மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இதுநாள் வரை எவராவது கற்றுக்
கொடுத்திருக்கிறோமா? மக்கள் தான் தாமே முன்வந்து, என்னமோ ஜனநாயகம்,
பொறுப்பு என்று என்னமோ இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்களே, அதெல்லாம்
என்னவென்று கற்றுக் கொள்ள இது வரை முன்வந்திருக்கிறார்களா?
தலைவர்கள் தாங்களும் ஒன்றும் செய்யத் திராணியற்றவர்களாக, ஜனங்களுக்கு
வழிகாட்ட, வழிநடத்த யோக்கியதை அற்றவர்களாக, வேற்று வாக்குறுதிகளிலேயே,
வெற்று மாய்மாலங்களிலேயே இலவசங்கள் என்ற மாயையில் ஆழ்த்தி மயக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.
ஜனங்களும், எப்போதடா இடைத் தேர்தல் வரும், திருமங்கலம் தொகுதியில் அள்ளி
விட்ட மாதிரியே, இங்கே கட்சிகள் ஓட்டுக்குப் பத்தாயிரம் அள்ளி
விடுவார்கள் என்று நாக்கைத் தொங்கப் போட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்!
இடைவேளையில் இருக்கவே இருக்கிறது இலவசத் தொல்லைக் காட்சிகளும், மானாட
மயிலாட போன்ற நிகழ்ச்சிகளும்!
அத்தையெல்லாம் விட்டு விட்டு மக்கள் என்ன மாதிரியான பணி செய்ய முன்வர
வேண்டுமென்று சொல்ல வருகிறீர்கள் ஐயா!!
இது என்னுடைய எதிர் விளம்பரம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
On Dec 23, 10:26 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> *இன்று ஒரு விளம்பரம்*
இங்கே அரசு இயந்திரம் அல்லது நிர்வாகம், நீதித்துறை, சட்டமியற்றும்
அதிகாரம் படைத்த நாடாளுமன்றம் இப்படி மும்மூர்த்திகளாக இருக்க
வேண்டியவைகளே மாறி, கந்தபுராணத்தில் சொல்லப்படுகிற மாதிரி இரும்பு,
வெள்ளி, பொன்னால் ஆன கோட்டைகளைக் கட்டிக் கொண்டு அசுரர்கள் ஜனங்களை
வாட்டி வதைத்தது மாதிரியாகிப் போயிருக்கும் அவலத்தைத் தான் தொட்டுச்
சொன்னேன்.
Accountability! இது அரசு ஊழியர்களுக்காக இருக்கட்டும்,
அரசியல்வாதிகளுக்காக இருக்கட்டும், நீதிமான்களுக்காக இருக்கட்டும்,
அவர்களே பார்த்துப் போனால் போகிறது என்று பொறுப்பெடுத்துக் கொண்டால்
தவிர, வேறெப்போதாவது இருந்திருக்கிறதா?
ஒரு சின்ன வழக்கு ஒன்றைப் பார்ப்போம்!
ஒருவர், தன்னுடைய இடத்தை ஆக்கிரமித்து அடுத்த வீட்டுக் காரர் கட்டடம்
எழுப்பிக் கொண்டிருக்கிறார் என்ற குறையை, முறைப்படி, சர்வே துறையிடம்
தன்னுடைய இடத்தை அளந்து அத்துமால் குறித்துத் தரவேண்டும் என்று
ஆரம்பித்தார். அவர் செய்த ஒரே தவறு, வாங்கும்போதே இருந்த இந்த
ஆக்கிரமிப்பைப் பற்றி முழுவிவரமும் அறியாமல், கிரையம் செய்தது.
சமாதானமாகப் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயற்சித்துக்
கொண்டிருந்தார்.நில அளவைத் துறை ஆக்கிரமிப்புச் செய்தவருக்கு சாதகமாகவே
"கள்ள மௌனம்" சாதித்தது. மாவட்ட ஆட்சித் தலைவரிடம், குறைதீர்ப்பு நாளில்
மனுக் கொடுத்தார். ரசீது கொடுத்ததோடு சரி.
மாநகராட்சி ஒப்புதல் இல்லாமலேயே பழைய கட்டடத்தை மாற்றி கட்ட ஆரம்பித்த
அடுத்த மனைக்காரர், தன்னுடைய ஆக்கிரமிப்பை உறுதிப் படுத்திக் கொள்ளும்
விதமாக, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தையும் சேர்த்து, மாடிப்படி கட்டித் தன்
வசத்தில் நிரந்தரமாக வைத்துக் கொள்ளும் ஏற்பாட்டைத் தொடர்ந்தார்.
ஆக்கிரமிக்கப் பட்ட இடத்தில் தான் முன்னமேயே கட்டியிருந்த காம்பவுண்டு
சுவற்றின் மீதும் பில்லர் எழுப்பி மாடியை விஸ்தரித்துக் கட்ட முயன்றபோது,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்டவர், மாநகராட்சி உதவி
ஆணையாளர், முதன்மை நகர அமைப்பு அலுவலர் இருவரிடமும் மனுக் கொடுத்தார்.
மாநகராட்சி ஆணையாளருக்கும் ஒரு மனுவை அனுப்பினார். உதவி
ஆணையாளரிடமிருந்து மட்டும் ஒரு பதில்: முறைப்படி அனுமதியில்லாமல்
கட்டப்பட்டிருக்கும் பகுதிக்கு நோடீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக!நோடீஸ்
ஒன்று அப்படித் தயார் செய்யப்பட்டிருப்பதையும், ஆனால் அது சார்வாகாமலேயே
இருப்பதையும் மனுதாரர், Chief Town Planning Officer, Commissioner of
the Corporation இருவருக்கும் அனுப்பிய முறைஈட்டிலேயே தெளிவாகச் சொல்லி
இருந்தார்.
என்ன நடந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தை, அரசுத்துறை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பது
மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது தான் மிச்சம்!
மனுதாரர், உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
ஆக்கிரமிப்பாளரின் வழக்கறிஞர், மாநகராட்சியில் இருந்து அப்படி ஒரு
நோட்டீஸ் வரவே இல்லை என்று சொன்னார். மாநகராட்சி வழக்கறிஞர், முதல் தரம்
வாய்தா வாங்கினார், அடுத்த தரம் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் என்று
வாய்மொழியாகச் சொன்னதன் பேரில் ரிட் மனு தள்ளுபடி
செய்யப்பட்டது.நீதியரசர், அவர் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகவும்
இருந்தவர், ரிட் மனுக்களை விசாரிக்கும் போது அரசியல் சட்டம் 226 ஆம்
பிரிவை எவருமே சரியாகப் புரிந்து கொள்வதில்லை என்று வேறு சொல்வார். இங்கே
discretion என்பது மிக அப்பட்டமான discrimination ஆக இருந்ததை எவரும்
கேள்வி கேட்க முடியாது!
ரிட் அப்பீல் கதையும் அப்படித்தான்! கீழ் கோர்ட்டில் பரிகாரம் தேட வசதி
இருக்கும்போது உயர்நீதி மன்றம் இதில் ஏன் தலையிட வேண்டும் என்பது தான்
அங்கேயும் கேட்கப்பட்டது.
Responsibility, Application of Mind, Accountability இவை எதையுமே இன்றைய
சூழ்நிலையில் சாதாரண மனிதனால் இவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
ஆம் ஆத்மிக்கு எப்போதுமே பட்டை நாமம் தான்!
On Dec 24, 10:19 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
வேறு வழி இல்லை என்ற நிலையில் பிரிட்டிஷ் அரசாங்க நடைமுறைகள், நீதி
முறைகள், தேர்தல் முறைகள் என்று நமக்கு ஒத்து வராத முறைகளின் கீழ்
"சுதந்திர" அரசை நிறுவினோம். கண்காணிக்க வேண்டிய அமைப்புக்களையே
"கூட்டுக் களவாணிகளாக மாற்றிய பெருமை" முதலில் காங்கிரஸ் கட்சிக்கும்,
அதை இன்னமும் நிறுவனப்படுத்தப்பட்ட முறையாக ஆக்கியதில் இங்கே
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் உண்டு.
வெஸ்ட்மின்ஸ்டர் மெதட் என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் தேர்தல் முறை
Winner takes all இத்தனை சீர்கேடுகளுக்கும் மூல காரணமாக
இருக்கிறது.தேர்தலில் கிளம்புகிற பூதத்தை மறுபடி குடுவைக்குள் அடக்கி
வைக்கிற வல்லமை தனிமனிதனுக்கு இந்த முறையில் இல்லை என்பதைத் தான்
அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நாமிருவரும் தான் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்! தமிழ்வாசலில்
இதைப் பற்றிக் கருத்து சொல்ல யாருமே இல்லையா!?
--கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com/
http://suvasikkapporenga.blogspot.com/
On Dec 25, 11:26 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
திரு இன்னம்புரான் ஐயா தான் பணிபுரிந்த தணிக்கைத் துறை, தணிக்கைத்
துறையால் வெளியில் கொண்டுவரப்பட்ட 2G ஊழல் குறித்து, பொதுமக்களுடைய
சாட்சியம், கருத்தைக் கோரி இருந்த விளம்பரத்தைச் சுட்டி இந்த இழையை
ஆரம்பித்திருந்தார். இதற்கு முன்னாலும், பற்பல விசாரணைக் கமிஷன்கள்
அமைக்கப்பட்டபோதும் கூட இந்த மாதிரியான விளம்பரங்கள் வந்ததுண்டு.
விளம்பரம் வெளிவந்த பேப்பர் வடை, அல்லது போண்டா மடிக்கப் பயன்பட்டதோடு
சரி, அந்த விளம்பரத்துடைய பயன் முடிந்தது என்று தான் நடைமுறையில்
பார்த்திருக்கிறோம்.
எதனால் இப்படி ஆகிறது?
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா என்று பாடினானே பாரதி, அந்த வேகம்
எல்லாம் மறைந்து, அடி மேல் அடி விழுந்தாலும், அதற்குக் காரணம் எவர் என்று
தெரிந்தாலும், ஊழல் தான் நாட்டின் முக்கியமான விரோதியாக இருக்கிறது என்று
தெரிந்துமே ஊழலை சகித்துக் கொள்ளப் "பக்குவப் பட்டு விட்ட மனோ நிலை"
ஜனங்களுக்கு எப்படி வந்தது?
"என்கண் முன்னாலேயே நிறையப்பேர் பாதிக்கப்படுகிறார்கள், ஆனால் நான்
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை! என்னைத் தொந்தரவு
செய்யாதவரையில் நான் எதையும் கண்டுகொள்வதாயில்லை" என்று நம்மில்
பெரும்பாலானோர் விட்டேத்தியாக இருக்கிறோமே எதனால்?
மாந்தருக்குள் தெய்வம் என்று காந்தியைக் கொண்டாடிய அதே ஜனங்கள், பாபு
சொல்லிவிட்டார் என்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு எதைவேண்டுமானாலும்
செய்யத் தயாராக இருந்த ஜனங்கள், காந்தீய வழியில் போராடுகிறேன், அஹிம்சையே
எனது தாரக மந்திரம், எத்தனை அடி விழுந்தாலும் எதிர்க்க மாட்டேன்,
சாத்வீகமாக என்னுடைய எதிர்ப்பைக் காட்டியே தீருவேன் என்று ஒரு அரை
நிர்வாணப் பக்கிரியின் பின்னால், அவர் சொல்லுக்குக் கட்டுப் பட்டு நின்ற
ஜனங்கள், அவர்கள் வழியில் வந்தவர்கள், சுதந்திரம் வந்ததும் எதனால்
இப்படித் தறுதலைகளாகிப் போனார்கள்?
Tryst with destiny என்று கனவுகளில் மிதந்துகொண்டே உரையாற்றிய நேருவால்
எதனால், ஜனங்களை, காந்தி மாதிரித் தயார் செய்ய முடியவில்லை?இத்தனைக்கும்
ஜனங்கள் நேருவை எவ்வளவு நேசித்தார்கள் என்பது வெட்டிக் கனவுகளிலேயே
வீணாகிப் போன அந்தக் கோழைக்குக் கூடத் தெரிந்திருந்தது. ஜனங்களால்
மதிக்கப்படுவது, நேசிக்கப்படுவது என்பது வேறு, ஜனங்களை வழி நடத்தத்
திறமையுள்ள தலைவனாக இருப்பது வேறு என்பது நேருவின் பரிதாபமான கொள்கைகைகள்
அடைந்த கதியே சொல்லுமே!
இதே விஷயத்தை, சற்றே மாறுபட்ட கோணத்தில் மின்தமிழ் கூகிள் வலைக்
குழுமத்தில், அங்கே கூட இரண்டே பேர் தான்! ஒரு செழுமையான விவாதம் நடந்து
கொண்டிருக்கிறது. அங்கேயும் சரி, இங்கேயும் சரி, மூன்றாவது, நான்காவது
என்று குழும உறுப்பினர்களில் ஒரு பகுதியாவது இப்படிப் பட்ட விவாதங்களில்
தங்கள் மனதில் என்ன படுகிறது என்பதைத் தயங்காமல் சொல்ல முன்வர வேண்டும்
என்று மறுபடியும் வேண்டிக் கொள்கிறேன்.
மின்தமிழ் இழையை இங்கே படிக்கலாம்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com/
http://suvasikkapporenga.blogspot.com/
On Dec 25, 9:04 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/29d5738e77be4051?hl=en#
மின்தமிழ் இழையை இங்கே படிக்கலாம்!https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/29d5738e77be4051?hl=en#
மக்கள் எப்படி மாறிப் போனார்கள்?
மக்கள் எப்படி இந்த மாதிரி ஒரு அசமந்தத் தனத்துக்குத் தள்ளப்பட்டார்கள்
என்ற கேள்வியை எடுத்துக் கொண்டு விடை தேட முயற்சித்தால் இன்னமும்
பொருத்தமாக இருக்கும்.
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com/
http://suvasikkapporenga.blogspot.com/
நிச்சியமாக மக்களால் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். எமெர்ஜென்ஸி
எப்படி ஒழிந்தது? ஜெயப்பிரகாஷ் நாராயண் என்ற சான்றோன் ஒரு தனிமனிதனாக
தொடங்கிய தர்மயுத்தத்தால். சமீபத்தில், ஒரு கிராமத்து கிழவி தகவல் உரிமை
சட்டத்தை பிரயோகம் செய்து, தன் நிலத்தை மீட்டார்.
ஆனால், ஒரு கசப்பான வரலாற்று உண்மை: இந்தியர்களைப்போல தொடை நடுங்கிகள்
எங்கும் கிடையாது. இதை முதலில் கண்டு பிடித்தது இப்ராஹீம் லோடி. ஒரு
வரிசை என்றால், அந்த காலரியில், மெக்காலே, டல்ஹெளஸி, இந்திரா காந்தி,
தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள், கல்மாடி, ஆ.ராசா என்ற
ஆயிரக்கணக்கானவர்கள், பல துறைகளில். அடுத்தப்படியாக, தலைவன் என்றொருவன்
இல்லையெனில், இந்தியன் ஒரு முண்டம்.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
2010/12/28 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே உங்கள் ஆதங்கம் மிக நியாயமானதேநானும் இவை போன்ற விழிப்புணர்வு செய்திகளில் மிகவும் ஆர்வமாக கலந்து கொள்வேன். திரு இன்னம்பூராரும் அறிவார்.இரண்டு நாட்களாக மிக அதிகமான பணிச்சுமையினால் கலந்து கொள்ள இயலாமற் போயிற்றுஇருப்பினும்என்னுடைய சந்தேகமும் அதுதான் , மக்கள் எப்படி இப்படி மாறிப் போனார்கள்
அவர் ஒட்டு மொத்தமாக சொல்வது முதலில் சரிதானா? கொஞ்சம் பார்ப்போம்!
//மேல் தட்டு பிரமுகர்கள், நடுத்தர சம்பளதாரர்கள், மெத்த படித்தவர்கள்,
அறிந்தும் மெளனிகள், நல்லதையெல்லாம் ஒதுக்குபவர்கள், அரசு ஊழியர்களின்
கண்ணியத்தை பாழடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட அரசியலர்களை
எதிர்க்க திராணி இல்லாதவர்கள்......//
இந்தப் பட்டியலில் அரசு ஊழியர்களின் கண்ணியத்தைப் பாழடிக்க வேண்டும்
என்று...............!!
தங்களுடைய கண்ணியத்தை எவரோ வந்து பாழடிக்கும் வரை அரசு ஊழியர்கள் என்ன
செய்து கொண்டிருந்தார்கள்? முதலில் தங்களைப் பொதுமக்களின் சேவகர்களாகக்
கருதிக் கொள்கிறார்களா, அல்லது பிரிட்டிஷ் மேட்டிமைத்தனத்தின் எச்சமாக
இன்னமும் இருந்து வரும் அதிகாரச் செருக்குடன், அகம்பாவத்துடன் நடந்து
கொள்கிறார்களா?
எல்லா அரசு ஊழியர்களுமே மோசம் என்று முத்திரை குத்த முயலவில்லை! ஆனால்,
தங்களுக்குள் இருக்கும் அழுகிப் புரியோடிக் கிடக்கும் கோளாறுகளை சரி
செய்வதற்குப் பெரும்பாலான "அதிகார வர்கத்துக்கே" தைரியம் இருப்பதில்லை.
ஒரு உதாரணத்துக்கு, ஏற்கெனெவே முந்தைய பின்னூட்டத்தில் ஒரு சிறு வழக்கை
எடுத்துச் சொல்லியிருந்தேன் அல்லவா? அதில் நாம் பார்த்ததென்ன?
ஒருவருடைய இடத்தை, அடுத்த மனைக்காரர் ஆக்கிரமிப்புச் செய்தார். தான்
ஆக்கிரமித்த இடத்தையும் சேர்த்துக் கட்டடம் எழுப்ப முயன்றார்.
ஆக்கிரமிப்புக்கு உள்ளானவர், ஒவ்வொரு துறையாக மனுக் கொடுத்து,
முறையிட்டுக் கொண்டே வந்தார். சர்வே மற்றும் மாநகராட்சிக்கு எதிராகதகவல்
அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைப் பெற முயன்றார். மாநகராட்சி
அசைந்து கொடுக்கவில்லை. பதில் ஏனோதானோ என்று இருந்தது. ரிட்மனு தாக்கல்
செய்தார், கேழே நிவாரணம் தேட வசதி இருக்கும் போது இங்கே சரியான முறையில்
ரிட் மனுவை எட்டுக் கொள்ளக் காரணங்களை நிரூபிக்கவில்லை என்று மனு
தள்ளுபடி செய்யப்பட்டது. ரிட் அப்பீல் கதியும் கூட கிட்டத் தட்ட அதே
மாதிரித் தான்! மாநகராட்சிக்குத் தெளிவான உத்தரவு கொடுக்க வேண்டும் என்ற
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச், நாங்கள் அப்செர்வேஷன்
வேண்டுமானால் தருகிறோம், அதைப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்
என்று அப்பீலை டிஸ்போஸ் செய்தது.மாநகராட்சி தனது பொறுப்பற்றதனத்தை,
நீதிபதியின் உதவியோடு காப்பாற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாய்மொழியாக நாங்கள் நடவடிக்கை
எடுக்கிறோம் என்று சொன்னதை மட்டும் ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,
தங்களுக்கு மாநகராட்சியில் இருந்து விதிமுறைகளை மீறியதற்காகத் தரப்படும்
நோடீஸ் எதுவும் வரவே இல்லை என்று பிரதிவாதியின் வழக்கறிஞர்
சொன்னதை,மாநகராட்சி எடுத்த நடவடிக்கை என்று ஒன்றுமே இல்லை
என்று .மனுதாரர் சொன்னதையும் கூடக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.
"கீழே வேறு இடத்தில் பரிகாரம் தேட வசதி இருக்கும் போது நாங்கள் எதற்காக
இந்த ரிட் மனுவைக் காதில் போட்டுக் கொள்ள வேண்டும்? அரசியல் சாசனம் 226
ஆம் பிரிவில் உயர்நீதி மன்றத்தில் நேரடியாகப் பரிகாரம் தேடலாம் என்று
சொல்வது எங்களுடைய உசிதம், உங்களுடைய உரிமை அல்ல!" இது நீதிமன்றங்களின்
நிலை!
மாநகராட்சி இருக்கிறதே, இவர்களை என்ன சொல்வது? எவரோ வீடு கட்டத் தெருவில்
மணல் கொட்ட ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே, அந்த வார்டு கவுன்சிலருக்குப்
போய்ச் சேர வேண்டிய கப்பம் போய்விட வேண்டும். நே ஆக்கிரமித்துக்
காட்டுவாயோ, அடுக்கு மாடி காட்டுவாயோ, எதைப் பற்றியும் எங்களுக்குக் கவலை
இல்லை, டவுன் பிளானிங் அமைப்பில் இருக்கும் எவரையோ கொஞ்சம் கவனித்து
விட்டால் போதுமானது. கண்ணை இருக்க மூடிக் கொள்வார்கள்! இங்கே அது தான்
நடந்தது!
நில அளவுத் துறையில் அத்துமாலை அளந்து குறித்துத் தரச் சொன்னால், தாலுகா
சர்வேயர் அலுவலகத்தில் வந்து அளந்து , உங்கள் பத்திரப்படி இது சரியாக
இருக்கிறது, அவர் பத்திரப்படி அது சரியாக இருக்கிறது என்று மையமாகப் பேசி
இரண்டு தரப்பிலும் சில்லறையைத் தேற்றிக் கொண்டு போனதைத் தவிர வேறு
ஒன்றும் நடக்கவில்லை. கரணம் எதிர் பார்டி கொஞ்சம் அதிகமாகவே "கவனித்தது"
தான்! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அத்துமால் அளந்து
குறித்துத் தரச் சொன்னதை எழுத்து மூலம் தரச் சொல்லி வேண்டி, கிட்டத் தட்ட
ஐம்பத்தேழு நாட்கள் கழித்த தேதியிட்டு, அறுபத்தொன்றாவது நாளில் இரண்டும்
கெட்டானாக பதில்!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் கீழ் செய்யப்படும்
விண்ணப்பத்துக்கு முப்பது நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். மீறித்
தாமதம் செய்வது, தாமதம் செய்து பதில் அனுப்புவது, தகவல் தர மறுப்பதற்குச்
சமம் என்று அந்தச் சட்டமே தெளிவாகச் சொல்கிறது. அதனால் என்ன? நாங்கள்
அப்படித் தான் இருப்போம் எவன் வந்து எங்கள் தலையைச் சீவப் போகிறான்
என்று தாலுகா அலுவலகம் அலட்சியமாக இருந்தது.
சிவில் கோர்டில் வழக்கு ஆரம்பமாகி, அட்வகேட் கமிஷனர் வந்து அளந்துபோய்,
ஆக்கிரமிப்பு இருப்பது உறுதி செய்யப்பட நிலையிலும் கூட, ஆக்கிரமிப்பு
செய்தவர்கள் என்ன தெனாவெட்டாக இருக்கிறார்கள் என்பதை இந்த லிங்கில்
கேளுங்கள்!
http://www.youtube.com/watch?v=KxdGprueOLY
இத்தனைக்கும், இந்த நபர்கள் மிகப் பெரிய அரசியல் செல்வாக்கோ, ஆள் அம்பு
சேனை உள்ளவர்களோ இல்லை! காசு இருக்கிறது! பிச்சைக்காசுக்காகக் கையேந்தி,
சட்டவிரோதமாக செயல் படுவதற்கு துணை நிற்க இங்கே அரசுத் துறை ஊழியர்கள்
தயாராக இருக்கிறார்கள். என்ன செய்து விடுவீர்கள்!!
அரசு ஊழியர்கள் கண்ணியத்தை, இந்த உளுத்துப்போன பிரிட்டிஷ் சிவில் நிர்வாக
முறையை வைத்துக் கொண்டு, வெளியே இருந்து எவரோ வந்து கெடுக்க வேண்டியதே
இல்லை! அவர்களே அந்தத் திருப்பணியை, செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்
என்பது தான் உண்மை!
பட்டியலில் உள்ள மற்ற தரப்பையும் ஒவ்வொன்றாக அக்குவேறு ஆணிவேறாகக்
கழற்றிப் பார்த்து விடலாம்!
அன்புடன்
கிருஷ்ண மூர்த்தி
http://consenttobenothing.blogspot.com/
http://suvasikkapporenga.blogspot.com/
On Dec 27, 9:57 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
Give a dog a bad name and then hang it! பிரிடிஷ்காரர்களுடைய நியாயத்தை
இந்த ஒரு வாக்கியத்தை வைத்தே கூட எடைபோட்டு விட முடியும். நாயைத்
தூக்கில் போடுவது என்று முடிவு செய்து விட்டால் அதற்குப் பூர்வாங்கமாக,
நாய்க்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுவது! அவ்வளவு தான்! அப்படியானால்,
அந்த முறையில் கற்றுக் கொள்ள வேண்டியவை, நல்ல அம்சங்கள் எதுவுமே இல்லையா
என்ற கேள்வி எழலாம். அப்படிக் கொஞ்சம் இருக்கிறது என்பதையும் நான்
மறைக்கவில்லை. பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழக்கங்களை அப்படியே
சட்டங்களாக எழுத்து வடிவில் முறைப்படி தொகுத்தது ப்ரிடிஷ்காரர்கள்தான்.
இப்படி ஆவணப்படுத்தி வைத்த தன்மையை நான் நன்கறிவேன்.ஆனால், அப்படி
ஆவணப்படுத்திய விதம் முறைகள், சட்டங்கள் எல்லாமே தங்களுடைய
சாம்ராஜ்யத்திற்கு சாதகமாகவே இருக்கிறமாதிரிப் பார்த்துக் கொண்டதையும்
மறந்து விட முடியுமா?
அந்தநாட்களில் ஐசிஎஸ் பரீட்சையில் தேறுவதற்கு, தாங்கள் ஆளப்போகிற
பகுதியைப் பற்றிய பூரண ஞானம் இருக்க வேண்டும் என்றிருந்த நிலையைப்
பற்றிப் படித்திருக்கிறேன், நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அன்றைக்குக் கஞ்சா பயிரிடுவது, பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு தேவையாக
இருந்தது. சீனர்களுக்குக் கஞ்சா அபினைக் கொடுத்துவிட்டு, உயர்தரமான
காண்டனீஸ் தேயிலையைக் கொள்முதல் செய்து ஏமாற்றி வந்த நாட்கள் அவை. Opium
Wars என்று தேடினாலே நிறைய விவரங்கள் கிடைக்கும்.
இன்றைக்குக் கஞ்சா பயிரிடுவது தடை செய்யப்பட ஒன்று. ஆனாலும், இன்றைக்குக்
கூட, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நடத்துகிற ஜமாபந்தியில், அவர்கள்
ஆட்சிக்குட்பட்ட தாலுகாக்களில் எத்தனை ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படுகிறது
என்ற கேள்வி, நீக்கப்படாமலேயே இருப்பதைக் கொஞ்சம் கவனித்துப் பார்க்க
முடிந்தால், எப்படி பிரிடிஷ்காரன், நம்மை அடிமையாக வைத்திருக்க
ஏற்படுத்திய அடிமை அரசு இயந்திரத்தைக் கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே
பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதும் தெரியும். இதில் பிரிடிஷ்காரன்
தவறு எங்கேயிருக்கிறது என்று கேட்கலாம்.கேள்வியைக் கொஞ்சம் ஆழமாக உற்று
நோக்கினால், அவர்கள் நம்முடைய செழுமையான பாரம்பரியத்தை, நம்முடைய மிகச்
சிறந்த நீதிமுறைகளைச் சிதைத்து, தங்களுடையதை நிறுவிக் கொண்டார்கள்,
அவர்களுடைய அடிமையாகவே இருக்கப் பழக்கும் விதத்திலேயே நடந்துகொண்டார்கள்
என்பதும் தெரியும்.
பிரிட்டிஷ் மக்களின் நியாய உணர்வைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டுவதற்கோ,
அல்லது பின்பற்றுவதற்கு மிகவும் தகுதியானதென்றோ எனக்குத் தெரியவில்லை.
அடுத்தது, நான் ஆங்கிலேயர்களை சக மனிதர்கள் என்ற வகையில் ஒட்டு
மொத்தமாகக் குறை சொல்ல வரவில்லை. ஆளப் பிறந்தவர்களாகத் தங்களை
முன்னிறுத்திக் கொண்ட அதிகார மையத்தை பற்றி மட்டுமே பேசிக்
கொண்டிருக்கிறேன். நார்டன் வங்கி திவாலான போது, வெள்ளையன் என்பதால்
மட்டுமே தவறு செய்தவர்கள் விடுவிக்கப்பட்டதும், அந்தப்பாரபட்சத்தில்
பொங்கிஎழுந்தவர்கள் ஆரம்பித்ததுதான் இந்தியன் வங்கி என்பதையும்
அறிந்திருக்கிறேன். ஒரு வெள்ளிக் கத்திரிக் கோல், ஒரு சினிமா எக்ஸ்ட்ரா
நடிகையின் துணை, கொஞ்சம் உற்சாக பானம் போஸ்டரில் பெயர் என்று இருந்தால்
ஏகப்பட்ட "திறப்பு விழாக்களுக்குப் போன", அந்த வங்கியைக் குட்டிச்
சுவராக்கிய தலைமை நிர்வாகியையும் கூடத் தான் பார்த்திருக்கிறோம்.
நான் இந்த பூமிக்கு வந்ததே 1954 இல்தான்! உங்களுடைய நேரடியான அனுபவம்,
பயிற்சி, சந்தித்த நியாயமான ஐசிஎஸ் அதிகாரிகளை வைத்து நீங்கள் சொல்ல
வரும் கருத்து ஒருகோணத்தில் சரிதான்! அதைத் தான் ஒரு கூடை செங்கல்லும்
பிடரி என்று சொல்லிவிட முடியாது என்று சொன்னேன். நல்ல, நேர்மையான,
திறமையான அதிகாரிகள் நிச்சயமாக அன்றைக்கும் இருந்தார்கள்,இன்றைக்கும்
இருக்கிறார்கள் enbathil மாற்றுக் கருத்தே கிடையாது. ஆனால், அவர்களால்
என்ன செய்ய முடிந்திருக்கிறது, தொடர்ந்து அழுகி வரும் பகுதியை அறுவை
சிகிச்சை செய்து அகற்றும் தைரியம், வலிமை இருக்கிறதா என்பதே நான் இந்த
விவாத இழையில் முன்வைக்கும் கேள்வி.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தணிக்கைத் துறை தன்னுடைய கடமையை செவ்வனே
செய்திருக்கிறது, சாட்சியம் அளிக்க முன்வந்திருக்கிறது என்பது வரை சரி.
ஆனால், அதற்கு அப்புறம்..?
சி ஏ ஜி ஒன்றும் தீர்ப்புச் சொல்கிற அதிகாரம் உள்ளதல்ல என்று ஒரு
முதலமைச்சர் சொல்கிறார். அதையே வேறு வார்த்தைகளில் மத்தியில் ஆளும்
கட்சியும் சொன்னது. இந்த விவகாரத்தில் திரு வினோத் ராய் அளித்த
சாட்சியத்தை விட, தனிநபராக இருந்து இந்த விஷயத்தை அம்பலப் படுத்திய டைலி
பயனீர் பத்திரிகையின் திரு கோபி கிருஷ்ணன் செய்தது அதிகம். அதே போல
டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு.
உச்சநீதிமன்றம், கொஞ்சம் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய கேள்வியைக் கேட்க
ஆரம்பித்த பிறகு தான் விவகாரம் இந்த அளவுக்கு சூடு பிடிக்க ஆரம்பித்தது
என்பதே உண்மை.
இப்போதும் சரி, இதற்கு முன்னாலும் சரி, தணிக்கைக் குழு அரசின் வெட்டி
விரையங்களை, செலவினங்களில் உள்ள குளறுபடிகளைத் தொடர்ந்து சுட்டிக்
காட்டிக் கொண்டே தான் வந்திருக்கிறது. ஆனால், அதற்கு என்ன மரியாதை,
பரிகாரம், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டது என்று நடந்திருக்கிறது
என்று பார்த்தால்.......?
தணிக்கைக் குழு அதற்குமேல் என்ன செய்துவிட முடியும்? அவர்கள்
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்தார்கள் என்று
மட்டும் சொல்லி சமாதானம் செய்து கொள்வதில் என்ன அர்த்தம் இருக்க
முடியும்?
இந்த இழையில் மட்டுமல்ல, இன்றைக்கு இந்த நாட்டில் நடக்கும் எந்த
முறைகேட்டிற்கும் ஆங்கிலேயன் காரணம் இல்லை என்பது சரிதான்! ஆங்கிலேஎன்
தான் ஊழல் செய்வதற்காக, அடிமைகளைக் கட்டி வைத்திருப்பதற்காக ஏற்படுத்திய
நிர்வாக முறையைத் தான் இன்றைக்கும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்,
அதிலிருந்து தான் இத்தனை கோளாறுகளும் தொடங்குகின்றன என்பது தான் நான்
உங்களுடைய விளம்பரத்துக்குக் கொடுக்கும் கூடுதல் விளம்பரம்!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
தலைவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று எவரும் தனியாக ஆகாசத்தில்
இருந்து குதித்தவர்கள் அல்ல! அவர்களை இந்த சமுதாயம் தான் உருவாக்குகிறது,
வளர்க்கிறது, வளர்த்துவிட்டு அடிவாங்கி அடிவாங்கி ஓய்ந்துபோன பின்னாலும்
கூட, இலவசங்கள், மானாட மயிலாட, மச்சான்ஸ் என்று நமீதாவைக் கூட்டி வந்து
கூவ விட்டால், அதிலேயே பரவசமாகி, மற்ற எல்லாவற்றையும் மறந்துபோய் விடுகிற
அசமந்தத்தனத்தை நாம் தான் பழக்கப்படுத்திக் கொள்கிறோம்!
பழக்கங்களின் அடிமையாகவே இருந்துவிட்டுப் போய்விடுகிற தன்மையில் இருந்து
விடுபட நம்மிடமிருந்து சிறிதளவாவது முயற்சி இருக்க வேண்டும்.
உங்கள் பின்னூட்டத்தில் இருந்த செல் நம்பரில் தொடர்பு கொண்டு பேசியபோது
சொன்னதை மறுபடி இங்கேயும்!
நம்மை சுற்றி நடப்பவற்றைக் கவனமாக உள்வாங்கிக் கொள்ளுங்கள், நமக்கென்ன
என்று ஒதுங்கிப்போய் விடாமல்,நாம் செய்யக் கூடியது அது எவ்வளவு சிறியதாக
இருந்தாலுமே கூட, செய்ய வேண்டும் என்று முயற்சிக்க ஆரம்பிப்பது தான்
முதல் படி! ஒரு விளக்கு, இன்னும் பலவிளக்குகளை ஏற்ற உதவியாக இருப்பதுபோல,
விழிப்புணர்வு பெருக, மாற்றங்கள் தானே வரும்.
அப்புறம் திரு இன்னம்புரான் ஐயா சொன்ன கருத்தில் பொதுவாக உடன்பட்டாலும்,
ஒரு நுட்பத்தை சொல்லியாக வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயமுமே ஒருமித்து
செயல்படுவது, முதிர்ச்சியோடு இருப்பது என்பது மனித வரலாற்றில் எப்போதுமே
இருந்ததில்லை. இப்போதிருப்பதில் இருந்து மாறியாக வேண்டும் என்ற கனவு,
கனவு நனவாகத் தெளிவான பார்வை, திட்டம், அதை சாதிப்பதற்குக் கூட்டாளிகளாக
ஒரு பின்பற்றுகிறவர் குழாமை உருவாக்குகிற ஒரு மிகச் சிறிய கூறு தான்
முன்னோடியாக, வழிநடத்துவதாக, தலைவர்களாக ஆகிறது. மிச்சம் இருப்பவர்களில்
விரல்விட்டு எண்ணக்கூடிய சிலபேர், அப்படிப்பட்ட முன்னோடியின் பின்
தொடர்பவர்களாக மாறுகிறார்கள். அப்புறம் என்ன? ஒரு கட்டத்தில் ஏளனப்பார்வை
பார்க்கும் மிச்சப் பகுதி, ஆட்டு மந்தையைப் போல புதிய மாற்றங்களின்
பின்னால் செல்வது நடக்கும்.
Change Management என்ற தலைப்பில் சிலபதிவுகளை http://suvasikkapporenga.blogspot.com/
தளத்தில் எழுதியிருப்பதில் இருந்து ஒரு பகுதி:
மாற்றங்களுக்குத் தயாராவது என்பதே ஒரு நல்ல தலைமை, எங்கே
இருக்கிறோம்,அடுத்து எங்கே போகவேண்டும் என்பதில் தெளிவான பார்வை, அதைக்
குழப்பமில்லாமல் செயல்படுத்துகிற லாவகம், ஊழியர்கள் என்றால்
உத்தரவுக்காகக் காத்திருப்பவர்கள் என்று மட்டுமே இல்லாமல், தங்கள்
பொறுப்பை உணர்ந்து பொறுப்புடன் செயல் படுகிறவர்களாக, தலைவர்கள் கொண்டு வர
விரும்பும் மாற்றத்தை சாதிக்க ஆர்வத்துடன் ஈடுபடுகிற கூட்டாளிகளாக மாற்ற
முடிவதில் தான் இருக்கிறது!
நிறுவனம் என்பது என்ன? நிறுவனப் பண்புகள் என்பது என்ன? இந்தியச்
சூழ்நிலைகளில், நாம் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருப்பதற்கு நேர்மாறாகத்
தான் இவை பற்றிய விவரம், விளக்கம், வியாக்கியானம் இருப்பதைப் பார்த்துக்
கொண்டிருக்கிறோம். நிறுவனப் பண்புகளைக் குறித்த பதிவொன்றை சென்ற மாதம்,
சேத் கோடின் பதிவுகளில் படித்தது, தொடர் சிந்தனையைத் தூண்டுவதாக
இருந்தது.
இங்கே பெரும்பாலான நிறுவனங்கள், குறிப்பாக அரசுத்துறை, பொதுத் துறையில்
இயங்குபவை தங்களை ஒரு கட்டமைக்கப் பட்ட, ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிற
அமைப்பாகவே உணராமல், ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியிலேயே செயல்
படுவதையும், என்ன நோக்கத்திற்காக நிறுவனம் தொடங்கப்பட்டதோ அதற்கு
எதிராகவே பல தருணங்களில் செயல் படுவதையும் பார்க்க முடியும். ஒரு சரியான
தலைமை இல்லாதது, தெளிவான செயல் திட்டம் இல்லாதது, ஒரு தெளிவான பார்வை
இல்லாதது இப்படி இந்த அமைப்புக்கள் குறைப் பிரசவங்களாகவே இருப்பதற்குக்
காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமீபத்தில் சேத் கோடின் பக்கங்களில் கார்பரேட்டுகளுக்கு மனசாட்சி
கிடையாது என்ற தலைப்பிலான பதிவைப் படித்துவிட்டு, இங்கே உள்ள பல
நிறுவனங்களுடைய பிரச்சினைகளோடு, குறிப்பாக பொதுத்துறையில் இயங்கும் ஒரு
புள்ளிராசா வங்கியின் தோற்றுக் கொண்டே இருக்கும் இயல்போடு பொருத்திப்
பார்த்து யோசித்துக் கொண்டிருந்தேன். பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு
மனசாட்சி மட்டுமில்லை, குறைந்தபட்ச மூளை கூடக் கிடையாது. எல்லாம் ஹிஸ்
மாஸ்டர்ஸ் வாய்ஸ் தான்! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை என்பது,
நன்றாகவே புரிகிறது.ஆனால் என்ன செய்ய?!
சேத் கோடின் சொல்வதைக் கொஞ்சம் என்னவென்று பார்த்து விடலாம்! அவர்
சொல்கிறார், நிறுவனங்களுக்கு மனசாட்சி கிடையாது, அதெல்லாம் அங்கே உள்ள
நபர்களுக்கு மட்டும் தான்!
"நான் என்ன செய்யட்டும், என்னுடைய துறைக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது!",
"நான் இங்கே வேலைதான் செய்கிறேன்" , "என்ன பண்ணுவது? இது என்னுடைய வேலை"
இப்படிச் சொல்கிறபோதே, உங்களுடைய மனசாட்சியையும் கழற்றி வைத்து விட்டு,
உங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்கிறார் சேத் கோடின்
http://suvasikkapporenga.blogspot.com/2010/12/leading-change-and-organizational.html
கொஞ்சம் படித்துப் பாருங்கள்!
முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்'
ஆண்டு.
இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? விடுதலைபெற்ற
பின்னர் பெரும்பாலான ஆண்டுகளை ஊழல் ஆண்டு என்று அறிவித்துவிடலாம்
என்றாலும், 2010 போன்று உலக வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாக, ரூ.1.76 லட்சம்
கோடி அளவுக்கு இந்திய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல்
நடைபெற்றுள்ளதால், இதை வேறுவகையில் பெயரிட்டு அழைக்க முடியாது என்பதால்
ஊழல் ஆண்டு என்பது பொருத்தமானதே!
ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமல்ல; இன்னும் பல ஊழல்கள் ஒன்றன்பின் ஒன்றாக
அம்பலப்பட்ட ஆண்டு 2010 என்றால் மிகையல்ல. ஐ.பி.எல். கொச்சி அணியில்
முன்னாள் அமைச்சர் சசிதரூர் மீதான குற்றச்சாட்டு, காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில் பல கோடி ரூபாய் முறைகேடு, மகாராஷ்டிரத்தில் வீடு
கட்டும் திட்டத்தில் முறைகேடு, கர்நாடகத்தில் முதலமைச்சரின் தனியாணை
மூலம் குறைந்த விலைக்கு அரசு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல நூறு
மடங்கு விலையில் வேறுநபர்களுக்கு விற்கப்பட்ட ஊழல் எல்லாமும் ஒன்றன்பின்
ஒன்றாக அம்பலப்பட்டுக்கொண்டே இருந்தன.
2010-ம் ஆண்டில் யாருக்காவது நாம் நன்றி சொல்ல வேண்டுமானால், அது நீதித்
துறைக்கும், தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைக்கும் மட்டுமே!
லஞ்சஒழிப்புத் துறைக்குத் தலைவராக, குற்றச்சாட்டில் உள்ள தாமஸ்
நீடிக்கலாமா என்று நீதிமன்றம் கேட்டாலும், பதவிவிலக மாட்டேன் என்று
சொல்லும் மோசமான நிலைமைக்கு இடையிலும்கூட, தலைமைக் கணக்குத் தணிக்கைத்
துறை அதிகாரிகள் எதையும் பொருள்படுத்தாமல் தங்கள் கருத்தைத் தெளிவாகப்
பதிவுசெய்து, தங்கள் கடமையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
இந்தத் தணிக்கைத் துறை அதிகாரிகள் மட்டும், இவ்வளவு துணிச்சலாக,
நேர்மையாக, இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பையும், முன்னுரிமை அளிக்கப்பட்ட
விதத்தில் பாரபட்சம் இருப்பதையும் வெளிப்படையாகச்
சொல்லியிருக்காவிட்டால், இவ்வளவு பெரிய முறைகேடு அதிகாரப்பூர்வமாக வெளியே
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எதிர்க்கட்சிகளும் பிரச்னையின் கௌரவத்தைப்
புரிந்துகொண்டு வீறுகொண்டு எழுந்திருக்கவோ அதனால் நாடாளுமன்றம்
ஸ்தம்பிக்கவோ வாய்ப்பில்லை. நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பில்லை,
முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகியிருக்க வாய்ப்பில்லை. நீரா ராடியா
டேப் விவகாரம் வெளியே வந்திருக்காது. எல்லாமும் புதையுண்டு மறைந்து
போயிருக்கும். எல்லா ஆண்டிலும் நடைபெற்றுவரும் பல ஊழல்களைப்போல இதுவும்
வாடிக்கையான ஓர் ஊழலாக முடிந்து போயிருக்கும்.
தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரிகளின் அறிக்கை காட்டிய
நேர்மையின் வெளிச்சத்தை நீதி கையில் எடுத்துக்கொண்டு, சி.பி.ஐ. மற்றும்
அமலாக்கப் பிரிவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிச்சம்போட்டுக்
காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த ஊழலில் சம்பந்தபட்டவர்களின் பெயர்கள் சரித்திரத்தில் நிச்சயமாக
இருக்கும். ஆனால் இந்த நேர்மையான பதிவுகளை அறிக்கையில் எழுதிவைத்த
தலைமைக் கணக்குத் தணிக்கைத்துறை அதிகாரிகளின் பெயர், நாளைய
இந்தியர்களுக்கு, ஏன் இன்றைய இந்தியர்களுக்கேயும்கூடத் தெரியுமா என்பது
கேள்விக்குறிதான். அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் தலைவணங்கி, நன்றி
பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுட்டிக்காட்டியதைச் சட்டப்படியாக
நிலைநாட்ட முயன்ற நீதிமன்றத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக்
கடமைப்பட்டுள்ளோம்.
அமைச்சர், பதவி விலகி, அதிகாரத்தின் பற்கள் பிடுங்கப்பட்ட பின்னர்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்று நிபந்தனைகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு
நோட்டீஸ் அனுப்பிய தைரியமான அதிகாரிகளும் இருக்கும் இந்த நாட்டில்தான்
இத்தகைய அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள் என்பதைக் காணும்போது "நல்லார்
ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்பதன்
உட்பொருள் தெளிவாகிறது.
போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் அதன் தலைவர் ஆண்டர்சன்
தண்டிக்கப்படாமல், அதிகாரிகள் குறைந்தபட்சமாகத் தண்டனை பெறும் விதத்தில்
அரசு வழக்குத் தொடுத்திருந்த மத்திய அரசை கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கிய
பின்னர், இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு
வருகிறது. இதுவும் நீதித்துறையால் ஏற்பட்ட நன்மை!
நீதியும் நேர்மையும் செத்துவிட்டதோ என்று கலங்கிக் கிடந்த இந்தியர்கள்
நெஞ்சில், "உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை
கொள்வான்' என்னும் நம்பிக்கையை விதைத்துள்ள ஆண்டும் 2010-தான்.
"எல்லாமே மோசம். இதிலிருந்து விமோசனமே கிடையாது. திருத்தவே முடியாது'
என்று எதிர்மறைச் சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது
நமது நாடு. அரசும், ஆட்சியும், அதிகாரமும் நமக்காக
ஏற்படுத்தப்பட்டிருப்பவை. அதில் தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதைத்
திருத்தி, தவறுகளைத் தடுத்து, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு
உண்டு. எனென்றால். நமது நல்வாழ்வும் அதனுடன் இரண்டறப் பிணைந்து
கிடக்கிறது. தன்னம்பிக்கையுடன் எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கி
எறிந்துவிட்டு தவறுகளுக்கு எதிராகக் குரலெழுப்பத் தயாராகுங்கள்.
நம்பிக்கை ஸ்திரப்படும் ஆண்டாக, 2011-ல் இந்த ஊழல்களில் தொடர்புடையவர்கள்
தண்டனைபெற வேண்டும். அமைச்சர் என்றாலும், பெருந்தொழிலதிபர் என்றாலும்
தண்டனை தரப்பட வேண்டும். இதில் பாரபட்சம் இருக்காது என்பதைப்
புரியவைக்கும் ஆண்டாக 2011 அமைய வேண்டும். இந்தியாவில் மக்களாட்சித்
தத்துவம் வெற்றிபெற்றதற்கான அடையாளம் அதுவாகத்தான் இருக்கும்.
2010 ஊழல் ஆண்டு என்றால்...
2011 தண்டனை ஆண்டு என்று பெயர் பெறட்டும்! நம்பிக்கையூட்டும் ஆண்டாக
மலரட்டும்.
ஆம். நாங்கள் அநாமதேயம். எங்கள் சமூகத்திற்குள் கூட அளவோடு தான்
தெரியும். We go on the 'need to know' basis. விளம்பரம் எங்களுக்கு
ஒவ்வாதது. அதனால் தான் நாங்கள் 'விளம்பரம் தேடுபவர்களாக' எங்காவது
நினைக்கப்பட்டால், ஓடி விடுவோம். நான் மற்றொரு தளத்தில்
'தணிக்கைத்துறையின் தணியாவேகம்' என்ற தொடர் தொடங்கியதே,
வரலாற்றுப்போக்கில் பழைய சமாச்சாரங்களை சொல்லி விழிப்புணர்ச்சி
ஏற்படுத்துவதற்குத் தான். அதுவும் தனக்கு நேரடியாக தெரிந்ததை மட்டும்
எழுதுவது. மற்றொரு விஷயம். 'விடாக்கொண்டனாகவும், கொடாக்கொண்டனாகவும்'
இருப்பதில் எங்களுக்கு மட்டிலா மகிழ்ச்சி.
என்னது இது?2ஜியை பற்றி கேட்டால், 'நாங்கள்' என்ரு ஆரம்பித்து
விட்டீர்கள் என்று கேட்டால், பதில்: 'இனப்பற்று'
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
03 01 2011
2011/1/3 S. Krishna Moorthy <kris...@gmail.com>
/அந்த நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் தலைவணங்கி, நன்றி பாராட்டக்
கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் சுட்டிக்காட்டியதைச் சட்டப்படியாக நிலைநாட்ட
முயன்ற நீதிமன்றத்துக்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்
பட்டுள்ளோம்./
என்று சொல்கிற இந்தத் தலையங்கம் இன்னொரு முக்கியமான செய்தியையும்
சொல்கிறது ஐயா!
"எல்லாமே மோசம். இதிலிருந்து விமோசனமே கிடையாது. திருத்தவே முடியாது'
என்று எதிர்மறைச் சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது
நமது நாடு. அரசும், ஆட்சியும், அதிகாரமும் நமக்காக
ஏற்படுத்தப்பட்டிருப்பவை. அதில் தவறுகள் ஏற்படுவது இயற்கை. அதைத்
திருத்தி, தவறுகளைத் தடுத்து, தேசத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு
உண்டு. எனென்றால். நமது நல்வாழ்வும் அதனுடன் இரண்டறப் பிணைந்து
கிடக்கிறது. தன்னம்பிக்கையுடன் எதிர்மறைச் சிந்தனையைத் தூக்கி எறிந்து
விட்டு தவறுகளுக்கு எதிராகக் குரலெழுப்பத் தயாராகுங்கள்."
இந்த அறைகூவல் பரவலாக நம்மவர் காதுகளில் விழும்படி செய்ய முடிந்தால், ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தால், அதுவே நீங்கள் துவக்கிய இன்று ஒரு
விளம்பரம் மற்றும், மின்தமிழில் துவக்கிய "தணிக்கைத் துறையின் தணியா
வேகம்" போன்ற முயற்சிக்குக் கிடைக்கும் வெற்றி ஐயா!
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
இன்றைய விளம்பரமாக வரும் செய்தி--விழித்துக் கொள்வதற்காக!
Cong book has no reference to 1962 Sino-Indian war
A Congress version of the recent Indian history is bereft of any
reference to the 1962 Sino-Indian war, whose outcome the then Prime
Minister Jawaharlal Nehru had taken to his heart. As against this, it
dwells at length at the events leading to the formation of Bandladesh,
noting that Indira Gandhi was at the height of power in the wake of
the 1971 war with Pakistan and was hailed as "Durga, an incarnation of
Shakti".
It also notes how in 1965, when Pakistan started a full-scale war
against India, the then Prime Minister Lal Bahudar Shastri
"demonstrated to the world" how India could defend its territory with
the modest resources at her command.
"The war in 1971 was seen as Indira Gandhi's personal success. After
all, she had mobilised world opinion on Bangladesh, traveling to all
major capitals of the world except the US which was avowedly hostile,"
the book, whose Chief Editor is Finance Minister Pranab Mukherjee,
says.
It noted that the political fallout of the war was evident in the
electoral success of the Congress in the Assembly elections of March
1972.
"It won everywhere including West Bengal."
Soon after this, in 1974, India successfully performed an underground
nuclear detonation and became a member of the Nuclear Club, says the
book "Congress and the Making Of The Indian Nation".
But as regards the 1962 war with China, there has been no reference in
the book.
Talking about that period it merely mentions that in 1963, the loss of
three-bye elctions made the party sit up and take notice of the
"stagnancy" that had set in.
The party had been in power for many years and the organisational side
had clearly suffered.
The loss in the bye-elections had resulted in the Kamraj plan
formulated by the then Madras Chief Minister K Kamraj and Nehru.
Under the plan, prominent leaders were asked to relinquish official
positions, approach the masses and try to restore their confidence in
the party.
"However, this plan came too late. By this time, Nehru's health was
falling and he could not follow it through. He passed away on May
27,1964," it says.
The book was released by Prime Minister Manmohan Singh and Congress
President Sonia Gandhi here at the party plenary as part of the 125-
year celebrations.
It is the fifth of a series planned during the 1985 centenary
celebrations under Rajiv's leadership.
Rajiv is said to have instructed that the five-volume history should
be written by "professionals" and the "facts" be presented in a manner
that future generations can judge the Congress for themselves.
So, the party commissioned historians to write it. with Mukherjee as
the chief editor.
In the words of Mukherjee, the book gives a glimpse of how the
Congress over the past 125 years traversed the path of the Indian
nation building through extremely difficult challenges, both external
and internal.
சீனப்போரைப் பற்றிய விவரங்களை வெளியே சொல்வதில் காங்கிரசுக்கு இருக்கும்
தயக்கம், பயம் இந்திய வரலாற்றை அறிந்தவர்களால் புரிந்துகொள்ளக் கூடியது
தான்! நேருவின் வீரப்பரம்பரை சாயம் அங்கே கழுதைக்கு வெள்ளி மூக்கு
முளைத்தது மாதிரி அப்பட்டமாக இருந்தது. நேரு, நேரு பரம்பரையின் வீரம்,
தியாகம், புனிதர் பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செய்திகளை மூடி
மறைக்க முயன்ற அளவுக்கு இந்திய ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதில் கூட
இந்திய அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டதில்லை என்றே சொல்லலாம்!
நான் சீன யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சரகத்தில், மையமான இடத்தில்,
சின்ன வேலையில் பணி புரிந்தவன். எல்லாம் நினைவில் உள்ளது. மற்றொரு
தளத்தில் ஏற்கனவே ஓரளவு இது பற்றி எழுதியிருக்கிறேன். சிலருக்கு நினைவில்
இருக்கலாம்.
இன்னம்பூரான்
04 01 2011
2011/1/4 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
நான் சீன யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சரகத்தில், மையமான இடத்தில்,
சின்ன வேலையில் பணி புரிந்தவன். எல்லாம் நினைவில் உள்ளது. மற்றொரு
தளத்தில் ஏற்கனவே ஓரளவு இது பற்றி எழுதியிருக்கிறேன். சிலருக்கு நினைவில்
இருக்கலாம்.
04 01 2011
இன்னம்பூரான்
"திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது!"
என்று பாடினார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்! அதெல்லாம் இன்றைய
நிலைக்கு ஒத்து வராது போல இருக்கிறது!
கூட்டுக் களவாணிகளுக்குள் குழப்பமும் சண்டையும் வந்தால் தான்,
திருட்டுக்கள் அம்பலமாகும் என்பது இன்றைக்குக் காலத்தின் கோலம்!
இன்று ஒரு விளம்பரமாக....!
http://ibnlive.in.com/news/2g-fallout-in-dmk-alagiri-threatens-to-quit/139465-37-64.html
இங்கே ஒரு வீடியோவையும்
http://www.hindustantimes.com/Split-in-DMK-family-Alagiri-demands-sister-Kanimozhi-s-ouster/Article1-646413.aspx
இங்கே கொஞ்சம் விரிவான செய்தியாகவும்
"Anxious for the party's image that took a big hit from the 2G
spectrum scam, DMK patriarch M Karunanidhi's elder son MK Alagiri has
demanded the ouster of former telecom minister A Raja and his half
sister Kanimozhi. Alagiri is said to have threatened to quit as the
DMK's organisational secretary for the southern region if his demand
was not met. Sources in the party said he wanted a significant
portfolio befitting his stature at the headquarters.
The union chemicals and fertilisers minister has reportedly made these
demands in a letter to Karunanidhi, which he is supposed to have
handed over on January 1.
A party spokesperson, however, denied the existence of such a letter
or that it had come up for discussion.
The stand of Alagiri is, however, diametrically opposite to the 'Save
Raja' campaign unleashed by the DMK obviously with Karunanidhi's
blessings during the last week of December.
Citing the CBI raids as an image dampener, Alagiri said it would be
difficult for the party to win from southern Tamil Nadu, his
stronghold, in the coming assembly elections in May.
Alagiri also wanted the state government to distance itself from Tamil
Maiyyam, an NGO in which Rajya Sabha member Kanimozhi is a director,
since the CBI had raided its offices in the wake of the scam.
Sources in the DMK said Alagiri was also miffed with state welfare
minister Poongothai Aladi Aruna and wanted action against her for
describing him as a cold-blooded politician in her conversations with
corporate lobbyist Niira Radia.
This development has come as yet another headache for the party
leadership that is discussing preparations for the assembly poll
presence of party supremo and chief minister Karunanidhi."
இந்த செய்தியை வெளியிட்டிருக்கும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் காங்கிரஸ் ஆதரவுப்
பத்திரிக்கை! வேறு வழி இல்லாமல், அவ்வப்போது, கொஞ்சம் உண்மை
நிலவரங்களையும் சொல்ல வேண்டி வரும்!இதன் செய்தி ஆசிரியர் வீர் சங்வி
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நீரா ராடியா டேப் விவகாரத்தில் அதிகாரத் தரகு
வேலை பார்த்த விஷயம் அம்பலப் பட்டு, மன்னிப்பும் கேட்டார் என்பது இன்று
ஒரு விளம்பரத்தில் கொசுறு!
ஆ.ராசாவுக்கு எதிரான சுவாமியின் புகார் மனு ஏற்கக்கூடியதே: தில்லி
நீதிமன்றம்
புதுதில்லி, ஜன.7: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள்
தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிரான ஜனதா கட்சித் தலைவர்
சுப்ரமணியம் சுவாமியின் புகார் மனு ஏற்கத்தக்கதுதான் தில்லி நீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
சுவாமியின் அந்த புகார் மனு ஏற்கத்தக்கது என்பது எனது கருத்து என சிபிஐ
சிறப்பு நீதிபதி பிரதீப் சத்தா தெரிவித்தார்.எனினும் புகார்தாரராகவும்,
அரசு வழக்கறிஞராகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என சுவாமியிடம்
நீதிபதி தெரிவித்தார்.
2 பொறுப்புகளை கேட்கவில்லை என பதிலளித்த சுவாமி, முதலில் புகார்தாரராகவே
இருக்கிறேன். அதன்பின்னர் இந்த ஊழல் வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவிபுரிய
விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனது வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் பதிவுசெய்யுமாறு சுவாமியை
நீதிபதி கேட்டுக்கொண்டார்.
கபில் சிபல் ஒருபக்கம் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறார். தணிக்கைத்
துறை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அரசுக்கு நட்டம் என்று தவறான தொகையை
சொல்லியிருக்கிறது என்கிறார்
இது இன்று ஒரு விளம்பரமாக!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
அக்கறை இல்லாமல் இல்லை!? போபார்ஸ் என்ன ஆனது, அதற்கு முந்தைய ஊழல்கள்
என்ன ஆயின என்று கேட்டுவிட்டு, இதுவும் அதுபோலவே ஊத்தி மூடிக்
கொண்டுவிடும் என்று நினைப்பது அக்கறை இருப்பதன் அடையாளம் இல்லை!
தட்டிக் கேக்க ஆளில்லேன்னா தம்பி சண்டப்ரசண்டன் !
இப்படி ஒரு வழக்கு உண்டு, ஒரு சினிமாப் பாடல் கூட இந்த வரிகளில் தான்
ஆரம்பிக்கும். ஊழல் செய்தவர்களைத் தட்டிக் கேட்க வேண்டிய விதத்தில்
கேட்டிருக்கிறோமா? தட்டுவது என்பது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஓட்டுப்
போடுவது அல்லது என்ன செய்தாலும் இவர்களைத் திருத்த முடியாது, எதற்காக
ஓட்டுப் போட்டு விரலைக் கறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வீட்டிற்கு
உள்ளேயே உட்கார்ந்து விடுகிறோமா?
இன்று ஒரு விளம்பரம் என்று ஆரம்பித்தது, இந்த மாதிரி சோம்பிக்
கிடப்பதற்காகவோ, அல்லது "என்ன பிரமாதமாக ஊழலை ஊதித் தள்ளிவிட்டார்கள்
பார்த்தாயா ரேஞ்சுக்கு", இவனும் சொத்தை அவனும் சொத்தை என்ற வாதத்திற்கு
இடம் கொடுத்துத் தவறை நியாயப் படுத்த வழி செய்வதற்காகவோ இல்லை.
நம்மால் முடியும்! முதலில் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்!
இது விளம்பரத்துக்காக அல்ல, ஒரு விழிப்புணர்வுக்காக சொல்வது.
இது உங்கள் கவனத்துக்காக! இன்று ஒரு விளம்பரம் பகுதியில் தினமணி
நாளிதழில் இன்று வெளியான கட்டுரை இது.
ஊழலில் பொதுமக்களுக்கும் பங்கு!
சா. ஜெயப்பிரகாஷ்
First Published : 08 Jan 2011 04:01:23 AM IST
"ஒவ்வோர் ஆட்சியிலும் ஒரு பெயரில் ஊழல் என்ற வழக்கு (!) மாறி, இப்போது
ஒவ்வோராண்டிலும் ஒரு பெயரில் ஊழல் என்பது பிரபலமாகிவிட்டது. அதேபோல,
ஊழலின் உத்திகளும் மாறியிருக்கின்றன. ஏதோவொரு சான்றுக்காக வருவாய்
அலுவலகங்களில் ரூ. 50, 100 கொடுப்பதும், பெரிய அளவில் ஏதோவொரு
ஆதாயத்துக்காக பெட்டிகளில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கொடுப்பதும்
பழைய முறை.
அதன்பிறகு ரொக்கம் தவிர்க்கப்பட்டு, உரியவரின் வீடுகளுக்குத் தேவையான
பொருள்களாக (டிவி, குளிர்சாதனப் பெட்டி...) நேரடியாக இறக்கிவிடுவதும்,
ஆதாயத்தின் அளவுக்கேற்ப வீடு, பண்ணைத் தோட்டம் வாங்கித் தருவதும்
அண்மைக்கால முறைகள். இவையெல்லாவற்றையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இப்போது நேரடியாக ஆதாயம் பெறுவது என்ற ஊழல் இலக்கணம் முற்றிலும் மாறி,
பல்வேறு நவீனமான உத்திகளுடன் அது பிரவாகமெடுத்திருக்கிறது. நேரடியாக
நடப்பது எல்லாமும் சட்டப்படி நடக்கிறது. அதன்மூலம் பிறருக்குக்
கிடைக்கும் ஆதாயத்தில் பங்கு பெற்றுக் கொள்வது அல்லது அந்த ஆதாயம்
பெறுபவராகவே "பினாமியில்' மாறிக் கொள்வது என்ற நவீனம் ஊழலில்
ஊற்றெடுத்திருக்கிறது.
இந்தப் பரிணாம வளர்ச்சி இன்னும் வளருமா? என்ற கேள்வி அச்சம் தொடர்பானது.
ஏன் வளர்ந்து கொண்டே இருக்கிறது? என்ற கேள்வி ஆய்வு தொடர்பானது. இந்த
இரண்டையும் பற்றி யாரும் கவலைப்பட்டதே இல்லை. குய்யோமுறையோவென்று
கத்துவோமே தவிர, யோசித்ததே கிடையாது. அதுவும்கூட, தொகையைக் கேட்ட
ஆச்சரியம்தானே தவிர, வேறெதுவுமாக இருக்க வாய்ப்பில்லை.
பரிணாம வளர்ச்சி இருக்குமா என்ற அச்சத்துக்கு உடனடி பதில், "வாய்ப்புகள்
அதிகம் இருக்கிறது' என்பதாகத்தான் இருக்கும். ஏனென்று மறுபடியும் ஒரு
கேள்வி கேட்டால், "சட்டவிதிமுறைகள் அப்படித்தான் இருக்கின்றன' என்ற
"ரெடிமேட்' பதிலையும் நாமே வைத்திருக்கிறோம். அதுவும் உண்மையல்ல."
இந்த ஊழல் உலகத்துடன் ஏதோ ஒருவகையில் நம்மையும்
பிணைத்துவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் இதற்குக் காரணம். சிறியதாகவோ,
பெரியதாகவோ பொதுமக்களையும் இலகுவாகப் பிணைத்துவிட்டதன் விளைவு,
நேரடியாகக் கேள்வி கேட்கும் திராணியை இழந்துவிட்டோம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிடம்- பொதுவாகவே திமுகவினரிடம்-
இதுவும் வேண்டாம், ஆளும் தரப்பிலிருந்து எல்லோரும் ஏதோவொரு பெயரில்
"லஞ்சம்' பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். பெறுபவர்களுக்கு
வேண்டுமானால் நன்கொடையாகவோ, அன்பளிப்பாகவோ, சலுகையாகவோ... இன்னும் வேறு
ஏதோவொரு பெயரிலோ இருக்கலாம்.
"வாயை அடைக்க' என்று வெளிப்படையாகவும் சொல்ல வேண்டாமே. ஆனால்,
கொடுப்பவர் ஏதோவொரு ஆதாயத்தை மனதில் கொண்டுதான் கொடுக்கிறார்.
எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியின் தோழமைக் கட்சிகள், இவர்களுக்கெல்லாம்
ஆதரவு தரும்- எதிர்க்கும், எல்லோரையும் எதிர்க்கும் அமைப்பினர், ஊழலுக்கு
எதிராகக் கூக்குரலிடுவோர் என சகலரும் வாங்கிக் கொள்கிறார்கள்.
இதோடு நின்றுவிடவில்லை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் உத்தியைக்
கொண்டு அவர்கள் செய்த பாவத்தை-லாபத்தைக் கணிசமான பெரும்கூட்டத்துக்குமே
பிரித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெளிப்படையாக எல்லோருக்கும்
தெரிந்தாலும், புரிந்து கொள்ளப்படுவதில்லை.
எடுத்துக்காட்டுக்கு, அலைக்கற்றை விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். பல
லட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு வருவாய் இழப்பு என்கிறார்கள்.
அதிலிருந்து சில ஆயிரம் கோடிகள் ராசாவுக்கோ, அவர் மூலமாக திமுகவினருக்கோ,
காங்கிரஸ்காரர்களுக்கோ கிடைத்திருக்கலாம்.
தொகை குறைவாகவோ, கூடுதலாகவோ, பங்கு பிரித்ததாகக் கூறப்பட்டதில்
விடுபடுதலோ இருந்தால் தயைகூர்ந்து யாரும் வருத்தப்பட வேண்டாம்!
எடுத்துக்காட்டுக்குத்தான்.
அலைக்கற்றை விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்த 2008-க்குப் பிறகு
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் விநியோகம்
செய்யப்பட்ட தொகை எங்கிருந்து வந்தது? வாக்குக்குக் கிடைத்த தொகை ரூ.
ஆயிரம் என்கிறார்கள், ரூ. 2 ஆயிரம் என்கிறார்கள். மூக்குத்தி
என்கிறார்கள். குடம் என்கிறார்கள், வேஷ்டி- சேலை என்கிறார்கள். இன்னும்
என்னென்னவோ.
ஆக, கொடுத்திருக்கிறார்கள். இதை திமுகவினரும்கூட, அண்மையில் சென்னையில்
தேர்தல் அலுவலர்களைச் சந்தித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம்
பேசியபோது லேசுபாசாக ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.
அப்படியானால், அலைக்கற்றை விவகாரத்திலிருந்து ஆதாயமாகக் கிடைத்த பணம்,
பிரித்தளிக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொள்ளலாம் அல்லவா? அதுதானே உண்மை.
கள் விற்ற காசு புளிக்கவா போகிறது என்று விட்டுவிட முடியுமா?
பெரும் தொகையைப் பார்த்து மலைத்துப்போய் சில சொற்களை உதிர்ப்பதுதான்
இப்போதைக்கு நாம் வெளிப்படுத்தும் ஆதங்கங்களே தவிர, வேறொன்றுமில்லை. சரி,
என்ன செய்யலாம்?
இந்த ஆண்டு இரு தேர்தல்களை தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கிறார்கள்.
சட்டப்பேரவைக்கான தேர்தல் முன்னதாகவும், அதைத் தொடர்ந்து உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தேர்தலும் வரவிருக்கிறது. பேரவைத் தேர்தல்களின் முடிவு
இரண்டாவது தேர்தலைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்யலாம்! இப்போதைக்கு இரு
தேர்தல்கள் வரவிருப்பதாகவே கருதுவோம். பெரிய மாற்றத்தை மக்கள் கொண்டு
வரவேண்டும் என்று நினைப்பது அபத்தம் எனக் கடந்த கால வரலாறுகளில் இருந்து
புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
இருந்தாலும், ஒரு நப்பாசை. பெரிய மாற்றத்தை எதுவும் ஏற்படுத்த வேண்டாம்.
குறைந்தபட்சம் பணம் வாங்காமல் விரும்பியோருக்கு வாக்களிக்கும் நேர்மையை
வாக்காளப் பெருங்குடி மக்கள் மேற்கொள்வார்களேயானால் அதுவே பெரிய
வெற்றியாகக் கருதலாம்.
திரு.எல்கே!
--
"The OU campus has been sealed off and the forces deployed there are
not allowing the students to either leave the campus or others to
enter.
“The situation reminds us of Emergency days. The campus has been
sealed off and none of us is being allowed to step out. Any attempt to
go out by the students is being foiled by the forces by
indiscriminately caning them,” Rajaram Yadav, an OU student leader,
said.
Adding to the troubles of the students, the OU management has decided
to close down the hostels and the pantry, forcing the students to go
home instead of staying on campus. The students are being supported by
the residents of Manikeshwar Nagar, a slum locality adjacent to the OU
campus. “The forces are offering Rs300 as remuneration if the locals
give information on the students taking shelter in the residential
area,” a student said.
Hyderabad police commissioner AK Khan, while dismissing allegations of
police excesses injuring the students on campus, said the students
were being stopped from coming out of the campus only to ensure that
they do not attack private property outside the campus."
இது இன்று ஒரு விளம்பரம் பகுதியில், ஒரு சென்சிடிவான பிரச்சினை எவ்வளவு
அபத்தமாகக் கையாளப் படுகிறது என்பதைத் தொட்டுச் சொல்வதற்காக மட்டும்!
ஏற்கனேவே, ஒஸ்மானியா பல்கலைக் கழகத்தில் நடந்த வன்முறையை, நேரடியாக
ஒளிபரப்பியதற்காக கே ஆர் சந்திர சேகர ராவுக்குச் சொந்தமானது என்று
சொல்லப்படும் ஒரு தொல்லைக் காட்சி மீது வழக்குப் பதிவு செய்து தொல்லைப்
படுத்தும் வேலையும் ஆரம்பமாகி இருக்கிறது.
2011/1/9 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
இதுவும் கூட, ஒருவகையில் ஒரு தணிக்கை, தணிக்கைத் துறையின் மீது தணியாத
மோகம், அதில் இருந்து கிளம்புகிற வேகம் என்று வேண்டுமானாலும் வைத்துக்
கொள்ளுங்களேன்!
2011/1/9 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் உழைத்து சம்பாதித்த பொருளை, அடுத்தவர் செல்வத்தை,
கொள்ளையடித்து சம்பாதிப்போரை நாட்டின் செல்வத்தை கொள்ளையடிப்போரை மனித இனத்தில் மட்டுமல்ல பறவைகள் இனத்திலும் பார்க்கலாம் என்பதற்கு அத்தாட்சி இந்த ”ஸ்குவாஸ்” என்னும் கடற்கொள்ளையன் எனப்படும் பறவை. வானில் பறந்துகொண்டே மற்ற பறவைகளைடம் சண்டையிட்டு ,அந்தப் பறவைகள் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொள்ளையடிக்கும் பறவை. அமெரிக்கா,மற்றும் ஆர்ட்டிக் பகுதிகளில் காணப்படும் இப்பறவைகளை கடற்கொள்ளையன் என்று அழைப்பர். அடுத்த உயிரினங்களுக்கு சொந்தமான உணவுப் பொருட்களை கொள்ளையடிக்கும் இந்த செய்கைக்கு ”கிளிப்டோபாராசிடிசம்” என்று பெயர்
சரி நாம் இயல்பான வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளைப் பார்ப்போம்.
குற்றம் புரிவோருக்குத் துணையாக மேடுபள்ளமான சாக்கடை நீர் ஆறு போல் ஓடுகின்ற சாலைகளும், வெளிச்சமின்றி, அழுக்காக, பொதுமக்கள் நடமாடும் இடங்களும்,நடைபாதைச் சுரங்க வழிகளும், பராமரிப்பில்லாத நிலையில் அன்றாடம் குப்பை கொட்டுவது மிகவும் கடினமான காரியம் என்பது தெரிந்ததே,
எங்கள் பகுதியைச் சுற்றி உள்ள எல்லாப் பகுதிகளிலும் இருந்து குப்பைகளை திரட்டி ,அவற்றை பெரிய சாக்குப் பைகளில் போட்டுக்கொண்டு வந்து அந்த சக்குப் பைகளைப் பரப்பி வைத்துக்கொண்டு அவற்றிலிருந்து குப்பைகளை சாலையிலேயே கொட்டி அவற்றிலிருந்து பல பொருட்களை சேகரித்து அவற்றைக் காசாக்கும் ஒரு கும்பல் எங்கள் தெருவில் சாலை ஓரத்தின் இருபுறமும் இருக்கும் நடைபாதைகளில் தினமும் மக்களை நடக்கவொட்டாமல், சாலையில் வாகனங்களைப் போகவொட்டாமல் இடைஞ்சல் செய்துகொண்டு பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறது.
அந்தப் பகுதியில்வாழும் பலருக்கு தொல்லையாகிப் போய்விட்டது இவர்களின் கூச்சலும் , சண்டையும், மேலும் கொசுக்கள் அதிகமாகிவிட்டன.எங்கள் பகுதியில் அனைவரையும் சந்தித்து இந்தப் ப்ரச்சனையைக் களையவேண்டும் என்னும் நோக்கத்துடன் சிலர் சேர்ந்து இவர்களிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்தோம், இவர்கள் இங்கே குப்பை பிரிப்பதால், அவர்களிடம் நாம் அவர்கள் இங்கே வைத்துக்கொண்டு குப்பை பிரிக்கும் வேலையைச் செய்வதால் நமக்கு ஏற்படும் இன்னல்களை அவர்கள் புரிந்துகொள்ளுமாறு கூறுவோம், புரிந்து கொண்டு அவர்களாகவே மக்களுக்கு தொந்தரவில்லாத இடத்துக்கு மாற்றிக்கொண்டுவிட்டால் சரி இல்லையெனில் நாம் ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்வோம் என்று கூறி அனைவரிடமும் கூறி முடிவு செய்து யாரெல்லாம் வருகிறிர்கள் என்று கேட்டேன்.அனைவருமே வருவதாக ஒப்புக்கொண்டனர்.
மறு நாள் மிகவும் நம்பிக்கையுடன் கிளம்பினேன்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தொலைபேசி அழைப்பு, அவருக்கு ஏதோ முக்கிய வேலை இருப்பதாகவும் ,அதனால் நான் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதாகவும் சொன்னார்கள்
எனக்கு ஏனோ ஒரு மன்னன் ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒரு குடம் பால் கொண்டு வந்து தொட்டியில் ஊற்ற வேண்டும் என்று கட்டளையிட்டதும் மறு நாள் அந்தத் தொட்டி காலியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது
அன்புடன்
தமிழ்த்தேனீ
NEW DELHI: The CBI has registered a preliminary enquiry (PE) to probe
the role of certain public sector banks, including the State Bank of
India, for providing loans to certain companies who were allocated the
2G Spectrum in 2007-08 including Uninor and STel.
The PE was registered by the Bank Securities and Fraud Cell of the CBI
against unknown bank officials, official sources said here today.
The allegation is that some banks had allegedly violated the laid down
norms and provided finance to two real estate companies who made
forays into the telecom market by procuring the spectrum auctioned
during the said period, the sources said.
This is the second PE registered by the CBI in connection with the 2G
spectrum scam besides a regular case against unknown officials of the
Department of Telecom and private companies.
According to the PE, the banks provided loans, worth over Rs 11,500
crore, to two real-estate companies by completely ignoring the risk
factors, given that the Central Vigilance Commission (CVC) had already
registered a case in the 2G scam and the CBI had begun its probe.
The public sector banks allotted Rs 10,000 crore to Unitech and Rs
1,538 crore to STel, based just on the licence papers issued by the
Department of Telecom (DoT).
Out of the Rs 10,000-crore loan to Unitech, the major chunk was
disbursed by the State Bank of India which provided a loan of Rs 8,050
crore to the Unitech during 2009-2010.
The other banks which gave money to Unitech for its Uninor company
were Corporation Bank , Allahabad Bank , South Indian Bank , Canara
Bank , Oriental Bank, Central Bank of India , Punjab National Bank ,
Standard Chartered Bank and Yes Bank .
The other company was STel which got the Rs 1538-crore loan from IDBI
and IDBI Trusteeship Services Limited, during the period between July
to November 2009.
In December last year, the Supreme Court had come down heavily on
public sector banks for their role in the 2G spectrum scam. A two-
judge bench of Justices G S Singhvi and AK Ganguly had said that
massive amounts were lent by some public sector banks to the 2G
licencees and it must be investigated.
The bench had pointed out that about Rs 600-700 crore were lent out as
if it was an amount like Rs 60-70.
The court also questioned how did public sector banks continued to
disburse loans to telecom companies even after the CBI registered an
FIR in connection with the 2G scam and searched the premises of the
telecom companies in October 2009.
சனிப் பிணம் தனியாகப் போகாது என்பார்கள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், புதைக்கப்பட்ட போபார்ஸ் பீரங்கி ஊழல்
என்று வரிசையாக, 2010 ஆம் ஆண்டு முழுவதுமே பரபரப்பாக ஒன்று மாற்றி ஒன்று
என்று கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஊழல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக
அணிவகுத்து ஆரவாரித்துக் கொண்டிருந்தன.
வங்கிகளுமே கூட தப்பவில்லை. ஆ. ராசா அனுமதி கொடுத்த ஒருமணி
நேரத்துக்குள்ளாக, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் வங்கிகளில்
சுமார் இருபத்து நாலாயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற முடிந்தது என்பது
சனிப் பிணம் தனியாகப் போகாது என்ற கதை தான்.இன்னும் யார் யாரையெல்லாம்
கூட்டணி சேர்த்துக் கொண்டுபோகும் என்பது இப்போது சொல்ல முடியாத மர்மம்!!
சிபிஐ கூட வேறு வழி இல்லாமல் ஒரு முன்னோட்ட விசாரணையை வெள்ளோட்டம் விட
வேண்டி வந்திருக்கிறது. கொஞ்சம் பாருங்கள்!
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!
இது இன்று ஒரு விளம்பரமாக!
-----------
This is a printer friendly version of the page. Go back to the website version »
Jan 13th 2011 | from PRINT EDITION
SOME of the MPs who have this week been barracking British bankers for their Croesean bonuses might be secretly relieved that the subject is in the news again. For the renewed row over financial-sector compensation, which has been ebbing and surging since the credit crunch began, diverted attention from another long-running bust-up over money that has returned to the news: the abuse by some MPs of Parliament’s system of expenses, which surfaced spectacularly in 2009.
On January 7th David Chaytor, a former Labour MP, was sentenced to 18 months in prison for false accounting, after claiming £20,000 in mortgage repayments on a house that he already owned outright. On January 11th it was the turn of Eric Illsley, who kept his seat at the last general election, to appear before a judge. He pleaded guilty to fraudulently claiming £14,000 in expenses associated with a second home, and later announced his resignation from Parliament. If Mr Chaytor’s fate is a guide, he is likely to face jail as well. Four other politicians—two ex-MPs and two peers—have been charged with similar offences, and the police are investigating several others.
Meanwhile, MPs are chafing under the tighter expenses regime designed amid the aftershocks of the scandal. The Independent Parliamentary Scrutiny Authority (IPSA), which was set up to administer the new system, is widely loathed inside the Palace of Westminster. Parliamentarians complain that it is overly bureaucratic and takes too long to come to reimbursement decisions, and that its rules penalise those with families, especially inconveniencing politicians without much private wealth. On January 5th IPSA announced a review of the rules, inviting the public to suggest further reforms to the system.
David Cameron, the prime minister, has indicated that he wants to see IPSA “sort itself out” by April. But he is having to perform a tricky high-wire act, placating mutinous MPs of all parties who dislike the new arrangements, while avoiding giving the impression to the public that he is acquiescing in a return to the bad old days.
That could prove tricky in a political climate defined by anger, mistrust and contempt among voters. One recent survey found that only 28% of respondents trusted MPs not to diddle their expenses. Worse, faith in the political system more generally is nearing banana-republic levels: 40% of respondents told the recent British Social Attitudes survey that they “almost never” trusted the government to act in the national interest, while 60% thought politicians “almost never” told the truth.
It is against this poisonous backdrop that an uneasy coalition government plans to implement the most austere fiscal policy in decades. Public ire will only grow as tax hikes and spending cuts take effect. Bailed-out bankers might be the pantomime villains of the hour. But any suggestion that MPs are conspiring to loosen the new expenses rules could be enough for them to reclaim that role.
from PRINT EDITION | Britain
பொய் சொல்வதைத் தவிர வேறொன்றையும் அறியாத நம்மூர் அரசியல்வாதிகள்
அமைச்சர்களை என்னவென்று சொல்வது? தனித்தனியாக ஒவ்வொரு பொய், மோசடிக்கு
விசாரணை, தண்டனை என்று நிஜமாகவே நடக்க ஆரம்பித்து விட்டால்....?
இங்கே வேறோரிடத்தில் திரு எல்கே எமெர்ஜென்சி நாட்களைப் பற்றி சொன்னால்
தானே தெரியும் என்று கேட்டிருந்தார். இ ஐயாவுக்கும், எல்கேவுக்கும் இந்த
செய்தி, ஒரு விளம்பரத்துடன்!
Rajan case haunted Karunakaran
Story Dated: Thursday, December 23, 2010 18:35 hrs IST
Kochi: One of the low points of Karunakaran's political career
happened after the Emergency when he was forced to step down from the
Chief Minister's chair following the controversy regarding the
custodotial death of Rajan, an engineering college student.
Karunakaran who was sworn in as the Chief Minister had to quit within
a month of his taking oath following adverse remarks in a High Court
verdict by Justice Subramaniam Potti and Justice V.Khalid.
Rajan was picked up by the police on charges of participating in
protest against the Emergency and was allegedly tortured to death in
Kakkayam police camp. His body was never found. The habeas corpus
petition filed by Eachara Warrier, father of Rajan attracted huge
media attention and protest by civil society.
Karunakaran was prosecuted at the instance of High Court but was later
let off by Chief Judicial Magistrates Court of Ernakulam. The Supreme
Court later exonerated the police officials for want of evidence to
prove that Rajan was tortured to death.
It was widely believed that K. Karunakaran knew the truth but refused
to divulge it. Karunakaran claimed in later interviews that he had no
regrets about the case. He said that he was not provided with a true
picture despite being in charge of the home ministry.
Eachara Warrier continued knocking legal and political doors in search
of justice till his death in April 2006. Before his death Warrier
wrote a touching account of his battle to locate his son called
Memories of a Father. Warrier however wrote that it was the attitude
of communist leader C. Achutha Menon that pained him Menon was the
chief minister when the incident happened.
While media sought Karunakaran's reaction on Eachara Warrier's death
he termed the incident during the Emergency as "unfortunate". But
infamously asked. "What is Eachara Warrier's importance? What is his
contribution to the country."
எமெர்ஜென்சி நாட்களில் ராஜன் வழக்கு என்று மிகவும் பிரபலம்!
போலீஸ்அட்டூழியத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட ஒரு இளம் மாணவனின்
தந்தை நடத்திய போராட்டம், கருணாகரன் மாதிரி காங்கிரஸ் பொய்யர்களின்
முகமூடியைக் கிழித்தது. நேற்று ஈச்சர வாரியர், தன்னுடை மகனைக்
கண்டுபிடிக்க நடத்திய போராட்டத்தை விவரித்த ஒரு தந்தையின் நினைவுகள்
புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ஜனநீதி வெளியீடாக வந்த இந்தப்
புத்தகத்தை இணையத்தில் தேடினால் பி டி எப் கோப்பாகத் தரவிறக்கம் செய்து
கொள்ள முடியும்.
நம்முடைய உரிமைகள், சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வது நம்முடைய
கைகளில் தான் இருக்கிறது. அடுத்தவருடைய உரிமைகளை மதித்து, ஒருங்கிணைந்து
செயல்படுவதில் தான் இருக்கிறது. ஒரு தனிமனிதராக, ஈச்சர வாரியர், சில
நல்லமனிதர்களுடைய உதவியுடன் நடத்திய இந்தப் போராட்டமே நிறைய விஷயங்களை
சொல்லுமே!
நன்றி 'இ' சார்.
வாரன்ட் பாலா என்று ஒருவர் இருக்கிறார். அவரை நேற்று புத்தக்
கண்காட்சியில் சந்தித்தேன்.
''நீதியைத் தேடி'' (நீங்களும் நீதி மன்றத்தில் வாதாடலாம்) என்கிற
தலைப்பில் இதுவரை ஐந்து வால்யூம்களை வெளியிட்டிருக்கிறார். எளிய, இனிய
தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொருவரும் எவ்வாறு
சட்டத்தை துணைக்கு அழைக்கலாம் என்பதையும், வழக்கறிஞரின் துணையின்றி
நீதிமன்றத்தில் வாதாடலாம் என்றும் எழுதி இருக்கிறார். நீதிபதிகளும், சட்ட
ஆலோசகர்களும் இந்த புத்தகங்களை படித்து விட்டு தங்கள் பெயர்
சொல்லவேண்டாம் என்று கேட்டுக் கொண்டு புத்தக வெளியீட்டுக்கு நிதி உதவி
செய்ததாக கூறுகிறார். இவ்வளவுக்கும் ''வாரன்ட்'' பாலா பன்னிரண்டாவது
வரைக்கும் படித்திருப்பதாக சொல்கிறார். இவரது புத்தகங்களை ஒவ்வொருவரும்
வாங்கிப் படிக்கலாம். பயன்படுத்தலாம். சட்டம் மட்டும் இன்றி பொதுமக்களும்
தங்கள் 'கடமையைச் செய்தால் பலனை அடையலாம்'
நன்றி.
On Jan 15, 5:50 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
On Jan 16, 9:06 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
Spiritual leader Sri Sri Ravi Shankar has appealed the citizens to bail out the country from rampant scams and reform it by adopting the spiritual path.
Addressing a mammoth gathering on the occasion of Makar Sankranti here last night at the packed Dadoji Konddeo Stadium, he asked the people to become self reliant and reduce dependency on the government.
"Be your own and strive for development... Unless you take matters seriously and in your hand... nothing will work," he said at a function organised jointly by Sanskar and Art of Living to celebrate his first ever visit to the district.
"On this 30th anniversary of 'Art of Living' and on the occasion of Makar Sankranti, let us begin a 'Kranti' (revolution) for building a strong and spiritual India devoid of scams and slums," he appealed.
Ravi Shankar asked people to devote sometime for sadhana and meditation everday that the mind gets rejuvenated.
தமிழ் வாசலில் தனி இழையாகத் துவங்கி விடலாம்னு பார்க்கிறேன்.
தலைப்பு என்னவாக இருந்தால் நன்றாக இருக்கும்.?
''நீங்களும் நீதி மன்றத்தில் வாதாடலாம்''
இந்தத் தலைப்பு பரவா இல்லையா?
அஷ்வின்ஜி.
On Jan 16, 10:03 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> தத்க்ஷணமே அதை செய்யவும், அஷ்வின்ஜி.
> இ
>
> 2011/1/16 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் இதய நன்றி 'இ' சார்.
> > அவரது புத்தகங்களில் இருந்து ''தேவை எனில்'' சில செய்திகளை நாம் நமது
> > குழுமத்திலோ அல்லது வலைப்பூக்களிலோ பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும்
> > வாரன்ட் பாலா கூறி இருக்கிறார்.
> > --அஷ்வின்ஜி.
>
> > On Jan 16, 9:06 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > wrote:
> > > உங்கள் தகவல் என் நம்பிக்கையை கூட்டுகிறது. வாரண்ட் பாலா அவர்கள் வாழ்க.
> > நன்றி
> > > அஷ்வின்ஜி.
> > > இன்னம்பூரான்
>
> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் வாசல்" group.
> > To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to
> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
திரு வாரன்ட் பாலாவை நேற்றுதான் முதன்முதலாகச் சந்தித்தேன். வேறொரு
துறையில் உள்ள ஒருவரின் மூலமாக கடந்த மாதம் அறிமுகமான அவருடன் இன்று
நேரில் சந்திக்குமுன்பாக ஓரிரு முறை செல்பேசியில் பேசியிருக்கிறேன்.
அவரைக் காண நேற்று நான் சென்ற போது (புத்தகக் கண்காட்சியில் ஸ்டால்
ஒதுக்கீடு கேட்டிருந்த அவரது மனு நிராகரிக்கப் பட்டதால்) எதிரே உள்ள
பச்சையப்பன் கல்லூரி வளாகத்தை ஒட்டிய பிளாட்பாரத்தில் (பஸ்ஸ்டாப் அருகே)
தனது புத்தகங்களை வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் நேரடியாக விளக்கிக்
கொண்டிருந்தார். புத்தகங்களை வாங்குவதை விட அவரிடம்
சம்பந்தாசம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டு அவரது சக்தியை பலர்
விரயமாக்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன். ஆனால் எதற்கும் அசருவதாகத்
தெரியவில்லை.
புத்தகங்களை வாங்குமுன்பாக அவரிடம் தவறாமல் எல்லோரும் கேட்ட கேள்விகள்:
நீங்க சட்டம் படிச்சிருக்கீங்களா? நீங்க வக்கீலா? வக்கீலுக்குப்
படிக்காமல் எப்படி இந்த புத்தகங்களை எழுதினீர்கள்? (நல்ல வேலையாக அவரது
பதில்களை கேட்டதால் நான் அந்த அபத்தமான கேள்விகளை அவரிடம் கேட்கவில்லை)
கருமமே கண்ணாயினாரைப் போல பசிநோக்காது, கண்துஞ்சாது, எச்சிரமத்தையும்
பாராது ஒரு சேவை நோக்கோடு பணியாற்றும் வாரன்ட் பாலாவைப் பற்றி அறிய
ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் என் இதய நன்றி.
இதோ அவரது வலை முகவரி: http://neethiyaithedy.org
அவரது புத்தகங்கள் பற்றிய எல்லா விவரங்களும் அதில் உள்ளன.
அன்புடன்,
அஷ்வின்ஜி.
பி.கு: ஆர்வம் உள்ளவர்கள் அவருடன் தொடர்பு கொண்டால் புத்தகங்களை எப்படி
பெற்றுக் கொள்வது என்பது பற்றி சொல்வார்.
On Jan 16, 10:36 am, LK <karthik...@gmail.com> wrote:
> தலைப்பு நன்றாக உள்ளது இன்றே துவங்கவும்
>
> 2011/1/16 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>
> Thanks and Regards
> Karthik Lhttp://lksthoughts.blogspot.comhttp://kavisolaii.blogspot.com
அன்பாசிகளை வழங்கும் பிதாமகருக்கு என் இதய நன்றி.
நம் அன்பர்கள் முதலில் வாரன்ட் பாலாவின் இணையப் பக்கங்களைப்
பார்க்கட்டும்.
நான் புத்தகங்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஏதாவது
சுவாரஸ்யமான பகுதிகளை படிக்கும் போது அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்
(தங்கள் ஆசி பெற்ற தனி இழையில்). வணக்கங்களுடன்.
அன்புடன்,
அஷ்வின்
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
ஆனால் பொதுத் தணிக்கைத் துறை கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்துவிட்டு
சொல்லும் கருத்துக்களை உதாசீனப்படுத்துவது என்பது இந்திய அரசியலில்
வளர்ந்து வரும் ஒரு அசிங்கம்! இத்தனை வருடங்களாக இல்லாத படிக்கு, சென்ற
ஆண்டு தான் பொதுத் தணிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட தவறுகள் பூதாகாரமாக
வளர்ந்து இந்திய அரசியலை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
கணக்குக் கேட்பதே பாவம் என்பது தான் கழக அரசியல் இந்திய அரசியலுக்குக்
கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். இந்தப் பின்னணியில் தினமணியில் வெளியான
இந்தத் தலையங்கம், "கணக்குக் கேட்பதே பாவமா?" என்று கேட்கிறது!
"இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதல்முறையாக பொதுக் கணக்குக் குழு
முன்பாக இந்திய ராணுவத் தளபதிகள் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டிய
அவசியம் இந்த ஆண்டு உருவாகி இருக்கிறது.
ராணுவத்தினருக்கான கேன்டீன்கள் மூலமாக 2003-ம் ஆண்டு முதல் 2009
நிதியாண்டு வரை, அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 441 கோடி என்று தலைமைக்
கணக்குத் தணிக்கை அதிகாரி அரசுக்கு அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, இது
தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுக்கணக்குக் குழுத் தலைவர்
முரளி மனோகர் ஜோஷி கடிதம் அனுப்பியதால், தரைப்படை, விமானப்படைத் தளபதிகள்
வி.கே. சிங் மற்றும் பி.வி.நாயக், கப்பற்படை துணைத் தளபதி டி.கே. திவான்
ஆகியோர் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று.
ராணுவம் நடத்தும் கேன்டீன்களுக்கெனத் தனியாகத் தணிக்கை முறைகள்
ராணுவத்துக்குள்ளேயே இருப்பதால், ஆய்வுசெய்யும் அதிகார வரம்பு, தலைமைக்
கணக்குத் தணிக்கைத் துறைக்கு இல்லை என்று தாங்கள் கூறியதாக இந்தத்
தளபதிகள் கருத்து தெரிவித்தாலும், அது ஏற்கக்கூடியதாக இல்லை. ராணுவ
ரகசியம் மற்றும் உளவுத் தகவல் அறிவதற்காகச் செலவிடப்படும் கணக்கில்
காட்டப்பட வேண்டிய அவசியமில்லாத நிதிஒதுக்கீடு ஆகியன தொடர்பாக தலைமைக்
கணக்குத் தணிக்கைத் துறை ஆய்வு நடத்த முடியாது என்பதை நாம் புரிந்து
கொள்ள முடியும். ராணுவப் பயிற்சிக்காகச் செலவிடப்படும் தொகை மற்றும்
இந்தப் பயிற்சிகளில் வீணாகும் ஆயுதத் தளவாடங்கள், துப்பாக்கி ரவை,
வெடிகுண்டுகள் குறித்தும் பொது கணக்குத் தணிக்கைத் துறை கேள்வி எழுப்ப
முடியாது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ராணுவம் நடத்தும்
கேன்டீன்களில் பொருள்கள் வாங்கப்படும், விற்கப்படும் முறைகள் குறித்தும்,
அவற்றுக்காக மத்திய அரசு வழங்கும் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது
குறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, அதற்கான வரம்பு இல்லை என்று ராணுவத்
தளபதிகள் சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் இரண்டு
குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முதலாவதாக, ராணுவத்தின் மூலம்
நடத்தப்படும் சுமார் 3,600 கேன்டீன்கள் மூலம் விற்பனை செய்யப்படும்
பொருள்களுக்கான சலுகைகளில் விதிமீறல் நடந்துள்ளது. இதனால் அரசுக்கு
இழப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவதாக, ராணுவ கேன்டீனுக்குக் கொள்முதல்
செய்யும் விலை, நடைமுறைக்குப் பொருந்தாததாக இருக்கிறது. இதனால்,
கேன்டீனுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் கொள்ளை லாபம் பெற வழி
ஏற்படுகிறது.
ராணுவ வீரர்களுக்கான மதுவிற்பனை இந்தக் கேன்டீன்கள் மூலம் நடைபெறுகிறது.
இங்கு விற்கப்படும் மதுபானங்களுக்கு விற்பனை வரி, உற்பத்தி வரி
ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு விலக்கு அளிப்பதால் ராணுவ வீரர்களுக்கு
மிகக் குறைந்த விலையில் இந்த மதுபானங்களை விற்பனை செய்ய முடிகிறது.
ராணுவம் எந்த அளவுக்கு மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம் என்று
நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நிபந்தனைகளை மீறி,
மதுபானங்களைக் கொள்முதல் செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்ய பல கேன்டீன்களில் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், இக்குழு புதுதில்லியில் 3 கேன்டீன்களில்
மட்டுமே ஆய்வு செய்தவரையில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலாக இந்த மூன்று
கேன்டீன்களும் ரூ. 8 கோடி மதிப்புள்ள மதுபானங்களை வாங்கி விற்றுள்ளன.
இந்த ரூ. 8 கோடி மதுபானங்கள் வரிகளுடன் வெளிச்சந்தையில்
விற்கப்பட்டிருந்தால் இதன் மதிப்பு ரூ.19.45 கோடி! அதாவது அரசுக்குக்
கிடைத்திருக்க வேண்டிய வரி இழப்பு ரூ.11.45 கோடி இந்த 3 கேன்டீன்கள்
மூலமாக மட்டுமே ஏற்பட்டுள்ளது.
மதுபான விற்பனையில் மட்டும்தான் வரிவிலக்கு மூலம் குறைந்த விலை
சாத்தியமாகிறது என்றல்ல. வாஷிங் பவுடர் முதல் வாஷிங் மெஷின், கிரைண்டர்
உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களும், இரு சக்கர வாகனங்களும்,
ஏன் தற்போது கார்களும்கூட இந்தக் கேன்டீன்கள் மூலமாக வாங்க முடியும். இவை
அனைத்துமே வரிச் சலுகைகளால் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் மட்டுமே முழுக்கப்
பயன்படுத்தினாலும்கூட இந்த இழப்பை அரசு பொருள்படுத்தாமல் விட்டுவிட
முடியும். ஆனால், வெளிச்சந்தையில் அதிக விலை என்கிற ஒரே காரணத்துக்காகத்
தங்கள் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் வாங்கிக் கொடுக்க
முனையும்போதுதான் அதிகப்படியான கொள்முதலுக்கு வழியேற்படுகிறது.
அரசுக்கும் வரி வருவாய் இழப்பதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது.
ராணுவத்துக்கு எவ்வாறு மது ஒதுக்கீடு அளவு (லிக்கர் கோட்டா) இருப்பதைப்
போன்று ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் ஏன் மது ஒதுக்கீட்டை தேவைக்கேற்ப
நிர்ணயிக்கக்கூடாது. ஒரு ராணுவ வீரர் தன் குடும்பத்துக்காக ஒரு வீட்டு
உபயோகப் பொருளை வாங்கிவிட்டால், அந்தப் பொருளை அடுத்த மூன்று அல்லது
நான்கு ஆண்டுகளுக்கு வாங்க முடியாத நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட
கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய குளறுபடிகளை தடுத்துவிட
முடியுமே.
தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி முன்வைத்துள்ள இந்த இரு
குற்றச்சாட்டுகளும் ராணுவத்தைக் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு
செய்யவில்லை என்பதையும், குறைகளைக் களைய வேண்டிய அவசியம் ராணுவத்துக்கும்
இருக்கிறது என்பதையும் பாதுகாப்புத் துறை புரிந்துகொள்ள வேண்டும்.
ராணுவத்திலும் சில கறுப்பு ஆடுகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதை
மறுப்பதற்கில்லை. ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் தொடர்பான
ஆவணங்கள் காணாமல்போய், அவை அடுத்த சில மணி நேரங்களில் தில்லியின் புறநகர்
சாலையில் வீசப்பட்டு கிடக்குமா?
ராணுவத்தினருக்கும் ராணுவக் குடும்பத்தினருக்கும் அனைத்துவிதமான
சலுகைகளையும் அளித்து ஊக்கப்படுத்தினால்தான், ராணுவத்தில் சேர்வதற்கான
ஆர்வம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால், இந்தப் பயன் ராணுவத்தினரின்
குடும்பத்துக்கு மட்டுமே போய்ச் சேர வேண்டும் என்பதைக் கண்காணிப்பதிலும்
உறுதிப்படுத்துவதிலும் என்ன தவறு இருக்க முடியும்?"
இன்று ஒரு விளம்பரமாக---------------------------
கணக்கு கேளுங்கள்! பாவம் என்று சொன்னாலும் தொடர்ந்து கணக்கைக் கேளுங்கள்!
-------------
--
தங்களின் ஆர்வமான ஈடுபாடு என்னைப் போன்றவர்களுக்கு ஆதார சுருதியாக
இருக்கும். தங்களது அனுபவ முத்திரைகள் வாரன்ட் பாலாவுக்கு பெருமளவில்
பயன்படும் என்று திடமாக நம்புகிறேன்.
இன்று கூட அவரை நேரில் சந்தித்தேன். கசப்பான அனுபவங்களுக்கு மத்தியில்
உறுதியுடன் போராடும் இளைஞராகவே அவர் காணப் படுகிறார். நிச்சயம் தங்களை
தொடர்பு கொள்ளச் சொல்கிறேன்.
பணிவான வணக்கங்களுடன்,
அஷ்வின்ஜி.
On Jan 16, 12:48 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> நன்றி, அஷ்வின்ஜி,
>
> http://neethiyaithedy.orgசென்று எல்லா பக்கங்களையும் உன்னிப்பாகப்
> படித்தேன். இங்கிலாந்தில் Citizens Advice (http://www.citizensadvice.org.uk/)
> என்ற அமைப்பு, 70 வருடங்களாக, கிட்ட்த்தட்ட 35 ஆயிரம் ஆர்வலர்கள் மூலம் 3000
> இடங்களில் மக்களுக்கு, இலவசமாக, உரிய ஆலோசனை அளிக்கிறது. 70 வருடங்களாக
> நடக்கும் காஸ்போர்ட் மையத்தில் ஆறு வருடங்கள் ஆலோசகராக பணி புரிந்தேன்.
> அத்துறையில் அப்போது தான் ஸ்டாஃப்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு பட்டப்படிப்பு
> தொடங்கினார்கள். அதில் சேர்ந்து பட்டம் பெற்றேன். அந்த அமைப்பின் ஆதரவுடன்
> இந்தியாவில் அதை தொடங்க மும்பை, பங்களூரு, சென்னை ஆகிய இடங்களில், பணம் விரயம்
> செய்து, முனைந்தேன். படு தோல்வி; தன நாசம். அப்போது வாரண்ட் பாலா அவர்களை
> தெரியாது. கொஞ்சம் அவகாசம் எடுத்துக்கொண்டு, அவருக்கும் விவரமாக எழுதுகிறேன்.
> இங்கும் பதிவு செய்கிறேன். நான் இந்தியாவை விட்டு, இங்கிலாந்து செலும் வேளையில்
> இந்த தொடர்பு கிடைக்கிறது. இயன்றவரை நம்மால் ஆனதை செய்வோம். என் முகவரியையும்,
> இத்தகவலையும், விருப்பமிருந்தால், அவருக்கு அனுப்பவும். நான் எழுத நாள்
> பிடிக்கும்.
>
> அன்புடன்,
> இன்னம்பூரான்
>
> 2011/1/16 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>
> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
The letter, obtained by Irish broadcasters RTE and provided to The Associated Press, documents the Vatican’s 1997 rejection of an Irish church initiative to begin helping police identify paedophile priests.
A newly revealed 1997 letter from the Vatican warns Ireland’s Catholic bishops not to report all suspected child-abuse cases to police because that would violate the church’s canon laws.
The letter, obtained by Irish broadcasters RTE and provided to The Associated Press, documents the Vatican’s 1997 rejection of an Irish church initiative to begin helping police identify paedophile priests.
In the letter, the Vatican’s diplomat in Ireland says a church panel in Rome, the Congregation for the Clergy, has decided that the new Irish policy of “mandatory” reporting of abuse claims conflicts with canon law.
The Vatican has not formally accepted any of the Irish church’s three major documents on child protection since 1996. All emphasize mandatory reporting of suspected offenses.
Printable version | Jan 18, 2011 9:00:22 PM | http://www.thehindu.com/news/international/article1100192.ece
© The Hindu
நமஸ்தே திரு இ சார்.நான் வாரன்ட் பாலாவிடம் பேசிவிட்டு அவருடன் விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்.வருவதற்கு முன்னர் தங்களிடம் தெரிவித்து விட்டு வருகிறேன்.தங்கள் அன்பு என்னை நெகிழ வைக்கிறது.பணிவான நன்றிகளுடன்,
அஷ்வின்ஜி.
2011/1/17 Innamburan Innamburan <innam...@googlemail.com>
I am at Chromepet, Ashvinjee. Landline 22231625/22236343. Mobile: 9790848646
--'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com
"அளவற்றவன் அவன்; அவனை அடையும் வழிகளும் அளவற்றவை""God is simple. Everything else is complex"
http://topdocumentaryfilms.com/sex-crimes-and-the-vatican/
Created in 1962, a now infamous document was issued in secret to
bishops. Called Crimen Sollicitationis, it outlined procedures to be
followed by bishops when dealing with allegations of child abuse,
homosexuality and bestiality by members of the clergy. It swore all
parties involved to secrecy on pain of excommunication from the
Catholic Church.
This document was reissued in 2001 by Cardinal Joseph Ratzinger and
sent to all bishops. Yet rather than ordering more openness and
cooperation with the authorities as demanded by both law enforcers and
the victims, he reiterated its policies and ensured that the Code of
Silence be applied to all cases of child abuse involving a priest.
Cardinal Ratzinger also instructed that all cases should now be
referred to his office directly and that he would maintain ‘exclusive
competence’ over the handling of allegations. This is the Catholic
Church’s policy to this day and Cardinal Ratzinger is now Pope
Benedict XVI.
The policy laid out in the above document has led to systemic failure
by the result that a significant number of priest have, in effect,
been allowed to abuse again, and further children have been put at
risk.
As the documentary explores, Colm O’Gorman is the man responsible for
breaking open decades of abuse by Catholic Priests in Ireland in the
BAFTA award-winning BBC special Suing the Pope. He links international
‘systemic evidence’ to argue the Vatican has a policy to cover up the
sexual abuse of thousands of children across the world.
In Sex Crimes and the Vatican O’Gorman explores four separate cases
internationally of widespread clerical abuse, putting the Roman
Catholic Church on trial for the reckless endangerment of children.
O’Gorman raises the question, ‘Is the Church in default of its
obligation as a signatory to the UN Convention of the Rights of the
Child?’ (Excerpt from news.bbc.co.uk)
------------------------------
நம்மூர் நித்திக்குக் கிடைத்த பப்ளிசிட்டி இங்கே வாடிகன் ஆசாமிகளுக்குக்
கிடைக்கவே இல்லை என்பதில் சந்தோஷப்படுவதா அல்லது துக்கப்படுவதா என்ற
கேள்வியே இன்று ஒரு விளம்பரமாக..
----------------------
இந்த டாகுமெண்டரி மிகப் பழசு! இப்போது சுடச்சுட நிறையத் தகவல்கள்
கிடைக்கின்றன. என்ன, நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரி தொல்லைக்காட்சி
ஒளிபரப்பிய பிட்டுப் படமாகக் கிடைக்காது அவ்வளவு தான்!
அப்புறம் ஜெப ஊழியம், ஜெபகோபுரம் கட்டுகிறவர்களிடமிருந்து கிடைக்கிற
விளம்பரக் காசு எவ்வளவு என்பது தெரிந்தால், ஏன் அவர்களிடம்
இவர்களைப்பற்றிய செய்தி எதுவும் வராது என்பது புரியும். இப்போது அப்பன்
பேரை, ஒரு வீதியின் பெயருக்குத் தான் வைத்திருக்கிறார்கள்,
திருவள்ளுவரைக் கிறித்தவராகக் காட்ட ஒரு ஆரம்ப யத்தனம் தான்
செய்திருக்கிறார்கள். காசு அதிகமாகக் கொட்டினால், தமிழ்நாட்டையே எழுதிக்
கூட வாங்கிவிட முடியும் என்ற நிலவரத்தைத் தெரிந்துதான் இப்படி
வருத்தப்படுகிறீர்களா!
:-((
Owns 25 Flats, Over 10Kg Gold, 400 Acres Of Land Besides Other Investments
In ‘bimaru’ Madhya Pradesh, bank lockers of bureaucrats and government officials are bursting with cash and gold. An IAS couple here owns 25 flats and 400 acres of land besides other investments. A middle-ranking engineer’s wife owns three houses and has more than ten kg gold in her bank locker. And wherever the income tax department conducts a raid, so much cash is unearthed that counting machines have to be brought in. This week, the IT department submitted two appraisal reports to the Lokayukta and the state government on earlier raids. One report claimed that search operations conducted on February 4, 2010 on the premises of an IAS couple, Arvind and Tinoo Joshi, revealed wealth to the tune of Rs 360 crore. Income tax sleuths found it hard to count the cash and foreign currency found at the official residence of the IAS couple.Machines counted Rs 3 crore in cash and Rs 7 lakh in foreign currency. Gold worth Rs 67 lakh kept in a suitcase was also seized.
Incriminating documents from their possession revealed that the 1979 Madhya Pradesh cadre IAS couple had purchased six flats and seven plots in Bhopal, 18 apartments in Guwahati and one in New Delhi. The couple had heavily invested in a fertiliser manufacturing company, a distillery, in hotels and resorts business and insurance.
The family paid a life insurance premium of Rs 3.5 crore, speculative trading for 274 crore and bought stock specific shares for Rs 3 crore. Following the income tax raids, the state government suspended the couple. At the time of suspension Arvind Joshi was principal secretary (jail) and his wife Tinoo, the principal secretary for women and child welfare.
If the Joshis were accumulating wealth, then a subordinate PWD engineer was not sitting inactive either. This Monday morning, the income tax department opened two lockers belonging to the wife of an engineer working for the state public works department (PWD) and found 7.8 kg of gold mostly in bars and Rs 1.6 crore in cash. One year ago, executive engineer Ashok Kumar Jain posted in Narsinghpur district, drew a salary of less than Rs 20,000 per month. A third locker belonging to Jain’s wife Meena detected another 3 kg gold inbiscuits and Rs 16 lakh in cash.
++++++++++++++++++++++++
--
காங்கிரசில் இருக்கும் ஒரே கறைபடியாத, குறை சொல்ல முடியாத மனிதர்
மன்மோகன் சிங் என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான் என்பதும்
ஒவ்வொருநாளும் வெளியாகும் செய்திகளில் இருந்து அம்பலப்பட்டுக்
கொண்டிருக்கிற இந்த நேரத்தில், சட்டவிரோதமான நில பெற விவகாரத்தில்
ஜெனெரல் அந்தஸ்தில் உள்ள ஒரு உயர் அதிகாரி, குற்றவாளி என்று ராணுவ
நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லி இருக்கிறது. இது வரை ஊழல், குற்றம் என்று
வந்தால் சின்ன மீன்கள், புழுக்கள் மட்டுமே மாட்டி வந்த நிலையில் இருந்து
வித்தியாப்பட்டு, கை வைக்க முடியாத அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட
தண்டிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கையை இந்த செய்தி சொல்கிறது
பாருங்கள், அதற்காக இன்று ஒரு விளம்பரமாக..!!
India army court convicts top general over Sukhna scam
http://www.bbc.co.uk/news/world-south-asia-12247922
An army court in India has found a senior officer guilty of
involvement in an illegal land deal, officials say.
Lt Gen PK Rath is the highest ranking officer ever to be convicted in
a court martial in India.
The court found him guilty on three counts. The sentencing has been
scheduled for Saturday.
Lt Gen Rath was among four senior officers who allegedly gave approval
to a builder to develop land near an army base at a significantly low
price.
The Sukhna land scam case came to light in 2008.
Lt Gen Avadesh Prakash and Lt Gen Rath were accused of favouring a
private builder based in Siliguri town in West Bengal state.
Lt Gen Rath's court martial began in September last year.
On Friday, the army court said he had been found guilty of approving
construction of a school near military land, signing an agreement with
a builder and not informing the command headquarters about his
decisions.
The sentence will have to be confirmed by the army chief and the
ministry of defence.
Lt Gen Rath can also appeal against the order in an army tribunal or
India's Supreme Court.
மேல் முறையீடு, அது இது என்று வரும்போது என்னென்ன சித்து விளையாட்டுக்கள்
நடக்கும் என்பது தெரிந்தது தான் என்றாலும், ஓட்டைகள் அதிகமாகிக் கொண்டே
போகும் கப்பலைக் காங்கிரசால் எத்தனை நாள் தான் காப்பாற்றிவிட முடியும்
என்ற ஒரு ஆறுதல் தான் இன்றைய விளம்பரத்தின் உட்கிடை.
---------------------------
Date:24/01/2011 URL: http://www.thehindu.com/2011/01/24/stories/2011012459541200.htm Back National India, Switzerland had signed a protocol to amend the DTA last year It is expected to help India get details about illicit wealth New Delhi: India may have to wait till at least next year for information from Switzerland on the possible black money trail to Swiss banks, as a treaty for the same might come into force only by the end of 2011. The treaty needs to be ratified by various authorities in India and Switzerland, including the Parliament of the European nation, and it might come into effect by 2011-end depending on these approvals, a spokesperson of Switzerland's Federal Department of Finance told PTI. If ratified by 2011-end, the provisions of the treaty, which includes information exchange about suspected tax evaders and other financial offenders, would come into effect in India from the fiscal year beginning on or after the first day of April 2012, the official said. This means that India would be able to seek information for fiscal year 2012-13 onwards and not for the past periods, experts said here. Still, it is unlikely that the names of Indians having money in Swiss banks would be made public, as being demanded by the Opposition parties, because such a step would not only be in breach of the bilateral treaty, but could also hinder the process of investigations, they added. In Switzerland, the provisions would come into effect on the fiscal year beginning on or after January 1 following the treaty coming into force, the Swiss official said. The Indian government is facing intense pressure from the Opposition parties, and the Supreme Court, on the issue of black money allegedly stashed away by some Indians in Swiss banks and other tax havens. It has become a political hot potato, amid reports of Indians having parked billions of dollars in these banks. But, there are no official figures as such and experts believe that it was not necessary that all the funds deposited by Indians in Swiss banks were ill-gotten. Finance Minister Pranab Mukherjee and Swiss Federal Councillor Micheline Calmy-Rey signed a “protocol” on August 30, 2010 to amend the double taxation agreement (DTA). The revised tax treaty is expected [டொடாய்ங்க்!!!!!!!] to facilitate the Indian government getting details about illicit wealth kept in Swiss banks. Asked about the status of the treaty, the Swiss official said that one of the Parliament commissions in charge of the DTAs last week decided to approve the DTA with India and the approval process was expected to end by September, 2011. “So, the plenum of the lower chamber of Parliament will soon decide on it. Three months later, the higher chamber will take a decision. Probably, by the end of summer 2011, the DTA with India will be approved by the Swiss institutions,” the official said. “Depending on the process of approval in India, the DTA may come into force by the end of 2011,” the spokesperson said in reply to emailed queries by PTI. If the DTA comes into force by 2011-end, the official said, “its provisions shall have effect in India, in respect of income arising in any fiscal year beginning on or after the first day of April next following the calendar year in which the Amending Protocol entered into force.” On the other hand, the provisions will become effective in Switzerland, in respect of income arising in any fiscal year beginning on or after the first day of January next following the calendar year in which the protocol enters into force. As per the initial agreement signed between the two countries, the information exchange was expected to take effect on January 1. “This Protocol has not entered into force yet, since the governments of the Contracting States have not notified each other through diplomatic channels that all legal requirements and procedures for giving effect to the Amending Protocol have been satisfied,” the official had earlier said. The revised tax treaty agreement was reached after months of negotiations, even as the Swiss banks said that they would not permit “fishing expeditions” — meaning unwarranted and indiscriminate trawling through bank accounts in the hope of finding something interesting. OECD terms The Swiss Bankers Association had previously said any information exchange would be according to the conditions set out by the Organisation for Economic Co-operation and Development (OECD), the grouping of mostly developed nations, and the information being sought should be specific in nature. — PTI © Copyright 2000 - 2009 The Hindu |
The sentence will have to be confirmed by the army chief and the
ministry of defence.
Lt Gen Rath can also appeal against the order in an army tribunal or
India's Supreme Court.
மேல் முறையீடு, அது இது என்று வரும்போது என்னென்ன சித்து விளையாட்டுக்கள்
நடக்கும் என்பது தெரிந்தது தான் என்றாலும், ஓட்டைகள் அதிகமாகிக் கொண்டே
போகும் கப்பலைக் காங்கிரசால் எத்தனை நாள் தான் காப்பாற்றிவிட முடியும்
என்ற ஒரு ஆறுதல் தான் மூன்று நாட்களுக்கு முன் இட்ட விளம்பரத்தின்
உட்கிடை
நம்முடைய ஜனங்களுக்கும், ஊடகங்களுக்கும் எந்த அளவுக்கு இது அக்கறையைத்
தூண்டியது என்பது தெரியவில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் இந்தியாவுடன்
போட்டி, சச்சரவு, ஏறுக்கு மாறாகவே இருப்பது என்றிருக்கும் பாகிஸ்தானிய
ஊடகங்கள் கூட, இந்த விஷயத்தில் எப்படி ரியாக்ட் செய்திருக்கின்றன
என்பதற்கு ஒரு சாம்பிள் இங்கே!
Gen Rath’s conviction
http://www.nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Opinions/Editorials/24-Jan-2011/Gen-Raths-conviction
Published: January 24, ௨௦௧௧
Lt Gen P.K. Rath, of the Indian Army, has been convicted by a court
martial of being responsible for a land scam in Sukna, East Bengal, a
case which was also closely watched in Pakistan. Despite four bouts of
military rule, one of which ended with the loss of half the country,
and despite two Supreme Court judgments, not a single military officer
in Pakistan has even been tried, let alone convicted. The only sign
that General Rath might be benefiting from the Army taking care of its
own, is the dropping of the charge of intent to defraud. Otherwise,
the sentence of a severe reprimand, a two-year loss of seniority and
forfeiture of 15 years of service for pension benefits, is a harsh one
for such a senior officer. As Indian military men, even generals, rely
on their pensions, the last constitutes the hardship in the sentence.
The internal accountability mechanism of the Indian Army contrasts
with that of the Pakistan Army, where a case coming up before the
National Assembly’s Public Accounts Committee was deferred because the
COAS had ordered a fresh enquiry, even though vast sums had been lost
on the stock market. Clearly, the Army may not formally rule the
country, but it still looks after its own.
It may be said that Indian politicians are more accounted than
Pakistani, but Indian politicians are as venal, corrupt and ready to
live from day to day, as their Pakistani counterparts. The real
difference is in the judiciary. It is the fear of higher courts,
including ultimately the Supreme Court of India, that keeps Indian
Army courts martial honest, and not just attempts to cover up for a
brother officer. Once the presence and effectiveness of the
legislative and judicial branches’ accountability mechanisms are
established, the members of the executive will refrain from much
corruption now practised because of the feeling of impunity.
The example of the court martial that tried General Rath should be
applied in Pakistan, not just for the Army, but for the entire
Exdecutive cadre. No one can be above the law any longer.
இது இன்று ஒரு விளம்பரமாக!
+++++++++++++++++++++++++++++++++++
Date:26/01/2011 URL:
http://www.thehindu.com/2011/01/26/stories/2011012661901100.htm
Back
National
Additional Collector burnt to death by kerosene mafia
Staff Reporter
Main suspect himself suffers burns; 3 accused arrested
Manmad (Nashik district): In an incident that sent shock waves across
Maharashtra, Additional Collector of Nashik district Yashwant Sonawane
was burnt to death by kerosene mafia in Manmad, Nashik, on Tuesday.
Popat Shinde, the main suspect, himself suffered 70 per cent burns and
was admitted to hospital. The police have arrested three accused Raju
Shirsat, Kachru Survalkar and Kachre. They have been charged with
murder, wrongful restraint and use of criminal force to deter a public
servant from doing his duty.
The incident took place around 2 p.m. when Mr. Sonawane was on his way
to Nandgaon to attend a meeting.
Nashik Superintendent of Police Milind Bharambe told journalists at
the site that Mr. Sonawane, who was going in his official vehicle,
spotted a kerosene tanker. On suspicion, he went up to the tanker and
found a person taking kerosene from the vehicle.
“Mr. Sonawane immediately called the supply inspector asking him to
come over and conduct an inquiry. An argument ensued, after which four
persons arrived on motorcycles and started to beat him up. They doused
him with kerosene. Mr. Sonawane's driver and the personal assistant
ran away fearing for their lives. By the time they reached the police
station Mr. Sonawane was burnt to death,” Mr. Bharambe said.
Mr. Sonawane is survived by his wife and two sons.
Popat had a long history of black marketing of kerosene, the police
said. In fact, the entire stretch of Manmad dotted with the storage
tanks of the Indian Oil Corporation and the Bharat Petroleum
Corporation Limited (BPCL) is notorious for smuggling and black
marketing of kerosene.
The police said the tanker from which Popat had been taking kerosene
belonged to the BPCL. The vehicle is now in police custody.
Soft-spoken
Nashik Collector P. Velarasu told The Hindu that Mr. Sonawane was a
soft-spoken officer maintaining good relations with everyone. He said
the driver and the PA were in a state of shock and could not give
cogent evidence. Only a detailed probe would reveal whether the
killing was on the spur of the moment or a premeditated conspiracy.
Additional Chief Secretary (Home) Umesh Chandra Sarangi said: “The
incident is deplorable in the extreme. We need to take strict action
against the offenders. The IAS association would take a decision on
what needs to be done. This kind of assault needs to be condemned.”
Maharashtra Revenue Minister Balasaheb Thorat visited the incident
spot. Condemning the incident, he said the government would get to the
root of the menace of kerosene smuggling.
© Copyright 2000 - 2009 The Hindu
+++++++++++++++++++++++++
2011/1/24 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
நாட்டின் மிக முக்கியமான அரண்களில் ஒன்று படை பலம். இதில் பலவீனம்
ஏற்படுமேயானால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும் என்பதை யாராலும் கணிக்க
முடியாது. அத்தகைய மோசமான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இதனால்தான், வழக்கமான நீதித்துறை நடைமுறைகள் அரசியல் சாசனத்தின்படி
நடைபெற்றாலும்கூட, ராணுவ விசாரணை (கோர்ட் மார்ஷியல்) என்பதை
ராணுவத்துக்குள்ளாக நடத்தவும், அதில் வழக்கமான நடைமுறைச் சட்டங்கள்
தலையிட முடியாததாகவும் அரசியல் மேதைகள் உருவாக்கியுள்ளனர்.
ராணுவத்தில் எல்லோருமே தேசபக்தர்களாகவும், நேர்மையாளர்களாகவும்
இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சம்பளத்துக்காகவும் கிடைக்கிற
சலுகைகளுக்காகவும் ராணுவத்தில் சேருவோரும் இருக்கவே செய்கிறார்கள்.
இவர்கள் வெறும் சிப்பாய்கள் அளவிலேயே இருந்துவிட்டால் அதனால் பெரிய
ஆபத்து ஏதுமில்லை. அதுவே இவர்கள் ராணுவத்தின் உயர் பதவியில், லெப்டினன்ட்
கர்னல் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் என்றால், இத்தகைய பொறுப்பற்ற ராணுவ
அதிகாரிகளால் எத்தகைய ஆபத்துகள் ஏற்படலாம் என்பதற்கு சிலிகுரியில்
ராணுவத்துக்குச் சொந்தமான இடத்தை தனியாருக்கு மாற்றிக் கொடுத்த விவகாரம்
ஒரு சான்று.
வழக்கமாக ராணுவ இடம் சமூக நன்மைக்காக விட்டுக்கொடுக்கப்படுவது புதிதல்ல.
ஆனால், அவை உண்மையிலேயே சமூக நன்மை ஏற்படுத்தக்கூடிய- மருத்துவமனை போன்ற
அமைப்புக்காகவும், அல்லது பாலங்கள், ரயில்வே அல்லது விமான நிலைய
விரிவாக்கம் ஆகியவற்றுக்காகத்தான் ராணுவ நிலங்கள்
விட்டுக்கொடுக்கப்படும். ஆனால், ராணுவத்தின் 33-வது அணிக்கு தலைமை
தாங்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.கே.ராத், சிலிகுரியில் ராணுவத்துக்குச்
சொந்தமான 71 ஏக்கர் நிலப்பரப்பை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு கட்டுமான
நிறுவனத்துக்குக் கொடுக்க- தடையில்லா சான்று வழங்கினார்.
இந்த ராணுவ நிலத்தை வாங்கியுள்ள அந்தக் கட்டுமான நிறுவனம், அங்கே ஒரு
கல்லூரியை ஒரு தனியாருக்கு ஏற்படுத்திக் கொடுக்கத்தான் என்று பொய்யான
காரணங்களைக் கூறி அந்த இடத்தைப் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்துக்குச்
சாதகமாக தடையில்லா சான்று கொடுத்ததன் மூலம், எந்தச் சிக்கலும் இல்லாமல்
நிலத்தை அந்த கட்டுமான நிறுவனத்துக்குக் கிடைக்கச் செய்துவிட்டார்.
ஆனால், இந்த இடம் மிக முக்கியமான இடம் என்பதையும், சீன எல்லைக்கு
அருகில் உள்ளதால் நாளைய ராணுவ நடவடிக்கைகளுக்கு நிச்சயமாக தேவைப்படும்
என்பதையும் உணராமல் இவர் செய்த இச்செயல், வெளியுலகுக்குத் தெரியவந்த
பின்னர், ராணுவம் இவர் மீது விசாரணை நடத்தி மிகக் கடுமையான தண்டனையை
அளித்துள்ளது.
தான் மட்டுமே இதற்குப் பொறுப்பு இல்லை என்றும், ராணுவத்தின் முன்னாள்
செயலராக இருந்த லெப்டினன்ட் கர்னல் அவதேஷ் பிரகாஷும் இதில் தொடர்புடையவர்
என்றும் இப்போது ராணுவ விசாரணையில் ராத் தெரிவித்துள்ளதால், இதுகுறித்து
மேல் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அப்போது அவதேஷ் பிரகாஷ் இந்த
ஊழலில் எந்த அளவுக்குத் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும்
கண்டறிவார்கள்.
சில பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருதி, இந்த ஊழலில் எவ்வளவு பணம் கைமாறியது
என்பதையெல்லாம் ராணுவ விசாரணை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இந்தக்
கடுமையான தண்டனை ராணுவ அதிகாரிகளிடையே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி அலையை
ஏற்படுத்தியிருப்பதுடன், இதுபோன்ற ஊழல்கள் எத்தனை எத்தனை
நடந்திருக்கின்றன என்கிற கேள்வியையும் பரவலாக எழுப்பியிருக்கிறது.
கார்கில் போரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு வீடு என்ற பெயரில், கடலோர
மண்டல விதிமுறைகளை மீறி ஆதர்ஷ் 33 அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட
விவகாரத்தில் அனுமதிச் சான்று வழங்கியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்கூட
ராணுவ உயர் அதிகாரிகள்தான். அதேபோன்று, ராணுவ வீரர்களுக்கான கேன்டீன்
பொருள் மற்றும் மதுபானம் வாங்குவதில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும்
அதிகமாக வாங்கியதால் அரசுக்கு ஏற்பட்ட விற்பனை வரி இழப்பு ரூ.44 கோடி வரை
என்று தலைமை பொதுத் தணிக்கைத் துறை அண்மையில் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து முப்படைத் தளபதிகள் மூவரும், பொதுக் கணக்குக் குழு முன்பாக
நேரில் சென்று பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதையும்
மறப்பதற்கில்லை.
ரூ.4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான ரகசியக்
கோப்புகள் காணாமல் போய், பிறகு புதுதில்லியின் புறநகர் பகுதியில்
சாலையோரம் வீசப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அந்தோனி பேட்டியளித்தபோது,
ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட கோப்புகள் காணாமல்
போனால், அதுகுறித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள்தான்
அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று எச்சரித்தார்.
அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் இச்சம்பவங்கள் மத்திய பாதுகாப்புத்
துறைக்கு ஓர் எச்சரிக்கை ஆகும். ராணுவத்திலும்கூட சில கருப்பு ஆடுகள்
புகுந்துகொண்டு, பாதகமான செயலில் ஈடுபட முடியும் என்பதற்கான
சான்றுகள்தான் இவை.
ராணுவ அதிகாரிகளை நியமிக்கும்போது அவர்கள் நாட்டுக்காக எதையும் தியாகம்
செய்யும் உறுதி உள்ளவர்களா என்று பார்த்தபின்னர் அப்பதவியில் அமர்த்த
வேண்டும். இதுபோன்று, பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கப்படும் நிலை
இருந்தால், அத்தகைய கிருமிகள் ராணுவம் முழுவதையும் தொற்றுநோய்போல
பாதித்து, பலமிழக்கச் செய்துவிடும். அந்த நிலைமை உருவாகாமல்
பார்த்துக்கொள்ள வேண்டியது ராணுவத்தின் கடமை. இதில் அரசியல் தலையீடுகள்
எதுவாக இருந்தாலும் அதைத் தூக்கியெறியவும் தயங்கக்கூடாது.
ராணுவம் என்பது நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றாகப் பாதுகாக்கும் கவசம்
போன்றது. அவர்களது வீரத் திருப்பணியில் வென்றாலும் புகழ், எதிரியின்
தாக்குதலில் வீழ்ந்தாலும் புகழ். அப்படியிருக்கும்போது இதுபோன்ற
ஒருசிலரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, ராணுவ வீரர்கள்
மத்தியிலும் நம்பிக்கையை இழக்க வழிகோலும்.
---------------------------------
இந்தக் கொடுமையை எல்லாம் விளம்பரமாகப் போட வேண்டியிருக்கிறதே
என்ற வேதனையுடன்
First Published : 01 Feb 2011 12:39:55 AM IST
Last Updated : 01 Feb 2011 03:51:46 AM IST
2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பிரச்னையிலும், தலைமை ஊழல்
கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸின் நியமனத்திலும் மத்திய அரசு
நடந்துகொள்ளும் விதமும், மாற்றி மாற்றி வெளியிடும் முரண்பட்ட
விளக்கங்களும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள்
என்பதைத்தான் வெளிச்சம் போடுகின்றன.
இப்போது உச்ச நீதிமன்றத்தில் அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் ஜி.இ.
வாஹனவதி அளித்திருக்கும் விளக்கம் விசித்திரமாக இருப்பது மட்டுமல்ல, உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் விவரம் தெரியாதவர்கள் என்று மத்திய அரசின் தலைமை
வழக்குரைஞர் கருதுகிறாரா, இல்லை ஒட்டுமொத்த இந்திய மக்களே ஏமாளிகள் என்று
நினைத்து இப்படியொரு வாதத்தை முன்வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
பி.ஜே. தாமசைத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க முடிவெடுத்த
குழுவிடம் அவரைப் பற்றிய முழு விவரங்களும் தரப்படவில்லை என்பதுதான் தலைமை
வழக்குரைஞர் வாஹனவதியின் விளக்கம். இந்தியாவில் மிகவும் முக்கியமான
பதவியில் நியமிக்கப்பட இருக்கும் ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களையும்
பெறாமல் பிரதமரும், உள்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா
சுவராஜின் எதிர்ப்பைப் பொருள்படுத்தாமல், ஒருவரை அந்தப் பதவிக்குப்
பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், முதலில் பதவி விலக
வேண்டியவர் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸல்ல, பிரதமரும்,
உள்துறை அமைச்சரும்தான்!
அரசு நிர்வாகத்தில் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு
துறைக்குத் துணைச் செயலரை நியமிப்பதாக இருந்தால்கூட அந்தப் பதவிக்கு
மூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் முதலில்
தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய நிர்வாகக்
குறிப்புகள் அலசி ஆராயப்படும். திறமையும், நேர்மையும் உள்ளவர் என்பதுதான்
ஓர் உயர் அரசு பதவியில் நியமிக்கப்பட இருப்பவரின் முக்கியமான தகுதியாக
இருக்கும். அவர்மீது துறைசார்ந்த விசாரணையோ, கிரிமினல் விசாரணையோ
இருக்குமேயானால், அது ஏன், அவரைப் பற்றிய தவறான கருத்து அவரது
பணிக்காலத்தில் ஏதாவது மேலதிகாரியால் பதிவு செய்யப்பட்டிருக்குமானால்,
அந்த நபர் ஒரு இணைச்செயலர் பதவிக்கான பரிந்துரைப் பட்டியலில்கூட இடம்பெற
முடியாது.
அப்படி இருக்கும்போது, ஓர் அரசியல் சட்ட நியமனமான தலைமை ஊழல் கண்காணிப்பு
ஆணையர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் பி.ஜே. தாமஸ்
சேர்க்கப்பட்டபோது, அவரைப் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்படவில்லை,
தேர்வுக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று சொல்வது
எப்பேர்ப்பட்ட அண்டப் புளுகு!
ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நமது இந்தியப் பிரதமரும், உள்துறை
அமைச்சரும் தினசரிப் பத்திரிகைகளைப் படிப்பதில்லை என்பதும், எந்தத்
தொலைக்காட்சிச் சேனல்களையும் பார்ப்பதே இல்லை என்பதும்தான் அது. பாவம்,
என்னதான் செய்வார்கள் அவர்கள், அப்படி ஒரு வேலைப்பளு. நாட்டு நடப்பு என்ன
என்பதை ஊடகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூட நேரமில்லாத இவர்கள்
முழுமையான விவரம் கிடைக்கப் பெறாததனால் பி.ஜே. தாமசைத் தலைமை ஊழல்
கண்காணிப்பு ஆணைய நியமனத்துக்குப் பரிந்துரைத்து விட்டார்கள். நம்மையும்
உச்ச நீதிமன்றத்தையும் நம்பச் சொல்கிறார் தலைமை வழக்குரைஞர் வாஹனவதி.
பி.ஜே. தாமஸ் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறை செயலராக
நியமிக்கப்பட்டபோதே, இவர்மீதான பாமாயில் இறக்குமதி வழக்கு பற்றிய விசாரணை
அத்தனை தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பாக வெளியாகியது. தலைமை ஊழல்
கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான பட்டியலில் பி.ஜே. தாமஸின் பெயர்
இடம்பெற்றிருக்கிறது என்று செய்தி கசிந்தபோதே, "தினமணி' உள்ளிட்ட
இந்தியாவின் நடுநிலை நாளிதழ்கள் அனைத்தும், தேசிய அளவிலான தொலைக்காட்சிச்
சேனல்கள் எல்லாமும் வரிந்துகட்டிக் கொண்டு, தவறு நடந்துவிடக்கூடாது என்று
மத்திய அரசை எச்சரித்தன.
எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜின் எதிர்ப்புக்காவது
மதிப்பளித்தார்களா என்றால் இல்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும்
திருடனின் கையில் சாவியைக் கொடுத்துக் காவல் காக்கச் சொன்ன கதையாக,
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த தகவல் தொலைத்தொடர்புத் துறைச் செயலராக இருந்த
பி.ஜே. தாமசை, அவரது பின்னணி பற்றி நன்றாகவே தெரிந்தும், எதுவும்
தெரியாததுபோல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரை
செய்திருக்கிறார்கள்.
அரசியல் சட்ட நியமனம் என்பதால் பி.ஜே. தாமஸ் முன்வந்து பதவி
விலகாவிட்டால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்களின்
ஆதரவுடன் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அவரைப்
பதவி நீக்கம் செய்ய முடியும் என்கிற நிலைமை. அதற்குப் பிரதமரும், உள்துறை
அமைச்சரும், அவர்கள் சார்ந்த கட்சியும், கூட்டணியும் ஆதரவு தெரிவித்தால்
மட்டுமே சாத்தியம்.
தான் எந்தக் காரணம் கொண்டும் ராஜிநாமா செய்வதாக இல்லை என்று பி.ஜே.
தாமஸ் தெரிவித்துவிட்டார். இதை எதிர்பார்த்துத்தானே அவரை அந்தப்
பதவியில் நியமித்தார்கள். தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகப்போவது
பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அல்ல. முழுமையான தகவல்களைத் தரவில்லை என்று
காரணம்கூறி ஏதாவது ஒரு நேர்மையான அதிகாரி பலிகடா ஆக்கப்படுவார்.
பாவம் ஒருபுறம், பழி மற்றொருபுறம். இதுதான் "ஸ்பெக்ட்ரம்' உணர்த்தும்
பாடம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!
-----------------------------------------------
ஐ மு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் -2 இன் சாதனையை இன்று ஒரு விளம்பரமாக!
Date:02/02/2011 URL: http://www.thehindu.com/2011/02/02/stories/2011020254990400.htm Back Tamil Nadu - Chennai
Accused allegedly quoted exorbitant rates for materials We have recommended suspension as per guidelines: source CHENNAI: The Central Bureau of Investigation has chargesheeted top railway officials in a corruption case. According to agency sources, the officials, including a Deputy Chief Mechanical Engineer and Senior Divisional Mechanical Engineer, have been accused of causing loss of about Rs.70 lakh to the Railways by deliberately flouting norms in execution of work pertaining to renovation of two express trains. In 2008, the Southern Railway General Manager had ordered the renovation and upgrade of the Chennai-Coimbatore-Chennai Kovai and Chennai-Madurai-Chennai Vaigai Express trains to the standards of the Chennai-Tirupati Sapthagiri Express. The main work was to paste vinyl sheets on the floor and wall panel of the coaches. The accused allegedly quoted exorbitant rates for the materials. Since every purchase above Rs.50,000 required vetting by the Finance Department, the officials reduced the value of the indent to less than Rs.50,000 by splitting materials under different descriptions. “A joint inspection by the CBI and engineers of the Central Public Works Department (CPWD) conducted in the presence of railway officials revealed that the materials used for the renovation were of sub-standard quality. The guidelines of the Indian Railway Code for Mechanical and Store Departments were violated,” a CBI official said. A revaluation of the work by investigators in Kovai Express alone revealed a loss of Rs.50 lakh to the Railways. “Two different cases were registered and charge sheets filed in special courts in Chennai and Madurai recently. We have recommended the suspension of the eight officials as per the guidelines issued by the Department of Personnel and Training,” the official said. Trial in both cases would begin soon. |
© Copyright 2000 - 2009 The Hindu |
பிசியாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்! அவ்வப்போது வரும் ஒற்றைவரிப்
பின்னூட்டங்களைக் கூடக் காணோம்!
தணிக்கைத் துறை என்னதான் தணியாத வேகத்துடன் செயல்
பட்டாலும்,எதிர்க்கட்சிகள் (எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்)
என்னதான் முறைகேடு, ஊழல் என்று குய்யோ முறையோவென ஓலமிட்டாலும் இங்கே
'பப்பு' வேகாது. இதற்கு முக்கியக் காரணம், அரசியல் வியாதிகள் என்று
மட்டும் நினைக்க வேண்டாம்!
அரசு ஊழியர்கள் தான் முழுமுதல் காரணம் என்றே சொல்லலாம்!
வருவாய்த்துறை என்று ஒன்று இருக்கிறது, வருமானவரித்துறை என்றும்
வணிகவரித்துறை என்றும் இருப்பதெல்லாம் அரசுக்கு வருவாயை ஈட்டித்
தருவதற்காக உள்ள துறைகள் என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்?
உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா என்று அந்தந்தத்துறைகள் செயல் படும்
லட்சணத்தைக் கவனித்தாலே போதும்! உண்மையைச் சொல்லப்போனால், தங்கள்
பைகளில் கொஞ்சம் சில்லறையைத் தேற்றிக் கொள்வதற்காக, அரசுக்கு வருவாய்
இழப்பை ஊக்குவிப்பதற்காகவே இவர்கள் பாடுபட்டு வேலை செய்கிறார்களோ என்பது
வெறும் சந்தேகமல்ல-உண்மையும் கூட.
அரசு ஊழியர்களால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மதிப்பிட இதுவரை
எவரும் முயன்றதில்லை. இழப்புக்கு அவர்களைப் பொறுப்பாக்கும் விதிமுறைகள்
இல்லாததும் ஒரு காரணம்.
Misgovernance என்று ஒற்றைச் சொல்லில் நீங்கள் சொல்வது இங்கே
படிப்பவருக்கு எப்படி விளங்குமோ எனக்குத் தெரியவில்லை! ஆனால் பாரதி
எழுதிவைத்த கவிதை வரி ஒன்று இங்கே மிகப் பொருத்தமாக இருக்கிறது.
"பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!"
----------------------------------------
கற்பனைப் பேயை விரட்ட வேப்பிலை, பூசாரி உடுக்கெல்லாம் வேண்டும்.
அரசியல் பேய்களைவிரட்ட ஜனங்கள் ஒன்று திரண்டாலே போதும்!
இலவசங்கள் என்ற மாயையை விட்டொழிக்க வேண்டும்!
தொல்லைக் காட்சி முன்னமர்ந்து சீரியல் பார்ப்பதை நிறுத்த வேண்டும்!
--கிருஷ்ணமூர்த்தி
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இந்தப் "போக்கு" என்பதன் அளவு, விகிதம் வேண்டுமானால் வித்தியாசப்படலாம்,
அவ்வளவுதான்!
-----------------------------
சுண்டெலிகள் கர்ஜனை செய்தால்....?
அரசு என்று ஒன்று ஆரம்பித்தபோதே என்று கூட வைத்துக் கொள்ளலாம் எல்கே!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
உங்கள் ஸ்டேட்மெண்டை மறுபடி யோசித்துப் பாருங்கள். இங்கே விதி,
விலக்குகள் இல்லை விஷயம்.அப்படியே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்
'நேற்றைக்குப் புண் சிறிதாக இருந்தது.இன்றைக்குப் புரையோடிக்
கிடக்கிறது'.இதுதானே யதார்த்தம்? செப்டிக் ஆனால் சிகிச்சை ஒருமாதிரி,
காங்கரின் என்றாகிப் போனால் வெட்டிஎடுப்பதைத் தவிர வேறு வழியில்லை,
இல்லையா?
இப்போது விதி, விலக்கு முக்கியமா? சிகிச்சை முக்கியமா?
இதுதான் இந்த விளம்பர இழையின் உட்கிடை.
-----------------------------
அன்புடன்
எல்கே!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
நான் எதையும் தவறாக எண்ணுவதில்லை. உங்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும்
எண்ணிக்கையை விட அது ஏற்படுத்தும் விளைவுதான் முக்கியம் என்பதை
மறுபடியும் சொல்கிறேன்.
ஒரு உதாரணத்துக்கு, இந்திய வெளியுறவுக் கொள்கையை எடுத்துக் கொள்வோம்.
நேரு உலக சரித்திரத்தையே கரைத்துக் குடித்தவர். கூட்டாளி வி கே கிருஷ்ணா
மேனன் நேருவுக்கு ஒன்றுமே தெரியாது, நான் கூட இல்லாவிட்டால் நேரு வெறும்
பூஜ்யம் தான் என்றிருந்த புண்ணியவான். நேருவின் கவர்ச்சியை மீறி
யதார்த்தத்தை எடுத்துச் சொல்லத் தைரியம் இல்லாத அல்லது பிரிடிஷ்காரன்
தன்னுடைய சௌகரியத்துக்கு வகுத்துவைத்த பழைய கொள்கைகளின் அடிப்படையிலேயே
சிந்திக்கத் தெரிந்த ஐ சி எஸ் அதிகார வர்க்கம்.
இந்த மிகச் சிறிய கூட்டணி எண்ணிக்கை என்று பார்த்தால், பொருட்படுத்தக்
கூடியது அல்ல தான்! ஆனால், தேசத்துக்கு இந்த சிறிய எண்ணிக்கை
விளைவித்திருக்கிற கேடு மிக அதிகம். இன்றைக்கும் அனுபவித்துக்
கொண்டிருக்கிறோம் என்பதாவது தெரியுமா?
http://consenttobenothing.blogspot.com/2010/10/wanted-leader-with-vision-and-courage.html
இந்தப்பதிவு உங்களுக்குக் கொஞ்சம் விடைகளைச் சொல்லக் கூடும். இன்னும்
விவரம் வேண்டுமானால் நேரு, சாஸ்திரி, தலைமைப் பண்பு என்ற குறியீட்டுச்
சொற்களை வைத்துத் தேடிப்பாருங்கள்.
Our Bureau
Swamy may seek to implead Karunanidhi as ‘accused'
New Delhi, Feb. 5:
A Delhi court on Saturday directed the CBI to submit a report by
February 22 on whether the ambit of its probe in the 2G spectrum case
encompasses the national security aspects as alleged by the Janata
Party President, Dr Subramanian Swamy.
Dr Swamy, in his complaint before the Special CBI Judge, Mr Pradeep
Chaddah, is seeking the prosecution of the former Telecom Minister, Mr
A. Raja, in the 2G case.
Dr Swamy claimed that the Home Ministry has held Etisalat DB a
national security risk, since it has links with the intelligence
agency of a neighbouring country.
Dr Swamy had also alleged that the shares of the 2G licence holder,
Swan Telecom, were illegally sold to Etisalat DB.
Enough evidence
Meanwhile, claiming enough evidence, Dr Swamy said he would move an
application before the court seeking to implead the Tamil Nadu Chief
Minister, Mr M. Karunanidhi, as an accused in the 2G case, along with
others.
In another development, the Comptroller and Auditor General, Mr Vinod
Rai, who was summoned by the court to depose as witnesses on Dr
Swamy's complaint, submitted through his counsel a certified copy of
the CAG report on the 2G scam to authenticate its findings.
In an earlier hearing, Dr Swamy had testified before the court that
his complaint against Mr Raja made a prima facie case, and that it was
confirmed by the CAG report.
On making Dr Swamy a deemed Public Prosecutor under the provisions of
the Prevention of Corruption Act, the court had then asked for
authentication of the CAG report by examining CAG officials. Since
another case of the arrest of Mr Raja and his two alleged associates
in the 2G scam by the CBI is being heard by another Special CBI court
in the National Capital, the court hearing Dr Swamy's complaint asked
if the proceedings in the case can continue, because there is an
overlap in the subject matter.
A decision on whether Dr Swamy's complaint should be clubbed with the
CBI case and heard together by any one of the two courts, will be
taken on February 22.
Till then, there will be no further proceedings in Dr Swamy's case. Dr
Swamy had contended that the hearing of his case should continue as it
covers more aspects than the CBI case.
Security aspects
# Janata Party chief
Subramanian Swamy claims Home Ministry has held Etisalat DB a national
security risk.
# CAG submits
to court a certified copy of its report on the 2G scam to authenticate
its findings.
# Decision on whether
Dr Swamy's complaint should be clubbed with the CBI case will be taken
on Feb 22
http://www.thehindubusinessline.com/todays-paper/article1159918.ece
சனிப் பிணம் தனியாகப் போகாது என்பார்கள்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், புதைக்கப்பட்ட போபார்ஸ் பீரங்கி ஊழல்
என்று வரிசையாக, 2010 ஆம் ஆண்டு முழுவதுமே பரபரப்பாக ஒன்று மாற்றி ஒன்று
என்று கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ஊழல்கள் ஒன்றன் மேல் ஒன்றாக
அணிவகுத்து ஆரவாரித்துக் கொண்டிருந்தன.
வங்கிகளுமே கூட தப்பவில்லை. ஆ. ராசா அனுமதி கொடுத்த ஒருமணி
நேரத்துக்குள்ளாக, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் வங்கிகளில்
சுமார் இருபத்து நாலாயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற முடிந்தது என்பது
சனிப் பிணம் தனியாகப் போகாது என்ற கதை தான்.இன்னும் யார் யாரையெல்லாம்
கூட்டணி சேர்த்துக் கொண்டுபோகும் என்பது இப்போது சொல்ல முடியாத மர்மம்!!
சிபிஐ கூட வேறு வழி இல்லாமல் ஒரு முன்னோட்ட விசாரணையை வெள்ளோட்டம் விட
வேண்டி வந்திருக்கிறது. கொஞ்சம் பாருங்கள்!
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்!
இது இன்று ஒரு விளம்பரமாக!
-----------
அன்புடன்
++++++++++++++++++++++++++++++++++++
copyright & thanks to The HIndu
Date:09/02/2011 URL:
http://www.thehindu.com/2011/02/09/stories/2011020964751800.htm
Back
Front Page
Many former officials now with Devas
Special Correspondent
CHENNAI: Several former technocrats of government agencies, especially
the Indian Space Research Organisation (ISRO), are associated with
Devas Multimedia, which is now at the centre of a controversy over its
2005 agreement with the country's space agency.
A look at the profile of officials in the top management of Devas, its
board of directors and its panel of advisors shows that the
Bangalore-based company has brought together communications engineers
and other experts formerly employed by ISRO, the Department of
Telecommunications and formerly state-run Videsh Sanchar Nigam Ltd
(VSNL).
Besides its Chairman M.G. Chandrasekhar, who joined ISRO in 1973 and
later became its Scientific Secretary and member, Apex Management
Council, the company's Chief Technology Officer D. Venugopal and
Associate President, Business Development and Marketing, Mukund Rao,
had been in ISRO in different capacities.
Its Board includes Kiran Karnik, former president of NASSCOM, who has
served ISRO in various positions for 20 years, according to Devas
Multimedia's website.
Two of the company's Senior Advisors — Jai Singh and K. Narayanan —
had also held senior positions in ISRO in the past. B.K. Synghal, a
Senior Advisor, is a former Managing Director of VSNL, while another,
R.N. Agarwal, was a Wireless Advisor in the Department of
Telecommunications.
Mr. Chandrasekhar, according to the website, “joined ISRO in 1973 and
held various techno-managerial positions and played a key role in
developing IRS (Indian Remote Sensing satellite series) and INSAT
(Indian National Satellite) programmes and operating its fleet of
satellites.” He was also Managing Director of WorldSpace India, a
pioneer in digital satellite radio services.
Mr. Venugopal, it says, was Deputy Director, Satellite Communication
Programme, in ISRO headquarters from 1989 to 1998. He had earlier been
a System Engineer in ISRO's Space Application Centre. Still earlier,
he was Deputy Engineer-in-charge at VSNL.
Mr. Rao was associated with the National Natural Resources Management
System, an inter-agency programme aimed at optimising use of natural
resources based on remote sensing data. Its secretariat is in ISRO
headquarters.
Among the Devas advisors, both Mr. Jai Singh and Mr. Narayanan were
directors of ISRO's satellite communications programme. Mr. Singh was
the first programme director for INSAT and had also been Director,
Spectrum Management. Mr. Narayanan was “closely associated with INSAT
since its inception,” according to the website.
Besides Mr. Chandrasekhar and Mr. Venugopal, other Directors on the
Devas Multimedia board are its president and CEO Ramachandran
Viswanathan, who had been Managing Director of Forge Advisers, a
strategic consultancy, and a senior official with WorldSpace and
broadband internet company Cidera; Rajendra Singh, Chairman and CEO of
Telcom Ventures; Arun Gupta of Columbia Capital; Kevin Copp of
Deutsche Telekom AG; Mr. Karnik, A. Murugappan, an investment banking
consultant; and Gary Parsons and Larry Babbio, both associated with
telecom companies abroad.
V.R. Katti, ISRO's Geosat Programme Director, is the nominee of ISRO
and Antrix Corporation, its commercial arm, on the Devas Board, which
also includes Shyam Tandon, an educationist, and Sameer Karwa, an
industrialist.
© Copyright 2000 - 2009 The Hindu
2011/2/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>:
Posted: Fri Feb 11 2011, 18:42 hrs New Delhi:
"No government wants a strong judiciary," was how the Supreme Court
today expressed its exasperation over the low budgetary allocation to
the judiciary.
A Bench of Justices G S Singhvi and A K Ganguly said less than one per
cent of the budget is allotted to the judiciary which is facing a huge
infrastructural problem and shortage of manpower.
"No government wants a strong judiciary. It is only on paper. Look at
the budgetary allocation. It is less than one per cent," the Bench
remarked while pointing out that the judiciary is overloaded and a
large number of courts need to be set up across the country for speedy
justice delivery.
Pointing out the infrastructural problem and growing vacancies in the
judiciary, the court said: "It is a very very difficult situation. If
by chance the government does it (setting up more courts), then we
have difficulty in getting competent people."
The court's remarks came while hearing a petition filed by former
Samajwadi Party leader Amar Singh on a phone-tapping case. It
expressed its displeasure over the tardy of progress in the trial of
the case.
---------------------------------------
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உண்மையைப்புட்டு வைத்து, கூடவே மத்திய
அரசுக்கு தலையில் ஒரு கொட்டும் வைத்திருக்கிறார்கள்!
டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப ரொம்ப நல்லவர்! இன்னும்
எவ்வளவு கொட்டு, ஆ!ராசா மாதிரிக் கூட்டணிக் கட்சி மந்திரிகளிடமிருந்து
அவமானம் எதுவானாலும் தாங்குவார்!
அவர் வேண்டுமானால் தாங்கிவிட்டுப் போகட்டும்!
இப்போது கேள்வி ஜனங்கள் தாங்குவார்களா, தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா
என்பது தான் இன்று ஒரு விளம்பரமாக!
-----------------------
Date:13/02/2011 URL:
http://www.thehindu.com/2011/02/13/stories/2011021359780300.htm
Back
New Delhi
Learning language the animated way
Staff Reporter
NEW DELHI: Ten children from villages and slums on the outskirts of
Delhi were the chief guests at the launch of ten books and animated
stories authored by former President A. P. J. Abdul Kalam and former
IPS officer Kiran Bedi.
“Legendary Lives”, published by Puducherry-based BookBox, is a series
of children's books and animated stories, distributed by Orient
BlackSwan, which brings to life anecdotes from the life of “icons we
tend to glorify from a distance”.
National Skill Development Corporation MD and CEO Dilip Chenoy was the
guest of honour at the launch where BookBox co-founder Brij Kothari
spoke about use of technology for mass literacy. A social enterprise
born from a student-led business plan competition at Stanford
University in the United States, BookBox came up with the concept of
“AniBooks” or animated stories to support early literacy and language
development. BookBox's mission is “a book for every child in her/his
language”. The books are targeted at children between five to ten
years of age.
“We've been to village after village and not found a single children's
book there. We felt compelled to do something. BookBox is our answer
to delivering the reading experience to children, on screens that they
already watch,” said BookBox COO Nirav Shah.
Initiative
Ms. Bedi appreciated the initiative and said she was “glad” to share
her life's experiences through “Legendary Lives”. Since children love
to watch cartoons, AniBooks have animated stories with subtitles in
the same language as the audio. Same language subtitling or “SLS” is a
scientifically proven technique that supports literacy and language
learning because it is known to cause an automatic reading response.
© Copyright 2000 - 2009 The Hindu
2011/2/11 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>: