உலகநாதர் இயற்றிய உலகநீதி

2,018 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 4, 2015, 11:14:42 PM3/4/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இக்கட்டுரை இரு பாகங்களாக சிறகு இதழில் வெளி வந்தது.

நன்றி: சிறகு , Feb 14, 2015; Feb 21, 2015

உலகநாதர் இயற்றிய உலகநீதி

needhinool1உலகநீதி என்ற நீதிநூல் உலகநாதர் என்ற புலவரால் எழுதப்பட்டுள்ளது, இந்நூலின் இறுதிவரிகள் இயற்றிய புலவரின் பெயரைத் தருகின்றன. பதின்மூன்று ஆசிரிய விருத்தப்பாக்களைக் கொண்ட இந்த நூலின் நோக்கம், உலக மக்களுக்குப் பொதுவான நீதிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது. பாக்களின் ஒவ்வொரு அடியும் ஒரு நீதியை அறிவுறுத்துகிறது.   பாடல் வரிகளின் மூலம் உலகநாதர் ஒரு முருகபக்தர் என்பது மட்டுமே தெரிகிறது. இத்தகவலைத் தவிர இவரைப்பற்றிய பிற தகவல்களோ, காலமோ, வரலாறோ அறியக்கூடவில்லை. தமிழிலக்கியம் தரும் நீதி நூல்களின் தொகுப்பில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த நூல்களுள் உலகநாதர் இயற்றிய உலகநீதியும் ஒன்று.

நீதி என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்வது இன்றியமையாததாகிறது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் விளக்க உரையின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய பாடல் வரிகளை பள்ளிச் சிறுவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எழுதியுள்ளார் உலகநாதர். ஒலி நயத்தோடு பாடவும் அதனால் மனதில் இருத்தவும் கூடிய வரிகளைக் கொண்ட பாடல்களாக இவை விளங்குகின்றன. உலகநீதியைப் பள்ளியில் படித்த நினைவில்லையே என்று வியப்பவர்களுக்கு “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்” என்ற வரிகள் சட்டென இப்பாடல் படித்ததை நினைவிற்கு கொண்டு வந்துவிடும்.

உலகநீதி புராணத்தை உரைக்கவே

கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு

என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன. ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும், பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.

பதினொன்றாவது பாடலும், பதின்மூன்றாவது பாடலும் அமைப்பில் சற்றே மாறுபட்டவை.   பதினொன்றாம் பாடல் முழுவதும் கோர்வையாக ஒருகருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல். எனவே வரிக்கு வரி ஒரு நீதியை குறிக்கும் பொதுவான முறையில் இருந்து பதினொன்றாவது பாடல் மாறுபட்டுள்ளது.

இப்பாடல் நமக்கு இன்றியமையாச் சேவை செய்த ஐந்து வகை மக்களை ஏமாற்றாது கூலி கொடுக்க வேண்டும், அவர்கள் நமக்கு செய்த ஊழியத்திற்கு ஊதியம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. துணி வெளுத்துக் கொடுக்கும் வண்ணான், முடிதிருத்தும் நாவிதன், கல்வி அல்லது கலை கற்பித்த ஆசிரியர், குலம் தழைக்க மகப்பேறு பணியாற்றிய மருத்துவச்சி, நோய் தீர்த்த மருத்துவன் ஆகியவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரமான வருமானத்தை இனிய சொற்களுடன் அளிக்காது ஏமாற்றுபவர்கள் எமனால் துன்புறுத்தப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் கோணத்தில் வலியுறுத்தியுள்ளார் உலகநாதர்.

அஞ்சு பேர் கூலியைக் கைக் கொள்ள வேண்டாம்

     அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

     சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

     மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன் சொலுடன் இவர் கூலி கொடாத பேரை

     ஏதேது செய்வானோ ஏமன் தானே!   … 11

மேற்சொன்ன பாடலின் எட்டு வரிகளைப் போலவே 13 வது அல்லது இறுதிப்பாடலின் எட்டு வரிகளும் பொது நடையில் இருந்து விலகியுள்ளது. இப்பாடலின் முதல் நான்கு வரிகளிலும் கல்வியும் பொருளும் தேடி அடைந்த தன்னைப்பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, அழகிய தமிழால் முருகனைப் போற்ற விரும்பும் உலகநாதனாகிய நான் பாடிவைத்த இந்தப் பாடல்களை விரும்பி கற்றவர்களும் கேட்டவர்களும் இந்த நீதிகளைக் கடைபிடிப்பதால், மகிழ்ச்சியும் புகழும் பெற்று வாழ்வார்கள் என்று சொல்லிச் செல்கிறார் உலகநாதர்.

ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி

     அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்

     உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

     கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

     பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே! … 13

ஒவ்வொரு பாடலின் இறுதி இரு வரிகளை முருகனை வாழ்த்த ஒதுக்கி வைக்கிறார். “மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்ற போற்றுதல் எட்டு முறை கூறப்படுகிறது. எவ்வாறு கடவுள் வாழ்த்துப் பாடலில் பிள்ளையாரை நேரடியாகக் குறிப்பிடாமல் கரிமுகன் என்று குறிப்பிட்டாரோ, அது போல முருகனை “குமரவேள்” என்று இரு இடத்திலும், ஒன்பது முறை “வள்ளி பங்கன்” என்றும், “மயிலேறும் பெருமான்” என்று எட்டு முறையும் குறிப்பிடுகிறார். முருகனை தேவர் குலமகள் தெய்வானையின் மணாளனாக இவர் பார்க்கவில்லை, குறவள்ளியின் கணவனாக மட்டுமே போற்றுகிறார். ஓரிடத்தில் மட்டும் திருமாலின் தங்கையான உமையின் மைந்தன் என்றுக் குறிப்பிடுகிறார்.

“குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒருமுறையும், “குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!” என்று ஒரு முறையும், “திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!” என்று மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டு திருவடியையும், நாமத்தையும், திருக்கை வேலாயுதத்தையும் போற்றுகிறார். இந்த வேறுபாடுகளைத் தவிர்த்து “வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!” என்பதே தனது நெஞ்சிடம் புலவர் மன்றாடும் முறையாக இருக்கிறது. பாடலில் இறுதி இருவரி போற்றுதாலாக வரும் 22 வரிகளையும் பிரித்தெடுத்து பாடினாலும் வேலவனைப் பாடும் அழகிய சிறு போற்றுதல் பாடல் கிடைக்கும். உலகநீதி ஏதும் குறிப்பிடப்படாத இறைவணக்கப் பாடல்வரிகள் மட்டுமே இவை.

இறைவணக்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது …

(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்              ( 7 )

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       ( 8 )

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்             (15)

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (16)

வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்         (23)

     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (24)

மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்       (31)

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (32)

வாழ்வாரும் குறவருடை வள்ளி பங்கன்           (39)

     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (40)

சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்            (47)

     திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே!(48)

குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்          (55)

     குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே!             (56)

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்             (63)

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே!       (64)

மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்       (71)

     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (72)

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்            (79)

     குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே!             (80)

மாறான குறவருடை வள்ளி பங்கன்        (95)

     மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!       (96)

முதல் இருவரி காப்புப்பாடல், கூலி தருவதை வலியுறுத்தும் 11 வது பாடல் மற்றும் பாடலின் ஆசிரியர் குறிப்பு தரும் 13 வது பாடல் ஆகியவற்றின் இரு எட்டு வரிகள், வள்ளிபங்கன் மயிலேறும் பெருமானை வாழ்த்தும் 22 வரிகள் தவிர்த்து ஏனைய 66 பாடல்வரிகளும் உலகநீதியை அறிவுறுத்தும் பாடல்வரிகள், அப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன …

(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்          ( 1 )

     ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்     ( 2 )

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்          ( 3 )

     வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்    ( 4 )

போகாத இடந்தனிலே போக வேண்டாம்           ( 5 )

     போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்     ( 6 )

நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்   ( 9 )

     நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்      (10)

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்           (11)

     நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்     (12)

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்         (13)

     அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்(14)

மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்   (17)

     மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்   (18)

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்     (19)

     தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்   (20)

சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்              (21)

   சினந்து இருந்தார் வாசல் வழிச் சேரல் வேண்டாம்   (22)

குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்             (25)

   கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்     (26)

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்         (27)

     கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்   (28)

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்(29)

     கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்     (30)

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்(33)

மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்(34)

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்               (35)

     வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்       (36)

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்           (37)

     தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்    (38)

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத்திரிய வேண்டாம்(41)

     மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்   (42)

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்       (43)

     முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்   (44)

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்     (45)

     வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்      (46)

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்        (49)

     கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்       (50)

பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்  (51)

     பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்     (52)

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்           (53)

     எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்    (54)

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்            (57)

     செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்  (58)

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்      (59)

     உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்(60)

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்         (61)

     பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்     (62)

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்              (65)

     மனம் சலித்துச் சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்      (66)

கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்             (67)

     காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்     (68)

புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்  (69)

   புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்    (70)

மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்     (73)

     வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்  (74)

திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்              (75)

     தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்(76)

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்  (77)

     ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்         (78)

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்      (89)

     கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(90)

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்        (91)

     துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்      (92)

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்            (93)

     வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்     (94)

மேற் கூறிய பாடல் வரிகளின் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

(அடைப்புக் குறிக்குள் பாடல் வரியின் எண் கொடுக்கப்பட்டுள்ளது)

(1)           நூல்களை கற்காமல் ஒருபொழுதும் நீ வாளா இராதே

(2)           யார் ஒருவர்க்கும் தீமை பயக்கும் சொற்களை சொல்லாதே

(3)           பெற்ற தாயை ஒருபொழுதும் மறவாதே

(4)           வஞ்சகச் செயல்களை செய்யுங் கயவர்களுடன் சேராதே

(5)           செல்லத்தகாத இடத்திலே செல்லாதே

(6)           ஒருவர் தன்முன்னின்றும் போன பின்னர் அவர் மீது புறங்கூறி அலையாதே

(9)           மனதார பொய்யை சொல்லாதே

(10)         நிலைபெறாத காரியத்தை நிலைநாட்டாதே

(11)         நஞ்சுபோன்ற மக்களுடன் ஒரு பொழுதும் சேர்ந்து பழகாதே

(12)         நல்லவரிடம் நட்பு கொள்ளாதவர்களுடன் நட்புக்கொள்ளாதே

(13)         அஞ்சாமல் தன்னந்தனியான வழியில் செல்லாதே

(14)         தன்னிடத்து வந்துஅடைந்தவரை ஒரு பொழுதும் கெடுக்காதே

(17)         உள்ளமானது சென்றவாறெல்லாம் செல்லாதே

(18)         பகைவனை உறவினன் என்று நம்பாதே

(19)         பொருளை வருந்தித் தேடி உண்ணாமல் மண்ணிற் புதைக்காதே

(20)         அறஞ் செய்தலை ஒரு பொழுதும் மறக்காதே

(21)         சினம் தேடிக்கொண்டு அதனால் துன்பத்தினையும் தேடாதே

(22)         வெகுண்டிருந்தாருடைய வாயில் வழியாக செல்லாதே

(25)         ஒருவர் செய்த குற்றத்தை மாத்திரமே எடுத்துச்சொல்லி அலையாதே

(26)         கொலையும் திருட்டும் செய்கின்ற தீயோருடன் நட்புச்செய்யாதே

(27)         நூல்களைக் கற்றவரை ஒரு பொழுதும் பழிக்காதே

(28)         கற்புடைய பெண்களை சேர்தற்கு நினையாதே

(29)         எதிரேநின்று அரசனோடு மாறான சொற்களை பேசாதே

(30)         கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்காதே

(33)         மனையாளை வீட்டில் துன்பமுற வைத்து, அவளோடு கூடி வாழாமல் அலையாதே

(34)         மனைவியின் மீது குற்றமான சொல் யாதொன்றும் சொல்லாதே

(35)         விழத்தகாத பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிடாதே

(36)         கொடிய போரில் புறமுதுகு காட்டி திரும்பிவாராதே

(37)         கீழான நடவடிக்கை கொண்டோருடன் சேராதே

(38)         எளியோரின் மீது தீங்கு சொல்லாதே

(41)         பயனில்லா சொற்கள் கூறுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவரோடு கூட அலையாதே

(42)         நம்மை மதிக்காதவருடைய தலைவாயிலில் அடியெடுத்து வைக்காதே

(43)         தாய், தந்தை, தமையன், ஆசான், அறிவிற்பெரியோர் அறிவுரைகளை மறக்காதே

(44)         முன்கோபமுடையாருடன் சேராதே

(45)         கல்வி கற்பித்த ஆசிரியருடைய சம்பளத்தை கொடுக்காமல் வைத்துக்கொள்ளாதே

(46)         வழிப்பறி செய்து திரிந்து கொண்டிருப்பவருடன் சேராதே

(49)         செய்யத்தக்க காரியங்களை, அவற்றை செய்யும்வழியை ஆராயாமல்   முடிக்க முயலாதே

(50)         பொய்க்கணக்கை ஒருபொழுதும் பேசாதே

(51)         போர் செய்வாருடைய போர் நடக்கும் இடத்தின்கண் போகாதே

(52)         பொதுவான இடத்தை ஒரு பொழுதும் ஆக்கிரமிக்காதே

(53)         இரு மனைவியரை ஒருபொழுது தேடிக் கொள்ளாதே

(54)         எளியாரை பகைத்துக் கொள்ளாதே

(57)         சேரத்தகாத இடங்களில் சேராதே

(58)         ஒருவர் செய்த உதவியை ஒருபொழுதும் மறக்காதே

(59)         ஊரெல்லாம் திரியும் கோள் சொல்பவராக இருக்காதே

(60)         உறவினரை இகழ்வாகப் பேசாதே

(61)         புகழ் அடைதற்கு உதவும் செயலை செய்யாது விலக்காதே

(62)         ஒருவருடைய அடிமையைப் போல அவருடன் துணையாக அலையாதே

(65)         ஒரு நிலத்தில் நின்று அந்த மண்ணைப்பற்றி ஒருதலைச் சார்பாகப் பேசாதே

(66)         உள்ளம் சலித்து யாருடனும் சண்டையிட்டு அலையாதே

(67)         இரக்கமில்லாது பிற உயிர்கட்குத் துன்பஞ் செய்யாதே

(68)         கண்ணால் காணாதவற்றைப் பற்றிக் கட்டுக்கதைகள் சொல்லாதே

(69)         கேட்போர் மனதைப் புண்படும் சொற்களை சொல்லாதே

(70)         புறம் சொல்லி அலைபவருடன் சேராதே

(73)         வீரமொழி கூறி சண்டைக்காக அலைபவருடன் நட்புக்கொள்ளாதே

(74)         வாதாடி ஒருவரை அழிக்கும் நோக்கில் கெடுவழக்கு சொல்லாதே

(75)         வலிமைகூறி, கலகம் செய்து அலையாதே

(76)         தெய்வத்தை ஒருபொழுதும் மறவாதே

(77)         இறக்கநேரிடுமாயினும் கூட பொய்யை சொல்லாதே உண்மை

(78)         இகழ்ச்சி செய்த உறவினரை விரும்பாதே

(89)         ஒரு குடும்பத்தை பிரிவுபடுத்தி கெடுக்காதே

(90)         பூவைத் தேடி கொண்டையின் மீது முடிக்கும் பகட்டையொத்த செயலைச் செய்யாதே

(91)         பிறர்மீது பழி ஏற்படும்வகையில் அவர் வாழ்வில் தலையிட்டு அலையாதே

(92)         தீயவர்களாகி ஊர்தோறும் அலைவருடன் சேராதே

(93)         பெருமையுடையனவாகிய தெய்வங்களை இகழாதே

(94)         மேன்மையுடைய பெரியோர்களை வெறுக்காதே

உலகநீதி பாடல் வரிகள், தான் கூறும் அறிவுரைகளை எதிர்மறையாகவே கூறிச் செல்கிறது. இம்முறையை புலவர் கையாண்டதை, அவர் சொல்லும் கருத்தை வலியுறுத்தும் முயற்சியாக, எச்சரிக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அறிவுரைகளாகக் கொள்ளலாம். இதை ஒட்டிய சுவையான தகவல் ஒன்றும் உண்டு. திரு அருட்பிரகாச வள்ளலார் இளமையில் கல்வி பயிலும்பொழுது “வேண்டாம், வேண்டாம்” என்று முடியும் இப்பாடல் வரிகளைக் கண்டு வியப்புற்றாராம். ஏன் அறநெறிகளை “வேண்டும், வேண்டும்” என்று எழுதலாகாது என்ற எண்ணம் கொண்டு “உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்” என்ற பாடலை எழுதியதாகக் கூறப்படுகிறது.

உலகநீதி பாடலகளில் காணும் வெறும் 66 வரிகளே உள்ள அறநெறிப் பாடல் வரிகளை சிறுவயதில் பொருள் புரியாமல் மனனம் செய்தாலும்கூட, வளர்ந்த பின்னர் வாழ்நாள் முழுவதும் நல்வழிப்படுத்தும் கருத்துரைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது தெரிகிறது. எனவே அதன் அடிப்படையில் மனதில் எழும் கேள்வி; ஏனிந்த 66 வரிகளையும் ஆரம்பப்பள்ளி கல்வி நாட்களிலேயே சிறார் எண்ணத்தில் பதியுமாறு சொல்லி, கடைபிடிக்கும் அவசியத்தையும் வலியுறுத்தக் கூடாது என்பதே.

பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒரு திருக்குறள் கருத்துடன் இணைத்தும் கவிதை நயம் பாராட்டலாம், அத்துடன் மற்ற அறநெறி நூல்களின் பாடல்களும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவும் இயலாது. உலகநீதி பாடல் வரிகளை மேலும் பலகோணங்களிலும் ஆராய்ந்து இலக்கிய நயம் பாராட்டலாம்.


***


ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்  (செயல்)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்   (சொல்)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்  (எண்ணம்)

என்று துவங்கும் உலகநீதி பாடல்களின் 66 அறநெறிக் கொள்கைகள் யாவற்றையும் மேற்காட்டிய துவக்க மூன்று வரிகளிலும் காணப்படுவது போலவே “செயல்” “சொல்” “எண்ணம்” ஆகியவற்றில் கடைபிடிக்க வேண்டிய நல்வழிகளாக வகைப்படுத்த இயலும். சிந்தையில் தோன்றும் எண்ணமே சொல்லாகவோ, செயலாக வெளிப்படுகிறது என்ற அடிப்படையில் உலகநாதர் எதையெதை சொல்ல வேண்டாம் என்கிறார், எதையெதை செய்யவேண்டாம் என்கிறார் என்றும் பிரிக்கலாம்.

அவ்வாறு வகைப்படுத்தும் பொழுது பாடல் வரிகளில் 71 விழுக்காடு (47 வரிகள்) “செயல்வகை” என்பதிலும்,   29 விழுக்காடு (19 வரிகள்) “சொல்லத் தக்கன” என்ற வகைகளிலும் அடங்கும். வாதத்தின் மறுகோணமாக, நாம் சொல்லும்சொல்கூட ஒரு செயல்தானே என்று வாதிட்டால், அத்தனை அறநெறி அறிவுரைகளுமே எதையெதை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே அமையும்.

அறநெறிகள்:

செய்ய வேண்டாம் என்று எதிர்மறையாக அறிவுறுத்தும் அறநெறி வரிகள் எதை செய்வதற்கு அடிகோலிடுகிறது என்பதை பின்வரும் ஒன்பது வகைகளில் உலகநாதரால் உணர்த்தப்படுகிறது, அவை … (1) நல்லொழுக்கம் கடைபிடித்தல், (2) பெண்ணை நடத்தும் முறை, (3) தீயவர் தொடர்பைத் தவிர்த்தல், (4) பெரியோரை மதித்தல், (5) இறையாண்மையை வலியுறுத்துதல், (6) கல்வியின் மேன்மை உணர்த்துதல், (7) பொய் சொல்லாமையை நினைவூட்டல், (8) இன்சொல் கூறுவதை எடுத்துச் சொல்லல், (9) காரியமாற்றும் வழி பற்றி அறிவுறுத்துதல்.

இவ்வாறு நற்செயல்களுக்கான அறநெறிகளை வகைப்படுத்தும் முறை பாடலை வாசிக்கும் ஒவ்வொருவரின் கோணத்திலும் வேறுபடலாம். ஒரு பிரிவில் உள்ளவற்றை மேலும் பிரிப்பதோ அல்லது மற்றொரு பிரிவின் கீழ் சேர்ப்பதோ பாடலை வாசிப்போர் அந்த வரிகளை அணுகும் கோணத்தினால் வேறுபடலாம். காட்டாக, பெண்ணை நடத்தும் முறை என்பதை நல்லொழுக்கத்தின் கீழோ, காரியமாற்றுதல் வகையிலோ கூட வகைப்படுத்த இயலும்.

“கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்”

“வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்”

“மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்”

“இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்”

மேற்கூறிய ஒவ்வொரு அறநெறியும் நல்லொழுக்கம், இன்சொல், காரியமாற்றும் முறை ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம். எனவே இங்கு கையாண்ட முறை   கருத்துக்களை கோர்வையாக ஆய்வுநோக்கில் காண எடுத்துக்கொள்ளப்பட்ட பிரிவுகள் மட்டுமே என்பது கூறாமலே இங்கு விளங்கும்.

பெண்மை போற்றுதல்:

பெண்ணைப் பற்றிய அறநெறிகள்; கற்புள்ள பெண்ணை அணுக நினைக்க வேண்டாம் (அல்லது பிறனில் விழையாமை) என்றும், மனைவியுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தாமல் இருப்பதைத் தவிர்க்கவும், மனைவியை குற்றம் சொல்வதைத் தவிர்க்கவும், இரு மனைவிகள் வேண்டாம் என்பதைக் கண்டிக்கும் முறையில் அமைந்துள்ளது. இந்தவரிகள் கூறாமல் கூறிச் செல்லும் கருத்துகள்; உலகநீதி பொதுவானது என்றாலும் அவை ஆண்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. உலகமறையாம் திருக்குறள் “வாழ்க்கைத் துணைநலம்” என்ற அதிகாரத்தில், வாழ்க்கைத் துணை என்றால் அது மனைவி மட்டுமே என்ற கோணத்தில்,

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை? (குறள் 53)

என்ற குறள் போன்று, அந்த அதிகாரத்தின் பத்து குறட்களுமே மனைவிக்கான நற்பண்புகளை விவரிக்கும். வாழ்க்கைத்துணை என்பது ஆணும்தான் என்ற கோணத்தை வள்ளுவர் தவற விட்டிருப்பார். ஒரு கணவனிடம் எத்தகைய குணங்கள் இருக்க வேண்டும், இல்லறத்தில் அவனது நல்லொழுக்கம் என்ன என்பதை சொல்ல மறந்திருப்பார் வள்ளுவர். குறள் “வாழ்க்கைத் துணைநலம்” அதிகாரத்தைப் பொறுத்தவரை பொதுமறையல்ல, மனைவியாக வருபவளைப் பற்றிய ஆண்களின் எதிர்பார்ப்புகள்.

உலகநாதரும் உலகநீதியை ஆண்களின் கோணத்தில்தான் சொல்லிச் செல்கிறார். ஆனால் மனைவி இவ்வாறெல்லாம் இருக்கவேண்டும், “பெய்யெனப் பெய்யும் மழை” என்று மழையை உருவாக்குபவளாக அவள் இருக்க வேண்டும் என்றெல்லாம் உலகநாதர் சொல்லவில்லை. மாறாக, இவர் கவனம் செலுத்தவது ஆண் தனது வாழ்க்கைத் துணையான மனைவியை எப்படி நடத்துவது என்பதில் அடங்குகிறது. மனைவியை குற்றம் கூறும் பண்பையோ, அவளோடு குடும்ப வாழ்வை சரிவர நடத்தாமல் இருப்பதைக் கண்டிப்பதோடல்லாமல், இருதாரம் என்ற எண்ணமும் வேண்டாம் என்கிறார்.

“இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்” என்ற வரியே ஏன் இவர் முருகனை குறமகள் வள்ளியை மணந்த வள்ளி பங்கனாக, வள்ளி மணாளனாக மட்டுமே பார்க்கிறார் என்பதைக் காட்டுகிறது. முருகனை தெய்வானையின் கணவர் என்று சொல்ல இவரது மனம் இடமளிக்கவில்லை. முருகனுக்கும் இவர் பாடல்களில் இருதாரங்களுடன் வாழ இடமில்லை, அதனால் தெய்வானைக்கும் உலகநீதி பாடல்களில் இடமில்லை. “இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்” என்று சொன்ன கையோடு தெய்வானை, வள்ளி இருவரையும் முருகனின் துணைவியராகக் காட்ட விழைவது அவர் சொல்ல நினைக்கும் கருத்துக்கே முரணாகவும் அமையும்.

அது போன்றே பாடலின் மூன்றாம் வரியிலேயே “மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்” என்று தாய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவர், தந்தையைப் பற்றிப் பாடலில் எங்குமே குறிப்பிடவில்லை. “தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை தமிழகத்தில் அறியாதவர் இல்லை. இருப்பினும் இவர் பாடலில் தந்தைக்கோர் இடமில்லை.

“மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்”

“வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்”

என்று மூத்தோரையும், பெரியோரையும் மதிக்கும் முறையைப் போதிப்பவர், அதிலும் “மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்” என்பவர் அதையே “தந்தை சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்” என்று எழுதவோ, இல்லை தந்தைக்காக மேலும் ஒரு ஆசிரிய விருத்தப்பா பாட முயலாததோ சற்றே வியப்பளிக்கும், கவனத்தைக் கவரும் உண்மை. தந்தையை மூத்தோர் என்ற வகையில் அடங்கும் பலருடன் ஒருவராகப் பார்க்கும் நிலை இவர் பாடல் வழி அமைகிறது.

முருகனைப் புகழுங்கால்…

“மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!”

என்று திருமாலின் தங்கை உமையின் மைந்தனை வாழ்த்தாய் நெஞ்சே என்று நெஞ்சிடம் வேண்டுபவர், எந்த இடத்திலும் “ஆதிசிவனின் அருமை மைந்தனை, பிறைசூடியப் பெருமானின் குமரனை வாழ்த்தாய் நெஞ்சே என்றும் கூறவில்லை. உலகநாதரைப் பொறுத்தவரை முருகன் வள்ளி பங்கன் என்ற கோணமும், உமை மைந்தன் என்ற கோணமும் மட்டுமே காட்டப்படுவதால் இவர் பெண்ணிய சிந்தனையாளரோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

கல்வியும் இறையாண்மையும்:

உலகநீதி துவங்குவதே கல்வியின் இன்றியமையைக் கட்டும் வண்ணம் முதல் நெறியாக “ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்” என்று தொடங்குகிறது.

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்”

“கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்”

“வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்”

என்று பின்னர் கற்றோரையும், கற்பித்தோரையும் போற்றச் சொல்கிறது.

“கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்”

“தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்”

“வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்”

என்ற வரிகளின் மூலம் கடவுளைப் போற்றுதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உலகநாதரைப் பொறுத்தவரை ஒரு ஊரில் கடவுளை வணங்குவதற்கான கோவில் இல்லை என்றால் அந்த ஊர் வாழுமிடத்திற்கான தகுதியையே இழந்துவிடுகிறது. தெய்வத்தை மறப்பதும் இகழ்வதும் தகாத செயல்களில் அடங்குகின்றன.

சொல்லும் செயலும்:

“இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்” என்று உயிரே போகும் நிலை ஏற்பட்டாலும் உண்மை பேசுவதை வலியுறுத்துகிறார் உலகநாதர்.

“நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்”

“கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்”

“மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்”

“காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்”

“வாதாடி வழக்கு அழிவு சொல்ல வேண்டாம்”

என்று அக்கருத்தை விரிவாக்கி மேற்கூறும் வரிகள் மூலம் பொய் சொல்லுதல், பொய்க்கணக்கு, பொய்சாட்சி, கட்டுக்கதை, பொய்வழக்கு என்று மேலும் பற்பல வகைகளில் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதைத் தவிர்க்கச் சொல்கிறார்.

அத்துடன் புறம் பேசுவது, பொல்லாங்கு பேசுவது, புண்படப் பேசுவது, உதாசினப்படுத்தி இகழ்வாகப் பேசுவது, அரசை எதிர்த்துப் பேசுவது, குற்றங்குறைகள் கூறுவது, கோள் சொல்வது என சொல்லக்கூடாதவற்றைப் பற்றிய பட்டியலையும் தருகிறார்.

“நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்”

“கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்”

“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்”

என்ற அறநெறிகள், “தெரிந்துசெயல்வகை” குறட்பாக்களை, குறிப்பாக …

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.” (குறள் 467)

குறளின் பொருளை நினைவுபடுத்தும்.

கூடாநட்பும் நல்லொழுக்கமும்:

நல் இணக்கம் இல்லாதவர், முன்கோபம் உள்ளவர், சினம் கொள்பவர், வஞ்சனைகள் கொலை களவு வழிப்பறி ஆகிவற்றை செய்பவர்கள், தீயவர், புறம் சொல்பவர், வீராப்பு பேசுபவர், ஏசுபவர், இழிவான செயல்களை செய்பவர், கெட்ட எண்ணம் கொண்டவர், நமது எதிரிகள், மதியாதவர், வெட்டிபேச்சு பேசுபவர் என யாவருடனும் உறவு கொள்ளுதல் கூடாது என்பது உலகநீதி கூறும் அறநெறிகள்.

நல்லொழுக்கம் உடையவரின் பண்புகளாக உலகநாதர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்: சினம் தவிர்த்தல், தர்மம் செய்தல், எளியோரிடம் கருணை காட்டுதல், அடிமை மனம் கொள்ளாதிருத்தல், அடுத்தவருக்கு கேடு நினைப்பதையும் குடி கெடுப்பதையும் செய்யாதிருத்தல், பகட்டு வம்பு புறம் கோள் பொல்லாங்கு பொய் ஆகியவற்றைப் பேசுவதை தவிர்த்தல், வலுச்சண்டைக்குப் போகாதிருத்தல், செய் நன்றியுடனும் வீரத்துடனும் இருத்தல், பிறர் நிலத்தை ஆக்கிரமிக்காதிருத்தல், கருமியாக கஞ்சத்தனம் இல்லாதிருத்தல் ஆகியன நாம் கொண்டு ஒழுக வேண்டிய நற்பண்புகளாகும்.

எளிமையாக சுருங்கச் சொல்லி, ஓசை நயத்துடன் கூடிய பாடல் வரிகளின் மூலம் அறநெறிகளை வழங்கும் உலகநாதரின் உலகநீதிக்கு என்றென்றும் தமிழ் அறநெறி நூல்களின் வரிசையில் மங்காப் புகழுண்டு என்றால் அது மிகையான கூற்றல்ல.

[நிறைவுற்றது]

_________________________________________________________________________________

மேலும் தகவலுக்கு பார்க்க:

உலகநீதி: http://www.tamilvu.org/library/l6600/html/l6600ind.htm

_________________________________________________________________________________
தேமொழி 

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். 


சொ. வினைதீர்த்தான்

unread,
Mar 4, 2015, 11:59:13 PM3/4/15
to vallamai, mintamil
எளிய நடையில் நூல் எவ்வாறு வலிமையான கருத்துக்களை வலியுறுத்துகிறதோ அவ்வாறே தெளிந்த எளிய நடையில் அருமையாக நூலின் சிறப்பைத்தொகுத்துதந்துள்ள கட்டுரை.
பாராட்டுக்கள் திருமிகு தேமொழி.
என் தாயார் பிற வழிபாட்டுப்பாடல்களுடன் உலகநீதியையும் பல நேரங்களில் பாடுவார்கள். அதனால் எனக்கும் மனனம் ஆகிவிட்டது.
நான் வெளியிட்ட தொகுப்பு நூலில் உலகநீதியையும் சேர்த்திருந்தேன்.
நீங்கள் எழுதியுள்ளபடி “மனையாளை குற்றமொன்றும் சொல்லவேண்டாம்” என்று பொருள் புரியாது சிறுவயதில் படித்த வரி பிற்பாடு பலநேரங்களில் குற்றம் சொல்வதைத்தவிர்த்து அதன் விளைவுகளிலிருந்து என்னைக்காத்து உதவியதுண்டு! 
நன்றி.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-03-05 9:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

Oru Arizonan

unread,
Mar 5, 2015, 12:17:00 AM3/5/15
to mintamil
ஒரு சிறந்த நீதி நூலை மின்தமிழில் பதிந்தமைக்கு மிக்க நன்றி, தேமொழி.  இதுபோன்று சிறப்பான தமிழ் நூல்களை அறிமுகம் செய்யும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

annamalai sugumaran

unread,
Mar 5, 2015, 6:02:08 AM3/5/15
to mint...@googlegroups.com
மிகச் சிறந்த பதிவு இது ,
வாழ்த்துக்கள் ,
'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்' என அந்த நாளில் ( 1955-56) 
படித்ததுநினைவுக்கு   வருகிறது .
எளிமையான சிறந்த பயனுள்ள நடைமுறைக்கு உகந்த சிறு சிறு வரிகள் .
நன்றி சகோதரி பகிர்ந்து கொண்டதற்கு ,
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 


5 மார்ச், 2015 ’அன்று’ 9:44 முற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 5, 2015, 9:00:13 AM3/5/15
to mint...@googlegroups.com

பாதியா சொல்றீங்களே சார்

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

நல்ல பதிவிற்கு நன்றி தேமொழி அம்மை.

Dev Raj

unread,
Mar 5, 2015, 10:28:23 AM3/5/15
to mint...@googlegroups.com
தேமொழி அவர்கள் தொகுத்துள்ள முருகன் புகழ் மாலையும் அழகு !

ஒரு சில வரிகளை நான்கு வரி காபி ரைடிங் எழுதிய 
தொடக்கப்பள்ளிக்கால நினைவுகள் தோன்றி மறைகின்றன :))


தேவ்

annamalai sugumaran

unread,
Mar 5, 2015, 12:00:26 PM3/5/15
to mint...@googlegroups.com
திரு கிருஷ்ணகுமார் ,
முதல் வரியை நான் முழுமையாகக் கூறிவிட்டேன்// ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் // இதை நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது படித்தது என வருடமும் (1955-56)கூறிவிட்டேன் .
நீங்கள் அதைப்போய் பாதி என்றுக் கூறி அடுத்த இரண்டாம் அடியை கூறுகிறீர்கள் .
யாருக்கு என்ன செய்தி என்று ஒன்றும் புரியவில்லையே .?
எனினும் கிருஷ்ணகுமார் சர்மா எனும் நண்பரை பெற்றுவிட்டேன் .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 5, 2015, 12:37:41 PM3/5/15
to mint...@googlegroups.com
அன்பின் ஸ்ரீ சுகுமாரன்

ஜோடி ஜோடியா........... கிட்டத்தட்ட பாட்டாகவே இந்த வரிகளைப் பாடியதாக நினைவு. ஒரு ஜோடி வரியில் ஒரு வரியை மட்டிலும் தாங்கள் எடுத்தாண்டதால் மற்றது நினைவுக்கு வந்தது.

முருகா...........சேதியெல்லாம் இல்லை ஐயன்மீர்.

நீதி நூல்களில் இருக்கும் சந்த அழகு கூட மயக்கச் செய்வது தான்.

அது ஆத்திச்சூடியாக இருக்கட்டும் கொன்றைவேந்தனாக இருக்கட்டும் நாலடியாராக இருக்கட்டும் இனியவை நாற்பது இன்னா நாற்பது.........

ம்........ சின்ன சின்ன ஆசை.......

மின்னாடி ஒரு குழு பாரதியார் பாடல்களை பாடி இங்கு பதிவு இட்டனர்.  அது போல இந்த நீதி நூல்களின் மீதும் கடாக்ஷம் பட்டதென்றால்........ மின் தமிழ்க் குழுமத்தினருக்கு இன்னொரு விருந்து கிட்டுமே.

முன்னர் பேரா. ஸ்ரீ நா.வ அவர்கள் முயற்சி எடுத்தார். இந்த முறை ஸ்ரீ .சொ.வி அவர்கள் முயற்சி எடுக்கலாமே.  அல்லது நடந்து முடிந்த ஒப்பித்தல் போட்டியில் குழந்தைகள் யாராவது இசையுடன் கூட அல்லது சந்தத்திலும் கவனம் செலுத்தி பாடியிருந்தால்..... பாடியிருப்பதை ரெகார்டு செய்திருந்தால் பகிரலாமே.

annamalai sugumaran

unread,
Mar 5, 2015, 1:35:17 PM3/5/15
to mint...@googlegroups.com
நன்றி  திரு கிருஷ்ணகுமார் ,
திரிகடுகம் ,ஏலாதி இன்னா நாற்ப்பது ,இனியவை நாற்ப்பது ,நாலடியார் ,திருக்குறள் என்று எத்தனை அற  நூல்கள் நம்மிடை இருந்தன .
அத்துணைக்கும் அவசியம் இருந்ததால் தானே இத்தனை நூல்கள் நம்மிடை வந்தது .
இப்போதும்  அந்த அவசியம் இருக்கிறது 
 அவைகள் பள்ளிப்பருவத்திலே பயிற்றுவிக்கப்படவேண்டும் .
நான் இரண்டாம் வகுப்புப் படித்தபோது அவைகளை ஒப்பிவித்த ஞாபகம் .
அந்த ஆசையில் தான் அப்படி எழுதினேன் 
இப்போது அறநூல்கள் படிக்க மாணவர்களுக்கு நேரம் இல்லையாம் .
மதிப்பெண் பெற்று முந்திக்கொள்ளவே முனைப்பு .

அருமையான மடலுக்கு நன்றி 
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 
இத்தனை  ,

5 மார்ச், 2015 ’அன்று’ 11:07 பிற்பகல் அன்று, க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Mar 5, 2015, 1:39:33 PM3/5/15
to mint...@googlegroups.com
On Thursday, 5 March 2015 09:37:41 UTC-8, க்ருஷ்ணகுமார் wrote:
நீதி நூல்களில் இருக்கும் சந்த அழகு கூட மயக்கச் செய்வது தான்.
அது ஆத்திச்சூடியாக இருக்கட்டும் கொன்றைவேந்தனாக இருக்கட்டும் நாலடியாராக இருக்கட்டும் இனியவை நாற்பது இன்னா நாற்பது.........

ம்........ சின்ன சின்ன ஆசை.......
மின்னாடி ஒரு குழு பாரதியார் பாடல்களை பாடி இங்கு பதிவு இட்டனர்.  அது போல இந்த நீதி நூல்களின் மீதும் கடாக்ஷம் பட்டதென்றால்........ மின் தமிழ்க் குழுமத்தினருக்கு இன்னொரு விருந்து கிட்டும். 

விரஜவாசி ஐயாவின் ஆணையை மீறலாமா !
அடியேனால் ஆன ஒரு சிறு முயற்சி -

ஈக்கு விடம் தலையில், எய்து மிருந்தேளுக்கு
வாய்த்தவிடம் கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
பைங்கண் அரவுக்கு விடம் பல்லளவே, துர்ச்சனருக்(கு)
அங்க முழுதும் விடமே யாம்.

இதே பொருளில் அமைந்த சங்கதப் பா -

தக்ஷகஸ்ய விஷம் த₃ந்தே 
மக்ஷிகாயாஶ்ச மஸ்தகே |  
வ்ருʼஶ்கசிஸ்ய விஷம் புச்சே₂ 
ஸர்வாங்கே₃ து₃ர்ஜநஸ்ய தத் ||


தேவ் 

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 5, 2015, 2:14:35 PM3/5/15
to mint...@googlegroups.com
\\ விரஜவாசி ஐயாவின் ஆணையை மீறலாமா !

அடியேனால் ஆன ஒரு சிறு முயற்சி -

ஈக்கு விடம் தலையில், எய்து மிருந்தேளுக்கு
வாய்த்தவிடம் கொடுக்கில் வாழுமே - நோக்கரிய
பைங்கண் அரவுக்கு விடம் பல்லளவே, துர்ச்சனருக்(கு)
அங்க முழுதும் விடமே யாம். \\

விஷபாதை நீங்க ****தேனாரும் மலர்பொழில் சூழ் திருத்தேவனார்**** அம்ருத கலசத்தையும் திறந்து

தமிழ் நீதி நூற்களில் இருந்தும் சங்கத நீதி நூற்களில் இருந்தும் அம்ருதத்தைப் பற்றியும் பகிரலாமே.

சந்த அழகு மட்டிலும் தங்களால் பகிரப்பட்டுள்ளது. இசைவடிவிலான ஒரு பகிர்வு இன்னமும் மெருகூட்டும்.

Oru Arizonan

unread,
Mar 5, 2015, 3:31:12 PM3/5/15
to mintamil
ஔவைப் பாட்டி எழுதிவைத்த ஒரு பாடல்...  நான் நான்காம் வகுப்பில் கற்றது.

கொம்புளதிற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம் 
வெம்புகரிக் காயிரம்தான் வேண்டுமே 
வம்புசெறி துர்ச்சனர் கண்ணிற்  படாத 
தூரம் நீங்குவதே நல்ல நெறி.

இதை அன்பின் கிருஷ்ணகுமாருக்காக இட்டிருக்கிறேன்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

annamalai sugumaran

unread,
Mar 6, 2015, 4:14:12 AM3/6/15
to mint...@googlegroups.com
மிக அருமையான பாட்டு இது .
நான் நெடுநாள் இதைக் கடைப்பிடித்து வருகிறேன் .
நினைவு படுத்தியதற்க்கு நன்றி நண்பரே !
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன் 
 

6 மார்ச், 2015 ’அன்று’ 2:01 முற்பகல் அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:



--

N. Ganesan

unread,
Mar 6, 2015, 4:20:55 AM3/6/15
to mint...@googlegroups.com


On Thursday, March 5, 2015 at 12:31:12 PM UTC-8, oruarizonan wrote:
ஔவைப் பாட்டி எழுதிவைத்த ஒரு பாடல்...  நான் நான்காம் வகுப்பில் கற்றது.

கொம்புளதிற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம் 
வெம்புகரிக் காயிரம்தான் வேண்டுமே 
வம்புசெறி துர்ச்சனர் கண்ணிற்  படாத 
தூரம் நீங்குவதே நல்ல நெறி.


கொம்புஉளதற்கு ஐந்து,  குதிரைக்குப் பத்துமுழம்,
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து

நீங்குவதே நல்ல நெறி 

இது சரியான பாடம். ஆழ்வார் ஒருவரின் நேரிசை
வெண்பா ஒன்றை தேவ் சொல்லியிருந்தார். அதனையும்
சரியான பாடத்துடன் படிக்கவேண்டும்.

மின்னாடி என்று கிருஷ்ணகுமார் எழுதியுள்ளார்.
கொங்குப்பேச்சுவழக்கு அது. முன்னாடி என இருக்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 6, 2015, 4:44:42 AM3/6/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, March 4, 2015 at 8:14:42 PM UTC-8, தேமொழி wrote:

உலகநீதி புராணத்தை உரைக்கவே

கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு

என்ற இரு இறைவணக்க வரிகளுடன் துவங்கி 13 ஆசிரிய விருத்தப்பாக்களும் தொடர்கின்றன. ஒவ்வொரு விருத்தப்பாவும் எட்டு வரிகள் என்ற வீதத்தில் (13 X 8) 104 வரிகளையும், பிள்ளையாரிடம் இந்த உலகநீதிபுராணத்தைப் பாட அருள் பெற வேண்டி வணங்கும் இரு காப்பு வரிகளுடன் சேர்த்து முழுப் படைப்பும் 106 வரிகள் மட்டும் கொண்டது. மிகச் சுருக்கமாக உலகநாதர் உலகிற்கு சொல்ல விரும்பபிய நீதிகள் அனைத்தும் இவற்றுள் சொல்லப்பட்டுவிடுகின்றன.


வணக்கம். நல்ல கட்டுரை.

இந்த விருத்தங்கள் எட்டு வரிகள் அல்ல. நாலு வரிதான். வரிகளுக்கிடையே உள்ள எதுகை பார்த்தால் தெரிந்துவிடும்.
ஒருவரியை இரண்டாக உடைத்து, பிற்பாகத்தை சற்றே உட்தள்ளி (indent செய்து) எழுதப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

ரித்துப் பலவகையால் பொருளும் தேடி

     அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி

துவித்த வாசகத்தால் உலக நாதன்

     உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி

காலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

     கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

     பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே


நா. கணேசன்
 

Dev Raj

unread,
Mar 6, 2015, 8:00:28 AM3/6/15
to mint...@googlegroups.com
On Thursday, 5 March 2015 11:14:35 UTC-8, க்ருஷ்ணகுமார் wrote:
......தமிழ் நீதி நூற்களில் இருந்தும் சங்கத நீதி நூற்களில் இருந்தும் ........

வள்ளுவமும், விதுர நீதியும் புகழ்பெற்ற நீதி நூல்கள்.

வள்ளுவமும் விதுர நீதியும் ஒரே குரலில்
பேசுவதைக் காண்கிறோம்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

யதோ யதோ நிவர்ததே ததஸ்ததோ 
                                                  விமுச்யதே |
நிவர்த்தநாத் ஹி ஸர்வதோ ந வேத்தி 
                                           து₃:க₂மண்வபி ||  

யாதனின் யாதனின் - யதோ யதோ [யத: யத:]
அதனின் அதனின்   - ததஸ்தத: [தத: தத:]
நோதல் - து₃:க₂ம்


தேவ் 

தேமொழி

unread,
Mar 6, 2015, 2:48:51 PM3/6/15
to mint...@googlegroups.com
திரு தேவ் நல்ல பகிர்வு. நன்றி.  


எனக்குத் திருக்குறள் பற்றி தெரியும் ஆனால் விதுர நீதி போன்ற சமஸ்கிரத நூல்கள் பற்றிய செய்திகள் தெரியாது.

எனவே 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவர் தமிழில் கூறிய கருத்தை போலவே 

xxx காலத்தில் xxx எழுதிய xxx கருத்தொன்றும் ஒப்பிட்டு நோக்கத் தக்கது என்பது போன்ற விளக்கங்கள் தருவது மிகவும் உதவும்.

அத்துடன் பொழிப்புரையாகவும் சமஸ்கிரதம்  பழந்தமிழ் பதிவுகளுக்கும் கொடுக்கவும்..

காட்டாக:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

பொருள்: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவானாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

யதோ யதோ நிவர்ததே ததஸ்ததோ 
                                                  விமுச்யதே |
நிவர்த்தநாத் ஹி ஸர்வதோ ந வேத்தி 
                                           து₃:க₂மண்வபி ||  

பொருள்: யதோ யதோ.....?????????//

நான் வேண்டுகோள் வைக்கும்  முறையில் பதிவுகளை வழங்கினால் மேலும் தெளிவாக, காலக்கோட்டில் எப்பொழுது யாரால் நிகழ்த்தப்பட்டது என்று முழுமையாக அறிந்து கொள்ள உதவும்.

இல்லை என்றால்  திருவள்ளுவர் சமஸ்கிரதத்தில் இருந்து திருடிவிட்டார் என்ற தோற்றம் தருகிறது.  அத்துடன் சமஸ்கிரதம் சொல்வதும் பொழிப்புரையாக இருந்தால் சிறப்பாக விளங்கும்.

தொடர்ந்து அடுத்து இடப் போகும் பதிவுகளை இது போல மிக விரிவாக, விளக்கமாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இயன்றால் இங்கு முன்னர் பதிவிட்டதையும் விளக்கமாக மறுபதிவும் செய்யலாம். 

சுருக்கமாக: வேண்டுவது ஆசிரியர் பெயர், கால, பொழிப்புரை இடப்படும் பதிப்புகளுக்கு 


தக்ஷகஸ்ய விஷம் த₃ந்தே 
மக்ஷிகாயாஶ்ச மஸ்தகே |  
வ்ருʼஶ்கசிஸ்ய விஷம் புச்சே₂ 
ஸர்வாங்கே₃ து₃ர்ஜநஸ்ய தத் ||

இதே பொருளில் அமைந்த பாடல் என்று சொல்வதில் நான் அறிந்து கொள்ள விரும்பும் மேற்காணும் தகவல்கள் இல்லை.  

யார்?  எப்பொழுது?  என்ன பொருள்?
 


..... தேமொழி

Dev Raj

unread,
Mar 7, 2015, 12:20:55 AM3/7/15
to mint...@googlegroups.com
On Friday, 6 March 2015 11:48:51 UTC-8, தேமொழி wrote:
நான் வேண்டுகோள் வைக்கும்  முறையில் பதிவுகளை வழங்கினால் மேலும் தெளிவாக, காலக்கோட்டில் எப்பொழுது யாரால் நிகழ்த்தப்பட்டது என்று முழுமையாக அறிந்து கொள்ள உதவும். இல்லை என்றால்  திருவள்ளுவர் சமஸ்கிரதத்தில் இருந்து திருடிவிட்டார் என்ற தோற்றம் தருகிறது.  அத்துடன் சமஸ்கிரதம் சொல்வதும் பொழிப்புரையாக இருந்தால் சிறப்பாக விளங்கும்.
 

எதிலிருந்து எது எனும் ஆராய்ச்சி எதற்கு ? நம் முன்னோர் என்ன சொல்லியுள்ளனர்
என உணர்ந்துகொண்டால் போதாதா ? ‘உலக நீதி’ புதிதாக எதையும் சொல்லவில்லை;
ஆனால் நீதிகளைத் தொகுத்து நூலாசிரியர் சொல்லிச்செல்லும் முறை மனத்தில்
எளிமையாகப் பதிகிறது. அதனாலன்றோ முற்காலத்தில் இளமையில் அதைக் 
கற்றுத் தந்தனர்.

பாரதம் முழுவதும் ஒரே பண்பாடு / சிந்தனை நிலவிய நிலப்பரப்பு.
இந்திய இலக்கியங்கள் எடுத்துக்காட்டும் உவமைகள் ஒரே
மாதிரியானவை. எது முதலில் எனும் பேச்சு இல்லை.

ஆயினும் பொருட்செறிவு, சொல் செட்டு, பொருத்தமான உவமை,
அனைத்தையும் உள்ளடக்கிய தலைப்புகள் என்று பார்க்கும்போது
‘திருக்குறள்’ மிக உயரத்தில் நிற்கிறது.

புரிதல் போதுமானது; போட்டி வேண்டா


தேவ்

தேமொழி

unread,
Mar 7, 2015, 1:02:08 AM3/7/15
to mint...@googlegroups.com


On Friday, March 6, 2015 at 9:20:55 PM UTC-8, Dev Raj wrote:
On Friday, 6 March 2015 11:48:51 UTC-8, தேமொழி wrote:
நான் வேண்டுகோள் வைக்கும்  முறையில் பதிவுகளை வழங்கினால் மேலும் தெளிவாக, காலக்கோட்டில் எப்பொழுது யாரால் நிகழ்த்தப்பட்டது என்று முழுமையாக அறிந்து கொள்ள உதவும். இல்லை என்றால்  திருவள்ளுவர் சமஸ்கிரதத்தில் இருந்து திருடிவிட்டார் என்ற தோற்றம் தருகிறது.  அத்துடன் சமஸ்கிரதம் சொல்வதும் பொழிப்புரையாக இருந்தால் சிறப்பாக விளங்கும்.
 

எதிலிருந்து எது எனும் ஆராய்ச்சி எதற்கு ? நம் முன்னோர் என்ன சொல்லியுள்ளனர்
என உணர்ந்துகொண்டால் போதாதா ? ‘உலக நீதி’ புதிதாக எதையும் சொல்லவில்லை;
ஆனால் நீதிகளைத் தொகுத்து நூலாசிரியர் சொல்லிச்செல்லும் முறை மனத்தில்
எளிமையாகப் பதிகிறது. அதனாலன்றோ முற்காலத்தில் இளமையில் அதைக் 
கற்றுத் தந்தனர்.


திரு தேவ் ,

ஆராய்ச்சி பற்றியக் கருத்துகளில் உங்களுக்கு ஏன் இத்தகைய மாறுபட்ட கோணங்கள்?

கீழே உள்ளது உங்கள் கருத்துகள்தான் ...மூன்று நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்டது....

///
அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.
தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை
ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்
////


மூன்று நாட்களுக்குள் ஆராய்ச்சி பற்றிய உங்கள் கருத்தையே மாற்றிவிட்டீர்களே !!!

என்றும் தனக்கொரு நியாயம் பிறருகொரு நியாயம் என்பதுதான்  ஆராய்ச்சி வழியா ?
 

பாரதம் முழுவதும் ஒரே பண்பாடு / சிந்தனை நிலவிய நிலப்பரப்பு.
இந்திய இலக்கியங்கள் எடுத்துக்காட்டும் உவமைகள் ஒரே
மாதிரியானவை. எது முதலில் எனும் பேச்சு இல்லை.


///
தமிழ்ச் சமண இலக்கியங்களும் அனங்கனைச் சொல்வதால் 
அவர் கூறி வருவதன் பின்னணியில் இத்தொன்மம் சமணம் 
தொடங்கி வைத்ததுதானா என ஐயம் எழுவது நியாயமே. 
ஆகவே அவர் விடை சொல்லக் கடமைப்பட்டவர்
///


மேலே இருப்பதும் உங்கள் கருத்தே ...இரண்டு நாட்களுக்கு முன்னர் நீங்கள் எழுதியது....


எது முதலில் எனும் பேச்சு இல்லையா !!!!!!!!!!

பாரதப் பண்பாடு ...ஒரே சிந்தனைகள் உலவிய நிலப்பரப்பு என்று சொல்லும் பொழுது நீங்கள் கூறுவதன் அடிப்படை நீதிக் கருத்துகள் சமஸ்கிரதம் தொடங்கி வைத்ததா என்ற ஐயம் எனக்கும் எழுவது நியாயம்தானே ?  ஆகவே நீங்களும் சரியான விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.  

நீங்கள் குறிப்பிட்டது போல ....எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம் அல்லவா? ....அப்படித்தானே நீங்கள் கூறியுள்ளீர்கள்.  வாசகர்களுக்கு குழப்பமற்ற வகையில் கருத்துகள் பதிவேற வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பதே.  




ஆயினும் பொருட்செறிவு, சொல் செட்டு, பொருத்தமான உவமை,
அனைத்தையும் உள்ளடக்கிய தலைப்புகள் என்று பார்க்கும்போது
‘திருக்குறள்’ மிக உயரத்தில் நிற்கிறது.

புரிதல் போதுமானது; போட்டி வேண்டா


திருக்குறளின் உயர்வைப்  பற்றிய விவாதமில்லை இது ,  போட்டி போடும் எண்ணமுமில்லை.  வேண்டுவது ... கருத்தை முன் வைக்கும் பொழுது சரியான வகையில்  ...
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை ஏற்படுத்தும் வகையில் கருத்தை முன் வைக்கும் முறையை.

..... தேமொழி


தேவ்

Banukumar Rajendran

unread,
Mar 7, 2015, 3:57:10 AM3/7/15
to மின்தமிழ்
தெளிந்த சிந்தனை தேமொழியாரே!

திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் இருவினை என்ற சொற்றொடர் சுட்டும் கோட்பாடு யாது என்பதை
விளங்கிக் கொள்ள காலவரையறையும், சமயக் கோட்பாடுகளின் தொடக்கமும் மிக முக்கியமானது. திருக்குறள்
எழுந்த காலத்தில் சமண/பெளத்த சமய சிந்தனைகளில்தான் இருவினை கோட்பாடு உண்டு. இருவினை கோட்பாட்டின் தொடக்கத்தை காலவடிப்படையில் நிறுவினாலே குறள் எச்சமயத்தை பேசுகிறது என்பது திண்ணம்.

நம்பிக்கை மட்டுமே வைத்துப் பார்த்தால் ஒருவாறாகவும், காலவடிப்படைக் கொண்டு ஆராயுங்கால் வேறான்றாகவும்
இருக்கும்.

தேமொழியார் சிந்தனையை ஒட்டி எழுதியது.


நன்றி!

இரா.பானுகுமார்





 

தேவ்

Dev Raj

unread,
Mar 7, 2015, 6:46:41 AM3/7/15
to mint...@googlegroups.com
On Friday, 6 March 2015 22:02:08 UTC-8, தேமொழி wrote:
ஆராய்ச்சி பற்றியக் கருத்துகளில் உங்களுக்கு ஏன் இத்தகைய மாறுபட்ட கோணங்கள்?
கீழே உள்ளது உங்கள் கருத்துகள்தான் ...மூன்று நாட்களுக்கு முன்னர் நீங்கள் பதிவிட்டது....

///
அவரைக் குறித்து வினா எழுப்பப்படுகிறது.
நீங்கள் ஏன் இடையில் புக வேண்டும் புரியவில்லை.
தொன்மம் என்று பொத்தம் பொதுவாகச் சொல்வது எளிது.
எந்த நூற்றாண்டு, குறிப்பாக எந்த நூல் எனத் தெளிவை
ஏற்படுத்துவதே ஆய்வுகளின் நோக்கம்
////


மூன்று நாட்களுக்குள் ஆராய்ச்சி பற்றிய உங்கள் கருத்தையே மாற்றிவிட்டீர்களே !!!
என்றும் தனக்கொரு நியாயம் பிறருகொரு நியாயம் என்பதுதான்  ஆராய்ச்சி வழியா ?

பொதுவாக நீதி நூல்கள் போதனையை வலியுறுத்துவன.
அவற்றுள் ஒற்றுமை இருப்பதைக் காட்ட வள்ளுவமும்,
விதுர நீதியும் முன்வைக்கப்பட்டன. அவற்றுள்
காலத்தொன்மை எந்த நூலில் என்று காட்டுவது
என் நோக்கமாக இல்லை.பல சங்கத மூதுரைகளுக்குத்
தமிழின் தனிப்பாடல்கள் போலவே ஆசிரியர் பெயர்
தெரியாது.

வள்ளுவர் காலமோ, தொல்காப்பியர் காலமோ, இளங்கோவடிகளாரின்
காலமோ இன்னும் திட்டவட்டமாக அறிஞர்களின் ஒருமித்த முடிவாக
வரையறுக்கப்படவில்லை. புகழ்பெற்ற வடநூலாசிரியர்கள் கால வரையறைக்கும்
இது பொருந்தும்.


சங்கதத்தில் காமனைச் சுட்டுவதற்கு  20க்கும் மேற்பட்ட
சொற்கள் வழக்கில் இருக்கும்போது அணங்கு, அனுங்கு இவற்றைத்
திரித்து, அதற்கென ஒரு கதையைச் சிருஷ்டி செய்து புதியதொரு
சொல்லை உருவாக்குவதற்கான தேவையும் எதற்கு என்று
புரியாத நிலையில் , அதை மீண்டும் மீண்டும் எழுதிவரும்
கணேசர் ஐயாவிடம் அக்கேள்வி முன் வைக்கப்பட்டது.

அநங்க’ போலவே ‘அநந்யஜ’ எனும் சொல்லும் சங்கதத்தில்
மன்மதனைக் குறிப்பதாக உள்ளது. அணங்கு, அனுங்கு போல் 
இச்சொல்லுக்கும்  தமிழ் வேர் இருக்குமா ? அச்சொல்லுக்கான கதை 
ஏதேனும் சிருட்டிக்கப்பட்டதா என்பது அடுத்த கேள்வி.

உலகில் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் பல
உள்ளன. பிற மொழிச்சொல்லைத் தம் மொழிக்குள்
கொணர்வதற்காக இதுபோல் கதை புனைவது
மொழியியல் வரலாற்றில் நடைபெற்றதுண்டா
எனவும் தெரிந்துகொள்ள ஆவல்.

கணேசர் ஐயா விடை கூறினாலும் சரி;
ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டும் தாங்கள் விடை
சொன்னாலும் சரி.



தேவ்

தேமொழி

unread,
Mar 7, 2015, 7:06:31 AM3/7/15
to mint...@googlegroups.com
திரு. தேவ், பதில் ஒன்று எழுதவேண்டுமே என்ற எண்ணத்தில் எழுதியது போல  இருக்கிறது தங்கள் பதில்.

அணங்கு, அனுங்கு பிரச்சனைகளுக்கும் எனக்கும் யாதொரு தொடர்புமில்லை. நான் வேண்டியது உங்கள் பதிவுகளைப் பற்றிய மேலதிகத் தகவல்களும் பொழிப்புரை விளக்கங்களும் அவ்வளவே. 

நீங்கள் ஒருபதிவில் எதிர்பார்த்த அதே ஆய்வு அளவுகோலைத்தான் நானும் எதிர்பார்த்து கேட்டேன்... என்பது எனது வேண்டுகோளின் சுருக்கம். 

   

திரு. கணேசன் அவர்களுடன் உங்களுக்கு உள்ள கருத்து வேற்றுமையையும், அணங்கு, அனுங்கு பிரச்சனைகளையும் நீங்கள் இருவருமே விவாதித்துக் கொள்ளுங்கள்.  

அந்த விவாதங்களை  இந்த இழையிலேயே தொடர்வதையும் பொருட்படுத்த மாட்டேன்.

..... தேமொழி

Megala Ramamourty

unread,
Mar 7, 2015, 10:28:04 PM3/7/15
to மின்தமிழ், vallamai
உலகநாதரின் ’உலகநீதி’ காட்டும் நீதிநெறிகளை அழகுத் தமிழில் ஆராய்ச்சிக் கண்ணோடு படைத்திருக்கும் அன்புத் தேமொழிக்கு என் மனமுவந்த பாராட்டுக்களை அளிக்கிறேன்.

இந்நீதிநூல் எளிய தமிழில் உரையாசிரியர்கள் உதவியின்றிப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

’ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டும்’ என்று தொடங்கும் இந்நூலின் வரிகள் என்னையும் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. இந்தப் பாடல்களையெல்லாம் எங்கள் தமிழாசான் (நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்) கர்ண கடூரக் குரலில் இராகத்தோடு பாடி(!) எங்களை மகிழ்வித்தது நினைவுக்கு வருகிறது.  :-)))

//மனைவியுடன் குடும்ப வாழ்க்கையை நடத்தாமல் இருப்பதைத் தவிர்க்கவும், மனைவியை குற்றம் சொல்வதைத் தவிர்க்கவும், இரு மனைவிகள் வேண்டாம் என்பதைக் கண்டிக்கும் முறையில் அமைந்துள்ளது. //

ஆமாம் தேமொழி! உலகநாதர் தன் நீதிநூலில் தொடர்ந்து குடும்பப் பெண்களைக் காக்கத் தவறும் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும், தாயைப் போற்றிப் புகழ்ந்தவர் (வாழ்க்கையில்) தந்தையின் பங்களிப்பைப் பற்றி ஏதும் சொல்லாமல் விடுத்திருப்பதும் அவருடைய சொந்த வாழ்க்கையின் பாதிப்பாக இருக்குமோ என்றொரு ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
 
அடுத்து, உலகநீதியில் பயின்று வந்துள்ள சில சொற்கள் என் கவனத்தைக் கவர்ந்தன.

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் - ’குண்டுணி’ (கோள் சொல்பவன்) என்பது எனக்குப் புதிய சொல். ஒருவேளை வட்டார வழக்காக இருக்குமோ?

மனம்சலித்துச் சிலுகிட்டுத் திரிய வேண்டாம் -  இதுவும் அதிகம் பயன்பாட்டில் இல்லாத சொல்லாய்த் தெரிகிறது. ’சிலுகிட்டு’ என்பது சண்டையிட்டு என்ற பொருளில் வந்துள்ளது.
ஒருவேளை ’சிலிர்த்துக்கொண்டு’ என்பது ‘சிலுகிட்டு’ என்று மருவி வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.  

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் - ஏன் உலகநாதரே ஏன்? பெண்கள் கொண்டையில் பூ வைப்பதைக் கூடப் பகட்டு என்று ஏச வேண்டுமா..பூ மங்கலப் பொருளில்லையா?  :-))


அன்புடன்,
மேகலா
Reply all
Reply to author
Forward
0 new messages