|
இது என்ன பாஷை?
அன்புடன்
சுவாதி
www.thanjai-meera.blogspot.com
எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.
கோவை, பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பேரூராட்சியில் ஒரு 'மலையாள மாயாபஜார் ராஜ்ஜியம்' நடப்பதாகக் கொதித்துப¢ போயிருக்கிறார்கள் கோவை மக்கள். அங்குள்ள இந்திய அரசு நிறுவன அச்சகம், அண்மையில் முழுக்க முழுக்க மலையாளிகளை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்து, வேலைக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாக ஒரு மளமள புகார் கிளம்பியுள்ளது. 'அங்கே தேர்வுக்குழுத் தலைவராக இருக்கும் மலையாளியை மாற்ற வேண்டும், ஏற்கெனவே நடந்த நேர்முகத் தேர்வை ரத்து செய்யவேண்டும், புதிய தேர்வு நடத்த வேண்டும்' என்று பொங்க ஆரம்பித்துள்ளனர் கோவைக்காரர்கள்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டிக்கு ஆயிரக்கணக்கான தந்திகள் கடந்த திங்களன்று அனுப்பப்பட்டுள்ளன. பெரியார் திராவிடர் கழகத்தினர் கடந்த வாரம் 19_ம்தேதி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை கோவையில் நடத்தி அதிர வைத்துள்ளனர். அடுத்ததாக அந்த அரசு அச்சகத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடக்க உள்ளது.
இந்தியா முழுவதும் அரசு ஆவணங்கள் மற்றும் ராணுவ தஸ்தாவேஜுகளை அச்சடிக்க பதின்மூன்று இடங்களில் அரசு அச்சகங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் கோவை வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு அச்சகம். 1958_ம் ஆண்டில் 132 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த அச்சகத்தில் தற்போது தொள்ளாயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த அச்சகத்தின் மேலாளர் ராமச்சந்திரன் நாயர்.
இங்கே நான்காம், மூன்றாம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவைச் சார்ந்த சுமார் 140 தொழிலாளர்களைப் பணியமர்த்தும் அதிகாரத்தை ராமச்சந்திரன் நாயருக்கு டெல்லி தலைமை வழங்கியுள்ளது. 'அந்தப் பணியிடங்களில் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என்று அந்தப் பகுதி மக்கள் ஏற்கெனவே வைத்த கோரிக்கையை காற்றில் பறக்க விட்டுவிட்டு, ராமச்சந்திரன் கேரள மாநிலத்தவர்களையே பார்த்துப் பார்த்து வேலைக்குச் சேர்ப்பதாகக் கூறித்தான் இப்போது பிரச்னை வெடித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினோம்.
"கோவையில் மத்திய அரசு நிறுவனங்களில் மலையாளிகளின் ஆதிக்கம் இருப்பது கண்கூடு. அண்மையில் சேலம் ரயில்வே கோட்டத்தை உருவாக்க நாம் மலையாள அதிகாரிகளுடன் எவ்வளவு தூரம் மல்லுக்கட்ட வேண்டியிருந்தது என்பது உங்களுக்கே தெரியும். இந்த அச்சக விவகாரமும் அப்படிப்பட்டதுதான். ஏற்கெனவே இந்த அரசு அச்சகத்தில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மலையாளிகள்தான். இந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக இங்கே நர்ஸ், பியூன், பிரிண்டர் என இருபத்துநான்கு வகை பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்து வருகிறது. மொத்தம் 143 பணியிடங்கள். அதற்காக இந்தியா முழுக்க ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கிடைத்து வருபவர்களில் பெரும்பான்மையானவர்கள் மலையாளிகளாகவே இருக்கிறார்கள்.
இந்தப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 24_ம்தேதி 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' பத்திரிகையில் வெளியானது. வேலை விண்ணப்பங்களை பதிவுத்தபாலில்தான் அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி ஒருவர் அனுப்பினால் எப்படியும் மூன்று நாள் கழித்து, அதாவது 27_ம்தேதி வாக்கில்தான் அது இந்த அலுவலகத்துக்கு வந்து சேர வாய்ப்புண்டு. ஆனால், கேரளாவில் இருந்து 25_ம் தேதியே விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. அப்படியானால் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' இதழுக்கு விளம்பரம் கொடுக்கும் முன்பே கேரளாவுக்குத் தகவல் அனுப்பி விண்ணப்பங்களைப் பெற்றிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?
அதை உறுதிப்படுத்துவது போல் கடந்த வாரம் நடந்த நேர்முகத் தேர்வில் தேர்வான பன்னிரண்டு பேரில் ஏழு பேர் மலையாளிகள். 25_ம்தேதி நடந்த தேர்வில் வெற்ற¤ பெற்ற அறுபது பேரில் நாற்பது பேர் மலையாளிகள். விண்ணப்பம் அனுப்பிய ஏராளமான பேருக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைப்பே அனுப்பவில்லை. கேட்டால் 'தகுதியில்லை. ஒதுக்கிவிட்டோம்!' என்று காரணம் சொல்வார்கள். ஆனால், பாலக்காட்டைச் சேர்ந்த ஷாலினி என்ற பெண்ணுக்கு மட்டும் 'அஸிஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்' , 'பிளேட் மேக்கர்' ஆகிய இரண்டு பதவிக்கு இரண்டு இண்டர்வியூ கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். ஒரு இண்டர்வியூ கடிதத்திற்கே இலட்சக்கணக்கான இளைஞர்கள் தவம் கிடக்க, ஷாலினிக்கு மட்டும் என்ன அப்படி சிறப்புத் தகுதி வந்தது?
இங்கே இண்டர்வியூவின்போது தமிழன் என்றால் பழைய மெஷினைத் தந்து ஓட்டிக் காட்டச் சொல்கிறார்கள். அதுவே மலையாளி என்றால் புது மெஷின். பழைய மெஷின் இயல்பாகவே சரிவர இயங்காது. அதை வைத்து நீ தகுதியானவன் இல்லை என்று தமிழனைத் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். புது இயந்திரத்தை ஓட்டிக்காட்டும் மலையாளி தேர்வாகி விடுகிறான்.
இன்னொரு அதிர்ச்சியான விஷயம். கேரள மாநிலம் பாலக்காட்டிலும் இதே போல ஓர் அரசு அச்சகம் இயங்கி வருகிறது. இங்கே பணிபுரியும் மலையாளி ஒருவரின் மனைவி பாலக்காட்டில் பணிபுரிவதால், இவர் இடமாறுதல் கேட்டு பாலக்காட்டுக்குப் போய்விட்டார். அவரைப் பார்த்து அங்குள்ள மற்ற மலையாள ஊழியர்கள் கொதித்துப் போனார்களாம். 'நீ எதுக்கு இங்கே வந்தே? நீ இங்கே வந்ததால் உன் இடத்தை அங்கே ஒரு தமிழன் பிடித்துவிடுவானே? நீ அங்கேயே இருந்தால் அங்கு ஒரு தமிழன் வர மாட்டான். இங்கேயும் இந்த இடம் இன்னொரு மலையாளிக்குக் கிடைக்கும்' என்று சொல்லி, அவரை மீண்டும் கோவைக்கே அனுப்பிவிட்டார்கள்.
பொதுவாக, மற்ற மாநில அரசு அச்சகங்களில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களைத் தேர்வு செய்யும்போது அந்தந்த மாநிலத்தவரைத்தான் தேர்வு செய்கிறார்கள். இங்கே மட்டும்தான் இந்த அவலம். இந்த மனோபாவத்தைச் சுத்தமாக அகற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம்!" என்றார் அவர் கொதிப்புடன்.
வீரபாண்டி பேரூராட்சித் தலைவரான ஜெயராமனிடம் (அ.தி.மு.க.) பேசினோம்.
"இங்கே அரசு அச்சகம் அமைத்தபோது ஏழை விவசாயிகளின் 132 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தினார்கள். அதில¢ நூறு ஏக்கருக்கு மேல் இன்னமும் சும்மா கிடக்கிறது. இந்த 132 ஏக்கரை வெறும் 32,000 ரூபாய்க்குத் தந்த விவசாயிகள், 'இங்கே அரசு அச்சகம் அமைந்தால் ஊர் முன்னேறும். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்' என்று நம்பித்தான் தந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து வருகிறது. அச்சகத்திற்குப் பின்னால் சில விவசாயிகளுக்கு நிலம் உள்ளது. அவர்கள் அச்சக நிலங்களின் வழியே போகக்கூடாது' என்று அதிகாரிகள் தடுக்கிறார்கள். இந்தப் பிரச்னை கலெக்டர் வரைபோய் அவரே வந்து, 'இது பஞ்சாயத்துக்குரிய பொதுவழி' என்று கூறிய பிறகும், 'கலெக்டர் ஆர்டர் எங்களைக் கட்டுப்படுத்தாது!' என்று இங்குள்ள அதிகாரிகள் அலட்டுகிறார்கள். என்ன கொடுமை இது?' என்றார் அவர்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய அரசு அச்சக மேலாளர் ராமச்சந்திர நாயர் என்ன சொல்கிறார்? அவரைச் சந்தித்தோம். 'பத்திரிகைப் பேட்டி எல்லாம் டெல்லியில் உள்ள எங்கள் சீஃப் ஒருவர்தான் கொடுக்க முடியும்!' என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டார் அவர். அங்குள்ள அலுவலர்கள் சிலரிடம் விளக்கம் கேட்டோம்.
"அச்சகத்துக்கு பிராந்திய உணர்வின்றி ஆட்களை எடுக்கச்சொல்லி அரசு வழிகாட்டுதலே இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இண்டர்வியூ கடிதம் அனுப்பி நேர்முகத் தேர்வும் நடந்தது. இது மேலாளர் மட்டும் முடிவு செய்யும் விஷயமல்ல. இதற்கென நான்கு பேர் கொண்ட போர்டு இயங்கி வருகிறது. அவர்கள் நால்வரும் தமிழர்கள்தான். அவர்கள் தேர்வு செய்த ஆட்களைத்தான் ஏ.ஓ.வுடன் கடைசியாக பரிசீலிக்கிறார் மேலாளர். நாங்கள் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ§க்கு விளம்பரம் கொடுத்து அவர்கள் இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே அதை பிரசுரித்தார்கள். ஆனால் அதற்கு முன்பே ஒரு பிரபல மலையாளப் பத்திரிக்கை அவர்களிடமிருந்து அந்த விளம்பரத்தை வாங்கி அச்சடித்துவிட்டது. அதைப் பார்த்துத்தான் நிறையப்பேர் முன்கூட்டியே விண்ணப்பம் அனுப்பி விட்டார்கள்.
இங்குள்ள யூனியன் தலைவர்களும், சில எம்.பி.க்களும், மந்திரிகளும் கூட அவர்கள் சொல்லும் நபர்களுக்கு வேலை தரச்சொல்லி மிரட்டுகிறார்கள். அதற்கு மேலாளர் செவி சாய்க்கவில்லை. அதனால்தான் இந்தப் போராட்டம் எல்லாம்'' என்றனர் அவர்கள். ஸீ
ஸீ கா.சு. வேலாயுதன்
இதை தமிழ் யூனிகோடில் மாற்றி, பதிந்தால் மட்டுமேஎல்லோரும் படிக்க முடியும்.
என்னாலயும் படிக்க முடியவில்லை.
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
நண்பருக்காக நான் ஒருங்குறியில் மாற்றியிருக்கிறேன்...
===
அன்புடன்
சாபு