வஞ்சி

135 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 3, 2017, 12:18:18 AM11/3/17
to Santhavasantham
வஞ்சி - தாவரங்கள்
--------------

(1) வஞ்சி மரம் : Salix tetrasperma. (Gamble (1928), Lushington (1915) )
Also, known as Indian Willow tree.
பூக்கள் முதிரும்போது வாகை மலர்கள் போல வெண்மையும்
துய் பஞ்சு ஆகவும் இருக்கும். இதனை வீரர்கள் சூடினர். வஞ்சித்துறை.
வஞ்சி மாநகரை ‘வாடாவஞ்சி’ என்கிறார் இளங்கோ அடிகள்.

(2)  ஆத்து வஞ்சி, நீர்வஞ்சி Ochreinauclea Missionis

#GSCC Fieldwork Fund. JNTBGRI collecting seed of Ochreinauclea missionis. Endemic to the Western Ghats and Vulnerable on the IUCN Red List

(3) வஞ்சி - புதர் (பிரம்பு) = வானீரம்
புதலும், மங்கையும், ஓர்பதியும், மாற்றார் குடையும் வஞ்சி ஆகும் - பிங்கலந்தை.

(4) வஞ்சிக் கொடி, வஞ்சுளம். 
வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’

வஞ்சி Tinospora Cardifolia, Miers.; Menispermaceae. 

வஞ்சிக் கொடி தான் வஞ்சிமாநகர் (கருவூர்) ஸ்தல ஸ்தாவரம் ஆகும்:
தலமர சிறப்புகள்

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில் 
மேவர் மும்மதி லெய்த வில்லியர் 
காவ லர்கரு வூரு ளானிலை 
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே. - திருஞானசம்பந்தர்.

திருக்கருவூர் ஆனிலை எனும் தலத்தில் தலவிருட்சமாக விளங்குவது வஞ்சியாகும். இது சீந்தில் கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகாமூலி என்ற பல பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. இஃது இதய வடிவ பசிய இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும், காகிதம் போன்ற மெல்லிய புறத்தோலையும் உடைய ஏறு கொடி இனமாகும். கொடியின் தரைத் தொடர்பு துண்டிக்கப்பட்டால் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடி தழைக்கும் தன்மை கொண்டது. இதன் இலை, கொடி, வேர் முதலியன மருத்துவக் குணங்கொண்டு விளங்குகின்றது.. உடல் தேற்றி உரமாக்குதல், முறைநோய் நீக்குதல், பசி மிகுத்தல் முதலிய மருத்துவக் குணமுடையது.

வஞ்சிக்கொடி:
கொழுநனைத் தழுவும் கொடி போல,

வஞ்சிக்கொடி என்பது அமிர்தவல்லி எனப்படும் Tinospora_cordifolia தான்,
பிரப்பங்கொடி (Calamus_rotang, ரத்தன்) என்னும் முள்புதர் அல்ல என்று காட்டுவது
வஞ்சி மாநகர் ஆன்நிலை அப்பர் கோவிலின் தலத் தாவரம் ஆகும்.

வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா:
வஞ்சி என்னும் பாவினம் வஞ்சிக்கொடிபோல வளைந்து வளைந்து செல்லுமோ?

MTL:
"நாகினி nākiṉi, n. < nāginī. 1. Betel; வெற்றிலை. (மலை.) 2. Common rattan of South India. See வஞ்சிக்கொடி. (மலை.)"
நாகம் போல வளைந்து, வளைந்து செல்வது வெற்றிலையும், அமிர்தவல்லி (வஞ்சிக்கொடி = Tinospora_cordifolia) ஆகும்.
Madras Tamil Lexicon giving nAgini as Common rattan of South India is wrong.
வெற்றிலையும், அமிர்தவல்லிக் கொடியிலையும் ஒப்புமை காண்க.

நா. கணேசன்



Reply all
Reply to author
Forward
0 new messages