Re: [MinTamil] Re: பெரியார்: சில புரிதல்கள்

179 views
Skip to first unread message

Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 10:11:33 AM8/4/16
to mintamil
முற்றிலும் உண்மை. பெரியாருக்கு முன்னோடியாகிய மஹாத்மா பூலே விதவாவிவாகத்தை ஆதரித்து முன்னினின்று நடத்தியது 150 வருடங்களுக்கு முன். விதவைகளை ஆண்களும், அவர்களுக்கு மேல்பெண்களும் துன்புறுத்துவார்கள். எங்கள் குடும்பத்தில் உரிய வயதில் மணம் புரிந்த பெண் ஒருவள் யுத்தத்தில் கணவனை இழந்தாள. தந்தையின் முயற்சியால் மறுமணம் புரிந்த அவளுக்கு தற்காலம் பேரக்குழந்தைகள் உண்டு. அவள் மறுமணத்துக்கு ஆசி கூறி, தைரியம் அளித்தவர்,காஞ்சி மாமுனி. அதையும் சொல்லத்தான் வேண்டும். என்றோ சொன்னதை இன்று கூறுவது குழப்பம் விளைவிக்கும்.
அன்புடன்,
இன்னம்பூரான்


2016-08-04 12:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியார்

===================================================
===================================================

ஏழாம் அத்தியாயம்
விதவைகள் நிலைமை
===================================================



இந்திய நாட்டின் ஆட்சி உரிமை இந்திய மக்களுக்கே கிடைக்க வேண்டுமென அரசியல் சீர்திருத்தக்காரர்களும், இந்திய மக்களுக்குள்ளிருக்கும் வகுப்புப்பிரிவினையும், சாதிவேற்றுமையும் ஒழிய வேண்டுமென்று சமூகச் சீர்திருத்தக்காரர்களும் போராடுகிறார்களேயன்றி, மக்கள் கூட்டத்தில் ஒருபகுதியராகிய பெண்கள் ஒருபக்கம் அழுத்தப்பட்டு வருவதைப்பற்றி எவருமே போதிய கவலை கொள்வதாகக் காணோம்.

மனிதப்பிறவி கொண்ட ஆணும், பெண்ணும் இயற்கைத் தத்துவத்திலும், சமுதாய வாழ்க்கைத் தன்மையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவர்களல்லவென்பதை அறிவுடைய உலகம் மறுத்தற்கியலாது. அங்க அமைப்பிலன்றி அறிவின் பெருக்கிலோ, வீரத்தின் மாண்பிலோ ஆண் பெண்களுக்குள் ஏற்றத்தாழ்வான வித்தியாசம் எதுவும் காண இயலுமா? இயலவே இயலாது. ஆடவரிலும் சரி, பெண்டிரிலும் சரி, முறையே அறிவாளிகளும், ஆண்மையுடையோரும், அறிவிலிகளும், பேடிகளும் உண்டு. இவ்வாறிருக்கத் திமிர் படைத்த ஆணுலகம் பெண்ணுலகத்தைத் தாழ்த்தி, இழித்து, அடிமைப்படுத்தி வருத்துதல் முறைமையும் நியாயமுமாகுமா?

இந்து மதமென்பதில் ஆணுலகம் தங்கள் சமயப் பெண்ணுலகின் மாட்டுப் பூண்டொழுகும் கொடுமைச் செயல்கள் பலவற்றில் ஈண்டு நாம் விதவைகளைப்பற்றி மட்டும் கவனிப்போம்.

உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனாயினும், தம் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் தக்க பருவமும், எழிலும் பொருந்திய இளங் கன்னியர்களைத் தன் துணைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். ஆனால், ஒர் பெண்மகள் கொழுநன் இழந்துவிட்டால் பதினாறு வயதுக் கட்டழகியேயாயினும், உலக இன்பத்தைச் சுவைத்தறியாத வனிதா ரத்னமாயினும் தன் ஆயுள்காலம் முழுவதும் அந்தோ! தன் இயற்கைக்கட்புலனை வலிய அடக்கிக் கொண்டு, மனம் நைந்து, வருந்தி மடியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வருவது என்னே அநியாயம் இது!! இந்து சமயத்தார் என்று கூறப்படுபவர்கள் இவ்வாறு தங்கள் சமூகம் அநியாயமாய் அழிந்துவருவதைப் பார்த்துக் கொண்டு வருவது பெரிதும் வருந்துவதற்குரிய செயலாகும். சுருங்கக்கூறின், இது ஒருவிதச் சமுதாயத் தற்கொலையேயாகும்.

முன்காலத்தில் கணவனைப் பறிகொடுத்த பெண்மணிகளைக் கணவனுடன் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கி விடுதல் வழக்கமாயிருந்தது. இக்கொடிய வழக்கத்தை அக்காலத்தில் ஆங்கிலேய வியாபாரிக் கூட்டத் தலைவராயிருந்த வாரன்ஹேஸ்டிங்ஸும், சுவாமி தயானந்த சரசுவதி போன்ற இந்திய நாட்டு அறிவாளிகளும், பெருமுயற்சி செய்து அக்கொடும் வழக்கத்தை ஒழித்துவிட்டனர். "உடன்கட்டை ஏறுவதை" நிறுத்துவதற்காகப் போராடிய அக்காலத்திலும், இந்து மத ஆசாரமே அழிந்து போவதாகவும், மதத்திற்கே கேடு வந்துவிட்டதாகவும் பெருங்கிளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், நாளடைவில் அக்கூக்குரலும் அடங்கி, "ஸ்ககமனம்' என்னும் உடன்கட்டையேறும் கொலை வழக்கம் இந்தியாவைவிட்டு அறவே மறைந்தது.

ஆனால், இப்போது நமது நாட்டில் விதவைகள் மணஞ் செய்துகொள்ளக் கூடாதென்றிருக்கும் வழக்கம், உடன்கட்டை ஏறுவதைவிட மிகக் கொடியதாயிருக்கின்றது. உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம்; விதவையாய் வாழ்வதோ வாழ்நாள் முழுதும் தாங்க முடியாச் சித்திரவதைக் கொப்பான துன்பமாக இருந்து வருகிறது. தன் துணைவியை இழந்த கிழவன் வேறுமணஞ் செய்துகொள்ளலாம் என்றும், தன் துணைவனை இழந்த மகப்பேறு பெறாத இல்லற இன்பத்தை நுகராத - இளம்பெண்களும் கூட மறுமணம் செய்துகொள்ளக்கூடாதென்றும் கூறுவது நடுநிலைமை கொண்ட அறச் செயலாகுமா? 

விதவைகள் மறுமணஞ்செய்துகொள்ளும் வழக்கம் கற்புக்குப் பங்கம் விளைவிப்பதாகும் என்றுகூறினால், அது சற்றும்பொருந்தாது விதவைக்கு மறுமணஞ் செய்விக்காவிட்டால்தான் அக்கற்புக்கு ஆபத்து உண்டாவது பெரிதும் அனுபவபூர்வமாய் யாவரும் அறியக் கிடந்த உண்மை. 

விதவையாய் விட்டால் ஒரு பெண்ணின் உள்ளத்தில் உண்டாகும் இயற்கை இன்ப உணர்ச்சி மங்கிவிடுமா? இயற்கையில் எழும் இன் உணர்ச்சியை இளமங்கையர் எங்ஙனம் அடக்கிக்கொண்டிருத்தல் சாலும்? எனவே, எத்துணைக் கட்டுப்பாடுகளை அவர்கள் வைத்திருப்பினும் இயற்கையை வெல்ல வழியற்று, படிற்றொழுக்கத்தில் வீழ்ந்து கள்ளத்தனமாய்க் கருவுற்று, சிசுக் கொலைத் தோஷத்திற்கும் தீராத அவமானத்திற்கும் ஆளாகி வருகின்றார்கள். இக்குற்றம் யாரைச் சாரும்? விதவைகளை மறுமணம் செய்யக்கூடாதென்று பலாத்காரமாய்க் சிறைப்பிடித்து வைத்திருக்கும் அவர்களின் சமூகத்தார்களையே சாரும் என்பது உறுதி. மறுமணம் செய்துகொள்ள விரும்பாத கைம்பெண்கள் இருந்தால் இருக்கட்டும். அவர்களைப் பற்றிப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். மறுமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்குத் தாராளமாய் மணஞ் செய்துகொள்ள இடமளிக்கவேண்டுமென்பதே நமது கோரிக்கை.

விதவைகளின் கல்யாணத்தைப்பற்றி இவ்வாறு எழுதும் நான் எழுத்தளவோடும், பேச்சளவோடும் ஆதரிக்கின்றேனா, அன்றிச் செயலிலும் அதை ஆதரிக்கின்றேனா என்ற அய்யம் பல தோழர்களுக்கு  உண்டாகலாம்.  இதன் பொருட்டேனும் எனது கருத்தைப் பிரதிபலிக்கும் செய்கையைக் கூற விரும்புகிறேன். 

நான் கர்நாடக பலிஜநாயுடு வகுப்பில் பிறந்தவன். எனது வகுப்பார் பெண் மக்கள் முக்காட்டுடன் கோஷாவாக இருக்க வேண்டியவர்களெனவும் விதவா விவாகத்தை அனுமதிக்கப்படாத வகுப்பினரெனும் வழங்கப்படுபவர்கள். நான் பிறந்த குடும்பமோ அளவுக்கு மிஞ்சிய ஆசாரத்தையும், வைணவ சம்பிரதாயத்தையும், கடுமையாய்  ஆதரிக்கும் குடும்பம். இப்படி இருந்தபோதிலும் என்னுடைய 7-ஆவது வயதிலிருந்தே மக்களில் உயர்வு தாழ்வு கற்பித்தலையும், ஒருவர் தொட்டதை மற்றொருவர் சாப்பிடலாகாதெனச் சொல்வதையும் நான் பரிகாசம் செய்து வந்ததோடு, எவரையும் தொடுவதற்கும், எவர் தொட்டதையும் சாப்பிடுவதற்கும் நான் சிறிதும் பின் வாங்கியதே கிடையாது. என்னைச் சிறுவயதிலிருந்தே எங்கள் வீட்டு அடுப்பங்கரைக்குள் செல்ல அனுமதிக்கமாட்டார்கள்.  நான் தொட்ட சொம்பை என் தகப்பனார் தவிர, மற்றையோர் கழுவாமல் உபயோகப்படுத்த மாட்டார்கள். எங்கள் குடும்ப ஆசார, அனுஷ்டானங்களைப் பார்த்துப் பொறாமைப்படுபவர்கள் என்னைப் பார்த்துச் சாந்தியடைந்துவிடுவார்கள். "நாயக்கருக்கு அவர்கள் ஆசாரத்திற்கேற்றாற்போல்தான் ஒரு பிள்ளை; என்றாலும், பிள்ளை நவமணியாய்ப் பிறந்திருக்கிறது" என்று சொல்லிப் பரிகாசம் செய்வார்கள். என்னுடைய 16 ஆம் வயதிலே பெண் மக்களைத் தனித்த முறையில் பழக்குவதையும் அவர்களுக்கெனச் சில கட்டுத் திட்டங்களை ஏற்பாடு செய்வதையும் ஆண் மக்களின் அகம்பாவம் என்றும் நினைத்து வந்தேன். 

இஃதிவ்வாறிருக்க என் தங்கை தனது இளம்வயதிலேயே ஓர் பெண் குழந்தையையும், ஓர் ஆண் குழந்தையையும் விடுத்து இறந்துவிட்டார். இவற்றுள் அம்மாயி என்றழைக்கப்படும் என் தங்கையின் புதல்விக்கு 10 ஆவது வயதில் சிறந்த செல்வாக்கோடு ஒரு 'செல்லக் கல்யாணம்' செய்து வைத்ததோடு, கல்யாணம் செய்த 60 ஆம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 வயதுள்ள சிறு பையன் ஒரு நாள் பகல் 2 மணிக்கு விஷ பேதியால் உயிர்துறந்தான். அவன் இறந்தான் என்ற செய்தியைக்கேட்டதும் அப்பெண் குழந்தை (என் சகோதரியின் புதல்வி) என்னிடம் ஓடிவந்து "மாமா, எனக்குக் கல்யாணம் செய்து வை என்று நான் உன்னைக் கேட்டேனா? இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே" என்று 'ஹோ'வென்று அலறிய சத்தத்தோடு என் காலடியில், மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்றுவிழுந்தது. துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த ஆண், பெண் உள்பட சுமார் 600, 700 பேர்கள் அக் குழந்தையையும், என்னையும் பார்த்த வண்ணமாய்க் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணிர் வடித்தனர். எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது.  ஆனால், கீழே விழுந்து கிடந்தக் குழந்தையை  நான் கையைப் பிடித்துத் தூக்கும்போதே அதற்கு மறுபடியும் கல்யாணம் செய்துவிடுவது என்கின்ற உறுதியுடனே தூக்கினேன்.

பிறகு அந்தப்பெண் பக்குவமடைந்த ஒருவருடத்திற்குப்பின் அதற்குக் கல்யாணம் செய்ய நானும் என்மைத்துனரும் முயற்சி செய்தோம். இச்செய்தி என் பெற்றோருக்கும், மற்றொருக்கும் எட்டவே, அவர்கள் இதைத் தங்கள் வகுப்புக்கு ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டதுபோலக் கருதி, பெரிதும் கவலைக்குள்ளாகி, நாங்கள் பார்த்து வைத்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள். முடிவில் என் மைத்துனரின் இரண்டாவது மனைவியின் சகோதரரைப் பிடித்துச் சரி செய்து எவரும் அறியாவண்ணம் பெண்ணையும், மாப்பிள்ளையையும், மாப்பிள்ளையைச் சென்னை வழியாகவும், பெண்ணைத் திருச்சி வழியாகவும் சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று அங்குக் கோயிலில் கல்யாணம் செய்வித்து, ஊருக்கு அழைத்துவரச் செய்தேன். ஆனால், நான் அங்குப் போகாமல் ஊரிலேயே இருக்கவேண்டியதாயிற்று. ஏனெனில், அவர்கள் போயுள்ள செய்தியைச் சுற்றத்தார் அறிந்தால், ஏதாவது சொல்லி மாப்பிள்ளையை தடை செய்துவிடுவார்களோ என்கின்ற பயத்தாலும், நான் ஊரிலிருந்தால் கல்யாணத்திற்காக வெளியூருக்கப் போயிருக்கிறார்களெனச் சந்தேக மிராது என்கின்ற எண்ணங்கொண்டுமேயாகும். இக்கல்யாணத்தின் பலனாக இரண்டு மூன்று வருட காலமாக பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு, சாதிக்கட்டுப்பாடு இருந்து, பிறகு அனைத்தும் சரிப்பட்டுப் போயின.

பெண்ணும், மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து ஒர் ஆண் மகவைப் பெற்றனர். ஆனால், சிலகாலம் வாழ்ந்த பின்  அந்த இரண்டாவது புருஷனும் இறந்துவிட்டார். இப்பொழுது தாயும், மகனும் சேமமாயிருக்கிறார்கள் எவ்வளவோ இடருக்குள் அகப்பட்டு அக்கல்யாணத்தை முடித்து வைத்தேன் என்றாலும், இன்னும் எனது வகுப்பில் 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட விதவைக் குழந்தைகள் சிலர் இருக்கின்றனர். பாவம், அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தீண்டத்தகாதோர்போல் கருதி நடத்துவதைத் தினமும் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. 

விதவைகளின் விஷயம் எனது நினைவிற்கு வரும்பொழுதும் - நேரில் காண நேரும் பொழுதும், "இது உலக இயற்கை அல்ல, எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிப்பதேயாகும்" என்றே முடிவு செய்வேன். இந்து சமூகம் எந்தக் காலத்தில், எவருடைய ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதோ, அன்றி, மதமில்லாமல் முறையில்லாமல் இருந்து இயற்கையாகவே - ஏதாவது கட்டுப்பாடுகள் ஏற்பட்டு அவற்றை வலியவர்கள் தங்கள் தங்கள் கயநலத்திற்குத் தக்கபடி திருப்பிக் கொண்டார்களோ என நினைக்கும்படி இருந்தாலும், பொதுவாய் விதவைத் தன்மை நிலைத்திருக்கும் காரணத்தினாலேயே இந்து சமூகம் ஒரு காலத்தில் அடியோடு அழிந்து போனாலும் போகுமென்பதே எனது முடிவான கருத்து. 

அரசியல் என்றும், சமூகவியல் என்றும், ஜனாச்சாரச் சீர்திருத்தவியல் என்றும், பெண்கள் முன்னேற்ற இயல் என்றும் சொல்லிக்கொண்டு வேலை செய்யும் மக்களில் பெரும்பான்மையோர் அவ்வேலையைத் தங்கள் வாழ்விற்கும், கீர்த்திக்கும், சுயநலத்திற்கும் உபயோகப்படுத்திக் கொள்வோராக இருக்கிறார்களே தவிர, உண்மையில் விதவைப் பெண்களின் பேரில் அனுதாபங்கொண்டு உழைப்பவர்கள் அரிதினுமரிதாகி விட்டனர் என்று சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அன்றியும், இத்துறைகளிலும் சீர்திருத்தங்களிலும் பாடுபடுபவர்களாய்க் காணப் படுவோரில் பெரும்பாலோர் தாங்கள் செய்யும் காரியம் சரியென்ற தீர்மானம் தங்களுக்கே இல்லாமல் உலகமொப்புக்கு இவ்விஷயங்களுக்காக உழைப்பவர்களாக விளம்பரப்படுத்திக் கொள்கிறவர்களாக இருக்கிறார்கள் என்றே உணருகிறேன். 

பெண்கள் விடுதலையையும், முன்னேற்றத்தையும் பற்றிப் பேசுவோர் பெரிதும் தங்கள் வீட்டுப்பெண்களைப் படுதாவுக்குள் வைத்துக்கொண்டும், விதவா விவாகத்தைப்பற்றிப் பேசுவோர் தங்கள் குடும்பங்களில் உள்ள விதவைகளைச் சிறையிலிட்டதுபோல் காவலிட்டு விதவைத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டும் இருக்கிறார்களே தவிர உண்மையில் ஒரு சிறிதும் தங்கள் நடவடிக்கையில் காட்டுவதில்லை. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால், பெண் மக்கள் என்று நினைக்கும்போதே அவர்கள் அடிமைகள், ஆண்மக்கட்டு அடங்கினவர்கள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்கின்ற உணர்ச்சி ஏற்படுகிறதல்லாமல், பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதில் அவர்கள் ஒரு பெருமையையும் அடைகிறார்கள். இதனாலேயே பெண்களை அநேகர் விலங்குகளைப் போல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்கின்ற விஷயத்தை நினைக்கும்போதே, "செய்யக்கூடாத ஒரு பெரிய குற்றமான செய்கையை" செய்ய நினைக்கிறது போலவே கருதுகிறார்கள். அதனால் மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையினருக்குப் பிறவியிலேயே சுதந்திரம் இல்லை என்பதுதானே இதன் பொருள்? ஆடவருக்குப் பெண்டிரைவிடச் சிறிது வலிமையை அதிகமாக ஏற்படுத்திக் கொண்ட குற்றந்தான், இம்மாதிரி ஒரு சரிசமமான சமூகத்தை சுதந்திரமில்லாமல் அடிமைப்படுத்தும் கொடுமையை அனுஷ்டிக்க வேண்டியதாயிற்று; இந்தத் தத்துவமே வரிசைக் கிரமமாக மேலோங்கி எளியார் வலியாரால் அடிமையாக்கப்பட்டு வருகின்றனர். 

உலகில், மனித வர்க்கத்தினருக்குள்ளிருக்கும் அடிமைத்தன்மை ஒழியவேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் அழியவேண்டும். அது அழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாம். இதற்கு விதவைகளுக்கு மறுமணம்செய்துகொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும். 

தேசிய சர்வாதிகாரியும், வர்ணாசிரமப் பித்தும், பழைமைப்பற்றும் மிக்குடைய தோழர் காந்தியும் இந்து விதவைகளைப்பற்றி அநேக இடங்களில் பேசியும் எழுதியும் வந்திருக்கிறார். அவற்றுள் 1925 ஆம் வருடத்தின் "நவஜீவன்" பத்திரிகையைப் படித்தால் உண்மை புலனாகும் அக்கட்டுரையின் சில பாகமாவது: 

"பால்ய விதவைகளைக் கட்டாயப்படுத்தி வைத்திருப்பதுபோன்ற இயற்கைக்கு விரோதமான பொருள் உலகில் வேறொன்றுமில்லை என்பது என் திடமான நம்பிக்கை. விதவைத் தன்மை என்பது எவ்விதத்திலும் ஒரு தர்மமாகாது. பலாத்காரத்தினால் நடத்தும் கைம்மை வாழ்வு பாவமானது. பதினைந்து வயதுள்ள ஒருபால்ய விதவைதானாகவே விதவை வாழ்வைக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுவது, அவ்விதம் கூறுபவரின் கொடூர சுபாவத்தையும் அறியாமையையுமே அது விளக்குகிறது" என்று எழுதிவிட்டு, விதவைகள் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமென்பதாக உள்ளன்போடும், ஆவேசக் கிளர்ச்சியோடும் தோழர் காந்தி கூறிய வார்த்தைகள் சிலவற்றைக் ஈண்டுக் கவனிப்போம்.

"அமைதியுடன் தங்களுடைய உண்மையான கருத்தைத் தங்களின் பெற்றோர் அல்லது போஷகர்களான ஸ்திரீ, புருஷர்களிடம் தைரியமாய்ச் சொல்லிவிட வேண்டும். அவர்கள் அதைக் கவனிக்காவிட்டால், தாங்களே ஒரு யோக்கியமான புருஷன் கிடைத்தால் விவாகம் செய்துகொள்ளட்டும். விதவைகளின் போஷகர்கள் இதைச் சரிவரக் கவனியாவிடின், பின்னால் பச்சாதாபப்படுவார்கள். ஏனெனில், நான் ஒவ்வோரிடத்திலும் துராசாரத்தையே பார்த்துக் கொண்டு வருகிறேன். விதவைகளைப் பலாத்காரமாய்த் தடுத்து விதவைத் தன்மையை அனுஷ்டிக்கச் செய்தால் விதவைகளுக்காவது, குடும்பத்திற்காவது அல்லது விதவா தர்மத்திற் காவது மேன்மை உண்டாகவே மாட்டாது. இம்மூன்று தத்துவங்களும் நசிந்து வருவதை என் கண்களினாலேயே பார்த்துக்கொண்டிருக்கிறேன். பால்ய விதவைகளே! நீங்களும், உங்களைப் பலவந்தப்படுத்தி விதவைகளாக வைத்திருக்கும் ஸ்திரீ, புருஷ வர்க்கங்களும் இதையறிவீர்களாக" என்று எழுதியுள்ளார்.

நிற்க, 1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில், அய்யகோ! என்நெஞ்சம் துடிக்கின்றது
1 வயதுள்ள விதவைகள் = 597 
1 முதல் 2 வயதுள்ள விதவைகள் = 494 
2 முதல் 3 வயதுள்ள விதவைகள் = 1,257 
3 முதல் 4 வயதுள்ள விதவைகள் = 2,837
4 முதல் 5 வயதுள்ள விதவைகள் = 6,707
5 முதல்10 வயதுள்ள விதவைகள் = 85,937
10 முதல் 15 வயதுள்ள விதவைகள் =  2,32,147 
15 முதல் 20 வயதுள்ள விதவைகள் =  3,96,172 
20 முதல் 25 வயதுள்ள விதவைகள் =  7,42,820 
25 முதல் 30 வயதுள்ள விதவைகள் =  11,63,720 
ஆக மொத்த விதவைகள் 26,31,788

மேலும், இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்குப் பேரிடராயிருக்கிறது. இந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு மாற்றப்பட்டால், இந்து மக்கள் தங்கட்குப் பெரும் துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாப்படுகின்றார்கள். இதன் காரணம் என்ன? தமது சமயத்தில் இருவர் குறைந்துவிட்டதால், இந்துசமூகத்திற்கே ஒர் பெரும் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணத்தினால், இந்த இரண்டு நபருக்காக இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலள்ள இருபத்தாறு லட்சத்து முப்போத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகள் (இப்போது சுமார் 5 லட்சம் அதிகம் பெருகியிருப்பர்) கல்யாணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்? சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் பத்துக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் தடுத்துக்கொண்டு வருகின்றோம். இது இரண்டொருவர் மதம் மாறுவதால் நஷ்டம் வந்துவட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால்மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள் மாத்திரம்18,892 பேர்கள் இருக்கிறார்களென்பதையும், தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது - இன்பந் துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்க என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்? விதவைகளின் கொடுமையை நீக்க ஒரு நூறு வருடங்களாக இராஜாராம் மோகன்ராய், ஈஸ்வரசந்திர வித்தியாசாகரர், கோலாப்பூர் மகாராஜா, சுரேந்திரநாத் பானர்ஜி, விரேசலிங்கம் பந்துலு, மகாதேவ கோவிந்த ரானடே, வேமண்ணா, சர் கங்காராம் முதலிய அறிஞர்கள் பாடுபட்டுழைத்தனர். இதுபோழ்தும் இத்தகைய சீர்திருத்தத் துறையில் பல பாஞ்சாலத் தலைவர்கள் இறங்கி உழைத்து வருகின்றனர். 

விதவா விவாக விஷயத்தில் பெருந்துயில் கொண்டிருந்த இந்தியா இப்பொழுது சிறிது சிறிதாகவாவது விழிப்புற்று விதவை மனத்தை ஆதரிக்க முன்வருவதும், சிலர் அது சம்பந்தமான பிரச்சாரம் செய்து வருவதும் - விதவா விவாகத்தை ஆதரித்துச் சிற்சில நூல்கள் வெளிவருவதும் ஒர் நற்சகுனமென்றே கருதவேண்டியிருக்கிறது. 

தமிழ்மக்கள் இனிநாட்டின் நலத்தையும், சமூக முன்னேற்றத்தையும், மனுஷிக ஜீவகாருண்யத்தையும் எண்ணி இவ்விஷயத்தில் முன்போன்று சிரத்தை குன்றியிராது, ஆங்காங்கே விதவா விவாக சபைகள் ஏற்படுத்தியும், பிரசங்கங்கள் செய்தும், துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டும் விதவைத் தன்மையின் கொடுமையை ஒழிக்க முன்வருவார்களாக.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Singanenjam Sambandam

unread,
Aug 4, 2016, 11:03:31 AM8/4/16
to mint...@googlegroups.com
"அவள் மறுமணத்துக்கு ஆசி கூறி, தைரியம் அளித்தவர்,காஞ்சி மாமுனி"
மிகவும் வரவேற்கத்தக்க தகவல். 

காஞ்சி மாமுனி அவர்கள்  எத்தனை பிரசங்கங்களில் , எத்தனை நூல்களில் கைம்பெண்டிர் மணம் பற்றி வலியுறுத்திப் பேசியுள்ளார், எழுதியுள்ளார் எனப்  பெரியவர்கள் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
. 

Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 12:17:19 PM8/4/16
to mintamil
தேடி பாருங்கள். நான் என் குடும்ப நிகழ்ச்சியை கூறினேன். 

தேமொழி

unread,
Aug 4, 2016, 12:38:56 PM8/4/16
to மின்தமிழ்
நல்லதொரு கேள்வியே ... !!!
சான்றுகள் காட்ட இயலாத சங்கராச்சாரியார் பற்றிய புரட்டுக் கதைகளுக்கு இணையத்தில் பஞ்சமே இல்லை.
எனக்குத் தெரிந்தவரை அவர் விதவா  என்ற சொல்லுக்கு  பதி இல்லாதவள் என்ற விளக்கம்  சொன்னதைத் தவிர வேறு செய்தி அறிந்ததில்லை.

///
காஞ்சி மாமுனி அவர்கள்  எத்தனை பிரசங்கங்களில் , எத்தனை நூல்களில் கைம்பெண்டிர் மணம் பற்றி வலியுறுத்திப் பேசியுள்ளார், எழுதியுள்ளார் எனப்  பெரியவர்கள் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
///

தெய்வத்தின் குரல் நூலை ஒரு முறை புரட்டிப் பார்ப்பது  பயனளிக்கலாம். 

..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 1:04:38 PM8/4/16
to mintamil
என் அனுபவத்தில் தெரிந்ததை சொன்னேன். அதை புரட்டுக்கதை என்று சொல்வதை கண்டிக்கிறேன். வர வர மாமியார் கழுதை போல் ஆனாலாம். You,the prejudiced lot, will be amazed at the experience of Chris Unstops at Sankara Madam in his own words. But, you won't believe it because you do not want to. Periyar is not the only oracle.
இன்னம்பூரான்

Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 1:06:49 PM8/4/16
to mintamil
Sorry. Google made a wrong spelling correction. His name is Chris Anstoos

தேமொழி

unread,
Aug 4, 2016, 1:19:40 PM8/4/16
to மின்தமிழ்


On Thursday, August 4, 2016 at 10:04:38 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
என் அனுபவத்தில் தெரிந்ததை சொன்னேன். அதை புரட்டுக்கதை என்று சொல்வதை கண்டிக்கிறேன். வர வர மாமியார் கழுதை போல் ஆனாலாம். You,the prejudiced lot, will be amazed at the experience of Chris Unstops at Sankara Madam in his own words. But, you won't believe it because you do not want to. Periyar is not the only oracle.
இன்னம்பூரான்



திரு சிங்கநெஞ்சம் அவர்களின்  மறுமொழியான ... 

காஞ்சி மாமுனி அவர்கள்  எத்தனை பிரசங்கங்களில் , எத்தனை நூல்களில் கைம்பெண்டிர் மணம் பற்றி வலியுறுத்திப் பேசியுள்ளார், எழுதியுள்ளார் எனப்  பெரியவர்கள் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.


என்பதற்கு 

நல்லதொரு கேள்வியே ... !!!
சான்றுகள் காட்ட இயலாத சங்கராச்சாரியார் பற்றிய புரட்டுக் கதைகளுக்கு இணையத்தில் பஞ்சமே இல்லை.
எனக்குத் தெரிந்தவரை அவர் விதவா  என்ற சொல்லுக்கு  பதி இல்லாதவள் என்ற விளக்கம்  சொன்னதைத் தவிர வேறு செய்தி அறிந்ததில்லை.

என நான் பதில் எழுதினேன்  ஐயா. மீண்டும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  

Singanenjam Sambandam

unread,
Aug 4, 2016, 1:55:30 PM8/4/16
to mint...@googlegroups.com
பெரியீர் , சினம் காக்க. 
தேமொழி அம்மை எழுதியதை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.சில  விநாடிகள்தானே . அவர் உங்கள் குடும்ப நிகழ்வைப் பற்றி எதவுமே சொல்லவில்லை. 
தற்போதெல்லாம் இணைய  தளத்தில்  உண்மைக்கு மாறான செய்திகள் வருவது  தங்களுக்குத்  தெரியாததல்ல. இந்து, இஸ்லாம், கிறித்துவர் அனைவரும் இந்த வேலையை  செய்கிறார்கள். அதைத்தான்  அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவ்வளவே.





Innamburan S.Soundararajan

unread,
Aug 4, 2016, 2:48:51 PM8/4/16
to mintamil
இதற்கெல்லாம் சால்ஜாப்பு என்று பெயர். நான் படிக்காமல், புரிந்து கொள்ளாமல் எழுதினேன் என்று நினைப்பதேத் தவறு. சினம் எங்கே வந்தது. மின் தமிழ் போகிற போக்கைப் பற்றித்தான் துயரத்துடன் எழுதினேன். நான் படிக்க ஆரம்பித்து பல்லாண்டுகள் ஆயின. இடம், பொருள், ஏவல் நோக்கவேண்டும், சிங்காநெஞ்சரே. உங்களால் தேடமுடியாததையா பெரியீரிடம் கேட்டீர்கள்? பலே ஜோக்🦁

Singanenjam Sambandam

unread,
Aug 4, 2016, 10:20:52 PM8/4/16
to mint...@googlegroups.com
பெரியீர்........"prejudice "  -  இப்போது புரிகிறது. 

Singanenjam Sambandam

unread,
Aug 4, 2016, 10:33:18 PM8/4/16
to mint...@googlegroups.com
"சிங்காநெஞ்சரே. உங்களால் தேடமுடியாததையா பெரியீரிடம் கேட்டீர்கள்? பலே ஜோக்🦁"

பெரியீர் , என் துறை சார்ந்த ஐயங்கள்  எனில், தேடிப்  பிடித்து விடுவேன். பெரியவாள் பற்றிய  செய்திகளை , பெரியவாளிடம்தானே   கேட்க  வேண்டும்,

Innamburan S.Soundararajan

unread,
Aug 5, 2016, 12:42:06 AM8/5/16
to mintamil

Singanenjam Sambandam

unread,
Aug 5, 2016, 1:24:12 AM8/5/16
to mint...@googlegroups.com
ஹஹ்ஹஹ்ஹா 

சி. ஜெயபாரதன்

unread,
Aug 5, 2016, 9:17:00 AM8/5/16
to mintamil, vallamai
தந்தை பெரியார் விதவை மறுமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசித்து விட்டுத் தான் என்ன செய்தார் ?

தன் முதுமையில் இரண்டாம் தாரமாய் ஓரிளம் மாதை செல்வத்துக்காக மணந்து சீக்கிரம் அவளை விதவை யாக்கினார்.

சி. ஜெயபாரதன்.

Innamburan S.Soundararajan

unread,
Aug 5, 2016, 9:43:20 AM8/5/16
to vall...@googlegroups.com, mintamil
சமுதாய புரட்சியும் ஒடுங்கியது. கட்சியும் பிளந்தது. நாத்திகம் ஒடுங்க , இறை வணக்கம் நேர்ரிக்கடனில் செழித்தது. காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு நல்ல தன்மை உண்டு. தன்னை அழித்துக்கொள்ளும். 
இன்னம்பூரான்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

குறுந்தாடிக்கோன்

unread,
Aug 5, 2016, 1:28:57 PM8/5/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

ஐயா பெரியார் புரிதலுக்கு அடிப்படையாகக் குடியரசை மட்டும் ஆதாரம் காட்டினால் அது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஆனைமுத்து அவர்கள்.  குடி அரசு இதழ் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளது.  பெரியார் கால்த்துக்கேற்பத் தன் போரட்டத் திட்டங்களை அமைத்துக்கொண்டவர்.  முதலில் மூன்று தொகுதிகளைப் பெரியாரின் சிந்தனைகளாகத் தொகுத்த அவர் அதை இப்போது 20 தொகுதிகளாக விரிவுபடுத்தி உள்ளார்.  அவர் பல்வேறு தலைப்புகளில் தொகுத்துள்ளதுபோல் குடி அரசு அமையவில்லை
ஒரு கட்டத்தில் பெரியாருக்கும் பெரிய சங்கராச்சியாருக்கும் நல்ல நட்பு இருந்தது.  நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றி நிறைவேற்ற பெரியவர் நாடியது பெரியாரை

குறுந்தாடி
ஹஹ்ஹஹ்ஹா 

ஆஹா!
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Aug 5, 2016, 11:33:13 PM8/5/16
to mint...@googlegroups.com
தந்தை பெரியார் விதவை மறுமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசித்து விட்டுத் தான் என்ன செய்தார் ?

தன் முதுமையில் இரண்டாம் தாரமாய் ஓரிளம் மாதை செல்வத்துக்காக மணந்து சீக்கிரம் அவளை விதவை யாக்கினார்.

பெரியார்  அவர்களின் வரலாற்றினைப் படித்தால் இந்த வினா  அர்த்தமற்ற ஒன்று என்பது தெளிவாகும். 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Aug 5, 2016, 11:40:02 PM8/5/16
to mint...@googlegroups.com
சமுதாய புரட்சியும் ஒடுங்கியது
ஒடுங்கவில்லை பெரியீரே ......வென்றிருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்  மட்டுமே   அமர்ந்திருந்த   உயர்பதவிகளை  இன்று பலரும்  அலங்கரிக்கிறார்கள்.

Suba

unread,
Aug 6, 2016, 5:31:35 AM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini
தேமொழி.. உங்களுக்கு துப்பறியும் நிபுணர் என்ற பதவி கொடுக்கலாமா ? 😂



2016-08-06 6:24 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

பொய்க்கடிதம்


தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

https://ta.wikisource.org/s/3469


பக்கம் - 197:

https://ta.wikisource.org/s/49fp


என். வி. நடராசன், எஸ்.குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றார் முயன்றுபார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப் பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற் கேற்ப இரு கூறுகளாய்ப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி. பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவதுபோல, அவர் கையெழுத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 விடுதலை’ நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30-7-49 'குடி அரசு' இதழிலும் மறுபதிப்புப் பெற்றது.அண்ணா, அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்திகொண்டு, அவர்கள் பெயர் விடுதலை'யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேற வில்லை. விடுதலை' அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோவிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதிசெய்கி றார்கள். சம்பத்தும் சூதனாகிவிட்டான்-என்று பெரியார் 13.7-49:விடுதலை'யில் எழுதினார். பெரியார்மீது அண்ணா வும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார். விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர். 


இராம. அரங்கண்ணல் 1946-ல்திருத்துறைப்பூண்டி யில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். 'விடுதலை’, குடி அரசு' இதழ்களில் சில காலம் பணி யாற்றிப், பின்னர் கர்ஞ்சியில் 'திராவிட நாடு’ அலுவலகத்திலிருந்தார். 1962, 1961-ல் மயிலாப்பூர்,


********

கடிதத்தின் படம்:




********



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2016, 5:52:01 AM8/6/16
to மின்தமிழ்
துப்பறியும் சாம்புவை நினைவூட்டிவிட்டது.  இந்தக் கடிதம் இணைய வளர்ச்சிக்குப்பின் நகலெடுக்கும் கருவுகள் அறிமுகமானபின் தோன்றிய வெட்டு ஒட்டு ஆவணம் என்பது தெளிவு.  கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகளில் பலரை நான் நேரில் அறிவேன்.  அரங்கண்ணல் விடுதலைப் பத்திரிக்கையை அச்சிடுவதை மேற்பார்வையிடும் பணியைச் செய்தவர்.  அவர் பெரியார் திருமண நாளன்று பெரியார் முன்னர் எழுதிய முதைவன் இள்ம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதைக் கடுமையாக எழுதியதை வெளியிட்டார்.  திருமணம் முடிந்து வந்ததும் அரங்கண்ணலைக் கேட்டதும் அவர் தான் வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார்.  பெருமாள் சோற்றைத் தின்றுவிட்டு பெருமாளுக்குத் துரோகமா என்று திட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சம்பத் அண்ணாவை மணியம்மையின் திருமணத்துக்கு எதிராக அறிக்கைவிடுமாறு கேட்டவரை உண்மை.  அண்ண ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை விமரிசனம் செய்ய மாட்டேன் என்று மறுத்ததும் உண்மை
திரும்பத் திரும்ப இந்த ஆவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் மின்தமிழில் வெளியிடுவதால்  என்ன பயன்?
குறுந்தாடி
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2016, 8:14:42 AM8/6/16
to mintamil, vallamai
///சமுதாய புரட்சியும் ஒடுங்கியது
ஒடுங்கவில்லை பெரியீரே ......வென்றிருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பி
னர்  மட்டுமே   அமர்ந்திருந்த   உயர்பதவிகளை  இன்று பலரும்  அலங்கரிக்கிறார்கள்.////

தவறான கருத்து.

பெரியாரோ, அல்லது திராவிடக் கட்சிகளோ நாடாளும் மன்றத்தில் இதற்காக எந்த ஒரு சட்டமும் இயற்றவில்லை.

பண்டித நேரு கொண்டுவந்த டாக்டர் அம்பேத்கார் இயற்றிய அரசியல் சட்டமே அதற்குக் காரணம்.

சி. ஜெயபாரதன்

Singanenjam Sambandam

unread,
Aug 6, 2016, 8:44:51 AM8/6/16
to mint...@googlegroups.com
சட்டம் கொண்டுவந்தால் போதும் எனப் பெரியீர் நினைப்பதுதான் மிகத் தவறான கருத்து. கிராமம் கிராமமாக, சேரி சேரியாக சென்று சமுதாய  மறுமலர்ச்சியை கொண்டுவந்தவர்  பெரியார். 

பெரியீர் , COMMUNAL G.O. பற்றியெல்லாம்  கேள்விப் பட்டிருப்பீர்கள். மறந்திருப்பீர்கள் மீண்டும் படித்துப் பாருங்கள்.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2016, 10:51:54 AM8/6/16
to mintamil, vallamai
வெறும் வாய் உபதேசத்திலும்,  பெரியார்போல் திட்டிப் பேசுவதிலும் விடுதலை நாட்டில் 100 கோடி மக்களை மாற்ற முடியாது.  சட்ட மூலம் சாதிப்பதே நிலைக்கும். இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோர் முன்னேறியதற்கு வழி வகுத்தது டாக்டர் அம்பேத்கார் கொண்டுவந்த அரசியல் சட்டம். 

சி. ஜெயபாரதன்

Singanenjam Sambandam

unread,
Aug 6, 2016, 11:22:08 AM8/6/16
to mint...@googlegroups.com
இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோர் முன்னேறியதற்கு வழி வகுத்தது டாக்டர் அம்பேத்கார் கொண்டுவந்த அரசியல் சட்டம்.
இதை  யாரும் மறுக்கவோ....மரிக்கவோ இல்லை,

பெரியாரின் உரிமை முழக்கத்தை  உபதேசம்--திட்டிப் பேசுதல்  என்பதை  ஏற்க இயலவில்லை.



சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2016, 11:55:58 AM8/6/16
to mintamil
தெய்வ நம்பிக்கை உள்ளோரை ​எல்லாம் முட்டாள் என்று திட்ட அவருக்கென்ன உரிமை இருந்தது ? 

சி. ஜெயபாரதன்.​

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2016, 1:11:22 PM8/6/16
to மின்தமிழ்
கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து பெரியாரும் மற்றவர்களும் அரசாளுமையிலும் சட்டம் இயற்றும் சட்டமன்றத்திலும் இட்ம்பெறாத் நிலையில் அவர்களால் முடிந்ததெல்லாம் மக்களிடம் கருத்தைப் பரப்புவது மட்டுமே
மேலவையின் துணைத்தலைவராக இருந்து தேவதாசி ஒழிப்புக்காக முத்துலட்சுமி ரெட்டி முன்மொழிந்த மசோதாவே சட்டம் ஆகப் பல ஆண்டுகள் ஆயிற்று.  ஆங்கில அரசு அவர் மசோதாவை ஊறுகாய் ஜாடியில் போட்டது
பெரியாரால் காங்கிரசில் வானளாவிய அதிகாரத்துட்ன் இருந்தபோது பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஒரு தீர்மான்ம்கூடக் கொண்டுவர முடியவில்லை
மூன்று விழுக்காடு மக்கள்தொகை உள்ளவர்கள் அரசுவேலையில் பெரும்பகுதியைக் கைவசப்படுத்தியுள்ளார்கள் அவர்களிட்ம் இருந்து எங்களுக்குப் பிடுங்கிக்கொடு என்று கேட்டு நீதிக்கட்சி ஆட்சியில் அமர்ந்த பிராமணர் அல்லாத உயர் ஜாதியினர் நாட்டாமை செய்கிறாகள் அவர்களைத் தவிர மற்ற பின் தங்கியவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எள்முனை அளவுகூடா உதவி செய்யவில்லை என்ற காரணத்துக்காக நீதிக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெரியாருக்கு சட்டம் இயற்றவோ வற்புறுத்தவோ வாய்ப்பில்லாமல் போனது
சுதந்திர இந்தியாவில் அம்பேத்கார் சட்டம் கொணரும் நிலையில் இருந்தார் காங்கிரசுக்குப்பின் ஆட்சிக்கு வந்த திராவிட்க் கட்சிகள் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றபின் இட் ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்தது
பெரியார் வம்புக்கு இழுப்பதும் செத்த பாம்பை அடிப்பதும் ஒன்றுதான்
பெரியார் சமூக மாற்றத்துக்கு மக்களிடம் பேசும் எழுதும் வாய்ப்புக் கிடைத்ததுபோல் அரசியலில் சட்டம் இயற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை
குறுந்தாடி
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2016, 2:32:11 PM8/6/16
to mintamil, vallamai
பெரியாருக்கு Parliamentary System, Elected Representation, Law Making - இவற்றில் விருப்பமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை; இந்நெறியில் செல்லும் பொறுமையும் இல்லை.

டாக்டர் அம்பேத்காருக்கு அரசியல் சட்டம் வடிக்க வாய்ப்பளித்தவர் பண்டித நேரு.

சி. ஜெயபாரதன்

Suba

unread,
Aug 6, 2016, 3:40:41 PM8/6/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-08-06 20:31 GMT+02:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
பெரியாருக்கு Parliamentary System, Elected Representation, Law Making - இவற்றில் விருப்பமும் இல்லை, நம்பிக்கையும் இல்லை; இந்நெறியில் செல்லும் பொறுமையும் இல்லை.

டாக்டர் அம்பேத்காருக்கு அரசியல் சட்டம் வடிக்க வாய்ப்பளித்தவர் பண்டித நேரு.

 
வாய்ப்பளித்தார் என்பது தவறான நோக்கத்தைக் காட்டும். 
 அவரை விட தகுதியானோர் வேறு எவரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்ததால் தான் சட்டத்தை வடிக்கக் கேட்டுக் கொண்டார்!!
சுபா
 

Nagarajan Vadivel

unread,
Aug 6, 2016, 10:28:38 PM8/6/16
to மின்தமிழ்
1933-ல் சிங்கார வேலர் உதவியுடன் தென்னிந்திய சமத்துவக்கட்சி ஒன்றைத் தொடங்க முயற்சி செய்தார்.  அதை வேளாளர் பிரிவைச் சேர்ந்த ராமனாதன் எதிர்த்தார்.  அவருடம் இருந்து விலகி காங்கிரசில் அமைச்சராகவும் இருந்தார்
பெரியார் பிராமணர்கள் குல தர்மப்படி அவர்கள் வேலையைப் பார்க்காமல் அரசு வேலைகளில் அதிகம் சேரக்கூடாது என்று சொன்ன கருத்தை நீத்மான்களான பிராமணர்கள் ஏற்றுக்கொண்டனர்.  வர்ணாசிர தர்ம வெறிபிடித்த சிலர் பெரியாரை எதிர்த்தனர்.  பிராமணர் அல்லாத உயர் சாதியினர் குறிப்பாக சைவ வேளாளர்கள் ஸ்மார்த்த பிராமண அடிப்படைவாதிகளுடன் கைகோர்த்து அவரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டனர்
பெரியார் பாராளுமன்ற நடைமுறைக்கு எதிரியில்லை.  சுதந்திர இந்தியாவில் ஆரிய வெறிபடைத்த வடபுலத்தார் ஆட்சியில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்று கூறி சுதந்திர நாளைக் கருப்புநாள் என்று அறிவித்தார்
காஷ்மீர் அந்தணர் கருணை காட்டினால் மட்டுமே மகாராஸ்ட்ர தலித் மேலெ வரமுடியும் என்ற உங்கள் கருத்து எனக்கு ஏறொஉடையதல்ல
குறுந்தாடி

--

சி. ஜெயபாரதன்

unread,
Aug 6, 2016, 11:38:51 PM8/6/16
to mintamil
///காஷ்மீர் அந்தணர் கருணை காட்டினால் மட்டுமே மகாராஸ்ட்ர தலித் மேலெ வரமுடியும் என்ற உங்கள் கருத்து எனக்கு ஏறொஉடையதல்ல
குறுந்தாடி///

இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா உட்பட அனைத்து தாழ்த்தப்பட்டோரும் டாக்டர் அம்பேத்கார் அரசியல் சட்டத்தால் முன்னேற முடிந்தது.  இதில் அவருக்கு வாய்ப்பளித்த காஷ்மீர் அந்தணர் [நேரு] எங்கே வந்தார் ?  நீங்களும் பெரியார் போல் அந்தண வெறுப்பாளரா ?

சி. ஜெயபாரதன்.

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Radius Consultancy

unread,
Aug 7, 2016, 12:36:49 AM8/7/16
to mint...@googlegroups.com
என்னை பிராமண விரோதி என்றோ
பெரியார் அடிவருடி என்றோ அழைக்க வேண்டாம்வேண்டுமானால் வெண்தாடி இல்லாத கோட்டுப் போட்ட குறுந்தாடி என்றழைக்கலாம்

from Samsung Mobile
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Suba

unread,
Aug 7, 2016, 12:24:42 PM8/7/16
to Seshadri Sridharan, மின்தமிழ், Dr.Subashini
2016-08-07 9:10 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-07 1:10 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
 அவரை விட தகுதியானோர் வேறு எவரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்ததால் தான் சட்டத்தை வடிக்கக் கேட்டுக் கொண்டார்!! - 
சுபா


அவரை விட தகுதியானோர் வேறு எவரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்ததால் தான் < இது முழு கற்பனையான கருத்து. அம்பேத்துகார் ஒரு நடுவராக கூட பொறுப்பு ஏற்று இராதவர்.அவரைவிட அனுபவம் வாய்ந்த தகுதியுடைய ஒய்வு பெற்ற ஒய்வு பெறாத நீதிபதிவுகள் பல நூறு பேர் இந்திய விடுதலைக்கு முன் இருந்தனர்.

அம்பேத்துகார் பெரியார், அலி சின்னா போன்றோருடன் தொடர்பு  வைத்திருந்ததால் இந்திய விடுதலை வேண்டவே  வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்த அவ்வப்போது இங்கிலாந்துக்கு பயணப்பட்டுக் கொண்டிருந்தார். இது ஒரு உறுத்தலாக இருக்கவே காந்தியார் சகசீவன்ராமின் பரிந்துரையை ஏற்று ஒரு அரசியல் உத்தியாக அம்பேத்துகார் இங்கிலாந்து போகாமல் தடுக்கப்படவே அவரை சட்ட அமைச்சராக பரிந்துரை செய்தார்.  சட்ட அமைச்சர்  பதவி ஒரு கௌரவப் பதவி (protcol / by virtue) தான். அதனால் மராட்டியாரான அம்பேத்துகார் இங்கிலாந்து போகாமல் நின்றுவிட்டார். இந்தியாவிற்கு தடையின்றி  விடுதலை கிடைத்த நேரத்தில் ஒரு சட்ட அமைச்சர் என்ற வகையில்  இந்திய அரசியலமைப்பு யாக்கும் குழுவிற்கு அவரே தலைவரானார். அவரின் கீழ் பல சட்டவாளர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார். எனவே அரசியலமைப்பை உருவாக்கிய பெருமை அவருக்கு மட்டுமே உரியதன்று என்றார் என்னோடு சற்று முன் பேசிய தமிழ்த் தேசியரான வழக்கறிஞர் ப.குப்பன். 

அலி சின்னா தயவில் கிழக்கு  வங்காளத்தில் இருந்து போட்டியிட்டு வென்ற அம்பேத்துகார் தன் சொந்த மாநிலத்தில் ஒரு பால்காரரிடம் தோற்றுப் போனார். மும்பையில் அம்பேத்துக்காரின் குடும்பத்தவருக்கே அதிக சொத்துக்கள் உள்ளன என்பதையும் குப்பன் தான் சொன்னார். பௌத்தத்தை அவர் தழுவினாலும் ஒழுக்க நடத்தையில் அவர் ஒரு சராசரி மனிதர் தான் என்றார் குப்பன். 

​சேசாத்ரி -​

​ எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மானுடவியல் , புவியியல் அறிஞர். அவர் சொன்னார்..  இந்தியாவில் நேரு அவர்கள் முதல் பிரதமரானது முகம்மது அலி ஜின்னா ஆங்கிலேய மகாராணியாருடன் செய்த ஒரு தந்திரம் என்பதோடு, வற்புறுத்தி கேட்டுக் கொண்டதனால் தானே அன்றி அவருக்கு பிரதமராகும் எந்தத் தகுதியும் இல்லை என்று!

சுபா

 


 
பிட்டன்   


​ 

சி. ஜெயபாரதன்

unread,
Aug 7, 2016, 2:17:15 PM8/7/16
to mintamil, Seshadri Sridharan, Dr.Subashini
​சுபா,

இந்தியப் பிரதமருள் உன்னதப் பிரதமராகக் கருதப்படுபவர் பண்டித நேரு.  அடுத்து அவரது நிழலில் உருவான பிரதமர் மகள். இந்திரா காந்தி​.

இந்தியா பொறி நுணுக்கத் தொழிற் துறைகள், அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், கல்வித் துறை, மொழிவாரி மாநிலப்பிரிப்புகள், ஆங்கில மொழி ஆதரவு, கன யந்திர உற்பத்தி ஆகியவற்றில் இந்தியா ஆசியாவில் முன்னணியில் நிற்கிறது.  

பங்களா தேசப் பிரச்சனை, காலிஸ்தான் பிரிவுப் பிரச்சனை ஆகியவற்றை இந்திரா காந்தி தீர்த்ததுபோல், அணு ஆயுதச் சோதனை புரிந்ததுபோல் எந்த ஆண் பிரதமரும் செய்திருக்க முடியாது. 

++++++++++++++

Achievements as prime minister


Nehru, Jawaharlal: Nehru and his daughter, Indira, greeting Harry S. Truman in October 1949 [Credit: Encyclopædia Britannica, Inc.]


In the 35 years from 1929, when Gandhi chose Nehru as president of the Congress session at Lahore, until his death, as prime minister, in 1964, Nehru remained—despite the debacle of the brief conflict with China in 1962—the idol of his people. His secular approach to politics contrasted with Gandhi’s religious and traditionalist attitude, which during Gandhi’s lifetime had given Indian politics a religious cast—misleadingly so, for, although Gandhi may have appeared to be a religious conservative, he was actually a social nonconformist trying to secularize Hinduism. The real difference between Nehru and Gandhi was not in their attitudes toward religion but in their attitudes toward civilization. Whereas Nehru talked in an increasingly modern idiom, Gandhi was harking back to the glories of ancient India.

The importance of Nehru in the perspective of Indian history is that he imported and imparted modern values and ways of thinking, which he adapted to Indian conditions. Apart from his stress on secularism and on the basic unity of India, despite its ethnic and religious diversities, Nehru was deeply concerned with carrying India forward into the modern age of scientific discovery and technological development. In addition, he aroused in his people an awareness of the necessity of social concern with the poor and the outcast and of respect for democratic values. One of the achievements of which he was particularly proud was the reform of the ancient Hindu civil code that finally enabled Hindu widows to enjoy equality with men in matters of inheritance and property.

Internationally, Nehru’s star was in the ascendant until October 1956, when India’s attitude on the Hungarian Revolution against the Soviets brought his policy of nonalignment (neutralism) under sharp scrutiny by the noncommunist countries. In the United Nations, India was the only nonaligned country to vote with the Soviet Union on the invasion of Hungary, and it was thereafter difficult for Nehru to command credence in his calls for nonalignment. In the early years after independence, anticolonialism had been the cornerstone of his foreign policy. His interest in the issue waned, however, after Zhou Enlai, the Chinese prime minister, stole the spotlight from him at the Bandung Conference of African and Asian countries that was held in Indonesia in 1955. By the time of the first conference of the nonaligned movement in Belgrade, Yugoslavia (now Serbia), in 1961, Nehru had substituted nonalignment for anticolonialism as his most-pressing concern.

Nehru, Jawaharlal; Segni, Antonio [Credit: Presidents of the Italian Republic]


The Sino-Indian conflict of 1962, however, exposed Nehru’s wishful thinking on nonalignment. When Chinese forces threatened to overrun the Brahmaputra River valley in the northeast as a result of a long-standing border dispute regarding Arunachal Pradesh state, they exposed the hollowness of Nehru’s proclamation, “Hindu-Chini bhai bhai” (“Indians and Chinese are brothers”). Nehru’s subsequent call for Western aid made virtual nonsense of his nonalignment policy. China soon withdrew its troops.

The Kashmir region—claimed by both India and Pakistan—remained a perennial problem throughout Nehru’s term as prime minister. In the months after the partition of the subcontinent in 1947, he made tentative efforts to settle the dispute between the two new countries while Hari Singh, the maharaja of Kashmir, decided on which country he would join. When Singh chose India, however, fighting broke out between the two sides. The UN brokered a cease-fire line in the region, and Nehru proposed territorial adjustments along the line that failed. That demarcation became the line of control that still separates the Indian- and Pakistani-administered portions of the region.

Nehru was more fortunate in his efforts to solve the problem of the Portuguese colony of Goa, the last remaining foreign-controlled entity in India. Although its military occupation by Indian troops in December 1961 raised a furor in many Western countries, in the hindsight of history, Nehru’s action is justifiable. With the withdrawal of the British and the French, the Portuguese colonial presence in India had become an anachronism. Both the British and the French had withdrawn peacefully. If the Portuguese were not prepared to follow suit, Nehru had to find ways to dislodge them. After first trying persuasion, in August 1955 he had permitted a group of unarmed Indians to march into Portuguese territory in a nonviolent demonstration. Even though the Portuguese opened fire on the demonstrators, killing nearly 30, Nehru stayed his hand for six years, appealing meanwhile to Portugal’s Western friends to persuade its government to cede the colony. When India finally struck, Nehru could claim that neither he nor the government of India had ever been committed to nonviolence as a policy.

Nehru’s health showed signs of deteriorating not long after the clash with China. He suffered a slight stroke in 1963, and a more-debilitating attack followed in January 1964. He died a few months later from a third and fatal stroke.

Assessment

While consciously assertive in his Indianness, Nehru never exuded the Hindu aura and atmosphere clinging to Gandhi’s personality. Because of his modern political and economic outlook, he was able to attract the younger intelligentsia of India to Gandhi’s movement of nonviolent resistance against the British and later to rally them around him after independence had been gained. Nehru’s Western upbringing and his visits to Europe before independence had acclimatized him to Western ways of thinking.

Nehru did not conceal his differences with Gandhi on many basic social, economic, and political issues. He did not share Gandhi’s aversion to industrialization, and he saw to it that India’s early five-year plans after independence were geared toward heavy manufacturing. If Nehru accepted Gandhi’s nonviolence, he did so not as a matter of principle but because he regarded nonviolence as a useful political weapon and the right policy for India under the prevailing political conditions.

Of all the leaders of the Congress Party—including Gandhi—Nehru alone had given serious thought to India’s place in the world community. That enabled him not only to educate the Indian populace on foreign affairs before independence but to project his own views on Indian foreign policy when freedom came. If Gandhi made Indians aware of India, Nehru made them also aware of others. When India achieved independence, the image it presented to the world was really Nehru’s image: in the early years of Indian nationhood, the world identified India with Nehru.

Throughout his 17 years in the prime minister’s office, he held up democratic socialism as the guiding star, emphasizing that India needed to achieve both democracy and socialism. With the help of the overwhelming majority that the Congress Party maintained in the parliament during his term of office, he advanced toward that goal. The four pillars of his domestic policies were democracy, socialism, unity, and secularism. He succeeded to a large extent in maintaining the edifice supported by those four pillars during his lifetime.





சி. ஜெயபாரதன்

--

தேமொழி

unread,
Aug 7, 2016, 2:57:08 PM8/7/16
to மின்தமிழ், ssesh...@gmail.com, ksuba...@gmail.com
எல்லோரும் திசை மாறிப் போவதற்கு முன் ... 

நேருவின் திறமையில் இங்கு யாருக்குமே ஐயமில்லை...

முதலில் சுபா சொல்ல வந்தது "வார்த்தைத் தேர்வு" பற்றி .....


வாய்ப்பளிப்பது = back door policy வழியே உள்ளே நுழைவதைப் போல தோற்றத்தைத் தருகிறது.  அம்பேத்கார்  தகுதியினால் பெற்றார், அதில் favoritism போன்ற முடிவுகள் கிடையாது. 

சேசாத்திரியின் பதிலில் உள்ளதையும் சேர்த்து கணக்கில் கொண்டால்  இது விளங்கலாம். 

நேரு பிரதமர் ஆனதையும் பற்றி கேள்வி எழுப்புவார் உண்டு.

சிறந்த தகுதி உள்ள சர்தார் பட்டேலுக்கு பதிலாக   
காந்தி நேருவுக்கு எதற்காக பிரதமராக ஒரு "வாய்ப்பளித்தார்"?

இப்படி கேட்கும் பொழுது சொல் தேர்வின் தாக்கம் புரியும்.

பதில் சொல்ல விரும்புபவர்கள்...  பட்டேலும் நேருவும் திறமையாளர்கள் என்றாலும் ...இந்தத் தகுதிக்காக அவரை பிரதமர் என்று காந்தி தேர்ந்தெடுத்தார் என்று பதில் வரும்.

அதிலிருந்து ஏதோ ஒரு சிறப்புத் தகுதி அவரிடம் இருப்பது கண்டறியப்பட்டது எனப் புலனாகும்.

சேசாத்திரியும் அத்தனை சிறப்பான  நீதிபதிகளிலும் தேடினாலும், 
அம்பேத்காரின் என்ன திறமை   காரணமாக  நேரு   அவரைத் தேர்வு  செய்தார் என்று புரிந்து கொள்வார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து 
அதனை அவன்கண் விடல். 

என்ற வகையில்,    தேர்வு செய்தவர் தகுதியறிந்து தேர்வு செய்தார்.

எனவே   மற்றவரினும் சிறப்புத் தகுதி தேர்வு செய்யப்பட்டவரிடம்  இருந்திருக்கிறது 

வாய்ப்பு என்பது  எதிர்பாராது அதிர்ஷ்டத்தில் வருவது --- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்துவிட்டால் , திறமை இல்லாவிட்டாலும் கூட அடைந்துவிடலாம் 

வாய்ப்பு என்பது கருணையால் வழங்கிய பிச்சை போன்ற தோற்றம் தருவது....
திறமையால் தேர்வு செய்யப்பட்டதைக் குறைத்து மதிப்பிடும் வழியில் அமைந்துவிடும்.



..... தேமொழி

சி. ஜெயபாரதன்

unread,
Aug 7, 2016, 3:01:13 PM8/7/16
to mintamil, Seshadri Sridharan, Dr.Subashini
ஒரு சேர்க்கை

17 ஆண்டு காலத்தில் 3 / 4 ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுத்து இந்திய infrastructure வளர, மேம்படச் செய்தவர் நேரு.
  

சி. ஜெயபாரதன்

unread,
Aug 7, 2016, 3:17:36 PM8/7/16
to mintamil, Seshadri Sridharan, Dr.Subashini
///வாய்ப்பளிப்பது = back door policy வழியே உள்ளே நுழைவதைப் போல தோற்றத்தைத் தருகிறது.  அம்பேத்கார்  தகுதியினால் பெற்றார், அதில் favoritism போன்ற முடிவுகள் கிடையாது.///

Dr. Ambedkar was given a chance or opportunity for his legal & social merits to serve as a Law Minister in the first Nehru Govt, even though he was not a Congress Party member.

Upon India's independence on 15 August 1947, the new Congress-led government invited Ambedkar to serve as the nation's first Law Minister, which he accepted. On 29 August, he was appointed Chairman of the Constitution Drafting Committee, and was appointed by the Assembly to write India's new Constitution.[56]

Granville Austin described the Indian Constitution drafted by Ambedkar as 'first and foremost a social document'. 'The majority of India's constitutional provisions are either directly arrived at furthering the aim of social revolution or attempt to foster this revolution by establishing conditions necessary for its achievement.'[57]

The text prepared by Ambedkar provided constitutional guarantees and protections for a wide range of civil liberties for individual citizens, including freedom of religion, the abolition of untouchability, and the outlawing of all forms of discrimination. Ambedkar argued for extensive economic and social rights for women, and won the Assembly's support for introducing a system of reservations of jobs in the civil services, schools and colleges for members of scheduled castes and scheduled tribes and Other Backward Class, a system akin to affirmative action.[58] India's lawmakers hoped to eradicate the socio-economic inequalities and lack of opportunities for India's depressed classes through these measures.[59] The Constitution was adopted on 26 November 1949 by the Constituent Assembly.[60]



S.Jayabarathan 

தேமொழி

unread,
Aug 7, 2016, 4:09:47 PM8/7/16
to மின்தமிழ், ssesh...@gmail.com, ksuba...@gmail.com


On Sunday, August 7, 2016 at 12:17:36 PM UTC-7, jayabarathans wrote:
///வாய்ப்பளிப்பது = back door policy வழியே உள்ளே நுழைவதைப் போல தோற்றத்தைத் தருகிறது.  அம்பேத்கார்  தகுதியினால் பெற்றார், அதில் favoritism போன்ற முடிவுகள் கிடையாது.///

Dr. Ambedkar was given a chance or opportunity for his legal & social merits to serve as a Law Minister in the first Nehru Govt, even though he was not a Congress Party member.
 

இந்த செய்தியை நான் என் வார்த்தையில் எழுத விரும்பினால் கீழ் வருமாறு எழுத விரும்புவேன் ஜெயபாரதன் ஐயா. 

I would rather say ....

DR. Ambedkar had been identified as an ideal candidate with great potential, and had been selected by the Prime Minister, even though he was not his party member, to draft  the Indian Constitution

அது கீழ் காணும் அதே செய்தியை என் வழியில் கூறியதாக அமையும்.  he was the chosen one;  (chosen= having been selected as the best or most appropriate.) என்ற பொருளில் அமையும். 


Upon India's independence on 15 August 1947, the new Congress-led government invited Ambedkar to serve as the nation's first Law Minister, which he accepted. On 29 August, he was appointed Chairman of the Constitution Drafting Committee, and was appointed by the Assembly to write India's new Constitution.[56]


56. "Some Facts of Constituent Assembly". Parliament of India. National Informatics Centre. Archived from the original on 11 May 2011. Retrieved 14 April 2011. On 29 August 1947, the Constituent Assembly set up an Drafting Committee under the Chairmanship of B. R. Ambedkar to prepare a Draft Constitution for India"


...... தேமொழி 

Suba

unread,
Aug 7, 2016, 5:33:14 PM8/7/16
to சி. ஜெயபாரதன், mintamil
On Sun, Aug 7, 2016 at 8:16 PM, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
​சுபா,

இந்தியப் பிரதமருள் உன்னதப் பிரதமராகக் கருதப்படுபவர் பண்டித நேரு.  அடுத்து அவரது நிழலில் உருவான பிரதமர் மகள். இந்திரா காந்தி​.

​பிரச்சனை நேருவைப் பற்றி
 அல்ல.
சேசாத்ரியின் பதிவில் அவர் அம்பேத்கரை குறைத்துப் பேசி தகுதி அற்றவர் என சொல்ல செய்யும்முயற்சிகளுக்கான எதிர்வாதம் தான் இது.
தேமொழி விளக்கியிருக்கின்றார்.  

சுபா

Suba

unread,
Aug 7, 2016, 5:34:49 PM8/7/16
to Seshadri Sridharan, mintamil
2016-08-07 18:39 GMT+02:00 Seshadri Sridharan <
​​
ssesh...@gmail.com
>
:
2016-08-07 21:54 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
​ எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மானுடவியல் , புவியியல் அறிஞர். அவர் சொன்னார்..  இந்தியாவில் நேரு அவர்கள் முதல் பிரதமரானது முகம்மது அலி ஜின்னா ஆங்கிலேய மகாராணியாருடன் செய்த ஒரு தந்திரம் என்பதோடு, வற்புறுத்தி கேட்டுக் கொண்டதனால் தானே அன்றி அவருக்கு பிரதமராகும் எந்தத் தகுதியும் இல்லை என்று! - சுபா

உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரர் சொன்னார் எனக்கோ எனது பேராசிரியர் சொன்னார் "அவரது தாயமாமன் தான்  நேருவின் அணுக்க செயலராக இருந்தவராம் அவர் நேருவிற்கு ஆட்சி நிருவாகம் பற்றி அறவே தெரியாது அவர் அப்பதவிக்கு சற்றும் தகுதி இல்லாதவர் என்று.சொன்னாராம்". எனினும் காங்கிரசு கட்சிக்கு அவர் என்ன நிதி கொடுத்தாரோ கட்சி பணக்காரரின் பிடிக்கு போய் விட்டது.என்பது தெளிவாகிறது. காந்தியின் பல தவறான முடிவுகள் நாட்டை சீரழித்து விட்டது என்பதென்னவோ அப்பட்டமான உண்மை. நேரு காந்தியின் தவறான முடிவு. நேருவின் ஒழுக்கம் நாடறிந்ததது தானே.

​சரி, ஆரம்பித்து விட்டீர்கள்.உங்கள் ஆசிரியர் அடுத்து இன்னமும் யார் யாரோ வருவார்கள்.
இதற்கு வரிக்கு வரி பதில் சொல்லிக் கொண்டிருந்தால் என் நேரம் தான் விரயமாகும்.
சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

சுபா

 
பிட்டன்   


சி. ஜெயபாரதன்

unread,
Aug 7, 2016, 11:34:29 PM8/7/16
to mintamil, Seshadri Sridharan, Dr.Subashini
Upon India's independence on 15 August 1947, the new Congress-led government  invited  Ambedkar to serve as the nation's first Law Minister, which he accepted.

This is what I have said that Dr. Ambedkar had been given an opportunity to serve in a party he hated all along.  He could have refused it but he accepted. 

S.Jayabarathan

சி. ஜெயபாரதன்

unread,
Aug 7, 2016, 11:38:47 PM8/7/16
to Suba, mintamil
/////சேசாத்ரி -​

​ எங்கள் பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மானுடவியல் , புவியியல் அறிஞர். அவர் சொன்னார்..  இந்தியாவில் நேரு அவர்கள் முதல் பிரதமரானது முகம்மது அலி ஜின்னா ஆங்கிலேய மகாராணியாருடன் செய்த ஒரு தந்திரம் என்பதோடு, வற்புறுத்தி கேட்டுக் கொண்டதனால் தானே அன்றி அவருக்கு பிரதமராகும் எந்தத் தகுதியும் இல்லை என்று!

சுபா///

இதற்குத்தான் நான் நேருவைப் பற்றிச் சொல்ல நேரிட்டது.

சி. ஜெ.

தேமொழி

unread,
Aug 8, 2016, 12:58:49 AM8/8/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
விளக்கத்திற்கு மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா.

எனக்கு உங்கள் கோணமும் புரிந்தது, 
சுபா என்ன சொல்ல வருகிறார் என்பதும்; அவர் கோணம் என்ன என்பதும் புரிந்தது, 

அத்துடன் வழக்கம் போலவே, 
சேசாத்திரி தான் அறிந்த உண்மை என்று  முன் வைக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் படித்து சுபா நகைச்சுவையுடன் அவரை வாரிவிட்டதும் புரிந்தது.
https://www.youtube.com/watch?v=T98lUAcgBgY&feature=youtu.be&t=23m57s  <<<இதில் கவுண்டமணி பாணியில் ...  சுபா இது போல வாரிவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால், அதை தேசபக்தரான   நீங்கள் சீரியசாக எடுத்துக் கொண்டதும் புரிந்ததால்தான்  நான்  என்னால் முடிந்தவரை விளக்க முற்பட்டேன்... (அதுவும் சுபா ... ஜெர்மனியில் உறங்கும் இரவு வேளை என்பதால்)  
அவர் விளக்கம் சொல்வதற்குள்   .....இது முன்னர் நடந்த  சுபாஷ் சந்திர போஸ் இழையின் சர்ச்சை போக்கில் போகலாம் என்பது அப்பொழுது என் கணிப்பாக இருந்தது.

தொடர்ந்து பார்வதி துவக்கியுள்ள இழையைப் பார்த்ததும் 
என் கணிப்பு சரி என்றுதான்  இப்பொழுது தோன்றுகிறது. 

அன்புடன்
..... தேமொழி

Innamburan S.Soundararajan

unread,
Aug 8, 2016, 1:59:34 AM8/8/16
to mintamil


அன்பார்ந்த சிங்காநெஞ்சன்,

நீங்கள் சொல்வது சமுதாயத்தின் மிகவும் சிறிய நல்வரவு. பெரியாரின் நல்வரவுக்கு முன்பே துவக்கப்பட்டது. நூறு வருடங்களுக்கு முன் அந்தணரல்லாதோரில்  -முனைவர் சுவாமிக்கண்ணுப்பிள்ளை, திரு. தியாகராஜ செட்டியார் போன்ற பலர் தலைமை வகித்தனர். ஜஸ்டிஸ் தோன்றிய விதமும், பெரியாரின் நண்பருமான திரு.வி.க அவர்கள் பெண்ணியம் போற்றியதைப்பற்றியும், அவர் அந்தணர் அல்லாதார் கட்சியை தோற்றுவித்தை பற்றியும் த.ம. அ.யின் சேகரங்களைப் பற்றியும் படியுங்கள். சுபாஷிணி என்னுடன் நேர்ந்த கலந்துரையையும் அங்கு பதிவு செய்துள்ளார். அதுவும் உதவலாம். இந்த ‘பெரியவாள்’ கிண்டலை ஒழித்து விடுங்கள். நலம் பயக்க்கும். கலோனிய அரசில் இஸ்லாமியர், அந்தணரல்லதோர் உயர் பதவிக்கு வரவேற்கப்பட்டனர். என் தந்தையுடன் 19 30 காலகட்டத்தில் சமமான/உயர்ந்த உத்யோகம் வகித்தவர்கள்: மஜீத்கான், யாகூப்கான், றசலைய்யா, ஷண்முகம் பிள்ளை, வடிவேலு முதலியார், தாவீது பாக்கியமுத்து, தெய்வநாயகம் முதலியார், பரிசுத்த நாடார் ஆகியோர். வரலாறு படித்து விட்டு எழுதக்கூடாதோ?தமிழ்த்தாத்தாவின் குருநாதர் பார்ப்பனன் அல்ல. நீங்கள் ஓய்வு பெற்றவர் என்றும், அந்தணர் அல்ல என்றும் நினைவு. உங்களுக்கு எந்த வருடம் எப்படி உத்தியோகம் கிடைத்தது. நினைத்துப்பாருங்கள். உண்மை விளங்கும். அதா அன்று. இன்றும் பிள்ளைமாரும் தலித்களும் சண்டை போட்டு, இறைவனை கோயிலிலிருந்து விரட்டி விட்டனர். இது இயல்பாக நடக்காமல் இருப்பது தான் சமுதாயபுரட்சிக்கு நல்ல உதாரணம்.

நான் விவாதம் நாடவில்லை, அரியிதயனே, ஜோலி மிகுந்து இருப்பதால்.

இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2016, 3:26:21 AM8/8/16
to மின்தமிழ்

On Mon, Aug 8, 2016 at 12:46 AM, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
Dr. Ambedkar was given a chance or opportunity for his legal & social merits to serve as a Law Minister in the first Nehru Govt, even though he was not a Congress Party member.

​இந்த முன்மொழிவு நெருடலாக உள்ளது
என்பங்குக்கு என்னுடைய காத்துட்டு சரடு​
​ஆதாரம்

விடுதலை அடைந்து நேரு முதலில் அமைத்த அரசு மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்ட அரசல்ல
அம்பேத்கார் சட்ட மேதை அல்ல பொருளாதாரம் அரசியல் சமூகவியல் அமெரிக்காவில் படித்தவர்
அம்பேத்காருக்கும் காந்தியாருக்கும் இடையில் கருத்துவேறுபாடு இருந்தது

1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார்.

 இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன

அம்பேத்கார் காந்தியாரைப்பற்றி

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அப்போது அம்பேத்கார் அவர்கள் “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது” என்று பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

அம்பேத்கார் அரசியல் சட்ட அமைப்புக்கான குழுவுக்கு முஸ்லீம் லீக்கால் நியமிக்கப்பட்டவர்.  அவரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் அமைச்சரவையில் (ச்ட்சட்டம் பயிலாதவர்) அமைச்சராகவும் இந்திய அரசிய சாசன வடிவமைப்பின் தலைமைப் பொறுப்பாளராகவும் நியமனம் பெற்றார்

அவர் உருவாக்கிஅய் ஆவணம் ஒரு சிறந்த சமூக அமைப்பு மாற்றத்துக்கான ஆவணம் என்ற பாராட்டைப் பெற்றாலும் பாராளுமன்றத்தில் அவர் உருவாக்கிய திட்டம் தோற்கடிக்கப்பட்டது.  அதை ஒட்டி அவர் அமைச்சரவையிலிருந்து விலகினார்.  1952 தேர்தலில் பெரும்பானமை பெற்ற காங்கிரஸ் தீமானம் நிறைவேற்றி அரசியல் சாசனத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தது

குறுந்தாடி



Innamburan S.Soundararajan

unread,
Aug 8, 2016, 4:18:37 AM8/8/16
to mintamil
முனைவர் நாகராஜன் சொல்வது வரலாற்று பின்னணியில்.

Singanenjam Sambandam

unread,
Aug 8, 2016, 11:14:46 AM8/8/16
to mint...@googlegroups.com
அன்பின் இன்னம்பூரன் ஐயா அவர்களுக்கு , அநேக கோடி நமஸ்காரம். (" வணக்கம்" என்று எழுத நினைத்தேன்....பணி , வேலை என்றெல்லாம் எழுதாமல் , 'ஜோலி"  என்று எழுதுபவருக்கு , நமஸ்காரம் தானே பிடிக்கும்). 
ஜோலி மிகுந்திருப்பதால் ......... யாருக்குத்தான் ஜோலி இல்லை. 
விவாதம் துவக்கிவிட்டு , 'சமுதாயப் புரட்சியும் ஒடுங்கியது' என்று  எழுதிவிட்டு "நான் விவாதம் நாடவில்லை  
என்பவரை என்னென்பது 

வரலாறு படித்து விட்டு எழுதக்கூடாதோ?

இதோ ....இதோ இருக்கிறது வரலாறு.....படியுங்கள் . வரலாறு படிக்காதவர் யாரெனப் புரியும் 
Inline image 1

 தமிழ்த்தாத்தாவின் குருநாதர் பார்ப்பனன் அல்ல

உண்மை , பார்ப்பனன் அல்லாதோரும் சிறந்த குருவாக இருக்கமுடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு.

நீங்கள் ஓய்வு பெற்றவர் என்றும், அந்தணர் அல்ல என்றும் நினைவு.

அரசு பணியில் ஓய்வு பெற்றவன் -சரியே.
அந்தணர் அல்ல -தவறு.

ஐயா, நான் வெள்ளாடை வேந்தர் எனும் கட்டுரை எழுதி அது மின் தமிழ் மேடையிலும் ஏற்றப் பட்டுள்ளது. ஜோலி இல்லாத போது படித்துப் பாருங்கள். இந்த கட்டுரை எழுதும் முன் , தியாகராயர் வாழ்ந்த வீடு...அவர் கல்லூரி எல்லாம் சென்று வந்தேன். அப்போது அறிந்தது, "தியாகராயர் துவக்கிய பள்ளியில் , பார்ப்பன மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அவர்களுக்கு வட மொழி பயிற்று 
விக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன."  இது போன்ற  செய்திகள் காஞ்சியில் இருந்து வரவில்லையே. 


சரி, நீங்கள் சொல்வதுபோல் விவாதம் வேண்டாம். நேரடியான கேள்வி....." பிறப்பால் உயர்வு தாழ்வு  இல்லை " என்று மனதார நினைக்கும் பார்ப்பனர்கள் தமிழ் நாட்டில் எத்தனை விழுக்காடு இருப்பர் என  நீங்கள் நினைக்கிறீர்கள். நீங்கள் வரலாறு எல்லாம் மெத்தப் படித்தவர்....அனுபவசாலி, ஆதலின் உங்கள் கருத்தைக் கேட்கிறேன். வணக்கம்.

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2016, 11:54:34 AM8/8/16
to மின்தமிழ்
அப்புடிப் போடுங்க அருவாள
இந்த அரசு வேலை வாய்ப்புகளுக்கான தரவுகள் அடிப்படையிலான பட்டியலில் விழுக்காடு என்பது மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையில் காட்டப்பட்டுள்ளது
ஆகாய அளவுக்கு உயர்ந்தர்கள் என்று சொல்லக்கூடிய நிலையில் இருந்த அவர்கள் பெண் கல்விக்காக பெண்கள் வேலை வாய்ப்புக்காம என்ன செய்தார்கள் என்று எதையும் குறிப்பிடவில்லையே
கல்வியிற் சிறந்த பிராமணர்களும் பிராமணர் அல்லாத உயர் சாதியினரும் பெண்ணை அழுத்தி வைத்திருந்தது தெளிவு
பெண்களை அழுத்த முயற்சி செய்தவர்கள் என்று கையை நீட்டினால் ஆதிக்கச் சக்தியாக இருந்த அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
பெரியார் பேசியதெல்லாம் வெறும் சவடால் என்ற நிலையில் இருக்கக் காரணம் தமிழர்கள்.  தமிழச்சிகள் சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஆதி சூத்திரர்களாகவும் இன்றளவும் இருக்கிறார்கள் என்ற உண்மைய யார் சொல்லுவது
ஓங்கி அடீடா உள்ளூர் கோடாங்கி என்று யாரைக் கூப்பிடுவது?
குறுந்தாடி
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

சி. ஜெயபாரதன்

unread,
Aug 8, 2016, 12:11:22 PM8/8/16
to mintamil
///விடுதலை அடைந்து நேரு முதலில் அமைத்த அரசு மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்ட அரசல்ல
அம்பேத்கார் சட்ட மேதை அல்ல பொருளாதாரம் அரசியல் சமூகவியல் அமெரிக்காவில் படித்தவர்///

+++++++++++

Opposition to untouchability



Ambedkar as a barrister in 1922

As Ambedkar was educated by the Princely State of Baroda, he was bound to serve it. He was appointed Military Secretary to the Gaikwad but had to quit in a short time. He described the incident in his autobiography, Waiting for a Visa.[25] Thereafter, he tried to find ways to make a living for his growing family. He worked as a private tutor, as an accountant, and established an investment consulting business, but it failed when his clients learned that he was an untouchable.[26] In 1918, he became Professor of Political Economy in the Sydenham College of Commerce and Economics in Mumbai. Although he was successful with the students, other professors objected to his sharing a drinking-water jug with them.[27]

Ambedkar had been invited to testify before the Southborough Committee, which was preparing the Government of India Act 1919. At this hearing, Ambedkar argued for creating separate electorates and reservations for untouchables and other religious communities.[28] In 1920, he began the publication of the weekly Mooknayak (Leader of the Silent) in Mumbai with the help of Shahaji II (1874–1922), Maharaja of Kolhapur.[29]

Ambedkar went on to work as a legal professional. In 1926, he successfully defended three non-Brahmin leaders who had accused the Brahmin community of ruining India and were then subsequently sued for libel. Dhananjay Keer notes that "The victory was resounding, both socially and individually, for the clients and the Doctor".[30]

Protests

While practising law in the Bombay High Court, he tried to promote education to untouchables and uplift them. His first organised attempt was his establishment of the central institution Bahishkrit Hitakarini Sabha, intended to promote education and socio-economic improvement, as well as the welfare of "outcastes", at the time referred to as depressed classes.[31] For the defense of Dalit rights, he started many periodicals like Mook Nayak, Bahishkrit Bharat, and Equality Janta.[

+++++++++++

S. J.

+++++++++++++++++

சி. ஜெயபாரதன்

unread,
Aug 8, 2016, 12:14:31 PM8/8/16
to mintamil
///விடுதலை அடைந்து நேரு முதலில் அமைத்த அரசு மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்ட அரசல்ல
அம்பேத்கார் சட்ட மேதை அல்ல பொருளாதாரம் அரசியல் சமூகவியல் அமெரிக்காவில் படித்தவர்///

+++++++++++

Opposition to untouchability


Ambedkar as a barrister in 1922

As Ambedkar was educated by the Princely State of Baroda, he was bound to serve it. He was appointed Military Secretary to the Gaikwad but had to quit in a short time. He described the incident in his autobiography, Waiting for a Visa.[25] Thereafter, he tried to find ways to make a living for his growing family. He worked as a private tutor, as an accountant, and established an investment consulting business, but it failed when his clients learned that he was an untouchable.[26] In 1918, he became Professor of Political Economy in the Sydenham College of Commerce and Economics in Mumbai. Although he was successful with the students, other professors objected to his sharing a drinking-water jug with them.[27]

Ambedkar had been invited to testify before the Southborough Committee, which was preparing the Government of India Act 1919. At this hearing, Ambedkar argued for creating separate electorates and reservations for untouchables and other religious communities.[28] In 1920, he began the publication of the weekly Mooknayak (Leader of the Silent) in Mumbai with the help of Shahaji II (1874–1922), Maharaja of Kolhapur.[29]

Ambedkar went on to work as a legal professional. In 1926, he successfully defended three non-Brahmin leaders who had accused the Brahmin community of ruining India and were then subsequently sued for libel. Dhananjay Keer notes that "The victory was resounding, both socially and individually, for the clients and the Doctor".[30]

Protests

While practising law in the Bombay High Court, he tried to promote education to untouchables and uplift them. His first organised attempt was his establishment of the central institution Bahishkrit Hitakarini Sabha, intended to promote education and socio-economic improvement, as well as the welfare of "outcastes", at the time referred to as depressed classes.[31] For the defense of Dalit rights, he started many periodicals like Mook Nayak, Bahishkrit Bharat, and Equality Janta.[

+++++++++++

S. J.

+++++++++++++++++

Nagarajan Vadivel

unread,
Aug 8, 2016, 1:34:58 PM8/8/16
to மின்தமிழ், vallamai
தகவல் தவறானது என்று சுட்டியமைக்கு நன்றி
சரியான தகவல் வேண்டி எங்கள் பல்கலையில் பணிபுரிந்த சமகாலப் பேராசிரியரிடம் தொடர்புகொண்டபோது அவர் சரியான தகவல்களை அளித்தார்
அதன்படிDr. Ambedkar c.1922, the newly made Barrister


Source: http://www.ambedkar.org/  (photo archive of Dr. Ambedkar's life) 
(downloaded July 2004)

மேலும் அவர் பம்பாயில் சில காலம் வழக்கறிஞராகப் பணிபுரிந்ததையும் சுட்டிக்காட்டினார்

Dr. Bhimrao Ramji Ambedkar practised  on the Appellate Side from 5 July 1923.  He was a very learned man of varied and versatile scholarship.

அவர் ஒரே நேரத்தில் பல கல்விப்புலங்களில் பயின்றதாலும் லண்டனின்ல் பாதியில் படிப்பை நிறுத்திப் பின்னர் சொந்தச் செலவில் இங்கிலாந்து சென்று படிப்பை முடித்ததாகவும் குறிப்பிட்டு கீழே உள்ள உசாத்துணைகளை 


அடிப்படையாக வைத்துத் தொகுத்தால் மட்டுமே அம்பேத்காரின் கல்வித்தகுதியையும் அதை அடைய நடத்திய் போராட்டத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்று குறிப்பிட்டார்
குறுந்தாடி
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 3:31:11 AM8/9/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்
'ஜோலி மிகுந்திருப்பதால் ......... யாருக்குத்தான் ஜோலி இல்லை.'

1.தனது நாமகரணத்திலேயெ வடமொழி மெல்லும் அரியிதயனே. 'ஜோலி போலி' அன்று. தமிழ் ஏற்றுக்கொண்ட சொல். வடமொழி சொற்களை நமது பழந்தமிழ் இலக்கியங்கள் அசகாயமாக கையாண்டு வந்தன. உதாரணம்: சூளாமணியில் 'சேவல்' என்று கூறாமல் 'வாரணம்' என்கிறார், தோலாமொழித்தேவர்.['...கணங்கொள் வாரணக் கம்பலை...]
2. யான் விவாதமொன்றும் தொடக்கவில்லை.
3. அவரவர் வேலை, பணி பற்றி அவரவருக்குத் தான் தெரியும். 

அன்புடன்,
இன்னம்பூரான்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Aug 9, 2016, 4:39:40 AM8/9/16
to mint...@googlegroups.com
அருமையான  பதில்கள் . என் மூக்கை உடைத்து விட்டீர்கள்.

ஆனால் முக்கியமான வினாவிற்கு விடையை எதிர்பார்க்கிறேன்.

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 5:01:19 AM8/9/16
to mintamil
நன்றி. முதலில் உங்களுக்கு வேலை கிடைத்ததை பற்றி எழுதுங்கள். நீங்கள் பார்ப்பனன் ஆக இருந்திருந்தால் கம்யூனல் ஜீ.ஓ. என்ன செய்தது. இல்லையானால், உங்களுக்கு என்ன முன்னுரிமை கொடுக்கப்பட்ட்து/மறுக்கப்பட்டது. Do you know when the first step was taken and on his initiative, Scheduled castes and Scheduled tribes were listed and they were given preference and do you also know how the Backward Classes lobby worked. If so, write please. If not, search, find out and write. There is more to searching as your inputs show, than geology.
வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Singanenjam Sambandam

unread,
Aug 9, 2016, 7:41:34 AM8/9/16
to mint...@googlegroups.com

ஐயா அவர்களின் வாழ்த்துகளுக்கு முதல் நன்றி.


ஐயா ,             

நான் தமிழ் வழியில் பயின்ற மிகச்  சாதரண மாணவன். ஆங்கிலப் புலமையெல்லாம் இல்லை. எனவே இயன்றவரை தமிழ் மொழியில் எழுதினால் புரிந்து கொள்வேன். குறிப்பாக “is more to searching” ,  preposition பின் present continuous  tense வரும்  என்றெல்லாம் தெரியாது. எனவே , தயவு செய்து. தமிழில்  எழுதுங்கள்

.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் நான் எந்த விதமான முன்னுரிமையோ பின்னுரிமையோ பெறவில்லை. நான் படித்த பள்ளி1717 ஆம் ஆண்டு சீகன்பால்கு அவர்களால் SOCIETY FOR  PROPAGATION OF CHRISTIAN KNOWLEDGE அமைப்பிற்காக துவக்கப் பட்டது. FORT ST.DAVID ஊழியர்களுக்காக துவக்கப் பட்ட இப் பள்ளியில் பின்னர் உள்ளூர் குழந்தைகளும் சேர்ந்தனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட இன குழந்தைகளும், மீனவ இன குழந்தைகளும் சேர்ந்தனர்.  அந்தப் பள்ளிக்கு அனுப்பினால் “வேதத்தில் விழுந்து  விடுவார்கள்” என அஞ்சி பலர் குழந்தைகளை அனுப்பவில்லை. 1930 களிலும்   1940 களிலும் , சுய மரியாதை இயக்கத்தினர் வீதி வீதியாக, கிராமம் கிராமமாக சென்று செய்த பரப்புரையின் விளைவாக , நிலைமை மாறியது.


பின்னர் , வடக்கே இருக்கும் முஸ்லிம் பல்கலைக் கழகம் போலவோ , அன்றி இந்து பல்கலைக்கழகம் போலவோ அல்லாமல். , அண்ணாமலை அரசர் அமைத்த , மத , சாதி, இன வேறுபாடற்ற பல்கலைகழகம் , தென்னாற்காடு-தஞ்சை-திருச்சி  மாவட்ட மக்களுக்கு கல்விப் பணி செய்தது.

 

இனி, தியாகராயர், திரு.வி.க. , சிங்காரவேலர் , ஈ.வெ.ரா. இவர்கள் பணி பற்றி , கம்யூனல் ஜி. ஓ . பற்றியெல்லாம் நிறைய சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளேன். ஆதலின் , நீங்கள் சொல்லி நான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.


உங்களின் கடைசி வரிக்குப் பொருள் விளங்கவில்லை என்றாலும் , ஏதோ புத்திமதி போல் தெரிகிறது. நன்றி. மற்றவர்களுக்கு ஒன்றை சொல்லும் முன் , அதை நாம் செய்கிறோமா என யோசிக்க வேண்டாமா.

 

 

 

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 9:50:16 AM8/9/16
to mintamil
அன்பின் அரியிதயனே,
நாம் இருவரும் தமிழ் வழியில் படித்தவர்கள். நீங்கள் படித்த பள்ளி மேன்மை புகழ் பெற்றது. என் பள்ளி பின் தங்கிய வகுப்புகளுக்கு ஆன குக்கிராம பள்ளி. 16 வயதில் ஆங்கிலம் பேச வராது.  நான் உங்கள் சொற்பொழிவுகளை பற்றி நான் அறிவேன். கம்யூனல் ஜீ.ஓ.வின் பாதிப்பு இல்லாமல் என் காலத்தில் படிக்க முடியாது. பார்ப்பனன் என்ற அடிப்படையில் கிண்டி பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி எல்லாம் கதவை சாத்திக்கொண்டன. நீங்கள் என் வினாவுக்கு பதில் அளிக்கவில்லை. உங்கள் ஆங்கில புலமை அபாரம் என்று உங்கள் குமரிக்கண்டம் பதிவுகள் பறை சாற்றுகின்றன.You studied geology in English.கடைசி வரி அறிவுரை அன்று; புகழுரை. நீங்கள் சுற்றி வளைத்துப் பேசி, விடை மறுப்பதால், நான் இத்துடன் நிறுத்துக்கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

Singanenjam Sambandam

unread,
Aug 9, 2016, 10:50:43 AM8/9/16
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா  அவர்களுக்கு, வணக்கம். 

நான் உங்களைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டேனா......அன்றி   தாங்கள் என்னைப் புரிந்து கொள்ளும் வகையில் நான் நடந்துகொள்ளவில்லையா.....அறியேன்.
நன்றி. வணக்கம். 

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 12:18:11 PM8/9/16
to mintamil
அதனால் என்ன கெட்டுப்போச்சு? எமது இலக்கியவட்டத்துக்கு வாருங்கள். மாலை 4 30 - 5 45. திங்கள் கிழமை: செப்டம்பர் 3, 2016.
இலக்கிய விருந்து, சிறுதுண்டி, பின்னர் மாலை உணவு.
அன்புடன்,
இன்னம்பூரான்

Nagarajan Vadivel

unread,
Aug 9, 2016, 12:32:44 PM8/9/16
to மின்தமிழ்
இங்கே பொங்கி எழுந்து கொதிநிலைக்குப் போறவஙகளை எல்லாம் வாய்க்கு ருசியா பொங்கலைப் போட்டே அடக்கிவிடுகிறார்களே
ரெண்டு இட்லிக்கும் மிளகாய்பொடிக்கும் தன்னையே இழப்பவன் தமிழன்
சிங்கமும் ஆ(டி)தித்தரும் மோதுவதைப் பார்க்க நினைத்தால் கடாசியில் விருந்தில் முடிந்துவிட்டதே
குறுந்தாடி

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 12:49:39 PM8/9/16
to mintamil
எள்ளு மிள்காய்பொடி. நீவீர் தனியா வந்தால்... சாக்கிரதை.

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 12:52:12 PM8/9/16
to mintamil
செப்டம்பர் 5. இந்த கூகிள் பாடாபடுத்தப்பா.










இன்னம்பூரான்

Singanenjam Sambandam

unread,
Aug 9, 2016, 12:58:52 PM8/9/16
to mint...@googlegroups.com
பேராசிரியரே..... இடைவேளையில் சுண்டல் முறுக்கு சாப்பிடுவதில்லையா.....

Prakash Sugumaran

unread,
Aug 9, 2016, 1:40:52 PM8/9/16
to mintamil
//இந்து தர்ம ஆச்சார்ய சபா தலைவர் தயானந்த சரஸ்வதி சாமிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”தமிழகம்புதுச்சேரிஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்து கோவில்கள் நிர்வகிக்கப் படுகின்றன. அறநிலையத்துறை நிர்வாகத்தின்கீழ் செயல்படும் ஆலயங்களில் வழிபாடுசொத்துகள்நிலம் உள்ளிட்டவற்றில் அறநிலையத்துறை அதிகம் தலையிடுகிறது. ஆலயங்களில் வசூலிக்கப்படும் நிதிகள் பல்வேறு துறைகளுக்கு செலவழிக்கப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் அறநிலையத்துறைஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே ஆலயங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் நிர்வாகத்தை அந்தந்த ஆலய நிர்வாகத்திடமே ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில்தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.//

இப்படி ஒரு செய்தியை காலையில் படித்து விட்டு அதுமுதல் பல கேள்விகளுடன் இருந்த நிலையில், இந்த இழையை காண நேர்ந்தது !

//பெரியாருக்கும் பெரிய சங்கராச்சியாருக்கும் நல்ல நட்பு இருந்தது.  நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றி நிறைவேற்ற பெரியவர் நாடியது பெரியாரை
குறுந்தாடி//

//1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில், அய்யகோ! என்நெஞ்சம் துடிக்கின்றது
1 வயதுள்ள விதவைகள் = 597 
1 முதல் 2 வயதுள்ள விதவைகள் = 494 
2 முதல் 3 வயதுள்ள விதவைகள் = 1,257 
3 முதல் 4 வயதுள்ள விதவைகள் = 2,837
4 முதல் 5 வயதுள்ள விதவைகள் = 6,707
5 முதல்10 வயதுள்ள விதவைகள் = 85,937
10 முதல் 15 வயதுள்ள விதவைகள் =  2,32,147 
15 முதல் 20 வயதுள்ள விதவைகள் =  3,96,172 
20 முதல் 25 வயதுள்ள விதவைகள் =  7,42,820 
25 முதல் 30 வயதுள்ள விதவைகள் =  11,63,720 
ஆக மொத்த விதவைகள் 26,31,788//

//"prejudice "//

//முதுமையில் இரண்டாம் தாரமாய் ஓரிளம் மாதை செல்வத்துக்காக மணந்து சீக்கிரம் அவளை விதவை யாக்கினார்.//

//சமுதாய புரட்சியும் ஒடுங்கியது. கட்சியும் பிளந்தது. நாத்திகம் ஒடுங்க , இறை வணக்கம் நேர்ரிக்கடனில் செழித்தது. காழ்ப்புணர்ச்சிக்கு ஒரு நல்ல தன்மை உண்டு. தன்னை அழித்துக்கொள்ளும். இன்னம்பூரான்//


//COMMUNAL G.O.//


//டாக்டர் அம்பேத்காருக்கு அரசியல் சட்டம் வடிக்க வாய்ப்பளித்தவர் பண்டித நேரு.

சி. ஜெயபாரதன்//

//வாய்ப்பளித்தார் என்பது தவறான நோக்கத்தைக் காட்டும். 
அவரை விட தகுதியானோர் வேறு எவரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்ததால் தான் சட்டத்தை வடிக்கக் கேட்டுக் கொண்டார்!!
சுபா//

//சுபா சொல்ல வந்தது "வார்த்தைத் தேர்வு" பற்றி .....
வாய்ப்பளிப்பது = back door policy வழியே உள்ளே நுழைவதைப் போல தோற்றத்தைத் தருகிறது.  அம்பேத்கார் தகுதியினால் பெற்றார், அதில் favoritism போன்ற முடிவுகள் கிடையாது.//

முத்தாய்ப்பாக..
//Periyar is not the only oracle.//

ஆக, சொல்வதற்கு ஒன்றுமில்லை.. :-) 

தேமொழி

unread,
Aug 9, 2016, 1:57:22 PM8/9/16
to மின்தமிழ்
ஏன் இல்லை ? பரவலாக இருப்பது ...

prejudice


 

Suba

unread,
Aug 9, 2016, 4:10:33 PM8/9/16
to மின்தமிழ், Dr.Subashini
​மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி பிரகாஷ். 
நேரம் கிட்டும் போது எழுதுங்கள்.

சுபா​
 

Oru Arizonan

unread,
Aug 9, 2016, 6:11:51 PM8/9/16
to mintamil


2016-08-09 9:32 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//சிங்கமும் ஆ(டி)தித்தரும் மோதுவதைப் பார்க்க நினைத்தால் கடாசியில் விருந்தில் முடிந்துவிட்டதே//

ஏன்  இப்படியொரு இரத்தவெறி உங்களுக்கு, ''பாம்பாட்டி'ச் சித்தரே!  

கீரிக்கும், பாம்புக்கும் சண்டை விடறேன்னு எங்க ஊருலே பல பாம்பாட்டிக சொல்லிக் கூட்டம் சேர்ப்பாங்க.  கடைசீல ஒண்ணும் நடக்காது.

இன்னம்பூராரும், சிங்கநெஞ்சரும் சமாதானமாய் போறாங்களேன்னு நான் நிம்மதியா மூச்சுவிட்டா, நீங்க போயி...
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Aug 9, 2016, 10:19:59 PM8/9/16
to மின்தமிழ்
இப்படி எல்லாரும் சமாதானமாகப் போய்விட்டால் அப்புறம் மடலாடல் குழுவைக் காரசாரமாக நடத்துவது எப்பூடி
குறுந்தாடி

--

Oru Arizonan

unread,
Aug 9, 2016, 10:24:50 PM8/9/16
to mintamil


2016-08-09 19:19 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//இப்படி எல்லாரும் சமாதானமாகப் போய்விட்டால் அப்புறம் மடலாடல் குழுவைக் காரசாரமாக நடத்துவது எப்பூடி//

அடித்துக்கொண்டு மண்டை உடைபடுவதைவிட அன்புடன் நடந்துகொள்வது நலம்பயக்குமல்லவா!

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 10:26:23 PM8/9/16
to mintamil
சித்தரின் சித்தமறியா சீடனே ஒ.அ.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Aug 9, 2016, 10:33:06 PM8/9/16
to மின்தமிழ்
போர்க்களத்தின் இலக்கணமறியாச் சீடரே 
அவங்கதான் சுண்டல் முறுக்குக்கு இடைவேளை என்று சொல்லியிருக்காங்களே
நம்ம சண்டை எப்பவுமே முடியாது ஏனெனில் இது வெறும் சட்டை கிழியும் சண்டையாக்கும்
தமிழ்நாடு காங்கிரஸ் அன்பர்கள் பொறுத்தருளுக
குறுந்தாடி
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Oru Arizonan

unread,
Aug 9, 2016, 10:52:01 PM8/9/16
to mintamil


2016-08-09 19:33 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//போர்க்களத்தின் இலக்கணமறியாச் சீடரே 
அவங்கதான் சுண்டல் முறுக்குக்கு இடைவேளை என்று சொல்லியிருக்காங்களே
நம்ம சண்டை எப்பவுமே முடியாது ஏனெனில் இது வெறும் சட்டை கிழியும் சண்டையாக்கும்//

அதாவது, காட்டா குஸ்தி, போட்டா போட்டிமாதிரி --  தாராசிங்-கிங்காங் போட்டி மாதிரி.  நான் அடிக்கமாதிரி அடிக்கறேன், நீ விழறமாதிரி விழு அப்படிங்கற போட்டி.

நான் கலந்துக்கற போட்டிமாதிரின்னு  நினச்சேன்.  தப்புதான்.

அப்ப சரி, சித்தரே!

ரெண்டாவது ரவுண்டு எப்ப ஆரம்பிக்கப்பப்போவுது? 

நீங்கதான் ரெபரியா?

நான் வேணும்னா அறிவிப்பாளரா இருக்கேன்.

இந்தப்பக்கத்துலே காரைக்குடி முத்துப்பட்டணத்தைச் சேர்ந்த அரசுத் தணிக்கையாளர், பல களம் கண்ட   இன்னம்பூரார் -- அந்தப்பக்கம் சென்னை கடற்கரையைச் சேர்ந்த, புவியியல் நிபுணர் சிங்கத்தையொத்த நெஞ்சம்படைத்த சம்பந்தர். 

விரைவிலேயே ரோஷமான, தூள்பறக்கும், வெறித்தனமான போட்டியில் மோதிக்கொள்வார்கள்!  குஸ்தியைப் பார்க்க ரசிகர்கள் அனைவரும் முந்திக்கொள்ளுங்கள்.  போனால் வராது,  வியக்கத்தக்க சண்டை இதுபோல் காணக்கிடைக்காது...! 
ஒரு அரிசோனன் 
Disclaimer:  The above is written in pure, unadulterated humor.  No malicious intentions, however subtle, is intended.

Oru Arizonan

unread,
Aug 9, 2016, 10:58:21 PM8/9/16
to mintamil
மறந்துட்டேனே!

இந்தக் காட்டா குஸ்தியை மத்தியஸ்தம் செய்துவைக்க வருகிறார் --  பல்லாயிரம் நாமம் கொண்ட குறுந்தாடிக்கோன், பாம்பாட்டிச் சித்தர், பூனைமுகன், நவகோடி நாயகன், வசந்தநகர  வள்ளல், டாக்டர், முனைவர், செந்தமிழ்ச் செல்வர், நடமாடும் பல்கலைக்காலத்தின் பல்கலைக்கழகம், குஸ்தியின் வரையறுத்த செம்மல், அஞ்சாசெஞ்சன், இனித்த உடம்புடைய பேராசிரியர்தம் பேராசிரியர், ஆய்நாட்டு அரசின் இளவல் --  மூச்சுவாங்குது எனக்கு -- அவ்வளோதான் --  வருகிறார், வருகிறார், வருகிறார்.

Innamburan S.Soundararajan

unread,
Aug 9, 2016, 11:14:49 PM8/9/16
to mintamil
மின் தாக்குதல் பாடத்தை இலவசமாக படித்து முன்னேறிய ஒருவர் நீர், அரிசோனரே. இரண்டாவது பாடம் துவக்க, கிருபை செய்து ஏது செய்யவும். அந்த பாடத்தை மீள்பதிவு செய்து ஹோமொர்க்குடன் அளித்தால், இரண்டாவது பாடம் தொடங்கும். அதன் முன்னோடி சர்ச்சில்+ ஸ்டாலின். பாடம்: இரண்டாம் போர் முனை. என் அனுபவமும் பகிரப்படும்.

இன்னம்பூரான்

--

Nagarajan Vadivel

unread,
Aug 9, 2016, 11:53:26 PM8/9/16
to மின்தமிழ்
காரக்குடிக்காரர் என்பதால் கல்லாக்கட்டி காசு அள்ளும் வேலைக்கு வரக்கூடாது
சங்க இலக்கியத்தில் இலக்கணத்தில் களம் கண்ட கவிஞர் என்றொரு வகையறா உண்டு
அக்காலப் போர் நாட்டு மக்களைப் பாதிக்காவண்ணம் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட விதிகளின்படி நடந்தது.  போர் வீரர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதியில்லை
போர்க்களத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு திறந்த வெளியாகப் போர்க்களம் இருக்கும் ஸ்ரீராமன்போல் மட்டுறுத்துனர் என்ற பேரில் மரத்துக்குப்பின் மறைந்து ந்ன்று தாக்கும் மர்மம் போர்த் தர்மம் அல்ல
ஒரு பனைமரல்லின் மேற்பகுதியை வெட்டிவிட்டு அங்கே ஒரு இருக்கையைப் போட்டு அங்கே கள்ஃம் கண்ட கவிஞர் பார்வையாளராக இருப்பார்.  போர் முடிந்தபின் போரைப்பற்றிக் கவிதை புனைவார்,  அது ஒரு நடுநிலைப் பார்வையுடன் இருக்கும்
அதுவே மக்களிடையே பாடப்படும்போது பாடபேதம் மிகுந்து ஒரு சர்புடையதக மாறிவிடும்
நாயகன் படத்தில் நீங்க நல்லவரா கெட்டவரா என்பதுபோல் உங்களையும் கேட்க ஆசைதான்
மட்டுறுத்தனரும் பார்வையாளரும் வேறு வேறு.  போரில் விதிகள் மீறப்பட்டால் அதை வெளியுலகுக்கு அறிவிப்பவர் மட்டுறுத்துனர்
மரத்தில் இருந்து கீழே குதித்து சோடாபாட்டிலுடன் டாய் என்று சவுண்ட் விடுவது ம்ட்டுறுத்துதல் அல்ல
நீங்களோ நானோ தலையிடுவது சரியல்ல.  கானுறை உலகில் சண்டை என்பது இயற்கையின் நியதி அங்கே எல்லாம் நரியார் வந்து நாட்டாமை செய்வதில்லை
மடலாடல் குழுவிலும் அவ்வாறே.  நீங்கள் விருப்பம்போல் உத்திரவின்று உள்ளே புகுந்து பளிஞ்சடுகுடு விளையாடக் கூடாது
ஐயோ பாவம் நீங்கள் மட்டுறுத்தரால் பாதிக்கப்பட்ட கருண்யம் செலுத்தவேண்டிய அடிபட்ட ஜீவராசி.  நீங்கள் காயத்துக்கு மருந்துபோடவே நேரம் இல்லை இதில் எங்கே அறிவிப்பாளர் வேலை என்ற போர்வையில் நாரதர் வேலை பார்க்க நேரமோ அல்லது திறமையோ உள்ளது
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.  மட்டுறுத்துனருக்கெல்லாம் ஒரு ராசி வேண்டும் அய்யா எல்லாரும் மின்தமிழ்மட்டுறுத்துனராக தனிப்பெருஞ் சோதியாக வலம் வர நெஞ்சுரம் வேண்டும் ஐயா நெஞ்சுரம் வேண்டும் 
சீடரே அடங்குங்க
குறும்(புத்)தாடி


--

Oru Arizonan

unread,
Aug 10, 2016, 2:16:26 AM8/10/16
to mintamil


2016-08-09 20:53 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

//நாயகன் படத்தில் நீங்க நல்லவரா கெட்டவரா என்பதுபோல் உங்களையும் கேட்க ஆசைதான்//

 கேட்டால் பதில் சொல்லிவிட்டுப்போகிறேன்.  நான் நல்லவருக்கு நல்லவன்; கேட்டவருக்கு கெட்டவன்.

//ஐயோ பாவம் நீங்கள் மட்டுறுத்தரால் பாதிக்கப்பட்ட கருண்யம் செலுத்தவேண்டிய அடிபட்ட ஜீவராசி. நீங்கள் காயத்துக்கு மருந்துபோடவே நேரம் இல்லை //

நீங்களாவது ஐயோ பாவம் பார்ப்பதே காயத்தை மருந்திட்டுக் குணப்படுத்தியமாதிரி இருக்கிறது. 

//சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ///

 எந்தச் சட்டி, எம்மாதிரி அகப்பை என்றால், நானும் ஒரு செட் வாங்கிவைத்துக்கொள்வேன் அல்லவா?

//தனிப்பெருஞ் சோதியாக வலம் வர நெஞ்சுரம் வேண்டும் ஐயா நெஞ்சுரம் வேண்டும் //

இதில் ஏதோ  subliminal message இருப்பதுபோலத் தோன்றுகிறதே! 
 
///சீடரே அடங்குங்க//

பெரியசித்தரே சொன்னபிறகு சின்னவர் அடங்கவேண்டியதுதானே!

சித்தரின் சின்னத்தம்பி,
ஒரு அரிசோனன் 

Aravindan Neelakandan

unread,
Aug 10, 2016, 7:59:52 AM8/10/16
to Seshadri Sridharan, mintamil, Nagarajan Vadivel, Dr.Subashini
நான் அறிந்தவரையில் பாபா சாகேப் அம்பேத்கர், சட்டம், வரலாறு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் வல்லுனர். அத்துடன் வைஸ்ராய் போர்க்கால அரசில் பதவி வகித்தவர். தொடர்ந்து சட்ட ரீதியாக பட்டியல் சமுதாய மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவர். எனவே அவர் சுதந்திர பாரதத்தின் சட்ட அமைச்சராக செயலாற்றியதே மிகவும் பொருத்தமானது. இவ்விதத்தில் நேருவுக்கு பாபா சாகேப் பெயரை பரிந்துரை செய்தவர் காந்திதான். இது பாபா சாகேப் அவர்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பாபா சாகேப் அவர்களின் அரசியல் நிர்ணய சட்டம் பாரதத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

ஈ.வெ.ராமசாமி ஜனநாயக எதிர்ப்பாளர். இனவெறியர். தமிழ்நாட்டின் பெரும் சீரழிவுகளின் தலைமகன்.

 

2016-08-08 16:30 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2016-08-08 12:56 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

விடுதலை அடைந்து நேரு முதலில் அமைத்த அரசு மக்களால் தேர்ந்தெடுப்பப்பட்ட அரசல்ல அம்பேத்கார் சட்ட மேதை அல்ல பொருளாதாரம் அரசியல் சமூகவியல் அமெரிக்காவில் படித்தவர் அம்பேத்காருக்கும் காந்தியாருக்கும் இடையில் கருத்துவேறுபாடு இருந்தது
//அவரை விட தகுதியானோர் வேறு எவரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்ததால் தான் சட்டத்தை வடிக்கக் கேட்டுக் கொண்டார்!! 
சுபா//

 சட்ட மேதை என்று பொய்க் கூக்குரல் இட்டவரின் கருத்தை ஆராயாமல் அப்படியே ஏற்றதனால் மேற்சொன்ன கருத்தை சுபா வெளியிட்டார்.   


 இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.


இப்படியான ஒரு முறைமையில் அத்தனை தொகுதிக்கும் ஒரு ஒரு தலித் வேட்பாளர் என 500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதே நேரம் வெவ்வேறு சாதியை சேர்ந்த ஒரு பொது வேட்பாளர்  தொகுதிக்கு  ஒருவர் என தேர்ந்தெடுக்கும் போது 500 பேர் என்று ஆகுமானால் தலித்துகள் தயவில்லாமல் எதுவுமே நடவாது என்று ஆகிவிடாதா?  500:500 இது உண்மையில் குடிநாயகத்திற்கு எதிரானது, குந்தகமானது என்றல்லவா ஆகிறது.

மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


அவர் செய்ததே சரி  

இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன


இது கூட இடைக்காலத்திற்கு தான் நிலையாக அல்ல என்று ஏற்கப்பட்டிருக்க வேண்டும்.   


பிட்டன் 

Innamburan S.Soundararajan

unread,
Aug 14, 2016, 8:24:04 AM8/14/16
to mintamil
இப்போது தான் காணக்கிடைத்தது. நன்றி.
2016-08-06 15:21 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
துப்பறியும் சாம்புவை நினைவூட்டிவிட்டது.  இந்தக் கடிதம் இணைய வளர்ச்சிக்குப்பின் நகலெடுக்கும் கருவுகள் அறிமுகமானபின் தோன்றிய வெட்டு ஒட்டு ஆவணம் என்பது தெளிவு.  கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுமைகளில் பலரை நான் நேரில் அறிவேன்.  அரங்கண்ணல் விடுதலைப் பத்திரிக்கையை அச்சிடுவதை மேற்பார்வையிடும் பணியைச் செய்தவர்.  அவர் பெரியார் திருமண நாளன்று பெரியார் முன்னர் எழுதிய முதைவன் இள்ம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதைக் கடுமையாக எழுதியதை வெளியிட்டார்.  திருமணம் முடிந்து வந்ததும் அரங்கண்ணலைக் கேட்டதும் அவர் தான் வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார்.  பெருமாள் சோற்றைத் தின்றுவிட்டு பெருமாளுக்குத் துரோகமா என்று திட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சம்பத் அண்ணாவை மணியம்மையின் திருமணத்துக்கு எதிராக அறிக்கைவிடுமாறு கேட்டவரை உண்மை.  அண்ண ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை விமரிசனம் செய்ய மாட்டேன் என்று மறுத்ததும் உண்மை
திரும்பத் திரும்ப இந்த ஆவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல் மின்தமிழில் வெளியிடுவதால்  என்ன பயன்?
குறுந்தாடி

2016-08-06 15:01 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
தேமொழி.. உங்களுக்கு துப்பறியும் நிபுணர் என்ற பதவி கொடுக்கலாமா ? 😂



2016-08-06 6:24 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:

பொய்க்கடிதம்


தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்

https://ta.wikisource.org/s/3469


பக்கம் - 197:

https://ta.wikisource.org/s/49fp


என். வி. நடராசன், எஸ்.குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றார் முயன்றுபார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப் பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற் கேற்ப இரு கூறுகளாய்ப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி. பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவதுபோல, அவர் கையெழுத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 விடுதலை’ நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30-7-49 'குடி அரசு' இதழிலும் மறுபதிப்புப் பெற்றது.அண்ணா, அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்திகொண்டு, அவர்கள் பெயர் விடுதலை'யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேற வில்லை. விடுதலை' அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோவிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதிசெய்கி றார்கள். சம்பத்தும் சூதனாகிவிட்டான்-என்று பெரியார் 13.7-49:விடுதலை'யில் எழுதினார். பெரியார்மீது அண்ணா வும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார். விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர். 


இராம. அரங்கண்ணல் 1946-ல்திருத்துறைப்பூண்டி யில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். 'விடுதலை’, குடி அரசு' இதழ்களில் சில காலம் பணி யாற்றிப், பின்னர் கர்ஞ்சியில் 'திராவிட நாடு’ அலுவலகத்திலிருந்தார். 1962, 1961-ல் மயிலாப்பூர்,


********

கடிதத்தின் படம்:




********



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/N4m0mxPPqEY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages