மதிசூடி துதிபாடி - 4

319 views
Skip to first unread message

Siva Siva

unread,
Feb 4, 2012, 6:34:22 PM2/4/12
to santhavasantham
Continuation from the previous thread 'மதிசூடி துதிபாடி - 3'.

See below for links to the previous threads of this series:
'மதிசூடி துதிபாடி' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/7787777c7b7030f1/?hl=en&

'மதிசூடி துதிபாடி - 2' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/970277b8e6962d93?hl=en#

'மதிசூடி துதிபாடி - 3' : http://groups.google.com/group/santhavasantham/browse_thread/thread/8ebaf86e6461c5e0?hl=en

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 4, 2012, 6:43:20 PM2/4/12
to santhavasantham

2010-08-04
திருவானைக்கா - 2
-------------------
(
கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

1)
மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
இருளை நீங்க எய்து நெஞ்சமே
ஒருசி லந்திக் குலகை ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/4 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Feb 5, 2012, 1:03:30 PM2/5/12
to சந்தவசந்தம்
இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் பேரைப் போற்று நெஞ்சமே
தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே

அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.

இரிந்திட= சாய
தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 5, 4:43 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010-08-04
> திருவானைக்கா - 2
> -------------------
> (கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
> (சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")
>
> 1)
> மருளில் ஆழ்த்தி வாட்டும் வல்வினை
> இருளை நீங்க எய்து நெஞ்சமே
> ஒருசி லந்திக் குலகை ஆளவே
> அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்

> > <http://www.thevaaram.org/>
>
> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Feb 5, 2012, 10:06:32 PM2/5/12
to santhavasantham

2)
விளித்துக் காலன் பாசம் வீசுமுன்
களிக்க எண்ணில் கருது நெஞ்சமே
களிற்றின் அன்பைக் கண்டு நற்பதம்
அளித்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/4 Siva Siva <naya...@gmail.com>

2010-08-04

திருவானைக்கா - 2
-------------------
(
கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' என்ற வாய்பாடு)
(
சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய மாதரார்")

1)

thangamani

unread,
Feb 6, 2012, 6:17:19 AM2/6/12
to சந்தவசந்தம்
பொளித்து வாழ்வைப் போக்கும் வாளென
களித்த நாளை கருது நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்பதம்

அளித்த அண்ணல் ஆனைக் காவையே.

பொளித்தல்=வெட்டுதல்.

அன்புடன்,
தங்கமணி.

Siva Siva

unread,
Feb 6, 2012, 8:32:04 AM2/6/12
to santhav...@googlegroups.com
சில ஐயங்கள்.

பொளித்தல் - அகராதியில் காணும் விளக்கத்தை நோக்கின், இது உளியால் செய்வதைச் சுட்டுகிறது. வாளால் வெட்டலாம், பொளிக்கலாமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

களித்த நாள் - ஈசனைப் போற்றாது பொழுதுபோக்கிய நாள்களைச் சுட்டுகிறதா?

பிளிற்றும் வேழம் - யானை பிளிறும். பிளிற்றுதல் என்பதும் பொருந்துமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

2012/2/6 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Feb 6, 2012, 11:38:17 AM2/6/12
to சந்தவசந்தம்
// பலவுடன்
வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்
துஞ்சுபிடி மருங்கின் மஞ்சுபடக் காணாது
பெருங்களிறு பிளிற்றும் சோலை// (கபிலன்: நற்றிணை: 222:6௯)
பிளிற்றும்= யானை பேரொலி எழுப்புதல்.

முதலடியை மாற்றுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 6, 6:32 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சில ஐயங்கள்.
>
> பொளித்தல் - அகராதியில் காணும் விளக்கத்தை நோக்கின், இது உளியால் செய்வதைச்
> சுட்டுகிறது. வாளால் வெட்டலாம், பொளிக்கலாமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.
>
> களித்த நாள் - ஈசனைப் போற்றாது பொழுதுபோக்கிய நாள்களைச் சுட்டுகிறதா?
>
> பிளிற்றும் வேழம் - யானை பிளிறும். பிளிற்றுதல் என்பதும் பொருந்துமா?
> அறிந்தோர் சொல்லக்கூடும்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/6 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > பொளித்து வாழ்வைப் போக்கும்  வாளென
> > களித்த நாளை  கருது  நெஞ்சமே
> > பிளிற்றும் வேழம் பெறவோர்  நற்பதம்
> > அளித்த  அண்ணல்  ஆனைக்  காவையே.
>
> > பொளித்தல்=வெட்டுதல்.
>
> > அன்புடன்,

> > தங்கமணி.- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 6, 2012, 5:57:08 PM2/6/12
to santhavasantham

3)
துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/5 Siva Siva <naya...@gmail.com>

2)


thangamani

unread,
Feb 7, 2012, 7:27:21 AM2/7/12
to சந்தவசந்தம்
ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்
விளித்து நற்றாள் விழையென் நெஞ்சமே
பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி
அளித்த அண்ணல் ஆனை காவையே.

அன்புடன்,
தங்கமணி.

> > - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Feb 7, 2012, 8:29:08 AM2/7/12
to சந்தவசந்தம்
பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்
என்பெற் றான்தாள் எய்து நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்

அன்பத் தனுறை ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 7, 3:57 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> துன்பத் தொடரில் சுழன்று தொய்வதேன்
> இன்புற் றிருக்க எய்து நெஞ்சமே
> தன்பத் தர்க்குத் தடைகள் தீர்த்தருள்
> அன்பத் தனுறை ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 7, 2012, 5:52:23 PM2/7/12
to santhavasantham

4)
நம்மை வினைகள் நாடி எய்துமுன்
செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
அம்மை யப்பன் ஆனைக் காவையே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/6 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Feb 8, 2012, 11:37:48 AM2/8/12
to சந்தவசந்தம்
வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்
செம்மை யான்தாள் சேர்க நெஞ்சமே
தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 8, 3:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> நம்மை வினைகள் நாடி எய்துமுன்
> செம்மை ஆகச் சேர்க நெஞ்சமே
> இம்மை அம்மை இன்பம் நல்கிடும்
> அம்மை யப்பன் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 8, 2012, 6:34:28 PM2/8/12
to santhavasantham

5)
சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
அழலார் விழியன் ஆனைக் காவையே.

நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/7 Siva Siva <naya...@gmail.com>

4)


naa.g...@gmail.com

unread,
Feb 8, 2012, 11:43:23 PM2/8/12
to சந்தவசந்தம்

On Feb 8, 3:34 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
> அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
> நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
> அழலார் விழியன் ஆனைக் காவையே.
>
> நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

நிழல் ஆர் மழுவன் - “ஒளிபொருந்திய மழு” என்பதற்கு பட்டைதீட்டியதால்
பளிங்குபோல் வரும் ஒளியைப் பிரதிபலிக்கும் மழு என்று கொள்ளலாமா?
தென்னிந்திய உருக்கு (Wootz steel) செய்த மழு அப்படி இருக்கும்.
http://en.wikipedia.org/wiki/Wootz

(1) ”காசறைத் திலகக் கருங் கறை கிடந்த
மாசு இல் வாள் முகத்து, வண்டொடு சுருண்ட
குழலும், கோதையும், கோலமும், காண்மார்,
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி;” - சிலம்பு - நடுகற் காதை

நிழல் கால்கிற மண்டிலம் = பிம்பத்தை பிரதிபலிக்கும் (வெண்கலக்) கண்ணாடி.

(2) நிழல் கால் நெடுங்கல் நின்ற மன்றமும் - இந்திரவிழவூரெடுத்தகாதை
(சிலம்பு)
= ஒளியைப் பிரதிபலிக்கும் பளிக்குத்தூண் நிற்கும் மண்டபம்.

(3) நெறிதரு குழலை அறலென்பர்கள்
*நிழலெழு மதியம் நுதலென்பர்கள்*
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பர்கள்
அறிகுவ திரிதிவ் விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர் அமையும் அவரென்செய
மறிமழு வுடைய கரனென்கிலர்
மறலியை முனியும் அரனென்கிலர்
மதிபொதி சடில தரனென்கிலர்
மலைமகள் மருவு புயனென்கிலர்
செறிபொழில் நிலவு திலையென்கிலர்
திருநடம் நவிலும் இறையென்கிலர்
சிவகதி அருளும் அரசென்கிலர்
சிலர்நர குறுவர் அறிவின்றியே. (கோயில் நான்மணிமாலை, 11-ஆம் திருமுறை)

நிழலெழு மதியம் நுதலென்பர்கள் -
ஆயிரம் ஆண்டு முன்னமே சந்திரகிரணங்கள் சூரிய ஒளியின்
பிரதிபலிப்பு என தெரிந்துள்ளார்கள். எனவே
மதியொளிக்கு நிழல் என்ற சொல்லை பயன்படுத்தியுளர்.

இதனை சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார்
சொல்லியுள்ளார்கள்.

(4) திருக்கரவீரம் - தேவாரம்

நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரழ லேந்திய
கழலி னாருறை யுங்கர வீரத்தைத்
தொழவல் லார்க்கில்லை துக்கமே.
பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைமதியைச்சூடிய நீண்ட சடைமுடியினரும், அழலைக் கையில்
ஏந்தியவரும் வீரக்கழலை அணிந்தவரும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளிய
திருக்கரவீரத்தைத் தொழவல்லவர்கட்குத் துக்கம் இல்லை.

நிழல் என்பது சூர்ய ஒளியை அல்ல. சந்திரனது ஒளி.

திருத்தொண்டர் புராணமும் - உரையும் - சிகேஎஸ்
”(6) நிழல் - ஒளி; தன்னொளியின்றிச் சூரியனது நிழல் - ஒளி - படுதலே தனது
ஒளியாகவுடையது மதி என்பது வானநூலார் துணிபுமாம்; ”

நிழல் - ஒளியுடன் தொடர்பு படுத்துவது போல் வரும் இடங்களில்,
சந்திரன், பளிங்கு, பொன், மணி, ... எனத் தான் வாங்கும் ஒளியைப்
பிரதிபலிக்கும் (reflect, shadow) பொருட்கள் உள்ளனவா என்று பார்க்கலாம்.

நா. கணேசன்

> 2012/2/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 9, 2012, 1:13:49 PM2/9/12
to சந்தவசந்தம்
பொருள் சரியாக அமைய,சிறிது மாற்ரி இட்டுள்ளேன்.
என் பிசி ரிப்பேர்.மிகவும் படுத்துகிறது.

அன்புடன்,
தங்கமணி.

இருள்செய் ஊழின் இன்னல் இரிந்திட
பொருள்கொள் உய்வாய் புகல்கொள் நெஞ்சமே


தெருள்கொள் எண்கால் சிலந்தி ஆளவே
அருள்செய் அண்ணல் ஆனைக் காவையே.

இரிந்திட= சாய

தெருள்கொள்=(சிவ பக்தியில்)தெளிவுடைய.

ஒளிக்குள் வானாய் ஓங்கு வான்பெயர்

விளித்து நினைந்து வேண்டு நெஞ்சமே


பிளிற்றும் வேழம் பெறவோர் நற்கதி

அளித்த அண்ணல் ஆனை காவையே.

பொன்பெற் றாலென் புகழே கொண்டிலென்

அன்புற் றிறைஞ்சி அடைக நெஞ்சமே
முன்புற் றவ்வூழ் முற்றும் தீர்த்தருள்
அன்பத் தனுறை ஆனைக் காவையே.

வெம்மை செய்தீ வினைகள் நீங்கிடச்

செம்மை நிலையுறச் சேர்க நெஞ்சமே


தம்மை எண்ணி சாற்று வோர்க்கருள்
அம்மை அப்பன் ஆனைக் காவையே.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Feb 10, 2012, 6:50:03 AM2/10/12
to சந்தவசந்தம்
சுழலார் வினைசெய் துன்பில் சிக்கியே
உழலா தடைய உரையென் நெஞ்சமே
கழலார் பாதன் கனகக் கொன்றையன்

அழலார் விழியன் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 9, 4:34 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> சுழலார் வினையுள் தோய்ந்து துன்பினால்
> அழலேன்; மகிழ அடைக நெஞ்சமே,
> நிழலார் மழுவன் நீற்றன் நெற்றியில்
> அழலார் விழியன் ஆனைக் காவையே.
>
> நிழல் ஆர் மழுவன் - ஒளி பொருந்திய மழுப்படையை ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/7 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 10, 2012, 5:56:07 PM2/10/12
to santhavasantham

6)
அலையும் நிலையும் அழியும்; வல்வினை
தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
கலையும் ஏந்தி கழலைக் காவிரி
அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.

கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/8 Siva Siva <naya...@gmail.com>

5)

Siva Siva

unread,
Feb 10, 2012, 6:13:11 PM2/10/12
to santhav...@googlegroups.com




/நிழல் - ஒளியுடன் தொடர்பு படுத்துவது போல் வரும் இடங்களில்,

சந்திரன், பளிங்கு, பொன், மணி, ... எனத் தான் வாங்கும் ஒளியைப்
பிரதிபலிக்கும் (reflect, shadow) பொருட்கள் உள்ளனவா என்று பார்க்கலாம். /

தேடியதில் கண்ட ஓர் உதாரணம்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idField=60390&padhi=039&startLimit=7&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 6.39.7
நீராகி நெடுவரைக ளானான் கண்டாய்
    நிழலாகி நீள்விசும்பு மானான் கண்டாய்
பாராகிப் பௌவமே ழானான் கண்டாய்
    பகலாகி வானாகி நின்றான் கண்டாய்
ஆரேனுந் தன்னடியார்க் கன்பன் கண்டாய்
    அணுவாகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே.

 





--

Siva Siva

unread,
Feb 11, 2012, 8:41:22 PM2/11/12
to santhavasantham

7)
ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
ஆறு சூடி ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/10 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Feb 12, 2012, 12:54:24 AM2/12/12
to சந்தவசந்தம்
வலையில் மீனாய் வதைசெய் வெவ்வினை
இலையென் றடைய இறைஞ்சு நெஞ்சமே
தலைவன் மலர்பூந் தாளை காவிரி
அலைகொண் டேத்தும் ஆனை காவையே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 11, 3:56 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> அலையும் நிலையும் அழியும்; வல்வினை
> தொலையும்; சென்று தொழுக நெஞ்சமே
> கலையும் ஏந்தி கழலைக் காவிரி
> அலைகொண் டேத்தும் ஆனைக் காவையே.
>
> கலையும் ஏந்தி - மானையும் ஏந்தியவன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 12, 2012, 2:29:05 PM2/12/12
to சந்தவசந்தம்
மாறு  படுமிவ்   வைய   வாழ்வினில்
தேறு  தலுற  சேர்க  நெஞ்சமே
கூறு  பிறையன்  குளிர்செய் செஞ்சடை

ஆறு  சூடி  ஆனைக்  காவையே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 12, 6:41 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> ஊறு செய்யும் வினைகள் ஓய்ந்துநற்
> பேறு பெறுதற் கெய்து நெஞ்சமே
> நீறு பூசி நெற்றிக் கண்ணினன்
> ஆறு சூடி ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 12, 2012, 2:33:31 PM2/12/12
to santhav...@googlegroups.com
கூறு  பிறையன் = ?


2012/2/12 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 12, 2012, 9:03:43 PM2/12/12
to santhavasantham

8)
நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/11 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Feb 13, 2012, 10:56:36 AM2/13/12
to சந்தவசந்தம்
//கூறு  பிறையன் = ?//


சுட்டலுக்கு நன்றி சிவா!மாற்றியுள்ளேன். சரிபார்க்கவும்.
மிக்க !நன்றி

மாறு  படுமிவ்   வைய   வாழ்வினில்
தேறு  தலுற  சேர்க  நெஞ்சமே

வீறு  கொண்டு   வேக  மாய்விழும்


ஆறு  சூடி  ஆனைக்  காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 13, 12:33 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> கூறு  பிறையன் = ?
>

> 2012/2/12 thangamani <tvthangam...@gmail.com>

Siva Siva

unread,
Feb 13, 2012, 9:03:08 PM2/13/12
to santhavasantham

9)
புரிவல் வினையுன் புடைபு காமலே
இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
அரியன் உறையும் ஆனைக் காவையே.

புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
இரிதல் - அஞ்சி ஓடுதல்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/12 Siva Siva <naya...@gmail.com>

8)

Subbaier Ramasami

unread,
Feb 13, 2012, 10:11:28 PM2/13/12
to santhav...@googlegroups.com

பழகும் இறைமை பலம தாகவே

கழலைப் பணியக் கருது நெஞ்சமே

தழலைப் பணியை மழுவைத் தாங்கியே

அழகன் உறைவ தானைக் காவதே!

இலந்தை


2012/2/12 Siva Siva <naya...@gmail.com>

8)



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

thangamani

unread,
Feb 14, 2012, 2:10:44 AM2/14/12
to சந்தவசந்தம்
இடுக்கண் தீர எய்து நெஞ்சமே
திடுக்கிட் டதிர சிமைய வெற்பினை
எடுக்க முயன்ற இலங்கை மன்னனை

அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 13, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> நடுக்கம் தீர நண்ணு நெஞ்சமே,
> வெடுக்கென் றோடிக் கயிலை வெற்பினை
> இடக்க முயன்ற இலங்கைக் கோன்தனை
> அடர்த்த அண்ணல் ஆனைக் காவையே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/11 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 14, 2012, 1:15:20 PM2/14/12
to சந்தவசந்தம்
இரியும் இன்னல்; இடர்செய் வல்வினை
சரிய எண்ணில் சாற்று நெஞ்சமே
உரியன் அன்பர்க்(கு); உன்னா தார்க்கவன்

அரியன் உறையும் ஆனைக் காவையே.

சாற்று=சொல்லு.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 14, 7:03 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> புரிவல் வினையுன் புடைபு காமலே
> இரிய எண்ணில் எய்து நெஞ்சமே
> எரியின் உருவன் இருவர் காணுதற்(கு)
> அரியன் உறையும் ஆனைக் காவையே.
>
> புடை புகாமல் - பக்கத்தில் வாராமல்;
> இரிதல் - அஞ்சி ஓடுதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/12 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 14, 2012, 10:58:38 PM2/14/12
to santhavasantham

10)
வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
வந்தித் துய்வர் மதியம் சூடிய
அந்தி வண்ணன் ஆனைக் காவையே.

மதியம் - சந்திரன்;
அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/13 Siva Siva <naya...@gmail.com>

9)

Siva Siva

unread,
Feb 15, 2012, 9:53:31 PM2/15/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
பிணிசெய் வினைகள் பிரிய வேண்டினீர்
பணிசெய் தரனைப் பரவச் சேர்மினே
பணியும் நிலவும் பாயும் கங்கையும்
அணிசெய் முடியன் ஆனைக் காவையே.

பிணி - கட்டு; நோய்; துன்பம்;
வேண்டினீர் - வேண்டில் நீர்; வேண்டியவர்களே;
பணி - தொண்டு; நாகம்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/14 Siva Siva <naya...@gmail.com>

10)


thangamani

unread,
Feb 16, 2012, 2:24:53 AM2/16/12
to சந்தவசந்தம்
வெந்து யரற விழைக நெஞ்சமே
சிந்தை சிவமாய்த் திகழ்பேய் அம்மையை
அந்த மிலன்பில் அன்னை யேஎனும்

அந்தி வண்ணன் ஆனைக் காவையே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 15, 8:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> வெந்த நீற்றை விலக்கும் பொய்யரின்
> மந்த வார்த்தை மதியு ளோர்கொளார்
> வந்தித் துய்வர் மதியம் சூடிய
> அந்தி வண்ணன் ஆனைக் காவையே.
>
> மதியம் - சந்திரன்;
> அந்திவண்ணன் - மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த செம்மேனியன்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/13 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 17, 2012, 8:55:35 PM2/17/12
to santhav...@googlegroups.com
பாடல்களைப் படித்து வரும் அன்பர்கள் அனைவர்க்கும் என் வணக்கம்.

2012/2/13 Subbaier Ramasami <elan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 17, 2012, 9:06:41 PM2/17/12
to santhavasantham

2012-01-21
---------------
திருக்கூடலையாற்றூர்
-------------------------------------------
கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

(
சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
"
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")

1)
ஓடது கலனாக ஊரிடு பலியேற்பான்
மாடமர் மணிகண்டன் பண்மலி வன்றொண்டர்
பாடலை மிகவேண்டிப் பழமலை வழிகாட்டிக்
கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/15 Siva Siva <naya...@gmail.com>

thangamani

unread,
Feb 18, 2012, 12:49:37 PM2/18/12
to சந்தவசந்தம்
ஆடலில் வல்லான் தன் அன்பனின் பண்ணாரும்
பாடலை உவந்தேற்கும் பரிவினில் முதுகுன்றம்
நாடிடும் அவர்தம்மை நம்பனும் வழிகாட்டிக்

கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 18, 7:06 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012-01-21
> ---------------
> திருக்கூடலையாற்றூர்
> -------------------------------------------
> கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
>
> (சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
> "பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")
>
> 1)
> ஓடது கலனாக ஊரிடு பலியேற்பான்
> மாடமர் மணிகண்டன் பண்மலி வன்றொண்டர்
> பாடலை மிகவேண்டிப் பழமலை வழிகாட்டிக்
> கூடவும் வருவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/15 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 18, 2012, 10:58:16 PM2/18/12
to santhavasantham

2)
தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் தழல்வண்ணன்
தக்கநன் மலராகத் தன்விழி இடுமாற்குச்
சக்கரம் அருள்செய்த சங்கரன் முடிமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/17 Siva Siva <naya...@gmail.com>

2012-01-21
---------------
திருக்கூடலையாற்றூர்
-------------------------------------------
கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.

(
சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
"
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")

1)

thangamani

unread,
Feb 19, 2012, 1:09:42 PM2/19/12
to சந்தவசந்தம்
மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்க்கும்
இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது

கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தஙக்மணி.


On Feb 19, 8:58 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> தக்கனின் பெருவேள்வி தகர்த்தவன் தழல்வண்ணன்
> தக்கநன் மலராகத் தன்விழி இடுமாற்குச்
> சக்கரம் அருள்செய்த சங்கரன் முடிமீது
> கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/17 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2012-01-21
> > ---------------
> > திருக்கூடலையாற்றூர்
> > -------------------------------------------
> > கலிவிருத்தம் - 'விளம் மாங்காய் விளம் மாங்காய்' என்ற வாய்பாடு.
>
> > (சுந்தரர் தேவாரம் - திருக்குருகாவூர் வெள்ளடைப் பதிகம் - 7.29.6 -
> > "பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய்")
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 19, 2012, 1:35:27 PM2/19/12
to santhav...@googlegroups.com
/வினைதீர்க்கும் /
இங்கே 'வினைதீர்ப்பான்' என்று பொருள்படும் என எண்ணுகிறேன். ('செய்யும்' வாய்பாட்டு வினைமுற்று?)
அவ்வாறு எனின், 'வினைதீர்ப்பான்' என்ற சொல்லே இங்கே பொருந்துவதால், அப்படி இருக்கின் படிப்போர்க்கு இன்னும் பொருள்தெளிவாகுமோ?


2012/2/19 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 19, 2012, 3:32:10 PM2/19/12
to santhavasantham

3)
பாவினை நிதம்பாடிப் பைங்கழல் பணிவாரின்
தீவினை அவையெல்லாம் தீர்ந்திட அருள்செய்வான்
சேவினை அமரீசன் செஞ்சடை யதன்மீது
கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/18 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Feb 20, 2012, 1:22:02 PM2/20/12
to சந்தவசந்தம்
மொக்குளின் நிகராக முடிவுறும் வாழ்வீதில்
அக்கரம் அஞ்சோதின் அன்பொடு வினைதீர்ப்பான்

இக்குவில் மதவேளை எரித்தவன் சிரமீது
கொக்கிற கணிவானூர் கூடலை யாற்றூரே.

'வினைதீர்ப்பான்'என்றே மாற்றினேன்.சுட்டலுக்கு


நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி.


On Feb 19, 11:35 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> /வினைதீர்க்கும் /
> இங்கே 'வினைதீர்ப்பான்' என்று பொருள்படும் என எண்ணுகிறேன். ('செய்யும்'
> வாய்பாட்டு வினைமுற்று?)
> அவ்வாறு எனின், 'வினைதீர்ப்பான்' என்ற சொல்லே இங்கே பொருந்துவதால், அப்படி
> இருக்கின் படிப்போர்க்கு இன்னும் பொருள்தெளிவாகுமோ?
>

> 2012/2/19 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > மொக்குளின்  நிகராக முடிவுறும்  வாழ்வீதில்
> > அக்கரம்  அஞ்சோதின்  அன்பொடு  வினைதீர்க்கும்
> > இக்குவில் மதவேளை எரித்தவன்  சிரமீது
> > கொக்கிற  கணிவானூர்  கூடலை  யாற்றூரே.
>
> > அன்புடன்,

> > தஙக்மணி.- Hide quoted text -

thangamani

unread,
Feb 20, 2012, 1:27:00 PM2/20/12
to சந்தவசந்தம்
நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் பொழில்பூத்தக்

கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 20, 1:32 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> பாவினை நிதம்பாடிப் பைங்கழல் பணிவாரின்
> தீவினை அவையெல்லாம் தீர்ந்திட அருள்செய்வான்
> சேவினை அமரீசன் செஞ்சடை யதன்மீது
> கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 20, 2012, 2:49:48 PM2/20/12
to santhav...@googlegroups.com
'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை இலைக்கும் சொல்லலாமா?

2012/2/20 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 20, 2012, 7:24:55 PM2/20/12
to santhavasantham

4)
கான்மிகு மலர்தூவிக் காவெனும் அடியார்கள்
வான்மிசை நிலையாக வாழ்ந்திட அருள்செய்வான்
மான்மறி மழுவேந்தி வார்சடை யதன்மீது
கூன்மதி அணிவானூர் கூடலை யாற்றூரே.

கான் - வாசனை;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/19 Siva Siva <naya...@gmail.com>

3)


Subbaier Ramasami

unread,
Feb 20, 2012, 7:50:59 PM2/20/12
to santhav...@googlegroups.com

ஏடவிழ் கவியாலே பாடிடும் அடியார்கள்

வாடிடும் நிலைமாற்றும் மாடெழில் உமைநாதன்

மூடிடும் முகிலேறி ஓடிடும் மதில்சூழும்

கோடுயர் அணிகுஞ்சிக் கூடலை ஆற்றூரே!

 

இலந்தை

21-2-2012


2012/2/21 Siva Siva <naya...@gmail.com>
--

thangamani

unread,
Feb 21, 2012, 8:42:44 AM2/21/12
to சந்தவசந்தம்
நாவினில் இனிக்கின்ற நலம்தரும் பெயரானை
பாவினில் இசைத்தோதும் பத்தரின் துணையாவான்
கூவிடும் குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்

கூவிளம் அணிவானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

//'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
இலைக்கும் சொல்லலாமா?//

கூவிளம் என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
சுட்டுதலுக்கு நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

thangamani

unread,
Feb 21, 2012, 8:45:14 AM2/21/12
to சந்தவசந்தம்
தேன்சுவை பதிகங்கள் செவிமடுத் திடுமீசன்
மீன்விழி உமைபங்கன் வேண்டிய அருள்செய்வான்
கான் தனில் தழலாடி கற்றைவார் சடைமீது
கூன்பிறை அணிவானூர் கூடலை யாற்றூரே.

கான்=காடு

அன்புடன்,
தங்கமணி.


On Feb 21, 5:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> கான்மிகு மலர்தூவிக் காவெனும் அடியார்கள்
> வான்மிசை நிலையாக வாழ்ந்திட அருள்செய்வான்
> மான்மறி மழுவேந்தி வார்சடை யதன்மீது
> கூன்மதி அணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> கான் - வாசனை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/19 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 21, 2012, 11:55:56 AM2/21/12
to santhav...@googlegroups.com


2012/2/21 thangamani <tvthan...@gmail.com>

நாவினில்  இனிக்கின்ற  நலம்தரும்  பெயரானை
பாவினில்  இசைத்தோதும்  பத்தரின்  துணையாவான்
கூவிடும்  குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
கூவிளம்  அணிவானூர்   கூடலை  யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

//'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
இலைக்கும் சொல்லலாமா?//

கூவிளம்  என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
சுட்டுதலுக்கு நன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி

அப்பர் தேவாரம் - 4.107.10
தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.

பொருள் வேண்டில்:
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=41070&padhi=107&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

 

Siva Siva

unread,
Feb 21, 2012, 8:21:41 PM2/21/12
to santhavasantham

5)
தொல்விரி புகழாளன் சுந்தரர் தமிழ்நாடி
நல்வழித் துணையாகி நம்பனின் முதுகுன்றம்
செல்வழி இதுவென்று செப்பிய மறைநாவன்
கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே.

தொல்விரி புகழாளன் - தொல்புகழாளன், விரிபுகழாளன் - பழமையான புகழ் உடையவனும், விரிந்த புகழ் உடையவனும் ஆன சிவபெருமான்;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/20 Siva Siva <naya...@gmail.com>

4)


thangamani

unread,
Feb 21, 2012, 10:14:26 PM2/21/12
to சந்தவசந்தம்
மிக்கநன்றி சிவசிவா!

அன்புடன்,
தங்கமணி.

On Feb 21, 9:55 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/2/21 thangamani <tvthangam...@gmail.com>


>
> > நாவினில்  இனிக்கின்ற  நலம்தரும்  பெயரானை
> > பாவினில்  இசைத்தோதும்  பத்தரின்  துணையாவான்
> > கூவிடும்  குயில்கொஞ்சும் குளிர்நிழல் தருமேவும்
> > கூவிளம்  அணிவானூர்   கூடலை  யாற்றூரே.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > //'பொழில் பூத்த கூவிளம்' - பூத்தல் என்ற வினைச்சொல்லை
> > இலைக்கும் சொல்லலாமா?//
>
> > கூவிளம்  என்பது'வில்வம்' என்று பிறகுதான் தெரிந்துகொண்டேன்.
> > சடையில் சூடுவதால் பூவென்று நினைத்துவிட்டேன்.
> > மாற்றி எழுதினேன்.சரிபார்க்கவும்
> > சுட்டுதலுக்கு நன்றி சிவா!
>
> > அன்புடன்,
> > தங்கமணி
>
> அப்பர் தேவாரம் - 4.107.10
> தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்
> ஆன்றிக ழைந்துகந் தாடும் பிரான்மலை யார்த்தெடுத்த
> கூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழ
> ஊன்றிய சேவடி யான்கட வூருறை யுத்தமனே.
>

> பொருள் வேண்டில்:http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idFie...
>
>
>

Siva Siva

unread,
Feb 22, 2012, 6:50:17 PM2/22/12
to santhavasantham

6)
கார்விடம் அடைகண்டன் கையினிற் சிரமேந்தி
ஊர்விடை தனிலேறி உண்பலிக் குழலெந்தை
வார்குழல் உமைபங்கன் வானதி முடியேற்றான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.

வானதி - வான் நதி - கங்கை;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/21 Siva Siva <naya...@gmail.com>

5)


thangamani

unread,
Feb 22, 2012, 10:25:35 PM2/22/12
to சந்தவசந்தம்
பல்வகை  நிலைகாணும்  பத்திசெய்  வழிதன்னில்
வெல்வழி  இறைதாளை  விட்டிடா  நினைவாகும்
வல்வினை  அகன்றோடும்  வாழ்வினைத்  தருமீசன்
கொல்விடை  மர்வானூர்  கூடலை  யாற்றூரே.


அன்புடன்,
தங்கமணி.

On Feb 22, 6:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> தொல்விரி புகழாளன் சுந்தரர் தமிழ்நாடி
> நல்வழித் துணையாகி நம்பனின் முதுகுன்றம்
> செல்வழி இதுவென்று செப்பிய மறைநாவன்
> கொல்விடை அமர்வானூர் கூடலை யாற்றூரே.
>
> தொல்விரி புகழாளன் - தொல்புகழாளன், விரிபுகழாளன் - பழமையான புகழ்
> உடையவனும், விரிந்த
> புகழ் உடையவனும் ஆன சிவபெருமான்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/20 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 23, 2012, 7:15:12 PM2/23/12
to santhavasantham

7)
அஞ்சலர்க் கணையானின் அழகுடல் பொடிசெய்தான்
மஞ்சடை கயிலாயன் நஞ்சடை மணிகண்டன்
செஞ்சடை அதன்மீது திங்களும் அணிதேவன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.

பதம் பிரித்து:
அஞ்சு அலர்க் கணையானின் அழகு உடல் பொடி செய்தான்;
மஞ்சு அடை கயிலாயன்; நஞ்சு அடை மணிகண்டன்;
செஞ்சடை அதன்மீது திங்களும் அணி தேவன்;
குஞ்சரத்து உரியான் ஊர் கூடலையாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/22 Siva Siva <naya...@gmail.com>

6)


Dr Subramanian

unread,
Feb 23, 2012, 8:39:30 PM2/23/12
to santhav...@googlegroups.com

அன்பு சிவா
மஞ்சடை, நஞ்சடை,செஞ்சடை என்ற சொற்களின் பொருளும் ,பொருத்தமும்,இயைபும் முரணும் அருமையாக விழுந்திருக்கின்றன; படித்து நெஞ்சம் குளிர்ந்தேன். கொஞ்சம் நின்று கவனித்து இரசிக்க வேண்டிய இடங்கள்.
வவேசு

2012/2/24 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

thangamani

unread,
Feb 24, 2012, 4:17:00 AM2/24/12
to சந்தவசந்தம்
நீர்சடை அதன்மீது நிலவினை அணிவான் தன்
சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்

கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 23, 4:50 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> கார்விடம் அடைகண்டன் கையினிற் சிரமேந்தி
> ஊர்விடை தனிலேறி உண்பலிக் குழலெந்தை
> வார்குழல் உமைபங்கன் வானதி முடியேற்றான்
> கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.
>
> வானதி - வான் நதி - கங்கை;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/21 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 24, 2012, 9:08:30 AM2/24/12
to santhav...@googlegroups.com


2012/2/24 thangamani <tvthan...@gmail.com>

நீர்சடை அதன்மீது  நிலவினை  அணிவான் தன்
சார்கிற   நிறையன்பில்   தனதடி  யரைக்காத்துச்
சேர்கிற  நிதியாகத் திகழ்ந்திடும்  அருளாவான்
கூர்மழு  உடையானூர்   கூடலை  யாற்றூரே.


அன்புடன்,
தங்கமணி.

நீர் இருக்கும் சடை என்ற பொருள்வர 'நீர்ச்சடை' என்று வருமன்றோ?





thangamani

unread,
Feb 24, 2012, 10:11:06 AM2/24/12
to சந்தவசந்தம்
வார்சடை அதன்மீது வான்மதி அணிவான்தன்

சார்கிற நிறையன்பில் தனதடி யரைக்காத்துச்
சேர்கிற நிதியாகத் திகழ்ந்திடும் அருளாவான்
கூர்மழு உடையானூர் கூடலை யாற்றூரே.


ஒற்றில்லாத 'வார்சடை'என எழுதினேன்.
சுட்டலுக்கு நன்றி சிவா!


அன்புடன்,
தங்கமணி.

On Feb 24, 7:08 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/2/24 thangamani <tvthangam...@gmail.com>

thangamani

unread,
Feb 24, 2012, 10:14:37 AM2/24/12
to சந்தவசந்தம்
வெஞ்சினம் எழவேளை விழித்தெரி படச்செய்தான்
நஞ்சணி கறைகண்டன் நற்றவ குருவாகி
அஞ்சலென் றருள்செய்து அடைக்கலம் தருமீசன்

குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.


On Feb 24, 5:15 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> அஞ்சலர்க் கணையானின் அழகுடல் பொடிசெய்தான்
> மஞ்சடை கயிலாயன் நஞ்சடை மணிகண்டன்
> செஞ்சடை அதன்மீது திங்களும் அணிதேவன்
> குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.
>
> பதம் பிரித்து:
> அஞ்சு அலர்க் கணையானின் அழகு உடல் பொடி செய்தான்;
> மஞ்சு அடை கயிலாயன்; நஞ்சு அடை மணிகண்டன்;
> செஞ்சடை அதன்மீது திங்களும் அணி தேவன்;
> குஞ்சரத்து உரியான் ஊர் கூடலையாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/22 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 24, 2012, 5:11:43 PM2/24/12
to santhav...@googlegroups.com
தொடர்ந்து படித்து ஆதரிக்கும் அன்பர்கள் எல்லார்க்கும் வணக்கம்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2012/2/23 Dr Subramanian <vav...@gmail.com>

அன்பு சிவா
மஞ்சடை, நஞ்சடை,செஞ்சடை என்ற சொற்களின் பொருளும் ,பொருத்தமும்,இயைபும் முரணும் அருமையாக விழுந்திருக்கின்றன; படித்து நெஞ்சம் குளிர்ந்தேன். கொஞ்சம் நின்று கவனித்து இரசிக்க வேண்டிய இடங்கள்.
வவேசு

2012/2/24 Siva Siva <naya...@gmail.com>

7)
அஞ்சலர்க் கணையானின் அழகுடல் பொடிசெய்தான்
மஞ்சடை கயிலாயன் நஞ்சடை மணிகண்டன்
செஞ்சடை அதன்மீது திங்களும் அணிதேவன்
குஞ்சரத் துரியானூர் கூடலை யாற்றூரே.




--
Dr.V.V.Subramanian


Siva Siva

unread,
Feb 24, 2012, 6:09:37 PM2/24/12
to santhavasantham

8)
தாளடை அடியார்கள் தம்வினை களைந்தவ்வான்
ஆளவும் அருள்செய்வான் அருமலை அசைத்தானின்
தோளவை நெரித்துப்பின் நாளருள் புரியீசன்
கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே.

நாள் - வாழ்நாள்;
கோள் அரவு - கொடிய பாம்பு;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/23 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Feb 25, 2012, 4:23:54 AM2/25/12
to சந்தவசந்தம்
காளமும் அமுதென்றுண்   கறைமிட  றுடையானும்
நீளவெந்  துயர்செய்யூழ்  நீங்கிட  அருள்தந்துத்
தூளவை  யெனதீர்க்கும்  தொண்டரின்  துணையாவான்

கோளர  வணிவானூர்  கூடலை  யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 25, 4:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> தாளடை அடியார்கள் தம்வினை களைந்தவ்வான்
> ஆளவும் அருள்செய்வான் அருமலை அசைத்தானின்
> தோளவை நெரித்துப்பின் நாளருள் புரியீசன்
> கோளர வணிவானூர் கூடலை யாற்றூரே.
>
> நாள் - வாழ்நாள்;
> கோள் அரவு - கொடிய பாம்பு;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/23 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 7)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 25, 2012, 7:21:34 PM2/25/12
to santhavasantham

9)
பங்கயன் அரியன்று பைங்கழல் முடிகாணா
அங்கியின் உருவானான் அன்பரின் இடம்நாடி
இங்கென அருள்செய்வான் எழிலுறச் சடைமீது
கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே.

பங்கயன் அரி அன்று பைங்கழல் முடி காணா அங்கி - (எதிர்நிரல்நிரையாக வந்தது) - பிரமனால் திருமுடியும் திருமாலால் திருவடியும் காணமாட்டாத சோதி;

சம்பந்தர் தேவாரம் - 2.40.6 -
"
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான்
...."

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/24 Siva Siva <naya...@gmail.com>

8)

Siva Siva

unread,
Feb 25, 2012, 10:35:37 PM2/25/12
to santhav...@googlegroups.com


2012/2/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

ஏடவிழ் கவியாலே பாடிடும் அடியார்கள்

வாடிடும் நிலைமாற்றும் மாடெழில் உமைநாதன்

மூடிடும் முகிலேறி ஓடிடும் மதில்சூழும்

கோடுயர் அணிகுஞ்சிக் கூடலை ஆற்றூரே!

 

இலந்தை

21-2-2012


அழகிய பாடல். மோனை அமையும் இடங்களெல்லாம் எதுகை அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

6 ஆண்டுகளுக்கு முன் இந்த அமைப்பில் ஒரு பாடல் எழுதியிருந்தேனோ என்ற எண்ணம் வந்தது! என் கணினிச் சுவடிகளில் தேடிக் கண்டேன். அது:

2004-12-11

மெய்யில் அரவேந்திக் கையில் அனலேந்தித்
தையல் இடமேந்தும் ஐயன் வரவேண்டும்
மையல் மடம்நீக்கிப் பொய்யில் மனமாக்கித்
தொய்யும் எனைத்தூக்கி உய்யும் வரம்வேண்டும்
.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

thangamani

unread,
Feb 26, 2012, 6:59:42 AM2/26/12
to சந்தவசந்தம்
எங்குளன்   இறைவன் தான்  என்றவன்  அருள்தேடின்
தங்குவன்  உளம்தன்னில்  தாங்கிநம்  வினைதீரப்
பொங்கிடும்  தயைசெய்வான்  பொலிவுறும்  சடைமீது

கொங்கலர்  புனைவானூர்  கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 26, 5:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> பங்கயன் அரியன்று பைங்கழல் முடிகாணா
> அங்கியின் உருவானான் அன்பரின் இடம்நாடி
> இங்கென அருள்செய்வான் எழிலுறச் சடைமீது
> கொங்கலர் புனைவானூர் கூடலை யாற்றூரே.
>
> பங்கயன் அரி அன்று பைங்கழல் முடி காணா அங்கி - (எதிர்நிரல்நிரையாக
> வந்தது) - பிரமனால்
> திருமுடியும் திருமாலால் திருவடியும் காணமாட்டாத சோதி;
>
> சம்பந்தர் தேவாரம் - 2.40.6 -
> "எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
> இங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் ...."
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/24 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 8)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Feb 26, 2012, 9:22:18 AM2/26/12
to santhav...@googlegroups.com


2012/2/26 thangamani <tvthan...@gmail.com>

எங்குளன்   இறைவன் தான்  என்றவன்  அருள்தேடின்
தங்குவன்  உளம்தன்னில்  தாங்கிநம்  வினைதீரப்
பொங்கிடும்  தயைசெய்வான்  பொலிவுறும்  சடைமீது
கொங்கலர்  புனைவானூர்  கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.


அழகிய பாடல். நல்ல கருத்து.

அடியார் உள்ளத்தில் தங்கி, அவரைத் தாங்கி, வினையைத் தீர்த்தருள்பவன் கூடலையாற்றூரில் உறையும் சிவன் என்று பொருள்படுவது இனிமை.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

 
On Feb 26, 5:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:


--

Subbaier Ramasami

unread,
Feb 26, 2012, 5:00:22 PM2/26/12
to santhav...@googlegroups.com
அருமை

2012/2/26 Siva Siva <naya...@gmail.com>:

Siva Siva

unread,
Feb 26, 2012, 8:38:18 PM2/26/12
to santhavasantham

10)
நீற்றினைப் புனையாமல் நேர்மையை அறியாமல்
தூற்றிடும் மதிகேடர் தொல்வினைக் குழிநீங்கார்
போற்றிடும் அடியாரைப் பொன்றுதல் இலராக்கிக்
கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/25 Siva Siva <naya...@gmail.com>

9)


Siva Siva

unread,
Feb 27, 2012, 6:41:22 PM2/27/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
அன்றலர் மலர்தூவி ஆயிழை ஒருகூறா
வென்றிகொள் விடையானே வெண்மழுப் படையானே
மன்றினில் நடமாடீ என்பவர் மயல்தீர்க்கும்
கொன்றையஞ் சடையானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்





2012/2/26 Siva Siva <naya...@gmail.com>

10)

thangamani

unread,
Feb 28, 2012, 2:01:55 AM2/28/12
to சந்தவசந்தம்
மிக்கநன்றி சிவா!

அன்புடன்,
தங்கமணி

On Feb 26, 7:22 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2012/2/26 thangamani <tvthangam...@gmail.com>


>
> > எங்குளன்   இறைவன் தான்  என்றவன்  அருள்தேடின்
> > தங்குவன்  உளம்தன்னில்  தாங்கிநம்  வினைதீரப்
> > பொங்கிடும்  தயைசெய்வான்  பொலிவுறும்  சடைமீது
> > கொங்கலர்  புனைவானூர்  கூடலை யாற்றூரே.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> அழகிய பாடல். நல்ல கருத்து.
>
> அடியார் உள்ளத்தில் தங்கி, அவரைத் தாங்கி, வினையைத் தீர்த்தருள்பவன்
> கூடலையாற்றூரில் உறையும் சிவன் என்று பொருள்படுவது இனிமை.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> > On Feb 26, 5:21 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
>

> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Feb 28, 2012, 2:18:55 AM2/28/12
to சந்தவசந்தம்
நோற்றிடும் அடியாரின் நோய்செயும் வினைதீர்ப்பான்
ஆற்றினை பிறைதன்னை அழகுடை சிரம்கொண்டான்
சீற்றமும் மிகவன்று சிறுவனுக் கருள்செய்யக்

கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே.

அன்புடன்,
தங்கமணி.

On Feb 27, 6:38 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> நீற்றினைப் புனையாமல் நேர்மையை அறியாமல்
> தூற்றிடும் மதிகேடர் தொல்வினைக் குழிநீங்கார்
> போற்றிடும் அடியாரைப் பொன்றுதல் இலராக்கிக்
> கூற்றினை உதைத்தானூர் கூடலை யாற்றூரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/25 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 1, 2012, 7:53:24 PM3/1/12
to santhavasantham

2010-10-15
கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
--------------------------------------
(1
முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்துவரப்பெற்றது)

('
மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

(
சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')

1)
எழுஞா யிறுபோல் திகழும் எழில்மேனி
முழுநீ றணியும் முதல்வன் முடிவில்லான்
தொழுவார் துணைவன் சுடலை தனிலாடி
மழுவாட் படையன் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/2/27 Siva Siva <naya...@gmail.com>


Krishnamoorthy Premkumar

unread,
Mar 2, 2012, 6:52:50 AM3/2/12
to santhav...@googlegroups.com
அன்புள்ள தங்கமணி அவர்களே,
தாங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்யுங்கால் இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஒரே ஒரு இடம் (space) விட்டு தட்டுக. ஒன்றுக்கு  மேல் இடைவெளி அமைந்தால் செவ்வகங்கள் ஊடே தலை நீட்டிவிடுகின்றன. உணவில்  கல் போன்று இவை படிக்குங்கால் இடையூறு செய்கின்றன. 
அன்பன்
பிரேமு 


2012/2/26 thangamani <tvthan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
"நற்றுணை யாவது நமச்சி வாயவே"


Siva Siva

unread,
Mar 2, 2012, 9:02:00 PM3/2/12
to santhavasantham

2)
அங்கை குவிக்கும் அடியார்க் கருகாவான்
மங்கை ஒருபால் மகிழும் மணிகண்டன்
திங்கள் திகழும் முடிமேல் திரையாரும்
கங்கை அணிவான் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/1 Siva Siva <naya...@gmail.com>

2010-10-15
கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
--------------------------------------
(1
முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர் அமைந்துவரப்பெற்றது)

('
மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)

(
சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')

1)

thangamani

unread,
Mar 3, 2012, 2:16:22 AM3/3/12
to சந்தவசந்தம்
நன்றி பிரேமு!நீங்கள் கூறியபடி
ஒரு இடம்விட்டு தட்டச்சிடுகிறேன்.

அன்புடன்,
தங்கமணி

On Mar 2, 4:52 pm, Krishnamoorthy Premkumar <krsnapr...@gmail.com>
wrote:


> அன்புள்ள தங்கமணி அவர்களே,
> தாங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்யுங்கால் இரண்டு வார்த்தைகளுக்கிடையே ஒரே ஒரு
> இடம் (space) விட்டு தட்டுக. ஒன்றுக்கு  மேல் இடைவெளி அமைந்தால் செவ்வகங்கள்
> ஊடே தலை நீட்டிவிடுகின்றன. உணவில்  கல் போன்று இவை படிக்குங்கால் இடையூறு
> செய்கின்றன.
> அன்பன்
> பிரேமு
>

> 2012/2/26 thangamani <tvthangam...@gmail.com>

> "நற்றுணை யாவது நமச்சி வாயவே"- Hide quoted text -

thangamani

unread,
Mar 3, 2012, 2:44:59 AM3/3/12
to சந்தவசந்தம்
பொழுதாம் விடியல் எழுஞா யிறுபோல
எழிலார் சுடராய் இலகும் தழல்மேனி
குழுவா யடியார் குவிவார்க் கருள்செய்வான்

மழுவாட் படையன் கயிலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 2, 5:53 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010-10-15
> கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
> --------------------------------------
> (1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
> வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர்
> அமைந்துவரப்பெற்றது)
>
> ('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)
>
> (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')
>
> 1)
> எழுஞா யிறுபோல் திகழும் எழில்மேனி
> முழுநீ றணியும் முதல்வன் முடிவில்லான்
> தொழுவார் துணைவன் சுடலை தனிலாடி
> மழுவாட் படையன் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/2/27 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 3, 2012, 11:49:57 AM3/3/12
to சந்தவசந்தம்
சங்கம் பொலியும் தமிழை வளர்த்தானின்
பொங்கும் அருளைப் புகலும் திருப்பாடல்
எங்கும் இசைக்க இனிதாய் செவியேற்பான்

கங்கை அணிவான் கயிலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 3, 7:02 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> அங்கை குவிக்கும் அடியார்க் கருகாவான்
> மங்கை ஒருபால் மகிழும் மணிகண்டன்
> திங்கள் திகழும் முடிமேல் திரையாரும்
> கங்கை அணிவான் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/1 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2010-10-15
> > கோள் அரா மாலைக் குழகன் (திருக்கயிலை)
> > --------------------------------------
> > (1 முதல் 9 பாடல்களில் ஒவ்வொரு பாடலிலும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,
> > வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என்ற கோள்களுள் ஒரு கோளின் பெயர்
> > அமைந்துவரப்பெற்றது)
>
> > ('மா புளிமா புளிமா புளிமாங்காய்' என்ற வாய்பாடு)
>
> > (சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - 'முந்தி நின்ற வினைகள் அவைபோகச்')
>
> > 1)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 3, 2012, 9:11:13 PM3/3/12
to santhavasantham

3)
செவ்வாய் உமையாள் கணவன் திருத்தாளை
எவ்வா றடியார் தொழினும் இனிதேற்றே
ஒவ்வா ததுசெய் உறுதீ வினைவந்து
கவ்வா தருள்வான் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/2 Siva Siva <naya...@gmail.com>

2)

thangamani

unread,
Mar 4, 2012, 3:01:01 AM3/4/12
to சந்தவசந்தம்
சங்கம் வளர்செந் தமிழில் திருப்பாடல்
திங்கள் அணியாய்த் திகழும் சடையானின்
பொங்கும் அருளைப் புகழும் இசையேற்பான்

கங்கை அணிவான் கயிலை மலையானே.

திங்களுக்கான பாடல்.சரிசெய்து இட்டேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Mar 4, 2012, 9:45:38 PM3/4/12
to santhavasantham

4)
ஆர்க்கும் வினைவந் தடையா தருள்கொண்டு
நோக்கும் ஒருவன் நொடியில் மதனாகம்
தீய்க்கும் திருக்கண் ணினனற் புதன்தேவன்
காக்கும் கடவுள் கயிலை மலையானே.

பதம் பிரித்து:

ஆர்க்கும் வினை வந்து அடையாது அருள்கொண்டு
நோக்கும் ஒருவன்; நொடியில் மதன் ஆகம்
தீய்க்கும் திருக்கண்ணினன்; அற்புதன்; தேவன்;
காக்கும் கடவுள் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/3 Siva Siva <naya...@gmail.com>

3)


thangamani

unread,
Mar 5, 2012, 3:18:55 AM3/5/12
to சந்தவசந்தம்
செவ்வாய் சிரிப்பில் திகழும் குழகன் தான்
எவ்வா றுமவன் இரங்கும் இறையாவான்
அவ்வா றுவகை அவல நிலைவந்து

கவ்வா தருள்வான் கயிலை மலையானே.

காம,குரோத,மோக,லோப,மத,மாச்சர்யம் என்னும்
ஆறுவகை எதிரிகள்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 4, 7:11 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> செவ்வாய் உமையாள் கணவன் திருத்தாளை
> எவ்வா றடியார் தொழினும் இனிதேற்றே
> ஒவ்வா ததுசெய் உறுதீ வினைவந்து
> கவ்வா தருள்வான் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/2 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 2)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 5, 2012, 12:48:05 PM3/5/12
to சந்தவசந்தம்
தூக்கும் திருத்தாள் தொழுவார்க் கிடர்செய்துத்
தாக்கும் வினைகள் சரிய விழியன்பில்
பூக்கும் அரனற் புதன் தன் நிகரில்லான்
காக்கும் கடவுள் கைலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 5, 7:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 4)
> ஆர்க்கும் வினைவந் தடையா தருள்கொண்டு
> நோக்கும் ஒருவன் நொடியில் மதனாகம்
> தீய்க்கும் திருக்கண் ணினனற் புதன்தேவன்
> காக்கும் கடவுள் கயிலை மலையானே.
>
> பதம் பிரித்து:
> ஆர்க்கும் வினை வந்து அடையாது அருள்கொண்டு
> நோக்கும் ஒருவன்; நொடியில் மதன் ஆகம்
> தீய்க்கும் திருக்கண்ணினன்; அற்புதன்; தேவன்;
> காக்கும் கடவுள் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/3 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 3)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 5, 2012, 6:45:56 PM3/5/12
to santhavasantham

5)
பயமற் றடியார் மகிழும் படியீவான்
புயமெட் டுடையான் புனலிற் புவியாழன்
றுயர்தோ ணிபுரத் துறையும் உமைபங்கன்
கயமார் சடையான் கயிலை மலையானே.

பதம் பிரித்து:

பயம் அற்று அடியார் மகிழும்படி ஈவான்;
புயம் எட்(டு) உடையான்; புனலில் புவி ஆழ் அன்(று)
உயர் தோணிபுரத்(து) உறையும் உமைபங்கன்;
கயம் ஆர் சடையான் கயிலை மலையானே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/4 Siva Siva <naya...@gmail.com>

4)


Siva Siva

unread,
Mar 6, 2012, 6:25:21 PM3/6/12
to santhavasantham

6)
வெள்ளி மலைபோல் விடையின் மிசையூர்வான்
உள்ளும் அடியார் நிழல்போல் உடனாகி
அள்ளிப் பருகும் அமுதாய் அகத்தின்பக்
கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/5 Siva Siva <naya...@gmail.com>

5)


Siva Siva

unread,
Mar 7, 2012, 8:09:22 PM3/7/12
to santhavasantham

7)
அறையார் கழலன் தினமும் அடிபோற்றக்
குறைதீர்த் தருள்வான் குளிர்வெண் பிறைசூடி
நிறைவாய்த் திகழ்வான் மிகுநே சனிருத்தன்
கறையார் மிடறன் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/6 Siva Siva <naya...@gmail.com>

6)


thangamani

unread,
Mar 8, 2012, 2:04:34 AM3/8/12
to சந்தவசந்தம்
உயவுற் றரக்கன் விரலில் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையை செவியாழன்
றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 6, 4:45 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 5)
> பயமற் றடியார் மகிழும் படியீவான்
> புயமெட் டுடையான் புனலிற் புவியாழன்
> றுயர்தோ ணிபுரத் துறையும் உமைபங்கன்
> கயமார் சடையான் கயிலை மலையானே.
>
> பதம் பிரித்து:
> பயம் அற்று அடியார் மகிழும்படி ஈவான்;
> புயம் எட்(டு) உடையான்; புனலில் புவி ஆழ் அன்(று)
> உயர் தோணிபுரத்(து) உறையும் உமைபங்கன்;
> கயம் ஆர் சடையான் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/4 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 4)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 8, 2012, 11:24:07 AM3/8/12
to santhav...@googlegroups.com
சில அரியசொற்களை இப்பாடலில் அமைத்துள்ளீர்கள்.
பொருளை விளக்கினால் பலர்க்கும் உதவக்கூடும்.

விரலில் நசுக்குண்டே? விரலால் நசுக்குண்டே?

இசையைச் செவி - என்று வல்லொற்றுமிக்குவரும்.

2012/3/8 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Mar 8, 2012, 12:52:21 PM3/8/12
to சந்தவசந்தம்
உயவுற் றரக்கன் விரலால் நசுக்குண்டே
இயமோ டிறைஞ்சும் இசையைச் செவியாழன்

றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
கயமார் சடையன் கயிலை மலையானே.

செவி+ஆழ்+அன்று
உயவு=வருததம்.
இயம்=வாத்தியம்.ஆழ்=ஈடுபாட்டுடன் ஆழ்ந்து

இராவணன் அகம்பாவத்தில்,கைலைமலைப் பெயர்க்க
முயல்வதை,அறிந்த ஈசன்,தன்கால்விரலாலழுத்த,
இராவணன் நெருக்குண்டு வருந்தி சாமகானம் இசைத்தான்.
ஈசன் ,அந்த கானத்தில் ஈடுபட்டு,சந்திரஹாசம் எனும் வாளை
அளித்தார்.
சுட்டலுக்கு நன்றி சிவா!சரிசெய்தேன்.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 8, 9:24 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சில அரியசொற்களை இப்பாடலில் அமைத்துள்ளீர்கள்.
> பொருளை விளக்கினால் பலர்க்கும் உதவக்கூடும்.
>
> விரலில் நசுக்குண்டே? விரலால் நசுக்குண்டே?
>
> இசையைச் செவி - என்று வல்லொற்றுமிக்குவரும்.
>

> 2012/3/8 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > உயவுற் றரக்கன்  விரலில் நசுக்குண்டே
> > இயமோ டிறைஞ்சும் இசையை செவியாழன்
> > றுயர்வாள் அளித்த ஒருவன் சிவநாதன்
> > கயமார் சடையன் கயிலை மலையானே.
>
> > அன்புடன்,

> > தங்கமணி.- Hide quoted text -

Siva Siva

unread,
Mar 8, 2012, 7:50:11 PM3/8/12
to santhavasantham

8)
சிலையை அசைத்த அரக்கன் சிரமெல்லாம்
குலைய விரலொன் றூன்று தலைவன்தன்
தலைமேல் அராகு ரவம்தண் மதிவைத்தான்
கலைமான் கரத்தன் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/7 Siva Siva <naya...@gmail.com>

7)


thangamani

unread,
Mar 9, 2012, 11:16:56 AM3/9/12
to சந்தவசந்தம்
வெள்ளிப் பனியாய் விளங்கும் மலைமன்னன்
துள்ளும் நதியைச் சுமக்கும் சடைகொண்டான்
கொள்ளும் தயையில் கொடுக்கும் அருளின்பக்

கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 7, 4:25 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> வெள்ளி மலைபோல் விடையின் மிசையூர்வான்
> உள்ளும் அடியார் நிழல்போல் உடனாகி
> அள்ளிப் பருகும் அமுதாய் அகத்தின்பக்
> கள்ளைச் சொரிவான் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 5)
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 9, 2012, 11:27:38 AM3/9/12
to சந்தவசந்தம்
மறைஆர் திருமா மதுரை நகர்தன்னின்
இறையாய்க் கொலுவில் இனிதாய் அருளீந்தப்
பிறைஆர் சடையன் பலவே சனிருத்தன்

கறையார் மிடறன் கயிலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 8, 6:09 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 7)
> அறையார் கழலன் தினமும் அடிபோற்றக்
> குறைதீர்த் தருள்வான் குளிர்வெண் பிறைசூடி
> நிறைவாய்த் திகழ்வான் மிகுநே சனிருத்தன்
> கறையார் மிடறன் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/6 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 6)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 9, 2012, 4:24:17 PM3/9/12
to santhavasantham

மேற்கொண்ட வாய்பாடு சரியாக அமையவேண்டி இப்பாடலில் இரண்டாம் அடியில் இரண்டாம் மூன்றாம் சீர்களைச் சற்றுத் திருத்தி: (3ம் சீர் தேமா -> புளிமா):

8)

சிலையை அசைத்த அரக்கன் சிரமெல்லாம்

குலைய விரலூன் றியருள் தலைவன்தன்


தலைமேல் அராகு ரவம்தண் மதிவைத்தான்
கலைமான் கரத்தன் கயிலை மலையானே.



2012/3/8 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Mar 9, 2012, 5:30:47 PM3/9/12
to santhavasantham

9)
மரைமேல் அயன்மால் அறியா வளர்சோதி
விரைசே வடிக்கே துணைநன் மலர்தூவி
அரைசே அருளென் றரற்றும் அடியாரைக்
கரைசேர் புணையன் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/9 Siva Siva <naya...@gmail.com>

மேற்கொண்ட வாய்பாடு சரியாக அமையவேண்டி இப்பாடலில் இரண்டாம் அடியில் இரண்டாம் மூன்றாம் சீர்களைச் சற்றுத் திருத்தி: (3ம் சீர் தேமா -> புளிமா):

8)


thangamani

unread,
Mar 10, 2012, 5:01:42 AM3/10/12
to சந்தவசந்தம்
நிலையாய் கதியாய் நிழலாய் எளியோர்க்காய்
இலையே துயரம் எனவே அருளீவான்
அலையார் நதியோ(டு)அராகு ரவம்சூடி
கலைமான் கரத்தன் கைலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி

On Mar 10, 2:24 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> மேற்கொண்ட வாய்பாடு சரியாக அமையவேண்டி இப்பாடலில் இரண்டாம் அடியில் இரண்டாம்
> மூன்றாம் சீர்களைச் சற்றுத் திருத்தி: (3ம் சீர் தேமா -> புளிமா):
>
> 8)
> சிலையை அசைத்த அரக்கன் சிரமெல்லாம்
> குலைய விரலூன் றியருள் தலைவன்தன்
> தலைமேல் அராகு ரவம்தண் மதிவைத்தான்
> கலைமான் கரத்தன் கயிலை மலையானே.
>

> 2012/3/8 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/

thangamani

unread,
Mar 10, 2012, 5:24:36 AM3/10/12
to சந்தவசந்தம்
விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துயிணை எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைசேர் கரம்கொண்டான்
கரைசேர்த் திடுவான் கைலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.


On Mar 10, 3:30 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 9)
> மரைமேல் அயன்மால் அறியா வளர்சோதி
> விரைசே வடிக்கே துணைநன் மலர்தூவி
> அரைசே அருளென் றரற்றும் அடியாரைக்
> கரைசேர் புணையன் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/9 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > மேற்கொண்ட வாய்பாடு சரியாக அமையவேண்டி இப்பாடலில் இரண்டாம் அடியில் இரண்டாம்
> > மூன்றாம் சீர்களைச் சற்றுத் திருத்தி: (3ம் சீர் தேமா -> புளிமா):
>
> > 8)
>

> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 10, 2012, 8:39:04 AM3/10/12
to santhav...@googlegroups.com
1) /குரைசே வடிக்கே துயிணை/
ஏது + இணை = ஏதிணை' என்றுதானே ஆகும்?

2) /மரை,தீ,மழு,கப் பரைசேர் கரம்கொண்டான் /

சிவன் கையில் இருப்பதால், இங்கே மரை = மான்.

'....சேர் கரத்தினன்' என்றோ '..... கரம்கொண்டான்' என்றோதானே பொதுவாக வரும்.
'... சேர் கரம்கொண்டான்' என்பதுபோலவும் வருமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

2012/3/10 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Mar 10, 2012, 12:00:51 PM3/10/12
to சந்தவசந்தம்
விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
குரைசே வடிக்கே துநிகர் எனப்போற்றின்
மரை,தீ,மழு,கப் பரைதன் கரம்கொண்டான்

கரைசேர்த் திடுவான் கைலை மலையானே.

1) /குரைசே வடிக்கே துயிணை/
ஏது + இணை = ஏதிணை' என்றுதானே ஆகும்?

ஆம்.சரிசெய்ய வந்தேன்.ஏதுநிகர் என எழுதியுள்ளேன்.


2) /மரை,தீ,மழு,கப் பரைசேர் கரம்கொண்டான் /

சிவன் கையில் இருப்பதால், இங்கே மரை = மான்.

ஆம்.


'....சேர் கரத்தினன்' என்றோ '..... கரம்கொண்டான்' என்றோதானே பொதுவாக
வரும்.
'... சேர் கரம்கொண்டான்' என்பதுபோலவும் வருமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.

தன் கரம்கொண்டான் என்று எழுதியுள்ளேன்.
சுட்டலுக்கு மிக்கநன்றி!சிவா!

அன்புடன்,
தங்கமணி.


On Mar 10, 6:39 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 1) /குரைசே வடிக்கே துயிணை/
> ஏது + இணை = ஏதிணை' என்றுதானே ஆகும்?
>
> 2) /மரை,தீ,மழு,கப் பரைசேர் கரம்கொண்டான் /
>
> சிவன் கையில் இருப்பதால், இங்கே மரை = மான்.
>
> '....சேர் கரத்தினன்' என்றோ '..... கரம்கொண்டான்' என்றோதானே பொதுவாக வரும்.
> '... சேர் கரம்கொண்டான்' என்பதுபோலவும் வருமா? அறிந்தோர் சொல்லக்கூடும்.
>

> 2012/3/10 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > விரைசேர் அலங்கல் மிளிர நடம்செய்யும்
> > குரைசே வடிக்கே துயிணை எனப்போற்றின்
> > மரை,தீ,மழு,கப் பரைசேர் கரம்கொண்டான்
> > கரைசேர்த் திடுவான் கைலை மலையானே.
>
> > அன்புடன்,

Siva Siva

unread,
Mar 10, 2012, 6:10:39 PM3/10/12
to santhavasantham

10)
பதியை அறியார் பகர்வார் பலபொய்கள்;
மதியில் அவர்தம் உரையை மதியேன்மின்;
மதியைப் புனைவான் கழலில் மலரிட்டால்
கதியைத் தருவான் கயிலை மலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/9 Siva Siva <naya...@gmail.com>

9)

Siva Siva

unread,
Mar 11, 2012, 4:13:22 PM3/11/12
to santhavasantham

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
கோள ரவமா லையணி குழகன்தாள்
நீள நினையும் அடியார் நெடுவானம்
ஆள அருள்வான் அமரர்க் கமுதீந்த
காள மிடறன் கயிலை மலையானே.

பதம் பிரித்து:

கோள் அரவ மாலை அணி குழகன்,தாள்
நீள நினையும் அடியார் நெடு வானம்
ஆள அருள்வான், அமரர்க்கு அமுது ஈந்த
காள மிடறன், கயிலை மலையானே.

கோள் - கொள்ளுதல்; வலிமை; கொடுமை; கொல்லுதல்;
காளம் - கருமை; நஞ்சு;


2012/3/10 Siva Siva <naya...@gmail.com>

10)


thangamani

unread,
Mar 12, 2012, 12:06:33 PM3/12/12
to சந்தவசந்தம்
விதிசெய் தளையை விலக்கும் இறையோனை
துதிசெய் பவரின் துணையாய் வருமீசன்
நிதியன் அருள்வான் நிகரில் பரிவோடு
கதியைத் தருவான் கைலை மலையானே.

அன்புடன்,
தங்கமணி.

On Mar 11, 4:10 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 10)
> பதியை அறியார் பகர்வார் பலபொய்கள்;
> மதியில் அவர்தம் உரையை மதியேன்மின்;
> மதியைப் புனைவான் கழலில் மலரிட்டால்
> கதியைத் தருவான் கயிலை மலையானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2012/3/9 Siva Siva <nayanm...@gmail.com>
>
> > 9)
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Mar 12, 2012, 6:16:58 PM3/12/12
to santhavasantham


2012/3/11 Siva Siva <naya...@gmail.com>

இத்தொடரின் கடைசிப் பாடல்:

11)
கோள ரவமா லையணி குழகன்தாள்
நீள நினையும் அடியார் நெடுவானம்
ஆள அருள்வான் அமரர்க் கமுதீந்த
காள மிடறன் கயிலை மலையானே.

பதம் பிரித்து:
கோள் அரவ மாலை அணி குழகன்,தாள்
நீள நினையும் அடியார் நெடு வானம்
ஆள அருள்வான், அமரர்க்கு அமுது ஈந்த
காள மிடறன், கயிலை மலையானே.

கோள் - கொள்ளுதல்; வலிமை; கொடுமை; கொல்லுதல்;
காளம் - கருமை; நஞ்சு;

கோள் அரவ மாலை - 'கிரஹப்பெயர்கள் ஒலிக்கும் பாமாலை' என்றும் பொருள்கொள்ளலாம்;

 


Siva Siva

unread,
Mar 16, 2012, 9:31:54 PM3/16/12
to santhavasantham

2010-10-18 (updated 2012-01-11)
ஆரூர் அரன்தாள் (திருவாரூர்)
----------------------
(
அறுசீர் விருத்தம் - '5 மா + மாங்காய்')

1)
காக்கும் நற்றாள் அடியார்க் கிடர்செய் காலன் அவன்மாளத்
தூக்கும் பொற்றாள் தூநீ றணிந்தார் தொல்லை வினையெல்லாம்
தீர்க்கும் திருத்தாள் ஆடல் செய்யும் செம்மை திகழுந்தாள்
ஆர்க்கும் கழலை அணிந்த ஐயன் ஆரூர் அரன்தாளே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/3/12 Siva Siva <naya...@gmail.com>



VETTAI ANANTHANARAYANAN

unread,
Mar 17, 2012, 12:11:29 PM3/17/12
to santhav...@googlegroups.com
அருமையான தொடக்கப் பாடல்.
 
அனந்த்

2012/3/16 Siva Siva <naya...@gmail.com>
It is loading more messages.
0 new messages