தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

21 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 13, 2025, 12:51:06 PMApr 13
to Santhavasantham
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை முதன் முறையாக அச்சிட்டு மக்களிடம் எடுத்துச் சென்றவர், முல்லை முத்தையா ஆவார். தமிழ்ப் புது வருஷமாக, சுபானு ஆண்டு 1943-ல் பிறந்தது. அதற்கு, வாழ்த்துப்பா பாரதிதாசனிடம் பெற்று முல்லை முத்தையா அச்சிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாக, சுபானு, சித்திரை 1-ம் நாள் (1943 CE) பாரதிதாசன்  பாடிய வாழ்த்து இது.

சுபானு (1943) வருட வாழ்த்து
--------------------

முந்நூற் றறுபதுன் முத்துச் சிலம்படி
ஒவ்வொன் றாக ஊன்றி, நீ  "உமக்குச்
செம்மை, செம்மை, செம்மை" என்று
நடந்துவா! எம்மனோர் நல்வாழ்வு
தொடங்கும் வண்ணம் தூயோய் வாழியே!
                 - பாரதிதாசன்

முதன்முறையாக பாவேந்தரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைத்  தன் தொகுப்பில் தேடித் தந்த முல்லை முத்தையா அவர்களுக்கு நன்றி பல.
https://www.tamilvu.org/library/nationalized/pdf/70-mullaip.lmuthaiah/paarpukazhumpaavaenthar.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைப் புரட்சிக் கவிஞர் பாடியதற்கு அவரது சங்க இலக்கியப் பயிற்சியும், புலமையும் துணைநின்றன எனலாம்.
சித்திரையைப் புரட்சிக்கவி தொடக்க நாள் என வர்ணிப்பது, சங்க நூல்களில் தமிழ்ப் புத்தாண்டு சுட்டும் "தலைநாள்" என்பதுடன் ஒக்கும்.

வேங்கை, கொன்றை மலர்கள் பூப்பது தமிழ்ப் புத்தாண்டின் போது தான். எனவே, "தலைநாள்" என்கிறது சங்க நூல் வழமை.
"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
     - மலைபடுகடாம், பாடல் வரி 305

 "தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)

இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்

 இளவேனில் காலமான சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிந்துகொள்ளலாம். பேரா. ச. கண்மணி என் மடலுக்கு இட்ட மறுமொழி,
https://groups.google.com/g/vallamai/c/opxGYwOCuX8/m/3cONu7jmAAAJ

(1) தமிழர் பஞ்சாங்கம் கணித்தல், 4500 ஆண்டுப் பழமை கொண்டது. முன்பெல்லாம், நக்ஷத்திரங்கள் (Lunar Mansions) கோட்பாடு, கணிப்பு சீனர்கள் ஏற்படுத்தியது என தொல்வானியல் ஆய்வர்கள் கூறிவந்தனர். இப்போது அது மறுக்கப்பட்டு, சிந்துவெளி இந்தியர்கள் செய்தது Lunar Mansions என்றாகிவிட்டது. திங்கள்/மாதம் (< மதி) ~30 நாள் கொண்டது. (29.53 நாள்). இது தான் இந்தியா முழுமையும் சந்திரமானப் பஞ்சாங்கம் (Lunar Calendar).  பாரதிதாசன் ஓர் ஆண்டுக்கு   360 நாள் என திங்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கைச் சொல்கிறார். ஆண்டாள், மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்னும் போது, பூர்ணிமாந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு காலப் பஞ்சாங்கக் கணிப்பைப் பாடுவதாகத் தோன்றுகிறது. சங்க காலத்தில் இது, சக வருஷ காலண்டரைத் தமிழ் மன்னர்கள் ஏற்றமை, "ஆடு தலையாக" (நெடுநல்வாடை) என்று கனலிவட்டம் பாண்டியன் அரண்மனையில் இருந்த ஓவியம், ஆடு கோட்பாட்டை, வடக்கே இருந்து கொணர்ந்த சேர மன்னன் போன்றவற்றால் அறிகிறோம். ஏற்கெனவே சொன்ன நக்ஷத்திரக் கணிப்புக்கு முதன்மை கொடுத்து, பௌர்ணமியில் அந்த நட்சத்திரம் என இயைத்து தமிழ் வருஷத்தின் 12 மாதங்களின் பெயர்களை வைத்துள்ளனர். தமிழ் மாதப் பெயர்களுக்கான இலக்கணத்தைத் தொல்காப்பியர் பாடியுள்ளார். சேர அரசன், ஆடு கோட்பாடு ஏற்படுத்தினபோது, இப்போதைய தமிழ் LuniSolar Calendar தொடங்குகிறது.

(2) பாரதிதாசன் தை மாதம் தமிழ் வருஷம் பிறப்பு என்று பாடிய இரு பாடல் உண்டு. அப்போது நட்சத்திரக் கணிப்பின் பழைமை போன்ற செய்திகள் தெரியாது. பின்னர் தமிழறிஞர்கள் எடுத்துக் கூறியிருக்கவேண்டும். சிந்தித்து, சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு முதல் திங்கள் எனப் பின்னர் பாடியுள்ளார். பிற பின்.
https://groups.google.com/g/vallamai/c/RqdyXU5wgKM/m/CWrVsWxTAwAJ

சென்ற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆட்சியில், "முத்திரை பதிக்கும் சித்திரை" எனத் தமிழ்நாட்டு அரசாங்கம் புத்தாண்டு விழாமலர் வெளியிட்டுள்ளது. பல கவிஞர்கள், கட்டுரையாளர்கள் (உ-ம்: பழ. கருப்பையா) எழுதியன காண்க,
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010861_முத்திரை_பதிக்கும்_சித்திரை.pdf

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 13, 2025, 9:16:47 PMApr 13
to vall...@googlegroups.com


On Sun, Apr 13, 2025 at 1:53 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


A "song" attributed to Bharatidasan is actually not his:

சக 


On Sun, 13 Apr 2025, 10:21 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளை முதன் முறையாக அச்சிட்டு மக்களிடம் எடுத்துச் சென்றவர், முல்லை முத்தையா ஆவார். தமிழ்ப் புது வருஷமாக, சுபானு ஆண்டு 1943-ல் பிறந்தது. அதற்கு, வாழ்த்துப்பா பாரதிதாசனிடம் பெற்று முல்லை முத்தையா அச்சிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாக, சுபானு, சித்திரை 1-ம் நாள் (1943 CE) பாரதிதாசன்  பாடிய வாழ்த்து இது.

சுபானு (1943) வருட வாழ்த்து
--------------------

முந்நூற் றறுபதுன் முத்துச் சிலம்படி
ஒவ்வொன் றாக ஊன்றி, நீ  "உமக்குச்
செம்மை, செம்மை, செம்மை" என்று
நடந்துவா! எம்மனோர் நல்வாழ்வு
தொடங்கும் வண்ணம் தூயோய் வாழியே!
                 - பாரதிதாசன்

முதன்முறையாக பாவேந்தரின் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைத்  தன் தொகுப்பில் தேடித் தந்த முல்லை முத்தையா அவர்களுக்கு நன்றி பல.


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தைப் புரட்சிக் கவிஞர் பாடியதற்கு அவரது சங்க இலக்கியப் பயிற்சியும், புலமையும் துணைநின்றன எனலாம்.
சித்திரையைப் புரட்சிக்கவி தொடக்க நாள் என வர்ணிப்பது, சங்க நூல்களில் தமிழ்ப் புத்தாண்டு சுட்டும் "தலைநாள்" என்பதுடன் ஒக்கும்.

வேங்கை, கொன்றை மலர்கள் பூப்பது தமிழ்ப் புத்தாண்டின் போது தான். எனவே, "தலைநாள்" என்கிறது சங்க நூல் வழமை.
"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
     - மலைபடுகடாம், பாடல் வரி 305

 "தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)

இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்

 இளவேனில் காலமான சித்திரை மாதத்தை தமிழர்கள் முதல் மாதமாக கொண்டுள்ளனர் என்பது மிக தெளிவாக தெரிந்துகொள்ளலாம். பேரா. ச. கண்மணி என் மடலுக்கு இட்ட மறுமொழி,
https://groups.google.com/g/vallamai/c/opxGYwOCuX8/m/3cONu7jmAAAJ

(1) தமிழர் பஞ்சாங்கம் கணித்தல், 4500 ஆண்டுப் பழமை கொண்டது. முன்பெல்லாம், நக்ஷத்திரங்கள் (Lunar Mansions) கோட்பாடு, கணிப்பு சீனர்கள் ஏற்படுத்தியது என தொல்வானியல் ஆய்வர்கள் கூறிவந்தனர். இப்போது அது மறுக்கப்பட்டு, சிந்துவெளி இந்தியர்கள் செய்தது Lunar Mansions என்றாகிவிட்டது. திங்கள்/மாதம் (< மதி) ~30 நாள் கொண்டது. (29.53 நாள்). இது தான் இந்தியா முழுமையும் சந்திரமானப் பஞ்சாங்கம் (Lunar Calendar).  பாரதிதாசன் ஓர் ஆண்டுக்கு   360 நாள் என திங்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கைச் சொல்கிறார். ஆண்டாள், மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்னும் போது, பூர்ணிமாந்த மாதத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்த ஒரு காலப் பஞ்சாங்கக் கணிப்பைப் பாடுவதாகத் தோன்றுகிறது. சங்க காலத்தில் இது, சக வருஷ காலண்டரைத் தமிழ் மன்னர்கள் ஏற்றமை, "ஆடு தலையாக" (நெடுநல்வாடை) என்று கனலிவட்டம் பாண்டியன் அரண்மனையில் இருந்த ஓவியம், ஆடு கோட்பாட்டை, வடக்கே இருந்து கொணர்ந்த சேர மன்னன் போன்றவற்றால் அறிகிறோம். ஏற்கெனவே சொன்ன நக்ஷத்திரக் கணிப்புக்கு முதன்மை கொடுத்து, பௌர்ணமியில் அந்த நட்சத்திரம் என இயைத்து தமிழ் வருஷத்தின் 12 மாதங்களின் பெயர்களை வைத்துள்ளனர். தமிழ் மாதப் பெயர்களுக்கான இலக்கணத்தைத் தொல்காப்பியர் பாடியுள்ளார். சேர அரசன், ஆடு கோட்பாடு ஏற்படுத்தினபோது, இப்போதைய தமிழ் LuniSolar Calendar தொடங்குகிறது.

(2) பாரதிதாசன் தை மாதம் தமிழ் வருஷம் பிறப்பு என்று பாடிய இரு பாடல் உண்டு. அப்போது நட்சத்திரக் கணிப்பின் பழைமை போன்ற செய்திகள் தெரியாது. பின்னர் தமிழறிஞர்கள் எடுத்துக் கூறியிருக்கவேண்டும். சிந்தித்து, சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு முதல் திங்கள் எனப் பின்னர் பாடியுள்ளார். பிற பின்.
https://groups.google.com/g/vallamai/c/RqdyXU5wgKM/m/CWrVsWxTAwAJ

சென்ற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா ஆட்சியில், "முத்திரை பதிக்கும் சித்திரை" எனத் தமிழ்நாட்டு அரசாங்கம் புத்தாண்டு விழாமலர் வெளியிட்டுள்ளது. பல கவிஞர்கள், கட்டுரையாளர்கள் (உ-ம்: பழ. கருப்பையா) எழுதியன காண்க,
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010861_முத்திரை_பதிக்கும்_சித்திரை.pdf

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUf85r2QhrgLrvz68CakoJp54utKzpO3VmnWegiN%3DUiuBw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuGLaP7MfPQzqb84ja3TmaCHzCp%2ByhNmSN3FLns6z4kVQ%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Apr 13, 2025, 10:42:30 PMApr 13
to santhavasantham

திங்கள்தன் தலைக்கொண்ட சங்கரன் புலவனாய்ச்

        சீராட்டிப் பாராட்டவும்

        சிறுவனாம் கந்தனும் தான்வேண்டிப் பெற்றதோர்

        செல்வமாய் ஆராட்டவும்

சங்கங்கள் ஒருமூன்றில் சிங்காதனம் பெற்று

        தனியாட்சி நீ செய்தனை

        தணியாத இனிமையின் அணியாக நல்லறச்

        சத்தியம் நீ காத்தனை

 

எங்களரும் அன்னையே என்றுமிளங் கன்னியே

        இளைத்திடா இன்ப ஊற்றே

        எண்ணங்கள் பதிவாக்கி வண்ணங்கள் உருவாக்கி

        எத்தனை நீ தந்தனை

 

மங்காத புகழ்தனைப் பங்காகக் கொண்டெங்கள்

        வாழ்வுக்கு வரவாகினாய்

        வாழிய செந்தமிழ் அன்னையே தெய்வமே

        வாழ்கவே, வாழ்க வாழ்க *

 

அறுசீர் விருத்தம்

 

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்

        பதினெண் கீழ்க்கணக்கும்,

சித்தம் மயக்கும் சிந்தா மணியும்

        சிலம்பும், மேகலையும்,

சத்தாம் கம்ப ராமா யணமும்,

        சமயப் புராணமதும்,

முத்தாம் அன்னை மேனிக் கழகாய்

        முந்தும் அணிமணியாம்.

 

அகமும், புறமும், அம்மை கழுத்தில்

        அணியும் முத்தாரம்.

அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சி

        அவள்கைக் கங்கணமாம்.

தகமை அருண கிரியின் சந்தம்

        தாய்க்குச் சலங்கைகளாம்

நிகரில் கவிஞன் பார தியின்பா

        நெளியும் புன்னகையாம்.

 

மாலை, கோவை, துhது, சிந்து,

        வண்ணம், அந்தாதி,

சால விருத்தம், யமகம், மடக்கு,

        சதகம், பரணி, உலா,

 

சீலப் பள்ளு, பிள்ளைத் தமிழ்ப்பா,

        சிறப்புக் குறவஞ்சி,

ஏலும் பாவை, பள்ளி யெழுச்சி,

        எல்லாம் ஒய்யாரம்.

 

எழுசீர்  விருத்தம்

 

ழியைப் போலவே ஆழமும் மண்ணினை

        அளந்திடும் வியன்பரப்பும்

சூழுயர் வானினைத் தொட்டிடும் உயர்வதும்

        சொல்லிலே கொண்டவள் யார் ?

வாழுமோர் வகையிலே வரலாறு கொண்டதோர்

        மாண்பினைக் கண்டவள் யார் ?

வாழிய செந்தமிழ் * வாழிய நம் அன்னை *

        வாழிய, வாழியவே

Arasi Palaniappan

unread,
Apr 13, 2025, 10:47:22 PMApr 13
to சந்தவசந்தம்
அற்புதம் ஐயா!🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCawWdULMQhVmfLktw%2Bg2jUYwsW8kz6CLhORA-kUJ%3D07A%40mail.gmail.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 13, 2025, 10:53:12 PMApr 13
to santhav...@googlegroups.com
மிக அருமை! 
அனந்த்


Sent from my iPhone

On Apr 13, 2025, at 10:47 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



K.R. Kumar

unread,
Apr 14, 2025, 12:21:15 AMApr 14
to santhav...@googlegroups.com
மிகச் சிறப்பு, இலந்தையாரே !!

வாழ்க! வளத்துடன் !!

குமார்(சிங்கை0

--

NATARAJAN RAMASESHAN

unread,
Apr 14, 2025, 3:20:52 AMApr 14
to santhav...@googlegroups.com
அருமை தலைவரே 

       —தில்லைவேந்தன்



Ram Ramakrishnan

unread,
Apr 14, 2025, 8:15:19 AMApr 14
to santhav...@googlegroups.com
அருமையான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்கள், தலைவரே. மிகவும் ரசித்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 13, 2025, at 22:42, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--

N. Ganesan

unread,
Apr 14, 2025, 8:28:52 AMApr 14
to santhav...@googlegroups.com
அருமை. தமிழ்ச் சங்க விழாக்களில் பாடச் செய்யலாம்.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்த்திடு ⁠
          சூழ்கலை வாணர்களும் - இவள் 
என்று பிறந்தவள் என்றுணராத
          இயல்பினளாம் எங்கள் தாய்!

நா. கணேசன்
--

Siva Siva

unread,
Apr 14, 2025, 8:48:06 AMApr 14
to santhav...@googlegroups.com
இனிய பாடல். வாழ்க!

முதற்பாடலின் வாய்பாடு / சந்தம் என்ன?

V. Subramanian

N. Ganesan

unread,
Apr 14, 2025, 9:05:10 AMApr 14
to Santhavasantham
தமிழ்ப் புத்தாண்டு வணக்கம்
- நாமக்கல் கவிஞர்
(நாமக்கல் கவிஞர் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்)

சித்திரை மாதத்தில் புத்தாண்டு - தமிழ்த்
தெய்வம் திகழும் திருநாட்டில்,
இத்தினம் அந்தத் திருநாள் - ஆதலின்
ஈசனைப் போற்றி வரம்கேட்போம்.

கொல்லா நோன்புடன் பொய்யா விரதம்
கொண்ட தமிழ்க்குணம் குன்றாமல்
எல்லா மக்களும் இன்புறக் கோரிடும்
எண்ணம் வளர்த்திடப் பண்ணிடுவோம்.

வீரப் படைகளின் தோள்வலியும் முன்னே
வெற்றிகள் கண்டிட்ட வாள்வலியும்
போரில் பயன்பட மாட்டா என்கிற
புத்தியை எங்கும் புகட்டிடுவோம்.

கோபத்தை மூட்டிடும் பேச்சுகளும் வெறும்
குற்றங்கள் சாட்டிடும் ஏச்சுகளும்
தாபத்தை நீடிக்கச் செய்யுமல் லால்வேறு
தந்திடும் நன்மைகள் ஒன்றுமில்லை.

வள்ளல் மகாத்மா காந்தியின் வாழ்வே
வள்ளுவன் தந்த திருக்குறளாம்.
தெள்ளிய உண்மையைத் தேர்ந்து நடத்திடத்
தெய்வத் திருவருள் நாடிடுவோம்.

உலகத்தில் போர்ப்பயம் நீங்கிடவும் மக்கள்
உள்ளத்தில் அன்பறம் ஓங்கிடவும்
சுலபத்தில் கண்டு சுகம்பெறக் காந்தியைச்
சுதினத்தில் வாழ்த்தித் தொழுதிடுவோம்.

புத்தாண்டு சபதம்

நாக ரீக மென்று சொல்லி
எந்தி ரத்தை நம்பியே
வேக மாக யுத்த மென்றே
குழியில் வீழ்ந்து வெம்பினார்
போக வாழ்வை எண்ணி எண்ணிப்
போட்டி யிட்டு முண்டியே
சோக முற்றே உலக மெங்கும்
வறுமை மிஞ்சத் தண்டினோம்.

உண்டு டுத்துக் குடிவெ றித்திங்
குலகை ஆளும் ஆசையே
கண்டு விட்ட இன்ப மாகக்
கால முற்றும் பேசியே
சண்டை யிட்டுக் கொன்று வீழ்த்தச்
சக்தி தேடும் ஒன்றையே
கொண்டு விட்ட கொள்கை யாக்கிக்
கொடுமை சூழ நின்றுளோம்.

ஒருவர் நாட்டை ஒருவர் பற்றி
உரிமை பேசி ஆள்வதும்
இருவர் மூவர் சேர்ந்து கொண்டும்
இம்சை காட்டி வாழ்வதும்
பெருமை என்று எண்ணி வந்த
பித்துக் கொண்ட கொள்கையால்
தரும மற்று மனித வர்க்கம்
தலைகு னிந்து வெள்கினோம்.

எந்த வேளை என்ன வென்று
ஏது சண்டை கூடுமோ!
எந்த நாட்டில் எந்தத் தேசம்
எந்தக் குண்டைப் போடுமோ!
வந்த தீமை தப்பி வாழ
வழியைத் தேடி மாநிலம்
சிந்தை நொந்து மனித வாழ்வு
சீர்கு லைந்து போனதே.

உலகில் உள்ள மக்கள் யாரும்
ஒருகு டும்ப மாகவே
கலக மற்று யுத்த மென்றே
கவலை விட்டுப் போகவே
குலவி வாழ இந்த நாட்டின்
கொள்கை யாகும் சாந்தியே
சுலப மான மார்க்க மென்று
சுத்த மாக ஏந்துவோம்.

உயிரி ருக்கும் உடல னைத்தும்
ஈசன் வாழும் உறையுளாம்
அயர்வி லாத ஞான மூட்டும்
அருள றிந்த அறிவுளோம்
பெயர்ப டைத்த நமது நாட்டின்
பெருமை யாகும் மந்திரம்
துயர றுக்கும் 'சாந்தி' சொல்லித்
தொண்டு செய்ய முந்துவோம்.

156. புத்தாண்டு வாழ்த்துகள்

புகுந்தது நமது வாழ்வில்
புதியதோர் ஆண்டிந் நாளே
பூசனை புரிந்து போற்றி
ஈசனை வணங்கி நிற்போம்.
உகுந்திடும் தீமை யாவும்
ஒழிந்திடும் துன்ப மெல்லாம்
உயர்ந்திடும் நிலைமை; கீர்த்தி
ஓங்கிடும்; காரி யத்தில்
மிகுந்திடும் இன்பம்; நெஞ்சில்
மிகுந்திடும் அன்பும் பண்பும் ;
மேவிடும் தருமம் தானம் ;
மேவிய சுற்றம் சூழ
மகிழ்ந்திடும் உள்ளத்தோடு
மனையறம் சிறக்க நீங்கள்
மங்களம் பெருகி வாழ
மனமார வாழ்த்து கின்றேன்.

சத்தியமும் சாந்தமுமே துணைக ளாகச்
சன்மார்க்க வழிநடக்கும் கொள்கை தந்த
உத்தமனாம் காந்தியரை உள்ளத் தெண்ணி
உலகாளும் பரம்பொருளை வணங்கி நின்று
சித்திரையாம் புத்தாண்டுத் திருநாள் காணும்
சீர்மிகுந்த தமிழ்த்தாயின் புகழைப் பாடி
மெத்தநலம் பெருகிஉங்கள் குடும்ப வாழ்க்கை
மேன்மேலும் சிறப்படைய வாழ்த்து கின்றோம்.
- நாமக்கல் கவிஞர்

Obviously, this Tamil New Year song was written during WWII days. ~NG
https://x.com/naa_ganesan/status/1911765924815712362

Swaminathan Sankaran

unread,
Apr 14, 2025, 10:59:20 AMApr 14
to santhav...@googlegroups.com
மிகச் சிறந்த, அரிய கவிதை.
இங்கு இட்டமைக்கு நன்றி.
நாமக்கல்லறைப் போன்ற சிறந்த கவிஞரைப்  புகழ்ந்து
தமிழுலகம் பேசுவதில்லை. இளம் தலைமுறையில் மிகப் பெரும்பாலோர்க்கு 
அவரைத் தெரிந்திருப்பதில்லை. வருத்தற்குரிய, வெட்கப்பட  வேண்டிய விஷயம்.

சங்கரன் 
PS:
Probably written in the post-war period, maybe a year, or few years after Gandhiji's death.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Apr 14, 2025, 6:01:32 PMApr 14
to santhav...@googlegroups.com
14 சீர் இரட்டை ஆசிரிய விருத்தம். கடைசிச் சீர் ஓரசைச் சீர் ஒரோவழி விளம் காய்ச்சீரின் இடத்தைப் பிடிக்கும்

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 14, 2025, 7:54:40 PMApr 14
to santhav...@googlegroups.com
Thanks.

விருத்தங்களில் ஓரசைச்-சீர் வருவதுண்டா? ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா?
ஒருவேளை அவற்றைக் கனிச்சீராகக் கருதவேண்டுமோ?

V. Subramanian

Kaviyogi Vedham

unread,
Apr 14, 2025, 8:34:18 PMApr 14
to santhav...@googlegroups.com

Subbaier Ramasami

unread,
Apr 14, 2025, 11:45:01 PMApr 14
to santhav...@googlegroups.com
ஆம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 15, 2025, 7:37:09 AMApr 15
to santhav...@googlegroups.com
On Mon, Apr 14, 2025 at 9:59 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
>
> மிகச் சிறந்த, அரிய கவிதை.
> இங்கு இட்டமைக்கு நன்றி.
> நாமக்கல்லாரைப் போன்ற சிறந்த கவிஞரைப்  புகழ்ந்து

> தமிழுலகம் பேசுவதில்லை. இளம் தலைமுறையில் மிகப் பெரும்பாலோர்க்கு
> அவரைத் தெரிந்திருப்பதில்லை. வருத்தற்குரிய, வெட்கப்பட  வேண்டிய விஷயம்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து - நாமக்கல் கவிஞர்
https://x.com/naa_ganesan/status/1911770860467204375

60 ஆண்டுகளின் பெயர் வருவது போலவும் 20-ம் நூற்றாண்டில்
கவிஞர்கள் புத்தாண்டு வாழ்த்து இயற்றியுள்ளனர்.
கிடைப்பவற்றைத் தொகுத்துத் தருகிறேன்.
NG


>
>
> சங்கரன்
> PS:
> Probably written in the post-war period, maybe a year, or few years after Gandhiji's death.


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து - கண்ணதாசன்
https://x.com/naa_ganesan/status/1911853118478028867

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
         - கவியரசர் கண்ணதாசன்

புண்ணியம் செழிப்ப தாக
          பொய்மைகள் தொலைவ தாக
கண்ணியம் தழைப்ப தாக
          கடமைகள் உயர்வ தாக
எண்ணிய நடப்ப தாக
          இனியபா ரதத்தில் மீண்டும்
கண்ணியன் கீதைச் செல்வன்
          கண்ணனே பிறப்பா னாக!
 
கற்பெனும் பெருமை ஓங்க
          கவினுறும் தாய்மை வாழ
அற்புதக் கவிதை தோன்ற
          ஆனந்த இல்லம் காண
நற்பெரும் தவத்த ராய
          நங்கைமார் உயர்ந்து வாழ
கற்புயர் நாட்டில் மீண்டும்
          கண்ணகி பிறப்பா ளாக!
 
தந்தையைப் பணிந்து போற்றி
          தாய்மையை வணங்கி யேற்றி
சிந்தையைச் செம்மை யாக்கி
          செயல்களை நேர்மை யாக்கி
செந்தமிழ் நாட்டோர் வாழ்வில்
          செல்வங்கள் குவிந்து காண
சிந்தையால் உயர்ந்து நின்ற
          ஸ்ரீராமன் பிறப்பா னாக!
 
கணவனே தெய்வ மென்றும்
          காடெலாம் சோலை யென்றும்
அணிமணி வேண்டே னென்றும்
          அவனையே தொடர்வே னென்றும்
பணிவொடு பண்பும் கொண்டு
          பாவலர் ஏற்ற வாழும்
தணலெனும் கற்பின் செல்வி
          ஜானகி பிறப்பா ளாக!
 
ஒவ்வொரு பிறப்பும் இங்கே
          உயர்ந்ததாய்ப் பிறப்ப தற்கு
செவ்விதழ் நீலக் கண்ணாள்
          திருமகள் தமிழ்மீ னாட்சி
செவ்விதின் அருள்வா ளாக!
          தேசத்தை உயர்த்து கின்ற
நல்வழி யாவும் கண்டு
          நடக்கட்டும் தமிழ்ப் புத்தாண்டு!
                 - கண்ணதாசன்

 
Reply all
Reply to author
Forward
0 new messages