Re: [MinTamil] Re: பாடநூலில் சேரர்களின் வஞ்சிமாநகர்

293 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 22, 2018, 9:18:05 AM3/22/18
to மின்தமிழ், vallamai
Dr. kanmani wrote:
>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை 
> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும் 

ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.

பெரியாறு என்று இன்று வழங்கும் பேரியாறு முசிறி அருகே இருப்பதைப் பல பாடல்கள் சுள்ளியம் பேரியாறு, பேரியாறு எனப் பாடுகின்றன.
கல்வெட்டிலோ, இலக்கியங்களிலோ எதிலும் ஆன்பொருனை கேரளாவில் பாய்வதாகச் சான்றுகள் கிடையா.

அஞ்சைக் களம் தேவார ஸ்தலம். அது வ் உடன்படுமெய் ஏறி திருவஞ்சைக்களம். இதனை திருவஞ்சிக்குளம் என்கின்றனர்.
இதனை வஞ்சி என்கின்றனர் மலையாள தேசத்தார் இப்போது. இது ஆன்பொருனைக் கரையில் இல்லை. கொடுங்கோளூர், மகோதயபுரம்
இவற்றில் அருகே இருந்தது சங்க கால முசிறிப்பட்டினம். இதற்கும் சங்க கால வஞ்சிக்கும் ஒரு தொடர்புமில்லை.

ஓரிடத்திலாவது சங்க இலக்கியத்தில் வஞ்சி மாநகரும், முசிறியும் அருகருகே உள்ள பெரிய மாநகரங்கள் என்று குறிக்காதா?
ஆன்பொருனை ஆறு கேரளாவில் ஓடுகிறது என்று பெரியாறு பற்றிய குறிப்புகளில் எங்கும் குறிப்பிடவில்லை.

மலையாளிகள் விக்கியில் :
”Vanchi (Malayalam: വഞ്ചി, translit. Vañci) or Vanchi Muthur was the capital city of Chera dynasty, who ruled Kerala and Kongu Nadu. Karur is referred to Vanchi and later when the capital was changed to Kodungallur the city was renamed as Vanchi.[1][2] It is also referred to as Karuvur in the Sangam literature. The location of the historical city Vanchi is generally considered at Mahodayapuram (also called Thiruvanchikulam) near the ancient port city of Muziris (Kodungallur) in Kerala.[3][4][2] ”

அஞ்சைக்களம் என்பது இவர்கள் குறிப்பிடும் ஊர்ப்பெயர். திருவஞ்சைக்களம். இது சங்க கால வஞ்சி மாநகரம் அல்ல. வஞ்சி மூதூர் இருப்பது ஆன்பொருனைக்கரையில்.
ஆன்பொருனை தமிழ்நாட்டில் பாயும் நதி. காவிரியில் கலப்பது. கேரளாவில் ஆன்பொருனை ஆறு இல்லை. சங்க கால முசிறியும், அஞ்சைக்களமும் இருப்பது
சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே, கழிமுகத்திலே.

நா. கணேசன்  

2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார் நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல் ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும் துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
எப்படி ?
மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
யானை மேலேறி கழிக்குள் நுழைந்து  பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.

' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால் உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித்  தகர்த்து விடும்.அது உன் முன்னோர் போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.

இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் , பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர் என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
கண்மணி 

2018-03-22 10:20 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Tuesday, March 20, 2018 at 12:33:16 AM UTC-7, singanenjan wrote:
அண்மையில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பட்டணம், கொடுங்களூர் பகுதிகள் அருகருகே உள்ளவை. முசிறி இங்கே இருந்திருக்கலாம் எனும் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த இடத்தில் வஞ்சியைக் காட்டிவிட்டு , முசிறியை 12 பாகைக்கு வடக்கே போட்டிருப்பது சரியல்ல  என்றே  தோன்றுகிறது.


ஆம். கேரளாக்காரர்கள் பிரச்சாரத்தால் முசிறிப் பட்டினத்தை வஞ்சி எனத் தவறாகப் போட்டுள்ளனர்.

இங்கே படத்தில் முசிறி உள்ளது.

சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
முசிறி பற்றிப் பல இடங்களில் படிக்கிறோம். அங்கே, வஞ்சி இருப்பதாக ஒரு சங்கப்பாடலிலும் இல்லை.

மேலும், வஞ்சி மாநகர் பற்றிப் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.
அவற்றிலும், சிலம்பிலும் ஆன்பொருனை நதிக்கரையில் வஞ்சி உள்ளது என்று பாடியுள்ளனர் பெரும்புலவர்கள்.
ஆன்பொருனை இன்று அமராவதி ஆறு எனத் தமிழ்நாட்டில். 

முசிறி பெரிய ஏற்றுமதி நகராக இருந்த சங்க காலத்தில் வஞ்சி என்ற ஊர் மேற்குக் கடற்கரையில்
அதன் அருகே இல்லை. இதனை இலக்கியங்களாலும், தொல்லியல் ஆய்வுகளாலும் நிரூபித்துவிட்டனர்.

பழைய மேப்களில் முசிறி (Muziris) தான் உண்டு. வஞ்சி அங்கே காணப்படவில்லை.

நா. கணேசன்

 
On Tue, Mar 20, 2018 at 11:06 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

மேற்குக்கரையில்  வஞ்சிமாநகர்   எனக்குறிப்பிடும் படமொன்று:

Source: 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg

From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006; 


From:

THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE 

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:03:25 AM3/22/18
to இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan), மின்தமிழ், vallamai


2018-03-22 6:53 GMT-07:00 இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com>:
பேசுகையில் நேரும் ஒரு சிறு பிழை, வரலாற்றைப் பற்றியே எப்பேர்ப்பட்ட தவறான கருத்தை உண்டாக்கி விடுகிறது!!


ஆம், ஞானப்பிரகாசன் ஐயா. 

வஞ்சி மாநகர் முசிறிப்பட்டினம் அல்ல என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ்ப் பேராசிரியர்கள் விரிவாக நூல்கள் எழுதி நூற்றாண்டுக்கு மேலே ஆகிவிட்டது.
தொல்லியல் அகழாய்வுகள் (கொடுங்கோளூர், அஞ்சைக்களம், முசிறி பட்டினம், ...)
50 ஆண்டுகளாகக் காட்டிவிட்டது. தொல்லியல் துறை அறிஞர்கள் பல நூல்களில்
இதனை விவரித்து விட்டார்கள்.

மலையாள அறிஞர்களும் சங்க கால வஞ்சி கேரளாவில் இல்லை.
தமிழ்நாட்டிலே தான் என்பதை ஏற்க தொடங்கியுள்ளனர் என
புலவர் செ. இராசு, பேரா. எ. சுப்பராயலு கூறுகின்றனர். 

தொல்லியலும், சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும், காசுகளும் காட்டும்
பெரிய செய்தி: வஞ்சி மாநகரம் ஆன்பொருனைக் கரையிலே இருக்கிறது.
ஆன்பொருனை தமிழ்நாட்டு நதி. கேரளாவில் இல்லை.

கேரளாவில் சுள்ளியம் பேரியாற்றின் கரையிலே முசிறி பட்டினம் உள்ளது.
பெரியாற்றுக்கு எப்பொழுதும் ஆன்பொருனை என்ற பேரே இல்லை.
இது வரலாறு படிக்கும், ஆராயும் மாணவர்களிடையே பரவவேண்டும்.

நா. கணேசன்

 
2018-03-22 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

சங்ககால வஞ்சி மாநகர் எங்கே இருந்தது?  இக்கேள்விக்கான விடை.

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்:
~~இ.பு.ஞானப்பிரகாசன்
(
E.Bhu.Gnaanapragaasan)

 http://agasivapputhamizh.blogspot.com
http://agasivapputhamizh.blogspot.com

N. Ganesan

unread,
Mar 22, 2018, 10:34:46 AM3/22/18
to மின்தமிழ், vallamai, இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan)
நன்றி, பாவலர் ஐயா.

அன்புடன்,
நா. கணேசன்


---------- Forwarded message ----------
From: Pavalar Pon.Karuppiah Ponniah
Date: 2018-03-22 7:32 GMT-07:00
Subject: Re: பாடநூலில் சேரர்களின் வஞ்சிமாநகர்
To: "N. Ganesan" <naa.g...@gmail.com>


வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.

On Thu, Mar 22, 2018 at 7:33 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naa.g...@gmail.com) Add cleanup rule | More info

N. Ganesan

unread,
Mar 22, 2018, 11:10:28 AM3/22/18
to மின்தமிழ், vallamai
இ.பு.ஞானப்பிரகாசன் (E.Bhu.GnaanaPragaasan) <e.bhu.gnaa...@gmail.com>

>  கூடுதல் விளக்கத்துக்கு நன்றி ஐயா! மலையாள அறிஞர்களும் இந்த உண்மையை ஏற்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான செய்தி!

நன்றி, ஞானப்பிரகாசன். 

இராமகி தமிழின் பேராசிரியரோ, தொல்லியல் பேராசிரியர்/வல்லுனரோ இல்லை. இதுவரை அவர் வஞ்சி மாநகர் தமிழ்நாட்டில்
இல்லை, கேரளாவில் தான் என்றும் எந்த கட்டுரையும் எழுதவில்லை. தொல்லியல், பனுவலியல் (Philology) துறைகள்
மிக மெல்ல முன்னேறும் துறைகள். அவ்வாறு, நூறாண்டுகளாக ஆராய்ந்து தொல்லியலும், சங்க கால இலக்கியங்களும்,
கல்வெட்டுகளும், அகழ்வாய்வுகளும், காசுகளும் காட்டிய செய்தி வஞ்சி மாநகர் முசிறிப் பட்டினமோ,அருகோ இல்லை
என்பது. அதைத்தான் குழுமங்களில் கொடுத்துள்ளேன்.

தொல்லியல் பேராசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் பொய்களை எழுதி தமிழ்நாட்டிலே சேரர் (சங்க காலம்) வஞ்சி மாநகரம்
என்று நிறுவிவிட்டார்கள் என இராமகி இ-மெயில்கள் எழுதி நிறுவினால் படிப்போம்.

அதுவரை தமிழின் உண்மையான பேராசிரியர்கள், தொல்லியல் அறிஞர்கள் கூற்றின்படி
சங்க கால வஞ்சி மூதூர் தமிழ்நாட்டிலே அமராவதிக் கரையிலே என்றே கொள்கிறோம்.

நா. கணேசன்


2018-03-22 20:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-03-22 7:32 GMT-07:00 Pavalar Pon.Karuppiah Ponniah <pavalarpo...@gmail.com>:
>
> வஞ்சிமாநகரம் முசிறிப்பட்டினம் இல்லை என்பதைத் தக்க சான்றுகொண்டு விளக்கியுள்ளமைக்கு பாராட்டுகள்.

நன்றி, பாவலரே.

நா. கணேசன்

>>>>>>>> Source:
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/stein.jpg
>>>>>>>>
>>>>>>>> From Burton Stein, A History of India (Oxford: Blackwell Publishers, 1998), p. 41; scan by FWP, Oct. 2006;
>>>>>>>>
>>>>>>>>
>>>>>>>> From:
>>>>>>>>
>>>>>>>> THE MAURYAN EMPIRE AND ASHOKA, 200's BCE
>>>>>>>>
>>>>>>>> http://www.columbia.edu/itc/mealac/pritchett/00maplinks/early/ashoka/ashoka.html
>>>>>>>>
>>>>>>>>
>>>> --
>>>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>>>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>>>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcQDiYuCcAYXymGN0hBGVfmtMqnv%3D7uQkxuWXTK5v%3D_4w%40mail.gmail.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>>
>>>
>>>
>>>
>>> --
>>> அன்புடன்:
>>> ~~இ.பு.ஞானப்பிரகாசன்
>>> (E.Bhu.Gnaanapragaasan)
>>>
>>>
>>> http://agasivapputhamizh.blogspot.com
>>
>>
>> --
>> You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
>> To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcfWk-TQLddEJ%2BF8BQC1hfhsTnV4m%3D9m6mnmE%3DpVyxmpw%40mail.gmail.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayakumar+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to karanthaijayakumar@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2018, 11:49:44 AM3/22/18
to vallamai, மின்தமிழ்
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?

22 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 8:10 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Mar 23, 2018, 9:10:02 AM3/23/18
to மின்தமிழ், vallamai

Dr. kanmani wrote:
>அது பொருப்பில் தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை 
> அடுத்து சற்று உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம் /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும் 

ஆன்பொருனை என்று கேரளாவின் பெரியாற்றுக்குப் பெயர் எப்போதும் இல்லை. மிகப் பெரிய ஆறு ஆகையினால் பூர்ணவாஹினி என வடமொழியில் பெயர்பெற்றது.


பூர்ணவாஹினி அஞ்சைக்களம் அருகே இல்லை. மிகப் பெரிய ஆறான பாரதப்புழாவுக்கு வடமொழியில் இப்பெயர்.

பூர்ணவாஹினி ஆறு - 12/6/2017 மடலில்.

அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ). 

-------------------

பூர்ணவாஹினி என்பது சுள்ளியம் பேரியாறு (இப்போதைய பெரியாறு) எனத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். 
பூர்ணவாஹினி பெரியாற்றுக்கு பல மைல்கள் வடக்கே உள்ள பாரதப்புழா ஆறு. பூர்ணவாஹினிக் கரையில்
வஞ்சி மாநகர் இல்லை.

சுள்ளியம் பெரியாறு சூர்ணி என வடமொழியில் பெயர்பெறும் காரணத்தை விரிவாக சுருளி/சுள்ளி மரப்பெயர்கள்,
சுருளி மலை, சுருளி அருவி இழையில் குறிப்பிட்டுள்ளேன். 

N. Ganesan

unread,
Mar 23, 2018, 12:32:22 PM3/23/18
to மின்தமிழ், vallamai


2018-03-23 6:58 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
 
இப்போது நம் முன் இருக்கும் சிக்கல் வஞ்சி எத்தனை என்பது .
கண்மணி  


எந்தச் சிக்கலும் எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் ஒரு வஞ்சி மாநகரம் தான் குறிப்பிடப்படுகிறது. புலவர்கள் ஒற்றுமை, வேற்றுமைகளை விரும்பிப் பாடுவது வழக்கம்.இரண்டு பெரிய வஞ்சி மாந்கரங்கள் இருந்தால் அவற்றைப்பற்றி அந்த முரண் அலங்காரம் பற்றிப் பேசாது விட்டிருப்பார்களா? தேமொழி கொடுத்துள்ள புறம் 29 பாடலைப் படித்தால் அதில் வஞ்சியே காணோம். கழி மீன் தொண்டை நாடா, பாண்டி  நாடா, துளு நாடா, சேர நாடா என்பதற்கும் பாட்டில் ஒன்றுமில்லை. இது மாதிரி உள்ள இடங்களை வைத்து சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரை முசிரிப் பட்டினத்தில் உருவாக்க முடியாது.

கேரளாவின் இரு பெரிய ஆறுகளின் சங்கப் பெயர்கள், இப்போதைய மலையாளப் பெயர்கள், வட்மொழியில் வழங்கும் பெயர்கள் வஞ்சி மாநகரம் சங்க காலத்தில் சேரர் தலைநகர் ஒன்று தான் என நிறுவ மிகத் துணை புரிந்துள்ளன.

சூர்ணி ஆற்றை பூர்ணவாஹினி என தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். அதனால் தான் அஞ்சைக்களம், முசிறி இதெல்லாம் வஞ்சி என நினைக்கிறீர்கள். மேலைக் கரையில் வஞ்சி மாநகர் என்பதற்கோ,
அது சுள்ளியம் பேரியாற்றில் (= சூர்ணி நதி) இருந்ததாகவோ சான்றுகள் அறவே இல்லை.

சங்க இலக்கியம் உறையூர் (சோழர் தலைநகர்) அருகே ஆன்பொருநைக் கரையில் (அமராவதி) சங்கச் சேரர் தலைநகரம் இருந்ததாகப் பாடுகின்றன. பின்வந்த இளங்கோ அடிகளும் அதனையே உறுதி செய்துள்ளார்.

நா. கணேசன்


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2018, 10:27:26 PM3/23/18
to மின்தமிழ், vallamai
2018-03-23 18:27 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
>
>
> On Friday, March 23, 2018 at 4:47:47 PM UTC-7, N. Ganesan wrote:
>>
>> 2018-03-21 22:40 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>> >
>> > பதிற்றுப்பத்து 53வது பாடல் -ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை காக்கைப்பாடினியார்
>> > நச்செள்ளையார் பாடியது.-' குண்டு கண்ணகழி ' என்பது பாடலின் பெயர்.
>> > இப்பாடல் ஒரு கோட்டையை வருணிக்கிறது.
>> > கோட்டை வளைத்திருக்கும் ஊர் மூதூர் .
>> > கோட்டையின் தனித்தன்மை என்னவெனில் --- கோட்டை வாயிலின் வழியாக உட்சேல்லாமல்
>> > ;யானை மேல் ஏறி இயற்கையாக அமைந்த காட்டரண் வழியாக வளைந்து வளைந்து மிகவும்
>> > துன்புற்றுச் சென்றால் ஊருக்குள் நுழைந்து விடலாம்.
>> > எப்படி ?
>> > மூதூரை முற்றிலும் வளைத்துக் கோட்டை கட்ட இயலாது.ஏனெனில் அது பொருப்பில்
>> > தோன்றிய பொருநை .....அதாவது ஆன் பொருநை என்னும் பொதுப்பெயர் பெற்று ;இன்று
>> > பூர்ணவாஹினி என்று அழைக்கப்படும் பெரியாற்றின் கழிமுகத்தை அடுத்து சற்று
>> > உள்நாட்டில் இருந்தது.அந்தக் கழிமுகம் அடிக்கடி போக்கை மாற்றும் அலிமுகம்
>> > /பொய்முகம் ஆக இருந்ததால் இப்படிக் கட்டியிருந்தனர் போலும்.
>> > யானை மேலேறி கழிக்குள் நுழைந்து பின்னர் கரையேறி ஊருக்குள் வரலாம் என்பது
>> > குறிப்பாகக் கிடைக்கும் பொருள்.
>> > இயற்கையான காட்டரண் என்பதால் "கடறு அரை யாத்த "என்று மூதூருக்கு
>> > அடைமொழியும் கொடுத்துள்ளார் புலவர்.
>>
>> பூர்ணவாஹினி என்பது சுருளி/சுள்ளியம் பேரியாறு அன்று. முசிறி,
>> கொடுங்கோளூர், அஞ்சைக்களம் பகுதியில் கடலில் கலக்கும் பெரியாற்றுக்கு
>> சூர்ணி நதி எனப் பெயர்.
>> பொன்னானி நதி பூர்ணவாகினி ஆகும்.
>>
>> குண்டு கண்ணகழி - பாடலைப் படித்துப் பார்த்தால், பல நாடுகளுக்கும் போர்
>> செய்யச் சென்று திரும்பும் சேர மன்னன்
>> காடும் மலையும் சூழ்ந்த தலைநகருக்குள் நுழைகிறான், இது முசிறிப் பட்டினப்
>> பகுதிகளுக்கு அறவே பொருந்தாது.
>>
>> கொல்லிநகர் எனப்படும் வஞ்சிக் கருவூருக்குப் பொருத்தமான பாடல்.
>> கருவூரிலும் குன்றுகள் உள்ளன.
>
>
> நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னிருந்த காட்டுப்பகுதியைக் குறித்து
> இந்நாட்களில் பேச வழியில்லை.
>
> சென்ற இரு நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த சென்னை அல்ல இப்பொழுது இருக்கும்
> கான்க்ரீட் நகர்.
>
> மலை ? 10.957559, 78.076193 இப்பகுதியில், இங்கு என்ன மலை இருக்கிறது ?
>
>
> அதன் பெயர் என்ன?
>

கரூரில் உள்ள குன்று பெருமாள் கோவில் கொண்டுள்ளது. அருகே தான்
சாரதா வித்தியாலயம் என்னும் பெண்கள் கல்லூரி உள்ளது.

சேரர்கள் கல்வெட்டுக் கொண்ட புகழூரில் ஆறுநாட்டார் மலை
கரூர் அருகே தான். கரூருக்கு கொல்லிநகர் என்ற பெயர் உண்டு.

மலையரண் கொண்ட காடு சூழ்ந்த மூதூர் என்னும் இப்பாடல்
வஞ்சி மூதூருக்குப் பொருந்துகிறது.

------------

சுள்ளி ஆறு/சூர்ணி யாறு உள்ள அஞ்சைக்களம், முசிறி போன்றவற்றில்
மலையே கிடையாது. கடல் வர்ணனையும், காயலைப் பற்றியும்
இப்பாடலில் ஒன்றுமில்லை.

நா. கணேசன்

>
>
> .... தேமொழி
>
>
>
>> புகழூரில் தான்
>> சங்கச் சேரர்களின் ப்ராமி கல்வெட்டுகள் எழுதியுள்ளனர்
>>
>> நா. கணேசன்.
>>
>>
>> > ' நீ நேராகக் கோட்டை வாசலுக்குப் போய் நின்றால் உன் யானை பழக்க தோஷத்தால்
>> > உடன் வெகுண்டு அதை முட்டி மோதி குத்தித் தகர்த்து விடும்.அது உன் முன்னோர்
>> > போற்றிப் பாதுகாத்து அளித்த கோட்டை . உன்னுடைய பகைவர் கோட்டையை நீ வென்று அதை
>> > அவர்க்கே திருப்பி அளித்து திறைப்பொருள் பெற்று வருவாயே ! அப்படிப்பெற்ற கோட்டை
>> > அன்று . அதனால் உன் யானையை அந்தக் கோட்டைவாசலுக்குக் கொண்டு செல்லாதே .வளைந்து
>> > வளைந்தேனும் " பிறிது ஆறு சென்மதி " ; உன் யானையை அடக்க முடியாது.' என்கிறார்.
>> >
>> > இந்தக் கோட்டை மேற்குக்கரையிலிருந்த மூதூரைக் காத்து நின்ற கோட்டை
>> > ----ஏனெனில் உதியன் மரபில் தோன்றிய ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அங்கே
>> > நுழைகிறான்.அவன் காலத்தில் ஆண்ட செல்வக்கடுங்கோ வாழியாதனும் ,
>> > பெருஞ்சேரலிரும்பொறையும், இளஞ்சேரலிரும்பொறையும் கொங்குக் கரூரைத் தலைநகராகக்
>> > கொண்டு ஆள இவன் மேற்குக்கரை மூதூரில் இருந்து ஆண்டான். இதை வஞ்சி என்று சொல்ல
>> > வேண்டிய தேவையே இல்லை.ஏனென்றால் சேரநாட்டில் சேர மன்னன் முன்னிலையில் மூதூர்
>> > என்று சொன்னாலே அது முதன்முதல் தோன்றிய வஞ்சி என்று பொருள்படும்.
>> > கண்மணி
>> >
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 24, 2018, 11:39:00 AM3/24/18
to மின்தமிழ், vallamai
2018-03-22 8:49 GMT-07:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
தமிழ் நாட்டில் சேரர்களின் நாடு எந்த மவட்டங்கள்?


சங்கச் சேரர் மவட்டங்கள்.

earlier given.



NG

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:31:17 PM3/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Vanchi Cheras connection to Kerala:

"The Zamorin's empire at its zenith included the whole of the west coast from Kollam to Kollam, that is from Panthalayini in Kurumbranad Taluk of British Malabar to Quilon in the Travancore State", writes Prof. K.V.Krishna Ayyar in his monumental work, 'The Zamorins of Calicut'.
http://blog.calicutheritage.com/2009/03/ananthapuram-forgotten-frontier-of.html

Panthalayini port city mentioned in Sangam
can be seen in the map here:
https://en.wikipedia.org/wiki/Zamorin_of_Calicut
Panthalayini port is North of Calicut.

https://en.wikipedia.org/wiki/Mushika_Kingdom#/media/File:South_India_in_Ad_01.jpg
https://en.wikipedia.org/wiki/Mushika_Kingdom

  1. கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம், பந்தர்ப் பயந்த பயங்கெழு முத்தும், வரையகம் நண்ணி, குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்டனர், அரிசில் கிழார் – பதிற்றுப்பத்து 74
  2. கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர் கடன்றி மரபின் கைவல் பாண, தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை – கபிலர், பாணாற்றுப்படை - பதிற்றுப்பத்து 67

கள்ளிக்கோட்டை (< கழிக்கோட்டை) பழைய பெயர் அண்மையில் தமிழ் ப்ராமியால் கிடைத்துள்ளது: கழிகோறு.

Also, see PuRam 29.

N. Ganesan

unread,
Mar 24, 2018, 12:51:01 PM3/24/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
பழய மடல்களில் இந்த வலைக்கண்:
சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.


2017-10-04 18:04 GMT-07:00 ராம் காமேஸ்வரன் <ram.kam...@gmail.com>:
//சாதியம் புகுந்ததும் பெயர்ந்ததும் ஏன்? மீள்வதும் ஆள்வதும் இனி எப்போது? - வே.மதிமாறன்
https://youtu.be/9x_KPtReeMA?t=31m14s ஒரு நான்கு   மணித்துளிகள் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.//

7:09 மணித்துளிகள் வரை பார்த்தேன். அதன் பிறகு மதிமாறன் உளற ஆரம்பித்துவிட்டார்.
சங்க காலத்தில் வில் கிடையாது, வேல் தான் தமிழர்களின் ஆயுதம் என்று சொல்கிறார். வேல் நேர்மையான ஆயுதம், தமிழர்கள் நேர்மையானவர்கள், வில் புராணங்களில் வருவது, மறைந்திருந்து தாக்குவது, ஆரியர்கள் ஆயுதம், என்வே அநீதியானது.....

“ஒளிதிகழ் நெகிழியர் கவண்மர் வில்லர்
குளிறென ஆர்பவர் ஏனல்கள் வலரே” (கலி-52)

இந்த கலித்தொகையில் வரும் வில்லர்கள் நிஜமாவே "வில்லங்களா"? -ஹீரோ க்களா?


சேரர்கள் வில்லவன் என்று அழைக்கப்படுகிறார்கள். எங்குச் சென்றாலும்
சேரன் என்று குறிக்க வில்லும் அம்பும் தான் இருக்கும்.
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காசுகளில்
மூவேந்தர் நாடுகளும் ஆண்டதற்கு வில் (சேரன்), மீன் (பாண்டியன்), புலி (சோழன்)
தங்கள் வெண்கொற்றக்குடையின் கீழ் காட்டுவர்.

சங்க காலச் சேரர்கள் கரூரிலே வாழ்ந்தவர்கள். அவர்கள் கல்வெட்டுகள் கிடைப்பது
அங்கே தான். ரா. ராகவையங்கார், சேரர் வஞ்சி (பெருநூல், Masterpicece).
இளங்கோ அங்கே வளர்ந்து, சறூ வடக்கே, வடகொங்கில் சமணம் கற்றிருப்பார்.
சங்க காலச் சேர நாடு:


கரூரில் கிடைக்கும் சங்கச் சேரர் நாணயங்கள் (100 AD)
Inline image 1
வில்லும்-அம்பும், அங்குசமும் ஒருபுறம், யானை மறுபுறம்.




Inline image 2

NG
 
 


On Tuesday, October 3, 2017 at 10:32:59 PM UTC-4, தேமொழி wrote:

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2018, 1:45:22 PM3/24/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.

24 மார்ச், 2018 ’அன்று’ முற்பகல் 9:50 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
பழய மடல்களில் இந்த வலைக்கண்:
சங்கச் சேர நாடு வரைபடம் உள்ளது.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 24, 2018, 4:15:53 PM3/24/18
to மின்தமிழ், vallamai


2018-03-24 12:47 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///கணேசர், உங்கள் கருத்த்துப்படி சேரனாட்டின் தமிழ் நாட்டு மாவட்டங்கள் எவை என்பதே.///Venthan Arasu wrote

Kovai, Salem, Palani ....etc
kanmani


Northern Kongu, Tulu country (S. Canara) was ruled by Atikamaan-s, who repeatedly say they are a branch of Cheras.
Even in 12th century they have the Bow&Arrow as their flag. Recently a beautiful inscription is found in those regions.
 



2018-03-25 1:13 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:

///அண்மையில் உள்ள அரவக்குறிச்சிக் குன்றில் ஸ்ரீபுராணச் சிற்பம் கிடைத்துள்ளது (துரை. சுந்தரம்).
இது இளங்கோ அடிகள் வாழ்ந்த காலத்தை ஒட்டியதாகலாம். களப்பிரர் கர்நாடக மன்னர்கள்
தமிழகத்தில் கோல்லோச்சிய காலம் - தமிழ்க் காப்பியங்கள் தோன்றிய காலம். கரூர் அருகே
உள்ள புகழூர் மலையில் சேரர்களின் பிராமிக் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கொல்லி மலையை
கரூருடன் இணைத்து கொல்லிநகர் என்பது தமிழ் மரபு.  இளங்கோ அடிகள் இந்த வஞ்சி நகர்
என்பதை ஏற்றுள்ளார் முனைவர் கண்மணி.
கொடுங்கோளூர் பகுதியில் வஞ்சி மாநகர் இருக்காது என முன்பு கண்மணி எழுதினார்.///Ganesan wrote on 23.March

புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.

NG
 
அந்தச் சேரர் குடும்பத்தில் அப்படி ஒரு ஒற்றுமை.
வியக்க வைக்கிறது.
பதிற்றுப்பத்து தோன்றிய காலத்தில் செல்வக்கடுங்கோவின் தந்தை அந்துவன் சேரல் இரும்பொறை  உயிருடன் இல்லை .
இருந்தால் அவனுக்கொரு பத்துப்பாட்டு பாடியிருப்பார்கள்.
அவன் உயிருடன் இல்லையெனினும் அவனது உடன்பிறப்பாகக் கருதக்கூடிய உதியனே குடும்பத் தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான்.
இந்த ஒற்றுமை சோழனோடு ஏற்பட்ட போரிலும் , கொங்கை வென்று அடிப்படுத்தி நாட்டை விரிவாக்கிய போதிலும் , உள்ளி விழாவிலும் சிறப்பாக வெளிப்படுகிறது.
கொடுங்கோளூரில் இருந்தது 8ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட சேரர் ஆட்சிதான்.
அது பண்டைக்காலத்துத் தலைநகர் அன்று. பண்டைய மேலைக் கடற்கரை மிகுந்த மாற்றங்களுக்கு உட்பட்டு ,கழி 8கி.மீ. அளவுக்கு விரிந்து விட்டதுடன் வைப்பு
 வெள்ளத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் வேறு.இவையெல்லாமே முன்னர் விளக்கியுள்ளேன்.தேதிவாரியான குறிப்புகளை விரைவில் பதிய முயல்கிறேன்.
கண்மணி     




2018-03-25 0:33 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///வஞ்சி என்றால் சேரரின் பகுதி என்று பொருள் இல்லை. வஞ்சி என்பது தாவரம். அதனால் பெற்ற பெயர். அதன் பொருள் கேரளாவில் இல்லை. ///Ganesan wrote

வஞ்சி என்பது சேரரின் தலைநகர் என சிறுபாணாற்றுப்படை சுட்டுகிறது.--- நானில வளத்துடன்.
கொங்குக்கரூரைச் சுட்டுமிடங்களில் எல்லாம் தாவரத்தோடு தொடர்பு படுத்தப் படுகிறது.
மேற்கரை வஞ்சியைச் சுட்டுமிடங்களிலெல்லாம் நானில வளம் பேசப்படுகிறது.
இதை 2 மாதங்களுக்கு முன்னரே நிறுவி ஆயிற்று.
நீங்கள் மறந்து விட்டீர்கள். நினைவு படுத்துங்கள்.
கண்மணி 

2018-03-25 0:24 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wrote 
புனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை  தான் குறிப்பிடுகிறது.
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.
சிலப்பதிகாரத்தில்' காவிரி வாயில் ' என்ற தொடர் கொண்டு அது கழிமுகம் என்று நிறுவினேன்.
kanmani

2018-03-25 0:11 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
/// தேமொழி கொடுத்துள்ள புறம் 29 பாடலைப் படித்தால் அதில் வஞ்சியே காணோம். கழி மீன் தொண்டை நாடா, பாண்டி  நாடா, துளு நாடா, சேர நாடா என்பதற்கும் பாட்டில் ஒன்றுமில்லை. இது மாதிரி உள்ள இடங்களை வைத்து சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரை முசிரிப் பட்டினத்தில் உருவாக்க முடியாது.///

புறநானூறு 27ம் பாடல் முதல் 32ம் பாடல் வரை ஒருங்கு வைத்து சேர்த்துப் பொருள் கொள்ளும் போது சோழருக்கும் சேரருக்கும் இடையில் நடந்த போர்களின் தொடர்ச்சி தெரிகிறது என்று விளக்கமாகப் பேசி 2 மாதங்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டீர்களா ?!?!?!
ஒன்று செய்கிறேன் .
பழைய வஞ்சி இழைகள் இரண்டையும் எடுத்து எந்தெந்தத் தேதியில் என்னென்ன கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம் என்று ஒரு பட்டியல் வேண்டுமானால் தயார் செய்யலாம்.
பழைய மடற்செய்திகளை மீண்டும் மடலாடினால் எல்லோருக்கும் அலுப்புத்தட்டும்.

2018-03-24 23:57 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///எந்தச் சிக்கலும் எனக்குத் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் ஒரு வஞ்சி மாநகரம் தான் குறிப்பிடப்படுகிறது. புலவர்கள் ஒற்றுமை, வேற்றுமைகளை விரும்பிப் பாடுவது வழக்கம்.இரண்டு பெரிய வஞ்சி மாந்கரங்கள் இருந்தால் அவற்றைப்பற்றி அந்த முரண் அலங்காரம் பற்றிப் பேசாது விட்டிருப்பார்களா?//

சிக்கல்  உங்கள் கண்களில் இருப்பதால் அது உங்களுக்குத் தெரியவில்லை .
கொங்குக் கரூரை வஞ்சி என்று சுட்டும் புலவோர் அதற்குக் காலத்தால் முற்பட்ட வஞ்சியை மூதூர் என்று குறிப்பிடுவது இயற்கை தானே .
பதிற்றுப்பத்தில் எத்தனை இடங்களில் மூதூர் இடம் பெறுகிறது என்பதை 2 மாதங்களுக்கு முன்னரே விரிவாகப் பேசினோம் .
மறந்திருந்தால் அந்த இழைக்குச் சென்று பார்க்கலாம்.
இப்போது மீண்டும் அதை எழுதினால் எல்லோருக்கும் அலுக்கும்.
கண்மணி  

2018-03-24 23:47 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///சங்க கால வஞ்சி மாநகர் சோழர்கள் கைப்பற்றியவுடன் -  ராஜராஜனின் குரு கருவூர்த்தேவர் வஞ்சி மாநகர பிராமணர் -
அரசியல் காரணங்களுக்காக மேற்கே நகர்ந்தது. முதலில் திருத்தக்கதேவர் சிந்தாமணி இயற்றிய
பெருவஞ்சி என்னும் தாராபுரம். அப்புறம் குலசேகரர் (கொங்கர் கோன், கொல்லிநகர்க்கிறை) ஆழ்வார்
பாடிய வஞ்சி மாநகரின் வித்துவக்கோடு கேரளா சென்றது. கி.பி. 1000 வாக்கில் அஞ்சைக்களம் திருவஞ்சிக்களம்
என்று மாற்றம்.
நா. கணேசன்///
We are talking about the Vanji cities of the Sankam age. So we need not talk about the Chozha period.
 

N. Ganesan

23 Mar (1 day ago)
to மின்தமிழ்
இல்லை. பூர்ணவாஹினி என்று சூர்ணி ஆற்றுக்கு நீங்கள் பெயர் சூட்டுகிறீர்கள்.
வஞ்சி மாநகர ஆய்வு நூல்களைப் படித்தால் இரண்டு பெரு நதிகளுக்கும்
உள்ள வடமொழிப் பெயர்களும், வஞ்சி மாநகர் சூர்ணி ஆற்றில் இல்லாமையும்
விளங்கும்.
பூர்ணவாஹினி கரையில் முசிறியோ, வஞ்சியோ இல்லை.
So let us presume Vanjimoothoor was at the place where the river X entered the sea 
X என்ற ஆறு கடலில் கலக்குமிடத்தில் வஞ்சி மூதூர் இருந்தது என வைத்துக் கொள்வோம் .

சங்க இலக்கியத்தில் வஞ்சி கடற்கரையில் இருந்ததாகக் குறிப்பிடவில்லை.
சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது 


2018-03-24 23:23 GMT+05:30 kanmani tamil <kanmani...@gmail.com>:
///அயிரை மலையில் உற்பத்தி ஆகி கேரளாவின் பெரிய ஆறு ஆவது பொன்வானி ஆறு. இது பொன்னானி ஆறு என இப்போது வழங்குகிறது.
பாரதப்புழா ஆறு. பொன்வானி > பூர்ணவாஹினி என ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்துள்ளனர். அதன் கரையில் காலடி (பொன்னானி தாலூக்கா)
பிறந்தவர் சங்கராச்சார்யர். வடமொழி (சிருங்கேரி மாதவாச்சார்யர், சங்கர விஜயம்), தமிழ் சங்கர விஜயம் ).///

பொன்வானி (தமிழ் /மலையாளம் )====பூர்ணவாஹினி (சமஸ்கிருதம்) என்னும் மொழிபெயர்ப்பு  ஏற்கக்கூடியதா? 
குழுமத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இந்த ஐயத்தைத் தீர்த்து வையுங்களேன்.
எனக்கு இதில் நம்பிக்கை வரவில்லை.
Kanmani 
  


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.








--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 25, 2018, 10:57:51 AM3/25/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com





புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.


பழைய மடல்களில் விரிவாக கேரளாவின் இரண்டு பேராறுகளில் சங்கப் பெயர்கள், அதற்கான சம்ஸ்கிருதப் பெயர்கள்,
தமிழ்நாட்டின் ஆன்பொருனை, இப்போது அமராவதி பற்றி விளக்கியுள்ளேன்.

இளங்கோ அடிகள் தமிழ்நாட்டின் கண்ணே உள்ள சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் பிறந்தவர் என்று நீங்கள்
கூறுவது சிறப்பு. இப்போது வஞ்சி மாநகர் அருகே கிடைத்துள்ள சமணர்களின் ஸ்ரீபுராணச் சிற்பமும் காட்டும் செய்தி.
எல்லாம் கர்நாடக கங்க ராஜ்ஜியத் தொடர்பால் ஏற்பட்டது. இளங்கோ அடிகளும் அந்த ராஜ்யத்தில் சமணம் பயின்றிருப்பார்
எனலாம். எனவே தான், இந்திய செம்மொழி இலக்கிய மரபில் (கண்டவ்யூகம், ரகுவம்மிசம், ...) போல
கவுந்தி அடிகளை வடபெருங்கோட்டில் கங்க ராஜ்யத்தில் கண்டு, சமணம் போதிக்க அவரை தன் புதினக் காப்பியத்தில்
அமைத்துள்ளார்.  http://karanthaijayakumar.blogspot.com/2017/10/blog-post_18.html 
 காதத்தின் அளவை, வடபெருங்கோடு என்பதன் பொருள், ஜைந ஆகமங்கள் ஸ்ரீரங்கம் என்று
அவர்கள் ஊரில் உள்ள காவிரியின் பேரரங்கத்தைக் குறிப்பிடுதல், திருச்சியின் திருவரங்கத்துக்கு அடிகள் காலத்தில்
சீரங்கம் என்னாது திருவரங்கம் என்ற பெயரே உள்ளமை, “நம் அகல்நாட்டு உம்பர்” “நம் அகல்நாட்டுக்கு வந்தவளைப்
பரசுதல்” - இங்கே குறிப்பால் அகல்நாடு என்று அடிகள் தம் பிறந்த நாடடினைக் குறித்தமை, புறம் 29 பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்
அப்பாட்டிலோ புறம் 25-40 பாடல்களிலோ கேரளா கடற்கரையில் வஞ்சி மூதூர் பற்றி ஒன்றும் இல்லாமை. புறம் 29-லிலே
எந்த ஊரை நலங்கிள்ளி வென்றான் என்ற குறிப்பைப் பொதிந்து தந்துள்ளார். அதையும் பாருங்கள். புறநானூறு 29 பற்றியும்
அப் பட்டினம் பற்றியும் எழுதுவேன். புறநானூறு 29-ல் தற்போது எழுதியுள்ள உரைகளில் அதில் குறிப்பிடப்படும் மூதூரை விட்டுவிட்டது போல
முத்தொள்ளாயிரத்தில் ஒரு மூதூரை விட்டுவிட்டார்கள் [1]. அதைப்பற்றி முன்பு எழுதின குறிப்பு [1].

---------

தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191, உரை).   (ஆன்பொருனை வஞ்சி மூதூரின் ஆறு.
சுருளி/சுள்ளி பெரியாறு கொடுங்ஙல்லூர் அருகே. அதற்கும் வஞ்சி மாநகருக்கும் சங்க காலத்தில் ஒரு தொடர்புமில்லை.)

The river Āmpirāvati; ஆன்பொருந்தம் என்ற நதி. தண்பொருநைப் புனற்பாயும்... வஞ்சி (புறநா. 11).  (MTL)

தாம் எழுதிய தமிழ்தேசிய நாவலில், தெளிவாக ஆன்பொருனை (அமராவதி) கரையில் உள்ள வஞ்சி மூதூருக்கு
வடபுல மன்னர் கனக விசயர் (கனக விஜயர் - பெரிய இதிஹாசத்தின் ஹரி (க்ருஷ்ணர்) - அர்ஜுநன் என்னும்
கதாபாத்திரப்பெயர்களை அடிகள் அமைத்துள்ளார் என்பது வெள்ளிடை மலை. ஹரி மஞ்சள், பொன்னிறம்.
சிந்து வேளாண்மையில் இருந்து “மங்கல்/மஞ்சள்” என்னும் பெயர்கள் வடமொழியாரால் மங்கலம் என்றும்
மஞ்சளை ஹரித்ரா என மொழிபெயர்த்ததும் விரிவாகக் காட்டியுள்ளேன். Haridra for turmeric is a loan translation
in Sanskrit from Dravidian "maJcaL" from the heritage/times going back back to Indus Valley Civiliazation). Also, see the names
Kovala (< Gopala, Krushna), KaNNaki < KarNakI 'Luxmi', Madhavi ' Kurukkatti' flower for the GaNikaa given by Ilango AdikaL.
I wrote about all these character names of Cilambu, the Tamil nationalist novel epic long time ago.

கனகவிஜயர் முடித்தலை ஏற்றி கண்ணகி தெய்வத்தின் படிமையை அமராவதி நதிக்கரையின்
வஞ்சி மூதூருக்குக் கொணர்கின்றனர். இதனை மிக அழகாகப் பாடியுள்ளார் அடிகள்.

செங்குட்டுவன் கனகவிசயர் முடித்தலையில் கல்லேற்றி வஞ்சினம் முடித்தது

   [இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]

செங்குட்டுவன் புகும் வஞ்சி நகர் அமராவதிக் கரையில் இருந்ததைத் தெளிவாக்குகிறார் இளங்கோ அடிகள். 

4. நீர்ப்படைக் காதை





தண்ணான் பொருநை யாடுந ரிட்ட

வண்ணமுஞ் சுண்ணமும் மலரும் பரந்து


 தண்ஆன் பொருநை ஆடுநர் இட்ட-குளிர்ந்த ஆன் பொருநையில் நீராடுவோர் இட்ட, வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து - தொய்யிற் குழம்பும் பொற் சுண்ணமும் மலர்களும் பரவி, விண் உறை விற்போல் விளங்கிய பெருந்துறை - இந்திர வில்லைப்போல் விளங்குகின்ற பெரிய நீர்த் துறைகளில், வண்டுஉண மலர்ந்த மணித்தோட்டுக் குவளை - 


4. நீர்ப்படைக் காதை






255

ஓர்த்துடன் இருந்த கோப்பெருந் தேவி
வால்வளை செறிய வலம்புரி வலனெழ
மாலைவெண் குடைக்கீழ் வாகைச் சென்னியன்
வேக யானையின் மீமிசைப் பொலிந்து

குஞ்சர ஒழுகையிற் கோநக ரெதிர்கொள
வஞ்சியுட் புகுந்தனன் செங்குட் டுவனென்.


251
உரை
256

        ஓர்த்து உடன்இருந்த கோப்பெருந்தேவி வால் வளைசெறிய - ஆகிய நால்நிலப் பாடல்களையும் ஒரு சேரக் கேட்டு உறங்காதிருந்த கோப்பெருந் தேவியின் வெள்ளிய வளையல்கள் செறிய, வலம்புரி வலன் எழ - வலம்புரிச் சங்கு வெற்றி தோன்ற முழங்க, மாலை வெண்குடைக்கீழ் வாகைச் சென்னியன் வேக யானையின் மீமிசைப் பொலிந்து - வாகை சூடிய சென்னியையுடையனாய் வெந்திறலுடைய பட்டத்தியானையின் மேலிடத்தே மாலையணிந்த வெண்கொற்றக் குடையின்கீழ்ப் பொலிவுற்று, குஞ்சர ஒழுகையிற் கோநகர் எதிர்கொள-யானை நிரையுடன் திருநகர் எதிர்கொள்ள, வஞ்சியுட் புகுந்தனன் செங்குட்டுவன் - செங்குட்டுவன் வஞ்சி நகரிற் புகுந்தனன் என்க.

அஃதாவது, இளங்கோ அடிகள் கோப்பெருந்தேவி என்னும் பட்டத்தரசி வாழ்ந்த சேரர்களின் தலைநகர் வஞ்சி மூதூர் அமராவதி பாய்கின்ற தமிழ்நாட்டின்கண் இருந்தது என்றும்,
அங்கே சேரராசா செங்குட்டுவன் வடபுல ஆரிய மன்னர் கனக-விஜயர் முடித்தலையில் கல்லேற்றி கண்ணகி படிமையைக் கொணர்ந்து தானும் தன் தேவியைக் காண,
அவள் வளையல்கள் செறிய வஞ்சி நகரில் புகுந்தனன் என்று பாடியுள்ளார்,

------------

நடுகல் காதை:
125

மண்ணாள் வேந்தே நின்வா ணாட்கள்
தண்ணான் பொருநை மணலினுஞ் சிறக்க

மண் ஆள் வேந்தே - இந்நில முழுதாளும் மன்னனே, நின் வாணாட்கள் - நின்னுடைய வாழும் நாட்கள், தண் ஆன் பொருநை மணலினுஞ் சிறக்க - தண்ணிய ஆன்பொருநை யாற்றின் மணலினும் மிகுவனவாக.

ஆன்பொருநை - சேரநாட்டுள்ளதோர் யாறு; இஃது ஆன் பொருந்தம் எனவும் பொருநை யெனவும் வழங்கும். ஓரரசரை வாழ்த்துங்கால் அவரை அவர் யாற்று மணலினும் வாழ்கவென்றல் மரபாகலான் இங்ஙனங் கூறினான். 1"சிறக்க நின்னாயுண், மிக்கு வரு மின்னீர்க் காவிரி, யெக்க ரிட்ட மணலினும் பலவே" என வருதலுங் காண்க. சிறத்தல் - மிகுதல். வாணாள், மரூஉ முடிபு.

----------------------

கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதைத்
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீர் உயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருநை மணலினும் பலவே"

(அகம். 93)

----------------

புறநானூறு 387
387. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்
கடுங்கோவாழியாதன்


30செல்வக் கடுங்கோ வாழி யாதன்
 என்னாத் தெவ்வ ருயர்குடை பணித்திவண்

விடுவர் மாதோ நெடிதே நில்லாப்
புல்லிலே வஞ்சிப் புறமதி லலைக்கும்
கல்லென் பொருநை மணலினு மாங்கட்
35பல்லுார் சுற்றிய கழனி
 எல்லாம் விளையு நெல்லினும் பலவே.

     திணையும் துறையு மவை. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய 
செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குன்றுகட்பாலியாதனார் பாடியது.

புல்லிலை  வஞ்சிப் புறமதில் - அலைக்கும் இலையில்லாத 
வஞ்சியாகிய  வஞ்கிமாநகரின்  மதிற்புறத்தை யலைக்கும்; கல்லென் பொருதை 
மணலினும் - கல்லென்னும் ஒசையையுடைய ஆன் பொருதையாற்று மணலினும்; 


”இது வஞ்சிமாநகர்க்கு வெளிப்படை
வஞ்சிநகர்க்கண்மையிலோடும்   பொருநை  ஆன்பொருநை    யெனப்படும். 
கருவூர்க்ல்வெட்டும், (A. R. No. 166 of 1939-7) அதனை வஞ்சி நகரென்றும், 
அமராவதியை ஆன்பொருந்த மென்றும் குறிக்கின்றன. “மண்ணாள் வேந்தே 
நின் வாணாட்கள், தண்ணான் பொருதை மணலினுஞ் சிறக்க” (சிலப். 28; 125-6) 
என அடிகளும் உரைப்பது காண்க.”

------------

வீரசோழிய உரையில் மகாவித்துவான் மே. வீ. வேணுகோபாலப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள்
 ஆன்பொருனை நதி எங்கே ஓடுகிறது என விளக்கியுள்ளனர்
ஆன் - பசு5
ஆன்பயம்386
ஆன்பொருநை - ஆன்பொருந்தமென்னும் நதி , இது கருவூர்க்கருகில் ஓடுவது1136387

--------------------
புறனானூறு 36,
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன் 
பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் 
அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய 
கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய 
வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி 
வெட்டுதலான்


உரை: ஆன்பொருந்தம்  இப்போது அமராவதி யென வழங்குகிறது. 


 
NG

[1] நவம்பர் 14, 2017 மடல்: இதுபோல் தான் அகல்நாடு என இளங்கோ அடிகள் குறிப்பிடுவதும், புறம் 29-ல் மேலை கடற்கரையின் மூதூரும் விடுபட்டுள்ளன.
உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன்

பாண்டியனைப் பற்றிய அழகான வெண்பா - முத்தொள்ளாயிரம்.

வினைபற்றிய சிலேடை அவநுதி

எ - டு: ' நறவேந்து கோதை நலங்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சியா னல்லன் - துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நா(டு) ஐந்தின்
குலங்காவல் கொண்டொழுகுங் கோ'

இது வினைபற்றிய சிலேடை அவநுதி. நறவு - மது . ஏந்தல் - தாங்கல். துறையின் விலங்காமை - குலதருமத்தின் வழுவாமை . இதனுள் ' வஞ்சியானல்லன்' என்பதற்குக் கருவூரை யுடைய சோழன் அல்லன் என்றும் , பிறரை வஞ்சியாது ஒழிவானல்லன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்க.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

வி-ரை: அவநுதியணி சிலேடையணியோடு கூடி, அச்சிலேடை தானும் வினைச்சொல்லினிடமாகவரின் , அது வினைபற்றிய சிலேடை அவநுதியாம்.


இந்த வெண்பாவின் அழகை இதுபோன்ற உரைகள் காட்டுவதில்லை.
சங்கச் சேரர்கள் வஞ்சி மாநகரம் உறந்தை அருகே இருக்கிறது.
அவர்களுக்கு நறவு, முசிறி, தொண்டி துறைமுகங்கள் மேலைக்கடற்கரையில் உள்ளது.
இதனைச் சுருக்கி நறவு என்ற துறைமுகம் மாத்திரம் குறிக்கிறார் புலவர்.
வஞ்சி (கரூர்) - நறவு தொலைவு அதிகமில்லாத சிறிய நாட்டான் சேரன்.
தமிழகத்தின் ஐந்துமண்டலங்களும் ஆளும் பேரரசன் பாண்டியன்
என்பது உள்ளுறையும் குறிப்பு. இரண்டு ஊருக்கும், 5 மண்டிலங்களுக்கும்
வேறுபாடு வெளிப்படை. பாலும் தெளிதேனும் ... ஔவை வெண்பா
பற்றி கிவாஜ: நான் நாலுபொருள் தருகிறேன், நீ மூன்று தமிழ் தா என்கிறாளாம்
ஔவை. குழந்தையர் விளையாட்டில் காணுவதைக் கவிதை ஆக்கியுள்ளாள்.
அதுபோல் இது.

சேரர் பாண்டியர்க்கு அடங்கினோர் என்பது வான்மீகம். பின்னாளில்
சோழர்க்கு (உ-ம்: ராஜராஜன்) அடங்கினார். ஆனால் ஆதி வஞ்சி
கரூர். அகம் 93. கருவூர் வஞ்சி முற்றம் (கிள்ளிவளவன் காலம்)
உறையூர்ப் போர் - இரண்டு புறப்பாடல் ஒரே போரைப் பாடியுள்ளன.
பெரும்போராக இருந்திருக்கும். கிள்ளி ஜெயித்தான்.
 

N. Ganesan

unread,
Mar 25, 2018, 1:00:24 PM3/25/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-03-25 7:57 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:






புகளூரில் கிடைத்த கல்வெட்டு மிகத் தெளிவாக அதை இரும்பொறை மரபினர்க்கு உரியதாக்குகிறது.
ஒரே காலத்தைச் சேர்ந்த 10-1 சேரர்களில் மூவர் அங்கிருந்து ஆள மீதி 6பேர் நாடோடிகளா??????
இல்லை 
அவர்கள் மேற்கரை வஞ்சியில் இருந்து ஆண்டமைக்கு நான் காட்டிய சான்றுகளை தேதிவாரியாகத் தொகுத்து விரைவில் பதிகிறேன்.
இளங்கோவடிகள் கொங்குக் கரூரில் பிறந்தவர் என்று இப்பொழுதும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அவர் சிலப்பதிகாரத்தில் வருணித்து இருப்பது மேற்கரை வஞ்சியைத்தான்.

அப்படித் தெரியவில்லை. பூர்ணவாகினி (பொன்னானி/பொன்வானி) ஆற்றுக் கழிமுகம்,
சூர்ணீ (சுருளி/சுள்ளிப் பெரியாறு) கழிமுகம் என்றோ அடிகள் பாடவில்லை.

வஞ்சி மாநகர் ஆன்பொருனை நதிக்கரையில் என்றுதான் பாடியுள்ளார். I think 
I have give the reference lines from MTL before.



 

வஞ்சி மூதூர் அமராவதி ஆற்றங்கரையில் இருப்பதும்,
அம் மூதூரின் முதுகுலத்தை வாழ்த்துவதும்,
அவ்வூர் அரண்மனையில் பிறந்து வளர்ந்து,
கங்க ராஜ்யத்தில் கவுந்தி அடிகளைக் காண
கண்ணகி, கோவலன் செல்வதாகக் காவியம்
பாடிய இளங்கோ அடிகள் கூற்று.
இவ்வரிகளிலும், கனக விஜயரை அமராவதி நதியின்
வஞ்சி மூதூருக்கு கண்ணகியின் கல்சிலையைக்
கொண்டுவந்ததைப் பாடியுள்ளார்:


6. வாழ்த்துக் காதை



14.

  

மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை
நிலவரசர் நீண்முடிமேல் ஏற்றினான் வாழியரோ,
வாழியரோ வாழி வருபுனல்நீர்த் தண்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்றன் தொல்குலமே;



14
உரை
14

''மலையரையன் . . . தொல்குலமே''

        மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நிலவரசர் நீண்முடி மேல் ஏற்றினான் வாழியரோ-மலையரனாகிய இமவான் பெற்ற இளமை பொருந்திய பாவையை நிலமாளும் மன்னரது நெடிய முடியின்கண் சுமத்தினோன் நீடு வாழ்க, வாழியரோ வாழி வருபுனல்நீர் ஆன்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான் றன் தொல்குலமே - அறாது ஒழுகும் நீர்மையினையுடைய நீர் மிக்க ஆன் பொருந்தம் சூழ்ந்த வஞ்சி நகரத்தார் தலைவனது பழங்குலம் நீடுழி வாழ்வதாக;

        
இமயமலைக் கற்கொணர்ந்து படிவஞ் செய்தமையான், ''மலை யரையன் பெற்ற மடப்பாவை'' என்றார். நிலவரசர் - கனகனும் விசயனும்.


https://vaiyan.blogspot.com/2017/10/29-13-silappathikaram-29-13_7.html

N. Ganesan

unread,
Mar 25, 2018, 5:16:28 PM3/25/18
to மின்தமிழ், vallamai


2018-03-25 10:10 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///உங்கள் 1992 புத்தகம் படித்தபின் கட்டுரை எழுதித் தருகிறேன் ///
புரிகிறது .
நன்று .
என்னால் உங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லையே !
சங்க கால வஞ்சி பற்றிய ஆய்வில் சிலப்பதிகாரமோ பிற்காலத்தைச் சேர்ந்த வேறெந்த நூற்சான்றோ இருக்க வேண்டிய தேவை இல்லை .
இருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.
சரி .என் ஆய்வேட்டை கணிப்படுத்திய பிறகு .....
கண்மணி 


நன்று.  ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

நீங்கள் கூறுவதுபோல அமராவதிக் கரையில் உள்ள வஞ்சி மாநகரில் அவதரித்தவர்
நம் அருமை இளங்கோ அடிகள்.

அவர் செங்குட்டுவன் - கோப்பெருந்தேவி அரண்மனை இருந்த வஞ்சி மூதூர்
பற்றி 3 இடங்களில் அமராவதிக் கரையில் உள்ள அரண்மனைக்கு 
கனக - விஜயர் கல்கொண்டு வருவதைப் பாடியுள்ளார். 
ஆக, சிலப்பதிகாரத்தில் (~5-ம் நூற்.) ஒரே ஒரு வஞ்சி மாநகர் தான் என்பது தெளிவு.

தேமொழி ஆர்வம் கொண்டுள்ள சமுத்தூர்ச் செப்பேட்டை நான் நன்கறிவேன்.
அதனை 1975-ல் படித்து வாசகத்தை வெளியிட்டார் டாக்டர் ர. பூங்குன்றன் ஐயா.
அவரும், துரை. சுந்தரமும் சென்ற எங்கள் இல்லம் வந்திருந்தனர். சிலம்புக்கு
1000 ஆண்டு பிற்பட்ட சமுத்தூர்ச் செப்பேடு நாலு வஞ்சி பற்றிப் பேசுகிறது.
அதற்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்று தான் புரியவில்லை.
தேமொழி என் போன்ற மாணவர்களுக்கு விளக்குவார் என நினைக்கிறேன்.

ஔவை பிள்ளை சூர்ணீ ஆற்றில் முதலில் வஞ்சி, பின்னர் அஞ்சைக்களம்,
அதன் பின்னர் வஞ்சி என்று எழுதியிருக்கிறாராம். இதற்கெல்லாம் என்ன சான்று
உள்ளது? வஞ்சி என்ற மூதூரின் பெயர் எப்படி அஞ்சைக்களம் ஆகும்?
அஞ்சைக்களம்/அஞ்ஞைக்களம் என்ற பெயரின் பொருளை எழுதியுள்ளேன்.
வஞ்சி ஆன்பொருனை ஆற்றில் என்கிறது சங்க இலக்கியமும், சிலம்பும்.
இதை ஏன் ஔவை பிள்ளை சூர்ணீ (சுருளி/சுள்ளி) பெரியாறுக்கு மாற்றுகிறார்
என விளங்கவில்லை. லாஜிக் இல்லாமல் இருக்கிறது,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 26, 2018, 9:24:38 PM3/26/18
to மின்தமிழ், vallamai
2018-03-24 11:54 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
///புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து எதைக் குறிக்கிறது? ///Ganesan wrote 
புனல் வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடவில்லை . சிறுபாணாற்றுப்படை  தான் குறிப்பிடுகிறது.

புனல்வாயில் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதைத் தான் விரிவாக எழுதியுள்ளேன் பழைய மடல்களில்.
3-4 திங்கள் ஆகிவிட்டதால் ,மறந்து விட்டீர்கள் போலும்.

நா. கணேசன்
 
இதற்குத்தான் நீங்கள் புனவாசல் ,மதகு என்றெல்லாம் மிகவும் சிரமப்பட்டு விளக்கமளிக்க முயன்றீர்கள்.
சிலப்பதிகாரத்தில்' காவிரி வாயில் ' என்ற தொடர் கொண்டு அது கழிமுகம் என்று நிறுவினேன்.
kanmani

N. Ganesan

unread,
Mar 28, 2018, 3:03:44 PM3/28/18
to மின்தமிழ், vallamai

kanmani>  இருப்பை என்று எந்த ஊரும் கிடையாது.இருப்பு +ஐ =இருப்பை ;இங்கு கூந்தலுக்கு உவமை ஆதலால் வளமான அறல். 

இருப்பை என்ற ஊர் இருக்கிறது.

நா. கணேசன்  

2018-03-28 11:37 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
நானும் பழைய மடல்களை எல்லாம் எடுத்துப் பார்த்தேன்.
மறந்து தான் விட்டிருக்கிறேன்.
" நற்றிணையில் புனல்வாயில் இருப்பை அன்ன "--மேற்கோளைப் பார்த்தவுடன் நீங்கள் சொன்ன தொனிக்கோட்பாடு நினைவிற்கு வந்தது.
நற்றிணை 260ம் பாடல்.-பரணர் பாடியது.--பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை எழுதியிருக்கிறார்.
உரை மேம்போக்காகத்தான் இருக்கிறது.
ஏனென்றால் இப்பாடல்  ---ஆங்கிலத்தில் typical example என்று சொல்வார்களே ;அப்படிப்பட்ட அகப்பாடல். அத்தனை சிறப்புக்களையும் 10 அடிகளுக்குள் கொட்டி வைத்திருக்கிறார் .--தலைவியின் கூற்றில் ...பரத்தை பால் சென்று மீண்டு வந்த தலைவன் ...அவன் மேலுள்ள சினத்தை அடக்கி  உடன்படுகிறாள் .

' ஒரு எருமை .கழியிலே கழுநீர்ப்பூக்களை மேய்கிறது. கடலின் கழிப்பூவைத்  தண்டோடு கவ்விக் கொண்டு அங்கிருந்து வெளியேறி குன்று போலக்  குவிந்திருக்கும் வெண்மணல் மேல் கருந்தாள்களால்   ஏறுகிறது. பார்க்க தண்டூன்றி நடக்கும் மள்ளரைப் போல் (வயலில் வேலை செய்வோர் ) இருக்கிறது.  அருகிலிருக்கும் பழனத் தாமரையின் மேல் அதற்கு நோக்கமில்லை. அம் மணற்குன்றின் மேல் தூங்கி விடுகிறது....இப்படிப்பட்ட ஊரின் தலைவனே' என்கிறாள். முதல் நான்கு அடிகளின் பொருள் இது தான். இதற்குள் கருப்பொருள்கள் ,திணைமயக்கம் ,உள்ளுறை உவமம், கட்புல உருக்காட்சி, உவமை   எல்லாம் கட்டமைக்கப்பட்ட சிற்பம் போல் பொருந்தியுள்ளன . கழி ,வெண்மணற்குன்று ---நெய்தல் கருப்பொருள்கள் &
                                                                                                                     எருமை ,தாமரை ,பழனம் ,கழுநீர் ---மருதக்கருப்பொருள்கள்(திணை மயக்கம்) 
எருமை பழனத்தாமரையை வெறுத்துக் கழியின் கழுநீரை மேய்வது போல் தலைவன் தலைவியை நாடாமல் சேரிப்பரத்தையை நாடிச் சென்றான்--- இது  உள்ளுறை. 
 தண்டுடன் கூடிய கழுநீரைக் கவ்விச் செல்லும் எருமைக்கு தண்டோடு செல்லும் மள்ளர் உவமை .
கருந்தாள் எருமை வெண்மணல் மேல் ஏறுவது  கட்புல உருக்காட்சி ---இங்கு வண்ணப்புல உருக்காட்சியாய் ,முரணுடன் அமைகிறது.
                                                                                               "...............................................................................
                                                                                                வெய்யை போல முயங்குதி முனையெழத் 
                                                                                                தெவ்வர்த் தேய்த்த செவ்வேல் வயவன் 
                                                                                                மலிபுனல் வாயில் இருப்பை அன்ன என் 
                                                                                                ஒலி பல் கூந்தல் நலம்பெறப் புனைந்த 
                                                                                                 முகையவிழ் கோதை வாட்டிய 
                                                                                                 பகைவன் மன்யான் மறந்தமை கலனே " 
புனல் =ஆறு -மருதநிலம் (முதற் பொருள் ) 
' விருப்பம் மிகுந்தவன் போல என்னிடம் முயங்குகிறாய் (உரிப்பொருள் ); உன் புறத்தொழுக்கத்தை இன்னும் மறக்கவில்லை ; ஆற்றுநீர் மிகுதியாக வந்து கலக்கும் கழியில் உள்ள அறல்  போன்ற என் அடர்த்தியான கூந்தலில் அழகுறச்  சூடிய கோதையை பயனின்றி வாடவிட்ட பகைவன் நீ ;இதை நான் மறக்கவில்லை.' என்று அவன் தவறைக் குத்திக் காட்டுகிறாள்.
இங்கே இலக்கிய அழகின் மகுடமாக அமைவது இறைச்சிப்பொருள். 
தலைவன் தலைவியின் புணர்ச்சியை இலைமறை காயாக உணர்த்துவது ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை .
இப்படிப்  புனல்வாயில் என்ற தொடருக்கு ஆணித்தரமாக பொருள் கூற பரணரை விட்டால் வேறு யார் இருக்கிறார் ?!! 
 இங்கே பகைவர் எதிர்த்தெழ அவர்களை அடக்கிய செவ்வேல் வயவன் சேரன். 
 ஏனெனில் இதே' புனல் வாயிலை' குமட்டூர் கண்ணனார் பாடும் பாடல் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியது(பதிற்றுப்பத்து-பா-13) .
 இதே பரணர் தான் கடல்பிறக்கோட்டிய குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் பாடுகிறார். அவன் இம்யவரம்பனின் மகன் .
 இதே புனல் வாயிலைத் தான் சிறுபாணாற்றுப்படை பாடி அங்கே வஞ்சி இருந்தது என்கிறது.
பி.கு.
இருப்பை என்று எந்த ஊரும் கிடையாது.இருப்பு +ஐ =இருப்பை ;இங்கு கூந்தலுக்கு உவமை ஆதலால் வளமான அறல்.
பதிற்றுப்பத்து ' வைப்பு ' என்கிறது =வளம்.
சங்க அகப்பாடலுக்கு பொருள் புரிய வேண்டுமெனின் பயிற்சி தேவை.
இப்பொருளை ஏற்றுக்கொள்ள இயலவில்லை எனில் இலக்கியப் பயிற்சி போதவில்லை என்று பொருள்.
கண்மணி    

N. Ganesan

unread,
Mar 28, 2018, 3:14:42 PM3/28/18
to மின்தமிழ், vallamai
சிறுபாணாற்றுப்படை - புனல்வாயில்வஞ்சி பொருள்:

சேர நாட்டின் வளமை

கொழுமீன் குறைய ஒதுங்கி வள் இதழ்க்
கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர
விளையா இளங்கள் நாற மெல்குபு பெயரா   45
குளவிப் பள்ளிப் பாயல் கொள்ளும் (41-46)

Prosperity of Chēra Nādu

In the Chēra country, a buffalo
with a big mouth grazes on
waterlilies with large petals,
trampling on fat fish and
chopping them with its feet.

It walks through turmeric plants
as the leaves rub on its back with
fine hairs, chews its cud spreading
the fragrance of waterlilies, and
lies on a bed of wild jasmine, in
the shade of a jackfruit tree on
which delicate pepper vines grow.

Notes:  மெல்குபு பெயரா (45) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மென்று அசையிட்டு.

Meanings:   கொழு மீன் – fat fish, குறைய – to be ruined, to be chopped, ஒதுங்கி – walked, வள் இதழ் – big petals, thick petals,  கழுநீர் – kuvalai flowers, waterlilies, மேய்ந்த – grazing, கய வாய் – big-mouthed, எருமை – buffalo, பைங்கறி – tender black pepper (vines), நிவந்த – spread, பலவின் – jackfruit tree’s, நீழல் – shade, மஞ்சள் மெல் இலை – tender turmeric leaves, மயிர்ப்புறம் – back side with fine hair, தைவர – rubbed, விளையா இளங்கள் நாற – with the fragrance of tender honey from waterlilies, மெல்குபு பெயரா – it chews and then chews its cud, குளவி – wild jasmine, Millingtonia hortensis, பள்ளி – bed, பாயல் கொள்ளும் – it sleeps

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன்
வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று (47-50)

He is the protector of the West,
the heir of the Chēra clan,
King Kuttuvan with fast chariots.
He placed the Chēra curved bow
symbol on the northern Himalayas.
His shoulders are strong like the cross
bars on the gates of huge fortresses.
His land is rich with flowing streams
and his forts are secure with gates.

If you go to his Vanji city
what you get will be much less.

It is not only that,

Meanings:    குடபுலம் – western land, காவலர் – protector, king, மருமான் – heir, ஒன்னார் – enemies, வடபுலம் இமயத்து – Himalayas in the northern land, வாங்கு வில் – curved bow – Chēra country symbol, பொறித்த – etched, carved, எழு – wooden bars that are on huge fort gates, உறழ் – like, திணி தோள் – firm shoulders, இயல் தேர் – moving chariot, well constructed chariot, குட்டுவன் – Chēra king, வரு புனல் – flowing stream water, வாயில் – gates, வஞ்சியும் – Vanji city, வறிதே – much less, அதாஅன்று – not only that


N. Ganesan

unread,
Mar 28, 2018, 9:16:06 PM3/28/18
to மின்தமிழ், vallamai


2018-03-28 13:42 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
 ' புனல்வாயில்' என்னும் தொடர்=ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை (ref: https://groups.google.com/d/msg/mintamil/Hb_fdxTDcIE/UGZSaNhmBQAJ)



எல்லா புனல்வாயிலும் கடலோடு தொடர்புடையவை அல்ல.
உ-ம்: சிறுபாணாற்றுப்படையில் உள்ள புனல்வாயில் வஞ்சி - ஆன்பொருந்தக் கரையில் உள்ள வஞ்சி மாநகர்.
பார்க்க பழைய உரைகாரர்கள், அல்லது இப்போதைய ஆங்கிலத்தில்.

புனவாசல் திருவையாறு வட்டம் - கடலுக்கு தொடர்பில்லாத ஊர்.

திருப்புனவாசல் - பாண்டி நாட்டுத் திருப்பதி.
தாமரைக்குளம் பெரிது. அதில் உள்ள மதகு, ... பெயர் கொடுக்கிறது.

அதே போல, ஆறகழூர் அருகே புனவாசல் - மதகால் பெயர் பெறுவது:

நா. கணேசன்


 
தேவாரத் திருப்பதிகங்கள் - திருநாவுக்கரசர்
ஆறாம் திருமுறை 


2803.
[...]
மடுவார்தென் மதுரைநக ரால வாயில்
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.

பொருள்:
மடுவார்தென்மதுரைநகர் ஆலவாயில்
(வையை நீர் பொருந்திய அழகிய மதுரை நகரத்து மன்னும் ஆலவாயில்)
மறிகடல்சூழ் புனவாயில் மாட நீடு
(அலை எழுந்து மடங்கும் கடல் சூழ்ந்த புனவாயில், மாடங்கள் உயர்ந்து தோன்றும் )
குடவாயில் குணவாயி லான வெல்லாம்
(குடவாயில், குணவாயில், ஆகிய இவற்றுள் எல்லாம்)
புகுவாரைக் கொடுவினைகள் கூடா வன்றே.
(புகுந்த வணங்குவாரைப் பாவச் செயல்கள் ஒரு நாளும் பற்றமாட்டா)
-----

தமிழகம் ஊரும் பேரும்
ரா.பி.சேதுப்பிள்ளை

பக்கம்: 239

புனவாயில்
பாம்பாறு கடலிற் பாயும் இடத்திற்கு அருகே திருப்புன வாயில் என்ற
  தலம் அமர்ந்திருக்கின்றது. அவ்வூரின் தன்மையை, 
      “கற்குன்றும் தூறும் கடுவெளியும்
          கடற்கானல் வாய்ப்
          புற்கென்று தோன்றிடும் எம்பெருமான்
          புன வாயிலே”
என்னும் சுந்தரர் தேவாரம் நன்குணர்த்துவதாகும். தஞ்சை நாட்டு அறத்தாங்கி வட்டத்தில் திருப்புன வாசல் என்ற பெயரோடு விளங்குகின்றது அப்பதி.

---

தமிழக திருப்புனவாசல் இருக்கும் இடம் ஒரு கழிமுகம் (கழிமுகம் : n. கழி² +. 1.River mouth; ஆறு கடலொடுகலக்கும் பகுதி)

Thiruppunavasal, Tamil Nadu 614629, India - 9.853113, 79.069365
 
கூகுள் வரைபடத்தில்  : https://goo.gl/maps/TuhsqBzMSGx
---

..... தேமொழி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 29, 2018, 9:14:09 AM3/29/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


2018-03-28 21:14 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
புனம் +வாசல் =புனவாசல் 
புனம் =காடு-----------  தினைப்புனம் 
காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .
இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.
திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.
கண்மணி 
 

புனல்வாய், புனல்வாயில் - எல்லா இடங்களிலும் இருக்கிறது. பதிற்றுப்பத்து புனல்வாயில் பற்றி
எழுதியுள்ளேன். நற்றிணைப் பாடலும் (இருப்பை) முன்பு காட்டினேன். கொங்குநாட்டில் ஆறகழூர்
அருகே புனல்வாயில், திருவையாற்றில் புனல்வாயில், ...
புனல்வாயில் புனவாசல் என மருவும். ஊர்ப்பெயர்களில் காளியாள்புரம் > காளியாபுரம், ... போல.
பாண்டி பதினான்கு என்று புகழ்ப்பெறும் திருப்புனவாசல் திருப் புனல்வாயில் என்பதன்
பேச்சு வழக்கு. அங்குள்ள பெரிய தாமரைக்குளத்துக்கும் ஆற்றுக்கும் நீர்வரத்துக்காக
மதகும், கால்வாய்களும் இருந்து வேளாண் வளம் குறிப்பது.
புனல்வாயில் > புனவாசல்.
இராமேச்சுரத்திலிருந்து ஆடானை, புனல்வாயில், மணமேற் குடி ஆகியவற்றை வழிபட்டுப் பாண்டிய மன்னன் அரசியார் அமைச்சர் முதலானோர்க்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டுச் சோழநாடு புகுந்து பாதாளீச்சரம், திருக்களர் முதலான தலங்களை வழிபட்டுக் கொண்டு திருக்கொள்ளம்பூதூர் வந்தடைந்தார்.
புனல்வாயில் > புனவாயில் (தேவாரம்) > திருப் புனவாசல்.

வேளாண் வளம் மதகு, கால்வாய்கள் அமைத்தலால் பெருகுவது:
புறநானூறு.
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே
(துறையூரின் நன்னீர் வளம் பெருக்கும் புனல்வாய்கள். இது கடல் நீர் அல்ல. துறையூர் உண்ணாடு.)

வருகின்ற புனல் கொண்டு நீர்வளப்பத்தை உடையதும், தோரண வாயில் கொண்ட மாநகரமான
வஞ்சி என்று சிறுபாணாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் போன்றோர் விளக்கியுள்ளனர்.
இங்கே புனல் நன்னீர் “fresh water" வேளாண்மை வளத்தைக் காட்டும் சொல். புனல்வாய், புனல்வாயில்
எல்லாம் விவசாயத்திற்கு அவசியம். அதைச் சொல்லும் சிறுபாண் வரிகள். அதன் ஆங்கில
மொழிபெயர்ப்பு பார்த்தோம். ஆன்பொருனைக் கரையில் உள்ள வஞ்சி பற்றிப் பாடும்.


நா. கணேசன்
 

--

N. Ganesan

unread,
Mar 30, 2018, 12:22:17 AM3/30/18
to மின்தமிழ், vallamai
2018-03-29 12:13 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தண் புனல்வாயில் துறையூர் முன்துறை
நுண் பலமணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

நீ துறையூரின் முன்துறையில் உள்ள ஆற்று மணலைப் போலப் பல ஆண்டுகள் வாழ்க  என வாழ்த்தப்படும் வேள் ஆய் அண்டிரன்  ஆண்ட  ஆய்  நாட்டின் துறையூர் எங்குள்ளது?

..... தேமொழி 



ஆய் அண்டிரன் நாடு ஆனதால் துறையூர் நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரை ஊராக இருக்கலாம். ”புனல்வாயில் வஞ்சியும் வறிதே” என்னும்
சிறுபாண் அடியில் வஞ்சி மாநகரத்தின் நகர், நாட்டு வளம் பேசப்படுகிறது (Cf. நச்சர்). சேரநாட்டு உள்ளூர் வஞ்சி. அதுபோல இதுவும், தென்பாண்டிநாட்டு
உள்ளூர்.

சிந்துபூந்துறை - நெல்லையில் இருக்கிறது. 
அதுபோல, ஆதிச்சநல்லூரின் பழம்பெயரை ஓடைகிழார் “துறையூர்” என்கிறாரோ?
பார்க்க: இணையப் பல்கலை 

ஆதிச்சநல்லூரில் ஓடைகிழார் வாழ்ந்த காலத்துக்கு 1000 (அ) 800 ஆண்டு முன்பே
வேளிர் வருகை நிகழ்ந்து விட்டது. முதுமக்கட்டாழி நாகரீகம், நெல் வேளாண்மை, ....
ஓடைகிழார் ஆதிச்சநல்லூரின் முதுமக்கள் கூளியர், ஒரு பானைக்குள் அடங்குகிறார்களே
என்று சங்க இலக்கியத்தின் தன் ஒரே பாட்டில் குறிக்கிறாரோ என எண்ண இடமுண்டு.
ஓடைகிழார் காலத்திலேயே, தம் ஊரில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகளில்
புதையுண்டோர் யார் என்று கேள்சி எழுதுள்ளது. இது எப்படி என்றால்,
யூதர்கள் பழைய ஏற்பாட்டிலேயே, எகிப்து நாட்டின் பிரமிடுகள், ஸ்பிங்க்ஸ், ....
போன்றன யாரால் கட்டப்பட்டன என்ற ஸ்பெக்குலேஷன்ஸ் பார்க்கிறோம். அதுபோல.

ஓடைகிழார் கேட்கும் கேள்விகளுக்கு தொல்லியல், மொழியியல் ஓரளவு விடை காண
தொடங்கி விட்டது. என் பங்களிப்பு: ஆதிச்சநல்லூரில் வேள் ஒருவனின்
தாழியில் விடங்கரும்-கொற்றியும் ஏன் காட்டப்பட்டுள்ளனர் என்ற ஆய்வு,

கொம்புள்ள கொற்றி - ஆமா/ஆமான்களின் பெண் எருமை. கவரி - கௌரி என்று
பார்வதிக்கு ஏன் பெயர்? தொல்காப்பியம், குறள் கொண்டு ஓர் ஆய்வு.

இதற்கு ஒப்பாக, சென்னை அருகே ராபர்ட் புரூஸ் ஃபுட் (இவர் பற்றி சிங்கநெஞ்சன் நிறைய
எழுதிவருகிறார்) கண்டறிந்த அஸ்திரம்பாக்கம் உள்ளது. அத்திரம்பாக்கம் என்ற பெயரே,
லட்சம் ஆண்டுக்கு முன்னே செய்த கல் கோடரிகளை சங்க காலதமிழர்
அத்திரம் தொன்முது மாந்தரின் அஸ்திரங்கள் என்பதால் அவ்வூருக்கு வைத்த
பெயர் எனக் கருதுகிறேன். கல் கோடரிகளை மரத்தால் செய்த மரப்பிடி கொண்டு
ஊன் தசை போன்றன வேட்டையாடிய விலங்குகளை உரிக்கப் பயன்படுத்தியிருப்பர்,.
அம் முது மாந்தர் தமிழ் அறியார். தமிழே தோன்றாக் காலம். 
ஒவ்வொரு தலைமுறைக்கும் கல் கோடரி செய்தல், அதன் பிரயோகம்
(போரில், வேட்டையில்) கற்றுக் கொடுத்தலாம் கல்-வி, கல்லுதல் - தோண்டுதல் என்ற
பெயரா?  “கல்” என்றால் ஒலித்தல். பழைய பள்ளிகளில் மொழிக்கல்வி,
உ-ம்: வேதம் வாய்மொழியாக சில ஆயிரம் ஆண்டுகள் கற்பித்த அதிசயம்
இந்தியாவிலே நிகழ்ந்தது - இந்த வாய்மொழிக் கல்வியாலும், அதனை
ஆழ்ந்து தியானித்து சிந்தித்ததாலும் ஏற்பட்டது வடமொழிக்கு எழுத்து நெடுங்கணக்கு.
அதனைச் சுருக்கி - பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யம் போன்றன படித்தபின் -
தமிழ்/திராவிட மொழிக்கு நெடுங்கணக்கு இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்,
ஓதுகிற படியால் “கல்” என்பதால் கல்வி என திருப்பி redefine ஆனதோ?
கல்- கற்பு - சங்க இலக்கியத்தில் வேதத்தின் பெயர்., இது வேதம் ஓதப்படுதலான்.
“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்”
என்றார் வள்ளுவரும்.

NG

N. Ganesan

unread,
Mar 31, 2018, 3:14:23 PM3/31/18
to மின்தமிழ், vallamai
2018-03-31 0:09 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:

>
> காளியாள் புரம் >காளியாபுரம் என்ற மாற்றத்தை வைத்து புனல்வாயில் >புனவாசல்
> என்ற மாற்றத்தை அரண் செய்ய இயலாது.
> ஏனென்றால் ' ல் /ள் ' இரண்டும் ஒலியன்கள் . ' ல் ' ஈறு பெற்ற வேறு சொல் சான்று
> வேண்டும் .
> கண்மணி
>
>


நிரையசை கொண்ட சொல் நிலைமொழி, வருமொழி ஒன்றுடன் சேரும்ப்போது
நிலைமொழி ஈறு -இ-/-ள்- கெடுகிறது. இதனைப் பேச்சுவழக்கில் நிறையப் பார்க்கலாம்.

புனல்வாயில் என்பது புனவாயில் என மருவுவதை 7-ஆம் நூற்றாண்டிலேயே
அப்பர் விளக்கிவிட்டார். (சொல்லின்செல்வர், ஊரும் பேரும்).

புதுக்கோட்டை அருகே மணமேல்குடி > மணமேல்குடி ஆகிவிட்டது:
https://ta.wikipedia.org/wiki/மணமேல்குடி_ஊராட்சி_ஒன்றியம்
https://ta.wikipedia.org/wiki/மணமேல்குடி_ஜெகதீஸ்வரர்_கோயில்

இதுபோல் உள்ள பல உதாரணங்களைத் தொகுக்கலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Mar 31, 2018, 8:50:13 PM3/31/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சித்தர் பாடல்களில், யோகநிலையைப் பாடும் பாடல்:

கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி
மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே
மலைவாசல் மாண்டுதடி.


யோக நிலை விவரிக்கும் ”கனமேல் ஒளிவுகட்டுதல்” = கனல்மேல் ஒளிகட்டுதல்.
தணல்மேல் பானை/சட்டி = தணமேல் பானை/சட்டி என்பதுபோல.

மணமேல்குடி < மணல்மேல்குடி,
புனல்வாயில் < புனவாயில் (அப்பர்).

N. Ganesan

unread,
Apr 3, 2018, 9:26:39 AM4/3/18
to மின்தமிழ், vallamai
2018-03-28 21:14 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
புனம் +வாசல் =புனவாசல் 
புனம் =காடு-----------  தினைப்புனம் 
காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .
இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.
திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.
கண்மணி 
 


அவ்வாறில்லை. புனல்வாயில் என்பது புனவாயிலின் பழம்பெயர் என அப்பர் பாடியுள்ளார்.
ஆற்று வளத்தை குளங்கள் வெட்டி, கால்வாய், மதகுகள் கொண்டு விவசாயம் செய்த ஊர்.
சம்பந்தர் பாடிய தாமரைக் குளமும், வேறு பல குளங்களும் இன்றும் உள்ளன.

திருவையாறிலும் புனல்வாயில் என்பதுதான் பழம் பெயர். பேச்சுவழக்கில் புனவாசல்.
மகத மண்டலத்தின் ஆறகழூரிலும் புனல்வாயில் புனவாசல் எனப்படுகிறது.

நா. கணேசன்
 

--

N. Ganesan

unread,
Apr 3, 2018, 7:59:04 PM4/3/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-03-28 21:14 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
>>
>> புனம் +வாசல் =புனவாசல்
>> புனம் =காடு-----------  தினைப்புனம்
>> காட்டு விளைச்சலுக்காக நீர் திறந்து விடும் மதகு புனவாசல் .
>> இதற்கும் புனல்வாயிலுக்கும் தொடர்பில்லை.
>> திருவையாறிலிருக்கும் புனவாசல் மருத நிலத்திலிருக்கும் முல்லை வளம்.-------திணை மயக்கம்.
>> கண்மணி
>>  
>

N. Ganesan wrote,

>
> அவ்வாறில்லை. புனல்வாயில் என்பது புனவாயிலின் பழம்பெயர் என அப்பர் பாடியுள்ளார்.
> ஆற்று வளத்தை குளங்கள் வெட்டி, கால்வாய், மதகுகள் கொண்டு விவசாயம் செய்த ஊர்.
> சம்பந்தர் பாடிய தாமரைக் குளமும், வேறு பல குளங்களும் இன்றும் உள்ளன.
> https://groups.google.com/forum/#!msg/vallamai/98CVKvqRBOM/T9825mXAAAAJ
>
> திருவையாறிலும் புனல்வாயில் என்பதுதான் பழம் பெயர். பேச்சுவழக்கில் புனவாசல்.
> மகத மண்டலத்தின் ஆறகழூரிலும் புனல்வாயில் புனவாசல் எனப்படுகிறது.
>

திருவையாறு அருகிலே புனல்வாயில்:

"திருமழபாடியில் நந்திக்கும் சுயம் பிரகாசைக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெறும். மண நாள் அன்று அதிகாலை சிறிய கம்பீரமான குதிரை வாகனத்தில் நந்திதேவர் வெள்ளித்தலைப் பாகை வெள்ளிச் செங்கோலுடன் வருவார். அவருக்குத் துணையாக ஐயாரப்பரும் அறம் வளர்த்த நாயகியும் வெட்டிவேர் பல்லக்கில் பனையூர் வைத்திய நாதன் பேட்டை வழியாக கொள்ளிடத்தில் வந்து இறங்குவார்கள். ஆற்றங்கரையில் பெரிய பந்தலில் பெண் வீட்டாரான திருமழபாடிசுவாமியும் அம்பாளும் அழகிய கண்ணாடிப் பல்லக்கில் சென்று சம்பந்திகளை வரவேற்பார்கள்.download (3)

தெருவில் வீடுகள்தோறும் முன்னால் பந்தல் போட்டு பக்தர்கள் வரவேற்பார்கள். நான்கு வீதிகளும் வலம்வந்து கோயில் கல்யாண மண்டபத்தில் கல்யாணம் நடக்கும். மானிட கல்யாணங்களில் நடக்கும் சம்பிரதாயம் போல கோயில் ஸ்தானிகர் வீட்டுப் பெண் நாத்தனார் முடிச்சுப் போடுவார்.

அதன்பின் நந்தி மனைவியுடன் உலாவருவார். கொள்ளிடக்கரை பென் வீட்டுத் தெய்வங்கள் உடன் வந்து வழியனுப்புவர். அப்போது பிரம்மாண்டமான வாணவேடிக்கைகள் நடக்கும். போகும்போது புனல்வாயில், பெரும்புலியூர் வழியாக திருவையாறு போவார்கள். இந்தத் திருமண விழாவின் தொடர்ச்சிதான் திருவையாறு சப்தஸ்தான விழாவாகும். திருமணமாகாத ஆண் பெண்கள் நந்திக் கல்யாணத்தைத் தரிசித்தால் உடனே திருமணம் நடக்குமாம். இது தொன்று தொட்டு நிலவி வரும் நம்பிக்கை."

"மாப்பிள்ளையை வரவேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். மாலை 7 மணிக்கு ஒரு பெரிய பந்தலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெறும். இவ்வாறு கல்யாணம் முடிந்ததும் தம்பதிகள் ஒரு பல்லக்கிலும் சம்பந்திகள் தத்தமது பல்லக்கிலுமாகப் புறப்பட்டு, ஊர்வலமாகச் சென்று கொள்ளிடம் மணற்பரப்பில் ஓய்வெடுப்பர். அப்போது அரசு சார்பில் கலைப் பண்பாட்டுத் துறை வழங்கும் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை போன்றவை விமரிசையாக நடக்கும். பிறகு, சம்பந்திகள், மணமக்கள் விடைபெறும் நிகழ்ச்சி; திருமழபாடி இறைவன் தன் திருக்கோயில் திரும்புதல்; மணமக்களும், பெற்றோரும், புனல்வாயில், பெரும்புலியூர், திருநெய்த்தானம் வழியாகச் சென்று ஐயாறு சேர்தல் என்று அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும்."

"இறைவன் திருவையாற்றிலிருந்து திருமழபாடிக்கு செல்லும்போது, வைத்தியநாதன் பேட்டை என்ற ஊரின் வழியாகச் செல்வார். திருமணம் முடிந்து வரும்போது புனல்வாயில் என்ற ஊரின் வழியாக வருவார். இதனை, "வருவது வைத்தியநாதன் பேட்டை, போவது புனல்வாயில்' என்ற பழமொழியாகச் சொல்வர்."

நா. கணேசன்


>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 20, 2018, 10:24:12 AM4/20/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, George Hart, Dr. John Samuel, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr.Krishnaswamy Nachimuthu, Ramachandran Nagaswamy, Iravatham Mahadevan, K Rajan
வஞ்சி, கருவூர் இதனையெல்லாம் தவறாகப் போட்டுள்ள படம். இந்தக் குழப்பங்கள் நீங்கிவிட்டன - தொல்லியல் ஆய்வுகளால்.

வஞ்சி மாநகர் கருவூர் பற்றிச் சற்று விரிவாக அண்மையில் அதனருகே கிடைத்த ஆதிநாதர், பிராமி, சுந்தரி சிற்பங்கள்
பற்றிய ஆய்வுக்கட்டுரையில் எழுதினேன்.

சிரமண சமயத்தைத் சார்ந்த ஔவையாரின் புறப்பாட்டும், அதற்கு பேரா. செ. வை. சண்முகம் ஐயா அவர்களின்
விளக்கங்களும் அனுப்பிய மடலைப் பார்த்தேன். சென்றவாரம் பேரா. செ. வை. சண்முகம் அவர்கள் அண்ணாமலைப்
பல்கலையில் இருந்து மடல் அனுப்பினார்:
> உங்கள்இலக்கிய அறிவுக்கும் வரலாற்று அறிவுக்கும்  தலைவணங்குகிறேன்
> வரலாற்றுத் தொடர்புடைய கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டு வாருங்கள்.
>தொடர்ந்து  செய்திகள் அனுப்புவதற்கு  என்  நன்றி
>அன்புடன்
> சண்முகம்

வஞ்சி என்று முசிறிப்பட்டினத்தை மேலைக் கடற்கரையில் சில தமிழர்கள் எழுதியதால்
நேர்ந்த குழப்பங்கள் பல. குமரிக்கண்டம் பற்றி நூல்கள் வந்துவிட்டன. சுமதி ராமசாமி
போன்றோர் தமிழ்த்தாய், லெமூரியா/குமரிக் கண்டம் பற்றி விரிவாக எழுதியது போல,
ஹார்வர்ட் இருக்கை பேராசிரியர் வஞ்சி என்று இல்லாத ஒரு நகரத்தை சங்ககாலச் 
சேரர் மேலைக் கடற்கரையில் வைத்திருந்ததாக எப்படி தமிழர்கள் கற்பனைகள்
செய்து எழுதினார்கள் என நூல் வரவேண்டும். 

ஒரு பிஎச்டி தீஸிஸ் பெர்க்கிலி, ஹார்வர்ட், சிக்காகோ பல்கலைகளில் செய்யலாம்.
செய்ய முன்வரும் மாணவர்க்கு உதவ இயலும். குமரிக்கண்டம் போன்றது
மேலைக் கடற்கரையில் வஞ்சி மாநகரம், அது சங்க காலத்தில் சேரர் தலைநகர்
என்று உள்ள மேப்கள், எழுத்துகள்.

நா. கணேசன்


On Thu, Apr 19, 2018 at 11:22 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

பார்க்க:  https://ta.wikisource.org/s/33tn

தலைப்பு - சேரமன்னர் வரலாறு

ஆசிரியர் - ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 20, 2018, 8:57:02 PM4/20/18
to மின்தமிழ், vallamai


2018-04-20 13:19 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, April 20, 2018 at 7:24:14 AM UTC-7, N. Ganesan wrote:
வஞ்சி, கருவூர் இதனையெல்லாம் தவறாகப் போட்டுள்ள படம். இந்தக் குழப்பங்கள் நீங்கிவிட்டன - தொல்லியல் ஆய்வுகளால்.


இரும்பொறைக்  குடியிற்  பிறந்த சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை தன்  அரசியலைக்   கொங்குநாட்டுக்   கருவூர்வரையில்   நிலவச்செய்து அந்நகரில்   அரசுக்கட்டிலேறி    முடிசூட்டிக்கொண்டதாகக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.   

ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரைத் தனது  தலைமைச் செயலகமாக மாற்றுவதற்கு  முன்னர் அவரது கொடி எந்த ஊர்க் கோட்டையில் பறந்தது என்று அறிந்து கொள்வதும் நமக்குத் தேவை.


இரும்பொறை மரபினர் கரூர்க்காரர்கள். மழகொங்கு.
உதியஞ்சேரல் மரபினர் மீகொங்கு. “காஞ்சி மணமிலும் பலவே”.

நா. கணேசன்
 


..... தேமொழி

N. Ganesan

unread,
Apr 20, 2018, 9:54:20 PM4/20/18
to மின்தமிழ், vallamai


2018-04-20 18:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:



மீண்டும் அரிச்சுவடியில் இருந்து சங்கச் சேரர் வரலாறா?

 கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரை வென்று தலைநகராக மாற்றிக் கொள்ளுமுன்  அவர் ஆட்சி செய்த பகுதி  எது?  
அவருக்கு ஏன் கருவூரேறிய என்ற குறிப்பு கொடுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். 


இரும்பொறை மரபினர் கரூர் கொல்லிநகர்க் காரர்கள். முசிறிப் பட்டினம் அல்ல அவர்களது ஊர். கண்மணி எழுதியுள்ளார்.
இரும்பொறையினர் கடற்கரையில் வாழவில்லை.

கரூர் ஏறிய மீட்சியைப் பல வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர். படித்துப் பார்க்கவும்.
உ-ம்: இரா. நாகசாமி.

ஔவை போட்டுள்ள மேப்பில் பல பிழைகள் உள்ளன.
கேரளாவின் பெரியாற்றையே காணோமே!

N. Ganesan

unread,
Apr 20, 2018, 10:12:49 PM4/20/18
to மின்தமிழ், vallamai


2018-04-20 19:06 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, April 20, 2018 at 6:54:22 PM UTC-7, N. Ganesan wrote:


2018-04-20 18:45 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:



மீண்டும் அரிச்சுவடியில் இருந்து சங்கச் சேரர் வரலாறா?

 கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை கரூரை வென்று தலைநகராக மாற்றிக் கொள்ளுமுன்  அவர் ஆட்சி செய்த பகுதி  எது?  
அவருக்கு ஏன் கருவூரேறிய என்ற குறிப்பு கொடுக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தைத்தான் எதிர்பார்க்கிறேன். 


இரும்பொறை மரபினர் கரூர் கொல்லிநகர்க் காரர்கள். முசிறிப் பட்டினம் அல்ல அவர்களது ஊர். கண்மணி எழுதியுள்ளார்.
இரும்பொறையினர் கடற்கரையில் வாழவில்லை.

கரூர் ஏறிய மீட்சியைப் பல வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ளனர். படித்துப் பார்க்கவும்.
உ-ம்: இரா. நாகசாமி.

சுட்டி கொடுங்கள் படித்துப் பார்கிறேன்.  
 

ஔவை போட்டுள்ள மேப்பில் பல பிழைகள் உள்ளன.
கேரளாவின் பெரியாற்றையே காணோமே!


????  அந்தப்படம்  எந்த ஆறையுமே  காட்ட முயலவில்லை,  நாடுகளின் எல்லையைக் குறிக்கும் படம் அது. 

ஆறுகள் பல காட்டப்பட்டுள்ளன. உ-ம்: பாரதப்புழா.
 

..... தேமொழி 

N. Ganesan

unread,
Apr 21, 2018, 10:38:51 AM4/21/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
2018-04-21 0:05 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
/
///இரும்பொறை மரபினர் கரூர் கொல்லிநகர்க் காரர்கள். முசிறிப் பட்டினம் அல்ல அவர்களது ஊர். கண்மணி எழுதியுள்ளார்///
இன்றைய திருவஞ்சைக்களம் பண்டை வஞ்சி இல்லை என்று தான் நான் கூறினேன்.
உதியஞ்சேரல் ஆண்ட வஞ்சி வைப்பு வெள்ளத்தின் பின்னர் கழிப்பரப்பின் அடியில் சென்று விட்டது என்ற என் கொள்கையில் எனக்கு ஐயமே கிடையாது.
அக்கருத்தை மாற்றிக் கொள்வதற்கேற்ற ஆதாரம் எதையும் நீங்கள் இதுவரை எடுத்துக்காட்டவில்லை.

இதுவரை வஞ்சி மாநகர் மேலைக் கடற்கரை, சுள்ளிப் பெரியாற்றங் கழிமுகத்தில் இருந்தது என்ற சங்க இலக்கியப் பாடல்களை
நீங்கள் ஒன்று கூடக் காட்டவில்லை.

அதுதான், தொல்லியல்காரர்களுக்கும் சிக்கல். கற்பனையில் 20-ஆம் நூற்றாண்டில் சிருஷ்டிக்கும் பெருநகரமாக முசிறிக்கருகில்
வஞ்சி மாநகரை மேப் வரைகிறார்கள். சங்க இலக்கியத்தை, மற்ற இலக்கியங்களை, கல்வெட்டுகளைக் காணும்போது
இந்த 20-ஆம் நூற்றாண்டின் கற்பனை தெற்றென விளங்குகிறது.

குமரிக்கண்டம் பற்றி வந்துள்ள ஆய்வு நூல்கள் போல வஞ்சி மேலைகடற்கரைக் கற்பனாநகரைப் பற்றிச்
சிறந்த பல்கலைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நூல்கள் வெளிவரவேண்டும்.

நா. கணேசன்
 

///இரும்பொறை மரபினர் கரூர்க்காரர்கள். மழகொங்கு.
உதியஞ்சேரல் மரபினர் மீகொங்கு. “காஞ்சி மணமிலும் பலவே///
இரும்பொறை மரபினரைப் பாடும்போது அவர்களைக் "குட்டுவர் ஏறே"என்று பாடுவதும், உதியன் மரபைப் பாடும்போது கொங்குநாட்டு "பூவிரிபுனல் ஒரு மூன்றுடன் கூடிய கூடல் அனையை " என்று போற்றுவதும் அவர்கள் ஒரு குடும்பமாக கூட்டாட்சி நடத்தியமையைக் காட்டுகிறது என்று ஏற்கெனவே கூறியுள்ளேன்
கண்மணி 


N. Ganesan

unread,
Apr 21, 2018, 11:24:34 AM4/21/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
kanmani...@gmail.com wrote on 31/10/2017
"உதியன் மரபினரோடு தொடர்பு பெறும் ஊர்கள் மேற்குக் கடற்கரை சார்ந்தனவாகவும் இரும்பொறை மரபோடு தொடர்புடைய ஊர்கள் எல்லாம் கொங்கு
பகுதி சார்ந்தனவாகவும் இருப்பதை அடுத்த மடலில் காணலாம்."

மழகொங்கில் சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி இருந்தது/இருக்கிறது. உதியஞ்சேரல் மரபினர் மீகொங்கு என்னும் தேசத்தார், அதாவது மேலைக்கொங்கு.
அயிரைமலை, பாலக்காட்டுக் கணவாய், பேரூர். எனவே, தான் காஞ்சி நதியின் மணலினும் பலவே என வாழ்த்தப்படுகிறனர்.

குட்டுவ நாட்டில் முசிறி பட்டினம் போன்றவை உதியர்கள் குடும்பமும், கடற்கொள்ளையர்,
வட கேரளத்தின் துறைமுகங்களுக்கு (நறவு, ...) போன்ற மூதூர்களுக்கு சுங்கம் வசூலிக்க
கொல்லிநகர் வாழ் இரும்பொறை மரபும் அதிகாரம் பெற்றவர்கள். கொடுமணலுக்கு இரும்பொறை மரபினர்க்கு
வரும் வணிகம் வட கேரள துறைமுகப் பட்டினங்கள். இதனைத் தெளிவாக சங்க இலக்கியம் கூறுகிறது.

கீழடியை மிஞ்சுமா கொடுமணல் அகழாய்வு?


நா. கணேசன்
 
கண்மணி 



Reply all
Reply to author
Forward
0 new messages