A case study of Retrofitting to match Sanskrit name
in modern Tamil.
'அல்' என்னும் எதிர்மறை விகுதி பெற்று, அஞ்சல் என்றால்
'அச்சப்படாதே' என்னும் பொருளில் பல இடங்களில்
தமிழ் இலக்கியத்தில் வரும்.
அஞ்சலன் என்றால் அஞ்சாதவன்/பயப்படாதவன், பயமின்றிப்
போரிடுவோன், எனவே பகைவர் என்ற பொருள் உண்டு.
அஞ்சலாள் என்றால் எதிரி (பெண்பால்) என்றாகிவிடும்.
"நின்வரவு அஞ்சலன் மாதோ" - புறம் 361.
'பற்றி, அஞ்சலன் பழியின், வெஞ்சினம்
முற்றி நின்ற, தன் முரண் வலிக் கையால்'
(கம்பன் - கிட்கிந்தா காண்டம்).
"பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர்"
(கம்பன்)
சம்பந்தர் பயமே இல்லாமல் அஞ்சலன் ஆகிச்
சமணரைக் கழுவேற்றிய பெருமையைத்
திருவிளையாடல் பாடுகிறது:
"அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற
வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம்."
அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள், நாண் இலள் என்ன நாணம் ஆமால்.
(கம்பன்)
ஆக, அஞ்சலள்/அஞ்சலாள் என்றால் அஞ்சாதவள்
என்று பொருள். இப்படி ஒரு பெயர் தேவாரத்தில்
தேவிக்கு இருக்குமா?? சற்று ஆய்வோம்.
இராவணன் கைலாச மலையை எடுக்கல் உற்றான். அப்போது
தேவி பார்வதி மிக அஞ்சி நடுங்கினாள்,
சிவபிரான் நக்குத் தன் கால் பெருவிரல் ஊன்றவே
இராவணன் அழுது தலையை வெட்டி யாழ் செய்து,
கை நரம்பு கோர்த்து வேதம் பாட, சந்திரகாசம்
என்னும் கருக்கு வாளும், முக்கோடி வாழ்நாளும்
அளித்தான். தேவி அஞ்சுதல், வெருவுதல்,
நடுக்குறல் என்று நூற்றுக்கணக்கான இடங்களில்
தேவாரம் பேசும். யானை உரித்தபோதும்,
கைலைப் பெருமலை ராவணனால் அசைந்தபோதும் தேவியை
அஞ்சுவதாகக் காட்டுதல் இந்தியக் கலைமரபு.
வழுவூரிலே உள்ள சோழர்காலப் படிமம் மிக அழகு.
கஜசம்ஹாரருக்குப் பக்கத்தில் உள்ள தேவி
மோகனாம்பாள் முருகனை எடுத்து அகல்வாள்.
சிறுகுழவி ஸ்கந்தனோ தந்தை வீரட்டத்தைப் பார்த்து
வியக்கும். (இந்தப் படம் யாராவது இணையத்தில் வெளியிடுங்கள்.
தொ. மு. பாஸ்கர தொண்டைமான் புத்தகத்தில்
இருக்கும், பின்னாளிலும் வெளியாகி இருக்கலாம்.)
இதேபோல் அம்பிகை குழந்தைச்சாமியொடு
புள்ளமங்கையில்:
http://maraboorjc.blogspot.com/2006/02/3_06.html
அம்மை தன் கணவனின் சாகசச் செயலுக்கு
அஞ்சி அகல்வது (கங்கைகொண்ட சோழபுரம் ... )
http://groups.google.com/group/minTamil/msg/f05401de7f5c2f58
அம்மா என்ன ஆகுமோ என அஞ்சுவாள்,
ஆனால் குழந்தை சிரிக்கிறது:
http://mintamil.googlegroups.com/attach/f05401de7f5c2f58/yaanaiuri2.jpg?view=1&part=9
மாயவரம் ~ மயிலாடுதுறையாய்
இருந்ததை மாயூரம் பின்னாளில் ஆக்கினர்.
'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?',
மக்கள் அதை மாயவரம் என்றழைப்பர்.
தேவாரப் பதிப்புகள் சுவடிகளில் மயிலாடுதுறை
அம்பாளின் பெயர் "அஞ்சொலாள்" என்றிருக்கும்.
பழைய தேவாரப் புத்தகங்கள் பலவற்றில்
பார்த்தபின் எழுதுகிறேன்.
அப்பர் தேவாரம்:
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்
மஞ்சன் மா மயிலாடுதுறை உறை
அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே.
தேவியைப் பற்றி வரும் இடங்களில்
தேவாரத்தில் அவள் உடற்கூறு, வாகு,
ஐம்பொறிகள், ... பற்றியதாகவே
இருக்கும். எத்தனையோ தேவி வர்ணனைகள்
உண்டு தேவாரத்தில். ஆனால் அவள்
அஞ்சல் கொடுப்பதாக வராது.
தேவாரம் சிவபெருமான் அஞ்சல் கொடுப்பதாகத்
தான் பாராட்டும் (உ-ம்):
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_079.htm
அண்மையில் புதுச்சேரி பிரெஞ்சு இந்தாலஜி
நிறுவனம் ஸ்ரீ. தி. வே. கோபாலையரைக்
கொண்டு பதிப்பித்ததில் "அஞ்சொலாள்"
என்னும் பழம்பெயர் "அஞ்சலாள்" என்று
தேவாரத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்தில்
சொல்லும் அபயாம்பிகா (முத்துஸ்வாமி
தீக்ஷிதர் கிருதி) என்ற பெயருக்கு
ஏற்ப தமிழின் பழைய மரபைத் திருத்தும்
முயற்சி ஆகும். இதனை ஆங்கிலத்தில்
"retrofitting and changing old name
to suit/explain the modern usage"
என்பார்கள். இன்னும் சொல்வதானால்,
20-ஆம் நூற்றாண்டின் மத்தியில்
அச்சு தமிழ்நாட்டில் தழைத்தது.
வெகுஜனப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு பக்திப் பத்திரிகை
என்று காசுபார்த்தார்கள். அப்போது
ஆதி சங்கரர் அங்கே போனார், இங்கே
போனார் என்று ஜனரஞ்சகமாக ஒரு
சான்றும் இல்லாமல் பல கோயில்களைப்
பற்றி எழுதினார்கள். அதுபோலத்தான்
இந்த retrofitting எல்லாம்.
மயிலாடுதுறை வள்ளலார்-அஞ்சொலாள்
திருக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குச்
சொந்தமான திருத்தலம் ஆகும்.
தருமை ஆதீனகருத்தர் ஸ்ரீலஸ்ரீ
அப்பர் தேவாரம் சில:
----------
51 வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
[...]
*அஞ்சொலாள்* பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 6.5.8
--------
*அஞ்சொலாள்* காண நின்று
அழகநீ யாடு மாறே. 4.23.9
---------
மயிலாடுதுறை வள்ளலார்-அஞ்சொலாள்
திருக்கோயில் தருமபுர ஆதீனத்திற்குச்
சொந்தமான திருத்தலம் ஆகும்.
தருமை ஆதீனகருத்தர் அவர்கள்
தெளிவாகத் தேவாரப் பதிப்பில் இதைத் தெரிவித்துள்ளார்கள்
என்பதைக் கண்டேன், மகிழ்ந்தேன்.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26 ஆவது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
வழங்கியருளிய
ஆசியுரை
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa052.htm
"அஞ்சொலாள்:
இத்தலக் குறுந்தொகை நான்காம் பாடலில் கொடிய
கோபமுடைய காலன் நம்மிடம் வரமாட்டான். அஞ்சத்தக்க
இறப்பும் பிறப்பும் அறுக்கலாம், எப்பொழுது? அஞ்சொலாள்
உமை பங்கன் அருளி ல் காலனைக் கடக்கலாம்,
பிறப்பினையும் இறப்பினையும் அறுக்கலாம் என்று
அருளியுள்ளார். அஞ்சொலாள்-அழகிய இனிய சொல்லை
உடையவள் அம்மை. இதனைப் பின்னர் வந்தோர்
அஞ்சலாள் எனக்கொண்டு இவ்வூர் அம்மை பெயரை
"அபயாம்பிகை" என மொழி பெயர்த்தனர். எப்பெயரும்
இறைவிக்கு ஏற்றதே. எனினும் உண்மை காண்டல்
உலகினுக்கு இனியதே என்க."
http://www.thevaaram.org/thirumurai_1/ani/aa062.htm
"தொழுதகையோடேயே, சற்றும் தாமதியாமல் துன்பத்தைத்
துடைப்பான் பரமன் என்று அருள்கிறார். அதே பாடலில்,
"அஞ் சொலாள்பாகம் அமர்ந்தாய் போற்றி" (தி.6 ப.5 பா.8)
என்கிறார். ஐந்தாம் திருமுறையில் மயிலாடுதுறைப் பதிகத்தில்,
"அஞ்சொலாள் உமைபங்கன் அருளிலே" (தி.5 ப.39 பா.4) என்ற
பாடலில் அஞ் சொலாள் என்ற சொற்றொடர் இங்கும்
வந்துள்ளமையால் அஞ்சலாள் என்பது சரியல்ல. அஞ்சொலாள்
என்பதே சரியான பாடம் என்பது தெளிவாகிறது."
நல்லதோர் ஆய்வுக் கட்டுரை இது சம்பந்தமாக
எழுதி வரலாறு.காம் தளத்துக்கு விரைவில்
அனுப்புகிறேன். வள்ளலார் திருக்கோயில்
அஞ்சொலாள் அம்பிகை கருவறை முன்பாக
"அஞ்சொல் நாயகி" (அ) "அஞ்சொலாள்"
என்று பெயர்ப்பலகை எழுதி நாட்ட
சிவனடியார்களையும், தமிழன்பர்களையும்
வேண்டுவன். மாயவரம் மயிலாடுதுறையாக
மீண்டும் ஆகிவிட்டது. "அஞ்சொலாள்" என்னும்
பெயரை உலகம் அறியச் செய்வீராக.
அன்புடன்,
நா. கணேசன்
என் பழைய மடல்கள்:
http://www.treasurehouseofagathiyar.net/15200/15263.htm
(2002):
இiதேபோல, தமிழ் நாட்டில் மாயவரத்தில் நடந்திருக்கிறது.
ஹிந்து சமய உயர்நிலைமையில் அம்பாள் வழிபாடு
ஆக நாள் ஆகியிருக்கிறது. தேவாரத்தில் அம்பாளை
வருணிக்கும் பகுதிகள் யாவும் அவளது அங்க அவயவ
அழகை, அவள் பேச்சை, குழலை, விழியை, கையை,
வருணிப்பதாம். மயிலாடுதுறைத் தேவாரத்தில்
பழைய பதிப்பிலெல்லாம் "அஞ்சொலாள்" என்றே
உள்ளது. அதை மதுரவாசுகி/வசனாம்பா/'பாஷிணி
என்று மொழிபெயர்க்க வேணும். அஞ்சொலாள்
என்பதை அஞ்சலாள் ஆக்கி பின்னர் அபயாம்பா
பண்ணியிருக்கின்றனர்!!! ஆனால், வேறோர் அம்பாள்
பேருக்கு நேர்ந்ததுக்கு இது பரவாயில்லை:
மறைக்காடு (இதன் பழையபெயர் மரைக்காடு = மான்வனம்)
(வேதாரண்யம்) அம்பாள் யாழைப் பழித்த மொழியாள்
வீணாவாத விதூஷணி. யாழைப்பழித்தாள் வாழைபழத்தம்மன்
ஆகி வாழைப்பழம் படையல்!!! (தொ. மு. பா, ரா. பி. சே நூல்கள்).
(1999):
http://www.tamil.net/list/1999-01/msg00662.html
http://www.treasurehouseofagathiyar.net/36400/36487.htm
திருமுருகாற்றுப்படையிலும் அஞ்சல் எனும் சொல் ஆள்ப்பட்டுள்ளது.
ஆறாவது படையில். அழகர் கோவிலைப் பற்றிப் பாடுகையில்:
"மணங்கமழ் தெய்வத்து இள்நலம் காட்டி,
அஞ்சல் ஓம்பும்தி அறிவல் நின் வரவென. . " என நக்கீரர் கூறுகிறார்.
|
yes, Harikrishnan gave this earlier.
ng
மயிலாடுதுறைத் தேவாரத்தில் பழைய பதிப்பிலெல்லாம் "அஞ்சொலாள்"
என்றே உள்ளது. அதை மதுரவாசுகி/வசனாம்பா/'பாஷிணி என்று
மொழிபெயர்க்க வேணும். அஞ்சொலாள் என்பதை அஞ்சலாள் ஆக்கி பின்னர்
அபயாம்பா பண்ணியிருக்கின்றனர்!!! ஆனால், வேறோர் அம்பாள் பேருக்கு
நேர்ந்ததுக்கு இது பரவாயில்லை: மறைக்காடு (இதன் பழையபெயர் மரைக்காடு =
மான்வனம்) (வேதாரண்யம்)
அம்பாள் யாழைப் பழித்த மொழியாள் வீணாவாத விதூஷணி.
யாழைப்பழித்தாள் வாழைபழத்தம்மன் ஆகி வாழைப்பழம் படையல்!!! (தொ. மு. பா,
ரா. பி. சே நூல்கள்). //
************************************************************************************
மிக அரிய தகவல்கள் ! யாழைப் பழித்த மொழி வாழப்பழமாகியதற்கு
வருந்துவதா ? நகைப்பதா ?
மதுர வாசகி, மதுர பாஷிணி எனும் சொற்கள் ‘இன்சொலாள்’
எனும் பொருளையும் தருகின்றன.
நெல்லைப் பகுதியில் ‘கனிவாய் மொழி’ என்றும் பெயரிடுவர்.
வடமொழியில் ‘ மதுரவாணி’ .
திருக்குற்றாலத்தில் அம்மை ‘குழல் வாய்மொழி’ என்று அழைக்கப் படுகிறாள்;
வடமொழியில் ‘வேணு வாக்வாதினி’
தேவ்
what is the Sanskrit for aJsolAL, "the one with beautiful speech"?
Priyamvada - Sundaram - ???
Thanks,
N. Ganesan
2008/12/19 devoo <rde...@gmail.com>:
am + collaaL = azhakiya colli.
Sanskrit word please? anyone?
thanks,
ng
யாழினுமென்மொழியாள் என்றும் ஒரு தேவி உண்டு. மஞ்சுளபாஷிணி
|
மஹாபாரதத்து சாருவாக் நினைவிற்கு வருகின்ற பெயர்!
நரசய்யா |
From: naa.g...@gmail.com <naa.g...@gmail.com> |
an additional information is required here,
for the sake of clarity and precision.
It is true that on p.150 of the 1985 volume,
which is the second of a three volume edition of தேவாரம்
by the late தி. வே. கோபாலையர் (1926-2007)
the verse stands as:
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்;
அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்---
மஞ்சன், மா மயிலாடுதுறை உறை
அஞ்சலாள் உமைபங்கன், அருளிலே.
However, you should also say that,
as explained in the 1984 volume,
this edition aims at being a "critical edition",
although, as explained on p. lxvii, it can only be "pre-critical".
This means that the 3-vol. edition
contains readings (= Editor's choice)
and variant readings (= Others' choices)
The edition is based on the comparison of a great number of published books
and a great number of palm-leaf manuscripts.
To that must be added what may have come through listening
to ootuvaar's performances.
You can find the list of the 54 manuscripts which have been consulted on
pages lxix & lxx,
the list of the 8 printed தலமுறை editions which have been consulted on
page lxxi
the list of the 15 printed பண்முறை editions which have been consulted on
page lxxii
Regarding printed edition, as explained by Professeur François Gros, in
an essay contained in volume 1:
<BEGIN QUOTE>
The first complete edition of the /Teevaaram/ was made between 1864 and
1866 by a pioneer of the Tamil edition,
Capaapati Mutaliyaar of Kaan~ci, with the financial assistance of
Cupparaaya N~aan_iyaar.
The text of Campantar (1864) and that of Cuntarar were provided by the
math at Tiruvaavat.uturai
and that of Appar (1866) by a manuscript from the math at Dharmapuram,
supposed to be copied
from the complete version of the /Teevaaram/ engraved on copper at the
behest of a prince
called Manavir_koon_-Kalin;kar-Koon_ under Kuloottun;ka I (cf.
/Peruntokai/ N° 1088),
the plates having been preserved at Citamparam and then at Tiruvaaruur
where the one of Appar would have been copied on palm leaves for the
math at Dharmapuram.
<END QUOTE>
Coming now to the point which you discuss,
the information about the அஞ்சொலாள் reading
has not been suppressed by தி. வே. கோபாலையர் ,
but it seems he considered it as a "variant reading" and
it is contained on page 490 of the 3rd volume of the /Teevaaram/ edition,
which appeared in 1991.
It is contained in a section called "பாடபேதங்கள்"
which occupies pages 427 to 536.
You are right to point out
that the reading அஞ்சொலாள் seems to stand
in all the old editions
and that it is not clear why he chose அஞ்சலாள்
as a reading.(unfortunately we cannot ask him now).
You can of course think that if you had been the editor,
you would have made a different editiorial choice,
but it is wrong to say that he suppressed the information.
He was a scholar of high standards
and his death is very much regretted
by all those who have had the opportunity to study with him.
The reading was not invented by him
because in a 1980 manuscript English translation
of Teevaram, the late V.M. Subrahmanya Ayyar (1905-1981)
used the same reading.
Discussions about variant readings are an important part
of any serious discussion of historical texts,
and the present discussion is certainly an interesting discussion.
As a continuation of this thread,
and given the importance of the /Teevaaram/
I would suggest examining
the other variant readings contained in the 110 pages
of the "பாடபேதங்கள்" section.
Best wishes to all
-- Jean-Luc Chevillard (CNRS, Paris)
P.S. Given the fact that நா. கணேசன்,
is a frequent poster to the CTamil list
<http://www.services.cnrs.fr/wws/info/ctamil>
and that very recently we have had some exchange of information
regarding "எனல்" and "அஞ்சல்",
I take the liberty of exceptionally cross-posting
to the CTamil list
this my comment
on one of his post to the MinTamil list,
namely
<http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/e520a31ca3d95bf>
P.S. details concerning the /Teevaaram/ edition which we have been
discussing
ar found at:
<http://www.ifpindia.org/-Publications-.html>
am + collaaL = azhakiya colli.
Sanskrit word please? anyone?
அஞ்சொலாள் – சாருபாஷிணீ, சாருவாணீ
வடமொழி இலக்கியங்களில் காணப்படும் சொல்தான்
தேவ்
தேவியைப் பற்றி வரும் இடங்களில்
தேவாரத்தில் அவள் உடற்கூறு, வாகு,
ஐம்பொறிகள், ... பற்றியதாகவே
இருக்கும். எத்தனையோ தேவி வர்ணனைகள்
உண்டு தேவாரத்தில். ஆனால் அவள்
அஞ்சல் கொடுப்பதாக வராது.
தேவாரம் சிவபெருமான் அஞ்சல் கொடுப்பதாகத்
தான் பாராட்டும். //
*************************************************************************
சமய குரவர்கள் அப்பனுக்கே முதன்மை தருவர்.
இதில் கருத்து வேற்றுமை இல்லை.
சைவமும் சிவபிரானை மையப்படுத்தும் நெறிதான்.
திருமூலர் வாலை வழிபாட்டைக் கூறுகிறார்.
பிற்காலத்தின் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில்
அம்மை முதன்மை பெறுகிறாள்.
மதுரை, தென்காசி, நெல்லை ஆலயங்களில்
அம்மைக்கே முதன்மை. சொத்துக்களும் அம்மையின் பெயரில்தான்.
அம்மை கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஆலயங்களில்
அவளுக்கே முதன்மை என்று வாரியார் சுவாமிகளும்
கூறுவார்.
சாக்த வழிபாடுகள் மிகுதியானதால் அன்னை அஞ்சலாள் ஆகியிருக்கலாம்.
இல்லங்களிலும் தாய்தான் குழந்தைகளுக்குச் சலுகை தருகிறாள்.
தேவ்
அஞ்சொலாள் = அஞ்சு + சொல்லாள்அச்சம் சொல்லாத பெண் என்று கூட பொருள் கொள்ளலாமே!
நன்றி!
நா. கணேசன்
I believe two questions have to be distinguished
1. what is the name of the goddess, according to the people who reside
in that temple?
2. what is the received wording of the Teevaaram hymns we have been
discussing?
The answer to question 1 may of course vary in the course of time,
and one can even imagine that your efforts might result in the local
name of the goddess being changed.
We have no reason to expect
that there cannot exist a contradiction
between the answer to question 1
and the answer to question 2.
I find in a book printed in 1958,
which is the நாங்கம் பதிப்பு
of the சிவஸ்தல மஞ்சரி
the following information on pages 295 .
concerning the names of the god and of the goddess.
மாயூரநாதேசுரர் (maayuuranaateecurar)
அபயாம்பிகை (apayaampikai)
And on page 296,
the verse we have been discussing
(namely Teevaaram 5-39__(4)
appears in the following form
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பு மறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறை யுறை
அஞ்ச லாளுமை பங்க னருளிலே.
[reading "aJcalaaL"]
You will see that, apart from the sandhi splitting,
this 1958 version is identical with the one chosen by T.V. Gopal Iyer in
1985
whereas, in the அடங்கன்முறை edition
which I am having (my copy was printed in 1998)
the text reads:
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்க னருளிலே.
[reading "aJcolaaL"]
If anybody is having the first edition of civa stala mañcari,
I would be curious to know what reading it has.
It is also said in the civa stala mañcari
that Miinaaks.icuntaram Pil.l.ai composed a stalapuraan.am
and that it was printed.
It might be interesting to see whether reading the stalapuraan.am
might bring some answers to the questions we have been debating.
It is quite possible that Miinaaks.icuntaram Pil.l.ai,
who was an influential poet
plaid a role in this story.
If the original reading was "aJcolaaL",
somebody at some point in time
may have thought it would be better
not to have a contradiction between
the local goddess name
and this hymn attached to the temple.
Only the reading of old documents
can tell us what really happened
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
On Dec 20, 5:51 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> naa.gane...@gmail.com a écrit :> [....]
>
> > What I have given is the Saiva tradition in Tamil Nadu,
> > and the revered Saiva Siddhantha Adheenams statement
> > on the goddess name. To me, it seems clear traditional Saivaites
> > consider அஞ்சொலாள் as the name of the goddess
> > at Mayiladuthurai and hence wrote the mail where Tamils
> > do participate with interest.
>
> Dear NG,
>
> I believe two questions have to be distinguished
>
> 1. what is the name of the goddess, according to the people who reside
> in that temple?
>
> 2. what is the received wording of the Teevaaram hymns we have been
> discussing?
>
> The answer to question 1 may of course vary in the course of time,
> and one can even imagine that your efforts might result in the local
> name of the goddess being changed.
>
அன்பின் ஜீன் - லுச்,
கொஞ்சம் புரியும்படியாச் சொல்லுங்க.
தமிழில் எழுதினால் உங்க ஆராய்ச்சி்யை நல்லா மக்கள்
புரிஞ்சிக்குவாங்க.
I apologize for not being able to answer in Tamil.
I hope however to be able to make my point clear.
What I am saying is that the name of the god and of the goddess in a temple
might happen to change at some points in time,
Since you don't seem to trust the information
contained in the 1958 edition of the சிவஸ்தல மஞ்சரி ,
let me quote from another book, published in 2001
by the International Insitute of Tamil Studies (சென்னை 600 113).
The book is:
/An introduction to Religion an Philosophy -- Teevaaram and
Tivviyappirapantam/
by Dr R. Vijayalakshmy.
On page 367, one finds the data concerning Tirumayilaat.utur_ai.
The name of the *Svaami* is said to be:
Mayuuranaatar (Skt. Mayuuranaatha),
Pirammalin;kam,
S'riivataan_iicuvarar,
Kauri Taan.t.aveecuvarar (Skt. Gaurii taan.d.aves'vara)
The name of the *Ampaal.* is said to be:
Apayappirataampikai (Skt. Abhaya pradaambikaa)
Apayaampikai (Skt. Abhayaambikaa)
Añcalnaayaki
Añcalai
Dr R. Vijayalakshmy does not mention அஞ்சொலாள் as the name of the goddess
in Mayiladuthurai and neither does the சிவஸ்தல மஞ்சரி ,,
although this may have been the case at another period.
What we need is more historical data
Does anyone have access to the மாயூரபுராணம்
composed by U.V.S.'s teacher, the great poet
மீனாட்சிசுந்தரம் பிள்ளை
during the 19th century?
Best wishes
-- Jean-Luc Chevillard
(spelt ழான் லூய்க் செவ்வியார் by my friends in Pondicherry)
naa.g...@gmail.com a écrit :
On Dec 20, 5:51 am, Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
wrote:
> If the original reading was "aJcolaaL",
> somebody at some point in time
> may have thought it would be better
> not to have a contradiction between
> the local goddess name
> and this hymn attached to the temple.
>
மயிலாடுதுறை அம்பாளின் பெயர் அஞ்சொலாள் என்று தெளிவாகத் தேவாரத்தில்
உள்ளது. வ
அதைத் தவறாக அபயாம்பாள் என்று வடமொழியில் பெயர்த்துள்ளனர்.
அஞ்சலாள் (உங்கள் நிறுவனப் பணியாளர்கள் பதிப்பு) என்பதுவும் பொருத்தம்
100% அல்ல,
தமிழில் படித்துப் பார்த்தால், அஞ்சலள்/ன்/ர் என்பது அஞ்சாதவள், வீறாயி
என்பதற்குப்
பொருந்துமே தவிர 'அஞ்சல் என்று அபயம் கொடுப்பவள்' என்று வராது.
அபயாம்பா மேன்மையைக் கொண்டு அஞ்சொலாள் அஞ்சலாளாகப்
பதிப்பிக்கப் படுகிறது. அபயாம்பாளுக்குப் பொருந்த அஞ்சொலாள் அஞ்சலாள்
ஆக்கப்படுகிறது.
இதை புதிய மாற்றங்களை பலம்வாய்ந்தோர் 'என்ஃபோர்ஸ்' பண்ணித்
பண்டைத் தமிழ் மரபுகளுக்கு இன்னல் தரலாம். *தமிழில்* ஆராய்ச்சி முடிவுகளை
இன்னும் பலர் (தமிழரும், அல்லாதாரும்) எழுத வேண்டும்.
தேவநாகரி எழுத்துக்கு ஓர் ஒப்புமை சொல்லலாம். முதலில்
தன் மொழியாயினும், ஸம்ஸ்கிருதம் ஆயினும் அவரவர்
மாநில எழுத்துக்களில் (தமிழ்நாட்டில் கிரந்தம், பக்கத்தில் தெலுங்கு,
கன்னடம், மலையாளம், ...)
என்று பயன்படுத்தினர். ஆனால் தென்னாடு போற்றிய
சுவடிகளைக் கூட தேவநாகரி எழுத்தில் மாற்றிப் பதிப்பது
மேலை நாட்டு ஆராய்ச்சியாளர் மரபு. மேலை நாட்டினருக்கு
அனேகமாகத் தெரிந்தது ரோமன் எழுத்து ஒன்றே.
வரிப்பணத்தில் இயங்கும் இந்தாலஜி ஆசிரியன்மார் எத்தனை
எழுத்தைப் படிப்பாங்க. எனவே எல்லாவற்றையும்
தேவநாகரிக்கு மாற்றுகின்றனர். இதனால் பிற இந்திய
மொழி எழுத்துக்களுக்கு இன்னல் விளைகிறது,
பிரெஞ்சு நிறுவனம் சுவடிகளைத் தேடி மேலைநாட்டு
ஆராய்ச்சிக்காக தேவநாகரி எழுத்தில் பல பத்தாண்டுகளாக
அச்சுப் போட்டு வருகிறது. அவர்கள் தேவநாகரி
எழுத்தில் அச்சான புத்தகங்களை வலைத் தளத்தில்
யூனிக்கோடில் (சில லட்சம் ரூ. டைப் அடிக்கக்
கொடுத்தால் எளிதில் நடக்கும்) வைத்தால்,
எளிதில் கிரந்த எழுத்திலோ, தமிழ் எழுத்திலோ
மாற்றித் தமிழர் படித்துக்கொள்ள வசதியாக இருக்கும்.
ஒரு விண்ணப்பம் என் இழைத் தலைப்புகளை மாற்றல் வேண்டா.
நீங்கள் ஓர் இழை தொடங்கினால் மாற்றவும்.
தமிழில் படித்துப் பார்த்தால், அஞ்சலள்/ன்/ர் என்பது அஞ்சாதவள், வீறாயி
என்பதற்குப்
பொருந்துமே தவிர 'அஞ்சல் என்று அபயம் கொடுப்பவள்' என்று வராது.
அபயாம்பா மேன்மையைக் கொண்டு அஞ்சொலாள் அஞ்சலாளாகப்
பதிப்பிக்கப் படுகிறது. அபயாம்பாளுக்குப் பொருந்த அஞ்சொலாள் அஞ்சலாள்
ஆக்கப்படுகிறது.
ஆம். குறிப்பிட்டுள்ளேன் ஏற்கெனவே. வீரத்தோடு வந்து போர்புரியும் எதிரி.
அஞ்சலை என்ற தமிழ்ப்பெயர் உண்டு. கம்பன் பாவிக்கிறான்.
நிறையப் பெண்களுக்கு வைக்க வேண்டும்.
அஞ்சலை = அஞ்சலாள் (அஞசாதவள்) = வீறாயி என்று பொருள்.
அபயாம்பிகை என்னும் பிழையான வடசொல்லுக்கு ஏற்ப
சிலர் அஞ்சலாள் என்று மாற்ற முயன்றாலும், பதித்தாலும்
தேவார மரபுக்கு அதன் ஒவ்வாமையை என் பழைய மடல்களில்
குறித்துள்ளேன்.
அன்புடன்,
நா. கணேசன்
"கொடியேனையஞ்ச லென்ற கோலக்கை"
this is found on line 8, page 51, inside the 1938 book
written by உ. வே. சாமிநாதையர் about his teacher:
"ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்"
(this is part of the description of "அம்பிகையின் திருக்கரம்" )
Best wishes
-- Jean-Luc Chevillard (Paris)
N. Ganesan a écrit :
திருமுருகாற்றுப்படையில்
"அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின்வரவென. . " என்று வருவதில் அபயம் என்ற பொருள் தான் வருகிறது
நரசய்யா . |
From: naa.g...@gmail.com <naa.g...@gmail.com> |
On Dec 20, 1:13 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> திருமுருகாற்றுப்படையில்
> "அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின்வரவென. . " என்று வருவதில் அபயம் என்ற பொருள் தான் வருகிறது
>
சம்பந்தரின் ஆரூர்ப் பதிகம் பாருங்கள்:
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru02_079.htm
நா. கணேசன்
> நரசய்யா .
>
> --- On Sat, 12/20/08, naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com> wrote:
On Dec 20, 2:23 am, devoo <rde...@gmail.com> wrote:
அன்பார் தேவராஜன்,
மிக அழகான சொல். சாரு மூலத்தைக் கொடுத்த
நரசையா, உங்கட்கு நன்றிகள் கோடி.
நம்மிடையே சாருஹாசன் இருக்கிறாரே.
சாருமதி என்பது சோமதேவரின் கதாசரித்சாகரத்தில்
வரும் கிளி என்றும் சொன்னார்கள்.
அம்பிகை இளங்கிள்ளை அரிவை என்றல்லவா
தேவாரம் பாராட்டுகிறது!
தன்யன் ஆவேன்
நா. கணேசன்
"அறிவல் நின் வரவு; அஞ்சல்! ஓம்பு" என அன்புடை நன்மொழி அளைஇ
- (நின்னை நோக்கி, புலவனே!) `நின் வரவு இன்னது பற்றியது` என்பதனை யான்
முன்பே அறிவேன்;
அது நினக்குக் 'கிடைக்குங்கொல், கிடையாதுகொல்' என அஞ்சுதலை இனி நீ
ஒழிவாயாக`
என இவ்வாறான அன்புடைய நல்ல மொழிகளைக் கூறி
எனபது பொருள்.
திருமுருகாற்றுப்படைக்கு எங்கள் ஊர்ப் பெரும்புலவர்
வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டரவர்கள்
பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள் உரைகளை
ஓலைச்சுவடி தேடியெடுத்து திருவாவடுதுறை ஆதீனத்திடம் சமர்ப்பித்தார்கள்.
அது அச்சில் வந்தது, என்னிடம் உள்ளது. பார்த்து இந்த அடிக்கான
பொருளை இடுவேன். தமிழ்நாட்டில் வே.ரா.தெ. ஐயாவின் பதிப்புக் கிடைக்கலாம்.
அதை யூனிக்கோடாக்கவோ, பிடிஎப் ஆக்கவோ ஆகும் செலவுகளை
நான் ஏற்கத் தயார். பிறகு ஒரு வலைத்தளத்தில் வைத்துவிடுவோம்.
வே.ரா.தெ. ஐயாவின் கம்பன் சுவடிகள் அண்ணாமலைப் பதிப்பிற்குப்
பயன்பட்டன. பெ. தூரன் தாத்தா கவுண்டவர்களிடம் வாங்கி அங்கே
கொடுத்தார்கள்.
கோவை திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பை வெளியிட்டது.
இப்போது மறு அச்சும் ஆகியுள்ளது. அதைக் குறள் ஈடுபாடுடையோர்
வாங்கணும். ராமகிருஷ்ண வித்யாலயம் தி.சு. அவினாசிலிங்கம் ஐயாவின்
பெரும்பணி (திருப்பூர் பழைய ஜமீந்தாரர்கள் அவினாசிலிங்கம் ஐயா குடும்பம்,
காந்தி அவர்கள் இல்லத்தில் தங்கினார்). கிவாஜவைக் கொண்டு 1950-60களில்
ஆராய்ச்சி நடந்தது,
அப்பதிப்பிற்கு குறளின் பழைய உரைகளைக் கொங்கு ஊர்களில் தேடியளித்தவர்
வேராதெ ஐயன் அவர்கள். பாண்டிதுரைத் தேவர் தேடிச் சேர்த்த
பாண்டிமண்டலச் சுவடிகள் - குறளின் 10 பழைய உரைகளுக்கும் பபலசுவடிகள்
இருந்தனவாம் :-( - யாவும் 1920-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில்
ஏற்பட்ட தீயினால் அழிந்தன.
அதற்கு முன்னால் 1800களில் சென்னை கலெக்டர் எல்லிசின் நூலகம்
அடுத்துவந்த கலெக்டர் துரையின் அவமதிப்பால்
அழிந்தன.
பிற பின்.
நா. கணேசன்
எனது தமையனார் காவூரி கிருஷ்ணமூர்த்தி திருமுருகாற்றுப் படை உரை எழுதி 30 வருடங்க்ளுக்கு முன் வெளியிட்டார். அடுத்து அவர் எழுதிய நூல் முருக தரிசனம். அவ்ருக்குத் துணையாக இருந்தது கி வா ஜகன்னாதனின் வழிகாட்டி. வெ. ரா. வின் நூல் கிடைத்தால் அது ஒரு பெரும் பாக்கியமே!
நன்றிகள் பல.
நரசய்யா |
From: naa.g...@gmail.com <naa.g...@gmail.com> |
On Dec 20, 8:54 pm, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> எனது தமையனார் காவூரி கிருஷ்ணமூர்த்தி திருமுருகாற்றுப் படை உரை எழுதி 30 வருடங்க்ளுக்கு முன் வெளியிட்டார். அடுத்து அவர் எழுதிய நூல் முருக தரிசனம். அவ்ருக்குத் துணையாக இருந்தது கி வா ஜகன்னாதனின் வழிகாட்டி. வெ. ரா. வின் நூல் கிடைத்தால் அது ஒரு பெரும் பாக்கியமே!
> நன்றிகள் பல.
>
> நரசய்யா
>
நரசையா,
வே. ரா. தெ. ஐயா அவர்கள் தம் சுவடித் தொகுப்பில் இருந்து
திருப்பனந்தாள் காசிமடம் ஆதீனகருத்தர் ஆசியில்
முன்னர் அச்சாகாத, முருகின் 5 உரைகளை அச்சிட்டு
தமிழன்னைக்கு அணிசேர்த்தார்கள்.
புத்தகம் இதுதான். அமெரிக்காவில் 12 பல்கலை
நூலகங்களில் கிடக்கிறது. தமிழ்நாட்டில் இதை
அறிவாரோ, பயில்வாரோ உளரோ, அறியேன்.
Tirumurukarruppatai : uraikkottu Naccinarkkiniyar, Uraiyaciriyar,
Parimelalakar, Kavipperumal, Pariti uraikal /
Author: Venkataramaiya, Ka. Ma.,; Teyvacikamanik Kavuntar, Ve. Ra.,
Publication: Tiruppanantal : Annapurna Patippakam ; Cennai : Virpanai
urimai, Paracakti Patippakam, 1987
Document: Tamil : Book
பின்னர் கு. சுந்தரமூர்த்தி மறு அச்சும் போட்டார்.
நச்சினார்க்கினியர், உரையாசிரியர் பரிமேலழகர், கவிப்பெருமாள், பரிதி -
ஐவர் உரைகள்.
-------------
உங்கள் தமையனார் உரை அமெரிக்க நூலகங்களில் உளதா என்று பார்த்துச்
சொல்கிறேன். இல்லையென்றால் எனக்கு ஒரு பிரதி அனுப்பினால்
வாஷிங்டன் அமெரிக்கக் காங்கிரஸ் நூலகத்துக்குப் பரிந்துரை செய்து
அனுப்பிவைப்போம் (அங்கே பலரை அறிவேன்). 1000 ஆண்டுக்காலம் அந்நூல்
வாழும்.
மின்நூல் இளைஞர் உதவியுடன் செய்யலாமே.
நா. கணேசன்
365. மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
*அஞ்சொலாள் உமை*யொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே.
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பு மறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறை யுறை
*அஞ்சொலாள் உமை*பங்க னருளிலே. 5.39.4
237 நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
*அஞ்சொலாள்* காண நின்று
அழகநீ யாடு மாறே. 4.23.9
51 வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
*அஞ்சொலாள்* பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 6.5.8
நா. கணேசன்
மஞ்சர்தாம் மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
*அஞ்சொலாள் உமை*யொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயில்தருந் திருமுது குன்றமே. 3.34.7
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பு மறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறை யுறை
*அஞ்சொலாள் உமை*பங்க னருளிலே. 5.39.4
["அஞ்சொலாள் உமை" என்று 3.34.7 மற்றும்
5.39.4 செய்யுள்களில் வருவது கருதத்தக்கது.]
நெஞ்சினைத் தூய்மை செய்து
நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ
வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை
மல்குசிற் றம்ப லத்தே
*அஞ்சொலாள்* காண நின்று
அழகநீ யாடு மாறே. 4.23.9
வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி
*அஞ்சொலாள்* பாகம் அமர்ந்தாய் போற்றி
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. 6.5.8
இந்த 'அஞ்சொலாள்' உமையின் வாக்கைப்
பற்றிப் பல இடங்களில் தேவார முதலிகள்
கூறுவர், அவற்றொடும் ஒப்பிடுவோம்:
(1) கரும்பமரு மொழிமடவாள் - கோயில்
(2) குயிலாரு மென்மொழியாள் - மணஞ்சேரி
(3) கரும்பொடுபடுஞ் சொலின் மடந்தை - புறம்பயம்
(4) பண்ணின் நேர் மொழியாள் - கருகாவூர்
(5) பண்தடவுசொல்லி - தேவூர்
(6) யாழன மொழியுமை - விளமர்
(7) தேன்மொழிப் பாவை - கோட்டூர்
(8) பாலின் மொழியாள் - வாய்மூர்
(9) யாழைப் பழித்தன்ன மொழி மங்கை - மறைக்காடு
(இது யாழ்ப்பாணன் இராவண சம்பந்தம் உடைய
தலம் ஆதலினாலே என்று நினைக்கிறேன்.
http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna.html
)
(10) அஞ்சொல் அணியிழையாள் - பரங்குன்றம்
(11) தேனிற்பொலி மொழியாள் - கொடுங்குன்றம்
(12) தேனமரும் மொழி மாது - பாண்டிக்கொடுமுடி
(13) இளங்கிள்ளை அரிவை (the one with
parrot-like speech) - அச்சிறுபாக்கம்
(14) அஞ்சொலாள் உமை - முதுகுன்று, மயிலாடுதுறை
ஏற்கெனவே, தேவாரத்தில் அம்பிகைக்கு
"அஞ்சுவாள்" என்று பொருந்தும்,
"அஞ்சலாள்" அல்ல. "அஞ்சலள்" = வீறாயி
என்னும் எல்லா இலக்கியங்களிலும் வரும்
பொருட்பொருத்தமின்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்,
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
"அஞ்சொலாள்" என்று தேவாரம் பேசிய
காலத்தில் அம்பிகை படிமம்/கோட்டம் மாயவரத்தில்
வள்ளலார் தலத்தில் இல்லை. அது பின்னால்
ஏற்பட்டது. "அஞ்சல் கரத்தினாள்/கையினாள்" (அ)
"அஞ்சல் எனும் மொழி மடந்தை"
என்றெல்லாம் உமைக்குத் தேவாரத்தில் அறவே வராது.
அம்பிகை வழிபாடு பெருங்கோயில்களில் விரிவானதே
பிற்காலச் சோழ, பாண்டிய, விசயநகர ஆட்சிகளில்தான்
(கி.பி. 1000க்குப் பின்னர்).
அஞ்சொலாள் > அஞ்சலாள் தேவிவழிபாடு தலைதூக்கிய
பிற்காலத்தில் நிகழ்ந்திருக்கும். அதற்கு, உ/ஒ எழுத்துக்கள்
அகரம் ஆனதும் துணையாகி இருக்கலாம்.
-u- > -a- in first syllable - some examples:
உ-ம்: *புல்லி > பல்லி,
நுகம் > நகம் (ஸம்ஸ்க்ருத நகம்)
(Cf. நுகிர்/உகிர் - விரல் எலும்பின்மேல் உகுத்திருப்பது,
எருத்தின் கழுத்தில் வண்டியில் (அ) ஏரில்
பூட்டும்போது/நுகுக்கும்போது உள்ள மரத்தடி = நுகம்.
இதிலிருந்து ஸம்ஸ்கிருத நகம் ஆனது.
இந்தோ-ஐரோப்பிய வல்லுநர்கள் nakha என்பதன் -k-
விளக்க இயலாமல் இருக்கிறது என்றபோது,
தமிழைப் பாருங்கள் என்று சொன்னேன்.)
....
-o- > -a- examples:
பொத்து > பத்து (தீப் பொத்துதல்)
நொறுக்கு > நறுக்கு
கொம்பு > கம்பு
கொங்கு (வளைந்தது) > கங்கம் (kaGkha -வடமொழியில்).
கொக்கு எனப்பொருள்.
கொங்கு நாட்டிலிருந்து சென்று ஆண்ட
மன்னர்கள் - கங்கர்கள் (கொங்கர் > கங்கர் (Ganga dynasty) ).
வளைசங்கு கோடு
- இதன் பெயர் கொங்கு > வடமொழியில் ('saGkha)
சங்கு என்றானது.
மொல்லன் 'wrestler' > மல்லன்
மொல்லாடும்/மல்லாடும் கடாவுக்குத்
தமிழில் மொல்லை என்று பெயர்.
புத்தர் சாக்கியக் குடியில் பிறந்தவர்
(ஈரானிய சகர்களுடன் தொடர்புண்டு).
இந்தியாவின் தேசிய காலண்டர்
சகாப்த வருஷக் கணக்கிடுவதாகும்.
அந்தத் சகாக்கள் வீரம் மிக்கவர்கள்,
போராடுபவர்கள் - அக் குடிப்பிறந்த
புத்தர்பிரான் மல்லன் என்பர்.
இப்பெயர் திராவிட substratum தருவது.
மொல்ல(ர்) > மல்ல(ர்). சேலம் மாவட்டத்தில்
கவிஞர்கள் ந. கந்தசாமி, பெரி. சந்திரா ஊர்:
மல்லசமுத்திரம். புத்தனைத் தொழுத ஊர்.
அதுபோலவே, சமற்கிருதத்தில் ஒரு முக்கியச்
சொல்: பலி ( பல்லியை தெலுங்கு, அதன் வடக்கே
balli என்பது போல, தமிழ்ப் 'பலி' வடசொல்லாக
bali என்ப).
பொலி > பலி.
தமிழர் பலியூட்டை பொலியூட்டு என்று சொல்வர்.
பொலிசை >பலிசை.
பொலி போடறது, பொலி கொடுக்கறது என்று
வலையில் தேடிப் பாருங்க. பொலி > பலி (= Skt. bali)
ஆட்சி புரியும். சினிமா, கதைகளில் போலிபோடல்
மிகுதியும் உண்டு.
இஸ்லாமியர் சூஃபிகளுக்கு பிர்/பீர்
என்ற சாமியார் பெயர் உண்டு. தமிழில்
பீர் முகமது, ....
இது பாகிஸ்தானில் சிந்து மாகாணச் சொல்,
பின்னர் இஸ்லாம் முழுக்கப் பரவிய சொல்.
பிர்/பீர் தமிழில் பிரான், பிராட்டி,
தம்பிரான் - ஆதீனகருத்தர்.
தம்புரான்/தம்புராட்டி - கேரளத் தரவாடுகளில்
நிலக்கிழார்கள். (Islamic) Pir is an ancient Dravidian
substratum from Sindh.
அம்- முன்னொட்டுடன் அம்புலி > அம்பலி.
அம்புலீ ஆட வாவே - பிள்ளைத்தமிழ்.
ஒரு தாளவாத்யப் பறை (சந்திரன் போல இருப்பதால்)
"அம்பலி கணுவை யூமை" - கம்பன்.
கொங்குநாட்டில் பட்டிநாய்களுக்குக்
கூழ்காய்ச்சும் பாத்திரம் (கல்லால் சமைந்தது)
துடும்பு போன்றது அது அம்புலிக்கல்.
அம்புலிப் பறையைத் காடுகிழாள்/கொற்றி
துருக்கை கொண்டிருப்பாள். அதுபோலவே,
தலைச்சும்மாடு > தலைச்சம்மாடு.
அதுபோலே, அஞ்சொலாள் > அஞ்சலாள்.
இன்னுமொன்று: தொல்தமிழர் பாரத நாகரீகத்திற்கு
அளித்த கலாசாரப் பங்களிப்பு பற்றி அறிய
இன்னும் 20 ஆண்டு ஆகும் என்று நினைக்கிறேன்.
சென்ற வாரம் ஐராவதம் தான் எழுதிக் கொண்டிருக்கும்
2009 பெங்குவின் புக்ஸ் வெளியீடாக வரவிருக்கும்
புத்தகக் கட்டுரையை அனுப்பியிருந்தார். ஐராவதத்தின்
அம்மடலின் ஒரு பத்தியை இங்கே தருவன்:
>I am sure you have seen the three recent papers of
>mine on the Indus script from the website
>http://www.harappa.com. I have written another paper
>with the title 'How did the great god get his blue neck?
>A bilingual clue to Indus script' . I consider this paper
>to be a breakthrough. It is being included as a chapter
>in my forthcoming book 'Interpreting the Indus Script:
>A Dravidian Model' to be published by Penguins India
>next year. I am attaching a PDF file of the paper and
>shall value your comments.
ஐராவதம் மகாதேவன் ஐயா, ஹார்ட், அசோகன் (Asko)
பார்ப்போலா, ... போன்றோர் சில தரவுகளைத்
தந்துள்ளனர். ஆனால் இன்னும் விரிவுபடுத்தக்
களம் காத்திருக்கிறது. இதனைத் தமிழர்கள்
செய்யவேண்டும். தமிழுணர்வோடு ஆழ்ந்த
தென்மொழி, வடமொழி, மொழியியல், கலையியல்,
அறிவுடன் கூடிய பேராசிரியர் இந்தியப்
பல்கலைக் கழகங்களிலும், வெளியிலும்
தோன்ற வேண்டும். ஐராவதம், அசோகன்
இருவர் கட்டுரைகளைப் படிக்க:
http://www.harappa.com/script/
http://www.harappa.com/script/indusscript.pdf
http://www.harappa.com/script/indus-writing.pdf
நா. கணேசன்
நானும் சில ஆண்டுகளாகச் சிந்து நாகரிக
முத்திரைகளை ஆய்ந்து வருகிறேன்.
சென்ற ஆண்டு (2007) ஓராய்வுக் கட்டுரை
சிந்துவெளிச் சமயம் - திராவிடர் பண்பாட்டுத்
தொடர்பு பற்றி எழுதினேன். ஐராவதம்,
பார்ப்பொலா, மாபாரத அறிஞர் வான் சிம்ஸன்,
யரஸ்லாவ் வாசில்காஃப், பிரான்சிஸ்கோ (மிலான்),
டோரிஸ் ஸ்ரீநிவாஸன், ... போன்றோர் பாராட்டிச்
சில கருத்தும் தந்தனர். தலைப்பும் அதன்
பொருளடக்கமும் ஈண்டுத் தருகிறேன்.
"Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion."
Abstract: In the Mature Harappan period seals and tablets produced
about 4000 years ago, gharial crocodile is portrayed as a 'horned'
being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial
deity is the central figure surrounded by a typical set of animals. A
female being, often connected with tigers, is seen coupling together
with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization
(IVC) creation myth. A number of seals show a man on the tree along
with a tiger below. This shaman on the tree and tiger motif is linked
archaeologically with the gharial deity in the sky, and the
Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC
tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger
motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A
comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic
art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it
is illustrated with pictures of the IVC sealings. These religious
myths of the gharial and tiger divinities are at least as important as
the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and
seven women in front of a bodhi fig tree.
புத்தர் குடி மொல்லர் > மல்லர் என்று குறிப்பிட்டேன்
அல்லவா? அவரைக் குறிக்கும் சின்னம் 2000 வருஷமாக
இந்தியாவில் ஒரு மயிடமுகம் (மகிஷமுகம்),
அதை Buddhist trident nandyavarththa nandipada என்றெல்லாம்
பெயரை கலைநிபுணர் சொன்னார்கள். அதன் திராவிட
சம்பந்தத்தை விளக்கியும் ஓர் கட்டுரை எழுதியுள்ளேன்.
The megalithic symbols' connection with Indus signs is very
important. For example, prof. A. Sundara's paper. I almost finished
a paper on a particular symbol that will be of interest to Buffalo
culture history in India, the paper is tentatively titled:
"Trisula-Nandipada-Triratna: is it originally Mahishamukha?
Buddhist symbol and its possible antecedents in Indus valley".
http://tech.groups.yahoo.com/group/IndiaArchaeology/message/8099
http://tech.groups.yahoo.com/group/IndiaArchaeology/message/8108
புத்த மதத்தில் முக்கியமான டாகினி எனும்
பெண் தெய்வப் பேர் பற்றி நான் சொன்னது:
http://groups.yahoo.com/group/Indo-Eurasian_research/message/11808
விளமலின் யாழினுமென்மொழியாள் = மஞ்சுள பாஷினி
(எங்கள் குடும்பத்தில் விளமல் ஊரில் பிறந்த ஒரு பெண்ணின் பெயர்)
நரசய்யா |
From: N. Ganesan <naa.g...@gmail.com> |
காணோமே.
On Dec 21, 10:35 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> விளமலின் யாழினுமென்மொழியாள் = மஞ்சுள பாஷினி
> (எங்கள் குடும்பத்தில் விளமல் ஊரில் பிறந்த ஒரு பெண்ணின் பெயர்)
> நரசய்யா
>
நல்ல செய்தி.
விளமல் (தேவாரத்தில் விளமர்) வேததாரண்யயம் பக்கமா?
இரண்டுக்கும் இடையில் தொலைவு எத்தனை மைல்கல்?
நா. கணேசன்
On Dec 21, 11:11 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> 22 MB இருப்பதால் இணைப்பு போக மாட்டேன் என்கிறது.
>
100 எம்பி வரை கோப்புகளை அனுப்ப எளியமுறை.
ஒரு கணக்கை (இலவசமாகக் கிடைக்கிறது) இதில் தொடங்குங்கள்:
http://www.yousendit.com/
அதில் உங்கள் ஃபைலை ஏற்றுக.
அதற்கான தொடுப்பு உங்கள் மின்மடலுக்கு அனுப்புவர்.
அந்த யுஆர்எல் தொடுப்பை இங்கே தந்தால்,
நாங்கள் இறக்குமதி செய்ய ஏலும்.
நா. கணேசன்
இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன்
ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும் அம்பிகையை
'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி'
எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத் திருப்பாடல்களில்
இறைவன் மயிலாடுதுறை அரன்,
மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன்
எனவும், அம்பிகை, அஞ்சொலாள் எனவும்
வழங்கப்படுகின்றனர்."
இதை எப்படி அண்மைக் காலப் பதிப்பொன்றில்
மாற்றப் பட்டுள்ளது, அதை மறுத்து
தருமபுர ஆதீன தேவார உரையில் உள்ள
மறுப்புரையும் தந்திருந்தேன்:
http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
மேலும்,
> தேவாரத்தில் "அஞ்சொலாள்" பயிலும் இடங்கள்:
> --------------------------------------------------------------------------------------
> தலம் ஆதலினாலே என்று நினைக்கிறேன்.http://nganesan.blogspot.com/2008/12/yaazh-flag-sangili-mannan-jaffna...
> )
> (10) அஞ்சொல் அணியிழையாள் - பரங்குன்றம்
> (11) தேனிற்பொலி மொழியாள் - கொடுங்குன்றம்
> (12) தேனமரும் மொழி மாது - பாண்டிக்கொடுமுடி
> (13) இளங்கிள்ளை அரிவை (the one with
> parrot-like speech) - அச்சிறுபாக்கம்
> (14) அஞ்சொலாள் உமை - முதுகுன்று, மயிலாடுதுறை
>
> ஏற்கெனவே, தேவாரத்தில் அம்பிகைக்கு
> "அஞ்சுவாள்" என்று பொருந்தும்,
> "அஞ்சலாள்" அல்ல. "அஞ்சலள்" = வீறாயி
> என்னும் எல்லா இலக்கியங்களிலும் வரும்
> பொருட்பொருத்தமின்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்,http://groups.google.com/group/minTamil/msg/45a14325f0655ee6
> இஸ்லாமியர் ...
>
> read more »
ஏற்பட்டது. "அஞ்சல் கரத்தினாள்/கையினாள்" (அ) "அஞ்சல் எனும் மொழி மடந்தை"
என்றெல்லாம் உமைக்குத் தேவாரத்தில் அறவே வராது.//
*********************************************************************************************************************************************
’அஞ்சொலாள்’
பிள்ளையவர்களின் மாயூர புராணத்திலிருந்து ......
கடவுள் வாழ்த்து
பரவுபிற ரபயவர தம்புனைந்தும் பாவனையாம் படியில் நாண
வுரவுமிகு மவைமலர்க்கை யமைத்தமைத்த படியகில வுயிர்க்கு மாற்றிக்
கரவுதவிர் தரவனைய வுபயமே திருப்பெயராய்க் கதிர்ப்பப் பூணுற்
றரவுமதி புனைவார்பா லமரஞ்சல் நாயகிதா ளடைந்து வாழ்வாம். 5
திருமணப் படலம்
அஞ்ச னாயகி யார்வள்ள லாரிவர்
தஞ்ச மாக மணம்புரி தன்மையா
லெஞ்ச னின்றிப் புனைமினிம் மாநகர்த்
துஞ்ச லின்றித் தொழவரு வீரென்றான் . 24
மொத்தம் 64 படலங்கள். ’வள்ளலார்’ என்று இறைவனும், ‘அஞ்சல் நாயகி’
என்று அம்மையும் பல இடங்களிலும் பாடப் பெறுகின்றனர்.
தேவ்
அதற்கும் சற்று முன்னர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் அபயாம்பிகையைப்
போற்றியுள்ளார்.
அன்புடன்,
நா. கணேசன்
On Jan 6, 7:03 am, devoo <rde...@gmail.com> wrote:
> // Dec 22 2008, 7:12 am, "naa.gane...@gmail.com"<naa.gane...@gmail.com> wrote:
>
> இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும்
> அம்பிகையை
> 'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி' எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத்
> திருப்பாடல்களில்
> இறைவன் மயிலாடுதுறை அரன், மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன் எனவும்,
> அம்பிகை, அஞ்சொலாள் எனவும் வழங்கப்படுகின்றனர்."
>
> ஏற்பட்டது. "அஞ்சல் கரத்தினாள்/கையினாள்" (அ) "அஞ்சல் எனும் மொழி மடந்தை"
> என்றெல்லாம் உமைக்குத் தேவாரத்தில் அறவே வராது.//
> *********************************************************************************************************************************************
மாயூரப் புராணம் மறு அச்சு ஆகியுள்ளதா?
ஸ்ரீ பிள்ளையவர்கள் உயிர்வாழும்போதே 1868-ல்
தி. க. சுப்பராயச் செட்டியாரால் அச்சானது.
ஒருபிரதி இருக்குமிடம் தெரியும்.
இடைக்காலப் புராணங்களையும், பிரபந்தங்களையும்
படிப்போர் அற்றுப்போன நிலையில் இன்னும் 15-20
பேராவது படிக்க இருக்கிறார்கள் என்பது மனத்துக்குவந்த செய்தி.
கோவையில் ப. வெ. நாகராசன் அவர்களைத் தெரியுமா?
கௌமார மடத்தில் இருக்கிறார். புராணங்களுக்கு அத்தாரிட்டி.
அவரது தமிழில் தலபுராணங்கள் (2 தொகுதி) அவசியம்
படிக்க வேண்டிய நூல்.
தமிழ்ப் பல்கலை வே. ரா. மாதவன் ஐயா தமிழ்க் கருவூலம்.
அண்மையில் திருவாவடுததுறைப் புராணத்தை முதன்முதலாய்
அச்சுப்போட்டிருக்கிறார்கள்.
பிரபந்தம், புராணம் - இன்னும் பேசுவோம்.
தமிழில் தான் இவ்வளவு தலபுராணங்கள்.
இவற்றை பிடிஎப் ஆக்க அரசு முயற்சிப்பதில்லையே.
அச்சு நுட்பம் பெருகிவிட்ட நிலையில், திருக்கோயில்களுக்கு
வருமானம் 1000கணக்கான கோடிகளில் இருக்கும்போது,
அக் கடவுளர் பேரில் பாடிய பிரபந்தங்களும், புராணங்களும்
அழியும் தறுவாயில் உள. ஒரு சில கோடி ரூபாய்களை
ஒதுக்கி தரமிக்க ஈடுபாடுடைய புலவர் சிலரை
நியமித்தால் அவை எளிதில் காக்கப் பட்டுவிடும்.
ஒரு 30 வருடம் போனால் ஒன்றும் மிஞ்சாது.
மாயூரப் புராணம் மறு அச்சு ஆகியுள்ளதா?//
ஒரு தனவணிகரின் குடும்பத்தாரால் புதிதாக அச்சேறியுள்ளதாகத் தகவல்.
நெல்லையிலிருந்து புத்தகம் கிடைத்தால் மேலும் தெரிவிக்கிறேன்.
தொலைபேசி உரையாடலில் தெரிந்து கொண்டதை எழுதினேன்.
அதிகம் பேசித் தொல்லை தரக்கூடாது என்பதால் மேலும் கேட்டறியவில்லை.
எவ்வளவோ செய்ய வேண்டும். உடல் நிலை ஒத்துழைப்பதில்லை.
தேவ்
On Jan 6, 8:57 pm, devoo <rde...@gmail.com> wrote:
> // Jan 7, 4:35 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
> wrote:
>
> மாயூரப் புராணம் மறு அச்சு ஆகியுள்ளதா?//
>
> ஒரு தனவணிகரின் குடும்பத்தாரால் புதிதாக அச்சேறியுள்ளதாகத் தகவல்.
அக் குடும்பம் நீடூழி வாழ்க, வளர்க.
உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்.
பொங்கல் வாழ்த்துக்கள்!
மிக்க அன்புடன்,
நா. கணேசன்
> நெல்லையிலிருந்து புத்தகம் கிடைத்தால் மேலும் தெரிவிக்கிறேன்.