திரு.விஜயகுமார் சுவாரசியமான ஒரு தொடரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
இத்தொடரை இத்தலைப்பின் கீழ் இடுமாறு வேண்டுகிறேன். நாம் எல்லோரும் அவரவர்
ஆல்பத்திலிருந்து ஒன்றிரண்டு உருவி இங்கு இடுவோம்.
ஒரு இழையாக இது வரவேண்டுமெனில் இங்குள்ள "பதில்" பொத்தானை அமுக்கி
வெளியிடவும். புதிய சேதியாக இருப்பின், பொத்தானை அமுக்கியபின் காண்கின்ற
பழைய சேதியை அழித்துவிட்டு புதிதாக எழுதி, இணைக்க வேண்டியதை இணைத்து
அனுப்பவம். ஒவ்வொரு இடுகைக்கும் புதிய தலைப்பிட்டால் (never add a new
Title in the "SUBJECT". Then the chain will break. NEVER change the
title, but just "reply") இழை அறுந்து போகும். கவனம்!!
இணைப்பிலுள்ள படம் திருவாசகர் பிறந்த ஊரான திருவாத ஊர். கோயிலில்
நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பினால் இக்காட்சி படும். கோயில் இடிபடும்
போது விசித்திரம் வெளிவருகிறது! கவனித்துப் பாருங்கள் எப்படி இடுக்கி
போட்டு காலத்தை வென்று நிறகக் கூடிய ஸ்தரத்தன்மையை கோயில் நிர்மாணத்தில்
வழங்குகின்றனர். இது என்ன என்சிநியரிங்?
கண்ணன்
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே.
நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது - அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமர செதுக்கிய அந்த மகா சிற்பியின் ஆவி தற்போது நில்லையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்ய்ய்ய்யோ , அக் கற் சிலையை செதுக்க அச் சிற்பி எப் படு பட்டுஇருப்பனோ,
imagine the pain passing through his veins as he delicately brought forth his years of knowledge filtered though generations by word of mouth, passing through his blistered hands, into making this poetry in stone.... அக் கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் ...நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் - அவர்கள் விரோதிகள் - பகைவர்கள் மன்னிக்கலாம் , இம் மூடர்களோ ...இவர்களை என்ன வென்று சொல்வது - சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ rockfeller கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல் .அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள்.
சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.
தமிழ்கத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன.
மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.
பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.
ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரததிணை பாருங்கள். சகாதேவ ரதம் கச ப்ரிச்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கச - யானை , ப்ரிச்டம் - முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரத மேல் பாகமும் யானையின் முத்கைய்யும் ஒத்து இருப்பதை உணரலாம். இத்தனை காண்போருக்கு உணர்த்தவே அச் சிற்பங்கள் அங்கு உள்ளன. ஆஹா
On Jan 11, 11:36 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
>
நல்ல சிந்தனை தூண்டும் கேள்வி. சங்கிலியை விடுங்கள் மல்லை குடவரை சிற்பங்களுக்கு கல்லை எப்படி பிளந்தர்கள் என்பது சுவாரசியமான ஒரு விஷயம். வெறும் சுத்தி, உளி கொண்டு இப்பெரும் சிற்பங்களையும், குடவரை கொவில்கல்லையும் எப்படி வடித்தார்கள் ..
மல்லை பாறைகளில் உளி கொண்டு செதுக்கிய துவாரங்கள் இங்கும் அங்கும் கோடுகளாக போவதை காணலாம். ( படங்களை இணைத்துள்ளேன்)
இந்த துவரங்களுக்குள் மரத்தால் செய்த ஆப்பு ( ஆம், நகைகதீர்கள் ) கொண்டு அடைதர்கள். பின்னர் இவற்றை தண்ணிர் கொண்டு நனைத்தார்கள். ஆப்பு நீரை உள்வாங்கி பேருக்கும் - அனைத்து ஆபுகளும் ஒரே சீராய் உடல் பெருக்க, பாறை பிளவு பெரும். பிளந்த பாறையின் படத்தை இணைத்துள்ளேன்.
இது கூட எளிது போல் தோன்றுகிறது, அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களைக்
கண்ணுறும் போது. நான் எடுத்த படங்கள் இன்னும் slide வடிவில் உள்ளன.
பின்வரும் தளத்தில் எடுத்த படங்களைக் காணுங்கள்:
http://www.art-and-archaeology.com/india/ellora/
1. நாம் வெறும் மலையைக் காண்கிறோம். கலைஞன் மலைக்குள் கோயிலைக்
காண்கிறான் (மரத்தை மறைத்தது மாமது தானை!!)
2. பல மாடிக் கட்டிடங்களைக் காண்கிறான்.
3. குடையும் போது என்ன பரிமாணம், எப்படி அளவிடுதல், இது என்ன கணக்கு?
4. பாதிக் குடைந்த பின் தப்பாகப் போய்விட்டால்? அப்படி எதுவும்
பாதியில் விட்டுப் போன project தெரியவில்லை. அது என்ன precision? அது
என்ன Engineering?
5. இருண்ட குகைக்குள் சித்திர வேலைப்பாடு வேறே! இதுவும் எங்கே? கூரை
மோட்டில்? என்ன சார் இது?
இவ்வளவையும் பார்த்துவிட்டும் நாம் நம் பழமையை குப்பை என்கிறோம். அது
எப்படி ஒரு நாட்டில் ஒரு கலை மட்டும் வளர்ந்திருக்க முடியும்? இன்று
Engineering College நடத்துகிறோமெனில் பிற கலை அறிவு இருப்பதால்தானே
முடிகிறது? ஆனாலும் சித்த மருத்துவம் குப்பைதான் ஐயா!! :-)
கண்ணன்
அருமை. அதனுள் இருக்கும் அழியா சித்திரங்களை பற்றி நண்பர் உரை நடத்தினர். அவரிடம் அனுமதி பெற்று சீக்கிரம் இத்தளத்தில் விடுகிறேன். அது மட்டும் அல்லாமல் கைலாசனத கோவில் செத்துக்கிருக்கும் கோலம் அருமை.
அண்மையில் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சோழ சிலைகளின் கண்காட்சி நடை பெற்றது. அங்கு ஆயிரம் வருடம் வாழ்ந்த பார்வதி சிலை ( அதை சிலை என்று கூறுவது தவறு ) உருவம் இருந்தது. ஆனால் புகை படம் எடுக்க தடை.. அச்சிலை முன் காலம் நின்றதையும் தெய்வீகம் கலையுடன் கலப்பதையும்
கண்டேன். மெய் மறந்தேன்
http://www.kumbakonam.info/kumbakonam/thanjavur/images/galpho/gal21.jpg
http://ignca.nic.in/asp/showbig.asp?projid=ac25நீங்கள் கர்நாடகாவிலிருக்கும் ஹளபேடு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு
போயிருக்கிறீர்களோ?
Miniature art -என்பதின் உச்சக்கட்டம் அது!
ஸ்ரீராமனுஜர் அனுக்கிரஹத்தின் படி இக்கோயிலைக் கண்ட நூறு ஆண்டுகள்
ஆனதாம். போய் பார்த்தால்தான் தெரிகிறது, ஏனென்று!!
கண்ணன்
2008/1/14 Vijay kumar <vj.ep...@gmail.com>:
ஹலேபிட் கோவில் சிற்பங்கள் அபாரமானவை. எனது நண்பர் சென்ற மாதம் சென்று வந்து புகை படங்களை அனுப்பினார். எனினும் இவை கி பி 12 C ஹோய்ச்ள மன்னர்களால் செய்தவை ( பல்லவ 7 th நூற்றாண்டு , சோழர் 10 நூற்றாண்டு ) - என்பதாலும் - தமிழார் வேலைப்பாடு மிகவும் கடினமான கருங்களில் செதுக்கப் பெற்றவை - ஹலேபிட் கோவில் சோப்பு கல்லால் ஆனது என்பதாலும் பல்லவர் மற்றும் சோழ சிற்ப்பங்கள் அவற்றை விட பிரசித்தி பெறுகின்றனர்.
மற்றும் கலை நுணுக்கத்திலும் பல்லவர் கலை எழில் மிகுதி என கருதப் படிகிறது. மல்ளையில் இருக்கும் வரகா அவதார் சிற்பம் கொண்டு இந்தனை மேலும் விளக்கலாம்.
சிற்பத்தில் பூதேவியை காப்பற்றி கொணரும் மகா விஷ்ணு மிக நளினத்துடன் தன் மடியில் இட்டு இருப்பதையும் , தேவியின் மேலாடை அங்கு நடந்த அமளியில்
சற்றே அவிழ்ந்து கீழே தேவியின் மடியில் கிடப்பதை கண்டு தேவி நன்துடன் தலை குனித்த கட்சி அருமையாக செதுக்கபடுள்ளது.
How the cholas made bronzes ( lost wax method) is another interesting topic....more later
நீங்கள் தொடர்ந்து நமது சிற்பங்கள் பேசும் தெய்வங்கள் என்று அதன்
நுணுக்கங்களைக் காட்டிவருவது பாராட்டற்குரியது.
லலித கலைகளுள் சிற்பக்கலைதான் மிகவும் நுணுக்கமானதும், கடினமானதும் என்று
தெரிகிறது. கல்லில், மண்ணில், உலோகத்தில் கலை வண்ணம் காணுதல் எளிதல்ல.
>>ஓர்ஆயிரம் ஆண்டுகள் நின்று சிரிக்கும் நிஜம்... இதை
> எப்படி பதுமை என்று சொல்வது, சிலை என்று பார்ப்பது.....இது தான் தெய்வீகம்.
>
அசித் - material என்பதையும் நம்மவர் இருவகையாகக் காண்கின்றனர். ஒன்று
பிராகிருதம், மற்றது அப்பிராகிருதம். இறைவன் பர உலகில் இவ்வப்பிராகிருத
(சூட்சும) உடல் கொண்டு காட்சியளிப்பதாகப் பெரியோர் சொல்லியுள்ளனர்.
திடீரென்று சிலைக்கு உயிர் எப்படி வருகிறது? எப்படி ஒரு சிற்பி தன்
உயிரைக் கொடுத்து சிற்பம் வடிக்கிறான்? "சித்தினுள் அசித்தினை வைத்தாய்,
அங்கு சேரும் ஐம்பூதத்தின் வியன் உலகமைத்தாய்! எத்தனை கோடி இன்பம்
வைத்தாய்! இறைவா!!" என்று பாரதி வியப்பது இதுதான். சித்தினுள், அசித்
கலக்கும் விந்தையே சிற்ப சாஸ்திரம்.
வாழ்க உங்கள் தொண்டு.
கண்ணண்
இந்த லாஸ்ட் வாக்ஸ் முறை என்றால் என்ன..
சமஸ்க்ரிதத்தில் இதனை மது உச்சிஷ்ட்ட விதன என்று சில்ப சாஸ்திர நூல்கள் அழைகின்றன.
தேனீ கூடுகளில் இருந்து எடுக்கப்பட மெழுகு, கொஞ்சம் கற்பூரம் ( ஒரு விதமான கற்பூரம் - குங்கிலயும் என்று சொல்லபடுகிறது) எடுத்து எண்ணையில் மாவாக உருட்டி, சிற்பத்தை சிற்பி வடிக்கிறார்.
இந்த உருவம் எல்லா விதமான ஆபரணங்கள் முதலிய கொண்டு தோற்றத்தில் முடிவடைந்த சிற்பம் போலவே காட்சி அளிக்கும். இதனை குளிர் நீரில் முகியபின் மெழுகு உறைகிறது. இந்த மெழுகு உருவம் கரையான் புற்றுகளில் இருந்து எடுக்கப்பட களிமன் கொண்டு மொழுகி சூரிய கதிர்களில் காயவேய்கப்ப் படுகிறது - சிறு துவரம் மணலில் செய்து, உலையில் வைத்து இத்தனை சுடுகிறார்கள். வெப்பத்தில் மெழுகு உருகியோ அவியகோவோ வெளியேறுகிறது. இதனால் மணல் கூடு மட்டும் கிடைக்கிறது. இதனுள் உருகிய உலோகத்தை ஊற்றி காய்ந்தபின் மணல் ஓட்டை ஒடித்து சிற்பத்தை வெளி கொணர்கிறார்கள். கிடைத்த சிலை செப்பனிட்டு, மிரிதுவாக்கப்ட்டு - மீண்டும் இழைத்து பொலிவு பெறுகிறது.
இதனில் முக்கியமான விசேஷம் ஒரு சிலை வார்தபின் கூடு மீண்டும் உபயோகிக்க இயலாது. ஆங்க்லியாதில் இதனை யுநீக் ( each sculpture is unique) என்று சொல்லலாம்.
முழு செயலாக்க முறை விளக்கும் இணைய தளம் கீழே
இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
சந்தேசன் மிக தீவிர சிவ பக்தன் - தந்தை தன் சிவ பூஜையில் குறிக்கிடதனால் தண்டம் கொண்டு அவர் கால்களை முறித்தான் என்று பெரிய புராணம் சொல்ல .... தில்லையில் சண்டேசர் கையில் கோடாலியுடன் இருப்பதய் காணும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கும்.
தஞ்சை பெரிய கோவிலிலும் ராஜ் ராஜா சோழன் எடுபித்த உருவங்களில் சண்டேச மூர்த்தி சிலைகளும் உள்ளன. இதனில் நான்கு கையுடன் சண்டேசர், அசுரன் முசலகன் இரண்டு கைகளுடன், உமை, லிங்க உருவமாக மகேசன், சிவ பக்தன், கீழே விழுந்து கிடக்கும் தந்தை, கடைசியில் இரு கரம் படைத்து மகேசன் இடத்தில் மலர் மாலை வாங்கும் சண்டேசர்...என பெரிய புராண கதை படி உள்ளன.
ஆனால் நாம் காணப்போகும் சிற்பம் தஞ்சையில் இல்லை, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது. மூன்று முக்கிய நபர்களும் மிக அருமையாக காட்சி அளிக்கின்றனர். பக்தி பரவசத்தில் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி பவ்யமாக மண்டி இடும் சண்டேசர், தன் பரம பக்தனின் பக்தியை தன் மலர்த்த முகத்தோடு மலர் மாலை இட்டு அன்புடன் அணைக்கும் ஈசன், இதை சகல அம்சம் பொருந்திய தேவி பார்க்கும் அறிய சிற்பம். A masterpiece.....
அகிலன் அவர்கள் எழுதிய வேங்கையின் மைந்தன் ( அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு sequel ) சகித்ய அகாடமி விருது பெற்ற சரித்திர நாவல். ராஜ் ராஜா சோழனின் ( வேங்கை) மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் இலங்கை போர் மற்றும் கங்கை போர்களை மையமாக கொண்ட கதை - அவர் இச் சிற்பத்தை ராஜேந்திரன் தன் கங்கை வெற்றியை சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் கட்சி என கற்பனை செய்து, சிவனே அன்புடன் ராஜேந்திரனுக்கு வெற்றி மாலை சூடு வதுபோல் சிற்பி செதுக்கி உள்ளான் என அழகு பட எழுதி உள்ளார்.
காஞ்சியில் இருக்கும் பல்லவ சிவாலயம் பிரசித்தி பெற்ற அத்யந்தகாம ( king with unlimited fantasies) என்ற பெயர் உடைய ராஜசிம பல்லவனால் கட்டப் பெற்ற கைலாயனாத கோயில். இந்த பல்லவனே மல்லை கடற்கரை கோயிலை கட்டிய பெருமைக்கு உரியவன்.
கைலாயனாத ஆலயம் முதல் மேடை வரையிலும் கருங்கல் கொண்டு செதுக்கிய அரசன் எதோ காரணத்தால் அடுத்துவரும் தளங்களை மிருதுவான கல் கொண்டு செதுக்கிய காரணத்தால் பல அறிய சிற்பங்கள் காலப்போக்கில் மிகவும் சிதைந்து விட்டன. எனினும் பல்லவருக்குகே உரிய கலைநுட்பம் மிகுந்த வேலை பாடுகளை, குறிப்பாக ராஜசிம்மன் பாணியில் சிங்கங்களும் பல்லவ பொக்கிஷமான சோமாஸ் ஸ்கந்த மற்றும் மகிஷாசுற மர்தினி சிற்பங்கள் மிகுதியாக காணலாம்.
இந்த இணைய தளத்தில் உள்ள அழ்கிய புகை படங்களை பாருங்கள்.
இதர மடல்களில் ஜல்லிக்கட்டு பற்றி சுவாரசியமாக விவாதங்கள் நடப்பதை கண்டபின் எருதை அருமையாக பல்லவ சிற்பிகள் செதுக்கிய மல்லை கோவர்த்தனம் சிலைகள் நினைவுக்கு வந்தது. நிற்கும் காளை, அழகாய் அமர்திருக்கும் காளை ( தொண்டை அடியில் தொங்கும் தோலின் மடிப்புகள் அருமையாக செதுக்கி உள்ளார்கள்), பால் கறக்கும் ஆயன், தாய் பசு அன்பாய் தன் கன்றை நாக்கால் நக்கி கொடுக்கும் உணர்வு உயிரோட்டம்...
பஞ்ச ரத கூட்டத்திலும் இருக்கும் பல்லவ சின்னமான இது ( சிங்கமாக மாறுவதற்கு முன்) உருவத்தில் பெரியதாக வடித்தாலும் அங்க அமைப்புகள் குன்றாமல் செதுக்கிய வண்ணம் அருமை.
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
காஞ்சியின் கைலாசானாதா கோவிலில் இருக்கும் மிக அற்புத சிற்பம் இது. .. சிவ பிக்ஷாதன சிலை.
காஞ்சியின் கைலாசானாதா கோவிலில் இருக்கும் சிவ பிக்ஷாதன சிலையை நேற்று பார்த்தோம். அந்த கதையின் இன்னொரு பாத்திரமான விஷ்ணு மோகினி அவதார வடிவினை அதே காஞ்சியின் தேவராஜ் ( ஆம் முதலில் கல் சங்கிலி கொண்ட கல்யாண மடபம்) சுவாமி கோவில் தூணில் பார்க்கலாம். ரிஷி பத்தினிகளை சிவன் மயக்க, ரிஷிகளை மோகினி உருவத்தில் விஷ்ணு மயக்கினார். இரு கைகளிலும் மதுபானம் கொண்டு நிற்கும் மோகினி, வலது புறத்தில் அவள் அழகில் மழங்கி நிற்கும் இரு ரிஷிகள், இடது புறத்தில் இரு கைகளாலும் மது பாணத்தை பெரும் இரு ரிஷிகள் , மோகினி வடிவத்து அழகிய அணிகலன்களும், உடை அலங்காரமும் அற்புதமாக செதுக்கி உள்ளனர். தமிழ் தூணும் அல்லவா கதை பாடுகிறது.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
டாக்டர் நாகசாமியின் ஆயிரக்கணக்கான தொல்பொருள் slides களை சேகரிக்க பல
ஆண்டுகளாக முயன்று வருகிறேன். அதை அவரே வெளியிட்டால் இன்னும் சௌகர்யம்!
கண்ணன்
2008/1/18 Vijay kumar <vj.ep...@gmail.com>:
--
"Be the change you wish to see in the world." -Gandhi
Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818
முதலில் கதை - சிவன் வீரட்டானம் எனப்படும் சிவனின் வீரம் வெளிப்பட்ட ஸ்தானம் - மொத்தம் எட்டு - கஜசம்ஹாரம் - மன்மதன் தகனம் - மார்கண்டேய புராணம் ....
கஜசம்ஹாரம் சம்பந்தர் தேவாரத்திலும் இடம் பெறுகிறது - மூன்றாம் திருமுறை பாகம் இரண்டு ... "யானையுரி பொர்த்துமகிழ்" என்ற வரிகளை காண முடியும்.... யானை - உரி ( தோல் ). பேரூர் பட்டேஸ்வரர் கோவிலிலும் மிக அழகிய பிரமாண்ட யானையுரி போர்த்தியமூர்த்தி சிலையை காணலாம் - புகை படம் எங்கு உள்ளது என்று தேடி அடுத்த மடலில் இடுகிறேன்.
கஜாசுரன் என்ற அசுரனை வதம் செய்து ...அதுவும் எவ்வாறு ... யானை உருவில் இருந்த அசுரனின் துதிக்கை மூலம் அவனுள் சென்ற சிவபெருமான் அவன் உடலை உள்ளிருந்து கிழிக்கும் காட்சி இது. அவனுடைய தலையின் மேல் ஒரு காலை இட்டு, அவன் தொலை கரங்களால் தூக்கி போற்றிய வாறு உக்ரதாண்டவம் ஆடும் கோலம்.
ஆனால் நாம் காணவிருக்கும் இந்த கஜசம்ஹாரம் சிலை மிகவும் விநோதமானது. உடம்பை முறுக்கி ஆடும் தோற்றம் மிக கடினமான வடிவம் - அதை தத்ருபமாக செதுக்கி உள்ளான் , கை நகங்கள் யானை தொலை கிழித்து வெளிவருகின்றன, யானையின் பின்னங்கால் மற்றும் வால் சிலையின் தலை பாகத்தில் காணலாம். உக்ரமான இந்த ஆட்டத்தை காணும் உமை, தன் மடியில் இருக்கும் குழத்தை முருகன் இதை கண்டு பயமுருவானோ என்று அஞ்சி அவனை வேறு பக்கமாய் மறைக்குமாறு செதுக்கி உள்ள சிற்பியின் கற்பனை அபாரம். அதை விட விந்தை என்ன வென்றால், உமையின் இந்த நிலையை காணும் சிவன் இரு பல் வரிசை காட்டி சிரிக்கிறார் - ஆனால் அந்த மகா சிற்பி இதை எவ்வாறு செதுக்கி உள்ளான் என்று பார்க்கவேண்டும். சிவனின் முகத்தை இரு பதியாக பிரித்து, உமையை காணும் பாகம் பல் வரிசை காட்டி சிரிப்பது போலவும், மற்ற பாதி உக்ர தாண்டவம் ஆடும் சிவனின் ஆக்ரோசத்தை கட்டும் வகையில் கோரப் பல் வேலி தெரிய கோபமாக செதிக்கி தன் அற்புத கலை அறிவு / ஆற்றல் இரண்டையும் வெளி கொணர்கிறான். சுமார் ஐந்து அடி உயரம் உள்ள சிலையின் ஒரு ஓரத்தில் இருக்கும் உமை மற்றும் முருகனை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி சிவனின் இடது கை விரலை அங்கே காட்டி செதுக்கி உள்ள திறன் அருமையிலும் அருமை.
புகை படைகளை பார்க்கும் போது ஒன்று மனதில் கொள்ளுங்கள் - இவை அனைத்தும் வெறும் சிற்பங்கள் அல்ல - இவை ஒரே கல்லால் ஆனா தூண்களும் கூட - ஆங்கிலத்தில் மொனோளிதிக் ( monolothic sculpture) என்று அழைப்பார்கள் ... சுமார் பத்து அடி உயரம் உள்ள இவை மிக பிரமாண்ட முறையில் செதுக்க பெற்றன. யானை உரி போர்த்திய முர்த்தி - பின்னால் சென்று பார்த்தல் - யானின் முழு தோற்றத்தையும் காணலாம். மற்ற சிலை தூண்களும் அற்புதம்... மூஷிக வாகனத்தின் மேல் அழாக காலை
தூக்கி எட்டு கரங்களுடன் ஆடும் நர்தன கணபதி, பிரம்மா மற்றும் விஷ்ணு அழகாக தாளம் இட காலை தலைக்கு தூக்கி உக்ர தாண்டவம் ஆடும் சிவன், அழகிய காலி, ஆறு முகன் அழகே மயில் மீது தன் பன்னிரண்டு கைகளுடன் அமர்ந்து இறக்கும் காட்சி, மிகவும் ஆக்ரோஷமான கையில் நீண்ட சூலாயுதத்துடன் வீரபத்ரர்
.. அந்த சூலத்தின் வடிவம் எதோ உலோகத்தில் வார்த்தது போல் இருக்கிறது - அதனிலும் அருமை அதை பிடித்து இருக்கும் கை விரல்களின் உயிரோட்டம் ....
கம்போடியா சிற்பத்தில் மூன்று கால் உள்ளதா என்று சரியாக தெரியவில்லை - ஆனால் எலும்பு கூடு என்று தெரிகிறது.
இத்தொடர் பல அறிய தகவல்களைத் தந்து யோசிக்க வைக்கிறது!
அங்கோர்வாட் நம்மவர்களால் இன்னும் முழுமையாய் ஆராயப்படவில்லை. பிரெஞ்சு,
டச்சு, ஜப்பானியர்தான் இதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் இந்தியா
இதில் ஆர்வம் காட்டவில்லை? நம் மடங்களெல்லாம் காசை வைத்துக் கொண்டு என்ன
செய்கின்றன? ஒரு டூர் போய்விட்டு வந்து எதாவது எழுதினால் தேவலை :-)
அங்கோர்வாட் பிரகார நிர்மாணம் நான்கு யுகங்களின் அலகுகளை வைத்து
அமைக்கப்பட்டதாக டூர் கெயிடு சொன்னார். அதே போல் அதன் நிலைகள் (vertical
profile), பாதாள, பூலோக, வைகுந்த நிலைகள் போல் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பெருமாள் நின்ற திருக்கோலமாக இருந்திருக்க வேண்டும். இப்போது மூர்த்தி
இல்லை.
கண்ணன்
2008/1/22 Vijay kumar <vj.ep...@gmail.com>:
> அதனிலும் அருமை அதை பிடித்து இருக்கும் கை விரல்களின் உயிரோட்டம் ....இவற்றை
நரசிம அவதாரம் ஒரு புதிய கோலத்தில் அங்கு காணலாம். இதில் இருக்கும் இன்னொரு சிற்பமும் மிக அறிய ஒன்று... துரியோதனன் பிமனுடன் சண்டையிடும் காட்சி என்று இதனை நாம் எவ்வாறு அறிகிறோம் .... கலப்பை ஆயுதம் ஏந்தி நிற்கும் பலராமர் மூலம்......
நன்றி கண்ணன். மிக அறிய சிற்பங்கள் அங்கு உள்ளன.
நரசிம அவதாரம் ஒரு புதிய கோலத்தில் அங்கு காணலாம். இதில் இருக்கும் இன்னொரு சிற்பமும் மிக அறிய ஒன்று... துரியோதனன் பிமனுடன் சண்டையிடும் காட்சி என்று இதனை நாம் எவ்வாறு அறிகிறோம் .... கலப்பை ஆயுதம் ஏந்தி நிற்கும் பலராமர் மூலம்......
இன்னும் வினோதங்கள் பல உள்ளன. சென்ற மாதம் இந்த தளத்தில் கண்ட செய்தி...
http://www.bible.ca/tracks/tracks-cambodia.htm டைனாசௌர் சித்திரம் இங்கு உள்ளது.... இதை அவர்கள் நேரில் கண்டர்களா ?? பின் எப்படி இதனை வடித்தார்கள்
நமது கோவில்களில் யாழி போன்று சிற்பங்கள் கற்பனை என்றாலும் அதிலும் ஒரு புதிர்... நம் சரித்திரங்கள் போற்றும் பாலும் நீரும் கலந்த நிலையில் பாலை மட்டும் பிரித்து அருந்தும் ( நல்லதை மட்டும் எடுக்கும் உதாரணம்....) அண்ணப்பக்ஷி கற்பனையா இல்லை அழிந்த உயிரினமா ....பேரூர் கோவில் தூணில் அழகிய அண்ணப்பக்ஷி
இன்னும் வினோதங்கள் பல உள்ளன. சென்ற மாதம் இந்த தளத்தில் கண்ட செய்தி...
http://www.bible.ca/tracks/tracks-cambodia.htm டைனாசௌர் சித்திரம் இங்கு உள்ளது.... இதை அவர்கள் நேரில் கண்டர்களா ?? பின் எப்படி இதனை வடித்தார்கள்நமது கோவில்களில் யாழி போன்று சிற்பங்கள் கற்பனை என்றாலும் அதிலும் ஒரு புதிர்... நம் சரித்திரங்கள் போற்றும் பாலும் நீரும் கலந்த நிலையில் பாலை மட்டும் பிரித்து அருந்தும் ( நல்லதை மட்டும் எடுக்கும் உதாரணம்....) அண்ணப்பக்ஷி கற்பனையா இல்லை அழிந்த உயிரினமா ....பேரூர் கோவில் தூணில் அழகிய அண்ணப்பக்ஷி
கண்ணன்
2008/1/22 Vijay kumar <vj.ep...@gmail.com>:
>
>
பிரிங்கி ரிஷியின் சிலைகள் பல சிவன் கோயில்களில் காணலாம். சிலவற்றை இணைத்துள்ளேன். இவர் படாஞ்சலி முனி மற்றும் புலி கால் முனி ( வ்யாகபதர் ) பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு. நேரம் கிடைக்கும் போது இடுகிறேன்.
நன்றி
http://www.kamat.com/kalranga/mythology/7667.htmSouth Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar
பல்லவர் இவ்வாறு மிக அழகன உருவத்தை படைத்தனர். அதனை நம் சோழர் கலையின் உச்சிக்கே எடுத்து சென்றனர் - கல்லில் அல்ல ....உலோகத்தில்
ஆம் திவாகர் சார், இது போன்று சரித்திரம் மறந்த மாமனிதர்களில் இருவர் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் சோழர் வழி வந்த செம்பியன் மாதேவி மற்றொருவர் பல்லவ வழி காடவ கொபெருஞ்சிங்கன்....இருவரும் தனி முயற்சியால் பல்வேறு கோயில்களை கட்டினர். எனினும் அவர்களை நாம் மறந்து விட்டோம்.
பிரம்மா சிலை பற்றி தங்களுக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்
படங்களை சற்று பாருங்கள்.
ஆற்றின் மடியில் நீரோட்டத்தில் என்னாலும் குளிர்ந்த நீறாடும் லிங்கங்கள். அருமையான பிரம்மா .... ஆறு துள்ளி விழும் சிறு நீர்விழ்சியின் பாறையில் படுத்த கோலத்தில் விஷ்ணு காலில் லக்ஷ்மி நாபியில் இருந்து எழும் தாமரையில் பிரம்மா ... அவர்களை அடுத்து நந்தியில் அம்மை அப்பன். ....பாறைகள் அனைத்துமே லிங்க வடிவில் .....
வருத்தப் பட வேண்டிய விஷயம் ஒன்று ... கலை பொருள் திருடர்கள் சமிபத்தில் இந்த அறிய சிற்பங்களை சிதைத்து திருடிசென்றுள்ளனர். அதிலும் கொடுமை என்ன வென்றால் இது வேவ்வேறு நாள்களில் தொடர்ந்து நடை பெற்றுள்ளது .... படம் பிடித்தும் கூட காப்பாற்ற இயலவில்லை. ....
____________________________________________________________________________________
Never miss a thing. Make Yahoo your home page.
http://www.yahoo.com/r/hs
திவா
வஜ்ரா பாணி - இந்திரனின் வஜ்ராயுதம் .....zeus's thunder bolt.... நிறைய இருக்கிறது பிறகு பார்போம்.
பேலூர் ஹலேபிட் சிற்பங்களில் இரண்டு சில கேள்விகளை எழுப்புகின்றன ...
ஒன்று நாம் வில்வித்தை கதைகளில் ( கர்ணன் ) மிகவும் படிக்கும் மச்ச யந்திரம்.
இன்னொன்று ஆடும் பாவை ஆனால் அவள் கால் அடியில் இருக்கும் கருந்தேள் ....எது எதனை குறிக்கிறது.
இன்னொன்று ஆடும் பாவை ஆனால் அவள் கால் அடியில் இருக்கும் கருந்தேள் ....எது எதனை குறிக்கிறது.
விஜய்:
இது எளிது!
இது கௌளி. அதாவது நாம் ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும் போது கௌளி
(பல்லி) கெலித்தது (சப்தமிட்டது) என்றால் அந்த எண்ணம் பலிக்கும்.
தப்புத்தண்டாவாக நினைத்துக் கொண்டிருக்கும் போது கெலித்துவிட்டது எனில்,
உடனே நான் பதிலுக்கு அதே போல் சப்தமிட்டுவிட்டால், அதன் பலன்
மறுதலிக்கப்படும்!!
ஆகா!! நீங்கள் இதைச் செய்ததில்லையா? பள்ளி நாட்களில் இதுதான் வேலை. பல்லி
முட்டைக்கு இன்னொரு பயன்பாடு சொல்வார்கள் கிராமத்தில். அதையெல்லாம்
எழுதமுடியாது :-)
இவையெல்லாம் பழம் நம்பிக்கைகள். இதன் தோற்றம் என்னவென்று தெரியவில்லை.
இப்போதெல்லாம் வீடுகளில் பல்லி உலாவுகிறதாவென்று தெரியவில்லை. உபயோகமுள்ள
பிராணி.
கண்ணன்
You set a model for others in archiving with proper citation.
Excellent information.
I wonder when I will have time placing these photos in our "Image
Heritage" blogs. I need a co-blogger to assist me. Anybody with some
time?
Kannan
2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:
அறிய / அற்புத கோபுரம் - அஜிஞ்சிவாக்கம் ... beauty in even such a sad state..its making a statement.
புது கும்முடி பூண்டி - அற்புத ப்ரான்ஸ் ( bronze) சிலைகள் - ஐயோ நெஞ்சம் வெடிக்கிறது - இந்த அவல நிலையை பார்த்தால். முன்பு எழுதினேன் - அது போல் இவை இங்கு இருந்து சிதைவதை விட எங்கோ அமெரிக / ஐரோப்ப கண்காட்சியகங்களில் இருந்து வாழ்வதே மேல்.
உங்கள் ஈடுபாடு எலோரையும் இழுக்கட்டும்.
தமிழகம் பொக்கிஷம். அங்கு பாரதி சொல்வது போல் "புகழ் மண்டிக்
கிடக்கிறது"! எதுவுமே மண்டினால் புகழ் இழந்து விடுகிறது. நமது
கோயில்களிம் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுளே நாளைக்கு கண்ணில்
பட்டிவிட்டால் மதிப்பு இழந்துவிடுவார்! அதுதான் மனித இருப்பியல்!
எனினும், தமிழகத்துத் தமிழர்களும், வெளிவாழ் தமிழர்களும் கைகோர்த்தால்
நிலமையை விரைவில் சீர் திருத்திவிடலாம். இது குறித்த என் சிந்தனைகளைக்
கீழ்சுட்டியில் கொடுத்துள்ளேன்.
http://www.e-mozi.com/articles/adopTemp.html
இந்த உழவாரப்பணிக்குழுவுடன் முதலில் நம் தொண்டை ஆரம்பிக்கலாம். ஆனால்
"காக்க வேண்டிய" அரசு இடையில் வந்து குழப்பினால் என்ன செய்வது என்றும்
யோசனை. அதை விடுவோம். எங்களூர் திருப்பூவணம் சென்ற போது வெளிப்
பிரகாரத்தில் பல பிள்ளைகளுக்கு தேவாரம் சொல்லிக்கொடுக்கும் ஒரு குழுவைக்
கண்டேன். நமது கோயில்களில் இதை ஆதரிக்க வேண்டும். இது போல் எத்தனையோ
யோசனைகள்.
ஆர்வமுள்ளோர் எழுதுகிறார்களா பார்ப்போம்!
கண்ணன்
2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:
தன் வளகறதால் தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம் - ஆனால் நமது சிர்பியோ ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.
2 attachments — Download all attachments View all images | |||
| |||
|
ஐம்பொன் சிலை வார்ப்பு என்பது பூடகமான கலை. சோழர்கால உலோகக் கலப்பு இன்று
கூட வேதியியல் அறிஞர்களுக்கு பிரம்மிப்பூட்டுகிறது.
நமது கோயில் நிர்மாணம் என்பது எப்படி சாத்தியமாயிற்று, அதுவும் ஒரு கல்-
அதுவே நிலைக்கல், அதுவே கலை வெளிப்பாடு! இதில் சேதாரம் இல்லாமல் எப்படிச்
செய்ய முடிந்தது. கருங்கல்லை இஷ்டம் போல் waste செய்ய முடியாது. யார்
கொண்டு வருவது. அரசன் பிரம்படி கிடைக்கும் (சிவனாருக்கே
கிடைக்கவில்லையா!)
அங்கோர் வாட் கோயில் நிர்மாணம் மிகவும் வேறு படுகிறது. அதுவும் அதிசயமே!
தொடர்ந்து இந்தியாவில் வெளிநாட்டார் ஊடுருவல் நம் கோயில்களை சிதைத்தும்,
அதன் மீதுள்ள அபிமானத்தை சிதைத்தும் விட்டன.
சுயமரியாதை இயக்கம் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் போக்கிவிட்டது.
ஒன்று வந்தால் ஒன்று போய்விடுகிறது.!!
முன்பு நமது வாழ்வு கோயிலைச் சுற்றி இருந்தது. இதனால்தான் இந்தோ-ஐரோப்பிய
கலாச்சாரங்களில் கோயில் ஊரின் நடுவே இருக்கும். ஆனால் இப்போது அது
subaltern நிலைக்கு போய்விட்டது!
கலை உணர்வு முன்பு இருந்தது. அது வளர்த்தெடுக்கப்பட்டது. இப்போது காசு,
காசு என்று அலையவேதான் நேரமிருக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல்
கலையுணர்வு மரத்துப்போன ஒரு நிலை. நமக்கு எப்போது கண்ணீர் வருகிறது? நம்
நெஞ்சுக்கு மிக அருகிலிருக்கும் ஒன்று நம்மை விட்டுப் போகும் போதுதான்!
நம் கோயில்கள் நம் நெஞ்சை விட்டுப் போய்விட்டன. போலிப் பூசாரிகளும், போலி
பக்தர்களும்தான் கூடிவிட்டனர். இவர்களால் உப்யோகத்தைவிட உபத்திரவமே
அதிகம்.
இப்படி...
கண்ணன்
2008/1/23 vj.ep...@gmail.com <vj.ep...@gmail.com>:
முதல் முதலில் சிவனின் உருவ வடிவம் Indus valley civilisation போது கிடைகிறது என்று அறிகிறேன். அங்கே சிவன் (பசுபதன்) தபசியாக சித்தரிக்கப் பட்டுள்ளான் . அதே சித்தரிப்பில் மாடு ஒன்று இருப்பதையும் காண இயலும். . காலப்போக்கில் நந்தி சிவ பூதகன தலைவன் என்றும் ( பிள்ளையார் அந்த பதவியை எடுப்பதற்கு முன்) படித்துள்ளேன். நந்தி பற்றி பல கதைகள் உள்ளன - எனினும் சிவ கண தலைவன் என்ர முறையில் சிவ ஸ்தலத்தை காக்கும் நோக்கத்தோடு நந்தி சிவனின் முன் உள்ளார் என்று நான் நினைக்கிறேன்.இந்த நிலையில் ஒன்று நாம் காண வேண்டும் - மல்லை சிற்பங்களில் முருகர் சொம்ச்கந்தர் உருவில் காண இயலும் ஆனால் விநாயகரை காண இயலாது ? இது மல்லையை ஒட்டி உள்ள புதிர்களில் ஒன்று.sources :On 1/16/08, இரவா <vasude...@gmail.com > wrote:
கோயில்களில் எருதுகள் நந்தி எனும் பெயரில் இடம்பெற்றதன் நோக்கமும் காரணமும் என்ன? விளக்குங்கள்.
On 1/16/08, Vijay kumar < vj.ep...@gmail.com > wrote:இதர மடல்களில் ஜல்லிக்கட்டு பற்றி சுவாரசியமாக விவாதங்கள் நடப்பதை கண்டபின் எருதை அருமையாக பல்லவ சிற்பிகள் செதுக்கிய மல்லை கோவர்த்தனம் சிலைகள் நினைவுக்கு வந்தது. நிற்கும் காளை, அழகாய் அமர்திருக்கும் காளை ( தொண்டை அடியில் தொங்கும் தோலின் மடிப்புகள் அருமையாக செதுக்கி உள்ளார்கள்), பால் கறக்கும் ஆயன், தாய் பசு அன்பாய் தன் கன்றை நாக்கால் நக்கி கொடுக்கும் உணர்வு உயிரோட்டம்...
பஞ்ச ரத கூட்டத்திலும் இருக்கும் பல்லவ சின்னமான இது ( சிங்கமாக மாறுவதற்கு முன்) உருவத்தில் பெரியதாக வடித்தாலும் அங்க அமைப்புகள் குன்றாமல் செதுக்கிய வண்ணம் அருமை.
On 1/14/08, Vijay kumar < vj.ep...@gmail.com > wrote:அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள்.
சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார். இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.
தமிழ்கத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம். மல்லை ஒரு புரியாத புதிர். அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன.
மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.
பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம். இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை.
ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரததிணை பாருங்கள். சகாதேவ ரதம் கச ப்ரிச்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கச - யானை , ப்ரிச்டம் - முதுகு) இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரத மேல் பாகமும் யானையின் முத்கைய்யும் ஒத்து இருப்பதை உணரலாம். இத்தனை காண்போருக்கு உணர்த்தவே அச் சிற்பங்கள் அங்கு உள்ளன. ஆஹா
On 1/11/08, வேந்தன் அரசு < raju.ra...@gmail.com > wrote:
இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
2008/1/11 Vijay kumar < vj.ep...@gmail.com>:
சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல் காய்ந்த கருவேல முர்க்களே.
நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது - அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமர செதுக்கிய அந்த மகா சிற்பியின் ஆவி தற்போது நில்லையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்ய்ய்ய்யோ , அக் கற் சிலையை செதுக்க அச் சிற்பி எப் படு பட்டுஇருப்பனோ,
imagine the pain passing through his veins as he delicately brought forth his years of knowledge filtered though generations by word of mouth, passing through his blistered hands, into making this poetry in stone.... அக் கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் ...நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் - அவர்கள் விரோதிகள் - பகைவர்கள் மன்னிக்கலாம் , இம் மூடர்களோ ...இவர்களை என்ன வென்று சொல்வது - சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ rockfeller கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல் .
On 1/11/08, Narayanan Kannan <nka...@gmail.com > wrote:நண்பர்களே:
திரு.விஜயகுமார் சுவாரசியமான ஒரு தொடரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.
இத்தொடரை இத்தலைப்பின் கீழ் இடுமாறு வேண்டுகிறேன். நாம் எல்லோரும் அவரவர்
ஆல்பத்திலிருந்து ஒன்றிரண்டு உருவி இங்கு இடுவோம்.
ஒரு இழையாக இது வரவேண்டுமெனில் இங்குள்ள "பதில்" பொத்தானை அமுக்கி
வெளியிடவும். புதிய சேதியாக இருப்பின், பொத்தானை அமுக்கியபின் காண்கின்ற
பழைய சேதியை அழித்துவிட்டு புதிதாக எழுதி, இணைக்க வேண்டியதை இணைத்து
அனுப்பவம். ஒவ்வொரு இடுகைக்கும் புதிய தலைப்பிட்டால் (never add a new
Title in the "SUBJECT". Then the chain will break. NEVER change the
title, but just "reply") இழை அறுந்து போகும். கவனம்!!
இணைப்பிலுள்ள படம் திருவாசகர் பிறந்த ஊரான திருவாத ஊர். கோயிலில்
நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பினால் இக்காட்சி படும். கோயில் இடிபடும்
போது விசித்திரம் வெளிவருகிறது! கவனித்துப் பாருங்கள் எப்படி இடுக்கி
போட்டு காலத்தை வென்று நிறகக் கூடிய ஸ்தரத்தன்மையை கோயில் நிர்மாணத்தில்
வழங்குகின்றனர். இது என்ன என்சிநியரிங்?
கண்ணன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
அச்சிலையின் கால் பக்தியில் கைலாசம் தெரிகிறது. ஆனால் மயிலும் தெரிகிறது!
மால் மருகன், மாமா போல் விஸ்வரூபம் தருகிறானா? (பெருமாளே! அருணகிரியைக் கேளும் :-)
இல்லை சிவனே அதைத் தருகிறானா?
எல்லாத் தெய்வங்களின் ஆயுதங்களும் உள்ளன.
கண்ணில் பட்டது சங்கும், சக்கரமும்தான் :-)
கண்ணன்
2008/1/23 venkatram dhivakar <venkdh...@gmail.com>:
--
----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, January 23, 2008 12:08:04 PM
Subject: [MinTamil] Re: தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்!
Vijay:
You set a model for others in archiving with proper citation.
Excellent information.
I wonder when I will have time placing these photos in our "Image
Heritage" blogs. I need a co-blogger to assist me. Anybody with some
time?
Kannan
2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:
> This sculpture forms a series of dancing girl images - none of the others
> show such iconography.
>
> Similarly, am unable to explain these discreet lizards in many temples at
> odd places....
____________________________________________________________________________________
வாசகர்களுக்கு இன்னும் ஒரு புதிர். இந்த கல் தூணில் இருக்கும் காட்சி - விஸ்வாமித்ரா முனிவரை மேனகை கவரும் காட்சியா இது - கீழே இருக்கும் வில் ஏந்திய புருஷன் காமதேவன் மற்றும் அவன் அருகில் ரதி தேவி..... விவாதம் தொடறட்டும்
On Jan 23, 2008 4:39 PM, kra narasiah <nara...@yahoo.com> wrote:
>
> Hats off to Vijay who is doing an excellent job. I wish I cud help you but as you know my knowledge about bloggong is as much as my late grandmother's knowledge of protoplasm! (or whatever it is!)
> narasiah
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
நீங்கள் இருவருமே உதவலாம். "Image Heritage" Blog-ல் எப்படிப் படங்களைக்
கோர்ப்பது என்று தனிமடல் எழுதுகிறேன். இது Blogger போலில்லாமல் கொஞ்சம்
வித்தியாசமானது. (ஆயினும் அடிப்படை ஒன்றுதான்). உங்கள் தொலைபேசி எண்களைத்
தாருங்கள். வாரக்கடைசியில் அழைக்கிறேன் (தனிமடலில் அனுப்புங்கள் -PRIVATE
என்று தலைப்பிட்டு).
நன்றி.
கண்ணன்
2008/1/24 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
--
கோவில் பராமரிப்பு பற்றி நம் விவாதம் தொடர்வதால் ... எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுமறு கீழே உள்ள ஸ்ரீரங்கம் ( இவை பழைய படங்கள்) கோபுரம் படங்களை இணைகிறேன். பழைய படமயினும், குற்றம் குற்றமே ..... கோவில் வாயிலில் சாணி மொழுகி விடுவர், ஆனால் இங்கோ ........ அற்புத வேலைபாட்டிற்கு கிடைத்த சன்மானம் வராட்டி அணிவகுப்பும், விறகு கட்டை குவிப்பும்.
வாய் பேச முடியவில்லை! இந்தியாவில் மனித உயிருக்குத்தான் மதிப்பில்லை
(எத்தனை சாவுகள் போக்குவரத்தால், வன்முறைகளால்) என்று எண்ணியிருந்தேன்.
கடவுளுக்கும் மதிப்பில்லை என்று தெரிகிறது! இனிமேல் முட்டிக் கொள்ள
கோயில் சுவர் கூட கிடைககாது போலும் (சாணியில் யார் முட்டுவர்?
முட்டினாலும் நஷ்ட ஈடு கேட்டு விராட்டி மாது வந்துவிடுவார்!!)
மதுரையில் கோயில் சுவரில் ஒண்ணுக்கு அடிக்கிறார்கள் என்று சின்னச் சின்ன
விக்கிரங்களை வெளியே வைத்து ஒரு கோயில் தன்மானத்தைக் காத்துக் கொண்டதை
கண்டிருக்கிறேன்!
கோயில் உள்மதிலில் முதலில் திருமண் போடுவதே தவறு! அப்படி என்ன ஒரு
insecurity? இவர்கள் வழிகாட்டலில் இப்போது இரட்டை இலை, ஒற்றைச் சூரியன்!
பலே! பலே!
கிருஷ்ணப் பிரேமி ஒரு உபன்யாசத்தில் சொன்னார் கோயில் மடப்பள்ளியிலிருந்து
கட்சி பார்ட்டிக்கு உணவு போவதாக!!
இம்மாதிரியெல்லாம் நடக்குமென்றுதான் Temple Managent (கோயில் ஒழுகு)
என்று இராமானுஜர் புத்தகம் எழுதிவைத்தார். அப்படியிருந்துமா? இது அரங்கன்
கோயிலிலா? எந்த சந்நிதி?
கண்ணன்
2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:
இந்த தொடர் வேண்டும் என்றே கோவிலின் முக்கிய சிற்பங்களை விட்டு வெளியில் இருக்கும் சிறு சிற்பங்கள் மற்றும் தூண்களில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் அடுத்த முறை நீங்கள் கோவிலுக்கு செல்லும் போது கற்பகரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், இதர நுண்ணிய வேலைபாடையும் கவனிய வேண்டும் என்பதற்காகவே.....
ஸ்ரீரங்கத்தில் இந்தக் கதையைச் சொல்ல கொஞ்சம் தைர்யம்தான் வேண்டும் :-) ;-)
(மேலே தொண்டரடிபொடியிடம் கேட்டுக்கொள்ளவும்;-)
கண்ணன்
Vijay:
It looks like that from a 21st century point of view but the finest
tradition of India leaves no signature. J.Krishnamurthi calls it "the
flight of the eagle" which leaves no trail behind. There is so much
charm in annonimity than leaving a signature!
Kannan
திவா
2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:
PUDUKOTTAI: A cow offering worship to Lord Shiva with milk is one of the important mythological incidents, associated with the idols of 'Swayambu Lingams.' It is also believed that Goddess Parvathi assumes the form of a cow to offer similar worship to an idol of Lord Shiva.
A rare form of a cow supporting this legend has been unearthed from the tank of Sri Siganathar temple at Kudumiyanmalai, also known as Tirunalakundram, about 30 km from here. A long canal, made of stone, facilitating the flow of water from the temple, ends up at the tank.
The image had been designed such that water flowing through the canal, passes through the udders of the animal, indicating its offer of worship with milk, says epigraphist Kudavayil Balasubramanian.
What is more interesting is the culling out of a hole right below the udders of the animal, testifying to the 'ksheerabishekam' or offering worship with milk. He says that the sculpture dates back to the Pallavarayar era.
வள்ளி வயலில் ( கம்பு வயலோ? ) சாரம் கட்டி பறவைகள் வராமல் காவல் காக்க.. கையில் என்ன?? உண்டிகோல் போல் இல்லாமல் ஒரு கையால் சுற்றி கல் எரியும் sling .... கீழே வயோதிட வேடத்தில் குமரன்.
ஆணை வடிவில் தமையன் உதவ, பயந்து தாத்தாவின் பின் ஒளிந்து நிற்கும் வள்ளி. சந்தர்பத்தை பயன்படுத்தி அணைக்கும் தாத்தா......super
நாம் முன்பு சுசிந்திரம் கோபுரத்தில் பார் கடல் கடையும் காட்சி கண்டோம். இதே காட்சி கம்போடியா அங்கோர் வாட்டிலும் உள்ளது. இதனை பற்றி திரு Jaybee அய்யா's அற்புத மடல் முன்பு ( இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி ... ) பார்த்தோம்.
சமீபத்தில் தாய்லாந்தில் புதிய விமான நிலையம் துவங்கியது - அதன் பெயர் சுவர்ணபூம். உள்ளே நுழையும் போதே பிரமாண்ட சிலை.....churning of the the milky ocean...
இந்திரன் பற்றிய வேறொரு மடலில் தாய்லாந்தில் ஐராவதம் மிக விசேஷம் என்று கூறினேன். அங்கே ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது - பெயர் ... இரவாடி முசிஎம் ... வெளியில் மிக பிரமாண்ட சிலை ....ஐராவதம் .....இந்த சிற்பம் மூன்று தலைகளுடன் சுமார் 29 மிட்டர் உயரமும் 39 மிட்டர் அகலமும் உடையது. மேடையை சேர்த்தல் உயரம் 44 மிட்டர்
இதே ஸ்ரீரங்கம் ஜம்புகேசவர் கோவில் வெளி கோபுரத்தில் உள்ள இந்த அழகிய கண்ணப்பர் கதை விளக்கும் சிற்பம் .
திருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்
கண்ணப்ப னொப்பதோ
ரன்பின்மை கண்டபின்
னென்னப்ப னென்னொப்பி
லென்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே
சென்றூதாய்! கோத்தும்பீ!
--------------------------------------------------------------------------------
[
கண்ணப்ப நாயனார் தூண் சிற்பம்; விஷ்ணு கோவில் உட்பிராகாரம், பறக்கை கிராமம், கன்னியாகுமரி மாவட்டம்]திருப்பாற்கடல் கடையும் காட்சி மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
நான்முகன் கோயிலுக்குப் போகும் வழியில் இரண்டு புறங்களிலும் இக்காட்சி.
இது போன்ற முயற்சியை எந்த இந்தியச் சிற்பியும் மேற்கொள்ளவில்லை. பல
கோணங்களில் அங்கோர்வாட் கோயில் நிர்மாணம் இந்திய அமைப்பிலிருந்து
வேறுபடுகிறது. அங்குள்ள நான்முகன் கூட திருமாலின் விஸ்வரூப
பிரம்மாண்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். நமது கலைஞர்கள், அறிஞர் குழு
அங்கு சென்று ஒரு விவரமான ரிபோர்ட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பல
சந்தேகங்கள் தெளியும்.
கண்ணன்
2008/1/25 Vijay kumar <vj.ep...@gmail.com>:
இந்த கதை கட்டும் சிற்ப்பங்கள் - உற்று கவனியுங்கள் - படத்தின் வலது புறம் மேல் பாதி - முனிவர் வேடத்தில் அசுரன் விரல் நீட்டி குலத்தை கட்டும் காட்சி, இடது புறத்தில் ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே - பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்..
>
ஸ்ரீரங்கத்தில் இந்தக் கதையைச் சொல்ல கொஞ்சம் தைர்யம்தான் வேண்டும் :-) ;-)
(மேலே தொண்டரடிபொடியிடம் கேட்டுக்கொள்ளவும்;-)
கண்ணன்
நன்றி கண்ணன்,
உங்கள் வாதம் கல்கியின் பொன்னியின் செல்வனின் வரும் ஆழ்வார் கடியானை நினைவுட்டுகிறது. சதா சைவர்களை சண்டைக்கு இழுக்கும் அந்த வீர வைணவன் பாத்திரத்தை கல்கி அழகாக படைத்தது இருப்பார்.
கச்சபெஷ்வரர் ( கச்ச - ஆமை சமஸ்கிரதம்) என ஒரு சிலை உண்டு. திருமால் மந்தர மலை ( திரு பாற்கடலை கடைய உதவிய மத்து) பாரம் சுமக்க சிவபெருமானை வேண்டி பலம் பெற்றார் என்று கதை. அந்த சிற்பங்கள் கிழே காணலாம். சிவ லிங்கத்தை வழிபடும் குர்மா அவதாரம் பூண்ட பெருமாள் ....
thanks
http://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040800100300.htm http://www.cbmphoto.co.uk/States/TNkanchi.html
அடுத்து ஒரு மிக அறிய சிலையை காணப்போகிறோம். திரு குடவாயில் பால்சுப்ரமனியாம் அவர்கள் இச்சிலையின் நுணுக்கங்களை தி ஹிந்து ( The Hindu) நாளிதழில் விளக்கி உள்ளார்.தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிற்பம் தராசுரம் கோவிலை சார்ந்தது.முதலில் கதை - சிவன் வீரட்டானம் எனப்படும் சிவனின் வீரம் வெளிப்பட்ட ஸ்தானம் - மொத்தம் எட்டு - கஜசம்ஹாரம் - மன்மதன் தகனம் - மார்கண்டேய புராணம் ....
கஜசம்ஹாரம் சம்பந்தர் தேவாரத்திலும் இடம் பெறுகிறது - மூன்றாம் திருமுறை பாகம் இரண்டு ... "யானையுரி பொர்த்துமகிழ்" என்ற வரிகளை காண முடியும்.... யானை - உரி ( தோல் ). பேரூர் பட்டேஸ்வரர் கோவிலிலும் மிக அழகிய பிரமாண்ட யானையுரி போர்த்தியமூர்த்தி சிலையை காணலாம் - புகை படம் எங்கு உள்ளது என்று தேடி அடுத்த மடலில் இடுகிறேன்.
கஜாசுரன் என்ற அசுரனை வதம் செய்து ...அதுவும் எவ்வாறு ... யானை உருவில் இருந்த அசுரனின் துதிக்கை மூலம் அவனுள் சென்ற சிவபெருமான் அவன் உடலை உள்ளிருந்து கிழிக்கும் காட்சி இது. அவனுடைய தலையின் மேல் ஒரு காலை இட்டு, அவன் தொலை கரங்களால் தூக்கி போற்றிய வாறு உக்ரதாண்டவம் ஆடும் கோலம்.
ஆனால் நாம் காணவிருக்கும் இந்த கஜசம்ஹாரம் சிலை மிகவும் விநோதமானது. உடம்பை முறுக்கி ஆடும் தோற்றம் மிக கடினமான வடிவம் - அதை தத்ருபமாக செதுக்கி உள்ளான் , கை நகங்கள் யானை தொலை கிழித்து வெளிவருகின்றன, யானையின் பின்னங்கால் மற்றும் வால் சிலையின் தலை பாகத்தில் காணலாம். உக்ரமான இந்த ஆட்டத்தை காணும் உமை, தன் மடியில் இருக்கும் குழத்தை முருகன் இதை கண்டு பயமுருவானோ என்று அஞ்சி அவனை வேறு பக்கமாய் மறைக்குமாறு செதுக்கி உள்ள சிற்பியின் கற்பனை அபாரம். அதை விட விந்தை என்ன வென்றால், உமையின் இந்த நிலையை காணும் சிவன் இரு பல் வரிசை காட்டி சிரிக்கிறார் - ஆனால் அந்த மகா சிற்பி இதை எவ்வாறு செதுக்கி உள்ளான் என்று பார்க்கவேண்டும். சிவனின் முகத்தை இரு பதியாக பிரித்து, உமையை காணும் பாகம் பல் வரிசை காட்டி சிரிப்பது போலவும், மற்ற பாதி உக்ர தாண்டவம் ஆடும் சிவனின் ஆக்ரோசத்தை கட்டும் வகையில் கோரப் பல் வேலி தெரிய கோபமாக செதிக்கி தன் அற்புத கலை அறிவு / ஆற்றல் இரண்டையும் வெளி கொணர்கிறான். சுமார் ஐந்து அடி உயரம் உள்ள சிலையின் ஒரு ஓரத்தில் இருக்கும் உமை மற்றும் முருகனை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி சிவனின் இடது கை விரலை அங்கே காட்டி செதுக்கி உள்ள திறன் அருமையிலும் அருமை.
Image courtesy - American Institute Of Asian Studies, photo archive...
ஆழ்வார்க்கடியனாதல் அரிது ;-)
கல்கி செய்த விஷமம் என்று தோன்றுகிறது ;-)
நீங்கள் சொல்லும் கதையெல்லாம் புதுக்கதையாக இருக்கிறது, அதுதான். எந்தப்
புராணமென்றும் தெரிந்தால் நலம் (இது தொடருக்கு அவசியமில்லைதான். ஆனால்,
ஒன்றைப் பலமுறை சொன்னால் அதுவே உண்மையாகிவிடும். அவ்வளவுதான்!)
கண்ணன்
இது சிற்பியின் அபார திறமை வேலிகொனரும் - ஒரு மாடா அல்லது மூன்று மாடுகளா. ஒன்று லிங்கத்திற்கு பால் கொடுக்கிறது, ஒன்று லிங்கத்தை நக்குகிறது, ஒன்று தலை தூக்கி நிற்கிறது. இன்னொரு தூணில் இரண்டு மாடுகள்
முன்பு நாம் தராசுரம் சிர்ப்பதில் மாடும் யானையும் இணைவதை கண்டோம், மதுரை கோவிலிலும் உள்ளது - ஓவியமாக அங்கு காணலாம்.
திவாகர் சார்,
நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று தங்களை போன்றவர்கள் தான் கூற வேண்டும்.
சலா என்ற இளைஞர் சுதாத்தா என்ற சமண துறவி சொல்லிகொடுத்த வாரு எதிர் கொண்ட புலியை தாக்க புலி மடிந்தது. இந்த சம்பவம் நடந்த இடம் சொசெவுர்,. இந்த குறிப்பு விஷ்ணு வர்தன ராஜாவின் பேலூர் கல்வெட்டில் இருக்கிறது. ஹோய் என்பது பழைய கன்னடத்தில் அடி என்றும் அது அடித்த சாலனின் பெயருடன் சேர்ந்து ஹோய்ச்ள என்று வந்தது. இந்த கதையையே அவர்கள் தங்கள் சோழர் மிது கண்ட வெற்றியாக ( முதலாம் குலோத்துங்கன் காலம் - விட்டால போர் ) பாவித்து அவர்கள் தங்கள் சின்னமாக பெற்றனர். சின்னம் இணைத்துள்ளேன். இதே போல் சோழர் காலத்து யானையை வெல்லும் புலி சிற்ப்பங்கள் மற்றும் சோழர் காசு - பாண்டிய, சேர வெற்றி குறிக்கும் படைகளை விரைவில் இடுகிறேன்.
கண்ணன்
2008/1/28 Vijay kumar <vj.ep...@gmail.com>:
>
>
> திவாகர் சார்,
>
> நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று
> தஙசுவாரசியளை போன்றவர்கள் தான் கூற வேண்டும்.
--
"Be the change you wish to see in the world." -Gandhi
Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818
திவாகர் சார்,
நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று தங்களை போன்றவர்கள் தான் கூற வேண்டும்.
சலா என்ற இளைஞர் சுதாத்தா என்ற சமண துறவி சொல்லிகொடுத்த வாரு எதிர் கொண்ட புலியை தாக்க புலி மடிந்தது. இந்த சம்பவம் நடந்த இடம் சொசெவுர்,. இந்த குறிப்பு விஷ்ணு வர்தன ராஜாவின் பேலூர் கல்வெட்டில் இருக்கிறது. ஹோய் என்பது பழைய கன்னடத்தில் அடி என்றும் அது அடித்த சாலனின் பெயருடன் சேர்ந்து ஹோய்ச்ள என்று வந்தது. இந்த கதையையே அவர்கள் தங்கள் சோழர் மிது கண்ட வெற்றியாக (
முதலாம் குலோத்துங்கன் காலம் - விட்டால போர் ) பாவித்து அவர்கள் தங்கள் சின்னமாக பெற்றனர். சின்னம் இணைத்துள்ளேன். இதே போல் சோழர் காலத்து யானையை வெல்லும் புலி சிற்ப்பங்கள் மற்றும் சோழர் காசு - பாண்டிய, சேர வெற்றி குறிக்கும் படைகளை விரைவில் இடுகிறேன்.
போசள மன்னர்கள் என தமிழில் அழைக்கப்படுகிறார்கள் விஜய்!திவாகர்
On 1/28/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
ஹைசால மன்னர்கள் ( அவர்கள் பெயரே ஒரு புதிர் - அதை பின்னால் பார்ப்போம்) பல கோவில்கள் நிறுவினர். அவற்றில் இன்னும் பார்வையில் வராத தலகாடு ( talakad) கோவில் தூண் ஒன்றை பார்போம்.
இது சிற்பியின் அபார திறமை வேலிகொனரும் - ஒரு மாடா அல்லது மூன்று மாடுகளா. ஒன்று லிங்கத்திற்கு பால் கொடுக்கிறது, ஒன்று லிங்கத்தை நக்குகிறது, ஒன்று தலை தூக்கி நிற்கிறது. இன்னொரு தூணில் இரண்டு மாடுகள்
thanks - Ritish Swamyமுன்பு நாம் தராசுரம் சிர்ப்பதில் மாடும் யானையும் இணைவதை கண்டோம், மதுரை கோவிலிலும் உள்ளது - ஓவியமாக அங்கு காணலாம்.
இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை. சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.
இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.
அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.
அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.