Re: [வல்லமை] வல்லமையில் இன்று - ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்

326 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 12, 2014, 11:38:42 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, thami...@googlegroups.com
On Monday, May 12, 2014 4:23:02 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
தீர்ப்பை மதிக்கிறோம்

பாரதிதான் குழப்பிட்டார்.


தேசியகவி பாரதியார் பரமானந்தமான கவிஞர். உதாரணமாக, இல்லாத அகத்தியர் தந்தது தமிழ் என்று அழகான தமிழ்த்தாய் வாழ்த்தில் பாடினார். கவித்துவமானது என்றாலும் ஆராய்ச்சிகளால் அகத்தியர் என்பவரே தமிழுக்கு முதல் இலக்கணம் செய்யவில்லை என்று தமிழறிஞர்கள் காட்டிவிட்டனர். முதலில் செய்தவர் சென்னைப் பேரா. கா. நமச்சிவாயர் என்பதாக ஞாபகம். பாரதியின் ப்ரதம சிஷ்யர் பாரதிதாசன் அகத்தியர் பற்றி ஆராய்ந்து அகவல் பாடியுள்ளார். மேகலா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் தெரியும். எல்லோரும் படித்துச் சிந்திக்கவேண்டிய பாடல்களில் ஒன்று. இன்றைய அரசியல் தலைவர்களின் தாரகமந்திரம்: “எம்மதமும் சம்மதம்”. உலகோடு வணிகமும், கல்வியும், நுட்பமும் ஊடாடும் பாரதமாதாவின் மக்களுக்கு இது சிறந்த மகாவாக்கியம். இந்தியாவில் எழுத்து, கலைகள், கல்வி தோற்றுவித்த 2 சமண சமயங்களுக்கும் பொதுவாக பாரதியார் பாடினார் எனலாம். அவ்வாறு பாரதி பாடப் பாட்டை போட்டுக் கொடுத்தவர் ஔவை என்னும் சமணக் குரத்தியார் காரணம்.

ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. அந்தத் தேவாரப் பாடல் இலிங்க வழிபாட்டை அறிமுகம் செய்யும் பாட்டில், சண்டியின்
ஹேகியோக்ராஃபி-க்காக சமண சமயத்தின் அப்ராப்ரியேஷன். இதனை விரிவாக்கி வளர்த்தவர் ஒட்டக்கூத்தர்
(12-ஆம் நூற்றாண்டு) அவர் வழியிலே பலர் செல்லத் தொடங்கினர்: உ-ம்: அருணகிரிநாதர். பாரதியின் பரம்பொருள் 
வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.
எம்மதமும் சம்மதம் என்னும் தத்துவத்தை பாரதமாதா மக்களாக தமிழர் மாறுகிற கால கட்டத்தில் 
உரைக்கும் பாடலாக பாரதியார் பாடிய வழிநூலில் தானாக 2 சமணசமயங்களுக்கும் குறியீடாக
ஆத்திசூடி பாகல்வண்ணர் இருத்தல் சிறப்பு. 

(1) ஆத்திசூடி, - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான், -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன், -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன், -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


இந்தியாவில் உள்ள 5 பெருஞ்சமயங்களுக்கும் வாழ்த்தைச் சொல்கிறார் பாரதியார்.

முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.


ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:

http://www.maotorino.it/opera.php?id=78

https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/


இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/



போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்

வடவ்ருக்‌ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்

பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்

நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.

உரைகண்டு தெளிய எழுதலாம்.


நா. கணேசன்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:44:23 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-12 23:38 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்


​நவீன இரண்டாம் விக்கிரமாதித்தர் ( முதல் ஹிஹி நாந்தான்... ) திரு நாகராஜன் ஐயா வந்து போதி சூடி குறித்து மீண்டும் தன் கேள்வியை வைப்பார்.​



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

N. Ganesan

unread,
May 12, 2014, 11:48:08 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, May 12, 2014 8:30:10 AM UTC-7, Megala Ramamourty wrote:
அன்புள்ள திரு. ஐயப்பன் அவர்களுக்கு,

நாங்கள் வல்லமை இதழில் வெளியிட்டுள்ள ’ஆத்திசூடி யார் - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியில் ஆத்திசூடி குறித்து ’முடிந்த முடிபாக’ எதனையும் வெளியிடவில்லை. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்து என்று குறிப்பிட்டேதான் அவருடைய ‘கருத்துக்களை’ வெளியிட்டிருக்கிறோம் என்பதைக் கவனித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அவரவர் தரப்புக் கருத்துக்களை எடுத்துவைக்க அவரவர்க்கு உரிமையுண்டு அல்லவா? அந்த அடிப்படையில் இதழில் இடம்பெற்றிருப்பதே இந்தக் கருத்தாடல்!

எனவே ஆத்திசூடி குறித்து நீங்கள் ஏதேனும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அது பற்றிய உங்கள் பார்வை, எண்ணம், அதற்குப் பலம்சேர்க்கும் சான்றுகள் ஆகியவற்றையும்,  ஆத்திசூடி குறித்த பிற அறிஞர்களின் கருத்துக்களை நீங்கள் உங்கள் கட்டுரையில் மறுக்கவோ, விமர்சிக்கவோ விரும்பினால் அதற்கான ஆதாரங்கள், கருத்துக்கள், படவிளக்கங்கள் முதலியவற்றையும் சேர்த்து ஓர் கட்டுரை வடிவில்  vallama...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

உங்கள் கட்டுரையையும் விரைவில் வல்லமையில் வெளியிடுவோம்.  :-)

அன்புடன்,
மேகலா


சமண சமயத்தை ஆராயும் பேராசிரியர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்கள், அவர் ஆத்தியின் சூழலில் (சூளாமணி-சூடாமணி) ஞானம் பெற்றதைச் சொல்லும் மிகப்பழைய சமண நூல்களில் இருந்து காட்டி ஆத்தி(தாதகி) மரம் என்று ஏராளமான நூல்களில் எழுதியுள்ளனர்.
அழகாக, ஔவைக் குரத்தியாரும் தீர்த்தங்கரரைப் போற்றிப்பாடி கோடிக்கணக்கானோர் தமிழ்பயிலும் முதல்நூல் தந்துள்ளார்.
ஆத்திக்கும் பார்சுவ தீர்த்தங்கரருக்கும் தொடர்பே இல்லை, ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பம், சித்திரங்களில் ஆத்தி இல்லை என ஆய்வுக் கட்டுரைகள் அளித்தால் படிக்கக் காத்திருக்கிறோம்.

நா. கணேசன் 

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:49:41 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.  

ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:52:46 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

​பாம்பு  இருக்கிறது. பின்னாடி இலை இருக்கிறது. அந்த இலை ஆத்தி இலை தான் என்பதற்கு உண்டான ஆதாரம் என்ன ?

​கடைசி படத்தில் குடை பிடித்திருக்கிறார்கள். சிற்பம் மிகத்தெளிவாகவே குடை பிடித்திருப்பதையும்  காண்பிக்கிறது. அதில் ஆத்தி எங்கே இருந்து வந்தது



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**

--

N. Ganesan

unread,
May 12, 2014, 11:52:46 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, May 12, 2014 8:49:41 AM UTC-7, Iyappan Krishnan wrote:
:)) நீங்க ஏதோ ஒண்ணு இட்டு கட்டி சொல்லிட்டு.. அதை எங்களை இல்லைன்னு மறுக்கனுங்கறது எந்தவகைல நியாயம் ? இதுதாங்கறதுக்கு உண்டான ஆதாரம் எல்லாரும் கேட்டுட்டு இருக்கோம். ஒரு ஆதாரமாவது குடுத்தா நல்லாருக்கும்.  

ஐ மீன் ஒரு ஆதாரம் ப்ளீஸ் ?


ஆதாரம் பார்க்கலையா.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 11:55:01 AM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆதாரம்னு சொன்னதை மறுத்து  கேள்வி எழுப்பினா அது தான் ஆதாரம்னு சொல்லிட்டே இருந்தா அதுவா  ஆதாரம் ?



:)) அப்பத்தில இருந்து நாகராஜன் ஐயா  பல கேள்விகளை எடுத்து வச்சார். எதுக்கும் உரிய பதில் சொன்ன மாதிரி தெரியல. 


சரி பாம்புக்கும் கீரிக்கும் எப்பத்தான் சண்டை விடப் போறீங்க ? 

N. Ganesan

unread,
May 12, 2014, 12:01:29 PM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.




On Monday, May 12, 2014 8:44:13 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-12 21:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஔவை என்னும் சமணக் குரத்தியார்

​குரத்தி என்ற ​ஒளவையின் சிறப்புப் பெயருக்கு விளக்கமும் ஆதாரமும் தேவை

சவடால்


குரத்தி kuratti
, n. Fem. of குரவன். Jaina female ascetic; சைன தவப்பெண். ஒர் குரத்தி யோட (பெரியபு. திருஞான. 638).

குரத்தியறை என்று ஔவையார் கோவில் உள்ள மலை குமரி மாவட்டத்தில் உள்ளது
என்றும் தெரிகிறது. எஸ். பத்மநாபன் ‘தி இந்து’ கட்டுரை கொடுத்தேன்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 12, 2014, 12:06:00 PM5/12/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.


Physical description

This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.

Place of Origin

Madhya Pradesh, India (made)

Date

7th century (made) 

N. Ganesan

unread,
May 12, 2014, 12:45:52 PM5/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்


On Monday, May 12, 2014 9:06:00 AM UTC-7, N. Ganesan wrote:


On Monday, May 12, 2014 9:01:29 AM UTC-7, N. Ganesan wrote:
ஔவைக் குரத்தி பாடும் தீர்த்தங்கரர். குரத்தியார் வாழ்ந்த
காலகட்டமாக இருக்கலாம்.

இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு.


Physical description

This sublimely beautiful sculpture illustrates Parsvanaths's triumph over Samvara in considerable detail. Parsvanatha, the 23rd Tirthankara of the Jain religion, is depicted naked beneath a Dhataki tree, seated in a meditative posture on a simhasana (lion-supported throne). Meghakumara (Samvara) has sent a great storm (symbolised by the hands and drums in stylized clouds in the upper corners) to disturb his meditations, but the serpent-king Dharanendra raises up his seven hoods to provide shelter to the Jina. Dharanendera's consort Padmavati, seen to the Jina's left, holds an umbrella to further protect Parsvanatha from the forces of the storm. The wheel of law (dharmachakra), symbolizing the Jina's teachings, is beneath the throne, supported by a squatting gana (dwarf-like attendant). Flywhisk bearers stand in attendance, and celestial figures with garlands hover beneath the rain clouds.

கலை வரலாற்று முனைவர்களும், சமண அறிஞர்களும், பேராசிரியர்களும் பார்சுவர் சூடி இருப்பது ஆத்தி என ஆய்வுநூல்களில் எழுதுகின்றனர்.

நா. கணேசன்
 

Dev Raj

unread,
May 12, 2014, 5:22:31 PM5/12/14
to mint...@googlegroups.com
On Monday, 12 May 2014 08:38:42 UTC-7, N. Ganesan wrote:
இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில் ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/


போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப் பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). 


படத்தில் இருப்பதும் 7ம் நூற்றாண்டின் படிமம்தானே ?  
அதில் மட்டும் தொன்மை எவ்வாறு ஒட்டிக்கொள்கிறது ?
பார்சுவநாதர் பிறந்த உடனேயே இவ்வாறு சிலை செதுக்கத்
தொடங்கி விட்டார்களா ?
நீங்கள் ஆதாரம் காட்டிய தமிழ்ச் சமண நூல்களின் காலம், 
குறிப்பாக மேரு மந்தர புராணத்தின் காலம் என்ன ?
எல்லாச் சமண நூல்களும் தாதகி / ஆத்தி சூடியைப் போற்றுகின்றனவா ?
பெரிய புராணத்திலும் தாதகி பற்றிய குறிப்புள்ளது;
அதையும் சமண நூலாகச் சொல்வீர்களா ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:34:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



12 மே, 2014 11:38 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 7:36:51 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-13 19:34 GMT+08:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 
வேந்தன் ஐயா :))

அவரு ஒருமுறை முடிவு பண்ணிட்டா அவர் பேச்சை அவரே கேக்க மாட்டாரு. ​

N. Ganesan

unread,
May 13, 2014, 7:41:32 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்
ஆத்தி சூடி இரண்டு சொற்கள்.
 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்


பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்
குறுக்கம். 

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 7:43:58 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்

2014-05-13 19:41 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாரதி முதல் நூலுக்கு மதிப்பளித்து ஆத்தி சூடி என்று தொடங்குகிறார். எல்லோருக்கும் தெரிந்த ஆத்திச் சூடி அமர்ந்த தேவன் என்பதன்
குறுக்கம். 

​கூடிய விரைவில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை வரப் போகுது... எல்லாரும் ஜோரா கையத் தட்டுங்கோ.......

Geetha Sambasivam

unread,
May 13, 2014, 8:01:33 AM5/13/14
to மின்தமிழ்



ஆசான் சொல்படி சீடி!

N. Ganesan

unread,
May 13, 2014, 8:06:33 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, தமிழாயம்


On Tuesday, May 13, 2014 4:34:28 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.


போதிசூடி புத்தருக்கு முன்னாடி வாழ்ந்தவர் ஆத்திசூடி. சமணசமயங்களுக்கு பொதுவாக ஆத்திசூடியைச் சொல்லிவிட்டார்
- ஔவைக் குரத்தி அருள்வாக்கால். மேலும், மைனாரிட்டி ரிலிஜன் புத்தம் அழிந்துவிட்டது இந்தியாவில். அப்பத்தான்
அதன் ஹிஸ்டரி தெரியவந்துகொண்டிருந்தது.
 
ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

ஏன்? நபியே சிவனாகவும், ஏசு தந்தையாயும், பள்ளிகொண்டானாகவும் இருந்தான் என்று பாடுகிறார் என்றும் சொல்லலாமே.
பாரதி “பல மதத்தினர்” என்கிறார். அவர் வங்கத்தில் உருவான நியோ-வேதாந்தவழிச் சென்றவர். எனவே எல்லோர் கடவுள்களைச் சொல்கிறார்.
சிறப்பாக, சிவனே எல்லாக் கடவுள் ஆனார்-னு பாடற மாதிரி தெரியலை.

PRASATH

unread,
May 13, 2014, 8:14:43 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com, தமிழாயம்
ஐயா,
 
ஆத்தி சூடி யாராக வேணும்னாலும் இருக்கட்டும்...
 
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...
 
மீண்டும், எனக்கு முன்னமே உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலரும் போதிசூடி புத்தர் என குறிப்பிட்டுள்ளார்கள், அதில் சில இங்கு கொடுத்துள்ளேன் எனச் சொல்லாமல்  எனக்காக புத்தரை போதிசூடி என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இடங்களை நீங்கள் வைத்த ஆதாரங்களில் வண்ணமிட்டாச்சும் காண்பியுங்க... எனக்கு இந்த ஆதாரம் கண்ணில் படவே இல்லை...
 
தயவு செய்யுங்க பிளீஸ்...
 


 
2014-05-13 17:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

 

PRASATH

unread,
May 13, 2014, 8:16:55 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com, தமிழாயம்
சொல்ல மறந்துட்டேன்....
 
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல 
 
எதாச்சும் 
 
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் அற்புதமானதாக இருக்கும்...

Iyappan Krishnan

unread,
May 13, 2014, 8:27:26 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil

On 13 May 2014 20:24, PRASATH <pras...@gmail.com> wrote:
எனக்கு பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை நூறு சதவிகிதம் இருக்கிறது...

​அப்படியே ஆலமரத்திலை எப்படி ஆத்தி இலையாச்சுன்னும் ஒரு விவரம் கேட்டு சொல்லு. இல்லாட்டி அது  “தட் .. வெள்ளயா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்யா “ மூமெண்ட்டான்னும் கேட்டுச் சொல்லவும். ​

PRASATH

unread,
May 13, 2014, 8:29:55 AM5/13/14
to vallamai, mintamil
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...

N. Ganesan

unread,
May 13, 2014, 8:48:05 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai, mintamil


On Tuesday, May 13, 2014 5:29:55 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
முதலில் எனக்கு தேவையானது, பிறகு தான் மத்ததெல்லாம்... ம்க்கும்...


என்ன தேவை ஐயா?

நா. கணேசன் 

PRASATH

unread,
May 13, 2014, 8:50:15 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
தேவை 1
 
//
புத்தருக்கு "போதிசூடி"னு பெயர் எந்த இலக்கியங்களில், யார்யாரால் சொல்லப்பட்டிருக்கிறது அப்படின்றதுக்கு மாத்திரம் ஆதாரம், ஆதாரம் தாங்க பிளீஸ்...
மீண்டும், எனக்கு முன்னமே உண்மையான ஆராய்ச்சியாளர்கள் பலரும் போதிசூடி புத்தர் என குறிப்பிட்டுள்ளார்கள், அதில் சில இங்கு கொடுத்துள்ளேன் எனச் சொல்லாமல் எனக்காக புத்தரை போதிசூடி என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் இடங்களை நீங்கள் வைத்த ஆதாரங்களில் வண்ணமிட்டாச்சும் காண்பியுங்க... எனக்கு இந்த ஆதாரம் கண்ணில் படவே இல்லை...//
 
தேவை 2
 
//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 

N. Ganesan

unread,
May 13, 2014, 8:56:02 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai
பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்


//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 

ஆம்.

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 8:57:28 AM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



13 மே, 2014 7:34 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
May 13, 2014, 9:00:27 AM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்
ஈஸ்வரன்/ஈசன் என்று பெருமாளுக்கும் பெயர். நீங்க சிவன் = ஈசன் என்று எடுக்கிறீர்கள்.
ஒரு வரி ஆராய்ச்சிக்கு போதும். ஆனால், ஈசன் என்றால் என்ன பொருள் என்பது முழுமைக்கும் பொருந்துமா?

PRASATH

unread,
May 13, 2014, 9:04:08 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 

 
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்


//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 

ஆம்.
 
இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.
 
அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்... 
 

 
மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 

N. Ganesan

unread,
May 13, 2014, 9:09:00 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 


உங்கள் விருப்பம் ஐயா.

N. Ganesan

unread,
May 13, 2014, 9:12:37 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai


On Tuesday, May 13, 2014 6:09:00 AM UTC-7, N. Ganesan wrote:

மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 

மேகலா என் மடலில் இருந்து கொடுத்துள்ளாரே. படிக்கவில்லையா?

PRASATH

unread,
May 13, 2014, 9:13:02 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
2014-05-13 18:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, May 13, 2014 6:04:08 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
கணேசன் ஐயா,
 
சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம் என்னும் கருத்தினை முன் வைத்து 
 
போதி மரம் புத்தரை குடைப் போல் கவிழ்ந்து சூழ்ந்திருப்பதால், புத்தருக்குத் தாங்களாக வைத்த விளி இந்த போதிசூடி என எடுத்துக் கொள்ளலாமா????
 


உங்கள் விருப்பம் ஐயா.
 
இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....
 
தாங்கள் இதுகாறும் புத்தரை போதிசூடி என பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள்.... அவ்வாறு இதற்கு முன்னமே எவரேனும் குறிப்பிட்டுள்ளார்களா அல்லது தாங்கள் தான் துவக்கி வைத்துள்ளீர்களா எனக் கேட்டால் என் விருப்பத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்வது எத்தகைய பதில்...
 
 
 
 
2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

பிரசாத் ஐயா,

சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்.
ஆத்தி சூடி = ஆத்தி கவிகை ஆக இருக்கும் தீர்த்தங்கரர். ஆத்தி - ஞானமரம்.
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்.

நா. கணேசன்


//
ஆத்திசூடி அமர்ந்த தேவன் னு பாட்டு இருக்குறாப்புல
எதாச்சும்
போதிசூடி அமர்ந்த புத்தர்னு பாட்டு இருந்தா ஆதாரம் துல்லியமானதாக இருக்கும்...
//
 

ஆம்.
 
இத்தகைய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா???? இதற்கு உண்டு / இல்லை என பதில் சொல்லவும்.
 
அன்றேல், இருக்கலாம், இத்தகைய தரவுகளைத் தேடுகிறேன். கிடைத்ததும் பகிர்கிறேன் எனவும் சொல்லலாம்... 
 

 
மேலும்,
 
"சூடுதல் என்றால் குடைபோல் கவிந்து சூழ்தல் என்பது சங்க இலக்கியம்" எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்...
 
சங்க இலக்கிய பாடல்களைத் தரவுகளாக இதற்கு தர இயலுமா.... 
 
பதிலளிக்காத பிற கேள்விகளுக்கு நான் என்ன பதில் என்று எடுத்துக் கொள்வது.... 

PRASATH

unread,
May 13, 2014, 9:18:17 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
 
எனது இன்னும் இரு கேள்விகளுக்கு நேரடியான பதிலை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்...
 
கேள்வி 1
 
போதிசூடி என்னும் பெயர், புத்தருக்கு விளியாக முதன்முதலில் எங்கு யாரால் பயன்படுத்தப்பட்டது? அல்லது தாங்களாக அவ்வாறு குறிப்பிடுகிறீர்களா...
 
கேள்வி 2
 
போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 13, 2014, 9:20:03 AM5/13/14
to mint...@googlegroups.com, vallamai
On Tuesday, May 13, 2014 6:13:02 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

இதில் என் விருப்பம் எங்கிருந்து வருகிறது....

ஆத்திசூடி, போதிசூடி என்பவர்கள் பற்றிய ஆராய்ச்சியில் விருப்பம் தெரிவிக்கிறீர்கள்.
அதைக் குறிப்பிட்டேன். 

ஆய்வுலக நண்பர்கள் ஆத்திசூடி தீர்த்தங்கரர் அல்லர் என்று ஆய்வுக்
கட்டுரை எழுதினால் படித்து மறுமொழி அளிக்கலாம்.

PRASATH

unread,
May 13, 2014, 9:24:57 AM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
நான் மறுபடியும் சொல்கிறேன்....
 
எனது கேள்வி ஆத்திசூடி தீர்த்தங்கரரா, தீர்த்தங்கரர் அல்லாதவரா என்பது அல்ல...
 
எனது கேள்வி,
புத்தரை போதி மரம் கவிழ்ந்திருப்பதால் போதிசூடி என்னும் பெயர் கொண்டு தாங்கள் அழைக்கிறீர்களா
 
அல்லது 
 
போதிசூடி என்னும் பெயர் புத்தருக்கு பழங்காலத்திலேயே உள்ளதென்றால் எந்த நூற்றாண்டுகளிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது... சங்க இலக்கிய ஆதாரங்கள் அதற்கு வேண்டும் என்பதே...

N. Ganesan

unread,
May 13, 2014, 9:26:14 AM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
மிக்க நன்றி... படித்துப் பார்க்கிறேன் ஐயா...
 

படித்துப் பாருங்கள் ஐயா. தங்கள் ஆராய்ச்சிகளுக்கு உதவும்.

N. Ganesan

unread,
May 13, 2014, 9:31:22 AM5/13/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Tuesday, May 13, 2014 6:18:17 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

போதிசூடி அமர்ந்த புத்தர் எனச் சொல்வதற்கு சங்க இலக்கிய ஆதாரம் ஏதும் இருக்கிறதா இல்லையா? ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...


ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?
ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 13, 2014, 9:47:43 AM5/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Tuesday, May 13, 2014 4:18:44 AM UTC-7, வேந்தன் அரசு wrote:



12 மே, 2014 10:30 முற்பகல் அன்று, Megala Ramamourty <megala.r...@gmail.com> எழுதியது:
இது தீர்ப்பில்லை வேந்தன் ஐயா. முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்துக்களின் தொகுப்பு.


ஓ உங்கள் தெளிவுபடைக்கு மிக்க நன்றி. கணேசர் ஐயா உங்களைப்போல் சுருங்க சொல்லி விளங்கவைக்க இனிமேல் முயல்வார் என எதிர்பார்க்கிறேன்
 
உங்களுக்கு சங்கத்தமிழில் புலமை இருப்பதால் சூடி எனும் சொல்லுக்கு பொருள் கொடுப்பீர்கள் என ஆவாலாக இருக்கேன்.
 
சூடி என்றால் சூழ்தல் எனும் பொருள் எனக்கு உடன்பாடு இல்லை.

சங்க இலக்கியத்தில் இருந்து சூடுதல் என்றால் சூழ்ந்து கவிந்து இருத்தல் என்னும் பொருள் காட்டியிருக்கிறேன்.
அதை திருநிறை. மேகலை அளித்துள்ளார் - இழையின் முதல்மடலிலே. பார்க்கவும்.

அதனால் தான், ஔவைக் குரத்தியார் ஏத்தும் ஆத்திசூடி என்ற பெயர் தீர்த்தங்கரருக்கு என விளங்குகிறது.
பழைய 2200 ஆண்டு சமண கலைகள், இலக்கியங்கள் காட்டுவதும் அதனையே. 

நா. கணேசன்
 
--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2014, 10:03:05 AM5/13/14
to mintamil

2014-05-13 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கேள்வி. சங்க இலக்கியத்தில் புத்தர் பற்றிப் பேசப்படுகிறதா?
ஆதாரம் இருந்தால் சுட்டியாகத் தராமல் பாடல்களைப் பகிரவும்...


ஏனுங்க

நீங்க ஆராய்ச்சியாளர் இல்லீங்களா எதுக்கு மத்தவிகள கேக்கறது?

ஒருத்தர எம்புட்டு நேரந்தேன் தொங்கல்ல விடுவீங்க. ப்ச். பாவம்.

இன்னுமா இந்த சனங்க உங்கள நம்பிக்கிட்டு இருக்காவ. :)))


.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

N. Ganesan

unread,
May 13, 2014, 10:09:34 AM5/13/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
சூடுதல் - கவிகை போற் சூழ்தல் (ஆதாரம்: சங்க இலக்கியம்). இப்பொருளில் போதிசூடியாய் புத்தரும், 
ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் இருப்பதை விளக்கியாயிற்று. தேவாரத்திலும் சிவன் திருமேனியில் 
ஆத்தியே காணோம். அதனால் தான் ஔவைக் குரத்தியின் ஆத்திசூடி கடவுள்வாழ்த்திற்குச் சிவன் 
என்ற பொருளைச் சொல்லுதல் சிறவாமல் இருக்கிறது.  ’ஆத்திசூடி அமர்ந்த தேவன்’ என்னும் ஆய்வுக் 
கட்டுரையைப் பூர்த்திசெய்து ஆய்விதழுக்கு அனுப்புகிறேன். போதிசூடி அல்லர் புத்தர் என்றோ, ஆத்திசூடி 
அல்லர்  தீர்த்தங்கரர் என்றோ ஆய்வுகளால் நிறுவமுடியாது என நினைக்கிறேன். போதிசூடி புத்தர்
பெருமான், ஆத்திசூடி தீர்த்தங்கரசாமி சிலைகளைப் பார்த்து சில நூற்றாண்டுகள் சென்றபின்னர்
பல்லவர் காலத்தில் தட்சிணாமூர்த்தி சிலைகள் தமிழகத்தில் தோற்றங்கொள்கின்றன.

காலவாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் சமய வளர்ச்சி முதலில் சமண சமயங்கள், பின்னர்
சைவம், வைணவம் பக்தி மார்க்க வளர்ச்சி இவற்றை துல்லியமாக அறியக் கூடும்.

நா. கணேசன்
 
On Tuesday, May 13, 2014 6:09:30 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-13 18:26 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதி சூடி = அரைசு கவிகை ஆக இருக்கும் புத்தர். போதி - ஞானமரம்

​கி.பி 2 ஆம் நூற்றாண்டின் அமராவதிச் சிற்பம்


சவடால் வைத்தி

​​

Thanks, Professor. Nice sculpture showing the Bodhi tree's importance in Buddhism,
Likewise, in Theerthankar Parsvanathar's life the Aaththi tree is significant as we
see in Arts and Literature.

NG
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 13, 2014, 10:24:29 AM5/13/14
to mintamil

2014-05-13 19:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சூடுதல் - கவிகை போற் சூழ்தல்

அப்ப்டியான பொருளில் பயன்பாடு சங்க இலக்கியத்தில் இருந்தால் காட்டுவதற்கு ஏன் தயக்கம்?

ஒருவேளை அப்படியே இருந்தாலும் ஆத்திசூடி என்று வரக்கூடாது ஆத்திசூட என்று தான் வரவேண்டும் இல்லையா?

அதாவது ஆத்தி மரமானது கவிகை போல சூழ்ந்திருக்க என்று பொருள் தொனிக்கவேனுமானால் ஆத்திசூட என்று தானே இருக்க வேண்டும். :)))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.

N. Ganesan

unread,
May 13, 2014, 10:35:12 AM5/13/14
to mint...@googlegroups.com


On Tuesday, May 13, 2014 7:24:29 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

2014-05-13 19:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சூடுதல் - கவிகை போற் சூழ்தல்

அப்ப்டியான பொருளில் பயன்பாடு சங்க இலக்கியத்தில் இருந்தால் காட்டுவதற்கு ஏன் தயக்கம்?

திரு. சரவணன்,

இங்கே பார்க்கவும்:

நா. கணேசன்

PRASATH

unread,
May 13, 2014, 12:06:25 PM5/13/14
to vallamai, mint...@googlegroups.com
இதன் மூலம் தாங்கள் சொல்ல வருவது யாதெனின், புத்தர் பற்றி பேசப்படும் சங்க இலக்கியங்கள் யாதிமில. மேலும், தனக்கு பிடித்தவர்களைச் செல்ல பெயர்கள் வைத்து அழைப்பது போல (அவர்கள் கடவுளரே ஆயினும்) புத்தரைத் தாங்கள் போதிசூடி என அழைத்து வருகிறீர்கள்...

ஆனால் போதிசூடி என்பதை ஏனோ தானோ என்றில்லாமல், சூடுதல்(சூழ்தல்) என்னும் பொருள் தருமாறு போதிசூடி என்பதை பொருளோடே வைத்திருப்பதாக தெரிகிறது உங்கள் வாதம்...

உங்களுக்கு உங்கள் வாதத் திறமை மீதோ ஏன், உங்களின் மீதோ கூட முழு நம்பிக்கை இல்லை... எதனையும் தெளிவாக முன்வைக்க அல்லது கேட்ட கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்ல தெரிவதில்லை, அதற்கு முனைப்பும் காட்டுவதில்லை...

நான் முனைவர் இல்லை... ஆனால் நானும் ஒரு காலத்தில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் சாதாரண விரிவுரையாளராக பணியாற்றி இருக்கிறேன்... பொறியியலில் எம்டெக்கும் முடித்திருக்கிறேன்...

கண்டிப்பாக, நான் எடுத்துக் கொண்ட வேலையிலோ, அல்லது படிப்புக்காக நான் செய்த ஆய்வுகளிலோ என்னை நோக்கிக் கேள்வி வரும் சமயம் அதனை தைரியமாக எதிர்நோக்கி, நான் இதைத்தான் செய்தேன் என்று சொல்லும் துணிவு (அது தவறாகவே இருந்தாலும்) என்னிடம் இருந்திருக்கிறது.

இவை யாதுமே உங்கள் வாதத்திலோ ஆய்வுகளிலோ காண இயலவில்லை... 

எந்த ஒரு கேள்விக்காகவேனும், கேள்வி கேட்டவருக்கு முதல் முறையிலேயே தாங்கள் நேரிடையாக பதில் சொல்லி இருக்கிறீர்களா... 

ஏன், ஏன் முடியவில்லை உங்களால்...

உங்களை உங்களுள் உண்மையை நோக்கிச் செல்ல தடுப்பது எது?

நீங்கள் கொண்டுள்ள கொள்கைகளா அல்லது உங்கள் வறட்டு கௌரவமா????

ஆய்வு செய்து முடிவை எழுத வேண்டுமே தவிர, முடிவை எழுதி வைத்து விட்டு ஆய்வு செய்தலோ, அல்லது முடிவுக்கு ஏற்ற ஆதாரங்களைச் சேகரிப்பதோ கூடாது...

ஒன்றே ஒன்று மட்டும் இறுதியாக சொல்லிக் கொள்ள விழைகிறேன்... இனி வரும் காலம் இணையத்தின் காலமாக இருக்கப் போகிறது... அதனால் தயவு செய்து, வருங்காலச் சந்ததியினரின் நன்மை கருதியாவது பொய்யுரைகளை எழுதாமல், சரியான வழியில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதிப் பதிப்பீர்களாக... 


2014-05-13 19:01 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:




N. Ganesan

unread,
May 13, 2014, 12:43:29 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
Dear Prasath,

Thanks for your advice on how to conduct research.
I will look forward to learning from your research
experience and advice.

Please tell us if there is anything wrong in
calling Aaththichudi as Theerthankara and
Bodhichudi as Buddha as these titles use
these trees as their Enlightenment trees.
Note that 'chuuDuthal' is used in Sangam literature
for enveloping or covering as parasol etc.,
I have shown many examples. And, the absence
of Aaththi on Siva's body in Tevaram tells
the fact that Aaththi is not special for Siva
at all. To study the earlier period of history
of Buddha, Theerthankara and Siva, please help
us do research.

Anbudan
N. Ganesan

PRASATH

unread,
May 13, 2014, 1:11:26 PM5/13/14
to vallamai, mint...@googlegroups.com

ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.

 

சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.

அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.

 

சான்று 1

//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//

இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.

 

இரண்டாம் சான்றான

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”

 என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.

மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது

வான்கவிந்த வையகமெல்லாம் 

இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...

 

மேலும், முனைவர் ஐயா அவர்கள்,

//சுமார் 1500 வருடப் பழமை வாய்ந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று கர்நாடகாவில் கிடைத்துள்ளது. தீர்த்தங்கரசாமிமேல் முழுவதும் ஆத்தி தாவரம். அந்த அலங்காரத்தின் உச்சியில் ஒரே ஓர் அரவம். இந்த உச்சி நாகத்தால்தான் அந்த ஆத்திசூடித் தீர்த்தங்கரர் பார்சுவர் என அடையாளம் தெரிகின்றது.//

எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தையும் அளித்துள்ளார்.

 

அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின் இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர் ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்( அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்...


 



தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர் பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

 

மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால் அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

 

ஆகையால் ஔவையாரின் பாடலில் வரும் ஆத்தி சூடி அமர்ந்த தேவன் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இல்லை என்று அறுதியிட்டு கூற இயலும்....

அதே சமயம், ஆத்தி சூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்பதற்கும் ஆத்தியைச் சூடியவாறு இருக்கும் சிவபெருமானையோ தட்சினாமூர்த்தியையோ இதுவரை யாரும் ஆதாரமாக தராததால் ஆத்திசூடி அமர்ந்த தேவன் சிவபெருமான் என்றும் அறுதியிட்டுக் கூற இயலாது.

ஆத்தியைச் சூடியவாறு காட்சியளிப்பவர் யார் என்பதற்கு இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து சரியான தகவல்களை மேலும் திரட்டி ஆதாரபூர்வமாக ஆத்தி சூடிய பெருமான் யார் என்பதைத் தெளிய வேண்டிய நிலையிலேயே இன்றைய சூழலும் ஆராய்ச்சிகளும் இருக்கிறது.

 

ஆகையால், அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் ஆதாரம் கிடைக்கும் வரை ஆத்தி சூடிய பெருமானாக எவரையும் தொழ எவருக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. ஆனால் ஆத்தி சூடி இவர் தான் என தீர்க்கமாக வரலாறாக எழுதி வைக்கும் உரிமை யார்க்கும் கிடையா.

ஆத்தி சூடி யார், என்ன என ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும், ஆத்திசூடி சொல்லும் கருத்துகள் உயர்வானதாக இருப்பதால் ஆத்திசூடி கருத்தின்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலே பொதுமக்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.  



N. Ganesan

unread,
May 13, 2014, 2:02:51 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Tuesday, May 13, 2014 10:11:26 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:

ஆத்திசூடி அமர்ந்த தேவன் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

ஆத்திசூடி அமர்ந்த தேவர் தீர்த்தங்கரர் பார்சுவநாதர் என்று முனைவர் நா. கணேசன் ஐயா திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மொழிதலில் ஏதும் உண்மை இருக்கிறதா என்றால் துளியளவும் இல்லை.

 

Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
= ஆகாயங் கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து

"வான் கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

etc.,

 

சூடி என்பதற்கு அணிந்த என்பதே பொருள் என்று யாவரும் அறிவோம். ஆனாலும், அதனை மறுத்து சூடி என்றால் சூழ்ந்த என்னும் பொருள் இருப்பதாகவும், அதற்கு சான்றாக சில பாடல் வரிகளையும் முனைவர் ஐயா அவர்கள் தந்திருந்தார்.

அவற்றை நாம் மீண்டும் படித்து தெளிவு காண்போம்.

 

சான்று 1

//நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…//

இதில் வானம் சூடிய என்பது தரும் பொருள் யாதெனின், வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகம், அதாவது, மண்செறிந்த இவ்வுலகமானது வானத்தைச் அணிகலனாக அணிந்து இருக்கிறது. ஆய்வு நோக்கில் காணுங்கால், வானம் என்பது என்ன? எனக் கேள்வி எழலாம். வானம் என்பது இப்பரந்த பூமிக்கு மேலாக பரவி விரிந்து கிடக்கும் பால்வெளி. அதாவது இவ்விடத்து உலகம் முழுவதும் எனக் குறிப்பால் உணர்த்த பயன்படுத்தப்பட்டதே வானஞ் சூடிய என்னும் பதங்கள்.

 

இரண்டாம் சான்றான

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும்”

 என்பதும் முதல் சான்றினுக்களித்த அதே பொருளிலேயே வருகிறது.

மூன்றாவது சான்றாக ஐயா கொடுத்திருப்பது

வான்கவிந்த வையகமெல்லாம் 

இதில் எங்கே சூடி என வந்திருக்கிறது என்பது தெரியவில்லை...

 

சூடிய = கவிந்த
 
Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).
= ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து

"வான் கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

etc.,
 
Hope this helps in Aaththichhudi, Bodhichuudi, etc.,

N. Ganesan

N. Ganesan

unread,
May 13, 2014, 3:36:01 PM5/13/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com

>அந்த புகைப்படத்தில் ஐயா குறிப்பிடும் படி ஆத்தி இலை எங்கும் காணோம். உதாரணத்திற்கு ஆத்தி இலையின்
> இணையப் புகைப்பட மாதிரியைக் கீழே கொடுத்துள்ளோம். இந்த இலையின் வடிவமைப்புக்கும், முனைவர்
>ஐயா கொடுத்த புகைப்படத்தில் இருக்கும் விரிந்த மலர் போல காட்சியளிக்கும் ஏதோ ஒன்றிற்கும்(
>அது இலையா/ மலரா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை) என்ன ஒற்றுமை இருக்கிறது என
>பெரியவர்கள் தாம் சொல்ல வேண்டும்

In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.


>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil

 

>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

Because of Parsva's life hsitory that he got Enlightenment under
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.

N. Ganesan

வேந்தன் அரசு

unread,
May 13, 2014, 7:45:13 PM5/13/14
to vallamai, mintamil, தமிழாயம்



13 மே, 2014 8:57 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

தேமொழி

unread,
May 13, 2014, 7:52:29 PM5/13/14
to mint...@googlegroups.com, vallamai


வேந்தரின் கருத்தே எனது கருத்தும்.... உங்கள் விளக்கத்தை ஒப்புக் கொள்ள இயலவில்லை திரு. கணேசன்.

..... தேமொழி 



On Tuesday, May 13, 2014 4:34:28 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 

N. Ganesan

unread,
May 13, 2014, 10:57:46 PM5/13/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழாயம்


On Tuesday, May 13, 2014 4:45:13 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

கணேசர்

உங்க வாதம் எல்லாம் தவிடுபொடி ஆகியது
இரண்டு முதல் ஐந்துவரை மதத்தலைவர்களை ஒற்றை சொல்லாலே சொல்லவில்லை. ஒன்றாம் மதம் மட்டும் ஏன் ஆத்திசூடி எனும் ஒற்றைச்சொல். 
2, 3 ம் தெய்வங்களாகவே காட்டப்பட்டு, 3, 4  மனிதர்களாக காட்டியுள்ளார். ஒன்று??? வேறு பாடல்களில் உள்ளதுபோல் ”ஆத்திசூடி அமர்ந்த தேவனுக்”கு அருள் புரிந்தோன் என பாடி இருக்காலம்

புத்த மதம் ஏன் சொல்லப்படவில்லை? புத்தனுக்கு ஞானஒளி கொடுத்தோன் என பாடி இருக்கலாம்.

ஒன்றே தெய்வம் எனும் கோட்பாட்டில், வெண்மேனியனான சிவனே, கடல்மிசை கிடந்து, நபிக்கு அருள் புரிந்து ஏசுவுக்கு தந்தையானான் என்று  பாடுக்றார். எல்லா மத தெய்வங்களையும் அல்ல. 

சிவனே நபி, ஏசு என்று பாரதி பாடவில்லை. ”பலமதத்தினர் பலவகை ஆகப் பரவிடும் பரம்பொருள்” என்கிறார். 
 4 மதம் என்பதை ஔவை பாட்டின் பொருளால் 5 மதம் என்றேன். ஆத்திசூடி அருகன் என்றால்
சமண (=சிரமண) சமயங்கள் இரண்டும் அடங்கும் (புத்தனுக்கு ஔகன் (அர்ஹத்) என்பதும் ஒரு பெயர்தான்.
ஔவை பாட்டின் உண்மைப் பொருளை உணர்வோ பாரதியின் பல மதத்தினர் என்பது 4 மதம் என்னாமல் 5 மதம்
எனும் சொல்லலாம் தானே.

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

-------------

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மென்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்
 

இந்த வாதம் நீங்க ஏற்கமாட்டீங்க.  இருதரப்பிலும் ஈடுபடாதவங்களுக்காக சொல்லுகிறேன் 
”ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்” என பாரதியே பாடியதால், ஈசனையே பிற மத கடவுளராகவும் அவர் மதிக்கிறார்.

பாரதி 20 நூற்றாண்டு கவிஞன். அதானால் அவன் பாட்டில்  வலிய திணிக்கவேண்டிய தேவை இல்லாத எளிமை இருக்கு. (வள்ளுவனும் அப்படித்தான். ஆனால் 20 நூற்றாண்டுகள் ஓடிய பெற்றியால் நமக்குதான் குழப்பம்). நான் நேரடி பொருளையே ஏற்பேன்.




ஈசன் சிவனா மாலா என்பது இங்கு தேவையற்ற ஆய்வு. அவரே ஏசுவாகவும் அவர் மதிக்கிறார்.

ஆத்தி சூடி என்பது இரண்டு சொற்களானால் இங்கு சூடி என்பது பெயர்சொல் அல்ல.

ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் என வரும். இலக்கணம் அறிந்தவர் விளக்குங்கள்.
அதனால் ”ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து மோனத்து இருக்கும் திருவெண் மேனியான் “ ஒரே கடவுளையே குறிக்கும். 

Hari Krishnan

unread,
May 13, 2014, 11:45:40 PM5/13/14
to vallamai, mintamil

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  

அல்லது எந்த ஆய்வாளரின் ஆய்வின்படி இந்த எடுத்துக்காட்டு பொருந்தும் என்பதை எடுத்துக் காட்டுக.



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

PRASATH

unread,
May 14, 2014, 3:07:22 AM5/14/14
to vallamai, mint...@googlegroups.com
2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

 
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
 
can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
 
Also, you mentioned that, "learned Art Historians say the plant around Parshvanath is Aaththi". May I know their names please. Also can you describe what makes a historian in to a learned art historian?
 
//You can read this in many Jaina art works from Universities.//
 
give some scanned copies of these universities art work to consider as a proof?
 


>தீர்த்தங்கரரைச் சுற்றிலும் இருப்பது ஆத்தி தாவரம் என்று எந்த நூலும் குறிப்பிடவில்லை. தீர்த்தங்கரர்
>பார்சுவநாதர் ஆத்தி மர நிழலில் ஞானம் அடைந்ததாகச் சொல்லப்படுவதற்கும் ஆதாரங்கள் ஏதும் இல்லை...

//Many books whenever they see a plant, say it's the plant what is Aaththi
in Tamil//

I really dont understand what do you mean by this. Can you please rephrase the statement in appropriate manner to understand your thoughts. 
 

>மேலும் முனைவர் ஐயாவே தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி, தீர்த்தங்கரர் பார்சுவநாதரை அடையாளம் காட்ட, >ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டது உச்சியில் இருக்கும் ஓர் அரவம் என்பதே தின்னம் ஆகினபடியால்
>அரவம் சூடி தீர்த்தங்கரர் பார்சுவர் என அழைக்கலாமே ஒழிய ஆத்தி சூடி என தீர்த்தங்கரர் பார்சுவரை
>அழைக்க வேண்டிய அவசியம் இல்லை...

Because of Parsva's life hsitory that he got Enlightenment under
Aaththi tree, Auvai Kuratti calls him AaththichuuDi. Pl. remember
in Sangam lit., the word chuuDuthal = kavithal which is chuuzhthal.
Aaththi-chhuDi is Theerthankar in the same sense as BodhichuuDi
is Buddha.

 
Can you send me a scan copy of  Parsava's life history which tells he got enlightenment under aaththi tree.
 
Apart from you none in the literature or anywhere in the world calls Budha as Bodhichudi... You have created the word "Bodhichudi" to give some support on your Aathichudi statement. it doesnt have any meaning apart from that.

வேந்தன் அரசு

unread,
May 14, 2014, 6:54:48 AM5/14/14
to vallamai, mintamil



13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  



ஆடுவண்டு இமிரா அழல் அவிர்  தாமரை,
நீடு இரும்  பித்தை  பொலியச்  சூட்டி”

பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும். 

ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

Hari Krishnan

unread,
May 14, 2014, 7:48:36 AM5/14/14
to vallamai, mintamil

2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

இரண்டாம் வேற்றுமைத் தொகை.  தொகையில் மிகாது, விரியில் மிகும்.

N. Ganesan

unread,
May 14, 2014, 8:36:04 AM5/14/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, May 14, 2014 12:07:22 AM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:


2014-05-14 1:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

 
In Indian art, plants are idealized. And, learned Art Historians say
the plant around Parshvanath is Aaththi. You can read this in many
Jaina art works from Universities.
 
can you please quote me which study/article/research describes "Plants are Idealized in indian arts". I need proof, not just a statement.
 

I will give quotations in my research article on Aahthichuudi amarntha Devar as Theerthankkara, I will be an Indian journal so
people will have easy access to read. Like IJDL or AavaNam or J. Inst. of Asian studies

N. Ganesan

N. Ganesan

unread,
May 14, 2014, 8:50:46 AM5/14/14
to vall...@googlegroups.com, mintamil


On Wednesday, May 14, 2014 3:54:48 AM UTC-7, வேந்தன் அரசு wrote:



13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  



ஆடுவண்டு இமிரா அழல் அவிர்  தாமரை,
நீடு இரும்  பித்தை  பொலியச்  சூட்டி”

பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும். 

அகராதி திருத்த வேண்டாம் ஐயா. சூடு இரண்டு விதமான வேர்களால் பிறக்கிறது:
(1) சூடு/சுடு : சூளை/சுள்- (2) சூடு :சூழ்- (சூழ்தருதல் - சூடுதல்/சூழுதல்).

கலித்தொகை - நெய்தற் கலி 125

கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித்
தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ

”தொய்யில் சூழ் இளமுலை”  - தொய்யில் சூடிய இள நகில்கள்.

சூட்டிய - சூழ்ந்த என்ற பொருளிலும் சங்க காலப் பாடல்கள் உள்ளன.
ஔவை பாடும் அடிப்படையான் சூழுதல்/சூடுதல் பொருளும்
அகராதிகளிலும், பாடல்களிலும், தமிழிலும் இருக்கட்டும்.
எடுத்துவிட்டால் தமிழின் ஆழம் குன்றும்.

மேகலை அவர்கள் என் குறிப்புகளில் இருந்து கொடுத்திருந்த
சில காட்டுகளுக்கு மேலும் சில கொடுக்கிறேன் - இன்று மாலையில்.

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மேன்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்


N. Ganesan

unread,
May 14, 2014, 10:21:21 AM5/14/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, thami...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran, banukumar rajendran
On Wednesday, May 14, 2014 1:36:11 AM UTC-7, R Banukumar wrote:

2014-05-12 22:14 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆலமரத்தடி என்பது சிவனுக்கும் தக்ஷினாமூர்த்திக்கும் புத்தருக்கும் என்று ஒரு ஆய்வாளர் தெரிவிப்பது கீழே

The tree symbolizes the Trimurti – Vishnu is believed to be the bark, Brahma, the roots and Shiva, the branches. Banyan also symbolises life and fertility in many Indian cultures. For this reason, banyan tree is worshipped by those who are childless and also, it is never cut.

Lord Dakshinamurthy, who is revered as the ‘ultimate guru’, is usually depicted beneath a banyan tree. He represents Lord Shiva and is seen as the embodiment of knowledge and the destroyer of ignorance.

The tree is also sacred to the Buddhists. After attaining enlightenment, Buddha is believed to have sat under a banyan tree for seven days.


அரச மரத்தின்கீழ்  புத்தர் ஞானம் பெற்றார் என்ற செய்தி கீழே

http://ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MA5hj$m1Rt&7c

Religious association

The peepal tree, with its heart-shaped leaves, is one of the most revered trees in India. The tree is considered as an incarnation of Lord Vishnu. The tree also symbolises the continuity of life because the tree itself lives and grows for hundreds of years. Childless couples worship the tree, tying threads of white, red and yellow silk around it to pray for progeny and rewarding parenthood.

The peepal tree is also sacred to the Buddhists, because Lord Buddha is believed to have attained enlightenment under this tree. Due to this, the peepal tree is often referred to as the Bodhi tree or the ‘tree of enlightenment’.

தீர்த்தங்கரருக்கு என்று எதுவும் இங்கே குறிப்பிடப்படவில்லை


:-)

‘‘ஆலநெடு நிழலமர்ந்தனை
காலம் மூன்றும் கடந்தனை
தாழ்சடை முடிச் சென்னிக்
காசறு பொன்னெயிற் கடவுளை’’

இரா.பா,
சென்னை

ஆதிபகவன் (குறள் எண்: 1) திருவருளைப் போற்றும் திருக்கலம்பகப் பாடல்.

“ஆலமர் செல்வன்” என்று பொதிகைமலையில் சிறுபாணாற்றுப்படை பாடுவதும்
அவன் யார்? என்பதும் பல மதத்தினரும் தங்கள் கடவுள் என்று போற்றியிருப்பதும்
பண்டை இலக்கியங்களால் அறிகிறோம். பெருங்கதையில் பார்த்தால் பொதியில்
கடவுள் தாங்கள் கொண்டாடியவர் என்கின்றார் கொங்குவேள். சிலப்பதிகார உரையில்
கடவுள் என்று இந்த முனிவரைச் சொன்னார்கள். தென்னன் என்னும் மதுரைக்
காஞ்சி அடிகள் பின்னர் விரிந்து தெக்கிணண் என்று சிலம்பில் ஆகி, பல்லவர்
காலத்தில் தெக்கிணாமூர்த்தி என சிவனுக்கு ஆகிறது. ஆனால், அவர் வடிவத்தில்
இன்றும் கையில் பத்மபாணியாக இருக்கிறார் (உ-ம்: திருவூறல் என்னும் தக்கோலம்,
மயிலாடுதுறை. மற்ற சில காட்டுகளை பத்மபாணி அவலோகிதன் - தட்சிணாமூர்த்தி
வழிபாட்டுக் கட்டுரையில் பார்க்கலாம். அரிமாநோக்கு (J. of the Central Inst. of Classical
Tamil, Chennai ஆய்வேடு, also, in Poetry in Stone's Vijay's website) பத்மபாணி அவலோகிதனை 
வீரசோழியம் பாட (அதில் ஆத்திசூடி அருகரைப் போற்றும் பக்திப் பாடலும், ஆத்தி சூடும் சோழனைப் 
புகழும் அகப்பாடலும் மேற்கோள் பாடல்களாக உள்ளன. இவை மிகப்பழைய பாடல்கள் என்று கொண்டால்,
ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் போற்றிய ஒரு போதனர் தேர்ந்தெடுத்து ஆத்தியைச்
சோழகுலத்தவர் மரமாக கொடுத்தார் என எண்ணலாம். இது சங்க கால தொடக்கத்தில்
(கி.மு. 4ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சமண சமயங்கள்
உருவாகி வணிக வளர்ச்சியினால் தெற்கு நோக்கி வருகின்றன (Lanka, Tamizakam). வீரசோழியத்தில்
ஆத்திசூடி அருகபத்தரான போதநர் மீதான பழைய மேற்கோள் பாடல் வடமொழியில்
ஒரு விருத்த யாப்புக்கு இலக்கணமாக இருப்பதை முனைவர் க. கணேசலிங்கனாருக்கு
எழுதிய மடலில் கொடுத்துள்ளேன். காண்க. 

ஆதிபகவன் ஆலமர்செல்வன் ரிஷபநாதரின் சைவ-சமண சமய ஊடாடல்:
மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்
கி.மு. நூற்றாண்டுகளில் விடங்கர்(வருணன்)-கொற்றி என சிந்துவெளியின்
சமயமாக இருந்த தமிழர் சமயம் தமிழ் மூவேந்தரால் கொண்டாடப்பட்டுள்ளதை
அவர்கள் வெளியிட்ட காசுகளும் (அசுவமேத யாகம் நடத்தியபின்னர் 
commemorative issue coinage), திருப்பரங்குன்றம் தமிழ்ப்ராமி கல்வெட்டும் 
நிரூபிக்கின்றன. விடங்கனின் ஆலமரம் (வடவ்ருக்‌ஷம் என்பதில் உள்ள
வடம் என்னும் தமிழ்ச்சொல் ரிக்வேதத்தில் வருணனுக்கே உரிமையுடையது)

நூதலோசு அவர்கள் மோனத்தில் அமரும் சிவன் சைவசித்தாந்ததிற்கு எவ்வாறு
எதிராக உள்ளது என்று விளக்கினார். ஆல்சூடியாய் சிவன் அமர, ஆதிபகவனை
சமணர்கள் அவ்வாறு வழிபட்டதே காரணம் எனலாம். போதிசூடி புத்தரும்,
ஆத்திசூடி பாகல்வண்ணரும், ஆல்சூடி ஆதிபகவரும் சமண சமயங்களின்
பத்தர்குழாங்கள் வடிவமைக்க, சைவம் பல்லவர் காலத்தில் தென்னன்/தெக்கிணனை
வடிவமைக்கிறது. அவரது தோற்றத்தை காட்டும் ஆதி சான்றுகளாக
சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, சிலம்பு போன்றவற்றை ஆதாரங்கொள்ளலாம்.

இன்னொன்று: ஆய் போற்றும் ஆலமர்செல்வன் பற்றிய சிறுபாணாற்றுப்படை
வரிக்கு திரு. நூதலோசு ’நீல நாகம் நல்கிய கலிங்கம்’ - கரிய யானைகள் கொண்டுவந்த
ஆடை என்றார். இவ்வுரையை விடப் பொருத்தமான உரை இருக்கிறது.

"நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

”நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.” (வேளிர் வரலாறு, மு. ராகவையங்கார்).

சாவம் - வில். சாய்தல் - வளைதல் இந்த வினைச்சொல் தரும் சாவம்,
‘shaapa'  என்று வடமொழியில் வழங்குகிறது. இது த்ராவிடச்சொல் எனக்
காட்டியவர் அறிஞர் பர்ரோ அவர்கள். ‘sayana 'bed', saayaNa 'name of first commentator on Rgveda',
shava 'corpse' - எல்லாம் சாய்- என்னும் தமிழ் வினைச்சொல் தரும் வடமொழிச்
சொற்கள் தாம், வடக்கே தொல்தமிழ் ஆரியர் வருகையால் திரிந்து ஹிந்தி,
குஜராத்தி என ஆனபோது மாறியவை, அமெரிக்கா கண்டத்தில் செவ்விந்திய மொழிகள்
போய் இன்று ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆனாற்போல, இந்தியா வரலாற்றில் அதற்குமுன்
நிகழ்ந்த நிகழ்ச்சி இது.

நா. கணேசன்

வேளிர் வரலாறு, மு. இராகவையங்கார்

”வேள்-ஆய்

இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய கடையேழுவள்ளல்களில் ஒருவன் என்பது-158-ம் புறப்பாட்டாலும், சிறுபாணாற்றுப் படையாலும் நன்கு விளங்குகின்றது. இவ்வேளைப்பற்றிய சரித்திர முழுதும் தெரியவிடமில்லையேனும், இவன் விஷயமாகப் பழைய நல்லிசைப்புலவர் பாடிய செய்யுள்கள் இவ்வள்ளலது வரலாறுகள் சிலவற்றை அறிதற்கு உதவியாயிருத்தலோடு, இவனது அரிய குண விசேடங்களையும் பெரிய கொடைச்சிறப்பையும் இக்காலத்தார்க்குப் புலப்படுத்துகின்றன. இவ்வள்ளல் வேளிர் குலத்தைச் சேர்ந்தவனென்பது, 'மாவேள் ஆய்', 'தேர்வேள் ஆய்' எனப் புறநானூற்றில் வருதலாற்றெரியலாம். அந்நூலில் "கழறொடி ஆஅய்மழைதவழ் பொதியில்" எனவும், "தென்றிசையாய்குடி" எனவும் கூறப்படுதலின், ஆய்நாடு பொதிய மலைப்பக்கத்து உள்ளதென்பதும், அவன் தலைநகர் 'ஆய்குடி' எனப் பெயர்பெற்ற தென்பதும் விளங்கும். இவன் மலை வேற்றரசரால் தாக்கமுடியாத அரண்வலியுடைய தென்பர்; "கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் - ஆடுமகள் குறுகினல்லது - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே" எனக் காண்க. இவனாட்டில் கவிரம் என்னும் மலைப்பகுதியில் இனிய பல சுனைகளுண்டென்றும், சூரரமகளிர்பலர் அதில் வாழ்வதாக ஐதிகமிருந்த தென்றும் தெரியவருகிறது. இதனை--

"தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர் நிறைசுனை யுறையும்
சூர்மகள் மாதோ என்னுமென் னெஞ்சே." (அகம்-198)

என்னும் அடிகளிற் காண்க. ஆய்நாட்டில் யானைகள் மிகுந்த காடுகள் உண்டென்றும், பரிசிலர்க்கு யானைக்கொடை மிகுதியாக அளித்து வந்தவன் இவ்வள்ளலென்றும் தெரிகின்றன. இங்ஙனம், இவனது யானைக் கொடையின் மிகுதியை நோக்கி, ஒருபுலவர், "விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய்நின் னாட்டு-இளம்பிடி ஒருசூல் பத்தீனும் மோ" என்று நயப்பக் கூறுதலுங் காண்க. இவ்வள்ளலுக்கு 
----------
page 29 

"அண்டிரன்" என்னும் மற்றொரு பெயரும் உண்டென்பது, இவனைப் பற்றிய பாடல்கள் பலவற்றிற் காணலாம். புறநானூற்று - உரைகாரரும், 'அண்டிரன் - ஆய்க்கு ஒரு பெயர்' என்பர். இவ்வண்டிரன் என்ற பெயர்வழக்கின் காரணம் முன் வேளிர் வரலாற்றினுள் விளக்கப்பட்டது.* புறப்பாட்டில், "ஈகையரிய இழையணிமகளிர்" "கோடேந் தல்குற் குறுந்தொடி மகளிரொடு" என வருதலால், ஆய் மகளிர்பலரை மணம்புரிந்தவனென்பது அறியப்படும். இவனுக்குரிய மாலை சுரபுன்னை ஆகும். இவ்வள்ளல், தன் பெருங்கொடைக்கேற்ப, இன்சொல்லே தன்சொல்லாகப் படைத்தவனென்பர். இவ்வேளிர் தலைவன், கொங்கு நாட்டாரோடு போர்புரிந்து, அவரை மேல்கடற் பக்கத்தே ஓட்டினவனென்று, 130-ம் புறப்பாடல் அறிவிக்கின்றது. இவன், ஒருகால், நீலநாக மொன்றால் அளிக்கப்பெற்ற அருமை பெருமை வாய்ந்ததோர் ஆடையைச் சிவ
பிரானே அணியத்தக்கதென்று கருதி, அப்பிரானுக்கு உவந்து சாத்தினன் என்று சிறுபாணாற்றுப் படையில் வியக்கப்படுகின்றான். இதனை,

"நீல நாகம் நல்கிய கலிங்கம்+
ஆலமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த
சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆய்" (96 - 99)

என்பதனால் அறிக. இவ்வரலாறு, ஆய், சிவபக்தி மிக்கவன் என்பதை நன்கு விளக்குவது. இவ் வள்ளலின் நாளோலக்கம் மிகச் சிறந்து விளங்கும் என்பர். (நற்.-30) இப்பெருந்தகையைப் பாடிய புலவர்பெருமக்கள் உறையூர் ஏணிச்சேரி-முடமோசியார், துறையூர் - ஓடைகிழார், குட்டுவன் - கீரனார் என்போர். இவருள் முடமோசியார் அந்தணரென்பது தொல்காப்பிய மரபியலுரையால் (சூத் 74) அறிந்தது. இம்மோசியாரே, வேள்-ஆயின் அருமை பெருமைகளை அதிகமாக வெளியிட்டவர். வேள்-பாரிக்குக் கபிலர் போலவும், 
-
* வேளிர் வரலாறு, 16-ம் பக்கம் பார்க்க.
+ நாகங்களின் புணர்ச்சிக்காலத்து, அவற்றின் மேல் போர்க்கப்பட்ட ஆடை மிகவும் பவித்திரமானதென்றும், அது தேவதைகளுக்கு மிகவும் உகப்புடை தென்றும் வழக்குண்டு.

----------
page 30 

அதிகமானுக்கு ஔவைபோலவும், ஆய்க்கு மோசியாரே பெரிது முரிமை பூண்டவரென்பது " திருந்துமொழி மோசி பாடிய ஆயும்" எனப் பெருஞ்சித்திரனார் என்ற புலவர் கூறுதலால் (புறம்-158) தெரியலாம்.

வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்களையும் புறநானூற்றில் வரும் பாடல்கள் மிகவும் அழகுபடக் கூறுகின்றன. மோசியார் தன் மனைவியரது மாங்கல்ய சூத்திரம் ஒழிய மற்றவையனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனாயினும், கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தறியாது தம்வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ் செல்வர்கள் மனைபோலப் பொலிவிழக்காது ஆயின் அரண் மனை அழகுமிகுந்து விளங்கும்" என்கிறார். இப்புலவர், ஆயைக் காணாதமுன்பு, பிறர் சிறிய இசையைக் கேட்டும் நினைந்தும் பாடியும் போந்த தமக்கு, அவனைக் கண்டதும் அவனது அறுங்குணங்களும் பெருங்கொடைத்திறமும் அளவிறந்த அதிசயம் விளைத்தமையால், "முன்னுள்ளு வோனைப் பி்ன்னுள்ளினேனே - ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே - பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே" எனத் தம் அறியாமையை இழிப்பதன்மூலம் ஆயின் உத்தம குணங்களை வியந்தனர். இவ்வள்ளலின் அருமை பெருமைகள் தம் போன்ற பெரும்புலவர்களைப் பணித்துவிட்டமைபற்றி " புலவர்கள் நீயில்லாத உலகத்தில் இனி வாழாதிருக்கக் கடவர்" என்றும், " பெரிதாக ஏத்தினாலும் சிறிதும் உணரமாட்டாத, பெருமையில்லாதுபெருகிய செல்வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார்" என்றும் புகழுவர். (புறம்-373) இங்ஙனம், வேள் ஆயின் பேரபிமானத்துக்கு உரிமை பூண்டு விளங்கிய இப்புலவர், மலைக்காட்டுவழியே ஒருகாற் செல்லும்
போது, ஆண்டுக் களித்து வாழும் யானைக் கூட்டங்கள் தம் கண்ணுக்குப் புலப்பட, அப்போது--

" மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன்
வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன்
குன்றம் பாடின கொல்லோ
களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே"

---------
page 31 

என்னும் இனிய பாடலைக் கூறினார். " யானைகளை மிகுதியாகவுடைய இவ்வழகிய காடு, அண்டிரனுடைய (ஆய்) மலையைப் பாடிப் பரிசில் பெற்றதுகொல் என்பது இகன் கருத்து. ஆயின் யானைக்கொடை, காட்டியானைகளைக் கண்டதும் தம் மனதில் தோன்ற, அப்போது தானே சுரந்தெழுந்த பாடல் இஃதென்பது அறியலாம். இன்னும்,
மோசியார் ஆயின் ஒப்புயர்வற்ற கொடைத்தூய்மையை--

" இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வாணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே"

என்ற பாட்டாற் குறித்தனர். இவ்வுலகில் அறங்கள் செய்யின் அவை மறுமைக்குதவு-மென்று மறுபயன் பெறும் எண்ணத்தடன் தருமவியாபாரம் செய்யும் வாணிகலன்னன் ஆய்; அவனது கொடை, பெரியோர்கள் சென்ற வழியென்று உலகோர் கருதும்படி அமைந்தது" என்பது இப்பாட்டின் போந்த பொருள். இனி, அம்மோசியார் மற்றோரிடத்தில்,

வடதிசை யதுவே வான்றோ யிமயம்
தென்றிசை ஆஅய் குடியின் றாயிற்
பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே"

என இவ்வள்ளல் உலகிற்குபகாரப்படும் சிறப்பைப் புகழ்வர். இவ்வடிகளில் அமைக்கப்பட்ட கருத்து, பொதியில் மலைக்குரிய அகத்தியர்க்கு வழங்கும் புராணகதையடியாக உண்டாகியிருத்தல் வேண்டும்.

இவ்வாறு, " ஆடுநடைப் புரவுியுங் களிறுந் தேரும் - வாடாயாணர் நாடு மூரும் - பாடுநர்க் கருகா ஆஅய் அண்டிரன்" பெருவள்ளலாய் உலகோர் தன்னை என்றும் நினைக்கும்படி விளங்கி, பின் ' காலனென்னுங் கண்ணிலி யுய்ப்ப—மேலோருலக மெய்தினன்'. இவ்வள்ளல் பிரிவிற்காற்றாது, இவனதுரிமை மனைவியர் தீப்பாய்ந்து உயிர்விட்டொழிந்தனர். ஆய் இறந்தபோது அவனது பிரிவுக்குப் பெரிதும் இரங்கிப் பாடிய புலவர்கள், உறையூர் ஏணிச்சேரி 
------------ 
page 32 

முடமோசியார், குட்டிவன் கீரனார் என்போர். இவருள், மோசியார், ஆயண்டிரன் விண்ணிலகு சென்றதற்கிரங்கி அடியில்வரும் உருக்கமான பாடலைக் கூறினர்:

"திண்டேர் இரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப்புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே"*

பெரும்புகழினனாகிய அண்டிரனை விண்ணுலகத்தில் இந்திரன் வாத்திய கோஷங்களுடன் வரவேற்று எதிர்கொண்டான் என்பது இதன் கருத்து; 
என்றது ஆய் சுவர்கஞ்சென்றான் என்பதாம்.”






 

எனவே ஆத்திசூடி மர்ந்த தேவன் சிவனா அல்லது புத்தரா என்று மட்டுமே  முடிவெடுக்கவேண்டியது ஆய்வுகாட்டும் முடிவு

சவடால்



முதற்சமயமாக சமண சமயங்களைச் சொல்லவைத்த பெருமை ஔவைக் குரத்திக்குத்தான்.


ஆத்திசூடி தீர்த்தங்கரஸ்வாமி:

http://www.maotorino.it/opera.php?id=78

https://www.flickr.com/photos/magika2000/5066880525/in/photostream/


இலண்டன் விக்டோரியா & ஆல்பர்ப் ம்யூஸியத்தில்

ஆத்திசூடி தீர்த்தங்கரர்: 7-ஆம் நூற்றாண்டினது.

மிகப் பழைய சிற்பங்களில் ஆத்திசூடி காட்டப்படுவது வழக்கம்.

ஆத்தி/தாதகி மரம் பார்க்கவும் - 7-ஆம் நூற்றாண்டு:

http://www.vam.ac.uk/content/articles/j/jainism_illuminated_manuscripts-and-jain-paintings/



போதிசூடி புத்தர், ஆத்திசூடி தீர்த்தங்கரர் - இவற்றைப்

பல நூற்றாண்டுகளாய்ப் பார்த்து ஆல்சூடியாய் பொதிகைத் தெக்கிணாமூர்த்தி

தோற்றம் அடைகிறார் (7-ஆம் நூற்றாண்டு). இது மகரவிடங்கரின்

வடவ்ருக்‌ஷம் சிவனுக்காகும் நிலை. சிவனுக்கு ஆவதன் முன்னம் இதனைப்

பரிபாடல் பாடுகிறது. அந்த சங்ககால சமய நிலையை 9-ஆம் நூற்றாண்டில்

நம்மாழ்வார் அழகாக சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் உரைக்கிறார்.

உரைகண்டு தெளிய எழுதலாம்.


நா. கணேசன்



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
May 14, 2014, 10:50:51 AM5/14/14
to வல்லமை, மின்தமிழ்
:)))

Iyappan Krishnan

unread,
May 14, 2014, 11:00:09 AM5/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
​ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஒரே படம் சொல்லிவிடும் என்பார்கள். அசத்தல்​


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


On 14 May 2014 22:50, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
:)))

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/_ytQ2FuE0bY/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

PRASATH

unread,
May 14, 2014, 12:48:59 PM5/14/14
to vallamai, மின்தமிழ்
வாவ்....

போட்டோ பர்ஸ்ட் கிளாஸ்...

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 14, 2014, 1:03:57 PM5/14/14
to mintamil, வல்லமை



On Wed, May 14, 2014 at 8:20 PM, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
:)))
இந்த இழையை இந்தப் படம் அருமையாக விளக்கி விட்டது.

அன்பன்
கி.காளைராசன்

Dev Raj

unread,
May 14, 2014, 2:07:49 PM5/14/14
to mint...@googlegroups.com
துரை அண்ணா,
அடுத்து எதையும் எழுத இடமில்லை :))
அசையாப் படம் அருமை


தேவ்

Dev Raj

unread,
May 14, 2014, 2:20:17 PM5/14/14
to mint...@googlegroups.com
On Wednesday, 14 May 2014 07:21:21 UTC-7, N. Ganesan wrote:
நூதலோசு அவர்கள் மோனத்தில் அமரும் சிவன் சைவசித்தாந்ததிற்கு எவ்வாறு
எதிராக உள்ளது என்று விளக்கினார். 
 

கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா 
                         றங்கமுதற் கற்ற கேள்வி 
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த 
                   பூரணமாய் மறைக்கப் பாலாய் 
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை 
                      யிருந்தபடி யிருந்து காட்டிச் 
சொல்லாமற் சொன்னவரை நினையாம 
        னினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.

வேந்தன் அரசு

unread,
May 14, 2014, 10:21:31 PM5/14/14
to vallamai, mintamil



14 மே, 2014 7:48 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

இரண்டாம் வேற்றுமைத் தொகை.  தொகையில் மிகாது, விரியில் மிகும்.



ஆத்திச்சூடி என்றால் பெயர்ச்சொல் அது ஒரு தனி இறைவனை குறிக்கலாம்

:”ஆத்தி சூடி அமர்ந்த தேவன்  ”  என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.

சங்க காலத்தில் நிலம் வானத்தை ஏந்தி இருக்கு என்ற கருத்து இருக்கிறது. .
”நிலன் ஏந்திய விசும்பு.”
அதனால் வானம் பூமியை சூழ்ந்து இருக்கு என்ற கருத்து வராது.  நிலம் வானை சூடி இருக்கு என்றே கொள்ளணும்.

பரிதி சூழ் உலகம் என வரும். பரிதி  சூடிய உலகு என எங்கும் காணேன்.

PRASATH

unread,
May 14, 2014, 11:56:39 PM5/14/14
to vallamai, mint...@googlegroups.com
So, As of now you have not completed your research on "Aathichudi amarntha thevar" and you have not published your article too.
 
But, well ahead of your research, you have come to conculsion that Theerthankara Parsuvar is aathichudi amarntha thevar and you ar searching for some quotations and supportive documents for your statement.
 
Is this called research? I have never come across these kind of research in my lifetime.
 
Backforth calculation maybe easier way to reach the top position in some situation. But, in research, that is worst idea, and a bad example for future generation.
Hope you understand this sooner or later.

N. Ganesan

unread,
May 14, 2014, 11:58:25 PM5/14/14
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, May 14, 2014 7:21:31 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


14 மே, 2014 7:48 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

இரண்டாம் வேற்றுமைத் தொகை.  தொகையில் மிகாது, விரியில் மிகும்.



ஆத்திச்சூடி என்றால் பெயர்ச்சொல் அது ஒரு தனி இறைவனை குறிக்கலாம்

பிறைசூடி என்றால் சிவன். அதுபோல் ஆத்திசூடி ( = ஆத்தி சூழந்தவன்) அருகன்.
 

:”ஆத்தி சூடி அமர்ந்த தேவன்  ”  என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.


ஆத்திசூடி என்று தனித்தொடராக எடுக்கையில் சூடி (பிறைசூடி என்பதுபோல்) பெயர்ச்சொல்லாகவும்,
ஆத்தி சூடி அமர்ந்த தேவன் என்கிறபோது வினைச்சொல்லாகவும் கொள்ளணும்.

நீங்கள் ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து - என்பதில் வினைச்சொல்லாக எடுக்கிறீர்கள்.
ஆனால், ஆத்திசூடி என்பதை பெயர்ச்சொல்லாக எடுத்து சமணசமய்ங்களைச் சொல்வதாகவும்
பார்க்கலாம் என்று காட்டினேன். தனிப்பெயராக ஆத்திசூடி நூலைச் சொல்லும்போது
ஆத்திச் சூழந்தவர் (தீர்த்தங்கரர்) என்பதைக் குறிக்கிறது.

 
சங்க காலத்தில் நிலம் வானத்தை ஏந்தி இருக்கு என்ற கருத்து இருக்கிறது. .
”நிலன் ஏந்திய விசும்பு.”
அதனால் வானம் பூமியை சூழ்ந்து இருக்கு என்ற கருத்து வராது.  நிலம் வானை சூடி இருக்கு என்றே கொள்ளணும்.

வானம் கவிந்த உலகம், வானம் சூடிய உலகம் - எல்லாம் சங்க கால கருத்துக்கள்.
கோழி கோடி என்று தமிழ்-தெலுங்கில் ஆதல் போல,
சூழல்:சூடல் இருக்கிறது.

 

பரிதி சூழ் உலகம் என வரும். பரிதி  சூடிய உலகு என எங்கும் காணேன்.

திங்கள் சூடிய மலை என்பது போல. 
 
பரிதி சூடுதல் நாலாயிரத்தில் உண்டு:
”செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...

இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது. அஃது இயற்கையை உடலாக்கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன; பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன.”


நா. கணேசன்

N. Ganesan

unread,
May 15, 2014, 12:02:57 AM5/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Wednesday, May 14, 2014 8:56:39 PM UTC-7, பிரசாத் வேணுகோபால் wrote:
So, As of now you have not completed your research on "Aathichudi amarntha thevar" and you have not published your article too.
 
But, well ahead of your research, you have come to conculsion that Theerthankara Parsuvar is aathichudi amarntha thevar and you ar searching for some quotations and supportive documents for your statement.
 
Is this called research? I have never come across these kind of research in my lifetime.
 
Backforth calculation maybe easier way to reach the top position in some situation. But, in research, that is worst idea, and a bad example for future generation.
Hope you understand this sooner or later.

Thanks for your advice on research. I have done research for quite some time. We hear there are 600+ engineering colleges? In which college you were a lecturer? for how long?

In my research, I have enough material that Parsva (aaththichuudi) got his enlightenment under the Aaththitree, just like
Bodhichuudi got his enlightenment under the bodhi tree.

N. Ganesan

N. Ganesan

unread,
May 15, 2014, 12:36:09 AM5/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
இன்னொரு பாடலும் தரலாம்.

கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி
நல்லானை, நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை,
யெல்லாரு மேத்தத் தகுவானை, யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக்
கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர்.
                                                          - (தொ. செ. மேற்கோள்)

கூகுளில் இன்னும் பார்க்கவில்லையா? 

சமண சமயங்களின் ஆழ்வார்களைப் பார்த்து பல்லவர் காலத்தில்
வடிவமைக்கப்படும் சிற்பம் தெக்கிணாமூர்த்தி ஆகும். சிறுபாணாற்றுப்படை
காலம் மிகப் பிந்தையது. அதற்கும் சுமார் நூறு வருஷம் கழித்து
தெட்சிணாமூர்த்தி தோன்றுகிறார். ஆலமர்செல்வன் அவலோகிதனா,
அருகதேவனா (ஆதிபகவன்), சிவனா என்று முழுதும் முடிவுசெய்யாத
காலகட்டம் சங்க காலம். ஆனால் தேவாரத்தில் ஆலங் காட்டைப்
பாடும் போது த்யானமூர்த்தியை ஆழ்வர் என்றே பாடுவது தொடங்குகிறது.
கண்ணன்/விஷ்ணு நினைவிலே ஆழ்ந்திருப்பதால் ஆழ்வார் என்ற பெயர்
பின்னர். முதலில் இந்த மோனத்தில் ஆழும் ஆழ்வார் என்ற சொல்
சமணக் கடவுளருக்குக் கல்வெட்டுகளில் காண்கிறோம். தமிழர் சமயம்
பற்றி கல்லில் வடிக்கும் கற்பனைகளை காலவரிசையில் பார்க்கவேண்டும்,
இந்து சமயங்களும், சமண சமயங்களும் எப்படி உறவாடி வந்துள்ளன எனப்
புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. இந்தச் சமயக் கருத்துக்கள் உருவாகும்
காலக் கணிப்புக்கு துணைவருகின்றன.

தியானமூர்த்தி ஆழ்வாராக தெட்சிணாமூர்த்தி தோன்றி 1300 வருஷம் 
ஆகிவிட்டது. எனவே நூதலோசு கருத்துக்களில் உடன்பாடில்லை.

நா. கணேசன்

திரு. நூதலோசு கருத்து:
”அதான்று  சிவகாசியிலிருந்து வரும் காலண்டர்கள் சிலர் தன மனம் போன போக்கில் தெய்வத்திற்கு வடிவங்கள் கொடுத்து 
கையில் தன கற்பனையில் உள்ள ஆயுதங்களை கொடுத்து இது தான் புதுமமை  என கொடுத்து திரித்து விடுதல் நடப்பது போல் யாரோ
மோன நிலை என கட்டுக்கடி இருக்க வே ண்டும் சென்னைக்கு மேற்கு நாகாலா புர ம் அருகு மேற்கு  ஆந்திரா எல்லைக்குள் சுருட்டபள்ளி  
என ஓர் கோயில் அதனில் சிவன் படுத்த நிலையில் வைத்துள்ளனர் மக்களை புதுமை எனக்காட்டி வேறெங்கும் இல்லாதது என கவர்கின்றனர்
அங்கு உண்மையான மூலச சிவன் கோயில் அடுத்து இதனை கட்டிஉள்ளனர்  
ஒருவன் பிரத்தியங்கரா தேவி என ஓர் காட்டுமிராண்டி உருவத்தை வைத்து ஜனங்களை ஆக ஊ கூ   என பெரிது படுத்தி வருகிறான்
போலிசாமியார்கள் மிக்க 
உலகத்திற்கு இது புதிதும் அல்ல எப்படி வேண்டுமானால்  திசை திருப்பக்கூடிய திறமை இருந்தால் எதிலும் வணிகம் செய்யலாம் 
வடக்கில் ஹரிதுவார் சென்றேன் அங்கே  சிவனை சிறு பிள்ளைபோல் படம் வரைந்து பால சிவன் என்கிறான் இது  ஒரு வாணிப நிலை 
மரபுப் படி தெய்வீக அம்சம் கற்பித்தால் 4 கைகள் கொடுக்க வேண்டும்  சிவன் என காட்டி 2 கைகள் கொடுப்பது மரபல்ல தனி ஒருவனின் 
மனம் போன போக்கு காலண்டர் உருவங்கள் கள் எழுதுவதைப்போல் ”

Hari Krishnan

unread,
May 15, 2014, 12:47:52 AM5/15/14
to vallamai, mintamil

2014-05-15 10:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி
நல்லானை, நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை,
யெல்லாரு மேத்தத் தகுவானை, யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக்
கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர்.
                                                          - (தொ. செ. மேற்கோள்)

கூகுளில் இன்னும் பார்க்கவில்லையா

கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி
நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை
யெல்லாரு மேத்தத் தகுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக்

கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர்.

(தொ. செ. மேற்கோள்)

     இன்னும் தேவார திருவாசகங்களில் பல்லிடங்களில் இறைவன் ஆலநீழலில் அமர்ந்து பக்குவம் வாய்ந்த நான்கு தவத்தர்களுக்கு மறைகளை அருளிச்செய்த வரலாறு கூறப்படுகின்றது. 1சங்க நூல்களில் ஆலமர் செல்வன் என்னும் பெயர் இறைவனுக்குப் பெயராக வந்திருக்கின்றது. தொல்காப்பியர் "செந்தமி ழியற்கை சிவணிய நிலத்து" வழக்குக் கூறப்புகுந்தாராதலின், அவர் கூறிய மறைகள் சிந்துநாட்டாருக் குரியதன் றென்பது தானே பெறப்படும்.


இதைப் போல இந்த அடிகளுக்குத் தீர்த்தங்கரரை விளக்கமாகச் சொல்லும் உரை யாது?

Hari Krishnan

unread,
May 15, 2014, 12:49:27 AM5/15/14
to vallamai, mintamil

2014-05-15 10:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நல்லானை, நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை,

நல்லாள் ஒரு பாகமாகிய ஞானத்தானை...

தீர்த்தங்கரர்?

Dev Raj

unread,
May 15, 2014, 1:48:26 AM5/15/14
to mint...@googlegroups.com
On Wednesday, 14 May 2014 21:36:09 UTC-7, N. Ganesan wrote:
கூகுளில் இன்னும் பார்க்கவில்லையா? 


கூகுளில் நீர் பார்த்திருந்தால் அல்லது உம்மிடம்
இருக்கும் பல புத்தகங்களில் துழாவியிருந்தால்
”ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
 மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்”
எனும் அரனாரைப் போற்றும் வைணவப் பாடலும் 
தெரிய வந்திருக்கும்.
 
வைணவ புராணமான பாகவதம் ஆலின் கீழ் ஞானம் 
போதித்த சிவபெருமானை வர்ணித்திருப்பதும் இதற்குள் 
உமக்குத் தெரிந்திருக்கும்; தேடுவது கடினமாக இருந்தால்
வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயக்கம் வேண்டாம்.
நான் எடுத்துத் தருகிறேன்.

வைணவ ஆகம ஆதாரமும் உள்ளது.

தேடும் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் ஓர் உபாயம் உள்ளது.
எல்லாம் பல்லவர்கள் பணம் கொடுத்து எழுதச் சொன்னது
என்று நீர் திருவாய் மலர்ந்தருளி விட்டால் போதுமானது.



தேவ்

Dev Raj

unread,
May 15, 2014, 2:19:01 AM5/15/14
to mint...@googlegroups.com

On Friday, 22 March 2013 06:21:07 UTC-7, N. Ganesan wrote:

........மானசோல்லாஸம் ”த்ரங்கிதசிரோருக...” என்கிறதே,...

இது பற்றி மற்றோர் இழையில் கேட்டிருந்தேன்;
முதலில் இதை கூகுளில் பார்த்துத் தெரிவித்தால் நல்லது


தேவ்



தேமொழி

unread,
May 15, 2014, 2:53:01 AM5/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
ஆராய்ச்சிக் கேள்வியே  மாற்றியமைக்கப்பட வேண்டும். 

 ... வரலாற்றில் முதன் முதலில் ஆத்தி சூடி / ஆத்தி சூழ அமர்ந்தவராக காட்டப்பட்டவர் தீர்த்தங்கரா? புத்தரா?  சிவனா?

என்று மாற்றியமைக்கப் பட்டருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  இன்றுவரை கண்டுபிடிப்புகளை யார் முதலில் ஆவணப் படுத்துகிறார்களோஅவர்களுக்குரியதாகத்தான் வரலாறு தீர்மானிக்கிறது.

இந்தியாவில் இருக்கும் மரங்களில் ஆலமரமும் அதிகம், நிழலுக்கு அதனடியில் அமர்பவர்களும் அதிகம்.

இன்று வரை கிராமங்களின் சொம்பு நாட்டாண்மை நடைபெறும் இடம் அது.  பலரும் உட்கார்ந்திந்திருக்க வாய்ப்பு உள்ளது.  

யார் அமர்ந்ததாக முதலில் ஆவணம் கிடைத்துள்ளது..  எந்த மொழியோ, எந்த இலக்கியமோ, எந்த வித படிமமோ என்று  கவலை இல்லை.

சிலையில் செதுக்கப்படும் பொழுதோ, வரையும் பொழுதோ துல்லியம் இருப்பது அரிது.  கலைஞர்களின் கற்பனைத்திறன் குறுக்கே வந்துவிடும், அழகுணர்ச்சி என்று எதையாவது வரைந்தோ செதுக்கியோ வைக்கும் மனப்பான்மை இருக்கிறது.  

இந்த சுட்டியில் பார்த்தால் புத்தரே ஆலமரம், அரசமரம் என பலவகை மரங்களுக்கடியில் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் காட்டப்பட்டுள்ளார். 

அதில் எத்தனை மரங்களில் இலைகள் அரச மர இல்லை போலோ அல்லது ஆல மர இலை போலோ இருக்கிறது.  கவிங்கர்களுக்கு மட்டும்தான் கவிதைக்குப் பொய்யழகு என்று பொய் சொல்ல உரிமையுண்டா.  பிற கலைஞர்கள் மிகைப்படுத்தக் கூடாதா?

ஆத்தி மரம் என்பதுடன் இம்மொவரில் யார் முதலில் இணைத்துக் கூறப்பட்டார்கள்.  

பிற்காலத்தில் ஒருவர் மதக் கருத்து மற்றவருக்கு ஊடுருவ எவ்வளவோ வாய்ப்பிருக்கிறது.  அதை எண்குணத்தான் என்பதில் பார்த்தாகிவிட்டது.

அடுத்து ஐந்து/ஏழு  தலை நாகம் சூடியவனே என்றால் மீண்டும் திருமாலா? தீர்த்தங்கரா என விவாதம் தொடங்குமா?  பாம்புகள் எண்ணப்படுமா?

(ஊப்ஸ்... தொடங்கிவிடுவார்களோ? புத்தர் படங்களிலும் நாகங்கள் இருக்கிறதே ...)

இது தாமரைக்கண்ணன் விவாத சாயலில் இருக்கிறது.  

எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன்.  பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.

யார் முதலில்...யார் முதலில் ...யார் முதலில்...

பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அந்த பட்டம் உரிமையாகிவிட்டுப் போகட்டும்.  

இக்காலத்தில் கூடத்தான் படம் எடுக்கும் பொழுது ஒரு காட்சி பிரபலமானால் எல்லோரும் தங்கள் படங்களில் நுழைக்கிறார்கள், மக்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். வெள்ளுடை தேவதைகளை பல படங்களில் நடனக் காட்சியில் பார்த்தாலும் யார் பாடல் காட்சியில் முதலில் அறிமுகப்படுத்தியது போன்றது என் கேள்வி.

..... தேமொழி




On Wednesday, May 14, 2014 9:22:00 PM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-15 7:51 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
”ஆத்தி சூடி அமர்ந்த தேவன்  ”  என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.

​அயோத்திதாசப் பண்டிதர்

ஆத்திச் சுவட்டில் அமர்ந்ய தேவன் என்று குறிப்பிட்டு நூலின் பெயர் ஆத்திச் சுவடி என்று குறிப்பிடுகிறேரே

அப்படியாயின் சிவன் தீர்த்தஙரர் புத்தர் ஆகிய மூவருக்கும் பொதுவென்று நாட்டாமை தீர்ப்பு சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிடலாமே

சவடால் ​

N. Ganesan

unread,
May 15, 2014, 3:16:47 AM5/15/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, May 14, 2014 11:53:01 PM UTC-7, தேமொழி wrote:
எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன்.  பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.


சந்தேகமே இல்லை. ஆத்தி மர நிழலில் ஞானம் எய்தியவர் பார்சுவர் என்பது அவர் வரலாறு. பார்சுவர் புத்தருக்கு முன் வாழ்ந்தவர். அதனால் அவரை ஆத்தி(=தாதகி) மரம் சூழ்தர/சூடி காட்டுவது மரபு. சிவனுக்கு ஆத்தி திருமேனியில் உருவாவது மிகப் பிற்காலம் (உ-ம்: ஒட்டக்கூத்தர்).

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 15, 2014, 4:16:06 AM5/15/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


Parsvanatha. Grès rose. Inde (probablement Uttar Pradesh). 9° siècle.

128635119365548

Parsvanatha. Grès rose. Inde (probablement Uttar Pradesh). 9° siècle. photo courtesy Cornette de Saint Cyr

H. : 80 cm. Accidents et manques visibles. Estimation : 50 000 / 75 000 €

Cette remarquable et importante sculpture présente le jina Parsvanatha, nu, le classique ornement srivatsa marquant sa poitrine, assis en méditation dans l'attitude du lotus (vajraparyankasana), les mains posées dans son giron en dhyana mudra, la tête encore partiellement abritée par les restes d'un capuchon de naga.
La pointe de la queue du roi-serpent passe sous le corps du jina et vient retomber sur le devant su socle.
Cette particularité iconographique fait référence à l'épisode au cours duquel il pratiquait une forme de méditation sous un dhataki et où Samvara déclenche une tempête pour l'interrompre.
Le nagaraja Dharanendra vient alors déployer son capuchon au dessus de sa tête pour l'abriter et lui permettre de poursuivre sa méditation.
Le sculpteur de cette importante représentation a parfaitement su allier la classique rigueur des lignes et des volumes du corps caractéristiques de l'esthétique jaïne à une expression rayonnante du visage accentuée par la disposition des écailles du corps du serpent.
L'intérêt de cette sculpture est encore renforcé par une inscription gravée sur le socle mentionnant la date Samvat 922, correspondant aux années 865/866 de notre ère si l'on tient compte de l'ère Vikrama en vigueur alors en Inde du Nord.

Cornette de Saint Cyr - Paris. Vente du Vendredi 29 octobre 2010. Expert Jean-Luc ESTOURNEL: 06 09 22 55 13. Drouot Montaigne - 15, av Montaigne - 75008 Paris.Pour tout renseignement, veuillez contacter Laura CRISTAU au 01 47 27 11 24

 ஃழான் - லூய்க் பிரெஞ்சில் எழுதியதை கூகுள் மொழிபெயர்ப்பு:
Parsvanatha . Pink sandstone . India (probably Uttar Pradesh) . 9th century .

128635119365548

Parsvanatha . Pink sandstone . India (probably Uttar Pradesh) . 9th century . Photo courtesy Cornette de Saint Cyr

H. 80 cm. Accidents and visible gaps. Estimate: 50,000 / € 75,000

This remarkable and important sculpture shows the Jina Parsvanatha naked classic ornament srivatsa marking his chest, sitting in meditation in lotus posture ( vajraparyankasana ) , hands in her lap in dhyana mudra , the head still partially sheltered by the remains of a cap naga .

The tip of the tail of the serpent - king passes under the body of the Jina and comes back on the front su base.
This iconographic feature refers to the episode in which he practiced a form of meditation under a Dhataki and where Samvara triggers a storm to interrupt .
The Nagaraja Dharanendra is then deploy his hood over his head for the shelter and allow him to continue his meditation.

The sculptor of this important representation has perfectly combine classical rigorous lines and volumes of body aesthetics characteristics Jain to radiant facial expression accentuated by the arrangement of scales on the body of the snake .
The interest of this sculpture is further enhanced by an inscription on the base indicating the date Samvat 922 , corresponding to 865/866 years of our era if we take into account the Vikrama era then prevailing in North India .

Cornette de Saint Cyr - Paris . Sale Friday, October 29, 2010 Expert Jean -Luc ESTOURNEL : 06 22 September 55 13 Drouot Montaigne - 15 Avenue Montaigne - 75008 Paris . . . For more information, please contact Laura at CRISTAU 01 47 27 11 24

Banukumar Rajendran

unread,
May 15, 2014, 4:24:13 AM5/15/14
to vallamai, மின்தமிழ்
தெளிவான சிந்தனை.

அனைவாராலும் ஏற்கதக்க கருத்துக்கள்.

தமிழ் இலக்கிய வரலாறு மிகவும் புதிரானது மட்டுமல்ல குழப்பமானதுங்கூட!

வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்ததை, எழுத்து உருவான பிறகு அதை எழுத்தில் தொகுத்தார்கள். இவ்வாறு தொகுத்தவர்கள்,
சிரமண பிரிவுகளை சார்ந்தவர்கள் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கருதுகிறார்கள். (உதா..கார்த்திகேசு சிவதம்பி, ஐராவதம் மகாதேவன், கைலாசபதி ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.) அப்படித் தொகுக்கும்போது பாட்டின் வரிகளை வைத்து தொகுக்கப்பட்டது. இதுதான் முதல் முதல் நாம் அறியும்
சங்க இலக்கியத்தின் தோற்றமாகும்.

http://www.ulakaththamizh.org/JOTSArticle.aspx?id=498

பின்னர், சற்றொப்ப, ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் அவை மறுத் தொகுப்புக்கு உள்ளாகின. அப்படித் தொகுத்தோர் வைதிக பிரிவினர். (இறையனார் அகப்பொருள் உரை காண்க)

முதலில் அவைதிகம். பிறப்பாடே வைதிகம். இது தமிழில் மட்டுமல்ல. ஏறக்குறைய அனைத்து இந்திய மொழிகளிலும் அவ்வாறே. நமது அண்டை மொழிகளையே அதற்கு உதாரணம் காட்டலாம். கன்னட, தெலுங்கு இலக்கியங்கள் அதற்கு சாட்சியாகும்.

சரி. இது எழுத்தால் ஆன இலக்கியங்கள்தான் இவ்வாறு என்றால், கல்வெட்டு, சிற்ப சான்றுகளும் அவைதிக சான்றுகளே முன் நிற்கும்!

இது நிற்க.

நாம் தற்போது பயன்கொண்டு வரும் சங்க இலக்கியங்கள் சரியாகப் பதிக்கப்படவில்லை. ஓலைச் சுவடியில் ஒன்றிருக்கும், ஆனால் அவற்றை
பதிக்கும்போது வேறாகப் பதித்திருக்கிறார்கள். நிறையச் சான்றுகள் உள்ளன. எனினும், குறிப்பாக இரண்டு குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

1. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=329

”...இன்னிலை, கைந்நிலை என்பவை தனித்தனி நூல்களா? “இன்னிலை
சொல்” என்பது காஞ்சிக்கு அடைமொழியா? இரண்டும் நூல்கள் ஆயின்,
அவை எங்கே?

     இத்தகைய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது ‘இன்னிலை’
என்ற பெயருடன் புதியாய் ஒரு போலி நூல் தோன்றிப் பழையநூல் போல்
மருட்டியதால், வ.உ.சி. யால் அஃது உரையுடன் பதிப்பிக்கப்பட்டது...”


2. வினையின் நீங்கி விளங்கிய.....


 

இன்னும் நிறைய சான்றுகள் அடிக்கிக் கொண்டே போகலாம். ஏன் இந்த இழையில் இதையெல்லாம்
சொல்லவேண்டும்..? என்றால்...

சான்றாக,

ஆலமர் செல்வன் என்று சங்க இலக்கியத்தில் வருகிறது. இதற்கு கிட்டதட்ட எல்லா உரையாசிரியர்களுமே
சிவனார் என்று உரைச் செய்திருக்கிறார்கள். ஏனெனில், உரையாசிரியர்கள் காலம் மிக பிற்பட்டது. கி.பி. பத்தாம்
நூற்றாண்டிற்கு பிறகே! அப்போது சிவமதம் தலைமை வகித்தது. சிவனார் ஆலமர் செல்வன் என்று சிலைகளும்
செய்யப்பட்டுவிட்ட காலம். ஆனால், சங்க காலங்களோ கிட்டதட்ட குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் முந்தையது.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி?

ஆலமர் செல்வன் -  மூன்று இறைவர்களுக்கு பொருந்தும்.

1. புத்த பெருமான்
2.அருகன்
3. சிவ பெருமான்.

ஆலமர் செல்வன் (உரையாசிரியர்கள் கூற்றின் படி சிவனார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமானால்,
 இன்றிலிருந்து இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் சிவனார் படிமம் அல்லது புடைச் சிற்பங்கள் முதலில்
காட்டப்படவேண்டும். பிறகு ஆலமரத்தடியில் சிவனார் இருப்பதுபோல படிமங்களோ, புடைச் சிற்பங்களோ
காட்டப்படவேண்டும். பிறகுதான் ஆலமர் செல்வன் என்று உறுதியாக சொல்லமுடியும்.

இதில் முக்கிய இரண்டு முரண்பாடுகள் நமக்கு தோன்றும்.

1. சிவனார் சிலை இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் இருந்ததிற்கான சான்றுகள் காட்டப்படவேண்டும். இல்லையென்றால்
சங்கப் பாட்டுகளில் வரும் அந்த வரிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செறுகல்களாக கருதவேண்டிவரும்.

2. அவைகள் இடைச்செறுகல்கள் இல்லை என்று எடுத்துக் கொண்டால், அப்பாடல்கள் மிகவும் பிற்பட்டவையாகக் கருதப்பட
வேண்டியிருக்கும்.

இவற்றின் அடிப்படையிலேயே சங்க இலக்கியத்தின் காலத்தை மிக பிந்தியதாக காட்டுகிறார்கள். (எர்மன் டீக்கன் அவர்களின்
கூற்றும் இதுவே)

சங்க இலக்கியங்களில் பல குழப்பங்கள் இவ்வகையிலே உள்ளன!

இறுதியாக,

சங்க இலக்கியம் படிப்பதென்பது வேறு. அதன் காலவாராய்ச்சி என்பது வேறு. சங்க காலவாராய்ச்சி செய்ய விழைவோர்,
முதலில் ஆரம்பிக்கவேண்டிய இடம். பதிப்பு வரலாற்று நூல்கள். இதில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். அப்போதுதான்
ஓலைச் சுவடியில் இருந்து பதிக்கும்போது எத்தனை குளறுபடிகள் செய்திருக்கிறார்கள். அப்படி செய்த பெரியவர்களின்
வண்டவாளங்களயும் சேர்த்தேத் தெரிந்துக் கொள்ள, வாய்ப்பும் கிடைக்கும்.


இரா.பானுகுமார்,
சென்னை






--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
May 15, 2014, 5:53:17 AM5/15/14
to vallamai, மின்தமிழ்
கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.

1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y

அந்நூலிலிருந்து..



இரா.பானுகுமார்,
சென்னை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 15, 2014, 7:28:50 AM5/15/14
to vallamai, மின்தமிழ்



14 மே, 2014 11:58 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Wednesday, May 14, 2014 7:21:31 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:


14 மே, 2014 7:48 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 16:24 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

ஆத்தி சூடி “ இலக்கண குறிப்பு சொல்லுங்க ஹரி கி ஐயா

இரண்டாம் வேற்றுமைத் தொகை.  தொகையில் மிகாது, விரியில் மிகும்.



ஆத்திச்சூடி என்றால் பெயர்ச்சொல் அது ஒரு தனி இறைவனை குறிக்கலாம்

பிறைசூடி என்றால் சிவன். அதுபோல் ஆத்திசூடி ( = ஆத்தி சூழந்தவன்) அருகன்.
 

:”ஆத்தி சூடி அமர்ந்த தேவன்  ”  என்ற அடியில் ஆத்தி சூடி தனி கடவுள் அல்ல. அதனால் பாரதி பாடலிலும் அது தனிக்கடவுள் அல்ல. இளம்பிறை அணீந்தவனுக்கே அது அடைமொழி.


ஆத்திசூடி என்று தனித்தொடராக எடுக்கையில் சூடி (பிறைசூடி என்பதுபோல்) பெயர்ச்சொல்லாகவும்,
ஆத்தி சூடி அமர்ந்த தேவன் என்கிறபோது வினைச்சொல்லாகவும் கொள்ளணும்.

நீங்கள் ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து - என்பதில் வினைச்சொல்லாக எடுக்கிறீர்கள்.
ஆனால், ஆத்திசூடி என்பதை பெயர்ச்சொல்லாக எடுத்து சமணசமய்ங்களைச் சொல்வதாகவும்
பார்க்கலாம் என்று காட்டினேன். தனிப்பெயராக ஆத்திசூடி நூலைச் சொல்லும்போது
ஆத்திச் சூழந்தவர் (தீர்த்தங்கரர்) என்பதைக் குறிக்கிறது.

தனிப்பெயாராக இருந்தால் ஆத்திச்சூடி என்றுதான் வரணும். அது இரண்டாம் வேற்றுமை தொகை.  ஆத்தியைச்சூடி.



 
சங்க காலத்தில் நிலம் வானத்தை ஏந்தி இருக்கு என்ற கருத்து இருக்கிறது. .
”நிலன் ஏந்திய விசும்பு.”
அதனால் வானம் பூமியை சூழ்ந்து இருக்கு என்ற கருத்து வராது.  நிலம் வானை சூடி இருக்கு என்றே கொள்ளணும்.

வானம் கவிந்த உலகம், வானம் சூடிய உலகம் - எல்லாம் சங்க கால கருத்துக்கள்.
கோழி கோடி என்று தமிழ்-தெலுங்கில் ஆதல் போல,
சூழல்:சூடல் இருக்கிறது.

 

பரிதி சூழ் உலகம் என வரும். பரிதி  சூடிய உலகு என எங்கும் காணேன்.

திங்கள் சூடிய மலை என்பது போல. 
 
பரிதி சூடுதல் நாலாயிரத்தில் உண்டு:
”செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்...



அது உலகம் அல்ல . குன்றம் என்பதால் சூடி என்பது சரியே. ”கொண்டல் வான்மதி சூடி”  போல் பரிதி சூடி.  தி மு கவின் உதய சூரியன் போன்ற தோற்றம்.

உலகம் உருண்டை என்ற கருத்தில் அக்கால பாடல்கள் இயற்றைபடலை. அதனால் சூடி என்றால் சூடிதான் சூழ்தல், கவிழ்தல் அல்ல.

மேலும்  முயலவும்.

ஆத்திசூடி அமர்ந்த (அருக) தேவன் என்ற வரி அருகனுக்கு பொருந்தலாம். ஆனால் பாரதி சிவனையே பாடுகிறார்.என்பதே என் நிலை

இதற்கு மேல் நான் வாதம் தொடரலை.
 

N. Ganesan

unread,
May 15, 2014, 9:58:48 AM5/15/14
to mint...@googlegroups.com, vallamai


On Thursday, May 15, 2014 4:28:50 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:

உலகம் உருண்டை என்ற கருத்தில் அக்கால பாடல்கள் இயற்றைபடலை. அதனால் சூடி என்றால் சூடிதான் சூழ்தல், கவிழ்தல் அல்ல.

சூடல்/சூழல் - குடை போல் கவிதல். இது தமிழிலும், மலையாளத்திலும் இருக்கிறது.
மேலும், சூழ்தல் என்றால் பக்கத்தில் வளைந்திருத்தல், இதனை ஆத்தி மரம் சூழ ஆத்திசூடி
நிற்கும் சிற்ப சித்திரங்களில் பார்க்கலாம்.

பிறைசூடி பெயர்ச்சொல் போல, ஆத்திசூடி வல்லொற்று மிகாமல் வரும், ஐயா.

நா. கணேசன் 


மேலும்  முயலவும்.

ஆத்திசூடி அமர்ந்த (அருக) தேவன் என்ற வரி அருகனுக்கு பொருந்தலாம். ஆனால் பாரதி சிவனையே பாடுகிறார்.என்பதே என் நிலை

இதற்கு மேல் நான் வாதம் தொடரலை.
 

N. Ganesan

unread,
May 15, 2014, 10:03:37 AM5/15/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Thursday, May 15, 2014 4:28:50 AM UTC-7, வேந்தன் அரசு wrote:

தனிப்பெயாராக இருந்தால் ஆத்திச்சூடி என்றுதான் வரணும். அது இரண்டாம் வேற்றுமை தொகை.  ஆத்தியைச்சூடி.


நீங்கள் ஒற்று வேண்டாம் என்பவர். இதற்கு மாத்திரம் எதற்கு? :)

பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா! 
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை 
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்-துறையுள் 
அத்தா!--- உனக்கு ஆள்ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 

பிறைசூடி - பெயர்ச்சொல். ஒற்று மிகாமல்தான் வருகிறது. பாருங்கள்.

நா. கணேசன்
 

Dev Raj

unread,
May 15, 2014, 1:25:03 PM5/15/14
to mint...@googlegroups.com
On Wednesday, 14 May 2014 23:53:01 UTC-7, தேமொழி wrote:
ஆராய்ச்சிக் கேள்வியே  மாற்றியமைக்கப்பட வேண்டும். 

 ... வரலாற்றில் முதன் முதலில் ஆத்தி சூடி / ஆத்தி சூழ அமர்ந்தவராக காட்டப்பட்டவர் தீர்த்தங்கரா? புத்தரா?  சிவனா?

என்று மாற்றியமைக்கப் பட்டருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  
 

ஆம், ஆத்தி சூடி எழுதப்பட்ட காலம் என்ன ?
இதுவே ஆராய்ச்சிக் கேள்வியாக மாற வேண்டும்.
கொன்றை வேந்தனே ஆத்தி சூடி என்பது
தெளிவாகிவிடும்


தேவ் 

Dev Raj

unread,
May 15, 2014, 1:47:54 PM5/15/14
to mint...@googlegroups.com
On Wednesday, 14 May 2014 23:53:01 UTC-7, தேமொழி wrote:
அடுத்து ஐந்து/ஏழு  தலை நாகம் சூடியவனே என்றால் மீண்டும் திருமாலா? தீர்த்தங்கரா என விவாதம் தொடங்குமா?  பாம்புகள் எண்ணப்படுமா?

அப்படியெல்லாம் தொடங்க வாய்ப்பில்லை, அம்மணி.
நீங்கள் திசை திருப்பத்தேவையில்லை.
சிலையில் பாம்பின் கீழ் இருப்பது யார் என்பதில்
யாரும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆத்தி மரம்
என்றாலும், ஆத்தி இலை என்றாலும் அரனாருக்குப்
பொருந்துகிறது. இவ்வளவு தூரம் முற்போக்காகச்
சிந்திக்கும் தாங்கள் தாதகியும், ஆத்தியும் தாவர
இயலார் கூற்றுப்படி ஒரே தாவரமா என்பதை
ஆய்வு செய்து கூறியிருக்கலாம்

தேவ்


செல்வன்

unread,
May 15, 2014, 1:48:54 PM5/15/14
to vallamai, mintamil

2014-05-15 1:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன்.  பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.

யார் முதலில்...யார் முதலில் ...யார் முதலில்...

பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அந்த பட்டம் உரிமையாகிவிட்டுப் போகட்டும்.  


ஆத்தி மரத்தடியில் உட்கார்ந்ததும் ஆத்தி மலரை தலையில் சூடியதும் இரண்டும் ஒன்றா?

ஒன்று என்றால் தென்னை மரத்தடியில் நின்றவர் எல்லாம் கள்ளுகுடித்தார் என தான் வைத்துகொள்ளவேண்டும் :-)


--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Dev Raj

unread,
May 15, 2014, 3:46:20 PM5/15/14
to mint...@googlegroups.com
On Thursday, 15 May 2014 01:24:13 UTC-7, இரா.பா wrote:
தெளிவான சிந்தனை.
முதலில் அவைதிகம். பிறப்பாடே வைதிகம். 
 

இது தெளிவான சிந்தனையாகத் தெரியவில்லை. 
ஏரணத்துக்கோ, இலக்கணத்துக்கோ, உலகியலுக்கோ பொருந்தாத சிந்தனை.
இலக்கணப்படி “அ” என்ற எதிர்மறை முன்னொட்டு (negative prefix)
முதலில் உருவாவதில்லை. இருப்பதான ஒன்றை மறுப்பதற்கே 
அம்முன்னொட்டு பயன்படுகிறது.  ஒரு செயல்பாட்டுக்கு வாய்ப்பிருக்கும்
நிலையில்தான் அது ’கூடாது’ என்றோ, ’முடியாது’ என்றோ
மறுப்பெழ முடியும்.

சிரமண சமயங்கள் மறுப்பதற்காக உருவானவை என்பதை
வரலாறு பதிவு செய்துள்ளது


தேவ்

Dev Raj

unread,
May 15, 2014, 5:33:46 PM5/15/14
to mint...@googlegroups.com
On Thursday, 15 May 2014 02:53:17 UTC-7, இரா.பா wrote:
கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.

1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y

அந்நூலிலிருந்து..



முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?
யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?
வழக்கம்போல் ஆராய்ச்சி ஐயாவின் சான்றுகள் மேலும் குழப்புகின்றன.
தாதகி / ஆத்தி என்று சொல்லிக்கொண்டிருந்தவர் தேவதாருவுக்குத்
தாவி விட்டார். அம்மரம் நெட்டுக்க வளர்ந்திருக்கும். குடைபோல்
கவியாது -

கூகுள் தேடல் கைகொடுக்கவில்லை போலும்


தேவ்

Banukumar Rajendran

unread,
May 16, 2014, 4:27:27 AM5/16/14
to மின்தமிழ்
2014-05-16 3:03 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 15 May 2014 02:53:17 UTC-7, இரா.பா wrote:
கணேசர் ஐயா, தனி மடலில் குறித்திருந்த மற்ற தரவுகள்.

1. http://books.google.co.in/books?id=dSq2AAAAIAAJ&redir_esc=y

அந்நூலிலிருந்து..



முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?
யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?

பார்ஸ்வநாதருக்கு முக்குடை கிடையாதா ஐயா. இதுவரை யான் அவருக்கு முக்குடை உண்டு என்று
நினைத்திருந்தேன்?

:-)

இரா.பானுகுமார்,
சென்னை





 
வழக்கம்போல் ஆராய்ச்சி ஐயாவின் சான்றுகள் மேலும் குழப்புகின்றன.
தாதகி / ஆத்தி என்று சொல்லிக்கொண்டிருந்தவர் தேவதாருவுக்குத்
தாவி விட்டார். அம்மரம் நெட்டுக்க வளர்ந்திருக்கும். குடைபோல்
கவியாது -

கூகுள் தேடல் கைகொடுக்கவில்லை போலும்


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
May 16, 2014, 4:30:56 AM5/16/14
to மின்தமிழ்
ஆம். மறுப்பதற்காக உருவானவைகள்தான் சிரமண மதங்கள். இந்திய
பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறான காட்டுமிராண்டித் தனமான,
ஒரு படையெடுப்பை எதிர்த்து, மறுத்து கேள்விக் கேட்டவைதான் சிரமண மதங்கள்.

சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.

இரா.பானுகுமார்,
சென்னை


 


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
May 16, 2014, 7:50:28 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Raji M, adi...@shaivam.org
பானுகுமார் அவர்களுக்கு,

முன்பு ஒருமுறை முக்குடை சமணருக்கு மட்டுமல்ல அய்யா 
 
பௌத்தத்திலும் உண்டு என சாஞ்சி ஸ் தூபி மேல் உள்ளதைக் காட்டி இருந்தேனே நினைவு உள்ள தா ??

மறந்திருந்தால் இப்போது பாருங்கள் இங்கே 


அதுவுமல்லாமல் 

பார்சுவனதருக்கு முக்குடை  கிடையாது என்பதும் பரந்த அறிவிலிருந்து 
வைக்கப்பட்டிருந்த கருத்து என முடியாது எனக் காண்க இணைப்பு படங்கள் 

 எனவே மரபு என்பதெல்லாம் (யதார்த்தமாகச் சொன்னால் சுத்த  xxxxxxxxxxx ) 
எங்கும் எதிலும் மாறுதல்கள் உண்டு எனவே இதை வைத்து இது என ஆகாது 

பானு குமார் தவறாகக் கொள்ள வேண்டாம் 

சமணத்தில் மட்டுமல்ல சைவம் வைணவம் இவற்றிலும் பல்வகை யாக மரபுகள் என்றாலும்
பெரும்பாலும் மீறப்பட்டே உள்ளதை கண்டிருக்கின்றேன் 

எனவே மரபு என்பது ஓரளவிற்கு கடைபிடிக்கவெண்டியது அவ்வளவே 

மொழியிலும்  ஒரு சொல்லை ஒரு பொ ருளுக்குதான் என பயன் கொளவதில்லையே அதுபோல் 

இலக்கியம்  கண்ட பின்தான் இலக்கணம்  >>>>>> தாங்கள் நன்றாக அறிவீர்கள்  

தேவார பாடல் பெற்றத் தலங்கள் 276 ல் இந்தியாவில் இல்லாத கயிலாயம் ஈழத்து கேதீ ச்சரம் , திரி கோண மலை தவிர
273 தலங்கள்   

அதான்று 

வைணவ திவ்ய தேசங்கள் 106 ல் (மனித உடலோடு பார்க்கக் கூடியது  திருப்பாற்கடல் வைகுந்தம் நீங்கலாக) 
102 தல ங்ககளும்

 இவை அல்லது 100 க்கும் மேல்   இந்தியா முழுதுமான கே இந்துக்கோயில்களில் வழிபடு செய்துள்ளேன் 

பிறகு கிடைத்த அறிவிலிருந்து தான் பேசுகிறேன் 

சிவன் கோயில் கோபுரம் 7 நிலை என்றால் மேலே உள்ள கலசங்கள் 7 என வேண்டும் என்பார்கள் வாய்ச்சொல்லில்
 ஆனால்  75 %  கோயில்களில் மீற ப்பற்றிருக்கும் கோ புரங்கள் ஒற்றைப்படை எண்ணி ல் நிலைகள் கூடாது என்றால்
இங்கு இப்படி உள்ளதே என்றால் முழிப்பார்கள்) 

கொ டி மரம் பலிபீடத்திற்கு முன்பா பின்பா  என உறுதியாக சொல்ல முடியாது 

இப்படி உள்ளதுதான் மரபென்பார்கள் ஆனால் அங்கு அப்படி உள்ளது என் எனக் கேட்டல் வேறு எதாவது
கதைகட்டி விடுவார்கள்  (நம் நா,,,  க  ர் அய்யா வைக்கும் குழப்பங்கள் போல )

சுவாமியின் அம்மையின் பெயரை மனம் வந்தவாறு அ ந்குள்ள அர்ச்சகர்கள் மாற்றி அல்லது திரித்து விடுவார்கள் 
எனையா  என்றால் இப்படி புத்தி குறைந்த நிலை என்றால் ஆணவ த்தினால்  கோபம் தான் வரும்

நான் உங்களுக்கு எழுதிய தாதகி என்பது ஓர் தேவ தாரு என்பதில் இவ்வகை குழப்ப நிலைதான் 
அவரவர்கள் தங்கள் மனதிற்கு வந்த பொரு ளை அதுதான் சரி என்று நினைத்துக்கொள் வது 75 %   

மற்றோர் எடுத்துக்காட்டு 
சென்னையில் அமைந்த கரை என்று ஓர் இடப்பெயர் அறிவீர்கள் அது அம்ஜி கரை  என்பதை  திருத்த நினைத்து 
மாற்றியும் விட்டார்கள்  ஆனால் கி வ ஜ எனும் ஓர் தமிழ் கற்றவர் கல்வெட்டுகளில் அம்சி கரை என்பதுதான் சரியான சொல் 
அம்ஜிக்கு வேலை செய்தான் என்றால் கூலியை  பணமாகக் கொடுக்காமல் உணவாகவோ அல்லது வேறு பொருள் வழியில்
பெற்றான் எனபது  என விளக்கினார் ( kind instead of cash )

 இதுபோல்தான் இந்த ஆத்திசூடி 

திருக்குறள் கடவுள் வாழ்த் தில் குறிக்கும் கடவுள்  யார் என விவாதிப்பது போல் சென்று கொண்டிருக்கின்றது என இப்போது உணர்கிறேன் 

வள்ளுவரும் என் இப்படி பல பொருள் கொள்ள எழுதினர் என்பதை அவர்தான் அறிவா ர் 

இந்த ஆத்திசூடியப்படிய அவ்வை யார் எந்தக்கலத்க்து ஔவை என்பதும் விவாதத்தில் நுழை யா லாம்  

ஆக அறிவென்பது மாறுதலுக்கு உடையது 

மெய்ஞான த்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் இதுவேதான் நிலை அய்யா?  

பௌதிகம் நான் 8 ம் வகுப்பு படித்த காலத்தில் (1953) என் ஆசியர் ஒளி  நேர்ககோ ட் டில் தான் செல்லும் எனும் என கோடுகள் போட்டு விளக்குவர் 
(corpuscular theory ) பிறகு நேர்கோடு மட்டுமல்ல அலைகளாகும் என (WAVE THEORY ) ஒன்று வந்தது அதன் பிறகு மற்றொன்று துகள் நிலை என்றும்  
( quantum theaory)  முளைத்தது அதன் பிறகும் ஒன்று some times wave some times quantum என 

எனவே அறிவு என்பது முடிவில்லாதது
 மேலும் ஒன்று 

அங்காங்கே அவரவர்கள் நின்ற நி லை எல்லாமே சரி என்று அவர்களுக்கு நன்றே உள்ள  அறிவினால் த்தான் முடிவு செய்துள்ளனர்
அவர்கள் கொண்டதிலும் தவறேதும் இல்லை சூழ்நிலை மாறும் பொது மாறிவிடுகின்றது 

தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி C மிகவும் சரியா அறிவுதான் 
ஆனால் இது காற்றின் அழுத்தம் அறை   நிலையில் உள்ளது என்பது சொல்லாமல் கொல்லப்பட்ட நிலை 
அதுவே presure cooker உள்  அதைவிட அதிகமாகும் 115 டிகிரி வரை 
மேலும் ஒன்று இது சுத்தமான உப்பில்லாத நீருக்குத்தான் 
பல்வேறு உப்புகள் கரை ந்திருந்தால் வேறு ஆகுஇம் என்பைதை உணரவேண்டும் 

நிற்க 
அளவையில் (logic) இரு கருத்துக்கள் (சான்று களுடன்) இருக்கும் நிலையில்  
மற்றதை மறுக்க வேடுமானால் மறு ப்பதற் குத்தான் சான்று காட்ட வேண்டும் 
அல்லது சான்று தவறு  எனக்காட்ட வேண்டும் 
வழக்காடுபவதல் மறு ப்பவன் தான் மறு ப்பதற் கான சான்று அது அப்படி அல்ல எனக் அதற்கான சான்றுகளுடன்  காட்டவேண்டும் 

மேலும் பேசுவோம் 
அன்புடன் 
நூ த லோ  சு 
மயிலை 



sanch2.jpg
sanchi1.jpg

N D Logasundaram

unread,
May 16, 2014, 7:55:40 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
முக்குடை உடைய பார்சுவநாதர் ப டங்களை  இணக்க மறந்தேன் இங்கு காண்க 

நான் கண்டதை வைத்துள்ளேன் அவர்கள் வைத்ததில் ல் தவறிருந்தால் மன்னிக்க 

நூ  த லோ சு 
மயிலை

Parshvanath at kunigal.JPG
Shri Kalikund Parshvanath Teerth.jpg
Sri_Manmohan_Parsvanath,_Santhu.JPG

N D Logasundaram

unread,
May 16, 2014, 8:11:04 AM5/16/14
to mintamil, வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Raji M, podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, adi...@shaivam.org
இந்த செய்தி செல்லும் இழை தொடர்புடையது ஆகா து எனினும் 
வியப்பு நிலையில் ஒன்றை காட்டநினை க்கின்றேன் 

குனிகல்   பார் சுவ நாதர் என 2 வதாக உள்ள படத்தில் நாதனார் அமர்ந்த பீடத்தின் அடியில் 2 யானைகள் முயன்று
இரு கோப்பைகளை இழுத்து செல்ல நினைப்பதைக் காண்க 

இதே படத்தை தான் ஆர்கிமிடிஸ் எனும் கிரேக்க அறிஞர் காற்றின் அழுத்த ஆற்றலை நிறுவ பெரிய இரு கோப்பைகளை 
இணைத்து உள்ளே இருக்கும் காற்றினைக் நீக்கி அதன் ஆற்றலை இரு யானைகளின் ஆற்றலை விட மிக்கது எனக்கட்டினார் 
ஏன மேற்கத்திய கட்டுரைகள் காட்டுவதை ப்[ பலர் பார்த்திருப்பெர்கள் என நினைக்கின்றேன் 

மேலும் இது பற்றி ஏதாவது சொல்ல நினைத்தால் வேறு இழையாகத் தொடரலாம் இங்கேயே விவாதிக்க வேண்டாம் 

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
May 16, 2014, 8:26:28 AM5/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
 இந்திய மொழிகளுக்கு எழுத்து, எழுதப்படும் கல்வெட்டுக்கள், சிற்பங்கள்,
ஓவியங்கள் இந்தியாவில் சிரமண சமயங்களே தோற்றுவித்தன.
அதனை திரு பானுகுமார் குறிப்பிடுகிறார்.

போதிசூடியாக புத்தரும், ஆத்திசூடியாக பார்சுவரும் இலக்கியங்களில்
காட்டப்படுவது அவைதிக சமயங்களில்தான் முதலில். பின்னர்
சில நூற்றாண்டுகள் சென்றபின்தான் ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி
இலக்கியங்களில் உருவாகிறார். இதையே கலைவரலாறும் காட்டுகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 16, 2014, 8:35:04 AM5/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Thursday, May 15, 2014 2:33:46 PM UTC-7, Dev Raj wrote:

முக்குடை [trilinear umbrella] பார்சுவநாதருக்குரியதா ?
யாரைப் பற்றிய விவாதம் இப்போது ?
 

சமண சமயங்களில் முக்குடை எல்லோருக்கும் உண்டு.
போதிசூடி, ஆத்திசூடி பார்சுவநாதர், பொதியில் அவலோகிதன் (பின்னால் 
சைவத்தில் தெக்கிணாமூர்த்தி ஆனவர்), ...  ஸ்தூபிகளின் மேல்
முக்குடை, 7 குடை, 9 குடை வைத்துக் காட்டுவதுண்டு.
சாஞ்சி, பர்குட் போன்ற ஸ்தூபிகளின் மேல் இருந்த மரக்குடைகள்
இன்றில்லை என கலைவரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.
(உ-ம்: ஆனந்தகுமார்சாமி, ...)

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 16, 2014, 8:49:43 AM5/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Thursday, May 15, 2014 10:25:03 AM UTC-7, Dev Raj wrote:
On Wednesday, 14 May 2014 23:53:01 UTC-7, தேமொழி wrote:
ஆராய்ச்சிக் கேள்வியே  மாற்றியமைக்கப்பட வேண்டும். 

 ... வரலாற்றில் முதன் முதலில் ஆத்தி சூடி / ஆத்தி சூழ அமர்ந்தவராக காட்டப்பட்டவர் தீர்த்தங்கரா? புத்தரா?  சிவனா?

என்று மாற்றியமைக்கப் பட்டருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  
 

சந்தேகமே இல்லை. ஆத்தி மர நிழலில் ஞானம் எய்தியவர் பார்சுவர் என்பது அவர் வரலாறு. பார்சுவர் புத்தருக்கு முன் வாழ்ந்தவர். அதனால் அவரை ஆத்தி(=தாதகி) மரம் சூழ்தர/சூடி காட்டுவது மரபு. சிவனுக்கு ஆத்தி திருமேனியில் உருவாவது மிகப் பிற்காலம் (உ-ம்: ஒட்டக்கூத்தர்).
 
ஆம், ஆத்தி சூடி எழுதப்பட்ட காலம் என்ன ?
இதுவே ஆராய்ச்சிக் கேள்வியாக மாற வேண்டும்.
கொன்றை வேந்தனே ஆத்தி சூடி என்பது
தெளிவாகிவிடும்



கொன்றைவேந்தன் (=சிவன்) எழுதப்பட்ட காலம் பிற்காலம். சைவசித்தாந்த காலம்.
விநாயகர் அகவல், மூதுரை, ... போன்றன எழுதப்பட்ட காலம்.
கொன்றைவேந்தன் ஔவைக்குரத்தியார் எழுதிய ஆத்திசூடியைப் பார்த்து copy வழிநூல்.
ஆத்திசூடி தோன்றிச் சில நூற்றாண்டுகள் (4-5 நூற்றாண்டுகள்) சென்றபின்
ஏற்பட்டது கொன்றைவேந்தன்.

ஆத்தி வனத்தில் ஆத்திமரங்கள் சூழ்தர (=சூடி) தவஞ்செய்து ஞானம் அடைந்த
பாகல்வண்ண தீர்த்தங்கரசாமி பற்றி கடவுள்வணக்கம் ஔவைக்குரத்தி எழுதிய
காலம் களப்பிரகாலம் எனக் கருதலாம். அப்போதுதான் சமணர்கள் அனைவர்க்கும்
கல்விதர ஆரம்பித்தனர். பள்ளி என்ற சொல் கல்விக்கூடம் என்று தமிழில்
ஏற்படும் அக் காலத்தில் தான் ஆத்திசூடி பரவலாகக் தமிழ் படுக்கும் இளம் குழந்தைகளுக்கு
சொல்லித்தரப்படும் முதல்நூல் என்று ஆகிற காலம் அது. சமண சமயங்களின் இலக்கியங்கள் 
சிலம்பு,  மணிமேகலை உருவாயின. கர்நாடகமும், தமிழ்நாடும் மிக்க உறவுகொண்டிருந்தன. 
கொங்குநாட்டில் சிந்தாமணி, பெருங்கதை போன்ற நூல்கள் தோன்றலாயின. 
சமணம் மேல்நிலையில் இருந்தது என்பதை அறிய தேவாரத்தில் சம்பந்தர், அப்பர்
வாக்குகளால் அறியலாம். 6-8 நூற்றாண்டுகளில் பள்ளிகளில் சமணர்கள்
கற்பிக்க ஆரம்பித்தது ஔவைக்குரத்தியாரின் ஆத்திசூடி. பிறைசூடி பெயர்ச்சொல்
போல, ஆத்திசூடி பெயர்ச்சொல். ஆத்திசூடி என்றால் தீர்த்தங்கரர் என்று பொருள்.
சில நூற்றாண்டுகள் சென்றபின் சைவ ஔவையார் கொன்றைவேந்தன் என்று
சிவனுக்கான பெயர்ச்சொல்லிலும் ஆத்திசூடிக்கு வழிநூல் செய்கிறார். கொன்றைவேந்தன்
ஔவை ஒட்டக்கூத்தர் காலம்.

நா. கணேசன்

 

தேவ் 

N. Ganesan

unread,
May 16, 2014, 8:52:15 AM5/16/14
to vall...@googlegroups.com, mintamil


On Friday, May 16, 2014 5:34:26 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-16 17:56 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
முதலில் அவைதிகம். பிறப்பாடே வைதிகம். 

​முதலில் அசைவம் பிற்பாடு சைவம் என்பதுபோல் தெரிகிறது

வேத சமயங்களுக்கு எதிர்ப்பாக அமையாமல் மாற்றாக அமைந்த திராவிட சமயங்கள் சமணமும் பெளத்தமும்

விலங்குகளைப் பலியிட்டு யாகம் வளர்த்தும் வழக்கம் இல்லாத தமிழர்களுக்குக் கொல்லாமையை வலியுறுத்திய சமயங்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றியிருக்கலாம்.  அதுபோன்றே கடவுள் மறுப்புக் கொள்கைகளும் பகுத்தறிவு வாதமும் தமிழ்நாட்டு மக்களை கவர்ந்திழுத்திருக்கக் கூடும்

சவடால்




ஆம் ஐயா. நன்றி.

நா. கணேசன்

 


N. Ganesan

unread,
May 16, 2014, 9:06:46 AM5/16/14
to vall...@googlegroups.com, mintamil


On Thursday, May 15, 2014 10:48:54 AM UTC-7, K Selvan wrote:

2014-05-15 1:53 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
எனக்கு முதன் முதலில் யார் ஆத்தி மரத்தடியில் போய் அமர்ந்ததாக காலக்கோட்டில் முதலில் காண்பிக்கப் படுகிறதோ அவரைத்தான் நான் ஒப்புக் கொள்வேன்.  பிறகு வந்த தகவலெல்லாம் காப்பி கேட் மக்கள் செய்தது.

யார் முதலில்...யார் முதலில் ...யார் முதலில்...

பிறகு யாருக்கு வேண்டுமானாலும் அந்த பட்டம் உரிமையாகிவிட்டுப் போகட்டும்.  


ஆத்தி மரத்தடியில் உட்கார்ந்ததும் ஆத்தி மலரை தலையில் சூடியதும் இரண்டும் ஒன்றா?

சூடுதல் என்றால் சூழுதல். வானம் சூடிய நிலம், மேகம் சூடிய மலை, தொய்யில் சூழ் இளமுலை
(= தொய்யில் சூடிய நகில்கள்) எல்லாம் சங்க இலக்கியம். இந்தச் சங்கப் பொருளில்
ஔவையார் பாகல்வண்ணரை (தீர்த்தங்கரரை) ஆத்திசூடியாய் ஏத்தித் தொழுதிருக்கிறார்.
ஔவைக்குரத்தி செய்த தீர்த்தங்கரவணக்கத்தை கோடிக்கணக்கான தமிழ்க்குழந்தைகள்
ஆண்டுதோறும் படித்துத் தங்கள் தமிழ்க்கல்வியையும், வாழ்க்கையையும் ஆரம்பிக்கின்றனர்.
ஸ்கூல் என்பதற்குப் பள்ளி என்ற சொல்லைத் தந்த சமணர்கள் தொடங்கிவைத்த தமிழ்க்கல்வி
இன்றும் “ஆத்திசூடி” படித்துத்தான் தொடங்குகிறது. பொதுவாக, 4 சமயத்தவர் என்று
பொருள் கொள்ளும் பாரதியின் ஆத்திசூடியிலும் (அப்போது சூடி என்பதை வினைச்சொல்லாகப்
பார்க்கிறோம்) சமண சமயங்களின் கடவுளர் என்றுகொள்ள வேண்டுமாயின் ஆத்திசூடி
பெயர்ச்சொல்லாகப் பார்க்கணும் என்று வேந்தர் ஐயாவுக்கு சொல்லியிருந்தேன். பிறைசூடி,
ஆத்திசூடி நூற்பெயர்கள் இரண்டுமே பெயர்ச்சொற்கள். கொன்றைவேந்தனும் பெயர்ச்சொல்லே.

கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? என்கிறாள் ஆண்டாள். இன்றைய நாற்றம் என்ற பொருள்
பொருந்தாது என அறிவீர்கள். நாறுமோ என்கையில் சங்கத்தமிழைச் சொல்கிறாள் ஆண்டாள்.
அதேபோல, ஆத்திசூடி எனும்போது சூடுதல் = சூழ்தருதல் என்னும் சங்கத் தமிழைத் தருகிறாள்
ஔவைக் குரத்தி தன் ஆத்திசூடி வணக்கத்திலே. சங்க இலக்கியம் இல்லாமல் ஆத்திசூடியின்
பொருள் விளங்காது. சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்தவள் ஔவைக் குரத்தி. அவள் காலத்தில்
உருவான “பள்ளி” என்ற சொல்லும், அவள் செய்த ஆத்திசூடியும் இன்றும் தமிழைச் சொல்லித்தருகிறது
- பரம்பரை பரம்பரையாய் 15 நூற்றாண்டுகளாய். அவளது
சமயத்தார் தான் தமிழுக்கு இலக்கணமும், எழுத்தும், குறளும் அளித்தோர். 
பாம்பே ஆசியாட்டிக் ஸொஸைட்டி மெடல் வாங்கியுள்ளாரே - ஐராவதம் மகாதேவன்
அவரது நூலில் ஔவைக்குரத்தியின் முன்னோர் தமிழ்க் கல்வியும், எழுத்தும் தொடங்கினமை பற்றி
விரிவாக எழுதியுள்ளார். படித்தருள்க.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 16, 2014, 9:20:04 AM5/16/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
தாதகி என்பது ஆத்தி என்று தாவரவியலார் விரிவாக ஆராய்ந்து பதிவும் செய்துள்ளார்கள். இதற்கு தமிழில்
ஆயிரக்கணக்கான சான்றுகள் இருக்கின்றன. அகராதிகளும், லெக்ஸிகன்களும் தாவரவியலார் செய்தவை.
ஆத்தி சூடி (=சூழ்தர) இருப்பவர் பார்சுவர். சமவரன் அனுப்பிய மழை மேகங்களைத் தடுக்க தரணேந்திரன்
அரவ்க்குடையாகி ஆத்திசூடி தவத்துக்கு உதவினான் என்பது ஆத்திசூடி வரலாறு தரும் செய்தி.

சிவனுக்கு ஆத்திசூடி என்பது பொருந்தவில்லை. தேவாரத்தில் ஒரு பாட்டிலும் ஆத்தி சிவனார் 
திருமேனியில் இல்லை.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 16, 2014, 9:39:49 AM5/16/14
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran
>ஆலமர் செல்வன் -  மூன்று இறைவர்களுக்கு பொருந்தும். 

>1. புத்த பெருமான்
> 2.அருகன்
> 3. சிவ பெருமான்.

திரு. பானுகுமார் அவர்களுக்கு,

தேமொழியும், சவடால் ஐயாவும் காட்டியிருக்கும் பொந்தில்
உள்ள புத்தர் சிலை அரசமரப் பொந்துகள். இதுபற்றி,
அரச மரப் பொந்துகளிலே தவஞ்செய்வோர் என்று தமிழிலக்கியம்
புத்தர்களை முன்பே சொல்லியுள்ளது.

”ஆலமர் செல்வன்” (சிறுபாணாற்றுப்படை), “ஆல்கெழு கடவுள்”
பொருத்தமானது இவர்களுக்கு
(1) மகரவிடங்கர் (வருணன்) > பின்னர், சிவனுக்கு (தெட்சிணாமூர்த்தி - பல்லவர் காலம்)
(2) ரிஷபநாதர் (ஆதிபகவன் ~ குறள் 1)
(3) போதிசத்வர் அவலோகிதன் (பௌத்தம்)

பௌத்தத்தில் புத்தர் போதிசூடி. எனவே,
ஆல்சூடி அவலோகிதர் - அவர்தான் சிவாமிசம் கொண்டவர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 16, 2014, 9:45:04 AM5/16/14
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran


On Friday, May 16, 2014 6:39:49 AM UTC-7, N. Ganesan wrote:
>ஆலமர் செல்வன் -  மூன்று இறைவர்களுக்கு பொருந்தும். 

>1. புத்த பெருமான்
> 2.அருகன்
> 3. சிவ பெருமான்.

திரு. பானுகுமார் அவர்களுக்கு,

தேமொழியும், சவடால் ஐயாவும் காட்டியிருக்கும் பொந்தில்
உள்ள புத்தர் சிலை அரசமரப் பொந்துகள். இதுபற்றி,
அரச மரப் பொந்துகளிலே தவஞ்செய்வோர் என்று தமிழிலக்கியம்
புத்தர்களை முன்பே சொல்லியுள்ளது.


ஆல்கெழு கடவுள் - புறநானூறு

N. Ganesan

unread,
May 17, 2014, 2:28:39 AM5/17/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com

On Wednesday, May 14, 2014 3:54:48 AM UTC-7, வேந்தன் அரசு wrote:



13 மே, 2014 11:45 பிற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:

2014-05-14 8:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

> ஆத்தி சூடி என்பது அருகனை குறிக்கும் பெயர் என்றால் ஆத்திச்சூடி  அல்லது ஆத்தி சூடியான் 

தேவையில்லை. பித்தா! பிறைசூடி! - நோக்குக.

பிறைசூடி என்றால், பிறையால் சூழப்பட்டவன் என்று பொருளன்று.  பிறையைச் சூடியவன் என்பதுதான் பொருள்.  ஆகவே, ஆத்தியால் சூழப்பட்டவனுக்கு, பிறையைச் சூடியவன் எடுத்துக்காட்டாக மாட்டான்.  



ஆடுவண்டு இமிரா அழல் அவிர்  தாமரை,
நீடு இரும்  பித்தை  பொலியச்  சூட்டி”

பொன் தாமரையை தன் குடுமியில் பாணன் சூடிக்கிறான். இங்கு சூழ்ந்து என்ற பொருள் இல்லை. எங்கும் இல்லை. அகராதியை திருத்த வேண்டும். 

அகராதி திருத்த வேண்டாம் ஐயா. சூடு இரண்டு விதமான வேர்களால் பிறக்கிறது:
(1) சூடு/சுடு : சூளை/சுள்- (2) சூடு :சூழ்- (சூழ்தருதல் - சூடுதல்/சூழுதல்).

கலித்தொகை - நெய்தற் கலி 125

கண்டவர் இல் என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,
வண் பரி நவின்ற வய மான் செல்வ! 5
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
அன்பு இலை என வந்து கழறுவல்; ஐய! கேள்;
மகிழ் செய் தேமொழித்
தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! 10
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ

”தொய்யில் சூழ் இளமுலை”  - தொய்யில் சூடிய இள நகில்கள்.

சூட்டிய - சூழ்ந்த என்ற பொருளிலும் சங்க காலப் பாடல்கள் உள்ளன.
ஔவை பாடும் அடிப்படையான் சூழுதல்/சூடுதல் பொருளும்
அகராதிகளிலும், பாடல்களிலும், தமிழிலும் இருக்கட்டும்.
எடுத்துவிட்டால் தமிழின் ஆழம் குன்றும்.

மேகலை அவர்கள் என் குறிப்புகளில் இருந்து கொடுத்திருந்த
சில காட்டுகளுக்கு மேலும் சில கொடுக்கிறேன் - இன்று மாலையில்.

சூழ்தல் - சூடுதல் இரண்டுக்குமான தொடர்பை வள்ளுவர் விளக்குகிறார்.
ஒரு குறளில் கூட சூழ்- என்னும் வினை (அ) பெயர்ச்சொல் சுற்றியிருத்தல் 
என்ற பொருளில் காணோம். தெலுங்கில் சூடு- “நினை, ஆராய்ச்சி செய்தல்” என்ற
பொருளிலேதான் எல்லாக் குறளிலும் சூழ்- என்ற தாதுவேர் வருகிறது. சூழ்ச்சி அதற்கான பெயர்ச்சொல்.
இப்போது சொல்லும் பொருளிலே சூழ்தல், சூழ்ச்சி குறளிலே காணோம். பெரி. சந்திரா
இதுபற்றி முன்பு எழுதினார். அப்ஸ்றேக்ட் ஆக எண்ணமெல்லாம் ஒன்றில்
கவிந்திருந்தால்/சூடியிருந்தால் சூழ்தல், சூழ்ச்சி என்ற சொற்கள் உள்ள இடங்களின்
பொருளைப் புரிந்துகொள்ளவியல்கிறது. அதேபோல், பருப்பொருள் உதாரணங்களாகப்
பார்த்தால், இருள் சூடிய நேரம் (=இருள் சூழ்ந்த நேரம்), மேகம் சூடிய மலை = மேகம் சூழ் மலை
(ஐங்குறுநூறு), வானம் சூடிய உலகு = வானம் சூழந்த உலகு (புறநானூறு), ....
இவற்றைப் பார்க்கிறபோது சுடு/சூடு ‘வெம்மை’ சுள்ளி/சூளை என்னும் ள் எழுத்துடனும்,
சூடு ‘நினைத்தல்’ - சூழ் என்னும் வினையின் ழ் எழுத்துடனும் தொடர்புபடுத்த முடியும்.
 சூழ்- > சூடு/சூட்டு ‘சூழ்தல், கவிதல்’, சுள்-/சூள்- சூடு ‘வெப்பு’ இரண்டும்
பொருள் அறவே மாற்படுகின்றன. சூழுதல்/சூடுதல் - முழுதுமாகக் குடைபோலக் கவிதல்
என்னும் சங்க காலப் பொருளிலே ஔவைக் குரத்தியார் அருகனைப் பாடினார். 
இப்படிப் பார்த்தால், சூளாமணி என்று கன்னடம் வழியாக தமிழுக்கு வந்த சொல்
சூழாமணி என்பது மூலத்ராவிடச் சொல் சூழாமணி/சூடாமணி எனலாம்.
சூளிகை என்றால் மேன்மாடம், இதுவும் சூழிகை/சூடிகை என்பதன் கன்னட (> தமிழ்)
வார்த்தையாகலாம்.

நா. கணேசன்




சூடுதல்/சூழுதல்:

(1) 
செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண் ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு சூட்டிய சூழ்குழற்கே.

கண்ணன் அடிகள் இரண்டுக்கும் அன்பினை மனத்தினால்
சூழ்ந்ததை/சூட்டியதைச் சொல்கிறார் ஆழ்வார்.

(2) புறநானூறு 99

அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
5 ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
10 சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.

நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் -
உலகம் முழுதும் தன் ஆட்சியைச் சூழ்ந்த/சூட்டிய
அதிகன் என்கிறார் சங்ககால அவ்வை.

(3)
“கலஞ்செய் கோவே! கலங்செய் கோவே!
இருள்தினிந் தன்ன குரூஉத்திறள் பருஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றுஞ் சூளை,
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவை கொல்?
நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை,
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந் தன்ன
சேண்விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமா வளவன் 
தேவர் உலகம் எய்தினன்; ஆதலின்,
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின், எனையதூஉம்
இருநிலம் திகிரியாப், பெருமலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?“

புறநானூறு 228

நிலவரை சூட்டிய நீள்நெடுந் தானை -
நில எல்லையிலே சூழ்ந்த/சூட்டிய மிகப்
பெரிய படை. 

(4) தொய்யில் சூழ் இளமுலை (கலித்தொகை) =
தொய்யில் சூட்டிய/சூழ்ந்த இளமுலை.

கோழி/கோடி (தெலுங்கு), சோழன்/சோட என்பதுபோல்
சூடு-/சூழு- பழந்தமிழில் இயங்குகிறது.

நா. கணேசன்

சூடல்:சூழல்

Dravidian Etym. Dictionary:

2721 Ta. cūṭu (cūṭi-) to wear, esp. on the head, bear, sustain; be invested as with a title, be crowned, spread, cover, become bent or warped, surround, envelopn. hair tuft, crest, comb; cūṭṭu (cūṭṭi-) to adorn as with garlands, crown, invest with honours, spread over (as army), extend one's swayn. investing, adorning as with crown, garland, crest, cock's comb, snake's head, felloe of wheel. Ma. cūṭuka to wear on the head, wear over the head as an umbrellacūṭal putting on the head, carrying an umbrella; cūṭikka to make to wear, crown; cūṭṭuka to put on the head, tie a bundle like a hairlock; cūṭṭu cock's comb, mark on the forehead of cattle. To. tu·ṭ front tuft of hair. Ka. sūḍu to put on the head as flowers, etc., receive, obtain. Koḍ. cu·ḍ (cu·ḍi) to stick (flower) in hair. Pa. cūnḍ- to tie hair in knot; cūṭa woman's hair tied in knot. Ga. (P.) sunḍ- to roll up and tie hair in bunch; (S.3sūṭe a type of men's hair style. / Cf. Skt. cūḍā- hair tuft, cock's comb; Turner, CDIAL, no. 4883. DED(S) 2247.

’சூடுதல்’ என்ற சொல்லுக்குச் சூழ்ந்து கவிந்திருத்தல் என்ற பொருள் இருப்பதைச் சென்னை தமிழ்ப் பேரகராதியும் உறுதிசெய்கின்றது.

Madras Tamil Lexicon:
சூடு¹-தல் cūṭu-
To surround, envelope; கவிதல்.

இதற்கான சான்றுகள் சில சங்க நூல்களிலிருந்தும் கீழே தரப்பட்டுள்ளன:

சான்று 1:

புறநானூறு 35

நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்…

உரை: நளியிரு முந்நீர் ஏணியாக – நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளியிடை வழங்கா – காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் – குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய;

உலகைச் சூழ்ந்த வானம் = வான் சூடிய மண்

சான்று 2:

வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் (பெரும்பாண். 409).

 இதற்கு நச்சினார்க்கினியரின் உரை:

409-10: புலவு கடல் உடுத்து வானம் சூடிய மலர்தலை உலகத்துள்ளும்-புலால் நாற்றத்தையுடைய கடல்சூழ்ந்த ஆகாயங்கவிந்த அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரில் விசேடித்தும்..

சான்று 3:

வான்கவிந்த வையகமெல்லாம்” (நாலடி.பொறை.10)

சான்று 4:

ஐங்குறுநூறு 209

அன்னாய் வாழிவேண் டன்னை நீமற்று
யான்அவர் மறத்தல் வேண்டுதி யாயின்
கொண்டல் அவரைப் பூவின் அன்ன
வெண்டலை மாமழை சூடித்
தோன்றல் அனாதுஅவர் மணிநெடுங் குன்றே.

பெரிய வெண்மேகம் சூழ்ந்த கருமலை.

செல்வன்

unread,
May 17, 2014, 3:13:55 AM5/17/14
to vallamai, mintamil

2014-05-17 1:28 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

உலகைச் சூழ்ந்த வானம் = வான் சூடிய மண்



வானம்
சூடிய மண்திணி  கிடக்கை – வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்

இப்படிதான் பொருள் விளக்கம் தரபட்டு உள்ளது. மண்ணை சூழந்த வானம் என இதில் பொருள் இல்லை. வானத்தை அணிந்த உலகம் என தான் பொருள் உள்ளது. அக்காலத்தில் உலகம் தட்டை என தான் கருதினார்கள். வானம் பூமியின் தலையில் இருப்பதால் வானத்தை சூடிய பூமி.


வெண்டலை மாமழை சூடித்
பெரிய வெண்மேகம் சூழ்ந்த கருமலை.

இல்லை. வெண்மேகம் கவிழ்ந்த குன்றம். குன்றின்மேல் மேகங்கள் படர்வது அக்குன்று மேகத்தை சூடியதற்கு ஒப்பானதாக காட்டபடுகிறது.

செல்வன்

unread,
May 17, 2014, 3:23:48 AM5/17/14
to vallamai, mintamil
2014-05-17 1:28 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின் -
உலகம் முழுதும் தன் ஆட்சியைச் சூழ்ந்த/சூட்டிய
அதிகன் என்கிறார் சங்ககால அவ்வை.

இதன் பொருள்

இவண் = இவ்விடம். 3. இருக்கை = குடியிருப்பு, ஊர்; ஆழி = சக்கரம், கட்டளை, ஆணை; சூட்டுதல் = நியமித்தல். 

தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, காலில் பொன்னாலான அழகிய கழல்களும், கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும், 

நீர்அக இருக்கை = கடலால் சூழப்பட்ட

ஆழி சூட்டிய = கட்டளை/நியமித்தல்
தொன்னிலை மரபின் = பழைய நிலைமை பொருந்திய மரபுடைய


இதுதான் அதன் பொருள்.

செல்வன்

unread,
May 17, 2014, 3:27:48 AM5/17/14
to vallamai, mintamil
ஆழி சூட்டிய  = சக்கரத்தை நடாத்திய


சூழவைத்த என பொருள் இல்லை. ஒருவரது ஆணை உலகை சுற்றிவரும் சாட்டிலைட் அல்ல.
It is loading more messages.
0 new messages