--தமிழ்ப் புத்தாண்டே வருக(பல்லவி)தமிழ்ப்புத் தாண்டே வருக! - என்றும்… தளரா உளமும் வளமும் தருக!(சரணங்கள்)மகிழ்வே நினைவில் மருவ - அணி… மலர்போல் பரிவின் மணமே பரவநிகரில் ஒருவன் அருளால் - இரு… நிலமேல் நிறைமா நலமே பெருக (தமிழ்ப்புத் தாண்டே) 1.உலகம் முழுதும் உறவே - எனும்… ஒருபே ருரைதான் உணர்வி லுறவேநலிவும் பழியும் அறவே - நிதம்… நவமாய் ஒளிரும் அறிவும் பெறவே (தமிழ்ப்புத் தாண்டே) 2.குறளின் மொழியே நெறியாய் - ஒரு… குறைவறும் அன்போ டறமே குறியாய்திறனும் திருவும் மலிய - இன்பம்… செழித்திடும் வாழ்வில் புகழே பொலிய (தமிழ்ப்புத் தாண்டே) 3.- இமயவரம்பன்
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/9529BB65-6D13-4A79-84A6-E17D9D8236B4%40gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcM5w43PXkGZPmfu00u5gqMOmdRuNpoBuo6xOA%2BsiOYQQ%40mail.gmail.com.
செவ்., 16 ஏப்., 2024, AM 6:49 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது
"தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை"
- மலைபடுகடாம், பாடல் வரி 305
"தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்"
-சிறுபாணாற்றுப்படை
பாடல் வரிகள் (145-149)
இதன்முலமாக, வேங்கை மலர்கள் பூக்கும் சித்திரை மாதத்தை தலை நாளாக, அதாவது முதல் நாளாக மற்றும் இளவேனில் காலங்களில் மலரும் செருந்தி மலரை பற்றியும், அதை தலைநாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6j7fS6pfKX7tq%2BZsp4VTg2gbxie_Lm_hPNDGMAi_rTshg%40mail.gmail.com.
<இளவேனில் காலமான சித்திரை மாதத்தை>என்றால் முதுவேனில் எப்போது.
கொஞ்சம் விரித்து ஆராய்வோம்.
On Tue, Apr 16, 2024 at 10:11 PM Raju Rajendran <raju.ra...@gmail.com> wrote:<இளவேனில் காலமான சித்திரை மாதத்தை>என்றால் முதுவேனில் எப்போது.இளவேனில் = வசந்த இருது = சித்திரை, வைகாசி.
On Tue, Apr 16, 2024 at 11:51 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:கொஞ்சம் விரித்து ஆராய்வோம்.ஆம். நன்றி.ஆர்தல் = தங்குதல் என்ற பொருள் உண்டு. மயில் + ஆர்ப்பு = மயிலாப்பு என மயிலாப்பூர் குறிப்பிடப்படுகிறது அப்பர் தேவாரத்தில். ம.பொ.சி. அவர்களின் ஊர்.ஓய்மா/ஓய்மான். (cf. கவரிமா/கவரிமான்) - புரவி வளர்ப்பால் பெயர்பெற்ற தலைவர்கள்.ஓய்மா + ஆர்ந்த + ஊர் = ஓமாந்தூர்.உ-ம்: ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி - மதறாஸ் ராஜதானி முதல்வர்.