தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

133 views
Skip to first unread message

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 28, 2014, 8:10:07 AM4/28/14
to Minthamil, வல்லமை, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, A K Rajagopalan

அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?  தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன். 
--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


Hari Krishnan

unread,
Apr 28, 2014, 8:19:45 AM4/28/14
to vallamai, Minthamil, vallamai editor, தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள்

2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?  தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றி சொல்வேன். 

ஆத்திசூடி.  ச் இல்ல.  ஆத்தி மாலையை சூடின, நாயனார் வீசின கல்பட்ட நடராஜர்னு சொல்வாங்க.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Apr 28, 2014, 4:29:58 PM4/28/14
to vall...@googlegroups.com, Minthamil


///ஆத்தி மாலையை சூடின, நாயனார் வீசின கல்பட்ட நடராஜர்னு சொல்வாங்க.///

வார்த்தை விளையாட்டு அருமை....




..... தேமொழி

வேந்தன் அரசு

unread,
Apr 28, 2014, 5:57:16 PM4/28/14
to vallamai, Minthamil, vallamai editor, நட்புடன், தமிழ்ப் பயணி, தமிழ் சிறகுகள், Thamizhthendral, அந்தியூரன் பழமைபேசி, A K Rajagopalan
ஆத்தியைச் சூடி இளம்பிறை அணிந்து மோனத்தில் இருக்கும் முழு வெண்மேனியனை தொழுவாம்.


28 ஏப்ரல், 2014 8:10 முற்பகல் அன்று, Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Apr 28, 2014, 6:19:44 PM4/28/14
to vall...@googlegroups.com, Minthamil

வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2014, 9:53:08 PM4/28/14
to vallamai
2014-04-28 17:40 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
அவ்வையாரின் ஆத்திச் சூடிக்கு அப்பெயர் வைத்திடக் காரணம் என்ன?


​முதன் முதலில் கி.பி 1707-ல் மொழிமாற்றம் பெற்ற படைப்பு அவ்வையாருடயதே​


​ஆதாரம்: அயோத்திதாசப் பண்டிதர்​




Megala Ramamourty

unread,
Apr 28, 2014, 10:24:27 PM4/28/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார்.  இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.

அன்புடன்,
மேகலா





--

N. Ganesan

unread,
Apr 28, 2014, 11:14:46 PM4/28/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Monday, April 28, 2014 7:24:27 PM UTC-7, Megala wrote:
’ஆத்தி சூடி’ போலவே ’கொன்றை வேந்தன்’ என்றொரு நீதி நூலும் ஔவையார் எழுதியிருக்கிறார்.  இந்த இரண்டு நூல்களுமே அதில் வரும் கடவுள் வாழ்த்தின் முதல் சொற்றொடரை நூலின் தலைப்பாகக் கொண்டுள்ளன.

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

பொதுவாக ஆத்தி, கொன்றை போன்ற மலர்களைச் சிவபெருமான் விரும்பி அணிந்துகொள்வான் என்ற அடிப்படையில் சிவனைக் குறிப்பதாகவே இவ்விரண்டு பெயர்களும் அமைந்துள்ளன. இந்தப் பெயர்களை ஔவையாரே சூட்டினாரா அல்லது பின்பு இந்தப் பாடல்களைத் தொகுத்தவர்கள் சூட்டினரா என்பது ஆராய்ச்சிக்குரியது.


இரண்டு நூல்களும் வெவ்வேறு காலத்தில் இரு புலவர்களால் இயற்றப்பட்டன.

ஆத்திசூடி, கல்வியொழுக்கம் - இரண்டும் இயற்றிய ஔவை சமணப் புலவர்.
சிவனுக்கு கொன்றை, வில்வம் விசேடமானவை. அஷ்ட புஷ்பங்கள் என்று
சிவனுக்குச் சார்த்தப்படும் பூக்களிலும் ஆத்தி (தாதகி) இல்லை. இது பலகாலம் இருந்தது
- சைவ ஆகமங்களில் ஆத்தி சார்த்துவது சிவனுக்கு இல்லை. 

ஆனால், ஆத்தி மலர் விசேடமானது பார்சுவநாத தீர்த்தங்கரருக்கு, சுமார்
2500 வருடங்களாய். சூடுதல் - To surround, envelope; கவிதல். வானஞ் சூடிய மலர்தலை யுலகத்துள்ளும் 
(பெரும் பாண். 409). ஆத்தி சூடி = ஆத்தி கவிகையாய் கவிந்து இருக்கும் தீர்த்தங்கரசாமி.
ஆத்திமாலை அணிகிற சாமி எனினும் அமையும். பல நூல்களில் (உ-ம்: 18 கீழ்க்கணக்கு - அண்மைய உரைகள் 
சிவன் என்று சொல்லும். ஆனால் அவை தீர்த்தங்கரருக்கான கடவுள் வணக்கமாய் இருக்கும்.) ஆத்தியுடன்
பார்சுவநாதர். ஆயிரக்கணக்கான சிற்பங்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா முழுமையும்
பார்க்கலாம். கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.
ஆத்திசூடி


ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது. ஒரு இடத்தில் மாறுவதால் ஆத்திசூடி என்றால் சிவன் எனல்
பொருந்தாது. பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.

(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


நா. கணேசன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Apr 28, 2014, 11:39:40 PM4/28/14
to வல்லமை
அன்பர்கள் ஹரிகி, வேந்தன் அரசு. நகராஜன் வடிவேல் நாகராஜன் மற்றும் நா. கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

Nagarajan Vadivel

unread,
Apr 28, 2014, 11:47:19 PM4/28/14
to vallamai
2014-04-29 8:44 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

​இதுவும் சைவ வைணவத் திசை திருப்பல் என்கிறார் அயோத்திதாசர்



பழந்தமிழகத்தில் திராவிட சமயங்களான சமணமும் பெளத்தமும் இணைந்தே இருந்துள்ளது.  சமணப்பள்ளிகளில் அற நீதி நெறி புகட்டிய சமணாசிரியர்கள் புத்தரின் சித்தாந்தங்களையும் கற்பித்துள்ளனர்

தமிழ்ப்பெளத்தம் கடைக்கோடி கிராமங்களிலும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது இறைவணக்கம் கிராமத்தில் உள்ள அரச மரத்தடியில் மட்டுமே நடந்தது.  சமணர்கள் பள்ளியும் புத்தர்களின் வியா(ஹா)ரமும் ஊருக்கு வெளியே அமைந்து இறைவணக்கம் அரச மரத்தடியில் நடந்தது







சவடால் வைத்தி

N. Ganesan

unread,
Apr 29, 2014, 12:15:25 AM4/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
AathichuuDi - Thirthankara, like Shiva under the Banyan tree

Tirthankara Parshvanatha

Arenaria rossa di Sikri, 65 cm x 95 cm 
India settentrionale (area di Mathura), 
II secolo d.C.  Turin, Italy

Innamburan S.Soundararajan

unread,
Apr 29, 2014, 2:34:48 AM4/29/14
to vall...@googlegroups.com, mintamil
அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.

N. Ganesan

unread,
Apr 29, 2014, 8:04:31 AM4/29/14
to vall...@googlegroups.com, mintamil


On Monday, April 28, 2014 11:34:48 PM UTC-7, இன்னம்பூரான் wrote:
அயோத்தி தாசரை வச்சுக்க்ணு ஆகாத்தியம் பண்றாரு.


அயோத்திதாசரும் கோவை மாவட்டத்துக்காரர்தான்.
அவரு தாத்தா வெள்ளையருக்கு பீஃப் கறி சமைக்கப் போனார்.
குசினிச்சேரி (குசினி - cuisine) என்ற சேரிகள் நகரங்களில் உருவாயின.
கல்வியறிவு பரவ சர்ச்சுகள் உழைக்கத் தொடங்கின காலம்.

N. Ganesan

unread,
Apr 29, 2014, 8:40:51 AM4/29/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
தகவலுக்கு நன்றி ஐயா. முதன்முதலில் சிரமண சமயங்கள் பற்றி ஆராய ஆரம்பித்தவர் அயோத்திதாசரே. அப்போது
தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படாக் காலம். கல்வெட்டியலும் இல்லை. அதனால் எல்லாவற்றையும் புத்த பெருமான்
என்றார். சமண - பௌத்த வேறுபாடு தெரியாமல் மயங்கினார் அயோத்திதாசர்.

ஆத்தி என்றால் தாதகி. இந்திய வரலாற்றில் ஆத்தி/தாதகி ஒரே ஒரு கடவுளுக்குத்தான் 2500 ஆண்டுகளாய் இருக்கிறது.
அவர் தீர்த்தங்கரசாமி தான்.

ஆலமர என்றால் சிவபிரானுக்கு உரிமை. தேவாரத்தில் பாருங்க. சிவபிரான் திருமேனியில்
தாதகி/ஆத்தி இராது. சமணம் தொய்ந்த காலத்தில், அதாவது, இந்திய சமயங்களின் மிகப் பிற்பட்ட காலத்தில்
அருணகிரியார் ஏற்றுகிறார். அவர் செய்த இன்னொரு புரட்சி. ஆறுபடை வீடுகளில் ஒன்றாக சுவாமிமலை
என ஏரகத்தை ஏற்படுத்துகிறார். காவேரி டெல்ட்டாவில் ஒரு ஆற்றுப்படை வீடு இருக்கட்டுமே என்பது அவர் நினைப்பு.
தேவாரத்தில் சிவபிரான் விரும்பி அணியும் மலர்கள்


அரைசு - காட்டில் அரைந்து (= இரைந்து) கொண்டிருக்கும் மரம்,
அதனால் தான் ராஜகுலத்தில் உதித்த புத்தருக்குரிமை. புத்தருக்கு 4000, 3000 வருஷம் முன்னரே கொற்றவைக்கு
உரிமையான மரம். கொற்றவை - கொற்றவன் என்றால் அரைசன்/அரசன். அரச மரத்தால் வரும் பெயர்.
அரசு ஆணையிடும் ஓலைக்கு “அரையோலை” என்று கல்வெட்டுக்களில் வரும். அரைச மரத்தடியில்
ஆமா (காட்டெருமை) பட்டமகிஷியுடன் புணர்வதாக சிந்து முத்திரைகள் உள்ளன. இதுவே பின்னர்
அரிய மொழிகளும், குதிரையும் வந்த பின்னர் அசுவமேத யாகமாக பரிணாமன் ஆனது. ஆமான் கட்டிய
மரம் வேத ஆரியர் காலத்தில் குதிரை  கட்டலாயிற்று. எனவே, குதிரை கட்டும் மரம் அசுவத்தம் என்று
அரசமரப் பேர் உருவானது. சூளை > சூர (சூர, சூர்ண, எல்லாம் சுண்ணம்/சுள்ளி/சுடுதல் > சுஷ்ண/உஷ்ண
எனத் தெளிந்தோம்.), காளி > காரி, நள்-/நாள்- “கறுப்பு” எனவேதான் ஆழ்வார்கள் நாரணன் என்கின்றனர்.
நாள்- ‘இரவு, கறுப்பு’ (நாளகிரி - அஞ்சனமலை ஆகிய ஆனை), நாளணன் > நாரணன் (மாயணன், சாயணன்,
சாய்தல் > சயந). நள்ளமலை, நல்லமலை ரேஞ் - கரும்பெண்ணை (கண்ணபெண்ணா > க்ருஷ்ணவேணி,
இன்றைய கிருஷ்ணா நதி) உற்பத்தி ஆகும் கருமலை நள்ளமலை/நல்லமலை. அரைச மரமும், கொற்றவையும்
- 4500 வருஷம் முன்னாடி. ஐராவதம் மகாதேவனார் ‘ஜல்லிக்கட்டு’ என்று தவறாகச் சொல்வதை,
கொற்றவை மயிடனுடன் போர்க்கோலம் என்று காட்டியுள்ளேன். இதே போல் போத்து (மகிடன்) உள்ள
ஏராளமான முத்திரைகள் உண்டு.

ஆத்தி என்றால் தாதகி மரம். தீர்த்தங்கரருக்கே உரித்தாய மரம்:
பொன்னாத்தி (அ) திருஆத்தி என வழங்கப்படும் Bauhinia tomentosa
பார்சுவநாதருக்கு ஆனதாகலாம். திரு என அடையுடன் திருவாத்தி
எனப் பெயர் பெற்றது தீர்த்தங்கரரால். ஆத்தி சிவனுக்கோ, அம்பிகைக்கோ,
பெருமாளுக்கோ, முருகனுக்கோ சிறப்பாகச் சொல்லப்படுவதில்லை.
தீர்த்தங்கரரை திருமூர்த்தி என்பதுபோல, திருவாத்தி என்பதும்
பண்டைச் சமணத் தொடர்பால் எனத் தெரிகிறது.

நா. கணேசன்







 

N. Ganesan

unread,
Apr 29, 2014, 9:00:25 AM4/29/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ், tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
திருவாத்தி (Bauhinia tomentosa)  பேரில் ஊர்களே இருக்கிறது.

பொன்னாத்தி 
காரைக்குடி சூடாமணிபுரம் கண்ணன் தாக்கல் செய்த பொது நல மனு: சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கியது. இதன் கீழ் கிராமங்களில் 416 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சிவகங்கை ஆவின் தலைவராக சண்முகம், ஜூன் 11 முதல் செயல்படுவதாக அறிவிப்பு வெளியானது. பொன்னாத்தி பால் கூட்டுறவு சங்கத் தலைவராக, செப்., 21 ல் தான் சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பொன்னாத்தி நடுத் தெருவை சேர்ந்த இளம் பெண்ணிடம்ராதாபுரத்தை சேர்ந்த ஒருவர் தன்பெயர் மணிகண்டன் (எ) பாலகுரு என்று கூறி அடிக்கடி செல்போனில் பேசிவந்தார்.

திருவாத்தி (அ) பொன்னாத்தி - திருமூர்த்தியின் மரம்:

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 9:29:05 AM4/29/14
to vallamai

2014-04-29 18:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமண - பௌத்த வேறுபாடு தெரியாமல் மயங்கினார் அயோத்திதாசர்.

​அவர் பெளத்த மதத்தைப்பற்றி அறிந்துகொண்டது சென்னை தியாசாபிகல் சொசைட்டி மூலம் கர்னல் ஓல்காட் உதவியால் இலங்கைக்குச் சென்று பெளத்தத்தை அறிந்தவர்.  அவர் பாலி மொழியிலும் சமஸ்கிரிதத்திலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்

பண்டைய தமிழ்ச் சமுகத்தில் பெளத்தமும் சமணமும் சம்பந்தி உறவு கொண்டதாக (கண்ணகி கோவலன் பெற்றோர்) ஆதாரங்கள் உள்ளனவே.  தமிழகத்தில் வழங்கிய பெளத்தம் தமிழரின் பண்டைப் பழங்குடிகள்  சமயம்​ சமணம் கலந்த ஒரு புது இயக்கம் என்று கருத இடமுள்ளத

அரச மரம் பற்றி


Plants have been traditionally considered sacred for the following reasons:
  • Its close association with a deity. For example - Bilva tree (Aegle marmelos) with Lord Shiva, Neem tree (Azadirachta indica) with Mariamman and Tulsi (Ocimum sanctum)with Lord Krishna.
  • Trees sheltering any object of worship like a deity, a fetish or a weapon have traditionally been considered sacred. Sthalavrikshas are actually the trees that first sheltered an open-air shrine, which was later replaced by a temple or shelter for the deity. The sacred tree became secondary and was worshipped along with other nature gods as the Sthalavrikshas of the temple and became an inseparable part of the faith.
  • Some plants are believed to have originated from bodies or limbs of Gods and hence, the sanctity. For example, the Flame of the forest (Butea monosperma) is believed to have originated from the body of Lord Brahmaandthe Rudraksha tree(Elaeocarpus ganitrus) rose from the tears of Lord Shiva.
  • Some plants become sacred through what might have occurred in their proximity. For example, the Peepal tree (Ficus religiosa), under which Gautama Buddha attained enlightenment, is considered sacred by the Buddhists.
  • Plants that have an important socialoreconomic significance or a major role in the local ecology are also considered sacred. For example, the veneration of the Khejri tree (Prosopis spicigera)by the Bishnois of Rajasthan is related to the crucial role the tree plays in the desert ecology. It provides the community with food, fodder and building material.
​இங்கே அரச மரம் பற்றிய செய்தியில் தீர்த்தங்கரரையும் சிவனையும் குறிப்பிடவில்லை

வேந்தன் அரசு

unread,
Apr 29, 2014, 10:21:12 PM4/29/14
to vallamai, Minthamil



28 ஏப்ரல், 2014 6:19 பிற்பகல் அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:


வேந்தரின் பதிவா இது என மீண்டும் ஒரு முறை பதிவர் பெயரை நோக்க வேண்டியிருந்தது.

..... தேமொழி

ஏன் படிறு உளவோ?

செல்வன்

unread,
Apr 29, 2014, 10:41:19 PM4/29/14
to vallamai, Minthamil
ஆத்திசூடி 57

திருமாலுக்கு அடிமை செய்

இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)




செல்வன்

unread,
Apr 29, 2014, 10:53:37 PM4/29/14
to vallamai, Minthamil
கொன்றை வேந்தன்

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

வேதியர்கள் பவுத்த மத வேதியர்கள் போலும் :-)



செல்வன்

unread,
Apr 29, 2014, 10:58:28 PM4/29/14
to vallamai, Minthamil

28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு

(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.


http://www.tamilvu.org/slet/l6120/l6120son.jsp?subid=3308


கொன்றைவேந்தன் யார் என அவ்வையார் இங்கே சொல்லிவிடுகிறார்





--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



Hari Krishnan

unread,
Apr 29, 2014, 11:02:53 PM4/29/14
to vallamai, Minthamil

2014-04-30 8:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருமாலுக்கு அடிமை செய்

இங்கே உள்ள திருமாலும் பாசுபாதிநாதரை குறிப்பது போல :-)

அட போங்க செல்வன்... எங்களுக்கா சமாளிக்கத் தெரியாது?  

அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.

அவ்ளதான?  இப்ப என்ன பண்ணுவீங்க?

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:10:37 PM4/29/14
to vallamai
2014-04-30 8:11 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
திருமாலுக்கு அடிமை செய்


செல்வன்

unread,
Apr 29, 2014, 11:16:43 PM4/29/14
to vallamai, Minthamil

2014-04-29 22:02 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அதெல்லாம்.... தொல்பழங்காலத்து ஆத்திச்சூடிய, ஆத்திசூடியா மாத்தி ஓதின பிற்கால வைதீக திப்பிசங்களின் இடைச்செருகல்.

அவ்ளதான?  இப்ப என்ன பண்ணுவீங்க?


:-) வேறு மாதிரி விளக்கம் வரும்.

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:18:46 PM4/29/14
to vallamai

2014-04-30 8:23 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்




செல்வன்

unread,
Apr 29, 2014, 11:22:01 PM4/29/14
to vallamai
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?


Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:29:28 PM4/29/14
to vallamai
செல்வன் ஐயா

நீங்களும் ஒரு ஆராய்ச்சியாளர்தானே

இதெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவும் வாதங்கள்

மாற்றுக்கருத்து வலிமைபெறும்போது ஏற்கனவே இருந்த கருத்து வலுவிழக்கும்

இதுவே வாத அடிப்படையில் நிகழும் ஆய்வு

இன்று ஒரு பெண்ணுக்கு எத்தனை பற்கள் என்ற கேள்விக்கு வாயை திறக்கச் சொல்லி எண்ண்விடலாம்

ஆனால் பற்களையே முந்திய ஆதாரங்கள் அடிப்படையில் நிறுவ வேண்டும் என்பதே நியதி

அயோதிதாசர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார் ஆதார ஆவணங்களையும் முன் வைக்கிறார்

அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் ஆவணங்களை நீங்கள் முன்வைக்க வேண்டும்

திருமால் என்ற பெயர் வடக்கிலும் தெற்கிலும் உண்டு.  வடக்கில் இருந்து வந்தது என்பது ஒருதலை வாதம்

சவடால்




2014-04-30 8:52 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?


Hari Krishnan

unread,
Apr 29, 2014, 11:33:45 PM4/29/14
to vallamai
2014-04-30 8:52 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

 நீங்க மிதிலாதாசர படிச்சதில்ல போல இருக்கு... திருமால்னா புத்தர், சிவன்னா தீர்த்தங்கரர்னு மிதிலாதாசரும் கூடவே குத்துமதிப்பு தாசரும் சொல்லியிருக்காங்க... இதெல்லாம் உங்களுக்கு விளங்கவா போவுது?


திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?

அவங்க அல்லாருமே ஆதிதொல்பழம் தமியருங்கதான்.  உலகத்தின் ஆதி மதமே தமிழ் மதம்தான்... இத இல்லேன்னு மறுக்கறவன் தமிழ் துரோகி.. ஆரியன்.  (Orion அப்படின்னேன்)

செல்வன்

unread,
Apr 29, 2014, 11:47:27 PM4/29/14
to vallamai
அயோத்திதாசர் ஆதாரமே எங்கும் கொடுக்கவில்லை நாகராசன் ஐயா

 சீவகசிந்தாமணி சமணநூல். அதில் உள்ல மலரேந்து சேவடி மால் அருகரை குறிக்கும்.அதில் எங்கேயும் புத்தரை திருமால் என குறிப்பிடவில்லை.

சூளாமணியும் புத்தரை குறித்து பாடப்பட்ட நூல் அல்ல. இதில் உள்ல சூளாமணிபாடல் திருவணங்கும் சேவடி உடைய திருமாலை குறிக்கிறது. இதில் புத்தர் எங்கே வந்தார் என எதுவும் விளங்கவில்லை




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:48:18 PM4/29/14
to vallamai









திருமாலின் அவதாரங்களில் ஒன்று புத்தர் என்ற கருத்து



Another modern set of avatars, by no means identical, from ISKCON

Source: http://www.asitis.com/gallery/plate16.html 
(downloaded Nov. 1999)

"The Lord descends whenever there is a decline in religious principles."  From an ISKCON (International Society for Krishna Consciousness) website, which provides the following commentary:

"Bhagavad-gita 4.7: In the center square, Krsna is shown in His original two-handed form, holding a flute. Surrounding Him are ten of His eternal incarnations, pictured in the order in which they appear in the material world, beginning clockwise from the lower left-hand corner.

1. Matsya, the fish incarnation, is saving the Vedas. 
2. Kurma, the tortoise incarnation, is holding the hill on His back. 
3. Varaha, the boar incarnation, is fighting with the demon Hiranyaksa. 
4. Nrsimhadeva, the lion incarnation, is killing the demon Hiranyakasipu. 
5. Vamanadeva, the dwarf incarnation, is begging some land from King Bali. 
6. Parasurama is killing the demoniac ksatriyas. 
7. Lord Ramacandra is going off into exile with His wife, Sita, and brother, Laksmana. 
8. Krsna is lifting Govardhana Hill, and beside Him is His brother Balarama. 
9. Lord Buddha. 
10. Lord Kalki is riding on His horse, killing all the demons and thus liberating them."



--

Hari Krishnan

unread,
Apr 29, 2014, 11:53:17 PM4/29/14
to vallamai

2014-04-30 9:18 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
திருமாலின் அவதாரங்களில் ஒன்று புத்தர் என்ற கருத்து

அடடா! அப்ப, திருமாலின் அவதாரம்தான் புத்தர்ங்கற கருத்தை ஒத்துக்கறாப் போல இருக்கே!  அப்படின்னா, பௌத்தம்=வைணவம்.  அப்பறம் வேற பேச்சுக்கு எடமிருக்கா என்ன!  ஆத்திசூடி, ஆத்திச்சூடி ரெண்டும் ஒண்ணுதான்.  அதான் புத்தர்=திருமால் ஆயிடுச்சே!

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:54:01 PM4/29/14
to vallamai
செல்வன் ஐயா

அயோத்திதாசர் திரிவாசகத்துக்கும் திரிக்குறளுக்கும் தமிழ் பெளத்த அடிப்படையில் உரை எழுதியுள்ளார்

அவருடைய படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டபின் அணைவருக்கும் படிக்க இணையத்தில் கிடைக்கிறது

அவருடைய கருத்தும் ஆய்வுக்குரியதுதானே

ஒவ்வாது என்று ஒதுக்குவது தவறன்றோ

சவடால்

Nagarajan Vadivel

unread,
Apr 29, 2014, 11:56:09 PM4/29/14
to vallamai
கருத்து என்பது வேறு முடிவு என்பது வேறு

அது அயோத்திதாசர் கருத்து அவ்வளவுதான்

ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ தவறென்றோ சொல்லவியலாது

சவடால்




--

செல்வன்

unread,
Apr 29, 2014, 11:58:35 PM4/29/14
to vallamai
நாகராசன் ஐயா

அயோத்திதாசர் கருத்தை சொல்வதுடன் அதற்கு இலக்கியங்களில் இருந்து புத்தரை திருமால் என கூறும் ஆதாரங்களையும் கொடுத்து இருக்கலாம்.

அப்படி கொடுக்கவில்லை என்கையில் எதை வைத்து ஆராயவ்து? கருத்தை சொல்வதுடன் நில்லாது ஆதாரமும் தரவேன்டும் அல்லவா?

Nagarajan Vadivel

unread,
Apr 30, 2014, 12:22:04 AM4/30/14
to vallamai
ஒரு கருத்தை ஆய்வு குடிவாகவோ அல்லது அனுமானமாகவோ எடுத்துக்கொள்ளும் பொறுப்பு ஆய்வாளனுடையதல்லவா

ஏற்கனவே வழக்கில் உள்ள கருத்துக்களைக் குறிப்பாக இறை நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை மீள் ஆய்வு செய்வதில் எதிர்ப்பு அதிகம்

திருமால் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்லது இந்தியாவுக்கு மட்டும் உரியது என்று ஆய்வு வரையறை செய்துகொண்டு திருமால் வேதப்பொருள் என்று முடிவெடுத்துக்கொண்டால் மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை

அருகில் உள்ள அங்கோர்வாட்டிலும் பாலி ஜாவாவிலும் பெளத்தமும் வைணவமும் தொடர்புடையதாகவே உள்ளதை வரலாறு தெளிவுபடுத்துகிறது.  கொரியாவிலும் புத்தருக்கும் திருமாலுக்கும் தொடர்பிருப்பதாகக் குறிப்புகள் உள்ளன

நான் மேற்கோள் காட்டுவதால் அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டதாகக் கருத இடம் இல்லை. அவர் படைப்புகளில் இருந்து தரவுகள் கிடைக்குமானால் அதை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வதுதான் முறை

சவடால்

செல்வன்

unread,
Apr 30, 2014, 12:54:55 AM4/30/14
to vallamai
ஆய்வு செய்ய வேன்டாம் என நான் தடுக்கவில்லையே?

ஆய்வு செய்பவர்கள் தாராளமாக செய்யலாம். முனைவர், இளமுனைவர் பட்ட மாணவர்கள் தீசிஸாக எடுத்து செய்யலாம்.

வேந்தன் அரசு

unread,
Apr 30, 2014, 7:47:37 AM4/30/14
to vallamai



29 ஏப்ரல், 2014 11:22 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?



புத்தரை பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் சொல்லுகிறார்கள் 
காந்தியை 11 ஆவது ஆக்கிடலாம்

N. Ganesan

unread,
Apr 30, 2014, 9:44:57 AM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.

N. Ganesan

 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 9:56:38 AM4/30/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
இப் பாடல்கள் இரண்டும் திருமால் என அருகதேவரைத் துதிப்பன.
இன்னொரு பொருள் திருமால் என்றால் அரசன். பல சமண நூல்களில்
உள்ள செய்திதான். அரசனுக்கு (= அரசாங்கத்துக்கு) தொண்டு செய்,
அப்பொழுது சமூகம் உயரும், ஒழுங்காக வாழும் என்று சிறுகுழந்தைகளுக்குச்
சொல்கிறார். கடவுள் துதி முதலிலேயே கூறிவிட்டார். 2013 மடல்.


On 2013 Mar 24, 9:21 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> திருமால் என நேரடியாக அவ்வையார் எழுதியிருப்பது திருமாலை குறிக்காதாம். அரசனை
> குறிக்குமாம். அரசனுக்கு அடிபணி என அவ்வையார் எழுதுவாராம். எப்படி இருக்கு கதை?
>
> அதை படித்தபின் சுவாரசியம் குறைந்துவிட்டது. இழையில் பங்கெடுக்காமல் விலகி
> விட்டேன்:-)

திருமால் என்றால் அரசன் என்று சமண சமயத்தவர் பொருள். சிந்தாமணியில்
ஆதாரம் இருக்கிறது.
இதனால் உங்களுக்கு ஏன் சுவாரஸ்யம் குறைவுபடுகிறது? என விளங்கவில்லை.

கடவுள் வாழ்த்தில் சொல்லாமல் கடைசியில் ஏன் தீர்த்தங்கரரை வழிபட்டுத்
தொடங்கும் ஆத்திசூடியில் ஔவையார் சொல்கிறார்? அவரது இன்னொரு நூல்


கல்வியொழுக்கம்,
அதையும் படிக்கலாம். திருமாலத் துதிசெய் என்று ஔவை பாடவில்லை.
அவர் சொல்வது: திருமாலுக்கு அடிமைசெய் என்கிறார். அதாவது அரசனது
ஆணைகளுக்கு
அடங்கிப் போர்முகத்திலோ, சமூகத்திலோ வாழ்வாயாக என சிறார்களுக்கு
இளம்வயதிலே
போதிக்கிறார். அரசாங்கத்துக்கு அடங்காமல் இருந்தால் சமூக முன்னேற்றமோ
ஒழுங்கோ
தடுதலை என்பதைக் கற்பிக்கிறார்.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:03:50 AM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Tuesday, April 29, 2014 8:47:27 PM UTC-7, K Selvan wrote:
அயோத்திதாசர் ஆதாரமே எங்கும் கொடுக்கவில்லை நாகராசன் ஐயா

 சீவகசிந்தாமணி சமணநூல். அதில் உள்ல மலரேந்து சேவடி மால் அருகரை குறிக்கும்.அதில் எங்கேயும் புத்தரை திருமால் என குறிப்பிடவில்லை.

சூளாமணியும் புத்தரை குறித்து பாடப்பட்ட நூல் அல்ல. இதில் உள்ல சூளாமணிபாடல் திருவணங்கும் சேவடி உடைய திருமாலை குறிக்கிறது. இதில் புத்தர் எங்கே வந்தார் என எதுவும் விளங்கவில்லை



FYI, Both Chinthamani and Choolamani and Tamil Jaina epics.

N. Ganesan

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:34:45 AM4/30/14
to vall...@googlegroups.com
On Tuesday, April 29, 2014 8:22:01 PM UTC-7, K Selvan wrote:
அது எப்படிங்க நாகராசன் ஐயா புத்தரின் பெயர் திருமால் என இருக்கும்?

திருமால் என்பது தமிழ் சொல். புத்தர் நேபாளி. நேபாளி எப்படி தமிழ் பெயர் வைத்துகொண்டிருப்பார்?



திரு என்பது ஸ்ரீ என்பதற்கான தமிழ்ச்சொல். இதனை உருவாக்கியோர் சமண சமயத்தவர்கள்.
திருமூர்த்தி என்று கொங்குநாட்டில் பலருக்கும்பெயர் இருக்கும். திருமூர்த்திமலை இருக்கிறது.
திருமூர்த்தி = தீர்த்தங்கரர். திருவாத்தி திருமூர்த்தி ஒருவரின் மரம் பொன்னிறமான பூக்கள்
பூப்பது. திருவாத்தி சூடிய திருமூர்த்திதான் ஆத்து சூடி அமரும் தேவன் (=பார்சுவன்) 
இவ்விழையில் நிறையச் சொல்லியுள்ளேன். திருவள்ளுவர், திருமூர்த்தி, திருமால் (= விஷ்ணு, அருகன், புத்தன்
- எல்லோருக்கும் பொதுப்பெயர்.) அரசனை இக் கடவுளராகப் பார்ப்பதும் பழைய மரபு.

அருகருக்கும், புத்தருக்கும் வடசொல்+தமிழ்ச்சொல் ஆன திருமால் உண்டு. அயோத்திதாசர் 
அருகருக்கு சிந்தாமணி, சூளாமணி காட்டியுள்ளார்,

நா. கணேசன்

(விட்டம் > விஷ்டம், சுண்ணம் > சுஷ்ண/உஷ்ணம் போல், விண்ணு > விஷ்ணு - வடக்கே
தொல்தமிழ் மொழிமாற்றம் நிகழ்ந்தபோது ஏற்பட்ட மாற்றம். அமெரிக்க செவ்விந்தியர்கள்
தம் மொழியை இழந்ததுபோல், 3000 ஆண்டு முன்னால் வட இந்தியாவில் மொழிமாற்றம் நிகழ்ந்தது.)

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2014, 10:55:14 AM4/30/14
to vall...@googlegroups.com
திருமடந்தை மண் மடந்தை இரு பாலும் திகழ
தீ வினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ்
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள் தொறும் இடங்கள் தொறும் திகழ
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:17:30 AM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஸ்ரீ > சிரீ/சிரி > திரி > திரு என்றானது.
ஆழ்வார்கள் ஸ்ரீதரனை சிரீதரன் என்பர். 
ஸ்ரீ > சீ என ஆதலும் உண்டு. சீவில்லிபுத்தூர், சீவைணவர்.
திருவில்லிபுத்தூர் என்றால் திரு இல்லாத புத்தூர் என்று நன்றாயிராத பொருள் கொடுத்துவிடும்.

சிரி/திரி > திரு கன்னடம், தமிழ், சிங்களம் ஏற்பட்ட மாற்றங்கள்.
இதில் சிரமண சமயத்தவர்கள் பங்கு பெரிது. ரவிவர்மாவின்
அகலிகை படம் பார்த்துக்கொண்டுள்ளேன். அகலிகை கதையில்
இந்திரன் பூசை ஆவதும் பிராகிருதமொழி கொண்ட சமணசமய்த்தார் கதைகளே.
தமிழில் - பரிபாடலில் முதலில் பதிவாகியுள்ளது.
ஆழ்வார் என்று தீர்த்தங்கரருக்கு யோகத்தில் ஆழ்தல் என்னும் பொருளில்
ஏற்பட்ட பெயர் சில நூற்றாண்டுகள் பின்னே ஸ்ரீவைஷ்ணவ ஆழ்வாருக்கு
பரவுகிறது.

நா. கணேசன்

எம். சி. நஞ்சுண்டராவ் தான் பாரதியை தன் உதவியாளர் ராமன் நாயருடன்
பக்கிங்காம் கால்வாயில் படகில் - இனி சென்னையில் வைத்திருக்க முடியாது
போலீஸ் துப்பு தெரிந்துகொண்டது என்பதால் - அனுப்பியவர் என்ற செய்தி
அவரது பேரன் நூலில் இருந்து கிடைத்துள்ளது. அவர்கள் குடிம்பத்தாரை அணுகி
ஆராய்ந்து முனைவர் சேதுபதி எழுதியுள்ளார். பாரதியை புதுவைக்கு
அனுப்பிய புரவலர் நஞ்சுண்டராவ், வஉசி அவரை எப்படிக் குறிப்பிடுகிறார்
என்பது விடுதலைப் போராட்டம், பாரதி படகில் போனது, எல்லாம் அறிய
நல்ல கட்டுரை முனைவர் எழுதியுள்ளார். அனுப்புகிறேன். முதலில்
நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, இப்போது பாரதிதாசன் கல்லூரியில்
சேதுபதி தமிழ்த்துறையில் இருக்கிறார். விரிவாக, அவருடன் பேசினேன். பிற பின்!

செல்வன்

unread,
Apr 30, 2014, 12:03:44 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.



It was not satisfactorily answered.

திருமாலுக்கு அடிமை செய்

இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும். திருமாலுக்கு அடிமை செய் என்றால் பொதுவாக புரிந்துகொள்ளபடும் பொருள் மகாவிஷ்ணுவுக்கு அடிமையாக இரு என்பதே. அரசனை குறிக்கவேண்டுமெனில் அவ்வையார் நேரடியாக அரசனுக்கு, கோனுக்கு, வேந்தனுக்கு, மன்னனுக்கு அடிமையாக இரு என சொல்லிவிட்டு போயிருக்கலாம். இப்படி குழப்பியிருக்க வேன்டியது கிடையாது

அடுத்து அவ்வையார் ஒன்றும் அரசர்களின் அடிமை அல்ல. மூவேந்தர்களை நிற்கவைத்து கேள்வி கேட்ககூடிய தைரியம் உள்ளவர். அவர் எப்படி மக்களை மன்னனுக்கு அடிமையாக இரு என அறிவுரை கூறுவார்? 

ஆக இது முற்றிலும் பொருத்தமற்ற விளக்கம். 

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2014, 12:11:29 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது.

~ அப்படி அடிச்சு சொல்லமுடியாது, செல்வன். பாடாண் திணை நோக்குக.

செல்வன்

unread,
Apr 30, 2014, 12:17:34 PM4/30/14
to vallamai, Minthamil
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.


அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?

Innamburan S.Soundararajan

unread,
Apr 30, 2014, 12:20:46 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.
~ நான் அப்டி சொல்லலையே>

அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?
~ இதைய்ம் நான் சொல்லவில்லை.

முதற்சிக்கலை மட்டும் அவிழ்த்தேன்.
2014-04-30 11:17 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
எல்லா அரசர்களும் பாடபெற்றவர்கள் கிடையாது.


அரசனுக்கு அடிமையாக இரு என எழுதகூடியவரா அவ்வை?

N. Ganesan

unread,
Apr 30, 2014, 1:27:19 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran


On Wednesday, April 30, 2014 9:03:44 AM UTC-7, K Selvan wrote:

On Wed, Apr 30, 2014 at 8:44 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
You have asked the same question, and it was answered.
Also, see what Prof. Nagaraj has given from Ayothidasar.



It was not satisfactorily answered.

திருமாலுக்கு அடிமை செய்

இதை அரசன் என பொருள் கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன. முதற்சிக்கல் திருமால் என்பது அரசனுக்கான நேரடி பொருள் கிடையாது. திருமால் என்பது மகாவிஷ்ணுவை தான் குறிக்கும்.

திருமால் tiru-māl - King; அரசன்.
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான் (சீவக. 2981).

See how Tiruttakka Thevar, in Chintamani (Jaina epic that showed
the way for Kampan) kaappiyam uses the word, திருமால் as
equivalent for King. Hence, my commentary.

N. Ganesan

 

செல்வன்

unread,
Apr 30, 2014, 1:32:13 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran
That is not the primary meaning of the word Thirumal.

Why would avvai ask people to be a slave to a king? 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 1:54:28 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran
On Wednesday, April 30, 2014 10:32:13 AM UTC-7, K Selvan wrote:
That is not the primary meaning of the word Thirumal.
Why would avvai ask people to be a slave to a king? 


For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.
 

தேமொழி

unread,
Apr 30, 2014, 7:28:40 PM4/30/14
to vall...@googlegroups.com


இதை நானும் நினைத்திருக்கிறேன்..
அந்தக் காலமாக இருந்தால் எந்த அவதாரத்தை நீக்கிவிட்டு அந்த இடத்தில் காந்தியை வைத்திருப்பார்கள் என்று எண்ணியதுண்டு.


..... தேமொழி

செல்வன்

unread,
Apr 30, 2014, 7:49:29 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

2014-04-30 12:54 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
For the Jaina poet Avvai, the students need to be trained well
to follow and serve the orders of the King. TirumAl (= Arhat
for Jains) is already mentioned in KaTavuL vAzttu in the first line.
Note that Aaththi ChuuDi is Parshvanath has the Snake hood
just like Vishnu. So, the first line is Thirthakar vaNakkam,
and in the middle of the text, it is school children getting
trained to obey and serve the orders of King's Govt.


செர்வ் வேறு, அடிமை செய் என்பது வேறு

அரசனில் நல்லவனும் உண்டு, கெட்டவனும் உண்டு. கொலைகாரன் உண்டு, சர்வாதிகாரி உண்டு. இந்நிலையில் மொட்டையாக "அரசனுக்கு அடிமையாக இரு" என அவ்வை எஞ்ஞனம் கூறியிருக்க முடியும்? அடிமைத்தனம் என்பது படுகேவலமான நிலை அல்லவா? தன்னைபடைத்த மகாசக்திக்கு மனிதன் அடிமையாக இருத்தல் ஏற்ககூடியது.

ஆக உங்கள் விளக்கம் முதலில் திருமால் என்பது அரசனை குறிக்கும் என்பதிலேயே தடுமாறுகிறது. காரணம் திருமால் எனும் சொல்லின் நேரடி பொருள் மகாவிஷ்ணுவையே குறிக்கும். சங்க இலக்கியம் முழுவதிலும் திருமால் , மால் என அழைக்கபடுபவர் மகாவிஷ்ணுவே.

ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறது

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே

ஆக திருமால் என்றால் இன்றூவரை நூற்றுக்கு 99.999% மக்கள் மகாவிஷ்ணுவையே பொருள் கொள்ளும் நிலையில், தமிழர்களின் மிகமுக்கிய தெய்வமாக அவர் இருக்கையில் மொட்டையாக திருமாலுக்கு அடிமை செய் என்றால் அது மன்னனை குறிக்கிறது என மக்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பது கூட அவ்வையாருக்கு தெரியாதா?

மேலும் மன்னனுக்கு மக்களை அடிமையாக இருக்க சொல்லும் அளவு அதிகாரத்துக்கு ஜால்ரா போடும் நிலையில் அன்றைய தமிழ்புலவர்கள் இல்லை. அதிலும் குறிப்பாக அவ்வை அப்படி இருந்திருக்க வாய்ப்பு இல்லை. சோழமன்னன் ஒரு சிற்றரசன் குழந்தைகளை யானைகாலில் இடற செய்ய முனைகையில் அதை தடுத்து நிறுத்தி அக்குழந்தைகளை காத்தவர் அவ்வை. அது இந்த அவ்வை கிடையாது என நீங்கள் சொன்னாலும்,...அது அன்றைய புலவர்கள் மன்னர்களுக்கு மக்களை அடிமையாக இருக்க சொன்ன நிலையை சுட்டவில்லை.

மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.

Megala Ramamourty

unread,
Apr 30, 2014, 10:00:07 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
//சோழமன்னன் ஒரு சிற்றரசன் குழந்தைகளை யானைகாலில் இடற செய்ய முனைகையில் அதை தடுத்து நிறுத்தி அக்குழந்தைகளை காத்தவர் அவ்வை.//

குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 

புறநானூற்றிலுள்ள அப்பாடல்:

நீயோ புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (புறம்: 46)

அன்புடன்,
மேகலா




















செல்வன்

unread,
Apr 30, 2014, 10:02:39 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:25:55 PM4/30/14
to mint...@googlegroups.com, vallamai, Minthamil, Banukumar Rajendran
On Wednesday, April 30, 2014 4:49:29 PM UTC-7, செல்வன் wrote:

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே


சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.

 
மொத்தத்தில் திருமாலுக்கு அடிமை செய் என்பதை மன்ன்னுக்கு அடிமையாக இரு என பொருள் கூறுவது மிக பொருந்தாத விளக்கம்.



திடீரென்று எதற்குக் கடவுள் வாழ்த்து வருகிறது இடையிலே. ஔவை வாழ்ந்த காலத்துக்கு அருகில் வாழ்ந்த
சிந்தாமணி உடையார் விளக்கியுள்ளார்: திருமால் = மன்னன் (அதாவது, ராஜாங்கம்). பள்ளிச் சிறார்கள்
அரசன் இட்ட சட்டத்தைப் பற்றி நடக்கச் சொல்கிறார்.

நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்
தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.

பொருள் : நீர் முழங்கும் நீலம் நெடுமேகம் மால் யானைத் தேர் முழங்கு தானை - நீரினையுடைய முழங்கும் கரிய பெரிய முகில்போலும் பெரிய யானையும் தேரும் முழங்கும் படையையுடைய, திருமாலின் முன் துறப்பான் - அரசனுக்கு முன்னே துறப்பதற்கு; பார் முழங்கு தெண்திரை போல் செல்வம் தம் பாலற்கு ஈந்து - உலகில் முழங்கும் தெள்ளிய அலைகடல் போன்ற செல்வத்தைத் தம் மக்களுக்கு நல்கிவிட்டு; ஊர் நாடு முழதும் - ஊரில் உள்ளாரும் நாட்டிலுள்ளாரும்; உரவோன்தாள் சேர்ந்தன - அறிவுடைய அரசன் அடியை அடைந்தனர்.

நா. கணேசன்

 
--

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:29:59 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:02:39 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை

முன்னர் சொன்னீர்கள்
“அடுத்து அவ்வையார் ஒன்றும் அரசர்களின் அடிமை அல்ல. மூவேந்தர்களை நிற்கவைத்து கேள்வி கேட்ககூடிய தைரியம் உள்ளவர். அவர் எப்படி மக்களை மன்னனுக்கு அடிமையாக இரு என அறிவுரை கூறுவார்? ”

இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்
பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.

நா. கணேசன்
 

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:33:06 PM4/30/14
to vallamai, mintamil, Banukumar Rajendran

2014-04-30 21:25 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
சமணர்கள் திருமால் என அரசனை அழைப்பது மரபு.


இந்துக்கள் திருமால் என மகாவிஷ்ணுவை  அழைப்பது  மரபு


திடீரென்று எதற்குக் கடவுள் வாழ்த்து வருகிறது இடையிலே. 


அது வாழ்த்து அல்ல. அறிவுரை

#61 தெய்வம் இகழேல் என வருகிறது. அது எப்படி அறிவுரையோ அதே போல் திருமாலுக்கு அடிமை செய் என்பதும் அறிவுரையே.


நீர்முழங்கு நீல நெடுமேக மால்யானைத்
தேர்முழங்கு தானைத் திருமாலின் முன்றுறப்பான்
பார்முழங்கு தெண்டிரைபோற் செல்வந்தம் பாலர்க்கிந்
தூர்முழுது நாடு முரவோன்றாள் சேர்ந்தனவே.

ஆக இங்கே முழுமையாக காண்டெக்ஸ்டில் தானைதிருமால் என படித்தால் இங்கே குறிப்பிஉடபடுவது அரசன் என புரிந்து கொள்ள இயலுகிறது

இந்த மாதிரி சொல்லாமல் மொட்டையாக திருமாலுக்கு அடிமை செய் என்றால் அதன் முதல்பொருள் நாராயனமூர்த்திக்கு அடிமை செய் என தான் புரிந்துகொள்ளவியலும். அரசனை குறிப்பிட ஓராயிரம் வார்த்தைகள் உள்ளன. திருமாலின் முதற்பொருள் மகாவிஷ்ணுவையே குறிக்கும்

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:35:33 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:29 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன். ஆத்திசூடியைப்
பார்த்து சைவர் எழுதியது. பின்னர் பாரதி, பாரதிதாசன், சிற்பி, ... என்று பலர் ஆத்திசூடி பாடியுள்ளனர்.


வேறாக இருந்தாலும் மன்னனை புலவர்கள் கண்டிக்கும் மரபு மறையவில்லை.

மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ 12ம் நூற்றாண்டு. ஆக 12ம் நூற்றாண்டுவரை புலவர்கள் மன்னனை கண்டிக்கவெண்டிய சமயத்தில் கண்டிக்க தவறவில்லை என தெரிகிறது. இந்த சூழலில் அவ்வை மன்னனுக்கு அடிமையாக இருக்க சொல்லி எப்படி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பாள்?

அதுவும் 8,9ம் நூற்றாண்டில் இருந்தது முழுக்க சைவ மன்னர்கள். அவர்களுக்கு அடிமையாக இருக்க எப்படி சமணர்கள் ஒப்பியிருப்பார்கள்?

செல்வன்

unread,
Apr 30, 2014, 10:44:14 PM4/30/14
to vallamai, மின்தமிழ்
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது

'என்னை ஈன்றவன், ''இவ்
     உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
     தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
     பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
     இதற்கு ஏது உண்டு; - இறையோய்!

N. Ganesan

unread,
Apr 30, 2014, 10:55:54 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:02:39 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 21:00 GMT-05:00 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
குழந்தைகளைக் காத்தவர் அவ்வை இல்லை. அவர் கோவூர் கிழார் எனும் புலவர். மலையமான் மக்களைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் யானையின் காலால் இடறிக் கொல்லவிருந்தபோது சோழனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி அக்குழந்தைகளைக் காத்தார் அவர். 



நன்றி. மாற்றி எழுதியதற்கு மன்னிக்கவும்.

ஆக புலவர்கள் இப்படி மன்னனை கண்டிக்க தயங்காத மரபு நிலவிய மண்ணில் பிறந்த புலவர்களின் தலைவி இப்படி மன்னனுக்கு அடிமை செய்ய சொல்லி மக்களுக்கு அறிவுரை சொல்லியிருப்பார் என்பது அதனாலேயே பொருந்தவில்லை


பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு
1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தான
பெண்புலவர்கள் கூறிய வாக்கு. 

நா. கணேசன்



 
--

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:01:33 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 8:25 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே’ என்கிறார் பொன்முடியார் என்னும் பெண்புலவர். ஆத்திசூடி ஔவைக்கு
1000 வருஷம் முன்னாடி வடகேரளாவில் வாழ்ந்தவர். நல்ல சிட்டிசனாக ஒருவனை வளர்த்த இரு மகத்தான
பெண்புலவர்கள் கூறிய வாக்கு. 

உண்மை.  மகத்தான உண்மை.  அய்யா எசமான் அவர்கள் அமெரிக்க அதிபருக்கு அடிமையாகத்தான் இருக்கார்.  அதுதான் நல்ல சிடிசனுக்கு அழகுன்னு அவர் வணங்கும் சமணப் புலவர் அவ்வையார் சொல்லி இருக்கார்.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:04:31 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 7:44:14 PM UTC-7, K Selvan wrote:
"திருமாலுக்கு அடிமை செய்" என கம்பராமாயணத்திலும் கூறப்படுகிறது

'என்னை ஈன்றவன், ''இவ்
     உலகு யாவையும் ஈன்றான் -
தன்னை ஈன்றவற்கு அடிமை செய்;
     தவம் உனக்கு அஃதே;
உன்னை ஈன்ற எற்கு உறு
     பதம் உளது'' என உரைத்தான்;
இன்ன தோன்றலே அவன்;
     இதற்கு ஏது உண்டு; - இறையோய்!




சமணர்கள் உலகத்தை ஈன்றவர்கள் என்று
திருமாலையோ, ஆத்திசூடியையோ சொல்வதில்லை.

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
Apr 30, 2014, 11:06:14 PM4/30/14
to vallamai
2014-05-01 8:05 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
இதெல்லாம் சங்க இலக்கியம்.

ஆத்திசூடி 8, 9 நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இருவரும் வேறு.

கொன்றைவேந்தன் ஔவை சைவசித்தாந்தி, விநாயகர் அகவல் பாடியவள் என எண்ணுகிறேன்

​பழங்குடிகள் வாழ்வியல் அமைப்பில் அரசன் இறைவனின் பிரதிநிதி என்ற கருத்து வலுப்பெற்றிருந்தது.  இன்றும் வடகிழக்கில் அரசவையில் அரசன் இறைவனின் பிரதிநிதியாக அம்ர்ந்தே தீர்ப்பளிக்கிறார்.  ஜப்பானிய அரசர் இறைவனின் பிரதிநிதி அவர் கட்டளைக்கு அடிபணிவது இறைவனுக்கு அடிபணிவது என்ற நம்பிக்கையே அரசரி சரணடையுங்கள் என்று வானொலியில் சொன்ன ஒரு கட்டளையே அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தியது

புலவர்களின் பெயரை வைத்துப் படைப்பை உறுதி செய்வதும் படைப்பின் அடிப்படையில் ஆக்கியோன் யார் என்று தீர்மானிப்பதும் கணினி மூலம் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் முறை மேல்நாட்டில் வளர்ந்துள்ளதுபோல் தமிழில் வளரவில்லை

அடிபணிதல் என்பது தமிழனின் பக்தியைக் குறிப்பிடும் தமிழன் தன்னுடைய அரசனுக்காகத் தன் உயிரையே கொடுப்பது இந்த பக்தியின் அடிப்படையிலேயே.  அரசவையின் மறுபதிப்பே லிற்காலத்தில் ஆகம அடிப்படையில் அமைந்த கோவில்கள் அரசன் அரியணையில் அமர்ந்திருப்பதுபோல் நகர் வலம் வருவதுபோல் அரசியுடன் அமர்ந்து அரசவையை நடத்துவதுபோல் அரசவையில் கலைஞர்கள் பாடுவதுபோல் ஆடுவதுபோல் கோவில் வழிபாட்டு முறைகளை உருவாக்கிவிட்டன ஆகம வாதிகள்.  ​






N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:09:33 PM4/30/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய்
 - Serve the protector.
protector of people is King i.e., Govt.

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:23:27 PM4/30/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 8:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
protector of people is King i.e., Govt.

இந்து திருமால், அழிப்பவர்.  சமணத் திருமால் காப்பவர் போல இருக்கு.

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:35:13 PM4/30/14
to vall...@googlegroups.com, Minthamil, Banukumar Rajendran


On Wednesday, April 30, 2014 4:49:29 PM UTC-7, K Selvan wrote:

ஜைனரான இளங்கோவடிகள் எழுதிய சிலம்பே மகாவிஷ்ணூவை தான் திருமால் என அழைக்கிறது

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே

ஆக பழந்தமிழ் இலக்கியத்தில் சமணர்களே திருமால் என அழைப்பது மகாவிஷ்ணுவையே


 சிந்தாமணியில் திருமால் என்றால் அரசன். சூளாமணியிலும் இதே கருத்துடைய பாடல் உண்டு.

சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

ஆய்ச்சியர் குரவை

பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன்
பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால் ;

உரை
            "பொன்னிமய.........என்பரால்" பொன் இமயக் கோட்டுப் புலி பொறித்து மண் ஆண்டான் - பொன்னாகிய இமயமலையின் சிமையத்திலே தனது புலியை எழுதி இப்பாலுள்ள நிலமெல்லாம் ஆண்டவன், மன்னன் வளவன் மதிற் புகார் வாழ் வேந்தன் - மதிலையுடைய புகார் நகரத்து வாழும் வேந்தனாகிய சோழ மன்னனாவான், மன்னன் வளவன் மதிற்புகார் வாழ் வேந்தன் - அவன் யாவனென்னின், பொன்னந் திகிரிப் பொரு படையான் என்பரால் - போர் செய்யும் அழகிய சக்கரப்படையையுடைய திருமால் என்று கூறுவர் ;

         பொன்னந்திகிரி - பொற்றிகிரியுமாம்.

-----------

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Apr 30, 2014, 11:55:16 PM4/30/14
to vallamai, Minthamil, Banukumar Rajendran

2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 

N. Ganesan

unread,
Apr 30, 2014, 11:57:53 PM4/30/14
to mint...@googlegroups.com, vallamai, Minthamil


On Wednesday, April 30, 2014 8:55:16 PM UTC-7, Hari wrote:

2014-05-01 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிலம்பில் பாருங்க. ஏன் மன்னன் திருமால் என்று விளக்கியுள்ளார் இளங்கோவடிகள்:

அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


No. when did I say this?

Hari Krishnan

unread,
May 1, 2014, 12:00:37 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


No. when did I say this?
 

அடுத்த ஆட்டம்னுதான் சொன்னேன்.  டிட் சே என்பதைப் பற்றி பேச்சே இல்லை.. அதற்குள் தானாக வந்து, பேசப்படுபவன், நான்தான் என்று தாங்களாகவே அட்சதை போட்டுக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலமும் அளித்ததற்கு நன்றி எசமான்.

N. Ganesan

unread,
May 1, 2014, 12:06:15 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil
On Wednesday, April 30, 2014 9:00:37 PM UTC-7, Hariki wrote:

2014-05-01 9:27 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அடுத்த ஆட்டம், ’திருவுடை மன்னர் காணின் திருமாலைக் கண்டேனே’ன்னு எழுதினவர் சமணர்.  அவருக்கு நாமம் சாத்தி, ஆழ்வார் பட்டம் கொடுத்தது பக்தி பஜனை சதின்னு தொடங்கப் போவுது..  நல்ல முன்னறிவிப்பு, அறிகுறி. 


அறிஞர் என் மடலுக்கு பதில் அளித்ததால் சொன்னேன். திருமால் = அரசன் என்று சமணர்கள் பாடியுள்ளனர் என்பதால் ஆத்திசூடிக்கு
முனைவர் செல்வன் சொல்வது பொருந்தாது எனக் காட்டினேன்.

நா. கணேசன்

 

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2014, 12:06:08 AM5/1/14
to வல்லமை, mintamil
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N. Ganesan

unread,
May 1, 2014, 12:17:12 AM5/1/14
to mint...@googlegroups.com, வல்லமை
On Wednesday, April 30, 2014 9:06:08 PM UTC-7, knn1929 wrote:
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி

அறிஞர்கள் ஆத்திசூடி = பார்சுவதேவர், திருமால் = அரசன் என்ற கருத்துகளை நோக்கவேண்டுகிறேன்.
சமண, பௌத்த இலக்கிய ஆய்வுகள் வளரவேண்டும். வெறும் தனிப்பட்ட தாக்குதலால் அவை நிறுத்தப்படாது
என எண்ணுகிறேன்.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
May 1, 2014, 12:28:11 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 9:36 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
சின்ன தொரு கேள்வி கேட்டேன்
மின்னலென பதில்கள் வந்தன
இன்னல்களும் முளைத்தனவே
பின்னலென வந்த வாக்கு வாதங்களால்
என்ன சொல்வேன் அன்பர்களின் துடிப்பு பற்றி

நீங்க வயித்த வலிக்குதானு கேட்டாகூட அதுக்குள்ள பார்சுவ நாதரையும் தீர்த்தங்கரரையும், சமணத்தையும், பக்தி பஜனை அனிமேஷனையும் நுழைக்க எங்களுக்குத் தெரியும்னு உங்களுக்குத் தெரியாதா!

N. Ganesan

unread,
May 1, 2014, 12:41:59 AM5/1/14
to vall...@googlegroups.com
ஆம், பல நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தில் திருமால் = அரசன் என்று சமணர்கள் சொல்லியுள்ளனர். அச் செய்தி பின்னர்
ஹிந்து இலக்கியங்களுக்குப் பரவுகிறது.

கணிமேதையார் இயற்றிய ஏலாதி என்னும் 18 கீழ்க்கணக்கு நூலின் இறைவணக்கம்:

அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்
கிறைபுரிந்து வாழ்த லியல்பு.


இது சமண நூல் ஆனதால் 24 தீர்த்தங்கரர் வணக்கம். ஆனால் தற்கால உரை சைவ வணக்கமாக மாற்றிவிடுகிறது.
அறு நால்வர் = 24 தீர்த்தங்கரர். பலர் பங்குபெற்ற இழை CTamil குழுவில் உள்ளது. நான்மறை சமணர்களுக்கு
உண்டா? - என்றார் தேவ். அதற்கான உசாத்துணை காட்டியதாக நினைவு.

ஆத்திசூடி சமணர்கள் பள்ளிச் சிறுவர்களுக்கு ஆக்கிய பல நூல்களில் ஒன்று. அம்மரபில் பொருள் காணலாம்.
நச்சின்னார்க்கினியர், ஔவை துரைசாமியார் போன்றோர் உரைகளே சைனநூல்களுக்கு பொருந்தா உரையாகி
மீண்டும் எழுதினார்கள் என்பது வரலாறு.

நா. கணேசன்

 






செல்வன்

unread,
May 1, 2014, 12:44:30 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 21:55 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்துக்கு அடங்காதே, அத்துமீறு என்றா ஔவை சொல்ல முடியும்?

அப்படி சொல்லவேண்டியது இல்லை. ஆனால் பள்ளிகுழந்தைகளுக்கே அரசனுக்கு அடிமையாக இரு என மூளைசலவை செய்ய அவ்வை எப்படி முன்வருவார்?

அதிலும் 8,9ம் நூற்றாண்டில் சமண மன்னர்கள் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. ஏழாம் நூற்றாண்டிலேயே கூன்பாண்டியன், மகேந்திரவர்மன் எல்லாரும் சைவத்துக்கு மாறியாகிவிட்டது. தமிழ்நாடெங்கும் பக்தி இயக்கம் பரவி கோயில்கள் கட்டபடுகின்றன. மன்னர்கள் எல்லாரும் சைவர்கள் அல்லது வைணவர்கள்.

இந்த சூழலில் ஒரு சமண பெண் புலவர் எப்படி பள்ளிகுழந்தைகளுக்கு "அரசனுக்கு அடிமையாக இரு" என அறிவுரை கூறுவார்? அடிமை என்பது மிக, மிக ஸ்ட்ராங் ஆன வார்த்தை. முதற்பொருளான திருமாலுக்கு அடிமை செய்வது வைணவத்தில் வழக்கம் என்பதை கம்பராமாயன பாடல் மூலம் கண்டோம். மன்னர்களுக்கு அடிமைகளாக இருப்பது சமணத்திலும் வழக்கமில்லை என கருதுகிறேன். ஆக சமண பெண்புலவர்கள் சைவ மன்னர்களுக்கு அடிமைகளாக இருக்க சொல்லி பள்ளிமாணவர்களுக்கு கற்பித்தார்கள் என்பது இதற்கு பொருத்தமான விளக்கமாக தெரியவில்லையே?

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 1, 2014, 12:47:54 AM5/1/14
to வல்லமை, mintamil
வயித்த வலிக்குதுன்னே
வயித்தியரிடம் நான் போனேன்
பயித்தியமா உனக்கு
வரிந்து இப்படி
வாரைக் கட்டினால் வேட்டி மேல்
வலித்திடாதா உந்தன்
வயிறு என்றே
சிரித்திடுரா ரவர்


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
May 1, 2014, 12:54:11 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
protector of people is King i.e., Govt.


தமிழ் பல்கலைகழக உரை காண்க.


ஒளவையார் பாடிய நூல்களில் ஆத்திசூடியும் ஒன்று. ‘ஆத்திசூடி’ என்பது ஆத்தி மாலையைச் சூடியுள்ள சிவனைக் குறிக்கும். ஆத்திசூடி என்பது காப்புச் செய்யுளின் முதல்சொல் ஆகும். அந்தச் சொல்லே நூலுக்குப் பெயராக அமைந்துள்ளது.

காப்புச் செய்யுள் என்பது கவிஞன் தான் புனைய முனைந்துள்ள நூலினை முழுமையாக இயற்றி முடிப்பதற்கு இறைவன் துணை நின்று காக்க வேண்டும் என்ற கருத்தில் நூல் முதலில் அமையும் செய்யுள் ஆகும்.

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

(ஆத்திசூடி, காப்புச் செய்யுள்)
ஆத்தி மாலையைச் சூடி வீற்றிருக்கும் சிவபெருமானை நாம் போற்றி வணங்குவோம் என்று ஆத்திசூடி தொடங்குகிறது. இந்நூல் 109 அடிகளைக் கொண்டுள்ளது. இந்நூலில் உள்ள அடிகள் அகரவரிசையில் அமைந்துள்ளன. படிக்கின்றவர்கள் தாங்கள் படித்தவற்றை மனத்தில் எளிதில் பதிய வைப்பதற்கு இந்த அகர வரிசை உதவும்.

http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012223.htm

N. Ganesan

unread,
May 1, 2014, 12:58:28 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 9:54:11 PM UTC-7, செல்வன் wrote:

2014-04-30 22:09 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திச்சூடியின் வாசகங்களுக்கு சரியான உரை விக்கியில் காண்க.

திருமாலுக்கு அடிமை செய் - Serve the protector.
protector of people is King i.e., Govt.


தமிழ் பல்கலைகழக உரை காண்க.


திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 1, 2014, 1:03:32 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.

இது சரியான தகவல் தானா?



724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது

செல்வன்

unread,
May 1, 2014, 1:04:25 AM5/1/14
to vallamai, mintamil

2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)

N. Ganesan

unread,
May 1, 2014, 1:36:24 AM5/1/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, April 30, 2014 10:03:32 PM UTC-7, K Selvan wrote:

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொன்றை, வில்வம் - தேவாரத்தில் சிவன் விரும்பி அணியும் மலர்களாக வரும். ஆத்தி
அங்கே இல்லை. சமணர்களைக் கழுவேற்றிய சம்பந்தர் கூட ஆத்தி அணிவதாய்ச் சொல்வதில்லை.

இது சரியான தகவல் தானா?



724. அடல்விடையினன் மழுவாளினன்
அலரால்அணி கொன்றைப்
படருஞ்சடை முடிவுடையவர்க்கு
இடமாவது பரவை
கடலிடையிடை கழியருகினில்
கடிநாறுதண் கைதை
மடலிடையிடை வெண்குருகெழு
மணிநீர்மறைக் காடே.

தெளிவுரை : வெற்றியை உடைய இடப ஊர்தியை உடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்தி மாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவ பெருமானுக்கு இடமாவது பரந்து கிடத்லையுடைய கடலின் இடை இடையும் கழியின் அருகிலும் மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடை இடையும் வெண்மையான குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற நீலமணி போலும் கடல்நீரையுடைய திருமறைக்காடேயாகும்.


எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

N. Ganesan

unread,
May 1, 2014, 1:38:33 AM5/1/14
to vall...@googlegroups.com, mintamil


On Wednesday, April 30, 2014 10:04:25 PM UTC-7, K Selvan wrote:

2014-04-30 23:58 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
திருத்தம்பெற வேண்டிய உரை. கணிமேதையாரின் ஏலாதி கடவுள்வாழ்த்து போல.

ஆம். விக்கிபிடியாவில் இருப்பது தான் சரியான விளக்கம். தமிழ்பல்கலைகழக உரை தவறான உரை :-)



இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

Hari Krishnan

unread,
May 1, 2014, 1:41:55 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-05-01 10:33 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
தாபர மணலாற் கூப்பி

அழைத்தங்கே ஆவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப்
பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
குறுக்கைவீ ரட்ட னாரே.

ஆத்திமரத்தடியில் லிங்கம் அமைத்த கதை தேவாரத்தில் வருகிறது


4.49 திருக்குறுக்கை - திருநேரிசை

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(நான்காம் திருமுறை)



ஆத்தி இங்கே வருகிறது.   (பார்க்கத் தெரியாதவர்களுக்கு உதவியாக இருப்பதற்காக எழுத்து (ஆத்தியில்) பெரிதாக்கப்பட்டுள்ளது.)

செல்வன்

unread,
May 1, 2014, 1:43:43 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-05-01 0:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

நல்ஆர் அணி

தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது

http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.

7. பொ-ரை: புதுவதாகத் தோன்றிய, வளர்தற்குரிய, இளமையான பிறையை உடையவனும், யான் முன்னே செய்த வலிய வினைகளை, களை களைந்தாற்போலக் களைந்தெறிந்து என்னை ஆளுதல் பொருந்திய தலைவனுமாகிய சிவபெருமானது இடமாவது, செந்நெற்கதிர்கள் வளைந்து தோன்றுகின்ற, மிக விளையும் வயல்களிடத்துக் கயல் மீன்கள் பாய்வதும், ஒழுகிய மணலையுடைய கீழ்க்கடற்

செல்வன்

unread,
May 1, 2014, 1:45:15 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 0:38 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)

செல்வன்

unread,
May 1, 2014, 1:52:12 AM5/1/14
to vallamai, மின்தமிழ்

2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஆத்திசூடி


ஆத்திமரத்தடியில் இருப்பது தீர்த்தங்கரர். கல்லால மரத்தடியில் இருப்பது சிவன். ஆயிரக்கணக்கான
பாடல்களில், சிற்பங்களில் இது பொது.

நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)

செல்வன்

unread,
May 1, 2014, 1:54:48 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-04-28 22:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
பாரதியின் பரம்பொருள் வாழ்த்தில் தமிழ்வளர்த்த தீர்த்தங்கரரை ஆத்திசூடி என்று வாழ்த்திப்
பிற கடவுளரை - அல்லா, ஏசுவின் தந்தை, பெருமாள், சிவபிரான் - வணங்குகிறார் என உரைக்கலாம்.

(1) ஆத்திசூடி - (2) இளம்பிறை அணிந்து

மோனத் திருக்கும் முழுவெண் மேனியான் -

(3) கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன் -

(4) மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன் -

(5) ஏசுவின் தந்தை  - எனப்பல மதத்தினர்

உருவகத் தாலே உணர்ந்துணராது

பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்

ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;

அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;

அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.



பாரதியார் பாடலின் பொருளையே இப்படி மாற்றியுள்ளீர்கள். இது பொருந்துகிறதா?

ஆத்திசூடி என இங்கே பாரதியார் பாசுவநாத தீர்தங்கரையா குறிக்கிறார்?

ஆத்திசூடி என ஒரே வார்த்தையில் தீர்த்தங்கரரை விளித்துவிட்டு உடனே அடுத்த வார்த்தையில் சிவனுக்கு தாவுகிறாரா?

செல்வன்

unread,
May 1, 2014, 1:58:08 AM5/1/14
to vallamai, மின்தமிழ்
2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)



ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.

எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
 



Nagarajan Vadivel

unread,
May 1, 2014, 1:59:03 AM5/1/14
to vallamai
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன்  அதாவது மரத்தின் நிழலில்

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்த

இரண்டில் எது சரி?

தமிழ்நாட்டு இறை உருவங்களோடு மரத்தை இணைப்பது ஸ்தலபுராணம்.  ஒவ்வொரு கடவுளும் கோவிலுள் அமர்வதற்குமுன் அமர்ந்திருந்த மரமே ஸ்தல் விருட்சம்

கோவிலை ஒட்டி  இருந்த மரம் அணிந்துகொண்ட மலர் என்று பல நிலைகள் உள்ளன

இங்கே ஆத்திச் சுவட்டிலா ஆத்தி சூடியா?

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனுஞ் சாமி

சவடால் வைத்தி

செல்வன்

unread,
May 1, 2014, 2:06:43 AM5/1/14
to vallamai, mintamil
2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன்  அதாவது மரத்தின் நிழலில்

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்த

இரண்டில் எது சரி?


இரண்டாவதுதான் சரி


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்

செல்வன்

unread,
May 1, 2014, 2:07:53 AM5/1/14
to vallamai, mintamil
பித்தா பிறைசூடி

இதற்கு பிறையின் மேல் அமர்ந்த தேவன் என்ற பொருளா இல்லை பிறையை சூடிய தேவன் என்பது பொருளா?

Hari Krishnan

unread,
May 1, 2014, 2:10:26 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 11:36 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திசூடி என்றால், ஆத்தி மரத்தடியில் அமர்வது என்று பிடிவாதம் பிடிப்பவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள், பூச்சூடினால், பூமரத்துக்கு அடியில் உட்கார்கிறார்கள் என்று பொருள் கொள்வார்கள் போலிருக்கிறது!

Nagarajan Vadivel

unread,
May 1, 2014, 2:11:38 AM5/1/14
to vallamai

2014-05-01 11:36 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
​​
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

​மத்தளக்காரரே நடையை மாத்தாதீங்க

ஆத்தி சுவட்டி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

என்றொரு பாடபேதம் உள்ளது

இதில் எது சரி என்பதற்கு ஆதாரம் வேண்டும்

நீங்கள் சொல்வது சரி என்று நிறுவ என்ன ஆவணங்கள் உள்ளன

ஆத்திச் சுவட்டில் என்பதற்கு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த அயோத்தொதாசர் எழுதிய உரை உள்ளது

நீங்கள் குறிப்பிடும் கருத்து யார் எழுதியது

சவடால்

சவடால்



N. Ganesan

unread,
May 1, 2014, 2:14:11 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:58:08 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:52 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:
நீங்கள் கொடுத்த எல்லா லிங்கையும் க்ளிக்கி பார்த்தேன்

எதிலும் ஆத்தி மரத்தடியில் அமர்ந்திருக்கும் தீர்தங்கரரை காணோம். (!!!!)



ஆத்திமரத்தடியில் தீர்தங்கரர் அமர்ந்திருப்பதாக சொல்லி இந்த புகைப்படங்களை கொடுத்தீர்கள்.

எனக்கு சரியா பார்க்க தெரியலையா என்ன என தெரியலை. ஆனால் இந்த புகைப்படங்களில் யாருக்காவது ஆத்தி மரம் தெரியுதா?
 


Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.

NG

செல்வன்

unread,
May 1, 2014, 2:14:48 AM5/1/14
to vallamai

2014-05-01 1:11 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்தி சுவட்டி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

என்றொரு பாடபேதம் உள்ளது

இதில் எது சரி என்பதற்கு ஆதாரம் வேண்டும்

நீங்கள் சொல்வது சரி என்று நிறுவ என்ன ஆவணங்கள் உள்ளன


நூல் பெயரே போதுமான ஆதாரம் தானே?

ஆத்திசுவட்டி என துவங்கி இருந்தால் நூல் பெயரும் ஆத்திசுவட்டி என தானே இருந்திருக்கணும்?

ரைட்டோ? :-)

N. Ganesan

unread,
May 1, 2014, 2:16:12 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai, mintamil


On Wednesday, April 30, 2014 11:06:43 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:59 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ஆத்திச் சுவட்டில் அமர்ந்த தேவன்  அதாவது மரத்தின் நிழலில்

ஆத்தி சூடி அமர்ந்த தேவன் அணிந்த

இரண்டில் எது சரி?


இரண்டாவதுதான் சரி


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

இதற்கு ஆத்திமரத்தடியில் அமர்ந்த தேவன் என எங்கே பொருள் வருகிறது?

ஆத்திமலரை சூடி அமர்ந்த தேவனை என்பதே இதன் பொருள்


ஆத்திமாலையை சூடலாம் தானே. தோளிலோ, தலையிலோ.

மேலும், சூடுதல் என்றால் குடை போலக் கவிந்திருத்தல் என்ற பொருள் சங்க இலக்கியம்.
ஆத்தி மரத்தடியில் அமருபவர் என்று இந்திய சிற்பங்கள் பல காட்டுகின்றன.

நா. கணேசன்

செல்வன்

unread,
May 1, 2014, 2:17:32 AM5/1/14
to vallamai, mintamil

2014-05-01 1:14 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
Look at the Parsvanatha thirthakara at Turin museum, the statue is the oldest in the links I've given. From Mathura. At least 2000 years old.

I dont see turin museum anywhere in the links you provided. can you repost the link?

N. Ganesan

unread,
May 1, 2014, 2:19:17 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:45:15 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:38 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
இது  தமிழ்பல்கலைகழக உரை அன்று.

நீங்கள் கொடுத்த விக்கிபிடியா உரையை விட நம்பகமான தரவுதான் :-)



Not really. ஏலாதி, சூளாமணி உரைகள் பாருங்க. தவறுகள் புலப்படும்.

N. Ganesan

unread,
May 1, 2014, 2:27:48 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai


On Wednesday, April 30, 2014 10:43:43 PM UTC-7, செல்வன் wrote:

2014-05-01 0:36 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
எங்கே இப்பாடலில் ஆத்தி உள்ளது?

நல்ஆர் அணி

தமிழ் பல்கலைகழக உரையில் ஆத்தி எனவே குறிப்பிட்டுள்ளது

http://www.tamilvu.org/slet/l4170/l4170son.jsp?subid=2280

வெற்றியை உடைய இடப ஊர்தியையுடையவனும், மழுப்படையை உடையவனும், நல்ல ஆத்திமாலையையும் அழகிய கொன்றை மாலையையும் அணிந்த விரிந்த சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு இடமாவது, பரந்துகிடத்தலையுடைய கடலின் இடைஇடையும், கழியின் அருகிலும்; மணம் வீசுகின்ற தண்ணிய தாழை மடல்களின் இடைஇடையும் வெள்ளிய குருகுகள் மேலெழுந்து பறக்கின்ற, நீலமணிபோலும் கடல் நீரையுடைய திருமறைக்காடேயாகும்.

கு-ரை: 'அலராலணி' என்பது பாடம் அன்று. 'கொன்றைச் சடை' என இயையும்.


பாட்டு இப்படி இருக்கிறது:
அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப் 
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்- 
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை 
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.

கொன்றை மரம் பூத்துக் குலுங்குவதைப் பாருங்க. மரம் முழுக்க
ஒரே பூங்கொத்துகள் அலர்ந்து அழகாய் இருக்கும். அதனைப் பாடுகிறார்
சுந்தரர். “அலரால் அணி கொன்றை” - கொன்றை அலர்களை சடைமுடியில்
அணியும் சிவன்.

எப்படி நல்லார் என்று மாற்றுகிறார் உரையில் எனத் தெரியலை.
அப்படியே மாற்றினாலும் ஆர் என்பதற்குப் பல பொருள் இருக்கு,
ஆர் = சந்தனம். நல்ல சந்தனத்தை அணிந்து, கொன்றையைச் சூடும்
சிவன் என்றும் உரைக்கலாம். ஆர் என்றால் மலரின் பொருந்துவாய் (Calyx)
என்ற பொருளும் உண்டு. நல்ல மலர்கள் பல பொருந்திய கொன்றைப் பூங்கொத்துகளை
அணியும் சிவன் என்றும் உரைக்கலாம். ஆர் என்பதற்கு ஆத்தி என்பது பொருள்
எனஎடுக்கணும் என்றால் ஏன் தேவாரத்தில் ஓரிடத்தில் கூட ஆத்தி அணிபவன்
சிவன் என்று வருவதில்லை? என்பதை யோசிக்கலாம்.

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு மலர், தாவரம். துளசி - பெருமாளுக்கு,
அறுகு - கணபதிக்கு, கடம்பு - முருகனுக்கு, ஆத்தி - பார்சுவருக்கு, ... எனவே
ஆத்தியை தேவாரம் சொல்வதில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 1, 2014, 2:31:04 AM5/1/14
to mint...@googlegroups.com, vallamai
https://groups.google.com/d/msg/vallamai/e2zoa685RAE/gWXeHH9BrnEJ

ஆத்திசூடி அமரும் தேவன் (2000 வருஷம் முந்தைய சிற்பம்).

Nagarajan Vadivel

unread,
May 1, 2014, 2:32:42 AM5/1/14
to vallamai

2014-05-01 11:44 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நூல் பெயரே போதுமான ஆதாரம் தானே?


​சவடால்​

It is loading more messages.
0 new messages