கொடிக்கறி

229 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 10, 2021, 1:31:12 AM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
இணையம் தமிழ் அகராதிகளில் இல்லாத, ஆனால் தமிழிலே பலகாலமாக வழக்கில் உள்ள - பரவலாகவோ, வட்டாரமொழியாகவோ - சொற்களைப் பதிவுசெய்ய மிகவும் உதவுகிறது. அவ்வகையில், நான் தெரிந்துகொண்ட ஒரு சொல்: கொடிக்கறி.

On Fri, Jul 9, 2021 at 12:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> குழந்தைகளுக்கு இழை கட்டும் சடங்கு கூடக் கொடி என்றே பெயர் பெறும்; இடுப்புக்கொடி.
> மிகுதியான விலங்கிறைச்சியை வேட்டைச் சமுதாயத்தினர் பதப்படுத்துவர். அதற்கு இலக்கியச் சான்று உள்ளது; வாடூன் என்று அழைத்தனர். இன்று அதன் பெயர் கொடிக்கறி; ஏனென்றால் துணி காயப்போடுவது போல இரண்டு கம்பு நட்டு; இரண்டையும் இணைக்கும் கொடியில் இறைச்சியைக் கோத்துக் காயவைப்பர்.
> சக


நன்றி. வெள்ளெலியை வயலில் வேட்டு, கொடிக்கறி ஆக்குகின்றனர். காண்க.
https://www.youtube.com/watch?v=ty0EvZONmi0&t=400s
https://www.youtube.com/watch?v=ty0EvZONmi0

------------------------

https://books.google.com/books?id=k4-mv0lBYp4C&pg=PA12&lpg=PA12&dq=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF&source=bl&ots=56WEcR4LdI&sig=ACfU3U3nM_Y6hMOm8-uV53YCtKz4r2wgeQ&hl=en&sa=X&ved=2ahUKEwiW5eSw4NfxAhVCXM0KHU23A3EQ6AEwEnoECB4QAw#v=onepage&q=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF&f=false

விருதுநகர்: நாடார் சமையல் அசைவம் ; பிரபலங்கள் ருசித்தவை

S.P.R ரவீந்திரன்
Kannadhasan Pathippagam, 2014- கொடிக்கறி (உப்புக்கண்டம்)

http://aathichudi.blogspot.com/2012/01/blog-post_24.html
” வேட்டை ஆடப்பட்ட யானையை உப்புக்கண்டம் என்று சொல்லப்படும் கொடிக்கறி போடவேண்டுமெனில் சும்மாவா? திணைநெல் பயிரிடுதல், அறுவடையான வயல் சென்று, கடப்பாறையால் குத்தி, புல் அரிசி எடுத்து (இன்னும் இப்பழக்கம் உண்டு), உரலில் உமி எடுத்து அரிசி ஆக்கி சமைத்தனர். தேக்கு இலையில் உணவு பரிமாறப்பட்டது. மான் கறி, யானை கொடிக்கறி, கருவாடு, கறித்துவையல் (சுக்கா?) ஆகியவை சமைக்கப்பட்டன. வேட்டுவபெண்கள் மற்ற நிலங்களுக்கு சென்று கொடிக்கறி விற்றலுடன், பூவிற்றும் குடும்ப பொருளாதாரத்தில் பங்கேற்றனர்.”

வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?
---------------

அமெரிக்காவில் கொடிக்கறி (உப்புக்கண்டம்) ஜெர்க்கி எனப்படுகிறது. இது அமெரிக்க இந்தியர்களின் மொழியில் இருந்து ஆங்கிலம் பெற்ற வார்த்தை. செவ்விந்தியர் மாடுகளை வளர்த்ததில்லை. மான், பைஸன், வான்கோழி ... தான். அதில் இருந்து கொடிக்கறி தயாரித்தனர். https://en.wikipedia.org/wiki/Jerky

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 10, 2021, 2:08:40 AM7/10/21
to vallamai
வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?

அப்படி ஒரு பாடல் இதுவரை எனக்குத் தெரியாது. (யானைக்கறியைத் தின்றார்களா?!?!?!)

ஆட்டுக்கறியை உப்புக்கண்டம் ஆக்குவதை நேரில் பார்த்தும் சுவைத்தும் இருக்கிறேன். 

உடும்புக்கறியை எவ்வாறு பதப்படுத்தினர் என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது. 

இலக்கியத்தில் உப்புக்கண்டத்தை எண்ணெயில் வறுத்து எடுப்பது பற்றிப் பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு எனப் பல பாடல் சான்றுகள் உள்ளன. 'பரல் வறைக் கருனை' என்று அழைக்கப்படுகிறது. 

இதுபற்றிய என் கட்டுரை வல்லுநர்குழுவின் வசம் உள்ளது. தேர்வான பிறகு விரித்துப் பேசுகிறேன். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdwn7%3DA%3Dz%3DY-czKadUxY2mza%2BTuheYCkBQMF6Tw_fG9-Q%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jul 10, 2021, 2:19:34 AM7/10/21
to vallamai
/கறித்துவையல் (சுக்கா?)/ முனைவர் கணேசனின் முதல் பதிவிலிருந்து....

'கறித்துவையல்' இதுவரை கேள்விப்பட்டதில்லை. 
ஒருவேளை கோளா உருண்டையைச் சுட்டுகிறதோ?
அதற்குத்தான் கறியை 'கைம்மா' பண்ணி; கொஞ்சம் கடலைமாவு சேர்த்து உருட்டுவார்கள். 

'சுக்கா' என்பது குழம்பாக்காமல் எண்ணெய் மிகுதியாகச் சேர்த்து தாளிதத்துடன் வதக்குவது. சங்க இலக்கியத்தில் இதுவும் 'சூட்டு' வகைகளில் ஒன்றாகும். 
சக 

N. Ganesan

unread,
Jul 10, 2021, 2:58:13 AM7/10/21
to vallamai
On Sat, Jul 10, 2021 at 1:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?

அப்படி ஒரு பாடல் இதுவரை எனக்குத் தெரியாது. (யானைக்கறியைத் தின்றார்களா?!?!?!)

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 297-299

ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும்
ஓசையும்;

---------

இது இன்றும் சையாத்திரி அடிவாரக் காடுகளில் நடப்பது. நானே பார்த்துள்ளேன். சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், மாதம்பட்டி, ...
ஆனால், இது யானை வேட்டை அல்ல.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
Jul 10, 2021, 3:24:28 AM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 10, 2021 at 1:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?

அப்படி ஒரு பாடல் இதுவரை எனக்குத் தெரியாது. (யானைக்கறியைத் தின்றார்களா?!?!?!)


யானைக்கறி தின்றனர்.  அகநானூறு:

169. பாலை

[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட
1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப்
புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
5. ஞெலிகோல் சிறுதீ மாட்டி ஒலிதிரைக்
கடல்விளை அமிழ்தின் கணஞ்சால் உமணர்
சுனைகொள் தீநீர்ச் சோற்றுலைக் கூட்டுஞ்
சுரம்பல கடந்த நம்வயிற் படர்ந்துநனி
பசலை பாய்ந்த மேனியள் நெடிதுநினைந்து
10. செல்கதிர் 2மழுகிய புலம்புகொள் மாலை
மெல்விரல் சேர்த்திய நுதலள் மல்கிக்
கயலுமிழ் நீரிற் கண்பனி வாரப்
பெருந்தோள்
3நெகிழ்ந்த செல்லலொடு
வருந்துமால் அளியள் திருந்திழை தானே.

-தொண்டி ஆமூர்ச்சாத்தனார்.

(சொ - ள்.) நெஞ்சே!

1-8. மரம் தலைகரிந்து நிலம் பயம் வாட - மரங்கள் உச்சிகரியவும் நிலம் வளம் குன்றவும், அலங்கு கதிர்வேய்ந்த அழல் திகழ் நனந்தலை - அசைகின்றஞாயிற்றின் கதிர் குழப்பெற்ற வெம்மை விளங்கும்அகன்ற பாலை நிலத்தே, புலி தொலைத்து உண்ட பெரும்களிற்று ஒழி ஊன் - புலியாற் கொன்றுதின்னப்பெற்ற பெரிய யானையினது எஞ்சிக்கிடந்தஊனில், கலிகெழு மறவர் காழ்கோத்து ஒழிந்ததை -ஆரவாரம் பொருந்திய ஆறலைப்போர் கோலிற்கோத்துக் (கொண்டேகியது போக) எஞ்சியதை,ஒலிதிரை கடல்விளை அமிழ்தின் கணம் சால் உமணர்- ஒலிக்கும் அலை பொருந்திய கடலில் விளையும்உப்பினைக் கொணரம் கூட்டம் மிக்க உப்புவாணிகர், ஞெலிகோல் சிறு தீ மாட்டி - தீக்கடைகோலாலாக்கிய சிறு தீயில் வதக்கி, சுனை கொள்தீ  நீர் சோற்று உலை கூட்டும் -சுனையிற்கொண்ட இனிய நீராலாய சோற்றின்உலையில் கூட்டி ஆக்கும், சுரம்பல கடந்த நம் வயின்- பல சுர நெறிகளையும் கடந்து வந்துள நம்மிடத்து,படர்ந்து - தன் உள்ளம் படர்தலால்;

8-14. திருந்து இழை -திருந்திய அணிகளையுடைய நம் தலைவி, செல்கதிர்மழுகிய புலம்புகொள் மாலை - மறையும் கதிர் மங்கியதனிமை கொண்ட மாலையில், நனி பசலை பாய்ந்தமேனியள் - பசலை மிகவும் பரந்த மேனியளாகி, நெடிதுநினைந்து - நீள நினைந்து, மெல் விரல் சேர்த்தியநுதலள் - மெல்லிய விரல்களைச் சேர்த்தநெற்றியினளாய், கயல் உமிழ் நீரில் கண் பனிமல்கி வார - கயல்மீன் உமிழும் நீர்போலக்கண்களில் நீர் நிறைந்து ஒழுக, பெரும் தோள்நெகிழ்ந்த செல்லலொடு - பெரிய தோள்மெலிந்ததாலாய துன்பத்துடன், வருந்தும் -வருந்துவள், அளியள் - இரங்கத்தக்காள்.

(முடிபு) நெஞ்சே! சுரம்பல கடந்த நம்வயின் தன் உள்ளம்படர் தலின், திருந்திழை, மாலையிலே நெடிதுநினைந்து பசலை பாய்ந்த மேனியளாய், விரல்சேர்த்தி நுதலளாய், கண்பனி வாரச் செல்லலொடுவருந்தும்; அளியள்.

(வி - ரை.) கரிந்து - கரிய எனத் திரிக்க. பயம் - ஏனைவளங்கள். காழ் - இருப்புச் சலாகை. கடல்விளைஅமிழ்து - உப்பு. கணம் சால் உமணர் என்றமையின்உமணர் கூட்டமாகவே வருவர் என்பது பெற்றாம்.சினைகொள் தீ நீர் என்றமையால் சுரத்தில் நீர்இன்மை பெறப்படும். படர்ந்து - படாதலால்.

kanmani tamil

unread,
Jul 10, 2021, 3:28:42 AM7/10/21
to vallamai
நன்றி. 
இப்போது தான் யானைக்கறி தின்றமை பற்றிய பாடலை அறிகிறேன் 
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 10, 2021, 8:20:09 AM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 10, 2021 at 2:28 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நன்றி. 
இப்போது தான் யானைக்கறி தின்றமை பற்றிய பாடலை அறிகிறேன் 
சக
காழ் என்ற பதத்தைச் சங்கத்தில் துழாவினால் வேடுவச்சிகள் கொடிக்கறி ( = ஜெர்க்கி (அ) உப்புக்கண்டம்)
விற்பதற்குப் பழைய சான்று இருக்கின்றதா என அறியலாம்.

jerky ( < charqui; American english from Native Americans' languages) =  https://en.wikipedia.org/wiki/Jerky = கொடிக்கறி

NG

 

kanmani tamil

unread,
Jul 10, 2021, 9:11:19 AM7/10/21
to vallamai
'காழ்' என்பது இரும்புக்கம்பி. அது இறைச்சியைக் கோத்து நேரடியாக நெருப்பில் சுடப் பயன்பட்டது. இது ஒருவகைச் சூட்டு ஆகும். மூன்று வகைச் சூட்டுகள் சமைத்து உண்டனர்.
கொடிக்கறி விற்றமைக்குச் சான்று நானறியேன்.
அதைப் புழுக்கியும் உண்டனர்; வறுத்தும் உண்டனர்; விருந்தில் பரிமாறினர். 
 
பொறுமை. என் கட்டுரை தேர்வு செய்யப்பட்ட பிறகு பேசுகிறேன்.
சக 

N. Ganesan

unread,
Jul 10, 2021, 9:23:30 AM7/10/21
to vallamai, housto...@googlegroups.com

கொடைக்குக் கிடா வெட்டி, உப்பு மஞ்சள் தடவி கொடிக்கறி போட்டு வைத்துக் கொள்வார்கள்.

N. Ganesan

unread,
Jul 10, 2021, 11:24:58 PM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 10, 2021 at 8:32 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

கொடைக்குக் கிடா வெட்டி, உப்பு மஞ்சள் தடவி கொடிக்கறி போட்டு வைத்துக் கொள்வார்கள்.


On Sat, Jul 10, 2021 at 12:39 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
இணையம் தமிழ் அகராதிகளில் இல்லாத, ஆனால் தமிழிலே பலகாலமாக வழக்கில் உள்ள - பரவலாகவோ, வட்டாரமொழியாகவோ - சொற்களைப் பதிவுசெய்ய மிகவும் உதவுகிறது. அவ்வகையில், நான் தெரிந்துகொண்ட ஒரு சொல்: கொடிக்கறி.

On Fri, Jul 9, 2021 at 12:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> குழந்தைகளுக்கு இழை கட்டும் சடங்கு கூடக் கொடி என்றே பெயர் பெறும்; இடுப்புக்கொடி.
> மிகுதியான விலங்கிறைச்சியை வேட்டைச் சமுதாயத்தினர் பதப்படுத்துவர். அதற்கு இலக்கியச் சான்று உள்ளது; வாடூன் என்று அழைத்தனர். இன்று அதன் பெயர் கொடிக்கறி; ஏனென்றால் துணி காயப்போடுவது போல இரண்டு கம்பு நட்டு; இரண்டையும் இணைக்கும் கொடியில் இறைச்சியைக் கோத்துக் காயவைப்பர்.
> சக


வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் இரண்டு வகைகள்:

(1) வாடூன் = கபாப்,   https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.

பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.
அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்
- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.
அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.
கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.
image.png
3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.
கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)

வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல்  மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட
அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர்
‘கபாப்’ செய்வதற்கு வருணனை கொடுத்துள்ளார்.

இந்த உணவு சிந்துவெளியிலும் பிரபலம். வட இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானி, ஈரான்
என எல்லா மாமிச உணவு விரும்பி அனைவரும் உண்ணும் நாடுகளில் உள்ள வகை.
இறைச்சி வகைகளை விரும்பி உண்ட சங்கத் தமிழர் உணவிலும் வாடூன் (= Kabab)
இருந்துள்ளது எனக் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை.

வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:
https://mahatmarice.com/recipes/garlic-lemon-chicken-kebabs-and-green-rice/
https://honestandtasty.com/stovetop-beef-kabob-and-persian-rice-chelow-kabob-deegi/
https://www.shanazrafiq.com/2017/08/kabab-koobeideh-with-saffron-rice-persian-seekh-kebab.html
image.png

புழுக்கல் - ஆவியில் அவித்துச் செய்த சோறு. “Steamed rice"
சங்கச் சொல்வளம்
6. உணவு வகைகள் - 3 பேரா. ப. பாண்டியராஜா
"6.6.4 புழுக்கல்

புழுங்கலாக வேகவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு தாவர உணவாகவோ இருக்கலாம்.

வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
வயல் ஆமை புழுக்கு உண்டும் - பட் 64
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 159/10
        -    போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று - பெரும் 195
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - அகம் 393/16
          -  ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்.”
------------------------------
-
-----------

வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் சில வகைகள் இருக்கலாம்.
(2) இரண்டாவது வகையான வாடூன் பற்றி வரும் பாடல்.

      'வாடூன் கொழும் குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு' - புறம் 328/9-11

இங்கே, புறப்பாட்டில், வாடூன் = கொடிக்கறி/உப்புக்கண்டம் (jerky) எனலாம்.

வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்).
இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றன.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 10, 2021, 11:38:32 PM7/10/21
to vallamai, housto...@googlegroups.com
முரவு வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல-முறிதல் பொருந்திய சூட்டினையுடைய ஒருமதிலின்கண் அகப்பட்ட அரசனைப்போல

Virus-free. www.avg.com

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Jul 11, 2021, 9:06:25 AM7/11/21
to vallamai, housto...@googlegroups.com
இந்தியாவின் தொல்லியல் அகழாய்வுகள், பண்டை இலக்கியங்கள் காட்டும் சமையல் அரியது.

(1) ‘தந்தூரி சிக்கன்’ என்கிறோமே. உலகிலேயே பழமையான தந்தூரி அடுப்புகள் சிந்துவெளி நாகரிகத்தில் கிடைக்கின்றன.

(2) முரவு வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல-முறிதல் பொருந்திய சூட்டினையுடைய ஒருமதிலின்கண் அகப்பட்ட அரசனைப்போல
இப்படி, வளைந்து வளைந்து செல்லும் வாயுடைய (’முரவுவாய்’) கொண்ட முரிஅடுப்பையே பாத்திரமாகக் கொண்டு,
எண்ணெயிலோ, நீரிலோ வேகவைக்காமல் “வாராது” அடுகின்ற வாடூன் (கபாப்) பற்றி பெரும்பாணாற்றுப்படை பேசுகிறது.
வாடூன் = கபாப்,   https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).

பாவாணர் சொல்வார். உரைகாரரில் பலர் வெஜிட்டேரியன்ஸ். அதனால் தான், அழகாகக் கபாப் செய்யும் முறையை
Corrugated edges ('முரவுவாய்’) கொண்ட அடுப்பையே பாத்திரமாக வைத்து விளக்கும் பெரும்பாண் 99-100ம்
அடிகளை தற்காலத் தமிழில் சொல்லவில்லை என நினைக்கிறேன். காட்டாக, ’தீம்புளிப் பாகர்’ என்னும் புகுந்தமனையில்
மணப்பெண் செய்யும் சடங்கு பிராமணர் வீட்டில் நிகழ்ந்த செயல் என்ப. பல்வேறு சாதிகளின் உணவு முறைகள்
சங்க கால இலக்கியத்திலே நிலைபெறல் ஆயின. உ-ம்: வேளாளர் மாடுகளை அடித்துத் தின்பதில்லை.

(2) இந்த வாடூன் “Kebab" உடன், புழுக்கல் பரிமாறுகின்றனர். புழுக்கல் என்னும்
ஆவியில் அவித்துச் செய்யும் சோறு எவ்விதம் தமிழர் செய்தனர்? பெரும்பாணாற்றுப்
படையிலே, பிரியமாக வந்த விருந்தாளிக்கு அளிக்கும் விருந்து எல்லாமே புதியவை.
பார்வை மானைக் கொண்டு அடித்த மானின் கறியை வைத்து ‘கபாப்’, அப்போது
சேகரித்திருந்த புல்லரிசியால் ஆன புழுக்கல் அருகே வைத்து உண்ண அளித்தனர்.

புழுக்கு (அ) புழுக்கல் என்பது பற்றி நிறையச் சங்க இலக்கியம் பேசுகிறது:
எ-டு:

வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
வயல் ஆமை புழுக்கு உண்டும் - பட் 64
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 159/10
        -    போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று - பெரும் 195
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - அகம் 393/16
          -  ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்.”

சரி, இந்தப் புழுக்கல் எவ்வாறு புல்லரிசியில் இருந்து செய்தனர் எயிற்றியர்?
தொல்லியல் வழியாகக் காண்போம். ஆ. மாணிக்கம் சிவகளை என்னும்
மிகப் பெரிய தொல்லியல் களத்தைக் கண்டிருக்கிறார். இன்று
தமிழகக் கலாச்சார, ஆர்க்கியாலஜி மந்திரி (முன்னர் எஞ்சினீர்) தங்கம்
தென்னரசு வந்து பார்வையிட்டுள்ளார். சிவகளையில் கிடைத்த
பொருட்களின் ஒளிப்படங்களை திரு. மாணிக்கம் எனக்கு அனுப்பியிருந்தார்.
திரு. ஆ. மாணிக்கத்தின் சாதனை: சிவகளையை உலகறியச் செய்தது.

குறைந்த உயரம் உள்ள சட்டி. அதன் மேல் கூம்பு வடிவத்தில் மூடி.
குறைந்த அளவு நீரே போதும். அரிசியும் (பெரும்பாணில் புல்லரிசி),
நீரும் வேகும்போது எழும் ஆவி கூம்பின் உச்சிக்கு எழும்.
அங்கே சூடின்மையால், ஆவி, நீராகி கீழே வடிந்துவிடும்.
இப்படி மெதுவாக ஆவியில் அவித்துச் செய்யும் சோறு சுவையானது.
இதனைப் புழுக்கல் (அ) புழுக்கு எனச் சங்க இலக்கியம் கூறும்.
Tajin cooking என ஆங்கிலத்தில் சொல்வோம்: https://en.wikipedia.org/wiki/Tajine
The tagine’s conical shape makes a uniquely moist, hot environment for the dish being cooked.
The base is wide and shallow, and the tall lid fits snugly inside. As the food cooks, steam rises into the cone,
condenses, and then trickles down the sides back into the dish.
Keeping moisture and flavor locked inside, the tajine continuously bastes your dish with drippings as it slow cooks to perfection!

பெரும்பாணாற்றுப்படையில் புல்லரிசியை எவ்வாறு புழுக்கல் சமைத்தனர்? சமைத்தபின் மான்கறி (venison kabab) வாடூனுடன்
பரிமாறினர். சங்க கால மக்கள் புழுக்கு/புழுக்கல் செய்த ‘தஜின்’ பானை, அதன் கூப்புமூடி தொல்லியல் அகழாய்வில்
எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த சில ’தஜின்’ பானைகள்.
8.jpg

Unearthing a great past

T.S. SUBRAMANIAN, Photos: A. Shaik Mohideen,  July 01, 2005

20050701000106505jpg.jpg
Frontine, T. S. Subramanian article, 2005 (Adichanallur, note the Tajin pot-lids).

புழுக்கல்-பானை-மூடி.jpg
Sivakalai - புழுக்கல் பானை மூடிகள் - Tajin pot-lids (Photo: A. Manickam, Sivakalai).
இந்தியாவின் மிக முக்கியமான சிற்பம், சுமார் கி.மு. 800 வாக்கில்
வேளிர் ஒருவனின் ஆதிச்சநல்லூர்  ஈமத் தாழியில் கிடைத்தது. விடங்கர்-கொல்லி(=கொற்றவை)
தம்பதியர் சிற்பம்.பாரதத்தின் 4700 ஆண்டுக்கால வானியல் (Pole Star - RohiNii nakshatram)
வரலாறும், இந்தியாவின் பெருந்தெய்வ வழிபாடும் காட்டுவது:

adichanallur3.jpg
நெல்லஞ்சோற்றுப் படையல் - முன்னோர் வழிபாடு. ஆதிச்சநல்லூர்.
The Plan View from the top has a small circle in the center, possibly indicating the Tajin pot-lids
we find often in excavations from Megalithic sites in Tamil country,

~NG

N. Ganesan

unread,
Jul 11, 2021, 9:25:36 AM7/11/21
to vallamai, housto...@googlegroups.com


வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் இரண்டு வகைகள்:

(1) வாடூன் = கபாப்,   https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.

பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.
அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்
- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.
அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.
கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.
image.png
3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.
கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)

வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல்  மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட
அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர்
‘கபாப்’ செய்வதற்கு வருணனை கொடுத்துள்ளார்.

பால் சோறு, கபாப் போல அல்லாமல், நெய் மிக வார்த்துச் செய்வது.
ஆண்டாள் சொல்கிறாள்:

பாடகமே , என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் ;

ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி  வாரக்

கூடியிருந்து குளிர்ந்து – ஏலோர் எம்பாவாய்.


N. Ganesan

unread,
Jul 11, 2021, 2:00:38 PM7/11/21
to vallamai, housto...@googlegroups.com
கபாப் (வாடூன்) செய்முறை விளக்கம் கொடுத்துள்ளது பெரும்பாணாற்றுப்படை.
கபாப் (வாடூன்) தீயினால் வாட்டப்பெறுவது. கபாபைப் பெரும்பாண் போலவே,
பொருநர் ஆற்றுப்படையில் சமைத்து உண்டமை வருகிறது. பலருக்கும் தெரியாத
பாடல் அகநானூற்றுப் பாடல்.
அகநானூறு:

169. பாலை

[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட
1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப்
புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
புலி யானையைக் கொன்று, தனக்கு விருப்பான பாகங்களைச் சிதைத்துத் தொலைத்து உண்டது. மிச்சமாகக் கிடக்கும் தடித் துண்டங்களைக்
கோல்களில் கோத்து ஆறலை கள்வர் எடுத்துச் சென்றனர். (பின்னர், காழில் கோத்த இறைச்சியைத் தீயில் வாட்டி வாடூன் ஆக்கினர் என்றும்
கொள்ளலாம். குழம்பு வைத்தனரா? இல்லை, வாடூன் (கபாப்) செய்தனரா? என இப் பாலைச் செய்யுளில் சொல்லப்படவில்லை. ஆனால்,
காழில் கோத்து எடுப்பதால், வாடூன் என்று கருத இடமுண்டு.)

பொருநர் ஆற்றுப்படையில் ‘கபாப்’ எனும் வாடூன்:

பாட்டு:

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,  
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை        105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,   (பொரு. )

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று பலகாலலைத்து,;

அதாவது, புழுக்கலுடன் சேர்த்து வெந்த செம்மறிக்கறி ‘வேவை’ எனப்படுகிறது. குழம்பு எனலாம். “பருகு” என்பதனால் இன்றைய Soup என்பதற்கு மிகப் பொருந்தும் என்கிறார் புலவர் செங்கை பொதுவனார்.

105 - 6. [ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை, யூழி னூழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சுட்ட கொழு குறை வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,;

இது, பெரும்பாணில் வரும் வாடூன். தீயில் வாட்டினதால் பெயர். இன்றைய ‘கபாப்’. முரியடுப்பில் (நீர் (அ) நெய்) வாராது அடுகிற உணவு.முரியடுப்பு = skewer-oven. https://en.wikipedia.org/wiki/Skewer   (1) கோட்டடுப்பு, (2) கொடியடுப்பு (3) அனலடுப்பு (baking oven) (4) கையடுப்பு (portable oven) ... போல அடுப்பு வகைகளுள் ஒன்று: (5) முரியடுப்பு (skewer ocen). இது வாடூன் (கபாப்) செய்யப் பயன்படுவது. காழ் = மர வயிரம் (அ) இருப்புக் கம்பி. காழில் கோத்த ஊனை வாட்டும் அடுப்பு முரியடுப்பு. பொருநர் ஆற்றுப்படையிலே, அரண்மனை மடைப்பள்ளியிலே நல்ல முரியடுப்பு இருந்திருக்கும். உ-ம்: குழி ஒன்றில் தீ விறகுகள் எரிய, முரவுவாய் கொண்ட அடுப்பில் காழில் கோத்த இறைச்சி வாட்டலாம்.

107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே,;

107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பலவடிவினையுடைய 1பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,;

உபாயங்களாற் பண்ணுதலின், விரகென்றார்; ஆகுபெயர்.;


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Jul 11, 2021, 8:32:17 PM7/11/21
to vallamai, housto...@googlegroups.com
தமிழிலே பல வகையான அடுப்புகள் உண்டு. உ-ம்: (1) கோட்டடுப்பு, (2) கொடியடுப்பு (3) அனலடுப்பு (baking oven) (4) கையடுப்பு (portable oven) ... போல அடுப்பு வகைகளுள் ஒன்று: (5) முரியடுப்பு (skewer ocen).அவற்றில் வாடூன் (Kabab) செய்யும் அடுப்பு முரியடுப்பு. முரி = skewer https://en.wikipedia.org/wiki/Skewer; முரியடுப்பு = skewer oven.

முரியடுப்பில் வாடூன் அடுதலை (சமைத்தல்) வர்ணிப்பதுபோல, வேறெந்த அடுப்பையும் சங்கப் புலவர்கள் வர்ணிப்பதில்லை. கபாப் உணவு காட்டுவாசிகளில் இருந்து, மன்னர் வாழும் அரண்மனைகளின் அட்டில் வரை பிரபலமான உணவாக விருந்தோருக்கு அளித்து விருந்தோம்பி உபசரிக்கும் உணவாக இருந்ததே காரணம்.

அடுதல் = சுடுதல் என்ற பொருள் உண்டு.
------------------------------------

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
இங்கே, அடுங்காலை என்பது கூற்றுவன் சுடுகாட்டில் சுடுங்காலத்தில் எனப் பொருள்.
”சொல்லமைதிக்கேற்ப,  கைவிடுவார் கேண்மை விட்ட ஞான்று சுடுவதைக் காட்டிலும் சாஞான்று எண்ணினும் மிகச் சுடும் என்ற உரை சிறந்தது” என்று திருக்குறள் உரைகள் அனைத்தும் ஆராய்ந்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் கூறுகிறார். மகாவித்துவான் அவர்களே சங்க நூல்களுக்கும் சொல்லடைவு முதலில் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'தனக்கு ஒரு விதனம் வந்த இடத்திலே கைவிடுவான் நட்பு, தன் மரணாந்தமட்டும் நெஞ்சினைச் சுடும்' பரிதி; காலிங்கரும் பரிமேலழகரும் 'கூற்றுவன் வந்து அடுங்காலத்து நினைப்பினும் உள்ளம் சுடும்' என்றனர். அடுங்காலம் = சுடுங்காலம் (சுடுகாட்டில்). சுடுகாடு = அடுகாடு.
சாகுந்தறுவாயில் பொதுவாக ஒருவர் தனக்குப் பிறரால் நேர்ந்த கொடுமைகளையெல்லாம் மன்னித்து மறந்து விட்டிருப்பார்கள். ஆனால் கேடுற்றவேளைக் கைவிடுவார் தொடர்பை சாவில் நினைத்தாலும் நெஞ்சு பொறுக்கமுடியாமல் வேகும் என்கிறது இக்குறள்.
திருக்குறள், இனிய எளிய உரை. மயிலை சிவமுத்து (பக். 224),  அடுதல்-சுடுதல்;எமனால் கொல்லப்படுதல்.

வ சுப மாணிக்கம்: துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில் நினைப்பினும் நெஞ்சம் எரியும்.

    எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை
    வீயாது பின் சென்று அடும்.  (வினைப்பகை எப்பொழுதும் சுடும்/கொல்லும்.)

இன்பம் கடல் மற்றுக் காமம் ; அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

காமம் புணரும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
காமத் தீ (விரகம்) சுட்டு வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;
இங்கே காமத்தீக்கு வடவாக்கினி உவமை. http://sviswesvaran.blogspot.com/2014/06/blog-post.html
அடுங்கால் = சுடுங்கால்; ’அடுங்காலை’ = சுடலையில் சுடுதல் எனப் பொருள்வரும் குறளுடன் ஒப்பிடுக.

-------------------

அடுதல் என்றால், சுடுதல், சமைத்தல் என்ற பொருளும் உண்டு. ஆதலின் இங்கு அடலுற என்பதனை, அகம்வளர் அருட்ஜோதியால் அசுத்த மல உடம்பை வேதித்துச் சுத்த அருள் ஒளித் தேகமாய்ப் பக்குவப்படுத்தல். http://vallalarspace.com/Saravanaananda/c/V000002274B

சிறுபாணாற்றுப்படை எயிற்றியர் தரும் கபாப் பற்றிப் பேசுகிறது: ” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” சிறு. 175-77. எயிற்றியர் இந்த வாடூன் (கபாப்) முரியடுப்பில் அடுமுறையை (recipe) பெரும்பாண் வரிகள் 99-100-ல் பார்த்தோம்.

O.E. bacan "to bake," from P.Gmc. *bakanan (cf. O.N. baka, M.Du. backen, O.H.G. bahhan, Ger. backen), from P.Gmc. *bakan "to bake," from PIE *bheg- "to warm, roast, bake" (cf. Gk. phogein "to roast"), from root *bhe- "to warm" (see bath). Related: Baked (M.E. had baken); baking. The noun meaning "social gathering at which baked food is served" is attested by 1846, Amer.Eng. Baked beans attested by 1803.
இதனைத்தான், “அட்ட வாடூன்” (kabab) என முரியடுப்பில் சுடுதலைப் பெரும்பாண் பதிவுசெய்கிறது. அடுமனை = Bakery பரவலாகப் பயன்படும் சொல்.  அடுங்காலை =  (உடலைச்) சுடுங்காலம், இரண்டு குறள்களில் வள்ளுவர் பயன்படுத்தலைக் கொடுத்துள்ளேன்; அடுகாடு = சுடுகாடு.

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு. 11-ம் திருமுறை (அடுகாடு = சுடுகாடு).

ஆச்சார்யர்களின் திவ்யப்ரபந்த பாசுர உரை:
https://thiruvonum.wordpress.com/2015/03/16/பெரிய-திருமொழி-திவ்யார்-16/
”பிணங்கள் இடு காடு -என்பதை விட -பிணங்கள் அடு காடு -பாடம் சிறக்கும் –
அடுதல் சுடுதல் -ஸ்மசான பூமி -அங்கெ நடமாடும் ருத்ரன் பிஞ்ஜகன்
அவனோடு இணங்குதல் ஆவது திரு மேனியில் இடம் கொடுத்து அருளி
திருச் சக்கரத்து எம்பெருமானார் -நித்ய சூரிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுவது போலே” (அடுகாடு = சுடுகாடு).

அடைய அரியன கடைஇரு புடையினும்
  அளவு கெடநிமிர் விழிவிடம் அடுதலின்
            அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் - தக்கயாகப் பரணி
விழிவிஷம் அடுதல்  = சுடுதல்

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:
|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானவன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

இந்த நுட்பத்தை, எயிற்றியர் கபாப் (வாடூன்) அடுதீக் கொண்டு முரியடுப்பில் அட்டனர் என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
அடுதல் - சமைத்தல்; சுடுதல் - காளவாயில் சுடுதல். காளவாயில் சுட்ட சுண்ணாம்பு. முற்றிலும் ஈரப்பதம் இழந்துவிடும்.
புதிதாகக் கொணர்ந்த மான்கறியைப் பாணனுக்கு உபசரிக்க, அடுதீயால் முரியடுப்பில் சமைத்துத் தருகிறாள் எயிற்றி.

http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Era_Elankumaranar_Tamilvalam_18.pdf
”  ‘அட்டாலும் பால் சுவையில் குன்றாது; சுட்டாலும் சங்கு ஒளியில் குன்றாது’ என்பவை ஔவையார் உரை. அடுதலும், சுடுதலும் ஒருவினை இருசொற்களே.” சுடச்சுடரும் பொன் போல - குறள். அட்ட காசு = சுடர்ப்பொன். அட்ட காசம் = ப்ரகாசம். (தமிழ்வளம் - சொல் 18. இரா. இளங்குமரன்)

எனவேதான்,

 முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்ணெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).

இப்படிச் செய்த கபாபை, Tajin pot-ல் = புழுக்கல் பானையில் சமைத்த புல்லரிசிச் சோற்றுடன்
வைத்துத் தருகின்றனர் எயிற்றியர். புழுக்கல் பானை (Tajin pot, and its conical lids
in Sivakalai, Adichanallur, Kodumanal, ... see my writing in this thread).

கபாப் (வாடூன்), பக்கத்தில் புழுக்கல்: எப்படி இருக்கும்? Note: வாடூன், புழுக்கல் இரண்டும்
தனித்தனியாய்ச் சமைத்தனர். வாடூன் முரியடுப்பில், புழுக்கல் அதற்கான பானையில்.
NG

kanmani tamil

unread,
Jul 11, 2021, 11:43:51 PM7/11/21
to vallamai
சுருக்கமாக விடை தரவும்:

(1)கொடியடுப்பு, அனலடுப்பு, கையடுப்பு ஆகியவற்றுக்கு தொகையிலக்கியச் சான்றுகள் உள்ளனவா?
எனக்குத்தெரியாததால் கேட்கிறேன். 

(2)முரியடுப்பு = சூட்டடுப்பு என்பதற்கும் தொகையிலக்கியச் சான்றுகள் தாருங்கள் (குறிப்பிட்ட பெரும்பாணாற்றுப்படை அடிகள் தவிர்ந்த வேறு மேற்கோளில் முரியடுப்பு என்ற சொற்றொடர் இடம்பெற்றுள்ளதாக?). 

அடுதல் = சமைத்தல்/சுடுதல் 
இதற்கு இந்த அளவு நீங்கள் பாடுபடத் தேவையில்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான். 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 12, 2021, 7:46:48 PM7/12/21
to vallamai


On Sat, Jul 10, 2021 at 1:19 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> /கறித்துவையல் (சுக்கா?)/ முனைவர் கணேசனின் முதல் பதிவிலிருந்து....
>
> 'கறித்துவையல்' இதுவரை கேள்விப்பட்டதில்லை.
> ஒருவேளை கோளா உருண்டையைச் சுட்டுகிறதோ?
> அதற்குத்தான் கறியை 'கைம்மா' பண்ணி; கொஞ்சம் கடலைமாவு சேர்த்து உருட்டுவார்கள்.
>
> 'சுக்கா' என்பது குழம்பாக்காமல் எண்ணெய் மிகுதியாகச் சேர்த்து தாளிதத்துடன் வதக்குவது. சங்க இலக்கியத்தில் இதுவும் 'சூட்டு' வகைகளில் ஒன்றாகும்.


இன்னொரு மடலில் சொல்லியிருந்தீர்கள்:
”படத்தில் உள்ள அடுப்பின் பெயர் சூட்டடுப்பு. அது சூட்டு செய்யப் பயன்பட்டது. நெருப்பில் நேரடியாகச் சுடுவதற்குப் பயன்பட்டதாகையால் சூட்டடுப்பு. கபாப், தந்தூர் ஆகியவை செய்யப் பயன்பட்டது. அதற்கு பதப்படுத்திய வாடூன் தேவை இல்லை. பச்சை ஊனையே கபாப் செய்யலாம்; தந்தூரும் செய்யலாம். நெருப்பில் வாட்டுவது எல்லாம் சூட்டு. ”

சங்க இலக்கியத்தில், “சூடு” என்பதைச் “சூட்டு” என்கிறீர்களா?

  கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
   குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/1
  சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
  கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
   நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14

சூடு+இறைச்சி = சூட்டிறைச்சி, மாடு+வால் = மாட்டுவால், ஆடு+கால் = ஆட்டுக்கால், வெருகு+கண் = வெருக்குக்கண், ...

நா. கணேசன்
PS: சூடு செய்யப்படும் அடுப்பு = சூடு+அடுப்பு ==> சூட்டடுப்பு. இது பிற்காலப் பெயர்.
சங்க இலக்கியத்தில் சூட்டடுப்பின் பெயர், முரியடுப்பு. முரி is a technical word for skewer, wooden stick:
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.

image.png
 
>
> சக
>
> On Sat, 10 Jul 2021, 11:38 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
>>
>> வேட்டுவப் பெண்கள் யானைக் கொடிக்கறி விற்றதாகச் சொல்லும் சங்க இலக்கியப் பாடல் எது?
>>
>> அப்படி ஒரு பாடல் இதுவரை எனக்குத் தெரியாது. (யானைக்கறியைத் தின்றார்களா?!?!?!)
>>
>> ஆட்டுக்கறியை உப்புக்கண்டம் ஆக்குவதை நேரில் பார்த்தும் சுவைத்தும் இருக்கிறேன்.
>>
>> உடும்புக்கறியை எவ்வாறு பதப்படுத்தினர் என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் உள்ளது.
>>
>> இலக்கியத்தில் உப்புக்கண்டத்தை எண்ணெயில் வறுத்து எடுப்பது பற்றிப் பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு எனப் பல பாடல் சான்றுகள் உள்ளன. 'பரல் வறைக் கருனை' என்று அழைக்கப்படுகிறது.
>>
>> இதுபற்றிய என் கட்டுரை வல்லுநர்குழுவின் வசம் உள்ளது. தேர்வான பிறகு விரித்துப் பேசுகிறேன்.
>>
>> சக
>>
>> On Sat, 10 Jul 2021, 11:01 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>>
>>> இணையம் தமிழ் அகராதிகளில் இல்லாத, ஆனால் தமிழிலே பலகாலமாக வழக்கில் உள்ள - பரவலாகவோ, வட்டாரமொழியாகவோ - சொற்களைப் பதிவுசெய்ய மிகவும் உதவுகிறது. அவ்வகையில், நான் தெரிந்துகொண்ட ஒரு சொல்: கொடிக்கறி.
>>>
>>> On Fri, Jul 9, 2021 at 12:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>>> >
>>> > குழந்தைகளுக்கு இழை கட்டும் சடங்கு கூடக் கொடி என்றே பெயர் பெறும்; இடுப்புக்கொடி.
>>> > மிகுதியான விலங்கிறைச்சியை வேட்டைச் சமுதாயத்தினர் பதப்படுத்துவர். அதற்கு இலக்கியச் சான்று உள்ளது; வாடூன் என்று அழைத்தனர். இன்று அதன் பெயர் கொடிக்கறி; ஏனென்றால் துணி காயப்போடுவது போல இரண்டு கம்பு நட்டு; இரண்டையும் இணைக்கும் கொடியில் இறைச்சியைக் கோத்துக் காயவைப்பர்.
>>> > சக Ld0BX3TPqHcsU2Bis%3DV0vMwg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 12, 2021, 10:22:56 PM7/12/21
to vallamai

image.png

NG>3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
> (குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”. இதுவே பாத்திரமாகப் பயன்படுவதால் குழிசி என்றார்.
>கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”).
முரியடுப்பு : 

SK wrote:
> படத்தில் உள்ள அடுப்பின் பெயர் சூட்டடுப்பு. அது சூட்டு செய்யப் பயன்பட்டது. நெருப்பில் நேரடியாகச் சுடுவதற்குப் பயன்பட்டதாகையால் சூட்டடுப்பு. கபாப், தந்தூர் ஆகியவை செய்யப் பயன்பட்டது.
>அதற்கு பதப்படுத்திய வாடூன் தேவை இல்லை. பச்சை ஊனையே கபாப் செய்யலாம்; தந்தூரும் செய்யலாம். நெருப்பில் வாட்டுவது எல்லாம் சூட்டு. 

    சூடு என்பதைச் சூட்டு என்கிறீர்கள். மேலும், சூட்டடுப்பு என்னும் அடுப்பு, நான் கொடுத்து விளக்கியுள்ள முரியடுப்பு அல்ல. 

    சூட்டடுப்பு என்றால் என்ன என இலக்கியங்களில் இருந்து முன்னர் நான் எழுதிய மடல்களைப் பாருங்கள்.
    நன்றி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 12, 2021, 10:33:42 PM7/12/21
to vallamai
On Mon, Jul 12, 2021 at 9:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

image.png

NG>3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
> (குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”. இதுவே பாத்திரமாகப் பயன்படுவதால் குழிசி என்றார்.
>கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”).
முரியடுப்பு :  https://groups.google.com/g/vallamai/c/cACN4vhFXaY

SK wrote:
> படத்தில் உள்ள அடுப்பின் பெயர் சூட்டடுப்பு. அது சூட்டு செய்யப் பயன்பட்டது. நெருப்பில் நேரடியாகச் சுடுவதற்குப் பயன்பட்டதாகையால் சூட்டடுப்பு. கபாப், தந்தூர் ஆகியவை செய்யப் பயன்பட்டது.
>அதற்கு பதப்படுத்திய வாடூன் தேவை இல்லை. பச்சை ஊனையே கபாப் செய்யலாம்; தந்தூரும் செய்யலாம். நெருப்பில் வாட்டுவது எல்லாம் சூட்டு. 

    சூடு என்பதைச் சூட்டு என்கிறீர்கள். மேலும், சூட்டடுப்பு என்னும் அடுப்பு, நான் கொடுத்து விளக்கியுள்ள முரியடுப்பு அல்ல. 

    சூட்டடுப்பு என்றால் என்ன என இலக்கியங்களில் இருந்து முன்னர் நான் எழுதிய மடல்களைப் பாருங்கள்.
    நன்றி.


image.png
இது சூட்டடுப்பு, பானை வைக்க மூன்று சூடுகள்.

kanmani tamil

unread,
Jul 12, 2021, 11:43:19 PM7/12/21
to vallamai
கோட்டடுப்பு, சூட்டடுப்பு இரண்டையும் படத்தோடு ஒப்பிட்டுக் காட்டுங்களேன். நீங்கள் கொடுத்துள்ள படத்தால் ரொம்பவே குழம்பி இருக்கிறேன். please, don't skip over... I want to understand the difference clearly.

Anyway I have my next topic for deep study and research article "பச்சூனும் வாடூனும்". Usually that's the result of our hot discussions. 
Then only you will be able to understand 'வாடூன்'.
Sk

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 13, 2021, 12:16:38 AM7/13/21
to வல்லமை
On Monday, July 12, 2021 at 10:43:19 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
கோட்டடுப்பு, சூட்டடுப்பு இரண்டையும் படத்தோடு ஒப்பிட்டுக் காட்டுங்களேன். நீங்கள் கொடுத்துள்ள படத்தால் ரொம்பவே குழம்பி இருக்கிறேன். please, don't skip over... I want to understand the difference clearly.

Anyway I have my next topic for deep study and research article "பச்சூனும் வாடூனும்". Usually that's the result of our hot discussions. 
Then only you will be able to understand 'வாடூன்'.
Sk

I understand quite well what is பச்சூன், வாடூன் (two kinds) in Sangam poetry.
muriyaduppu = skewer oven is used to cook kabab, a kind of வாடூன் .
முரியடுப்பு வேறு, சூட்டடுப்பு வேறு. படங்கள் கொடுத்துள்ளேன்.

kanmani tamil

unread,
Jul 13, 2021, 2:08:21 AM7/13/21
to vallamai
அப்போ கோட்டடுப்பும் சூட்டடுப்பும் ஒன்றே என்கிறீர்களா?
சக 

N. Ganesan

unread,
Jul 13, 2021, 7:14:41 AM7/13/21
to vallamai
On Tue, Jul 13, 2021 at 1:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அப்போ கோட்டடுப்பும் சூட்டடுப்பும் ஒன்றே என்கிறீர்களா?
சக 

yes. more later.

 
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/O_s4Jn_lxOI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct%2B82H-QiWehYjrTNXshHyu_OzXT5ZEDoao9O0WiSUTSg%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2021, 9:56:44 AM7/13/21
to vallamai


image.png
இது சூட்டடுப்பு, பானை வைக்க மூன்று சூடுகள்.

 

குமுட்டி அடுப்பு என்றும் சொல்லுவார்கள். 

N. Ganesan

unread,
Jul 13, 2021, 10:07:31 AM7/13/21
to vallamai
இல்லை. நான் கொடுத்திருப்பது சூட்டடுப்பு. குயவரும், பொதுமக்களும் பயன்படுத்தும் சொல். இலக்கியங்களில் வரும் சொல் அது.

குமுட்டி அடுப்பு வேறு. அது கூண்டடுப்பு.

நா. கணேசன்

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jul 15, 2021, 6:56:15 AM7/15/21
to vallamai

அருமையான மடல். நன்றி.


> நான் எனது கட்டுரைக்காகத் துழாவியதில் நெருப்பில் சுட்டு உண்ண ஒரு அடுப்பு 'தந்தூர் அடுப்பு' என்று அழைக்கப்பட்டதால் தமிழில் சூட்டடுப்பு என்று சொன்னேன்.

> நெருப்பில் சுடுவது 'சூடு' என்றும் 'சூட்டு' என்றும் அழைக்கப்பட்டது (தமிழ் அகராதி Tamil Dictionary சூட்டு | அகராதி).


(1) உலகத்திலேயே தந்தூர் கண்டுபிடித்தது சிந்துவெளி மக்கள். எப்படி அது ஆரியர் கண்டுபிடிப்பு ஆகும்.??குதிரையைத் தேரில் (சாரட்டு < chariot) பூட்டி ஓட்டுவது ஆரியர் கண்டுபிடிப்பு. வேதம் சாட்சி.


(2) சூட்டடுப்பு என மக்களும், இலக்கியங்களும் சொல்வது வேறு. படங்கள் தந்துள்ளேன். இங்கே, சூடு = கொண்டை. சேவற் சூடு என வருதற்போல.


(3) சூடு என்பது தான் சொல். சூட்டு என்பது மிகப் பிற்கால வழக்கு. தற்காலம் ஆக இருக்கலாம். மாட்டுவால் என்கிறதில் இருந்து மாட்டு என ஒரு சொல் மாடு என்னும் கால்நடைக்கு ஆகாது.

பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி’ - சூடு + ஒடு = சூட்டொடு.

இன்னும் எல்லா உதாரணங்களும் பார்க்கவும். பலவற்றைக் கொடுத்துள்ளேன்.

சங்க இலக்கியச் சமையல் பற்றி எழுதுகையில் “சூடு” தான். எந்த அகராதியும்

சூட்டு என்ற சொல்லைச் சங்க நூலில் காட்டுவதில்லை.

கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
   குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/1
  சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
  கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
   நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14


அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு 
நிரயத் தன்னவென் வறன்களைந் தன்றே

நன்றும் அரவு வெகுண்டன்ன
தேறலொடு - பாம்பு சீறினாற்போற் பெரிதும் களிப்புற்ற கட்டெளிவுடனே;
சூடு தருபு - சூட்டிறைச்சி தந்து; நிரயத்தன்ன என் வறன் களைந்து -
நிரயம்போலத் துன்பம் செய்த என் வறுமையைப் போக்கி;

சூடு+இறைச்சி = சூட்டிறைச்சி, மாடு+வால் = மாட்டுவால், ஆடு+கால் = ஆட்டுக்கால், வெருகு+கண் = வெருக்குக்கண், ...

in a rush, so read hurriedly.

NG

N. Ganesan

unread,
Jul 15, 2021, 7:07:21 AM7/15/21
to vallamai
SK > தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.
> ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.

வஞ்சி என்பது பெரும்பாலும் கொடிதான். எங்கள் உறவினர்களில் மூன்று தலைமுறைகள் முன்னரும் வஞ்சிக்கொடி எனப் பாட்டிகளுக்குப் பெயர்.
கஞ்சம்பட்டி (< கஞ்சணம்பட்டி என்பார் புலவர் செ. ராசு அண்ணன்) ஆத்தா வீட்டிலிருந்து சந்திராபுரத்திற்குக் கொடுத்த வஞ்சிக்கொடி அத்தை இன்றும் இருக்கிறார்கள்.
பொள்ளாச்சியில் உள்ள விஸ்வதீப்தி என்னும் பள்ளி தொடங்க முக்கிய சாலையில் 12 ஏக்கர் அளித்தவர்கள்.

-------------------

வஞ்சி கொடி மட்டுமல்ல. வஞ்சி மரமும் உள்ளது. கோட்டை அருகே வஞ்சி மரங்கள் நின்றதாக, சிலம்பிலும் பார்த்த நினைவு. அது எப்படி என்றாலும்,
வஞ்சி மர விறகைத்தான் அயிலை மீனைச் சுடப் பயன்படுத்தியுள்ளாள் என்பது தெளிவு,

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 15, 2021, 6:08:43 PM7/15/21
to vallamai, housto...@googlegroups.com
On Thu, Jul 15, 2021 at 6:16 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK > தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை.
> ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.


அகநானூறு

216. மருதம்

[தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.]


நாண்கொள்நுண் கோலின் மீன்கொள் பாண்மகள்
2தான்புன லடைகரைப் படுத்த வராஅல்
நாரரி நறவுண் டிருந்த தந்தைக்கு
வஞ்சி விறகிற் சுட்டுவா யுறுக்குந்
5. தண்டுறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப என்ப அவ்வலர்ப்

(சொ - ள்.) 1-6. நாண் கொள் நுண்கோலின் மீன்கொள் பாண் மகள் - கயிற்றினைக்கொண்ட நுண்ணிய தூண்டிற் கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள், புனல் அடைகரைபடுத்த வராஅல்-புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால்மீன், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு - பன்னாடையால் அரிக்கப்பெற்ற தன்னையுண்டு களித்திருந்த தன் தந்தைக்கு, வஞ்சி விறகில் சுட்டு-வஞ்சிமரத்தின் விறகினாற் சுட்டு, வாய் உறுக்கும் - வாயில் உண்பிக்கும், தண் துறை ஊரன் பெண்டிர் - குளிர்ந்த துறையினையுடைய ஊரனது பெண்டிர்கள், எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப- எம்மைத் தம் மனம் விரும்பியபடி யெல்லாம் இகழ்ந்துரைப்பர் என்பார்கள்; http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=477&y=478&bk=216&z=l1270636.htm

ஐயூர் முடவன் பாடல். ஐயூர் பற்றிப் பேசியதாக நினைவு.

இந்த வஞ்சி விறகு என்பது Indian willow tree வஞ்சி மரத்தின் விறகு எனலாம்.


 2017 மடலில் வஞ்சி என்னென்ன தாவரத்திற்குப் பெயர்:
வஞ்சி - தாவரங்கள்
--------------

(1) வஞ்சி மரம் : Salix tetrasperma. (Gamble (1928), Lushington (1915) )
Also, known as Indian Willow tree.
பூக்கள் முதிரும்போது வாகை மலர்கள் போல வெண்மையும்
துய் பஞ்சு ஆகவும் இருக்கும். இதனை வீரர்கள் சூடினர். வஞ்சித்துறை.
வஞ்சி மாநகரை ‘வாடாவஞ்சி’ என்கிறார் இளங்கோ அடிகள்.

(2)  ஆத்து வஞ்சி, நீர்வஞ்சி Ochreinauclea Missionis

#GSCC Fieldwork Fund. JNTBGRI collecting seed of Ochreinauclea missionis. Endemic to the Western Ghats and Vulnerable on the IUCN Red List

(3) வஞ்சி - புதர் (பிரம்பு) = வானீரம்
புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும் - பிங்கலந்தை.

(4) வஞ்சிக் கொடி, வஞ்சுளம். 
வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’

வஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. 

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வஞ்சிக்கொடி:
கொழுநனைத் தழுவும் கொடி போல,

வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora_cordifolia தான்,
பிரப்பங்கொடி (Calamus_rotang, ரத்தன்) என்னும் முள்புதர் அல்ல என்று காட்டுவது
வஞ்சி மாநகர் ஆன்நிலை அப்பர் கோவிலின் தலத் தாவரம் ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா:
வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?

MTL:
"நாகினி nākiṉi, n. < nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (மலை.)"
நாகம் போல வளைந்து, வளைந்து செல்வது வெற்றிலையும், அமிர்தவல்லி (வஞ்சிக்கொடி = Tinospora_cordifolia) ஆகும்.
Madras Tamil Lexicon giving nAgini as Common rattan of South India is wrong.
வெற்றிலையும், அமிர்தவல்லிக் கொடியிலையும் ஒப்புமை காண்க.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Jul 26, 2021, 10:18:44 PM7/26/21
to vallamai, housto...@googlegroups.com
சூடு - சங்க காலத் தமிழரின் ஊனுணவு வகை.
-----------------------------------------

சூடு³ cūṭu , n. perh. சுடு-. [M. cūṭu.] 1. That which is heated, burnt, roasted; சுடப்பட்டது. கடலிறவின் சூடுதின்றும் (பட்டினப். 63). (MTL).

உலகிலே மாந்தர்கள் முதன்முதலாகத் தொடங்கிய தொழில்களுள் வேட்டையாடல் மிகப் பழமையானது. குகைகளில் கிடைக்கும் ஓவியங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தீட்டப்பெற்றவை. தொல்மனிதன் வேட்டுவனாக வாழ்ந்தமை அவ் ஓவியங்களில் காண்கிறோம். வேட்டையாடிய விலங்கி இறைச்சியை, மூங்கில் அல்லது இரும்புக் காழில் கோத்துத் தீயில் வாட்டி உண்ணத் தொடங்கியிருக்கிறான். இவ்வகை உணவுக்குச் “சூடு” என்று பெயர்கொடுத்து 2000 ஆண்டு முன்னர் வழங்கியுள்ளனர். கல்லடுப்பு போன்ற அடுப்புகளைக் குறிப்பிடும் சங்க இலக்கியம், வேட்டுவத் தொழிலால் உருவான சூட்டை வாட்டும் ‘ரோஸ்ட்டிங்’ அடுப்பை முரியடுப்பு என்று கலைச்சொல்லால் விளக்கியிருக்கிறது. அடுப்பு வகைகளை வர்ணிக்கும் சங்க இலக்கிய நூல்களை ஆராய்ந்தால், முரியடுப்புக்குத் தான் விளக்கமாகச் செய்திகள் இருக்கின்றன. பழைய வாழ்க்கையில், சூடு என்னும் உணவு வகைக்கு இருந்த முக்கியத்துவம் இதனால் தெரியலாகிறது.

முரி is a technical word for skewer, wooden stick:
https://en.wikipedia.org/wiki/Skewer
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
https://en.wikipedia.org/wiki/Skewer#/media/File:Wooden_skewers.jpg

வாடூன் என இருவகைச் சூடுகளைப் பற்றிப்பாடல்கள் இருக்கின்றன
வாடூன் (1) Kebab (2) Jerky:
https://groups.google.com/g/vallamai/c/O_s4Jn_lxOI/m/DyMlez5HBgAJ

கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.
கபிலபரணர், உற்றார் உறவினர், ... போல வாடூன் புழுக்கல் (பெரும்பாண்.) என்பது உம்மைத்தொகை.
தொல்லியல் சான்றுகள் பெரும்பாணில் உள்ள பழைய அடுப்பை விளக்கத் துணை செய்கிறது.
காட்டுவாசிகளின் முரியடுப்பு சூடுகளைச் சமைக்க அடிப்படையான (primitive) அடுப்புவகை
பெரும்ப்பாணாற்றுப்படை விளக்குகிறது. காட்டிலே வாழும் மக்கள் பாணனுக்கு விருந்து படைக்கின்றனர்.

காட்டுவாசிகளின் இந்த முரியடுப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியை நாம் சிந்துவெளி நாகரிகத்தில் காண்கிறோம்.
நகர வாழ்க்கை அங்கே. நகர வாழ்க்கை பெரிதாக உலகத்தில் தொடங்கிய பிரதேசங்களில் சிந்து நாகரீகமும் ஒன்று.
அங்கே தான், ‘தந்தூரி கோழி’ என்னும் சூட்டுவகை சுடுசமையல் கண்டுபிடிக்கப்பட்டது.
https://thefoodfunda.com/history-of-tandoor-tandoori-cooking/
https://myvoice.opindia.com/2019/02/busting-the-tandoori-chicken-myth/
https://twunroll.com/article/1285546208866361344
இன்று உலக முழுதும் பிரபலமானது: https://youtu.be/9Gcux1MFr50

சூடு:
-------------

கடல் இறவின் சூடு தின்றும் - பட் 63
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு - புறம் 34/11
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ - புறம் 212/4
விடை வீழ்த்து சூடு கிழிப்ப - புறம் 366/17
அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு - புறம் 376/14

சூடு கிழித்து வாடூன் மிசையவும் - புறம் 386/4
கொழும் தடிய சூடு என்கோ - புறம் 396/15
நெய் உற பொரித்த குய் உடை நெடும் சூடு/மணி கலன் நிறைந்த மணம் நாறு தேறல் - புறம் 397/13,14
குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/11

வேற்றுமை உருபு போன்றவற்றுடன் “சூடு” இணையும் அடிகள்
---------------------------------------------------
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் - சிறு 177
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் - நற் 83/6
குறு முயலின் குழை சூட்டொடு/நெடு வாளை பல் உவியல் - புறம் 395/3,4
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி - புறம் 395/37 (vegetarian)

மாடு + வால் = மாட்டுவால், ஆடு + தாடி = ஆட்டுத்தாடி, வீடு + எலி = வீட்டெலி, காடு + பலா = காட்டுப்பலா, சூடு + இன் = சூட்டின், ...
குற்றியலுகரத்தின் உ கெட்டு, டகரம் இரட்டித்துச் சூடு என்னும் சொல் புணர்தலைச் சங்க நூல்களில் மேலே உள்ள
எடுத்துக்காட்டுகளில் காண்கிறோம். மாட்டு, ஆட்டு, வீட்டு, காட்டு, சூட்டு ... இவையெல்லாம் தனிச்சொற்கள் அல்ல.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 26, 2021, 11:03:32 PM7/26/21
to vallamai
/அடுப்பு வகைகளை வர்ணிக்கும் சங்க இலக்கிய நூல்களை ஆராய்ந்தால், முரியடுப்புக்குத் தான் விளக்கமாகச் செய்திகள் இருக்கின்றன./ முனைவர் கணேசன் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் எழுதியது.

"முரவுவாய்க் குழிசி முரியடுப்பு ஏற்றி" என்ற பெரும்பாணாற்றுப்படைத் தொடர் தவிர வேறு எங்கே முரியடுப்பு பற்றிய தகவல் உள்ளது?

கோட்டடுப்பு, கல்லடுப்பு பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள் கிடைக்கின்றன.

சூடு என்பதே பெயர்ச்சொல்; சூட்டு என்பது வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த வடிவம் எனப் புரிந்து கொண்டேன். 
நன்றி. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Jul 26, 2021, 11:10:27 PM7/26/21
to vallamai
/வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)/ முனைவர் கணேசன் எழுதியது. 

நன்றி 
கருவாடு சுடுவது பற்றி என் கண்ணில் படாத தரவு. 
இங்கே 'வறல்' = வாடூன் = பதப்படுத்திய ஊன் 

ஆமாம்; குழல்மீன் என்பது எது?
சக


N. Ganesan

unread,
Jul 27, 2021, 8:27:29 AM7/27/21
to வல்லமை
On Monday, July 26, 2021 at 10:10:27 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
/வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)/ முனைவர் கணேசன் எழுதியது. 

நன்றி 
கருவாடு சுடுவது பற்றி என் கண்ணில் படாத தரவு. 
இங்கே 'வறல்' = வாடூன் = பதப்படுத்திய ஊன் 

ஆமாம்; குழல்மீன் என்பது எது?

குழல் என்பது ஒரு சில மீன்வகைகளைக் குறிக்கும். pipefish. உ-ம்: பூங்குழல், பால்மீன், பால்கெண்டை

சேல் என்பது கெண்டை (carp) வகை மீன்களில் சில. சிவந்த கண், உடலைப் பெற்றவை. அதுபோல.

நா. கணேசன்
 
சக

kanmani tamil

unread,
Jul 27, 2021, 8:48:16 AM7/27/21
to vallamai
குழல் மீன் என்று பெயர் வைப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமே?!
சக 

N. Ganesan

unread,
Jul 27, 2021, 9:11:06 AM7/27/21
to vallamai
On Tue, Jul 27, 2021 at 7:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
குழல் மீன் என்று பெயர் வைப்பதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமே?!
சக 

சொல்லியுள்ளேன்.

N. Ganesan

unread,
Jul 27, 2021, 9:54:17 AM7/27/21
to vallamai, housto...@googlegroups.com
On Monday, July 26, 2021 at 10:10:27 PM UTC-5, Prof. S. Kanmani wrote:

    /வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)/ முனைவர் கணேசன் எழுதியது.

>     நன்றி
>     கருவாடு சுடுவது பற்றி என் கண்ணில் படாத தரவு.
>    இங்கே 'வறல்' = வாடூன் = பதப்படுத்திய ஊன்

குழல் என்பது குழல்மீன் எனச் சாமி சிதம்பரனார் நூலில் படித்தேன். பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும், pg. 77 (சாமி. சிதம்பரனார்).
நச்சர் குழல் =மீன்வகை என்கிறாரா எனப் பார்க்கணும்.

வாடூன் வகைகள் இரண்டு:
(1) Jerky  https://en.wikipedia.org/wiki/Jerky .  இதன் சங்ககாலப் பெயர் “வறல்”.
(2) Kabab  https://en.wikipedia.org/wiki/Kebab .  இதன் சங்ககாலப் பெயர் “சூடு”.

SK> ஆமாம்; குழல்மீன் என்பது எது?

குழல் காரணப்பெயர். சேல் என்பதும் காரணப்பெயர், அது போல.

NG=> குழல் என்பது ஒரு சில மீன்வகைகளைக் குறிக்கும். pipefish. உ-ம்: பூங்குழல், பால்மீன், பால்கெண்டை
=>சேல் என்பது கெண்டை (carp) வகை மீன்களில் சில. சிவந்த கண், உடலைப் பெற்றவை. அதுபோல.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jul 27, 2021, 9:54:44 AM7/27/21
to vallamai

பின்வரும் பதிவில் 'குழல்' என்ற பெயரின் காரணம் எங்கே உள்ளது?

குழல் என்பது ஒரு சில மீன்வகைகளைக் குறிக்கும். pipefish. 

இது மொழிபெயர்ப்பு அல்லவா?!


உ-ம்: பூங்குழல், பால்மீன், பால்கெண்டை
சேல் என்பது கெண்டை (carp) வகை மீன்களில் சில. 

Carp என்பதும் காரணம் இல்லை. 

சிவந்த கண், உடலைப் பெற்றவை. அதுபோல.

நா. கணேசன் wrote at 6.41 pm

சக 

N. Ganesan

unread,
Jul 27, 2021, 2:25:16 PM7/27/21
to vallamai
On Mon, Jul 26, 2021 at 10:03 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:>
> சூடு என்பதே பெயர்ச்சொல்; சூட்டு என்பது வேற்றுமை உருபு ஏற்கத் திரிந்த வடிவம் எனப் புரிந்து கொண்டேன். 
> நன்றி.

https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்

(1) நெடில் தொடர்க் குற்றியலுகரம்:
மாடு, காடு, வீடு, மேடு, சூடு, நாகு, காசு, மாது, பேறு, தராசு  ... எல்லாம்
இப் பெயர்ச்சொல் இன்னொரு பெயர்ச்சொல்லுடனோ, வேற்றுமை உருபுடனோ புணரும்போது
உகரம் கெட்டு, டகர மெய் போல நிற்பன இரட்டிக்கும்.

(2) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: இவற்றில் சிலவும் இவ்வாறு ஈற்று மெய் இரட்டிப்பதுண்டு.
உ-ம்: வெருகு. (> வெர்கு > வெக்கு (consonant assimilation) > பெக்கெ (bekke) எனக் கன்னடத்தில் இயங்குஞ்சொல்).
விந்து எனும் தமிழ்ச்சொல் பிந்து (bindu) என வருவதுபோல. விந்துமதி/இந்துமதி வெண்பா (யாப்பருங்கலம்).

வெருகு¹ veruku , n. 1. Tom-cat; ஆண் பூனை. (திவா.) 2. Wild cat; காட்டுப்பூனை. (பிங்.) வெருக்கு விடையன்ன (புறநா. 324). 3. Toddy cat, Paradoxurus niger; மரநாய். 4. Ol, tuberous-rooted herb, Arum macrorhizon; செடிவகை. Colloq. 5. White-flowered sola; வெண்கிடை. (பிங்.)

வெருக்குவிடை verukku-viṭai , n. < வெருகு¹ + விடை⁷. Male of wild cat; காட்டுப் பூனையின் ஆண். வெருக்குவிடை யன்ன வெகுணோக்கு (புறநா. 324).

வெருகு:
வெருகிற்கு (1)
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி - குறு 107/4

வெருகின் (5)
எழுதி அன்ன கொடி படு வெருகின்/பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை - அகம் 297/13,14
குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை - அகம் 367/8
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன - அகம் 391/1
பிள்ளை வெருகின் முள் எயிறு புரைய - புறம் 117/8
ஊர் முது வேலி பார்நடை வெருகின்/இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை - புறம் 326/1,2

வெருகு (3)
வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு 139/2
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி - குறு 220/4
வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு - அகம் 73/3

வெருகு - பெயரின் குற்றியலுகர உகாரம் அழிந்து ககரம் இரட்டித்தல்:
=========================================================

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி - குறு 240/3  வெருகு + பல் = வெருக்குப் பல்
வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை - அகம் 267/6 வெருகு + அடி = வெருக்கடி
வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை - புறம் 324/1 வெருகு + விடை = வெருக்குவிடை

NG

kanmani tamil

unread,
Jul 27, 2021, 2:53:37 PM7/27/21
to vallamai
குற்றியலுகரப் புணர்ச்சி என்று சொன்னால் முடிந்தது. 
சக 

N. Ganesan

unread,
Jul 28, 2021, 8:53:15 AM7/28/21
to vallamai, housto...@googlegroups.com
On Monday, July 26, 2021 at 10:10:27 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
/வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163  (குழல் சூடு - குழல்மீன் கருவாடு.)/ முனைவர் கணேசன் எழுதியது. 

நன்றி 
கருவாடு சுடுவது பற்றி என் கண்ணில் படாத தரவு. 
இங்கே 'வறல்' = வாடூன் = பதப்படுத்திய ஊன் 

ஆமாம்; குழல்மீன் என்பது எது?

குழல் என்பது ஒரு சில மீன்வகைகளைக் குறிக்கும். pipefish. உ-ம்: பூங்குழல், பால்மீன், பால்கெண்டை

மீனவரும், மீனுண்ணி மக்களும் வழங்கும் குழல்மீன் பெயர்கள் இவை. காரணப்பெயர். குழல் = ’பைப்’.
இவற்றின் மீனியல் (உயிரியல்) பெயர்களும், படங்களும் தந்து விளக்குகிறேன். அப்பொழுது ஏன் இவற்றைக் குழல்மீன்
என்கிறார்கள் எனத் தெரியும். பூ+குழல் பெயரிலேயே குழல் இருக்கிறது.


சேல் என்பது கெண்டை (carp) வகை மீன்களில் சில. சிவந்த கண், உடலைப் பெற்றவை. அதுபோல.

கோவை சிவக்கவிமணி துறவு மேற்கொள்வதன் முன் எங்கள் குடும்பங்களின் வக்கீல். சொத்து பிரித்தல் போன்றவற்றில் பங்கேற்றவர்.
அவரது தந்தையாரும் வக்கீல் தான். ஞானசம்பந்த சரணாலயத் தம்பிரான் என்றழைக்கப்பட்டவர். பெரியபுராணத்திற்கு உரைவரைந்தவர்.
சேலூர் சம்பந்தர் வழிபட்டதாக சேக்கிழார் பாடியுள்ளார். தேவராயன்பேட்டை மச்சபுரீஸ்வரசுவாமி கோவில் இது. இதற்குச் சம்பந்தர்
பதிகம் ஒன்று இருந்திருக்கவேண்டும் என்பார் சிவக்கவிமணி. அழிந்த தேவாரம். கொல்லிமலையிலே சேலூர் நாடு உண்டு.

பெண்களின் கண்களில் செவ்வரி ஓடும். இதனைச் சேல் உண்ட கண். சேல் உண்கண் என்பது உவம வாசகம் என்பார்கள். மையுண்டகண்ணாள், சேல் உண்கண்ணாள்
https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2020/nov/22/மரபு-மாற்றுவமம்-3508945.html

ரோஹிணீ என்பது செம்மான். வள்ளி = செம்மான் மகள் (செம்மான் மகளைத் திருடும் திருடன் - முருகன். -அருணகிரியார்). கருமான் பெருமாள்.
கருமான், கொல்லி (மயிடற்செற்றாள். அது காரணமாக ஏற்பட்ட பெயர். = துர்க்கை/கொற்றி) வாகனமாக 4700 ஆண்டு முந்தைய தாயத்தை
இந்திய வானியல் என ஆய்ந்து காட்டியுள்ளேன். கொற்றிக்கு ரோஹு எனப்படும் சேல் கெண்டையை அறுத்துப் படைப்பர்.
சேல் மீன்களைப் பற்றி எழுதவேண்டும்.

சேல்:
சேல் கெண்டையின் கண்கள்,  சேல் உண்கண்ணி என்பது போன்ற 2000 ஆண்டுகளில் எண்ணற்ற வரிகளின் விளக்கம்.

குசஸ்தலை ஆறு (குசை தர்ப்பைப் புல்) பாயும் ஆவடி அருகே, சேக்காடு ஏரியைச்
சேற்காடு என்று குறிப்பிடும் ஆயிரம் ஆண்டுப் பழைமை கொண்ட சோழர் கல்வெட்டுக் கிடைத்துள்ளது.
சேற்காடு = சேல்கெண்டை துள்ளும் கழனிகள் கொண்ட காடுகள். சேற்காடு.

சேறு+ காடு என்றால், சூடு+இறைச்சி சூட்டிறைச்சி என்று குற்றியலுகரப் புணர்ச்சி போல,
சேற்றுக்காடு (சேத்துக்காடு) என்றாகும். இஃதறியாமல், தொல்லியல்துறை அதிகாரி கி. ஸ்ரீதரன் அவர்கள்
விளக்கம் கூறியுள்ளார்.
ஓய்வுபெற்ற அரசு தொல்லியல் துணை கண்காணிப்பாளரான, ஸ்ரீதரனும், அதை உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பிற்கால சோழர் ஆட்சி காலத்தில், சிற்றரசராக விளங்கிய, தெலுங்கு சோழனான, விஜய கண்ட கோபாலனின், 16வது ஆட்சிக்காலத்தில், ஏரிக்கரை நிலத்தையும், ஏரியில் மீன்பிடி உரிமையையும், கோவிலுக்கு தானமாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு தான் இது, என்றார்.கோரிக்கைஏரியில் வளரும் மீன்களையும், அதன் வளங்களையும் பயன்படுத்தி,கோவில் திருப்பணி மேற்கொள்ளச் செய்தது, ஏரியை பாதுகாக்க, சோழர்கள் கையாண்ட யுக்தி என, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இந்தச் சோழர் காலத்திய கல்வெட்டு, சமதளமற்று இருப்பதால், தெளிவான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. கல்லின் நான்கு புறமும், தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.இதனால், தமிழக தொல்லியல் துறை, கல்வெட்டில் உள்ள எழுத்துகளை படியெடுத்து, அதில் உள்ள செய்திகளை, முழுமையாக வெளியிட வேண்டும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற தொல்லியல் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன், 70, கூறியதாவது: ஸ்வஸ்திஸ்ரீ மதுராந்தக சோழனான, விஜயகண்ட கோபாலன்... எனக் கல்வெட்டு எழுத்துகள் துவங்குகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, புலியூர் கோட்டம் என்றெல்லாம் வருகிறது. ஏரியை பராமரித்து, பாசிப்பாட்டம் எனப்படும், மீன்பிடி வருவாய் மற்றும் நிலங்கள், கோவிலுக்கு தேவதானமாக அளிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. ஏறக்குறைய, 1,000 ஆண்டுகளுக்கு முன், ஏரியை பராமரிக்க, சோழ மன்னன் எடுத்த நடவடிக்கை, வியப்பாக உள்ளது. இந்த ஊர் கல்வெட்டில், சேற்காடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சேறுஎன்பது வளமான இடம் எனப் பொருள். அதாவது, சேறு நிறைந்த விளைநிலமாக, இந்தப் பகுதி இருந்தது என்பதற்கான குறிப்பாக, இதை பார்க்க முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

------------

திரு. கி. ஸ்ரீதரனின் சேற்காடு என்ற இடப்பெயர் விளக்கம் தவறு. சேல்+காடு = சேற்காடு. அதாவது, சேல் மீன்கள் துள்ளும் மடைகள் உள்ள காடு என்பது இடப் பெயர்.
சேல் = சேல்கெண்டை = Rohu fish   . கொற்றவைக்குப் படையலிடும் மீன்களில் முக்கியமானது. ரோஹிணீ என்பது அவளது பெயர்களில் ஒன்று. https://en.wikipedia.org/wiki/Rohu
4700 காலப் பாரத வான சாஸ்திரவியல்:  http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

N. Ganesan

unread,
Oct 31, 2022, 11:00:50 AM10/31/22
to vallamai
முரவு வாய்க் குழிசி - இது என்ன அடுப்பு?
முன்னர் சொல்லியுள்ள மடல்

முரியடுப்பில் அடுகிற வாடூன் (= Kabab cooked in the skewer-oven) :: பெரும்பாணாற்றுப்படையில் வருணனை

kanmani tamil

unread,
Oct 31, 2022, 1:28:19 PM10/31/22
to vallamai
முனைவர் கணேசன் இந்தக் கட்டுரை முழுக்க கபாப், வாடூன்,  முரியடுப்பு பற்றி உள்ளது.

நான் கேட்டது 'முரவுவாய்' பற்றி...

ஏற்கெனவே முன்னர் தெளிவாகச் சொல்லி உள்ளேன். 
வாடூன் = உப்புக்கண்டம் 
சூடு மூன்று வகைப்படும். 
1.நேரடியாக நெருப்பில் சுடுவது
2. தாளிதத்தோடு எண்ணெயில் பொரிப்பது 
3. எண்ணெயில் மூழ்க வறுத்து எடுப்பது.

இப்போது 'முரவுவாய்' விளக்கம் வேண்டும். 

'விளிம்பு இல்லாத' குழிசி என்பதில் சிக்கல் உள்ளதா?
 சக 



Reply all
Reply to author
Forward
0 new messages