், புரட்சி என கருதபடுகிறது. அதை விட பெரிய பாலியல் புரட்சி எல்லாமே மகாபாரதம், இராமாயணம், இலியாட், ஒடிசியில் நடைபெற்றுள்ளன. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நம் 21ம் நூற்ராண்டு சமூகம் பாலியலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் ஒரு அடையாள சிக்கலில் சிக்கி தவிக்கிறது என நினைக்கிறேன். அதனால் தான் "ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவன் அய்யப்பன்" என திகவினர் சுவர்களில் எழுதினார்கள். இன்று மேற்கத்திய நாடுகளில் ஹோமோசெக்சுவல் திரூமணங்கள் ஒரு சமூக சீர்திருத்தமாக கருதபடுகின்றன...பிங்கோ.....கடைந்தெடுத்த பிற்போக்குவாத இந்துமதம் திடீரென முற்போக்கானதாகவும், பகுத்தறிவு இயக்கத்தினர் பிற்போக்குவாதிகளாகவும் காட்சியளிக்கிறார்கள்..இதைதான் காலத்தின் கோலம் என்பதா? :-)

--

தேமொழி

unread,
Oct 27, 2014, 10:33:04 PM10/27/14
to mint...@googlegroups.com
///
இலக்கியத்தில் ஆபாசம், அறுவறுப்பு என்பதே கிடையாது. அதை ரசிக்கும், உணரும் மெச்சூரிட்டி வந்த வளர்ந்த குழந்தைகளுக்கு அவற்றை படிக்க கொடுப்பதில் எந்த தவறும் இல்லை.
///

///
அதை விட பெரிய பாலியல் புரட்சி எல்லாமே மகாபாரதம், இராமாயணம், இலியாட், ஒடிசியில் நடைபெற்றுள்ளன. நான் என்ன நினைக்கிறேன் என்றால் நம் 21ம் நூற்ராண்டு சமூகம் பாலியலை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல் ஒரு அடையாள சிக்கலில் சிக்கி தவிக்கிறது என நினைக்கிறேன். 
///


என்ன செல்வன் நீங்க?  :(((

இப்பொழுது யார் ஆபாசம், அருவருப்பு, பாலியல் புரட்சி பற்றிய கேள்விகள்  எழுப்பினார்கள்?

பேராசிரியர் இந்தப் பதிவின் விவாதத்தில்  எழுப்பியது போன்ற கோணத்தில்  ஒரு கேள்வி உங்கள் முன் வைக்கப்பட்டது.  


மேற்கண்ட இழையில் முதல் இரு பதிவுகள் மட்டும் படித்துப் பார்த்து (பிறகு வந்த பதிவுகள் யாவும் திசை மாறியவை) மீண்டும் கீழ் காணும் கேள்விக்கு பதில் சொல்லப் பாருங்கள்....
________________________________________________________________________________

வால்மீகி இராமாயணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்படுகிறது. சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம். 
​ஒரு கேள்வி எழாமல் இல்லை. இந்த மேலுள்ள பகுதியை​ உங்கள் குழந்தைகளிடம் அல்லது இக்கால தலைமுறை குழந்தைகளிடம் சொல்ல முடியுமா? சொன்னால் அவர்களது  பதில் எதுவாக இருக்கும்.

​சுபா​
____________________________________________________________________________________________


மேலும் மேலும் அறிவியல் வளர...மேலும் மேலும் விளக்கங்கள் கிடைக்க கிடைக்க ....

இந்து மதத்தில் காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் இக்கால நடப்புலகிற்கு ஏற்ப மாறியிருக்க வேண்டும். ...

ஆனால் அவ்வாறு  நிகழவில்லை....சூரிய சந்திரகிரகணத்தில்  ஆரம்பித்து பற்பல மூட நம்பிக்கைகள், அறிவியலுக்கு ஒவ்வாத கற்பனைகளின் பின்னர் மக்கள் "மதம்" என்ற ஒரே காரணத்திற்காக பின் செல்லுகிறார்கள்.  அதற்கும் மேலாக தங்கள் முன்னோர் சொன்னதில் ஏதோ காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அதற்கு அறிவியல் விளக்கம் தேடுவதும் நடக்கிறது.  

சரியான பதில் கிடைக்காவிட்டால் ஒவ்வதவற்றைக்  கைவிடத் தயக்கம்...கேள்விகள் கேட்க, ஆராய ஏனோ தயக்கம். ஏனிப்படி?

அனைவரும் அரங்கனார் கோணத்தில் கேள்விகள் எழுப்பினால் இந்துமதத்திற்கு நன்மை.

ஜெயசர்மாவின் வல்லமைக் கட்டுரை ஒன்று இக்கால தலைமுறைக்கு எப்படி ஆன்மீகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அருமையாகக் குறிப்பிட்டது.....அடுத்து அதைப் பகிர்கிறேன்.  

முன்னோர்கள் சொன்ன கதைகளில் குற்றம் காணவில்லை.  அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி, அவர்கள் புரிந்து கொண்ட விதத்தில், அவர்கள் விளக்கம் கொடுக்க முற்பட்டார்கள் (முக்கியமாக நிறைய தன்னலத்தையும் அதில் திணித்து) என்பதைப் பெரும்பாலோர் ஏனோ புரிந்து கொள்ள ...ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். 

அதனால்தான் பெரியார் மதத்தையும், அதைக் கையில் எடுத்துக்கொண்ட தன்னலக் காரர்களையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்க முயன்றார்.

மதத்தை தீவிரமாக பற்றுவதைவிட கடவுளை/பரம்பொருள் என்ற சக்தியை மட்டும்  தீவிரமாக பற்றியிருந்தால்/பற்றினால் இந்தியா ஆன்மீகத்தில் உலகை வழிநடத்தும் நிலையில் இருந்திருக்கும்/இருக்கும். 

இறைசக்தியின் முன்னர் அனைவரும் சமம் என்று உணர்த்தியிருந்தால் மக்கள் பிற மதங்களுக்கு மாற  முயல்வதை எண்ணியும் பார்த்திருக்க மாட்டார்கள்  (ஆனால் அது போல அனைவரும் சமம் என்ற  கொள்கைகளை முன் வைத்தவர்களைதான் ஓட ஓட விரட்டியாகிவிட்டதே). 

சுபா கேட்ட கேள்வியின் பதில், பேராசிரியரின் "பழையன கழிதல் இழை"யில் அவர்கள் பேராசிரியரின் பதிவுக்கு சொன்ன கருத்தே.  

அடுத்த தலைமுறைக்கு இந்துமதத்தை எடுத்துச் செல்ல விரும்பினால்... இளையதலைமுறையும் ஒப்புக்கொள்ளும் வகையில்  சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும்.

இப்பொழுது எம்.ஜெயராமசர்மா என்ன சொல்கிறார் எனப் படிப்போம்...அவர் அரங்கனார் போலவே ஆன்மீகப் பின்புலம் உள்ளவரே....


..... தேமொழி

தேமொழி

unread,
Oct 27, 2014, 10:36:17 PM10/27/14
to mint...@googlegroups.com

நன்றி வல்லமை : http://www.vallamai.com/?p=50436

புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும், கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

–எம்.ஜெயராமசர்மா.

 

புலம்பெயர்ந்த நாடுகளில் சமயம் கற்பித்தலில் கையாளப்படும்,
கையாளப்படவேண்டிய அணுகு முறைகள்

 

[எம்.ஜெயராமசர்மா B.A (Hons) Dip. in Edu , Dip. in Soc , M.Phil Edu ,SLEAS]
(முன்னாள் கல்விப்பணிப்பாளர்)

yoga-youth-camp-33

“சமயம்” என்றால் என்ன?  “மதம்” என்றால் என்ன? என்பதை நாங்கள் நன்றாக அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றா அல்லது இரண்டுமே வேறா என்பதே எம்மில் பலருக்கும் தெரியாத பொழுது எமது பிள்ளைகளுக்கு எப்படி இதனைப் பற்றி விளக்கிச்சொல்லமுடியும். இக்காலத்தில் வளருகின்ற பிள்ளைகள் எம்மைப் போன்றவர்கள் அல்லர் என்பதை நம்மில் பலரும் தெரிந்துகொள்ளுவது  இல்லை. அவர்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் வித்தியாசமானதாக இருக்கும். நாங்கள் வளர்ந்த சூழல் வேறு. நாங்கள் படித்த சூழல் வேறு. எங்களைச் சுற்றியிருந்த சூழலும் வேறு.  அப்படியான சூழலில் இருந்து வந்த வளர்ந்தவர்களான நாங்கள் ….   எங்கள் பிள்ளைகளை எங்களைப்போல அவர்கள் நடக்கவில்லையே என்று மனக் குழப்பம் அடைதல் கூடாது.

சமயம் என்பது நல்ல வழியைக்காட்டுவது. மதம் என்று அதற்கு இன்னுமொருபெயர்.   மனிதனிடம் காணப்படுகின்ற ஆணவம் என்கின்ற மதத்தை இல்லாமல் செய்ய உதவுவதால் ஒரு காரணப்பெயராக இப்படி அழைத்தனர். நான் என்னும் தன்முனைப்பு வாழ்க்கையில் இருக்குமானால் எவ்வளவு வரமும் உரமும் இருந்தும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீர்போலவே ஆகிவிடும். ஆகவே தன்முனைப்பு அற்ற நல்ல பாதை அமையுமானால் அதுவே மனித வாழ்வில் கிடைக்கும் நல்ல சமயமாக அமையும். இப்படி நல்ல ஒரு வாய்ப்பே சமயமானது. எனவே வேறு பெயர்களும் வேறு காரணங்களும் அடிப்படையாக அமைந்த பொழுதிலும் “சமயமும்” மதம்  என்ற ஒன்றேதான் என்பதை நாமும் தெரிந்திருப்பதோடு நமது பிள்ளைகளுக்கும் விளக்கி நிற்கவேண்டும்.

வெளிநாட்டில் பல்வேறுவிதமான கலாசாரச் சூழல்களில் நாமே திக்கித்திணறுகின்றோம். நாங்களே இப்படி என்றால் எங்களின் பிள்ளைகள் என்னதான் செய்வார்கள்? இப்படியான சூழலில் வாழும் நாங்கள் சமயத்தை எப்படி அணுக வேண்டும் என்பது மிகவும் இலகுவான ஒரு காரியமல்ல.

ஊரிலே எங்களுக்குச் சமயம் கற்பது பாடசாலைகளிலே கட்டாயமானது. விரும்பியோ விரும்பாமலோ சமயம் என்பது பாடசாலைகள் மூலம் கொடுக்கப்படுகிறது. ஆசிரியரின் பிரம்படிக்குப் பயந்து திருவருட்பயனும், தேவாரங்களும் பாடமாக்கினோம். இளம்பருவத்தில் விருப்பமில்லாமல் படித்தாலும் — வயது வந்தபின்னர் அவை விளங்கிய பொழுதுதான் அவற்றின் அருமையும் பெருமையும் எங்களுக்கெல்லாம் தெரியவந்தது எனலாம். அதைவிட எங்களது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஏனைய உறவினர்கள் அத்தனை பேருமே எங்களின் சமய வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தார்கள் என்பதை மறுத்துவிட முடியாது. நாங்கள் சற்று வழிதடுமாற நினைத்தாலும் அவர்கள் அனைவ ருமே எம்மைத் தாங்கிப்பிடித்து மடைமாற்றம் செய்து நின்றார்கள். இவை எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ வந்த அத்தனை பேரும் மனங்கொள்வது அவசியமானதாகும்.

எங்கள் பிள்ளைகள் படிக்கும் சூழல் பழகும் சூழல் யாவும் எமக்குப் புதிதானவை. அவர்களது பாடசாலைச் சூழலும் மிகவும் வித்தியாச மானதாகும். அங்கே சந்திக்கும் பல தரப்பட்ட சமூகச் சூழலிலிருந்து வந்த பிள்ளைகளும் ஆசிரியர்களும் எங்கள் பிள்ளைகளில் பல தாங்கங்கள் ஏற்படக் காரணமாகிவிடுகிறார்கள்.

பெரும்பாலானவர்களுக்குச் சமயம் பற்றிய அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதைப்பற்றியே பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை. இந்த நிலைமையில் படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்குச் சமயத்தைப் பற்றிச் சொல்லுவதில்.. கட்டாயம் என்பது இருக்கவே கூடாது. அவர்களுக்குச் சமயத்தை மிகவும் இலகுவாக .. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொருத்தமாக மறுமொழி சொல்லியே .. விளங்கவைக்க முனைதல் வேண்டும். எங்களுக்குச் சமயம் போதித்த முறைகளை அடிமனத்தில் வைத்துக்கொண் டு .. செயற்பட முற்பட்டோமே யானால் யாவும் ஆரம்பத்திலேயே ஆட்டம் காண ஆரம்பி த்துவிடலாம்.

புராணக்கதைகளைப் பிள்ளைகளுக்குக் கூறலாமா? புராணக்கதைகளைச் சமயம் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாமா? என்றெல்லாம் கேள்விகள் தோன்றுகின்றன அல்லவா? மிகவும் கவனமாகக் கதைகளைப் பயன்படுத்த வேண்டும்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் பன்றிக்குட்டிகள் சில யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொழுது வந்துவிட்டன. எனது மனைவி அருவருப்போடு அவற்றைப் பார்த்து வெறுப்படை ந்து கல்லெடுத்து எறிந்து விரட்டி அடித்தார். உள்ளே இருந்த எனது ஏழுவயதுடைய மகள் ஓடிவந்து அம்மா .. அம்மா .. என்ன செய்துவிட்டீர்கள். நீங்கள் செய்தது பாவம் இல்லையா? எனக் கேட்டதும் எனது மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது. மகளை முறைத்துப் பார்த்து அசிங்கத்தை விரட்டாமல் அடுப்படியிலா வைப்பார்கள் என்று  பொரிந்து தள்ளி விட்டார். அம்மாவின் கத்தலுக்கு ச் சற்றும் அசையாத எனதுமகள் .. அம்மாவைப்பார்த்து .. அம்மா இந்தக்குட்டிகளுக்குச் சிவபெருமான் தாயக வந்து பால் கொடுத்தார் என்று நீதானே நேற்று எனக்குப் புராணக்கதை சொல்லித்தந்துவிட்டு இப்போது அசிங்கம் என்று விரட்டுகிறாயே! சிவன் தாயாகிவந்து பால் கொடுத்தபடியால் இவையும் சிவனின் பிள்ளைகள்தானே என்றதும் ..  அம்மா அதாவது எனது மனைவி வாயடைத்து மெளனியாகிவிட்டார் இதனை ஓரத்தில் நின்று கவனித்த நான் எனது பிள்ளையின் சமய அறிதலையும் உணர்தலையும் பார்த்து மெய்சிலிர்த்தேன்.

அதே மகளுடன் புலம்பெயர்ந்து இங்கு வந்தபின் அவளுக்குப் பிறந்த மகள் எனது பேரப்பிள்ளை கோவிலில் “சூரன் போரைப்பார்த்து”  தாயிடம் கேட்டாள்.. சாமி ஏன் அம்மா மற்றவர்களைக் கொலை செய்யவேணும்? சாமி என்றால் நல்லது என்றுதானே நீங்கள் சொல்லித்தந்தது. இதைக் கேட்டதும் எனது மகள் தனது மகளுக்குத் தலையில் ஒரு குட்டுக் குட்டினாள். அவள் அழுதபடியே கோவிலில் நின்றாள். அதைத் தொடர்ந்து அவள் கோவில் என்றாலே விருப்பம் இல்லாத நிலைக்கு வந்துவிட்டாள்.

இது ஒரு குடும்பப் பிரச்சனை போல இருந்தாலும் இங்குதான் .. புலம்பெயர் நாடுகளில் சமயத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்னும் பாடம் உருவாகிறது என நினைக்கின்றேன். பெரிய புராணத்திலே வருகின்ற கதைகள் பலவற்றை எந்தவிதக் கேள்விகளும் இல்லாமல் பயபக்தியோடு நாங்கள் படித்தோம். பிரசங்கங்கள் மூலமாகவும் கேட்டோம். ஆனால் அதைப்பற்றிய சந்தேகங்கள் எங்களுக்கு வந்தாலும் அப்பா இடமோ அம்மா இடமோ கேட்கவே மாட்டோம். காரணம் அது தெய்வக்குற்றம் ஆகிவிடும் என்று மனத்தில் இருந்த பயமாகும். ஆனாலும் எங்கள் மனத்திலும் கேள்விகள் இருந்தன என்பதை ஒத்துகொள்ளுதல் வேண்டும். எங்கள் சூழலால் அவை அப்படியே மனத்துள் புதைந்தே விட்டன என்றே எண்ணமுடிகிறது.

இன்றைய புலம்பெயர் சூழல் அப்படிப்பட்ட தல்ல. கண்ணப்பர்கதை, சிறுத்தொண்டர்கதை, திருநீலகண்டர் கதை, நால்வர் வரலாறுகளில் காணப்படும் சம்பவங்கள்.. இவைபற்றி யெல்லாம் சமயத்தினூடாகக் கற்பிக்கும் பொழுது மிகவும் அவதான மாகவே கையாள வேண்டியுள்ளது. இங்கு வளரும் பிள்ளைகள் பல வித விஞ்ஞானக் கருவிகளோடு உறவாடுகிறார்கள். விரல் நுனியிலே விஞ்ஞானம் நிற்கிறது. எதற்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கங்கள்தான் முன்னிற்கின்றன. இதனால் சமயத்தைக் கற்பிப்பது என்பது புலம்பெயர் நாடுகளில் மிகவும் இலகு என்று எடுத்து விடக்கூடாது.

கோவில்களில் இடம்பெறும் யாவுமே இங்கு வளரும் பிள்ளைகளுக்கு விளங்காதன. அவற்றைச் சமயத்தோடு இணைக்கும் பொழுது அவர்கள் தடுமாறாமல் இணைத்துக் காட்டும் வகையில் சமயக்கல்வியைப் போதிக்க வேண்டும். சந்தேகமோ , தடுமாற்றமோ ஏற்படாவண்ணம் சமயபாட போதனை அமைதல் கட்டாயமானது. சந்தேகம் எழுந்தால் அதற்குத் தக்கபடி பதிலைக் கொடுக்க வேண்டும். இதுவாக இருக்கலாம், அல்லது அதுவாக இருக்கலாம் என்னும் வகையில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூ டாது.

சமயம் என்பது அறிவு ஆராய்ச்சிக்கு உட்பட்டதன்று. அது உணர்வு ரீதியானது என்பதை வலியுறுத்துவது சமயபோதனையில் மிக அவசியமானதாகும். விஞ்ஞான கூடப்பரிசோதனை.. சமயம் அல்ல என்று சொல்ல வேண்டும். கற்கண்டு இனிக்கும். மிளகாய் உறைக்கும். ஐஸ்கிறீம் இனிக்கும். பிஸ்கற்றுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு  சுவை. இவற்றை எப்படி அறிவீர்கள் என்று அவர்களையே சமய பாடவேளையில் கேட்கும்பொழுது ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பதில் சொல்ல முன்வருவார்கள். அப்பொழுது அவர்களை எங்கள் விஷயத்துக்குள் இலகுவாகக் கொண்டுவந்து விட முடியுமல்லவா?

சுவைகள் பல. அவற்றின் உருவம் எமக்குத்தெரியாது. ஆனால் அவற்றைச் சுவைத் தால்த்தான் என்ன சுவை என்பதை அறியமுடிகிறது. இங்கே சுவை என்பது உணர்வினால்தான் எமக்கு வந்து சேர்கிறது. அந்த உணர்வுதான் சமயம். அந்த உணர்வால் வரும் சுவைதான் கடவுள் என்று சமய போதனையை நடத்திப் பார்த்தோமேயானால் பிள்ளைகளிடம் நல்ல வரவேற்புக் கிடைப்பதோடு மனத்திலும் பதிந்து விடும்.

புலம்பெயர் நாடுகளில் சமயம் போதிக்க வருகின்றவர்கள் தாம் முன்னர் படித்தவைகளையும், தமக்கு ஆசிரியர் எப்படிப்படிப்பித்தாரோ அப்படியே படிப்பிக்க நினைத்துச் செயற்படும் பொழுதுதான் எடுத்துகொண்ட நோக்கம் குறைபடுகிறது. எனவே சமயம் போதிப்பதில் பல புதிய அணுகு முறைகளைக் கையாண்டால்த்தான் எமது நினைப்பு நிறைவேறும் என்பதை மனங்கொள்வது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1) சமயத்தை ஆழமாகப் படிப்பித்தல் நல்லதல்ல.
2) தேவையற்ற கதைகளை சொல்லிப் படிப்பித்து குழப்பமான மனநிலை உருவாக்கல் ஏற்றதல்ல.
3) கூடியவரை இலகுவான மொழிப்பிரயோகமே கையாழுதல் நன்று.
4) மனத்தில் பதியும் வண்ணம்  திருமுறைகளை பாடிக்காட்டி விளக்குதல் வேண்டும் .
5) கோவிலுக்குக் கூட்டிப்போய் அங்கு நடக்கும் விஷயங்களை அவதானிக்க வைப்பதுடன் அவற்றுக்கான விளங்கங்களையும் எளிதாகக் கொடுக்கவேண்டும்.
6) பண்ணோடு பாடப்பழக்கலாம். சமய ஆசாரங்களை இலகுபடுத்திச் சொல்லலாம்.
7) கும்பிடும் பழக்கத்தின் விஞ்ஞான அணுகுமுறையை எடுத்துச் சொல்லலாம்.
8) ஒளியின் முக்கியம், ஒலியின் முக்கியம், இவற்றை சமயத்துடன் சேர்த்து விளக்கலாம்.
9) அதிர்வுகள் பற்றி பிள்ளைகள் அறிந்துள்ளதால் அதற்கும் சமயத்துக்குமான நெருக்கத்தை விளக்கலாம்.
10) கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவைமனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்,

சமயய வாழ்வு வாழத்தான் இவைகள் யாவும் தேவைப்படுகின்றன. எவ்வளவு படித்தாலும் அந்தப்படிப்பு இறையுணர்வையும் நல்வழியையும் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும். “இளையோரின் முழுமன வளர்ச்சிக்கு சமயக்கல்விதான் முக்கிய மானது ”  என்பதே சமயஇயலாளரது அசையாத நம்பிக்கையாகும்.

“கற்றதனால் ஆயபயன் இறையுணர்வு பெறுதலே” இதை மனத்திற்கொண்டு செயற்பட்டால் எண்ணியது நிறைவேறும்.


படம் உதவிக்கு நன்றி: http://vedicodyssey.com/spiritualadventures/tag/sv-youth-camp/

ஜெயராமசர்மா

ஜெயராமசர்மா has written 51 stories on this site.

பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர். தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார். பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.

Oru Arizonan

unread,
Oct 28, 2014, 12:24:07 AM10/28/14
to mint...@googlegroups.com
//தொல்காப்பியத்தில் சேயோன் என அழைப்பதும், வால்மீகி இராமாயணத்தில் குமரா என அழைப்பதும் ஒத்துப் போவதால் இவ்விரண்டு நூல்களும் தொல்காப்பிய காலமான கிமு 300க்கு அருகே எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கலாம்.//
//மகாபாரதம் சற்றேறக் குறைய கிமு 400 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. //
மகாபாரதத்தில், இராமனைப்பற்றிய குறிப்பு வருகிறது. எனவே, மகாபாரதம் இராமாயந்த்திற்குப் பிந்தையது.
மகாபாரதம் 3000 B C. என்று கீழ்கண்ட ஆய்வுகள் கூறுகின்றன.
விக்கிபீடியாவிலுள்ள சில கூற்றுகள் 1000 -800 B C.என்று உரைக்கின்றன.  
Ref 27 and 28.
எப்படி இருந்தாலும் தங்கள் கொடுத்த 400 BC  என்பது  சான்றுகளிலிருந்து கிடைத்தது என்பதை அறிய விரும்புகிறேன்.

எனவே, இராமாயணம் அதற்கும் முன் பது என்பதால் 300 BC என்பது. முரணாகத் தோன்றுகிறதே!  அதற்கும் சான்றுகள் கிடைத்தால் அறிய ஆவலாக உள்ளேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Oct 28, 2014, 3:21:11 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
​எனது கேள்விக்கு விடை இதில் இல்லை.

சரி வளர்ந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.. என்றால் பின்னனியில் ஒரு தவறு இருக்கின்றது என்ற சிந்தனை உள்ள வகையான தொணியாக எனக்குத் தோன்றுகின்றது..  சரி அப்படியே அறிமுகப்படுத்தும் வேளையில் இதனை அறிவுப்பூர்வமான ஒன்றாக எடுத்துக் கொள்வரா.. கொஞ்சம் யோசித்தாலே இது ஒவ்வா கருத்து என தூக்கிப் போடத்தான் மனம் விரும்பும். 

பேரண்டங்களையும் காக்கும் மகா சக்தி.. உயிருடன் கலந்த ஒரு இயக்கம் என்ற அச்சக்தியை கேவலப்படுத்தும் மிகச் சர்வ சாதாரண அல்லது கீழ்த்தரமான ஒரு பார்வையாகத்தான் எனக்கு இவ்வகை விஷயங்கலெல்லாம் படுகின்றன.

சுபா


PRASATH

unread,
Oct 28, 2014, 5:24:35 AM10/28/14
to மின்தமிழ்
தெய்வம் என்பது ஏதோ மிகப் பெரிய விஷயம்னு ஒரு ஹைப் கொடுத்து வைக்கும் போது, அத்தெய்வத்தின் மேல் நாம் கேவலம் என நினைக்கும் ஒரு செயலை திணித்தால் கீழ்த்தரமாகத் தான் தோன்றும்.

இந்து மதத்தின் சிறப்பம்சமாக இருப்பது அது,  இந்து மதக் கடவுளர்களை லௌபீக வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி மக்கள் மனதில் இருத்தியது தான்.

நம்மையும் மிஞ்சிய ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் கடவுள் அப்படின்னு சொல்லி சொல்லிப் பார்த்தார்கள்... யாரும் கேட்குறாப்புல தெரியலை. ஆனது ஆச்சுனு, அந்த கடவுளுக்கு மனிதர்கள் போல உருவம் கொடுத்து அக்காலத்தில் மனித வாழ்வின் நெறிமுறைகளாக தான் நினைத்தவற்றை மனிதர்கள் பின்பற்ற ஏதுவாக அவற்றை எல்லாம் கடவுளின் மேல் ஏற்றி வைத்தார்கள். அவ்ளோ தான்.

ஆதிகாலத்தில் மனிதனின் மிகப்பெரும் கடமைகளில் ஒன்று இனவிருத்தி. இதனை வலியுறுத்தும் விதமாக அமைந்ததே கடவுள்களில் இரு மனைவியர் விவகாரம். இதில் கடவுளை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. 

பார்வைகளை விசாலமாக்கினால் போதும். 

இது அனைவருக்கும் பொதுவான கருத்தே. யாரிடுமும் விவாதம் செய்வதற்காக அல்ல...

Suba.T.

unread,
Oct 28, 2014, 6:30:39 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
கடவுளில் இரு மனைவியர்..அதிக காலம் குழந்தை பிறக்காமல் இருத்தல் ..மேலும் சில  மனைவிகள்.. சக்தி பிழை செய்து விட்டதால் சிவன் சாபம் கொடுத்தார் என்பன போன்ற ​வகையான கதைகள் தத்துவக் கதைகளா?
இவற்றால் என்ன பயன்?
அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி.. இவற்றால் என்ன பயன் ?

உள்ள விஷயத்தை உள்ளவாறு கிரகித்துக் கொள்ள முடியாது அறிவீலிகளா நம் சமூகத்தினர். ஏன் நம் தமிழ்  இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம். சரி  சில நூற்றாண்டுகளுக்கு முன் வரையாவது பலருக்கு கல்வி என்பது எட்டா கணியாக இருந்தது. அதிகம் விஷயம் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாத நிலையில் படித்தவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டிச் செல்லும் குமுகமாக இருந்தோம். இப்போது அதற்கு தேவையில்லை என்ற நிலை வந்து விட்டது.. பலரும் படிக்கின்றோம்.. ரேஷனல் திங்கிங் என்பது நமக்கு இருக்கின்றது.. அறிவார்ந்த விஷயங்களை நேரடியாகப் பார்க்கும் திறன் நமக்கு இருக்கின்றது.. இதனை காண்பதை விடுத்து பொருளற்ற விஷயங்களுக்கு காரணம் தேடும் முயற்சி செய்வது எவ்வகையில் பலனைத் தரும்.

இதில் பார்வைகளை விசாலமாக்கவேண்டும் என்பது எப்படி.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?

நானும் பொதுவாகத்தான் கேட்கிறேன்.

சுபா
 


PRASATH

unread,
Oct 28, 2014, 7:52:01 AM10/28/14
to மின்தமிழ்
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...

இப்போது என்ன பயன் எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், பண்டைய கால சக்கரத்தின் பயன்பாடும் சட்டி பானையின் பயன்பாடும் அறிந்து இன்று நான் என்ன செய்யப் போகிறேன் எனக் கேட்பதற்கு ஒப்பாகும். சக்கரத்தின் பயனையும், சட்டி பானையின் பயனையும் அறிந்தவர்கள் இருப்பதால் இவற்றிற்கு இந்த தலைமுறைக்கு விளக்கங்கள் தேவையில்லை. இன்னும் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வரும் சந்ததிகள் இவற்றை கண்டு நகைக்கலாம். என்ன ஒரு அறிவிலித்தனம் எனவும் சொல்லலாம்.

கதைகள் நடந்த கால கட்டத்தில் அக்கதையின் பயன் என்ன என்று அறிய முற்படுவது தொன்மையை தேட வழி வகை செய்யும். ஆனால், பயனேதும் இல்லை என்ற முடிவோடு அதனை அறிய முற்படலாகாது.

ஒவ்வொரு மனிதனின் கிரகிக்கும் திறனும் வெவ்வேறானவை. அக்காலக் கட்டத்தில் அந்த கதைகளுக்கு தேவை என்ன என அறிந்தால் தான் நாம் மதிப்பீடு எல்லைக்குள் செல்லலாம்.

இப்போதும், கடவுள் என்ற கோட்பாடில் பலரும் தனக்கு முன்னவர் சொன்னதையே வழியாக எடுத்துக் கொண்டு பின்தொடருகிறார்கள். அவர்களுக்கு தேவை நம்பிக்கை என்னும் பிடிப்பு. அந்த பிடிப்பு சரியா தவறா என்ற ஆராய்ச்சி இல்லை.

பொருளற்ற விஷயங்கள் என முன்முடிவு எடுத்து விட்டால் எல்லா விஷயங்களும் பொருளற்றதாகவே தெரியும்.

இதிகாச புராணக் கதைகளில், இரு மனைவியர் மட்டுமல்ல, பாஞ்சாலி ஐவரை மணந்தால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரியும் ஹரனும் இணைந்து ஹரிஹரன் பிறந்தான் என்னும் கூற்றால் ஓரினச் சேர்க்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விசாலமான பார்வை என்பதை ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதை ஏற்றுக் கொள்வதைப் பற்றியோ, ஒருத்திக்கு இரண்டு கணவன்கள் இருப்பதை ஏற்று கொள்வதைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

விசாலமான பார்வை என நான் குறிப்பிடுவது, பண்டைய கதைகளை இன்றைய நடைமுறைக்கு அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்றைய காலகட்டத்தில் அதன் தேவை என்னவாக இருந்தது என அறிய முற்படுவதாகும்.

Suba.T.

unread,
Oct 28, 2014, 8:01:06 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-28 12:50 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...

​கீழேயுள்ள ஏனைய​ பகுதிகளுக்குச் செல்லுமுன்..
​இருக்கலாம்..இருக்கலாம்-- இப்படி சொல்லி  தேடுதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலை அபாயகரமானது.​ 

இப்புராணங்கள் அன்றைய வாழ்வியலை காட்ட வாழ்வியல் அங்கங்களாக சமூகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என கிடைக்கும் சான்றுகளையும் தேடி விட்டோமா? அக்கால தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட சமூகத்தினரால் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை இக்கதைகள் என சான்று கிடைத்திருக்கின்றதா? ஒருவர் எழுத.. சிலர் அதனை வலிந்து அழுத்தம் கூட்டி சொல்ல.. கதைகளாக நாடகங்களாக ஆலயங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பின் .. இதற்கு சமூகத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்று நாம் பொதுப்படையாகக் கூறுவது சரியான சமூகப் பார்வையா... ?

சுபா



இப்போது என்ன பயன் எனக் கேட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. அப்படிப் பார்த்தால், பண்டைய கால சக்கரத்தின் பயன்பாடும் சட்டி பானையின் பயன்பாடும் அறிந்து இன்று நான் என்ன செய்யப் போகிறேன் எனக் கேட்பதற்கு ஒப்பாகும். சக்கரத்தின் பயனையும், சட்டி பானையின் பயனையும் அறிந்தவர்கள் இருப்பதால் இவற்றிற்கு இந்த தலைமுறைக்கு விளக்கங்கள் தேவையில்லை. இன்னும் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வரும் சந்ததிகள் இவற்றை கண்டு நகைக்கலாம். என்ன ஒரு அறிவிலித்தனம் எனவும் சொல்லலாம்.

கதைகள் நடந்த கால கட்டத்தில் அக்கதையின் பயன் என்ன என்று அறிய முற்படுவது தொன்மையை தேட வழி வகை செய்யும். ஆனால், பயனேதும் இல்லை என்ற முடிவோடு அதனை அறிய முற்படலாகாது.

ஒவ்வொரு மனிதனின் கிரகிக்கும் திறனும் வெவ்வேறானவை. அக்காலக் கட்டத்தில் அந்த கதைகளுக்கு தேவை என்ன என அறிந்தால் தான் நாம் மதிப்பீடு எல்லைக்குள் செல்லலாம்.

இப்போதும், கடவுள் என்ற கோட்பாடில் பலரும் தனக்கு முன்னவர் சொன்னதையே வழியாக எடுத்துக் கொண்டு பின்தொடருகிறார்கள். அவர்களுக்கு தேவை நம்பிக்கை என்னும் பிடிப்பு. அந்த பிடிப்பு சரியா தவறா என்ற ஆராய்ச்சி இல்லை.

பொருளற்ற விஷயங்கள் என முன்முடிவு எடுத்து விட்டால் எல்லா விஷயங்களும் பொருளற்றதாகவே தெரியும்.

இதிகாச புராணக் கதைகளில், இரு மனைவியர் மட்டுமல்ல, பாஞ்சாலி ஐவரை மணந்தால் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹரியும் ஹரனும் இணைந்து ஹரிஹரன் பிறந்தான் என்னும் கூற்றால் ஓரினச் சேர்க்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் விசாலமான பார்வை என்பதை ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருப்பதை ஏற்றுக் கொள்வதைப் பற்றியோ, ஒருத்திக்கு இரண்டு கணவன்கள் இருப்பதை ஏற்று கொள்வதைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

விசாலமான பார்வை என நான் குறிப்பிடுவது, பண்டைய கதைகளை இன்றைய நடைமுறைக்கு அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அன்றைய காலகட்டத்தில் அதன் தேவை என்னவாக இருந்தது என அறிய முற்படுவதாகும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

PRASATH

unread,
Oct 28, 2014, 8:09:10 AM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-28 17:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


2014-10-28 12:50 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...

​கீழேயுள்ள ஏனைய​ பகுதிகளுக்குச் செல்லுமுன்..
​இருக்கலாம்..இருக்கலாம்-- இப்படி சொல்லி  தேடுதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலை அபாயகரமானது.​ 

இப்புராணங்கள் அன்றைய வாழ்வியலை காட்ட வாழ்வியல் அங்கங்களாக சமூகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என கிடைக்கும் சான்றுகளையும் தேடி விட்டோமா? அக்கால தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட சமூகத்தினரால் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை இக்கதைகள் என சான்று கிடைத்திருக்கின்றதா? ஒருவர் எழுத.. சிலர் அதனை வலிந்து அழுத்தம் கூட்டி சொல்ல.. கதைகளாக நாடகங்களாக ஆலயங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பின் .. இதற்கு சமூகத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்று நாம் பொதுப்படையாகக் கூறுவது சரியான சமூகப் பார்வையா... ?

சுபா

நான் தேடுதலுக்கு முற்றுபுள்ளி எங்கே வைத்தேன்...

தங்கள் மடல் தான் எனக்கு, "இந்த கதைகள் யாவும் அன்றைய வாழ்வியல் நெறிகளை காட்டவே இல்லை எனச் சொல்லி இக்கதைகளின் பின்புலம் பற்றிய தேடலை அறிய முற்படுவதைத் தடுத்து நிறுத்துவதாக பொருள் தருகிறது."

நான் சொல்வது எல்லாம், கதைகள் பண்டைய வாழ்வியலை பிரதிபலித்தது என்ற முடிவோடும் அணுகாமல், பிரதிபலிக்கவில்லை என்ற முடிவோடும் அணுகாமல் கதைகளின் கால கட்டத்திற்கு சென்று ஆய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும் என்பதே...

மேலும், நான் எனது கருத்தாக, பிரதிபலித்தது என்ற முன்முடிவோடு எங்கேயும் கருத்து சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் தான் நான் தேடுதலைத் தடுப்பதாகும்.

இருக்கலாம் என்று சொல்லும் பொழுதே அங்கே தேடுதலுக்கான இடம் உள்ளது என்பது தானே பொருள்.

எனக்கு தான் எனது கருத்தை சரியாக சொல்லத் தெரியவில்லையோ???

 

Suba.T.

unread,
Oct 28, 2014, 12:46:07 PM10/28/14
to PRASATH, மின்தமிழ், Subashini Tremmel
2014-10-28 13:08 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:


2014-10-28 17:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


2014-10-28 12:50 GMT+01:00 PRASATH <pras...@gmail.com>:
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...

​கீழேயுள்ள ஏனைய​ பகுதிகளுக்குச் செல்லுமுன்..
​இருக்கலாம்..இருக்கலாம்-- இப்படி சொல்லி  தேடுதலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிலை அபாயகரமானது.​ 

இப்புராணங்கள் அன்றைய வாழ்வியலை காட்ட வாழ்வியல் அங்கங்களாக சமூகத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என கிடைக்கும் சான்றுகளையும் தேடி விட்டோமா? அக்கால தமிழ்ச் சமூகத்தின் பலதரப்பட்ட சமூகத்தினரால் முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டவை இக்கதைகள் என சான்று கிடைத்திருக்கின்றதா? ஒருவர் எழுத.. சிலர் அதனை வலிந்து அழுத்தம் கூட்டி சொல்ல.. கதைகளாக நாடகங்களாக ஆலயங்களில் பொழுது போக்கு அம்சங்களுடன் இணைத்துச் சொல்ல ஆரம்பிக்கப்பட்ட பின் .. இதற்கு சமூகத்தாரால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்று நாம் பொதுப்படையாகக் கூறுவது சரியான சமூகப் பார்வையா... ?

சுபா


வரிக்கு வரி வைத்து பதில் கூRa எனக்கு அவகாசம் இல்லை. என் மைய நோக்கை நான் தெளிவுடன் சொல்லியிருக்கின்றேன் என்றே நினைக்கின்றேன்.
 
நான் தேடுதலுக்கு முற்றுபுள்ளி எங்கே வைத்தேன்...

தங்கள் மடல் தான் எனக்கு, "இந்த கதைகள் யாவும் அன்றைய வாழ்வியல் நெறிகளை காட்டவே இல்லை எனச் சொல்லி இக்கதைகளின் பின்புலம் பற்றிய தேடலை அறிய முற்படுவதைத் தடுத்து நிறுத்துவதாக பொருள் தருகிறது."

​ஆம். இன்று யோசித்துப் பார்த்தாலும் எந்த பயனையும் தராத கதைகள்.. குறிப்பாக அடிமட்டத்து சமூகத்தினரையும் பெண்களையும் தரம் குறைத்தும் ​
 
​ஒரு பொருட்டாகவே கூட எண்ணாத வகை கதைப்பகுதிகள் பல சமூகத்தில் அங்கீகரம் பெற்றுவிட்டன் என்ற வகைய்ல் உலாவருகின்ரன.. வாசிப்போரும் புரிந்து கொள்வதில்லை.. என்ன இருக்கின்ரது.. எதைச் சொல்கின்றது எப்படியெல்லாம் அடிப்படை விஷய்ங்களில் ப்ரீவினையையும் ஏற்றத்தாழ்வையும் இவ்வகை கதைகள் காட்டுகின்றன என்பதை பார்க்க ஹவறி விடுகின்றோம் என்பது என் ஆதங்கம். 
நான் சொல்வது எல்லாம், கதைகள் பண்டைய வாழ்வியலை பிரதிபலித்தது என்ற முடிவோடும் அணுகாமல், பிரதிபலிக்கவில்லை என்ற முடிவோடும் அணுகாமல் கதைகளின் கால கட்டத்திற்கு சென்று ஆய்வு செய்து முடிவுகளை வழங்க வேண்டும் என்பதே...
​நீங்கள் எழுதியிருந்தது..
//
இதிகாச புராணக் கதைகள் அன்றைய வாழ்வியலை நமக்கு எடுத்துக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும். அக்காலத்தில் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கலாம். கதைகள் யாவும் அன்றைய சூழலுக்கு மனிதனுக்கு உகந்ததாக கருதப்பட்ட வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம்...
//​
​இதில் நீங்களே இவை அன்றைய வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றதாகக் குறிப்பிடுகின்றீர்கள். வாழ்வியல் நெறிகளாக இருக்கலாம் என முன் வைக்கின்றீர்கள்.. இதற்கு பதிலாக வாழ்வியல் நெறிகளாக மறைமுகமாக திணிக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் என்று சொல்லியிருக்கலாமே.. அல்லது இவற்றின் பயன் என்ன எனப் பொதுப்படையாகவும் சொல்லியிருக்கலாம் அல்லவா? இதை முன்வைத்துத்தான் குறிப்பிட்டேன்.

சுபா




 

மேலும், நான் எனது கருத்தாக, பிரதிபலித்தது என்ற முன்முடிவோடு எங்கேயும் கருத்து சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால் தான் நான் தேடுதலைத் தடுப்பதாகும்.

இருக்கலாம் என்று சொல்லும் பொழுதே அங்கே தேடுதலுக்கான இடம் உள்ளது என்பது தானே பொருள்.

எனக்கு தான் எனது கருத்தை சரியாக சொல்லத் தெரியவில்லையோ???

 

செல்வன்

unread,
Oct 28, 2014, 3:00:50 PM10/28/14
to mintamil

2014-10-27 21:33 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சுபா கேட்ட கேள்வியின் பதில், பேராசிரியரின் "பழையன கழிதல் இழை"யில் அவர்கள் பேராசிரியரின் பதிவுக்கு சொன்ன கருத்தே.  

அடுத்த தலைமுறைக்கு இந்துமதத்தை எடுத்துச் செல்ல விரும்பினால்... இளையதலைமுறையும் ஒப்புக்கொள்ளும் வகையில்  சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும்.


இந்துமதத்தை பற்றி  எல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது தேமொழி. அடுத்த தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு (கவலை அல்ல)

பேராசிரியரின் இழையை ஒட்டிதான் சுபா கருத்தை எழுப்பினார் என்பது உங்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது :-) என்னிடம் அவர் கேட்ட கேள்வி "குழந்தைகளுக்கு இதை படிக்க கொடுக்க முடியுமா?" என் பதில் "இலக்கியத்தை அளவிட குழந்தைகள் படிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பது சரியான அளவுகோல் அல்ல. உலகின் அழியாகாவியங்கள் பலவும் குழந்தைகள் படிக்கும் வகையில் அமைந்தவை அல்ல. அவை மெச்சுர்டான ஆடியன்சை நோக்கி எழுதபட்டவை.."

பேராசிரியர் கூறும் "வளர்ந்தபின் தொன்மத்தை நீக்கிகொள்ளவேண்டும்" என்பது எனக்கு உடன்பாடான கருத்து அல்ல.

உலகின் எல்லா கலாசாரங்களும் வளர்ந்தபின் தம் தொன்மத்தை முன்பை விட சிறப்பாக தேடி எடுக்கிறார்கள். அதை உலகெங்கும் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். இஸ்ரேல் முன்னெறியதால் அவர்கள் என்ன ஜெருசலத்தையும், கண்ணிர் சுவற்றையும் கைவிட்டு விட்டார்களா? புதைகுழிக்குள் போயிருந்த ஹீப்ரு மொழியை தோண்டி எடுத்து மீண்டும் புழக்கத்துக்கு கொண்டு அல்லவா வந்தார்கள்?

தமிழன் மட்டும் தன் தொன்மங்களை தொலைக்கவேண்டும் என்பது எனக்கு உடன்பாடானதல்ல. நம் தொன்மங்களை நாம் இழந்தால் அந்த இடத்தை வேறொரு வலுவான கலாசாரத்தின் தொன்மங்கள் இட்டு நிரப்பும். அதைவிட நம் முன்னோர் கொடுத்த தொன்மங்களே எனக்கு போதுமானவை.

--

செல்வன்

unread,
Oct 28, 2014, 3:21:29 PM10/28/14
to mintamil, Subashini Tremmel
2014-10-28 2:21 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
எனது கேள்விக்கு விடை இதில் இல்லை.

சரி வளர்ந்த குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.. என்றால் பின்னனியில் ஒரு தவறு இருக்கின்றது என்ற சிந்தனை உள்ள வகையான தொணியாக எனக்குத் தோன்றுகின்றது..  சரி அப்படியே அறிமுகப்படுத்தும் வேளையில் இதனை அறிவுப்பூர்வமான ஒன்றாக எடுத்துக் கொள்வரா.. கொஞ்சம் யோசித்தாலே இது ஒவ்வா கருத்து என தூக்கிப் போடத்தான் மனம் விரும்பும். 


உலகின் பெரும் இலக்கியங்கள் பலவும் (உதா: 1001 அராபிய இரவுகள்) உட்பட குழந்தைகள் படிக்க முடியாதவை. அதற்காக அவற்றில் ஏதோ ஒரு தவறு உள்ளது என பொருளா?

 

பேரண்டங்களையும் காக்கும் மகா சக்தி.. உயிருடன் கலந்த ஒரு இயக்கம் என்ற அச்சக்தியை கேவலப்படுத்தும் மிகச் சர்வ சாதாரண அல்லது கீழ்த்தரமான ஒரு பார்வையாகத்தான் எனக்கு இவ்வகை விஷயங்கலெல்லாம் படுகின்றன.


அது உங்கள் பார்வை. என்னளவில் இலக்கியங்களை "ஆபாசம், அசிங்கம்" எனும் நோக்கில் அணுக கூடாது. வீனஸ் எனும் தெய்வத்தின் சிலை அரை நிர்வாணமாக வடிக்கபட்டிருப்பது அசிங்கமா, கலையா?

--

Suba.T.

unread,
Oct 28, 2014, 3:37:32 PM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-28 20:00 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:

2014-10-27 21:33 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சுபா கேட்ட கேள்வியின் பதில், பேராசிரியரின் "பழையன கழிதல் இழை"யில் அவர்கள் பேராசிரியரின் பதிவுக்கு சொன்ன கருத்தே.  

அடுத்த தலைமுறைக்கு இந்துமதத்தை எடுத்துச் செல்ல விரும்பினால்... இளையதலைமுறையும் ஒப்புக்கொள்ளும் வகையில்  சரியான செய்தியைக் கொடுக்க வேண்டும்.


இந்துமதத்தை பற்றி  எல்லாம் எனக்கு எந்த கவலையும் கிடையாது தேமொழி. அடுத்த தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு (கவலை அல்ல)

பேராசிரியரின் இழையை ஒட்டிதான் சுபா கருத்தை எழுப்பினார் என்பது உங்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது :-)

இல்லை செல்வன்.
உங்கள் கட்டுரையில் வந்த நான் வெட்டி ஒட்டி காட்டிய அப்பகுதிக்கு மட்டுமே என் கேள்வி.

சுபா​

Suba.T.

unread,
Oct 28, 2014, 3:39:37 PM10/28/14
to mintamil, Subashini Tremmel
2014-10-28 20:21 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:
2014-10-28 2:21 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:

​..

பேரண்டங்களையும் காக்கும் மகா சக்தி.. உயிருடன் கலந்த ஒரு இயக்கம் என்ற அச்சக்தியை கேவலப்படுத்தும் மிகச் சர்வ சாதாரண அல்லது கீழ்த்தரமான ஒரு பார்வையாகத்தான் எனக்கு இவ்வகை விஷயங்கலெல்லாம் படுகின்றன.


அது உங்கள் பார்வை. என்னளவில் இலக்கியங்களை "ஆபாசம், அசிங்கம்" எனும் நோக்கில் அணுக கூடாது. வீனஸ் எனும் தெய்வத்தின் சிலை அரை நிர்வாணமாக வடிக்கபட்டிருப்பது அசிங்கமா, கலையா?

​உடல் பற்றிய விஷயத்தின் தொடர்புடையது அன்று என் கேள்வி. நம் கோயில்களிலும் தான் சிற்பங்களின் உருவத்தைக் காண்கின்றோம். அதனை எழிலாகப் பார்க்கும் பக்குவம் நமக்கு உண்டு. இதனை நான் கேள்வியாக எழுப்பவில்லை என்பதை மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ​
 

​//
சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம். 
//​
​மேலுள்ள விஷயத்தில் 100 வருடம் கூடிக் களித்தனர் சிவனும் பார்வதியும் என்பது தத்துவ நிலைகளையெல்லாம் புறம் தள்ளி மிக சாதாரணமாக சித்தரித்து இறை வடிவங்களை ​தரக்குறைவாகக் காட்ட வைக்கும் ஒரு முயற்சி.சிவனின் விந்தை அக்னி தேவன் கொண்டு செல்கிறான்.. கங்காதேவி வாங்கி ஈனுகின்றாள் என்கின்ற இந்த மூன்று விஷயங்களை மட்டுமே மையமாக வைத்து கேட்கின்றேன்.

என்னைப் பொருத்த அளவில் இவ்வகை புராணப் பகுதிகள் தாம் இந்து மதத்திற்கு சேதத்தையும் தாழ்வையும் சீர்குலைவையும் இளைய தலைமுறையினரிடையே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையையும் உருவாக்குபவை. இவற்றை விடுத்து தத்துவ விஷயங்களை சிறு பிராயத்திலிருந்து குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், அன்பு, நேர்மை, இறையென்றால் அன்பு என்ற வகையில் சொல்லிக் கொடுப்பதில் சிறிதளவும் பிரச்சனை இருக்காது. சிவம் சக்தி என்ற இரு கூறுகளை மனிதத்தன்மைக்கு இறக்குவதோடு மிக அற்பமாக சித்தரித்து அதற்கு காரணமும் தேடும் முயற்சி தொடரும் வரை மடமை நமது சமூகத்தில் தொடரும்.

இனி இந்த விஷயமாக நன தொடர விரும்பவில்லை. எனது கருத்தை முயன்ற அளவு தெளிவாகச் சொல்ல முயற்சித்திருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்.

சுபா



செல்வன்

unread,
Oct 28, 2014, 3:40:56 PM10/28/14
to mintamil, Subashini Tremmel

2014-10-28 14:37 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
இல்லை செல்வன்.
உங்கள் கட்டுரையில் வந்த நான் வெட்டி ஒட்டி காட்டிய அப்பகுதிக்கு மட்டுமே என் கேள்வி.


அது தெரிந்ததால் தான் தேமொழி அப்படி கூறியது தவறு என சுட்டி காட்டினேன் சுபா.

--

தேமொழி

unread,
Oct 28, 2014, 3:43:17 PM10/28/14
to mint...@googlegroups.com


தொன்மங்களை மறக்கச் சொல்லவில்லை, புறக்கணிக்கச் சொல்லவில்லை செல்வன்.  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்மில்... நம் வரலாற்றில் ஒரு பகுதி.  
அத்துடன் அது வரலாற்றின் ஒரு பகுதி என்பதால் நம்மால் மாற்றவும்  இயலாதது என்பதை  ஒப்புக் கொள்வோம்.  


அந்தத் தொன்மைங்களினால்  பெருமையடையவும் தேவையில்லை, சிறுமையடைவும் தேவையில்லை.  தள்ளி நின்று பார்ப்போம்.  

இப்பொழுது நம்மிடம், எகிப்து, கிராக்க, ரோம புராணங்களைக் கூறினால் அவற்றையெல்லாம் ஒரு கதை என்று புரிந்து கொண்டு, படித்த பிறகு அதில் எந்தவித ஈடுபாடுடன் இருப்போமோ அதே போன்று நம் தொன்மங்களை நாம் காணும் கோணமும் இருக்க வேண்டும். 



அரங்கனார் வைக்கும் கோணத்தைக் கவனியுங்கள்.  


நாம் வந்த பாதையை ஆராய்ந்து எடை போட்டு 'கொள்ளுவதைக் கொண்டு தள்ளுவதைத் தள்ளும் மனப்பான்மை வேண்டும்'.  ஒரு பண்டைய மதத்தையும் கலாசாரத்தையும்  அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொழுது 

ஜெயசர்மா சொல்வது போல 
///
கொண்டாட்டங்களின் உட்பொருள், திருவிழாக்களின் சமூகத்தொடர்பு, சேவை செய்தலின் உயர்வு, கலைகளுக்கான முக்கியத்துவம், இவற்றோடு .. உண்மை நேர்மை, உழைப்பு, பணிவு, இரக்கம், அன்பு, அன்னதானம், வறியவர்க்கு உதவுதல், பொதுச்சேவை, பெரியோரை மதித்தல், விட்டுக்கொடுத்தல், முரண்படாமை, புறங்கூறல், கொல்லாமை, மதுவைமனத்தாலும் நினையாமை, தாயைப்போற்றல், தந்தையை மதித்தல், குருவைப் பணிதல், இவையெல்லாம் எங்கள் சமயத்தின் கரு என்பதைக் கட்டாயம் சமய போதனையின் பொழுது சொல்லிக் கொடுத்தல் வேண்டும்
///

குழந்தைகளிடம் மதம் என்ற அடிப்படையில் எதை நம்பச் சொல்ல வேண்டும், எதைப் புறந்தள்ள வேண்டும்?   

உண்மையின் இதுமதக் கோட்டபாடுகள் என்ன?  

காலத்திற்கு ஒவ்வாத தொன்மக் கதைகளை நம்பி காலம்கழிப்பதா?  இல்லை ஜெயசர்மா குறிப்பது போல  அக்கதைகள் வழி  சொல்லப்படும் பண்புகள் மட்டுமா  என்பதை நாம் முடிவு கட்ட வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை ஜெயசர்மா சொல்வதுதான் சரி. அதைதான் நம் பண்பாடு என்று கொள்வேன்.

அதைவிட இன்னமும் கொஞ்சம் ரூம் போட்டு சிந்தித்தால் பிற மதங்கள் இவற்றிற்கு மாறான கருத்துகளையா போதிக்கிறது என்ற எண்ணம் வருகிறது. 

அப்படி இல்லாது இருக்கும் பொழுது இந்த மதம்தான்/என் மதம்தான்  உயர்ந்தது போன்ற எண்ணங்கள் தானாகவே நீங்கிவிடுகிறது.

அத்துடன் ...

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இலக்கியம், தொன்மம், மதம் என யாவற்றையும் ஒட்டுமொத்தமாக நினைத்து பிரித்துப் பார்ப்பதையும் தவிர்க்கிறீர்கள்.

மதசார்பில்லாத இலக்கியங்களும் இருக்கின்றன.  அவற்றிலும் குழந்தைகள் படிக்கப் பரிந்துரைக்க வேண்டியவையும் தவிர்க்க வேண்டியவையும் இருக்கின்றன.

இந்துமதக் கோட்பாடுகள்  eஎதை முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

..... தேமொழி

தேமொழி

unread,
Oct 28, 2014, 3:46:08 PM10/28/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com


கால மாற்றத்திற்கு  ஏற்ப மதக்கல்வியில் எதை எதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது இரு இழையின் கேள்விகளுக்கும் பொதுவான கருத்து  என நான் புரிந்து கொண்டது என் தவறாக இருக்கலாம் :))

..... தேமொழி

செல்வன்

unread,
Oct 28, 2014, 3:51:46 PM10/28/14
to mintamil

2014-10-28 14:39 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
என்னைப் பொருத்த அளவில் இவ்வகை புராணப் பகுதிகள் தாம் இந்து மதத்திற்கு சேதத்தையும் தாழ்வையும் சீர்குலைவையும் இளைய தலைமுறையினரிடையே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையையும் உருவாக்குபவை. இவற்றை விடுத்து தத்துவ விஷயங்களை சிறு பிராயத்திலிருந்து குழந்தைகளுக்கு நல்லொழுக்கம், அன்பு, நேர்மை, இறையென்றால் அன்பு என்ற வகையில் சொல்லிக் கொடுப்பதில் சிறிதளவும் பிரச்சனை இருக்காது. சிவம் சக்தி என்ற இரு கூறுகளை மனிதத்தன்மைக்கு இறக்குவதோடு மிக அற்பமாக சித்தரித்து அதற்கு காரணமும் தேடும் முயற்சி தொடரும் வரை மடமை நமது சமூகத்தில் தொடரும்.


சிவன் தன் மனைவி உமையுடன் நூறாண்டுகள் கூடியதாக எழுதியிருப்பதால் இளைய தலைமுறை இராமாயணத்தை வெறுத்துவிடுமா?

எல்லாம் நாம் அதை இளைஞர்களுக்கு சொல்லும் தன்மையில் தான் உள்ளது. அதை கிண்டலாக சொன்னால் அவர்கள் கிண்டலாக எடுத்துகொள்வார்கள். காதலுக்கு உதாரணமாக சொன்னால் நல்லபடி புரிந்துகொள்வார்கள். இலக்கியங்களை சரியான முறையில் எடுத்து சொல்வது முக்கியம்.

உதாரணமாக கம்ப இராமாயணத்தில் உள்ள 'ஆபாசத்தை' எல்லாம் தொகுத்து அண்ணா "கம்பரசம்" எனும் நூலை எழுதினார். கம்பராமாயணத்தின் புகழ் அதனால் மங்கியதா? இன்னும் 1000 ஆண்டுகள் கழித்தும் அது தமிழின் ஒப்பற்ற இலக்கியமாக தான் இருக்கும்.

--

செல்வன்

unread,
Oct 28, 2014, 4:13:02 PM10/28/14
to mintamil

2014-10-28 14:43 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
அந்தத் தொன்மைங்களினால்  பெருமையடையவும் தேவையில்லை, சிறுமையடைவும் தேவையில்லை.  தள்ளி நின்று பார்ப்போம்.  

இப்பொழுது நம்மிடம், எகிப்து, கிராக்க, ரோம புராணங்களைக் கூறினால் அவற்றையெல்லாம் ஒரு கதை என்று புரிந்து கொண்டு, படித்த பிறகு அதில் எந்தவித ஈடுபாடுடன் இருப்போமோ அதே போன்று நம் தொன்மங்களை நாம் காணும் கோணமும் இருக்க வேண்டும். 


பக்கத்து வீட்டுகாரன் செத்தால் நீ அழுவது இல்லை. உன் தாத்தா செத்தால் மட்டும் அழுகிறாய். இருவரும் மனிதர்கள் தானே? அதற்கு அழுகாத நீ இதுக்கும் அழ கூடாது என சொல்வது மாதிரி இருக்கு.

கிரேக்க, ரோம புராணம் எப்படி இருந்தால் எனக்கு என்ன? அது கிரேக்க, ரோமர்களின் வரலாறு. அவர்கள் மண்ணில் பிறந்து, வாழ்ந்திருந்தால் அதன் சிறப்பை என்னால் சரியாக உணரமுடியும். திருக்குறளை தமிழில் படிக்கும் தமிழன் அடையும் பெருமிதமும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படிக்கும் ஆங்கிலேயன் அடையும் உணர்வுகளும் ஒன்றாக இருக்குமா? என் நாட்டின் இலக்கியங்கள், தொன்மங்களை நான் உயர்வாக மதித்து போற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாவிட்டால் அதை வேறு எந்த நாட்டுகாரன் செய்ய போகிறான்?

//குழந்தைகளிடம் மதம் என்ற அடிப்படையில் எதை நம்பச் சொல்ல வேண்டும், எதைப் புறந்தள்ள வேண்டும்?  

உண்மையின் இதுமதக் கோட்டபாடுகள் என்ன? 

காலத்திற்கு ஒவ்வாத தொன்மக் கதைகளை நம்பி காலம்கழிப்பதா?  இல்லை ஜெயசர்மா குறிப்பது போல  அக்கதைகள் வழி  சொல்லப்படும் பண்புகள் மட்டுமா  என்பதை நாம் முடிவு கட்ட வேண்டும்.//

இது ஒன்றும் "Either/or " எனும் வகை சாய்ஸ் மாதிரி எனக்கு தெரியவில்லை.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கு ராக்கெட்டும் விட்டார். சபரிமலைக்கு விரதம் இருந்து பாதயாத்திரையும் போனார். செவ்வாய்க்கு ராக்கட் விட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு செவ்வாய் தோஷம். அதை நம்பவேண்டாம் என பலர் கூறியும் அவர் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணாக தேடி மணந்து "வசந்தி எனக்கு கிடைத்தது கிரகங்களின் அருள்" என்கிறார். தினம் காலையில் ஒரு கீதை அத்தியாயத்தை படிக்காமல் அவர் அலுவலகம் கிளம்புவதில்லை. மன அழுத்தம் வந்தால் அவர் நாடும் நூல் கீதை. ஒரு கீதை அத்தியாயத்தை படித்தால் எப்பேர்ப்பட்ட மன அழுத்தமும் விலகிவிடும் என்கிறார்.

அதனால் "கதையை விட்டு கருத்தை நம்பு" மாதிரியான அறிவுரைகளால் எப்பலனும் கிடையாது என்பது என் கருத்து. எனக்கு கதையும் வேண்டும், கருத்தும் வேண்டும். இராதாகிருஷ்ணன், மயில்சாமி அண்னாதுரை எல்லாரும் அதனால் என்ன கெட்டு சீரழிந்தா போனார்கள்? அவர்கள் அறிவு வளர்ச்சி அதனால் எந்த விதத்தில் பாதிக்கபட்டது?

--

Oru Arizonan

unread,
Oct 28, 2014, 4:34:42 PM10/28/14
to mint...@googlegroups.com
உயர்திரு சுபா அவர்களே,  

//உள்ள விஷயத்தை உள்ளவாறு கிரகித்துக் கொள்ள முடியாது அறிவீலிகளா நம் சமூகத்தினர். ஏன் நம் தமிழ்  இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.//

//.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//

நானும் பொதுவாகத்தான் கேட்கிறேன்.//

நீங்கள்  இருக்கிறீர்கள்.

//
இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்//  இதைப் படித்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.  எனவே, எந்தவிதமான விளக்கத்தைக்கொடுத்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை.  அப்படி இருக்கும்போது //பொதுவாகத்தான் கேட்கிறேன்// என்பதின் பொருள்தான் விளங்கவில்லை.

, நீங்கள் //
ஏன் நம் தமிழ்  இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.// என்று குறிப்பிடுவது தமிழ் சமூகத்திற்கு மட்டும் அல்ல.  

இக்கதைகள் மொத்த இந்து சமய சமூகத்திற்கும் சொல்லப்பட்டு இருகின்றன.  ஆக, மொத்த இந்து சமூகமும் அறிவிலிகள் என்று கொண்டால், மற்ற சமயக் கதைகளைப் படித்தாலும் அப்படியே தோன்றும்.  இதற்கு ஒரே வழி -- கடவுள் மறுப்புக் கொள்கைதான் என்ற முடிவுக்குத்தானே வரவேண்டும்!

நான் புராணங்கள் பற்றி கொடுத்த விளக்கத்திற்கு மதிப்பிற்குரிய லோகசுந்தரம் அவர்கள் என்மீது சினம் கொண்டார்.  எனவே, நான் மேலும் விளக்கம் கொடுத்து உங்கள் சினத்தையும் ஈட்டிக்கொள்வானேன்?

////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//

இப்படி எழுவது சிவபெருமானை வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தவதில் வெற்றிபெறும்; அவ்வளவே!  தாங்களோ எந்தவித விளக்கத்தையும் செவிமடுக்க விரும்பவும் இல்லை.  தீர்வு எப்படிக் கிடைக்கும்?  There will be no closure to this subject.  

ஒருபக்கம் குலதெய்வ வழிபாட்டைப் போற்றுகிறோம்.  இன்னொரு பக்கம் இப்படி எழுதிகிறோம்.  எனக்குப் புரியவில்லை.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Oct 28, 2014, 4:36:25 PM10/28/14
to mint...@googlegroups.com
//நீங்கள்  இருக்கிறீர்கள்.//  நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். என்று படித்துக்கொள்ளவும்.

Oru Arizonan

unread,
Oct 28, 2014, 4:38:42 PM10/28/14
to mint...@googlegroups.com
உயர்திரு செல்வன் இவ்வாறு எழுதினார்.

// எனக்கு கதையும் வேண்டும், கருத்தும் வேண்டும். //

ஒப்புக்கொள்ளுகிறேன் ஐயா!

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Oct 28, 2014, 4:43:02 PM10/28/14
to mintamil

2014-10-28 15:34 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//

இப்படி எழுவது சிவபெருமானை வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தவதில் வெற்றிபெறும்; அவ்வளவே!


அரிசோனன் ஐயா.....வேதாந்த மரபே இப்படி கடவுளரை விமர்சிப்பதையும் அனுமதிக்கிறது. இராமனை வாலி கடுமையாக திட்டியதையும் வால்மிகி இராமாயணம் பதிவு செய்துதானே இருக்கிறது?  அதனால் கடவுளரை விவாத நோக்கில் விமர்சிப்பதில் தவறு எதுவும் இல்லை

--

தேமொழி

unread,
Oct 28, 2014, 5:21:41 PM10/28/14
to mint...@googlegroups.com
///அதனால் "கதையை விட்டு கருத்தை நம்பு" மாதிரியான அறிவுரைகளால் எப்பலனும் கிடையாது என்பது என் கருத்து. எனக்கு கதையும் வேண்டும், கருத்தும் வேண்டும். ///


"கடவுளரை விவாத நோக்கில் விமர்சிப்பதில் தவறு எதுவும் இல்லை" என்று நீங்கள் சுட்டிக் காட்டுவது  போலத்தான் லிபரல்களும் செல்வன்.  

நீங்கள் விரும்பும்  கருத்துகளைப் பின்பற்றுவது உங்கள் உரிமை, மாற்றுக் கோணம் ஒன்றை நான் கொண்டிருந்தால் அதை சொல்லிவிட்டுச் செல்வதும் என் உரிமை.  

ருத்துத் திணிப்பும், என் கோணத்தை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை.   

உங்கள் வழி சரியென்று எண்ணி நீங்கள் செல்லலாம், என் வழி தனி வழி என்று நானும் கூறிவிட்டுச் செல்லலாம்.  

இருவருக்குமே நம் எண்ணத்திற்கு மாற்றுக் கருத்து உள்ளது என்பது தெரிகிறது.  சரி தவறு என்பது அவரவர் கோணத்தில் மாறுபடும் என்பதும் புரிகிறது.  



..... தேமொழி

Suba.T.

unread,
Oct 28, 2014, 5:42:56 PM10/28/14
to மின்தமிழ், Subashini Tremmel

Suba.T.

unread,
Oct 28, 2014, 5:46:53 PM10/28/14
to மின்தமிழ்
2014-10-28 22:42 GMT+01:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2014-10-28 21:34 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு சுபா அவர்களே,  

//உள்ள விஷயத்தை உள்ளவாறு கிரகித்துக் கொள்ள முடியாது அறிவீலிகளா நம் சமூகத்தினர். ஏன் நம் தமிழ்  இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.//

//.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//

நானும் பொதுவாகத்தான் கேட்கிறேன்.//

நீங்கள்  இருக்கிறீர்கள்.

//
இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்//  இதைப் படித்தால் நீங்களே ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் என்றுதான் தோன்றுகிறது.  எனவே, எந்தவிதமான விளக்கத்தைக்கொடுத்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவும் போவதில்லை.  அப்படி இருக்கும்போது //பொதுவாகத்தான் கேட்கிறேன்// என்பதின் பொருள்தான் விளங்கவில்லை.

, நீங்கள் //
ஏன் நம் தமிழ்  இனத்தோரையே தாழ்ந்து நாம் மதிப்பிட்டு.. இப்படியெல்லாம் சொன்னால் தான் மகத்துவம் புரியும் என நாமே கற்பனை செய்து கொண்டு பின்னர் அதனையும் ஏற்றி வைத்து வழி வழியாகக் கொண்டு வந்து இந்த தேவையற்ற கதைகளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்க முனைகின்றோம்.// என்று குறிப்பிடுவது தமிழ் சமூகத்திற்கு மட்டும் அல்ல.  

இக்கதைகள் மொத்த இந்து சமய சமூகத்திற்கும் சொல்லப்பட்டு இருகின்றன.  ஆக, மொத்த இந்து சமூகமும் அறிவிலிகள் என்று கொண்டால், மற்ற சமயக் கதைகளைப் படித்தாலும் அப்படியே தோன்றும்.  இதற்கு ஒரே வழி -- கடவுள் மறுப்புக் கொள்கைதான் என்ற முடிவுக்குத்தானே வரவேண்டும்!

நான் புராணங்கள் பற்றி கொடுத்த விளக்கத்திற்கு மதிப்பிற்குரிய லோகசுந்தரம் அவர்கள் என்மீது சினம் கொண்டார்.  எனவே, நான் மேலும் விளக்கம் கொடுத்து உங்கள் சினத்தையும் ஈட்டிக்கொள்வானேன்?

////.. இதே கதையை மாற்றி சக்தி இன்னொரு சிவனையும் சேர்த்து திருமணம் செய்து கொண்டார் .. என மாற்றி நாம் சொல்வோமா... இதில் பார்வை விசாலம் கிடைக்குமா?//

இப்படி எழுவது சிவபெருமானை வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தவதில் வெற்றிபெறும்; அவ்வளவே!  தாங்களோ எந்தவித விளக்கத்தையும் செவிமடுக்க விரும்பவும் இல்லை.  தீர்வு எப்படிக் கிடைக்கும்?  There will be no closure to this subject.  

ஒருபக்கம் குலதெய்வ வழிபாட்டைப் போற்றுகிறோம்.  இன்னொரு பக்கம் இப்படி எழுதிகிறோம்.  எனக்குப் புரியவில்லை.

​நான் சொல்ல வந்த விஷயம் தங்களுக்குச் சரியாகச் சென்று சேரவில்லை என்பது மட்டும் தற்சமயம் புரிகின்றது. எனக்கு சினம் இல்லை. கோபம் வராது.

செய்யவும் அலசவும் ஆராயவும் மிகப் பல முக்கிய தத்துவ விசாரணைகள் உள்ளன. ​

எனது தனிப்பட்ட கருத்தில் இறைவனுக்கு குடும்பம் அமைத்து அதில் ஆண் கடவுளருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சக்திகளை கொடுத்து அதற்கு லீலைகளை கற்பித்து செய்யும் புராண அலசல்கள் செய்யும் விருப்பத்தில் நான் இல்லை. என்னை பொருத்தவரை இந்து சமயத்தை சீர்குலைக்கும் முக்கிய பங்கை இவையே செய்கின்றன. இவை நீக்கப்பட்டு உண்மையான தத்துவ விசாரணை பக்கம் மனம் திரும்பினால் உண்மையான இந்துக்களாக நாம் இருப்போம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்
சுபா

Nagarajan Vadivel

unread,
Oct 28, 2014, 10:37:20 PM10/28/14
to மின்தமிழ்
செல்வன் ஐயா ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார்.  அந்தக்கட்டுரை புதிய திறனாய்வால் மாற்றம் பெறுவதில்லை.  அதுவே கட்டுரையின் இலக்கணம்.  அந்தக்கட்டுரையைப் படித்தபின் என் தனிக்கருத்துக்கள் சிலவற்றை அவர் பார்வைக்காக முன்வைத்தேன்

என் சொந்த ஊர் பழனி.  பழனியில் முருகன் தனியாகச் சிறுவனாகத்தான் வீற்றிருப்பதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.  பழனி முருகன் கொங்குநாட்டார்களால் அதிகம் வணங்கப்படும் கடவுள்.  பலருக்கு அது குலதெய்வம் இஷ்ட தெய்வம்.  என் குழந்தைப்பருவத்தில் அந்தக்கோவில் வழிபாடு பண்டாரங்களால் நடத்தப்பட்டது.  அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தபின்னரே அது ஆகம முறை வழிபாட்டுக்கு மாறியது

மலைக்கோவில் என்பது கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட ஒன்று.  தென்னாட்டில் சிவன் தொடர்பான ஆகம வழிபாட்டில் சிவன் சக்தி சிவன் பார்வதி என்ற அடிப்படையில் வழிபாடு நடந்தது என்பதும் அக்கோவில்களில் முருகனைப் பார்வதியின் மடியில் வைத்துக்கொண்டிருப்பதுபோன்ற அகம சிலப் சாஸ்திர அடிப்படை கிடையாது

சங்ககாலத்தில் பாடப்பட்ட திருமுருகாற்றுப்படைக்கும் இந்த பிற்கால முருக வழிபாட்டுக்கும் தொடர்பீல்லை.  தமிழர்களின் இறைவழிபாட்டுமுறை இந்த ஆகம முறை வழிபாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.  பக்தர்கள் கொண்டுவரும் பாலைக்கொண்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யும் மரபு பலகாலமாக் இருந்து வருகிறது

குழந்தைக்கு புனைவுகளைக் கேட்பதில் ஆர்வமும் புதியன கற்கும் பண்பும் இயல்பாக அமைந்தது.  வீட்டில் உள்ளவர்கள் குழந்தையின் மனதில் இறைநம்பிக்கை இறைவன்மீது பக்தி பௌஅம் உருவாக இதுபோன்ற கதைகளைச் சொல்வதுண்டு.  குழந்தை வளர்ந்ததும் இவை கற்பனை என்பதைப் புரிந்துகொள்ளும் என்றாலும் நம் முன்னோர்கள் வகுத்த மரபு என்பதாலொரு நம்பிக்கை என்ற அடிப்படையில் இது தொடர்கிறது

இனா பனா அனா

Oru Arizonan

unread,
Oct 28, 2014, 11:54:58 PM10/28/14
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம், உயர்திரு இனா பனா அனா அவர்களே!
ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Oct 29, 2014, 12:08:55 AM10/29/14
to mint...@googlegroups.com
உயர்திரு சுபா அவர்களே,

//எனக்கு சினம் இல்லை. கோபம் வராது.//

மிக்க நன்றி.  எனக்கும் என் மனதில்  பதிய எதுவாக இருக்கும்.

//இவை நீக்கப்பட்டு உண்மையான தத்துவ விசாரணை பக்கம் மனம் திரும்பினால் உண்மையான இந்துக்களாக நாம் இருப்போம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கின்றேன்.//

தாங்கள் சொல்லும் நிலையைத்தான் ஒவ்வொரு இந்துவும் அடையவேண்டும்.  இந்த நிலை முனைவர் நிலைக்கும் மேலானது (post-doctorate செய்வதற்கு இணையானது) என்று சமயப் பெரியோர்கள் உரைக்கின்றார்கள்.

 கணிதத்தில் முனிவர் பட்டம் பெற்றவருக்கு கூட்டல் கழித்தல் ஒரு பாடாகவே இருக்காது.  ஆனால், அக்குழந்தைக்கு அதுவே பெரும்பாடு அல்லவா?ஒன்று, இரண்டு என்று எண்ணும் குழந்தைக்கு என்ன சொல்வது?   முனைவர் கல்வியை விளக்க முடியுமா?  அதனாலதான் நமது இந்து சமயத்தில் ஒவ்வொருவரின் மனநிலைமைக்கு ஏற்றவாறு சமய நீதிகள் அவரவர்கள் புரிந்துகொல்லும்படிக்கு வழங்கப்பட்டன.  

இறை அறிவு வளர்ந்ததும் "குளம் நிரம்பியதும் கிணறுகள் மறைந்து போவதுபோல" மறைகளும் ஒன்றும் இல்லாததாக மாறிவிடும் என்றுதானே பகரப்படுகிறது!

ஆன்மிக அறிவில் நான் இன்னும் உயர்நிலைப்பள்ளிக்குள் கூட நுழையவில்லை.  எனவே, முனிவர் பட்டம் எப்படி சுபா வாங்க இயலும்?  முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.

அதுவரை இந்து சமயக் குழந்தைகள் ஒன்று, இரண்டைக் கற்றுக்கொள்வதைத் தாங்கள் பொறுமையுடன் சகித்துக் கொள்ளவேண்டியது தங்கள் கடமையாகும். 

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன்  

Suba.T.

unread,
Oct 29, 2014, 2:47:30 AM10/29/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-10-29 5:08 GMT+01:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு சுபா அவர்களே,

//எனக்கு சினம் இல்லை. கோபம் வராது.//

மிக்க நன்றி.  எனக்கும் என் மனதில்  பதிய எதுவாக இருக்கும்.

//இவை நீக்கப்பட்டு உண்மையான தத்துவ விசாரணை பக்கம் மனம் திரும்பினால் உண்மையான இந்துக்களாக நாம் இருப்போம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கின்றேன்.//

தாங்கள் சொல்லும் நிலையைத்தான் ஒவ்வொரு இந்துவும் அடையவேண்டும்.  இந்த நிலை முனைவர் நிலைக்கும் மேலானது (post-doctorate செய்வதற்கு இணையானது) என்று சமயப் பெரியோர்கள் உரைக்கின்றார்கள்.

​இல்லை ஐயா. இதில் நான் மாறுபடுகின்றேன். இது பெரிய நிலையெல்லாம் அல்ல. மிகச் சாதாரண அடிப்படை தெளிவு மட்டுமே. அயல்நாடுகளில் எந்த வித சமயபோதனை பின்புலங்களையும் பற்றிக் கொள்ளாத நிலையிலும் அடிப்படை நேர்மை, பிறருக்கு உதவும் மனப்பாண்மை, பிறரை வேண்டுமென்று தாக்கி இன்புறும் அற்ப சிந்தனையற்ற நிலை,  பொய்மையர்ற நேர்மை, ஊழல் இன்றிய னிலை என சர்வ சாதாரணமாக நடிப்பின்றி பாசாங்கின்றி நல்ல உள்ளத்தோடு உள்ளோரைக் காண்கின்றேன். ஆக இன்னிலையை அடைதல் மிகச் சிரமமான வழி என்று நாம் கருத வேண்டியதில்லை. இப்படி சிரமம் சிரமம் என்று சொல்லியே தவறான சிந்தனையை நமக்குள் புகுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம்.

இறை தன்மையில் அச்சமூட்டும் விஷயங்களும், தண்டனை பற்றிய விவரணைகளும், காமத்தை இறைவடிவங்கள் மேல் ஏற்றி வைத்து கொச்சை படுத்தும் விஷயங்களையும் விட்டு இளம் வயதிலேயே தத்துவ நூல்களை வாசிக்கும் எளிய வழியை சிறு பிராயத்திலிருந்து எளிமையாகக் கொண்டு வந்தால் நல்ல பக்தி சிந்தனைகள் மனதில் தேவையற்ற சாயங்களின்றி நன்கு பதியும். பிற நூல்களையும் வாசித்தல் நடைமுறையில் நேர்மையைக் கடைபிடித்தல் என்பதை பழக்கி வந்தால் இப்பண்புகள் உள்ளத்தில் பதியும்.



ஆன்மிக அறிவில் நான் இன்னும் உயர்நிலைப்பள்ளிக்குள் கூட நுழையவில்லை.  எனவே, முனிவர் பட்டம் எப்படி சுபா வாங்க இயலும்?  முயன்றுகொண்டுதான் இருக்கிறேன்.

​அப்படி தாங்கள் கருதவேண்டியதில்லை.
இறை குணத்தின் அளவு கோல் என்பது நற்பண்புகள் எவ்வகையில் நம்மிடத்தே எல்லா நேரங்களிலும் வெளிப்படுகின்றன என்பதை பொருத்தே அமைவதாக நான் நம்புகின்றேன். நற்குணங்கள் நம்மிடத்தே இருந்தால் இறை நிலை நம்மிடம் இருக்கின்றது என நம்பலாம்.  இறைத்தன்மை என்பது எங்கிருந்தோ தவம் செய்து பெற வேணண்டியதில்லை. மனித வாழ்க்கையில் நல் மனிதராக நம்மால் இருந்து நமக்கும் பிறருக்கும் உதவி வாழும் நிலையுடன் நமது ஒவ்வொரு செயலும் இருந்தால் அதுவே இறைத்தன்மையின் உயரிய நிலை.

சுபா

Tthamizth Tthenee

unread,
Oct 29, 2014, 3:05:34 AM10/29/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel

2014-10-29 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
மனித வாழ்க்கையில் நல் மனிதராக நம்மால் இருந்து நமக்கும் பிறருக்கும் உதவி வாழும் நிலையுடன் நமது ஒவ்வொரு செயலும் இருந்தால் அதுவே இறைத்தன்மையின் உயரிய நிலை.

​பொன்னெழுத்தில் பொறிக்கப் படவேண்டிய  கருத்து  சுபா அவர்களே


அன்புடன்
தமிழ்த்தேனீ​


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



seshadri sridharan

unread,
Oct 29, 2014, 3:14:51 AM10/29/14
to mintamil
I told you previously about Gauṋgá. Párvatii had a son, Bhaerava. He used to practise Tantra, and was a favourite of Shiva. Kálii had a daughter Bhaeravii. She also used to practise Tantra and was also a favourite of Shiva. But Gauṋgá's son, Kárttika, was very extroversive in outlook. He was more fascinated with the external world, with less interest in the subjective world. This did not please Gauṋgá. So in order to remove Gauṋgá's sorrow, Shiva was very affectionate towards her, and for that reason, people used to say jokingly that Shiva was dancing with Gauṋgá on His head. The fact was different, as I have explained.

Then later on, during the days of the Puranic Shakti Cult and the Shiva Cult, this incident was symbolized by tying Gauṋgá to Shiva's matted locks of hair, and from Gauṋgá's mouth, the flow of the River Gauṋgá, or Ganges, originated. This was merely the imagination of the authors of the Puranas.

It has been said, Shauṋkaramaolinivásini vimale, and Haripadapadmavihárińi Gaunge, himavidhumuktádhavalatrunge – “The flow of the Ganges is the water which washed the feet of Náráyańa in heaven, and this water ultimately flowed into Shiva's matted locks. Then, piercing through the snow-white moon, it spread in all directions in a bright cascade.” Shauṋkaramaolinivásini vimale – “The clear water that dwells in Shiva's matted locks”. This means the water of the Ganges.

In any case, this is all the imagination of the authors of the Puranas.

Now, the story goes that this son of Gauṋgá was Kárttika, and as I have said earlier, Kárttika was of extroversive nature.

The author of the Purana has said something more about Kárttika which does not seem to be reasonable: he imagined that Kárttika was the son of the River Gauṋgá, or Ganges. Now the question is, how can a river be the mother of a human baby? Common sense does not accept this view, but the Puranas clearly state that Kárttika was the son of the River Ganges, and that while floating in the current, he got stuck on a sandbar. In that situation, the boy started crying bitterly, and the six stars in the sky took pity on the crying child. As the boy sucked the breast milk of these six stars, he was called Śad́ánana [Having Six Faces], or Murugam, or Balasubrahmanyam or Kárttikeyam. According to the Purana, since the boy sucked the breast milk of the star Krttiká with his principal face, the boy was named Kárttika. Krttiká is one of the twelve stars after which the months of the Bengali calendar are named.

Though a little off the subject, let us mention that the name of the star is Krttiká, with double “t”. Krttiká + sna = Kárttika, so in the spelling of Kárttika, there should be two “ta's”. According to the rules of Sanskrit grammar, the consonant after r may be double; that is, r may be followed by one consonant or two consonants. For instance, in the spelling of dharma and karma, one is at liberty to use either one “m” or two “m's”. But in the spelling of Kárttika, two “ta's” must be there, because the original word was Krttiká, not Krtiká. Had the mother's name been Krtiká, then one “t” would have been permissible. There are some words like Kárttika, Varttika, where there is a double “t”.

So regarding Kárttika, we find that he is Shiva's son, no doubt, but not the son of Párvatii nor of Durgá. He is definitely the son of Gauṋgá, another wife of Shiva; but he is not the son of the River Gauṋgá. And in this human frame he can by no means have six faces; he can have only one face.

There is a popular belief that Kárttika was a bachelor. In the folk-songs current in the districts of Hooghly, 24 Parganas, etc., Kárttika is referred to as unmarried. This is wrong. According to some Puranas, his wife's name is Śaśt́hii, but according to other Puranas, his wife's name is Devasená. (In ancient times the ladies had names like Vasantasená, Sharatsená, Devasená, etc. So in that sense, Kárttika was “Devasenápati”, that is, the “Husband of Devasená”. People wrongly interpret “Devasenápati” to mean “the Commander-in-Chief of the Devas”.(7) But actually, it means that Kárttika was the husband of Devasená.) So this proves that Kárttika was not a bachelor.

by Shrii Shrii Ananda murthii on 30 May 1982, Calcutta, Published in: Namah Shiváya Shántáya, chapter: All Bask In the Glory of Shiva 3 Discourse 8

2014-10-27 20:55 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருப்போரூர், கந்தசாமி, முருகன், திருக்கோயில், Tiruporur, Kandasamy, murugan, temple

முருகனைப் பற்றி நமக்கு கூறும் முதல் தமிழ் நூல் தொல்காப்பியம். கிமு 300 வாக்கில் தொல்காப்பியம் எழுதப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதற்கும் முந்தைய தமிழ் நூல்கள் இருந்து இருக்கலாம். ஆனால் அவை நம்மிடம் இல்லை. தொல்காப்பியம் முருகனைச் சேயோன் என அழைத்து, அவனைக் குறிஞ்சி நிலக் கடவுளாகச் சுட்டுகிறது.
 
தொல்காப்பியம் முருகன் எனும் கடவுளின் வரலாற்றைப் பற்றி அதிகம் உரைக்கவில்லை எனினும் முருகனைச் சேயோன் (சேய் = மகன்) என மட்டுமே அழைப்பதில் இருந்து அவன் மிக வலிமையான ஒரு தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு இருக்கவேண்டும் என்பது புலனாகிறது. 
 
அந்தத் தெய்வம் யார் என்பதை உரைக்கும் முதல் நூல், வால்மீகி இராமாயணம். வால்மீகி இராமாயணத்தின் காலம், கிமு 500 முதல் கிபி 200 வரை எனக் கருதப்படுகிறது. மகாபாரதமும் கிமு 400 முதல் கிபி 200 வரை பல்வேறு காலக்கட்டங்களில் உருவான நூலாகக் கருதப்படுகிறது.
 
வால்மீகி இராமாயணத்தில் முருகனின் பிறப்பு விவரிக்கப்படுகிறது. சிவனும் உமையும் 100 வருடம் கூடிக் களித்தும் உமைக்குப் பிள்ளை பிறக்கவில்லை. சிவனின் விந்தை அதன்பின் அக்னிதேவன் தாங்கிச் சென்று, கங்கையிடம் சேர்ப்பிக்கிறான். கங்காதேவி அதைத் தாங்கி, முருகனை ஈனுகிறாள். சிவனின் விந்து உலகில் விழுந்த இடங்களில் காடுகள் சர வனம் எனும் காடுகள் உண்டாகின்றன. முருகனுக்கு அதன்பின் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டுகிறார்கள் என்கிறது வால்மீகி இராமாயணம். 
 
முருகனுக்குச் சேயோன் என்பதற்கு ஒப்பான குமரா (மகன்) எனும் பெயரையும் வால்மீகி இராமாயணத்தில் முதல் முதலாகக் காண்கிறோம். வால்மீகியே குமரனைக் கார்த்திகேயன், ஸ்கந்தன் எனவும் அழைக்கிறார். சரவணன் எனும் பெயரும் இங்கேயே பிறந்தது என யூகிக்கலாம்.
 
தொல்காப்பியத்தில் சேயோன் என அழைப்பதும், வால்மீகி இராமாயணத்தில் குமரா என அழைப்பதும் ஒத்துப் போவதால் இவ்விரண்டு நூல்களும் தொல்காப்பிய காலமான கிமு 300க்கு அருகே எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கலாம்.
 
(மயிலேறும் முருகன், கம்போடியா கிபி 7ஆம் நூற்றாண்டு)
கார்த்திகேயனின் வரலாற்றை நமக்கு விரிவாக எடுத்துக் கூறும் அடுத்த நூல், மகாபாரதம். கிருத்திகையில் ஆறு கார்த்திகைப் பெண்கள் அவனை வளர்த்த கதையும், அவன் தேவசேனாதிபதியாகி இந்திரன் மகள் தேவசேனாவை மணந்த கதையும் மகாபாரதத்தில் வருகின்றன. கீதையில் கண்ணன் "சேனாதிபதியரில் நான் ஸ்கந்தன்" எனக் கந்தனின் பெருமையை எடுத்துரைக்கிறான். மகாபாரதம் சற்றேறக் குறைய கிமு 400 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. 
 
ஸ்கந்தன் எனும் சமஸ்கிருதச் சொல்லுக்குச் சிந்தியவன் என பொருள். சிவனின் சிந்திய ஸ்கலிதத்தைக் கங்கை தாங்கியதால் அவனுக்கு ஸ்கந்தன் எனப் பெயர்.
 
முருகன் வேதங்களிலும் குறிப்பிடப்படும் கடவுள். ஸ்கந்தனுக்கான மந்திரங்களைச் சாம வேதம் உரைக்கிறது. சாம வேதத்தில் ஸ்கந்த- விசாகன் எனும் இரட்டைக் கடவுளருக்கான மந்திரங்கள் குறிப்பிடப்படுகின்றன.
 
முருகனின் வாகனமாக மயில் ஆனது, கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் எனத் தெரிகிறது. கிமு 4ஆம் நூற்றாண்டு வாக்கில் சமஸ்கிருதத்துக்கு இலக்கணம் எழுதிய பாணினி, மவுரியர்கள் மயிலில் ஸ்கந்தனை ஏற்றிச் சென்று, பொன் சம்பாதித்ததாகக் கூறுகிறார். இதற்கு மயில் மேல் முருகனை அமரவைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று, நன்கொடை வசூலித்ததாகப் பொருள் கொள்ளலாம். இன்றும் இந்திய கோயில்களில் இம்மாதிரி ஊர்வலங்கள் செல்வதைக் காண்கிறோம்.
 
மயிலில் முருகன் ஏன் ஏறினான்? இதற்குக் கூறப்படும் ஒரு காரணம் என்னவெனில், மவுரியர் என்றாலே மயில் எனத் தான் பொருள். மவுரியர்களின் சின்னம், மயில். ஆக மவுரியர்கள் முருகனை மயில் மேல் ஏற்றியதில் வியப்பு இல்லை. மவுரியர்களுக்கு பின் வந்த குஷான மன்னர்கள், குப்தர்கள் காலத்திலும் முருக வழிபாடு, வட இந்தியாவில் பிரதானமாக இருந்தது. 
 
கிபி 150ஆம் ஆண்டுவாக்கில் குஷான மன்னன் ஹுவிசகன் அச்சிட்ட தங்க நாணயத்தில் "ஸ்கந்த கொமானோ பிசாகோ" (விசாகோ) என ஸ்கந்தனும், வேலேந்திய விசாகனும் இரட்டைக் கடவுளராக நிற்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. ஆக ஸ்கந்தனின் ஒரு வடிவமே விசாகன் அல்லது தனித் தெய்வமாக வழிபடப்பட்டு பின்னாளில் ஸ்கந்தனுடன் இணைந்த வடிவமாக விசாகனைக் கொள்ளலாம்.

 
வடக்கே குப்தர் காலத்தை முருக வழிபாட்டின் உச்சமாகக் கொள்ளலாம். குமார குப்தன், ஸ்கந்த குப்தன் என்ற குப்த சக்ரவர்த்திகள் நாட்டை ஆண்டார்கள். குப்தர் அரசவையில் இருந்த காளிதாசன், முருகனின் பிறப்பைக் குமார சம்பவம் எனும் நூலாக எழுதி, முருகனுக்கு அழியாப் புகழ் தேடிக் கொடுத்தான்.
 
தெற்கே கிமு 300 வாக்கில் சேயோன் என முருகன் அழைக்கப்பட்டதைக் கண்டோம். இந்திரன், வருணன், கொற்றவை, முருகன், திருமால் ஆகியோரைத் தமிழ் மண்ணின் தெய்வங்களாகத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வடக்கை போலவே இங்கேயும் முருக வழிபாடு, முருகனின் வரலாற்றுக் கதைகள் கிமு 300 - 400 முதல் கிபி 400 வரை உருவானதை அறியலாம்.
 
முருகனின் பிறப்புக் கதை, இராமாயணத்தில் உள்ளது போலவே, கலித் தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. 
 
திருமுருகாற்றுப்படையில் முருகன் மலைவாழ் மக்கள், குறவரின் தெய்வமாகக் கூறப்படுகிறான். முருகனை வணங்கி வேலாட்டம், வெறியாட்டம் முதலான ஆட்டங்களை மலைவாழ் மக்கள் நடத்தினார்கள். முருகன் பெண்கள் மேல் இறங்கும் தெய்வமாகவும் இருந்தான். இப்படி சாமி வந்த பெண்களை அமைதிப்படுத்த ஆற்றுனர்கள் எனும் ஷமான்கள் இருந்தார்கள். முருகனுக்குக் குருதி கலந்த அரிசிச் சோறு உணவாகப் படைக்கப்பட்டது என்கிறது திருமுருகாற்றுப்படை
 
முருகனை மேட்டுக்குடியினரும் வணங்கியதாகக் கூறுகிறது திருமுருகாற்றுப்படை. பிராமணர்கள் ஆறு அக்ஷர மந்திரம் ஓதி மலர்களைத் தூவி, முருகனை வணங்கினார்கள். செந்தூர் முருகனின் ஆலயத்தில் பாண்டிய மன்னர்கள் வந்து வழிபட்டார்கள்.
 
முருகன், தாரகாசுரனை அழிக்கப் பிறந்தவன். "அசுரர் குடி கெடுத்த ஐயா வருக" என்கிறது சஷ்டி கவசம். அவனது அவதார நோக்கம் அசுரரை அழித்து, தேவரைக் காத்தல். தேவரின் படை நடத்தும் தேவசேனாதிபதி அவன். தேவர்களின் சேனாதிபதி என்பதால் அவன் தேவசேனாதிபதி என அழைக்கப்பட்டானா அல்லது இந்திரனின் மகளான தேவசேனையின் பதி என்பதால் தேவசேனா பதி என அழைக்கப்பட்டானா என்பது சுவையான சொல் விளையாட்டு.
 
திருமுருகாற்றுப்படையில் முருகன் தேவசேனையை மணந்து, பின் தினைப்புனம் காத்த வள்ளியை மணந்ததும் குறிப்பிடப்படுகிறது. முதல் மனைவி தேவசேனையே என்பதாலும் வள்ளியை அவன் இரண்டாம் மனைவியாக மணந்தது, வள்ளியின் அந்தஸ்தைக் குறைப்பதாக ஆகுமா? திருமுருகாற்றுப்படை குறிப்பின்படி வள்ளியை அவன் மணந்தது தேவசேனைக்குத் தாங்க முடியாத அழுகையை வரவழைத்து அவள் கண்ணீரால் திருப்பரங்குன்ற மலை முழுவதும் நிரம்பியதாம்.
 
மற்றபடி இருதார மணம் புரிவோர், இரண்டாம் தாரத்தின் மேலேயே அதிக அன்புடன் இருப்பது இயல்பு. முதல் தாரத்தை விட இரண்டாம் தாரத்தைப் பிடித்ததனால் அல்லவா, அவர் இரண்டாம் தரம் மணம் புரிகிறார்? தசரதன் தன் கடைசி மனைவியான கைகேயியின் மேலே அன்புடன் இருந்தான். ஆக வள்ளியின் மேல் முருகனின் ஆசை எல்லை கடந்து இருந்ததையே நாம் அறிகிறோம். 
 
பின்னாளில் கார்த்திகேய வழிபாடு வடக்கே பொலிவிழந்தாலும் தமிழ்க் கடவுளாக முருகன் இன்னும் திராவிடர் மனதில் நிறைந்துள்ளான் என்பது மகிழ்ச்சியான விஷயமே.

--

செல்வன்

unread,
Dec 9, 2014, 11:50:58 PM12/9/14
to K Selvan

உலகின் மிக பெரிய ஆலயமான அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் என்பது தெரிந்திருக்கலாம். இரண்டாம் சூரியவர்மனால் கிபி 12ம் நூற்ராண்டில் கட்டபட்ட இந்த ஆலயத்தில் இன்றும் வழிபடபடும் விஷ்ணு சிலை உள்ளது. கம்போடிய சாயலில் உள்ள விஷ்ணுவை இங்கே கானலாம்

விஷ்ணுவுக்கு அங்கே படைக்கபடும் உணவில் சிக்கனும் உண்டு. அது அங்கே தவறாக கருதபடுவது இல்லை.






Shriviba Balamurugan

unread,
Dec 15, 2014, 5:25:07 AM12/15/14
to mint...@googlegroups.com
        வணக்கம்
   
        இன்று  இந்த விவாதத்தை படிக்க நேர்ந்ததால் என் கருத்தை பகிர்ந்துக்கொள்ள
        விரும்புகிறேன்.

       இப்பொழுதுள்ள  சமூகச்சூழ்நிலையில் மனிதன் ( ஆண்,பெண் இருவரும்) தனிமனித
       சுதந்திரம் என்ற பெயரிலும், என் சந்தோஷம், என் வாழ்க்கை என்று அனைத்திலும்
       சுயநலமாக வாழ்ந்து வரும் இக்காலவாழ்க்கையோடு ஒப்பிடுகையில்
       அக் காலப்புராணக்கதைகள் தங்கள் தரத்தை இழக்காமல் இருக்கின்றன.

       இருபெரும் காப்பியங்களை படைத்தவர்கள் ஆண்கள் என்பதால் அவர்களுக்குச்
       சாதகமாக இப்படைப்புகள் படைக்கப்பட்டவை என்பதுதானே உங்கள் கருத்து
       இக்காலப் பெண்களுக்கு பேச்சுரிமையும், எழுத்துரிமையும் 200% உள்ளது.
       அப்படி இருக்கையில் இக்கால தலைமுறையினர்க்கும், பெண்களுக்கும் ஏற்றபடி
       ஒரு மாபெரும் காப்பியத்தை ஒரு பெண் ஏன் இன்னும் படைக்கபடவில்லை?
       கேள்விகள் கேட்பதற்க்கு பதிலாக ஏன் புதிய படைப்புகளை படைக்ககூடாது ?
       அப்படைப்புகள் எதிர்காத்தலைமுறையினர் விவாதிக்கும் தளமாக இருந்திட
        உதவும் அல்லவா?

      கேள்விகளை கேட்பது பெண்களுக்கே உரித்தான குணம் எனவே
      குழந்தைகளைப்போல் கேள்விகள் கேட்கும் அந்நிலையிலிருந்து
      பதில்கள் சொல்லும் நிலைக்கு பெண்கள் முன்னேற வேண்டும்
      என்பது என் விருப்பம்
      
      திருமதி. ஸ்ரீவிபா
      

      
     

தேமொழி

unread,
Dec 15, 2014, 5:58:56 AM12/15/14
to mint...@googlegroups.com
////
இக்காலப் பெண்களுக்கு பேச்சுரிமையும், எழுத்துரிமையும் 200% உள்ளது.
       அப்படி இருக்கையில் இக்கால தலைமுறையினர்க்கும், பெண்களுக்கும் ஏற்றபடி
       ஒரு மாபெரும் காப்பியத்தை ஒரு பெண் ஏன் இன்னும் படைக்கபடவில்லை?
////



மாபெரும் காப்பியத்தைப் படைத்தால்தான் அது இலக்கியம் என்றில்லை ஸ்ரீவிபா.

இக்கால குட்டி ரேவதி ஜும்பா லஹிரி போன்றோரின் படைப்புகளோ, ராஜம் கிருஷ்ணன், கமலா தாஸ் ஆகியோர்  பதிவுகளோ அந்த வகையே.

இலக்கியம் எழுதப்பட்ட காலச்சூழ்நிலைகளும், அவை பரவும் விதமும் மாறுகின்றன. ஊடகங்கள் பல வந்துவிட்டன.

இயக்குநர் தீபா மேத்தா, கீதா இளங்கோவன் போல பெரும் படம், குறும்படம் படம் கூட எடுக்கலாம்.

பெண்கள் செய்யவும் செய்வார்கள். 

ஒளவையார் போல அந்தக் காலத்திலேயே எழுதியவர்களும்தான் உண்டே.

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Dec 15, 2014, 6:12:35 AM12/15/14
to மின்தமிழ்

2014-12-15 16:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
மாபெரும் காப்பியத்தைப் படைத்தால்தான் அது இலக்கியம் என்றில்லை ஸ்ரீவிபா.

​ஏன்டா சறுக்கி விழுந்தேன்னு கேட்டா அண்ணே அது கரடிவித்தைங்கற மாதிரிச் சொன்னா எப்படி.  அவங்க கேள்விக்கு நேரான நேர்மையான நெத்தியடியான பதிலச் சொல்லுங்க

பலமுறை படித்த நூல்.  இதில் விடை இருக்கும்
ருத்ராட்சப் பூனை


தேமொழி

unread,
Dec 15, 2014, 6:26:56 AM12/15/14
to mint...@googlegroups.com
அப்படியா.. எனக்கு இதைப் படிக்க வாய்ப்பிருந்ததில்லை...படித்துவிட்டு சொல்கிறேன்.

academic women studies பக்கம் போனதில்லையே 


..... தேமொழி

Shriviba Balamurugan

unread,
Dec 15, 2014, 8:50:11 AM12/15/14
to mint...@googlegroups.com
  தேமொழி அவர்களே நீங்கள் குறிப்பிட்டவர்களில் ஓரிருவரின் பெயர்கள்
      மட்டுமே  தெரிந்தவர்களாக உள்ளனர். அடுத்த இரண்டு தலைமுறையையும்
      தாண்டி இப்பெயர்களும் நிலைக்குமா? என்பது சந்தேகமே!
   
      இடைப்பட்ட காலத்தில் இந்த இரண்டு பெருங்காப்பியங்களையும்
      வெற்றி காணும்  வகையில் வேறு  எந்த படைப்புகளும் தோன்றவில்லை.
      இதன் காரணமாகத்தான் இவ்விரண்டு நூல்களும் பல காலங்களையும்,
      பல தலைமுறையினரையும் கடந்து புதுப்பொலிவுடன் இருக்கிறது.

      அதனால் இக் கதையினால் என்ன பயன் என்று கேட்பதை தவிர்த்து, பல
      தலைமுறையையும் தாண்டி வாழும் படைப்புகள் தோன்றினால் சந்தோஷமே.

செல்வன்

unread,
Dec 15, 2014, 11:04:43 AM12/15/14
to mintamil
பெண்கள் எழுதினால் தான் இலக்கியத்தில் பெண்களுக்கு நன்மை கிடைக்கும் என நினைப்பதே பெரும் தவறு

இராமாயணம், பாரதம், திருக்குறளில் இருப்பதை விட உயர்வான பெண்கள்நலன் சார்ந்த கருத்துக்கள் எந்த நூலிலும் சொல்லபட்டது கிடையாது

பல ஆயிரம் தலைமுரையாக இந்த நற்கருத்துக்கலை படித்துதான் பெண்கள் வாழ்ந்தார்கள். இன்று இவற்றை வசைபாடினாலும் இதில் கூறப்படும் குணங்களை இன்றைய இந்திய பெண்கள் கொன்டிருப்பதால் தான் இந்திய குடும்பங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலைய நாடுகளில் குடும்ப அமைப்பு சீரழிந்து நிற்பது போல் இந்தியாவில் ஆகவில்லை. காரனம் இந்த 3 நூல்கள்

கணவனை தெய்வமாக நினைத்த, நினைக்கும் பெண்களால் தான் இந்திய குடும்ப அமைப்பு அழியாமல் தப்பி பிழைத்தது. இவற்றை விட மேலான பெண்கள் நலன் போற்றும் (பெண்ணிய நலம் அல்ல) நூலை இனி யாரால் எழுத முடியும் என்பது எனக்கு தெஇரியவில்லை

செல்வன்

unread,
Dec 15, 2014, 11:25:08 AM12/15/14
to mintamil
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை

இந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.

தாயை தெய்வமாக கூறியது தமிழ் மரபு
அண்ணியை தாயாக நினைத்தது இராமாயணம்
இதில் பெண்களை தெய்வமாக வழிபடுவதா என எந்த ஆணும் கோபித்ததாக எனக்கு தெரியவில்லை

ஆனால் கணவன் தெய்வம் என வள்ளுவர் கூறியதால் என்றால் குய்யோ, முய்யோ என கூக்குரல்கள் :-)

சமத்துவம் என்ற இல்லாத காமடி நிலையை வைத்து அளப்பதால் வரும் சிக்கல்களே இவை எல்லாம். 

வடநாட்டு பெண்கள் பலரும் கர்வாசோத் எனும் விழாவில் நாள் முழுக்க விரதம் இருந்து கணவனின் காலை கழுவி வணங்கி அதன்பின்னரே உணவு உண்பார்கள். அது அவர்கள் மரபு, கலாச்சாரம்.

உலகில் தாய்க்கு சமமான உறவு எதுவும் கிடையாது என்பார்கள்.

ஆனால் தாய்மையை விட மேலான உறவு ஒன்று உண்டு. அதுவே தாரம்

கணவந் மனைவி உறவு நம் நாட்டில் வெட்டிவிட்டு போகும் உறவு அல்ல. அது  ஆயிரமாயிரம் ஆன்டு செழித்து வளரவேன்டிய பயிர். அதில் ஈகோ பார்ப்பதில் பலன் கிடையாது

பெரியவர்களை தெய்வமாக நினைக்கவேன்டும் என்பது குடும்ப உறவுகளில் மரபு

அண்னனை/அக்காவை தெய்வமாக நினைப்பதில் ஈகோ கிடையாது.

தாயை/தந்தையை தெய்வமாக நினைக்க சொன்னால் அதில் ஈகோ கிடையாது.

கணவன் தெய்வம் என்றால் வானமே இடிந்து விழுந்துவிடுவது போல் ஏன் பதறவேண்டும்? அதில் ஈகோவுக்கு என்ன இடம்?

மற்றபடி உலகின் தெய்வம் ஆதி பரம்பொருளே. தாய் தெய்வம், தந்தை தெய்வம், கனவன் தெய்வம் என்கையில் அதை ஒரு குறியீடாக தான் வள்ளுவர் கூறுகிறாரே ஒழிய இல்லறம், பந்தபாசம் முதலிய பற்றுக்களை அறுத்து பற்றற்ரான் தாளினை பற்றும் ஆண் பெண்ணுக்கு பிறவிபெரும்கடலில் நீந்துதல் அதன்பின் கிடையாது

அதனால் இன்று பெண்கள் கணவன் காலில் விழுந்து கும்பிட வேண்டும் என நான் கூறவில்லை. அப்படி செய்யும் மரபை இழிவாக கருதாது அதுவும் பெண்கள் சுயவிருப்பில் தேர்ந்தெடுக்கும் உயர்வான தேர்வே என்பதை புரிந்து கொண்டால் போதும்

Nagarajan Vadivel

unread,
Dec 15, 2014, 12:13:01 PM12/15/14
to மின்தமிழ்

2014-12-15 21:54 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை

இந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.
 
​இப்படியும் ஒரு விளக்கம்​

Oru Arizonan

unread,
Dec 15, 2014, 1:50:56 PM12/15/14
to mint...@googlegroups.com
Logical questions, and logical way of thinking, Thirumati Srivibha!

Best regards,
Oru Arizonan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 15, 2014, 2:02:12 PM12/15/14
to mint...@googlegroups.com
//தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை

இந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.//

செல்வன் அவர்களே,

இதற்குமுன் இதே குரளுக்கு ஒரு அரிசோனனின் விளக்கம் முன்பே கொடுக்கப்பட்டுள்ளது.  அதை மீண்டும் பகிருகிறேன் (மறுபகிர்வு)...

... அதைப்போல இருந்துவிடக்கூடாது என்றுதான், பல கற்றறிந்த முனிவர்கள் பலர் சூக்தங்களுக்கும், உபநிஷங்களுக்கும் விளக்கம் எழுதினார்கள்.  திருக்குறளுக்கு எத்தனை உரைகள் என்று தாங்களே அறிவீர்கள்.  "அணுவைத் துகழ்த்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள் " என்றுதானே ஔவை அறிவித்தாள்.  ஏழு கடல்களுக்கு ஒப்பான கருத்துக்கள் இருவரிகளுக்குள் அடங்குவதேன்றால் அக்குறளும் ஒரு சூத்திரமாகத்தானே இருக்கவேண்டும்!  எனவேதான் திருக்குறள் மறைந்திருக்கும் கருத்துக்களை கொண்டிருப்பதால் தமிழ்மறை என்று ஏத்தப்படுகிறது. 

உதாரணத்திற்கு இரண்டு மூன்று குறள்களை மேற்கோள் காட்டுகிறேன்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யுமழை 

என்ற குறளைப் படித்தவுடன், எங்காவது ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யுமா, திருவள்ளுவருமே பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் என்றும், இது திருவள்ளுவரே எழுதவில்லை, பின்னால் புகுத்தப்பட்டது என்று உரைப்போரும் இருக்கலாமல்லவா!  இன்னும்பலர் திருவள்ளுவரின் மனக்கிடக்கையை மேலை நாட்டு முறையில் மனநில ஆராய்ச்சியும் செய்ய முற்படலாம் அல்லவா!

இப்பொழுது என் விளக்கத்தைச் சிறிது செவிமடுங்கள்.  இது ஒரு அரிசோனனின் விளக்கம் மட்டுமே!  இதை யாரும் பூப்பூ என்றும் ஊதிவிடலாம், இல்லை, இந்த அரிசோனன் சொல்வதும் சிந்திக்கத் தகுந்ததே என்றும் சற்று நினைக்கலாம்.  இங்கு நான் திருக்குறளை சூத்திரம், மறை என்று நினைத்து வணகியே என் விளக்கத்தை எழுதிகிறேன்.

யாரும், எவரையும் தொழுதெழுவதேன்றல் அவர் வணங்கத்தக்கவர் ஆகுதல் வேண்டும்.  இல்லாவிடில் அது நடிப்பே.  எவருக்கு ஒருவர் கடவுளுக்கு நிகராகத் தென்படுகிறார்களோ, அவரைத்தான் உண்மையான, உறுதியான உள்ளக்கிடக்கையுடன் தொழுதெழுவார்கள்.  கடவுளுக்கு மட்டுமே அந்த மேலான இடம் கொடுக்கப்படும். (இப்பொழுது கடவுள் மறுப்பு விவாதத்தைச் சிறிது தள்ளிவைத்துவிட்டு மேலே தொடர்வோம்).  

அப்படிக் கடவுளின் மீது, எப்பற்றும் அற்ற கடவுளின் மீது பற்று வைத்தவர்களுக்கு, சாதனை செய்தவர்களுக்குப் பலவித சித்திகள் கிட்டும் என்று  நம்பப்பட்டது.  அட்டமாசித்திகள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  அதைப்போல ஒரு சித்தியே மழையை பொழியவைப்பது என்பது.  இப்படி "பெய்யெனப் பெய்யுமழை" என்று செந்நாப்போதார் ஓதிச் சென்றிருப்பதும் ஒரு உவமைச் சொல்லேயன்றி வேறில்லை என்பது எனது (எனதுமட்டும்) துணிபு.  வள்ளுவப் பெருந்தகையும் வெறும் கூற்றினால் மழை பெய்யாது என்று அறியாதவர் அல்ல. 

ஒரு மனிதன் கடவுளுக்கு நிகராக நடந்துகொண்டால்தான் அவனுக்கு அந்தத் தகுதி கிட்டுகிறது.  ஒரு கணவன் அப்படி நடந்து கொண்டால்தான் அவனது மனைவி அவனுக்கு அத்தகைய மதிப்பைக் கொடுப்பாள், அக்கணவனும் அப்படி நடந்து அவளது நன்மதிப்பைப் பெறவேண்டும் என்று சொல்லாமல் புரியவைக்கிறார் வள்ளுவர் பெருமான்.  கணவனைப் பெண் வணங்கவேண்டும் என்ற நினப்பல்ல அவருக்கு, கணவன் எப்படி நடந்துகொண்டு, மனைவி மட்டுமல்ல, மற்ற எவரின் நன்மதிப்பை எப்படிப் பெறவேண்டும் என்ற அறிவுரை வழங்குகிறார் 

"வலியது கூர்ங் கோட்டதாயினும் யானை 
வேறூஉம் புலி தாக்குறின்"

என்று சொல்லவந்ததை வெளிப்படையாகச் சொல்லாத இக்குறளைப் போன்றதே முதல் குறளும்.

அப்படியானால், மனிதன் எப்பொழுது தெய்வமாவான் என்பதைச் சொல்லாமலா விட்டுவிட்டார் வள்ளுவர்?

இல்லை, இல்லை,  அதையும் வேறொரு இடத்தில் சொல்லி இருக்கிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்தில் வைக்கப்படும்.

என்று சொல்லி நிறைவு செய்கிறார்.

இந்த உலகத்தில் எந்தவிதத்தில், அறநெறிகளைப் பின்பற்றி, அனைவரும் மெச்சி வணங்கும்படி ஒருவர் வாழ்கிறானோ, அவன்தான் வானில் (இங்கு வான் என்பது வெட்டவெளி.  வெற்றிடம்.  அது நமது இதயம்.  உள்.  அந்த உள்ளத்தைக் கடந்து நிற்பவர் கடவுள்.  நமது இதயத்தில் இருக்கும் வெற்றிடமும், விண்வெளியும் ஒன்றே என்று குறிப்பாலுணர்த்துகிறார் வள்ளுவமுனி) உறையும் தெய்வம் ஆகிறான் என்றும் தெரிவிக்கிறார்.

மனிதன் எப்படி வாழுதல் வேண்டும், அவன் எப்படி வாழ்ந்தால் அவனை அவனது மனைவி போற்றுவாள் என்று அறிவுரை வழங்குகிறார்.  அதுமட்டுமன்றி, அப்படிப்பட்ட கணவனிடம் மனைவி எப்படிப்பட்ட பற்றையும், மதிப்பையும் வைக்கவேண்டும் என்று சொல்லிச் செல்கிறார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Dec 15, 2014, 2:04:37 PM12/15/14
to mintamil
2014-12-15 11:12 GMT-06:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இப்படியும் ஒரு விளக்கம்​


சமத்காரமான விளக்கம்

ஆனால் "தொழுதெழுவாள்" என்பதற்கு பரிமேலழகர் அளிக்கும் விளக்கம் "தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்' என்றார்"

ஆக அதிகாலை துயில் எழுகையிலேயே கணவனை தொழுதபடிக்கு விழிக்கும் பத்தினிப்பெண் தெய்வத்திற்கு வேறு கடவுள் வழிபாடு அவசியம் இல்லை. அத்தகையோள் பெய் என கூற பெய்யும் மழை என்பது ஐயன் வாக்கு.



--

செல்வன்

unread,
Dec 15, 2014, 2:12:54 PM12/15/14
to mintamil
அரிசோனரே

நல்ல விளக்கத்துக்கு நன்றி

என் கருத்து என்னவெனில் 

"மகன் எத்தகைய தீயவனாக இருந்தாலும் தாய் அவனை விட்டு கொடுப்பது கிடையாது"

"தாய் எத்தகையவளாக இருந்தாலும் அவளை தொழ வேண்டியது பிள்ளைகளின் கடமை"

அதேபோல் "கணவன் கோவலன் போன்ற காமுகனாக இருந்தாலும்" அவனை ஒரு மனைவி கைவிடல் கூடாது. இதற்கு சிலப்பதிகாரமே சான்று

உலகம் பர்பெக்ட் ஆன உலகம் கிடையாது. உறவுகள் நிலைத்து நீடிக்க மன்னிக்கும் குணம் அவசியம்

எத்தகைய தீயகுணம் உள்ளவனாக இருந்தாலும் அவன் மனைவியின் காதல் அவனை நல்லவனாக மாற்றும். அவன் ஆயுளை நீடிக்கும். சாவித்திரி, சத்தியவான் முதல் பல உதாரணங்கள் உள்ளன.

நல்லவனாக இருக்கும் கணவன் மட்டுமே தொழுதற்கு உரியவன் என வள்ளுவர் கூறியதாக நான் நினைக்கவில்லை. எத்தகைய கணவனையும் தொழுதெழுவதையே வள்ளுவர் குறிப்பிட்டார்

செல்வன்

unread,
Dec 15, 2014, 2:19:01 PM12/15/14
to mintamil
மற்றபடி வானுறையும் தெய்வம் போன்ற நற்குணம் உள்ள கணவனை மட்டும் வணங்குவேன் என மனைவியர் துணிந்திருந்தால் ஒற்றை ஆள் உலகில் தேறியிருப்பாரா என்பது சந்தேகமே :-)

அனைத்து தாயும் தன் குழவிக்கு தெய்வம். அத்தனை கெட்ட குணம் இருந்த கைகேயியை கூட இராமன் கடைசிவரை தெய்வமாக, தாயாக அல்லவா நினைத்தான்?

தசரதன் போன்ற "கல்யாண" குணங்கள் நிரம்பிய ஒரு தந்தையையும் இராமன் தெய்வமாக நினைத்தான்

இராமனின் நற்குனமே கைகேயி மனதை மாற்றியது

அதுபோல் எத்தகைய தீயவனாக கணவன் இருந்தாலும் மனைவியின் கற்பும், பதிவ்ரதா வ்ரதமும் அவனை திருத்து நல்வழிக்கு கொண்டுவரும். அப்பேர்ப்பட்ட பதிவிரதையின் பக்திக்கு பாத்திரமாகும் தகுதியை அடைய அவன் முயல்வான்

Oru Arizonan

unread,
Dec 15, 2014, 5:18:36 PM12/15/14
to mint...@googlegroups.com
//அதுபோல் எத்தகைய தீயவனாக கணவன் இருந்தாலும் மனைவியின் கற்பும், பதிவ்ரதா வ்ரதமும் அவனை திருத்து நல்வழிக்கு கொண்டுவரும். அப்பேர்ப்பட்ட பதிவிரதையின் பக்திக்கு பாத்திரமாகும் தகுதியை அடைய அவன் முயல்வான்//

சட்டையை மாற்றுவதுபோல வாழ்க்கைத் துணைவர்களை (ஆண், பெண் இருவருமே) மாற்றும் அளவுக்கு நிலைமை மாற்றிவிட்டது.  இங்கு நான் ஒருவன்தான் வாழ்க்கைத் துணைவர் (life companion) என்று எழுதிகிறேன்.  இப்பொழுது வாழ்க்கைத் துணை என்பது, வாழ்க்கைக் கூட்டாளி, வாழ்க்கைப் பங்குதாரர் (life partner) என்று ஆகிவிட்டது.  

எனவே, பெண்களிடம் மட்டுமே பொறுமையையும், பதிபக்தியையும் எதிர்பார்ப்பது சரியாகாது.  கணவன்மார் வாழ்வாங்கு வாழ்ந்தால்தான் இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மனைவிமார்  தொழுதெழாவிட்டாலும், தூக்கி எறியமாட்டார்கள்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Dec 15, 2014, 8:47:39 PM12/15/14
to mintamil

2014-12-15 16:18 GMT-06:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
சட்டையை மாற்றுவதுபோல வாழ்க்கைத் துணைவர்களை (ஆண், பெண் இருவருமே) மாற்றும் அளவுக்கு நிலைமை மாற்றிவிட்டது.  இங்கு நான் ஒருவன்தான் வாழ்க்கைத் துணைவர் (life companion) என்று எழுதிகிறேன்.  இப்பொழுது வாழ்க்கைத் துணை என்பது, வாழ்க்கைக் கூட்டாளி, வாழ்க்கைப் பங்குதாரர் (life partner) என்று ஆகிவிட்டது.  

ஐயா

அம்மணமாய் மக்கள் திரியும் ஊரில் கோவணம் கட்டியவன் கிறுக்கன் என்பார்கள்.

அந்த மாதிரி மொத்த உலகமும் கிறுக்கு பிடித்து அலையும் காலகட்டத்தில், கலங்கரை விளக்கமாய் மாறாது நின்று அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பே திருக்குறள் மாதிரி நூல்களுக்கு உள்ளது.

மாறவேண்டியது குறள் அல்ல, மக்கள்.

கெட்டு திருந்தி கடைசியில் புகலிடம் தேடி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவாவது மதம், புனித நூல்கள் மாதிரி அமைப்புகள் தம் கொள்கையை விட்டுகொடுக்காமல் இருக்கவேண்டும்.

/////எனவே, பெண்களிடம் மட்டுமே பொறுமையையும், பதிபக்தியையும் எதிர்பார்ப்பது சரியாகாது.  கணவன்மார் வாழ்வாங்கு வாழ்ந்தால்தான் இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் மனைவிமார்  தொழுதெழாவிட்டாலும், தூக்கி எறியமாட்டார்கள்.//////////////

ஆண்களுக்கு எப்பொறுப்பும் இல்லை என வள்ளுவர் கூறவில்லை

"அன்பும், அறனும் கொண்டு" இல்வாழ்க்கை நடக்கவேண்டும் என கூறுகிறார்.

அதுபோக திருக்குறளில் உள்ள அனைத்து அறிவுரைகளும் ஆணுக்கு பொருந்துவனவே ஆகும்.

அதை பின்பற்றினாலே வாழ்க்கையில் ஒருவன் உயர்ந்துவிடுவான்.


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 16, 2014, 1:40:44 AM12/16/14
to mintamil

வணக்கம்.

http://thirukural-kalai.blogspot.com/2014/01/55.html இப்படியும் ஒரு விளக்கம் என்னிடம் உள்ளது.


On 15-Dec-2014 10:43 pm, "Nagarajan Vadivel" <radius.co...@gmail.com> wrote:
>
>
> 2014-12-15 21:54 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
>>
>> தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
>> பெய்யென பெய்யும் மழை
>>
>> இந்த குறளுக்கு வள்ளுவர் கடுமையாக விமர்சிக்கபடுகிறார்.

எவ்வளவுதான் கடுமையாக விமர்சித்தாலும், பதில் சொல்ல திருவள்ளுவர் வரவே மாட்டார் என்ற தைரியம்தான்.  

அப்படியே வந்தாலும், “நீங்கள்தான் திருவள்ளுவர் என்பதற்கு என்ன ஆதாரம்?“ என்று கேட்டு, ஆள்மாறாட்டம் வழக்குத் தாக்கல் செய்துவிடலாம் என்ற தைரியம்தான்.

அன்பன்

கி.காளைராசன்


Reply all
Reply to author
Forward
0 new messages