சங்ககால தமிழகம்

65 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 4, 2015, 11:43:08 PM1/4/15
to K Selvan


சங்ககாலம் சுமாராக கிமு 2ம் நூற்றாண்டில் துவங்குகிறது. சங்கபாடல்கள் மூலமாக தான் நாம் பலதமிழ் மன்னர்களின் பெயர்களை அறிகிறோம். கிமு 2ம் நூற்றாண்டில் இரான் முதல் ஆந்திரா வரை ஆண்ட அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றபோது அவருக்கு கட்டுபடாமல் இருந்த பகுதிகள் கலிங்கமும், தமிழகமும் மட்டுமே. மவுரியருக்கும், தமிழருக்கும் இடையே அதற்கு முன் எல்லைபோர்கள் நடந்து வந்தன. வில்திறன் மிகுந்த வடுகர் (வடுகர் என்றால் வடவர் என பொருள். திருப்பதிக்கு வடக்கே வசித்தவர்கள் வடுகர்) தமிழகம் மேல் படை எடுக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக வம்ப மோரியர் (புதிய மவுரியர்) தம் தேர்களை செலுத்தி பாதை அமைத்து கொடுக்கிறார்கள். இப்படி கூட்டாக வடுகரும், மோரியரும் தாக்கியபோது அவர்களை மோகூர் மன்னனான சேரன் எதிர்கொண்டு முறியடித்தான். புதிய மோரியர் என குறிப்புள்ளதால் நந்தர்களை தோற்கடித்த சந்திரகுப்த சக்ரவர்த்தி அல்லது அவரது மகனான பிந்துசாரன் அட்சிகாலத்தில் சுமார் கிமு 3ம் நூற்றாண்டில் இப்போர் நிகழ்ந்து இருக்கலாம் என அறியலாம்

இப்படி மோரியருடன் பகையை வளர்த்துகொண்டிருந்த தமிழகத்துக்கு அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றதும் பெரும் ஆபத்து காத்திருந்தது. முதலில் கலிங்கத்தை ஒரு வழி பண்ணலாம் என நினைத்து கலிங்கத்தின்மேல் பாய்ந்தார் அசோகர். மாபெரும் கலிங்கபோர் நிகழ்ந்து அதன் உயிரிழப்பால் மனம் கலங்கிய அசோகர் அதன்பின் போர் செய்வதையே நிறுத்திவிட்டார். தமிழகம் இதனால் தப்பியது. இதன்பின் அசோகருக்கும், தமிழ் மன்னர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதாக அறிகிறோம். அசோகர் தமிழ்மண்ணுக்கு பவுத்தம் வளர்க்க பிக்குகளை அனுப்பிவைத்தார். பவுத்தம் இப்படியாக தமிழகத்துக்கு வர, ஜைனமும் மவுரியர் மூலமே தென்னகம் வருகிறது. அசோகரின் தாத்தாவும், நந்தர்களை முறியடித்து மவுரிய பேரரசை நிறுவியவருமான சந்திரகுப்தர் ஒரு சமணர். அவர் பிற்காலத்தில் துறவறம் பூண்டு 12,000 ஜைனமுனிகளுடன் மைசூர் அருகே உள்ள சரவனபெலகுலா வந்ததாக ஜைனமரபு குறிப்பிடுகிறது.

வடக்கே இருந்து வந்த அபாயம் அகன்றதும் தமிழக மன்னரிடையே உட்பூசல் துவங்க ஆரம்பித்தது. சங்ககால பாடல்கள் முழுக்க இத்தகைய உட்பூசல்களையே குறிப்பிடுகின்றன. ஆனால் வெளிமன்னர்கள் படை எடுத்தால் தமிழக மன்னர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததாகவும் காண்கிறோம். கிமு 155ம் ஆண்டு கலிங்க மன்னன் காரவேலன் "திரமிடதேசசங்க"த்தை சேர்ந்த மன்னர்களின் கூட்டை தோற்கடித்ததாக தெரிகிறது. இப்போரில் வெற்றி கண்ட கரவேலன் கணக்கு வழக்கற்ற பாண்டிய நாட்டு முத்துக்கள், சேரநாட்டு யானைகள், குதிரைகள், பொன்னை அள்ளிகொண்டு திரும்புகிறான்.

இதன்பின் கலிங்கம், மவுரியர், தமிழர் அரசியல் என்ன ஆனது என நமக்கு தெரிவதில்லை. இதன்பின் தமிழக வரலாறு சங்க இலக்கியங்கள் மூலமே நமக்கு தெரியவருகிறது. இதில் வரும் வரலாறு முழுக்க தமிழ் மன்னர்களின் உட்பூசலை பற்றியதாகவே உள்ளது. ஆக வடக்கிருந்து வந்த அபாயம் நீங்கியதாகவே காண்கிறோம்.

சங்ககாலத்தமிழ்மன்னர்களாக சேர, சோழ, பாண்டியரையும், அதியமான், பாரி முதலான குறுநில மன்னர்களையும் அறிகிறோம். சுமார் கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டில் சங்ககாலம் துவங்கி, கிபி 3ம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்புடன் முடிவடைகிறது. களப்பிரர் ஆட்சிகாலத்தில் சுமார் 250 ஆண்டுகள் தமிழக வரலாற்றின் பக்கங்கள் இருண்டு காணபடுகின்றன. மூவேந்தர் முடியிழந்து, குலமிழந்து இருந்த சுவடற்று போகிறார்கள். சேரர்கள் மலையாளிகள் என நாம் நினைத்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்லர். மலையாள மன்னை ஆண்ட கரூரை தலைநகராக கொண்ட தமிழ்மன்னர்களே சேரர்கள். இத்தகைய பெருமை வாய்ந்த சேரர்குலம் களப்பிரர் படையெடுப்பால் அழிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதன்பின் சேரமன்னர்கள் இறக்குமதி ஆகி "பெருமாள்" எனும் பெயரை சூட்டிகொன்டு ஆட்சியில் இருக்கிரார்கள். சோழர்கள் சுத்தமாக வழக்கொழிந்து போகிறார்கள். உறையூரை தலைநகராக கொண்டு ஆண்ட சங்ககால சோழர்கள் அதன்பின் என்ன ஆனார்கள் என்ற குறிப்பு இல்லை. ஆந்திராவில் ராயலசீமாவை ஆண்ட தெலுங்குசோடர்கள் மட்டுமே தம்மை சோழர்களின் வழிதோன்றலாக கூறி ஆட்சியை நடத்துகிறார்கள். பாண்டியப்பேரரசு குறுநில ஆட்சியாக சுருங்கிவிடுகிறது

இப்படி மூவேந்தரையும் முறியடித்து ஆட்சிக்கு வந்த களப்பிரர் சங்ககாலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இருண்டகாலம் எனும் காலத்துக்கு தமிழகத்தை அழைத்து செல்கின்றனர். அவர்கள் ஜைனர்கள், பவுத்தர்கள் என பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் பிற்காலத்தில் மெதுவாக அவர்களை இந்துமதம் உள்வாங்குகிறது. களப்பிரமன்னர்கள் செல்வாக்கும் இவ்வமயம் குன்றுகிறது. காஞ்சியில் ஆட்சிக்கு வந்த சிம்மவிஷ்ணு பல்லவனும், தஞ்சை விஜயாலய சோழனும், பாண்டியனும் களப்பிரர் ஆட்சியை ஒழித்து மீண்டும் தமிழ்மன்னர்களின் ஆட்சியை ஏற்படுத்துகிறார்கள். பாண்டியர், சோழரை முறியடித்து தமக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக ஆக்கி தமிழகத்தை ஒன்றுபடுத்தி சிம்மவிஷ்ணுபல்லவனும், அவன் மகன் மகேந்திரவர்ம பல்லவனும் முடிக்கும்போது அன்றைய பாரதத்தில் மூன்றே பேரரசுகள் மட்டுமே உள்ளன. வடக்கே ஹர்ஷரின் பேரரசு, நர்மதை முதல் காஞ்சிவரை இருந்த புலிகேசியின் சாளுக்கிய பேரரசு மற்றும் தமிழகத்தில் பல்லவர் பேரரசு

அரசியல்ரீதியாக தமிழ்மன்னர்கள் இப்படி எழுகையில், ஆன்மிக ரீதியாக தமிழ் தெய்வங்களான மாயோனும், சேயோனும், கொற்றவையும், சிவனும் பக்தி இயக்கம் மூலம் நாயன்மார், ஆழ்வாரால் மீண்டும் தமிழகத்தில் எழுச்சி பெறுகிறார்கள். அதன்பின் மாலிகாபூர் படையெடுப்புவரை சுமார் எட்டுநூறு ஆண்டுகள் பிற்கால சோழர், பல்லவர், பான்டியர் ஆட்சி நடைபெறுகிறது. அதன்பின் தமிழகத்தை ஆண்ட தமிழர் என்பவர் 1950ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜியே ஆவார்.

சங்ககால தமிழகம்

சங்ககாலம் சுமாராக கிமு 2ம் நூற்றாண்டில் துவங்குகிறது. சங்கபாடல்கள் மூலமாக தான் நாம் பலதமிழ் மன்னர்களின் பெயர்களை அறிகிறோம். கிமு 2ம் நூற்றாண்டில் இரான் முதல் ஆந்திரா வரை ஆண்ட அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றபோது அவருக்கு கட்டுபடாமல் இருந்த பகுதிகள் கலிங்கமும், தமிழகமும் மட்டுமே. மவுரியருக்கும், தமிழருக்கும் இடையே அதற்கு முன் எல்லைபோர்கள் நடந்து வந்தன. வில்திறன் மிகுந்த வடுகர் (வடுகர் என்றால் வடவர் என பொருள். திருப்பதிக்கு வடக்கே வசித்தவர்கள் வடுகர்) தமிழகம் மேல் படை எடுக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக வம்ப மோரியர் (புதிய மவுரியர்) தம் தேர்களை செலுத்தி பாதை அமைத்து கொடுக்கிறார்கள். இப்படி கூட்டாக வடுகரும், மோரியரும் தாக்கியபோது அவர்களை மோகூர் மன்னனான சேரன் எதிர்கொண்டு முறியடித்தான். புதிய மோரியர் என குறிப்புள்ளதால் நந்தர்களை தோற்கடித்த சந்திரகுப்த சக்ரவர்த்தி அல்லது அவரது மகனான பிந்துசாரன் அட்சிகாலத்தில் சுமார் கிமு 3ம் நூற்றாண்டில் இப்போர் நிகழ்ந்து இருக்கலாம் என அறியலாம்

இப்படி மோரியருடன் பகையை வளர்த்துகொண்டிருந்த தமிழகத்துக்கு அசோக சக்ரவர்த்தி ஆட்சிபொறுப்பேற்றதும் பெரும் ஆபத்து காத்திருந்தது. முதலில் கலிங்கத்தை ஒரு வழி பண்ணலாம் என நினைத்து கலிங்கத்தின்மேல் பாய்ந்தார் அசோகர். மாபெரும் கலிங்கபோர் நிகழ்ந்து அதன் உயிரிழப்பால் மனம் கலங்கிய அசோகர் அதன்பின் போர் செய்வதையே நிறுத்திவிட்டார். தமிழகம் இதனால் தப்பியது. இதன்பின் அசோகருக்கும், தமிழ் மன்னர்களுக்கும் இடையே நல்லுறவு நிலவியதாக அறிகிறோம். அசோகர் தமிழ்மண்ணுக்கு பவுத்தம் வளர்க்க பிக்குகளை அனுப்பிவைத்தார். பவுத்தம் இப்படியாக தமிழகத்துக்கு வர, ஜைனமும் மவுரியர் மூலமே தென்னகம் வருகிறது. அசோகரின் தாத்தாவும், நந்தர்களை முறியடித்து  மவுரிய பேரரசை நிறுவியவருமான சந்திரகுப்தர் ஒரு சமணர். அவர் பிற்காலத்தில் துறவறம் பூண்டு 12,000 ஜைனமுனிகளுடன் மைசூர் அருகே உள்ள சரவனபெலகுலா வந்ததாக ஜைனமரபு குறிப்பிடுகிறது. 

வடக்கே இருந்து வந்த அபாயம் அகன்றதும் தமிழக மன்னரிடையே உட்பூசல் துவங்க ஆரம்பித்தது. சங்ககால பாடல்கள் முழுக்க இத்தகைய உட்பூசல்களையே குறிப்பிடுகின்றன. ஆனால் வெளிமன்னர்கள் படை எடுத்தால் தமிழக மன்னர்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்ததாகவும் காண்கிறோம். கிமு 155ம் ஆண்டு கலிங்க மன்னன் காரவேலன் "திரமிடதேசசங்க"த்தை சேர்ந்த மன்னர்களின் கூட்டை தோற்கடித்ததாக தெரிகிறது. இப்போரில் வெற்றி கண்ட கரவேலன் கணக்கு வழக்கற்ற பாண்டிய நாட்டு முத்துக்கள், சேரநாட்டு யானைகள், குதிரைகள், பொன்னை அள்ளிகொண்டு திரும்புகிறான்.

இதன்பின் கலிங்கம், மவுரியர், தமிழர் அரசியல் என்ன ஆனது என நமக்கு தெரிவதில்லை. இதன்பின் தமிழக வரலாறு சங்க இலக்கியங்கள் மூலமே நமக்கு தெரியவருகிறது. இதில் வரும் வரலாறு முழுக்க தமிழ் மன்னர்களின் உட்பூசலை பற்றியதாகவே உள்ளது. ஆக வடக்கிருந்து வந்த அபாயம் நீங்கியதாகவே காண்கிறோம்.

சங்ககாலத்தமிழ்மன்னர்களாக சேர, சோழ, பாண்டியரையும், அதியமான், பாரி முதலான குறுநில மன்னர்களையும் அறிகிறோம். சுமார் கிமு 3 அல்லது 2ம் நூற்றாண்டில் சங்ககாலம் துவங்கி, கிபி 3ம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்புடன் முடிவடைகிறது. களப்பிரர் ஆட்சிகாலத்தில் சுமார் 250 ஆண்டுகள் தமிழக வரலாற்றின் பக்கங்கள் இருண்டு காணபடுகின்றன. மூவேந்தர் முடியிழந்து, குலமிழந்து இருந்த சுவடற்று போகிறார்கள். சேரர்கள் மலையாளிகள் என நாம் நினைத்தாலும் அவர்கள் மலையாளிகள் அல்லர். மலையாள மன்னை ஆண்ட கரூரை தலைநகராக கொண்ட தமிழ்மன்னர்களே சேரர்கள். இத்தகைய பெருமை வாய்ந்த சேரர்குலம் களப்பிரர் படையெடுப்பால் அழிகிறது. வெளிநாடுகளில் இருந்து அதன்பின் சேரமன்னர்கள் இறக்குமதி ஆகி "பெருமாள்" எனும் பெயரை சூட்டிகொன்டு ஆட்சியில் இருக்கிரார்கள். சோழர்கள் சுத்தமாக வழக்கொழிந்து போகிறார்கள். உறையூரை தலைநகராக கொண்டு ஆண்ட சங்ககால சோழர்கள் அதன்பின் என்ன ஆனார்கள் என்ற குறிப்பு இல்லை. ஆந்திராவில் ராயலசீமாவை ஆண்ட தெலுங்குசோடர்கள் மட்டுமே தம்மை சோழர்களின் வழிதோன்றலாக கூறி ஆட்சியை நடத்துகிறார்கள். பாண்டியப்பேரரசு குறுநில ஆட்சியாக சுருங்கிவிடுகிறது

இப்படி மூவேந்தரையும் முறியடித்து ஆட்சிக்கு வந்த களப்பிரர் சங்ககாலத்தை முடிவுக்கு கொண்டு வந்து, இருண்டகாலம் எனும் காலத்துக்கு தமிழகத்தை அழைத்து செல்கின்றனர். அவர்கள் ஜைனர்கள், பவுத்தர்கள் என பல வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் பிற்காலத்தில் மெதுவாக அவர்களை இந்துமதம் உள்வாங்குகிறது. களப்பிரமன்னர்கள் செல்வாக்கும் இவ்வமயம் குன்றுகிறது. காஞ்சியில் ஆட்சிக்கு வந்த சிம்மவிஷ்ணு பல்லவனும், தஞ்சை விஜயாலய சோழனும், பாண்டியனும் களப்பிரர் ஆட்சியை ஒழித்து மீண்டும் தமிழ்மன்னர்களின் ஆட்சியை ஏற்படுத்துகிறார்கள். பாண்டியர், சோழரை முறியடித்து தமக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக ஆக்கி தமிழகத்தை ஒன்றுபடுத்தி சிம்மவிஷ்ணுபல்லவனும், அவன் மகன் மகேந்திரவர்ம பல்லவனும் முடிக்கும்போது அன்றைய பாரதத்தில் மூன்றே பேரரசுகள் மட்டுமே உள்ளன. வடக்கே ஹர்ஷரின் பேரரசு, நர்மதை முதல் காஞ்சிவரை இருந்த புலிகேசியின் சாளுக்கிய பேரரசு மற்றும் தமிழகத்தில் பல்லவர் பேரரசு

அரசியல்ரீதியாக தமிழ்மன்னர்கள் இப்படி எழுகையில், ஆன்மிக ரீதியாக தமிழ் தெய்வங்களான மாயோனும், சேயோனும், கொற்றவையும், சிவனும் பக்தி இயக்கம் மூலம் நாயன்மார், ஆழ்வாரால் மீண்டும் தமிழகத்தில் எழுச்சி பெறுகிறார்கள். அதன்பின் மாலிகாபூர் படையெடுப்புவரை சுமார் எட்டுநூறு ஆண்டுகள் பிற்கால சோழர், பல்லவர், பான்டியர் ஆட்சி நடைபெறுகிறது. அதன்பின் தமிழகத்தை ஆண்ட தமிழர் என்பவர் 1950ல் ஆட்சிக்கு வந்த ராஜாஜியே ஆவார்.
Like ·  · Share

--

Dhivakar

unread,
Jan 5, 2015, 12:49:37 AM1/5/15
to vallamai
செல்வன்

ஏதோ சரித்திரத்தின் பேர்’ல கொஞ்சம் இண்டெரெஸ்ட் இருக்கறதுனால கடகடவென படிச்சேன்.. நிறைய மிஷ்டேக்ஸ் கண்’ல படுது.. அப்பால நிதானமா வரலாம்..

இப்போதைக்கு அந்த 13 ஆம் நூற்றாண்டு தமிழ் ராஜாக்களுக்கு அப்புறமா அடுத்த ராஜாவா வந்தது ராஜாஜி இல்லை.. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ங்கிற மாதிரி டகால்’னு எழுநூறு வருஷம் ஒரேயடியா தாண்டி விட்டா எப்படி? நடுவுல நம்மையெல்லாம் பத்திரமா காப்பாத்தி, பாதுகாத்த விஜயநகர மன்னருங்கள்ல நிறைய பேரு பெரிய ராஜாங்க.. எல்லா வம்சமும் இருக்கும்.. அதுல ஒருத்தர் பேரு செல்லப்பன்.. நரசிம்மன், நரசிங்கன் ந்னு கூட சொல்லுவாங்க.. இவர் சந்திரகிரியைத் தலைநகராக் கொண்டு அரசாண்ட பக்காத் தமிழர். இவர் கையுல பத்து லட்சம் காலாட்படை இருந்துச்சாம்.. இவரோட கோயில் பக்தி அபாரமானது.. திருப்பதி கோயிலுக்கு இவர் செஞ்ச சேவை எல்லாம் கல்வெட்டு’ல மானாவரியா இருக்கு. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மங்களகிரி அடிவார லக்ஷ்மி நரசிம்மர் கோயில் கோபுரம் கட்டியவர் இவர்தான்.. 

இதெல்லாம் நான் சொல்லலே.. இங்கிலீஷ்காரன் சொல்லிட்டு அழகா எழுதிட்டுப் போயிருக்கான்.. பர்டன் ஸ்டெய்ன்னு பேரு.. இன்னமும் இங்கிலாண்டு’ல உயிரோடுதான் இருக்கிறார்’னு கேள்வி. நம்மதான் இங்லிச்ஷ்காரன் சொன்னா வேதம் போல கேட்டுப்போமே..

சரித்திரம் சொல்றதுக்கும் படிக்கறதுக்கு ஜாலியா இருக்கும்..  சொல்லும்போதே சுகமா கொஞ்சம் தூக்கம் வரும்.. தூக்கம் வருதேன்னுட்டு டபுக்கு’னு தூங்கிட்டு அடுத்தநாள்’லேர்ந்து நிறைய சரித்திர ஆசிரியர்கள் மறுபடியும் கதையை இடையுல விட்டுபிட்டு அன்னிக்கு என்னவோ அதை ஆரம்பிப்பாங்க.. அது மாதிரி போவாம முடிஞ்சவரைக்கும் கதையை நேர்க்கோட்டுல கொண்டு வந்தீங்கன்னா நல்லா இருக்கும்..

நன்றி!

அன்புடன்
திவாகர்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

வேந்தன் அரசு

unread,
Jan 5, 2015, 7:45:22 AM1/5/15
to vallamai
சங்க காலத்தில் போர் புரிந்தாலும் அடுத்தவன் நிலத்தை ஆளுகைக்கு கொண்டுவரலை. 
பல்லவர் காலத்தில் இருந்து அந்த முறை வந்தது.

சேரர்கள் இரு இடங்களில் ஆட்சி செய்துள்ளார்கள். முசிறியின்  சேரனை  ஒரு செழியன் தோற்கடித்ததாக அகநானூற்று பாடல் இருக்கு.

கரிகாலனுக்கு பின்னால் உறையூர் சோழர்களின் தலைநகர் ஆகிறது. புகார் பற்றிய பாடல்கள் அகப்பாடல்களில் குறைவு.

5 ஜனவரி, 2015 ’அன்று’ 12:49 முற்பகல் அன்று, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

செல்வன்

unread,
Jan 6, 2015, 12:58:20 AM1/6/15
to vallamai

2015-01-04 23:49 GMT-06:00 Dhivakar <venkdh...@gmail.com>:
நடுவுல நம்மையெல்லாம் பத்திரமா காப்பாத்தி, பாதுகாத்த விஜயநகர மன்னருங்கள்ல நிறைய பேரு பெரிய ராஜாங்க.. எல்லா வம்சமும் இருக்கும்.. அதுல ஒருத்தர் பேரு செல்லப்பன்.. நரசிம்மன், நரசிங்கன் ந்னு கூட சொல்லுவாங்க.. இவர் சந்திரகிரியைத் தலைநகராக் கொண்டு அரசாண்ட பக்காத் தமிழர். இவர் கையுல பத்து லட்சம் காலாட்படை இருந்துச்சாம்.. இவரோட கோயில் பக்தி அபாரமானது.. திருப்பதி கோயிலுக்கு இவர் செஞ்ச சேவை எல்லாம் கல்வெட்டு’ல மானாவரியா இருக்கு. ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், மங்களகிரி அடிவார லக்ஷ்மி நரசிம்மர் கோயில் கோபுரம் கட்டியவர் இவர்தான்.. 

நன்றி திவாகர் ஜி

விஜயநகர மன்னர்கள் துளுவர்கள் அல்லவா? இதில் தமிழ்மன்னர்கள் எப்படி அவ்வம்சத்தில் உருவானார்கள்?

மற்றபடி தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்த அனைவரையும் இம்மண்ணில் தலைவர்களாகவே மதிக்கிறேன். அதில் இனம், ஜாதி பேதம் பார்ப்பது கிடையாது. ஒரு தகவலுக்கு மட்டுமே இதை பகிர்ந்தேன்


--

Dhivakar

unread,
Jan 6, 2015, 2:12:26 AM1/6/15
to vallamai
விஜயநகர மன்னர்களில் பல வம்சங்கள் உண்டு - துளுவ வம்சம் என்பதும் அவைகளில் ஒன்று. தேவராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர், இவர்கள் மூவர் மட்டுமே துளுவ வம்சத்தினர். 

செல்லப்பன் என்கிற சாலுவ நரசிம்மன்,  தேவராயருக்கு முன்னம் விஜயநகர அரசராக இருந்தவர்.இவர் தமிழ் பிராம்மணர் என்கிறார் பர்டன் ஸ்டெயின். ஆனாலும் என்ன, தமிழர் ஒருவர் தென்னிந்தியாவுக்கே சக்கரவர்த்தி போல அரசாண்டார் என்பதே நமக்குப் பெருமைதான். இவர் ஆண்ட சந்திரகிரி கோட்டை விஜயநகர சாம்ராஜ்ஜியத்துக்கே தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் இடிந்த சுவர்களைக் கொண்ட சந்திரகிரி கோட்டையை பெங்களூரிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் காணலாம். இங்கே உள்ள ராஜமஹால் அல்லது ராஜக்ருஹம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்சமயம் மியூசியமாக்கப்பட்டுள்ளது. 

.. 

--

N D Logasundaram

unread,
Jan 6, 2015, 4:48:37 AM1/6/15
to வல்லமை
இதுதானா அந்த சந்திரகிரி அரண்மனை ??

நூ த லோ சு 
மயிலை 
File:Raja Mahal, Chandragiri.jpg

Dhivakar

unread,
Jan 6, 2015, 6:16:05 AM1/6/15
to vallamai
ஆம் ஐயா! இந்த அரண்மனைதான் தற்போது மியூசியமாக உள்ளது.

அன்புடன் 
திவாகர்

N. Ganesan

unread,
Jan 6, 2015, 8:16:32 AM1/6/15
to vall...@googlegroups.com, மின்தமிழ், Santhavasantham


On Monday, January 5, 2015 11:12:26 PM UTC-8, Dhivakar wrote:
விஜயநகர மன்னர்களில் பல வம்சங்கள் உண்டு - துளுவ வம்சம் என்பதும் அவைகளில் ஒன்று. தேவராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர், இவர்கள் மூவர் மட்டுமே துளுவ வம்சத்தினர். 


கிருஷ்ணதேவராய மகாராஜாவின் தாயார் தமிழ்ப்பெண். அந்தக் காலத்தில் தாய் வீட்டில் மகப்பேறு.
எனவே, கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பிறந்தவர்.
வாரியார் சாமிகள் எப்போது சொல்வார்: “ முன்னையெல்லாம் தாய்வீட்டில் குழந்தை பிறக்கும், எனவே
தாத்தாவீட்டுக்குப் போகும். இப்போதோ ஆஸ்பத்திரிகளில். எனவே, அடிக்கடி அங்கே குழந்தைகள் போகின்றன.”

துளுவநாடும் தொண்டைநாடும் எப்பொழுதும் தொடர்புண்டு. சென்னையில் துளுவ வேளாளர்கள் பல ஆயிரம்
குடும்பங்கள் இன்னும் உண்டு. மடங்கள், சத்திரங்கள், ஜாதி சங்கங்கள் எல்லாமும் இருக்கின்றன.


Here are two photos  of Pt. Nehru near Chennai.
One at Tirumalai temple where he wonders about the workmanship of the portrait bronze of Krishnadevaraya with his wives (The Hindu).
The next one is him at Mamallapuram with archaeologist, Dr. K. R. Srinivasan.

 



N. Ganesan

unread,
Jan 6, 2015, 8:52:37 AM1/6/15
to mint...@googlegroups.com, vallamai, jeyamohan_ B


On Tuesday, January 6, 2015 5:41:17 AM UTC-8, Dev Raj wrote:
On Tuesday, 6 January 2015 05:16:34 UTC-8, N. Ganesan wrote:
துளுவநாடும் தொண்டைநாடும் எப்பொழுதும் தொடர்புண்டு. சென்னையில் துளுவ வேளாளர்கள் பல ஆயிரம்
குடும்பங்கள் இன்னும் உண்டு. மடங்கள், சத்திரங்கள், ஜாதி சங்கங்கள் எல்லாமும் இருக்கின்றன.
 

‘துளுவ புஷ்பகிரி’ போளூருக்கு அருகிலுள்ள சிற்றூர்

துளுவ வேளாளர் ஒருவர் எலெக்ட்ரிகல் எஞ்சினீர். தமிழ்நாட்டின் இபியில் தலைமைப்பதவி
அடைந்தவர். இளைப்பாறும் பருவத்தில் துளுவர்களின் கதையை எழுத முற்பட்டுள்ளார்:
(ஆனால் ஒரு பதிவிற்குப் பின் காணோம்.)

தமிழ்நாட்டு வேளாளர்களின் கதையை ஜெயமோகன் தமாஷாக எழுதியிருக்கார்,

முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு


~NG
 


தேவ் 

செல்வன்

unread,
Jan 6, 2015, 10:04:19 AM1/6/15
to vallamai

2015-01-06 1:12 GMT-06:00 Dhivakar <venkdh...@gmail.com>:
செல்லப்பன் என்கிற சாலுவ நரசிம்மன்,  தேவராயருக்கு முன்னம் விஜயநகர அரசராக இருந்தவர்.இவர் தமிழ் பிராம்மணர் என்கிறார் பர்டன் ஸ்டெயின். ஆனாலும் என்ன, தமிழர் ஒருவர் தென்னிந்தியாவுக்கே சக்கரவர்த்தி போல அரசாண்டார் என்பதே நமக்குப் பெருமைதான். இவர் ஆண்ட சந்திரகிரி கோட்டை விஜயநகர சாம்ராஜ்ஜியத்துக்கே தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது. இப்போதும் இடிந்த சுவர்களைக் கொண்ட சந்திரகிரி கோட்டையை பெங்களூரிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் காணலாம். இங்கே உள்ள ராஜமஹால் அல்லது ராஜக்ருஹம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்சமயம் மியூசியமாக்கப்பட்டுள்ளது. 

மன்னர்களுக்கு பல ஜாதியினர் உரிமை கொண்டாடுவது வழக்கம்தானே? ராஜராஜ சோழன் உடையாரா, தேவரா, பள்ளரா என்ற சர்ச்சை சிலகாலம் முன்பு ஓடியது நினைவுக்கு வருகிறது :-)

சாளுவநரசிம்மருக்கு உரிமை கோரும் முத்துராஜா சாதி

Kalachuri connection 
The Saluvas of Vijayanagara are said to be originally the Kalachuris of Northern Karnataka. Kalchuris are known to be a branch or variants of Kalabhras from whom it is believed that the Kodumbalur Mutharayars descended. It is believed that the Maravar people, the Agamudayars, Thanjai Cholarkula Kalla Nattars, Pandiya Vellalars, Chola Vellalars, Chera Vellalar, Vellala Mudaliyars, Agamudaya Mudaliars,Conjeevaram Mudaliars and Udayars have all descended from Kallars. Ambalakarars of Muthuraja community constitute the bulk of Marvars and kallars. Agamudayar, Agamudaya Mudaliar or Udayars all originated from the ancient Tamil race called kalabhrar of the ancient. 


சாளுவநரசிம்மரை காப்புநாயுடு என உரிமைகோரும் பதிவு 

Saluva Vamsa are also belongs to Kapu Community
  1. Narasimhadevaraya
  2. Thimma Bhupalaraya
  3. Narasimharaya-II
தமிழ் பிராமணர் என்பதும் இன்னொரு கூற்று.

இதில் உண்மை எதுவாக இருந்தாலும் நல்லாட்சி நடத்திய மன்னர் என தெரிகிறது. அதனால் அவருக்கு நாம் அனைவரும் நன்றிகடன் பட்டுள்ளோம்

--
Reply all
Reply to author
Forward
0 new messages